குஞ்சிதபாதம் என்றால் என்ன? (Post No.4833)

Written by London Swaminathan 

 

 

Date: 20 MARCH 2018

 

 

Time uploaded in London – 6-24 AM

 

Post No. 4833

Pictures shown here are taken by London swaminathan

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

குஞ்சிதபாதம் என்பதற்கு இரண்டு பொருள் உண்டு;

 

சிதம்பரம் முதலிய இடங்களில் நடராஜர் காலைத் தூக்கி ஆடுவார். அப்போது வளைந்து நிற்கும் — தூக்கிய திரு அடிக்கு குஞ்சிதபாதம் என்று பெயர்.

 

மற்றொரு பொருள் சிதம்பரத்தில் தயாரிக்கப்படும் மூலிகை வட்டமாகும். இது நடராஜர் காலை அலங்ரிக்கும்; வெட்டிவேர் மற்றும் மூலிகைப் பொருளைக் கொண்டு வட்டமாகத் தயாரித்து இருப்பர். அதை நடராஜனின் காலில் அணிவிப்பர்.

 

காஞ்சிப் பெரியவர் சமாதி அடைவதற்கு ஓராண்டுக்கு முன்னர் சிதம்பரம் சென்று தரிசிக்க வேண்டும் என்றார். அவரது உடல்நிலை இருக்கும் நிலையைப் பார்த்து தொண்டர்கள் மிகவும் தயங்கினர். அவரது எண்ண அலைகள் நடராஜர் காதுகளை அடையவே அற்புதம் நிகழ்ந்தது. மறு நாளே சிதம்பரம் தீட்சிதர் சிலர் பிரசாதத்துடன் வந்து சுவாமிகளைத் தரிசித்துச் சென்றனர்! அவர்கள் நடராஜப் பெருமானின் காலை அலங்கரிக்கும் குஞ்சித பாதத்தையும் கொண்டு வந்தனராம்; அதை அவர் தன் சிரம் மேல் வைத்து வணங்கினாராம்.

அகராதியில் இல்லாத தமிழ் சொல்!

குஞ்சிதபாதம் என்றால் என்ன? என்று தமிழ் அகராதியில் தேடினேன். ‘நடராஜரின் வளைந்த பாதம்’ என்ற செய்தி மட்டுமே வந்தது.

 

ஆ.சிங்காரவேலு முதலியாரின் தமிழ் என்சைக்ளோபீடியாவிலும் (அபிதான சிந்தாமணி) தேடினேன்; விக்கிபீடியாவிலும் தேடினேன்; பயனிலை.

கூகுளில் தேடினேன்— திரு, திருமதி. குஞ்சிதபாதங்கள் வந்தனர்.

 

இன்னும் ஆழமாகத் தேடினேன்; காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் குஞ்சிதபாதம் கொண்டுவரச் சொன்ன சம்பவம் வந்தது.

 

நாங்கள் மார்ச் மாத முதல் வாரத்தில் சிதம்பரம் சென்ற போது மேடை மீது ஏறி நின்று நடராஜப் பெருமானையும், சிவகாமியையும் தரிசிக்க ஒரு தீட்சிதர் உதவி செய்தார். அவரிடம் குஞ்சித பாதம் கேட்ட போது அருள்கூர்ந்து கொடுத்தார். அது முழுக்க முழுக்க வெட்டிவேரினால் ஆனது- ஒரே கம கம  வாசனை; இப்பொழுது எங்கள் வீட்டு சுவாமி ரூமில் (PRAYER ROOM) மணம் பரப்பி வருகிறது.

 

–SUBHAM—

 

(யாரைக் கடவுள் காப்பாற்றுவார்?  பிளாக்குகளிலும், ஃபேஸ்புக்கிலும் வரும் கட்டுரைகளைத் திருடாமல் — எழுதியவர் பெயருடன் வெளியிடுபவர்களைக் கடவுள் காப்பாற்றுவார். யாருக்கு அரசியல், சமூக விஷயங்களில் கருத்துச் சொல்லவும், குறை கூறவும், கண்டிக்கவும் உரிமை உள்ளது? மற்றவர் படங்களையும் படைப்புகளையும் திருடாதவனுக்கு பேஸ்புக்கிலும் பிளாக்குகளிலும் கருத்துச் சொல்ல உரிமை உண்டு)

 

சூரியனோடு சுற்றும் ரிஷி – சூரிய ரகசியம்! – 2 (Post No.4832)

Date: MARCH 20, 2018

 

 

Time uploaded in London- 5-05 am

 

 

WRITTEN by S NAGARAJAN

 

 

Post No. 4841

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

மஹாபாரத மர்மம்

 

சூரியனோடு சுற்றும் ரிஷி – சூரிய ரகசியம்! – 2

 

ச.நாகராஜன்

சூரியன் சொல்லத் தொடங்கினார்:

“இவர் அக்னி அல்லர். அசுரனும் அல்லர். உஞ்சவிருத்தி விரதத்தில் சித்தி பெற்ற இந்த முனிவர் சுவர்க்கத்தை அடைந்தார். கனிகளையும் ஜலத்தையும் காற்றை அருந்துபவருமான இவர் சமாதியில் இருந்தார்.

சுவர்க்கம் அடைவதற்குக் காரணமான ஈஸ்வரரை வேத சம்ஹிதைகளால் துதித்தார்.

இந்த வேதியர் ஆசையற்றவர். உஞ்ச சீலத்தை ஆகாரமாக உடைய இவர் அனைத்துப் பிராணிகளின் நலத்திலும் அக்கறை உள்ளவர்.

இப்படிப்பட்டவர்கள் அடையும் உத்தம கதியை அவர் அடைந்தார்.

 

இதைக் கேட்ட நாகன் தன்னிடம் வந்த பிராம்மணரிடம் தான் கண்டதைக் கூறியதோடு, “ஓ! அந்தணரே!அந்த சூரிய மண்டலத்தில் இவ்விதமாக இந்த ஆச்சரியம் என்னால் பார்க்கப்பட்டது. அவர் சூரியனோடு சேர்ந்து சூரியனுடன் சுற்றி வருகிறார்.” என்றான்.

 

இதைக் கேட்ட அந்தணர் நாகனிடம், “சந்தோஷம்! நான் போகிறேன். நான் எதை நினைத்து வந்தேனோ அதை உன்னால் அடைந்து விட்டேன். நான் உஞ்சவிருத்தி விரதத்தை அனுஷ்டிப்பேன். உன்னிடமிருந்து விடை பெறுகிறேன்.” என்று கூறிக் கிளம்பினார்.

அவர் உடனடியாக சியவன மஹரிஷியை அணுகினார்.

சியவனரால் ஜனக மன்னனின் இல்லத்தில் நாரதருக்கு இந்த விஷயம் சொல்லப்பட்டது.

நாரதர் இதை இந்திரனுக்குக் கூறினார்.

இந்திரன் அனைத்து வேதியர்களுக்கும் இதைக் கூறினான்.

 

இந்த வரலாற்றால் உந்தப்பட்ட நாகனைச் சந்தித்த அந்த அந்தணர் உஞ்சசீலத்தை ஆகாரமாக உடையவராகி வனத்தினுள் சென்றார்.

மிகச் சுருக்கமாக சூரியனைப் பற்றிய விவரங்கள் இங்கு தரப்பட்டுள்ளது.

இந்த வரலாற்றில் சூரியனுடைய ஆச்சரியங்களை நாம் காண்கிறோம்.

பல கோடி ஆண்டுகளாக பல கோடி ஜீவராசிகளுக்கு அனைத்தையும் நல்கும் சூரிய சக்தியை அறிவியல் வியக்கிறது.

அறிவியலில் சூரியனின் ஆற்றலைப் பல்லாயிரம் பக்கங்களில் விவரிக்கக் காணலாம்.

ஆனால் சூரிய கிரணங்களில் கிளைகளில் இருக்கும் பட்சிகள் போலச் சித்தர்கள் இருப்பதையும், சூரியனோடு சுற்றும் அந்தணரையும் நாம் அறிவியலில் படிக்க முடியாது.

அதற்கு மஹாபாரதமே துணை!

சூரியனைக் குறித்துப் பல நூறு துதிகள் உள்ளன. ஏன் என்பதற்கான காரணம் சூரியனின் அளவிலா ஆச்சரியங்களே காரணம்!

(ஆதாரம்: மஹாபாரதம், ம.வீ.இராமானுஜாசாரியாரால் பதிக்கப்பெற்றது)

 

(யாரைக் கடவுள் காப்பாற்றுவான்?  பிளாக்குகளிலும்ஃபேஸ்புக்கிலும் வரும் கட்டுரைகளைத் திருடாமல் — எழுதியவர் பெயருடன் வெளியிடுபவர்களைக் கடவுள் காப்பாற்றுவார். யாருக்கு அரசியல்சமூக விஷயங்களில் கருத்துச் சொல்லவும்குறை கூறவும்கண்டிக்கவும் உரிமை உள்ளதுமற்றவர் படஙகளையும் படைப்புகளையும் திருடாதவனுக்கு பேஸ்புக்கிலும் பிளாக்குகளிலும் கருத்துச் சொல்ல உரிமை உண்டு)

***

 

நெற்றிக் கண் ! சூடான தோசை ! சுவைமிகு சிங்கப் பெருமாள் கோவில்! (Post No.4830)

Written by London Swaminathan 

 

 

Date: 19 MARCH 2018

 

 

Time uploaded in London – 6-21 am

 

Post No. 4830

Pictures shown here are taken by London swaminathan

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

கோவில் என்றவுடன் கடவுளின்  பெயர், சந்நிதிகள், சிலைகள் என்று வருணிக்கத் துவங்கி விடுவர். எனது அணுகு முறை வேறு: முதலில் ‘புல்லட் பாயிண்ட்ஸ்’- பின்னர் விரிவான விளக்கம்; நானும் என் தம்பியும் மார்ச்  முதல்வாரத்தில் சிங்கப் பெருமாள் கோவில் பெருமாளைச் சேவித்தோம். இதோ முதலில் அதிசய மற்றும் சுவையான செய்திகள்:

This is not the main shrine; outside the temple.

