23-11-20 WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH (Post.8964-a)

Chhath Puja in North India

Compiled and Edited BY LONDON SWAMINATHAN (News Editor, Gnanamayam)

Post No. 8964-a

Date uploaded in London – –24 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Namaste , Namaskaram to Everyone

This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.

Read by SUJATHA RENGANATHAN .

XXX

This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at

ONE pm London Time and 6-30 Pm Indian Time Every Monday.

Even if you miss our live broadcast on Mondays, you can always visit us on FACE BOOK.COM – slash- Gnana Mayam 24 hours a day. 

Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’ — Read by SUJATHA RENGANATHAN .

Today 23rd of November is the Birth day of Sri Sathya Sai Baba and his devotees are celebrating his Jayanthi with 24 hour Akhanda Nama Bhajan all over the world. Sai Centres in London also have arranged Akhand Nama Bhajans.

Kartik Purnima Deepa Festival falls on 29th of November and Gnanamayam team extends its warmest greetings to every one. Nook and comer of Tamil Nadu WILL BE  lit with earthen lamps just before the sunset on that day.

Xxx

CHHATH  PUJA NEWS

Thousands of devotees gathered to offer morning prayers to the rising sun on the last day of Chhath Puja on Saturday. Most people across the country stuck to the traditional practice of offering prayers at river banks on the concluding day of the four-day Puja.

Lucknow’s Gomati river front, the Ganga banks in Varanasi and Patna and other places in Mumbai, Delhi and Bhubaneswar were abuzz with devotees despite the Covid-19 restrictions, according to news agency ANI. However, many devotees decided to stay back home to offer ‘arghya’ to the rising sun from temporary water bodies, made specifically for the festival inside their campuses.

Bihar chief minister Nitish Kumar too celebrated the festival at his official residence. He offered ‘arghya’ to the setting sun, a tradition he has been following since he became the Chief Minister 15 years back, Deputy chief minister Renu Devi also performed Chhath at her home town Bettiah.

XXX

PUSHKARAM FESTIVAL IN RIVER TUNGABHADRA

Andhra Pradesh Chief Minister Y.S. Jagan Mohan Reddy performs rituals during the inauguration of the Tungabhadra Pushkaram festival, at Sankal Bagh Pushkar Ghat in Kurnool district, ON Friday

 Tungabhadra Pushkarams got-off to a tumultuous start amid chanting of vedic mantras as Chief Minister Y.S. Jagan Mohan Reddy formally opened the festivities at Sankal Bagh pushkar ghat IN KURNOOL on Friday. On arrival, he offered prayers to River Tungabhadra and gave Ganga Aarathi to the river besides silk saris.

Later, in traditional attire, he participated in a special yagam performed in the newly constructed yagasala near the pushkar

However, the absence of his family members did not go well with the onlookers.

The  12-day river Tungabhadra pushkaram FESTIVAL BEGAN ON  Friday with the entry of Jupiter into ‘Makara Raasi’ The festival, dedicated to the worship of rivers, will be held for 12 days, and is expected to draw devotees from Telangana, Maharashtra and Karnataka.

This year, pilgrims will not be allowed to take a dip in the TUNGABHADRA river, but a row of showers has been installed at all pushkar ghats IN KUNOOL.

XXXX

NEWS FROM KERALA

Sabarimala temple’s daily revenue drops 97% to Rs 10 lakh; temple in acute financial crisis


The Sabarimala Ayyappa temple in Kerala is facing an acute financial crunch owing to Covid-19 as the average daily revenue from pilgrims during the initial days of pilgrimage fell from around Rs 3.5 crore to Rs 10 lakh, forcing the Travancore Devaswo…

Board that manages the temple to desperately seek relaxation in the restriction on the number of pilgrims as well as government’s financial assistance.

At present only 1,000 pilgrims are allowed on weekdays, 2,000 on weekends and holidays and 5,000 on special occasions like Mandala pooja day and Makaravilakku day.

Normally there used to be 50,000 pilgrims daily. It had even gone up to one lakh on some occasions like the first day of pilgrimage.


XXXX

Proposed Jagannath temple in London to get Neem wood from Bhubaneswar

Neem wood from Bhubaneswar will be used for carving the idols of the Trinity to be installed in the proposed Jagannath temple in London. The temple would be constructed on four acre of land by the Jagannath Temple Trust, UK.

At an international webinar to discuss the vision, objectives and roadmap for the temple, the Trust stated that Prof Sanjay Satpathy of Ravenshaw University has expressed willingness to provide the wood for making of the deities Lord Jagannath, Lord Balabhadra, Devi Subhadra and Lord Sudarshan. 

Trustees said construction of the temple has the approval of Puri Shankaracharya Swami Nischalananda Saraswati.

XXXX

NEWS FROM OXFORD UNIVERSITY

Indian-origin student leads Oxford University meat-free campus drive

An Indian-origin student is among a group from the University of Oxford Student Union that is leading a drive towards a meat-free campus as part of wider initiatives to cut the university’s greenhouse emissions.

Vihan Jain from the university’s Worcester College joined two fellow students to draft a motion mandating the Student Union to lobby for a ban on beef and lamb in university catering services, which was recently passed with 31 votes to 9 and 13 abstentions.

The University of Cambridge has banned beef and lamb and reported a 33 per cent reduction in carbon emissions per kilogram of food purchased and a 28 per cent reduction in land use per kilogramme of food purchased. London School of Economics (LSE), Goldsmiths and the University of London are among other UK institutions to ban the sale of beef or lamb in campus outlets in recent years.

XXXXX

HERE IS AN INTERESTING FROM PAKISTAN

1,300-year-old VISHNU Temple was discovered by Pakistani and Italian archaeologists in Northwest Pakistan.

A Hindu temple, estimated to have been constructed around 1,300 years ago, has been unearthed by Pakistani and Italian archaeological experts at a mountain in Swat district of northwest Pakistan.

According to the reports, the archaeologist excavated a Hindu temple at Barikot Ghundai in Northwest Pakistan. Fazle Khaliq of Khyber Pakhtunkhwa Department of Archaeology said that the temple discovered is of God Vishnu.

The temple is estimated to have been built the Hindus 1,300 years ago during the Hindu Shahi period, the archaeologist said.

The Hindu Shahis or Kabul Shahis, a Hindu dynasty which ruled the Kabul Valley (eastern Afghanistan), Gandhara (modern-day Pakistan), and present-day northwestern India from 850-1026 CE may have built the Hindu temple in the region.

XXXX

TAMIL NADU RULING PARTY CLASHES WTH TEMPLE PRIESTS IN TIRUVANNAMALAI: 

The Karthigai Deepam festivities at the popular Arunachaleswarar temple in Tiruvannamalai has begun with the traditional flag hoisting event marking the first day of celebrations, amid the pandemic induced restrictions on Friday.

The 14-day festivities started off with the temple’s flag hoisting ceremony

The premier event of the Deepam festivities, lighting of Maha Deepam is scheduled to be performed on the evening of 29 November at the Annamalaiyar hills. It will be preceded by lighting of Bharani Deepam in the morning.

“Owing to the Covid pandemic situation, the district administration has barred devotees entering into the temple premises on the Maha Deepam day.

Karthigai Deepam festivities in Tiruvannamalai, one of the major events in Tamil Nadu attracting a gathering of more than 10 lakh every year, is this time around being made a low key affair along with pandemic restrictions.

Sources said that the flag hoisting event witnessed ruckus after a local AIADMK leader engaged in a wordy duel with the authorities of HR&CE and Sivachariyars for hoisting the flag as per the time schedule even before the Minister had arrived, despite the fact that he was late to the temple.

XXXXXXXXXXXXXXXX

HELP TO COW SHELTERS

Union government  has readied a scheme under which registered “go shalas” will receive financial assistance

GO SHALAS ARE PROTECTIVE SHELTERS FOR COWS.

Many religious Mutts across India have set up and are running protective shelters for cows and a sum of Rs 900 crore has been set aside under this scheme, 

union finance minister Nirmala Sitharaman  informed 

Sri Vishwaprasanna Tirtha swamiji  of Pejavar Mutt when SWAMIJI MET HER in New Delhi recently.

XXXX

RSS HAS EXPRESSED ITS VIEW ON INERFAITH MARRIAGES.

Interfaith marriages should be registered under the Special Marriages Act so that women have equal rights, including in succession, according to a member of the RSS media team.

“The Rashtriya Swayamsevak Sangh (RSS) is not opposed to interfaith marriages but is against the exploitation of women in the name of marriage. They are forced to convert and lose their rights,” said Ratan Sharda, member of the national media team of the RSS and the author of ‘RSS 360’ on the controversial issue of ‘love jihad’.


XXX

HOW MANY ELEPHANTS SHOULD BE PARADED IN TEMPLE FESTIVALS HAS BECOME A COTROVERSY IN KERALA.

