அதிசய புத்த துறவி ஸு யுன்! – 25 (Post No. 3506)

Written by S NAGARAJAN

 

Date: 2 January 2017

 

Time uploaded in London:-  4-39 AM

 

Post No.3506

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 25

ச.நாகராஜன்

 

ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 85 இந்த வருடம் பழமை வாய்ந்த 16 ஸ்தூபங்களும் புதுப்பிக்கப்பட்டதோடு அனைத்து புத்தர் சிலைகளும் புதுப்பிக்கப்பட்டன. ஷெங் – இன் மடாலயத்தில் புதிய வெங்கலச் சிலைகள் செய்யப்பட்டு பிரதான ஹாலில் நிறுவப்பட்ட்ன. களிமண்ணாலான  மூன்று சிலைகள் மேற்கு சுவர்க்கம் என்னும் தலத்தில் வைக்கப்பட்டன.

 

 

ஒழுக்க விதிகளை முதன் முதலில் பெற்ற சான் பிட்சு ஸூ ஸிங்கின் வாழ்க்கை வரலாறு மிக்க சுவையானது.

பிட்சு ரி-பியான் என்றும் அழைக்கப்பட்ட ஸு ஸிங் ஹூயிலி என்ற இடத்தைச் சேர்ந்தவர. இளம் வயதிலேயே அவர் அனாதையானார்.

செங் என்ற ஒருவர் அவரை அன்புடன அரவணைத்து ஆதரித்ததோடு தன் மகளையும் அவருக்கு  மணம் முடித்தார். அவருக்கு இரண்டு மகன்கள் உண்டு. மிகவும் ஏழைகளாக அவர்கள் வாழ்ந்து வந்தனர்.

 

 

ஸு யுன் அவர் இருந்த மடாலயத்திற்கு வந்த போது எட்டுப் பேர் அடங்கிய அந்தக் குடும்பம் மடாலயத்தில் சேவை புரிந்து வந்தது. காக் ஃபுட் மவுண்டனுக்கு ஸு யுன் வந்த போது அவருக்கு வயது 20. ஸு ஸிங்கிற்கு பிரதான சூத்திரங்களை ஸு யுன் தந்தார்.

 

அவருக்கு 21 வயது ஆன போது அந்தக் குடும்ப உறுப்பினர்கள் எட்டு பேரும் சங்கத்தில் சேர்ந்தனர்.

ஸு ஸிங்கின் முகம் அவலட்சணமாக ஒன்று.  காது வேறு அவருக்குக் கேட்காது.. படிப்பறிவும் இல்லாதவர்.

 

 

தினமும் தோட்ட வேலை செய்தும் மாலை நேரத்தில் பிரார்த்தனை செய்தும் வந்த அவர் 1920இல்  ஸு யுன் யுன் – ஸி ஆலயத்தில் இருந்த போது அங்கு வந்து தோட்ட வேலை செய்யும் பணியை ஏற்றார்.

 

மூன்றாம் மாதம் 29ஆம் நாளன்று பகல் தியானத்தை முடித்துக் கொண்ட அவர் பிரதான ஹாலின் பின்பக்கம் உள்ள  முற்ற்த்திற்குச் சென்றார். அங்கு பிட்சுக்கான் ஆடையை அணிந்து கொண்டு  தியான நிலையில் மேற்குப் பக்கம் பார்த்து அமர்ந்தார். அவர் நா தொடர்ந்து புத்தரின் நாமத்தை உச்சரித்தது. பின்னர் ஒரு கையால் மணியை அடித்தும் இன்னொரு கையால் மர மீனால் அடித்துக் கொண்டும் வைக்கோல் போரில் தீயை மூட்டினார்.

 

 

 

அங்கு குழுமியிருந்த ஏராளமான பேருக்கு அப்போது என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. ஆனால் தீ ஜுவாலையின் பிரகாசத்தைக் கண்டு ம்டாலயத்தின் உள்ளே ஓடி வந்து அவர் அருகில் சென்ற போது அவரது உரு அமர்ந்த நிலையில் சாம்பலின் மீது இருந்தது. ஆனால் மணியின் பிடியும் மர மீனும் எரிந்திருந்தன.

உடனே இந்த விவரம் ஸு யுன்னுக்கு அறிவிக்கப்பட  அவர் போதிசதவரின் சடங்கில் ஈடுபட்டிருந்ததால் உடனடியாக மலையிலிருந்து கீழே இறங்க முடியாமலிருந்தது.

