ஆரோக்கியம் தெரிந்து கொள்ளுங்கள்! – 1 (Post No.6744)

Written  by S Nagarajan

swami_48@yahoo.com

 Date: 8 AUGUST 2019  


British Summer Time uploaded in London – 6-49 am

Post No. 6744

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ஹெல்த்கேர் ஆகஸ்ட் 2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

புதிய பகுதி

புத்தகச் சுருக்கம் : All about Good Health by Dr Christian Barnard, C.Northcote Parkinson, M.K. Rustomji 187 pages

ஆரோக்கியம் பற்றிய அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்! – 1

தமிழில் தருபவர் : ச.நாகராஜன்

நூலாசிரியர்கள் பற்றி :-

Dr Christian Barnard உலகின் தலைசிறந்த டாக்டர். The Body Machine என்ற அவரது புத்தகம் மூன்று லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி இருக்கிறது. உலகில் முதல் இதய மாற்று நடவு சிகிச்சையைச் செய்தவர் இவரே. (Heart Transplant operation) C.Northcote Parkinson உலகின் தலைசிறந்த மருத்துவ புத்தகங்களை எழுதியவர். ஒவ்வொரு புத்தகமும் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகி உள்ளன.

M.K. Rustomji ஆரோக்கியம் பற்றி எளிமையாக விளக்குபவர் என்பதால் உலகளாவிய அளவில் பிரபலமானவர். இந்தப் புத்தகம அவரது ஒன்பதாவது புத்தகம். நிர்வாக இயல் பற்றியும் அவர் பல புத்தகங்கள் எழுதியுள்ளார்.அதில் ஒன்று திரைப்படமாகப் பிடிக்கப்பட்டு இந்திய அரசாங்கத்தின் பரிசையும் பெற்றது.

நூல் sex, Psyvhology, Food, Ecercise, Physiology, General என்ற ஆறு பகுதிகளைக் கொண்டது.

முக்கிய விஷயங்கள் இங்கு தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது. முழு நூலையும் வாசித்துப் பயன் பெறலாம்.

  1. SEX

தூக்கம் போல பாலியல் உறவும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஒரு விஷயம்.

பாலியல் உறவில் திருப்தி அடையாத ஒரு பெண்மணியுடன் வாழ்க்கை வாழ்வது மிகவும் கஷ்டம். பாலியல் உறவில் 50%க்கு மேல் பெண்கள் உச்சகட்ட இன்பத்தை அனுபவித்ததில்லை என்பதை ஆய்வு செய்த உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பாலியல் உறவில் எந்த ஒரு தோற்ற நிலையும் (Pose and Posture) மோசமானதில்லை

உறவை அடிக்கடி கொள்ளலாமா?

இது ஆணின் ஆண்மை வீரியத்தையும் வயதையும் பொறுத்த ஒரு விஷயம். பெண்களால் அடிக்கடி உறவு கொள்ள முடியும். ஆனால் ஒரு வயதுக்கு மேல் – 45 வயதுக்கு மேல் – இதில் ஆர்வம் பலருக்கும் போய் விடுகிறது.

ஒரு முறை உறவு கொள்வது என்பது 15 முதல் 20 வரை உள்ள press-upக்குச் சமமானது. இதய சம்பந்தமான நோய் உள்ளவர்கள் சீரான உடல்பயிற்சி மேற்கொள்ளல் அவசியம்.

சீரான இடைவெளியில் உறவு கொள்வது ஆரோக்கியத்தைத் தருகிறது; ஆயுளையும் நீட்டிக்கிறது.

ஆண்மையற்ற தன்மை என்பது பெரும்பாலும் உளவியல் ரீதியிலான ஒன்று.

அதிகமாக மது அருந்துவது பாலியல் உறவுக்கு தீங்கு பயக்கும் ஒன்று; இது ஆண்மையற்ற தன்மையை உருவாக்குவது.

“பாலியல் உறவு கொள்ளுங்கள்; இதயத்தைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான ஒரு இரவு இயற்கையின் இயல்பான தூக்கம் தரும் மருந்து” என்று பிரபல அமெரிக்க பாலியல் நிபுணரான டாக்டர் யூஜின் ஷெய்மேன் (Dr Eugene Scheimann) கூறுகிறார்.

எந்த ஒரு வயதும் பாலியல் உறவுக்கு ஒரு தடையில்லை.

2. PSYCHOLOGY

How to overcome tension and stress

மன இறுக்கமும் மன அழுத்தமும் 50 சதவிகித நோய்க்குக் காரணமாக அமைகின்றன. கவலை நரம்பு மண்டலத்திற்குப் பெரும் தீங்கை உண்டாக்குகிறது.

