ஏழு வகை ஸ்நானம் , குளியல் முறைகள் (Post No.4490)

Written by  London Swaminathan 

 

Date: 13 DECEMBER 2017 

 

Time uploaded in London-  18-17

 

 

Post No. 4490

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

குளியல் போடுவது எப்படி? ஸ்நானம் செய்வது எப்படி? இந்து மதத்தில் ஏழு வகை ஸ்நானங்கள் சொல்லப் பட்டுள்ளன. அவையாவன:

 

ஏழு வகைகளின் விவரம்:

1.வாருண ஸ்நானம்

ஜலத்தில் அமிழ்ந்து தலை முழுகுவது. ஆற்றிலோ, குளத்திலோ, குழாயடியிலோ, கிணற்றடியிலோ தலையில் தண்ணீர் விட்டுக் கொண்டு செய்யும் குளியல் இது.

 

2.பார்த்திவ ஸ்நானம்:

‘ம்ருத்திகே ஹநமே பாபம்’ என்று தொடங்கும் மந்திரத்தால் தேஹம் முழுதும் சுத்தமான மண்ணைப் பூசிக்கொள்வது; அதாவது மண் குளியல். மேல் நாட்டிலும் கூட MUD BATH ‘மட் பாத்’ பிரசித்தம்.

 

3.ஆக்நேயம்:

அக்னிஹோத்ர பஸ்மத்தை ஈசாநம் முதலிய மந்திரங்களால் தேஹத்தில் பூசுவது (அதாவது திரு நீற்றுக் குளியல்)

 

4.வாயவ்யம்:

பசுக்களின் குளம்பு தூள்களை கோ ஸாவித்ரியால் ஜபித்து உடலில் பூசிக்கொள்வது; அதாவது பசுத் தூசி குளியல்; பசு நிற்கும் இடமும் அதன் கால் தூசும் அவ்வளவு புனிதமானது.

5.திவ்ய ஸ்நானம்

உத்தராயண மத்யத்தில் வெயிலுடன் கூட மழை பெய்யும்போது அதில் நனைவது திவ்ய ஸ்நானம் என்று அழைக்கப்படும்.

 

6.மந்த்ர ஸ்நானம்

பிராமணர்கள் தினமும் மூன்று காலங்களில் செய்யும் ஸந்தியாவந்தனத்தில் வரும் ‘ஆபோஹிஸ்டா’ என்ற மந்திரத்தைச் சொல்லி, மந்த்ரத்தின் ஒவ்வொரு பாதத்தால் கால், தலை, மார்பு, தலை, மார்பு, கால்,  மார்பு, கால், தலை என்ற வரிசையில் தீர்த்தத்தை ப்ரோக்ஷித்துக் கொள்ளவேண்டும். அதாவது இந்த மந்திரங்களால் உடலின் பாகங்களில் நீரைத் தெளித்துக்  கொள்ள  வேண்டும்

 

  1. மாநஸம்

சங்கு சக்ர தாரியாய் சூர்ய மண்டல மத்தியத்தில் தங்க நிறத்தில் பகவான் எழுந்தருளி இருப்பதாகவும் அவர் திருவடி பெரு விரலில் இருந்து கங்கை நதி ப்ரவாஹம் எடுத்து, ப்ரஹ்மரந்த்ரத்தின் வழியாக நம் தேஹத்தில் விழுவதாகவும், அதனால் உள்ளும் புறமும் உள்ள மலம் (அழுக்கு) யாவும் கழிந்து விட்டதாகவும் தியானம் செய்வதே மாநஸம்.

 

இவை தவிர இரண்டு கால்களையும் கைகளையும் முகத்தையும் அலம்புவது பஞ்சாங்க ஸ்நானம் ஆகும்

ஈரத்துணியால் உடம்பு முழுவதையும் துடைத்துக் கொள்வது காபில ஸ்நானம் எனப்படும்

நெற்றிக்கும் உடலின் மற்ற பாகங்களுக்கும் விபூதி அல்லது திருமண் தரிப்பதும் ஒருவகை ஸ்நானம் ஆகும் உடலின் 12 இடங்களில் இந்த அடையாளக் குறி இடுவர்.

நெற்றிக்குத் திலகம் , பொட்டு, திருமண், திருநீறு  இல்லாமல் ஈரத் துணியுடன் செய்வது வேறு காரியங்களாகும்; அதாவது சுப காரியங்கள் அல்ல.

யாரும் ஈரத்துணியுடன் நல்ல காரியங்களைச் செய்யக் கூடாது. குளித்துவிட்டு உலர்ந்த வஸ்த்ரத்தை தரித்துக்கொண்டு (காய்ந்த ஆடையை உடுத்திக்கொண்டு) ஜப, தபங்கள் (தப= தவ) செய்யலாம்.அவரவர் ஆசாரப்படியோ சம்ப்ரதாயப்படியோ நெற்றிக்குத் திலகமிட்டுக்கொண்டு செய்ய வேண்டும்.

 

(காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் சொன்ன ஐந்து வகை ஸ்நானங்களையும் படிக்கவும்)

 

TAGS:– ஸ்நான வகைகள், குளியல் முறைகள், ஏழு

–Subham–

சிவனா, விஷ்ணுவா யார் பெரியவன்? கம்பன் பதில் (Post No.4476)

WRITTEN by London Swaminathan 

 

Date: 10 DECEMBER 2017 

 

Time uploaded in London-  10–31 am

 

 

Post No. 4476

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

கம்பன் வாழ்ந்த காலம் பற்றி பல வேறு கருத்துக்கள் உண்டு. சிலர் 9-ஆம் நூற்றாண்டு என்றும் இன்னும் சிலர் 10ஆம் நூற்றாண்டு என்றும், மற்றும் சிலர் 12ஆம் நூற்றாண்டு என்றும் பகர்வர். எது எப்படியாகிலும் அவருக்கு முந்தைய காலத்தில் சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் இடையே சண்டை இருந்தது ஆழ்வார்கள், நாயன்மார்கள் பாடல்களில் இருந்து தெரிகிறது. கம்பன் இவர்களுக்குப் பின்னால் வாழ்ந்தவன் என்பது அவரது சமரசப் போக்கில் இருந்து அறியப்படுகிறது.

Siva and Vishnu in one form in SANKARANARAYANA idol.

சிவன் பெரியவனா, திருமால் பெரியவனா என்ற கேள்விக்கு, கிட்கிந்தா காண்டத்தில் போகிறபோக்கில் பதில் சொல்லுகிறான். அவன் பாடும் இடமோ சீதையைத் தேட,  வழி சொல்லும் கட்டம் ஆகும்; முழுக்க, முழுக்க பூகோள வருணனை. அதற்கிடையில் சிவன் பெரியவனா, திருமால் பெரியவனா என்ற கேள்விக்குப் பதில் தருகிறான். இப்படி வாதாடுபவர் எல்லோரும் ‘முட்டாள்கள்’ என்று முதல் வரியிலேயே ஒரு ஒரு போடு போடுகிறான்.

 

 

இதோ பாடலைப் பாருங்கள்:-

 

அரன் அதிகம் உலகு அளந்த அரி அதிகன்

என்றுரைக்கும் அறிவிலோர்க்குப்

பரகதி சென்று அடைவரிய பரிசேபோல்

புகல் அரிய பண்பிற்றாமால்

கரநதியின் அயலது வான்தோய் குடுமிச்

சுடர்த் தொகைய தொழுவோர்க்கு எல்லாம்

வரன் அதிகம் தரும் தகைய அருந்ததி யாம்

நெடுமலையை வணங்கி அப்பால்

நாடவிட்ட படலம்

பொருள்:-

சிவனே உயர்ந்தவன், உலகை அளந்த திருமாலே உயர்ந்தவன் என்று

சொல்லும் அறிவில்லாதவர்கள், நல்ல கதியை அடைதல் அருமையானது போல, புகுவதற்கு அரிய தன்மையுடைய வானத்திலுள்ள சுரநதியின் அருகில் உள்ளதும், வானளாவிய சிகரங்களில் சூரிய, சந்திரர்களின் சேர்க்கை உடையதும், வணங்கியவர்க்கு வேண்டிய வரங்களைத் தருவதுமான அருந்ததி என்னும் மலையைத் தொழுத பின்னர் அப்பால் செல்லுங்கள்.

 

அதாவது மூடர்கள் எப்படி மோட்சத்தை அடைவது கடினமோ, அவ்வளவு கடினமானது அருந்ததி மலையை அடைவது! அவ்வளவு வானளாவிய சிகரங்கள் உடைய மலை!

 

கம்பன் சொல்ல வந்தது– அருந்ததி மலையை அடைவது கடினம்; அங்கும் சென்று சீதையைத் தேடிவிட்டு அப்பால் செல்லுங்கள்.

 

இந்த வழிகாட்டும் படலத்தில் இடையே சிவன் பெரியவனா, விஷ்ணு பெரியவனா என்ற வாதத்தை நுழைத்து அப்படி வாதிடுவோர் மூடர்கள் என்கிறார்.

 

இதற்கு முன்னர் கம்பன் சொன்ன வேறு ஒரு கருத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தக் கடவுள் விஷயத்தில், கம்பன் என்ன கருத்து உடையவன் என்பது புலப்படும்.

கம்பன் கூறுகிறான்,

ஒன்றே என்னின் ஒன்றே ஆம்:
பல என்று உரைக்கின் பலவே ஆம்:
அன்றே என்னின் அன்றே அம்:
ஆம் என்று உரைக்கின் ஆமே ஆம்:
இன்றே என்னின் இன்றே ஆம்
உளது என்று உரைக்கின் உளதே ஆம்
நன்றே நம்பி குடி வாழ்க்கை!
நமக்கு இங்கு என்னோ பிழைப்பு? அம்மா!

(கடவுள் வாழ்த்து, யுத்தகாண்டம்)
பொருள்:–கடவுளை உண்டு என்பவனுக்கு அவன் உண்டு. இல்லை என்பவனுக்கு அவன் இல்லை. ஒரு கடவுள்தானென்றால் ஒரே கடவுளாகவே காட்சி தருவான். பல கடவுள் என்றால் பல கடவுளராக காட்சி தருவான். இன்றே காட்சி தருவன் என்ற நம்பிக்கை இருந்தால் இன்றே அவன் வருவான்.

ஆக, மேம்போக்கான காரணங்களை வைத்து, தோற்றங்களைக் கொண்டு அதுதான் உண்மை என்று வாதம் செய்யாதே. முழு உண்மையையும் உணர். அல்லது அப்படி உணர்ந்த பெரியோர்கள் கூறுவதையாவது நம்பு!

 

இவ்வளவு கஷ்டப்பட்டு கம்பன் போன்றோர் பாடிய கருத்தை நம் கிராமத்து  பாட்டிமார்களும் தாத்தாமர்களும் ஒரே வரியில் சொல்லி விடுகின்றனர்:-

அரியும் சிவனும் ஒன்னு; அரியாதவன் வாயில மண்ணு-– என்று.

சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் வல்லவர்கள் அவர்கள்!

 

சுபம் –

எண்ணற்ற கீதைகள்! (Post No.4475)

Date: 10 DECEMBER 2017

 

Time uploaded in London- 6-55 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4475

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

ஞான ஆலயம் ஆன்மீக மாத இதழ் திருமதி மஞ்சுளா ரமேஷ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு சென்னையிலிருந்து வெளி வருகிறது. அதில் டிசம்பர் 2017 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.