 

உரிய அதிகாரிகளுக்கு ஸு யுன் கடிதம் எழுதி அனுப்பினார். கவர்னர் டாங் உள்ளிட்ட அனைவரும் அசாதாரணமான இந்த நிகழ்வு பற்றி அறிந்து அதிசயித்தனர்.

 

 

அவரது கையில் இருந்த் மணி அகற்றப்பட்ட போது அவரது உடல் கீழே விழுந்து பிடி சாம்பலானது.

 

 

கவர்னார் டாங் மூன்று நாட்கள் நினைவு தினம் அனுசரிக்க ஆணை பிறப்பித்தார்.  ஆயிரக்கணக்கானோர் அங்கு கூடி அஞ்சலி செலுத்தினர்.

 

ஸு யுன்னுக்கு இப்போது வயது 86.

 

சான் தியான முறை ஒரு வாரம் அனுஷ்டிக்கப்பட்டது. அங்கு இருந்த ஏராளமான மரங்கள் அகற்றப்பட வேண்டிய சூழ்நிலை இருந்தது. உள்ளூர்  மக்களின் உதவியோடு மரங்கள் அகற்றப்பட்ட போது அந்த மரங்களில் பாதி மக்களுக்கே வழங்கப்பட்டது. அவர்கள்  மிகவும் மகிழ்ந்தனர்.

 

 

ஆட்சியிலோ கவர்னர் பதவி ஒழிக்கப்பட்டது. ஆகவே கவர்னர் டாங் ஓய்வு பெற்றார். அடிக்கடி மடாலயம் வந்து தங்கி தியானம் செய்வதை அவர் வழக்கமாகக் கொண்டார்.

வருடம் உருண்டு ஓடி முடிந்தது.

*********

 

.

 

ஓம் பற்றிய 43 அற்புதப் பொன்மொழிகள்! (Post No.3498)

Compiled by London swaminathan

 

Date: 30 December 2016

 

Time uploaded in London:-  13-06

 

Post No.3498

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

ஜனவரி 2017 காலண்டர்

துர்முகி வருடம் (மார்கழி-தை மாதம்)

 

(இம்மாத காலண்டரில் ஓம் பற்றிய பொன்மொழிகள் இடம்பெறுகின்றன)

முக்கிய நாட்கள்:- ஜனவரி 8- வைகுண்ட ஏகாதசி, 13 போகிப் பண்டிகை, 14 பொங்கல்/ மகர சங்கராந்தி, 15 கனு/ மாட்டுப் பொங்கல், 17 திருவையாறு தியாகராஜ ஆராதனை, 26 குடியரசு தினம், 27 தை அமாவாசை.

ஏகாதசி- ஜனவரி 8,23; அமாவாசை- 27; பௌர்ணமி-12

ஜனவரி 1 ஞாயிற்றுக் கிழமை

இவ்வுலகிற்கு தகப்பனும் தாயும்  தாங்குபவனும் பாட்டனும், கற்றுணரத்தக்கவனும் பரிசுத்தமளிப்பவனும், ஓம்காரப்பொருளும் அவ்வறே ருக், யஜுர், சாம வேதங்களும் நானே- பகவத் கீதை 9-17

ஜனவரி 2 திங்கட்கிழமை

ஓம் இதி ஏகாகஷரம் ஆத்ம ஸ்வரூபம்; நம இதி த்வ்யக்ஷரம் ப்ரக்ருதி ஸ்வரூபம்; நாராயணாய இதி பஞ்சாகஷரம் ப்ரப்ரம்ம ஸ்வரூபம் — தாரஸரோபநிஷத்

ஜனவரி 3 செவ்வாய்க் கிழமை

யோகதாரனையில் நிலைபெற்றவனாய் ஓம் என்னும் பிரம்மவாசகமாகிய ஓரெழுத்தை உச்சரித்துக்கொண்டு என்னை முறைப்படி சிந்தித்தவனாய் உடலைவிட்டு எவன் செல்லுகிறானோ அவன் உயர்ந்த கதியை அடைகிறான் -பகவத் கீதை 8-13

ஜனவரி 4 புதன் கிழமை

குந்தீபுத்ரனே!நான் நீரில் சுவையும் சந்திர சூரியர்களிடத்தில் ஒளியும் வேதங்களனைத்துள்ளும் ப்ரணவமாகவும்(ஓம்), ஆகாயத்தில் சப்தமும், மனிதர்களுள் ஆண்மையும் ஆகின்றேன் -பகவத் கீதை 7-8