1.நெற்றிக் கண் பார்க்கலாம்!

2.அதிசய அழிஞ்சில் மரம் காணலாம் (முந்தைய கட்டுரையில் காண்க)

  1. சூடான தோசைப் பிரஸாதம் சாப்பிடலாம்

4.பாரீஸ் நகர லவ்வர்ஸ் லாக் LOVERS LOCKS போல இங்கே பிராப்ளம் லாக்

PROBLEM LOCK சுவாமிக்கு சார்த்தலாம்

5.நரசிம்மர் சிலையின் மேல் சூரிய ஒளி விழுவதை சில மாதங்களில் காணலாம்

 

தலைப்புச் செய்திகளைக் கொடுத்துவிட்டேன் இனிமேல் விரிவான செய்திகள்:

 

சிங்கப் பெருமாள் கோவில் காஞ்சீபுர மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள நரசிம்மர், பாடலாத்ரி நரசிம்மர் என்று அழைக்கப்படுகிறார். பாடலாத்ரி என்றால் சிவப்பு மலை. ஜாபாலி முனிவருக்கு இறைவன் காட்சி கொடுத்த இடம்..

 

இங்கு ஒவ்வொரு முறை தீபாரதனை காட்டும் போதும், பட்டர் அவர்கள், நரசிம்மரின் நெற்றிக் கண்ணைக் காட்டுகிறார்.சிவ பெருமானுக்கே உள்ள இந்த அம்சத்தை இங்கே காணலாம் ஹிரண்யகசிபு என்ற அரக்கனைக் கொன்றவுடன் கோபத்துடன் வந்த கோலம் இது. நரசிம்மாவதாரம், பத்து அவதாரங்களில் ஒன்று.

 

பேயாழ்வாரால் பாடப்பட்ட தலம்; 108 வைணவ திருப்பதிகளில் ஒன்று; இது சுமார் 1500 ஆண்டுப் பழமை வாய்ந்த பல்லவ குடைவரைக் கோவில்; ஒரு சிறிய குன்றின்மீது கோவில் அமைந்துள்ளது.

 

நரசிம்மப் பெருமாளைத் தரிசித்துவிட்டு கோவிலை வலம் வரும்போது, சூடான தோசைப் பிரசாதம் கிடைக்கும். விலை பத்து ரூபாய்; புளியோதரை சர்க்கரைப் பொங்கலும் விற்கிறார்கள். எங்கள் மதுரை அழகர் கோவில் அடை அளவுக்கு ருசி இல்லாவிடினும், பசிக்கு உதவும் அருமருந்து இது.

இன்னும் கொஞ்சம் நடந்தால் அழிஞ்சில் மரத்தைக் காணலாம். இது பற்றிய அற்புதச் செய்திகளை ஆதி சங்கரரின் சிவானந்தலஹரி மூலமும் ஆண்டாளின் நாச்சியார் மொழி மூலமும் ஏற்கனவே எழுதிவிட்டேன்.

 

கோவிலுக்கு வெளியே வந்தால் ஒரு நரசிம்மர் சந்நிதி உள்ளது; அங்கே பூட்டுகளாகத் தொங்கு கின்றன. பாரீஸிலும் பல ஐரோப்பிய நகரங்களிலும் ஆற்றுப் பாலங்கள் தோறும் பூட்டப்பட்ட பூட்டுகளும் அதன் மேல் காதலன்–காதலி பெயர்களும் இருக்கும்; இதன் தாத்பர்யம் என்னவென்றால் அந்த ஜோடி பூட்டு போல இணைந்திருக்குமாம் ( பூட்டைப் பூட்டிவிட்டு வீடு திரும்புவதற்குள், ஜோடிப்புறாவில் ஒன்று பறந்துபோனாலும் அதிசயமில்லை!!!)

நரசிம்மப் பெருமாள் கோவிலில் ஏன் இப்படிப் பூட்டு போடுகிறார்கள் என்று வினவியபோது கிடைத்த விடையில், பிரச்சினைகள் உள்ளோர் அது தீரும் வரை இப்படிப் பூட்டுப் போட்டு வைத்திருப்பராம்; பிரச்சனை தீர்ந்த பின்னர் அதை எடுத்துவிடுவராம்.

ஆண்டுதோறும் சில மாதங்களுக்கு நரசிம்ம மூர்த்தி மீது சூரிய ஒளி படுவதும் கோவிலின் சிறப்பு.

 

சாது சந்யாசிகள்

இந்தக் கோவிலுடன் இணைத்துப் பேசப்படும் முனிவர் ஜாபாலி என்பவர் ஆகும். ராமாயணத்தில் ஒரு ஜாபாலி உண்டு. ஆயினும் அவர்தான் இவர் என்று சொல்வதற்கில்லை. சங்க இலக்கியப் புலவர் பட்டியலில் கூட வால்மீகி உண்டு; அவர் ராமாயணம் எழுதிய வால்மீகி இல்லை. ஏனெனில் 2000 ஆண்டுப் பழமையான சங்க இலக்கியத்துக்கு பல ஆயிரம் ஆண்டு முன்னர் நடந்தது ராமாயணம். அவர் ராமனின் சமகால முனிவர்.

 

எந்த ஆண்மகனின் வெற்றிக்கும் பின்னால்  ஒரு பெண் உண்டு- There is a woman behind every man’s success என்று சொல்லுவர்.

அது உண்மையோ இல்லையோ எந்தக் கோவிலின் மஹிமைக்கும் பின்னால் ஒரு முனிவர் அல்லது சித்தர் அல்லது ரிஷி உண்டு There is a Rishi or Saint behind every Hindu Temple என்பது உண்மையே; இந்தக் கோவிலில் ஜாபாலி முனிவர் தொடர்பு இருப்பது போல சித்தர்கள் சமாதி உள்ள கோவில்களும் முனிவர் தொடர்புள்ள கோவில்களும் தன ஆகர்ஷணமும்  (பணம்) ஜன ஆகர்ஷணமும் (மக்கள் கூட்டம்) உடைத்தாய் இருக்கின்றன.

((யாரைக் கடவுள் காப்பாற்றுவான்?  பிளாக்குகளிலும், ஃபேஸ்புக்கிலும் வரும் கட்டுரைகளைத் திருடாமல் — எழுதியவர் பெயருடன் வெளியிடுபவர்களைக் கடவுள் காப்பாற்றுவார். யாருக்கு அரசியல், சமூக விஷயங்களில் கருத்துச் சொல்லவும், குறை கூறவும், கண்டிக்கவும் உரிமை உள்ளது? மற்றவர் படஙகளையும் படைப்புகளையும் திருடாதவனுக்கு பேஸ்புக்கிலும் பிளாக்குகளிலும் கருத்துச் சொல்ல உரிமை உண்டு))

Lovers’ Locks in Seine River Bridge, Paris, France

 

–சுபம், சுபம்–

 

சூரியனோடு சுற்றும் ரிஷி – சூரிய ரகசியம்! –1 (Post No.4829)

Date: MARCH 19, 2018

 

 

Time uploaded in London- 5-10 am

 

 

WRITTEN by S NAGARAJAN

 

 

Post No. 4829

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

மஹாபாரத மர்மம்

 

சூரியனோடு சுற்றும் ரிஷி – சூரிய ரகசியம்! – 1

 

ச.நாகராஜன்

 

மஹாபாரத மர்மங்கள் ஏராளம். அதை முழுதுமாக அறிந்து கொள்ள ஒரு ஆயுள் போதாது.

 

அது விளக்கும் அற்புத இரகசியங்களும் ஏராளம். விண்டுரைக்கும் மர்மங்களும் ஏராளம்.

அதில் ஒன்று தான் சூரிய தேஜஸின் ரகசியம்.

 

சாந்தி பர்வத்தில் 371,372,373,374,375 ஆகிய அத்தியாயங்களில் இதை முழுதுமாகப் படிக்கலாம்.

 

அத்தியாயம் 371 – நாகன் பிராம்மணரைக் கண்டு பேசியது

அத்தியாயம் 372 – நாகன் சூரியனிடத்துள்ள அதிசயங்களை பிராம்மணருக்குச் சொல்லியது

அத்தியாயம் 373 – சூரியன் தன்னிடம் பிரவேசித்த தேஜஸின் வரலாற்றைச் சொல்லியது

அத்தியாயம் 374 – பிராம்மணர் நாகனிடம் விடைபெற்றுச் சென்றது

அத்தியாயம் 375 – பிராம்மணருக்கும் நாகனுக்கும் நடந்த சம்வாதமான கதை உலகில் வந்த முறை

 

இந்த அத்தியாயங்களில் உள்ள சுவாரசியமான விஷயங்களின் சுருக்கத்தை மட்டும் இங்கு காணலாம்.

தர்மாரண்யன் என்ற பெயர் கொண்ட பிராம்மணன் நாகராஜனான பத்மநாபன் என்ற நாகனைப் பார்க்கச் சென்றான்.

அவனைச் சந்தித்த பத்மன், அந்த பத்மன் நானே என்கிறான்.

உடனே பிராம்மணன் உன்னிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்று வந்துள்ளேன் என்று கூறி, “சூரியனிடம் நீ ஆச்சரியமான எதையாவது பார்த்திருந்தால் அதைச் சொல்ல வேண்டும்” என்று சொன்னான்.

 

உடனே பத்மன், “சூரிய பகவானானவர் அநேக ஆச்சரியங்களுக்கு இருப்பிடம். அவராலேயே மூன்று உலகங்களிலும் உள்ள அனைத்துப் பிராணிகளும் பிரவிருத்திக்கின்றன.

அவருடைய ஆயிரம் கிரணங்களிலும் நன்றாக சித்தி பெற்ற முனிவர்கள் தேவர்களுடன் கூட, கிளைகளில் பட்சிகள் போல ஆஸ்ரயித்துக் கொண்டு வசிக்கின்றனர்.

 

அவரிடமிருந்து பெரிய வாயுவானது கிளம்பி அவரது கிரணங்களை ஆஸ்ரயித்துக் கொண்டு ஆகாயத்தில் விருத்தி அடைகின்றது.