 

ஏற்றம் தரும் எண்ணற்ற கீதைகள்!

 

ச.நாகராஜன்

 

பகவத் கீதையின் பெருமை

 

Miss World Manushi Chillar in Gita Mahotsava in Kurukshetra

கீதை என்றால் அது பகவத் கீதையை மட்டுமே குறிக்கும் என்ற அளவிற்கு அளவிலாப் புகழ் பெற்றது கண்ணன் அர்ஜுனனுக்கு மஹாபாரதப் போர்க்களத்தில் உபதேசித்த கீதை.

கீதைக்கு உரையைப் பல நூறு அறிஞர்கள் எழுதி உள்ளனர். சமீப காலத்தில் பால கங்காதர திலகர்,மஹாத்மா காந்திஜி, அரவிந்தர், வினோபாஜி உள்ளிட்டோர் கீதைக்கு விரிவுரை எழுதியுள்ளனர்.

கீதையே எனக்கு ஆறுதல் தருவது என்றார் காந்திஜி. இறுதி வரை கீதையைத் தன்னுடன் வைத்திருந்தார் நேதாஜி.

இதைக் கண்டு வியந்த வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் ஒரு நாள் மறைந்தாலும் மறையலாம்; கீதை மறையாது என்றார். அவர் கூறியது போலவே பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் அஸ்தமித்தது. கீதையோ வழக்கம் போல பல்லாயிரக்கணக்கானோருக்கு வழிகாட்டி மிளிர்கிறது; ஒளிர்கிறது.வேதத்தின் சாரம் எனப்படுகிறது பகவத் கீதை.

 

 

பதினெட்டு அத்தியாயங்கள்; எழுநூற்றி ஒன்று ஸ்லோகங்கள்;  6446 பதங்கள் 8990 பதச் சேதங்கள் (சப்தங்கள்) உள்ள பகவத் கீதை உலகில் கோடானுகோடி பேருக்கு காலம் காலமாக வழி காட்டி வருகிறது. இப்படி ஒரு நூல் அற்புதமான நூலன்றி வேறென்ன?

‘என் ஒருவனையே சரண் அடை; உன்னை சகல பாவங்களிலிருந்தும் விடுவிக்கிறேன்; வருந்தாதே’ ( மாம் ஏகம் சரணம் வ்ரஜ்; அஹம் த்வாம் சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச -கிருஷ்ணர்) என்பதே கீதையின் அருள்வாக்காக அமைகிறது.

 

சிரத்தை நம்பிக்கையுடன் இறைவனை சரண் அடைபவன் முக்தி அடைகிறான் என்பதே ஹிந்துத்வம் காட்டும் தத்துவம்.

ஆனால் ஹிந்து மதத்தில் பகவத் கீதை போல வாழ்வின் மரமங்களையும் பிரபஞ்ச ம்ரமங்களையும் இறை மர்மங்களையும் சுட்டிக் காட்டும் கீதைகள் பல உண்டு.

 

 

143 கீதைகள்

பேரறிஞர் டாக்டர் வி.ராகவன் 123 கீதைகளின் பட்டியலைத் தனது ‘ரீடிங்ஸ் இன் பகவத் கீதா’ என்ற நூலில் தந்திருக்கிறார்.

இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட இந்தக் கட்டுரை ஆசிரியர்  சுமார் 143 கீதைகளின் பட்டியலைத் தொகுத்திருக்கிறார்.

 

 

மஹாபாரத கீதைகள்

 

மஹாபாரதத்தில் மட்டும் பகவத் கீதை, பராசர கீதா, ஹம்ஸ கீதா, அனு கீதா, உத்தர கீதா, ஷட்ஜ கீதா, ப்ராம்மண கீதா, வ்யாத் கீதா, பக கீதா, நகுஷ கீதா, சௌன்க கீதா உள்ளிட்டவை இடம் பெறுகின்றன.

 

ஒவ்வொன்றும் அபூர்வமான தத்துவங்களை விளக்குகின்றது.

பாதை காட்டும் கீதைகள் பலவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு பார்ப்போம்.

உத்தர கீதை ; பிரமாண்ட புராணத்தில் இடம் பெறும் கீதை இது. ப்கவத் கீதைக்கு இது ஒரு அநுபந்தம் போன்றது. உண்மையை இடையறாது தியானி என்ற சுலபமான வழியை இது கூறுகிறது. இதற்கு ஆதி சங்கரரின் குருவான கௌடபாதர் ஒரு விளக்கவுரை எழுதியுள்ளார்.

 

 

வேணு கீதை: பாகவதத்தில் பத்தாவது ஸ்காந்தத்தில் இடம் பெறுவது இது. கோபிகள் கிருஷணர் பசுக்களை மேய்த்துக் கொண்டிருக்கும் போது மிகவும் பக்தி மேலிட அவரது புகழைப் பாடத் தொடங்குகின்றனர். கிருஷ்ணரின் குழலோசை அவர்களை புளகாங்கிதம் அடைய வைத்து இறை உணர்வை ஊட்டுகிறது.

 

 

சுருதி கீதை: பாகவதம் பத்தாம் ஸ்காந்தத்தில் இடம் பெறும் இக்கீதை சுருதிகள் நாராயணனைப் பிரார்த்திப்பதை விளக்குகிறது.

 

கபில கீதை: பாகவதம் மூன்றாம் ஸ்காந்தத்தில் இடம் பெறுவது இது. கபிலர் தன் தாயாரான தேவஹூதிக்கு செய்த பிரமாதமான போதனை இதில் உள்ளது.

 

யுதிஷ்டிர கீதை. மஹாபாரத்த்தில் வரும் பிரசித்தமான சம்பவம் ய்ட்சனும் யுதிஷ்டிரரும் செய்த சம்வாதம். யட்சனின் கேள்விகளுக்கு அனாயாசமாக பதில் கூறி அவனிடம் வரம் பெற்று இறந்த தன் சகோதரர்களை உயிர்ப்பிக்கிறார் தர்மர்.  யட்ச ப்ரஸ்னம்  என்று புகழ் பெற்றுள்ளது இதுவே.

 

அஷ்டாவக்ர கீதை; மாமன்னன் ஜனகன் ஒரு கனவு காண்கிறான். அதில் அவன் பசியால் வாடி பிச்சை எடுப்பது போலவும் இறுதியில் சிறிது கஞ்சி கிடைக்க, அதை வாயருகில் கொண்டு போகும் போது இரு எருதுகள் சண்டையிட்டுக் கொண்டு அவன் மீது மோத கைக்குக் கிடைத்த கஞ்சி வாய்க்குக் கிடைக்காமல் கஞ்சி சட்டி கீழே விழுந்து சுக்கு நூறாக உடைவது போலவும் காண்கிறான்.. அப்போது கனவிலிருந்து விழித்த ஜனகன், “இதுவா, அதுவா , எது உண்மை?” (மன்னனாக இருப்பதா, பிச்சை எடுப்பதா?) என்ற கேள்விக்கு ஆளாகிறான். அவனை சந்திக்கும் அஷ்டாவக்ரர், “இதுவும் உண்மையல்ல; அதுவும் உண்மையல்ல” என்று கூற அவன் தன் குழப்பம் நீங்குகிறான். ‘அப்போது எது உண்மை?’ என்று ஜனகன் கேட்க உண்மைப் பொருளை அஷ்டாவக்ரர் விளக்குகிறார். அதுவே இந்த அஷ்டாவக்ர கீதையாக மலர்கிறது.

 

சௌனக கீதை ; மஹாபாரதத்தில் சௌனக முனிவர் தர்மபுத்திரருக்கு உரைக்கும் உபதேச மொழிகளே சௌனக கீதையாக அமைகிறது. பிரபஞ்ச வாழ்வு பற்றி இதில் எடுத்துரைக்கப்படுகிறது.

 

 

பக கீதை; மஹாபாரதத்தில் இடம் பெறுவது இது.

பக முனிவர் பல கற்பங்கள் வாழ்ந்தவர். அவருக்கும் இந்திரனுக்கும் நடக்கும் இந்த சம்பாஷணையில் கற்பனைக்கும் அப்பாற்பட்ட மிக மிக நீண்ட காலம் வாழ்ந்த முனிவர் தன் அனுபவங்களை எடுத்துக் கூறுகிறார்.

 

 

நஹுஷ கீதை: மஹாபாரதத்தில் வரும் ஒரு சம்பவத்தை ஒட்டி எழும் கீதை இது. நஹுஷன் என்ற பாம்பிடம் பீமன் பிடிபடுகிறான். அவனை விடுவிக்க விரைகிறார் தர்மபுத்திரர். தர்மரிடம் நஹுஷன் கேள்விகள் கேட்க அதற்குத் தக்க விடை அளிக்கிறார் தர்மர். அதனால் மனம் மகிழ்ந்த நஹுஷ பாம்பு பீமனை விடுவிக்கிறது. நஹுஷனின் கேள்விகளும் தர்மரின் பதில்களும் மிக்க சுவையானவை.

 

அவதூத கீதை; உயர்ந்த அத்வைத ஞானம் பற்றி அறிய விரும்புவோருக்கான  கீதை இது. பரமாத்மா சிவம். சிவம் என்றால் மங்கலமானவர். அவரைப் பற்றிய உண்மையில் ஆரம்பித்து அத்வைத சித்தாந்தத்தைக் கூறுகிறது இது.

தத்தாத்ரேய முனிவருக்கும் ஸகந்தனுக்கும் நடந்த இந்த சம்பாஷணை உயர் நிலையில் உள்ள சாதகர்களுக்காக அமையும் ஒரு கீதை.

 

 

அனு கீதை; மஹாபாரதத்தில் இடம் பெறுவது இது. மஹாபாரதப் போர் முடிந்த பின்னர் கிருஷ்ணரை மீண்டும் பகவத் கீதையை உரைக்குமாறு அர்ஜுனன் வேண்ட அவனை கிருஷ்ணர் கடிந்து கொள்கிறார். நினைத்த நேரம் எல்லாம் சொல்லக் கூடிய ஒன்று அல்ல கீதை. இருந்தாலும் அருள் மீதூற சுருக்கமாக கீதை தத்துவத்தை கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு அருளி உரைப்பது இது.

 

 

தேவி கீதா ; தேவி பாகவதத்தில் ஏழாம் ஸ்கந்தத்தில் 32ஆம் அத்தியாயமாக மிளிர்கிறது தேவி கீதா. இதே நூலில் பகவதி கீதாவும் இடம் பெறுகிறது.

 

ஹம்ஸ கீதை ; அன்னப் பறவை வடிவில் இருந்த விஷ்ணுவிற்கும் பிரம்மாவின் புத்திரரகளுக்கும் இடையில் நடந்த சம்பாஷணையே ஹம்ஸ கீதை.

 

 

 

இதர கீதைகளில் முக்கியமானவை சில

 

வராஹ புராணத்தில் ருத்ர கீதா மற்றும் அகஸ்திய கீதா இடம் பெறுகின்றன.

கூர்ம புரணமோ ஈஸ்வர கீதா மற்றும் வியாச கீதாவை எடுத்துரைக்கிறது.

ரிபு கீதா:  விஷ்ணு புராணத்தில் இடம் பெறும் இதில் ரிபு முனிவர் தனது சீடரான நிதகருக்கு வேதாந்த தத்துவத்தை எடுத்துரைக்கிறார்.

