சீதையைப் பார்த்து சிரித்த குரங்குகள்! (Post No.5028)

WRITTEN by London Swaminathan 

 

Date: 20 May 2018

 

Time uploaded in London – 9.46 am (British Summer Time)

 

Post No. 5028

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

சீதைக்கு ஒரு பிள்ளைதான்!! தாய்லாந்து ராமாயணம்-4

 

முதல் மூன்று பகுதிகளில் அனுமனுக்கு இரணடு மனைவிகள், ராவணனின் மகள்தான் சீதை, இலங்கையில் ஆட்சிக்கு எதிராகக் கலகம் , மயில் ராவணன் கதை முதலிய பல விநோதங்களைக் கண்டோம்.  இப்போது குசன் மட்டுமே சீதையின் மகன் என்ற கதையையும் சீதை வரைந்த ராவணனின் படம் குறித்தும் உள்ள சம்பவங்களை தாய்லாந்து ராமாயணமான  ராமகீயனில் (RAMAKIEN) இருந்து காண்போம்.

 

வால்மீகி ராமாயணத்தின்படி ராமனுக்கு லவன், குசன் என்ற இரட்டையர் பிறந்தனர் என்பதை நாம் அறிவோம்

 

சீதை, கர்ப்பவதியாக இருந்தபோது ராமன் காட்டுக்கு அனுப்பினான். அங்கே அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்தப் பிள்ளை மீது வால்மீகி முனிவர் குஸ என்ற புனிதப் புல்லினால் புனித நீர் தெளித்ததால் அவனுக்குக் குஸன் என்று பெயரிட்டனர்.

குழந்தை பிறந்த செய்திக்குப் பின்னர்,  ராமன் புஸ்பக விமானத்தில் பறந்து வந்து ஜாத கர்மம் முதலிய சடங்குகளைச் செய்துவிட்டுப் புறப்பட்டும் போய்விட்டான். சீதையின் தந்தையான ஜனகன் முதலிய உறவினரும் வந்தனர்.

 

இவ்வாறு இருக்கையில் ஒரு நாள், சீதை காட்டில் பழங்களைச் சேகரிக்கச் சென்றாள். இயற்கை அழகைக் கண்டு ரஸித்தாள். வால்மீகி முனிவரிடம் ‘என் பிள்ளையைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டுப் போனாள்

ஒரு மரத்தில் ஒரு தாய்க் குரங்கு  ஐந்து குட்டிகளுடன் தாவித்தாவி சென்று கொண்டிருந்தது. சீதைக்கு ஒரே கவலை. உடனே தாய்க் குரங்கைப் பார்த்து சொன்னாள்:

“ஏ, குரங்கே! பார்த்துத் தாவு; குட்டிகள கீழே விழுந்துவிடப் போகின்றன. ஜாக்கிரதை!”

 

இதைக் கேட்டவுடன் அந்தக் குரங்கும் அருகாமையில் இருந்த குரங்கும் பலமாகச் சிரித்தன. “ஏம்மா தாயே! உன் கைக் குழந்தையை ஒரு கிழட்டு முனிவன் பாதுகாப்பில் விட்டு வந்திருக்கிறாய்; அவரோ கண்ணை மூடிக்கொண்டு தியானத்தில் அமர்ந்து இருக்கிறார். ‘ஊருக்குத் தாண்டி உபதேசம் உனக்கு இல்லை என்ற கதையாக இருக்கிறதே!’ என்று சொல்லிச் சிரித்தன.

 

இதைக் கேட்டவுடன் சீதைக்கு ‘ஷாக்’ அடித்தது போல இருந்தது. வால்மீகி முனிவரின் ஆஸ்ரமத்த்க்கு ஓடினாள். அங்கு முனிவரும் இல்லை சிஷ்யர்களும் இல்லை; குழந்தை மட்டும் குடிலுக்குள் உறங்கிக் கொண்டு இருந்தது. சீதை, தனது குழந்தை குஸனுடன் காட்டுக்குள் வந்து இயற்கை அழகைக் கண்டு வியந்தாள்.

 

இதற்கிடையில் ஆஸ்ரமத்துக்குத் திரும்பிவந்த வால்மீகி குழந்தையைக் காணாது திகைத்தார்; பதை பதைதார். உடனே ஒரு கணமும் தாமதிக்காது ஒரு குழந்தையை மந்திர சக்தியால் உருவாக்கினார். சீதை திரும்பி வந்தவுடன், அவள் கையில் உணமைக் குழந்தை — அசல் குழந்தை —இருப்பதைப் பார்த்து தான் பதற்றத்தில் வேறு ஒரு குழந்தையை சிருஷ்டித்த கதைகளைச் சொன்னார்.

 

இரண்டாவது குழந்தையை சீதையின் கையில் கொடுத்து உன் மூத்த  பிள்ளைக்கு விளையாட ஒரு ஆண் வேண்டுமல்லவா; ஆகையால் இவனையும் உன் மகனாக வைத்துக் கொள்; இவனை கம்பளி நூல் மூலம் உருவாக்கினதால் இவனுக்கு ‘லவன்’ என்று பெயர் என நுவன்றார்.

அதைச் செவிமடுத்த சீதைக்குப் பேரானந்தம்!

இதே போல இந்தியாவிலுள்ள ஆனந்த ராமாயணத்திலும் சில சிறிய மாற்றங்களுடன் கதை உளது. ஆகவே ஆனந்த ராமாயணம்தான் தென் கிழக்காசிய நாடுகளுக்குச் சென்றது என்றும் சிலர் கதைப்பர்.

 

கதா ஸரித் சாகரம் என்ற நூலிலும் இக்கதை உளது ஆனால் அது முதல் பிள்ளை லவன் என்றும் இரண்டாம் பிள்ளைதான் குசன் என்றும் சொல்லும். வடக்கத்தியர்கள் குசன் லவன் என்று சொல்லுவர். நாமோ லவ குசன் என்போம்.

 

இலக்குவனால்  மூக்கு அறுபட்டுப் போன சூர்ப்பநகைக்கு ஒரு மகள் உண்டாம் ; அவள் பெயர் அதுல். அவளே மாறு வேடத்தில் ராமபிரான் அரணமனையில் வேலைக்கு அமர்ந்தாள் அவள்தான கூனி எனப்படும் மந்தரை. சீதையை பழிவாங்கத் திட்டம் தீட்டினாள். அது ராமனைப் பாதிக்கும் என்று திட்டம் போட்டாள்; அதன்படி ராமன் வரக்கூடிய தருணம் பார்த்து சீதையிடம் ஒரு படம் வரைச் சொன்னாள்:

“அம்மா, அம்மா எனக்கு ராவணன் என்னும் ராக்ஷஸன் எப்படி இருப்பான் என்று பார்க்க ஆசையம்மா! PLEASE ப்ளீஸ், படம் வரைந்து காட்டுங்களேன்” என்றாள். அவளும் வேடிக்கைக்குதானே இந்தக் கூனி கேட்கிறாள் என்று எண்ணி அவளைக் குஷிப்படுத்த படமும் வரைந்தாள் அந்த தருணத்தில் அண்ணலும் வந்தர்; படத்தைப் பார்த்து ஆத்திரமும் அடைந்தார். மாறு வேடக் கூனி அதுலும் (ADUL) நன்றாக சீதையை மாட்டிவிட்டாள்.

கோபம் கொண்ட ராமன், இலக்குவனை அழைத்து, இந்தப் பெண்ணைக்     காட்டுக்கு அழைத்துச் சென்று கொன்று விடு என்று காதோடு காதாக சொன்னான்.

 

அவன் அண்ணன் சொல்லைத் தட்ட முடியாமல் காட்டுக்கு அழைத்து வந்தான். ஆனால் கொல்வதற்கு மனம் வரவில்லை. அவளுக்கு வால்மீகி ஆஸ்ரமம் இருக்கும் இடத்தைக் காட்டிவிட்டு, ஒரு மானைக் கொன்று அதன் இதயத்தை எடுத்து ராமனிடம் காட்டி, இதோ பார் சீதையின் இருதயம் என்று காட்டினான். இதற்கு நீண்டகாலத்துக்குப் பின்னரே சீதை உயிருடன் இருந்தது ராமனுக்குத் தெரியவந்தது.

 

இதே கதை மலைஜாதி மக்களிடம் உண்டு; ராமாயணம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்ததால் 3000 வகை ந் ராமாயணங்களாவது இருக்கும் ; நான் லண்டனில் வாரம் தோறும் பிரிட்டிஷ் லைப்ரரிக்குப் போகையில் புதுப் புது ராமாயணமோ. அல்லது சம்பவங்களோ பார்க்கிறேன். ஜைன ராமாயணம், புத்த ராமாயணம், புற நானூற்றில் ராமாயணம், ஆழ்வார் பாடல்களில் ராமாயணம் என்று ஏராளமாக உள்ளன.

 

பண்டல்கண்டு பகுதி மலை ஜாதி மக்களிடையேயும் நாட்டுப் புறப் பாடல்களில் இந்த  ராமாயணக் கதை இடம்பெறுகிறது.

 

சீதையை எல்லாப் பெண்களும் சேர்ந்து கிண்டல் செய்து, ‘உன்னை சிறை வைத்த ராக்ஷசன் எப்படி இருந்தான்?’ என்று கேட்கவே அவள் சாணத்தால் ராவணனின் படத்தை வரைந்ததாகாவும் , பாதி வரைகையில் ராமன் வந்து அதைப் பார்த்து கோபம் அடைந்து அவளைக் காட்டிற்கு அனுப்பியதாகவும் அந்த நாட்டுப் புறப்பாடலில் வரும். மலைஜாதி மக்களிடையே கூட ராமாயணம் இப்படிப் பரவி இருக்குமானல் அது பல்லாயிரக் கணக்கான ஆண்டு பழமை உடையது என்பதும் தெள்ளிதின் விளங்கும். உலகம் முழுதும் பரவிய பழங்கால காவியங்களில் ராமாயணம் முதலிடத்தைப் பெறுகிறது.

காலத்தால் அழியாத காவியம்  ராமாயணம்– மனித குலத்தின் எல்லா நற்குணங்களையும்  கதா பாத்திரங்களில் பிரதிபலிக்கும் சீரிய காவியம் ராமாயணம்.

வாழ்க ராமாயணம் ! வளர்க ராமன் புகழ்!!

–சுபம்–

 

 

 

 

 

நமது நூல்கள் தரும் நுட்பமான கருத்துக்கள்! (Post No.5027)

Written by S NAGARAJAN

 

Date: 20 MAY 2018

 

Time uploaded in London –  6-28 AM   (British Summer Time)

 

Post No. 5027

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ஹெல்த்கேர் மாத பத்திரிகையில் மே 2018  இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

ஆரோக்கிய ரகசியம்

நமது நூல்கள் தரும் நுட்பமான கருத்துக்கள்!

