பேயை விரட்ட, நோயை விரட்ட, விஷத்தை இறக்க அபூர்வ மந்திரங்கள்- பகுதி 1 (Post No.3974)

பேயை விரட்ட,  நோயை விரட்ட, விஷத்தை இறக்க அபூர்வ மந்திரங்கள்- பகுதி 1 (Post No.3974)

 

Written by London Swaminathan

 

Date: 5 June 2017

 

Time uploaded in London- 16-18

 

Post No. 3974

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

இந்துக்களுக்கு நான்கு வேதங்கள் உண்டு: ருக், யஜூர், சாமம், அதர்வணம்.

 

இதில் வெள்ளைக்காரகள் கணக்குப்படி ரிக் வேதம் பழமையானது: சிலர் 6000 ஆண்டு பழமை என்பர்; இன்னும் சிலர் 3200 ஆண்டுகள் பழமை என்பர். அதர்வண வேதம் பிற்காலத்தியது என்பர். ஆனால் இந்துக்கள் இதை ஏற்பத்தில்லை அவர்கள் கணக்குப்படி எல்லா வேதங்களும் கி.மு.3102 ஐ ஒட்டி வியாசரால் நான்காகப் பகுக்கப்பட்டவையே ; அதாவது இற்றைக்கு 5100 ஆண்டுகளுக்கும் முன்னரே 4 வேதங்களும் இருந்தன.

உண்மையில் இந்துக்களுக்கு இரண்டே வேதங்கள்தான்; அதாவது ரிக் வேத மந்திரங்களே பெரும்பாலும் யஜூர், சாம வேதங்களில்உள்ளன. அதர்வண வேதத்திலோ   பெரும்பாலும் புதிய மந்திரங்கள்.

 

சங்க காலம் முதல் தமிழர்கள் சொல்லுவது நான்மறை; அதாவது 4 வேதங்கள். ஆனால் மனு முதலானோர் சில இடங்களில் த்ரயீ வேத = மூன்று வேதம் என்பதால் வெள்ளையர்களுக்கு சிறு குழப்பம்; அவர்களுக்கு தமிழும் தெரியாது. ஆகையால் அதர்வண வேதத்தை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பர்; உண்மையில் அதர்வண வேதம் என்பது அன்றாடம் பயன்படும் மருத்துவம், தாயத்து, பேய் ஓட்டல், விஷங்களை இற              க்கல், தாய் மொழி, தாய் நாடு, “பூமி என்னும் அன்னை”, எதிரிகளை ஒழிப்பது எப்படி என்பது பற்றிப் பேசுவதால் அதைச் சமயச்  சடங்குகள்     பற்றிப்    பேசும் மூன்று வேதங்களுடன் சேர்க்காமல் பேசினர்.

 

 

பிராமணர்களின் ஆயுதம் அதர்வண வேதம் என்று மனு சொல்லுவார். கோபத பிராமணமோ எனில் நான்கு வேத புரோகிதர்களும் யாக யக்ஞங்களில் கலந்து கொள்வதைக் குறிப்பிடுகிறது. ஆகையால் வெளிநாட்டினர் சொல்வதை நம்ப வேண்டியதில்லை.

 

அதர்வண வேதத்தில் 6000 மந்திரங்கள் 760 துதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பிடப்படும் சில அபூர்வ தாவரங்கள் எவை என்று தெரியவில்லை. அவைகளைத்தான் தாயத்துகளாக அணிந்து வந்தனர்.

 

அதர்வண வேதத்தை 20 காண்டங்களாகப் பிரித்துள்ளனர். ஒவ்வொரு காண்டத்திலும் எது சம்பந்தமான மந்திரங்கள் உள்ளன என்று சுருக்கமாகக் காண்போம்; இந்தப் பட்டியலைப் பார்த்தாலேயே அவர்கள் சிறந்த நாகரீகமும் உயர்ந்த சிந்தனையும் உடையவரகள் என்பது உள்ளங்கை நெல்லிக் கனி என விளங்கும்.

முதல் காண்டம்:

முதல் காண்டத்தின் முதல் மந்திரமே வாசஸ்பதி என்னும் வாக் (பேச்சு) தேவனையும் வசோஸ்பதி என்னும் செல்வ தேவனையும் வணங்கும் மந்திரம் ஆகும்.

கல்விக்கான மந்திரங்கள்

வெற்றிக்கான மந்திரங்கள்

எதிரிகளை அழிப்பதற்கான மந்திரங்கள்

நோயை அகற்றுவதற்கான மந்திரங்கள்

தண்ணீர் தேவதை பற்றிய மந்திரங்கள்

வரங்களைப் பெறும் மந்திரங்கள்

தர்மம் தொடர்பான மந்திரங்கள்

இதில் உள்ளன. ஒவ்வொன்றிலும் 4 மந்திரங்களைக் கொண்ட

35 துதிகள் முதல் காண்டத்தில் காணப்படுகின்றன.

 

2 ஆம் காண்டம்:

இதில் ஒவ்வொன்றிலும் 5 மந்திரங்களைக் கொண்ட 36 துதிகள் காணப்படுகின்றன.

நோயைக் குணப்படுத்தும் மந்திரங்கள்

ஜங்கிடா மணி என்னும் தாயத்து மந்திரங்கள்

அக்னி, இந்திரன், பரப் பிரம்மம் பற்றிய துதிகள்

இந்தக் காண்டத்தில் இருக்கின்றன.

ஜங்கிடா மணி என்னும் தாயத்துக்கான தாவரம், மரம் என்ன என்பது யாருக்கும் தெரியாது!

 

3 ஆம் காண்டம்:

 

 

ரிக் வேதத்தில் இடம்பெற்ற வசிஷ்ட மஹரிஷியின் முக்கிய மந்திரம், கொஞ்சம் மாறுதல்களுடன் இதில் உள்ளது. இது செல்வத்தை வேண்டும் மந்திரமாகும்.

எதிரிகளத் தோற்கடிப்பதற்காக்ன மந்திரம்

தேச ஒற்றுமைக்கான மந்திரம்

பட்டாபிஷேக மந்திரம்

பர்ண மணி என்னும் அபூர்வ தாயத்து மந்திரம் — இந்தக் காண்டத்தில் இருக்கின்றன.

பர்ண மணி என்னும் தாயத்துக்கான தாவரம், மரம் என்ன என்பது யாருக்கும் தெரியாது!

 

இதில் ஒவ்வொன்றிலும் 6 மந்திரங்களைக் கொண்ட 31 துதிகள் காணப்படுகின்றன.

 

4 ஆம் காண்டம்:

இதில் ஒவ்வொன்றிலும் 7 மந்திரங்களைக் கொண்ட 40 துதிகள் காணப்படுகின்றன.

 

ரிக் வேதத்தில் உள்ள யார்? என்னும் மந்திரம் இதில் இடம்பெறுகிறது. யார் என்றால் சம்ஸ்கிருதத்தில் க:– இது பிரம்மாவுக்கும் பெயர்! அதாவது ஓரெழுத்துச் சொல். இதை வைத்து யாரை வணங்குவது என்று மந்திரம் முழுதும் திரும்பத் திரும்ப வரும்.

 

இதில் அதிசய ஒற்றுமை என்ன வென்றால் தமிழ் “க” பிராமி லிபியிலிருந்து வந்தது. அந்த “க” பிராமியில் சிலுவை வடிவில் இருக்கும். அது எகிப்தில் கடவுளைக் குறிக்கும் சித்திர எழுத்து. ஆனால் வெறும் சிலுவையாக இல்லாமல் இரு புறமும் கைகளை உயரத் தூக்கிய மனிதன் போல மேல் நோக்கிய கோடுகளுடன் இருக்கும்.

 

விஷத்தை அகற்றும் மந்திரம்

எதிரிகளை நாடு கடத்தும் மந்திரம்

பலத்தை அதிகரிக்கும் மந்திரம்

தூக்கமின்மையை அகற்றும் மந்திரம்

சங்கு கிழிஞ்சல்களைக் கொண்டு தாயத்து செய்யும் மந்திரம்

மரங்கள், மழையை நோக்கி உச்சரிக்கும் மந்திரங்கள்

மூலிகைகள் பசுக்களை நோக்கி உச்சரிக்கும் மந்திரங்கள்

 

பாவங்களைப் போக்கும் மந்திரங்கள்

புழுக்களை அகற்றும் மந்திரங்கள்

சக்தியை அதிகரிக்கும் மந்திரங்கள்

5 ஆம் காண்டம்:

இதில் ஒவ்வொன்றிலும் 12 மந்திரங்களைக் கொண்ட 31 துதிகள் காணப்படுகின்றன.

குஸ்ட, சிலாச்சி, லக்ஷா மணி என்னும் தாயத்து மந்திரங்கள்

இவை என்ன தாவரம் என்பது பற்றி தகவல் கிடைக்கவில்லை.