 

ஜனவரி 5 வியாழக்கிழமை

 

ஊமையெழுத்தே உடலாச்சு – மற்றும்

ஓமென்றெழுத்தே உயிராச்சு

ஆமிந்தெழுத்தை யறிந்துகொண்டு விளை

யாடிக் கும்மியடியுங்கடி–கொங்கண நாயனார்

ஜனவரி 6 வெள்ளிக்கிழமை

தினந்தினைப் போதாகிலும் தான் தீதற நில்லாமல்

இனம்பிரிந்த மான்போல் இருந்தாய் — தினந்தினமும்

ஓங்காரத்துள்ளொளியாய் யுற்றுணர்ந்து நீ மனமே

ஆங்கார அச்சம் அறு – பட்டினத்தார்

 

ஜனவரி 7 சனிக்கிழமை

நீங்கும் ஐம்புலன்களும் நிறைந்த வல்வினைகளும்

ஆங்காரமாம் ஆசியும் அருந்தடந்த பாதமும்

ஓங்காரத்தின் உள்ளிருந்து ஒன்பதொழிந்தொன்றிலத்

தூங்கா ஈசர் சொற்படி துணிந்திருக்க சுத்தமே–சிவவாக்கியர்

 

ஜனவரி 8 ஞாயிற்றுக் கிழமை

அகாரமானது அம்பலம் அனாதியானது அம்பலம்

உகாரமானது அம்பலம் உண்மையானது அம்பலம்

மகாரமானது அம்பலம் வடிவானது அம்பலம்

சிகாரமானது அம்பலம் தெளிந்ததே சிவாயமே -சிவவாக்கியர்

 

ஜனவரி 9 திங்கட்கிழமை

 

ஓம்நமோ என்றுமுளே பாவையென்று அறிந்தபின்

பானுடல் கருத்துளே பாவையென்று அறிந்தபின்

நானும் நீயும் உண்டடா நலங்குலம் அது உண்டடா

ஊணும் ஊணும் ஒன்றுமே உணர்ந்திடாய் உனக்குளே – சிவவாக்கியர்

 

ஜனவரி 10 செவ்வாய்க் கிழமை

அவ்வெனும் எழுத்தினால் அண்டம் ஏழு ஆக்கினாய்;

உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை

மவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்

அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே!- -சிவவாக்கியர்

 

ஜனவரி 11 புதன் கிழமை

அவ்வுதித்த மந்திரம் அகாரமாய் உகாரமாய்

எவ்வெத்து அறிந்தவர்க்கு எழுபிறப்பது இங்கிலை

சவ்வுதித்த மந்திரத்தைத்னு தற்பரத்து இருத்தினால்

அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே!- சிவவாக்கியர்

 

ஜனவரி 12 வியாழக்கிழமை

கொண்டல் வரை நின்றிழிந்த குலக்கொடி

அண்டத்துள் ஊறி இருந்தெண்டிரையாகி

ஒன்றின் பதஞ்செய்த ஓம் என்ற அப்புறக்

குண்டத்தின் மேல் அங்கி கோலிக்கொண்டானே–திருமந்திரம் 410

 

ஜனவரி 13 வெள்ளிக்கிழமை

தரணி சலங்கனல் கால்தக்க வானம்

அரணிய பானு அருந்திங்கள் அங்கி

முரணிய தாரகை முன்னிய ஒன்பான்

பிரணவம் ஆகும் பெருநெறி தானே –திருமந்திரம் 839

 

ஜனவரி 14 சனிக்கிழமை

போற்றுகின்றேன் புகழ்ந்தும்புகல் ஞானத்தைத்

தேற்றுகின்றேன் சிந்தை நாயகன் சேவடி

சாற்றுகின்றேன் அறையோ சிவயோகத்தை

ஏற்றுகின்றேன் நம் பிரான் ஓர் எழுத்தே–திருமந்திரம் 864

 

ஜனவரி 15 ஞாயிற்றுக் கிழமை

நாடும் பிரணவ நடுவிரு பக்கமும்

ஆடு மலர்வாய் அமர்ந்தங்கு நின்றது

நாடு நடுவுண் முகநமசிவாய

வாடுஞ் சிவாய நம புறவட்டத்தாயதே–திருமந்திரம் 902

 

ஜனவரி 16 திங்கட்கிழமை

ஓம்காரத்து உள்ளே உதித்த ஐம்பூதங்கள்

ஓம்காரத்து உள்ளே உதித்த சராசரம்

ஓம்கார தீதத்து உயிர் மூன்றும் உற்றன

ஓம்கார சீவ பரசிவ ரூபமே –திருமந்திரம் 2628

ஜனவரி 17 செவ்வாய்க் கிழமை

 

ஓம் சக்தி சக்தி சக்தி என்று சொல்லு – கெட்ட
சஞ்சலங்கள் யாவினையும் கொல்லு;
சக்தி சக்தி சக்தி என்று சொல்லி – அவள்
சந்நிதியிலே தொழுது நில்லு.