 

ச.நாகராஜன்

நமது ஆயுர்வேத நூல்களிலும், வைத்ய நூல்களிலும் இதர சுபாஷித நூல்களிலும் ஆரோக்கியம் பற்றிய ஏராளமான நுட்பமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இது அடிப்படையான விஷயம். இதை முதலில் தெரிந்து கொண்டால் நமக்குத் தேவையான மருத்துவ உதவியைப் பெற்று நோய்களிலிருந்து மீளலாம்.

நோயே இல்லாத ஆரோக்கிய வாழ்வைப் பெறவும் இந்தக் கருத்துக்கள் இன்றியமையாதவை.

சில கருத்துக்கள் இங்கு தொகுக்கப்பட்டு தரப்படுகின்றன.

1

நோய் வருவதற்கான நான்கு காரணங்கள்

ரோக நிமித்தம்

  • ஆகண்டுகா – Exogenous – வெளியிலிருந்து
  • வாதம்
  • பித்தம்
  • ஸ்லேஷ்மா

சரக சம்ஹிதை (சூத்ர 20-3)

 

2

நோயாளியின் நான்கு குணங்கள்

ரோகாதுரா குணா:

 

1) ஸ்மிருதி – நல்ல ஞாபக சக்தி (good memory)

2) நிர்தேசா – மருத்துவ அறிவுரையின் படி நடத்தல் (follwoing the prescription)

3) அபீருத்வா – பயமின்மை (fearlessness)

4) ஞானபாகா – தடையற்ற வெளிப்பாடுகள் (uninhibited expressions)

 

சரக சம்ஹிதை (சூத்ர 9-9)

 

3

நோயைப் போக்கத் தேவையான அம்சங்கள்

Aspects of therapeutics for the cure of disease

 

1)பிஷக் – வைத்தியர் (Physician0

2) த்ரவ்யாணி –  மருந்துகள் (Medicines)

3) உபஸ்தாதா – உடன் இருந்து உதவி செய்பவர் -Upasthata

4) ரோகி – வியாதியஸ்தர் – Rogi

சரக சம்ஹிதை (சூத்ர 9-3)

 

4

வைத்யருக்கான குணங்கள்

வைத்ய குணா:

 

1) மிகச் சிறந்த மருத்துவ அறிவு (ச்ருதே பர்யாவதாதத்வம்)

2) பரந்த மருத்துவ அனுபவம் (பஹுஷோ த்ருஷ்டகர்மதா)

3) திறமை (தாக்ஷ்யம்)

4) சுத்தம் (சௌசம்)

சரக சம்ஹிதை (சூத்ர 9-6)

 

5

அறுவை சிகிச்சை நிபுணருக்கான குணங்கள்

சஸ்த்ர வைத்ய குணா:

பயப்படாமை – சௌர்யம்

எளிதாகக் கையாளும் தன்மை – ஆசுக்ரியா

சஸ்த்ரதைக்ச்ன்யம் – மிகக் கூர்மையான கருவிகள்

வியர்வை இல்லாமல் இருத்தல், நடுங்காமல் இருத்தல் -அஸ்வேதவேபது

குழப்பமின்றி இருத்தல் – அஸம்மோஹ:

சுஸ்ருத சம்ஹிதா (சூத்ர 5-10)

 

6

நோயாளிகளிடம் வைத்யரின் அணுகுமுறை

வைத்ய வ்ருத்தி

 

நட்பு – (மைத்ரி)

தயை – (காருண்யா)

சந்தோஷம் – (ப்ரீதி)

இரக்கம் – (உபேக்ஷணம்)

சரக சம்ஹிதை (சூத்ர 9-26)

7

நோய் அறிதல்

வியவஹார தர்ஷணம் (Diagnosis)

 

கேட்டல்- (ஆகம)

உரையாடுதல் – (வியவஹாரா)

சிகிச்சை – (சிகித்ஸா)

முடுவெடுத்தல் – (நிர்ணயா)

நாரத ஸ்மிருதி (1-36)

 

8

நோய் அறிதல்

ரோக விஞ்ஞானம்

நோய் வருவதற்கான காரணம் – நிதானம்

முந்தைய நிலை – பூர்வரூபா

தோற்றம் – ரூபா

நோய்க்குத் தீர்வு – உபசாயா

முடிவு – சம்ப்ராப்தி

மாதவ நிதானம் (1-4)

 

9

 

வியாதிகளின் வகைகள்

வியாதி

 

தொற்று நோய் – (ஆகண்டவா)

உடல் சம்பந்தமானது – (சரீரா)

மனோ வியாதி – (மானஸா)

இயற்கையானது – (ஸ்வாபாவிகா)

சுஸ்ருத சம்ஹிதா (சூத்ர 1-23)

10

எலும்பு வகைகள்

அஸ்திவர்கா

 

தட்டை – (கபாலா)

பல் – (ருசகா)

குருத்தெலும்பு – (தருணா – cartilege)

வட்ட வடிவமானது – (வளயா)

நீளமானது – (நாளகா)

சுஸ்ருத சம்ஹிதா (சரீர 5-20)

11

மருந்துக் கஷாயங்கள்

கஷாயம்

 

அத்தி – (சமி)

அரசு – (அஸ்வத்தா)

ஆலமரம் – (ந்யாக்ரோதா)

புரசு – (பலாச)

 

இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் தர்க்கரீதியாக ஆராய்ந்து எது நல்லது, யார் வியாதியை நீக்கத் தகுதியானவர்கள் என்பன போன்றவற்றை ஆயிரக் கணக்கான செய்யுள்கள் தருகின்றன.

 

அனுபவத்தின் அடிப்படையில் சிறந்த வைத்தியர்கள் ஒவ்வொரு கிராமம்தோறும் இருந்து மக்களுக்கு உரிய சிகிச்சை அளித்து அவர்களின் ஆரோக்கிய மேம்பாட்டிற்காகப் பாடுபட்டனர். பாரம்பரிய வழியிலான அந்த ஆயுர்வேத மருத்துவம் பற்றி அறிவது நமது கடமை – நமது நலனுக்காகவே!

***

 

 

 

 

 

 

 

 

 

வோர்ட்ஸ்வொர்த்தின் டாஃபோடில்ஸ் -2 (Post No.5021)

Written by S NAGARAJAN

 

Date: 18 MAY 2018

 

Time uploaded in London –  6-58 AM   (British Summer Time)

 

Post No. 5021

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ஒசை இன்பம் கொண்ட வோர்ட்ஸ்வொர்த்தின் டாஃபோடில்ஸ் -2

 

.நாகராஜன்

 

3

1807ஆம் ஆண்டு முதல் முதலாக இந்தக் கவிதை அச்சிடப்பட்டது. ஆனால் 1815க்குள் இந்த அழகிய தனது கவிதையில் வோர்ட்ஸ்வொர்த் ஏராளமான மாற்றங்களைச் செய்தார். கருத்து நயம், ஓசை இன்பம் கொண்ட இந்த மாறுதல்களால் கவிதையின் மெருகு அற்புதமாகக் கூடியது.

 

அவர் செய்த மாறுதல்களைப் பார்ப்போம்.

 

நான்காம்  வரியில் இருந்த dancing என்ற வார்த்தையை golden  என்று அவர் மாற்றினார்.

 

A host, of dancing daffodils;

என்பது

 

A host, of golden daffodils;  என்று மாறியது.

அடுத்து ஐந்தாம்  வரியில் இருந்த along என்ற வார்த்தையை beside  என்று அவர் மாற்றினார்.

 

Along the lake, beneath the trees

என்பது

 

Beside the lake, beneath the trees என்று மாறியது.

 

அடுத்து ஆறாம்  வரியில் இருந்த ten thousand என்ற வார்த்தையை fluttering and என்று அவர் மாற்றினார்.

Ten thousand dancing in the breeze. என்பது

Fluttering and dancing in the breeze. என்று மாறியது.

 

 

அடுத்து பதினாறாம்  வரியில் இருந்த laughing என்ற வார்த்தையை jocund என்று அவர் மாற்றினார்.

இரண்டாவது செய்யுளாக – Stanzaவாக – உள்ள – வரிகள் 7 முதல் 12 முடிய உள்ள செய்யுள் புதிதாகச் சேர்க்கப்பட்டது.

 

கடகடவென செய்யுளை வேகமாக தன்னிச்சையாக இயற்றி வந்த கவிஞர் They flash upon that inward eye

 

Which is the bliss of solitude;

 

என்ற  21 மற்றும் 22 வரிகளை இயற்ற முடியாமல் தடுமாறினார்.

அவரது மனைவி மேரி உதவிக்கு வரவே அந்த வரிகள் பூர்த்தி செய்யப்பட்டது.

 

இப்போது முதலில் இருந்த கவிதையையும் மாற்றப்பட்ட கவிதையையும் படித்துப் பார்க்கலாம்.

 

முதலில் இருந்த கவிதை:

 

I wandered lonely as a cloud

That floats on high o’er vales and hills,

When all at once I saw a crowd,

A host, of dancing daffodils;

Along the lake, beneath the trees,

Ten thousand dancing in the breeze. (வரிகள் 1 முதல் 6)

 

The waves beside them danced; but they

Out-did the sparkling waves in glee:

A poet could not but be gay,

In such a laughing company:

I gazed—and gazed—but little thought

What wealth the show to me had brought: (வரிகள் 13 முதல் 18)

 

For oft, when on my couch I lie

In vacant or in pensive mood,

They flash upon that inward eye

Which is the bliss of solitude;

And then my heart with pleasure fills,

And dances with the daffodils.  (வரிகள் 19 முதல் 24)

 

மாற்றப்பட்ட கவிதை அதாவது இப்போது நாம் ரஸிப்பது :

I wandered lonely as a cloud

That floats on high o’er vales and hills,

When all at once I saw a crowd,

A host, of golden daffodils;

Beside the lake, beneath the trees,

Fluttering and dancing in the breeze. (வரிகள் 1 முதல் 6)

 

Continuous as the stars that shine

And twinkle on the milky way,

They stretched in never-ending line

Along the margin of a bay:

Ten thousand saw I at a glance,

Tossing their heads in sprightly dance. (வரிகள் 7 முதல் 12)

 

The waves beside them danced; but they

Out-did the sparkling waves in glee:

A poet could not but be gay,

In such a jocund company:

I gazed—and gazed—but little thought

What wealth the show to me had brought: (வரிகள் 13 முதல் 18)

 

For oft, when on my couch I lie

In vacant or in pensive mood,

They flash upon that inward eye

Which is the bliss of solitude;

And then my heart with pleasure fills,

And dances with the daffodils.  (வரிகள் 19 முதல் 24)

 

ஒரு அற்புதமான கவிதை உருவாவது என்பது சாதாரண விஷயமல்ல. அதை Daffodils நமக்கு உணர்த்துகிறது.