சிவ பார்வதி சம்வாதமான குரு கீதா குருவின் பெருமையை எடுத்துரைக்கிறது.

ஹனுமானுக்கும் ராமருக்கும் இடையில் நடந்த சுவையான உரையாடல் ராம கீதையாக அத்யாத்ம ராமாயணத்தில் அமைகிறது.

வசிஷ்ட கீதையில் வசிஷ்ட முனிவர் ராமருக்குப் பல பேருண்மைகளைக் கூறுகிறார்.

 

 

நாரத கீதை கிருஷ்ணருக்கும் நாரத முனிவருக்கும் நடந்த சம்பாஷணையைக் கூறுகிறது.

இன்னும் சூர்ய கீதா, பஞ்ச தச கீதா, சக்தி கீதா, பிங்கல கீதா, சம்பு கீதா, சப்த ஸதி கீதா, ப்ரமர கீதா, ராஸ கீதா, விஷ்ணு கீதா, பித்ரு கீதா, பிருத்வி கீதா, சாந்தி கீதா, போத்ய கீதா, துளஸி கீதா, வைஷ்ணவ கீதா, ஹரித கீதா, பீஷ்ம கீதா, ஞான கீதா, ஜன்ம கீதா, ம்ருத்யுஞ்சய கீதா,ப்ரணவ கீதா என்று இப்படி பெரிய கீதை பட்டியல் தொடர்கிறது.

ஒவ்வொன்றும் ஒரு பிரம்மாண்டமான பேருண்மையை உபதேசிக்கிறது.

 

 

ஆன்மீக நாட்டம் உள்ளவர் உயரிய நிலைக்குச் செல்ல வழி வகுக்கும் கீதைகள் இவை; அதே சமயம் இக உல்க வாழ்க்கையை எந்த வித சிரமமும் இல்லாமல் கடக்க வழி காண்பிப்பவையும் இவையே.

 

இவற்றைத் தொகுத்துப் படிப்பவர் பாக்கியசாலி. ஹிந்துத்வம் பல்வேறு நிலைகளில் உள்ளவர்களுக்கும் அருளுரைகளை அற்புதமாகத் தரும் என்பதை இந்த நூற்றுக்கும் மேற்பட்ட கீதைகள் நிரூபிக்கின்றன.

 

பாதை காட்டும் கீதைகளில் நமக்குப் பிடித்த கீதையைப் பயின்றால் இசைவான வாழ்வைப் பெறலாம்!

 

***

ஞான ஆலயம் முகவரி: பழைய எண் 7, புதிய எண் 32, அருணாச்சலபுரம் இரண்டாவது தெரு, அடையாறு, சென்னை  600020 . (வருட சந்தா ரூ 300/)

 

ஞானத்தின் வகைகள்! (Post No.4472)

Date: 9 DECEMBER 2017

 

Time uploaded in London- 5-17 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4472

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

அத்வைத ஸார விளக்கம் – கட்டுரை எண் 4

முதல் மூன்று கட்டுரைகள்: எண் 4388- வெளியான தேதி: 12-11-17

இரண்டாம் கட்டுரை எண் 4406 -வெளியான தேதி : 18-11-17

மூன்றாம் கட்டுரை எண் 4445 – வெளியான தேது : 30-11-17

 

ஞானத்தின் வகைகள்!

ச.நாகராஜன்

 

அத்வைத விளக்கத்தில் ஞான வகைகளைப் பற்றிப் பார்ப்போம். இதைப் படிப்பவர்கள் வேதாந்த விசாரத்தில் ஆர்வம் உள்ளவர்களாகவும், விஷயத்தை பல முறை படித்து நுணுகி ஆராய்வதற்கான பொறுமையைக் கொண்டுள்ளவர்களாகவும் இருத்தல் அவசியம். (சிரத்தா + பொறுமை)

*

 

சரீரத்தினால் சம்சார துக்கம் வருகிறது என்கிறீர்கள். இந்த சம்சார துக்கம் எப்போது போகும்?

சரீரம் போனால் துக்கம் போகும்.

கர்மம் நசித்தால் சரீரம் போகும்.

இராக த்வேஷங்கள் முதலியவை நசித்தால் கருமம் போகும்.

அபிமானம் நசித்தால் இராக த்வேஷாதிகள் போகும்.

அவிவேகம் நசித்தால் அபிமானம் போம்.

அஞ்ஞானம் நசித்தால் அவிவேகம் போகும்.

அஞ்ஞானமோ எனில், அத்வைத ப்ரம்மஸ்வரூபமாகிய ஆத்மாவாகிய தன்னை,’பிரம்மமே நான்’, ‘நானே பிரம்மம்’என்ற ஞானத்தினால் போகும்.

அதாவது இருளும் வெளிச்சமும் போல இவைகளில் ஒன்று இருந்தால் மற்றொன்று இருக்க முடியாது. அதுபோல ஞானம் உண்டானவிடத்து அஞ்ஞானம் இருக்காது.

 

கர்மமானது மூன்று வித கரணங்களினால் உண்டாகிறது என்று சொன்னீர்கள். ஞானமும் அந்தக்கரணத்தினால் உண்டாகி விருத்தியாகி இருக்கின்றபடியால் அதுவம் கூட கர்மமே என்று ஆகிறதல்லவா? ஆகவே, அது எப்படி அஞ்ஞானத்தை நசிக்கச் செய்யும்?

விருத்தி என்பது மனத்திலிருந்து உண்டான கர்மமேயாகும். அந்த விருத்தியானது ரூபத்தை அறிகின்ற விஷயத்தில்,  கண்களைப் போல, ஞானத்திற்கு ஒரு சாதனமாக இருந்து அஞ்ஞானத்தை நிவர்த்திக்கிறது. ஞானமோ நித்தியமானது.

 

இந்த ஞானம் எத்தனை வகைப்படும்?

ஸ்வரூப ஞானம், விருத்தி ஞானம் என இப்படி ஞானம் இருவகைப் படும்.

ஸ்வரூப ஞானம் என்றால் சுஷூப்தியில் அஞ்ஞானத்தைப் பிரகாசிப்பதாம்.

ஜாக்கிர ஸ்வப்னங்களில் விஷயங்களைப் பிரகாசிப்பது விருத்தி ஞானம்.

ஞானம் ஆத்ம ஸ்வரூபம்.

அந்த ஸ்வரூபமாக இருக்கின்ற ஞானமானது, விருத்திகளில் பிரவேசித்து அஞ்ஞானத்தை நசிக்கச் செய்கிறது.

 

அதெப்படி?புரியவில்லை! உதாரணங்களுடன் விளக்குங்களேன்.

தேத்தாங்கொட்டை நியாயம் தெரியுமா? அதன்படி , அதாவது தேத்தாங்கொட்டையானது, தண்ணீரிலுள்ள அழுக்கைப் போக்கி விட்டு, அந்த அழுக்குடன் அதுவும் அடியில் தங்கி விடுவது போல, விருத்தி ஞானமும் அஞ்ஞானத்தையும், அதன் காரியத்தையும் நசிக்கச் செய்து தானும் தானாகவே நசித்துப் போகும். இப்படி விருத்தி நாசமானால், அதில் பிரதிபலித்த ஞானமும்  தனக்கு பிம்பமான ஸ்வரூப ஞானத்தை அடையும்.பிறகு அத்வைதமாகிய ஆத்ம ஸ்வரூபம் மட்டும் மிஞ்சும். இப்படிப்பட்ட ஞானம் ஆத்மனாத்மா (ஆத்மா, அனாத்மா) விசாரத்தினாலே உண்டாகிறது.

ஆத்மா யார்?

மூன்று சரீரங்களுக்கு விலக்ஷணன் ஆகியும், மூன்று அவஸ்தைகளுக்கும் சாக்ஷி ஆகியும், பஞ்ச கோசங்களுக்கு அன்னியன் ஆகியும் உள்ள சச்சிதானந்த லக்ஷணனே!

 

அனாத்மா யார்?

மூன்று சரீரங்களும் உடையவன்.

 

விளக்கமாகச் சொல்லுங்கள்.

ஸமஷ்டி  ஸ்தூல சரீரம்

ஸமஷ்டி சூக்ஷ்ம சரீரம்

ஸமஷ்டி காரண சரீரம்

என்றும்,

வியஷ்டி ஸ்தூல சரீரம்

வியஷ்டி சூக்ஷ்ம சரீரம்

வியஷ்டி காரண சரீரம்

என்று மூன்று சரீரங்களும்,

ஆக ஸமஷ்டி ,வியஷ்டியினால் இப்படி ஆறு விதமாக இருக்கிறான்.

 

ஆத்மாவுக்கு ஈஸ்வரத்துவமும்,  ஜீவாத்வமும் வாஸ்தவமாக உள்ளதா?

வாஸ்தவம் அல்ல.

ஸமஷ்டி உபாதியினால் ஈஸ்வரத்துவமும்

வியஷ்டி உபாதியினால் ஜீவாத்வமும்

மயோபாதியினால் (மய, உபாதி; மய =மாயை) ஈஸ்வரத்துவமும்

அவித்யோபாதியினால் (அவித்யா, உபாதி) ஜீவாத்வமுமே அன்றி வாஸ்தவமல்ல.

ஆத்மாவானவன் மாயையாகவும், அவித்தையாகவும் தானாகவே ஆகி,

ஜீவீஸ்வரர்களாகச் செய்து கொள்ளுகிறான்.

ஈஸ்வரனுக்கு சமஷ்டி காரண சரீரத்தில் அபிமானம் (விருப்பம்) இல்லை.

 

ஏன் இல்லை?

அகங்காரமானது மஹாசுஷூப்தியில் நசித்துப் போவதால்.

 

இந்த ஸமஷ்டி காரணோபதியான ஈஸ்வரனுக்கு என்ன பெயர்?

அவ்வியாக்ருதன் என்றும் அந்தர்யாமி என்றும் பெயர்.

 

 

ஸமஷ்டி சூக்ஷ்ம சரீரோபாதியான ஈஸ்வரனுக்கு என்ன பெயர்?

ஹிரண்யகர்ப்பன், சூத்திராத்மா, மஹாபிராணன் என்ற பெயர்கள் உண்டு.

 

ஸமஷ்டி ஸ்தூலோபாதிகனானை ஈஸ்வரனின் பெயர்கள் யாவை?

விராட்டு, வைராஜன், வைஸ்வானரணன் என்ற பெயர்கள் உண்டு.

 

நன்றி. இன்னும் சில கேள்விகள் உள்ளன, கேட்கலாமா!

கேளுங்கள், கொடுக்கப்படும் (விடை தரப்படும்)!

****

 

பிராமணர்களுக்கு ஜே! மநு நீதி நூல்-7 (Post No.4471)

WRITTEN by London Swaminathan 

 

Date: 8 DECEMBER 2017 

 

Time uploaded in London-  14-52

 

 

Post No. 4471

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

(முதல் ஆறு பகுதிகளைப் படித்துவிட்டு இதைப்படிப்பது பொருள் விளங்கத் துணை புரியும்)

முதல் அத்தியாயம் ஸ்லோகம் 92

மனிதனின் தேகமே பரிசுத்தமானது. அதிலும் முகம் மிகவும் பரிசுத்தமானது

 

93.அந்த பிரம்மாவின் முகத்தில் பிறந்ததாலும், வேதத்தை ஓதுவதாலும், க்ஷத்ரியனுக்கு தர்மத்தைப் போதிப்பதாலும் பிராமணன் உயர்ந்தவனாகக் கருதப்படுகிறான்.