ஜனவரி 18 புதன் கிழமை

ஓம் சக்தி அருளால் உலகில் ஏறு – ஒரு
சங்கடம் வந்தால் இரண்டு கூறு;
சக்தி சில சோதனைகள் செய்தால் – அவள்
தன் அருளே என்று மனது தேறு.

ஜனவரி 19 வியாழக்கிழமை

உலகின் மிகப்   பழமையான நூல் ரிக்வேதம். அது ஓம்காரத்தில் துவங்கி ஓம்காரத்தில் முடியும். ஓம் அக்னிமீளே புரோஹிதம் என்று துவங்கி இறுதியில் ஹரி: ஓம் என்று முடிப்பர்.

 

ஜனவரி 20 வெள்ளிக்கிழமை

வைவஸ்வதோ மனுர் நாம மானனீயோ மனீஷிணாம்

ஆசித் மஹீக்ஷிதாம் ஆத்ய: ப்ரணவ: சந்தசாம் இவ –ரகுவம்சம் 1-11

வேதங்களுக்கெல்லாம் முதலில் பிரணவம் இருப்பது போல அரசர்களுக்கெல்லாம் முதல் அரசராக இருந்தவர் வைவஸ்வத மனு என்பவர். அவர் சூரியனுடைய புத்ரர். அறிவாளிகளாலும் மதிக்கத் தக்கவராய் இருந்தார்.

 

ஜனவரி 21 சனிக்கிழமை

வாதாபி கணபதிம் பஜே

……………….

ப்ரணவ ஸ்வரூபம் வக்ரதுண்டம்

–முத்துசுவாமி தீட்சிதர்

 

ஜனவரி 22 ஞாயிற்றுக் கிழமை

 

மாணிக்க வாசகரின் திருவாசகமும் ஓம்காரத்தில்  துவங்கி அதில் முடிவடைகிறது. திருவாசகத்தில் 51 பாடற் பகுதிகளில் முதலில் உள்ளது சிவ புராணம். அதில் உய்ய என்னுள்ளத்துள் ஓம்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா – என்று சிவபுராணத்தில் ஓம்காரத்தை அமைத்துள்ளார்.

கடைசியாக அமைந்த பாடற்பகுதி அச்சோ பதிகம். அதிலும், உய்யு நெறி காட்டுவித்திட்டோங்காரத்துட் பொருளை ஐயனெனக்கருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே – என்று சொல்லி முத்தாய்ப்பு வைக்கிறார்..

 

ஜனவரி 23 திங்கட்கிழமை

பாரதி பாடலில் (பாஞ்சாலி சபதத்தின் முதல் பாடல்):

ஓமெனப் பெரியோர்கள் – என்றும், ஓதுவதாய் வினை மோதுவதாய்,

தீமைகள் மாய்ப்பதுவாய் – துயர் ,தேய்ப்பதுவாய் நலம் வாய்ப்பதுவாய்

நாமமும் உருவும் அற்றே – மனம் நாடரிதாய் புந்தி தேடரிதாய்

ஆமெனும் பொருளனைத்தாய் – வெறும் அறிவுடன் ஆனந்த இயல்புடைத்தாய்

நின்றிடும் பிரமம் என்பார் – அந்த

நிர்மலப் பொருளினை நினைத்திடுவேன்– பாரதி

 

ஜனவரி 24 செவ்வாய்க் கிழமை

பாஞ்சாலி சபதத்தின் முடிவுப் பாடல் ஓம்கார கர்ஜனையுடன் முடிகிறது:

ஓமென்றுரைத்தனர் தேவர் – ஓம்

ஓமென்று சொல்லி உறுமிற்று வானம்

பூமியதிர்ச்சி உண்டாச்சு – விண்ணை

பூழிப்படுத்தியதாஞ் சுழற் காற்று

சாமி தருமன் புவிக்கே – என்று

சாட்சியுரைத்தன பூதங்களைந்தும்!