மன இறுக்கம் அதிகமாகும் போது சில ஹார்மோன்கள் அதிகமாக உடலில் சுரக்கிறது. Blood sugar அதிகமாகிறது.

மன இறுக்கம்,மன அழுத்தத்தை எப்படிப் போக்குவது?

முதலில் அது ஏன் ஏற்படுகிறது என்ற காரணத்தை அறிய வேண்டும். காரணத்தை அறிந்த பின் தனக்கு நெருக்கமானவர்களிடம் தன் கவலையை மனம் விட்டுப் பேசுவதிலேயே பாதிப் பேருக்கு பல நோய்கள் போய் விடுகின்றன.

சிறு சிறு விஷயங்களையும் கூட மனம் திறந்து பாராட்டுவது, அன்பு பாராட்டுவது, மரியாதை தருவது போன்றவை உடலையும் மனதையும் சீராக வைக்க உதவுபவை.

இளமையான மனத்தை எப்போதும் கொண்டிருப்பது உடலையும் இளமையுடன் வைத்திருக்கும். பெர்னார்ட் ஷா, பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், சாமர்செட் மாம், மைக்கேல் ஆஞ்சலோ, வின்ஸ்டன் சர்ச்சில் ஆகியோர் இதற்கு உதாரணம்.

சவாசனம் போன்ற ஆசனம் கவலையைப் போக்கும். மனதிற்கும் உடலுக்குமான பயிற்சி இது.

அவ்வப்பொழுது ஓய்வான நேரத்தை உருவாக்கிக் கொண்டு எப்போதும் உழலும் வாழ்க்கையிலிருந்து ஒரு ஓய்வை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

நிகழ்காலத்தில் வாழ்வது என்பது இன்னொரு உத்தி. நாளை என்ன நடக்கப் போகிறதோ என்று கவலைப்படுவதை விட்டு விட்டு இன்றைய பொழுதின் மீது கவனம் செலுத்தல் வேண்டும்.

மருத்துவம் சம்பந்தமாக சில தவறான விஷயங்கள் உண்மை போலக் கூறப்படுகின்றன. அவற்றில் சில

நீச்சலுக்கு முன்னர் உணவை உட்கொள்ளக் கூடாது. இது தவறு. மிதமான உணவுக்குப் பின்னர் கூட நீந்தலாம்.

வயது அதிகமாகும் போது எடை கூடினால் பரவாயில்லை. இது தவறு. 21 வயதில் என்ன உடல் எடை இருந்ததோ அதை சீராக வைத்திருப்பதே ஆரோக்கியத்திற்கு உகந்த ஒன்று.

சற்று கூட நேரம் தூங்குவது நல்லது. இது தவறு. தேவையான அளவு தூக்கம் போதும்.

உடல் பயிற்சி செய்யும் பெண்மணிகள் தங்கள் பெண்மைத் தன்மையை இழக்கின்றனர். இந்த நம்பிக்கை தவறு. உடல் பயிற்சி ஆரோக்கியத்தை உறுதி செய்து ஓய்வான தன்மையையும் அளிக்கிறது.

நீரிழிவு நோய்க்கு சிறுநீர பரிசோதனையை மேற்கொள்ளல் அவசியம்.

இரத்த அழுத்த சோதனை இதய நிலை பற்றி அறிய உதவும்;

அதிக கொழுப்புச் சத்துக்கும் இது உதவும்.

மத்திய வயதை அடைந்த பெண்கள் தங்கள் மார்பகங்களைச் சீரான இடைவெளியில் சோதித்துக் கொள்வது அவசியம். மார்பகப் புற்று நோய் இருக்கிறதா, கட்டி உள்ளதா என்பதைச் சோதித்துக் கொள்வது நல்லது. ஏனெனில் வலி இல்லாமல் இருந்தாலும் கூட இவை இருக்கும் அபாயம் உண்டு என்பதால் தான்!

ஆழ்மனதின் சக்தி (The power of Subconscious mind) அபாரமானது. தீர்க்க முடியாத சில பிரச்சினைகளை அதனிடம் விடுவது நல்லது. உறக்கத்தின் போது அது வேலை செய்து பிரச்சினைகளைத் தீர்க்கும் தீர்வுகளை நீங்கள் எழுந்திருக்கும் போது அது உங்களுக்கு வழங்கும்!

  • FOOD

பாக்கிங் செய்யப்பட்ட உணவு வகைகளும், குளிர்பானங்களும் தேவையற்றவை; பல சமயங்களில் தீங்கு பயப்பவை. சமச்சீர் உணவே ஆரோக்கியத்திற்குப் போதுமானது.