அவரிடம் இதை விட மேலான ஆச்சரியம் என்ன இருக்கிறது? அந்த வாயுவைப் பிரித்து வர்ஷா காலங்களில் ஜலத்தைப் பொழிகிறார்.

 

இதை விட ஆச்சரியம் வேறு என்ன வேண்டும்?

அவருடைய மண்டலத்தின் மத்தியில் இருந்து கொண்டு  அந்தர்யாமியானவர் பரமமான காந்தியினால் ஜ்வலித்துக் கொண்டு உலகங்களைப் பார்க்கிறார்.

இதை விட ஆச்சரியம் வேறு என்ன வேண்டும்?

அவருடைய பாதம் போன்ற சுக்கிரன் ஆகாயத்தில் மேகமாகி வர்ஷா காலங்களில் ஜலத்தை விடுகிறது.

தான் விட்ட ஜலத்தை எட்டு மாதங்கள் இழுக்கிறார்.

இதை விட ஆச்சரியம் வேறு என்ன வேண்டும்?

அவருடைய விசேஷமான தேஜஸினால் ஆத்மா நிலைத்திருக்கிறது.

 

பூமி ஓஷதியைத் தாங்குகிறது.

அவரிடம் ஆதியந்தம் அற்ற தேவர் இருக்கிறார்.

இதை விட ஆச்சரியம் வேறு என்ன வேண்டும்?

முற்காலத்தில் சூரியனைப் போலப் பிரகாசிக்கின்ற இன்னொருவர் காணப்பட்டார்.

 

அவர் சூரியனுக்கு எதிரே வந்தார்.

அவரை நோக்கி சூரியன் தன் கைகளைக் கொடுத்தார்.

அவரோ தன் வலக் கையைக் கொடுத்தார்.

 

பிறகு அவர் சூரிய மண்டலத்தில் பிரவேசித்தார்.

க்ஷண காலத்தில் அவர் தேஜஸ் சூரியனோடு கலந்தது.

சூரியன் யார், வந்தவர் யார் என்று எங்களுக்குச் சந்தேகம் வர சூரியனிடமே வேறொரு சூரியன் போல வந்த அவர் யார் என்று கேட்டோம்.

சூரியன் பதில் சொல்லத் தொடங்கினார்.

– தொடரும்

 

 

ஞானாநந்த தபோவன அதிசயம்- செவ்வாய் கிரஹ ஞானிகள் (Post No.4824)

Written by London Swaminathan 

 

 

Date: 17 MARCH 2018

 

 

Time uploaded in London – 6-20 AM

 

Post No. 4824

Pictures shown here are taken by London swaminathan

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

தமிழ்நாட்டில் விழுப்புரம் அருகிலுள்ள திருக்கோவிலூருக்குச் சென்றேன். தென் பெண்ணை ஆற்றின் கரையில் அழகான சூழ்நிலையில் ஞானாநந்த தபோவனம் உள்ளது. அங்கு விலைக்கு வாங்கிய மலரில் (புஸ்தகத்தில்) ஒரு அதிசயச் செய்தியைப் படித்தேன்; எனக்கு முழுதும் விளங்கவில்லை; உங்களுடன் அதைப் பகிர்வேன் .

திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு இடங்களில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருக்கோவிலூரில் பல முக்கிய இடங்கள் உள; அவற்றில் சில:– சிவன் கோவில், உலகளந்த பெருமாள் கோவில், ஞானாநந்தா தபோவனம் மற்றும் பல ஆஸ்ரமங்கள்.

 

நான் சிறு பையனாக இருந்தபோது எங்கள் அண்ணன் இருவருக்கும் திருப்பதியில் பூணூல் போட்டார்கள். எனது தந்தை வேங்கடராமன் சந்தானம் மதுரையின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான டி.வி.எஸ்-சுக்கு நெருக்கமானவர். அங்குள்ள ராமசந்திரன் என்பவர் பெரிய காரையும் கொடுத்து, நல்ல டிரைவரையும் கொடுத்து எங்களை ஊர்வலம் அனுப்பினார். அப்போது வரும் வழியில் திருக்கோவிலூருக்கும் சென்றதாக நிழல் போல சில நினைவுகள்.

 

நான் பள்ளிப் படிப்பு படிக்கையில் திருக்கோவிலூரில் தபோவனம் (ஆஸ்ரமம் அமைத்த) சுவாமி ஞானாநந்தா மதுரைக்கு வந்தார். எந்த சுவாமிகள் மதுரைக்கு வந்தாலும் மிகப்பெரிய ‘பப்ளிசிட்டி’ கொடுப்பது எங்கள் தந்தயின் கீழ் இருந்த மதுரை தினமணி மட்டுமே! அந்தக் காலத்தில் ஆன்மீகச் செய்திகளை முதல் பக்கத்தில் வெளியிடுவது ‘’ஹராம்’’ (அபச்சாரம்) என்று கருதினர். மதுரை தினமணிப் பொறுப்பாசிரியர் வெ. சந்தானம் மட்டும் இதற்கு விதிவிலக்கு. இதன் காரணமாக மதுரைக்கு சுவாமி ஞானாநந்தா வந்தபோது பழக்கடை தங்கவேலு, அவரது அம்மன் சந்நிதி பழக்கடையின் மாடியில் சுவாமிகளை தரிசிக்க எங்கள் குடும்பத்தை அழைத்து இருந்தார்; அடியேனும் ஒட்டிக்கொண்டேன்; அப்பொழுது அவரது தரிசனம் கிடைத்தது. எங்கள் வீட்டின் சுவாமி அறையில் இருந்த 108+ சாமியார் படங்களுடன் சுவாமி ஞானாநந்தா படமும் பூஜையில் இடம் பெற்றது. அது முதற்கொண்டு  அவருக்கும் பூ வைப்போம்.

நீண்டகாலமாக திருக்கோவிலூர் செல்ல வேண்டும் என்ற ஆவல், இந்த முறை இந்தியாவுக்குச் சென்றபோது நிறைவேறியது (7-3-2018). தபோவனம் நல்ல அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ளது. காலை பத்தரை மணிக்குக் காலை பூஜை முடிந்துவிடும் என்பதால் விருத்தாசலத்தில் இருந்து சிட்டாகப் பறந்தோம்; சமாதியைத் தரிசித்தோம்; வலம் வந்தோம் புகைப்படம் எடுத்தோம். நன்கொடை கொடுப்பதற்குப் பதிலாக புத்தகங்கள் வாங்கி ஆஸ்ரமத்துக்கு பணம் அளித்தோம் ; ஒரு புஸ்தகம் 1999-ல் வெளியான கும்பாபிஷேக மலர். அதில் ஹரிதாஸ் சுவாமிகள் முதல் பலரும் அரிய பெரிய கட்டுரைகள் எழுதி இருந்தனர். அத்தனையையும் படித்+தேன். அது ஒரு படி, தேன் (one measure of honey) போல இனித்தது.

 

(ஸ்டாலின் பற்றிய நூலைப் படித்தேன்; அது ஒரு படி, தேன் என்பது கலைஞர் கருணாநிதி சொன்னது). நிற்க

 

யார் இந்த சுவாமி ஞானாநந்தா?

கர்நாடகத்தில் மங்களூரில் பிறந்து, வடக்கில் ஜோதிர் மடத்தின் சங்கராச்சாரியாராக சில காலம் இருந்து, இமய மலைக்கு மீண்டும் சென்று தவம் செய்து, பின்னர் நேபாளம் முதல் இலங்கை வரை பயணம் செய்து, தமிழ்நாட்டில் ஆட்டையாம்பட்டி ஏற்காடு முதலிய சில இடங்களில் ஆஸ்ரமங்கள் அமைத்து, இறுதியில் திருக் கோவிலூர் எனும் புனித க்ஷேத்ரத்தில் தபோவனம் நிறுவி, ஹரிதாஸ் சுவாமிகள் போன்ற பல பக்தர்களை உருவாக்கி, புகழ் மணமும் பக்தி மழையும் பொழிந்து 1974-ஆம் ஆண்டில் சமாதி அடைந்தார் ஞானாநந்தா.

இவருடைய சமாதி ஜீவ சமாதி- அதாவது பூத உடல் மறைந்தாலும் அவர்கள் அங்கே எப்போதும் இருந்து அருள் புரிவர். சுவாமிஜியின் குரு- ஜோதிர் மடத்தின் தலைவர் சிவரத்ன கிரி.

 

இவரைப் பற்றிய இரண்டு அதிசயச் செய்திகள்:

இவர் 150 ஆண்டுகள் வாழ்ந்தாராம்; இவர் என்று பிறந்தவர் என்பது யாருக்கும் தெரியாது; கர்நாடகத்தில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவர் பேச்சுவாக்கில் சொன்ன செய்திகளில் இவர் ராமலிங்க சுவாமிகள் (வடலூர் வள்ளலார்) முதலிய பல பெரியோரைச் சந்தித்தவர் என்பது புலப்படும்.

 

இரண்டாவது செவிவழிச் செய்தி என் தந்தை மூலம் அறிந்தது- இவர் சமாதி நிலையில் அடிக்கடி இருந்ததால் உண்மையில் பூத உடலை விட்டுச் சென்றாரா என்பது பக்தர்களுக்குப் புதிராக இருந்ததாம்; பல நாட்களுக்கு உடல் அசைவில்லாமல் இருக்கவே காஞ்சி முனிவர்- மஹாபெரியவர்- சங்கராசார்யாரிடம் கருத்து கேட்டனராம்; அவர் குறிப்பிட்ட சில நாட்களைச் சொல்லி- அதற்குள் எழுந்திருக்காவிடில் சமாதியில் இறக்கிவிடுங்கள் என்று சொன்னவுடன் சீடர்கள் அப்படிச் செய்தனராம்.

 

இவை அனைத்தும் உண்மை என்றே நான் நம்புகிறேன்.

தபோவன மலரில் பல அதிசயங்கள் எழுதப்பட்டபோதும் நான் படித்த ஒரு அதிசயச் செய்தி எனக்கு விளங்கவில்லை. தபோவனம் எப்படி விரிவடையப் போகிறது என்பதெல்லாம் அவர் சொன்னபடியே நடந்தது. அவர் இருக்கும் காலத்திலேயே தபோவனத்தில் பல சந்நிதிகளையும் வைத்து பூஜை செய்யவைத்தார். ஆனால்…………..