 

94.அந்தச் சுயம்புவான பிரம்மாவானவர், தேவர்கள், பிதுர்களுக்கு

யக்ஞம், சிரார்த்தம் முதலியன செய்து திருப்திப்படுத்துவதற்கும், மற்ற வருணத்தாருக்கு தர்ம உபதேசம் செய்து காப்பாற்றும் பொருட்டும், முகத்தில் இருந்து பிராமணர்களை உருவாக்கினார் அல்லவா?

 

95.பிராமணன் சொன்ன மந்திரத்தினால் தேவர்களும் பித்ருக்களும் தம்தம் அவிர்பாகங்களை (உணவை) அடைகின்றனர். அதனால் அவனைவிட உயர்ந்தவர் இல்லை.

  1. அசையும் அசையாப் பொருட்களில் புழுக்கள் உயர்ந்தன. அவைகளைவிட, அறிவோடு வாழ்கின்ற பசு முதலிய பிராணிகள் உயர்ந்தன. அதைவிட மனிதன் உயர்ந்தவன். அவர்களிலும் வேதம் ஓதும் அந்தணர்கள் உயர்ந்தவர்கள்.

97.அவர்களிலும் வேதத்தின் பொருளை அறிந்த பண்டிதர்கள் உயர்ந்தவர்கள்; அதைவிட விதி விலக்குகளை அறிந்தவர்கள் உயர்ந்தவர்கள். அவர்களிலும் தள்ளுவன தள்ளி, கொள்ளுவன கொண்டு வாழ்வோர் உயர்ந்தவர்கள். அவர்களிலும் பிரம்மத்தை உணர்ந்த ஞானிகள் உயர்ந்தவர்கள்.

 

98.பிராமணன் என்பவன் தர்மத்தின் வடிவமாக இருக்கிறான். தர்மம் விளங்கும் பொருட்டு தோற்றுவிக்கப்பட்ட  அவன் ஞானத்தினால் மோட்சத்திற்கு உரியவன் ஆகின்றான்.

 

99.பூமியில் பிறந்திருக்கின்ற பிராமணன், பெருமை பெற்றவனாய், நால் வர்ணத்தாருடைய தர்மம் என்னும் பொக்கிஷத்தை காப்பாற்றுகிறான்.

 

100.பிராமணன் முதல் வர்ணத்தானவன் என்பதாலும், பிரம்மாவின் முகத்தில் பிறந்ததாலும் எல்லா வர்ணத்தாரிடமிருந்தும் தானம் வாங்க அருகதை உள்ளவன் ஆகின்றான்.

 

101.ஆகையால் பிராமணன் தர்மம் வாங்கினாலும் அவன் பொருளையே — தன் பொருளையே சா     ப்பிடுகிறான்; தன் உடைகளையே உடுத்துகிறான். தன்னுடையதையே தானம் வாங்குகிறான். மற்றவர்கள் அவன் தயவில் வாழ்கிறார்கள்.

  1. அந்த பிராமாணன் உடைய, மற் றவர்களுடைய தர்மங்களை பகுத்தறிவதற்காக, மனித யோனியில் பிறவாத ஸ்வாயம்புவ மநு இந்த சாஸ்திரத்தைப் பிரபலப்படுத்தினார்.

103.இந்த சாஸ்திரத்தின் பயனை அறிந்த பிராமணர்களே இதைக் கற்கலாம்; தனது சீடர்களுக்குக் கற்பிக்கலாம். மற்றவர்களுக்குக் கற்பிக்கக் கூடாது.

104.விரத அனுஷ்டானங்களுடன் இதை பின்பற்றுபவனுக்கு மனம், உடல், சொல்லினால் ஏற்படும் குற்றங்கள் வாராது.

  1. இதை ஓதுகின்ற பிராமணன தன்னுடைய சமூகம் முழுவதையும் தூய்மைப் படுத்துகிறான். தன்னுடைய முன் ஏழு, பின் ஏழு தலைமுறைகளை நல்ல கதி அடையச் செய்கிறான். அவன் இந்த பூமி முழுவதையும் தானம் வாங்குவதற்கு உரியவன் ஆகின்றான்.

106.இந்த சாஸ்திரத்தை ஓதுகின்றவர்களுக்கு இது மங்களத்தையும் கீர்த்தியையும் (புகழ்), ஆயுளையும், உயர்ந்த மோக்ஷ கதியையும் தருகின்றது.

 

  1. இந்த சாஸ்திரத்தில் தொன்றுதொட்டு வந்த நான்கு வருணத்தாரி னொழுக்கங் களும்,வினைகளால் ஏற்படும் விளைவுகளும்,எல்லா அறங்களும் சொல்லப்பட்டுள்ளன.

 

108.வேதத்திலும் ஸ்ம்ருதியிலும் உள்ள ஒழுக்கவிதிகளே எல்லோருக்கும் முக்கியமானதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆகையால் யார் சுகம் அடைய விரும்புகின்றனரோ அவர்கள் இதில் ஈடுபடவேண்டும்.

 

109.ஒழுக்கத்தைவிட்ட பிராமணனுக்கு வேதத்தில் சொல்லிய பலன்கள் கிடைப்பதில்லை. ஒழுக்கம் உடைய பிராமணனுக்கு எல்லா நன்மைகளும் கிட்டும்

 

110.முனிவர்கள் ஒழுக்கத்தின் பலனை அறிந்து எல்லாத் தவத்திற்கும் அதுவே முதற்காரணம் என்று சொல்லுகின்றனர்.

எனது கருத்து

இந்தப்  பகுதியைப் படிக்கையில் ,மநு, ஒரேயடியாக பிராமணர்களை உயர்த்தி வைத்ததுபோலத் தோன்றும். ஆனால் 2600 ஆண்டுகளுக்கு முன்னர், யாக யக்ஞங்கள் தேவை இல்லை என்று சொன்ன புத்தரும் பிராமணர்களை உச்சானிக் கொம்பில் வைத்திருப்பதுடன் ஒப்பிட்டு பொருள் காண வேண்டும; புத்தர் அப்படி ஏன் சொன்னார் என்று அதன் தாத்பர்யத்தையும் அறிய வேண்டும்

 

“ஒரு மகானும், பிராமணனும் கடந்த கால பாவங்களினால் பாதிக்க படுவதில்லை; அவன் தனது சொந்த தாய் தந்தையரைக் கொன்று இருந்தாலும், இரண்டு நல்ல அரசர்களிக் கொலை செய்திருந்தாலும்,  ஒரு பெரிய நாட்டையும், மக்களையும் சீரழித்து இருந்தாலும் அவனைப் பாவங்கள் அணுகாது (தம்மபதம் 294) என்று புத்தர் செப்புகிறார்.

 

ஆயினும் 26ஆவது (தம்மபதம்)  அத்தியாயம் முழுதும் பிராமணன் யார் என்று இலக்கணம் கற்பிக்கிறார். அதாவது அன்பும் கருணையும் ஒழுக்கமும் அறிவும் உடையவனே பிராமணன் என்பதைத் தெளிவாக்குகிறார். இது போலவே மநு வும் வேதம் கற்காதவனோ, ஒழுக்கம் இல்லாதவனோ பிராமணன் இல்லை  என்பார். அது மட்டுமல்லாமல் கடு மையான விதிகளையும் விதிக்கிறார்.

 

வள்ளுவரும் அந்தணர் என்போர் அறவோர் என்றும் எவ்வுயிர்க்கும் கருணை காட்டுபவன் என்றும்,கொல்லாமை என்னும் விரதத்தைப் பின்பற்றுபவன் என்றும் பிறப்பொழுக்கம் குன்றாதவன் என்றும் பிராமணர்களுக்கு இலக்கணம் கற்பிக்கிறார் (குறள்  30, 134, 543, 560, 28, 8).

ஆகவே ஒழுக்கமும் அன்பும் கருணையும் உடையவர்களுக்குச் சிறப்பு சலுகை இருப்பதில் வியப்பொன்றும் இல்லை.

அரசாங்கத்தை எதிர்ப்பவர்களை எல்லாம் கடுங்குளிர்ப் பிரதேச கட்டாய முகாம்களுக்கு அனுப்பி’ காணமற் போகச் செய்த’ கம்யூனிஸ ரசும் கூட ரஷ்யாஷ்வின் அணுசக்தி ஆராய்ச்சியின் தந்தை என்று கருதப்பட்ட ஷகாரோவ் அவர்களைக் கொல்லாமல் வெளியேற அனுமதித்தது. அறிவாளிகளையோ, தூதர்களையோ கொல்லக்கூடாது என்ற தர்மத்தைப் பல நாடுகளும் கடைப் பிடித்தன. இந்துக்கள், இத்தோடு பெண்களையும் புற முதுகு காட்டுவோரையும் கொல்லக்கூடாது என்ற தர்மத்தையும் கடைப் பிடித்தனர்.

 

மநு பிராமணர்களுக்கு ஜே போட்டாலும் அத்தகைய இலக்கணத்திற்கு உட்படும் பிராமணர்கள் மிகவும் குறைவு என்பதை நாம் அறிவோம்.

 

மனுவே கூட பூணூல் போட எல்லோரும் உயர்ந்தவர், பிராமண குலத்தில் பிறந்து விட்டாலேயே உயர்ந்தவர் என்று சொல்லாமல், ஒழுக்கமும் வேதம் ஓதுதலுமே பிராம்ம ணத்துவத்தின் உரைகல் என்று பகர்வது கருத்துக்குரியது; கவனத்துக்குரியது.

 

இறுதியாக மநு சொல்லுவதை எழுத்துக்கு எழுத்து அப்படியே எடுத்துக் கொண்டு ‘பொங்கி எழுவோர்’ அவர் சொல்லும் மற்ற விஷயங்களையும் நம்ப வேண்டும்.

அவர் எழுதிய சாத்திரம், சரஸ்வதி- த்ருஷத்வதி நதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் வாழ்வோருக்கு அந்த நதிகள் ஓடிய காலத்தில் (கி.மு.2000க்கு முன்) எழுதப்பட்டது. அதற்குப் பின் அது எவ்வளவோ மாற்றங்களை அடைந்திருக்கிறது; இடைச் செருகலுக்கு உடப்படிருக்கிறது.

 

சுபம்–

 

ஹிந்து வரலாற்று அதிசயம்: 28வது வியாஸர்! (Post No.4469)

Date: 7 DECEMBER 2017

 

Time uploaded in London- 6-23 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4469

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

ஹிந்து வரலாற்று அதிசயம்

28வது வியாஸர்!

 

ச.நாகராஜன்

 

1

ரிக், யஜுர், சாம, அதர்வணம் என்று வேதத்தை நான்காகப் பகுத்தவர் வியாஸ்ர் என்பதை நாம் அறிகிறோம்.

வியாஸர் என்பது ஒரு பதவியின் பெயர்.

வேதத்தைப் பகுப்பவர் வியாஸர்.

கிருத யுகம், திரேதா யுகம், த்வாபர யுகம் ஆகிய மூன்று யுகங்களில் வேதம் ஒன்றாகவே இருக்கும்.

கலி யுகத்திலோ மனித ஆயுள் குறைவு. புத்தி சக்தி குறைவு. ஒன்றாக உள்ள வேதத்திலிருந்து ம்ந்திரம், பிரம்மாணம், சாமம் ஆகியவற்றைப் பிரித்தெடுக்க மனிதர்களுக்கு சக்தி இருக்காது.