ஒரு நாளைக்கு எத்தனை முறை உணவு உண்ண வேண்டும்? எப்பொழுது உண்ண வேண்டும். பொதுவாகச் சொல்லப் போனால் பெரும்பாலானவர்கள் தேவைக்கு அதிகமாகவே உண்கிறார்கள். பொதுவான விதி – பசி எடுத்தவுடன் உண்ணுங்கள் என்பது தான்!

இன்னொரு அருமையான விதி : குறைவான அளவே உண்ணுங்கள்;பல முறை கூட உண்ணலாம். ஓரிரு முறை சாப்பிட்டு வயிறைத் தேவைக்கு அதிகமாகச் சுமக்க வைப்பதை விட இது மேலானது.

சரியாகச் சமைக்காததே பெரும்பாலான நோய்களுக்குக் காரணமாக அமைகிறது.

இந்தியர்களின் வீட்டில் உள்ள உணவில் சப்பாத்தி, அரிசி, பருப்பு வகைகள், கறிகாய்கள் உள்ளன. இதுவே போதுமானது. சில சமயங்களில் மட்டும் விடமின்கள் தேவைப் படலாம். ஆன்ட்டி பயாடிக்ஸ் மாத்திரைகள் சாப்பிடும் போது சில சமயங்களில் விடமின் B  தேவைப்படலாம்.

உடல் பயிற்சியானது உடல் நலமாக இருக்கும் உணவை எப்போதும் ஒருவருக்கு நல்கும்.

எடுத்துக்காட்டாக, ஒரு சிறிய ரொட்டித் துண்டு 40 நிமிட நேர கடும் பயிற்சியைத் தேவைக்குள்ளாக்குகிறது. ஆகவே உடல் எடையைச் சீராக வைத்திருக்கவும், அதிக எடை ஏற்படாமல் இருக்கவும் உடல் பயிற்சி எவ்வளவு இன்றியமையாதது என்பதை உணரலாம்.

High Fibre Diet – அதிக பைபர் அடங்கிய உணவு ஏராளமான நன்மைகளைத் தருகிறது. இது சீராக மலத்தைக் கழிக்க உதவுகிறது. கோலன் கான்ஸரை – பெருங்குடலில் புற்றுநோய் வரும் அபாயத்தைத் தடுக்கிறது. ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது.

*** அடுத்த இதழில் முடியும்

பசுமைக் கட்டிடம் அமைப்போம்! (Post No.6725)

Written by S Nagarajan

swami_48@yahoo.com

 Date: 4 AUGUST 2019
 

British Summer Time uploaded in London –7-16 am


Post No. 6725


 Pictures are taken from various sources. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ஆல் இந்தியா ரேடியோ, சென்னை வானொலி நிலையத்தின் வாயிலாக தினமும் இந்திய நேரம் காலை 6.55 மணிக்குச் சுற்றுப்புறச் சூழல் நிகழ்ச்சியில் 1-8-19 முதல் 10-8-19 முடிய சுற்றுப்புறச் சூழலைக் காப்பது பற்றிய 10 உரைகள் ஒலிபரப்பப்படுகின்றன. இந்த உரைகளை     www.allindiaradio.gov.in  தளத்தில் தமிழ் ஒலிபரப்பைத் தேர்ந்தெடுத்து  நிகழ்நிலையில் கேட்கலாம்.   3-8-19 அன்று காலை ஒலிபரப்பட்ட மூன்றாம் உரை இங்கு தரப்படுகிறது.

பசுமைக் கட்டிடம் அமைப்போம்!

இன்று உலகமெங்கும் வெப்பமயமாதல் என்ற ஒரு பெரும் அச்சுறுத்தல் நிலவி வரும் வேளையில் கட்டிடக் கலையில் வரவேற்கத்தக்க  ஒரு மா பெரும் புரட்சி ஏற்பட்டுள்ளது.

Green Bulding எனப்படும் பசுமைக் கட்டிடம் அமைக்கப்பட வேண்டும் என மக்களிடையே பொதுவான கருத்து வலுவாக உருப்பெற்று விட்டது.

இயற்கையான சுற்றுப்புறச் சூழலுக்குக் கேடின்றி மறுசுழற்சிக்கு உள்ளாக்கப்பட்ட பொருள்களைக் கட்டிடம் கட்டப் பயன்படுத்துதல் இன்று ஒரு நல்ல பழக்கமாகி வருகிறது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒரு முயற்சி. அத்துடன் Sustainablity எனப்படும் நீடித்துத் தாங்கும் தன்மையுள்ள கட்டிடங்களாகவும் புதிதாக அமைக்கப்படும் கட்டிடங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பதும் முக்கியமான கருத்தாகும். நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உயர் தொழிற்பாட்டுக் கட்டிடங்கள் இன்று அமைக்கப்படுகையில் அவற்றில் சூரிய ஆற்றலை பயன்படுத்துவது, சக்தித் திறனைச் சேமிப்பது, Water efficienty எனப்படும் நீர் செயல் திறனை அதிகரிப்பது ஆகியவையும் கருத்தில் கொள்ளப்படுகின்றன.

