மதியூகி பொன்னம்பலம் பிள்ளை (Post No.10,298)

WRITTEN BY B. KANNAN, DELHI

Post No. 10,298

Date uploaded in London – –   4 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

புலவர் நயம்                                         மதியூகி பொன்னம்பலம் பிள்ளை

எழுதியவர் :  B.Kannan, Delhi

அன்புள்ளத் தமிழ் நெஞ்சங்களுக்கு தில்லியிலிருந்து கண்ணன் நமஸ்காரம். வணக்கம் பல.

சமீபத்தில் மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர் அவர்களின் பழைய கட்டுரைத் தொகுப்புக்களைப் படிக்க நேர்ந்தது. அதில் ஒன்று அரசனும் அவனது தலைமை ஆலோசகரும் புலவருமான இருவருக்கும் இடையே மிளிர்ந்த நட்பின் மேன்மை,கருத்தொற்றுமைப் பற்றி விளக்குவதாக அமைந் திருந்தது. கோப்பெருஞ்சோழன்-பிசிராந்தையாருடையது நேர்முகத் தொடர் பில்லாத மானசீக நட்பு. இறுதியில் இருவரும் ஒன்றுகூடி,வடக்கிருந்து உயிர் பிரிந்தனர். ஆனால் நாம் பார்க்கப் போகும் நிகழ்வில் ஒரு திருப்பம் உண்டு. உங்கள் பார்வைக்கு இதோ……….

பழையகாலத்தில் தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் சிறந்த நிலையில் இருந்த ஜமீன்களுள் சொக்கம்பட்டியென்பது ஒன்று. வடகரையாதிக்க மென்றும் அந்த ஜமீன் வழங்கப்படும். தென்காசி பகுதியைச் சடையவர்மன்  பராக்கிரமபாண்டியன் ஆட்சி செய்த காலத்தில்,மிழலைநாடு (சோழ நாட்டுப் பகுதி), ஆப்பநாடு (இராமநாதபுரம் பகுதி), கிழுவை (கீழக்கரைப் பகுதி) நாட்டிலிருந்து வந்த மன்னரின் தளகர்த்தர்களான மறவர்குலத் தலைவர்களுக்குச் சில பிரதேசங்களைக் கொடுத்து ஆட்சியில் அமர்த்தினார். அவர்களுள் ஜமீன் சிவத்தபாண்டியன், ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த ஒரு புலியைத் தன் கைத்தடியால் அடித்துக் கொன்றதால் “செம்புலி” எனப் பட்டம் கொண்டு, அவரது சந்ததி யினரும் பாண்டியனின் திருநாமமான “சிவனனைந்தான்” எனும் பெயரையும் இணைத்துக் கொள்ள அனுமதிக்கப் பட்டனர். அந்த வீரச் செயலை ஒரு புலவர் இப்படிப் புகழ்கிறார்………

“தம்புலியான மடப்புலியே ! தடிக்கம்பால் அடிபட்டாயே ! எங்கள் முப்புலி துரைப்புலி வீரப்புலி கொண்ட புலி கருணாலய வலங்கைப்புலியால் கைக்கம்பால் அடிபட்டு இறந்தாயே!”

அந்தப் பரம்பரையில் வந்த ஜமீன்தாரர்களுள் ஒன்பதாவதாக பெரிய பட்டம் பெரியசாமித்தேவர். சின்னப்பட்டம் சிவராம சின்னணைஞ்சாத்தேவர் (18-ம் பொ.ஆ. முற்பகுதி) என்பவர் புலவர் பாடும் புகழுடையவர்களாக வாழ்ந்து வந்தனர். திருக்குற்றாலம், பாபநாசம், திருமலை முதலியக் கோவில்களுக்குப் பல வகையான மானியங்களை அளித்துள்ளனர். தண்டமிழ் வாணர்களை மிக்க அன்புடன் ஆதரித்துப் பெரும்புகழ்ப் பெற்றனர். மேலகரம் திரிகூடராசப்ப கவிராயர், செங்கோட்டைக் கவிராச பண்டாரம், கிருஷ்ணாபுரம் கவிராயர் முதலியவர்கள் அவர்களின் ஆதரவு பெற்றவர்கள்.

அக்காலத்தில் பெரியபட்டம் பெரியசாமித் தேவரின் ஆட்சியை எல்லாரும் போற்றினர். ஸ்தானாதிபதி பொன்னம்பலம் பிள்ளையின் அறிவாற்றலால் ஒரு பெரிய அரசாங்கத்துக்கு உதாரணமாகச் சொல்லக்கூடிய நிலையில் அவருடைய சமஸ்தானம் விளங்கியது. பொன்னம்பலம் பிள்ளை சிறந்த தமிழ்ப் புலமை வாய்ந்தவர்; வாசுதேவநல்லூர்ப் புராணத்தையும் வேறுபல தனிப் பாடல்களையும் இயற்றியுள்ளார். அவர் வாசுதேவ நல்லூரில் வேளாளர்  குலத்தில் பிறந்தவர். பேராற்றலும் அரசியலைச் சீரானமுறையில் நடத்தும் மதியூகமும் கொண்டவர். அவருடைய நல்லறிவும் ஆட்சிமுறையும் குடிக ளுக்கும் சமஸ்தானாதிபதிக்கும் ஒருங்கே இன்பத்தை உண்டாக்கின. பொன்னம்பலம் பிள்ளையின் அறிவாற்றலில் மிகுந்த ஈடுபாடு கொண்ட சமஸ்தானாதிபதி சின்னணைஞ்சாத் தேவர் தம் அமைச்சரின் ஆலோச னைப்படியே நடந்து வந்தார். அமைச்சருடைய சாதுரியமான மொழிகளும் தமிழ்ப் புலமையும் அரசியல் யோசனைகளும் யாவரையும் கவர்ந்தன. வேறு சமஸ்தானத் தலைவர்களெல்லாம், “இத்தகைய அமைச்சர் ஒருவர் நமக்கு இல்லையே!” என ஏங்கினர்.

அக்காலத்தில் இராமநாதபுரம் சேதுபதி மன்னர் பொன்னம்பலம் பிள்ளையை ஒரு சமயம் வரவழைத்து அவருடையப் பெருமையை உணர்ந்துப் போற்றினார். அவரோடு பேசுவதில் சேதுபதிக்கு மிகுந்த மகிழ்ச்சி உண்டாயிற்று. அடிக்கடி அவருடைய பழக்கம் இருக்க வேண்டுமென்பது அவ்வரசர் விருப்பம். ஆயினும் தம்முடைய ஜமீன்தாரிடத்தில் அன்பும் அந்தச் சமஸ்தான நிர்வாகத்தில் முக்கி யத்துவம் காட்டியப் பொன்னம்பலம் பிள்ளையால் அப்படி இருப்பது சாத்திய மாகுமா? பலமுறை சேதுபதி விரும்பினால் ஒருமுறை சென்று சிலநாள் இருந்து வருவார். அப்பொழுது சேதுபதி மன்னர் அவரை இராமநாதபுரத்திலேயே இருத்திவிடுதற்குரியத் தந்திரங்கள் பல செய்தும் அவையெல்லாம் கைகூட வில்லை.

ஒருமுறை சேதுபதியரசரிடம் பொன்னம்பலம் பிள்ளை வந்திருந்தபோது அவர் தம் ஜமீன்தாருடைய சிறந்த குணங்களைப் பற்றியும் தன்மீது அவருக்குள்ள அன்பைப்பற்றியும் எடுத்துக் கூறினார். இருவருக்கும் இடையே நடந்தக் கருத்துப் பரிமாற்றம் இதோ…..

“உங்களுடைய அபிப்பிராயம் இல்லாமல் சமஸ்தானத்தில் ஒரு காரியமும் நடைபெறாதாமே?” என்று ஏதும் தெரியாதவர் போல் கேட்டார் சேதுபதி.

“ஆம். ஆனால் அப்படி இருப்பது அதிகாரத்தினால் அன்று; அன்பினாலேதான். எங்கள் எஜமானுக்கு நான் செய்வதில் குறையிராது என்ற நம்பிக்கையுண்டு. நாடும் குடிகளும் நன்மை அடைய வேண்டுமென்பதே அவர்களுடைய நோக்கம்; தாமே நேரில் அதிகாரம் செலுத்தவேண்டுமென்ற விருப்பம் அவர்களுக்கு இல்லை. யாருடைய அதிகாரமாக இருந்தால் என்ன? எல்லாம் அவர்களுடைய பெயராலேயே நடைபெறுகின்றன,அல்லவா?.”

” அப்படியானால் உங்கள் ஜமீன்தார் உங்கள் யோசனையைக் கேட்டுத்தான் எல்லாக் காரியங்களையும் செய்வாரோ?”

” கூடிய வரையில் அப்படித்தான் செய்வது வழக்கம். அவர்களிடம் நான் வெறும் சம்பளம் வாங்கும் மந்திரியாகமட்டும் நடந்து கொள்ளவில்லை. அவர்கள் என்னை ஆருயிர் நண்பனாகவே கருதியிருக்கிறார்கள்.

ஒரு சமஸ்தானாதிபதி, ஒரு காரணமும் இல்லாமல் சாமானியனான என்னி டத்தில் இவ்வளவு அன்பு வைக்கும்போது, என்னுடைய நன்மையைக் காட்டிலும் அவர்களுடைய நன்மையையே சிறந்ததாக நினைப்பது என் கடமையல்லவா?”

“அவ்வளவு குணசீலரான உங்களுடைய சமஸ்தானாதிபதியை ஒருமுறை பார்க்க விரும்புகிறேன்.”

” நன்றாகப் பார்க்கலாம். பரிவாரங்களுடன் கூடிய சீக்கிரம் சொக்கம்பட்டிக்கு விஜயம் செய்யுங்கள். மகாராஜாவை வரவேற்பதைக் காட்டிலும் சந்தோஷந் தரும் செயல் வேறொன்றும் இல்லை.”

” நான் அங்கே வருவதைக் காட்டிலும், உங்கள் சமஸ்தானாதிபதி இங்கே வந்தால் நலமாய் இருக்குமே?”

” அப்படியும் செய்யலாம். ஆனால் அதற்கு இது தக்க சமயமன்று. மகாராஜா அவர்களுக்கு முறையாகத் திருமுகம் அனுப்பி மரியாதையோடு அழைக்க வேண்டும். அப்படிச் செய்தாலும் நான் அங்கே சென்று அவர்களை வரச் சொன்னால் தான் அவர்கள் விஜயம் செய்வார்கள். என்னுடைய விருப்பம் இல்லாமல் வரமாட்டார்கள்.”

” அப்படியானால் நீங்கள்  இங்கிருந்தே அவரை வரும்படி திருமுகம் எழுதியனுப்பலாமே?”

” அவ்வளவு உரிமையை நான்  எடுத்துக் கொள்ளலாமா? எங்கள் தலைவர் கருணை மிகுதியினால் எனக்குச் சில அதிகாரங்களைக் கொடுத்திருக்கிறார்கள்; அவற்றை நான் தவறாகச் செலுத்தலாமா? எனக்கு இணங்கி  அவர்கள் நடந்தாலும் அவர்களோ ஒரு சமஸ்தானாதிபதி; நான்ஓர் ஊழியன். நான் என்னுடைய வரம்புகடந்து நடக்கக்கூடாது. இங்கே வரும்படி நான் எழுதுவது முறையன்று.”

” அப்படியானால், நானே ஒரு கடிதம் அனுப்பி வரவழைக்கிறேன்.”

” மகாராஜாவின் திருமுகத்தைக் கண்டவுடன் அவர்கள் புறப்படமாட்டார்கள். இவ்விஷயமாக என் அபிப்பிராயத்தை அறிந்து கொண்டுதான் வருவார்கள்”

” உங்களுக்குத் தெரியாமலே நான் அவரை இங்கு வரவைத்து விடுகிறேன்” என்றார் சேதுபதி மன்னர்.

இருவருக்கும் அப்போது வாக்கு வாதம் நடைபெற்றது. சேதுபதியோ சொக்கம்பட்டி ஜமீன்தாரை வருவித்துவிடுவதாக வீரம் பேசினார். அது முடியாதென்று பொன்னம்பலம்பிள்ளை கூறினார்.