ஆகவே பிரம்மாண்டமான புத்தி உடைய ஒருவர் (வியாஸோ விசால புத்தே) மனித குலத்திற்கு உதவி செய்வதர்காக இப்படி வேதங்களை எளிது படுத்தி வகைப் படுத்தித் தருகிறார்.

கலியுகத்தில் தர்மம் ஒற்றைக் காலில் நிற்கிறது.வேதோகிலோ தர்ம மூலம்.

தர்மத்தின் அடிப்படை வேதமே.

ஆகவே வேதத்தைப் பாதுகாத்தால் தர்மத்தைப் பாதுகாத்தவர்கள் ஆகிறோம்.

பாரத பூமிக்கு ஹிந்து ராஷட்ரம் என்று பெயர் சூட்ட வேண்டியது இயல்பான ஒன்று. ஆனால் இன்று இந்தியா என்கிறோம்.

செகுலரிஸ்டுகளுக்குப் பயந்தோ அல்லது பணிந்தோ!

ஹிந்து ராஷட்ரம் என்று சொல்ல வேண்டாமென்றால் தர்ம ராஷ்ட்ரம் என்று சொல்லலாம். தர்ம ராஷ்ட்ரம் என்றால் வேத ராஷ்ட்ரம் என்று பொருள்.

வேதம் உடையதிந்த நாடு என்றார் பாரதியார்.

அது தான் நமக்குப் பெருமை!

அது ஒன்றே தான் நமக்கு அடிப்படைப் பெருமை.

இதர நாடுகளுக்கு இல்லாத அஸ்திவாரம் நம்மிடம் தான் இருக்கிறது.

இதை யுகம் யுகமாகக் காப்பாற்றுவதற்கென்றே வேத வியாஸர் அவதரிக்கிறார்.

இப்போது 28வது கலியுகம் நடக்கிறது.

இதற்கு முன் நடந்த 27 சதுர்யுகங்களிலும் 27 வியாஸர்கள் இருந்திருக்கின்றனர்.

அருள் புரிந்திருக்கின்றனர்.

 

2

28 வேத வியாஸர்களின் பட்டியல் இதோ:

 

ஸ்வாயம்புவ மனு (த்வாபரத்தில் அவதரித்தார்.) அவரே முதல் வியாஸர்.

ப்ரஜாபதி இரண்டாவது வியாஸர்

உசநஸ் மூன்றாவது வியாஸர்

பிருஹஸ்பதி நான்காவது வியாஸர்

சூரியன் ஐந்தாவது வியாஸர்

ம்ருத்யு ஆறாவது வியாஸர்.

இந்திரன் ஏழாவது வியாஸர்.

வஸிஷ்டர் எட்டாவது வியாஸர்

ஸாரஸ்வதர் ஒன்பதாவது வியாஸர்

திரிதாமா பத்தாவது வியாஸர்

திரிவிருஷர் பதினொன்றாவது வியாஸர்

பரத்வாஜர் பன்னிரெண்டாவது வியாஸர்

அந்தரிக்ஷர் பதிமூன்றாவது வியாஸர்

தர்மர் பதிநான்காவது வியாஸர்

த்ரய்யாருணி பதினைன்ந்தாவது வியாஸர்

தனஞ்சயர் பதிறாவது வியாஸர்

மேதாதிதி பதினேழாவது வியாஸர்

விரதி பதினெட்டாவது வியாஸர்

அத்ரி பத்தொன்பாவது வியாஸர்

கௌதமர் இருபதாவது வியாஸர்

ஹர்யாத்மா இருபத்தொன்றாவது வியாஸர்

வாஜச்ரவஸ் இருபத்தியிரண்டாவது வியாஸர்

ஸோம ஆமுஷ்யாயணர் இருபத்திமூன்றாவது வியாஸர்

த்ரிணபந்து இருபத்திநான்காவது வியாஸர்

பார்க்கவர் இருபத்திஐந்தாவது வியாஸர்

சக்தி இருபத்தியாறாவது வியாஸர்

ஜாதுகர்ண்யர் இருபத்தியேழாவது வியாஸர்

இப்போதுள்ள கலியுகத்தில் இருபத்தெட்டாவது வியாஸராக நாராயணனே அம்சாவதரமாக அவதரித்துள்ளார்.

வேத வியாஸரின் மஹிமை பற்றி மஹாபாரதத்தில் காணலாம்.

அடுத்த வியாஸராக – இருபத்தொன்பதாவது சதுர்யுகத்தில் த்வாபர யுகத்தில் – வரப்போவது அஸ்வத்தாமா.

 

3

ஹிந்துக்களுக்கு வரலாறு பற்றி ஒன்றும் தெரியாது. வரலாறுத் தொகுப்பையே நாம் தான் கற்றுத் தந்திருக்கிறோம் என்று பல மேலை நாட்டு அறிஞர்கள் பெருமிதமாகக் கூறுவது வழக்கம்.அதை அப்படியே எழுதியுள்ளனர்.

ஆனால் 28 சதுர் யுக சரிதத்தையும் விளக்கியுள்ள ஒரே மதம் ஹிந்து மதம் தான்.

வேறு எந்த ஒரு மதமும், நாகரிகமும் இப்படி ஒரு காலக் கணக்கைத் துல்லியமாகத் தந்ததில்லை.

ஆகவே தான் காஸ்மாஸ் தொலைக்காட்சித் தொடர் தயாரித்த பிரபல விஞ்ஞானி கார்ல் சகன் உலக மதங்களையெல்லாம், உலக நாகரிகங்களையெல்லாம் முற்றிலுமாக ஆராய்ந்து விட்டு பிரபஞ்ச தோற்றத்தை அறிவியல் ரீதியிலாகக் கணக்கிட்டுச் சொல்லும் அதே கால அளவை ஹிந்து மதம் ஒன்று மட்டுமே தருகிறது என்று கூறி தன் தொடரின் முதல் காட்சியில் சிதம்பரம் நடராஜரைக் காட்டினார்.

அத்துடன் அவர் சிதம்பரத்திற்கு வருகை புரிந்து நடராஜரைத் தரிசித்தார்.

ஆக பிரபஞ்ச வரலாறையே தந்துள்ள ஹிந்து மதம், முகலாய, பிரிட்டிஷ் ஆதிக்கத்தினால் தன் இயல்புத் தன்மையில் ஒரு பங்கைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்தது உண்மை.

பழைய இயல்பான நிலைக்குத் திரும்ப நாம் ஓவொருவரும் முயற்சி எடுத்தால் பொற்காலம் தோன்றும்.

 

4

நண்பர் ஒருவர் என்னைச் சந்தித்த போது “ஒரே குழப்பமாக இருக்கிறது” என்றார்.

“என்ன விஷயம்”, என்றேன்.

“நம் மதத்தை எடுத்துக் கொண்டால் பல விவரங்கள் குழப்பமாக உள்ளன. இதோ பாருங்கள், சப்த  ரிஷிகள் என்று இரண்டு பட்டியல் உள்ளன. இதில் எது உண்மை?” என்று அவர் கேட்டார்.

அதை வாங்கிப் பார்த்த நான், “இரண்டுமே உண்மை” என்றேன்.

“என்ன, இன்னும் அதிகமாகக் குழப்புகிறீர்கள்?” என்றார் அவர்.

“ஒரு குழப்பமும் இல்லை. பல லட்சம் ஆண்டுகள் சரித்திரத்தைக் கொண்டுள்ளோம் நாம். சப்தரிஷி பட்டியலைப் பார்க்கும் போது இது எந்த சதுர்யுகத்திற்கானது, எந்த மன்வந்தரத்திற்கானது என்று கேட்டால் விடை சுலபமாக வந்து விடும்.

27 மன்வந்தரம் கடந்தவர்கள் நாம். ஆக இந்த இரண்டு பட்டியலுமே உண்மை. வெவ்வேறு மன்வந்தரத்திற்கு உரிய சப்த ரிஷிகள் இவர்கள்” என்றேன்.

“அடடா, இது எனக்குத் தெரியாமல் போயிற்றே! இதைச் சொல்வதற்கு ஆள் இல்லையே” என்றார் அவர்.

 

5

புராண, இதிஹாஸம் மிகவும் பரந்தது. சுலபமாக அதைக் கற்றுக் கரை சேர முடியாது.

ஆகவே தான் சமீப காலம் வரை மண்டபங்களிலும் கோவில்களிலும் பிரவசனகர்த்தாக்கள், இதிலேயே ஊறி அனைத்தையும் அறிந்த நிபுணர்கள் – பல்வேறு விஷயங்களை மால நேரத்தில் கூறுவார்கள்.

ஆனால் இந்தக் காலத்தில்..

நாமே குழுவை அமைத்து இவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

படித்தும் தெரிந்து கொள்ளலாம் – தமிழ் அண்ட் வேதாஸ் டாட் காம் (www.tamilandvedas.com) கட்டுரைகளைப் படிக்கலாம்; பயன் அடையலாம்.

****

 

 

 

 

வேத கால முனிவர்களின் ஆயுள்! (Post No.4464)

Written by London Swaminathan 

 

Date: 6 DECEMBER 2017 

 

Time uploaded in London-  11–04 am

 

 

Post No. 4464

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

வேத கால இலக்கியங்களில் இருந்து  முனிவர்களின் ஆயுள் பற்றி நாம் சில சுவையான விஷயங்களை அறிகிறோம்.

 

பொதுவாக மனிதனுக்கு வேதம் நிர்ணயித்த ஆண்டு நூறு வயது. இதை பிராமனர்களும் தினமும் சந்தியாவந்தனம் செய்யும்போது உறுதிப்படுத்துகின்றனர்.

பரத்வாஜர் வேதம் கற்ற கதையில் அவர் நீண்டகாலம், அதாவது நாலாவது முறை பிரம்மச்சாரியாக வாழ்ந்தார் என்று வருகிறது.

 

மநுவும் கிருத யுகத்தில் மனிதர்கள் 400 ஆண்டுக்காலமும், திரேதா யுகத்தில் 300 ஆண்டுக்காலமும், துவாபர யுகத்தில் 200 ஆண்டுக்கலமும், கலியுகத்தில் 100 ஆண்டுகளும் வாழ்வர் என்று இயம்புகிறார் (மநு- 1-83)

இவ்வாறு சொல்லும்போது இதை அதிகபட்சம் என்று கொள்ளவேண்டும். அப்போது வாழ்ந்த எல்லோரும் இவ்வளவு ஆண்டுகள் வாழ்ந்ததாக எண்ணுவது தவறு என்பது எனது கருத்து.