 

ராஜ மாணிக்கம் என்பவர் எழுதிய கட்டுரையில் சுவாமிகள் பம்பாய் சென்று செவ்வாய் மண்டல ஞானிகளை அழைத்துவரப்போவதாகவும் அப்போது சுவாமிகளின் 1008 சங்க நாதம் ஒலிக்கும் என்றும் உலகமே சுபிட்சமாக வாழும் என்றும் இந்த நிகழ்வினைக் கண்டு உலகமே ஆச்சர்யப்படும் என்றும் — அந்தக் கட்டுரை முடிகிறது.

 

ஒரு பக்தரின் எழுத்து மூலம் வந்த செய்தி என்பதால்,  ஞானாநந்தா என்ன சொன்னார், எந்த சூழ்நிலையில் சொன்னார், செவ்வாய் மண்டல ஞானிகள் என்பது நாம் அறிந்த கிரஹங்களில் ஒன்றான செவ்வாயா அல்லது வேறு பொருள் உடைத்தா  என்பது விளங்கவில்லை.

சுவாமிகளின் பூத உடல் சமாதியில் இறக்கப்பட்டு விட்டாலும் அவருடைய அருள் அவர் சொன்னபடியே இன்றும் அங்கே இருப்பதை நாம் உணரமுடிகிறது. ஆகவே அவர் புகழ் உடம்பு அந்த அதிசயத்தை நிகழ்த்தும் என்று எதிர் பார்ப்போமாக ( ஆஸ்ரம மலரில் வெளியான கட்டுரையின் கடைசி பக்கத்தை இங்கே இணைத்துள்ளேன்; ப டித்து மகிழ்க.

 

ஞானாநந்த சுவாமிகளுக்கு நமஸ்காரம்; அவர் புகழ் ஓங்குக!

 

–subham–

Short Story-Fate can be changed by Good Action! (Post No.4815)

Written by London Swaminathan 

 

Date: 14 MARCH 2018

 

Time uploaded in London – 16-40

 

Post No. 4815

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

Great Tamil Hindu saints like Alvars and Nayanmars say that one’s fate can be changed to good by God. Manikkavasagar, Andal, Tirumular,  Sambandar and Appar say it in very clear words that the previous Karma (action and reaction) will be powdered or  will be burnt to ashes. Hindus generally believe that Karma/action done by one will have definite after effect. Good Karma (action) will bring good things and bad karma will bring bad things to the doer. But one’s intense devotion to god can change one’s fate. There is a short story to illustrate this point.

It is similar to Pusalar Nayanar story who built a temple mentally.

There was a poor man in a village. All his efforts to earn his livelihood failed miserably. One day his close friend asked him to see an astrologer in a nearby village. When he went to see him, the astrologer looked at his horoscope and was shocked. But he did not show it to the customer. He asked the poor man to come tomorrow, ‘if it is possible’. The poor man told the astrologer that he would come next day. Astrologer was laughing inside and pitied that man.

 

When the villager was returning to his home town, heavy rains poured down. He ran to a dilapidated building and took shelter. To his surprise it was an ancient but disused temple. He felt very sorry to see the condition of the temple. Various thoughts ran into his mind. He thought, “If I win a lottery prize tomorrow, first I will build a huge hall and then I will build a tall tower on top of it. Then I will install the golden statues of the gods inside and celebrate the consecration. If there is money, I will do Anna Dhanam to all the poor people (Anna Dhanam= Food donation). When the rain stopped, he returned home and felt very happy. He slept thinking of the temple.

Next day he went back to the astrologer according to the plan. The astrologer was greatly surprised to see him. He asked what he did in the past 24 hours. he said that he went back home after taking shelter in the huge rain previous night. The astrologer was not satisfied with his answer; so he asked to relate minute by minute account. Then he told the astrologer he stayed in a temple. Even then astrologer wasn’t satisfied. He asked him whether anything happened like seeing a holy man or any miracle. The poor man said, N I was only thinking about renovating the temple.

At the point the astrologer got a grip over the matter and asked the poor man about everything he thought. Then the astrologer realised that he built a golden temple in his mind and that only saved him; because according to his horoscope he should have died already. That is why the astrologer told him the first place “to come tomorrow, if possible”.

 

Then the astrologer explained to him everything that should have happened to him astrologically, but God changed his fate. Even Yama would fail in his arithmetic if God interferes!

 

One can change his bad days into good days with good thoughts.

 

Purity in mind, word and deed (Three way purity= Mano, Vak, Kayam) is called Tri Karana suddhi. If one has it permanently one can do miracles.

 

–Subham–

க்ராஸ் டாக்கில் உதயமானது கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் (Post No.4813)

Date: MARCH 14,  2018

 

 

Time uploaded in London-4-41 am

 

 

WRITTEN by S NAGARAJAN

 

 

Post No. 4813

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

க்ராஸ் டாக்கில் உதயமானது கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்; ராஜாஜியின் தூண்டுதலால் உதித்தது கடைசிப் பக்கம்! -1

 

ச.நாகராஜன்

 

அர்த்தமுள்ள இந்துமதம் உருவானது ஒரு க்ராஸ் டாக்கினால் என்றால் ஆச்சரியமாயில்லை.

ஒரு நாள் கண்ணதாசன் நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இடையில் க்ராஸ் டாக் ஒன்று வந்தது. நண்பர் அப்புறம் பேசுகிறேன் என்று போனை வைத்து விட்டார்.

 

கண்ணதாசன் தொடர்ந்தார்: “யாருங்க நீங்க?”

“நான் தான் தினமணி கதிர் ஆசிரியர் சாவி பேசுகிறேன். நீங்க யாரு?”

“நான் தான் கண்ணதாசன் பேசறேன்.”

“நீங்கள்ளாம் நம்ம பத்திரிகையிலே எழுதுவீங்களா?” சாவி ஆதங்கத்துடன் பேசினார்.

 

“ஏன் எழுத மாட்டேன். எழுதறேனே!”

சாவி உற்சாகக் குரலில் உடனே சொன்னார்: “தலைப்பை மட்டும் சொல்லுங்கள். இந்த வாரமே அட்வர்டைஸ் பண்ணிடறேன்.
சற்றும் தயங்காமல் பதில் சொன்னார் கண்ண்தாசன் : “அர்த்தமுள்ள இந்து மதம்!”

இப்படி  உருவானது தான் அர்த்தமுள்ள் இந்துமதம்!

ஏறத்தாழ ஒரு மஞ்சள் பத்திரிகை ஆகி விட்ட தினமணி கதிர் பிழைத்தது. மக்கள் கண்ணதாசனின் ஒரு புதிய பரிமாணத்தைக் கண்டனர்; களி கொண்டனர்!

 

அருகிலிருந்த கண்ணதாசனின் உதவியாளர் இராம. கண்ணப்பன் வியந்து போனார். தன்னைக் கேட்காமல் எந்தத் தலைப்பையும் சொல்லாத கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்துமதம் என்று தலைப்பைச் சொன்னது ஆச்சரியமாக இருந்தது.

இந்தத் தலைப்பு எப்படித் தோன்றியது?

 

 

“சென்ற வருஷம் கற்பகாம்பாள் கோவில்ல நடந்த கவியரங்கத்தில் பாடின கவிதையில் இருக்குதடா இந்தத் தலைப்பு.” என்று கண்ணப்பனிடம் கூறிய கவிஞர் அந்தக் கவிதையைப் பாடினார்.

 

 

“காடுபொடி யாகநட மாடுசிவன் தேவியர்கள்

காவல்கொள் வந்த நாடு

காசிமுதல் கன்னிவரை காணுமிடம் அத்தனையும்

கன்னிவிசா லாட்சி வீடு

ஆடவரில் தேவியர்கள் பாதியெனும் தத்துவமும்

ஆக்கியவ ரென்று பாடு

ஆதிமுதல் அந்தம்வரை அர்த்தமுள்ள இந்துமதம்

ஆசையுடன் தந்த ஏடு!”

 

மறுநாள் காலை அலுவலகத்தில் அர்த்தமுள்ள இந்துமதம் ஆரம்பமானது.

தன் அனுபவத்தைக் குழைத்துப் புதுவிதமாக இந்து மதத்தை அவர் அறிமுகப்படுத்திய விதம் அனைவரது பாராட்டையும் பெற்றது.

பல தொகுதிகளாக மலர்ந்தது அர்த்தமுள்ள இந்து மதம்!

அர்த்தமுள்ள இந்து மதத்தைப் படித்த ராஜாஜி மலர்ந்தார்.

ஆனால் அவருக்குக் கோபம் வந்தது. கல்கி ஆசிரியரிடம் இப்படிப்பட்ட் அருமையான கட்டுரைகள் நமது பத்திரிகையில் அல்லவா வரவேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்”

கல்கி ஆசிரியர் கி.ராஜேந்திரன் சற்று திகைத்துப் போனார்.

ஏனெனில் கண்ணதாசன் ராஜாஜியைக் கடுமையாகத் தாக்கி வந்த காலம் அது!

ஆனால் ராஜாஜி பெருந்தனமையாக கவிஞரைக் கல்கியில் எழுத ஊக்குவிக்கிறார்.

(அடுத்த கட்டுரையில் முடியும்)

 

 

ஆதாரம் : கண்ணதாசனின் அர்த்தமுள்ள அநுபவங்கள்

இராம கண்ணப்பன் வெளியீடு: கங்கை புத்தக நிலையம் தி.நகர். சென்னை – 17

***

 

கஷ்டம் போக்கும் 100 அஷ்டகங்கள்! (Post No.4807)

Date: MARCH 4,  2018

 

 

Time uploaded in London- 7-14 am

 

 

WRITTEN by S NAGARAJAN

 

 

Post No. 4807

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம் திருமதி மஞ்சுளா ரமேஷை ஆசிரியராக் கொண்டு சிறந்த கட்டுரைகளைத் தாங்கி சென்னையிலிருந்து வருகிறது.(வருடச் சந்தா ரூ 300/) மார்ச் 2018 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை இது.