வெற்றிக்கான மந்திரங்கள்

பிரம்மன் பற்றிய மந்திரங்கள்

எதிரிகளை ஒழிக்கும் மந்திரங்கள்

பிராமணர்கள், பசுக்களைப் போற்றும் மந்திரங்கள்

எதிரிகளை ஒழிக்கும் மந்திரங்கள்

ஆன்மீக பலத்தை உயர்த்தும் மந்திரங்கள்

ஆயுளை அதிகரிக்கும் மந்திரங்கள்

டாமாரங்களை அடித்து எதிரிகளை பயமுறுத்தும் மந்திரங்கள்

ஒரு அபூர்வ பசுவை வைத்திருப்பது பற்றி அதர்வணுக்கும் வருணனுக்கும் இடையே நடக்கும் சுவையான சம்பாஷணை,

பிராமணனின் மனைவி கடத்தல் பற்றிய செய்தி

பிராமணர்களை ஒடுக்கும் கொடுமை

ஆகியனவும் உள்ளன.

போர் முரசுக்குச் சொல்வது போன்ற இரண்டு மந்திரங்கள்.

 

6- ஆம் காண்டம்:

இதில் ஒவ்வொன்றிலும் 3 மந்திரங்களைக் கொண்ட 142 துதிகள் காணப்படுகின்றன.

அமைதிக்கான மந்திரங்கள்

வளையல்கள் பற்றிய மந்திரங்கள்

‘ரேவதி’ தாயத்து பற்றிய மந்திரங்கள்

சவிதா, இந்திரன் போற்றும் மந்திரங்கள்

எதிரிகளை ஒழிக்கும் மந்திரங்கள்

பாம்பு விஷத்தை இறக்கும் மந்திரங்கள்

 

 

7 ஆம் காண்டம்:

இதில் 118 துதிகள் காணப்படுகின்றன.

நீண்ட ஆயுளைத்தரும் மந்திரங்கள்

தாய் நாடு பற்றிய மந்திரங்கள்

தாய் மொழி பற்றிய மந்திரங்கள்

ஜனநாயக சட்டசபை பற்றிய மந்திரங்கள்

ஆத்மா பற்றிய மந்திரங்கள்

சரஸ்வதி மந்திரங்கள்

கணவன்– மனைவி நல்லுறவு பற்றிய மந்திரங்கள்

8 ஆம் காண்டம்:

இதில் ஒவ்வொன்றிலும் 26 மந்திரங்களைக் கொண்ட 10 துதிகள் காணப்படுகின்றன.

பேயை ஓட்டும் மந்திரங்கள்

ராக்ஷசர்களை விரட்டும் மந்திரங்கள்

விராஜ்- விராட் என்னும் தேவதை பற்றிய மந்திரங்கள்

இறந்துகொண்டிருக்கும் மனிதனை எழுப்பும் குளிகை பற்றிய மந்திரங்கள்

 

9 ஆம் காண்டம்:

ஒன்பதாம் காண்டத்தில் பத்து துதிகள் இடம்பெறுகின்றன.

இதில் விருந்தினரைப் போற்றும் நீண்ட மந்திரம் உளது.

அஸ்வினி தேவர்களின் இனிமையான உதவி பற்றிய மந்திரமும் உளது.

ரிக் வேதத்தில் முதல் மண்டலத்திலுள்ள தீர்கதமஸ் என்ற முனிவரின் மிகவும் புகழ்பெற்ற மந்திரம் இங்கே இடம்பெறுகிறது இதில்தான் “கடவுள் ஒருவரே; அறிஞர்கள் அவரை வெவ்வேறு பெயரிட்டு அழைக்கின்றனர்” என்ற புகழ் பெற்ற வாசகம் வருகிறது.

இது தவிர கிருஹப் ப்ரவேச மந்திரம்

நோய்களைத் தடுக்கும் மந்திரம்

பசுக்கள், காளைகளைப் பற்றிய மந்திரங்கள்

ஆகியனவும் சேர்க்கப்பட்டுள்ளன.

10- ஆம் காண்டம்:

இதில் ஒவ்வொன்றிலும் 25 மந்திரங்களைக் கொண்ட 10 துதிகள் காணப்படுகின்றன.

கேன (யாரால், எதனால்) என்ற கேள்வி மந்திரமும்

பிரபஞ்சத்தைத் தாங்கும் ஸ்கம்ப (தூண்) என்ற மந்திரமும்

பரப் பிரம்மம், பசுக்களைப் போற்றும்

விஷத்தை அகற்றும் ராக்ஷசர்களை விரட்டும் மந்திரங்கள்    ஆகியனவும் சேர்க்கப்பட்டுள்ளன.

அடுத்த கட்டுரையில் மேலும் பத்து காண்டங்களின் சுருக்கத்தைக் காண்போம்.

 

–சுபம்–

 

 

 

பயனில சொல்லாமை நன்று; புத்தரும் வள்ளுவரும் செப்பியது – Part 8 (Post No.3970)

பயனில சொல்லாமை நன்று; புத்தரும் வள்ளுவரும் செப்பியது – Part 8 (Post No.3970)


Written by London Swaminathan

 

Date: 4 June 2017

 

Time uploaded in London- 15-53

 

Post No. 3970

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர்

பயனில சொல்லாமை நன்று (குறள் 197)

 

பொருள்-

அறத்தோடு பொருந்தாத  சொற்களைச் சொன்னாலும் சொல்லலாம்; பயன் தராத வெறும் சொற்களை சான்றோர் சொல்லாதிருப்பது நல்லது

 

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்

பெரும்பயன் இல்லாத சொல்  (குறள் 198)

பொருள்-

அரிய பொருளை ஆராயும் அறிவினை உடையோர், வாழ்க்கைக்கு பெரும்பயனைத் தராத சொற்களைச் சொல்ல மாட்டார்கள்

 

1.கொலை செய்தல்

2.பொய் பேசுதல்,

3.திருடுதல்,

4.பிறன் மனைவியிடம்  போதல்

5.கள் குடித்தல் – இந்த ஐந்து செயல்களும் தன்னுடைய வேரை தானே தோண்டிக் கொள்வதற்குச் சமம் தம்மபதம் 246/247

யானை தனக்குக்குத் தானே மண்ணைவாரி தன்  தலையில் போட்டது போல.

பிறருடைய மனைவி

பகை பாவம் அச்சம் பழியென நான்கும்

இகவாவாம் இல்லிறப்பான் கண்- (குறள் 147)

 

பிறருடைய மனவியை நாடுபவனுக்கு

1.பகைமை (முதல் கணவனுடன் மோதல்)

2.பாவம் (மறு ஜன்மத்தில் பாவத்தின் பலன்)

3.அச்சம் (எந்த நேரத்தில் பிடிபட்டுவிடுவோமோ என்ற பயம்)

4.பழி (ஊரே தூற்றும் கெட்ட பெயர்)– இந்த நான்கும் எப்போதும் நீங்காது-

 

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு

அறனொன்றோ ஆன்ற  ஒழுக்கு – (குறள் 148)

பிறருடைய மனைவியை தவறான எண்ணத்துடன் கண் எடுத்தும்

பார்க்காத  பேராண்மை என்னும் பண்பு சான்றோர்க்கு அறமாக மட்டும் அமைவதில்லை; பொருந்திய ஒழுக்கமும் ஆகும்.

 

மற்றவன் மனைவியை அனுபவிப்பவனுக்கு நான்கு கேடுகள் விளையும்: 1.அவன் மதிப்பும் மரியாதையும் நீங்கிவிடும் 2.அவன் பயத்தோடுதான் இன்பம் அனுபவிப்பான் 3.எல்லோரும் அவனை பழி தூற்றுவர் 4. அவன் நரகத்தில் விழுவான் – தம்மபதம் 309

வெறுப்பு

பகல் கருதிப் பற்றா செயினும் இகல் கருதி

இன்னா செய்யாமை தலை  ( குறள் 852)

 

பொருள்

கருத்து மாறுபட்டு ஒருவன் அன்பில்லாத செயலைச் செய்யினும் , வெறுப்பினால் அவனுக்கு கெடுதல் செய்யாது இருப்பது சிறந்தது.

 

நம்மை வெறுப்போருக்கு இடையே நாம் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்வோம் (தம்மபதம் 197)

 

இகலானாம் இன்னாத எல்லாம்  நகலானாம்

நன்னயம் என்னும் செறுக்கு (குறள் 860)

 

ஒருவனுக்கு வெறுப்பினாலேயே துன்பம் உண்டாகும்; நட்பினால் நல்லவன் என்ற மதிப்பு கிடைக்கும்.