உலகளாவிய அளவில் பெரும் கட்டிடக் கலை நிறுவனங்கள் இந்த ஆராய்ச்சிக்கென ஒரு தனிக் குழுவை அமைத்துச் செயல்படுவதோடு நல்ல ஒரு ஆக்கபூர்வமான கருத்தை முன் வைப்போருக்கு பரிசுகளும் வழங்கி வருகின்றன.

கழிவு நீரை வெளியேற்றப் புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவது, மாசுள்ள புகையை வெளிப்படுத்தும் வாகனங்களைக் கட்டுப்படுத்துவது, இயற்கைச் சூழ்நிலைக்கேற்ப வாழ்விடங்களை அமைப்பது இந்தப் பசுமைத் திட்டத்தில் இடம் பெறும் முக்கிய அம்சங்களாகும்.

கட்டிடத்தை புனருத்தாரணம் செய்வோரும், புதிதாகத் தன்னளவில் கட்டிடம் கட்ட நினைக்கும் மத்திய தர வர்க்கத்தினரும் இந்த நவீன கருத்தின் அடிப்படையை உள்வாங்கிக் கொண்டு அதன் படி தங்கள் இல்லங்களை அமைத்துக் கொண்டால் சுற்றுப்புறச் சூழல் பெரிதும் மேம்படும்.

மரங்கள் வெட்டப்படக் கூடாது, படிம எரிபொருள் எனப்படும் பெட்ரோல் உள்ளிட்டவற்றைத் தேங்க விடக்கூடாது போன்ற மிக முக்கியமான விதிகளைப் பசுமைக் கட்டிடங்களை அமைப்போர் கொண்டுள்ளனர்.

பசுமைக் கட்டிடங்களைப் பற்றிய விழிப்புணர்வை மக்கள் இன்னும் அதிக அளவில் பரப்பினால் எதிர்கால நகரங்கள் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் நகரங்களாக உருப்பெறும், இல்லையா?!

***

சென்னை அருங்காட்சியக வளாகத்தில் அரிய மரங்கள் (Post No.6722)

Entada species from Africa

WRITTEN by London swaminathan


swami_48@yahoo.com

 Date: 3 AUGUST 2019


British Summer Time uploaded in London –14-59

Post No. 6722

 Pictures are taken from various sources. Museum pictures are taken by me ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

சென்னை அரசினர் அருங்காட்சியக வளாகம் பல அதிசய மரங்களைக் கொண்டுள்ளது. இங்கு கல்லாக மாறிய (படிம fossil tree அச்சு ) மரம் ஒன்றுள்ளது. திருவெள்ளக்கரை வரை சென்று படிம அச்சுப் பூங்காவைப் பார்க்க முடியாதவர்கள் இங்கு பல கோடி ஆண்டுகளில் கல் போல மாறிவிட்ட மரத்தைக் கண்டு களிக்கலாம்

வளாகத்தைப் பின்புறமாகச் சுற்றி வந்தால் மிகப் பெரிய பழம்தின்னி வௌவால்கள் Fruit eating bats  நூற்றுக் கணக்கில் ( ஆயிரக் கணக்கில்??) பறப்பதையும் காணலாம்

ஆனைப் புளியங்கொட்டை மரம்????

ஆனால் பாவோபாப் (Baobab Tree) என்னும் மரத்துக்கு ஆனைப் புளியங்கொட்டை என்று பெயரிட்டுள்ளனர். அது தவறு என்று நினைக்கிறேன். மதுரைக் கல்லூரி தாவரவியல் சுற்றுலாவின்போது நானே ஏர்க்காடு சென்று ஆங்குள்ள ஆனைப் புளியங்கொட்டை மரத்தைப் பார்த்துள்ளேன். அதன் காய் தோற்றத்தில் புளியங்காய் போல இருக்கும். ஆனால் ஆறு அடி நீளம் வரை காய் இருக்கும். இதை யானைக் கொழுஞ்சி என்று கூறுவர் என விக்கி பீடியா கூறுகிறது . ஆனால் சென்னை வளாகத்தில் உள்ள மரம் அது அல்ல.