***                       முற்றும்

 

ஒசை இன்பம் கொண்ட டாஃபோடில்ஸ்-1 (Post No.5018)

Written by S NAGARAJAN

 

Date: 17 MAY 2018

 

Time uploaded in London –  8-20 AM   (British Summer Time)

 

Post No. 5018

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ஒசை இன்பம் கொண்ட வோர்ட்ஸ்வொர்த்தின் டாஃபோடில்ஸ் -1

 

.நாகராஜன்

 

1

ஆசை தரும் கோடி அதிசயங்கள்  கண்டதிலே

ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ (குயில் பாட்டு – 194)

என்றான் மகாகவி பாரதி.

 

 

ஒசை நுட்பமானது. அதை உணர்பவர்களே நல்ல கலா ரஸிகர்கள். கவிதையை ரஸிக்க வல்லவர்கள்.

கவிஞர்கள் இந்த ஓசை நுட்பத்தில் கரை கண்டவர்கள்.

அவர்கள் மனமும் சிந்தனையும் சொற்களின் வாயிலாக உயர் கருத்துக்களை அள்ளித் தெளிக்கும் போது ஓசை நுட்பத்திற்கு உயரிய இடம் கொடுத்து படிப்போரை ஈர்த்து தன்னுடன் லயப்படுத்துவர்.

 

ஒரு சொல்லை இன்னொரு சொல்லால் மாற்றிப் போட முடியாதபடி கவிதை தருபவனே உண்மைக் கவிஞன். ஒரே அர்த்தம் தரும் பல சொற்கள் உண்டு. ஆனால் கவிஞன் அவற்றை எல்லாம் கருத்தில் கொண்டே தனது சொல்லைத் தேர்ந்தெடுக்கிறான்.

 

கோவில் மணியோசை தன்னைக் கேட்டதாரோ (கிழக்கே போகும் ரயில் 1978 வெளியீடு; இயற்றியவர் கவிஞர் கண்ணதாசன்)

 

என்ற பாட்டில் ஓசைக்குப் பதிலாக நாதம் என்ற சொல்லைப் போட்டு

கோவில் மணிநாதம் தன்னைக் கேட்டதாலே

என்று சொல்லிப் பாருங்கள். ரஸனை இடிக்கும்.

தேவன் கோவில் மணியோசை – இதுவும் திரைப்படப் பாடல் தான். (படம் மணியோசை-1962 வெளியீடு)

 

தேவன் கோவில் மணி நாதம் – கேட்கவே சரியில்லை.

சரி, நாதமென்னும் கோவிலிலே

ஞானவிளக்கேற்றி வைத்தேன்

ஏற்றி வைத்த விளக்கினிலே ….

(படம் : மன்மத லீலை; இயற்றியவர் கவிஞர் கண்ணதாசன்)

 

இதுவும் திரைப்படப் பாடல் தான்.

 

ஓசை என்னும் கோவிலிலே ஞான விளக்கு ஏற்றி வைத்தேன் ?!

 

ரஸனை இடிக்கிறது.

இந்தப் பாடலில் நாதம், நாதம் தான்; ஓசை, ஒசை தான்!

 

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

அதனால் தான் கம்பன் வால்மீகியின் ராமாயணத்தைப் புகழும் போது

 

‘வாங்க அரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான் என்று கூறி வால்மீகி முனிவரின் பாதம் ஒன்றைக் கூட மாற்ற முடியாது என்று புகழ்ந்து கூறினான். ( ஒரு சுலோகத்திற்கு நான்கு பாதம் உண்டு. விருத்தச் செய்யுளிலில் நான்கு அடிகள் இருப்பது போல!)

 

ஆக இந்த ஓசை இன்பம் தமிழுக்கு மட்டும் அல்ல; ஆங்கிலத்திலும் இதர எல்லா மொழிகளிலும் கூட உண்டு.

ஆங்கிலக் கவிஞர்களும் இதில் வல்லவர்கள்.

எடுத்துக் காட்டாக வோர்ட்ஸ்வொர்த் எழுதிய அற்புதக் கவிதையான டாஃபோடில்ஸ் கவிதையைப் பார்ப்போம்.

இந்தக் கவிதை கீழே தரப் படுகிறது.

 

 

இதை எனது பழைய கால சேதுபதி ஹை ஸ்கூல் உபாத்தியாயர் திரு எம்.எஸ்.ஆர் என்பவர் செந்தமிழ் நாடென்னும் போதினிலே என்ற ராகத்தில் அழகுறப் பாடுவார்.

அதில் சொக்கிப் போன எங்களுக்கு பாடல் அப்படியே மனப் பாடம் ஆகி விட்டது!

 

 

ஓசை இன்பம் அப்படிப்பட்டது இந்தப் பாடலில்.

பாடலைக் கீழே முதலில் பார்ப்பொம். பிறகு ஓசை இன்பத்திற்கு வோர்ட்ஸ்வொர்த் என்ன செய்தார் என்பதைப் பார்ப்போம்.

 

2

I Wandered Lonely as a Cloud 

 

BY WILLIAM WORDSWORTH

 

I wandered lonely as a cloud

That floats on high o’er vales and hills,

When all at once I saw a crowd,

A host, of golden daffodils;

Beside the lake, beneath the trees,

Fluttering and dancing in the breeze. (வரிகள் 1 முதல் 6)

 

Continuous as the stars that shine

And twinkle on the milky way,

They stretched in never-ending line

Along the margin of a bay:

Ten thousand saw I at a glance,

Tossing their heads in sprightly dance. (வரிகள் 7 முதல் 12)

 

The waves beside them danced; but they

Out-did the sparkling waves in glee:

A poet could not but be gay,

In such a jocund company:

I gazed—and gazed—but little thought

What wealth the show to me had brought: (வரிகள் 13 முதல் 18)

 

For oft, when on my couch I lie

In vacant or in pensive mood,

They flash upon that inward eye

Which is the bliss of solitude;

And then my heart with pleasure fills,

And dances with the daffodils.  (வரிகள் 19 முதல் 24)

***

மௌன நீரூற்றால் புரட்சி-2 (Post No.4974)

Written by S NAGARAJAN

 

Date: 3 MAY 2018

 

Time uploaded in London –  17-33   (British Summer Time)

 

Post No. 4974

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

பாக்யா 4-5-2018 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள எட்டாம் ஆண்டு ஒன்பதாம் கட்டுரை

மௌன நீரூற்றால் புரட்சி செய்த பெண்மணி!–2

.நாகராஜன்

 

 

 

ஜனாதிபதி கென்னடியையே பதில் சொல்லச் செய்யும் அளவுக்கு ராக்கேல் கார்ஸனின் சைலண்ட் ஸ்பிரிங் உருவாகக் காரணம் என்ன?

ராக்கேல் சிறுமியாக இருந்த போது அவரது படுக்கை அறை ஜன்னல் வழியே ஒரு மைல் தூரத்தில் உள்ள குதிரைகளை வெட்டித் தள்ளும் ஒரு கசாப்புத் தொழிற்சாலையைப் பார்த்த வண்ணம் இருப்பார்.அதிலிருந்த புகைபோக்கியிலிருந்து எழும் புகை வானத்தை மறைக்கும்.

 

 

மாலை நேரத்தில் வெட்டப்பட்ட உபயோகமற்ற மாமிசக் குவியலிலிருந்து எழும் நாற்றமும், குதிரை மாமிசத்தினால செய்யப்பட்ட உரத்தின் நாற்றமும் கிராமம் வரை வந்து அனைவரையும் வாந்தி எடுக்கச் செய்யும். ஆகவே மாலை நேரங்களில் கிராம மக்கள் வீ டுகளின் கதவுகளைத் திறப்பதே இல்லை.

 

 

இந்த அவலத்தினால் ராக்கேலின் மனம் பெரிதும் பாதிக்கப்பட்டதில் வியப்பில்லை.

தனது சைலண்ட் ஸ்பிரிங் நூலை அவர் அமெரிக்க இல்லத்தரசிகளை நோக்கி இலக்கு வைத்தார்.லட்சக்கணக்கில் அவற்றை வாங்கிய அமெரிக்கப் பெண்மணிகள் அவர் பக்கம் தங்கள் ஆதரவைத் தெரியப்படுத்தினர்.

அவர்கள் ஜனாதிபதி கென்னடியிடம் ஒரு கேள்வியை முன் வைத்தனர்.

 

 

1962, ஆகஸ்ட் மாதம் அவர்கள் ஜனாதிபதியிடம் அரசு DDT  பற்றி ஏதேனும் செய்யப் போகிறதா இல்லையா என்று கேட்டனர்.

அவர் உடனடியாக இப்படி பதிலளித்தார்:

“ஆம்.செய்யப் போகிறோம். குறிப்பாக மிஸ் கார்ஸனின் புத்தகத்தால் தான். ஆனால் இதை அவர்கள் (கமிட்டி) பரிசீலித்து வருகிறார்கள்”.

கென்னடியின் அறிவியல் குழு 1963 மே மாதம் 15ஆம் தேதி தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது.

 

“சைலண்ட் ஸ்பிரிங் வெளிவரும் வரை பொதுவாக உரங்களில் விஷத் தனமை இருப்பது பற்றி ஒன்றும் தெரியாமல் இருந்தது. ஆனால் சுற்றுப்புறச்சூழல் கேட்டை ரசாயன உரங்களைக் கட்டுப்படுத்துவன் மூலமே தடுத்து நிறுத்த முடியும்.”

வணிக நோக்கில் இது வணிகர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதால் அவர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

1972இல் அமெரிக்க அரசு விவசாயத்தில் DDT உபயோகத்தைத் தடை செய்தது.

 

 

அமெரிக்காவின் தேசீயச் சின்னமான கழுகு ஒரு லட்சத்திலிருந்து 500 ஜோடிகளாகக்க் குறைந்தது ஏன்?

 

 

இரசாயன உரத்தினால் தான். அபாயகரமான உரம் அதன் முட்டைகளைக் குஞ்சு பொறிக்க விடாமல் பொறிப்பதற்கு முன் முட்டைகளை உடைத்து விட்டதால் இந்த அபாயம் ஏற்பட்டது!

 

என்றாலும் கூட மலேரியாவைத் தடுப்பதற்கு DDT அனுமதிக்கப்பட்டது. இதையும் ராக்கேல் எதிர்த்தார்.

 

இதற்கிடையில் அவரது உடல் நிலை இதய நோய்களுள் ஒன்றான ஆஞ்ஜினா (ANGINA) வியாதியால் பாதிக்கப்பட்டது.

அவருக்கு மார்பகப் புற்று நோயும் வந்து சேர்ந்தது.

1964இல் கான்ஸர் உடல் முழுவதிலும் பரவி விடவே அவர் தலைமயிர் எல்லாம் உதிர்ந்து தலை வழுக்கையானது. எலும்புகள் பலஹீனமாக ஆகி விடவே அவர் வீல் சேரிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

1964 மார்ச் மாதம் கான்ஸர் கல்லீரலைத் தாக்கி அவரை வெகுவாகப் பாதித்தது.

