Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
THE MOST FAMOUS FROG SONG IN THE RIG VEDA (RV.7-103), THE OLDEST BOOK IN THE WORLD, IS KNOWN TO ALL SCHOLARS. (I have compared it with the Greek Frog writing of Aristophanes in this blog a few years ago). BUT TWO MYSTERIOUS REFERENCES TO FROG IN THE CREMATORIUM AND IN THE CANAL OPENING CEREMONY ARE STRANGE AND NOT EXPLAINED SATISFACTORILY. I AM COMPARING IT WITH THE FROG GODDESS HEQET OF EGYPT AS WELL.
HYMN 13 IN THE THIRD BOOK OF ATHARVAVEDA WHERE THE CANAL FROG CEREMONY IS REFERRED TO IS IMPORTANT FOR ANOTHER REASON; ETYMOLOGY OF WORDS ON WATER IS ALSO AVAILABLE HERE .
RV= Rig Veda; AV= Atharva(na) Veda
Please read the hymn first :-
STANZA 1: why are the rivers known as Nadi in Sanskrit
STANZA 2: why is the water known as Apa in Sanskrit
STANZA 3: : why are the rivers known as Var in Sanskrit
STANZA 4: why is water known as Udaka in Sanskrit
STANZA 5: Water is Honey, Soma
STANZA 6: Water is Gold; Water is Amrit (Elixir of Life)
STANZA 7: Please follow the way in the canal dug out no
WATER ETYMOLOGY !
13. To the waters.
1. Since formerly , going forth together, ye resounded (nad) when the dragon was slain, thenceforth ye are streams (nadī́) by name: these are your names, O rivers.
2. When, sent forth by Varuna, ye thereupon quickly skipped together, then Indra obtained (āp) you as ye went; therefore are ye waters (ā́p) afterward.
3. As ye were flowing perversely (apakāmám), since Indra verily hindered (var) you by his powers, you, ye divine ones, therefore the name water (vā́r) is assigned you.
4. The one god stood up to you, flowing at [your] will; “the great ones have breathed up (ud-an),” said he; therefore water (udaká) is [so] called.
5. The waters [are] excellent; the waters verily were ghee; these waters verily bear Agni-and-Soma; may the strong (tīvrá) satisfying savor (rása) of the honey-mixed come to me along with breath, with splendor.
6. Then indeed I see, or also hear; unto me comes the noise, to me the voice of them; I think myself then to have partaken ambrosia (amṛ́ta) when, ye gold-colored ones, I have enjoyed you.
7. This, O waters, [is] your heart, this your young (vatsá), ye righteous ones; come thus hither, ye mighty ones, where I now make you enter.
XXXX
MY COMMENTS
ANOTHER TRANSLATION
HYMN XIII, Book 3
A benediction on a newly cut water channel
1.As ye, when Ahi had been slain, flowed forth together with a roar,
So are ye called the Roaring Ones: this, O ye Rivers, is your name.
2.As driven forth by Varuna ye swiftly urged your rolling waves,
There Indra reached you as you flowed; hence ye are still the Water-floods.
3.Indra restrained you with his might. Goddesses, as ye glided on
Not in accordance with his will: hence have ye got the name of Streams.
4.One only God set foot on you flowing according to your will,
The mighty ones breathed upward fast: hence; Water is the name they bear.
5.Water is good, water indeed is fatness. Agni and Soma, truly,both bring water.
May the strong rain of those who scatter sweetness come helpful unto me with breath and vigour.
6.Then verily, I see, yea, also hear them: their sound approaches me, their voice comes hither.
Even then I think I am enjoying Amrit, what time I drink my fill of you, gold coloured!
7.Here,O ye Waters,is your heart. Here is your calf, ye holy ones.
Flow here, just here, O mighty Streams, whither I now am leading you.
Xxx
My Comments
Hindus are great linguistic scholars; they give humorous, funny and sometimes informative and thought provoking explanations to words. Yaska and Manu also did it. Satapata Brahmana also has such explanations. That shows they were highly educated. If we compare the literature of the same period in other parts of the world ,we don’t find such scholarly interpretations.
Manu gives etymology of words such as Jaya, Putra etc.
Kausika sutra,written later, gives explanations to most of the mantras in the AV. Here Kausika Sutra explains the practical part of the ceremony. The canal is already dug, and the water of the river is to be admitted. The new channel which the river is to fill is now dear to you (words calf and heart are used in the seventh stanza/mantra) . It is as lovable as a calf to its mother cow. This cow and calf simile occurs all through the RV as well. Vaatsalyam is a word used by Hindus to mention affection; Vatsa is calf.
When the Vedic priests recite this mantra, GOLD is deposited in the canal. Then a FROG tied with BLUE AND RED THREADS is released. That frog is covered with an aquatic plant called AVAKAA / SEVALA.
Avakaa is identified by ancient commentators as Vallisneria Octandra.
Stanza /mantra five is in Tamil Tirukkural No.11:-
“As the falling rain sustains the world
It must be deemed the Amrita “(nectar of life)-Kural 11
Bhagavad Gita also (3-14) praises rain.
The use of Vallisneria in this ceremony is also significant. It is used nowadays in all aquariums. It supports fish and other water creatures.
But no one could explain the godl and red-blue thread. Even if we think that the gold will go to the priest why this Vallisneria plant and why blue and thread are not explained. A lot of things are left out without explanation. it is because they lost the meaning in course of time, or this needs no explaining because everybody knows it!
We come across Var in Stanza 3. That is in Tamil as well. Aaaru for river in Tamil is pronounced as Varu in some places. Moreover Vaari/Maari for rain and water is also in Tamil.
Xxx
FROG IN CREMATORIUM!
This is a very strange thing. It is in RV (10-16), as a funeral hymn.
Mantra 14 (10-16-14)
“O full of coolness, thou cool plant, full of fresh moisture, freshening Herb.
Come hither with the FEMALE FROG; fill with delight this Agni here”.
Mantra 13
“Cool, Agni, and again refresh the spot which though hast scorched and burnt
Here let the water lily grow and tender grass and leafy herb”
Ralph T H Griffith explains :-
14.Fill with delight = euphemistically extinguish. After the fire has consumed the corpse, water is poured upon it to extinguish it. Then furthermore certain water plants are put there. In addition to this a FEMALE FROG, elsewhere a male, is put upon the place where the fire has burned. These , as representatives of life in the waters, are symbolically supposed both to prevent and extinguish fire ( M Bloomfield, 1890).
I don’t know whether Bloomfield and Griffith are right in their interpretations. Only the priests who do such ceremonies could explain it. Most of them pass the information by word of mouth from generation to generation. ( I have already written about the leafy boat I saw in my mother’s ceremony in the crematorium and the priests explanation to it which coincided with ancient Egyptian literature.
Another interesting FROG hymn gives strange names to FROGS which no one could explain; and in another hymn six Snake names are found, of which two are in Sumer names. Early translators could not explain them, and they interpreted some as onomatopoeic words. But hey have more meaning in to it. We must do more research.
In the next part I will compare it with Egyptian Frog Goddess Heqet which is in fact a Hindu Goddess
9 Mar 2014 — Though Sangam age Tamil poets who lived before him used lot of similes in their 2300 poems, Appar as a single poet is far superior to them …
One who reads his similes will be reminded of the greatest poet of India, Kalidasa. Appar was given the name Thiru Navukku Arasu by Lord Shiva. It means the …
14 Mar 2014 — It is a popular story known to most of the Asians because Hindu, Buddhist, Jain and Sufi poets sang about it. But not many people knew that …
—subham—
to be continued……………..