நற்குணங்கள்

 

உள்ளத்தால் பொய்யாதொழுகின்  உலகத்தார்

உள்ளத்து ளெல்லாம் உளன் (குறள் 294)

 

ஒருவன் மனத்தாலும் பொய் சொல்லாதிருக்கக் கற்றுக் கொண்டால் அவன் உலகத்தார் உள்ளத்தில் எல்லாம் நிலைபெற்று இருப்பான் (அரிச்சந்திரன், ராமன், தர்மன், காந்தி அடிகள் போல)

 

பொய் பேசாதிருப்பவனை உலகமே நேசிக்கும் (தம்ம 217)

 

ஒரு மனிதனின் தோற்றத்தையும் சொற்களையும் வைத்து அவனை கௌரமானவன் என்று நினைப்பதற்கில்லை; பொறாமை, பேராசை, அகந்தை ஆகிய மூன்று பாவங்களும் இல்லாதவன், விவேகமுள்ளவன், அன்பே உருவானவன் — ஒருவனே மதிக்கப்படத் தக்கவன் –தம்ம 262, 263

 

இதே கருத்து பகவத் கீதை 16-21லும் உளது மூன்று நரக வாசல்கள் என்று கீதை சித்தரிக்கும்.

வள்ளுவன் குறளில்

 

காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்

நாமம் கெடக்கூடும் நோய் (குறள் 360)

காமம், க்ரோதம், மோகம் ஆகிய மூன்றின் பெயர்கூட மனத்தில் தோன்றாதவாறு ஒருவன் வாழ்ந்தால் அவன் உள்ளத்தில் ஞானம் பிறக்கும்; கர்ம வினை அறுபட்டுப்போகும்; பிறவ்தி தளை அறுபடும்;  மோட்சம் கிட்டும்

 

–சுபம்-

Q and A on Kali Yuga and Nava Graha Homa (Post No.3968)

Written by London Swaminathan

 

Date: 3 June 2017

 

Time uploaded in London- 21-55

 

Post No. 3968

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

Sir

 

I came across this article and it says that the kaliyuga will be over by year 2025?

 

how come, if each yuga is 4,300, 3,600,2,400 and 1,200 years each ?

 

so we should have been over with the Kaliyuga

 

or is this the demigod years 360 human years Still it doesn t stand ground

 

thanks

G.D

 

 

Answer:

 

Dear GD,

 

About Yugas there are two different calculations.

One with more zeroes and another with less zeroes.

Whatever it may be, we see for ourselves Kaliyuga now.

 

It will not finish in 2025 unless there is Third World War.

 

I have read an article in Madras Mail in 1970s that Krta Yuga has already begun.

Now it looks ridiculous.

 

We published another book review in Dinamani Kadir (where I worked as Senior Sub Editor for 16 years) that Kalki Avatar would appear in 1985.

Nothing happened. It was written by a Swamiji of a famous Mutt!

 

But let us try to bring Kaliyuga like the great Tamil poet Bharati said.

 

 

Navagraha Homam

 

Navagraha Homa  and Nine types of Wood

 

Question

I have been given a note to buy nine different fuel sticks for the fire sacrifice to propitiate nine planets. I cant identify the nine plants. More over they are not available here. Can you please tell me the nine different woods.

VS

 

Answer

Dear VS’

Nowadays all are available in different parts of the world through courier service. You can google Navagraha Samithu and get the bundle. But please be aware of the import restrictions in your country.

 

Following are the nine types of woodds or fuel sticks in English and Tamil:-

When Hindus do Navagraha Homa ( Fire Sacrifice) to celebrate entering a new house (House warming) or for a long life they sacrifice nine different sticks in the fire. They display nine different grains, pulses and nine differently coloured cloths to propitiate the nine heavenly bodies, roughly translated as Nine Planets.

 

அத்தி- சுக்கிரன் (Ficus Udumbura) = Venus

நாயுருவி- புதன் (Achyranthe aspera) = Mercury

புரசு /பலாச மர – சந்திரன் (Butea monosperma) = Moon

அரச மர – குரு (Ficus Religiosa)= Jupiter

வன்னி மரம்- சனைஸ்வரன் (Prosopis cineraria) = Saturn

அருகம் புல் – ராகு (Cynodon dactylon) = ascending node

தர்ப்பை – கேது (Desmostachya bipinnata) = descending node

கருங்காலி—செவ்வாய் (Diospyros ebenum) = Mars

எருக்கு- சூரியன் (Calotropis gigantean) = Sun

 

In Tamil from my previous post:-

நவக்கிரக ஹோம சமித்து

நவ சமித்துகள், நவ தானியங்கள்

நவக்ரஹ ஹோமத்தில் போடப்படும் நவதானியங்கள், நவ சமித்துகள் ஆகியனவும் தாவரங்களே; இதோ அந்தப் பட்டியல்:

நெல், கோதுமை, துவரை, பாசிப்பயறு, எள், வெள்ளை மொச்சை, கொள்ளு, உளுந்து, கொத்துக் கடலை

நவக்ரஹ ஹோம சமித்துகள்

எருக்கு, புரசு (பலாசம்), அத்தி, அரசு, வன்னி, அருகம் புல், கருங்காலி, நாயுருவி,, தர்ப்பை.

அரச மரம் வேதத்தில் உள்ளது, சிந்து சமவெளியிலும் உள்ளது. அரசு, ஆல், அத்தி ஆகிய மூன்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. இது மூன்றும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் மூன்று நாமங்களாக வருகின்றன.
வன்னி மரத்தையும் அரச மரத்தையும் கொண்டு தயாரிக்கப்பட்ட அரணிக் கட்டையைக் கொண்டே யாக யக்ஞங்களுக்கான தீ/ அக்னி மூட்டப்படும்.

பலாச மரத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் கரண்டிகளைக் கொண்டே யாகத்தில் ஹவிஸ், நெய் முதலியவற்றை ஆகுதி செய்வர்.

 

—Subham–

 

 

 

ஸ்ரீ ஆனந்தமயீ மா- எல்லோரையும் வியக்கவைத்த பெண்மணி (Post No.3967)

Written by London Swaminathan

 

Date: 3 June 2017

 

Time uploaded in London- 12-50

 

Post No. 3967

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

கிழக்கு வங்காளத்தில் ஒரு சிறு கிராமத்தில் ஏழைப் பிராமணனக் குடும்பத்தில் பிறந்த நிர்மலா என்ற பெண் பிற்காலத்தில் உலகம் போற்றும் ஆனாந்த மயீ மா என்ற புனிதவதியாக உயர்ந்த கதை கேட்பதற்கே சுவையானது; புனிதமானது.

 

1896ஆம் ஆண்டு ஏப்ரல் 30 தேதி பிறந்த அவர் 86 ஆண்டுகளுக்கு வாழ்ந்து இந்தியாவிலுள்ள புனித ஹரித்வாரில் 1982 ஆகஸ்ட் 27ல் சமாதி அடைந்தார். உடனே அப்போதைய பிரதமர் திருமதி இந்திரா காந்தி விசேஷ  ஹெலிகாப்டரில் வந்து அந்திமக் கிரியைகளில் கலந்து கொண்டார்.

 

தெய்வ நெறிக் கழகத்தின் சுவாமி சிவாநந்தா, யோகதா சத் சங்கத்தின் பரமஹம்ச யோகாநந்தா போன்றோர் புகழ் மாலை சூட்டிய ஆன்மீகப் பேரரசி அவர்.

 

ஆனந்தமயீ மா, கியோரா என்னும் சிறு கிராமத்தில் விபினவிஹாரி பட்டாசார்யா- மோக்ஷதா சுந்தரி தேவி ஆகிய தம்பதியருக்கு தவப் புதல்வியாக  அவதரித்தார் நிர்மலா சுந்தரி. சிறுவயதிலிருந்தே படிப்பில் நாட்டமில்லாமல் ஆன்மீக விஷயங்களில் நாட்டம் செலுத்தினார். எல்லா இந்துக் குடும்பங்களிலும் உள்ளது போலவே அவரது வீட்டிலும் ஒரு சுவாமி அறை இருந்தது. அதிலுள்ள பல கடவுளரிம் படங்களுக்கு முன்னால் தியானம் செய்வது இவரது வழக்கம்.

அந்தக் கால வழக்கபடி நிர்மலாவுக்கும் விக்ரமபுரத்தைச் சேர்ந்த ரமணி மோஹன சக்ரவர்த்திக்கும் திருமணம் நடந்தது. அப்போது நிர்மலாவுக்கு வயது 13. ஆயினும் கணவருடன் சேர்ந்து வாழ்ந்தது அதற்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர்தான். எப்படி பிற்காலத்தில் நிர்மலா– ஆனந்தமயீ ஆனாரோ,  அப்படி ரமணி மோஹன் — போலாநாத் ஆனார்.

 

நிர்மலாவும் ரமணியும் பெயர் அளவிலேயே மனைவி- கணவனாக இருந்தனரே தவிர தாம்பத்திய உறவு என்பது கிடையவே கிடையாது.

 

சிறிது காலத்தில் போலாநாத்துக்கும் ஆன்மீக உணர்வு அதிகமானது எப்படி ராமகிருஷ்ன பரமஹம்சரால், அவரது மனைவி சாரதா தேவி சந்யாசினி ஆனாரோ அப்படி ஆனந்தமயீ முன்னிலையில் போலாநாத் சந்யாசி ஆனார்.