: The District Monitoring Committee for Captive Elephants Management and Maintenance has given conditional permission to parade one elephant during temple rituals. The committee, in its online meeting chaired by ADM Sabu K Isaac, also decided to discourage elaborate festivals in view of the Covid situation in the state.

Meanwhile, the permission given by the collector to parade three elephants at Tripunithura Poornathrayeesa temple for Vrischikotsavam has not been withdrawn.

XXXXX

THAT IS THE END OF ‘AAKAASA DHWANI ’ HINDU NEWS BULLETIN BROADCAST FROM LONDON –

READ BY SUJATHA RENGANATHAN.

TAMIL HINDUS CELEBRATE KARTIK PURNIMA ON  29TH NOVEMBER THIS YEAR.

WISH YOU ALL A VERY HAPPY KARTHIGAI DEEPA FESTIVAL .

Please Wait for our Tamil News Bulletin

Now I pass it on to VAISHNAVI ANAND

tags- hindu news231120

—SUBHAM-

TAMIL WORDS IN ENGLISH – PART 31 (Post No.8963)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8963

Date uploaded in London – –24 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழில் ஆயிரம் ஆங்கிலச் சொற்கள் – Part 31

Words beginning with – S continued…………………………

More S Words

GENERAL RULE

‘S’ BEGINNING WORDS LOSE ‘S’ IN TAMIL AND TAKES THE FORM OF A VOWEL –A, E, U

S.81.SERIOUS- SEERIYA, SREYAS – ஸீரிய , ச்ரேயஸ்

S.82 SOGGY- SOTHA SOTHAPPU சொத சொதப்பு

S.83.SIEVE –SALI. SALLADAI சலி , சல்லடை

LATIN SPELLING COLUM, SLARE

S.84. COLUM–COLARE— SULAGU/MURAM SOLAGU சுளகு , சொளகு /முறம்

S.85.SELECT -SALITHTHEDU,சலித்தெடு /தேர்ந்தெடு

S.86.SON -SUNU IN SKT, SEY IN TAMIL, சுனு , சேய்

S.87.STORM -SUURAIK KAATRU சூரைக் காற்று

S.82.S PLIT– PILA, PIRI பிள, பிரி;  ர=ல

S.83.SP OIL–. AZI அழி

S.84.S URE –URUTHI உறுதியாக

S.85.SE QUOIA– SEMMARAM செம்மரம் (அமெரிக்காவில்)

S.86. SPERM –VITHTHU, VITHAI, VINTHU, வித்து,  விந்து, விதை ப=வ

P =V

S.87.SEED— VITHAI, SEEDAI WHICH IS ROUNDவித்து,  விதை

S.88.SAME— SAMA, ORE, ATHE POLA சம, ஒரே, அதே போல

S.89.SYRINGE–. URINJU உறிஞ்சு

S.90.S WALLOW —VIZUNGU, VILUNGU விழுங்கு

S.91.SEW, SUTURE—- SUTRA/THREAD , THREAD IT சூத்ர/நூல், நூல் போட்டு தை

S.92.S -LOW, SNAG–. SUNANGU, SUNAKKAM சுணக்கம் , சுணங்கு

S.93.SHRINK –SURUNGU சுருங்கு

S.94.SOAP. —SAVUKKAARAM P= V சவுக்காரம்

S.95.S OUL –UYIR. L =R உயிர்

S.96,S OLE —ORE L =R ஒரே

S TEM— THANDU, தண்டு

S.97.SH –EPHERD—- IDAIYAR இடையர்

S.98.SUCCESS –YASAS, SREYAS, யசஸ் /புகழ் /இசை ; ஸ்ரேயஸ்

SS.99.S TR -ANGYER– ANNYAR,SKT அந்நியர்

SS.99.HERDS– SIRATTAI. ODU சிரட்டை, ஓடு

S.100.SPE LEOLOGY –STUDY OF CAVES PHLE BILAM பில இயல் / குகை இயல்

S.101.SERAPIS. –SURABHI IN EGYPT செராபிஸ் /எகிப்து= சுரபி

ALSO SARABAM EIGHT LEGGED சரபம் ; IN EGYPT APIS IS DIVINE BULL; IN  SANSKRIT SURABHI IS DIVINE COW; LIKE VEDAS PRAISED INDRA A BULL, EGYPTIANS CALLED GODS DIVINE BULL; VIRILE LIKE A BULL

S.102.SP EAR –EETTI ஈட்டி

S.104.S TONE —TEL, TALI தளி, டெல் /மத்திய கிழக்கில் , ஸ்தல

S.105.S UNDER—- SEVERE- THUNDI துண்டி

S.106.SPURIOUS—- PUURIYARKAL, TIRUKKURAL பூ ரியர்கள் = போலிகள் ; திருக்குறள் காண்க

S.107.SERENDIPITY /SRILANKA —SEREN OR SIMHALA DWIPA OR SAARANA DWIPA  சாரண தீவு , சிம்ஹள தீவு

S.108.S UDDEN –UDANE உடனே

S.109. SALOM/ PEACE —SAANTHI, SALAAM சாந்தி ,  சலாம்

S.110. SCOFF—- IKAZ /IKAL இகழ் /நிந்தி

S.111.SAUCE –SAAR /SAARAM SAATHTHAMUTHU, RASAM IN SKT, சாறு , சாரம், சாத்தமுது ரஸம்

S.112.SEDIMENT —ADIMAN , ADI VANDAL அடி மண், அடி வண்டல்  ; வ=ம ; மண்டி

S.113.S CENT —-KANTHA GANDHA SMELL; கந்த

S.114.SUCELLUS –CELTIC GOD WITH SUTHTHIYAL, HAMMER சுத்தியல் தெய்வம் -சுசெல்லஸ்

SUCELLUS –SUURIYA SOLAR GODசூரிய

S.115.SIRIUS STAR–. SOTHI IN GREEK, ALSO SURYA, JYOTI, BRIGHT சிரியஸ் = சூரியன் போன்ற , கிரேக்கர்கள் சோதி என்பர்; ஜ்யோதி

S.116.SILK –SILANTHI  NUL; சிலந்தி நூல்

S.117.SNIVEL – SINUNGU சிணுங்கு

S.118.SATURN – SANEESWARA; SANAIS CHARA; SANI சனீஸ்வர , சனைஸ் சர

S119. SCORE  — JODI 10; IRU PATHU ஜோடி பத்து ; இரு பத்து

S.120.SCORCH –  KAAYCHCHU, KAAY கே, காய்ச்சு

SERPENT  – GIVEN ALREADY – ONE MORE DERIVATION-  S+ ARAVU

ARAVU IS SNAKE IN TAM. ஸர்ப்ப = அரவு

TO BE CONTINUED……………………..

tags– tamil words-31

எண் 108-க்கு முக்கியத்துவம் ஏன்? (Post No.8962)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8962

Date uploaded in London – – 24 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

22-11-2020 அன்று லண்டனிலிருந்து இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பான தமிழ் முழக்கம் நிகழ்ச்சியில் இடம் பெற்ற உரை.

FOR VOICE RECORDING OF THIS TALK, PLEASE  GO TO Facebook.com./gnanamayam

எண் 108க்கு முக்கியத்துவம் ஏன்?

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.இன்று நம் முன் இருக்கும் கேள்வி 108 என்ற எண்ணுக்கு ஏன் முக்கியத்துவம் தரப்படுகிறது என்பது தான். பதில் இதோ:

பாரத நாட்டில் 108 என்ற எண்ணுக்கு தனிப் பெருமை இருக்கிறது. இறைத் துதிகள் எல்லாமே பொதுவாக அஷ்டோத்திரங்களாக அதாவது 108 துதிகளாக அமைந்திருக்கின்றன. உபநிடதங்களுள் முக்கியமானவையாக 108 உபநிடதங்களே குறிப்பிடப்படுகின்றன.

வைணவ திவ்ய தேசங்கள் – திருப்பதிகள் – 108 தான்! சக்தி பீடங்களாக இமயம் முதல் குமரி வரை 108 தலங்கள் உள்ளன. கிருஷ்ணனின் தூய அன்புக்குப் பாத்திரமான கோபியர் 108 பேர்களே!

நேபாளத்தில் முக்திநாத்தில் உள்ள புனித தீர்த்தங்களின் எண்ணிக்கையும் 108 தான்! காஷ்மீர் சைவத்தின் படி தத்துவங்கள் 108.

நாட்டிய சாஸ்திரத்தில் உள்ள நாட்டிய அமைப்புகள் 108. சிவ தாண்டவத்தின் சிவனின் தாண்டவ பேதங்கள், கரணங்கள் 108 தான்! நந்திகேஸ்வரர் அமைத்த ‘பரதார்ணவ’ என்ற தாள சாஸ்திரம் 112 தாளங்களைத் தருகிறது என்றாலும் இதை 108 தாள சாஸ்திரம் என்றே குறிப்பிடுகின்றனர். ‘வஸ்து ரத்ன கோஸத்தின்’ படி மங்கலப் பொருள்கள் 108 தான்!