சென்னை வளாகத்திலுள்ள மரத்திற்கும் பொந்தன் புளி, ஆனைப் புளி என்று பெயர் உள்ளது. ஆயினும்  இந்த மரத்தின் காய்கள் அரை அடி முதல் ஒரு அடி வரை மட்டும்தான் வளரும். ஆனால் ஏர்க்காட்டில் நாங்கள் பார்த்து, மதுரைக் கல்லூரி தாவரவியல் சோதனைக்கூடத்துக்குச் சேகரித்த புளியங்காயோ 5 அடி முதல் 6 அடி வரை இருந்தது. ஒரு வேளை இரண்டு மரத்துக்கும் ஒரே பெயர் (பாமர மக்கள் அளவில்) இருந்தாலும் வியப்பில்லை. நல்ல வேளையாக தாவரவியல் (Botanical name) பெயர் வேறு.

மற்றொரு மரம் சிவலிங்கப் பூ அல்லது நாகலிங்கப் பூ மரம் ஆகும்.

இது தவிர நங்கூரம், பீரங்கி முதலியனவும் வெளிச் சுவரை அலக்கரிக்கின்றன (படங்களைக் காண்க)

fruit eating bats

நான் முன்னர் எழுதிய கட்டுரைகள்

வியப்பூட்டும் அதிசய மரங்கள் | Swami’s …



https://swamiindology.blogspot.com/2012/10/blog-post_5.html

5 Oct 2012 – வியப்பூட்டும் அதிசய மரங்கள். Picture shows Udumpara Tree (Aththi in Tamil, Ficus glomerata or Ficus racemora). உலகில் மரத்தின் பெயரை நாட்டின் …

கல் மரம் | Tamil and Vedas



https://tamilandvedas.com/tag/கல்-மரம்/

  1.  

Translate this page

21 Mar 2018 – திருவக்கரையில் ஒரு கல் மரப் பூங்கா இருக்கிறது. அங்கே இரண்டு கோடி ஆண்டுப் பழமையான கல் மரங்கள் இருக்கின்றன. 247 ஏக்கர் …

ந்யக்ரோத | Tamil and Vedas



https://tamilandvedas.com/tag/ந்யக்ரோத/

  1.  

Translate this page

த.லோ.சு.மயிலை தந்த தகவல்). (இந்த மரத்தை ஆனைப் புளியங்கொட்டை மரம் என்று சொல்லுவார்கள். தாவரவியல் படிப்பவர்களுக்கு இதுபற்றித் …

–subham–

பழையதிலிருந்து கற்போம்; உயர்வோம்! (Post No.6720)

WRITTEN by S Nagarajan


swami_48@yahoo.com

 Date: 3 AUGUST 2019


British Summer Time uploaded in London –8-40 am

Post No. 6720

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ஆல் இந்தியா ரேடியோ, சென்னை வானொலி நிலையத்தின் வாயிலாக தினமும் இந்திய நேரம் காலை 6.55 மணிக்குச் சுற்றுப்புறச் சூழல் நிகழ்ச்சியில் 1-8-19 முதல் 10-8-19 முடிய சுற்றுப்புறச் சூழலைக் காப்பது பற்றிய 10 உரைகள் ஒலிபரப்பப்படுகின்றன. இந்த உரைகளை     www.allindiaradio.gov.in  தளத்தில் தமிழ் ஒலிபரப்பைத் தேர்ந்தெடுத்து    நிகழ்நிலையில் கேட்கலாம். 2-8-19 அன்று காலை ஒலிபரப்பட்ட இரண்டாம் உரை இங்கு தரப்படுகிறது.

பழையதிலிருந்து கற்போம்; உயர்வோம்!

ஒரு அதிசயமான செய்தியை நமது பாரத தேசத்தின் அனைத்துக் கிராமங்களும் உணர்த்துகின்றன.

வடக்கே உத்தரகண்ட் மாநிலத்திலிருந்து தெற்கே தமிழ்நாடு வரை மக்கள் நீரின் இன்றியமையாத தன்மையை உணர்ந்து அவற்றைச் சேமிக்கும் உயரிய பணியை மேற்கொண்டிருந்தனர் என்பது தான் அந்த அரிய செய்தி.

உத்தரகண்ட் மாநிலத்தில் நீர்நிலை சேமிப்புக்கான பெயர் நௌலா (Naula) ஆகும்.

மலைப்பகுதியிலிருந்து மழை காலத்தில் ஓடி வரும் நீரை வீணாகாமல் சேமித்து வைக்கவே இந்த நௌலாக்களை அவர்கள் உருவாக்கினர்.

 சுமார் 64000 நௌலாக்கள் அங்கு உள்ளன என்பது பிரமிக்க வைக்கும் ஒரு செய்தி.

இவை நீரைத் தம்முள் சேமித்து வைத்துக் கொள்கின்றன. ஒரு குடும்பத்திற்கு சுமார் எட்டு மாத காலம் தேவையான நீரை இவை வழங்குகின்றன.

இந்த நௌலாக்களை நீர்க் கோவில் என்று அவர்கள் பக்தியுடன் குறிப்பிடுவதோடு இவற்றை இறைவனுக்கும் அர்ப்பணிக்கின்றனர்.