TAGS- Frog in Vedas, Crematorium, Canal ceremony, Frog, Goddess, Egypt
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ச.நாகராஜன் எழுதியுள்ள சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பற்றிய பத்து உரைகள் ஆல் இந்தியா ரேடியே சென்னை வானொலி A அலைவரிசையில் (720 Hz) 11-11-2021 முதல் ஒலிபரப்பாகி வருகிறது. நேரம் தினமும் காலை 6.55 (மாநிலச் செய்திகள் முடிந்த பின்னர்). இதை ஆன்லைன் வாயிலாகவும் கேட்டு மகிழலாம்.
12-11-2021 காலை ஒலிபரப்பான இரண்டா உரை கீழே தரப்படுகிறது.
பிளாஸ்டிக் அபாயம் : புவியைக் காக்க உத்வேகமூட்டும் வழிகாட்டிகள்! ச.நாகராஜன்
இந்த பிரபஞ்சத்தில் மனிதர்கள் வாழும் ஒரே இடமாக இருப்பது அற்புதமான பூமி மட்டுமே ஆகும். இதில் உள்ள கடல்கள் மூலம் நீரைப் பெறுகிறோம். காடுகள் மூலம் பல வாழ்வாதாரங்களை அபரிமிதமாகப் பெறுகிறோம். ஆனால் இவற்றிற்கெல்லாம் ஒரு பெரும் அபாயமாக இருப்பது பிளாஸ்டிக்கே!
இது பிரபஞ்சத்தில் விஞ்ஞானிகள் விளக்கும் ஒரு பெரிய கருந்துளை – ப்ளாக் ஹோல் – போல இன்று ஆகி, அனைத்தையும் விழுங்கும் நிலையில் இருக்கிறது. நீரில் நாம் எறியும் அனைத்தும் நமக்கே திரும்பி வருகிறது. ஆம், ஒவ்வொரு ஆண்டும் நாம் 8 ட்ரில்லியன் (Trillion) கிலோகிராம் பிளாஸ்டிக் பொருள்களை உலகெங்கும் உள்ள கடல்களில் தூக்கி எறிகிறோம். ஒரு ட்ரில்லியன் என்பது ஒன்றுக்கு பக்கத்தில் 12 பூஜ்யங்களைப் போட்டால் வரும் பெரிய எண்ணிக்கையாகும். இப்படிப் போடப்படும் பிளாஸ்டிக் மாசு மனித குலத்தை அழிக்கும் பெரும் அபாயமாக மாறி இருக்கிறது.
இந்த அபாயத்தை உணர்ந்து மனித குலம் அலறும் போது, இதைப் போக்க தம்மால் முடிந்த அளவு சிறிய உணவு விடுதி வைத்திருக்கும் சாமானியரிலிருந்து பெரும் நிறுவனம் வரை பல அரிய செயல்களைச் செய்து வழிகாட்டுகின்றனர். அவற்றில் சிலவற்றைப் பார்த்து உத்வேகம் பெறுவோம்.
அந்தமான் தீவிலிருக்கும் இயற்கை ஆர்வலர்கள் இந்த பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க எண்ணி அதை எண்ணத்தோடு நிறுத்தாமல் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை அறவே நிறுத்தி அதற்குப் பதிலாக மூங்கில் கூடைகளைப் பயன்படுத்துகின்றனர். சிறு மரக் கன்றுகளையும் நாற்று இளஞ்செடிகளையும் பிளாஸ்டிக் பைகளில் மண்ணைப் போட்டு அதில் வைப்பது வழக்கம். அதை நிறுத்தி அப்படிபட்ட மரக்கன்றுகளை மூங்கிலினால் ஆன கூடைகளில் போட ஆரம்பித்து புதிய வழியைக் காட்டியுள்ளனர்.
சத்தீஸ்கரில் உள்ள முனிசிபல் கார்பரேஷன் தனது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கழிவு பிளாஸ்டிக் பொருள்களைக் கொண்டு வந்து தரும் ஏழைகளுக்கு இலவச உணவை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆகவே பெருமளவு கழிவு பிளாஸ்டிக் பொருள்கள் நீங்கி நகர் சுத்தமாகிறது. ஏழைகளும் உணவை இதற்கான உணவு விடுதியிலிருந்து இலவசமாகப் பெறுகின்றனர்.
கௌஹாத்தியில் உள்ள ஒரு பள்ளி (அக்ஷர் என்ற பள்ளி) தனது மாணவர்களை பிளாஸ்டிக் கழிவு பிளாஸ்டிக் பொருள்களைக் கொண்டு வர ஊக்கப்படுத்துகிறது. அவர்கள் இப்படி கழிவு பிளாஸ்டிக் பொருள்களைத் தரும் போது அதுவே அவர்கள் கொடுக்க வேண்டிய பள்ளிக் கட்டணமாகக் கருதப்படுகிறது. பள்ளிக் கட்டணம் அவர்களுக்கு இந்த சேவையின் மூலம் கிடையாது.
இது போல ஒவ்வொரு ஊரிலும் புது விதமான வழிகள் உருவாக்கப்படுகின்றன; பிளாஸ்டிக் கழிவுகள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்படுகின்றன. நாமும் சில புதிய வழிகளைக் காணலாமே!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஒரு இந்துக் கடவுள் உலகில் உள்ள மிகப் பெரிய உளவு அமைப்புகளான சி.ஐ.ஏ . கே.ஜி.பி. எம் ஐ 5, எம் ஐ 6, மொசாத்.இந்தியாவின் ‘ரா (RAW=Research and Analysis Wing) ‘ உளவாளிகளையும் ஜேம்ஸ்பாண்ட், மிஸ் மார்பிள் , ஷெர்லாக் ஹோம்ஸ் ஆகியோரையும் விடப் பெரியவர்; திறமையானவர் என்று அதர்வண வேத மந்திரம் சொல்கிறது. ஏன் ?எப்படி?
இதோ கணக்கு
ஒரு மனிதன் சராசரியாக ஒரு நிமிடத்துக்கு 10 முறை கண் சிமிட்டுகிறான் (மன்னிக்கவும்; அழகான பெண்களைப் பார்த்து கண் சிமிட்டுவதையும், அவள் அழகில் மயங்கி, சொக்கிப் போய் , கண்களை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டே இருந்ததையும் அதர்வ வேதம் சேர்க்கவில்லை!)
சரி, அப்படியானால் ஒரு மணிக்கு ஒரு மனிதன் சராசரியாகக் கண் சிமிட்டுவது 60X 10 =600 முறை
ஒரு நாளில் அவன் 16 மணி நேரம் விழித்து இருப்பான் . அப்போது அவன் கண் சிமிட்டுவது
600x 16 மணி = 9600 முறை
உலகின் ஜனத்தொகை , இதை நான் எழுதிய போது………..
7.9 பில்லியன் , அதாவது 7,906,132,700
இதை நான் எழுதும்போது லட்சக் கணக்கில் கூடிக்கொண்டே இருக்கும்.
உலக ஜனத் தொகை கடிகாரம் என்பதை கூகுள் மூலம் பார்த்தீர்களானால் ஒவ்வொரு வினாடியும் எவ்வளவு கூடுகிறது என்பதைக் காணலாம்; வியக்கலாம் .