புத்த மதத்திலும் 108 என்ற எண்ணுக்கு அதிக மதிப்பும் மகிமையும் தரப்படுகிறது. ஜப்பானில் உள்ள ஜென் ஆலயங்களில் புத்தாண்டின் வரவை 108 முறை மணியை ஒலித்து வரவேற்கின்றனர்.

புத்த ஆலயங்களை அடைய 108 படிக்கட்டுகள் உள்ளன. இவை மூன்று முப்பத்தாறு படிக்கட்டுகள் கொண்டவையாக அமைக்கப்படுகின்றன! புத்தரின் இடது பாதத்தில் 108 புனிதக் குறிகள் அல்லது லக்ஷணங்கள் இருப்பதாக புத்த நூல்கள் குறிப்பிடுகின்றன.

புத்தரின் உபதேசங்கள் அடங்கிய நூல்களின் தொகுப்பு திபெத்திய புத்த பிரிவினரால் 108 பாகங்களாகத் தொகுத்து KANJUR என அழைக்கப்படுகிறது.

சீக்கிய மதத்தில் 108 மணிகள் அடங்கிய மாலையே உபயோகப்படுத்தப்படுகிறது.

பௌத்தர்களும் ஹிந்துக்களும் 108 மணிகள் அல்லது ருத்ராக்ஷங்கள் கோர்க்கப்பட்ட மாலைகளையே ஜபத்திற்குப் பயன்படுத்துகின்றனர். டாவோ புத்தமதப் பிரிவைச் சேர்ந்தவர்கள் இந்த மாலையை – சு சு (Su-Chu) என்று குறிப்பிடுவதோடு அதை மூன்று முப்பத்தாறு மணிகளாகக் கோர்த்து உபயோகிக்கின்றனர்.

ஜைன மதத்தில் ஐந்து விதமான புனித குணநலன்கள் முறையே 12,8,36,25,27 என்று குறிப்பிடப்படுகிறது. இதைக் கூட்டினால் மொத்தம் 108 குணநலன்கள் ஆகிறது!

 இப்படி 108இன் உபயோகத்தை உரைக்கப்போனால் பெரும் பேருரையாக\ ஆகி விடும். அப்படி இந்த எண்ணுக்கு என்ன மகிமை? ஏன் நூறாகவோ அல்லது வேறு ஒரு எண்ணாகவோ இவை அனைத்தும் இருக்கக் கூடாது?

      நம் முன்னோர்கள் காரணத்தோடு தான்  108 என்ற இந்த அபூர்வ எண்ணை புனிதமான அனைத்துடனும் சம்பந்தப்படுத்தி இருக்கிறார்கள்!

    சூரியனுடைய குறுக்களவு பூமியின் குறுக்களவு போல 108 மடங்கு அதிகம் உள்ளது. ஜோதிட சாஸ்திரப்படி ஒன்பது கிரகங்களும் 12 ராசிகளினூடே சஞ்சரிக்கிறது. பன்னிரெண்டை ஒன்பதால் பெருக்கினால் வருவது 108. ஆகவே இவற்றால் பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்கும் இடையே உள்ள தொடர்பு 108 என்ற எண்ணால் தெளிவாகத் தெரிகிறது. ஆகவே பூரணத்துவத்தைக் குறிக்கும் எண்ணிக்கையாக இந்து மதம் 108ஐக் குறிப்பிடுகிறது.

ஒரு நாளைக்கு நாம் விடும் மூச்சின் எண்ணிக்கை 21600. பகலில் 10800 இரவில் 10800. இதுவும் 108இன் மடங்கு தான்!

 ஒரு நாள் என்பது 60 கதிகளைக் கொண்டது. ஒரு கதி என்பது 60 பலங்களைக் கொண்டது. ஒரு பலம் என்பது 60 விபலங்களைக் கொண்டது. ஆகவே ஒரு நாள் 21600 பகுதிகளைக் கொண்டதாக ஆகிறது. பகல் 10800, இரவு 10800 மொத்தம் 21600 பகுதிகள். இந்த 108 எண்ணிக்கையானது காலம் மற்றும் வெளியை அதாவது Time and Space ஐ – இயற்கையோடு இயைந்த லயத்தின் அடிப்படையில் இயங்க வழி வகுக்கிறது.

   ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த சுவாமி ப்ரேமயானந்தர் இன்னொரு அற்புதத் தொடர்பைச் சுட்டிக் காட்டுகிறார்.

108 என்பது மந்திரங்களை உச்சரிக்க சரியான தெய்வீக எண்ணிக்கை என்பதை வராஹ உபநிடதத்தை மேற்கொள் காட்டி அவர் விளக்குகிறார்.

ஒவ்வொருவரது உடலும் அவரவர் விரலின் பருமனால் , கிடைமட்டமாக வைத்துப் பார்க்கும் போது, சரியாக 96 மடங்கு இருக்கிறது.

  பரம்பொருள் என்னும் பரமாத்மன் ஒருவனின் நாபியிலிருந்து 12 விரல் அளவு மேலே இருக்கிறான். ஆக இந்த 96 மற்றும் 12 எண்களின் கூட்டுத் தொகையான 108 ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணைவ்தைக் குறிக்கிறது!

அதாவது 96 விரல் அளவு உள்ள மனிதன் 12 பாகங்கள் உள்ள பரமாத்மாவுடன் சேர்வதை 108 முறைப்படுத்துகிறது!

   ஆகவே ஆன்மீகப் பெரியோர்கள் இறைவனின் நாமத்தை 108 முறை சொல்லும் போது அது படிப்படியாக உயர்நிலை பெற்று பரமாத்மனுடன் ஒன்றுபடுகிறது என்பதை அனுபவத்தில் உணர்ந்தனர்!

   இதை இன்னொரு முறையாலும் பார்க்க முடியும்! சூரிய மண்டலத்தில் 12 ராசிகள் உள்ளன. அதாவது 12 பகுதிகளாக வான மண்டலம் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த பிரபஞ்சம் என்னும் பரமாத்மனுடன் ஜீவாத்மா ஒன்று படுவதை 108 குறிப்பிடுகிறது.

   ஸ்ரீசத்யசாயிபாபா 108 என்ற எண்ணிக்கை காரணம் இல்லாமல் அமைக்கப்படவில்லை என்று கூறி விட்டு அதற்கான காரணத்தை விளக்குகிறார்.

  மனிதன் ஒரு மணிக்கு 900 முறை சுவாசிக்கிறான். அதாவது பகலில் 10800 முறை சுவாசிக்கிறான். ஒவ்வொரு சுவாசத்தின் போதும் சோஹம் – நான் அவனே – என்று சொல்ல வேண்டும். ஆகவே 216 என்ற எண்ணும் அதில் பாதியான 108 என்ற எண்ணும் மிக முக்கியத்துவம் உடையதாக ஆகிறது. மேலும் அது பனிரெண்டின் ஒன்பது மடங்கு! பனிரெண்டு சூரியனைக் குறிக்கிறது! ஒன்பது பிரம்மத்தைக் குறிக்கிறது!

   அத்தோடு மட்டுமல்ல, ஒன்பதை எதனுடன் பெருக்கினாலும் வரும் எண்ணின் கூட்டுத்தொகை ஒன்பதாகவே இருக்கிறது.

9×8 =72; 7+2=9  இதில் ஏழும் இரண்டும் சேர்ந்தால் வருவது 9.

9 x 7 = 63; 6+3 = 9 .இதில் ஆறையும் மூன்றையும் கூட்டினால் வருவது 9

இதே போல அனைத்தும் ஒன்பதாக ஆகிறது. கடவுளை எதனுடன் பெருக்கினாலும் அதாவது இணைத்தாலும் அது கடவுளாகவே ஆகிறது.

ஆனால் மாயையின் எண் 8. இதோடு எதைப் பெருக்கினாலும் அது குறைகிறது!

2 x 8 = 16 ; 1+6 = 7  . இதில் ஆறையும் ஒன்றையும் கூட்டினால் வருவது 7.எட்டிலிருந்து ஒன்று குறைந்து ஏழாகிறது!

3×8 = 24 2+4 = 6   இதில் இரண்டையும் நான்கையும் கூட்டினால் வருவது 6.

4×8 = 32 3+2=5

இது போல மதிப்பில் குறைந்து கொண்டே போவது தான் மாயையின் சின்னம்!

  தேவர்கள் அமிர்தம் கடைய எடுக்க பாற்கடலைக் கடைந்த காலமும் ஏறக்குறைய 10800 நாட்கள் தாம்! சரியாகச் சொல்லப் போனால் 10748 நாட்கள், 12 மணி, 18 நிமிடங்கள்!