மறுநாள் சேதுபதி வேந்தர் பொன்னம்பலம் பிள்ளை அறியாதபடி அவர் எழுதியது போல ஒரு கடிதம் எழுதி ஆள்மூலம் சொக்கம்பட்டி ஜமீன்தாருக்கு அனுப்பினார். ‘உடனே புறப்பட்டு இவ்விடத்திற்கு விஜயம் செய்யவேண்டும்’ என்று பொன்னம்பலம் பிள்ளை எழுதினதாக அக்கடிதம் அமைந்திருந்தது.

அதுகண்ட சின்னணைஞ்சாத்தேவர் அதுவரை சேதுபதியை நேரிடையாகச் சந்தித்தது இல்லை என்பதால் சிறிது மயங்கினார். அக்காலத்தில் சேதுபதியைப் போன்ற கௌரவம் சின்னணைஞ்சாத் தேவருக்கும் இருந்தது.

‘இம்மாதிரி நம் அமைச்சர் எழுதுவதற்குக் காரணம் தெரியவில்லை. ஆயினும் அவர் நம் நன்மையைக் கருதியே ஒவ்வொரு காரியத்தையும் செய்வார். இப்படி அவர் முன்பு எப்போதும் செய்தது இல்லை. எதற்கும் நாம் அங்கே அதிக ஆடம்பர மின்றிச் செல்வோம்’ என்றெண்ணிச் சில சேவகர்களை மட்டும் அழைத்துக் கொண்டுப் புறப்பட்டார்.

சொக்கம்பட்டியிலிருந்து ஜமீன்தாருடைய பல்லக்கு வருமென்றும், உடனே தமக்குத் தெரிவித்து, விருந்தினருக்கு இடம் கொடுத்து உபசரிக்க வேண்டு மென்றும் சேதுபதி தம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். அதிகாரிகளும் சின்னணைஞ்சாத் தேவரை எதிர்பார்த்திருந்தனர். தேவரும் தமக்கென அமைத்திருந்த விடுதியில் வந்துத் தங்கினார். சேதுபதி வேந்தரைத் தாமே சென்று பார்ப்பது தம் கௌரவத்திற்குக் குறைவாதலாலும்,

தாம் தம் அமைச்சருடைய விருப்பத்தின்படி வந்திருப்பதாலும் அவர் அங்கேயே தங்கித் தம் அமைச்சரது வரவை எதிர்பார்த்திருந்தார். விருந்தாளியை விருந்தோம்பல் செய்பவர் தானே சென்றழைப்பது முறை?

அவர் வந்திருப்பது பொன்னம்பலம் பிள்ளைக்குத் தெரியாது. பிள்ளையை வியப்படையச் செய்யவேண்டுமென்றுக் கருதிய சேதுபதி அவரையும் அழைத்துக்கொண்டு சின்னணைஞ்சாத் தேவர் தங்கியிருந்த விடுதிக்கு

வந்தார். அருகில் வரும்போதே தம்முடைய தலைவரைக் கண்டுகொண்ட பொன்னம்பலம் பிள்ளை ஏதோ சூழ்ச்சி நடந்திருக்கலாமென்றுப் புரிந்து கொண்டார். ஜமீன் பரிவாரங்களைக் காணோம். தேவரின் சாதுரியச் செயல்

ஒருவாறு புரியலாயிற்று. உட்புகுந்து சின்னணைஞ்சாத் தேவரருகில் செல்லும்போது அவர் திடுக்கிட்டுப்போவாரென்று சேதுபதி நினைத்தார். பிள்ளை அவர்களோ எவ்விதச் சலனமுமின்றி அங்கேச் சென்றவுடன், ” ஏனடா

சின்னணைஞ்சா! தேசத்தில் சமூகத்தில் எல்லாரும் சௌக்கியமா?” என்று கேட்டார். சமூகம் என்பது சமஸ்தானாதிபதியைக் குறிப்பது. சின்னணைஞன் என்பதும் ஒரு ஜமீன் அதிகாரியின் பெயராய் இருக்கக் கூடும் என்று

எண்ணிவிட்டார் சேதுபதியும்!

தாமே சமூகமாக இருக்கத் தம்மை இப்படி ஒருமையில் அழைத்துக் கேட்பதுபற்றி ஜமீன்தார் கோபம் அடையவில்லை. தாம் முன்னரே சந்தேகித்தபடி ஏதோ சூழ்ச்சியினால் சேதுபதி தம்மை வரவைத்திருக்கிறார் என்றும், தம் அமைச்சர் தக்க காரணமில்லாமல் அப்படிப் பேசமாட்டாரென்றும் அவர் ஒருநொடியில் ஊகித்துக் கொண்டார். தானும் சமஸ்தானத்தின் ஒரு ஊழியனாகவே நடிக்கலானார்.

” எஜமான்! சமூகத்தில் சௌக்கியமே. உங்களைப் பிரிந்திருப்பதுதான் கஷ்டமாக இருக்கிறதாம்” என்று பணிவுடன் அவர் விடையளித்தார்.

” அப்படியா! விரைவிலேயே புறப்பட வேண்டியதுதான்” என்று சொல்லிவிட்டுப் பொன்னம்பலம் பிள்ளை மேலே நடந்தார்.

சேதுபதி மன்னருக்கு ஒன்றும் விளங்கவில்லை; அவர் அதற்குமுன் சின்ன ணைஞ்சாத் தேவரைப் பார்த்ததில்லை; ஆதலின் அங்கே வந்தவரே ஜமீன்தார் என்று அறிந்து கொள்ளவும் முடியவில்லை. ‘ இவர் ஜமீன்தாராக இருந்தால், நமது முன்னிலையில் இந்த அமைச்சர் இப்படிப் பேசுவாரா? நாம் நினைத்தது சரிதான். இவர் சமஸ்தானத்தைச் சேர்ந்த அதிகாரியாக இருக்கலாம். அமைச் சரை ஏமாற்ற எண்ணிய நாமே ஏமாந்து போனோமே. ஜமீன்தார் இவரைக் காட்டிலும் அறிவாளியென்றுத் தெரிகிறது. தாம் வராமல் தம் பெயருள்ள ஓர் அதிகாரியை அனுப்பிவிட்டார். இல்லாவிட்டால் இவ்வளவு சிறந்தவராகிய பொன்னம்பலம் பிள்ளைக்கு அவரிடத்தில் அன்பு இருப்பதற்கு நியாயம் இல்லையே’ என்று எண்ணினார். இருவரும் சிறிது நேரம் ஜமீந்தாருடன் (!) அளவளாவி விட்டு அரண்மனைக்குத் திரும்பினார்கள்.

பொன்னம்பலம் பிள்ளை தனியே வந்து தம் சமஸ்தானாதிபதிக் கண்டு பொய்க் கடிதம் வந்ததும் பிறவும் தெரிந்து கொண்டார்; ” நான் செய்த அபசாரத்தை மன்னிக்க வேண்டும். சமூகத்தின் கௌரவத்திற்கு இங்கெல்லாம் இவ்வளவு சுலபமாக வருதல் ஏற்றதன்று. அதனால், நான் இந்தத் தந்திரம் செய்தேன். சமுகத்திற்கு அகௌரவம் ஏற்பட்டாலும் நம் இருவருக்கு மட்டுந்தானே அது தெரியும்? உரிமைப் பற்றியும், வேறு வழியில்லாமையாலும் இவ்வாறு செய்தேன்.க்ஷமித்தருள வேண்டும்” என்று வேண்டினார்; தம்முடைய அருமைத் தலைவரை அவ்வாறு பேச நேர்ந்ததே என்பதை நினைத்து நினைத்து உருகினார்.

சின்னணைஞ்சாத் தேவரோ சிறிதும் மனம் வருந்தாமல்,” நீர் நம்முடைய மானத்தைக் காப்பாற்றினீர். நாம் தெரியாமல் செய்த பிழையை உம்முடைய சாதுரியத்தால் மாற்றி விட்டீர். நீர் உள்ள வரையில் நமக்கு என்ன குறை!” என்று கூறித் தம் அமைச்சரைத் தேற்றினார்.

பின்னர், பொன்னம்பலம் பிள்ளை சேதுபதியிடம் தம் அரசர் தம்மை வரும்படி யாகச் சொல்லியனுப்பி யுள்ளாரென்று கூறி விடைபெற்றுக்கொண்டு, சமஸ்தான அதிகாரியாக நடித்த ஜமீந்தார் சின்னணைஞ்சாத் தேவருடன்

சொக்கம்பட்டி போய்ச் சேர்ந்தார். இறுதியில் சூழ்ச்சி புறமுதுகு காட்டி ஓடியது, மதியூகமே வெற்றிவாகைச் சூடியது! சேதுபதிக்கு உண்மை தெரிய வந்ததோ என்னவோ, யார் அறிவார்?!

அதிகாரம்,பதவி ஆகியவற்றைத் தாண்டி நிலவிய அத்தோழர்களின் சங்கிலி இணைப்பை இரக்கமற்றக் காலதேவன் துண்டித்து, பெரியசாமித் தேவரின் இன்னுயிரை 1721 ஆண்டுக்கு முன் பறித்துக் கொண்டான். அவருடையப் பிரிவைப் பிள்ளையவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை, துக்கம் கரை கடந்து நின்றது. அதன் முழு இயல்பையும் அவர் பாடிய இரங்கல் பாட்டு புலப்படுத்தும்

    வானா டரசாளப் போன மகராஜன்

    தானா பதியெனவுஞ் சற்றுமதித் தானிலையே

    சேனா பதிப்பெருமான் சின்னணைஞ்சான் போனவழி

    போனா லொழியமனப் புண்பாடு தீராதே.

 (அந்த மகராஜன் வானுலகை அரசாளப் போய்விட்டான். இந்த ஸ்தானாதி பதியைச் சிறிதும் கவனம் கொள்ளாமல் தனியே சென்று விட்டான்.

அந்தச் சேனாபதிப் பெருமான் சின்னணைஞ்சானைப் பிரிந்து என் உள்ளம் புண்பட்டுத் தவிக்கிறது. அவன் போனவழி போனாலொழிய அப்புண்

ஆராது) என நைந்து புலம்புகிறார்.

அவரது அந்திமக் காலம் மிகவும் வேதனைக்கு உரியதாக அமைந்து விட்டது. சின்னப்பட்டம் குமாரர் சிவராமச் சின்னணைஞ்சாத் தேவர் ஜமீந்தார் பொறுப்பேற்றதும்,பிள்ளையை உதாசீனம் செய்யவே          மனம் வெறுத்துப் போனார்.

அவர் 1762-ஆம் ஆண்டு* மாசிமாதம் 7-ஆம் தேதி சிவபதமடைந்தார் எனத் தெரிகிறது. தன் உற்ற நண்பர் இயற்கை எய்தி 41 ஆண்டுகள் கழித்து, அன்னாரது நினைவுகளை நெஞ்சில் இருத்தி, மேலுலகம் சென்றடைந்தார். மரணம் இருவரை இணைத்தது என்றால், இங்கோ இயற்கை இவர்களைப் பிரித்து ஒருவரை வாடவைத்து விட்டது!

“மதியூகியும் தமிழ்ப்புலவரும் சிவபக்திச் செல்வருமாகிய பொன்னம்பலம் பிள்ளையின் செயல் ஒவ்வொன்றும், ‘அவர் சாதாரண மனிதர்களோடு சேர்த்து எண்ணுதற்கு உரியவரல்லர்; மனிதவர்க்கத்தில் தமக்கென்று தனிச்சிறப் புடை யப் பதவிக்கு உரியவர்’ என்றே நினைக்கச் செய்யும்” என்று ‘தமிழ்த் தாத்தா’ அவர்கள் தன் கருத்தைக் கூறியுள்ளார்.

ஆழ்ந்த நட்புக்கு ஓர் இலக்கணமாகத் திகழ்கிறது இந்தப் புலவர்–புரவலர் தோழமை என்றால் அது மிகை அல்ல.

குறிப்பு: இவ்வரலாற்றை, திருவாவடுதுறை ஆதீன வித்துவான் ஶ்ரீமத் சங்கரலிங்கத் தம்பிரான் அவர்கள் திரு உ.வே.சாமிநாதையரிடம் தெரிவித்துள்ளார். அதைத் தமிழ்த் தாத்தா தன் கட்டுரை வாயிலாகப்

 பிரசுரித்துள்ளார். நல்லுரைக் கோவை தொகுப்பில் இதைப் படிக்கலாம்.