நம் கணக்கிற்கு 7,906,132,700 என்று வைத்துக் கொண்டால் கண் சிமிட்டுதலின் எண்ணிக்கை
9600 X 7,906,132,700 (ஒரு நாளில் மட்டும்!!!!!!!)
இதை வானத்திலிருந்து வருணன் கணக்கிட்டுக் கொண்டே இருக்கிறானாம்; இப்படிச் சொல்கிறது அதர்வண வேதம் . தள்ளிப்போன வெள்ளைக்காரப் பயல்கள் கூட, அதர்வண வேதத்துக்கு கி.மு.1000 என்று தேதி குறிக்கிறான் அதாவது இற்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னர்!
இந்த வருண பகவானை தொல்காப்பியம் தமிழர் கடவுள் என்று விஷ்ணு, இந்திரன், வேல் முருகன், துர்க்கை ஆகியோருடன் பட்டியலில் சேர்த்து இருக்கிறது .
பார்ப்பனர்கள் தினமும் மாலை நேரத்தில் சொல்லும் சந்தியாவந்தன மந்திரத்தில் இவனிடம் மன்னிப்புக் கேட்கிறார்கள் ; அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை இன்று நீ பார்த்ததை நான் அறிவேன் ; ப்ளீஸ், ப்ளீஸ், மன்னிச்சுக்கோ.- என்று
துருக்கி- சிரியா எல்லையில் உள்ள பொகஸ்கொய் Bogazkoy களிமண் படிவ க்யூனிஃபார்ம் எழுத்துக் கல்வெட்டிலும் இந்திரன் மித்திரனுடன் வருணன் பெயர் உள்ளது. அதன் தேதி கி.மு 1340. அதாவது 3360 ஆண்டுகளுக்கு முந்தியது. இதெல்லாம் தள்ளிப்போன உதவாக்கரை அரைவேக்காடுகள் சொன்ன தேதி. அதாவது இந்து மதத்தை நக்கல் செய்யும், இந்து மதத்தைப் பின்பற்றாத, தன மதம் ஒன்று மட்டுமே கடவுளிடம் அழைத்துச் செல்லும் என்ற குருட்டு நம்பிக்கை கொண்ட வெள்ளைத் தோல்கள் சொன்ன சேதி . நம்முடைய பஞ்சாங்கமும் தமிழ்க் கல்வெட்டும் வியாசர் என்பவர் வேதத்தை நான்காகப் பிரித்ததையும் அது கலியுகம் துவங்குவதற்கு 60, 70 ஆண்டுகளுக்கு முன்னர் வியாசர் செய்த வேலை என்றும் சொல்கிறது. அதாவது இற்றைக்கு சுமார் 5200 ஆண்டுகளுக்கு முன்னர்!
இப்போது அதர்வண வேத கவிதையைப் படியுங்கள்; அதற்குப் பின்னர் இன்னும் சில சுவையான செய்திகளைச் சொல்கிறேன்:–
1.அவன் பெரிய அதிகாரி; பக்கத்தில் இருந்து பார்ப்பது போல உன்னிப்பாக நம்மையே பார்க்கிறான் ; எல்லோரும் ரஹசியம் பேசுவதாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்; அது எல்லாம் தேவர்களுக்கு நன்கு தெரியும்
2. ஒருவன் நிற்பது, உட்காருவது, வளைந்து வளைந்து கோணலாக ஓடுவது, மறைவாக ஒளிந்து கொண்டு யாருக்கும் தெரியாமல் எதையாவது செய்வது, இருவர் மட்டுமே தனி இடத்தில் அமர்ந்து கிசு கிசு பேசுவது அத்தனையும் வருணனுக்குத் தெரியும்.எப்படித் தெரியுமா? அவன் உங்கள் அருகில் மூன்றவது ஆளாக நைசாக உட்கார்ந்து பார்த்துக்கொண்டே இருக்கிறான்!!
3.இந்தப் பூமி அவனுக்கு சொந்தம்; அதற்கு மேல் நாம் பார்க்கும் வானமும் அவனுக்குச் சொந்தம் . பூமியில் உள்ள கடலும், கடல் போன்ற ஆகாயமும் அவனுடையதே.
நாலாவது மந்திரம்
4.((சப்போஸ்suppose ; நீ ஆகாயத்துக்கு அப்பால் ஸ்பேஸ் ஷட்டிலில் போகிறாய் என்று வைத்துக்கொள்வோம்)). அப்போதும் நீ அவன் எல்லைக்கு அப்பால் சென்றதாக நினைத்துவிடாதே . அவனுடைய ஒற்றர்கள் அங்கிருந்துதான் பூமிக்கே வருகிறார்கள் . அவர்களுக்கு 1000 கண்கள். பூமியை பார்த்துக கொண்டே இருக்கிறார்கள் (அதாவது அவர்கள் ஸிஸிடி வி CCTV காமெராக்கள்; கூகுள் மேப் GOOGLE MAP )
ஐந்தாவது மந்திரம்
வருணன் பெரிய ராஜா ; பூமி, ஆகாயம், அதற்கு இடையிலுள்ள அந்தரம், வானத்துக்கும் அப்பால் உள்ள இடம் அத்தனையையும் பார்க்கிறார்.இந்த ஜனங்களின் இமைச் சிமிட்டுகளையும் அவன் எண்ணியுள்ளான். சூதாடுபவன் காய்களை உன்னிப்பாக எண்ணுவது போல அவன் எண்ணிக்கொண்டே இருக்கிறான்!!!!
ஆறாவது மந்திரம்
6.ஏ வருணா ! பொய் சொல்ற பயல்களை 3X 7= 21 பாஸக் கயிற்றால் கட்டி, அடித்து விட்டு விளாசு; ஆனால் உண்மை பேசுவோரைத் தொடாதே
ஏழாவது மந்திரம் 7.
ஏ வருணா ! விடாதே; அவர்களை 100 பாசக்கயிற்றால் கட்டு ; மனிதர்களைக் கவனிக்கும் வருணா! பொய் சொல்ற பயல்களை நல்லாக் கட்டு. ((நீ அடிக்கிற அடியிலே )) அவன் வயிறு தொங்கி மஹோதர நோயுள்ளவன் (போல) ஆகட்டும்
எட்டாவது மந்திரம்
8.நீயே அகலம்; நீயே நீளம்; நீயே மனிதன் , நீயே தெய்வமாக நிற்கிறாய் நீ முன்னைப் பழமைக்கும் பழமையானவன். பின்னைப் புதுமைக்கும் புதுமையானவன்
ஒன்பதா வது மந்திரம்
9.இன்னாரே ! நான் அந்த எல்லாப் பாசங்களுடன் உன்னைக் கட்டுகிறேன்.இந்த இந்த குடும்பத்தைச் சேர்ந்தவனே ! இந்த இந்தத் தாயின் மகனே ! அவர்களின் அனைவரையும் உனக்கு நான் அனுகூலமாய் நான் ஆக்ஞாபிக்கிறேன்.
XXXX
ஒன்றுக்கும் உதவாத உதிய மரத்தின் VON ROTH கருத்து !
7 வெள்ளைத் தோல்கள் இந்தப் பாடலை ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்த்தன .