 

 

ஆனந்தமயீ மாவின் தவ வலிமை அவ்வளவு சக்தி வாய்ந்தது.

பிறப்பிலேயே இறை உணர்வு பெற்ற ஆனந்தமயீ, அடிக்கடி தன்னை மறந்த நிலையை அடைந்தார். நாளடைவில் இது அதிகமாகி, பல நாட்களுக்கு நினைவற்றுக் கிடப்பார். கணவனும் கூட அவருக்கு சேவகம் செய்யத் துவங்கினார். அறியாத ஒரு மகளுக்கு தந்தை எப்படி உதவுவாரோ அது போல போலாநாத் தன் மனைவிக்கு உதவினார்.

 

ஆனந்தமயீயின் பெருமை கொஞ்சம் கொஞ்சமாகத் தெரியத் துவங்கியது அவரது கணவருக்கு பாஜிப்பூரில் நவாப்பிடம் முதலில் வேலை கிடைத்தது. பின்னர் டாக்காவில் வேலை கிடைத்தது.

 

 

டாக்காவில் ஆனந்தமயீ இருக்கும் போது சமூகத்தின் உயர் நிலையில் இருந்த டாக்டர்கள், வக்கீல்கள், அரசாங்க அதிகாரிகள் ஆகியோர் அவரைப் பார்க்க குவிந்தனர். காலப் போக்கில் பக்தர்கள் அனைவரும் சேர்ந்து டாக்காவில் அவருக்கு ஒரு ஆஸ்ரமம் கட்டினர். ஆனால் தன்னை சி றைப்படுத்திக் கொள்ள விரும்பாத ஆனந்தமயீ தேச சஞ்சாரம் செய்யத் துவங்கினார். நாடு முழுதும் தீர்த்த யாத்திரை செய்யத்  துவங்கினார். எந்த இடத்திலும் இரண்டு நாட்களுக்கு மேல் தங்குவதில்லை.

 

 

தென்னிந்தியாவில் ரமண மகரிஷிக்கு வெளிநாட்டு பக்தர்கள் சேர்ந்தது போல ஆனந்தமயீக்கும் நிறைய வெளி நாட்டு பக்தர்கள் சேர்ந்தனர். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு,  அவரது மகள் இந்திரா காந்தி , தத்துவ அறிஞர் கோபிநாத் கவிராஜ் ஆகியோர் இவரது பக்தர்களாயினர்.

 

இவரது ஆன்மீக சக்தி, இவரைத் தரிசித்த அனைவரிடமும் பரவியது. அனைவரும் இவரது செல்வாக்கின்கீ ழ் வந்தனர். குறிப்பிடத்தக்க ஒரு வெளிநாட்டுக்காரர் ஆஸ்திரிய நாட்டின் தலைநகரான வியன்னாவில் பிறந்த பிளாங்கா (Blanca) ஆவார். அ ந்த யூத மதப் பெண்மணி இவரது உபதேசத்தில் உருகி ஆத்மாநந்தா என்ற பெயர் பெற்றார். அவர் எழுதிய டயரி, ஆத்மாநந்தா சமாதி அடைந்தபின்னர்  ராம் அலெக்ஸாண்டர் என்பவரால் வெளியிடப்ப ட்டது. அதில் ஆனந்தமயீ மற்றும் ஆத்மாநந்தாதாவின்  வரலாறு வெளியானது.

 

ஆனந்ததமயீயிடம் வந்த அறிஞர்களில் ஒருவர் ஒரு நாள் திடீரென்று உரத்த குரலில் பேசினார். இன்று நான் உங்களை “அம்மா” என்று அழைத்துக் கதறிவிட்டேன்; எதிர்காலத்தில் உலகம் முழுதும் உங்களை “அம்மா” என்று அழைக்கும் என்று ஆரூடம் சொன்னார். அது உண்மையும் ஆயிற்று. உலகமே அவரை மா (அன்னை) என்று அழைக்கத் துவங்கியது.

 

வெளிநாட்டுப் பேராசிரியர்கள், தத்துவ அறிஞர்கள் ஆகியோர் இவரிடம் பல வினாக்களுக்கு விளக்கம் கேட்டறிந்தனர். அவர் படிக்காத மேதையாக விளங்கினார்.

குரு இல்லை!

 

ஆனந்தமயீ தனக்குத் தானே குரு ஆனார். அவருக்கு குரு என்று எவரும் இல்லை. தனக்கு ஏற்பட்ட அனுபவங்களில் ஆயிரத்தில் ஒரு பகுதியை கூட தான் வெளி உலகிற்குச் சொல்லவில்லை என்று பிற்காலத்தில் அவரே கூறியதுண்டு. சுமார் 60 ஆண்டுக் கால தர்மப் பிரசாரத்திற்குப் பின்னர் ஆனந்தமயீமா 1982 ஆகஸ்ட் 27ல் ஹரித்வாரில் சமாதி அடைந்தார். அங்கே அவரது புனித சமாதி இருக்கிறது.

அவர் பரப்பிய ஞான ஒளியும், அவர் பொழிந்த அருள் மழையும் இன்றும் நீடிக்கிறது; அவரை நினைப்போருக்கு அவை என்றும் கிடைக்கும்!

 

xxxx SUBHAM xxxxxx

 

பகுத்தறிவாளர்களுக்கு சவால்! (Post No.3966)

Written by S NAGARAJAN

 

Date: 3 June 2017

 

Time uploaded in London:-  6-29  am

 

 

Post No.3966

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

திருக்குறள் மர்மம்

பகுத்தறிவாளர்களுக்கு சவால் விடும் குறள்பாக்கள்!

 

ச.நாகராஜன்

 

 

வள்ளுவர் தமிழ் சொற்களைத் தேர்ந்தெடுத்துக் கையாளும் மஹாகவி. மஹரிஷி.

 

அவரது குறளில் பகுத்தறிவு என்ற ஒரு அறிவைப் பற்றிச் சொல்லவே இல்லை.

பகுத்து என்ற வார்த்தை,

 

“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” (குறள் 322)

 

என்ற ஒரே ஒரு குறளில் மட்டுமே வருகிறது. பகுத்து உண் என்பதில் மட்டுமே பகுத்து என்ற வார்த்தை வருகிறது.

பகுத்தறிவு என்பதைச் சொல்லாத வள்ளுவர் அறிவை அற்புதமாக மூன்று விதமாகச் சுட்டிக் காட்டுகிறார்.

கார் அறிவு (குறள் 287)

களவென்னும் காரறிவாண்மை அளவென்னும்

ஆற்றல் புரிந்தார் கண் இல்

 

இங்கு கார் அறிவு என்பது குறுமதி அல்லது இருண்ட அறிவு என்பதைக் குறிப்பிடுகிறது.

ஆக அறிவில் கீழ்த்தரமான கீழ் மக்களது அறிவு கார் அறிவு.

அடுத்து பேரறிவு (குறள் 215)

 

ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்

பேரறிவாளன் திரு

 

பொது சேவையில் ஈடுபடும் ஒருவனது பேரறிவை இக்குறள் சுட்டிக் காட்டுகிறது.

 

ஆக கார் அறிவு மற்றும் பேரறிவைச் சொல்லிய வள்ளுவர் இன்னொரு அறிவைச் சொல்கிறார்.

வால் அறிவு (குறள் 2)

 

கற்றதனால் ஆய பயன் என் கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்

 

வால் அறிவு இறைவனது அறிவு. தூய அறிவு.

ஆக இப்படி கார் அறிவு, பேரறிவு, வாலறிவு ஆக மூன்று விதமாக நுண்ணறிவைப் பிரிக்கிறார் வள்ளுவர்.

பகுத்தறிவாளர்கள் என்ற ஒரு புது வித இனத்தைச் சேர்ந்தவர்கள் வள்ளுவரைப் படிக்க ஆர்வப்படலாமா?

 

பகுத்தறிவாளர்களுக்கு சவால் விடும் குறள்கள் ஏராளமாக திருக்குறளில் உள்ளன.

 

எடுத்துக்காட்டிற்காக சில குறள்களை மட்டும் கீழே காணலாம்:

  • தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை (குறள் 55)

தெய்வத்தைத் தொழாமல் தன் கணவனைத் தொழுது எழுகின்ற ஒரு பெண் பெய் என்றால் மழை பெய்யும்.

கேள்வி: பெண்ணியத்திற்குத் துணை போகும் ஒருவரா வள்ளுவர். அது எப்படி பெய் என்று ஒரு பெண்மணி சொன்னால் மழை பெய்யும்? உலகத்தில் வாழ்கின்ற தாய்க்குலத்தில் பத்தினிகளே இல்லையா? யாருமே பெய் என்று சொல்லி மழை பெய்ததைப் பார்க்க முடியவில்லையே!