ஸ்ரீயந்திரத்தில் உள்ள மூன்று கோடுகள் வெட்டுவதால் ஏற்படும் புள்ளிகளின் எண்ணிக்கை 54, ஒவ்வொன்றும் ஆண், பெண் – அல்லது சிவம் மற்றும் சக்தியைக் குறிப்பிடும் போது  இரண்டு 54 (2×54) 108 – ஆகிறது. எல்லையற்ற சக்தியை, அருளை அது தருகிறது! உடலில் உள்ள சக்கரங்கள் 108. உடலிலே உள்ள வர்மப் புள்ளிகள் 108. இவற்றால் இறைவன் உணரப்படுகிறான்!

    27 நட்சத்திரங்கள் நான்கு திசைகளினால் பெருக்கப்பட்டால் வருவது 108 என்றும், ஆகாயத்தில் உள்ள 27 நட்சத்திரங்கள் மற்ற நான்கு பூதங்களான நிலம், நீர், தீ, காற்று ஆகியவற்றுடன் தொடர்பு ஏற்படுத்த வருவது 108 என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர்

.

இது பூரணத்துவத்தைக் குறிப்பிடுகிறது.

 கணித இயலில் 108 ஒரு அபூர்வமான எண்!

ஒன்றின் ஒரு மடங்கும், இரண்டின் இரு மடங்கும் மூன்றின் மும்மடங்கும் சேர்ந்தால் வருவது 108 (அதாவது 1 பவர் 1 x 2 பவர் 2x 3 பவர் 3 = 1x4x27 =108.

இதில் ஒன்று என்பது ஒரு பரிமான உண்மையையும், இரண்டின் மடங்கு இரு பரிமாண உண்மைகளையும், மூன்றின் மடங்கு முப்பரிமாண உண்மைகளையும் காட்டுகிறது. அனைத்தும் இணையும் போது வருவதே எல்லாமாகிய மெய்ப்பொருள் ஆகும்! இப்படி 108இன் மகிமையை உபநிடதங்களும், வானவியல் உண்மைகளும், கணித இயலும் வியந்து போற்றுகின்றன!

கரையில் இருந்து ஆராய்ச்சி செய்தால் கடலின் ஆழம் தெரியுமா என்ன என்று கேட்டு ஸ்ரீசத்யசாயிபாபா ‘ஆழ்ந்து மூழ்கத் தயங்கினால் உங்களால் முத்துக்களைப் பெறவே முடியாது’ என்கிறார்.

 ஆகவே 108இன் பெருமையை உணர்ந்தால் மட்டும் போதாது, 108 முறையிலான ஜபமாலை உபயோகம், 108 திவ்ய தேச தரிசனம், 108 சக்தி பீட யாத்திரை உள்ளிட்ட அனைத்தையும் அவரவருக்கு உகந்த முறையில் இயன்ற வரையில் கடைப்பிடித்து மெய்ப்பொருளை அவரவரே உணர்வது தான் ஏற்றம் பெற்று உய்வதற்கான இனிய வழி ஆகும்!

நன்றி, வணக்கம்!

XXXX

OLD ARTICLES ON THE SAME THEME IN THIS BLOG—



Hindu’s Magic Numbers 18, 108, 1008 | Tamil and Vedas

tamilandvedas.com › 2011/11/26 › hindus-magic-num…

  1.  
  2.  

26 Nov 2011 — They used 72,000 nails to fix them. Sathya Sai Baba’s interpretation. Sri Sathya Sai Baba went one step ahead of others in explaining the …



Science | Tamil and Vedas

tamilandvedas.com › category › science

  1.  

2 Feb 2020 — 23 May 2017 – எண் 108க்கு முக்கியத்துவம் ஏன்? (Post No.3933) … Hindu’s Magic Numbers 18, 108, 1008 | Tamil and …

XXXXXX

குரு பகவான் (Post No.8961)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 8961

Date uploaded in London – – 23 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

for Voice Recording of this talk on Gnanamayam, please go to

Facebook.com/gnanamayam

குரு பகவான்

Kattukutty

நவ கிரகங்களில், பெரியவரும், எப்பொழுதும், நல்லதே செய்பவரும்,

பெரிய ஞானியும்,ஆன குருவை வணங்கி ஆரம்பிக்கிறேன்.

பிரும்மா தனது படைப்புத்தொழிலைச் செய்ய தன் உதவிக்கு

9 பிரஜாபதிகளை நியமித்தார்.நவ பிரஜாபதிகள் எனப்படும் இவர்கள்

பிரும்மாவின், “மானஸ புத்திரர்கள்” எனப் படுவார்கள்.இவர்களில் மிகச் சிறந்தவரும் தபஸ்வியுமானவர் “ஆங்கிரஸர்” என்ற முனிவர்!!!

இவருக்கும் வசுதா என்ற இவரது மனைவிக்கும் பிறந்தவர் தான்

குரு பகவான். 64 கலைகளையும், நான்கு வேதங்களையும் கற்று கரை

கண்ட அவர் காசி சென்று 10,000 தேவ வருடங்கள் தவம் புரிந்தார்.

இவருடைய தவத்தை மெச்சி சிவ பெருமானே நேரில் காட்சி

தந்து, ‘நீ நித்ய ஜீவனாகி, இந்திரனுக்கு, குருவாகி, தேவர்களுக்கு

உதவி செய்வாய்’ என்று அருளினார்!

பிரும்மாவிற்கும் பிடித்தவனாகி,இவர்ஆலோசனைப்படி தேவர்கள்

நடந்து சிறப்பாக வாழ்ந்தனர்

குரு என்றால் என்ன அர்த்தம்???

கு – என்றால் இருள் என்று அர்த்தம்.

ரு -நீக்குவது எனப்பொருள் . இவர்அறியாமை, வறுமை, போன்ற

இருளை நீக்கி கல்வி செல்வம் , ஒழுக்கம் என்ற மூன்றையும்

கொடுக்கின்றார்.ஆகையினால் குரு பார்க்க கோடி குற்றம் நீங்கும்

என்ற பழமொழியும் உண்டு!!!

இவரைப்பற்றிய விவரங்கள்

இவர், நீண்ட நெடிய உருவத்தினர்.பொன்னிறமானவர்.

மஞ்சள் பட்டுடுத்தி புஷ்பராக மாலையையும், முல்லைப் பூவையும்

அணிந்தவர்.மந்தகாச புன்னகையுடன் எப்போதும் இருப்பவர்.

ஒரு கரத்தில் தண்டத்தையும், இரண்டாவது கரத்தில் கமண்டலத்தையும்,மூன்றாவதுகரத்தில்அட்சமாலையையும்,

நான்காவது கரம் அபயஹஸ்தத்துடனும் இருப்பவர்.இவரை

வைணவர்கள்,ஹயக்ரீவராகவும, சைவர்கள் தட்சிணாமூர்த்தியாகவும்

வழிபடுவதுண்டு.

புத்திர காரகனாகவும், ஜீவன காரகனாகவும் உள்ள இவர் மானிடர்

பிறக்கும் ஜாதகத்தில் குரு லக்னம், 5 அல்லது, 9 ல் இருந்தால்

போதும், அவர்கள மேதைகளாகவும்,ஞானிகளாகவும், ஆகிறார்கள்.

மற்றவர்களால் வணங்கப் படுவார்கள். மேலும் குருதிசை இளமையில்

வந்தால், கல்வியில் முதல் நிலையும், நடுவயதில் வந்தால் சகல

சௌபாக்கியங்களையம்,இறுதில் வந்தால்,செழிப்பான சந்ததிகளையும்,அந்தப்பகுக்குத்தலைவனாகும் தகுதியையும்

தருவார்!!!

இவரது வேறு பெயர்கள்

குரு, அந்தணன், அமைச்சன்,அரசன், ஆசான்,ஆண்டளப்பான்,

சிகண்டீசன், சீவன், சுரகுரு,தாராதிபதி, தெய்வ மந்திரி,நற்கோள்,

பிருஹஸ்பதி, பீதகன், பொன்னன்,மறையோன் வேதன்.

திரைலோக்கி, அல்லது ஏம நல்லூர்,என்ற இடத்தில், குரு பகவான்,

விரதம் இருந்து திரைலோக்கி அகிலாண்டேஸ்வரி அம்மனையும்,

சுந்தரேஸவர்ரையும், மல்லைப்பூவால் வழிபட்டு, தயிர்சாதம்

நிவேதனம் செய்து வழிபட்டார்,சிவ பெருயானே, ரிஷப வாஹனத்தில்

தரிசனம் கொடுத்து “ இப்பூவுலகில் வாழ்பவர்கள் திருமணம் செய்ய நல்ல காரியங்கள நடக்கவும் நீ காரணமாக இருப்பாயாக!!! என்று வரம் கொடுத்தார்.மன்மதனுக்கு உயிர் கொடுத்து ரதியுடன் சேர்த்து வைத்த இடமும் இதுவே!!! அன்று முதல் இப் பூவுலகில் யாரும்

திருமண வேளை வந்துவிட்டதா என்று  கேட்பதில்லை.