Max Muller, Griffith, Ludwig, Grill, Von Roth, Muir, Kaegi
அதில் தள்ளிப்போன பயல் ஜெர்மனியைச் சேர்ந்த VON ROTH வான் ராத். அவன் 7 வால்யூம்களில் சம்ஸ்க்ருத அகராதியை (St Petersburg Dictionary) உருவாக்கியவன். அதில் தத்துப் பித்து என்று உளறிக்கொட்டி கிளறி மூடி இருக்கிறான். அதை கோல்ட்ஸ்டக்கர் THEODORE GOLDSTUCKER என்ற பேரறிஞர் விளாசு விளாசு என்று விளாசி இருக்கிறார் . அவரும் வில்ஸன் , மாக்ஸ்முல்லர், வான் ராத் காலத்தில் வாழ்ந்தவர்; ஆனால் பெரிய வித்தியாசம்; அவர் ஒரு யூதர். மற்ற 30+++++ மொழிபெயர்ப்பாளர்களும் கிறிஸ்தவர்கள். அவர்கள் பிரபஞ்சமே 6000 ஆண்டுகளுக்கு முன்னர்தான் வந்தது என்பதை நம்பியவர்கள் . பாணினியின் காலம் என்பது பற்றி கோல்ட்ஸ்டக்கர் எழுதிய நூலில் மாக்ஸ் முல்லரையும் விடவில்லை. முன்னுக்குப் பின் முரணாக எழுதியுளாயே முட்டாள் என்று மாக்ஸ்முல்லர் தவறுகளை சுட்டிக்காட்டி ஏசுகிறார்.
நிற்க.
சப்ஜெக்டு subject க்கு வருகிறேன்.
அப்பேற்ப்பட்ட தள்ளிப்போன , ஒன்றுக்கும் உதவாத உதிய மரமான , தள்ளிப்போன ஜெர்மானியன் வான் ராத் VON ROTH வியக்கிறான் : வேதத்தில் கடவுளைப் பற்றிய கவிதையில் இதை வீட உன்னதமான கவிதையை நன் கண்டதே இல்லை. இறைவன் சர்வ வியாபி, எல்லாம் வல்லவன் , எங்கும் நிறைந்தவன் , எல்லாம் அறிந்தவன் என்பதை இந்த அளவுக்கு விளக்கும் கவிதையை நான் கண்டதே இல்லை; இதில் கடைசி மந்திரம் எதிரிகளுக்கு எதிரான சாபம் போல இருப்பது ஒன்று மட்டுமே குறை.
xxx
லண்டன் சுவாமிநாதன் வியாக்கியானம்
இது ஒரு அற்புதமான கவிதை; வருணனைப் பற்றிய வருணணைகள் அனைத்தும் ரிக் வேதத்தில் இதே தொனியில் அமைந்திருப்பது உண்மையே. ஆனால் இங்கே புலவர் வருணிக்கும் மூன்று விஷயங்கள் வேறு எங்கும் இல்லை
1.அவன் மனிதனின் கண் சிமிட்டல்களையும் எண்ணிக்கொண்டே இருக்கிறான். அதாவது NASA நாஸா , PENTAGON பெண்டகன் முதலிய இடங்களில் உள்ள சூப்பர் கம்பியூட்டர்களை விட வருணன் பெரிய கம்ப்யூட்டர். அவன் சிசி டிவி CCTV காமெரா போல பார்த்துக் கொண்டிருப்பதோடு பாவ புண்ணியங்களை கணக்குப் போ ட்டுக் கொண்டே இருக்கிறான். இதனால் தினமும் மாலை வேளை மந்திரத்தில் பிராமணர்கள் வருண பகவானிடம் பாவ மன்னிப்பு கேட்கின்றனர் .
2.அவனுடைய தூதர்கள் உளவாளிகள் ; அவர்களுக்கு ஆயிரம் கண்கள் . இப்போது கூகிள் மேப் GOOGLE MAP மூலம் நாம் யார் வீட்டின் வாசலில் யார் நிற்கிறார் என்பதைக் காண முடியும். அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்குள் யார் நுழைகிறார், வெளியே வருகிறார் என்று காண முடியும். இதை வருணன் ஒற்றர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே செய்துள்ளனர். செய்து வருகின்றனர்.
3. வருணன் இன்விஸிபிள் மேன் ; அதாவது நாம் இருவர் மட்டுமே ரஹசியம் பேசுகிறோம் என்று நினைக்கிறோம். புலவர் சொல்கிறார்; டேய் மக்கு, மடையா; உன் பின்னால் வருணனும் உனக்குத் தெரியாமல் கேட்டுக் கொண்டு இருக்கிறாண்டா. என்று
இறைவனின் மஹிமையை இதைவிட எவனாவது வருணிக்க முடியுமா ?
பாரதியார் சொன்னார் சுவை புதிது, பொருள் புதிது, சோதிமிக்க நவ கவிதை; எந்நாளும் அழியாதா மா கவிதை என்று ; அந்த வரிகள் இந்தக் கவிதைக்கு நன்கு பொருந்தும்.
மாணிக்க வாசகர் இறைவனை வருணிக்கையில் முன்னைப் பழமைக்கும் பழமை, புதுமைக்கும் புதுமை என்றார் ; அற்புதமான வாசகம்; அதுவும் இந்த துதியில் தொனிக்கிறது
நோய்கள் வருவது ஒருவருடைய பூர்வ ஜென்ம பாவத்தால் என்பது இந்துக்களின் கருத்து. இதை ஏற்காத வான் ராத் அதை ஒரு குறையாக கருதுகிறார். ஏனெனில் பாவம் செய்தொரின் மகா உதர (மஹோதர = பெரு வயிறு) நோய் பற்றி வருகிறது.
பொய் சொல்வோரை கட்டி அடித்து நொறுக்கு; உண்மை சொல்வோரைக் காப்பாற்று என்பது அற்புதமான கருத்து. கந்த சட்டி கவசத்தில் வரம் வரிகளை நினைவு படுத்துகிறார் புலவர் (கட்டி உருட்டி கால் முறியக்கட்டு, குத்துக் குத்துக் கூர் வடிவேலால்)
மந்திரம் ஆறில் மூவேழ் 3x 7=21 என்ற எண் வருகிறது புற நானூற்றின் 166 ஆவது பாடலிலும் இது வருகிறது..
கடவுள் என்பவன் வானத்தில் ஒரு மாளிகையில் உட்காரவில்லை எங்கும் நிறைந்தவன் என்பதை வருணனே நீ இறைவன் நீ மனிதன் என்ற மந்திரம் காட்டுகிறது.
எல்லாம் வல்ல,எங்கும் நிறைந்த, எல்லாம் (OMNI POTENT, OMNI PRESENT, OMNI SCIENT )அறிந்த வருணனை, மாலை வேளையில் துதிக்கும் பிராமணனைக் கண்டால் ஒரு கும்பிடு போடுங்கள் . ஏனெனில் அந்த வருணனின் மஹிமையை, தொல் காப்பியன் சொன்னதை, இன்றும் நமக்கு சொல்லி வருகிறார்கள்!
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ச.நாகராஜன் எழுதியுள்ள சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பற்றிய பத்து உரைகள் ஆல் இந்தியா ரேடியே சென்னை வானொலி A அலைவரிசையில் (720 Hz) இன்று முதல் (11-11-2021) முதல் ஒலிபரப்பாகிறது. நேரம் தினமும் காலை 6.55 (மாநிலச் செய்திகள் முடிந்த பின்னர்). இதை ஆன்லைன் வாயிலாகவும் கேட்டு மகிழலாம்.
11-11-2021 காலை ஒலிபரப்பான முதல் உரை கீழே தரப்படுகிறது.