  பொன்னம்பலம் பிள்ளையின் இரங்கற்பா,–நினைவு மஞ்சரி-பாகம்1

  ஶ்ரீஉ,வே.சா கட்டுரைத் தொகுப்பு (Project Madurai)

         ——————————————————————————————————-

 tags- மதியூகி பொன்னம்பலம் பிள்ளை

AMAZING UNITY IN THE RIG VEDA- PART 2 (Post No.10,297)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,297

Date uploaded in London – –   4 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

14.RIVERS – From the beginning of Rig Veda till the end including the most famous Nadhi Stuti (River Hymn), all the river names are in feminine gender. They are praised as Mother or woman and the sea is described as their husband. This led to the scenes where film actresses always longing for her lover in later Indian films. That is, women run after men and not vice versa. And many of the rivers are unidentified until today!!! Mysterious river Rasa is also there. Famous saying ‘Aakaasaath Patitham Thoyam Yathaa Gachchathi Saagaram’…….. like the rain water that falls from the sky runs as rives towards sea…… is used by all Hindus in hymns and other writings.

15.WATER- Water is praised as great medicine. It is in Atharva Veda as well. Brahmins praise water everyday and sprinkle it on their head thrice a day with Water Mantra. It is used in all the Purifying ceremonies (Punyaha Vachanam, Grha Pravesam/House Warming Ceremony) throughout India even today. In a beautiful hymn in Atharva Veda, the etymology of water terms is explained. There are over 120 terms for water. Hindus use it from birth to death ceremonially. They bathe twice a day. This explodes the myths of foreign gangs’ theory that Vedic Hindus came from colder regions outside India. Like Vedas Tamil poet Tiruvalluvar also called it Amrita; he used the exact Sanskrit word in Tamil which is found in Rig Veda and Atharva Veda for water.

16.FALCON,HAWK,EAGLE- SOMA CONNECTION

Falcon and Soma connection is amazing and is unexplained. From the beginning till the end of Rig Veda, the seers praise the birds of prey bringing the mysterious, miraculous herb Soma. Ayur Veda has its beginning in Soma herb. They praise it as King of Herbs. Soma is in all other three Vedas as well. Amazingly Tamils neither knew Soma nor Indus River. Both are not mentioned in 30,000 lines of 2000 year old Sangam Literature. But Ganges, Himalayas, Amruta and all Hindu gods are mentioned.

17.YAGA, YAJNA, FIRE SACRIFICE

The fire ceremony is in every hymn of the Rig Veda. The absence of such ceremonies anywhere else in the world gave a severe blow to the foreign gangs ( I can even use the word gangsters) who talked about migration of Vedic Hindus into India. Only the Parsees who went FROM India’s Gujarat state TO Iran kept the fire ceremony intact. (Please read Kanchi Parmacharya’s explanation about Zarathustra= Saurashtra.) Amazingly the Parsees came back to the same Gujarat when Muslims started the massacres in Iran.

18.BHAKTI/DEVOTIONAL MOVEMENT

Many of our scholars thought that the Bhakti movement started very late in Hindu religion. They are completely wrong. Worshipping Gods as Father, Mother, Friend, Sister, Relatives, King, Servant etc is found in the Rig Veda until the end. Every Tamil Saivite and Vaishnavite’s verse is an echo of those Rig Vedic Mantras. The most interesting thing is that the Tamils themselves boasted they gave the Vedas in Tamil. Even Tirukkural is praised by a poet as the echo of Four Vedas! Bhakti poets of South India describe what the devotees would get in return in the last verse. This is also in the Vedas.

19.CAVE, COWS, RESCUE

From the first Mandala/Book to the Tenth Mandala, the seers sing rescuing the cows from the cave or releasing them from cave. Is it an idiom they use it to convey several things? It is explained variously in different hymns. But almost all seers knew it. In Tamil and Sanskrit ‘cattle’ means ‘wealth’. Is it about Hindu’s Naval attack on Phoenicians, who were greedy marauding merchants into Indian waters? Phoenicians are described as Panis, which became Banias later. (Some half -baked people connect Banias with Banyan trees). If it is not mentioned throughout the Vedas I wouldn’t have included it here.

20.DEMONS

Over thirty demons were killed by Indra. Their names are found throughout the Four Vedas. Some of them are not identified. All religious scriptures mentioned baddies. But the foreign and Marxist gangs dubbed all demons as aborigenes!!! In other religious scriptures they did not paint them as aboriginal tribes. Those gangs massacred millions of tribes in Australia, Pacific islands, Canada, America, South America and Africa. The gangs spread Guns and STD/ VD in those places. The demon names are fond in all the Four Vedas. The names are typical Indian. So, no connection with Europe. Only the Greeks took them from us and distorted them as ugly gods and goddesses- as immoral rakes!!

21.SIMILES OF LOVE AND AFFECTION AMONG FAMILY MEMBERS:

This is another area where we see unity in 1028 hymns. When they wanted to describe love or affection or kindness, they always used mother looking after their children, Sons helped by fathers, brothers protecting sisters, children running into the hem or fringe of mothers’ saris, friend helping a friend etc. Mostly cow showing affection towards its calf known as VAATSALYAM is used. Those similes are uniform throughout the Vedas. We can’t compare it with any other religious book in the world. The reason being Hindu scriptures are like Pacific Ocean and other religious scriptures including ancient Egyptian, Babylonian, Mayan , Chinese are like our village lakes!

Maintaining such unity and uniformity in 20,000 Mantras running into 40,000 lines is not simple. Those similes are found in later Tamil devotional literature as well.

22.SEXY SIMILES

Religious literature which came very late in other parts of the world considered sex as a sin. Sex was a taboo for them. Buddhists failed miserably in this area. But Vedas give us the pictures of wives hugging husbands vice versa and sexual intercourse too. Griffith and early Tamil Translators of Tirukkural were scared to death to touch those verses. They refused to translate them. But we find utter sexy scenes in Jayadeva’s Ashtapati of tenth century CE. But the important point to be noted is that they elevated men spiritually from basal instincts. Swami Vivekananda explains it in his talk on Gopis. Probably Osho tried to imitate Vedic Rishis but failed miserably.

23.DASA AND DASYU, ARYA

These three words are everywhere in the Vedas. All religious and moral books have some words for baddies. When someone translates them into other languages, one uses the nouns for such words in their languages. But the gangs who translated Hindu scriptures put capital A for aryas, capital D for dasas and dasyus. When they came across other words such as Simyu, Grahi and umpteen other words they made them demons or fiends. Actually they should have used the nouns as ‘good natured, cultured , civilized etc  for Arya’ and ‘criminals, bad elements for Dasyus and Dasas’.

In fact Manu and Kalidas used Dasyu for criminals only. So the three words we find in all he four Vedas are simple common nouns and not proper nouns. If these are racial terms, they would have become obsolete when they were eliminated. But the terms continued for thousands of years. But the Greek word Barbarian is not used with capital B anymore. Foreign translators came with a bad motive which is indicated in Kanchi Parmcharya’s lectures. Swami Vivekananda says throwing all the mud from under the Indian Ocean wont be enough to punish the foreigners. Greatest Tamil Poet Bharati described them as the ‘1000 year rulers devoid of Kindness!’

I am afraid I am nowhere near the end in my list.

I shall continue in Part 3

To be continued…………………………..

ஸ்வாமி ராமதீர்த்தர்! – 3 (Post No.10,296)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,296

Date uploaded in London – –   4 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஸ்வாமி ராமதீர்த்தர்! – 3

அமெரிக்காவிற்குக் கப்பலில் கிளம்பினார் ஸ்வாமி ராமதீர்த்தர்.  ஆனந்த அலையில் அவர் மிதந்தார். பரந்து விரிந்திருந்த பசிபிக் மாகடல் போல அவரது அன்பும் பரந்து விரிந்திருந்தது. கப்பல் சான்பிரான்ஸிஸ்கோவை அடைந்த போது ராமதீர்த்தர் மேல் தளத்தில் சந்தோஷத்தால் உருண்டு புரண்டார். இதைப் பார்த்த அமெரிக்கர் ஒருவர் வியந்தார். இந்த மனிதர் ஏன் எல்லோரையும் போல அவசரம் அவசரமாக பரபரப்புடன் இறங்கவில்லை?

இந்த எண்ணம் அவர் மனதில் மேலிட.”சார், உங்கள் பயணப்பெட்டி எங்கே?” என்று கேட்டார்.

“நான் எந்த லக்கேஜையும் கொண்டு செல்வதில்லை. நான் மட்டும் தான்”

‘உங்கள் பணத்தை எங்கே வைப்பீர்கள்?”

“நான் பணத்தை வைத்துக் கொள்வதே இல்லை”

“அப்படியென்றால் எப்படி நீங்கள் வாழ்கிறீர்கள்?”

“எல்லோரிடமும் அன்பு செலுத்தி நான் வாழ்ந்து வருகிறேன். எனக்கு தாகமென்றால் எப்போதும் ஒருவர் எனக்கு ஒரு கப் தண்ணீர் கொடுக்கத் தயாராக இருக்கிறார். எனக்குப் பசி என்றால் எப்போதுமே ஒருவர் ரொட்டி கொடுக்கத் தயாராக இருக்கிறார்.”

“உங்களுக்கு அமெரிக்காவில் யாராவது நண்பர்கள் இருக்கிறார்களா?”

“ஓ, இருக்கிறாரே, ஒருவர் இருக்கிறார், அது நீங்கள் தான்!” என்று அவர் தோளைத் தொட்டவாறே ஸ்வாமி ராமதீர்த்தர் கூறினார்.

அவ்வளவு தான், அந்த அமெரிக்கர் அவரது அத்யந்த பக்தரானார்.

அமெரிக்காவில் அவர் காலடி வைத்த முதல் நாளிலிருந்தே அமெரிக்கர்களும், பத்திரிகைகளும் எல்லையற்ற அன்பை அவர் மீது பொழிய ஆரம்பித்தன.

திருமதி பி.விட்மேன் (Mrs. P. Whitman) என்ற பெண்மணி ஸ்வாமியின் அத்யந்த பக்தை. அவர் ஸ்வாமியின் உரைகளை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே ஷார்ட்- ஹாண்டில் எடுக்க ஏற்பாடு செய்தார். அமெரிக்காவில் அவர் ஆற்றிய உரைகள் அனைத்தும்  Rama Tirtha Publication League நிறுவனத்தால் பிரசுரிக்கப்பட்டன. ஒவ்வொன்றும் 400 பக்கங்கள் கொண்ட எட்டுத் தொகுதிகளாக அவை ‘In Woods of God-realisation’ என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்டன.

இவை இன்றும் புதிய பதிப்பில் படிக்கக் கிடைக்கின்றன.

ஸ்வாமி ராமாவிற்கு ஒரு அறைக்குள் உட்கார்ந்திருப்பது என்பது பிடிக்கவே பிடிக்காது. “ராமாவிற்கு அறை என்றாலே பிடிக்காது. ஏனெனில் அது கல்லறை போல இருக்கிறது” என்பார் அவர்.

சூரிய வெளிச்சம் உள்ள மாடியில் தான் அவர் அமர்வார்!

அமெரிக்காவில் இருந்த போது சாஸ்தா நீரூற்றில் (Shasta Springs) என்ற இடத்தில் அவர் தங்கி இருந்த போது அவர் தான் தங்கி இருந்த வீட்டாருக்கு ஒரு சுமையாக இருக்க விரும்பவில்லை. தனது பங்கிற்குச் சிறிது உழைப்பையும் தர வேண்டும் என்று எண்ணினார். ஆகவே மலையிலிருந்து விறகுகளை வெட்டிக் கொண்டு வந்து வீட்டிற்குத் தருவார். அவர் தங்கி இருந்த இடம் டாக்டர் ஹில்லர், திருமதி ஹில்லர் (Dr Hiller and Mrs Hiller) ஆகியோருக்குச் சொந்தமான வீடு. அவர்கள் ராமதீர்த்தரைத் தங்களுடனேயே அமெரிக்காவிலேயே வசித்து விடுமாறு வேண்டினர்.

ஸ்வாமி ராமதீர்த்தர் எப்போதுமே தனிமையையே விரும்பினார்.