 

 

அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் ஒரு ரேடியோ ஆக்டிவ் பதியத்தை அவர் உடலில் பதியம் செய்தனர்.

 

 

இது போன்ற உடல் நிலையில் தான் அவர் அமெரிக்க கமிட்டி முன்னர் ஆஜராகி தன் தரப்பு வாதங்களை முன் வைத்தார்.

DDT போன்ற இரசாயன உரங்கள் முதலில் பூச்சிகளைக் கொல்லும். பின்னர் உணவுச் சங்கிலித் தொடரினுள் புகுந்து உணவையே நச்சாக்கும். அதனால் பறவைகள், மீன் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்தொழியும். ஏனெனில் அவை இப்படிப்பட்ட நச்சு உணவுகளை உட்கொள்ள வேண்டிய சுற்றுப்புறச் சூழ்நிலை கேடு உருவாவதால் தான்! ஆகவே இதற்கு ஒரு முடிவு கட்டுங்கள் என்றார் அவர்.

 

 

‘மக்கள் விஞ்ஞானி’ என்ற பெயருடன் புதுமையாக மலர்ந்த அவர் மக்களுக்காக அரிய உண்மைகளைப் புள்ளி விவரங்களுடன் தொகுத்து வழங்கினார்.

 

 

நடக்க முடியாமல் அவர் தன் இருக்கைக்கு மெதுவாகத் திரும்பியது அனைவரையும் உருக்கியது.

தலை வழுக்கை தெரியாமல் இருக்க ஒரு ‘விக்’கை அவர் அணிந்திருந்தார்.

 

 

தனது வியாதி பற்றி அவர் யாரிடமும் சொல்லவில்லை. ஆகவே அவரது கான்ஸர் பற்றி இறுதி வரை மக்களுக்குத் தெரியவில்லை.

 

1964ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி அவர் காலமானார்.

அவரது அஸ்தியின் ஒரு பகுதி மேரிலாந்தில் அவரது தாயாரின் கல்லறையில் புதைக்கப்பட்டது. இன்னொரு பகுதி ஷீப்ஸ்காட் பே என்ற இடத்தில் தெளிக்கப்பட்டது.

 

மனித குல சரித்திரத்தில் முக்கியமான காலகட்டங்களிலெல்லாம் ஒரு புத்தகம் வெளியாகி அது வரலாறையே மாற்றுவது வழக்கம் என்று அலாஸ்காவைச் சேர்ந்த செனேட்டர் எர்னஸ்ட் க்ரூயநிங் அவரைப் போற்றிப் பாராட்டினார்.

 

ராக்கேலின் வழியில் சென்ற அறிஞர் அல்கோர் ‘யாருக்கும் பிடிக்காத உண்மை’ என்ற தலைப்பில் பல உண்மைகளை முன் வைத்தார். அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.

 

இன்று சுற்றுப்புறச் சூழலைப் பாதிக்கும் அம்சங்கள் முன்பை விட ஏராளமாகப் பெருகி விட்டன. ஆனால் ராக்கேல் கார்ஸன் போல அயராது பாடுபட்டு அந்த அம்சங்களை ஒழிக்க ஆள் தான் இல்லை.

 

‘தி நன் ஆஃப் நேச்சர்’ – இயற்கையின் கன்யாஸ்தீரி என்று அன்புடன் அழைக்கப்பட்ட கார்ஸனின் புகழ் என்றும் இலங்கும்!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

ஜெர்மனியைச் சேர்ந்த பெண்மணியான மரியா மெரியன் (Maria Merian -1647-1717) பூச்சிகளை ஆராய்ந்த ஒரு அபூர்வமான விஞ்ஞானி.

அவரது கண்டுபிடிப்புகளுக்கு முன்னர் அனைவரும் பட்டாம்பூச்சி பூமியிலிருந்து தானாகவே சேற்றிலிருந்து பிறக்கிறது என்று எண்ணிக் கொண்டிருந்தனர்.

 

ஒவ்வொரு பூச்சியையும் அது எப்படி பிறக்கிறது எப்படி வாழ்கிறது என்று அவர் ஆராய்ந்தார். அவர் தனது கண்டுபிடிப்புகளை எல்லாம் அந்தக் காலத்திய விஞ்ஞான மொழியான லத்தீனில் எழுதாமல் ஜெர்மானிய மொழியில் எழுதியதால் அவரைப் பற்றிப் பலரும் அறிய வாய்ப்பில்லாமல் போனது.

 

என்றாலும் கூட சுயமாக பெரிய அளவில் நிதி திரட்டி பூச்சிகளை ஆராயக் களம் புகுந்தார். அவைகளை வகைப் படுத்தினார். பட்டியலிட்டார். அத்துடன் அவர் ஒரு ஓவியராகவும் திகழ்ந்ததால் செடிகள், பூச்சிகள், மிருகங்கள் ஆகியவற்றின் படங்களையும் வரைந்தார்.

 

அவை இன்றளவும் உள்ளன. அவரது பட்டியல் இன்றளவும் விஞ்ஞானிகளால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகத் திகழ்கிறது.

பூச்சிப் பெண்மணி என்று புகழ் பெற்ற அவரை உலகம் இப்போது பாராட்டுகிறது!

***

 

மலை ஏறும் வீராங்கனை (Post No.4968)

Written by S NAGARAJAN

 

Date: 2 MAY 2018

 

Time uploaded in London –  7-05 AM  (British Summer Time)

 

Post No. 4968

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

பாக்யா 20-4-2018 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள  எட்டாம் ஆண்டு ஏழாம் கட்டுரை

.நாகராஜன்

அறிவியல் அறிஞர் வாழ்வில் …

நான் ஷெப்பேர்ட் (Nan Shepherd) ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பிரபலமான மலை ஏறும் வீராங்கனை. சிறந்த கவிஞரும் கூட.(பிறப்பு : 11-2-1893; மறைவு 23-2-1981)

ஸ்காட்லாந்து அருகில் உள்ள கெய்ர்கார்ம் (Cairmgorm)  மலைப் பகுதியில் அவர் போகாத இடமே கிடையாது. அங்குலம் அங்குலமாக அதை அளந்து தன் அனுபவங்களை அவர் ‘தி லிவிங் மவுண்டன்’ என்ற அரிய நூலை எழுதினார். மலைப் பகுதிகளின் வரைப்படத்தையும் அவர் வெளியிட்டது அரிய சாதனை!

நாற்பது வயதிற்குள் நான்கு புத்தகங்களை எழுதி வெளியிட்டார்.பின்னர் தன் கவிதைகளைத்  தொகுத்து அந்தத் தொகுப்பை வெளியிட்டார். பின்னர் பல வருடங்கள் ஒரு புத்தகத்தையும் வெளியிடவில்லை. 1945இல் எழுதிய ‘தி லிவிங் மவுண்டன்’ என்ற நூல் 1977இல் 32 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியிடப்பட்டது.

அவர் தான் சிறுமியாக இருந்தபோது வாழ்ந்த வீட்டிலேயே 87 ஆண்டுகள் வாழ்ந்தார். ஆங்கிலம் போதிக்கும் ஆசிரியையாகவும் 1956ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.

இறுதி வரை திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகவே வாழ்ந்தார்.

அவரது மலையேற்ற அனுபவங்கள் உலகினரின் கவனத்தை ஈர்த்தது.

ராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லாந்து அவரது உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து டாலர் நோட்டை 2016ஆம் ஆண்டு வெளியிட்டு அவரை கௌரவித்தது.

ஒரு பெண்மணி துணிச்சலுடன் மலை ஏறும் வீராங்கனையாகத் திகழ முடியும் என்று வாழ்ந்து காட்டிய அவர் பெண்களுக்கு உத்வேகமூட்டும் வழிகாட்டியாகக் கொண்டாடப்படுகிறார்.

***

 

இறவாப் பனை மரம்! பிறவாப் புளிய மரம்!-தமிழ் அதிசயம்! (Post No.4901)

இறவாப் பனை மரம்!  பிறவாப் புளிய மரம்!-தமிழ் அதிசயம்! (Post No.4901)

 

Written by London Swaminathan 

 

Date: 10 April 2018

 

Time uploaded in London –  8-15 am  (British Summer Time)

 

Post No. 4901

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

தமிழ் நாட்டின் புகழ் பெற்ற புனித மரங்கள்

 

மரங்களைத் தமிழர்கள் போற்றியது போல வேறு எவரும் போற்றியிருப்பார்களா என்பது கேள்விக்குறியே; ஒவ்வொரு கோவிலிலும் ஒரு மரம் வைத்து அதையும் புனித ஸ்தல வ்ருஷமாகக் கருதி (வ்ருக்ஷம்=மரம்) வழிபாடு செய்தது- செய்வது- செய்யப்போவது- தமிழர்களே.

 

காஞ்சி, தில்லை என்று மரங்களின் பெயர்களாலேயே புனித இடங்களை அழைத்ததும் தமிழரே! நிலங்களுக்கு குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என இயற்கை வழிப் பெயர்களைச் சூட்டியதும் தமிழரே. மரங்கள் விஷயத்தில் ஆண் பனையைப் பெண் பனையாக்கி காய்கள் குலுங்க வைத்ததும் (GENETIC WONDER) தமிழரே.

 

புத்தருக்குப் போதி மரத்தில் ஞானம் கிடைத்தால் தமிழன் புளிய மரத்துக்கடியிலும் ஞானம் பெறுவான் என்று காட்டிய நம்மாழ்வாரைக் கொண்டதும் தமிழ்நாடே.

 

காடு வளர்ப்போம்; கலை வளர்ப்போம் என்று பாடிய பாரதியாரை உடைத்தும் தமிழ்நாடே.

 

வேதாரண்யம், தர்பாரண்யம், திருப்புவனம், திர்வேற்காடு, பழவேற்காடு, திருவாலங்காடு என்று காடுகளின் பெயரில் ஊர் வைத்தவனும் புனிதத் தமிழர்களே.

 

 

இந்தியா முழுதும் புகழ்பெற்ற மரங்கள் இருந்தாலும் புனித மரங்கள் அதிகம் இருப்பதும் அதை இன்று வரை கொண்டாடுவதும் தமிழர்கள் மட்டுமே.

 

தான்சேன் என்ற புகழ்பெற்ற பாடகரின் சமாதியில் உள்ள புகழ் பெற்ற புனிதமரம், குருக்ஷேத்திரத்தில் உள்ள புனித மரம், கயாவிலுள்ள புனித அரச/போதி மரம், கல்கத்தாவிலுள்ள புகழ்பெற்ற ஆலமரம், அடையாற்றிலுள்ள (சென்னை) பெரிய ஆலமரம், கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற ஆந்திர, பஞ்சாப் மாநில ஆல மரங்கள், ஆண்டாளும் ஆதி சங்கரரும் பாடிய அழிஞ்சில் மரம், அனந்தராம தீட்சிதர் சொன்ன புளிய மரப் பேய் சம்பவம், ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புளிய மரம், திருமங்கை ஆழ்வார் சொன்ன புளியமரம்– இன்னும் எவ்வளவோ மரங்கள் பற்றிய கட்டுரைகள் எழுதிவிட்டேன்.