ஒரு அவசர செய்தியை அனைவருக்கும் பரப்புவோம்!
ச.நாகராஜன்
இன்றைய வேக யுகத்தில் ஒரு அவசர செய்தியை அனைவருக்கும் பரப்ப வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். ஆகவே அனைவரும் ஒரு நிமிடம் தங்கள் வேலையை நிறுத்தி விட்டு இந்த அவசர செய்தி என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் வாழும் பூமியின் குரல்வளை ஒவ்வொரு விநாடியும் நெரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது என்பது தான் அதிர்ச்சியூட்டும் அவசரச் செய்தி.
புவி வெப்பம் கூடிக் கொண்டே இருப்பதால் ஒவ்வொரு விநாடியும் உலகெங்கும் வாழும் மக்கள் பெரும் அபாயத்திற்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை விட வேறு எது தான் அவசரச் செய்தியாக இருக்க முடியும்!
நச்சுப் புகையான கார்பன் டை ஆக்ஸைடு உலகெங்கிலும் மிக அதிகமாக பரவிக் கொண்டே இருக்கிறது என்றும் இதனால் புவி வெப்பமாவது கூடிக் கொண்டே போகிறது என்றும் உலகின் அறிவார்ந்த விஞ்ஞானிகள் எச்சரித்துக் கொண்டே இருக்கின்றனர். 1850ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை எடுத்துக் கொண்டால் பூமியின் வெப்பநிலை 1.5 (ஒன்று புள்ளி ஐந்து) டிகிரி ஃபாரன்ஹீட் கூடி இருக்கிறது. இது இன்னும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதனால் கடற்கரை ஓரங்களில் உள்ள நகரங்கள் கடல் பொங்கி உள்ளே நுழைவதால் அழியும். வெப்பநிலை உயர்வால் மழை பொழிவது குறையும். பல நாடுகளிலும் வரலாறு கண்டிராத அளவில் பஞ்சங்கள் உருவாகும். வெப்ப அலைகள் மனிதர்களின் உடல்நிலையைப் பாதித்து ஆரோக்கிய சீர்கேடு பெருமளவில் ஏற்படும்; அநியாயமாக மனித உயிர்கள் அழியும்! கடல் அமிலத்தன்மை உடையதாக ஆகி விடும். கடல் வாழ் உயிரினங்கள் அழியும். இதன் ஆரம்ப அறிகுறிகள் இப்போதே தெரிய ஆரம்பித்து விட்டன.
ஆகவே ஒவ்வொரு மனிதனும் விஞ்ஞானிகளால் அறிவிக்கப்பட்ட இந்த அவசரநிலை பிரகடனத்தை உள்ளார்ந்து மனதில் ஏற்று புவி வெப்பம் உயர்வதற்கு முக்கியமான காரணங்களுள் தலையாய ஒன்றாக இருக்கும் நச்சுப்புகையான கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தைத் தடுக்க வேண்டும். அதற்கு முதல் படியாக வாகனங்களிலிருந்து வெளியேற்றும் நச்சுப்புகை வெளியேற்றத்தைத் ஒவ்வொருவரும் தடுக்க வேண்டும்.
நச்சுப் புகையைக் கக்கும் வாகனப் பயன்பாட்டை முடிந்த அளவில் குறைப்பது, மின்சாரத்தினால் இயங்கும் வண்டிகளை வாங்க ஆரம்பித்துப் பயன்படுத்துவது, சூரிய ஆற்றலை முடிந்த அளவில் அதிகப்படியாக உபயோகப்படுத்துவது, குறுகிய தூரங்களில் உள்ள கடைகள் உள்ளிட்டவற்றிற்கு நடந்தோ அல்லது சைக்கிளிலோ செல்வது, ஒரே பாதையில் செல்லும் பலரும் தங்களுக்குள் ஒரு புரிதலை ஏற்படுத்திக் கொண்டு ஒரே வாகனத்தில் பயணம் செய்வது, முடிந்தவரையில் தனி நபருக்கென காரில் செல்லாமல் பஸ்களைப் பயன்படுத்துவது, அல்லது உள்ளூர் மின் ரயில் போக்குவரத்தைப் பயன்படுத்துவது போன்ற பல வழிகளையும் தங்களுக்கு உகந்த முறையில் கடைப்பிடித்தால் பெருமளவு நச்சுப் புகை வெளியேறுவது குறையும் அல்லவா?
நச்சுப் புகை பற்றிய அவசர செய்தியைப் பரப்புவோம்; அதைப் பெருமளவு குறைக்கும் வழிகளைப் பின்பற்றுவோம். புவியைக் காப்போம்; அதன் மூலம் நம் சந்ததியினரைக் காப்போம்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
VEDIC GOD VARUNA is described as a spy in the Vedas. The implied meaning is ‘nothing can happen without his knowledge’. His description beats all the spies from RAW, Mossad, CIA, KGB, FBI, MI 5, MI 6, Scotland Yard and James Bond Films. After reading the Atharva Veda hymn on Varuna, even anti Hindu German Indologist Von Roth said this was The Best Description of a God in the Vedas. His omnipresence and Omnipotence are described beautifully and powerfully.
Super Computer
Varuna is said to count the batting of eyelids of every human being. That means he is the most advanced Super Computer; because he counts 75840 billion every day.
Following is my calculation:
Average 10 blinks per minute; X 60 minutes= 600 per hour
600X16 hours (eight hour sleep deleted from 24 hours a day)= 9600 blinks per day per person X 7.9 billion =75840 billon blinks per day in the whole world
In numbers 75840 ,000, 000,000 PER DAY
IN SHORT
VARUNA IS THE CCTV OF THE WORLD
VARUNA IS THE SUPER SPY WITH 1000 EYES
VARUNA IS THE MOST ADVANCED SUPER COMPUTER WITH BILLIONS OF CALCULATIONS EVERY MINUTE
VARUNA IS EVERY WHERE ‘UP ABOVE THE WORLD SO HIGH’ AND BOTTOM OF THE MARIANA TRENCH IN PACIFIC OCEAN, DEEPEST POINT in ocean
VARUNA IS HUMAN AND DIVINE
VARUNA IS IN EVERY WATER DROP.
HE IS THE INVISIBLE THIRD MAN IN EVERY SECRET MEETINGS.
HE HAS THE NOOSE WHICH WILL BIND EVERYONE.
HE PUNISHES ALL THE EVIL DOERS.
HE IS IN CHARGE OF THE LAW DEPARTMENT OF THE UNIVERSE
HE IS THE CHIEF JUSTICE OF THE SUPREME COURSE OF THE UNIVERSE.
XXX
ALL BRAHMINS WORSHIP VARUNA EVERYDAY IN THE SANDHYA VANDANA MANTRA. THEY SALUTE HIM WITH SPEACIAL MANTRA EVERY EVENING. HE IS MENTIONED IN THE BOGAZKOY INSCRIPTION DATED 1340 BCE (in Turkey)
Xxx
Here is the hymn from Atharva Veda; though there are hymns on Varuna in Rig Veda , this is the best. Not only that, it shows how powerful Hindu Gods are.
xxx
HYMN XVI, CANTO 4, ATHARVA VEDA
On the omnipresence and omniscience of Varuna
1)The mighty Ruler of these worlds beholds as though from close
at hand,
The man who thinks he acts by stealth: all this the Gods
perceive and know.
2)If a man stands or walks or moves in secret, goes to his lying-
down or his uprising,
What two men whisper as they sit together, King Varuna knows:
he as the third is present.