சாஸ்தா நதிக்கரையோரம் அவருக்கென ஒரு சிறிய தொங்கு படுக்கை (Hammock) அமைக்கப்பட்டது. பெரும்பாலும் அங்கு அமர்ந்து அவர் தவம் புரிந்து கொண்டிருந்தார். வேதாந்த பிரசாரம் என்றால் மட்டும் உற்சாகமாக அதிலிருந்து வெளியே கிளம்பி கூட்டங்களுக்குச் சென்று உரையாற்றுவார். பொங்கி வரும் சாஸ்தா நதிக்கரையோரம் அமைந்த தொங்குபடுக்கையில் இருந்ததைப் பற்றி அவர் கூறினார் இப்படி :- ‘அமெரிக்க ஜனாதிபதியை விட பறவைகளுடன் இருந்த அவருக்கு அதிக சந்தோஷம் இருந்ததாம்

ஒரு முறை சில அமெரிக்கர்கள் சாஸ்தா மலை சிகரத்தில் யார் முதலில் ஏறுவது என்ற போட்டியை அமைத்து அவரையும் பங்கு கொள்ள அழைத்தனர். சாஸ்தா மலை கடல் மட்டத்திலிருந்து 14,444 அடி உயரம் கொண்டது. உற்சாகமாக அதில் கலந்துகொண்ட ஸ்வாமி முதல் பரிசை வென்றார். என்றாலும் கூட பரிசைப் பெற அவர் மறுத்து விட்டார். இதைப் பற்றி எழுதிய பத்திரிகளைகள் பெரும் விற்பனைக்குள்ளாயின. அந்தப் பத்திரிகைகள் அவர் முதல் பரிசை வென்றும் கூட அதை வாங்க மறுத்ததை விவரமாக எழுதி வெளியிட்டன.

இன்னொரு சமயம் 30 மைல் தூரம் ஓடும் மாரதான் ரேஸ் (30 mile Marathon race) ஒன்று நடந்தது. அந்த ஓட்டப் பந்தயத்தில்  கலந்து கொண்ட ராமதீர்த்தர் முதலாவதாக வந்தார். அனைவரும் அதிசயித்தனர்!

கங்கா தந்த செல்வத்தை ஏற்கவில்லை

அமெரிக்க பெண்மணி ஒருவருக்கு ஸ்வாமி ராமதீர்த்தர் கங்கா என்று பெயர் சூட்டியிருந்தார். அந்த கங்கா என்ற பெண்மணி ஸ்வாமி ராமதீர்த்தரிடம் வந்து தனது வீடு, செல்வம், பெயர், புகழ் அனைத்தையும் அர்ப்பணித்ததோடு தன்னையும் அர்ப்பணித்தார். சந்யாசம் மேற்கொள்வதாகச் சொன்னார்.

ஆனால் ஸ்வாமியோ அவரது பரந்த உள்ளத்தைப் பாராட்டி விட்டு அதை ஏற்கவில்லை.

வேதாந்தா காலனியை இந்தியாவிலேயே அமைக்க விரும்புவதாகவும் அமெரிக்காவில் அல்ல அவர் தெரிவித்தார்.

 பாரதத்தை தன்னிலே கண்டு தன்னையே பாரதமாக உருவகப் படுத்தி இவர் எழுதிய கட்டுரை ஒவ்வொரு பாரதீயனும் படிக்க வேண்டிய ஒன்று!  குர் ஆனில் ஓம் உள்ளது என்ற இவரது சொற்பொழிவு முஸ்லீம்கள் வியந்து போற்றிய ஒன்று

  • தொடரும்

TAGS- ராமதீர்த்தர்! – 3

AMAZING UNITY IN THE RIG VEDA- LONDON SWAMINATHAN’S RESEARCH (Post 10,295)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,295

Date uploaded in London – –   3 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

After reading all the 1028 hymns and 10,552 mantras in the Ten Books/Mandalas in the RIG VEDA, the oldest book in the world, the oldest anthology in the world, I came to find an amazing unity in it. I only gave it a cursory reading, not studying. Even Rishi Bharadwaja gave up after three hundred years (in three births) when he came to know what he read was only the size of a stone in the Himalayas. We can compare it to Isaac Newton’s famous quotation of picking pebbles on the shore of mighty ocean:-

“I do not know what I may appear to the world, but to myself I seem to have been only like a boy playing on the sea-shore, and diverting myself in now and then finding a smoother pebble or a prettier shell than ordinary, whilst the great ocean of truth lay all undiscovered before me” -Isaac Newton .

Even if someone does not believe that these hymns were ‘heard’ (Sruti= that which is heard)  like radio waves, even if someone does not believe that these mantras were ‘seen’ by the seers (Mantra Dhrsta= those who see mantras), one would be struck with amazement in the unity produced by about 450 poets.

Like Sangam Tamil literature poems, which were composed by 450 poets, several thousands of years after the Rig Veda, it would have taken more than 300 year for the Rig Vedic composition. Even Anti Hindu sceptical scholars now estimate the mantas were composed in a period of 500 years between 1500 and 2000 BCE.

Sangam Tamil literature came about 2000 years ago and the Rig Veda came about 6000 years ago according to Herman Jacobi and Bala Gangadhara Tilak. Genuine scholars date it before 4000 years ago on the basis of discovery of River Sarasvati below the surface of earth.

I will just give the things I have discovered in bullet points :-

1.INDRA- Indra is seen from the beginning of Rig Veda to the end of Atharva Veda covering 20,000 Vedic Mantras. He dominates in the 10,000 verses of Rig Veda. The meaning is Leader, King or Thunder/Lightning

2.SOMA-The Mysterious and Magical herb Soma is in the Rig Veda and other Vedas as well. This is the source for Ayur Veda.

3.INDRA= BULL- We see lot of Bull seals in the Indus Valley but not a single Cow seal. Indra is described as a Bull throughout the Vedas and  he is always Victorious, His arch enemies Vrtra, Ahi and Sushna figured in all the Vedas, particularly in Rig Veda. Even westerners agree that this is about Natural forces described as demons by the Vedic Rishis.

4.HORSE and CHARIOT- Through out the Vedas two tawny coloured horses of Indra are described. A lot of references refer to speedy Chariots and Races. That means there should be pukka roads in those days! It reminds us again the broad streets of Harappan Civilization

5.FRIENDS – I was thrilled to see that all the Gods were called Friends by the Vedic Rishis. They used the term Comrades for their colleagues! They say Come on Comrades, Let us do it. They say they have come to pray for their friends! They say Indra you are so and so’s friend; I am your friend; so please do me this favour!

6.PATI, MATI, VATI- this is a linguistic wonder! Until this day Hindus use it throughout Asia. Male names end with Pati (Uma pati, Lakshmi Pati, Ganapati, Brhaspati, Vachaspati etc) Female names end with Vati or Mati (Par Vati, Saras Vati, Indu Mati, Chanrdra Mati etc) .Even rivers which are considered feminine have this Vati suffix. Amazing to see it throughout South East Asia . Even today my friends have these Pati, Mati, Vati suffixes in their names. Vedas are very much alive in our genes! From Himalayas to Pacific ocean Mati, Pati and Vati are used.

6.Number Symbolism- Scholars struggle to cope up with numbers in the Vedas. Everywhere Number SEVEN is there. They have to give different interpretations everywhere. As a practising Hindu in London I use Number Seven everyday in the morning Mantra and Evening Mantra called Sandhyavandana ( Sorry to say I miss the midday mantra). Everyday I recite Seven Rishi names, Seven Prosody (Grammar) terms and Seven Vedic Deity names. When I was in India, I used to recite RSS Pratasmaran in RSS shakas in the morning where 7 rivers, 7 mountains, 7 holy cities etc occur. Interestingly Number 7 and Number 3 are more in Harappan seals.

7.Nine + Ninety- For some reasons Vedic Rishsis say 9+90 rivers, 9+90 forts etc. Nobody knows why. But it is throughout the RV (abbreviation for Rig Veda)

8. DECIMAL NUMBERS – Hindus invented the decimal numbers. Number 100 and 1000 used hundreds of times in the RV.

9. HUNDRED YEAR LIFE- Another wonder is Man’s life is fixed for 100 years throughout the Four Vedas. Most interestingly I do recite this 100 year life Mantra everyday. All good Brahmins do it every day. In the Bible we find only one reference to 100 year life. It looks like ancient Hindus were the healthiest community in the world. I have separately given the list of saints who lived 120 years and who lived 300 years.

10.MIRACLES:- Wherever Asvin Twins are praised their long list of amazing miracles are spoken of. This is also found throughout the RV. I urge everyone to start reading Asvini deva hymns and Visvdeva hymns. You will come across a lot of miracle stories

11.THREE GODDESSES- Throughout the RV we come across Apri Hymns where they praise Ila, Bharati and Sarasvati. This shows they valued Goddesses unlike Semitic religions. In Semitic religions we find only Male Gods. Now Hindus worship the same three as Durga Lakshmi and Sarasvati- Amazing Unity and Amazing continuity.

12.Mudra/Signature: In most of the verses we get singer’s name in the last or in the middle mantras. This was continued by music composers until this day. After Vedic Rishis I found it in the Tamil Thevaram, Divya Prapandha Verses. In Bhakti compositions we find it from Jayadeva’s Ashtapati. WE don’t see anywhere in the world. Only Sanskrit and Tamil have this Mudra or Signature ; Meera, Kabhir Bhajan have these names or signatures in their compositions. From Rig Veda we use it until this day ; Amazing continuity.

13. Manu- Word ‘Man’ came from the first man MANU. His name is there everywhere in the Rig Veda.   No man in the world can speak without a Sanskrit word. At least a few words will be there in anyone’s speech. Vedic Sanskrit has spread to such an extant. There is no Tamil book without a Sanskrit word. No Indian can speak a language without a Sanskrit word. If thy want to say my friend had a heart operation they had to use HRT/ heart, the root in the RV!

It is a long list , I am afraid. I will continue in the next article.

To be continued……………………….

tags- amazing unity, Rig Veda, Amazing continuity

பகவத்கீதை சொற்கள் Index 17; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம் -17 (Post.10,294)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,294

Date uploaded in London – –   3 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பகவத்கீதை சொற்கள் Index 17; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம் -17

ஒரே சொல் பல இடங்களில் வந்திருந்தாலும் ஒரு இடம் அல்லது சில இடங்களே இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. முதல் எண்  பகவத் கீதையின் அத்தியாய எண் ; இரண்டாவது எண் ஸ்லோக எண்

XXXXX

அஹ: 8-17 -பகல்

அஹிதா: 2-36  சத்ருக்களும், எதிரிகளும்

அஹிம்சா  10-5  ஓருயிர்க்கும்  தீங்கு செய்யாமை

அஹை துகம்  18-22 யுக்திக்குப் பொருந்தாதாய்

அஹோ 1-45 அந்தோ

அஹோ ராத்ரவித: 8-17 பகலையும் இரவையும் அறிந்தவர்கள்

அம்ச: 15-7 அம்சமே

அம்சுமான்  10-21 கதிர்களுடைய

xxxx

ஆகாச ஸ்தித: 9-6  ஆகாயத்தில் நிலைத்து இருக்கிறதோ

ஆகாசம் 13-32  ஆகாயம்

ஆக்யாதம்  18-63    இயம்பப்பட்டது

ஆக்யாஹி 11-31 இயம்பும், சொல்லும்

ஆகச்சேத்  3-34 அடைதல்

ஆக தா : 4-10 அடைந்தார்கள்

ஆகமாபாயின: 2-14  தோன்றி மறையும் தன்மை

ஆச ரத: 4—23 கர்மம் செய்பவனுடைய

ஆச ரதி 3-21  செய்கிறானோ

ஆசரன் 3-19 அனுஷ்டிக்கிற, , பின்பற்றுகிற

ஆசார: 16-7 நன்னடத்தை, நல்லொழுக்கம்

ஆசார்ய  1-3 குருவே, ஆச்சார்யாரே

ஆசார்யம்  1-2  ஆசார்யரை

ஆசார்யான் 1-26 ஆசார்யர்கள், குரு

ஆசார்யா: 1-33 ஆசார்யார்கள் – குருக்கள் , குருமார்கள்

ஆசார்யோபாசனம்  13-7  குரு சேவை

ஆஜ்யம் 9-16  நெய்

ஆததாயின 1-36  – குற்ற வாளிகள் , கொடும் பாவிகள்

ஆட்ய: 16-15 பணக்கார

To be continued…………………………

27 words added in part 17 of Bhagavad Gita Words Index

To be continued………………………………………………..

tags- பகவத்கீதை , சொற்கள் Index 17, சம்ஸ்க்ருதம் கற்போம் -17, Gita Index 17

ரிக் வேதத்தில் புறா ஜோதிடம் & தமிழர்களின் அதிசயக் கண்டுபிடிப்பு -2 (Post.10,293)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,293

Date uploaded in London – –   3 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நேற்று வெளியான ‘ரிக் வேதத்தில் புறா ஜோதிடம், தமிழர்களின் அதிசயக் கண்டுபிடிப்பு -1’– என்ற முதல் பகுதியைப் படித்துவிட்டு இதையும் படிக்கவும் .