குரு பார்வை வந்து விட்டதா என்றே கேட்கிறார்கள்.

விஞ்ஞான விவரங்கள்

சூரியனிடமிருந்து வியாழன் என்ற குரு இருக்கும் தூரம் –

77கோடியே 83 லட்சத்து, 30 ஆயிரம் மைல்கள்

பூமியிலிருந்து தூரம்- 68, கோடியே,83 லட்சம் மைல்கள்

பூமிக்கு ஒரு சந்திரன் போல்  வியாழனுக்கு மொத்தம் – 16 சந்திரன்கள்

தன்னைத்தானே சுற்றிக்கொள்ள -10 மணி நேரமே ஆகிறது.

சூரியனைச் சுற்றி வர – 11 ஆண்டுகளும், 86 நாட்களும்

வியாழன் சூரியனின் வெப்பத்தை 51% எடுத்துக் கொள்கிறது !!!

வியாழன் பூமியை விட 318 மடங்கு பெரியது !!!

வியாழன் என்ற குருவைப் பற்றிய மற்ற விவரங்கள்

மனைவி. தாரை

மகன்கள். பரத்வாஜன், எம கண்டன், கசன்.

நிறம் – பொன்னிறம்

வஸ்திரம் மஞ்சள் பட்டு

ஜாதி – அந்தணர்

லிங்கம் – ஆண்

குணம் – சத்துவம்

உத்தியோகம் – மந்திரி

அதி தேவதை – இந்திரன்

ப்ரத்யதி தேவதை – பிரும்மா

திசை – வட கிழக்கு

பூதம் – ஆகாயம்

மொழி – ஸம்ஸ்கிருதம்

உடல் ஆதிக்கம்- சதை

அவஸ்தை யௌவனம்

அட்சரம்- ஒ

தேசம் – சிந்து தேசம்

வாகனம் – யானை

இஷ்ட காலம் – அதி காலை

ஸ்வபாவம் – ஸௌம்யம்

பிணி – வாதம்

ஆதி பத்யம் –  புத்திர காரகன்

பிறந்த தேசம் – அவந்தி

பிறந்த நட்சத்திரம் – அவிட்டம்

கோத்திரம் – ஆங்கிரச கோத்திரம்

உச்சம். கடகம்

நீசம் – மகரம்

சொந்த வீடுகள். தனுசு, மீனம்

பாரவை –  லக்னம், 5 7. 9.

நண்பர்கள் – சூரியன், சந்திரன், செவ்வாய்

விரோதிகள் –  புதன், சுக்கிரன்

சமம் –  சனி

குரு திசை – 16 வருடம்

நட்சத்திரங்கள். புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

தானியம் –  கொண்டக்கடலை என்ற மூக்குக் கடலை

நிவேதனம்-  தயிர் சாதம்

சமித்து – அரசு

மிருகம் – மான்

பறவை – கௌதாரி

புஷ்பம் – முல்லை

ரத்தினம் – புஷ்ப ராகம்

உலோகம் – தங்கம்

ஆசனம் – நீண்ட சதுரம்

இயற்கை –  சுபர்

தைலம் – பசு நெய்

ஸ்தலங்கள்  – திருச்செந்தூர், ஆலங்குடி, திட்டை

மதுரை அருகில் உள்ள குருவித்துறை

திருவலி தாயம் ( பாடி),

பரிகாரம் –  கொண்டக்கடலை சுண்டல் பசு நெய்,

தயிர் சாதம் ஆலங்குடி கோவிலில் 24 நெய் விளக்கேற்றி, 24 முறை பிரதட்சிணம்.

குரு காயத்ரி –  ஓம் குரு தேவாய வித்மஹே பரம குருப்யோ

தீமஹி தன்னோ குரு ப்ரசோதயாத்

குரு ஸ்லோகம். தேவானாம்ச்ச ரிஷினாம்ச்ச குரும் காஞ்சன

சன்னிபம் புத்தி பூதம் த்ரிலோகேசம்

தம் நமாமி ப்ருஹஸ்பதிம்!!!!

ரிக் வேதத்தில் குரு பகவானைப் பற்றிய வருணனை

குரு அக்னியைப் போல் சிவந்த அழகிய உருவம் படைத்தவர்.

பரிசுத்தமானவர். அவர் 7 வாய்களையும், மெல்லிய நாக்கையும்,

100 இறக்கைகளையும் உடையவர். கையில் இரும்பு கோடரியும்

உடையவர். “விஸ்வ ரூபா” என்னும் பசுவின் மீது ஆரோகணித்து

வருபவர் –  என இப்படி ரிக் வேதம் வருணிக்கிறது.

மகா மகம் – குரு ஒரு முறை சூரியனை சுற்றிவர 12 வருடங்கள் ஆகும்.அப்படி வரும்போது சிம்மத்தில் குரு மக நட்சத்திரத்தில்

வரும் காலத்தை “மகா மக காலம்” என்று சொல்லுவார்கள். அப்பொழுது உலகத்தில் ஆன்மீக மறுமலர்ச்சி உண்டாகும் .

அப்போது கும்ப கோணத்தில் உள்ள மகாமக குளத்தில் சகல

நதிகளும் இறங்கும்.அப்போது அந்தக் காலத்தில் அக்குளத்தில்

குளித்தால் சகல பாபங்களும், தோஷங்களும் விலகும். அந்தக்

காலத்தில் சுப காரியங்கள் நடத்தக் கூடாது.

குருவை வணங்கினால், குரு ஜாதகத்தில் நல்ல நிலைமையில்

இருந்தால் கிடைக்கும் நற்பலன்கள் :-

மந்திரி அல்லது அதற்கு சம மான பதவி,களங்கமற்ற களையான

முகம்,ஞானத்தை உணரும் தன்மை,சன்யாசி ஆகும் பாக்கியம்,

யானை மேல் போகும் கஜ கேசரி யோகம், விவேகம், வித்தைகளில்

வல்லுனத்தன்மை, சிம்மக் குரல், அனைவரையும் பணிய வைக்கும்

ஆற்றல்.

இதைக் கேட்ட அனைவரும் குருவை வணங்கி, கல்வி, நல்ல பதவி , பொன் பொருட்களையும் பெற்று பெரு வாழ்வு வாழ இறைவனை

வேண்டிக்கொண்டு விடை பெறுகிறேன்.

நன்றி வணக்கம்…….

tags – குரு பகவான், பிருஹஸ்பதி, jupiter 

****

ஆலயம் அறிவோம்! திருச்செந்தூர் (Post No.8960)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 8960

Date uploaded in London – –23 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

23-11-2020 திங்கள்கிழமையன்று லண்டனிலிருந்து இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பப்பட்ட ஆலயம் அறிவோம் உரை.

ஆலயம் அறிவோம்!

வழங்குவது பிரஹன்நாயகி சத்ய நாராயணன்.

வெற்றிவேல் முருகனுக்கு ஹரோஹரா

திருச்செந்தூர் வேலனுக்கு ஹரஹரோஹரா

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறும் தலம் அறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடாக அமையும் திருச்செந்தூர் ஆகும்.தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இந்தத் தலம் சென்னையிலிருந்து சுமார் 600 கிலோமீட்டர் தூரத்திலும் திருநெல்வேலியிலிருந்து 55 கிலோமீட்டர் தூரத்திலும் மதுரையிலிருந்து 182 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது.

‘கயிலை மலை அனைய செந்திற் பதி வாழ்வே’ என அருணகிரிநாதர் திருப்புகழில் குறிப்பிடுவதால், இது கயிலை மலைக்கு நிகர் என்பதை அறிகிறோம். திருச்செந்தூரில் அருணகிரிநாதர் பாடி அருளிய, தித்திக்கும் 83 திருப்புகழ்ப் பாடல்கள், இந்தத் தலம் பற்றிய அரிய செய்திகளைத் தருகின்றன.

சங்க இலக்கியத்தில் திருமுருகாற்றுப்படை, புற நானூறு, அகநானூறு,தொல்காப்பியம், சிலப்பதிகாரம் உள்ளிட்ட நூல்களில் இந்தத் தலம் குறிப்பிடப்படுவதால், இது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அடியார்களால் வழிபடப்பட்டு வந்த தலம் என்பது தெரிகிறது.

ஆறுபடை வீடுகளில் இந்தத் திருத்தலம் ஒன்று மட்டுமே கடற்கரைத் தலமாக அமைகிறது. மற்ற தலங்கள் குன்றின் மேல் முருகன் குடியிருந்து அருளும் தலங்களாகும்.