 

 

எங்கள் ஊர் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பழைய கடம்ப மரத்துக்கு வெள்ளிக் கவசம் போட்டு வேலி கட்டி வைத்திருக்கின்றனர். முன் காலத்தில் மதுரை கடம்ப வனக் காடாக இருந்தது. 2000, 3000 ஆண்டுகளுக்கு முன்னர் தனபதி என்னும் செட்டியார் இரவுநேரத்தில் காட்டைக் கடக்கும் போது பிரம்மாண்ட ஒளி விளக்கு வெளிச்சத்தில் இந்திரன் பூஜித்த சிவலிங்கத்தைக் கண்டவுடன் பாண்டிய மன்னனிடம் சொல்லவே அவன் கோவில் எழுப்பி மதுரை மாநகரை உருவாக்கினான். காடு போனது; ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என்று ஒரு கடம்ப மரம் மிஞ்சியது.

 

காஞ்சீபுரம் ஏக ஆம்ரேஸ்வரர் கோவில் மாமரம், திருமுதுகுன்றம்/ விருத்தாசலம் பழமலை நாதர் கோவில் வன்னிமரம் போன்ற பல மரங்கள் சில ஆயிரம் ஆண்டுகளாக உள்ளதாக பக்தர்கள் செப்புவர். ஆயினும் தாவரவியல் பட்டதாரியான நான் அதை நம்புவதில்லை. ஆனால் பக்தர்களின் கூற்றிலும் மெய் இருக்கிறது. அதாவது அதே மரத்தின் விதையையோ கிளையையோ அந்த இடத்தில் வளரவிடுவதால் இப்படி பல்லா யிரம் ஆண்டுப் பழமை எனும் பட்டம் சூட்டுகிறோம்.

 

மாமன்னன் அசோகன் புத்தர் காலத்துக்கு பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் வாழ்ந்தாலும் அந்த மரத்தின் கன்றுகளை இலங்கைக்குக் கப்பலில் அனுப்பியவுடன் அதற்கு ராஜ வரவேற்பு கொடுக்கப்பட்டதை நாம் மஹா வம்சம் மூலம் அறிகிறோம். ஆக 2300 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சிவப்புக் கம்பள வரவேற்பு (RED CARPET WELCOME ) பெற்ற மரமும் ஒரிஜினல் மரத்தின் கிளையே என்பதை அறிக. நிற்க

இன்னும் இரண்டு புகழ்பெற்ற மரங்களையும் காண்போம் இன்று!

 

கோயம்புத்தூருக்கு அருகிலுள்ள பேரூரில் அமைந்துள்ள சிவன் கோவில் பெயர் வாய்ந்தது; வைப்புத் தலங்களில் ஒன்று. அடியார்கள் வராதபடி தொலைவிலிருந்தே பாடிய திருத்தலங்கள் வைப்புத் தலங்கள் ஆகும். அங்கு இரண்டு மரங்கள் பெயர் பெற்று விட்டன. பிறவாப்புளியும் இறவாப் பனையும்; சொல்வதற்கும் கேட்பதற்கும் எதுகை மோனை இருப்பதால் இம்மரங்கள் புகழ் அடைந்தனவா? அல்லது அவற்றில் உண்மை உளதா? சிறிது ஆராய்வோம்.

 

பிறவாப் புளி என்று சொல்லுவதேன்? இந்தப் புளிய மரத்தின் கொட்டைகளை எங்கு ஊன்றினும் அது முளைப்பதில்லை என்பது ஒரு விளக்கம். புளிய மரமும் கூட இறைவன் அருள் பெற்றது இனி அதற்கு பிறப்பு-இறப்பு சுழல் இல்லை- அது போல இங்கு வரும் பக்தர்களும் முக்தி பெறுவர் என்பது மற்றொரு விளக்கம்.

 

எங்கள் மதுரையில் கருங்குருவி, பன்றி முதலியன மோட்சம் பெற்ற கதைகளைத் திருவிளையாடல் புராணத்தில் காணலாம்.

நாளை ஒரு சோதனை நடத்தி இந்த மரம் விளையும்- பக்தர்கள் நம்புவது பொய் என்று கண்டாலும் இந்த தத்துவ விளக்கம் பக்தர்களை தாங்கி நிற்கும். உண்மையிலேயே விளையாவிடில் அங்கு கதிரியக்கம் இருக்கிறதா அல்லது அந்த மரம் மரபியல் ரீதியில் மாறுபட்டதா என்பதைக் காட்ட உதவும். ஆகவே எந்த ஆய்வும் இந்து மதத்தினடிப்படை உண்மைகளைத் தகர்க்காது

 

 

இறவாப் பனை என்று இயம்புவதன் காரணம் என்ன? இந்தப் பனை மரத்தின் பட்டைகள் மருத்துவ குணம் கொண்டவை; அது காய கல்பம் போன்றது என்று பகர்வர் பக்தர் பெருமக்கள்; அப்படி இறக்காமல் இருந்தவர் எவருமிலர். இன்னொரு விளக்கம்- இந்தப் பனை மரம் மிகவும் பழையது; ஆயிரக்கணக்கான, அல்லது நூற்றுக் கணக்கான – அல்லது மற்ற பனைமரங்களை விட– வயது கூடியது என்பது பக்தர்கள் புகலும் சொற்றொடர்களாம்.

 

இதிலும் உண்மை இருக்கதான் செய்கிறது. நான் முன்னர் சொன்னது போலவே அதே அனை மரத்தின் காயை வைத்து தொடர்ச்சியாக ஆயிரம் ஆண்டுகளுக்கு பனை மரத்தை வளர்க்கலாம். அசோகன், இலங்கைக்கு அனுப்பிய போதி மரங்கள் இன்று இலங்கையில் பல இடங்களில் தரிசனம் தருவது போல.

 

இந்தப் பக்தர்களின் நம்பிக்கை உலக மஹா அதி சயம் ஒன்றைச் செய்துள்ளது. தமிழ் நாடெங்கிலும் மரங்களும் புனித மானவை; அவைகள் பாதுகாக்கப்பட வேண்டியவை என்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமின்றி மரங்களும் எறும்பும் பறவைகளும் கூட மோட்சம் பெற முடியுமானால் மனிதனே உன்னால் முடியாதா? சத் சங்கம் ஒன்றே போதுமே! பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறுவது போல கோவில் அருகில் இருந்த ஒரு காரணத்தாலேயே பறவைகளும் மிருகங்களும் செடி கொடிகளும் முக்தி பெறும்போது நீயும் நல்லோர்  சஹவாசத்தால் நன்மை அடையலாமே என்று சொல்லாமல் சொல்கின்றன.

வாழ்க புனித மரங்கள்! வளர்க கோவில் நந்த வனங்கள்!!

 

-சுபம்–

வேதத்தில் அழகிய காட்டு ராணி கவிதை! (Post No.4898)

வேதத்தில் அழகிய காட்டு ராணி கவிதை! (Post No.4898)

 

Research article Written by London Swaminathan 

 

Date: 9 April 2018

 

Time uploaded in London –  9-25 am (British Summer Time)

 

Post No. 4898

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

உலகிலேயே மிகப் பழைய நூல் ரிக் வேதம் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை; உலகிலேயே மிகப் பழைய கவிதைத் தொகுப்பு ரிக் வேதம் என்பதிலும் இரு வேறு கருத்துக்கு இடமே இல்லை. அந்த வேதத்தில் பத்து மண்டலங்கள் உள்ளன.  ஆயிரத்துக்கும் மேலான துதிகள் – கவிதை வடிவில் உள்ளன, இதன் காலம் 6000 ஆண்டுகளுக்கு அல்லது 8000 ஆண்டுகளுக்கு முந்தையது (BETWEEN 4000 BCE AND 6000 BCE) என்பது பால கங்காதர திலகர், ஹெர்மன் ஜாகோபி (GERMAN SCHOLAR HERMAN JACOBI) என்ற ஜெர்மன் அறிஞர் ஆகியோரின் கணிப்பு. மாக்ஸ்முல்லர் போன்றோர் இதை 3200 ஆண்டுகளுக்கு முந்தியது ஒரு வேளை 5000 ஆண்டுகளுக்கும் முந்தியதாக இருக்கலாம்- எவரும் வேதத்தின் காலத்தைச் சொல்லுவதற்கு இயலாது என்று சொல்லிவிட்டார்கள். இதில் காட்டு ராணி பற்றிய அற்புதமான ஒரு கவிதை உளது (10-146)

கடைசி மண்டலமான பத்தாவது மண்டலத்தில் (10-146) இது இடம் பெற்றுள்ளது. இதன் அருமை பெருமைகளைக் காண்போம்

 

இந்தக் கவிதையில் கண்ட சில உண்மைகள்–

  1. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே புறச்சூழல் பாதுகாப்பு உணர்வு இருந்திருக்கிறது. காடுகளை கானக தேவதை, காட்டு ராணி என்று புகழ்ந்திருக்கிறார்கள். பூமாதேவி என்று பூமிக்கும் காடுகளுக்கும் நதிகளுக்கும் தாயார் பட்டம் சூட்டிய ரிக் வேதக் கருத்துகளை கிரேக்கப் புலவர்களும் தமிழ்ப் புலவர்களுமப்படியே ஏற்றுக் கொண்டனர்.

2.உலகிலேயே காடுகள் பற்றி எழுதப்பட்ட பழமையான அழகான கவிதை இது

 

3.காடுகளின் அற்புதமான வருணனை இதில் உளது. வண்டுகளின் ரீங்காரம், பறவைகளின் கீச்சொலி, தொலைதூர கிராம வீடுகளின் தோற்றம், வண்டிகளின் சப்தம், பசு மாடுகளின் ‘அம்மா’ ஒலி, மண் வாசனை, சில விநோதமான குரல்கள், மாடுகளை விரட்டும் ஒலி– என்று கதைகளிலும் நாவல்களிலும் படிக்கும் அத்தனை காட்சிகளும் சிறு கவிதையில் வந்து விடுகிறது.

 

  1. கவிஞர் கேட்கிறார்: ஏ கானகமே உனக்குப் பயமே இல்லையா? நீ ஏன் கிராமத்துக்கு வரக்கூடாது?
  2. இந்தக் கவிதையும் ரிக் வேதத்திலுள்ள சமத்துவக் கவிதைகளும் இந்து நாகரீகம் உலகின் மற்ற நாகரீகங்களைவிடப் பல்லாயிரம் ஆண்டுப் பழமையுடைத்து என்பதை நிலைநாட்டுகிறது.