ரிக் வேத RV.10-165 பாடலில் புறா பற்றிய ஆரூடத்தை நேற்று கண்டோம். ஆனால்  முதலாவது மண்டலத்தில் உள்ள பாடல் சங்கத் தமிழ் இலக்கியத்தில் போல காதல் புறாக்களைக் காட்டுகிறது. புறாக்களை சமாதான தூதுவர்களாக தற்போது மேலை நாடுகள் சித்தரிக்கின்றன. இரண்டாவது உலக மஹா யுத்தம் முடிந்த 50-வது ஆண்டு விழாவினைக் கொண்டாட 1995-ல் பிரிட்டன் வெளியிட்ட இரண்டு பவுன் நாணயத்தில் கூட சமாதானப் புறா ஆலீவ் / ஒலிவ மர இலைகளுடன் பறப்பதை சித்தரித்துள்ளனர்

இந்துக்களின் பரத நாட்டிய முத்திரையில் கபோத / புறா முத்திரையும் ஒன்று.

இந்துக்களின் யோகாசனத்தில் கபோத / புறா ஆசனமும் ஒன்று .

ஆயினும் இணை பிரியா புறா ஜோடிகளை இந்தியா முதலிய நாடுகள் தபால் தலைகளாக வெளியிட்டுள்ளன. இதுவே ரிக் வேத முதலாவது மண்டல மந்திரமும் சங்கத் தமிழ் இலக்கியமும் நமக்குக் காட்டுகின்றன .

இதோ முதலாவது மண்டல மந்திரம் –

இது ரிஷி சுனச்சேபன் , இந்திரனை நோக்கிச் சொல்லும் துதி

ரிக். 1-30-4

இந்த சோமரசம் உனக்காக்கத்தான் படைக்கப்படுகிறதுதன்னுடைய மனைவியான புறவிடம் அன்புடன் நெருங்கும் ஆண் புறா போல நீயும் வருகிறாய் ; எங்கள் துதியை ஏற்றுக் கொள்வாயாக” –1-30-4

எனது உரை

பத்தாவது மண்டலத்தில் ஒரு பயங்கரக் காட்சியைக் கண்டோம்.

இதற்கு அடிக்குறிப்பு எழுதிய Ralph T H Griffith ரால்ப் கிரிப்பித் சொல்கிறார்- “புறாவை அபசகுனப் பறவையாக மக்கள் கருதுகின்றனர். மரண தேவனின் தூதனாகக் கருதுகின்றனர் ; இங்கிலாந்தில் வடக்கு லிங்க்கன்ஸைர் பகுதியில் இப்படி ஒரு நம்பிக்கை இருப்பது, ‘கேள்வி பதில்’ பகுதியில் வெளியாகி இருக்கிறது. மரத்தில் உட்கார்ந்திருக்கும் புறவு வீட்டிற்குள் நுழை ந்தாலோ அல்லது ஆனந்தமாக ஆடி ஓடும்  புறா திடீரென்று சாதுவாகி பேசா மடந்தையாக நின்றாலோ அது சாவுக்கு அறிகுறி” .

இது பற்றி நான் சொல்லுவது – இங்கும் கூட புறா சாகப்போகிறதா அல்லது வீட்டிற்குள் இருக்கும் ஒருவர் சாகப்போகிறாரா என்று தெளிவாக இல்லை.

மேலும் 10-165- 4 மந்திரத்தில் ஆந்தை (screeching owl ) காரணமில்லாமல் அலறுவது குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக, இரண்டையம் இணைத்துப் பார்த்தால் ஆந்தை திடீரென்று அலறுவதும் வீட்டிற்குள் தினசரி அவுபாசனம் செய்யும் இடத்தில் திடீரென்று புறா அமர்ந்ததும் ஏதோ கெட்டது நடக்கப்போவதைத் தெளிவாகக் காட்டுகிறது; ஆந்தை அலறுவதும், குறிப்பிட்ட எண்ணிக்கையில் அது குரல் கொடுப்பதும், மரணத்தின் அறிகுறி என்பது தமிழர்களின் நம்பிக்கை. சங்கத் தமிழ்ப் புலவர்கள் பாடிய பாடல்களிலும் ஆந்தை, கோட்டான், கூகை இருக்கும் இடங்கள் சுடுகாடு அல்லது பாழடைந்த இடமாகவே இருக்கிறது. புறம். 364 காண்க.

மேலும் பிராமணர்களின் அக்கிரஹாரம் மிகவும் சுத்தமான இடம். அங்கு நாயும் கோழியும் கூட நுழையாது என்கிறார் சங்கப்  புலவர்- பார்ப்பனர் உருத்திரன் கண்ணனார் – காண்க பெரும். 299, இன்னாநாற்பது -3

ஆக, நாயோ கோழியோ நுழையாத இடத்தில் திடீரென்று ஆந்தையும் புறவும் வந்ததே அப  சகுனமாகக் கருதப்படுகிறது. புறவினால் மட்டும் அப்படி வந்ததாகக் கூற முடியாது என்பதே  என்னுரை.

முதலாவது மண்டலப் ‘பா’வை மொழிபெயர்த்த ஜம்புநாத ஐயர் , கருத்தரித்த பெட்டையிடம் வரும் புறாப் போல என்கிறார். ஒருவேளை கர்ப்பிணிப் புறவு என்பது சாயனர் உரையாக இருக்கும். இது மேலும் அன்பைக் காட்டுகிறது

xxx

தமிழர்கள் கண்ட அற்புதக் காட்சி!

சிபிச் சக்ரவர்த்தி கதையை இந்தியர்கள் எல்லோரும் அறிவர். அக்நி தேவன் புறா வடிவில் வர, அதை கழுகு வடிவில் இந்திரன் துரத்த, அந்தப்புறா சிபிச் சக்ரவர்த்தியின் மடியில் தஞ்சம புகுந்தது. அதைக் காப்பாற்ற அவன் த ன் உடலையே தருவதற்கு துலாபாரம் செய்ய முயன்று தராசுத் தட்டில் ஏறினான். அப்போது இரண்டு தேவர்களும் அவன் பெருந்தன்மையை  உலகத்துக்குக் காட்டவே அவ்வாறு செய்வதாகக் கூறுகின்றனர். இந்தக் கதை புறநானூறு, சிலப்பதிகாரம் நெடுகிலும் உளது. கண்ணகி தான் வாழ்ந்த சோழர்குடி மன்னனாக சிபியை சித்தரிக்கிறாள். அதற்கு முன் சங்க இலக்கியத்திலும் உளது. (என்னுடைய பழைய ஆராய்ச்சிக் கட்டுரைகளைக் காண்க – சோழர்கள் தமிழர்களா?) . இரண்டு புறாக்கள் ஒரு வேடனுக்காக தங்கள் உயிரையே மாய்த்துக் கொண்ட புறாக்கதையும் மஹாபாரதத்தில் உளது.)

ஆக வடக்கும் தெற்கும் – இமயம் முதல் குமரி– வரை  புறாவை அன்பின் சின்னமாகவே காட்டியுள்ளன.

ஆண்புறா, வெய்யிலில் வாடிய பெண் புறாவுக்கு விசிறி வீசிய பாடல் கலித்தொகையில்  பாலை பாடிய பெருங் கடுங்கோ பாடலில் வருகிறது:

அன்புகொள் மடப்பெடை அசை இய  வருத்தத்தை

மென் சிற கரால் ஆற்றும் புறவு (பாலைக் கலி , பாடல் 10, )

இதைவிட அருமையான ஒரு காட்சியைப் பிராமணப் புலவன் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பட்டினப்பாலையில் படம் போட்டுக் காட்டுகிறார். புறவுகள் ‘கல் உண்ணும் காட்சி’ அது.

உலகம் முழுதும் பல பறவைகள் கற்களை உண்ணுவதும் அது ஜீரணத்துக்காக செய்யப்படும் நிகழ்வு என்பதும், இப்போது யூ ட்யூப்பில் You Tubeல் மலிந்து கிடக்கிறது. மகேஷ் ராஜா என்பவர் நீலகிரி காடுகளில் கல் உண்ணும் பறவையைப் படம்பிடித்துப் போட்டுள்ளார். வடக்கில் ஒரு இந்திக்காரர், இந்தி மொழி வீடியோவில், செம்மை நிற கற்களைப் பொடித்து, பரப்ப அதை புறாக்கள் ஆனந்தமாக உண்ணுவதை யூ ட்யூபில் காணலாம். ஆக இப்போது இது எல்லோரும் அறிந்த செய்தியாகிவிட்டது; ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பார்ப்பான் இதைப்பார்த்து அதை அப்படியே எதிர்கால சந்ததிக்கு எழுதிவைத்த அற்புதத்தைக் காணுங்கள் :-

பட்டினப்பாலை நூலை இயற்றிய பார்ப்பனன் உருத்திரங்கண்ணனாரும் குறிஞ்சிக்கலி இயற்றிய  பார்ப்பனன் கபிலனும் நிறைய இயற்கை அற்புதங்களை நமக்கு அளிக்கின்றனர். பார்ப்பான் கபிலன் நமக்கு 99 மலர்களை குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலில் அளித்தான். குருவி, கிளி மூலம் பாரிக்கு உணவு சேகரித்து மூவேந்தர் முற்றுகையை முறியடித்தான்.’ புலன் அழுக்கற்ற அந்தணாளன்’ என்று போற்றப்பட்டான்; ஜாதி வெறியை ஒழித்த முதல் தமிழனும் அவன்தான். அங்கவை , சங்கவை என்ற க்ஷத்ரிய குலப் பெண்களை தனது மகள்கள் போலாகி கருதி திருமணம் செய்வித்தான். இப்படி இரண்டு பிராஹ்மணர்கள் நமக்கு அற்புதமான  செய்தியை 2000 ஆண்டுக்கு முன் எழுதிவைத்தனர்.

அவிர் சடை முனிவர் அங்கி வேட்கு

மாவுதி நறும்புகை முனைஇக் குயிறம்

மாயிரும் பெடையோ டிரியல் போகிப்

பூதங் காக்கும் புகலருங் கடிநகர்த்

தூதுணம் புறவொடு துச்சிற் சேக்கு

—பட்டினப்பாலை , வரிகள் 54-58

xxxx

ஆய் தூவி அனம்என, அணிமயில் பெடை எனத்

 தூதுணம் புறவு எனத் …………………………..

கலித்தொகை 56, கபிலன்  பாடிய குறிஞ்சிக் கலி

தூதுணம் புறவு என்பதற்குக் கல் = தூது , உணம் = உண்ணும் என்று உரைகாரர்கள் செப்புவர்

இதை உலகிற்குப் பதிவு செய்து கொடுத்த 2 அந்தணர்க்கும் வந்தனம் சொல்லுவோம். இப்போது நிறைய You Tube வீடியோ காட்சிகளைக் கண்டு மகிழுங்கள்.

ஜோடிப் புறாக்களையும் காதல் புறாக்களையும் கீழ்கண்ட பாடல்களில் காணலாம் :-

குடவாயில் கீரத்தனார் அக நானூறு பாடல் 287, 315ல் புறா பற்றிப் பேசுகிறார்.

குன்றியனார், குறுந்தொகை நூலில் பாடல் 79ல் புறாவைப் பாடுகிறார் .

மகிழ்ச்சியுடன் கொஞ்சும் இரண்டு புறாக்களை கள்ளி மரக்  காய்கள் வெடித்து , ஒலி உண்டாக்கி விரட்டும் காட்சியை வெண் பூதியார் குறுந்தொகைப் பாடல் 174ல் காட்டுகிறார்; ஆக பல இடங்களில் ஜோடிப் புறாக்கள் பறப்பதை தமிழ்ப் புலவர்கள் காணத் தவறவில்லை.

முடிவுரையாக நான் சொல்லுவது புறாக்கள் மூலம் சகுனம் பார்ப்பது இல்லை. ஆனால் அசாதாரண சூழ்நிலையில் அவை வீட்டிற்குள் வந்து, அப்போது ஆந்தையும் அலறினால் மரணம் சம்பவிக்கும் என்பதே சரி  ; பூகம்பம், சுனாமி  போன்ற இயற்கை உற்பாதங்கள்  வருவதற்கு முன்னரும் இப்படி பிராணிகள் அலறுகின்றன.