ஆனால் வருந்தத்தக்கச் செய்தி இவற்றில் பெரும்பாலானவை இன்று வறண்டு கிடக்கின்றன. ஆகவே இவற்றை புனருத்தாரணம் செய்யும் பணியைத் தன்னார்வத் தொண்டர்கள் இன்று அங்கு மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போல ராஜஸ்தானில் ஒவ்வொரு வீட்டிலும் நீர்க்குழிகளை அமைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இவற்றிற்கு டங்கா (Tanka) என்று பெயர்.

இந்த அமைப்புகள் நிலத்தடியில் உருவாக்கப்படுகின்றன. நீரானது பல்வேறு வடிகட்டிகளின் மூலமாக இந்த அமைப்புகளில் செலுத்தப்படுவதால் சுத்தமாக தண்ணீர் வருடத்தின் பெரும்பாலான மாதங்களில் கிடைக்க வழி ஏற்படுகிறது.

தமிழகத்தில் ஒவ்வொரு கோவிலிலும் ஒரு பெரிய குளம் இருப்பதைக் காணலாம். ஆங்காங்கே ஏரிகள் அழகுற அமைக்கப்பட்டிருப்பதையும் இந்த நீர்நிலைகளை யாரும் அசுத்தப்படுத்தக் கூடாது என்று கிராம மக்கள் தமக்குத் தாமே சட்டம் இயற்றிக் கொண்டிருப்பதையும் பார்த்து வியக்காமல் இருக்க முடியாது.

இதே போக கேரளத்திலும் பல நூற்றாண்டுகளாக இயங்கி வரும் குட்டிக் கிணறுகள் உள்ளன.

அங்கு கேணிகளை மக்கள் இறைவன் கொடுத்த வரம் என்று கூறி அவற்றை நன்கு பராமரித்து வந்தனர்; வருகின்றனர்.

இந்தப் பழங்கால பழக்க வழக்கங்களை புதிய பார்வையோடு பார்த்து இன்றைய நவீன அறிவியல் நுட்பத்தையும் பயன்படுத்தி அவற்றைச் சுத்தப்படுத்தி, பராமரித்து வந்தால் நீரில்லாப் பற்றாக்குறை ஆங்காங்கே பெருமளவு தீர்ந்து விடும். அனைவரும் முயன்றால் முடியாதது ஒன்றில்லை!

***

செல்வத்தை பிரிக்க 5 வழிகள் (Post No.6682)

WRITTEN by London  Swaminathan

swami_48@yahoo.com


Date: 26 JULY 2019
British Summer Time uploaded in London – 14-1
5

Post No. 6682


Pictures are taken from various sources such as Facebook, google, friends, websites etc
((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

தர்ம- அறப்பணிகளுக்கு; யசஸ் – புகழ் பெறுவதற்கு; அர்த்த- முதலீடு செய்வதற்கு; காம- கேளிக்கைகளுக்கு; ஸ்வஜன- குடும்பத்தைப் பராமரிப்பதற்கு.

தர்மாய  யசஸேஅர்த்தாய காமாய ஸ்வஜனாய ச

பஞ்சதாவிபஜன்வித்தமிஹாமுத்ர  ச மோததே-

பாகவத புராணம்- 8-19-37

Xxxx

கல்வி கற்க முடியாத 5 வகையினர்

சண்ட- வன்முறைவாதிகள்; ஸ்தப்த- மந்த புத்தி உடையோர்; அலச- சோம்பேறிகள்; சரோக- நோயாளிகள், விஸ்மரண சீலாஹா–ஞாபக சக்தி இல்லாதோர்.

பஞ்ச வித்யாம் ந க்ருஹ்ணந்தி சண்டாஸ்தப்தா ச யேநராஹா

அலஸஸ்ச ஆரோகஸ்ச யேஷாம் ந விஸ்ம்ருதம் மனஹ

Xxxxxx

கொடிகள் 5 – வல்லீபஞ்சமூல

விதாரீ; ஸாரீவ; ரஜனீ; குடூசீ; அஜஸ்ருங்கீ

ஸுஸ்ருத சூத்ர – 38-72

xxx

ஆடைகள் செய்ய உதவும் 5 மரப்பட்டைகள்

ந்யக்ரோத- ஆலமரம்; உடும்பரா- அத்திமரம்; அஸ்வத்த- அரச மரம்; ப்லக்ஷ- இந்திய அத்தி; வேடஸ- பிரம்பு

ந்யாக்ரதோதும்பராஸ்வத்தப்லக்ஷவேதஸவல்கலைஹி

ஸர்வைரேகாத்ர ஸம்யுக்தைஹி பஞ்சவல்கலமுச்யதே

சப்தகல்பத்ரும 3-14

Xxx

சொல்லக்கூடாத 5 பெயர்கள் – வர்ஜ்ய நாமானி

ஆத்ம நாம- சொந்தப் பெயர்; குரு நாம- குருவின் பெயர்; க்ருப நாம- கஞ்சனின்/ கருமியின் பெயர்; ஜ்யேஷ்டாபத்ய நாம- மூத்த மகனின் பெயர்; களத்ர நாம- மனைவியின் பெயர்.