இதைப் பற்றிய புராண வரலாறு பிரமிக்க வைக்கும் ஒன்று.

தேவர்களைக் கொடுமைப் படுத்தி வந்தான் சூரபத்மன் என்னும் கொடிய அசுரன். அவனை அழிக்கும்படி தேவர்கள் சிவபிரானிடம் முறையிட அவர் அருள் கொண்டு தன் நெற்றிக் கண்ணைத் திறந்து ஆறு பொறிகளை உருவாக்கினார். அந்த ஆறு பொறிகளே முருகன் திருவடிவமாயிற்று, சிவபிரான் சூரபத்மனை அழிக்க உத்தரவிட, அதையேற்ற முருகப்பிரான் இத்தலத்திற்கு வந்தார். அப்போது இங்கு வியாழ பகவான் தவமிருந்தார்.

அவரிடமிருந்து சூரபத்மனைப் பற்றிய அனைத்தையும் அறிந்து கொண்ட முருகப்பிரான், தனது சேனாபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் சென்று அவனைப் பணியச் செய்ய தூதனுப்பினார். கொடிய அசுரனான அவன் கேட்கவில்லை. உடனடியாக, அவன் பல்வேறு அண்டங்களில் வைத்திருந்த படைகளையும், அவனையும் அழித்து தேவர்களின் குறையைத் தீர்த்தார் முருகன்.

வியாழ பகவான் அவரை இத்திருத்தலத்தில் எழுந்தருளுமாறு வேண்ட, முருகன் செந்தில் பதி உறை செந்தில் ஆண்டவனாக இங்கு எழுந்தருளி  பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

இங்கு மூலவர் பாலசுப்பிரமணியன்.

ஆதி சங்கரர் சிறிது காலம் இங்கு தங்கி இருந்து, புஜங்க ஸ்தோத்திரம் பாடி அருளியுள்ளார். மஹரிஷிகள் சுகர், அகத்தியர் உள்ளிட்ட ஏராளமான ரிஷிகள் வழிபட்ட தலம் இது.

சூரபத்மனை வதம் செய்த சுப்ரமண்யர், தம்மைச் சூழ்ந்து நின்ற பரிவாரங்களுக்கு, தன் பன்னிரு கரங்களால், விபூதி பிரஸாதம் கொடுத்து அருளினார். பகவானின் பன்னிரு கரங்களின் ஸ்தானத்தைப் பன்னீர் இலை பெற்று, இன்று திருச்செந்தூர் இலை விபூதி என்று, பக்தர்களின் கையில் தெய்வ பிரசாதமாகக் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்தத் தலத்தில் கடல் ஸ்நானமும், நாழிக் கிணறு ஸ்நானமும் செய்வது மரபு.

மஹாபாரதம் தரும் அதிசயச் செய்தி முருகனைப் பற்றி ஒன்று உண்டு.

Cause and Effect எனப்படும் காரண காரியம் என்பதில் ஒரு செயலைச் செய்த பின்னரே, அதனால் ஏற்படும் விளைவு ஏற்படும். மற்ற தேவர்கள் போர்களுக்குச் செல்லும் போது ஜெய தேவதை அவர்களுக்குப் பின்னால் செல்லும். ஆனால் முருகன் போரிடச் சென்ற போது ஜெய தேவதை முருகனுக்கு முன்னால் சென்றது; வெற்றியை போரிடும் செயலுக்கு முன்பேயே, விளைவாக உறுதி செய்தது.

முருகன் இருக்கும் இடம் எங்கும் வெற்றி, எதிலும் வெற்றி என்பதாலேயே, வெற்றி வேலனைக் கொண்டாடி, அனைவராலும் வெற்றி பெற முடிகிறது.

கிழக்குப் பக்கம் கடல் அமைந்துள்ள படியால் திருச்செந்தூரில் முருகன் கிழக்குப் பார்த்து இருக்க, ராஜ கோபுரம் மேற்குப் புறத்தில் உள்ளது.

சீரலைவாய் என்று சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் இந்தத் தலத்திற்கு, ஜெயந்தி நகரம், செந்திலாபுரி, திருச்செந்தூர் என பல பெயர்கள் உண்டு.

விழிக்குத் துணை திரு மென் மலர்ப் பாதங்கள்

மெய்ம்மை குன்றா மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்

முன்பு செய்த பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும்

பயந்த தனி வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே

என அருணகிரிநாதர் சுருக்கமாக முருகனின் அருள் பெறும் வழியை உரைக்கிறார்.

     காலம் காலமாக கோடானு கோடி பக்தர்கள் பயபக்தியுடன் வணங்கி வரும் திருச்செந்தூர் செந்திலாண்டவன் அனைவருக்கும் சர்வ மங்களத்தை தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.   

தோகை மேல் உலவும் கந்தன் சுடர்க் கரத்திருக்கும்

வெற்றி வாகையே சுமக்கும் வேலை

வணங்குவதே எமக்கு வேலை!       

           நன்றி. வணக்கம்.

tags- ஆலயம் அறிவோம், திருச்செந்தூர்,

அறிவியல் வியக்கும் ஸ்ரீ சத்ய சாயிபாபா! (Post No.8959)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8959

Date uploaded in London – – 23 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஸ்ரீ சத்ய சாயிபாபா – அவதார தினம் 23-11-1926 சமாதி: 24-4-2011

அவதார தினத்தில் அவரைப் போற்றி வணங்குவோமாக!

அறிவியல் வியக்கும் ஸ்ரீ சத்ய சாயிபாபா!

ச.நாகராஜன்

1

ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் அன்றாட அருள் லீலைகள் அறிவியலை வியக்க வைப்பவை. ஏராளமான விஞ்ஞானிகள் அவரை தரிசித்துள்ளனர். அவரது லீலைகளை அவர்கள் நேரில் பார்த்து அனுபவித்து உணர்ந்து பிரமித்துள்ளனர்.

பல விஞ்ஞானிகள் தங்கள் அனுபவங்களைப் புத்தகங்களாக வெளியிட்டுள்ளனர். ஆயிரக் கணக்கில் கட்டுரைகளும் உலகெங்குமுள்ள பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன.

அறிவியல் அறிஞர்கள் ஒரு புறம் இருக்க இதர துறைகளைச் சார்ந்த நிபுணர்களும் அவரை சமீபத்தில் நெருக்கமாகக் கண்டு அவரது லீலைகளைக் கண்டு அனுபவித்துள்ளனர். சாமானிய மக்களோ எனில், கேட்கவே வேண்டாம்.

சில லீலைகளை இங்கு படித்து மகிழலாம்!

2

ஒரு பக்தர். அவர் ஒரு முறை பாபாவை ‘உயிருள்ள ஒன்றை’ சிருஷ்டித்துக் காட்டுமாறு வேண்டினார்.

பாபா உடனே ஒரு குட்டிக் குரங்கை அவர் முன்னாலேயே சிருஷ்டித்தார்.

அது மட்டுமல்ல; அவர் பையில் வைத்திருந்த ஒரு வாழைப்பழத்தை எடுத்து அந்தக் குரங்குக்குத் தருமாறு கூறினார். அவரும் அப்படியே வாழைப்பழத்தைக் குரங்குக்குக் கொடுக்க அது மகிழ்ச்சியிடன் அதை உண்டது! பக்தர், அது தனக்கு வேண்டாம் என்றும் அதை பாபாவே திருப்பி அனுப்பி விடலாம் என்று கூறினார்.

பாபா குரங்கை அழைத்து அதைத் தன் கையில் வைத்துக் கொண்டார்.

பூ! குரங்கைக் காணோம்!

3

டர்பனில் வாழ்ந்து வந்த பக்தர் கார்டன் செட்டி! (Gordon Chetty – Durban).பஜனைக்கு வரும் பக்தர்களை அழைத்து வருவதும் அவர்களை பஜனை முடிந்த பின்னர் திருப்பிக் கொண்டு போய் விடுவதும் அவர் மனமுவந்து செய்து வந்த சேவைகளில் ஒன்று.

அவரது ஸ்டேஷன்வாகன் வாகனத்தில் பெட்ரோல் தானாகவே அவ்வப்பொழுது நிரம்பிக் கொள்ளும். அத்துடன் மட்டுமல்ல, அது பெட்ரோல் டாங்கிலிருந்து நிரம்பிக்  கீழே வழிய வேறு ஆரம்பிக்கும்.

அக்கம்பக்கத்தில் வாழும் அண்டை அயலார் ஓடி வந்து அதை தங்கள் கேன்களில் நிரப்பிக் கொள்வர்.