 

 

கஷ்டம் போக்கி இஷ்ட பூர்த்தி அருளும் (100) அஷ்டகங்கள்!

 

ச.நாகராஜன்

 

1

வேக யுகத்தில் வாழ்கிறோம் நாம். காலையில் எழுந்து குழந்தைகளைப் பள்ளிக்குக் கிளப்பி வேலைக்குப் போகும் ஆண், பெண் இருவரும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உதவி,வெளியே செல்வதற்குள் போதும் போதும் என்று ஆகி விடுகிறது.

இந்த நிலையிலும் பாரம்பரிய பழக்கத்தை விடாது ஒரு சின்ன நமஸ்காரத்தைச் (சைனீ ஸ் நமஸ்காரம் – வளைந்து ஒரு சின்னக் கும்பிடு) செய்து விட்டு ஓட வேண்டிய நிலை.

இந்தக் ‘கலி கஷ்டத்தை’ எல்லாம் உணர்ந்து தான் நம் முன்னோர் எந்தக் கஷ்டத்தையும் போக்கி தேவையான இஷ்ட பூர்த்தி அருளும் விதத்தில் அஷ்டகங்களை அருளியுள்ளனர்.

அஷ்டகம் என்றால் எட்டுத் துதிப் பாடல்கள் என்று பொருள்.

சிவபிரானிலிருந்து ஆதி சங்கரர் வரை பல்வேறு ரிஷிகள், அருளாளர்கள் முடிய அருளிய அற்புதமான அஷ்டகங்கள் ஏராளம் உள்ளன.

நமக்கு எந்தக் கஷ்டம் இருக்கிறதோ அதைப் போக்க வல்ல அஷ்டகங்களைச் சொல்ல இரண்டு நிமிடங்களே ஆகும். இதைச் சொல்ல நேரம் இல்லை என்று சொல்லவே முடியாது.

 

சற்று நேரம் இருப்பவர்களுக்கோ மெய்மறந்து இனிய இசையுடன் சொல்லும் போது ஒரு இனிமையான உலகமே தனியாகத் தோன்றும். அன்னம் கிடைக்க, வியாதி போக, செல்வம் செழிக்க, படிப்பு வர, படைப்பாற்றல் மேம்பட, உயர் பதவி கிட்ட, எதிரிகள் அழிய, ஆன்ம லாபம் பெற, முக்தி அடைய என்று ஒவ்வொருவரின் இஷ்டத்திற்கும் தக, அது பூர்த்தியாக அருளாளர்கள் அருளியுள்ள அஷ்டகங்களை நாமே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். குரு மூலமாக உபதேசமும் பெறலாம்.

எத்தனை அஷ்டகங்கள் உள்ளன? ஒரு ரெடி ரெஃபரன்ஸாக – உடனடி பார்வைக்காக – 100 + அஷ்டகங்களின் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. படிக்கலாம்; பயன் பெறலாம்.

சில முக்கிய அஷ்டகங்களைப் பற்றி இங்கு பார்ப்போம். அனைத்து அஷ்டகங்களுமே தேர்ந்தெடுத்த மந்திரச் சொற்கள் கொண்டவை; ஓசை நயம் உடையவை!

 

2

சூர்யாஷ்டகம் : சிவபிரான் அருளியது. கண் ரோகம் உள்ளிட்ட சகல வியாதிகளையும் போக்க வல்லது.

ஆதி தேவ நமஸ்துப்யம் ப்ரஸீத மம பாஸ்கர |

திவாகர நமஸ்த்ப்யம் ப்ரபாகர நமோஸ்து தே ||

என்று ஆரம்பிக்கும் இது (காரண்டியுடன்) ஆரோக்கியத்தை நல்கும் அஷ்டகம் என்று சொல்லலாம்.

 

தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம்: தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம் என்று பிரபலமாகக் கூறப்படும் இந்த அஷ்டகம் பிரம்மாண்டமான சக்தியைத் தன்னுள் அடக்கி இருக்கும் ஒரு அஷ்டகம். ஆதி சங்கரர் அருளியுள்ள இதற்கு சுரேஸ்வராசாரியர் மாநஸோல்லாஸம் என்ற அற்புதமான உரையினை இயற்றி அருளியுள்ளார். இவர் சாரதா பீடத்தை (சிருங்கேரி பீடம்) முதன் முதலாக அலங்கரித்தவர். தக்ஷிணாமூர்த்தி அஷ்டகத்தின் ஒவ்வொரு மூல ஸ்லோகத்திற்கும் அவதாரிகையுடன் 365 ஸ்லோகங்களால் 10 உல்லாஸங்களில் விளக்கவுரையை  சுரேஸ்வரர் அருளியுள்ளார். அற்புதமான இந்த நூலில் சூன்யவாதம், ஸமுதாயவாதம் உள்ளிட்டவை அலசப்படுகிறது; ஆத்ம இயல்பு மிகத் தெளிவாக விளக்கப்படுகிறது. எட்டு ஸ்லோகங்களில் பிரபஞ்ச மர்மத்தை விளக்கும் இந்த அஷ்டகம் எல்லா அஷ்டகங்களிலும் தனிச் சிறப்பு வாய்ந்த ஒன்று.

 

மஹாலக்ஷ்மி அஷ்டகம்: பாரத நாட்டில் எல்லோராலும் தினமும் சொல்லப்பட்டு வரும் அஷ்டகம் இது. செல்வம் பெருக,தரித்திரம் தொலைய, பல்வேறு நலங்களைப் பெற இந்த அஷ்டகத்தைச் சொல்லலாம்.

தோடகாஷ்டகம்: குருபக்தியை விளக்கும் தோடகாசார்யரின் வரலாறு மிகவும் சுவையானது. ஆதி சங்கரரின் நான்கு முக்கிய சிஷ்யர்களில் ஒருவர் ஆனந்தகிரி. குரு கைங்கரியத்தைச் செய்வது ஒன்றே அவருக்குப் பிரதானமாக இருந்தது. ஒருநாள் தனது சீடர்களுக்குப் பாடம் எடுக்கும் போது அதை ஆரம்பிக்காமல் ஆனந்தகிரியின் வருகைக்காகக் காத்திருந்தார் சங்கரர். மற்றவர்கள், ‘ஆனந்தகிரிக்கு என்ன தெரியும்? அவர் வரவில்லை என்றால் ஒன்றும் பாதகம் இல்லை’ என்று சொல்லிக் கேலி செய்தனர். ஆனந்தகிரியின் ‘குரு சேவா’ பெருமையை சங்கரர் அனைவருக்கும் உணர்த்த அருள் பாலித்தார். ஆனந்தகிரி அங்கு  பாடம் கேட்க வரும் போதே தோடகம் என்னும் விருத்தத்தில்,

“விதிதாகில சாஸ்திர ஸுதா ஜலதே

மஹோதோபநிஷத் கதிதார்தநிதே |

ஹ்ருதயே கலயே விமலம் சரணம

பவ சங்கர தேசிக மே சரணம் ||

என்று ஆரம்பித்து எட்டு ஸ்லோகங்களைக் கூறினார், இது தோடகாஷ்டகம் என்று பெயர் பெற்றது. ஆனந்தகிரி அன்றிலிருந்து தோடகாசார்யார் என்னும் பெயரை அடைந்து புகழ் பெற்றார். குரு பக்தி சகல ஞானத்தையும் க்ஷண நேரத்தில் அருளும் என்பதற்கு எடுத்துக் காட்டு தோடகாஷ்டகம். கடைசி ஸ்லோகத்தில் செல்வமோ படிப்போ இல்லாத எனக்கு குருவே உங்களது கருணையை அருளுங்கள் என்று அவர் கூறுவது உளத்தை உருக்கும். இதை அனுதினமும் சொல்பவர்களுக்கு குருவின் கிருபையால் சகல நன்மைகளும் உடனே சித்திக்கும் என்பது ஆன்றோர் வாக்கு.

 

நடேசாஷ்டகம்:  மிக அருமையான இந்த அஷ்டகத்தை காஞ்சி பெரியவாள் பிரபலப்படுத்தினார். இந்த அபூர்வமான அஷ்டகம் பிறந்த வரலாறு சுவையான ஒன்று. பதஞ்சலி என்ற பெயருடைய மஹரிஷி உடலில் இடுப்புக்கு மேலே மனித உருவமும் அதற்குக் கீழே பாம்பின் அமைப்பையும் பெற்றவர். புலியின் கால்களைப் போன்ற கால்களைப் பெற்றவர் வியாக்ரபாதர் என்னும் ரிஷி. இவர்கள் இதர தேவர்களுடனும் ரிஷிகளுடனும் ஸ்ரீ நடராஜப் பெருமானின் ஆனந்த தாண்டவத்தைச் சிதம்பரத்தில் கண்டு களித்தவண்ணம் இருந்தனர். ஒரு சமயம் வியாக்ரபாதர், பதஞ்சலி ரிஷியைப் பார்த்து, “உமக்கு காலுமில்லை, கொம்புகளும் இல்லை. நடராஜ பெருமானின் நடனத்தை உம்மால் எப்படி ரசிக்க முடியும்?” என்று கேலி செய்தார். இதற்கு பதஞ்சலி முனிவர் பதிலேதும் கூறவில்லை. நடராஜரைத் தியானித்து எட்டு ஸ்லோகங்களைக் கூறி அவரைத் துதித்தார். இந்த அபூர்வமான ஸ்லோகங்களில் ஒன்றில் கூட காலோ அல்லது கொம்போ உடைய எழுத்துக்கள் ஒன்று கூட இல்லை.