ஆத்மநாம குரோர்நாம நாமதிக்ருபணஸ்ய ச

ஸ்ரேயஹ காமோ ந க்ருஹ்னீயாத் னை ஜ்யேஷ்டாபத்யகளத்ர யோஹோ

XXX

பழங்காலத்தில் பெயர்களைச் சொன்னால் ஏனையோர் மந்திர தந்திரங்களால் வசப்படுத்துவர் என்ற நம்பிக்கை பல கலாசாரங்களில் இருந்தது.

இதனால் குடும்பத்துக்கு மட்டுமே தெரிந்த ஒரு பெயரும் வெளியே கூப்பிடுவதற்கு வேறு ஒரு பெயரும் வைத்திருந்தனர்.

எகிப்து, இந்தியா போன்ற நாடுகளில் மன்னர் முடி சூட்டும்போது சொல்லப்படும் அபிஷேக நாமாவை மட்டுமே நாம் அறிவோம். உன்மைப் பெயர் எவருக்கும் தெரியாது.

மாணிக்க வாசகர் போன்றோரின் உண்மைப் பெயர் இன்றுவரை நமக்குத் தெரியாது.

அவருக்கு இறைவன் அளித்த மாணிக்க வாசகன் என்ற பெயரும், திவாதவூர்க்காரர் என்ற பெயருமே நமக்குத் தெரியும்.

XXX

ஆண்டுகளின் வகைகள்

சாந்திரமாயன- சந்திரனின் இயக்கத்தின் பேரில் அமைந்தது; சௌரமான- சூரிய யக்கத்தை அடிப்படையாக உடையது; சாவன- சோம யாகத்தை அடிப்படையாக உடையது;  நக்ஷத்ர – விண்மீன் உதயத்தை அடிப்படையாக உடையது ;பார்ஹஸ்பத்ய – பிருஹஸ்பதி என்னும் குரு கிரஹத்தை அடிப்படையாக உடையது.

வத்ஸரஹ பஞ்சதா – சாந்த்ரஹ ஸௌரஹ  ஸாவனோ நாக்ஷத்ரோ பார்ஹஸ்பத்ய இதி.

–தர்மசிந்துஹு

XXXX

5 வகை உலோஹங்கள்

காம்ஸ்ய- வெண்கலம்; அர்க- தாமிரம்; ரீதி- பித்தளை; லோஹ- இரும்பு; அஹிஜாதம்- ஈயம்

காம்ஸ்யார்கரீதி லோஹாஹ்ஜாஹம் தத்வர்தலோஹகம்

ததேவ பஞ்சலோஹாஹ்யம் லோஹவித்பிரு தாஹ்ருதம்

–ரஸரத்னஸமுச்சயஹ 5-212

XXXX

5 வகை உப்புகள்– லவணம்

ஸைந்தவம்- பாறை உப்பு; ரோமக- ஒரு வகை உப்பு; ஸமுத்ரம்- கடலுப்பு; பீதம்- செயற்கையாகச் செய்யப்பட்ட மருத்துவ உப்பு; ஸௌவர்சலம்- கரு உப்பு

ஸைந்தவம் ரோமகம் சைவ ஸாமுத்ரலவணம் ததா

பிதம் ஸௌவர்ச்சலாக்யம் ச யத்தத் லவபஞ்சகம்

–ராஜ நிகண்டு

XXXX SUBHAM XXXXXXXXXX

Botanical Information under No.5 (Post No.6666)

Compiled  by London swaminathan


swami_48@yahoo.com


Date: 22 JULY 2019


British Summer Time uploaded in London –18-49

Post No. 6666


Pictures are taken from various sources including Facebook, google, Wikipedia. This is a non- commercial blog. 
((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Saakhaanga – Parts of Tree

Tvak – bark; Patra – leaf; Kusuma – flower; Muula- root; Phala – fruit.