  • வழுத்தினாள் தும்மினேனாக அழித்தழுதாள்

யாருள்ளித் தும்மினீ ர் என்று (குறள் 1317)

3) தும்முச் செறுப்ப அழுதாள் நுமர் உள்ளல்

எம்மை மறைத்தீரோ என்று (குறள் 1318)

 

தும்மல் என்பது இயற்கையில் மனிதருக்கு ஏற்படும் ஒன்று. இதற்கும் காதலி நினைப்பதற்கு என்ன, ஐயா சம்பந்தம்? காதலனை நோக்கிக் காதலி யாரை நினைத்து தும்மினாய் என்று கேட்பது பகுத்தறிவுக்கு ஒத்ததா?

 

  • அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொற்த்தானோடு ஊர்ந்தான் இடை (குறள் 37)

சிவிகையை ஒருவன் சுமக்கிறான். அதனுள் ஒருவன் உட்கார்ந்திருக்கிறான். ஆயிரக்கணக்கில் கார்கள் போகின்றன. டிரைவர் ஓட்டுகிறார். முதலாளி அமர்கிறான்.

இது உலகியல்பு. இதையும் வினையையும் எப்படி முடிச்சு போடலாம். எங்கள் பகுத்தறிவுக்கு இது ஒத்ததல்ல.

  • மலர்மிசை மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார் (குறள் 3) நீண்ட ஆயுளுக்கும் இறைவனுக்கும் என்ன சம்ப்ந்தம்?
  • கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிரும் தொழும் (குறள் 260)

கொலை செய்யப்பட உள்ள உயிர் வேண்டுமானால் ஒரு வேளை மனதிற்குள் தப்பித்தேன் என்று நினைக்கலாம். ஆனால் எல்லா உயிரும் எப்படித் தொழும்?

  • மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை

எந்நோற்றான் கொல் எனும் சொல்

தந்தை நோன்புக்கும் மகனுக்கும் என்ன தொடர்பு? அவனவன் வாய்ப்பு, அறிவு, பணம் போன்றவற்றிற்குத் தக முன்னேறுகிறான். தந்தை உதவி செய்யாவிட்டாலும் கூட பலர் முன்னேறவில்லையா, என்ன?

  • ஊழிற் பெருவலி யா உள? மற்றொன்று

சூழினும் தான் முந்துறும் (குறள் 380)

விதி எப்படியும் தான் செய்வதைச் செய்தே தீரும் என்பது பொருந்தாத ஒன்று.

விதியின் மீதே பகுத்தறிவாளருக்கு நம்பிக்கை இல்லை. ஆக வள்ளுவரின் இந்தக் குறள் பகுத்தறிவுக்குப் பொருந்துமா?

  • ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப்பு உடைத்து (குறள் 398)

இந்தப் பிறவியில் தான் கற்ற கல்வி ஒருவனுக்கு ஏழு பிறவிகளில் பயன் தரும்.

மனிதனுக்கு ஒரு பிறவி மட்டுமே உண்டு. அதில் அனுபவிக்க வேண்டியதை அனுபவிக்க வேண்டியது தான். எங்கிருந்து வந்தது ஏழு பிறவி? இது இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களுக்குப் பொருந்தாதே. அவர்கள் ஒரு பிறவி நம்பிக்கை உடையவர்கள் அல்லவா? ஹிந்துக்கள், புத்த மதத்தினர், ஜைன மதத்தினருக்கு மட்டுமே இது பொருந்தும்.

 

 

இப்படிப் பல குறள்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஐயன் வள்ளுவனுக்கு விழா எடுப்பதாகச் சொல்லிக் கொண்டு தனக்கு விழாவைத் தவறாமல் எடுத்துக் கொள்ளும் பகுத்தறிவுத் தலைவருக்கும் அவரது அன்புத் தம்பிகளுக்கும் இந்த வள்ளுவர் சரிப்பட்டு வருவாரா?

ஒன்று தங்கத் தம்பிகள் தவறாக வழி சொல்லும் தலைவனைக் கைவிட வேண்டும். அல்லது வள்ளுவரைக் கைவிட வேண்டும்.

 

 

சற்று சிந்தித்தால் ஒரே ஒரு விஷயம் புலப்படும்.

வள்ளுவரின் குறள்கள் ஆழ்ந்த தத்துவங்களின் அடிப்படையில் எழுந்தவை. காலம் காலமாக நிற்பவை. காலத்தை வென்றும் நிலைப்பவை.

 

எளிதில் மேலெழுந்தவாரியாகச் சொல்லப்படும் பொருளுக்கும் அப்பாற்பட்டு ஆழ்ந்த உட்கருத்தைக் கொண்டவை.

 

அதனால் தான் வேதங்களுக்குச் சொல்லப்படும் புகழ்மொழியான மறை என்று இதற்கு பெயர் சூட்டப்பட்டிருக்கிறது தமிழில் இருப்பதால் தமிழ் மறை.

 

 

அதி மானுடவியல் என்னும் சைக்கிக், அதற்கும அப்பாற்ப்ட்ட வால் அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே இவற்றின் உட்பொருளை ஒருவர் அறிய முடியும்.

புண்ணிய பாவங்கள் பிறப்பைத் தரும்.

 

அதற்கேற்ப இன்றைய வாழ்வு அமையும்.

நல்லதைச் செய்து நல்ல பிறவியை எடு.

பின்னர் பிறவிச் சுழலிலிருந்து இறைவனை வேண்டி அவன் அருள் பெற்று விடுபடு.

 

கற்பில் சிறந்தவள் கடவுளே. அவள் ஆணைக்கு பஞ்ச பூதங்களும் அடி பணியும்.

 

நோன்பு அல்லது தவம் செய்தால் நன் மக்களைப் பெறலாம்.

எண்ணம் என்பது சக்தி வாய்ந்தது. ஒருவர் நினைக்கும் போது அதே லயத்தைக் கொண்டவர்க்கு எண்ண சக்தியின் ஓட்டம் தெரியும்.

 

இப்படி அதிமானுடவியல், ஹிந்து தத்துவம், சாஸ்திரங்கள் அல்லது அறநூல்களின் அடிப்படையில் மட்டுமே வள்ளுவரைப் புரிந்து கொள்ள முடியும்.

இன்றைய பகுத்தறிவின் அடிப்படைக்கு அப்பாற்பட்டவர் வள்ளுவர்.

 

 

தமிழ் மக்கள் செய்த தவத்தால் வந்தவர் வள்ளுவ.ர்

கார் அறிவை (இன்றைய பகுத்தறிவு) விட்டு விட்டு பேரறிவை ஈட்டி, அடைந்து, வாலறிவனை அறியும் முயற்சியில் ஈடுபடும் போது வள்ளுவம் புரியும்; வாழ்க்கையும் சிறக்கும்!

****

 

 

 

 

இங்கேயே இருக்கிறது ஜென்! (Post No.3960)

Written by S NAGARAJAN

 

Date: 1 June 2017

 

Time uploaded in London:-  5-49  am

 

 

Post No.3960

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

இதோ இதோ இங்கேயே இருக்கிறது ஜென்!

Zen is Right Here!

 

ச.நாகராஜன்

 

ஜென் மாஸ்டர் ஷ்ன்யு சுஸுகி ரோஷி (Shunryu Suzuki Roshi) ஜப்பானைச் சேர்ந்த புத்த துறவி. 1959இல் அவர் சான்பிரான்ஸிஸ்கோ வந்தார். அப்போது அவருக்கு வயது 55.

மேலை நாட்டில் புத்தரின் போதனைகளை எடுத்துரைப்பது அவருடைய நோக்கம். ஜென் பிரிவில் ஆர்வமாய் இருந்த அமெரிக்கர்களுக்கு ஜஜென் என்னும் தியானப் பயிற்சியை அவர் கற்பித்தார்.

அடர்ந்த காட்டில் அமைந்திருந்த டஸ்ஸாஜாரா மலைத்தொடரில் அவர் 1967 முடிய வாழ்ந்திருந்தார்.

அவர் ஆயிரக்கணக்கானோரைச் ச்ந்தித்தார். அவா பேசும் மொழி பெரும்பாலும் “மௌனம்” தான். ஒரு தேநீர் கோப்பையை எப்படி எடுப்பது, எப்படி நடப்பது போன்றவற்றால் கூட அவர் கற்பித்தார்.

அவரது அணுக்க சீடராக இருந்த ஷன்யு சுஸுகி (Shunryu Suzuki) தனது அனுபவங்களையும் ரோஷியின் வாழ்நாளில் ந்டந்த சுவையான சம்பவனக்களையும் தொகுத்து இதோ இங்கேயே இருக்கிறது ஜென் என்ற பொருளில் – Zen is Right Here – ஒரு சுவையான சம்பவத் தொகுப்பு நூலை எழுதியுள்ளார்.

அதில் உள்ள சுவையான சம்பவங்களில் சில:

*

 

சீடர் ஷன்யு சுஸுகி தனது மாஸ்டரான ரோஷியிடம் ஒரு நாள் தேநீர் அருந்துகையில் இப்படிக் கேட்டார்:

“மாஸ்டர். உங்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்?”