 

6.முதல் வரி ‘அரண்யானி! அரண்யானி!’ என்று காட்டு ராணியை அழைக்கிறது. ரிக் வேத சம்ஸ்க்ருதச் சொற்களைத் தமிழர்கள் தன்னுடைடய அன்றாட உரையாடல்களில் பயன் படுத்துகின்றனர். அரண்யம்= காடு என்ற சொல் வேதாரண்யம், தர்பாரண்யம் (திரு நள்ளாறு), வடாரண்யம் (திருவாலங்காடு) என்று தமிழ்நாட்டிலும் நைமிசாரண்யம் தண்டகாரண்யம் என்று வடக்கிலும் புழங்குவதை நாம் நன்கறிவோம்.

 

ரிக் வேதத்தை வியாசர் தொகுத்த பாணியிலேயே புற நானூறும் ஏனைய சங்கப் பனுவல்களும் தொகுக்கப்பட்டன. கூடிய மட்டிலும் ஒரே கருத்துடைப் பாடல்கள் அடுத்தடுத்து வரும்; வெள்ளி கிரகம் பற்றிய பாடல்கள், இரங்கற்பாக்கள், மிகப் பழைய பாடல்கள் எல்லாம் ஒரு சேர வரும். புலவரின் பெயர் தெரியாவிட்டால் அவர்கள் வழங்கும் அடைமொழிகளைக் கொண்டு அவர்களை அழைக்கும் ரிக் வேத வழக்கமும் ( செம்புலப் பெயல் நீரார், தேய்புரிப் பழங்கயிற்றார்) ரிக் வேதத்தை ஒட்டியதே. ரிக் வேதத்தில் இருபதுக்கும் மேலான பெண் புலவர்கள் இருப்பது போல தமிழ் இலக்கியத்திலும் காணப்படுகிறது. உலகிலேயே மிக மிக முன்னேறிய இலக்கிய- நாகரீக சமுதாயம் – இந்து நாகரீகம் என்பதற்கு இவை அனைத்தும் சான்று பகரும்

 

இந்தக் கவிதையில் ‘அரண்யானீ! அரண்யானீ’’ என்று இரு முறை அழைக்கும் பாணியையும் புற நானூற்றுப் புலவர்களும் ஏனையோரும் பின்பற்றினர்:

பல் சான்றீரே! பல் சான்றீரே! (246, 301)

கலம்செய் கோவே! கலம்செய் கோவே! (228, 256)

அன்னச் சேவல்! அன்னச் சேவல்!(பாடல் 67)

பாசறையீரே! பாசறையீரே! (285)

 

இது போல ஐங்குறு நூற்றிலும் பல பாடல்களைக் காணலாம்.

 

இவ்வாறு இயற்கை வருணனைக்கும், இலக்கிய நயத்துக்கும் முன்னோடியாக இருக்கிறது இந்தக் கானக கவிதை.

கானகம் பற்றிப் பாடிய கவிஞர் எண்ணிக்கை பல ஆயிரம் இருந்தாலும் முதல் கவிஞர் ரிக் வேதப் புலவரே.

 

இதோ கவிதையின் தமிழ் மொழி பெயர்ப்பு

ஜம்புநாதன் அவர்களின் மொழிபெயர்ப்பைத் தழுவிய எனது மொழிபெயர்ப்பு :-

 

1.கானக ராணி! கானக ராணீ! காட்சியில் இருந்து மறைபவள் போலத் தோன்றும் கானக ராணியே! நீ ஏன் கிராமத்தை நாடுவதில்லை? உனக்கு பயமே கிடையாதா?

 

(தொலைவிலிருந்து பார்க்கும் கவிஞனுக்கு புகை மூட்டம் போலப் பனி மூட்டம் மூடிய மலைக் காடுகள மறைவது போலத் தென்படும்! கவிஞனுக்கு வியப்பு; நாங்கள் எல்லோரும் புலி, சிங்கம், மலைப் பாம்பு என்று காடுகள் பற்றி அஞ்சுகிறோமே; உனக்கு பயமே இல்லையா? நீயும் ஏன் எங்கள் கிராமத்துக்கு வரக்கூடாது?)

 

2.கிரீச் கிரீச் என்று வண்டுகளும், சுவர்க்கோ ழிகளும் வெட்டுக்கிளிகளும் போடும் ஒலிக்கு சிச்சிகப் பறவைகள் கொடுக்கும் பதில்— தாளமும் சுருதியும் சேர்ந்தது போல் உளதே!

 

(தமிழ் இலக்கியத்திலும் காளிதாசனிலும் இயற்கை ‘ஆர்க்கெஸ்ட்ரா’ பற்றிப் பல பாடல்கள் (ORCHESTRA IN NATURE) உள்ளன அதற்கெல்லாம் முன்னோடி இது!)

 

3.பசுக்கள் மேய்வதைக் கண்டால், வீடுகள் இருக்கும் இடம் போல இருக்கிறது. வண்டிகள் உன்னை விட்டு உருண்டோடுகின்றனவே

 

(மாலை வேளை நெருங்கி விட்டது; காட்டில் மேய்ந்த பசுக்களும் காளைகளும் வீடு திரும்புகின்றன; வண்டிக்காரர்கள் நடை கட்டுகின்றனர்; அற்புதமான வருணனை)

 

4.வனத்தின் தேவியே! ஒருவன் மாடுகளை அழைக்கிறான். மற்றொருவன் மரத்தை வெட்டுகிறான். இங்கு மாலை வேளையில் கேட்கும் ஒலிகளோ வனத்தில் வசிப்பவன் ஏதோ என்னவோ என்று அஞ்ச வைக்கிறது (இதற்கு சாயனர் பாஷ்யம், புலியோ திருடர்களோ என்ற அச்சம் என்று உரைக்கும்)

 

5.காடுகள் எவரையும் துன்புறுத்தாது —அதை எவரும் துன்புறுத்தாத வரை! இங்கு புசிப்பதற்கு இனிய பழங்கள் கிடைக்கின்றன.

 

  1. அருமையான வாசனையும் (பூக்கள்+ மண் வாசனை), பயிரிடப் படாமலேயே வளம் கொழிக்கும் மரங்களும், மிருகங்களுக்கு எல்லாம் தாயாகவும் விளங்கும் வன தேவதையே உன்னை வணங்குகிறேன்

 

இந்தக் கவிதையை பல வெளி நாட்டினர் பல சொல் மாற்றங்களுடன் மொழி பெயர்த்துள்ளனர். ஆனால் கானகத்தின் விளிம்பில் வசிக்கும் ஒருவன் இதைப் படித்தால் பொருள் நன்கு விளங்கும்; ஏனையோருக்கோ பொறிவிளங்காய் உருண்டையாகவே (பொருள் விளங்கா) நிற்கும்.

 

ஸரஸ்வதி நதி தீரத்திலும் சிந்து நதிக் கரையிலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் னால் ஸம்ஸ்க்ருதத்தில் ஒலித்த கவிதை என்பதை எண்ணும் போது மயிர்க் கூச்சம் ஏற்படுகிறது.

 

காட்டு ராணி வாழ்க! வன தேவதை வெல்க.

அரண்யானீ! அரண்யானீ!

-சுபம்–

பெண்களிடம் ரஹஸியம் சொல்லக்கூடாது; ஏன்? (Post No.4878)

 

பெண்களிடம் ரஹஸியம் சொல்லக்கூடாது; ஏன்? (Post No.4878)

 


WRITTEN by London Swaminathan 

 

Date: 3 April 2018

 

Time uploaded in London –  14-59 (British Summer Time)

 

Post No. 4878

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

((நல்லவர்களுக்குப் பிறந்தவர்கள் இதை ஷேர்‘ share  செய்வார்கள்; அல்லாதோருக்குப் பிறந்தவர்கள் இதை எழுதியவர் பெயரை வெட்டிவிட்டு தான் எழுதியது போலப் போடுவர்; அப்படிப் போடுவோரின் குடும்பத்தினரை நம்பாதீர்கள்))

பெண்களிடம் ஏன் ரஹசியத்தைச் சொல்லக்கூடாது என்பதற்குப் பல கதைகள் உள்ளன. நாகர்களும் ஒரு நாட்டுப்புற கதை சொல்லுவார்கள் (நாகர்கள் யார் என்ற எனது ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் வாசிக்கவும்).

 

கருடனுக்கும் நாகர்களுக்கும் உள்ள பகைமை மஹா பாரதக் கதைகளில் இருந்து உலகம் எங்கும் பரவியதால் இன்றும் பல நாடுகள் பாம்பைக் கவ்வும் கருடனைக் கொடியிலும், அரசாங்க முத்திரைகளிலும், கரன்ஸி நோட்டுகளிலும், நாணயங்களிலும் பொறித்துள்ளார்கள்

 

கருடன்- நாகர் சண்டை பற்றிய ஒரு கதைதான் இது. கருடனுக்குப் பயந்து ஒரு நாகம் ஓடி வந்தது. மனித உருவம் எடுத்துக் கொண்டது.  ஒரு பெண் பரிதாப்பப்பட்டு அவனுக்கு  அடைக்கலம் கொடுத்தாள். உடனே அந்த நாகம் உனக்கு கைம்மாறாக 500 யானைகள் தருகிறேன் என்று சொன்னது; நாட்கள் உருண்டோடின. அந்தப் பெண்ணின் பேராசை எப்போது எனக்கு 500 யானைகள் தருவாய்? எப்படித் தரப்போகிறாய் என்று நச்சரிக்க வைத்தது.

 

இந்த நாகமோ அந்தப் பெண்ணின் அழகில் மயங்கி , தான் யார் என்ற உண்மையைச் சொல்லிவிட்டது. பெண்களுக்கோ ரஹஸியத்தைக் காக்கும் சக்தி கிடையாது. உடனே அவள் இன்னொரு பெண்ணிடம் சொன்னாள். அந்தப் பெண்ணோ ஊருக்கே அச்செய்தியை தம்பட்டம் அடித்தாள்.

 

இந்த நாகத்தைத் தேடிக்கொண்டிருந்த கருடனும் மனித உருவில் சுற்றியதால் அவனுக்கும் செய்தி எட்டியது. உடனே நாகத்தைத் தேடி வந்து கொன்றது.

 

கதை புகட்டும் நீதி:– பெண்களிடம் ரஹஸியம் எதையும் சொல்லக் கூடாது.