3)This earth, too, is King Varuna’s possession, and the high
heaven whose ends are far asunder.
The loins of Varuna are both the oceans, and this small drop of
water, too, contains him. p. a124
4)If one should flee afar beyond the heaven, King Varuna would
still be round about him.
Proceeding hither from the sky his envoys look, thousand-eyed,
over the earth beneath them.
5)All this the royal Varuna beholdeth, all between heaven and
earth and all beyond them.
The twinklings of men’s eyelids hath he counted. As one who
plays throws dice he settles all things.
6)Those fatal snares of thine which stand extended, threefold,
O Varuna, seven by seven,
May they all catch the man who tells a falsehood, and pass un-
harmed the man whose words are truthful.
7)Varuna, snare him with a hundred nooses! Man’s watcher! let
not him who lies escape thee.
There let the villain sit with hanging belly and bandaged like a
cask whose hoops are broken.
8)Varuna sends, and drives away, diseases: Varuna is both native
and a stranger,
Varuna is celestial and is human.
9)I bind and hold thee fast with all these nooses, thou son of such
a man and such a mother.
All these do I assign thee as thy portion.
XXX
My comments:-
Von Roth said
There is no hymn in the whole Vedic literature which express the divine omniscience in such forcible (forceful) terms as this .
Hindus believe diseases come to one who does sinful activities in previous births. So we find diseases in this mantra.
Griffith points out that there is one statement in the Bible (Psalms 139-2-3 which can be compared to one line here in Mantra 2.
Griffith gives references in RV1-25-13; 7-87-3; 7-89-2
Mantra 7 has reference to 7,7,7=21 which is in Tamil Sangam Purananuru 166.
Six foreigners have translated this hymn:- Muir, Max Muller, Von Roth, Ludwig, Grill and Kaegi
This can be compared with Bharatiyar’s description of his poem
8 Jul 2013 — East European Slavs worshiped Varu as Perun Oldest Tamil book Tolkappaiam dated to 1st century BC mentions Varuna as one of the four Gods …
tags- Varuna, Spy, Blink, Eyelid, 1000 eyes, Secret presence, Von Roth, Best description of God,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வியாசர் என்பவரை இந்துக்களின் எல்லா பிரிவினரும் ‘குரு’ என்று ஏற்கின்றனர் ; அது மட்டுமல்ல; வியாசரை விஷ்ணுவின் அ வதாரமாகவும் கொள்கின்றனர். அவரது நினைவாக வியாச பெளர்ணமி தினம் முதல், 4 மாதங்களுக்கு சாதூர் மாஸ்ய விரதமும் அனுஷ்டிக்கின்றனர்.;ஏன் தெரியுமா?
அவர் இறந்தவுடன் கலியுகம் துவங்கப் போவது பஞ்சாங்கக் கணக்குப்படி தெரிந்தது; உடனே அவசரம் அவசரமாக புராண இதிஹாச வேதங்களைத் தொகுத்தார். அவர் பெயரில் உள்ள விஷயங்களைக் கணக்கிட்டால் பத்து கின்னஸ் புஸ்தகத்தில் எழுதலாம் ; தனக்குப் பின்னர் பிறக்கப்போகும் கலியுகத்தில் மக்களுக்கு வேதங்களைப் பின்பற்ற நேரமும் இருக்காது; நாட்டமும் இருக்காது என்று கருதி 1400 வரிகளில் இந்து மதத்தை ‘ஜுஸ்’ பிழிந்து பகவத் கீதை என்னும் பெயரில் மஹாபாரதத்தில் சேர்த்தார். மகாபாரதத்தின் மொத்தவரிகள் இரண்டு லட்சம் வரிகள். அதில் ஒரு மில்லியன்- பத்து லட்சம் சொற்கள் உள்ளன !
அதே போல 18 புராணங்களையும் தொகுத்தார். இதை எல்லாம் விட ஒரு அற்புதமான வேலையை அவர் செய்தார். அதில்தான் அவர் உலக மஹா ஜீனியஸ் / மஹா மேதாவி என்பது தெரிகிறது. எழுதக்கூடாது; வாய் மொழி மூலமே பரப்ப வேண்டும்; அதிலும் ஒலி பிசக்கக்கூடாது ; அதிலும் மனம், மொழி, மெய் மூன்றிலும் உண்மை உடையவர்கள் மட்டுமே கற்கவேண்டும் என்று விதி மேல் விதிகளைக் கொண்ட வேதங்களை பலரும் பின்பற்றமுடியாமல், அதாவது நினைவிற் வைத்துக்கொள்ள முடியாமல், தவிப்பதைக் கண்டார். உடனே அத்தனையையும் திரட்டி 4 பிரிவுகளாகப் பிரித்தார். அதை விட முக்கியம் அதைப் பரப்ப 4 சீடர்களைத் தேர்ந்தெடுத்தார் ; ‘இதோ பாருங்கள்; இனி உங்கள் பொறுப்பு இதைப் பரப்புங்கள் என்றார்
. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பாடப்பட்ட சங்கத் தமிழ் நூல்களும் நான் மறை அந்தணர் பற்றீச் சொல்லி, ‘எழுதாக் கற்பு’ என்று வேதங்களைப் புகழ்கின்றன. அது மட்டுமல்ல. தமிழின் மிகப்பழைய நூலான தொல்காப்பியத்துக்கு சர்ட்டிபிகேட் certificate கொடுத்து இது நல்ல புஸ்தகம்தான் என்று சொல்லியவரும் அப்படிப்பட்ட நான்மறை முற்றிய அதங்கோட்டு ஆச்சார்யார் ஆவார் .
xxxx
ரொம்ப நாளா எனக்கு ஒரு சந்தேகம் .
தமிழ் மன்னர்கள் உள்பட இந்தியா முழுதும் மன்னர்கள் வேதப் பிராமணர்களுக்கு ஏன் தங்கக் காசு கொடுத்தனர் (ஹிரண்ய தானம்), ஏன் நில புலனகளைக் கொடுத்தனர் (பிரமதேயம்) என்ற கேள்வி என் மனதில் வரும்; அது மட்டுமா? உலக மஹா தமிழ்க் கவிஞன் சுப்பிரமணிய பாரதி வேதம் என்று வாலாக என்று கொட்டு முரசே என்று ஏன் செப்பினான் என்றும் எண்ணுவேன்.
இதற்கெல்லாம் பதில் ரிக் வேதத்தின் கடைசி பாடலில் இருக்கிறது (10-11) அதுதான் 1028 ஆவது துதி. பத்தாயிரத்து 552 ஆவது மந்திரத்துக்கு மூன்று, நான்கு மந்திரத்துக்கு முந்திய 2, 3 மந்திரங்கள்.