அதற்கு மாஸ்டர் இப்படி பதிலளித்தார்:

“எனக்கு மாணவர்கள் இருக்கிறார்கள். உனக்கு இல்லை!”

*

 

மாஸ்டர் ரோஷி ஒரு முறை இப்படி மாணவ்ர்களைப் பார்த்துச் சொன்னார்:

“மற்றவ்ர்கள் எதிரில் உங்களை நான் திட்டினால் அதைப் பெரிதாக் எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏனென்றால் அது என் சொல்படி கேட்காத இன்னொருவருக்காக இருக்கலாம். உங்களைப் பிரம்பால் நான் அடித்தேன் என்றால் அது உங்களிடம் நான் நம்பிக்கை கொண்டிருக்கிறேன், நீங்கள் ஒரு நல்ல மாணவர்’ என்று அர்த்தம். சில சமயம் அது உங்களுக்காக இருக்கலாம், சில சமயம் உங்களுக்கு அடுத்தாற் போல இருக்கிறாரே அவருக்காகக் கூட இருக்கலாம்!”

*

 

மாஸ்டர் ரோஷியை அவரது சொற்பொழிவு ஒன்று முடிந்த பின்னர் அவரிடம் வ்ந்து “ஏன் நீங்கள் தலையை மொத்தமாக மழித்திருக்கிறீர்கள்” என்று ஒருவர்  கேட்டார்.

அதற்கு மாஸ்டர் தன் தலையை தேய்த்து விட்டுக் கொண்டே இப்படி பதில் சொன்னார்:

“அது தான் அடிப்படையான ஹேர்ஸ்டைல்”

*

 

உளவிய்ல் சிகிச்சை அளிக்கும் உளவியலாளர் ஒருவர் மாஸ்டரிடம் வந்து, “பிரக்ஞை என்றால் என்ன” என்று கேட்டார்.

அதற்கு  மாஸ்டர் சொன்னார்:” பிரக்ஞையைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. நான் என் மாணவர்களுக்கு ஒரு பறவையின் கீதத்தை எப்படி கேட்பது என்று சொல்லிக் கொடுக்க முயல்கிறேன்.”

 

*

 

ஒரு நாள் சீடர் ஷன்யு சுஸுகி மாஸ்டரிம் இப்படி புகார் செய்தார்:

“எனது மனம் ஒரு நிலைப்பட்டு இருப்பதே இல்லை. தியானத்தின் போது அங்கும் இங்கும் அலை பாய்கிறது”

அதற்கு மாஸ்டர் சொன்ன பதில் இது:

உனது முதுகெலும்பை நேராக நிமிர்த்தி விட்டால், உனது மனம் அமைதியாக இருக்கும்.”

*

 

ஒரு மாணவன் மாஸ்டரைப் பார்த்து, “ஏன் ஜப்பானியர்கள் தங்கள் டீ கோப்பையை இப்படி மிகவும் மெலிதாகச் செய்திருக்கிறார்கள். அது மிக சுலபமாக உடைந்து விடுகிறதே” என்று கேட்டார்.

மாஸ்டர் சொன்னார் இப்படி: “ அது ஒன்றும் மெலிதாக இல்லை.  உனக்குத் தான் அதை எப்படிக் கையாளுவது என்று தெரியவில்லை.

எப்போதுமே  உனது சுற்றுப்புறச் சூழலை நீ தான அனுசரித்து அத்ற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும். அதற்கு நேர் எதிர்மாறாக எதையும் எதிர்பார்த்து .நடக்கக் கூடாது”

*

 

இப்படி ஏராளமான சம்ப்வங்களால் வாழ்க்கை முழுவதும அவர் பாடம் போதித்து வந்தார்..

*******

 

 

யார் உபந்யாசம் செய்யலாம்? யார் செய்யக்கூடாது? (Post No.3922)

Written by London Swaminathan

 

Date: 19 May 2017

 

Time uploaded in London: 21-30

 

Post No. 3922

 

Pictures are taken from various sources such as Face book, google and Wikipedia; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

‘ஊருக்குத்தாண்டி உபதேசம்,உனக்கல்ல’ என்ற கதையை எல்லோரும் கேட்டிருப்பீர்கள். அறநெறிச் சாரம் என்ற நூல் யார் உபதேசமோ, உபந்யாசமோ செய்யத் தகுதி உடையவர், யார் அந்த தகுதி இல்லாதவர்கள், யார் உபதேசம் கேட்கலாம், கேட்கக்கூடாது என்றெல்லாம் மிக அழகாகக் கூறுகிறது. முனைப்பாடியார் என்ற புலவர் இயற்றிய  இந்த நூலில் 226 வெண்பாக்கள் உள.

 

1.அறம் உரைப்பவன் இயல்பு

 

அற கேட்டு அருள் புரிந்து ஐம்புலன்கள் மாட்டும்

இறங்காது இருசார் பொருளும் – துறந்து அடங்கி

மன்னுயிர்க்கு உய்ந்து போம் வாயில் உரைப்பானேற்

பன்னுதற்குப் பாற்பட்டவன்

 

பொருள்:

அற நூல்கள் பல கேட்டவன், அருள் உடையவன், ஐம்புல இன்பங்களை நுகர ஆசைப்படாதவன், பற்றுதல்களை விட்டவன், அடக்கம் உடையவன், நிலைபெற்ற வீடுபேற்றை அடைய உயிர்களுக்கு உதவுபவன் என்று ஒருவன் இருப்பானேயாகில் அவனே அறம் உரைத்தற்கு உரியவன் ஆவான்.

 

இதிருந்து பேச்சாளர் எல்லாம் புனிதர்கள் அல்ல; காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் போன்றோர் கூறியதே ‘தெய்வத்தின்’ குரல் என்பது தெளிவாகும்.

 

 

2.யார் உபந்யாசம் செய்யக்கூடாது?

 

பிள்ளை பேய் பித்தன் பிணியாளன் பின்னோக்கி

வெள்ளை களிவிடம்பன், வேட்கையான் – தெள்ளிப்புரைக்க பொருளுறுணர்வான்  என்றிவரே நூலை

உரைத்தற்குரிமை இலாதார்

பாலகன்,பேய் பிடித்தவன், பைத்தியம், நோயாளி, நெடு நோக்கில்லாதவன், முட்டாள், கள் குடிப்பவன், விஷமக்காரன், பேராசை பிடித்தவன், குற்றங்களை மட்டும் பேசுபவன் – ஆகிய இவர்கள் நூற்பொருளை மற்றவர்களுக்கு உபதேசம் செய்யத் தகுதி அற்றவர்களாவர்.

 

 

3.யார் அற நூல்களைக் கேட்கலாம்?

 

தடுமாற்றம் அஞ்சுவான் தன்னை உவர்ப்பான்

வடுமாற்றம் அஞ்சி தற்காப்பான் – படுமாற்றால்

ஒப்புரவு செய்தாண் டுறுதிச் சொல் சேர்பவன்

தக்கான் தரும உரைக்கு

பொருள்:

சோர்வுபட விரும்பாதவன், பிறர் தன்னைப் புகழும்போது அதை வெறுப்பவன்,  பழி வராதபடி தற்காத்துக் கொள்பவன், தன்னால் முடிந்த அளவுக்கு பிறருக்கு உதவி செய்து, பெரியோரிடம் நல்ல மொழிகளைக் கேட்டு அதைப் பின்பற்றுபவன் தரும உரை கேட்பதற்குத் தகுதி உடையவன்.

 

4.உபந்யாசம்,  சொற்பொழிவுகள் கேட்கக்கூடாதவர் யார்?

 

தன்சொல்லே மேற்படுப்பான் தண்டி தடி பிணக்கன்

புன்சொல்லே போதரவு பார்த்திருப்பான் இன்சொல்லை

என்றிருந்தும் கேளாத ஏழை என இவர்கட்கு

ஆன்றவர்கள் கூறார் அறம்

 

பொருள்:

தான் கூறியதே சிறந்தது என்று வாதாடுபவன், மானமுள்ளவன், மிக்க கருத்து வே,றுபாடு உடையவன்,  பிறர் சொல்லும் இழிசொற்களுக்காக காத்திருப்பவன்,  நல்ல விஷயங்களைக் கேட்பதற்கு காலமும் இடமும் வாய்ப்புக் கொடுத்தும் அதைக் கேளாத மூடன ஆகிய இவர்களுக்குப் பெரியோர்கள் தர்ம உபதேசம் செய்ய மாட்டார்கள்.

 

 

அறநெறிச் சாரத்தில் கண்ட இந்த நான்கு உபதேசங்களையும் நீங்கள் படிக்கத் தடை ஏதுமில்லை. அனைவருக்கும் பரப்புங்கள்.