வாழ்க ஜோடிப் புறாக்கள்  !!

from You Tube

–subham–

tags- ரிக் வேதத்தில் ,புறா ஜோதிடம், தமிழர் ,கண்டுபிடிப்பு , சிபிச் சக்ரவர்த்தி, தூதுணம் புறவு,கல் உண்ணும்,

ஸ்வாமி ராமதீர்த்தர்! – 2 (Post No.10,292)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,292

Date uploaded in London – –   3 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஸ்வாமி ராமதீர்த்தர்! – 2

ஸ்வாமி ராமதீர்த்தர் ஒரு கணித மேதை. அவரைப் பற்றி பூரண் சிங், ‘ஸ்வாமி ராமா’ (Puran singh – Swami Rama) என்ற நூலை எழுதியுள்ளார். அதில் பூரண் சிங் ஸ்வாமி ராமதீர்த்தர் தன்னிடம் கூறியதாக எழுதிய சம்பவம் இது.

ஒரு முறை ஸ்வாமி உயர் கணிதத்தில் சில கடினமான கணக்குகளைத் தீர்வு செய்ய எடுத்துக் கொண்டார். ‘நாளை காலை சூரியன் உதிப்பதற்குள் அவற்றிற்கான தீர்வைக் காண்பேன்; இல்லையேல் என் தலையை உடலிலிருது வெட்டிக் கொள்வேன்’ என்று சபதம் பூண்ட அவர் தலையை வெட்டுவதற்காக ஒரு கூரிய கோடாரியையும் பக்கத்தில் வைத்துக் கொண்டார். இப்படிப்பட்ட சபதம் மிக மிகத் தவறானது தான்; ஆனால் இப்படிப்பட்ட கடுமையான ஒழுங்குக் கட்டுப்பாட்டைக் கொண்டதனால் தான் தனக்கு இருக்கும் அறிவு வந்தது என்றார் அவர். நள்ளிரவிற்குள் நான்கு கணக்குகளில் மூன்றிற்கு அவர் தீர்வைக் கண்டு விட்டார். நான்காவது கணிதத்திற்குத் தீர்வு கிடைக்கவில்லை.ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார். சூரியன் உதயமாகிக் கொண்டிருந்தான்.

தான் போட்ட சபதத்திற்குத் தக, கோடாரியை எடுத்துக் கொண்டு வீட்டின் மாடிக்குப் போனார். அங்கு கூரிய கோடாரியைத் தன் தொண்டையில் வைத்து அறுத்துக் கொள்ள ஆரம்பித்தார். கோடாரி முனை கழுத்தில் பட்டு ரத்தம் வெளியேற ஆரம்பித்த தருணம்.

திடீரென்று ஆகாயத்தில் அந்தக் கணிதத்திற்கான தீர்வு எழுதப்பட்டிருப்பதை அவர் கண்டார். அதை எழுதிக் கொண்டார்.

அந்தக் கடினமான கணிதத்திற்கு அது தான் அபாரமான ஒரிஜினல் தீர்வாக அமைந்தது. அதை தனது கவர்ன்மெண்ட் காலேஜ் பேராசிரியர் முகர்ஜியிடம் காண்பித்தார். பேராசிரியர் பிரமித்துப் போனார்.

இதே போல பல முறை செய்து தான் கணிதத்தில் யாரும் பெறுதற்கரிய பெரும் நிலையை ராமதீர்த்தர் பெற்றார்.

1897ஆம் ஆண்டு. நவம்பர் மாதம். ஸ்வாமி விவேகானந்தரை சனாதன தர்ம சபாவின் சார்பில் சொற்பொழிவாற்ற லாகூருக்கு அழைத்தார் ராமதீர்த்தர். ஹாலில் கூட்டம் கட்டுக்கடங்காமல் பெருகியது. உடனே ஹாலை விட்டு வெளியேறி திறந்தவெளியில் அனைவரும் கேட்டுத் திருப்தியுறும் வகையில் விவேகானந்தர் பேசினார்.

அடுத்த சொற்பொழிவு வேதாந்தம் பற்றியது. ராமதீர்த்தரின் வேண்டுகோளின் பேரில் அந்தச் சொற்பொழிவை ஆற்றினார் ஸ்வாமி விவேகானந்தர். அது ஒரு சர்கஸ் மைதானத்தில் நடந்தது.

மின்னல் போன்ற பளீரென்ற சொற்பொழிவும், ஸ்வாமிஜியின் நா வன்மையும் கூட்டத்தை அப்படியே கட்டிப் போட்டது.

இந்தச் சொற்பொழிவைக் கேட்ட பின்னர் தான், சந்யாசியாக தான் ஆக வேண்டுமென்ற எண்ணத்தில் உறுதி கொண்டார் ராமதீர்த்தர். ஸ்வாமி விவேகானந்தர் போலவே அமெரிக்கா சென்று வேதாந்தத்தைப் பரப்ப வேண்டும் என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியதும் இதன் விளைவே தான்!

ஸ்வாமி விவேகானந்தரை லாகூரில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று அவர் ஒரு விருந்தை அளித்தார். கூடவே குட்வின் உள்ளிட்டவரும் அந்த விருந்தில் கலந்து கொண்டனர்,

தனது வீட்டில் இருந்த நூலகத்தை ஸ்வாமிஜிக்குக் காண்பிக்கவே, அவர் வால்ட் விட்மன் எழுதியலீவ்ஸ் ஆஃப் கிராஸ்’ புத்தகத்தை அங்கு படித்தார்.

அவர் ஸ்வாமி விவேகானந்தருக்கு ஒரு கடிகாரத்தை பரிசாக அளிக்கவே, அதை அவர் சட்டைப் பையிலேயே மாட்டிய அத்வைதத்தின் சிகரமான ஸ்வாமிஜி, “இதை, நான் இங்கேயே அணிகிறேன்” என்று கூறினார்.  உள்ளது ஒன்றே என்ற

அத்வைதத்தில் ஆழ்ந்து ஊறியதால் ராமதீர்த்தர் தன்னை எப்போதும் ராமா என்று அழைத்துக் கொண்டே பேசுவார். (நான் என்று ஒரு போதும் அவர் பேசுவதில்லை.) இதை மனதில் கொண்டு அவரது உரைகளைப் படிக்க வேண்டும்.

1902ஆம் ஆண்டு. பிப்ரவரி மாதம்.

ஸ்வாமி ராமதீர்த்தர் ஃபைஜாபாத்திற்கு (Fyzabad) விஜயம் செய்தார். அங்கு சனாதன தர்ம சபா சார்பில் அவர் ஒரு சொற்பொழிவாற்றினார். இந்த சபை சாந்தி பிரகாஷ் என்ற சூரஜ் லால் பாண்டே என்பவரால் நிறுவப்பட்ட சபா.

இந்த சபை ஹிந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர் ஆகிய அனைவரும் பங்கு கொள்ளக் கூடிய ஒரு பொதுவான சபா. தங்கள் தங்கள் மதக் கொள்கைகளை பரிமாறிக் கொள்வதற்கான ஒரு சபையாக இது அமைந்திருந்தது.

ஸ்வாமி ராமதீர்த்தரின் ஆணைப்படி அவரது சிஷ்யரான நாராயணா, ‘ஆத்மா’ என்ற பொருளில் பேசினார். சொற்பொழிவு முடிந்த பின்னர் கூட்டத்திற்கு வந்திருந்த மௌல்வி முகம்மது முர்டாஸா அலி கான் (Maulvi Mohammed Murtaza Ali Khan) பல ஆக்ஷேபணைகளை எழுப்பினார்.

ஸ்வாமி ராமதீர்த்தர் மறுநாள் வந்து ஆக்ஷேபணைகளுக்கு அவர் சமாதானங்களைத் தெரிந்து கொள்ளலாம் என்று கூறினார்.

மறுநாள் மௌல்வி குறித்த நேரத்திற்கு அங்கு வந்து சேர்ந்தார்.

வாதம் புரிவதற்காக அல்ல; வம்புச் சண்டைக்காக வந்தார்.

ஸ்வாமி ராமதீர்த்தரின் எதிரில் நேருக்கு நேர் அவர் உடகார்ந்தார்.

இருவரின் கண்களும் சந்தித்தன.

அவ்வளவு தான்! மௌல்வி தனது ஆக்ஷேபணைகள் அனைத்தையும் மறந்தார். அவர் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பொங்கி வழிந்தது.

கைகளைக் கூப்பியவாறே அவர் ஸ்வாமி ராமதீர்த்தரை நோக்கி, “ஐயனே! மனித்து விடுங்கள் என்னை; உங்களை யார் என்று தெரியாமல் போய் விட்டது! என்னை மன்னித்து விடுங்கள்” என்றார்.

அன்று முதல் அந்த மௌல்வி இனம், ஜாதி கடந்த இறையன்புக்கு ஆளானார்.

  • தொடரும்
  • tags-ராமதீர்த்தர்! – 2

SUN AND SCIENCE IN THE RIG VEDA :6 DISCOVERIES CONFIRMED (Post No10,291)

SUN SPOTS SHOW HUG SOLAR FLARE UPS

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,291

Date uploaded in London – –   2 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Latest research and study of the Rig Veda (RV) , the oldest book in the world, show that the Vedic Hindus had advanced knowledge of Sun. Though the 30 + foreigners who translated Four Vedas made passing remarks about Hindu Knowledge on Sun, they added words like ‘possibly’, ‘probably’ and sowed seeds of doubts in the readers’ mind. Now we are able to confirm the Hindu knowledge in the following areas

Following 6 points are confirmed now:-

1.The Rishis/seers told us Sun God has a chariot with one wheel that was drawn by Seven Horses. Now we all know that they meant the Rain Bow colours VIBGYOR (violet,indigo,blue, geen, yellow, orange and red. Sun light passed through a prism shows it.

2. Throughout the Ten Mandalas/books of the RV, they report a miracle of Atri Maharishi. In fact he was praised for calculating a total eclipse and its duration. A total eclipse can last for a maximum of seven minutes, which is very rare. One of the solar eclipses was well calculated by Atri and his disciples wondered when he finished reciting a Rig Vedic mantra the sun came out. He was the only one knew the occurrence of eclipse on that day. Well calculated the duration of the Solar Eclipse he recited a mantra for few minutes and the Sun came out of shadow. This is reported as a ‘miracle’ in the Veda.

Krishna also used this trick to destroy Jayadratha who did not know that it was a Solar eclipse day. He thought that the sun was set, and the bugle was sounded marking the end of the battle for that day. In those days they fought Dharma Yuddha. So, after sun set they shook hands and walked home shoulder to shoulder. But Krishna knowing that it was only an eclipse and so urged Arjuna to shoot down Jayadratha, when the eclipsed sun was released. A solar eclipse can happen only on a new moon/Amavasya day. During Mahabharata day it was not a continuous 18 day war. Alternate days were the fighting days.

3.Third wonder is they knew sun is a star. Even people like Griffith who translated Rig Veda reported verbatim the mantra  where it was said ‘SUN IS A STAR’. In those days, I mean 120 years ago, they did not even know that there were millions of Suns. But Bhagavad Gita and other hymns talk about Koti Surya (Million Suns). The Viswa Roopa Darshan sloka in the Bhagavad Gita says ‘Divi Surya Sahsrasya’ (1000 suns brightness)

4. All Sanskrit proverbs, slokas and astrological hymns say that Surya/Sun was the Deity for Arogya/ health.

There are umpteen remarks to show this in the oldest book, Rig Veda. They knew human beings need Vitamin D from Sun and so they prescribed lot of rituals under the Sun. Though they did not mention ‘Vitamin D’ they knew sun light gives Vitamin D.

5. Sun Spots were not in the 150 year old science books. But RV talks about Sun Spots several thousand years ago. Foreign translators used ‘Spots on Sun Bird’ or a Bull. They said that the bird and bull mentioned here actually Sun. The hymns said Bird/Bull with Spots. In reality they knew the Sun Spots. Now we know that when the sun spots are big in number, communication on earth is affected because of solar flare ups.

6.Jaundice Treatment :– Treatment for jaundice is both in the Rig Veda and Atharva Veda. The Rishis/ seers talk about treatment with Red Light. Actually jaundice in new born babies is treated with red light. It is called photo therapy. Read below the science behind it:

What is Jaundice?  

Jaundice is a common, temporary. and usually harmless condition in newborn infants. It affects both full-term and premature babies, usually appearing during the first week of the baby’s life.