பஸ்யேம சரதஸ்சதம்/ நூறாண்டுக் காலம் வாழ்க

 

பிராமணர்கள் தினமும் காலை, பகல், மாலை என்று மூன்று வேளைகளில் சந்தியாவந்தனம் செய்வர். அதில் மதிய நேரத்தில் அவர்கள் சொல்லும் மந்திரம் அற்புதமானது:-

 

பஸ்யேம சரதஸ் சதம்

ஜீவேம சரதஸ் சதம்

நந்தாம சரதஸ் சதம்

மோதாம சரதஸ் சதம்

பவாம சரதஸ் சதம்

ஸ்ருணவாம சரதஸ் சதம்

ப்ரப்ரவாம சரதஸ் சதம்

அஜீதாஸ்யாம சரதஸ் சதம்

 

பொருள்

 

சூரிய தேவனை நூறாண்டுக் காலம் காண்போமாக

(அவ்வாறே) நூறாண்டுக் காலம் வாழ்வோமாக

நூறாண்டுக் காலம் உற்றார் உறவினருன் கூடிக்குலவுவோமாக

நூறாண்டுக் காலம் மகிழ்வோமாக

நூறாண்டுக் காலம் புகழுடன் விளங்குவோமாக

நூறாண்டுக் காலம் இனியதைக் கேட்போமாக

நூறாண்டுக் காலம் இனியதைப் பேசுவோமாக

நூறாண்டுக் காலம் தீமைகளால் வெல்லப்படாமல் வாழ்வோமாக

Picture of Trailinga Swami of Varanasi

பெரியவர்களை வணங்கும்போது அவர்கள் ‘தீர்காயுஸ்மான் பவ:’ என்று ஆசீர்வதிப்பர். இதன் பொருள் ‘நீ நீண்ட ஆயுளுடன் இருப்பாயாக’; அப்படிச் சொல்லும்போதே நோய் நொடியில்லாமல் சகல சௌபாக்கியங்களுடன் வாழ்வாயாக என்பதே அர்த்தம்.

 

வேத கால இந்துக்கள் எப்போது பார்த்தாலும் இதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தனர்.

 

தீர்க தமஸ் என்ற முனிவர் நூறு ஆண்டுகள் வாழ்ந்ததாக ரிக்வேதமும் சாங்காயன ஆரண்யகமும் மொழியும்.

 

90 முதல் 100 வயது வரை உள்ள     காலத்தை அதர்வவேதமும் பஞ்சவிம்ச பிராம ணமும் தசமி என்ற சொல்லால் குறித்தன. ரிக்வேதம் இதை ‘தசம யுக’ என்று சொல்லிற்று.

நூறாண்டுக்காலம் வாழ்வோமாக என்பது ரிக் வேதத்திலேயே கணப்படுவதால் (1-89-9; 10-18-10) இவர்கள் ஆதிகாலத்திலேயே ஆரோக்கிய விஷயங்களில் மிகவும் ‘கறார்’ ஆன பேர்வழிகள் என்பதும் நாகரீகத்தின் உச்சகட்டத்தை எட்டியவர்கள் என்பதும் புலப்படும்.

தீர்கதமஸ் 100 ஆண்டு வாழ்ந்தார்

மஹீதாச ஐதரேயர் 116 ஆண்டு வாழ்ந்தார்.

 

இந்துக்கள் 130 ஆண்டுகள் கூட வாழ்ந்தனர் என்று ஒனெசிக்ரிடஸ் (Onesicritus) சொல்கிறார். இவர் அலெக்ஸாண்டருடன் வந்தவர். 2300 ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய புத்தகத்தில் 130 ஆண்டுகள் வாழ்ந்த இந்துக்கள் பற்றிக் குறிப்பிடுகிறார்

 

புத்த ஜாதகக் கதைகளும் 120 ஆண்டுகள் வாழும் விருப்பத்தைக் குறிப்பிடும்.

 

நமது காலத்தில் வாழ்ந்த காஞ்சி சங்கராசார்யார் 100 ஆண்டுகளும் திருக்கோவிலூர் ஞானானந்த சுவாமிகள் 150 ஆண்டுகளும் வாழ்ந்தனர்.

 

காசியில் வாழ்ந்த த்ரைலிங்க சுவாமிகள் (1607-1887) 280 ஆண்டுகளுக்கு உயிர்வாழ்ந்தார். இவரை ‘காசியின் நடமாடும் சிவபெருமான்’ என்று ராமகிருஷ்ண பரமஹம்சர் புகழ்வார்.

 

இதைக் காணும்போது உலகிலேயே அதிக காலம் வாழ்ந்த  ஒருவர் இந்துதான் என்று தோன்றுகிறது

ரிக்வேதம் (10-62-2), அதர்வ வேதம் (1-22-2) முதலிய  நூல்களில் ‘தீர்காயுத்வம்’ (நீண்ட ஆயுள்) என்பதைக் காணலாம்.

அதர்வ வேதத்தில் நீண்ட ஆயுளுக்கான மந்திரங்கள்  தனியாகவே உள்ளன.

யாரேனும் வேத வேள்விகளைச் செய்தால் அவர்களுக்கு,

‘சர்வம் ஆயுர் இதி’ என்ற பலனை பிராமண நூல்கள் திரும்பத் திரும்ப இயம்புகின்றன. இதன் பொருள் – ‘அவர்களுக்கு பூரண ஆயுள்’ என்பதாகும்.

 

Picture f Gnanananda of Tirukkovilur

 

நீண்ட ஆயுள் பற்றிய முந்தைய கட்டுரைகள்

நீரையும் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/நீரையும்/

 

நூறாண்டுக் காலம் நாம் காண்போமாக; நூறாண்டுக் காலம்நாம் வாழ்வோமாக. (நூறாண்டுக் காலம் வாழ்க; நோய்நொடியிலாமல் வாழ்க). 13).பஹிஸ்ஸரதி நிஸ்வாஸே விஸ்வாச: க: ப்ரவர்ததே – மஹாபாரதம். வெளியே போன மூச்சு திரும்பிவரும் என்று எப்படி நம்புவது? (போன மூச்சு …

நூறு வயதானவர்களின் | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/நூறு-வயதானவர்களி…

8 Sep 2016 – … மேலும் வேத மந்திரங்களில் நிறைய இடங்களில் “நூறாண்டுக் காலம் வாழ்க; நோய் நொடியில்லாமல் வாழ்க” என்ற பிரார்த்தனை வருகிறது. வேதங்களின்படி ஒருவனுடைய ஆயுள் நூறு வயதுதான். ஆயுர்வேத, சோதிட சாத்திரப்படி ஒருவனின் வயது 120 ஆகும். வாழ்க நூற்றாண்டு …

பிரம்ம | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/பிரம்ம/

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com;. “பாகத்தில் ஒருவன் வைத்தான் பங்கயத்து இருந்த … கண்ணதாசனும் யஜூர்வேதத்திலுள்ள ‘பஸ்யேம சரதஸ் ஸதம், ஜீவேம சரதஸ் ஸதம்’ (நூறாண்டுக் காலம் வாழ்க, நோய் நொடியில்லாமல் வாழ்க………..) மந்திரம் முதல் எவ்வளவோ சம்ஸ்கிருதப் …

நீண்ட ஆயுளுக்கு வேதப் பிரார்த்தனை …

https://tamilandvedas.com/…/நீண்ட-ஆயுளுக்கு-…

 

12 Sep 2017 – ரிக்வேதத்துக்குப் பின்னர் வந்த யஜுர் வேதத்தில்நூறாண்டுக் காலம் வாழ்க, நோய் நொடியில்லாமல் வாழ்க, மகிழ்ச்சியுடன் வாழ்க என்று பெரிய மந்திரமே உள்ளது. (பஸ்யேம சரதஸ்சதம், ஜீவேம சரதஸ்சதம் சரதம், நந்தாம சரதஸ்சதம், மோதாம சரதஸ்சதம், ப்ரப்ரவாம சரதஸ்சதம்).

நீண்ட நாள் வாழும் பிராணி எது? யோகி …

https://tamilandvedas.com/…/நீண்ட-நாள்-வாழும…

 

பிராமணர்கள் தினசரி சந்தியாவந்தனத்தில் ‘பஸ்யேம சரதஸ் சதம்’ என்ற மந்திரத்தைச் சொல்லுகிறார்கள். கண்ணதாசன் இதை ஒரு சினிமாப் பாடலில் அழகாக மொழிபெயர்த்துள்ளார்: “ நூறாண்டுக் காலம் வாழ்க, நோய் நொடி இல்லாமல் வாழ்க” என்று. நிமிடத்துக்கு 15 முறை சுவாசித்தால் …

போஜனப் பிரியன் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/போஜனப்-பிரியன்/

 

அதை சினிமா பாட்டிலும் நூறாண்டுக் காலம் வாழ்க! நோய் நொடியில்லாமல் வாழ்க! என்று மொழிபெயர்த்துள்ளனர். சூரியனைப் பாதுகாப்பாகப் பார்க்க பிராமணச் சிறுவர்களுக்கு சிறு வயதிலேயே கற்றுத் தருவர். சூரியனை நோக்கிச் சொல்லப்படும் இந்த துதி: பஸ்யேம சரதஸ் சதம்: …

பிராமணர் தர்மம் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/பிராமணர்-தர்மம்/

 

… என்று சொல்லி எல்லோருக்கும் மஞ்சள் அட்சதை போட்டு மங்களம் பாடினர். (ஸ்வஸ்தி பிரஜாப்ய பரி பாலயந்தாம்………….). நூறாண்டுக் காலம் வாழ்க, நோய் நொடியில்லாமல் வாழ்க என்ற சினிமாப் பாட்டு வேத மந்திரத்தின் மொழி பெயர்ப்பு என்பதை எல்லாம் முன்னரே காtடிவிட்டேன்.

வாழ்க அந்தணர் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/வாழ்க-அந்தணர்/

 

14 Jan 2017 – இன்பமுடன் வாழ்க) என்று நாமும் பிரார்த்தனை செய்வோம். சைவ சமய நிகழ்ச்சிகள் அனைத்தும் “வாழ்கஅந்தணர் வானவர் ஆனினம்” (அந்தணர் முதலான எல்லாஜாதியினரும், பசு முதலான எல்லாப் பிராணிகளும்வாழ்க) … நூறாண்டுக் காலம் நோய் நொடியில்லாமல் வாழட்டும்).

பரத்வாஜர் வேதம் கற்ற கதை & தவற்றைத் …

https://tamilandvedas.com/…/பரத்வாஜர்-வேதம்-கற…

 

 

பரத்வாஜர் வேதம் கற்ற கதை & தவற்றைத் திருத்துவது எப்படி? கதை (Post No.4043). Compiled by London Swaminathan Date: 1 July 2017. Time uploaded in London-20-44. Post No. 4043. Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. வேதகால இலக்கியத்தில் நான்கு பகுதிகள் உண்டு: 1.சம்ஹிதை/துதிகள் 2

 

–SUBHAM–

 

 

சிவ சிவ என்றால் தீய கோள்களின் குற்றம் போகும் (Post No.4463)

Date: 6 DECEMBER 2017

 

Time uploaded in London- 5-52 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4463

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

சிவ நாம மகிமை

 

சிவ சிவ என்றால் தீய கோள்களின் குற்றம் போகும்; ஆயுள் பெருகும்!

 

ச.நாகராஜன்

 

1

சிவ நாம மகிமையை முற்றிலும் சொன்னவர் யாரும் இல்லை.

தமிழில் ஆயிரக்கணக்கான துதிப் பாடல்களால் சிவனைத் துதிக்கலாம்.

பன்னிரெண்டு திருமுறைகளும், ஏராளமான துதிப் பாடல்களும் இருக்கின்றன. இத்துணை துதிகள் இருந்தாலும் கூட, சிவ சிவ என்று சொன்னாலே அனைத்து தீவினைகளும் போகும்; நல்வினை சேரும்; அதன் விளைவாக அனைத்து நலன்களும் அடைய முடியும் என்று சிவப்பிரகாச சுவாமிகள் அருளியுள்ளார்.

பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த மாபெரும் அருளாளர் சிவப்பிரகாச சுவாமிகள். இவரை ‘துறைமங்கலம் சிவபிரகாசர், கற்பனைக் களஞ்சியம், சிவன் அநுபூதிச் செல்வர் என்ற பெயர்களால் பக்தர்கள் போற்றிப் புகழ்வர்.

 

32 வயதே வாழ்ந்தார்; 34 நூல்களுக்கும் அதிகமான நூல்களை இயற்றினார்; ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தினார்.

தமிழ் இவர் வாக்கில் விளையாடியது; அற்புதங்களை நிகழ்த்தியது.

 

கிறிஸ்தவ மதக் கொள்கைகளை கண்டனம் செய்து இவர் இயற்றிய ஏசு மத நிராகரணம் அபூர்வமான ஒரு நூல். ஆனால் அதன் பிரதிகளில் ஒன்று கூட இப்போது கிடைக்கவில்லை.

ராபர்ட் டி நொபிலி என்ற கபட வேஷதாரியிடம் வாதிட்டு அவரை இவர் வென்றார் என்பர். சிலரோ வீரமாமுனிவருடன் வாதிட்டு அவரை இவர் தோற்கடித்தார் என்பர்.

தமிழ் கற்க விரும்பும் அனைவரையும் முதலில் சிவப்பிரகாச சுவாமிகளின் நூலைப் படிக்குமாறு தமிழ்ப் பண்டிதர்கள் கூறுவது மரபு.

 

அப்படி ஒரு அற்புதமான கற்பனை வளமும் கருத்து வளமும் சொல் வளமும் இலக்கண நயமும் இவரது நூல்களில் மிளிரும்.

சிறந்த சிவ பக்தரான இவர் இயற்றியுள்ள நூல்களில் ஒன்று தான் சிவ நாம மகிமை என்னும் குறு நூல். அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.

 

2

சிவ நாம மகிமை என்ற இந்த நூல் பத்துக் கலிவிருத்தப் பாடல்களையும் இறுதியில் ஒரு அறுசீர் விருத்தத்தையும் கொண்டுள்ளது.

 

சிவ நாமம் எல்லையற்ற மகிமை கொண்டது. சாதாரணமாக சிவ சிவ என இரட்டித்து இந்த நாமத்தைக் கூறுவது வழக்கம்.

எல்லையற்ற பெருமைகளில் சிலவற்றை இந்த நூல் விளக்குகிறது.

 

வேத மாகமம் வேறும் பலப்பல

ஓதி நாளு முளந் தடு மாறன்மின்

சோதி காணிருள் போலத் தொலைந்திடுந்

தீதெ லாமுஞ் சிவசிவ வென்மினே

என்பது முதல் பாடல்.

 

வேதம் ஆகமம் போன்ற அனைத்தும் கற்பதற்குக் கடினம். அதை ஓதி உளம் தடுமாற வேண்டாம். எளிமையாக சிவ சிவ என்று கூறுங்கள் தீதெலாம் தொலைந்திடும் என்று அருளுகிறார் சுவாமிகள் இதி.

 

சாந்தி ராயண மாதி தவத்தினான்

வாய்ந்த மேனி வருத்த விறந்திடாஅப்

போந்த பாதக மேனும் பொருக்கெனத்

தீந்து போகுஞ் சிவசிவ வென்மினே

என்பது நான்காவது பாடல்.

சாந்திராயணம் உள்ளிட்ட கடினமான விரத முதாலனவற்றை மேற்கொண்டு உடலை ஏன் வருத்துகிறீர்கள்? எந்தப் பாதகமானாலும் பொருக்கெனப் போய் விடும் சிவ சிவ என்று சொன்னால் என்று அருளுகிறார் சுவாமிகள் இந்தப் பாடலில்.

தீய நாளொடு கோளின் செயிர்தபும்

நோய கன்றிடு நூறெனக் கூறிய

ஆயுள் பல்கு மறம் வளர்ந் தோங்குறுந்

தீய தீருஞ் சிவ சிவ வென்மினே

என்பது ஆறாவது பாடல்.

 

நவ கிரகங்களின் தோஷம் சிலரது ஜாதகத்தில் காணப்படும். சில நாள்கள் தீய பலனைத் தருவதாக அமையும். இந்த தீய நாளொடு, நவ கிரகங்களின் குற்றமும் தீரும் – சிவ சிவ என்று சொன்னால் என்று அருளுகிறார் சுவாமிகள் இதில்.

இறுதியாக உள்ள ஆசிரிய விருத்தப் பாடல் மூலம் எப்படிப்பட்ட இழிந்தவன் ஆனாலும் கூட சிவ நாமத்தால் உய்யலாம் என்று அறுதியிட்டு உறுதி கூறி மனித குலத்திற்கு ஆறுதல் அளிக்கிறார் சிவப்பிரகாச சுவாமிகள்.

 

 

இழிவுறுபுன் கருமநெறி யினனெனினுங்

கொலைவேட னெனினும் பொல்லாப்

பழிமருவு பதகனெனி னும் பதிக

னெனினுமிகப் பகரா நின்ற

மொழிகளுண்முற் றவசனாய்ச் சிவசிவவென்

றொரு முறைதான் மொழியில் லன்னோன்

செழியநறு மலரடியின் றுகளன்றோ

வெங்கள் குல தெய்வ மென்ப.

 

எப்படிப்பட்ட பாதகனாக இருந்தாலும், பதிதனாக – இழிந்தவனாக – இருந்தாலும் கூட சிவ சிவ என்று ஒரு முறை சொன்னாலும் கூட அவன் உய்வான் என்பதை அநுபூதி கண்ட பெரியவர் கூறுகிறார்.

 

 

சிவப்பிரகாச சுவாமிகளின் வரலாறு மிக அற்புதமானது. அவரது பாடல்களோ நம்மை மேல் நிலைக்கு உடனடியாக உயர்த்தக் கூடியது.

 

பாடலகளை ஓதுவோம். சிவ சிவ என்போம். நாளும் கோளும் நமக்குத் தீயன செய்யா; நல்லதே செய்யும் என்று நம்புவோம்.

 

சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ!

***

காலத்திற்கு முன்னரே அவதரித்த அரவிந்தர்! (Post No.4460)

Date: 5 DECEMBER 2017

 

Time uploaded in London- 5-13 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4460

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

டிசம்பர் 5 : அரவிந்தர் அஞ்சலி

 

காலத்திற்கு முன்னரே அவதரித்த அரவிந்தர்!

 

.நாகராஜன்

 

1

அரவிந்தர்!

பாரத மண்ணிலே உதித்த அபூர்வமான அவதார புருஷர்.

அவரது பேரறிவு பரந்தது; எல்லையற்றது; ஆழம் காண முடியாதது.

அவரது பேரருள் பணியும் அப்படித்தான்!

வங்கத்திலே பிறந்து உலகினருக்கு வழிகாட்ட புதுவையிலே வந்து வசித்தார்.

அவர் பிறந்தது 1872ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி.

அவரது சமாதி தினம் டிசம்பர் 5, 1950

அவரிடம் கடிதம் மூலமாகவே ஏராளமான சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டவர் அவரது அணுக்க பக்தரான நிரோத்பரன். (நிரோத்பரனைப் பற்றி இந்தக் கட்டுரை ஆசிரியர் நூறாண்டு வாழ்ந்த பெரியோர் வரிசையில் கட்டுரை எழுதியுள்ளார்.அதைப் படித்து அவரைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.)

அவரது கடிதங்களிலிருந்து அவர் பெற்ற  சுவையான செய்திகள் மற்றும் அருள் உரைகள் ஏராளம். அரவிந்தரின் அறிவின் வீ ச்சையும், அவரது பணிகள் பற்றியும் கூறத் தகுதி படைத்த மிகச் சிலருள் அவரும் ஒருவர்.

2

 

அரவிந்தரின் அறிவு எல்லையற்றது என்பதை அவரே சுட்டிக் காட்டி இருக்கிறார். தான் காலத்திற்கு முன்னரே வந்து பிறந்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆகவே மக்கள் அவரைப் பற்றி முழுமையாக அறிய இன்னும் சற்றுக் காலம் பிடிக்கும்!

அரவிந்தர் யார் என்று ஒரு கட்டுரையை ஜோதி பத்திரிகையில் நிரோத்பரன் எழுதியுள்ளார். அதில் அவரது அபார அறிவு பற்றியும் அவரது பணி பற்றியும் விளக்கியுள்ளார். அவரது கட்டுரையின் ஆங்கில மூலத்தை இங்கே பார்ப்போம்:

 

The vast world of knowledge he had possessed remains unparalleled. He has himself admitted to us that what he knows will remain untold even if he goes on writing for twelve years. We asked him, “Will all that knowledge remain unknown to us and posterity?” “Learn first of all what I have written,” he replied with a sweet smile, and added. “I am afraid I have come perhaps before my time.” Comes to mind a mighty line from one of his poems: “I have drunk the Infinite like a giant’s wine.”
Only with the help of such a Wine could he have given to India and the world his four major contributions: a national awakening and fiery thirst for total independence, a new and deeper interpretation of the Vedas, the rediscovery of the Supermind, and a life-embracing system of Integral Yoga.

இன்னும் பன்னிரெண்டு வருடங்கள் தொடர்ந்து எழுதிக் கொண்டே போனாலும் தனது அறிவில் ஒரு பகுதியைக் கூடப் பகிர்ந்து கொண்டதாக ஆகாது என்ற அரவிந்தரை அந்த அறிவெல்லாம் நாங்களுக்கும் எங்கள் சந்ததியினரும் அறியாமலேயே இருந்து விடுமோ என்று கேட்ட போது, அவர், “முதலில் நான் எழுதியதை அனைத்தும் படியுங்கள்” என்று புன்னகையுடன் கூறினார்.

“ஒருவேளை நான் காலத்திற்கு முன்பு பிறந்து விட்டேனோ என்று எனக்குத் தோன்றுகிறது” என்று தொடர்ந்து கூறினார், அரவிந்தர்.

அவரது ஆங்கிலக் கவிதைகளில் ஒரு வரியை நிரோத்பரன் நினைவு கூர்கிறார்.

‘எல்லையற்றதை நான் ராட்ஸச மது போலக் குடித்தேன்’ என்பதே அந்த வரி.

அப்படிப்பட்ட ராட்ஸச மதுவினால் தான் அவர் இந்தியாவிற்கு உலகிற்கும் நான்கு பிரதானமான கொடைகளை அளித்துள்ளார்.

 

  • தேசீய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துதலும் முழு சுதந்திரத்திற்கான தணியாத தாகத்தை ஏற்படுத்துதலும்
  • வேதத்திற்கான ஒரு புதிய ஆழ்ந்த அர்த்தத்தைத் தருதல்
  • சூப்பர்மைண்ட் எனப்படும் அதிமானஸ மனதை மறுபடியும் கண்டுபிடித்தல்
  • வாழ்க்கையைத் தழுவி அமையும் ஒரு ஒருங்கிணைந்த யோகத்தை உருவாக்கல்

 

3

நிரோத்ரன் குறிப்பிடும் நான்கு மகத்தான பணிகளால், 1) இந்தியர்கள் விழிப்புணர்ச்சி பெற்று சுதந்திரத்தை அடைந்தனர்

2) வேதத்திற்கான ஒரு அரிய ஆய்வால் அதன் உள்ளார்ந்த அர்த்தம் பெறப்பட்டது. இதைப் பின்னர் கபாலி சாஸ்திரிகள் உள்ளிட்டோர் விரிவு படுத்தி விளக்கம் எழுதினர். 3) சூப்பர் மைண்ட் எனப்படும் அதிமானுட மனம் பற்றிய அதிசயிக்கத் தக்க உண்மைகளை அறிந்தது. 4) யோகத்தை வாழ்க்கையுடன் இணைக்கும் புது யோக முறையை உலகம் அறிந்து கொண்டது.