உதயணனும் வீணையும் கதை

 

2600 ஆண்டுகளுக்கு முன்னர் வத்ஸ நாட்டை ஆண்ட மாபெரும் மன்னன் உதயணன். அவனுடைய கதை ஏராளமான தமிழ், ஸம்ஸ்க்ருத இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது. அந்த உதயணனின் ஒரு கதை இதோ:

 

உதயணன் ஒரு காட்டில் மான்களைத் தேடி வேட்டையாடிக் கொண்டிருந்தான். அப்போது ஒரு சபர (வேட்டைக்காரன்) குலத்தவன் ஒரு அழகிய பாம்பைப் பிடித்துக் கூடைக்குள் அடைத்தான். அதைப் பார்த்த உதயணன் பரிதாபப்பட்டு, ‘’அன்பனே அந்த பாம்பை வெளியே விட்டு விடேன்’’ என்றான்.

பாம்பைப் பிடித்த வேட்டைக்காரன் சொன்னான்:

இதோ பார் என் தொழில் பாம்பாட்டி வேலை; இதை ஆட வைத்து காசு பணம் சம்பாதிப்பது என் தொழில். ஆகவே என்னை வற்புறுத்தாதே என்றான்

 

 

உதயணன் சொன்னான்: இந்தாருங்கள் எனது தங்க கங்கணம். இதை வைத்துக் கொண்டு   பாம்பை விடுதலை செய்யுங்கள் என்றான். அந்த நாகம் அவனுக்கு ஒரு வீணையைக் கொடுத்தது. அதை அவன் வாசித்தால் யானைகளும் வந்து நிற்குமாம். அவன் வேண்டிய யானைகளைப் பிடித்துக் கொள்வானாம்.

 

 

அந்த கங்கணத்தில் ஸஹஸ்ரநீகா என்று மன்னன் பெயர் எழுதி இருந்ததால், அதை வேட்டைக்காரன் கொண்டு சென்று மன்னனிடம் கொடுத்தான். அதை யார் கொடுத்தார்கள்? அது எப்படி வந்தது? என்பதை எல்லாம் விசாரித்து அதன் மூலமாக அவன் 14 ஆண்டுகள் பிரிந்திருந்த தன் மனைவியையும் மகனையும் (உதயணன்) கண்டு பிடித்தானாம்.

ஜீமூத வாஹனன் கதை

 

உதயணன் கதை போலவே ஸம்ஸ்க்ருத நாடகம், கதைகளில் அதிக இடம் பிடித்தது ஜீமூத வாஹனன் கதை ஆகும். அவனது தியாகம், கருடனிடமிருந்து நாகர்களை விடுவித்தது. இந்தக் கதை ஹர்ஷனின் நாகானந்தம், பிற்காலத்தில் ப்ருகத்கதை, கதாசரித் சாகரம் முதலியவற்றில் இடம்பெற்றுள்ளது.

 

பஞ்ச தந்திரக் கதைகளில் இரண்டு கதை

 

ஹரிதத்தா என்ற விவசாயி எவ்வளவோ சாகுபடி செய்தும் விளைச்சல் கிடைக்க வில்லை. ஒரு நாள் அவனுடைய நிலத்தில், ஒரு பெரிய பாம்பைக் கண்டான். அதற்குப் பால் வார்த்தான். மறு நாள் அந்த இடத்தில் ஒரு தங்க நாணயம் கிடைத்தது. அதுமுதல், தினமும் பாம்புக்குப் பால் வார்த்தான். தினமும் ஒரு தங்கக் காசு கிடைத்தது. இதை அவன் மகன் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பேராசை பிடித்தவன். ஒரு யோஜனை தோன்றியது. பாம்பு வசிக்கும் இடத்தில் புற் றில் நிறைய தங்கக் காசுகள் இருக்கிறது போலும் ஆகையால் அதைத் தோண்டிப் பார்ப்போம் என்று சென்றான.

 

பாம்புப் புற்றைத் தோண்டுகையில் பாம்பு கடித்து இறந்தான். தன் மகனின் தீய செயலுக்கு தந்தை வருத்தம் தெரிவித்தான். பாம்பும் அவனுக்கு ஒரு விலை உயர்ந்த நகையைக் கொடுத்து இனிமேல் வரவேண்டாம் என்று சொன்னது.

இன்னொரு கதையும் நாகம் பற்றியது. மனிதர்களுக்கு ஒரு நாகம் பிறந்தது. அதை ஒரு அழகிய பெண்ணுக்குக் கல்யாணம் செய்து வைத்தனர். முதல் நாள் இரவில், அந்த நாகம் மனித உரு எடுத்து முதல் இரவு அறைக்குச் சென்றது. அந்த நேரத்தில் நாகத்தின் பெற்றோர்கள் அந்தப் பாம்பின் தோலை எரித்து விட்டனர். பின்னர் அந்த நாகம் மனித உடலுடனேயே இருந்தது.

 

 

இவ்வாறு நாகம் பற்றிய பல கதைகளில் அதைப் பாம்பாகாவும், மனிதனாகவும், பாதி பாம்பு, பாதி மனிதனாகவும் சித்தரிப்பது உண்டு.

 

உண்மையில் நாகத்தின் உருவத்தை வரைந்தோ அதன் முத்திரையை அணிந்தோ இருந்தோரை நாகர்கள் என்று சொல்லி இருக்க வேண்டும்; காலப் போக்கில் பாம்பும் மனிதனும் இடம் மாறி சுவை ஊட்டும் கதைகளாக மாறிவிட்டன.

–சுபம்–

 

 

 

கிரேக்க, இதாலிய நாடுகளில் பாம்பு வழிபாடு (Post No.4875)

கிரேக்க, இதாலிய நாடுகளில் பாம்பு வழிபாடு (Post No.4875)

 


WRITTEN by London Swaminathan 

 

Date: 2 April 2018

 

Time uploaded in London –  15-58 (British Summer Time)

 

Post No. 4875

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

(பிறர் எழுதியதைத் திருடுபவனும் பிறர் மனைவியைத் திருடுபவனும் பிறர் 

 

பொருளைத் திருடுபவனும் ஒன்றே – ஐன்ஸ்டீனின் அண்ணன்பெர்னார்ட் 

 

ஷாவின் தம்பிகாந்திஜியின் தாத்தா சொன்னது!!!)

 

ஸர்ப்ப , நாக என்ற இரண்டு ஸம்ஸ்க்ருதச் சொற்களில் இருந்து ஆங்கிலச் சொற்கள் ஸ்நேக் (ஸ் நாக(S+nake)) ஸெர்பெண்ட் (serpent), ஆகியன வந்தன என்பது பலருக்கும் தெரிந்திருக்கும் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரையுள்ள ஊர்ப் பெயர்களில் ஆயிரக் கணக்கான பெயர்களில் நாக அல்லது ஸர்ப்ப வருகின்றன. இன்றும் பாம்புகளை வழிபடும் நாக பஞ்சமியையும் வருண பஞ்சமியையும் கொண்டாடும் நாடு நமது இந்தியாதான். நாக பாஸம் என்ற அஸ்த்ரத்தின் நினைவாக நமது ஏவுகணைகளுக்கும் நாம் ‘நாக’ பெயர் சூடியுள்ளோம்.

 

 

நாகர்- பாண்டவர் மோதல் காரணமாகப் புறப்பட்ட மாய தானவன் என்ற நாகன் தென் அமெரிக்க மாயன் (Mayan Civilization) நாகரீகத்தை ஸ்தாபித்ததையும், குப்தர் கல்வெட்டுகளில் பலர் நாகர் பெயர்கள் இருப்பதையும், சங்க காலப் புலவர்களில் இருபதுக்கும் மேற்பட்ட நாகர்கள் பெயர்கள் இருப்பதையும், சிந்து சமவெளி- ரிக் வேதம் ஆகியவற்றில் நாக ராணி (Snake Queen) பற்றி காணப்படுவதையும், நல்லோர் அவையில் புகுந்த நாகத்தைக்கூட இந்துக்கள் கொல்ல மாட்டார்கள் என்ற இலக்கியக் குறிப்புகளையும் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளில் வடித்தேன். இப்போது மேலும் ஒரு புத்தகததைப் படித்தேன். சுவையான குறிப்புகளைச் சுவைத்தேன்; அவைகளை உங்களுடன் பகிர்வேன்.

காஷ்மீரின் வரலாற்றைக் கூறும் ராஜ தரங்கிணி என்ற நூலை கல்ஹணர் என்ற பிராஹ்மணன் 1000 ஆண்டுகளுக்கு முன் ஸம்ஸ்க்ருதத்தில் எழுதினான். அவனுக்கு முன்பாக நீல மத புராணம் என்ற புஸ்தகத்தில் கூறிய பல விஷயங்களை அவனும் குறிப்பிட்டுள்ளான்.

 

காஷ்மீருக்கும் நாகர்களுக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு. இங்கே நாகர் என்பதை மலை ஜாதி மக்கள் என்று கொள்ளாமல் உண்மையான பாம்பு என்றே கொண்டு எழுதி இருப்பதால் இன்னும் சுவை கூடுகிறது. எததனையோ நாகர் பெயர்களை மஹாபாரதம் முதலிய நூல்கள் குறிப்பிட்டாலும் அதிகமான நாகர் பெயர்களின் பட்டியல் நீலமத புராணத்தில்தான் இருக்கிறது. 527 நாகர்களின் பெயர்கள் இதில் உள்ளன!

 

அபுல் பாஸல் என்பவர் மொகலாய மன்னன் அக்பரின் சபையில் பிரதம மந்திரி. அவர் எழுதிய நூலிலும் காஷ்மீரில் நாகர்கள் பற்றிய நம்பிக்கைககள், கதைகளைத் தொகுத்து நமக்கு அளித்துள்ளார்.

 

தென்னாட்டில் நாகர் சிலை இல்லாத கோவில்களே இல்லை என்றே சொல்லலாம்

 

கிரேக்க நாட்டில் பாம்பு வழிபாடு

நம்முடைய புராண விஷயங்களைக் காப்பியடித்து உருத்தெரியாமல் திரித்தவர்கள் கிரேக்கர்கள்- கிருஷ்ணர் செய்த பல லீலைகளை ஹெர்குலீஸ் செய்ததாக கிரேக்கர் சொல்லுவர். கிருஷ்ணன் கொடிய காளீயன் என்ற பாம்பை அடக்கி ஒடுக்கியது போல ஹெர்குலீஸும் ஒரு பாம்பை த்வம்சம் செய்ததாகக் கதை. அபல்லோ (Apollo Vs Python) என்னும் தெய்வம் பைதானுடன் (மலைப்   பாம்பு) சண்டை இட்டதாக இன்னும் ஒரு கதை.

 

கிரேக்க நாட்டில் மலைக் குகைகள், பாதாள அறைகள் ஆகியவற்றில் இருந்து ஆரூடம் சொல்லுவோர் மீது கிரேக்கர்களுக்கு அதிக நம்பிக்கை உண்டு.

 

கடமஸ் (Cadmus) என்பவன், அவனது ஆட்களைக் கொன்ற பாம்பை சண்டை போட்டுக் கொன்றதாகவும் புராணக் கதைகள் பேசுகின்றன.