Jaundice occurs when there is a build-up of a naturally occurring substance in the blood called bilirubin . Bilirubin is an orange/red pigment in the blood. Bilirubin is produced by the normal breakdown of red blood cells. It is normal for everyone to have low levels of bilirubin in their blood. As bilirubin begins to build up, it deposits on the fatty tissue under the skin causing the baby’s skin and whites of the baby’s eyes to appear yellow.

What is Phototherapy?

Some “normal” jaundice will disappear within a week or two without treatment. Other babies will require treatment because of the severity of the jaundice, the cause of the jaundice, or how old the baby is when jaundice appears.

Phototherapy (light treatment) is the process of using light to eliminate bilirubin in the blood. Your baby’s skin and blood absorb these light waves. These light waves are absorbed by your baby’s skin and blood and change bilirubin into products, which can pass through their system.

When there were no electric lights 5000 years ago Hindus used fire and sun light.

What is the BiliBlanket?

Your doctor may prescribe the biliblanket as an alternative and/or additional treatment for you child’s jaundice. This system uses fiber optics and represents advanced technology in phototherapy treatment given in the hospital or at home.

The biliblanket provides the highest level of therapeutic light available to treat your baby. This form of light is also found in sunlight. The strength of light form the biliblanket is about the same, as you would get in the shade on a sunny day, yet is safer because the biliblanket filters out potentially harmful ultraviolet and infrared energy

PHOTO THERAPY FOR BABIES AND ADULTS

 Here are the references:-

Sun spots in Sun—RV 10-189

Sun is a Star — RV 10- 156

Sun’s link wit Eye- 10-90

My articles on the same subject:—

DATE OF RIG VEDA THROUGH SOLAR ECLIPSE-3000 BCE …

https://tamilandvedas.com › 2017/12/08 › date-of-rig-v…

8 Dec 2017 — Solar eclipses narrated in the Veda cannot be overlooked. In passage 10-138-4 of the Rig Veda, it is said Indra ‘maseva suryo vasu puryam adade’ …



Tamil Article: Solar Eclipse in Tamil and Sanskrit Literature

https://tamilandvedas.com › tamil-arti…

29 Dec 2011 — Tamil Article: Solar Eclipse in Tamil and Sanskrit Literature … ‘Mr One Thousand’ in Rig Veda and Tamil Literature (Post No.10,179) …



Was Jayadratha killed by a Solar Eclipse? | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2012/…/…

· 

3 Jan 2012 — The earliest reference to a solar eclipse occurs in the Rig Veda. Atri Maharishi speaks of the wonders of the solar eclipse (RV5-40-5).

TWO RARE VEDIC HYMNS TO CURE SICKNESS – Tamil and …

https://tamilandvedas.com › two-rare…

· Translate this page

4 Jan 2020 — TWO RARE VEDIC HYMNS TO CURE SICKNESS– Part 1(Post No.7418). Research article Written by London Swaminathan.



TWO RARE VEDIC MANTRAS TO CURE SICKNESS

https://swamiindology.blogspot.com › 2020/01 › two-r…

4 Jan 2020 — TWO RARE VEDIC MANTRAS TO CURE SICKNESS– Part 1(Post No.7418) · Research article Written by London Swaminathan · Uploaded in London on – 4 JANUARY …

TWO RARE VEDIC MANTRAS-PART 2 (Post No.7422) – Tamil …

https://tamilandvedas.com › 2020/01/05 › hydrotherap…

5 Jan 2020 — Acupressure in Rig Veda HYDROTHERAPYACUPRESSUREMONSOON IN THE RIG VEDATWO RARE VEDIC MANTRAS-PART 2 (Post No.7422) Research article …

AMAZING VEDIC EYE CONNETION WITH SUN, EGYPT AND …

https://tamilandvedas.com › 2021/10/07 › amazing-ved…

7 Oct 2021 — Thanks for your great pictures. tamilandvedas.com, … Here again the Hindus confirm the link between the Sun and Eye.



sun | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › sun

7 Oct 2021 — Far seeing mother of the eyes”. Greek drama is full of allusions to the link between the eye and the sun. Aeschylus in Prometheus Bound refers …

–subham—

TAGS– six discoveries, in Rig Veda, Sun spots, Photo therapy, sun , a star,

ரிக் வேதத்தில் புறா ஜோதிடம்; தமிழர்களின் புறா கண்டுபிடிப்பு – 1 (Post No.10,290)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,290

Date uploaded in London – –   2 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக் வேதத்தில் ஏராளமான ஆராய்ச்சி விஷயங்கள் உள்ளன. அதுவும் உலகிலேயே பழமையான நூல் என்பதால் அவற்றின் முக்கியம் அதிகரிக்கிறது. ரிக் வேதத்துக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் சங்கத் தமிழ் இலக்கியம் வந்தது. சங்கத் தமிழ் 18 நூல்களிலும் புறாக்கள் பற்றி நிறைய வியப்பான செய்திகள் உள்ளன. ஆண் புறா, வெய்யிலில் வாடும் பெண் புறாவுக்கு சிறகால் விசிறி வீசுவதும், புறாக்கள் ஜீரணத்துக்காக கற்களை சாப்பிடுவதும் சங்கத் தமிழ் புலவர்கள் நேரில் கண்ட காட்சி.

ஆனால் ரிக் வேதத்தில் இரண்டு காட்சிகள் 2 மண்டலங்களில் வியப்பான செய்தியைத் தருகின்றன. அவற்றைக் கண்டுவிட்டு தமிழ் நூல்களை ஆராய்வோம். ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலத்தில்  165ஆவது துதியைக் (RV. 10-165) காண்போம். இந்தத் துதியை இயற்றியவர் பெயரும் ‘புறா’ ! அதாவது ‘கபோதன்’ அவர் அம்மா பெயர் மரண தேவதை. புறாவுக்கு சம்ஸ்க்ருதத்தில் கபோத என்று பெயர் ; மரண தேவதைக்கு நிர்ருதி என்று பெயர்.

முதல் ஆராய்ச்சி

தமிழ் இலக்கியத்தில் காக்கை பாடினியார் , தேய் புரிப் பழங்கயிற்றனார் , செம்புலப் பெயல் நீரார் என்ற பல விநோதப் பெயர்களைக் காணலாம் . உலகில் இந்துக்களைத் தவிர வேறு எவரும் இந்த உத்தியை – டெக்னீக்கை- கையாளவில்லை.

ரிக் வேதத்தை, உலக மஹா ஜீனியஸ் – மாமேதை- காக்கா கறுப்பு–என்று அழைக்கப்படும் வேத வியாசர் , நமக்கு தொகுத்துக் கொடுத்தார். அவர் பின்பற்றிய டெக்னீக் இது. அவர் பெயர் ‘தீவுக் கறுப்பன்’ MR BLACK ISLANDER . அவர் பெயரிலேயே இந்த வினோதம் புகுந்துவிட்டது. அவர் யாதவ கிருஷ்ணன், திரவுபதி முதலியோர் அட்டக் கறுப்பு UTTER BLACK ; அதனால் அவர்கள் பெயரே கறுப்பன் (கிருஷ்ணன் MR BLACK), கிருஷ்ணா/ திரவுபதி (MISS BLACK கருப்பாயி) என்று வைத்துக்கொண்டனர். வியாசரும் கறுப்பு . இதனால் அவரை கிருஷ்ண த்வைபாயனர் MR BLACK ISLANDER என்று அழைப்பர். அதாவது கங்கை ஆற்றுத் தீவில் வசிக்கும் கறுப்பன் . கின்னஸ் புஸ்தத்தில் குறிப்பிட இடமில்லாத சாதனை புரிந்தவர் அவர். உலகிலேயே அதிகமாக GREAEST WRITER எழுதியவர் GREATEST COMPILER; தொகுத்தவர்.

ஆகையால் புறா ஜோதிடக் கவிதையில் வரும் ‘புறா’ என்ற பெயரை புலவர் (MR DOVE OR MR PIGEON) பெயராகவும் புறாவினால் மரணம்  வரும் மரணதேவதை (நிர்ருதி) பெயரை புலவரின் அம்மா (MRS DEATH)  பெயராகவும் சொல்லிவிடுகிறார் வியாசர்.

அந்த உலக மஹா மேதை செய்ததை சங்கத் தமிழ் நூலைத் தொகுத்தோரும் ‘கள்ளக் காப்பி’ (CARBON COPY ) அடித்தனர். அதாவது ஒரு புலவர் வினோதமான சொற்றோடரைக் கையாண்டாலோ அல்லது அவர் பெயர் தெரியாவிட்டாலோ அவர் பாட்டில் உள்ள சொல்லை புலவர் பெயராகக் கூறி விடுவார்கள். இப்படிப் பிறந்ததுதான் காக்கைபாடினியார் முதலிய பெயர்கள். இது போல முதல் முதலில் செய்தவர் வியாசர்.

சங்க இலக்கியத்தில் சுமார் 20 புலவர்களும், ரிக் வேதத்தில் சுமார் 20 பெயர்களும் இப்படி அமைந்த விநோதப் பெயர்கள் ஆகும்

xxxx

இப்போது சப்ஜெக்டு SUBJECT க்கு வருகிறேன்

புறா பற்றி RV.10-165 ல் மிஸ்டர் புறா , அதாவது புலவர் திரு. புறவு MR DOVE என்ன சொன்னார் என்று பார்ப்போம்.

ஸாரி , ஸாரி SORRY SORRY ! அதற்கு முன்னர் வேறு ஒரு விஷயம் நினைவுக்கு வந்துவிட்டது அதையும் சொல்லி விடுகிறேன். சங்க காலத் தமிழர்கள் இப்போது இலங்கைத்  தமிழர்கள் பேசுவது போல குறில் சவுண்டை – ஒலியை– அதிகம் பயன்படுத்துவர் ; புறா என்பதற்குப் பதிலாக புறவு என்பர்; விழா என்பதற்குப் பதில் விழவு என்பர் ; பாண்டில் என்பதற்குப் பதில் பண்டி (வண்டி) என்பர். ஆனால் இதே சொற்களுக்கு நெடில் சவுண்டும் சில இடங்களில் உண்டு. சங்கத் தமிழர்களுக்கு வண்டி  தெரியாது ஆனால் பண்டி, பாண்டில் தெரியும். இவை எல்லாம் என்னைப் போன்ற மொழி ஆராய்ச்சியாளருக்கு (LINGUISTIC RESEARCHER)S   கோதுமை ஹல்வா, பன்னிர் ஜாங்கிரி சாப்பிட்டதுபோல.

நிற்க.

Rig Veda 10-165

1.தேவர்களே ! நிருதியின் தூதனான கபோதன் — புறா –எந்தத் தீமையைக் கருதி இங்கு வந்திருந்தாலும் நாம் அதைப் போற்றுவோமாக ; நாம் பிராய்சசித்தத்தை செய்வோமாக  எங்கள் ஆட்களுக்கும் கால்நடைகளுக்கும் சுகம் தோன்றுக .

2.தேவர்களே !  எங்கள் மனைக்கு அனுப்பப்பட்ட பறவையான புறா சுகத்தைத் தருவதாகுக .விப்பிரனான அக்னீ எங்கள் அவியால் இன்புறுவனாக .சிறகுகளில் ஏந்தப்படும் ஆயுதம் எங்களிடமிருந்து விலகுக.

3.சிறகுப் படை புறா எங்களைத் துன்புறுத்தாமலிருக்க.  அது அக்கினியின் ஸ்தானமான அரணிக்கட்டையின் மீது அமருகிறது . எங்கள் பசுக்களுக்கும் ஜனங்களுக்கும் சுகம் தோன்றுக. தேவர்களே, புறா , இந்த மனையில் எங்களைத் துன்புறுத்தாமலிருக்க.

4.ஆந்தை வீணாகவே கத்துகிறது ஏனெனில் புறா அக்கினியின் அருகில் அமர்ந்து இருக்கிறான். இந்த வணக்கம் புறாவை தூதுவனாக அனுப்பிய மிருத்யுவான எமனுக்கு அளிக்கப்படுகிறது .

5. தேவர்களே ! நீங்கள் எங்கள் துதியால் துதிக்கப்பட்டு தூத்துவதற்குரிய புறாவைத் துரத்துங்கள் எங்கள் அவியால் மகிழ்ந்து  எங்கள் தீமைகளையெல்லாம் விலக்கி , எங்களுக்கு பசுக்களையும் உணவையும் அளியுங்கள் . துரிதமான புறா எங்கள் உணவை விட்டுவிட்டுப் பறந்து செல்க.