 

அதாவது கா, மா, சா போன்ற எழுத்துக்களுக்கு கால் போட்டு எழுத வேண்டும். கோ மோ, சோ போன்ற எழுத்துக்களுக்கு கொம்பு போட்டு எழுத வேண்டும். பதஞ்சலி ரிஷி அருளிய ஸ்லோகங்களில் இப்படிப்பட்ட காலோ அல்லது கொம்போ உடைய எழுத்துக்கள் ஒன்று கூட இல்லை. இப்படிப்பட்ட அருமையான ஸ்லோகங்களைக் கேட்ட நடராஜ பெருமான் அவருக்கு அருள் பாலிக்க அனைவரும் பதஞ்சலி ரிஷியின் பக்தியின் பெருமையை உணர்ந்தனர். இந்த அஷ்டகம் சம்பு நடன ஸ்தோத்திரம் என்றும் கூறப்படும்.இதை ஓதுபவர்கள் சிவபிரானின் பாதத்தை அடைவர். துக்கத்தைத் தரும் பிறவிக் கடலிலிருந்து மீள்வர் என்று இதன் பலனைப் பற்றி கடைசி ஸ்லோகம் அருளுகிறது.

நடேசாஷ்டகத்தின் முதல் ஸ்லோகம் இது:

ஸதஞ்சிதம் உதஞ்சித நிகுஞ்சிதபதம்

ஜலஜ்ஜலஞ்சலித மஞ்ஜூகடகம்

பதஞ்சலி த்ருகஞ்ஜநம் அநஞ்ஜனம்

அசஞ்சலபதம் ஜனன பஞ்சநகரம் |

கதம்பருசிம் அம்பரவஸம் பரமம் அம்புத

கதம்பக விடம்பக கலம்

சிதம்புதமணிம் புத ஹ்ருதம்புஜ ரவிம்

பர சிதம்பர நடம் ஹ்ருதி பஜ ||

இந்த ஸ்லோகத்தில் காலோ அல்லது கொம்போ உடைய எழுத்துக்கள் இல்லாததையும் சொற்கள் நடம் புரியும் அற்புதத்தையும் பார்க்கலாம்!

 

சரஸ்வத்யஷ்டகம்: சரஸ்வதி தேவியின் அருள் பெற்று நல்ல படிப்புடன் கல்வி மேன்மை பெற சொல்ல வேண்டிய அஷ்டகம் இது.

லிங்காஷ்டகம் : சிவ லோக ப்ராப்தியை அடைய விரும்புவோர் சொல்ல வேண்டிய அற்புதமான இந்த அஷ்டகத்தை பல்லாயிரக் கணக்கானோர் சொல்லி வருவது கண்கூடு.

 

ஸ்ரீ ராகவாஷ்டகம் : ராகவம் கருணாகரம் முனி ஸேவிதம் என்று ஆரம்பிக்கும் இந்த அஷ்டகம் இனிய இசையுடன் பாடும் போது உளத்தை உருக்கும்; மன நிம்மதியைத் தரும்.  இதே போல கிருஷ்ணாஷ்டகம், ராமாஷ்டகம் உள்ளிட்டவை குறிப்பிட்ட அவதாரங்களைப் போற்றித் துதிக்கப்படுபவை.

 

மதுராஷ்டகம்: ஸ்ரீ வல்லபாச்சார்யார் இயற்றி அருளியுள்ள பிரசித்தி பெற்ற அஷ்டகம் மதுராஷ்டகம். இனிமையான கண்ணனை மதுரமாக வர்ணிக்கும் அற்புத இனிய சொற்களைக் கொண்டது இது.

அதரம் மதுரம் வதனம் மதுரம்

நயனம் மதுரம் ஹசிதம் மதுரம்

ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம்

மதுராதிபதேரகிலம் மதுரம்

என்ற சொற்கோவையில் மயங்காதோர் இருக்க முடியாது. கிருஷ்ண பக்திக்கான அஷ்டகம் இதுவே

 

பவானி அஷ்டகம் : ஆதி சங்கரர் அருளியது இது. பவன் என்பது சிவபிரானின் எட்டு முக்கிய நாமங்களில் ஒன்று. பவனின் பத்தினி பவானி. ஆதி சங்கரரின் சௌந்தர்ய லஹரியில் பவானித்வம் என்ற (22வது) ஸ்லோகம் பொருள் பொதிந்த ஒன்று. பவானி என்று பக்தை/பக்தன் ஆரம்பிக்கும் போதே – பவானி த்வம் – பவானி நான் உனது அடிமை என்று சொல்வதற்கு முன்னாலேயே – ‘பவானித்வம்’ என்ற ச்ரேஷ்ட நிலையை அனுக்ரஹிக்கிறாள்.  அந்த பவானியைத் துதிக்கும் எட்டு ஸ்லோகங்கள் கொண்ட பவானி அஷ்டகம் மிகவும் பிரபலமானது. பவானியாகவே ஆகும் தன்மையை நல்கும் இது தீர்க்க சுமங்கலி பாக்யத்துடன் இதர அனைத்து பாக்யங்களையும் தர வல்லது.

ந தாதோ ந மாதா ந பந்தூ ந தாதா

ந புத்ரோ ந புத்ரீ ந ப்ருத்யோ ந பர்த்தா

ந ஜாயா ந வித்யா ந வ்ருத்திர் மமை வ

கதிஸ்த்வம் கதி ஸ்த்வம் த்வமேகா பவானீ |

என்று ஆரம்பிக்கும் பவானி அஷ்டகம் சகல சௌபாக்யம் தரும் அஷ்டகம் ஆகும்.

முத்தான பத்து அஷ்டகங்களைப் பார்த்தோம்.இன்னும் நவக்ரஹ மங்களாஷ்டகம் போன்றவை நவகிரக தோஷங்களையும் இதர தோஷங்களையும் நீக்க வல்லவை!

 

3

அஷ்டகங்களின் பெருமையை வார்த்தைகளால் விளக்க முடியாது.

ஏராளமான அஷ்டகங்களில் நூறு அஷ்டகங்களின் பட்டியல் இங்கு தொகுத்து வழங்கப்படுகிறது. இவற்றின் பெருமையை அறிந்து தங்களுக்குத் தேவையான அஷ்டகத்தை ஓதி இஷ்ட சித்தி அடையலாம். அனைத்து அஷ்டகங்களும் பெரும்பாலும் இணையதளத்தில் கிடைக்கிறது. கீழே ஒரே அஷ்டகத்தின் பெயர் இருமுறை குறிக்கப்பட்டிருந்தால் இரு வேறு மகான்கள் துதி செய்து அருளிய அஷ்டகம் அது எனக் கொள்ள வேண்டும்.

100 அஷ்டகம்

 

 

சூர்யாஷ்டகம்

ராகவாஷ்டகம்

தோடகாஷ்டகம்

நடேசாஷ்டகம்

மஹாலக்ஷ்மி ஷ்டகம்

கணேச அஷ்டகம்

கிருஷ்ணாஷ்டகம்

சரஸ்வதி அஷ்டகம்

துர்காஷ்டகம்

லிங்காஷ்டகம்

 

பவானி அஷ்டகம்

ரங்கநாதாஷ்டகம்

காளிகாஷ்டகம்

ராமாஷ்டகம்

ராமாஷ்டகம்

அச்யுதாஷ்டகம்

ஸ்ரீ வேதவ்யாஸ அஷ்டகம்

விஸ்வநாதாஷ்டகம்

நவக்ரஹ மங்களாஷ்டகம்

சுதர்ஸனாஷ்டகம்

 

வில்வாஷ்டகம்

துளஸி அஷ்டகம்

ஸ்ரீமத் மங்களமூர்த்யஷ்டகம்

ராஜபுர கங்காஷ்டகம்

நிர்வாணாஷ்டகம்

ஸ்ரீ லக்ஷ்ம்யஷ்டகம்

ஸ்ரீ வில்வநாதாஷ்டகம்

கங்காதாராஷ்டகம்

ஹம்ஸாஷ்டகம்

பகவந்நாம ரத்னமாலாஷ்டகம்

ஹரிஹராஷ்டகம்

மனோரதாஷ்டகம்

ஸ்ரீ ஹரிசரண அஷ்டகம்

சிவராமாஷ்டகம்

ப்ரஷ்டாஷ்டகம்

நர்மதாஷ்டகம்

புஷ்கராஷ்டகம்

ஸ்ரீ மணிகர்ணகாஷ்டகம்

ஹனுமத் அஷ்டகம்

கங்காஷ்டகம் –

கங்காஷ்டகம் – வால்மீகி

கங்காஷ்டகம்

யமுனாஷ்டகம்

யமுனாஷ்டகம்

வித்யார்த்திதாஷ்டகம்

ந்ருஸிம்ஹபாரத்யஷ்டகம்

சங்கராசார்ஷ்டகம்

விஹாரிணோஷ்டகம்

குர்வஷ்டகம்

ஜகன்னாதாஷ்டகம்

 

ஸ்ரீ கோவிந்தாஷ்டகம்

ஸ்ரீ கோபாலாஷ்டகம்

ஸ்ரீ பிந்துமாதவாஷ்டகம்

பாண்டுரங்க அஷ்டகம்

ரகுநாதாஷ்டகம்

ராமசந்த்ராஷ்டகம்

 

 

சாரதாஷ்டகம்

ஷீதலாஷ்டகம்

பகவத் அஷ்டகம்

சங்கடா நாமாஷ்டகம்

அம்பாஷ்டகம்

சரஸ்வத்யஷ்டகம்

தேவியஷ்டகம்

பாதாவ்ஷாஷ்டகம்

வாராஹிநிக்ரஹாஷ்டகம்

தாராஷ்டகம்

ஸ்ரீ காலாந்தகாஷ்டகம்

சிவாஷ்டகம்

சந்த்ரசூடாலாஷ்டகம்

காலபைரவாஷ்டகம்

விஸ்வரேஷ்வராஷ்டகம்

மஹாதேவ்யாஷ்டகம்

வைத்யநாதாஷ்டகம்

பசுபத்யஷ்டகம்

சிவநாமாவல்யஷ்டகம்

ப்ரதோஷ ஸ்தோத்ராஷ்டகம்

ரமாபத்யாஷ்டகம்

விஷ்ணோரஷ்டகம்

ஸ்ரீ ஹரிநாமாஷ்டகம்

ஸ்ரீ ஹரிஸ்மரணாஷ்டகம்

 