உயிர் பிழைத்து மீண்டு வந்த ராதாகிருஷ்ணன் என்ற பக்தரைப் பற்றி சாயி பக்தர்கள் அனைவரும் அறிவர். ஒரு முறை அவர் பகவான் பாபாவுடன் காரில் சென்று கொண்டிருந்த போது காரில் பெட்ரோல் தீர்ந்து போனது. அருகில் எங்கும் பெட்ரோல் பங்க் இல்லை. பாபா டிரைவரை அழைத்து அருகிலுள்ள குளத்திற்குச் சென்று கொஞ்சம் தண்ணீரை எடுத்து வரச் சொன்னார்.

தண்ணீர் வந்தது. பாபா அதைத் தன் கையால் தொட்டார். அதை டாங்கில் நிரப்பச் சொன்னார்.

“இப்போது போகலாம், காரை எடு” என்றார் பாபா!

ஓ! கார் கிளம்பியது, அது தான் பெட்ரோல் நிரப்பி ஆயிற்றே! ஓட வேண்டியது தானே!!

4

இரண்டு அமெரிக்கர்கள் புட்டபர்த்தி வந்தனர். நீண்ட நெடும் விமானப் பயணம். பங்களூரிலிருந்து காரில் பயணம் வேறு. தங்கள் அறைகளில் நுழைந்த அவர்கள் ரிலாக்ஸ் செய்து கொள்ள மது பாட்டில்களைத் திறந்தனர்.

சியர்ஸ்!

ஆனால் என்ன ஒரு கோளாறு! மது பாட்டிலிலிருந்து வந்த திரவம் தண்ணீர் சுவையுடன் இருந்தது. அடுத்த பாட்டிலை திறந்தனர். அதுவும் தண்ணீர் போலவே இருந்தது.

அதற்குள் தரிசனத்திற்கான நேரம் வரவே அவர்கள் உடனடியாக தரிசனத்திற்கான கியூவில் சென்று சேர்ந்தனர். அவர்கள் அதிர்ஷ்டம் அவர்கள் உட்கார முன் வரிசை கிடைத்தது.

பாபா வந்தார். முதலில் பெண்கள் அமர்ந்திருந்த இடத்திற்குச் சென்று தரிசனம் தந்தார்.

பின்னர் ஆண்கள் அமர்ந்திருந்த பக்கம் வந்தவர் நேராக அந்த இரு அமெரிக்கர்க்ள் உட்கார்ந்திருந்த இடத்திற்குச் சென்றார்.

கண்களைச் சிமிட்டியவாறே அவர்களைப் பார்த்து, “சியர்ஸ்” என்றார்! அங்கிருந்து நகர்ந்தார்.

இயேசு கிறிஸ்து தண்ணீரை ஒய்னாக ஆக்கினார்!

ஆனால் இந்த பாபாவோ ஒயினை தண்ணீராக மாற்றினார்!!

5

பாபா மனிதனையே “பேக்ஸில்” அனுப்பிய சம்பவம் அறிவியல் அறிஞர்களின் கற்பனைக்கும் அப்பாற்பட்ட ஒன்று.

ஆஸ்திரேலியாவிலிருது வந்த பக்தர் குழாம் ஒன்றை இண்டர்வியூவிற்காக அழைத்தார் பாபா. அங்கு என்ன நடந்தது என்பதை அனில்குமார் மல்ஹோத்ரா தனது புத்தகத்தில் விரிவாக விளக்கியுள்ளார்.

நடந்தது இது தான்!

ஆஸ்திரேலியாவிலிருந்து வந்தவர்களுள் ஒரு இளைஞரும் இருந்தார். அவர் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை. அவர் ஆஸ்திரேலியாவில் உள்ள தன் வீட்டிற்குப் போகத் துடித்தார்.

பாபா குழுவினரை அங்கிருந்த சுவரைப் பார்க்கச் சொன்னார்.

அதில் வீடியோ காட்சியில் வருவது போல ஆஸ்திரேலியா மேப் தோன்றியது. பிறகு அந்த இளைஞரின் நகரம் தோன்றியது; பின்னர் அவர் வாழும் தெரு, பின்னர் அவரது வீடு தோன்றியது.

அந்த இளைஞரைப் பார்த்து, “உள்ளே போ” என்றார் பாபா. அந்த இளைஞரும் உள்ளே சென்றார்.

ஆஸ்திரேலிய குழுவினர் இண்டர்நேஷனல் கால் சென்டருக்கு விரைந்தனர். தங்கள் நண்பர் வீட்டிற்கு போனில் தொடர்பு கொண்டனர்.

நண்பர் தான் பேசினார்.”பத்திரமாக வந்து சேர்ந்து விட்டேன்” என்றார் அவர்.

6

இயற்கையை மீறியவர் பாபா – இயற்கையைப் படைத்தவன் நானே என்பார் அவர்.

என்றாலும் சொல்லால் சொல்வது வேறு; செயலால் அனுபவமாக அதை உணர்ந்து அனுபவிப்பது வேறு, இல்லையா!

நூற்றுக் கணக்கில் இப்படி அழகுற பதிவு செய்யப்பட்ட சம்பவங்கள் உள்ளன.

இந்த கட்டுரையில் மேலே கொடுக்கப்பட்ட சம்பவங்கள், Dr. Hiramalini Seshadri எழுதிய GOD – IN OUR MIST என்ற புத்தகத்தில் Avatar- The Magnet என்ற அத்தியாயத்தில் தரப்பட்டுள்ள சம்பவங்கள்!

அவதார புருஷரான பகவான் பாபாவை இந்த பிறந்த நாளில் போற்றி வணங்குகிறோம்!

****

GOD – IN OUR MIST – மூன்றாம் பதிப்பு – திருத்தி வெளியிடப்பட்ட ஆண்டு 2003 நன்றி: திருமதி டாக்டர் ஹீராமாலினி சேஷாத்ரி.

tags– அறிவியல் , சத்ய சாயிபாபா

PLEASE JOIN US TODAY– MONDAY 23-11-2020

PLEASE JOIN US TODAY– MONDAY 23-11-2020

TODAY’S MENU ON GNANA MAYAM BROADCAST

WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH BY SUJATHA RENGANATHAN

WORLD HINDU NEWS ROUND UP IN TAMIL BY VAISHNAVI ANAND

DR R NAGASWAMY ON U VE SAMINATHA AIYAR

CHENNAI KTTUKUTY SRINIVASAN ON GURU BHAGAVAN- PLANET JUPITER

MRS BRHANNAYAKI ON TIRUCHENDUR SHRINE

XX

EVERY SUNDAY FOR TAMIL

EVERY MONDAY FOR HINDUISM

XXX

SAME TIME 1 PM LONDON TIME;

6-30 PM INDIAN TIME

XXX

WHERE ?  AT FACEBOOK.COM/GNANAMAYAM

Facebook.com/gnanamayam

XXX

V R HERE EVERY SUNDAY, EVERY MONDAY; PLEASE JOIN US LIVE

IF U MISS OUR LIVE BROADCAST, VISIT OUR SITE AFTER ONE OR TWO HOURS ON THHE SAME DAY, U CAN WATCH US.

SAME PLACE, SAME TIME  EVERY SUNDAY, EVERY MONDAY

THANKS FOR UR GREAT SUPPORT; LAST WEEK 1000 HITS IN FEW HOURS!!!

–SUBHAM–

TAMIL WORDS IN ENGLISH – PART 30 (Post No.8958)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8958

Date uploaded in London – –22 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

S.41.SQUARE—SATHURA, சதுர

S.42.S-WEAT –VIYARVAI வியர்வை

S.43.SUI– SWA, SONTHA ஸ்வ , சொந்த

S.44.S- UPER ,–UUPAR, UYARA, UPPARIKAI, உபரி , ஊபர் /ஹிந்தி உயர , உப்பரிகை

S.45.S UBTERRANEAN —ATHARA, ATHALA, THARAIKKUK KIZ    அ தர, சப் டெர்ரெனிய ன்=தரைக்கு க் கிழே ஆதார, அதர அதல

S.46.SYBARITE –AADAMBARA ஆடம்பர, KUBERA PURI,குபேர புரி

SYBARIT – ANCIENT GREEK TOWN IN SOUTHERN ITALY WITH LUCURYAND PLEASURE

S.47.SHAWL- சால்வை

S.48.SORROW- சோர்வு, சோகம் 

S.49.SYN, SYNTHESIS –SERU INAI சேர் , இணை

S.50.SUCCUBUS,CONCUBINE. SAKKALTHI சக்களத்தி

S.51.SALACIOUS PLACE –SALLAABAM சல்லாப வேலைகள்

S.52.SAY, SAID– SEPPU செப்பு

S.53.SONE.— சப்த,, த்வனி, போன் , சங்கத்வனி  SABDADWWANI PHONEY, DWANI TONE

.SANGADWAN

S.54. S -PEECH –PECHUI பேச்சு

S.55.S—TRATA, –STREET /THERU தெரு

S.56.SACK –SAKKU சாக்கு

S.57.SUGARCANDY– KARKANTU கற்கண்டு

S.58.SANGUINARY –SE NG KURUTHIசெங் குருதி

S.59.SLVER– VELLI, MIRRORED  வெள்ளி (எஸ் – வெள் /ர்)