4

 

இப்படிப்பட்ட  மகத்தான பணியை உடனடியாக அவர் செய்து முடித்து விடவில்லை. அதற்கான கடுமையான தவத்தை அவர் மேற்கொண்டார்.

அவர் கூறுவதை அவர் வார்த்தைகளிலேயே பார்ப்போம்:

“It took me for years of inner striving to find a real way, even though the divine help was with me all the time, and even then, it seemed to come by an accident; and it took me ten more years of intense yoga under a supreme inner guidance to trace it out and that was because I had my past and the world’s past to assimilate and overpass before I could find and found the future.”

 

5

இந்தியாவிற்கு ஒளி மயமான எதிர்காலம் இருப்பதாக உறுதி கூறியுள்ளார் அரவிந்த மஹரிஷி.

ஆனால் அந்த ஒளிமயமான பாரதத்தை உருவாக்க ஒவ்வொருவரும் தன் அரிய பங்கை ஆற்ற வேண்டும்.

அவரது நினைவு ஏற்படுத்தும் உத்வேகத்தால், தேச பக்தியுடன் தெய்வ பக்தியை ஒருங்கிணைத்து வேத உண்மைகளை உலகிற்கு அளித்து உலகை வேத பூமியாக மாற்ற உறுதி பூணுவோம்!

–subham–

தீர்கதமஸ் பற்றிய சுவையான கதைகள் (Post No.4455)

Written by London Swaminathan 

 

Date: 3 DECEMBER 2017 

 

Time uploaded in London-  13-25

 

 

Post No. 4455

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

தீர்கதமஸ் ஒரு ரிக்வேத கால ரிஷி. கண் பார்வையற்றவர். குருட்டுக் கவிஞர்களில் புகழ் பெற்றவர் இலியட், ஆடிஸி காவியங்களை எழுதிய கிரேக்க மஹாகவி ஹோமர். ஆனால் ஹோமருக்கும் முன்னால் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த தீர்கதமஸ் ஹோமர் முதலிய அந்தகக் கவிகளைப் பந்தாடிவிட்டார். தீர்கதமஸின் கவிதைகள் ரிக் வேதத்தின் — உலகின் பழமையான நூலின் — முதல் மண்டலத்தில் உள. அவர் ‘கண்டுபிடித்த’ மிக நீண்ட கவி ரிக் வேதப் பாடல் எண் 1-164.  ரிஷிகள் மந்திரங்களை இயற்றுவதில்லை கவிகளைப் புனைவதில்லை. அவர்கள் வானத்தில் மிதக்கும் ஒலிகளைக் கிரஹித்து நமக்கு வழங்குவதால் அவர்களை ‘மந்த்ர த்ருஷ்டா’ என்பார்கள். அதாவது மந்திரத்தைப் பார்த்தவர்கள்; ஞானக் கண்களல் கண்டுபிடித்தவர்கள்; காதால் கேட்டவர்கள்; இதனால்தான் திருவள்ளுவரும் அவருக்கு முந்தைய சங்கத் தமிழ்ப் புலவர்களும் “கேள்வி” என்பர்; காதால் கேட்டது ‘ச்ருதி’= ‘கேள்வி’. நிற்க

இவருடைய பெயரின் பொருள்- நீண்ட இருள்

இவர் தாயின் பெயர் மமதா

தந்தையின் பெயர் உசத்யா

ஆனால் இவர் சத்யகாம ஜாபாலா போல தாயின் பெயர் கொண்டு ‘தீர்கதமஸ் மாமதேய’ என்றே அழைக்கபட்டார். அதுவும் புதிரானதே.

சில நேரங்களில் தந்தையின் பெயரால் ‘தீர்கதமஸ் ஔசத்ய’ என்றும் அழைக்கப்பட்டார்.

இவர் பற்றிய செய்திகள் ரிக் வேதத்திலும் சாங்காயன ஆரண்யகத்திலும் காணப்படும். இவர் நூறு ஆண்டுகள்  வாழ்ந்ததாக அவை செப்பும்.

 

 

 

தீர்கதமஸின் 1-164 கவி அறிஞர்களைத் திணறடித்துவிட்டது. 52 கண்ணிகளில் எண்களை வைத்து விளையாடிவிட்டார். இவருக்குச் சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் அவதரித்த திருமூலர், சிவ வாக்கியர், திருமழிசை ஆழ்வார் ஆகியோரும் எண்களைக் கொண்டு கவிபாடினர். இதற்குப் பலவிதமான பொருள்களைக் கற்பிக்க முடியுமாதலால் அவை  சுவை உடைத்து.

 

இந்தியாவுக்குப் பெயர் கொடுத்த – ‘பாரதம்’ என்று பெயர் கொடுத்த – பரத மாமன்னனுக்கு இவர் புரோஹிதர் என்றும் ஐதரேய பிராம ணம் பகரும்.

பிருஹத் தேவதா என்னும் நூல் இவர் பற்றிய செய்திகளை மொழியும். இவர் கண் பார்வையில்லாமல் பிறந்து பிற்காலத்தில் பார்வை பெற்றாராம்.

வயது முதிர்ந்த காலத்தில் இவரை த்ரைதன என்பவன் தாக்கினானாம். ஆனால் அவன் தற்கொலை செய்து கொண்டான். இவரை ஆற்றில் தூக்கி எறிந்துவிட்டனர். அங்க தேசத்தில் இவரை ஆற்றிலிருந்து வெளியே எடுத்துக் காப்பாற்றினர். அங்கு ஒரு அடிமைப் பெண்ணை மணம் புரிந்தார். கக்ஷிவந்த் என்ற மகனை ஈன்றெடுத்தார். அவனும் மாபெரும் கவிஞன் ஆனான்.

 

இனி மஹாபரதத்தில் இவர் பற்றி  காணப்படும் செய்திகளைக் காண்போம்.

 

ஆதி பர்வத்தில் இவர் முற்காலத்திய ரிஷி என்று சொல்லப்படுவதால் இவர் மஹாபாரதத்துக்கு மிகவும் முன்னால் வாழ்ந்தவர் என்பது தெளியப்படும்.

 

பிராமணர்களான மமதாவுக்கும் உதத்யனுக்கும் பிறந்தவர் இவர் என மஹாபாரதம் உரைக்கும்.

ஒரு விநோதக் கதை இதோ:-

மமதா கர்ப்பிணியாக இருந்தபோது உதத்யனின் தம்பி பிருஹஸ்பதி அவளைப் பலவந்தப்படுத்தினார். உள்ளே இருந்த குழந்தை இன்னும் ஒரு வித்துக்கு கர்ப்பப்பையில் இடமிலை என்று அறிவித்தது. அப்படியும் பிருஹஸ்பதி பலவந்தம் செய்யவே புதிய விதையை, மமதாவின் உள்ளே இருந்த குழந்தை வெளியே தள்ளியது. உடனே சிற்றப்பன் பிருஹஸ்பதி ஒரு சாபம் போட்டார். மமதாவின் கர்ப்பத்தில் உள்ள குழந்தை குருடாகப் பிறக்கட்டும் என்று சபித்தார். இதுவே தீர்க தமஸ் கண் பார்வை இழந்த கதை.

 

(என் கருத்து: ஒரு கர்ப்பிணிப் பெண்ணை ஒருவர் பலவந்தப்படுத்தினால் அந்த அதிர்ச்சியால், குழந்தை ஊனமாகப் பிறக்க வாய்ப்பு உண்டு என்பதை நவீன அறிவியலும் ஏற்கிறது)

 

காலப்போக்கில் அவர் கவி புனையும் ஆற்றலைப் பெற்றார். பிரத்வேஷி என்ற பெண்ணைக் கல்யாணம் செய்தார். ஐந்து குழந்தைகளைப் பெற்றார்.மூத்த மகனுக்கு கவுதமன் என்பது திரு நாமம். சில முனிவர்களுக்குக் குருட்டுக் கவிஞன் தங்களிடையே இருப்பது பிடிக்காததால் மனைவி பிரத்வேஷியையும் மகன்களையும் தூண்டிவிட்டனர். பிரத்வேஷியும் இந்த வயதான கிழவரைக் கவனிக்க என்னால் இனிமேல் முடியாது என்று அவரை ஒரு படகில் கட்டி கங்கை ஆற்றில் மிதக்கவிட்டனர்.

 

பலிராஜன் என்ற மன்னன் கங்கை நதியில் குளிக்க வந்தபோது படகில் ஒரு கண் பார்வையற்றவர் இருப்பதைக் கண்டு அவரை விடுவித்து அரண்மனைக்கு அழைத்துச் சென்றான்.

 

அவருடைய பூர்வ கதைகளைக் கேட்ட மன்னன் தன் மனைவி சுதேஷ்னாவுடன் படுத்டு ஒரு குழந்தையைப் பெற்றுத் தரும்படி வேண்டுகிறான். ஒரு மன்னனுக்கு வாரிசு இல்லாவிடில் பிராமண முனிவர்களை அணுகி குழந்தைப் பெற்றுக் கொடுக்கும்படி வேண்டுவது அக்கால வழக்கம்.

ஆனால் இவரிடம் படுக்க மனம் இல்லாத மஹாராணி, தனது தோழிகளில் ஒருவரை அனுப்பி வைத்தார். 11 குழந்தைகள் பிறந்ததாகவும் அவர்களில் ஒருவர்தான் கக்ஷிவன ரிஷி என்றும் மஹாபாரதம் இயம்பும். அவர்கள் அனைவரும் தன்னுடைய குழந்தைகளா என்று மன்னன் வினவ, தீர்க தமஸ் உண்மையைச் சொன்னார். பின்னர் மன்னன் தனது மனைவியிடம் வலியுறுத்த அவர் தீர்க தமஸுடன் கூடி ஐந்து பிள்ளைகளைப் பெற்றாள். அவர்கள்: அங்க, வங்க, கலிங்க, பன்ற, சுஹ்ய. என்ற பெபயருடைய ஒவ்வொருவரும் வெவ்வேறு வம்சத்தை ஸ்தாபித்து, நாட்டின் வெவ்வேறு பகுதிகளை ஆண்டனர்.

 

இதை சத்யவதியிடம் பீஷ்மர் கூறினார்.  விசித்ர வீர்யனுக்குக் குழந்தைகள் இல்லாததால் அவ்னுடைய மனைவியிடத்தில் பிராமணர்களைக் கொண்டு குழந்தைகளைப் பெறுவதே முறை என்று பீஷ்மர் வலியுறுத்தினார்.

 

மொத்தத்தில் பல கதைகள் சொன்னாலும் அதில் இழையோடும் கருத்துக்களை எவரும் பிடித்துக்கொள்ள முடியும்.

 

தீர்கதஸுக்குப் புகழ் அவர் சொன்ன வேத மந்திரங்களிலிருந்து வந்தது என்பதைக் கட்டுரையின் முதல் பகுதியில் விளக்கியுள்ளேன்.

 

TAGS:- தீர்கதமஸ், கதை, சுவையான

–சுபம்–