ருத்ராஷ்டகம்

மதுராஷ்டகம்

கணநாயகாஷ்டகம்

சௌர்யாஷ்டகம்

நடராஜாஷ்டகம்

சிவநாமாவளியஷ்டகம்

அகஸ்த்யாஷ்டகம்

ஜம்புநாதாஷ்டகம்

ஸதாசிவாஷ்டகம்

சோணாத்ரிநாதாஷ்டகம்

பரமாத்மாஷ்டகம்

கோஷ்டேஸ்வர அஷ்டகம்

சாஸ்தா அஷ்டகம்

தேவராஜ அஷ்டகம்

யமாஷ்டகம்

அமிலாஷ்டகம்

ஸ்வர்ணாகர்ஷண பைரவா

ராஜ ராஜேஸ்வரி அஷ்டகம்

சாரதாபுஜங்காஷ்டகம்

அட்டால சுந்தராஷ்டகம்

****

 

வேதம் பிராஹ்மணனிடம் என்ன சொன்னது? (Post. 4673)

வேதம் பிராஹ்மணனிடம் என்ன சொன்னது? மநு தகவல்- மநு நீதி நூல்- Part 13 (Post No 4763)

 

Date: 19 FEBRUARY 2018

 

Time uploaded in London- 11-59 AM

 

Written by London swaminathan

 

Post No. 4763

 

PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

மானவ தர்ம சாஸ்திரம்- இரண்டாம் அத்தியாயம் தொடர்ச்சி

 

 

2-89 இந்திரியங்களைப் பெரியோர்கள் பதினொன்றாக வகுத்துள்ளனர். அதை நான் இப்போது விளக்குவேன் (207)

2-90.காது, தோல், கண், நாக்கு, ஐந்தாவதாக மூக்கு, ஆசன வாய், ஜனன இந்திரியங்கள், கை, கால், பத்தவதாக பேசும் உறுப்பு ஆகியனவும்

2-91. இவைகளில் காது முதல் மூக்கு வரை உள்ள ஐந்தும் ஞானேந்திரியம், ஆசனவாய் முதல் வாய் வரையுள்ள ஐந்தும் கர்மேந்திரியங்கள்

 

2-92. இந்த பத்து உறுப்புகளையும் கட்டுப்படுத்தும் மனம் பதினோராவது இந்திரியம் ஆகும். அதைக் கட்டுப்படுத்தினால் ஏனைய பத்து இந்திரியங்களையும் கட்டுப்படுத்திவிடலாம். (210)

 

2-93. புலன் வழிச் சென்று, அதன் போக்கில் இன்பங்களை அனுபவிப்பவன் தவறுகளைச் செய்வான்; ஆனால் இவைகளைக் கட்டுப்படுத்துபவன் இன்பத்தையும் வெற்றியையும் அடைவான்.

Picture posted by S P Ramanathan

2-94. ஆசைகளை நிறைவேற்றுவதன் மூலம் அதைத் திருப்தி செய்வதென்பது முடியாது. ஆசைகளைப் பூர்த்தி செய்ய முயல்வது, தீயில் நெய்யை ஊற்றி அதை அணப்பதற்குச் சமம் ((அதை மேலும் வளர்ப்பது போலாகும்)).

 

 

2-95. சிலர் ஆசைகளை நிறைவேற்றலாம்; சிலர் ஆசைகளை அறவே ஒதுக்கலாம்; ஆனால் அறவே ஆசைகளை அகற்றுவதே சிறந்தது.

 

2-96. ஆசைகளை அகற்றுவதற்கு தெளிந்த ஞானம்தான் உதவும்; அவைகளில் இருந்து தனித்து வாழ்வதால் ஆசைகளை ஒழிக்க முடியாது.

 

2-97. எவன் ஒருவன் புலன் இன்பங்களில் நாட்டம் உடையவனாக இருக்கிறானோ அவன் செய்யும் யாக யக்ஞங்களும், வேதம் ஓதுதலும், தானமும் தவமும் பயனற்ற செயல்களே.-215

2-98. எவன் ஒருவன் ஐம்புல நுகர்ச்சியால இன்பத்தையோ துன்பத்தையோ அடைவதில்லையோ அவனே புலன்களை வென்றவன் ஆவான்.

2-99. ஐந்து புலன்களில் ஒன்று பலவீனமானாலும், ஓட்டைப் பானையில் இருந்து தண்ணீர் வெளியேறுவது போல ஞானம் வெளியேறி விடும்

2-100. ஆகவே பொறிகளையும் மனதையும் கட்டுப்படுத்தி, உடலை வருத்தாமல், இம்மை மறுமை ஆகியவற்றின் நன்மைகளை நாட வேண்டும்.

Picture posted by Lalgudi Veda

 

2-101. அதி காலையில் சூரியன் உதயம் ஆகும் வரை நின்றுகொண்டு காயத்ரீ மந்திரத்தை ஜபிக்க வேண்டும். மாலையில் அமர்ந்து கொண்டு ஜபிக்க வேண்டும். நட்சத்திரங்கள் தோன்றும் வரை செய்க (காணாமல், கோணாமல், கண்டு கொடு; சூரியனைக் காணாமல் காலையிலும், நிழல் கோணாமல் நண்பகலிலும், சூரியனைக் கண்டு, அது மறையும் வரை மாலையிலும் காயத்ரீ மந்திரம் சொல்க)

 

2-102.காலையில் நின்று கொண்டு ஜபம் செய்வதால் இரவில் செய்த பாபங்கள் அழிந்து விடும்; மாலையில் அமர்ந்து கொண்டு செய்யும் தவத்தால் பகற்பொழுதில் செய்த பாவங்கள் நசித்துவிடும்.-220

2-103.யார் ஒருவன் இவ்வாறு காலை மாலை ஜபங்களைச் செய்வதில்லையோ அவன் இரு பிறப்பாளன் என்ற தகுதியை இழக்கிறான்.

2-104.ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திலோ, நதிக்கரைகளிலோ, ஒன்று குவிந்த மனதுடன் காயத்ரீ ஜபிக்க வேண்டும்.

 

2-105.இவைகளைச் செய்யக்கூடாத காலம் என்று விலக்கு எதுவும் இல்லை. வேதாங்கம் கற்கவும், வேதம் சொன்ன தினசரிச் சடங்குகளைச் செய்யவும் விடுமுறை நாட்கள் என்பது எதுவும் இல்லை.

 

2-106.இவை எல்லாம் வேதம் கற்பதின் ஒரு பகுதி என்பதால் விலக்கு எதுவும் இல்லை. அவை  வேறு காரணங்களினால்  தடைப் பட்டாலும் பலன் குன்றாது

 

2-107.யார் ஒருவன் ஓராண்டுக் காலத்துக்கு இவ்வாறு இடைவிடாமல், புலனடக்கத்துடன் செய்கிறானோ, அவன் இருக்கும் இடத்தில் பாலும் தேனும் வெண்ணையும் தயிரும் வற்றாது பாயும்-225

 

 

2-108. குருகுல வாசம் செய்யும் காலம் முழுதும் ஒரு மாணவன், வேதம் ஓதுதல், அக்னியில்  சமித்தினால் ஹோமம் செய்தல், பிச்சை எடுத்தல், குருவுக்குப் பணிவிடை செய்தல், தரையில் படுத்தல் ஆகியவற்றைச் செய்ய வேண்டும்.

 

2-109.வேத உபதேசம் ஏற்கக் கூடிய பத்து வகை மாணவர்கள் உண்டு: குருவின் மகன், தருமம் அறிந்தவன், ஒழுக்க சீலன் ( தூய்மையுள்ளவன்), உறவினர், கொடையாளி, பணிவுடையன், நம்பத் தகுந்தவன் (பொய்பேசாதவன்), வேதத்தை கற்கும் சக்தியுடையவன், , சேவை செய்பவன், மற்றவர்களுக்கு ஞானம் அளிப்பவன்.

आचार्यपुत्रः शुश्रूषुर्ज्ञानदो धार्मिकः शुचिः ।

आप्तः शक्तोऽर्थदः साधुः स्वोऽध्याप्या दश धर्मतः

 

 

2-110. ஒருவர் கேட்காத எதையும் விளக்காதே; குதர்க்கமாகப் பேசுபவர்களுக்குப் பதில் கொடுக்காதே; உனக்கு விஷயம் தெரிந்தாலும் முட்டாள் (ஒன்றும் தெரியாதவன் போல) இரு.

2-111.யார் தர்மத்துக்குப் புறம்பாக கேட்கிறானோ அல்லது தர்மத்துக்கு எதிராக விளக்குகிறானோ, அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ, விரோதம் காரணமாக இறக்க நேரிடலாம்.

2-112. தர்மமோ, தட்சிணையோ, அடக்கமோ இல்லாதவனுக்கு (வேதத்தைக்) கற்பிக்கக் கூடாது; பயன் தராத ஆளுக்குக் கல்வி கற்பது உவர் நிலத்தில் விதைகளை விதைப்பது போலாகும்-230

 

2-113.வேதம்  அ றிந்தவன், ஒரு தவறானவனுக்குக் கற்பிப்பவதைவிட, இறப்பதே மேல்

 

2-114.வேதம், பிராஹ்மணனிடம் சொன்னது: “நான் பெரும் பொக்கிஷம்;

என்னைக் காப்பாற்று நிந்திப்பவர் எவருக்கும் என்னை அளித்துவிடாதே. அப்போதுதான் நான் மிகவும் சக்தியுடன் விளங்குவேன்”.

विद्या ब्राह्मणमेत्याह शेवधिस्तेऽस्मि रक्ष माम् । %[ं।शेवधिष् टे]

असूयकाय मां मादास्तथा स्यां वीर्यवत्तमा ॥ Bछ्.Sछ्॥

 

यमेव तु शुचिं विद्यान्नियतब्रह्मचारिणम् । %[ं। विद्या नियतं ब्रह्मचारिणम्]

तस्मै मां ब्रूहि विप्राय निधिपायाप्रमादिने ।

 

2-115. தூய்மையுடைய, புலன் அடக்கம் உடைய, கிரஹிக்கும் சக்தியுடைய, பொக்கிஷத்தைப் பாதுக்காக்கக் கூடிய பிராமணன் இடத்தில் என்னைக் கொடு

2-116. வேதம் அறிந்த ஒருவரின் அனுமதி இல்லாமல், வேதத்தைக் கற்பவன் வேதத்தைத் திருடியவன் ஆவான். அவன் நரகத்தில் வீழ்வான்.-234

ब्रह्म यस्त्वननुज्ञातमधीयानादवाप्नुयात् ।

स ब्रह्मस्तेयसंयुक्तो नरकं प्रतिपद्यते

 

(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

எனது கருத்து

 

இந்தப் பகுதி வேதம் எவ்வளவு புனிதமானது என்பதை விளக்குகிறது.