இதற்கான அடிக்குறிப்பில் ‘புறா ஒரு தீய பறவைகயாகக் கருதப்படுகிறது; மரணத்தின் தூதனாக உள்ளது’ என்று எழுதப்பட்டுள்ளது

இது பற்றி ரிக் வேத மொழிபெயர்ப்பை, ஆங்கில மொழியில்  நமக்குத் தந்த ரால்ப்  டி .எச் . கிரிப்பித் என்ன சொல்கிறார்.  ஆந்தை, புறா பற்றி தமிழ் இலக்கியம் என்ன சொல்கிறது என்பதையும்  எனது ஆராய்ச்சிக் குறிப்புகளை யும் அடுத்த கட்டுரையில் காணுங்கள்

Rig Veda 10-165

1. GODS, whatsoever the Dove came hither seeking, sent to us as the envoy of Destruction,

     For that let us sing hymns and make atonement. Well be it with our quadrupeds and bipeds.

2. Auspicious be the Dove that hath been sent us, a harmless bird, ye Gods, within our dwelling.

     May Agni, Sage, be pleased with our oblation, and may the Missile borne on wings avoid us.

3. Let not the Arrow that hath wings distract us: beside the fire-place, on the hearth it settles.

     May, it bring welfare to our men and cattle: here let the Dove, ye Gods, forbear to harm us.

4. The screeching of the owl is ineffective and when beside the fire the Dove hath settled,

     To him who sent it hither as an envoy, to him be reverence paid, to Death, to Yama.

5. Drive forth the Dove, chase it with holy verses: rejoicing, bring ye hither food and cattle,

     Barring the way against all grief and trouble. Let the swift bird fly forth and leave us vigour.

     देवाः कपोत इषितो यदिछन दूतो निरतया इदमाजगाम |
तस्मा अर्चाम कर्णवाम निष्क्र्तिं शं नो अस्तु दविपदेशं चतुष्पदे ||
शिवः कपोत इषितो नो अस्त्वनागा देवाः शकुनो गर्हेषु |
अग्निर्हि विप्रो जुषतां हविर्नः परि हेतिः पक्षिणी नोव्र्णक्तु ||
हेतिः पक्षिणी न दभात्यस्मानाष्ट्र्यां पदं कर्णुतेग्निधाने |
शं नो गोभ्यश्च पुरुषेभ्यश्चास्तु मा नोहिंसीदिह देवाः कपोतः ||
यदुलूको वदति मोघमेतद यत कपोतः पदमग्नौक्र्णोति |
यस्य दूतः परहित एष एतत तस्मै यमाय नमोस्तु मरित्यवे ||
रचा कपोतं नुदत परणोदमिषं मदन्तः परि गांनयध्वम |
संयोपयन्तो दुरितानि विश्वा हित्वा न ऊर्जं परपतात पतिष्थः ||


devāḥ kapota iṣito yadichan dūto nirtyā idamājaghāma |
tasmā arcāma kṛṇavāma niṣkṛtiṃ śaṃ no astu dvipadeśaṃ catuṣpade ||
śivaḥ kapota iṣito no astvanāghā devāḥ śakuno ghṛheṣu |
aghnirhi vipro juṣatāṃ havirnaḥ pari hetiḥ pakṣiṇī novṛṇaktu ||
hetiḥ pakṣiṇī na dabhātyasmānāṣṭryāṃ padaṃ kṛṇuteaghnidhāne |
śaṃ no ghobhyaśca puruṣebhyaścāstu mā nohiṃsīdiha devāḥ kapotaḥ ||
yadulūko vadati moghametad yat kapotaḥ padamaghnaukṛṇoti |
yasya dūtaḥ prahita eṣa etat tasmai yamāya namoastu mrityave ||
ṛcā kapotaṃ nudata praṇodamiṣaṃ madantaḥ pari ghāṃnayadhvam |
saṃyopayanto duritāni viśvā hitvā na ūrjaṃ prapatāt patiṣthaḥ ||

–தொடரும்

TAGS- புறா ஜோதிடம், ரிக்வேதம், சங்க இலக்கியம், புறவு, கபோத, நிருதி

ஸ்வாமி ராமதீர்த்தர்! – 1(Post No.10,289)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,289

Date uploaded in London – –   2 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 1-11-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.

எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை YOU TUBE யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். இந்த உரை நான்கு பகுதிகளாகத் தரப்படுகிறது.

ஸ்வாமி ராமதீர்த்தர்! – 1

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம், நமஸ்காரம்.

பாரத தேசம் கண்ட மகான்களில் சமீப காலத்தில் வாழ்ந்து நடைமுறை வேதாந்தம் பற்றிய சிந்தனைகளை புது விதத்தில் பரப்பியவர் ஸ்வாமி ராமதீர்த்தர்.பிரிட்டிஷ் இந்தியாவில் பஞ்சாபில் குஜ்ரன்வாலா மாவட்டத்தில் முரளிவாலா என்னும் இடத்தில் 1873ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதி புதன்கிழமை தீபாவளி தினத்தன்று பண்டிட் ஹீரானந்த கோஸ்வாமி என்ற பண்டிதருக்கு மகனாகப் பிறந்தார் ஸ்வாமி ராமதீர்த்தர். அவருக்கு தீர்த்த ராமர் என்று பெயரிடப்பட்டது. அவரது தாயார் அவர் பிறந்த ஒரு வருடத்தில் மறைந்தார். அவரது தமக்கை தீர்த்த தேவியும் அவரது அத்தை தர்மா கௌரும் அவரை வளர்த்தனர். கணிதத்தில் இயல்பாகவே அபார வல்லமையை அவர் பெற்றிருந்தார்.  லாகூரில் கவர்ன்மெண்ட் காலேஜில் கணிதத்தில் மாஸ்டர் டிகிரி வாங்கிப் பின்னர் அதே லாகூரிலேயே ஃபொர்மன் கிறிஸ்டியன் காலேஜில் (Forman Christina College, Lahore) கணிதப் பேராசிரியராகப் பணியாற்றலானார்.

1897ஆம் ஆண்டில் ஸ்வாமி விவேகானந்தர் லாகூருக்கு விஜயம் செய்தார். அமெரிக்காவில் அவர் ஆற்றிய அரும் பணியால் உலகம் முழுவதும் அவர் பெயர் புகழுடன் விளங்கிய நிலையில் அவரது லாகூர் விஜயம் ஸ்வாமி ராமதீர்த்தரை வெகுவாக அவர் பால் ஈர்த்தது. அவர் சந்யாசியாகத் தீர்மானித்தார். தனது இளம் மனைவியையும் மகனையும் துறந்து அவர் சந்யாச ஆஸ்ரமத்தை  1899ஆம் ஆண்டு தீபாவளி தினத்தன்று மேற்கொண்டார்.

சந்யாசி ஆனதால் அவர் ஒரு பொழுதும் காசைக் கையால் தொட்டதே இல்லை. அது மட்டுமல்ல, சந்யாச தர்மத்திற்கு உரிய வகையில் தனக்கென்று பெட்டி, படுக்கை, பொருள்கள் என எதையும் ஒரு போதும் அவர் கையில் கூட எடுத்துக் கொண்டு சென்றதே இல்லை.

அவரது அபாரமான சொற்பொழிவுகள் மக்களைப் பெரிதும் கவர்ந்தன. தேஹ்ரியை ஆண்ட மஹராஜா கீர்த்திஷா பஹாதூர் அவரைத் தன் செலவில் 1902ஆம் ஆண்டு ஜப்பானுக்கு அனுப்பினார்.  ஜப்பானில் தனது சொற்பொழிவுகளால் அனைவரையும் கவர்ந்த அவர், பின்னர் அமெரிக்கா நோக்கிப் பயணமானார். இரு வருடங்கள் கழித்த பின்னர் 1904ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார். அவருக்கு பெருத்த வரவேற்பு காத்திருந்தது. ஏராளமான இடங்களில் அவரைச் சொற்பொழிவாற்ற அனைவரும் அனைத்தனர். சிஷ்யர்களும் பெருகலாயினர்.  1906ஆம் ஆண்டில் நகர்ப்புறத்தில் வாழ்வதைக் குறைத்துக் கொண்ட ஸ்வாமி ராமதீர்த்தர் இமயமலைக் காட்டினுக்குள் சென்றார். அங்கேயே தங்கலானார். நடைமுறை வேதாந்தம் பற்றிய ஒரு அதிகாரபூர்வமான புத்தகத்தை எழுத வேண்டுமென முனைந்தார். ஆனால் அது முடியவில்லை.

கங்கையில் 17-10-1906ஆம் ஆண்டு தீபாவளி தினத்தன்று கங்கையில் குளிக்கச் சென்ற போது சுழல் இவரை இழுக்க, “அம்மா! உன் விருப்பம் அதுவானால் அது சரிதான்!” என்று சொல்லி ஜல சமாதி எய்தினார்.

அவர் பிறந்ததும் தீபாவளி தினத்தன்று; அவர் சந்யாச தர்மம் ஏற்றதும் தீபாவளி தினத்தன்று; ஜல சமாதி எய்தியதும் ஒரு தீபாவளி தினத்தன்று! இது ஒரு அதிசயம் அல்லவா?! முப்பத்திமூன்று வயது ஆவதற்கு ஐந்து நாட்கள் முன்னதாகவே அவர் தன் உடலைத் தானே உகுத்து விட்டார். ஜல சமாதிக்கு முன்னர் அவர் உருது மொழியில் எழுதியிருந்த ஒரு கட்டுரையில் கடைசி பாராவில் அவர் எழுதியிருந்தார் இப்படி:-இந்திரா! ருத்ரா! மருதா! விஷ்ணு! சிவா! கங்கா! பாரத்!

ஓ மரணமே! நிச்சயமாக இந்த உடலை வெடித்துச் சிதறச் செய்! என்னிடம் பயன்படுத்துவதற்கு ஏராளமான உடல்கள் இருக்கின்றன. நான் இந்த தெய்வீக வெள்ளி இழைகளை, சந்திர ஒளிக்கற்றைகளை அணிந்து வாழ்வேன். குன்றில் பாயும் ஓடைகளாக, மலையில் ஓடும் சிற்றோடைகளாக தோற்றம் கொண்டு ஒரு தெய்வீக பாணனாக உலவுவேன். கடலில், அலைகளில் நான் ஆடுவேன். நானே உலவும் தென்றல் காற்று! நானே போதை கொண்ட காற்று! இந்த எனது அனைத்து வடிவங்களும் மாறுகின்ற எனது சஞ்சார வடிவங்கள். நான் அதோ அந்த அங்கிருந்த மலைகளிலிருந்து இறங்கி வந்தேன். இறந்தவர்களை உயிர்ப்பித்தேன். உறங்கியவர்களை விழித்தெழச் செய்தேன்……… இதோ இங்கே போகிறேன். அதோ அங்கே போகிறேன். யாராலும் என்னைக் கண்டுபிடிக்க முடியாது.”

மரணத்திற்கே இப்படி ஒரு செய்தி கொடுத்து அதையே மனித குலத்திற்கான தனது இறுதிச் செய்தியாக மாற்றினார் ராமதீர்த்தர்.

அவர் தனது கருத்துக்களைச் சொற்பொழிவுகள் மூலமும் கவிதைகள் கட்டுரைகள் வாயிலாகவும் கூறினார்; அவர் உவமைக் கதைகளைக் கூறியுள்ளார்; சுவாரசியமான சம்பவங்களையும், புதிர்களையும் விவரித்துள்ளார். தனது கருத்துக்களை பல நோட்புத்தகங்களில் – குறிப்பேடுகளில் – பதிவிட்டுள்ளார். உருது மொழியிலும் அவர் அபார திறமை கொண்டவர். ஆக உருது, பஞ்சாபி, சம்ஸ்கிருதம், ஆங்கிலம் என பன்மொழி வல்லுநராக அவர் திகழ்ந்ததால் அவரது கருத்துக் களஞ்சியம் ஒரு ஆன்மீகச் சுரங்கம் என்றே கூறலாம்.

அவரது வாழ்வில் ஏராளமான சுவையான சம்பவங்கள் உண்டு. என்றாலும் கூட நேரத்தைக் கருதி அவற்றில் சிலவற்றை மட்டும் இப்போது பார்க்கலாம்.

tags– ஸ்வாமி, ராமதீர்த்தர்,