முதல் உலக யுத்தம் முடிந்த பின்னர் ஏற்பட்ட LEAGUE OF NATIONS லீக் ஆப் நேஷன்ஸ் என்ற சர்வ தேச சபையும் இதையே சொன்னது; ஹிட்லரும் முசோலினியும் கேட்கவில்லை இரண்டாவது உலக மகா யுத்தம் வெடித்தது ; அது முடிந்த பின்னர் ஐ.நா. சபை தோன்றியது. அதன் சாசனத்திலும் அமைதி, ஒற்றுமை வலியுறுத்தப்பட்டது
நமது காலத்தில் ‘புதியதோர் உலகம் செய்வோம் ; கெ ட்ட போரிடும் உலகினை வேருடன் சாய்ப்போம்’ என்று பாரதி தாசன் பாடினார் ; காஞ் சி பரமாசார்ய சுவாமிகள் ஐ நா சபையில் பாடுவதற்காக எம் எஸ் சுப்புலெட்சுமிக்கு எழுதிக்கொடுத்தித்த ‘மைத்ரீம் பஜத பாடலிலும் இதையே சொன்னார். ஆனால் உலக மகா மேதாவி வேத வியாசர் இதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ரிக் வேதத்தின் கடைசி பாடலில் முத்தாய்ப்பாக வைத்தார். அதாவது 4 வேதங்களின் 20,000 மந்திரங்களின் மொத்தக் கருத்தே இதுதான் என்பது அவரது துணிபு..
அதைப் பார்ப்பதற்கு முன்னர் இன்னொரு சுவையான செய்தியைச் சொல்கிறேன். “சரி, ஆறு மாதத்தில் ரிக் வேதத்தின் 10,552 மந்தி ரங்களையும் ஆங்கிலத்திலும் தமிழிலும் படித்து முடித்துவிட்டோம்; கடைசி வேதமான அதர்வண வேதத்தையும் படிப்போமே” என்று எடுத்தால், அதில் ரிக் வேதத்தை விட அருமையான ஒற்றுமை மந்திரம் இருப்பதைக் கண்டு ஆச்சர்யத்தில் மூழ்கினேன்.
xxx
இதோ இரண்டு மந்திரங்களையும் நீங்களும் படியுங்கள்
ரிக் வேதம் 10-191
“எல்லோரும் ஒன்று சேருங்கள்
எல்லோரும் ஒன்றாகப் பேசுங்கள்
முன் காலத்தில் தேவர்களும் ஒற்றுமையுடன் இருந்து
வேள்வியில் தங்களுக்குரிய பங்கினை ஏற்றார்கள் .
உங்களுடைய மந்திரங்கள் ஒன்றுபோல ஒலிக்கட்டும்
உங்களுடைய அசெம்பிளியில் ஒன்றுபட்ட குரல் கேட்கட்டும்
எல்லோரும் ஒன்று போல சிந்திக்கட்டும்
எல்லோரும் ஒன்றையே நாடட்டும்
உங்களுடைய அசெம்பிளி தீர்மானமும் ஒன்றாக இருக்கட்டும்
உங்களுடைய எண்ணங்கள் எல்லாம் ஒன்றையே சிந்திக்கட்டும்” .
இதிலுள்ள ‘அசெம்பிளி’ என்ற ஆங்கிலச் சொல் 100 ஆண்டுகளுக்கு முன்னர் வேதத்தை மொழி பெயர்த்த கிரிப்பித் Ralph T H Griffith தின் சொல். இன்று நாடு முழுதும் பயன்படுத்தும் சபை/ அவை என்ற சொல் சம்ஸ்க்ருத மந்திரத்தில் உள்ளது
XXX
இதோ அதர்வண வேத ஒற்றுமை மந்திரம்
மூன்றாவது காண்டம் 30 ஆவது மந்திரம்
“நான் உங்களுக்கு ஒரே இருதயத்தை, ஒரே மனத்தைக் கொண்டு வருகிறேன்.
வெறுப்பிலிருந்து விடுதலை பெறுக; பிறந்த கன்றுக்குட்டியிடம் தாய்ப்பசுவுக்கு உள்ள பாசம் போல பாசம் பெருகட்டும்
‘தந்தை தாய் சொல் மிக்க மந்திரம் இல்லை’ என்பதை மகன் உணரட்டும் ; கணவனிடம் மனைவி அன்பு மழை பொழியட்டும்; தேன்மிகு இனிமையான சொற்களை பேசட்டும்
சகோதரன் மற்ற சகோதரனை வெறுக்கக் கூடாது; சகோதரி, மற்ற சகோதரியை வெறுக்கவேண்டாம் ; ஒற்றுமை நிலவுக; ஒரே நோக்கம் நிலவுக; மங்கள மொழியை உதிருங்கள்
கடவுளர்/ தேவர்கள் ஒருவரை ஒருவர் வெறுப்பதில்லை ; பிரிந்து செல்வதில்லை; அந்த குணத்தை உங்கள் வீட்டில் நிலை நாட்டுகிறோம் ; உங்கள் வீட்டிலுள்ள புருஷர்கள் அதையே பின்பற்றுவார்களாகுக
ஒரே எண்ணத்துடன் , ஒரே முயற்சியுடன், இணைந்து வாருங்கள்; பிரிந்து செல்லாதீர்கள் ;ஒருவருக்கொருவர் இனிமையான மொழியைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நான் உங்களை ஒரே நோக்கம், ஒரே எண்ணம் உடையவனாக ஆக்குவேன் (மேலும் வலுப்படுத்துவேன்)
நீங்கள் ஒரே பானத்தை பருகுங்கள்; ஒரே உணவை சம கூறிட்டு உண்ணுங்கள்; நானும் உங்களை அன்பால் பிணைக்கிறேன் ; ஓர் சக்கரத்திலுள்ள ஆரங்கள் போல ஒன்று பட்டு அக்கினி தேவனை வழிபடுங்கள் .
நான் உங்களை ஒன்றாகக் கட்டும் மந்திரத்தின் மூலம் பிணைக்கிறேன் ஒரே எண்ணத்துடன் ஒரே தலைவரின் கட்டளைக்குக் கீழ்ப்படியுமாறு செய்கிறேன்
தேவர்களைப் போல அமிர்தத்தை போற்றுங்கள்; காலைப் பொழுதும் மாலைப் பொழுதும் அன்பு அலை வீசட்டும் “.
–மூன்றாவது காண்டம் 30 ஆவது மந்திரம் (சூக்தம் 101)
xxx
என் கருத்து
இதற்கு நான் உரையோ விளக்கமோ சொல்லத் தேவை இல்லை; முதலில் தனி மனிதனிடம் நேசமும் பாசமும் இருக்க வேண்டும்; பின்னர் குடும்பத்தில் அது இருக்க வேண்டும். பின்னர் அது புறச் சூழலில் எதிரொலிக்க வேண்டும். அதன் மூலம் எங்கும் அமைதி ஓ ற்றுமை ஓங்கி வளரும்
இந்த இரண்டு கீதங்களையும், துதிகளையும் எல்லோரும் படித்தா லோ அல்லது வேத பிராமணர்கள் ஒலிக்கும் பொழுது கேட்டாலோ சர்வ மங்களம் உண்டாகும் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமும் உண்டோ!
XXX
RIG VEDA 10-191 (Last Hymn in the RV)
संस॒मिद्यु॑वसे वृष॒न्नग्ने॒ विश्वा॑न्य॒र्य आ ।
इ॒ळस्प॒दे समि॑ध्यसे॒ स नो॒ वसू॒न्या भ॑र ॥ १०.१९१.०१
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
London University has its Asian and African wing called SOAS (School of Oriental and African Studies) where I taught Tamil for 20 years as Tamil Tutor. Ms Jayalalaitha Government in Tamil Nadu sent the Valluvar statue to London. High Commission of India contacted the University of London. They contacted Dr Stuart Blackburn, an American Professor fluent in Tamil, and Head of South Asia Department at SOAS. I and Stuart sat together and wrote the leaflet and prepared the invitation for the event . Installation of the statue was held on 13th May 1996 according to my diary. Strangely no one else has any details about this event except me. That too because Stuart gave me the photo saying ‘Swami, Here is your picture’.