 

–சுபம்–

 

 

 

வேதங்களில் எண் 17 ஒரு ரஹசிய எண்! (Post No.3919)

Research article Written by London Swaminathan

 

Date: 18 May 2017

 

Time uploaded in London: 16-43

 

Post No. 3919

 

Pictures are taken from various sources such as Face book, google and Wikipedia; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

(I have already posted the English version of this article yesterday)

 

வேதங்களை சங்க காலத் தமிழர்கள் மறை என்று அழகாக மொழி பெயர்த்தனர். ஏனெனில் நிறைய ரஹசியங்கள் நிறைந்தவை. மறை என்றால் மறைவான பொருளுடைத்து. அதனால்தான் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் போன்றோர் வேதத்தின் அர்த்ததைப் பற்றிக் கவலைப்படாமல் அதை சொல்லி வாருங்கள்; அந்த மந்திர சப்தமே பலன் தரும் என்பர்; அது மட்டுமல்ல ஒரு அழகான கதையும் சொல்லுவார்.

 

ஒரு கண் தெரியாத குருடன் விளக்கை எடுத்துச் சென்றதைப் பார்த்து எதிரே வந்தவர்கள் பரிகசித்தனராம். அவன் அவர்களைப் பார்த்து,எனக்கு கண் தெரியாதது உண்மையே; உங்களைப் போன்றோர் இருட்டு நேரத்தில் என் மீது மோதி விடக் கூடாதல்லவா? என்றானாம்.

 

இதே போல நாம் வேதத்தின் பொருள் விளங்காத, அந்தகர்களாக இருந்தாலும், வேதம் என்னும் விளக்கை- ஞான தீபத்தைக் கையில் ஏந்திச் சென்றால் — எதிர்காலத்தில் ஆதி சங்கரர் போன்ற ஒரு தீர்க்கதரிசி தோன்றி உலக மக்களை உய்விப்பர் என்னும் கருத்து வரும்படி காஞ்சி சங்கராசார்ய சுவாமிகள் 91894-1994) அருள்மொழி வழங்கியுள்ளார்.

 

வேதத்தின் பொருளை விளக்க முற்பட்ட, மொழிபெயர்க்க முன்வந்த வெளிநாட்டுக்காரகள் வரிக்கு வரி இந்துக்களைக் குறை கூறுவர். அந்தப் புத்தகங்களைப் படிக்கும் போது ஒரே சிரிப்பாக வரும். அவர்களுடைய மொழிபெயர்ப்புகளை உளறுவாயன் உளறல் என்று சொல்லுவதா அல்லது தமாஷ் என்று சொல்லுவதா என்று தெரியவில்லை. இதை நீங்களே கண்டு பிடிக்கலாம்.

 

ஒரு குறிப்பிட்ட மந்திரத்துக்கு ஒவ்வொரு ஐரோப்பியரும் என்ன பொருள் சொல்லுகின்றனர் என்று அருகருகே வைத்துப் பார்த்தால் குபீரென்று சிரித்து விடுவீர்கள். புத்தரும் ஆரிய என்ற பதத்தைப் பிரயோகித்தார்; சங்க இலக்கியப் புலவர்களும் ஆரிய என்ற சொல்லைப் பயன்படுத்தினர். பாரதியாரும் ஆரிய என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். இவர்கள் அனவரும் கனவான்கள், பண்பாடுடையோர், முனிவர்கள், இமயமலை வாழ் மக்கள் என்ற பொருளில் பயன்படுத்தினர். ஆனால் வெள்ளைக்கார்கள் மொழி பெயர்ப்பு முழுவதிலும் ஆரியர் என்பது ஒரு இனம் என்று மொழிபெயர்த்து அதற்கு அடுத்தவரியில் இது திராவிடர்களுக்கு எதிரானது என்று சேர்த்து இருப்பர். இந்தப் பொருள் எந்த இந்திய இலக்கியத்திலும் இல்லாதது.

எங்கெல்லாம் அவர்களுக்குப் பொருள் தெரியவில்லையோ அங்கெல்லாம் இது ஆரியர்களின் உளறல் (gibberish) என்றும் ஒரு வரி சேர்ப்பர்; சில இடங்களில் இது யாருக்கும் பொருள் விளங்காத விஷயம் (obscure) என்பர். உண்மையில் வேதம் முழுதும் அடையாள பூர்வமாக, சங்கேத (symbolism) மொழியில் பல விஷயங்களைச் சொல்ல வந்த நூல். பிற்காலத்தில் தமிழில் அப்பர், திருமூலர், சிவ வாக்கியர் போன்ற பெரியோரின் பாடல்களில் இப்படி எண்களைப் பயன்படுத்துவதைக் காண லாம். அறிஞர் பெருமக்களின் வியாக்கியானத்தால்தான் அவைகளின் உட்பொருளை நாம் அறிய முடியும்..

வேதத்தில் உள்ள எவ்வளவோ ரஹசியங்கள் பற்றி பல கட்டுரைகள் எழுதிவிட்டேன். இன்று 17 என்ற மாய எண்ணின் குறிப்புகளைக் காண்போம்.

 

யஜூர் வேதத்தில் ருத்ரம் சமகம் என்ற பகுதியில் சமகத்தில் இப்படி எண்களை அடுக்கிக் கொண்டே போவர். உலகின் மிகப் பெரிய எண்கள் பிராமண நூல்களில் உள்ளன. அதற்குப் பின்னர் அதை சமண பௌத்த நூல்கள் செப்பின. தசாம்ச (Decimal, Binary) முறையை உலகிற்குக் கற்பித்து பூஜ்யம் என்ற எண்ணை உருவாக்கி உலகில் கம்யூட்டர் மொழியை உருவாக்க உதவினர். ஆனால் எண் 17 என்று எதற்காக ஒரு விநோத எண்ணைத் திரும்பத் திரும்ப குறிப்பிடுகின்றனர் என்று தெரியவில்லை. இதுபற்றி யஜூர் வேத தைத்ரீய சம்ஹிதையில் குறைந்தது ஆறு ஏழு இடங்களில் வருகிறது

 

பிரஜாபதியின் எண் 17 என்று ஒரு இடத்தில் சொல்லுவர்.

 

ஆறு, குளம், ஏரி, கடல், மழை நீர் முதலிய இடங்களில் இருந்து யாகத்துக்கு நீர் கொண்டு வரவேண்டும் என்ற பட்டியலில் 17 நீர்நிலைகள் என்று முடிப்பர்.

 

 

யாகங்களுடன் இணைந்தது குதிரை பூட்டிய தேர் பந்தயம் ஆகும் . இதில் ஒரு வீரன் 17 அம்புகள் எய்தி இடத்தைக் குறிப்பான் என்று வருகிறது

அப்பொழுது 17 டமாரங்கள் முழங்க வேண்டுமாம்.

 

இன்னும் ஒரு மந்திரம்:

 

ஒரு அசைச் சொல்லுடன் அக்னி வாக் (பேச்சு)கை வென்றான்

இரு அசைச் சொற்களுடன் அஸ்வினி தேவர்கள் உற்சாகத்தை வென்றனர்

விஷ்ணு மூன்று அசைச் சொற்களுடன் மூவுலகத்தை வென்றார்

சோமா நான்கு அசைச் சொற்களுடன் காலநடைகளை வென்றார்

பூசன் ஐந்து பங்க்தியை வென்றார்

பிரஜாபதி 17  சொற்களுடன் 17 மடங்கு ஸ்தோமாவை வென்றார்.

 

இப்படிப் பல மந்திரங்கள்!

 

யாகத்தில் 4 முக்கிய புரோகிதர்கள், அவர்களுக்கு உறுதுணையானோர் நால்வர், அவர்களுக்குப் பல வகைகளில் எடுபிடி வேலை செய்வோர்– என்று 17 பேரைச் சொல்லுவர்.

17 என்பது ஒரு மர்மமான எண்!

 

“தமிழில் பழ மறையைப் பாடுவோம்” என்று பாரதி முரசு கொட்டினான். “வேதம் என்று வாழ்க வென்று கொட்டு முரசே” என்றான் பாரதி.

 

நாமும் முடிந்தவரை வேதத்தை வாழ்த்துவோம். அது நம்மை வாழ்த்தும்; வாழ்விக்கும்.