 

தகுதி இல்லாதவருக்குக் கற்பிப்பதைவிட அந்த அறிவுடன் இறந்து போனாலும் பரவாயில்லை என்கிறது.

 

மீண்டும் மீண்டும் ஒழுக்கத்தையும் புலன் அடக்கத்தையும் மநு வலியுறுத்துகிறார்.

 

புலன் அடக்கமும், ஆசையின்மையும், ஒழுக்கமும்தான் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பிராமணரை உயர் நிலையில் வைத்தது.

 

வேதம் பிராமணனிடம் வந்து சொன்ன வாசகம் அருமையானது; நான் ஒரு பொக்கிஷம்; என்னைப் பாது காத்து இதன் மதிப்பை அறிந்த தூயவனிடம் என்னை ஒப்படை.

 

இன்னும் ஒரு அறிவுரை எல்லோருக்கும் பொதுவானது: கேள்வி கேட்காமல் பதில் சொல்லாதே. குதர்க்கமாக கேட்பவனிடம் முட்டாளைப் போல நடி.

 

3 நல்ல உவமைகள்

ஆசைகளைப் பூர்த்தி செய்ய விழைவது, தீயில் நெய்யை ஊற்றி அதை அ ணைப்பதற்குச் சமம் என்ற உவமையும்

 

பயனற்ற ஆட்களுக்கு வேதம் கற்பிப்பது, உப்பு மணலுள்ள நிலத்தில் விதை விதைப்பதற்குச் சமம் என்ற உவமையும்,

இந்திரியங்களில் ஒரு இந்திரியம் (புலன்கள்) பலவீனமாக இருந்து மனதைப் பரிதவிக்கவிட்டாலும், அது ஓட்டையுள்ள தண்ணீர்ப் பைக்குச் சமம் என்ற உவமையும் ரசிக்கக் கூடியவை.

 

அந்தக் காலத்தில் தோலினால் ஆன தண்ணீர்ப் பை இருந்ததை இந்த ஸ்லோகம் காட்டுகிறது.

பிராமணர்களுக்குச் சொன்ன காணாமல் கோணாமல் கண்டு கொடு- (சந்தியா வந்தனம் செய்) என்பதும் நோக்கற்பாலது.

நண்பகலில் செய்யப்படும் மாத்யாஹ்னிகம் பற்றி மநு ஒன்றும் செப்பாதது வியப்புக்குரியது. அவர்காலத்தில் மதிய வழிபாடு இல்லையா? அல்லது எல்லோருக்கும் தெரிந்ததைச் சொல்ல  வேண்டியதில்லை என்று விட்டுவிட்டாரா?

இன்னும் 2400 ஸ்லோகங்கள் உள.

 

தொடரும்—

 

 

 

அவனின்றி ஓர் அணுவும் அசையாது- கதை (Post No.4756)

Date: 17 FEBRUARY 2018

 

Time uploaded in London- 8-53 am

 

Written by London swaminathan

 

Post No. 4756

 

PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

ஒரு ஊரில் ஒரு அரசன் இருந்தான்; அவன் வாரி வழங்கும் வள்ளல்; கவிஞர்களுக்கும் அறிஞர்களுக்கும் கொடுத்தான். அவனிடம் பரிசு பெற்ற பலர் அவனைப் பாராட்டினர். ஆனால் அறிஞர் பெருமக்களோ எல்லாம் இறைவன் செயல் என்று தனி மனிதன் துதியில் இறங்கவில்லை.

 

பரிசு வாங்கியவர்களில் ஒருவர் அரசனை இந்திரனே, சந்திரனே, பாரியே ஓரியே, காரியே என்று புகழ்ந்தார். வேறு ஒரு அறிஞர் ‘’அவனின்றி ஓர் அணுவும் அசையாது  — எல்லாம் ஈசன்  செயல் — ஈஸாவாஸ்யம் இதம் சர்வம் என்று சொன்னார்.

‘’ஈஸாவாஸ்யம் இதம் சர்வம் யத் கிஞ்ச ஜகத்யாம் ஜகத்

தேன த்யக்தேன புஞ்சீதா மாக்ருதஹ கஸ்யஸ்யத்வித்தனம்’’

—–ஈஸாவாஸ்ய உபநிஷத்தின் முதல் மந்திரம்

 

பொருள்

 

இந்த உலகம் முழுவதும் இறைவனால் வியாபிக்கப்பட்டுள்ளது; எல்லாம் அவன் கட்டுப்பாட்டில் உள்ளது; அவரவர்களுக்குரியதை அனுபவியுங்கள்; பிறருடைய செல்வத்துக்கு ஆசைப் படாதீர்கள்

 

 

எத்தனை முறை பரிசு கொடுத்தாலும் இதே கதைதான். அரசனோ தன்னைப் புகழ்வதையே விரும்பினான். இறைவன் பற்றிய புகழ்ச்சியை அவன் விரும்பவில்லை. ஆனால் அறிஞர் பெருமக்களிடம் என்னைப் புகழ்ந்து பேசுங்கள், பாடுங்கள் என்று சொல்லத் துணிவும் இல்லை.

 

ஒரு முறை இதை அறிஞருக்கு குறிப்பால் உணர்த்துவோம் என்று கருதி இருவரையும் அழைத்தான்; தன்னை எக்காலமும் முக்காலமும் புகழும் ஒரு ஆளுக்கு ஒரு பூசணிக்காய்க்குள் ரத்தினக் கற்களை நிரப்பிக் கொடுத்தான் அதை வாங்கியவர் வெறும் பூசணிக்காய் என்றே நினத்தார். குறைந்த மதிப்புள்ள இரண்டு நாணயங்களை அறிஞரிடம் கொடுத்தார். இருவரும் புதிய பரிசுப் பொருட்களுடன் அரண்மனையிலிருந்து வீடு சென்றனர்.

 

பூசணிக்காய் வாங்கியவருக்குக் கொஞ்சமும் திருப்தி இல்லை. அவர் வீட்டின் வழியாகச் சென்ற அறிஞரை அழைத்து நீங்களே இந்தப் பூசணிக்காயையும் எடுத்துக்கொள்ளுங்கள் என்றான்; அவரும் அதை மனமுவந்து ஏற்று, என்னிடமுள்ள இரண்டு காசுகளை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் என்றார்.

 

அறிஞர் பெருமகன் வீட்டிற்குச் சென்று மனைவியிடம் பூசணிக்காயைக் கொடுத்து சமைக்கச் சொன்னார். அவள் அதை வெட்டிய அடுத்த நிமிடம் ரத்தினக் கற்கள் கீழே விழுந்தன. உடனே அந்த அறிஞர் நமக்குத் தேவையானதற்கு மேல் எதுகிடைத்தாலும் அதற்கு ஆசைப்படக்கூடாது; ‘ஈஸாவஸ்யம் இதம் சர்வம்’ என்ற உபநிஷத மந்திரத்தைச் சொல்லி, அரசனிடமே அந்த ரத்தினக் கற்களைக் கொடுத்து பூசணிக்காய் விஷயத்தைச் சொன்னார். அரசனனுக்குகு பெரும் வியப்பு!!

 

நான் இந்த ஆளுக்குக் கொடுக்கக் கூடாது என்பதற்காக காய்க்குள் மறைத்து ரத்தினக் கற்களை வேறு ஒருவருக்குக் கொடுத்தேன். நான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று  நினைக்கிறதே’ என்று வியந்தான். பின்னர் அ’வனின்றி ஒரு அணுவும் அசையாது’ என்பது   உண்மையே என்பதை ஏற்று தனது தவற்றையும் அறிந்தான்.

அவனுடைய அஹங்காரம் அகன்றது; யார் யாருக்கு என்ன என்னவென்பதை இறைவன் ஏற்கனவே நிச்சயித்து விட்டான்; நான் ஒரு கருவி மட்டுமே என்ற ஞானோதயம் ஏற்பட்டது.

இறைவனின் கணக்குப்படியே எல்லாம் நடக்கும் என்பதை உணர்ந்தான்.

(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

xxxx

MY OLD ARTICLES:

 

Indran | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/indran/

24 Dec 2016 – அப்போது உமையம்மை அவன் முன் தோன்றி, அவனுடைய கேள்விக்குப் பதில் சொன்னாள்:- யக்ஷன் வடிவில் வந்தவர் தனது கணவரே என்றும் அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்றும் சொன்னாள். அப்போதுதான் தேவர்களின் செருக்கு அழிந்தது. பின்னர் இந்திரனும் சிவனை …

பழமொழிகளில் இந்துமதம் | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/பழமொழிகளில்-இந்த…

அவனின்றி ஒரு அணுவும் அசையாது (20). Picture: Sri Krishna. பிள்ளையார் சுழி போட்டாயிற்று பிள்ளையார் பிடிக்க குரங்கானது உரு ஏறத் திரு ஏறும் ஒன்றாகக் காண்பதே காட்சி ஆருமில்லார்க்கு தெய்வமே துணை (அகதிக்குத் தெய்வமே துணை) தனக்கு மிஞ்சித்தான் தான தருமம் (தனக்கும் …

You visited this page on 16/02/18.

இறைவன் செயல் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/இறைவன்-செயல்/

ராஜாவுக்கு அவ்வளவு திருப்தி இல்லை. ஒரு முறை பழத்தை நறுக்கும் போது ராஜாவின் கை விரல் வெட்டுப்பட்டு விட்டது. மந்திரியிடம் காட்டி என்ன சிகிச்சை செய்யலாம்? என்று கேட்டார். அவர் “எல்லாம் நன்மைக்கே- எல்லாம் இறைவன் செயல்- அவனன்றி ஓர் அணுவும் அசையாது‘ …

 

–சுபம்–