The attached article was published in April 2015 by my friend Jacob Ravibalan who launched World Tamil Organisation in London to bring all the Tamil organisations under one umbrella.
Please see the attached article:-
tags- Valluvar Statue, London, SOAS, London Swaminathan, Tamil Tutor, லண்டன், வள்ளுவர் சிலை , பல்கலைக்கழகம்
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சேக்கிழார்! – 3
சம்பந்தரின் வரலாற்றை 1256 பாடல்களிலும் நாவுக்கரசர் வரலாற்றை 419 பாடல்களிலும் சித்தரித்த சேக்கிழார் பிரான் சுந்தரரின் வரலாற்றை ஐந்து இடங்களில் 879 பாடல்களில் சித்தரித்துள்ளார். திருமலைச் சருக்கம், தில்லை வாழ் அந்தணர் சருக்கம் எனத் தொடங்கி மன்னிய சீர் சருக்கம், வெள்ளானைச் சருக்கம் ஈறாக 13 சருக்கங்களை இந்த நூல் கொண்டுள்ளது.
சேக்கிழார் புராணம் என்ற அரிய நூலை உமாபதி சிவாசாரிய சுவாமிக இயற்றியுள்ளார். இதில் அரிய குறிப்புகள் உள்ளன.
தமிழில் சிறப்பான நூல்களாக ஆறு நூல்களைப் பட்டியலிடுகிறார் உமாபதி சிவாசாரியார் இப்படி:
வள்ளுவர் சீர் அன்பர் மொழி வாசகம் தொல்காப்பியமே
தெள்ளு பரிமேலழகன் செய்தவுரை – ஒள்ளிய சீர்த்
தொண்டர் புராணம் தொகு சித்தி ஓராறும்
தண்டமிழின் மேலாந் தரம்.
சேக்கிழார் தான் பெரிய புராணத்தை இயற்றிய காரணத்தையும் தானே கூறி விடுகிறார்!
அளவு இலாத பெருமையர் ஆகிய
அளவு இலா அடியார் புகழ் கூறுகேன்
அளவு கூட உரைப்ப அரிது ஆயினும்
அளவு இல் ஆசை துரப்ப அறைகுவேன் என்று சேக்கிழார் ஆசை மிகுதியுற்று அளவிலாப் புகழ் கொண்ட அடியார் பற்றித் தான் கூற வந்ததாக, காரணத்தைத் இப்படித் தெரிவிக்கிறார்.
இந்த நூலின் பெருமை சொல்லுக்கு அப்பாற்பட்டது. ஏராளமான சரித்திரக் குறிப்புகளையும், அடியார் பற்றிய உண்மையான வரலாற்றையும், கல்வெட்டுச் செய்திகளையும், இலக்கியச் செய்திகளையும், இயற்கை வர்ணனைகளையும், பல்வேறு அணிகளையும், உவமைகளையும், சொல் நயத்தையும், பொருள் நயத்தையும் கொண்டுள்ள நூல் இது. ஒன்று முதல் ஏழு வரை உள்ள எண்கள் கொண்ட பாடலை சண்டேஸ்வர நாயனார் புராணத்தில் காணலாம். மலர் சிலம்படி என்பதற்கு மலர் போன்ற சிலம்படி என உவமைத் தொகையாக மட்டும் பொருள் கொள்ளுதல் தவறு; மலர்ந்த மலர்கின்ற, மலரப் போகும் என வினைத்தொகையாகக் கொண்டு பொருளைப் பார்க்க வேண்டும் என உரையாளர்கள் கூறுகின்றனர். முதல் பாடலில் வரும் விளக்கத்திலேயே இப்படி அபூர்வமான விளக்கவுரையைக் கேட்க முடிகிறதெனில் 4286 பாடல்களின் சிறப்பை அனுபவித்துப் பார்த்தால் தானே தெரிந்து கொள்ள முடியும்!
மெய்யடியாரின் இயல்பை ஒரு பாடலில் அற்புதமாக விளக்கி விடுகிறார் சேக்கிழார் பிரான்:
கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்
கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினார்.
செல்லா ஓடும் செம்பொன்னும் மெய்யடியார்க்கு ஒன்று தான்!
இதற்கு எதிராக வஞ்சக அடியாரை அவர், ‘மனத்தினுள் கறுப்பு வைத்துப் புகுந்தனன் முத்தநாதன்’ என்று சிவவேடம் பூண்டு வந்த வஞ்சக முத்தநாதனைக் குறிப்பிடுகிறார்.
இப்படி நூற்றுக் கணக்கில் சொல்லிக் கொண்டே போகலாம்.
கருங்கடலைக் கைநீத்துக் கொளவெளிது முந்நீர்க்
கடற்கரையி னொய்மணலை யெண்ணியள விடலாம்
பெருங்கடன்மேல் வருந்திரையை யொன்றிரண்டென் றெண்ணிப்
பிரித்தெழுதிக் கடையிலக்கம் பிரித்து விடலாகுந்
தருங்கடலின் மீனையள விடலாகும் வானத்
தாரகையை யளவிடலாஞ் சங்கரன்றா டமது
சிரங்கோடிருத் தொண்டர்புராணத்தை யளவிடநஞ்
சேக்கிழார்க் கெளிதலது தேவர்க்கு மரிதே.
“கருங்கடலைக் கையால் நீந்திக் கடந்து விடல் எளிது. முந்நீர் என்று புகழப்படும் கடலின் கடற்கரையில் உள்ள நுண்ணிய மணலை எண்ணி விடலாம். பெருங்கடலில் எழும் அலைகளை ஒன்று, இரண்டு என்று எண்ணி அதன் கூட்டுத்தொகையையும் சொல்லி விடலாம். கடலில் வாழும் மீன்கள் மொத்தம் எத்தனை என்பதை அளவிட்டுச் சொல்லி விடலாம். வானத்து நக்ஷத்திரங்களையும் அளவிட்டுச் சொல்லி விடலாம். சிவபிரான் திருவடிகளைத் தமது சிரசில் தரித்த திருத் தொண்டர்கள் புராணத்தை அளவிட்டுச் சொல்ல நமது சேக்கிழார் நாயனாருக்கு மட்டுமே எளிதன்றி தேவர்களுக்கும் அருமையானதாகும்” –
என்று இப்படி சேக்கிழாரின் பெருமையை இந்தப் பாடல் கூறுகிறது.
தில்லையில் அடியார் பெருமையைக் கூறியவாறே வாழ்ந்த சேக்கிழார் பிரான் தில்லைக் கூத்தனுடனேயே கலந்தார். அடியார் மனங்களிலும் நிறைந்தார். சேக்கிழாருக்கு, சேக்கிழார் பிறந்த ஊரான திருக்குன்றத்தூர் சிவன் கோவிலிலும், தேவகோட்டை நகரச் சிவன் கோவிலிலும் தனி சந்நிதிகள் உண்டு. சேக்கிழார் பிறந்த இல்லத்தை குன்றத்தூரில் காணலாம். சேக்கிழாரின் குருபூஜை ஆண்டு தோறும் வைகாசி மாதம் பூச நட்சத்திர தினத்தன்று நடைபெறுகிறது. திருவானைக்காப் புராணம் சேக்கிழாரைப் போற்றிப் புகழும் பாடலைக் கூறி சேக்கிழாரைப் பணிந்து என் உரையை முடிக்கிறேன் :