Tvak patram kusumam mulam phalamekasya sakhinah

Ekatra militam caitat pnchangamiti samhitam

–Sabda Kalpa Druma 3-15

Xxx

Mahaapancamuulam-

Bilva; Agnimantha; Syonaaka; Kaasmarya; Paatalaa

-Rajanighantu 7-21

Xxx

Mahaavisa – Poison

Somala; Harataala; Manasiila; Valsanaabha; Sarvavisa

xxxx

VRIIHI -Grains

Tila- Sesame; Maasa- Urad dhal; Muga- Moong Dhal; Syaamaka- Kind of millet; Saali- pddy

Tilasca mashamudrasca syamakah salayah smrutah

Pancadhanyaganh protah sarvarishtanishudanah

Xxx

Valkala- Bark Garments

Nyagrodha- banyan;

Udumbara- fig;

Asvattha – Sacred fig/pipal;

Plksa – Indian fig;

Vetasa- cane

-sabda kalpa druma 3-14

Xxx

Vallipancamuula – Creepers/ climbers

Vidaarii; Sariivaa; Rajanii; Guducii;  Ajasring

–Susruta 38-72

xxx

Veda vibhaaga- Parts of Veda-

Vidhi – injunction; Mantra- mantra;

Naamadheya – name; Nisedha – prohibition;

Arthavaada – explanatory passage.

Apaureshayam vakyam vedah.

Sa ca vidhi-mantra- namadheya- nisheda- arthavada bedad pancavidhah

–Artha Samgraha 1-10

Xxx

Vrattayah – Modifications

Of mind

Pramaana- eans of valid knowledge; Viparyaya- wrong knowledge; Vikalpa – fancy; Nidraa – sleep; Smriti- memory

–Yogasutra 1-6

Of word

Krt; Taddhita; Samaasa; EkASESA; Sanaadhyanta

-Siddhanta kaumudi

Xxxx

Vishnu’s Forms

Vaasudeva; Sankarsana; Praadyumna; Anirudhdha; Naaraayana

–Garuda Purana- 32-5

Xxx

Chief disciples of Vyasa

Sumantu; Jaimini; Paila; Vaisampayana (referred to aham in verse); Suuka

Sumantu jaiminiscaiva pailasca suddhavratah

Aham catrthah sisyo vai suko vyasatmajastatha

–Mahabharata shanti parva- 349-11

–subham–

நத்தை மஹிமை (Post No.6628)

WRITTEN BY London swaminathan


swami_48@yahoo.com


Date: 14 JULY 2019


British Summer Time uploaded in London – 13-
50

Post No. 6628


Pictures are taken from various sources including Facebook, google, Wikipedia. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Xxx subham xxx

நாடுகளும் அவை போற்றும் கொள்கைகளும் (Post No.6560)

Written by London  Swaminathan

swami_48@yahoo.com


Date: 17 June 2019
British Summer Time uploaded in London –  13-
30

Post No. 6560

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com

Napoleon Eagle
This image has an empty alt attribute; its file name is 5223a-eagle2bof2bamerica.jpg

கருடன் முத்திரை | Tamil and Vedas



https://tamilandvedas.com/tag/கருடன்-முத்திரை/

1.      

T

பொருள்: அரண்மனையை அடைந்த தசரதன், வெற்றி வேந்தர்களை இங்கே வாருங்கள் என்று அழைக்கும் பொன்னால் அமைந்த ஓலைகளை, கருடன் …

கருடன் | Tamil and Vedas



https://tamilandvedas.com/tag/கருடன்/

1.      

2 Mar 2017 – எகிப்திலும் ரிக்வேதத்திலும் கழுகு, பருந்து, கருடன், ராஜாளி என்ற … இது கழுகு அல்லது கருடன் அல்லது பருந்து போன்ற பறவை …

அழுதால் உன்னைப் பெறலாமே – Tamil and Vedas



https://tamilandvedas.com/…/அழுதால்-உன்னைப்-…

1.      

28 Dec 2016 – … துடைக்கும் உன் தரிசனம் துன்பம் வரும்போது கிட்டுவதால் … கருட வாஹனத்தில் ஏறி விரைந்தோடி வந்தான் விஷ்ணு பகவான்.

சுமேரியாவில் இந்து புராணக் கதை …



https://tamilandvedas.com/…/சுமேரியாவில்-இந்…

1.      

12 May 2014 – நான் பார்த்த வரையில் கருட புராணக் கதை, அதர்வ வேத (பாம்பு) …. விரும்புவோர் Please go to swamiindology.blogsot.com or tamilandvedas.wordpress.com coin.

–subham–

–subham–

சிலைத் திருடனைக் கட்டிக்கொடுத்த கிளி! (Post No.6550)

Written by LONDON SWAMINATHAN


swami_48@yahoo.com


Date: 15 June 2019


British Summer Time uploaded in London – 9-16 am

Post No. 6550

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com

தாவரத்தில் 5, குதிரையில் 5 (Post No.6512)

Written by London Swaminathan

swami_48@yahoo.com


Date: 8 June 2019


British Summer Time uploaded in London –  12-06 am

Post No. 6512

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.co