-சுபம்-

 

பசி ஆற்றல்- புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே-4 (Post No.3914

Written by London Swaminathan

 

Date: 16 May 2017

 

Time uploaded in London: 17-58

 

Post No. 3914

 

Pictures are taken from various sources such as Face book, google and Wikipedia; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

தம்மபதம் என்பது புத்தமதத்தினரின் வேதப் புத்தகம்

திருக்குறள் என்பது தமிழர்களின் வேதப் புத்தகம்

 

 

பசிப்பிணி என்னும் பாவி

 

ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் அப்பசியை

மாற்றுவார் ஆற்றலின் பின் (குறள் 225)

பசியைப் பொறுத்துக் கொள்வது தவசிகளின் வலிமை; ஆனால் அவர்களுக்கு உணவு கொடுக்கும் இல்லறத்தான் வலிமை அதைவிடப் பெரியது

 

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள் வைப்புழி (226)

நல்ல குணங்களை மறக்கச்செய்யும் பசியைத் தீர்ப்பது பெரிய புண்ணியம்; அதாவது பிற்காலத்துக்குச் சேர்த்துவைக்கும் வங்கிக் கணக்கு போன்றது

 

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை

வைத்திழக்கும் வன்கணவர் (228)

செல்வத்தைச் சேர்த்துவைத்து பிறருக்கும் கொடுக்காமல், தாமும் அனுபவிக்காமல் இருப்பவர்களுக்கு, தானம் செய்வதிலுள்ள இன்பம் என்ன என்றே தெரியாது.

 

தம்மபதத்தில் புத்தர் சொல்லுவார்:

உண்மையே பேசு

கோபப் படாதே

கேட்பவருக்கு உன்னிடம் உள்ளதைக் கொடு

இந்த மூன்றும் உன்னைக் கடவுளை நோக்கி அழைத்துச் செல்லும் (தம்ம.224)

xxxx

வாய்மை

உள்ளதால் பொய்யாதொழுகின் உலகத்தார்

உள்ளத்துளெல்லாம் உளன் (குறள் 294)

 

ஒருவன் மனத்தாலும் பொய் சொல்ல நினைக்காமல் இருந்தால் அவன் உலக மக்கள் எல்லோருடைய உள்ளத்திலும் இருப்பான்.

 

புத்தர் சொல்கிறார்:

நல்ல குணம் உள்ளவனாக இருந்து, யார் அறவழியைப் பின்பற்றுகிறானோ, யார் உண்மை பேசுகிறானோ,  செய்ய வேண்டிய கடமைகளைச் செய்கிறானோ அவனை உலக மக்கள் அனைவரும் விரும்புவர் (தம்ம. 217)

 

xxx

பிறன் மனை நோக்கா பேராண்மை

 

பகை பாவம் அச்சம் பழியென நான்கும்

இகவாவாம் இல்லிறப்பான் கண் ( 146)

பொருள்:

பிறருடைய மனைவியை விரும்பி நெறி தவறி நடப்பவனிடமிருந்து பகை, பாவம், அச்சம், பழிச்சொல் என்ற நான்கும் எப்போதும் நீங்காது.

 

புத்தரும் இதையே மொழிகிறார்:

மற்றவனுடைய மனைவியை அபகரிப்பவனுக்கு நான்கு விஷயங்கள் நடக்கும்:-

அவன் மதிப்பையும் மரியாதையையும் இழப்பான்;

அவன் மன சஞ்சலத்துன் வாழ்வான்;

எல்லோரும் அவனைத் தூற்றுவர்;

அவன் நரகத்தில் வீழ்வான் (தம்மபதம்-309)

 

xxx

 

ஆசையே துன்பத்திற்குக் காரணம்

 

இன்பம் இடையறாதீண்டும் அவாவென்னும்

துன்பத்துள் துன்பம் கெடின் (குறள் 369)

 

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே

பேரா இயற்கை தரும் (370)

 

பொருள்

ஒருவன் ஆசையெனும் துன்பத்தைக் கைவிட்டால் அவனுக்கு இன்பம் வந்து குவியும்.

ஆசையைப் பூர்த்தி செய்ய முடியாது அதனை விடக் கற்றுக்கொண்

டால், அழியாத இன்பத்தைப் பெறலாம்.

 

ஆசை போனால், இன்பம் வரும்; தங்க நாணய மழையே பெய்தாலும் ஆசை அடங்காது. இன்பத்தின் எல்லையில் துன்பம் நிற்கிறது. கடவுள் கொடுக்கும் இன்பங்களை ஞானியானவன் நாட மாட்டான் (தம்ம-187)

 

கருமிகள் சுவர்க்கத்துக்குள் புக முடியாது; முட்டாள்கள் தானத்தைப் புகழ மாட்டார்கள்; புத்திசாலிகளே தானம் செய்து, அதன் மூலம் இன்பம் அடைவர் (தம்ம.177)

 

–சுபம்–

சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர், பெரியோர் எல்லாம்……….. (Post No.3911)

Written by London Swaminathan

 

Date: 15 May 2017

 

Time uploaded in London: 20-03

 

Post No. 3911

 

Pictures are taken from various sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

வெற்றி வேற்கை என்றும் நறுந்தொகை என்றும் அழைக்கப்படும் –கொற்கை வாழ் பாண்டிய மன்னன் அதிவீர ராம பாண்டியன் யாத்த–  நூல் நம் எல்லோருக்கும் அறிமுகமானதே.

 

எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்

கல்விக்கழகு கசடு அற மொழிதல்

…………………………………………………………………..

என்று தொடரும் செய்யுளில்

 

பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்

சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர்

பெற்றோர் எல்லாம் பிள்ளைகள் அல்லர்

உற்றோர் எல்லாம் உறவினர்அல்லர்

நீண்டுகொண்டே போகும்.

சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர் — என்ற ஒரு வரியை மட்டும் ஆராய்வோம். ஏனெனில் இதை கம்பன், வள்ளுவன் போன்ற பல புலவர்கள் கையாளுகின்றனர்.

 

பாமர மக்களும்கூட

மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது

கடுகு சிறுத்தாலும் காரம் போகாது

கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே

–என்று பலவகையாகச் சொல்லுவர்.

 

இது எல்லாம் பெரும்பாலும் திருமாலின் வாமனாவதாரத்தை அடிப்படையாக வைத்தெழுந்த பழமொழிகள் போலும்.

 

வாமனனாக (குள்ளனாக) வந்து மஹாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டு அவனையே பாதாள உலகத்துக்கு அனுப்பினான் ஓங்கி உலகலந்த ‘உத்தமன்’

 

.சுருக்கமாக, இதன் மூலம் சொல்லவரும் செய்தி:

உருவத்தை வைத்து ஆளை எடை போடாதே.

 

வாமனாவதாரம் (த்ரிவிக்ரமாவதாரம்) திருக்குறளிலும் (610), ரிக் வேதத்திலும் (1-22-7; 1-155-4) கூட இருக்கிறது.

பெருமாளுக்கு வெட்கம் – கம்பன் வியப்பு

கம்ப ராமாயணம், சுந்தர காண்டம், உருக்காட்டு படலத்தில் ஒரு செய்யுள் வருகிறது. அதில் அனுமனின் உருவத்தைக் கண்டு விஷ்ணுவே வெட்கம் அடைந்தார் என்கிறான் கம்பன்.

 

ஏண் இலது ஒருகுரங்கு ஈது என்று எண்ணலா

ஆணியை அனுமனை அமைய நோக்குவான்

சேண் உயர் பெருமை ஓர் திறத்தது அன்றுஎனா

நாண் உறும் உலகு எலாம் அளந்த நாயகன்

 

பொருள்:-

திரிவிக்ரம அவதாரத்தால் எல்லா உலகங்களையும் தன் திருவடியால் அளந்த திருமால், ‘வலிமையற்ற சாதாரண குரங்கு இது’ என்று அலட்சியம் செய்ய முடியாத அச்சாணி போல உள்ளவனாகிய அனுமனைக் கண்டு, மிக உயர்ந்த பெருமை ஒரே இடத்தில் இருப்பது அன்று என்று எண்ணி நாணமடைந்தான்.

 

இலங்கையில் அசோகவனத்தில் சிறைவைக்கப்பட்ட சீதையிடம் அனுமன் தன் தோளிலேயே சுமந்து சென்று ராம பிரானிடம் ஒப்படைக்கிறேன் என்று சொன்னான். சின்னக் குரங்கு போல உள்ள அனுமனால் அதைச் சாதிக்க முடியுமா என்று சீதை சந்தேகப்பட்ட போது அனுமன் விஸ்வரூபம் எடுத்து ஓங்கி வளர்ந்து சீதைக்கு முன் நின்றான். அதைப் பார்த்து, அனுமனுக்கும் முன்னால் இப்படி வளர்ந்து விஸ்வரூப தரிசனம் எடுத்த திருமாலுக்கு வெட்கம் வந்து விட்டதாம்

அடடா! ஓங்கி வளர்வதில் எனக்கு நிகரில்லை; அந்தப் பெருமை முழுதும் என்னுடைத்தே என்று எண்ணினேனே; மிக உயர்ந்த பெருமைக்கு ‘பேடன்ட்’ (Patent) வாங்கி விட்டதாக நினைத்தேனே. இப்பொழுது இந்தச் சின்னக் குரங்கு அரிய பெரிய செயலைச் செய்ததால் சிறியோர் எல்லாம் சிறியோர் அல்ல என்று புரிகிறது என்று சொல்லி திருமாலே வெட்கப்பட்டாராம்.

 

என்னே கம்பன் காட்டும் அற்புத சித்திரம்!

–சுபம்—-