 

எகிட்னா (Echidna) என்ற ஸர்ப்ப தேவதையைப் புணர்ந்து நாக வம்ஸத்தை ஹெர்குலீஸ் தோற்றுவித்தாராம்.அவர்கள் (Scythians) சிதியர், சகரர் எனப்படுவர்.

 

கிரேக்க நாட்டில் டெல்பி, த்ரோபோனியஸ் ஆகிய இடங்களில் குறி சொல்லும் அறைகளில் பாம்புகள் வைக்கப்பட்டிருந்தன எபிடேரஸ் என்ற இடத்தில் இருந்த பாம்புகளுக்கு இரண்டாம் நூற்றாண்டு வரை பால் வார்க்கப்பட்டது. புனித இடங்களைப் பாது காக்கவும், குறிகள் சொல்லவும், கடவுளைக் குறிக்கவும், நோய்களைத் தீர்க்கவும் பாம்புகள் உதவுவதாக கிரேக்கர் கதைகள் உள்ளன.

 

அலெக்ஸாண்டரின் தாய் ஒலிம்பியாஸ் அவரது வீட்டில் ஒரு பாம்பு வளர்த்ததாக ப்ளூடார்ச் (Plutarch) எழுதியுள்ளார். அலெக்ஸாண்டர் ஒரு நாக கன்னிகைக்குப் பிறந்ததாக லூஸியன்(Lucian)  எழுதி வைத்தார். ஒரு வேளை நாகர் வம்ஸத்தில் பிறந்த பெண், அவருடைய தாயார் போலும்!

 

 

இதாலியில் இந்தியப் பாம்புகள் இறக்குமதி

ரோமாபுரியை ஆண்ட டைபீரியஸ் Tiberius (கி.பி.14-37) ஒரு செல்லப் பிராணியாக ஒரு நாகத்தை வளர்த்து வந்தார். ஒரு நாள் எறும்புகள் அதைக் கடித்துக் குதறி இருந்ததைக் கண்டார். பின்னர் இந்தியாவில் இருந்து ஒரு நாகப் பாம்பை இறக்குமதி செய்து ஏதென்ஸ் நகரத்தில் ஜூபிடர் ஒலிம்பியஸ் கோவிலில் வைத்தார். பாம்பைக் கொன்ற பாபத்துக்குப் பரிகாரம் செய்ய இப்படி காணிக்கை கொடுத்தார் போலும்!

 

மினர்வா (Minerva) என்னும் தேவதை லவாகூன் என்பவரைக் கொல்ல இரண்டு பாம்புகளை அனுப்பியதாக ரோமாபுரி வரலாறு சொல்லும்.

 

அந்த இடம் புனிதமானது என்பதற்காக சுவரில் இரண்டு பாம்பு ஓவியங்கள் வரையப்பட்டனவாம்.

 

கி.மு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிபியோ ஆப்ரிகானஸ் (Scipio Africanus) என்ற ரோமாபுரி தளபதி ஒர் நாகத்தால் (நாக கன்னிகை) வளர்க்கப்பட்டாராம்.

 

அகஸ்டஸ் சீசரின் தாயார் அடியா ( Atia), அகஸ்டஸை ஒரு நாகத்திடம் பெற்றுக் கொண்டதாக நம்பினார். இந்தக் கதைகளில் சம்பந்தப்பட்டவர் எல்லாம் நாக வம்ச மனிதர்களாக இருக்க வேண்டும்.

 

கிரேக்க ரோமானிய நாணயங்களில் பாம்பு உருவங்கள் இருப்பது 2000 ஆண்டுக்கு முந்தைய நம்பிக்கைகளை உறுதி செய்கின்றன.

அழகிகளும் நாகங்களும்!

 

ஆர்கிவ் ஜோனோ (Argive Juno) கோவில் அருகில் ஒரு  இருண்ட பெரிய குகையில் ஒரு பாம்பு வசித்ததாக ஏலியன் (Aelian) எழுதுகிறார். லாடியத்தில் (Latium) வசித்த கன்னிப் பெண்கள் உண்மையில் கற்புக்கரசிகளா என்று கண்டறிய ஆண்டுதோறும் இந்தக் குகைக்குள் கன்னிப் பெண்கள் அனுப்பப்படுவராம். அவர்கள் கொடுக்கும் உணவுகளை அந்த நாகம் ஏற்றால் அவர்கள் கன்னித் தன்மை அழியாதவர் என்பது உறுதி ப்படுவதோடு அவ்வாண்டு அமோக விளைச்சல் கிடைக்குமாம். இதே போல் எபிரஸ் (Epirus) என்னும் இடத்தில் நிறைய பாம்புகள் இருந்தனவாம். அங்கு கன்னிப் பெண்கள் நிர்வாண நிலையில் உணவுகளைக் கொண்டு செல்வராம். பாம்புகள் சாப்பிட்டால் நல்ல அறுவடை நடக்குமாம்.

இப்படிப் பாம்புகள் பற்றிப் பல நம்பிக்கைகள் இருந்ததை மேற்குறித்த   கிரேக்க ரோமானிய எழுத்தர்கள் மூலமும் ஆசிரியர்கள் மூலமும் அறிகிறோம்.

 

My Old Research Articles

நாகர் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/நாகர்/

யாதவர்கள் மீதும் பாண்டவர்கள் மீதும் கோபம் கொண்டநாகர்கள் பழிவாங்குவதற்காக ஒரு தருணத்தை எதிர் பார்த்துக் காத்திருந்தனர். மய தானவன் என்ற ஒரு நாகர்தலைவன் மட்டும் அர்ஜுனன் கிருஷ்ணர் தரப்பில் இருந்தான்.அவனைக் கானகத் தீயிலிருந்து மீட்டதால்பாண்டவர்களுக்கு …

நாகர் கதை | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/நாகர்-கதை/

அர்ஜுனனும் கிருஷ்ணனும் பழங்குடி நாகர்கள் எதிர்ப்பையும் மீறி காண்டவ வனத்தை எரித்ததையும் இதனால் நாகர்கள் –பாண்டவர்கள் ஜன்மப் பகை பல தலைமுறைகளுக்குப் பரவி பரீட்சித் கொல்லப்படவும், ஒரு நாகா இன ஆள் (பாம்பு) அவரைக் கொன்றதால் ஜனமேஜயன் சர்ப்ப யக்ஞம் …

 

Tamil | Tamil and Vedas | Page 64

https://tamilandvedas.com/category/tamil/…:/tamilandvedas…/64/ –

8 Dec 2012 – மாயாக்கள் சொன்னதன் உண்மை என்ன? மாயா இன மக்கள் இந்தியாவிலிருந்து சென்ற நாகர்கள் என்றும்பாண்டவர்கள்– நாகா இன மோதல் அதிகரித்து ஜனமேஜயனின் சர்ப்ப யாகத்தில் (அதாவது நாகர்கள்படுகொலை) முடிவடைந்தது என்றும் நான் ஏற்கனவே எழுதிய கட்டுரைகளில் …

நாக ராணி | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/நாக-ராணி/

Minoan Snake Goddess 1600 BC. சிந்து சமவெளியில் கிடைத்த முத்திரையில் ஒரு கடவுளுக்கு இரு புறமும் இரண்டு நாகங்கள் படம் எடுத்த நிலையில் இருக்கின்றன. வேதங்களில் நாகராணியைப் பற்றி பல குறிப்புகள் உள்ளன. இப்போது நடை பெறும் வேத ஆராய்ச்சிகள் பல புதிய உண்மைகளைத் …

 

 

நான் கண்ட சுனாமி அதிசயம் ! அலைகளில் …

swamiindology.blogspot.com/2016/04/post-no-2722.html

13 Apr 2016 – (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). sesha, pullaboothangudi. Wave. பாம்புத் தலை வடிவில் பேரலைகள்!! நான் வாகன ஆராய்ச்சி செய்பவன். பல வாகன ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி, இதே பிளாக்கில் வெளியிட்டிருக்கிறேன். அப்படி நாக வாஹன படம் ஒன்றை எனது பைலில் ‘சேவ்’ …

 

Picture from Meera Rai post

Serpent Queen:Indus Valley to Sabarimalai | Tamil and Vedas

Serpent Queen:Indus Valley to Sabarimalai

17 Jun 2012 – British archaeologist Arthur Evans excavated at the palace of Knossos in Crete and revealed to the world the fascinating details of a new civilization that existed between 2700 BC and 1500 BC coinciding with theIndus Valley Civilization. The famous serpent queen figure is of a priestess holding two snakes …

 

 

 

Snakes and Snake Bites in Mahabharata! | Swami’s Indology Blog

swamiindology.blogspot.com/2015/03/snakes-and-snake-bites-in-mahabharata.html

10 Mar 2015 – The stories in Hindu scriptures are real life stories. They are not concocted. The best examples are stories of snake bites. From the story of Parikshit to down south Tamil stories of Periya Purana and Tiruvilaiyadal Purana, we hear about several deaths due to snake bites. In some stories gods or saints came ..

 

included the Olmec, the Mixtec, the Toltec, the Aztec, and the Maya.

snake miracle | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/snake-miracle/

(for old articles go to tamilandvedas.com ORswamiindology.blogspot.com). sesha … Though there is no religion or culture without a snake in it, Hindus are the only community who worship snakes from the Vedic days until today. There are millions of … All the Hindu gods are linked with a snake in one way or another. All the .

 

Are Mayas, Indian Nagas? | Tamil and Vedas

Are Mayas, Indian Nagas?

28 Apr 2012 – Maya calendar begins on 11th August 3114 BC. Indiancalendar Kaliyuga begins in 3102 BC. But Hindu mythology is very clear about their existence long before Kali yuga. Kaliyuga is the last of the four yugas. But Mayas are silent about their existence before this date 3114 BC. The amazing co incidence …

Amazing Similarities between Mayas and Hindu Nagas | Tamil and …

https://tamilandvedas.com/…/amazing-similarities-between-mayas-and-hindu-nagas/

28 Apr 2012 – Amazing Similarities between Mayas and Hindu NagasAmazing Similarities between Mayas and Hindu Nagas ( The first part of this article is Are Mayas, Indian Nagas?) 1. Strange co incidence: Kali Yuga 3102 BC and Maya Yuga beginning 3114 BC 2. Maya appearance:Maya people of Central America …

 

Naga Yakshi | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/naga-yakshi/

We have Nagapanchami celebrations celebrated throughout India where live snakes are worshipped. Hindus respect Nature and Environment and use the natural resorces to the minimum. Snake Goddesses such as Manasa Devi and Naga Yakshi are worshipped in India. The Vedas has an authoress named as Serpent …

Gondwana | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/gondwana/

They celebrate Hindu festivals such as Dasara and Naga Panchami. Like any other village community they have their own stories for everything. They are well versed in arts and building. They have divided themselves into four different castes lie the four divisions of work in ancient Hindu society. They form the biggest tribe …

 

–சுபம்–