S.60.SUBURB– UPA PURA. உப புர

S.61.SHIRT SATTAI SAREERA AADAIசட்டை

S.62.SHORT, –SIRIYA சிறிய கால் சட்டை

S.63.SOHAM/ —UPANISHAD– SO AM I ஸோஹம் == ச அஹம் — அவன் நானே

S.64. S MELL –MANAKKUM மணக்கும் சரித்திரம்

S.65.STORY –SARITHRAM சரித்திரம்

S.66.SILK –SILU SILU PU- சிலு சிலுப்பு

S.67.SAINT –SADHU, SANTH, சாது, சந்த்

S.68.SILENCE –SIVANEE ENA IRU சிவனே என்று கிட

S.69.SURROUND INGS- SUTRP PURA– சுற்றுப்புற

S.70.STABILITY, STABLE-STHIRAMAANA, STHIRA=URUTHI ஸ்திர மான ==உறுதி

S.71.SURRENDER – SARANAAGATHI சரணாகதி

S.72. SACRED – SUKRUTHA = SOCRATES,சுக்ருத – சாக்ரடீஎஸ்

S.73.SWAN – ANNA அன்ன

S.74.S CHIELD / SHIELD/ SCYLDING/ SJOLD/NORDIC LANGUAGES – KETAYA கேடயம்

S.75.SOGHUM –  SOLAM சோளம்

S.76.S PONGE – PANJU பஞ்சு  போல

S.77.SUPPER- SAAPPAAD/Uசாப்பாடு

S.78.SICK – SEEKKU சீக்கு

S.79.SE-PARATE – PIRI பிரி

S.80.S-OAR – UYAR, UYARAP POஉயர போ

TO BE CONTINUED…..

tags-  Tamil words-30

அழகு என்பது என்ன? (Post No.8957)

WRITTEN BY S NAGARAJAN                                    

Post No. 8957

Date uploaded in London – – 22 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

ச.நாகராஜன்

அழகு என்பது என்ன? அதை எப்படி சூக்ஷ்மமாக விவரிப்பது?

‘ரமணீயதாம்’ என்பது அழகைக் குறிக்கும் சொல்!

எது க்ஷணத்திற்கு க்ஷணம் புதியதைக் காட்டி சோபிக்கிறதோ அந்த உருவமே அழகின் உருவம்!

க்ஷணே க்ஷணே யத் நவதாம் உபைதி தத் ஏவ ரூபம் ரமணீயதாயா:

                                                    சிசுபால வதம் 4-17

That is beauty which every moment strikes a new pleasing form.

“A thing of beauty is a joy forever; its loveliness increases” said the poet; its loveliness changes producing new pleasant sensations every time  a sense organ dwells on it.                   

English description by Sri N.V.Nayudu

***

அழகியின் குண லக்ஷணங்கள் யாவை?

தாக்ஷிண்யம் விரூபாமபி ஸ்த்ரியம் பூஷயார்த,

சுரூபாமபி அதாக்ஷிண்யம் தூஷயந்தி |

பார்க்க அழகாய் இல்லையென்றாலும் கூட, நளினம், உபசரிக்கும் பண்பு, மென்மையான நடை, உடை, பாவனைகள் ஆகியவையே ஒரு பெண்ணை அழகுள்ளவளாக ஆக்குகிறது. இந்த குணங்கள் இல்லையெனில் அவள் உருவத்தில் அழகாக இருந்தாலும் கூட உண்மையில் அழகி இல்லை!

Grace, Courtesy, and gentle manners adorn a woman even if she does not have good looks; lack of these qualities fouls her even if she is beautiful.

English description by Sri N.V.Nayudu

***     

ஊர்வசியின் அழகே அழகு!

அஸ்யா: சர்கவிதௌ ப்ராஜபதி: அபூத, சந்தோ நு காந்திப்ரத:

ச்ருங்கார – ஏக – ரஸ: ஸ்வயம் து மதனோ, மாஸோ நு புஷ்ப -ஆகர: |

வேதாப்யாஸ – ஜட: கதம் நு விஷய – வ்யாவ்ருத்த – கௌதூயிலோ

வே நிர்மாதும் ப்ரபவேத் மனோஹரம் இதம் ரூபம் புராணோ முனி: ||

                  காளிதாஸன் இயற்றியுள்ள விக்ரமோர்வசீயம் 1-8

அவளை எது உருவாக்கி இருக்கக் கூடும்?

ப்ரம்மா, அனைத்தையும் படைப்பவரா? அனைத்திலும் கவர்ச்சியைத் தரும் சந்திரனா?

புலனின்பம் தூண்டும் சாரம் அனைத்தையும் தரும் காதலின் தேவன் தானோ?

மலர்களைப் புஷ்பிக்கும் வசந்த காலமோ?

வேதம் விதிக்கும் நடைமுறைகளைப் பின்பற்றி மனதை அடக்கி, புலன்களை உள்ளிழுத்து வைத்திருக்கும் ஒரு முனிவர் இப்படிப்பட்ட ஒரு அழகிய உருவத்தை எப்படி உருவாக்கி இருக்க முடியும்?

காளிதாஸனின் இந்த கவிதையில் உள்ள நயம் அபாரமானது. ஒவ்வொரு வரியிலும் நு என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது அவனால். தனது எண்ணத்தைச் சொல்வதற்கு முன்னால் அவன் சந்தேகப்படுவதைச் சுட்டிக் காட்டுவது அந்த ‘நு’!

மஹாகவி பாரதியார், குயில் பாட்டில் பெண்ணழகை வர்ணிக்கும் பாடல் இங்கு காளிதாஸனின் கவிதை நயத்துடன் ஒப்பு நோக்கத் தக்கது!

“ஓர் வார்த்தை

கற்றவர்க்குச் சொல்வேன், கவிதைக் கனி பிழிந்த

சாற்றினிலே பண், கூத்து எனும் இவற்றின் சாரமெலாம்

ஏற்றி அதனோட இன்னமுதைத் தான் கலந்து

காதல் வெயிலிலே காய வைத்து கட்டியினால்

மாதவளின் மேனி வகுத்தான் பிரமன் என்பேன்” (குயில் பாட்டு-360,361,362)

Who could have created her?

Brahma, the supreme creator? The moon who bestows charm on every object?

The god of love himself with the essence of sensuality?

Spring with all its flowers bloom?

How could an old ascetic, with mind dulled by the austerities of Vedic practices and senses withdrawn from all objects, produce such a beautiful form?

Note the use of ‘NU’ in every line indicating doubt, about the assumption he starts with.

Bharathi, the Tamil poet, speculate on a lady’s body:-

“The juice crushed out of a masterly poetic composition, infused with the essence of song, dance and drama, with divine nectar added and warmed in the gentle sunshine of love – with these elements did the creator fashion her form?”

English description by Sri N.V.Nayudu

நன்றி :English rendering by Sri N.V,Nayudu –  from the book ‘Subhasita Collection Anthology’, published in 1992.

*******

tag–அழகு

PLEASE JOIN US TODAY– SUNDAY 22-11-2020

TODAY’S MENU ON ‘THAMIL MUZAKKAM’ BROADCAST

THIRUPPUGAZ BY JAYANTHY SUNDAR GROUP , DR RENUKA SUBRAHMANYAN’S KALYAANA PAATTU, BHARATIYAR SONGS, DR KANNAN’S ALVAR AMUTHAM, NAGARAJAN’S Q AND A; TAMIL DEVOTIONAL GEETHAM BY SARASVATHY CHANDRASEKARAN, ANNAPURANI MAAMI AND BALASUBRAHMANYAN PLUS LONDON SWAMINATHAN’S SPEECH; CO PRODUCED BY MRS VAISHNAVI ANAND AND SRI KALYANASUNDARA SIVACHARYA

EVERY SUNDAY FOR TAMIL

EVERY MONDAY FOR HINDUISM

XXX

SAME TIME ONE PM LONDON TIME;

6-30 PM INDIAN TIME

XXX

WHERE ?  AT FACEBOOK.COM/GNANAMAYAM

Facebook.com/gnanamayam

XXX

V R HERE EVERY SUNDAY, EVERY MONDAY; PLEASE JOIN US LIVE

IF U MISS OUR LIVE BROADCAST, VISIT OUR SITE AFTER ONE OR TWO HOURS ON THHE SAME DAY, U CAN WATCH US.

SAME PLACE, SAME TIME  EVERY SUNDAY, EVERY MONDAY

THANKS FOR UR GREAT SUPPORT; LAST WEEK 1000 HITS IN FEW HOURS!!!

–SUBHAM–