நாமுங் கதையை முடித்தோம் – இந்த

நானில முற்றும் நல்லின்பத்தில் வாழ்க.– பாரதி

 

ஜனவரி 25 புதன் கிழமை

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்:

காமியத்தில் அழுந்தி இளையாதே

காலர் கைப்படிந்து மடியாதே

ஓமெழுத்தில் அன்பு மிகவூறி

ஓவியத்தில் அந்தமருள்வாயே

தூமமெய்க் கணிந்த சுக லீலா

சூரனைக் கடிந்த கதிர்வேலா

ஏமவெற்புயர்ந்த மயில்வீரா

ஏரகத்தமர்ந்த பெருமாளே

ஜனவரி 26 வியாழக்கிழமை

அகத்திய முனிவனுக்கு முருகப் பெருமான் ஓம்கார மகிமையை உபதேசித்ததை, தெய்வ மணிமாலையில் வள்ளலாரும் பாடுகிறார்:-

சேமமிகு மாமறையின் ஓமெனும் அருட்பதத்

திறனருளி மலைய முனிவன்

சிந்தனையின் வந்தனையும் வந்த மெய்ஞ்ஞானசிவ

தேசிகாரத்னமே

 

ஜனவரி 27 வெள்ளிக்கிழமை

சம்ஸ்கிருத ஸ்லோகம் ஒன்று சொல்லும்:–

ஓம்காரஸ்ச அதசப்தஸ்ச த்வாவேதௌ ப்ரஹ்மண: புரா

கண்டம் பித்வா விநிர்யாதௌ தஸ்மான் மாங்கலிகாஉபௌ

–பாதஞ்ஜலதர்சனம்

பொருள்:– ஓம், அத என்ற இரண்டு சொற்களும் பிரம்மனின் திருவாயிலிருந்து வெளிவந்ததால் இரண்டும் மங்கலச் சொற்களாக கருதப்படும்.

 

ஜனவரி 28 சனிக்கிழமை

 

நான்கு முறை ஓம்காரம்!

 

போற்றியோ நமச்சிவாய

புயங்கனே மயங்குகின்றேன்

போற்றியோ நமச்சிவாய

புகலிடம் பிறிதொன்றில்லை

போற்றியோ நமச்சிவாய

புறமெனப் போக்கல் கண்டாய்

போற்றியோ நமச்சிவாய

சயசய போற்றி போற்றி

—–திருச்சதகம் பாடல் 64, திருவாசகம்

 

ஜனவரி 29 ஞாயிற்றுக் கிழமை

 

பரந்தது மந்திரம் பல்லுயிர்க்கெல்லாம்

வரந்தரு மந்திரம் வாய்த்திட வாங்கித்

துரந்திடு மந்திரஞ் சூழ்பகை போக

உரந்தரு மந்திரம் ஓம் என்றெழுப்பே–திருமந்திரம் 923

ஜனவரி 30 திங்கட்கிழமை

ஓமென் றெழுப்பித்தன் உத்தம நந்தியை

நாமென் றெழுப்பி நடுவெழு தீபத்தை

ஆமென் றெழுப்பியவ் வாறறி வார்கள்

மாமன்று கண்டு மகிழ்ந்திருந்தாரே–திருமந்திரம் 924

 

ஜனவரி 31 செவ்வாய்க் கிழமை

ஊமை யெழுத்தொடு பேசும் எழுத்துறில்

ஆமை யகத்தினில் அஞ்சும் அடங்கிடும்

ஓமய முற்றது உள்ளொளி பெற்றது

நாமயமற்றது நாமறியோமே

–திருமந்திரம் 2119

 

xxxx

32.நீரில் எழுத்து இவ்வுலகர் அறிவது

வானில் எழுத்தொன்று கண்டறிவாரில்லை

யாரிவ்வெழுத்தை அறிவாரவர்கள்

ஊனில் எழுத்தை உணர்கிலர் தாமே–திருமந்திரம் 934

 

33.வேரெழுத்தாய் விண்ணாய் அப்புறமாய் நிற்கும்

நீரெழுத்தாய் நிலந்தாங்கியும் அங்குளன்

சீரெழுத்தாய் அங்கியாய் உயிராமெழுத்து

ஓரெழுத்தீசனும்ய் ஒண்சுடராமே–திருமந்திரம் 949

 

34.ஓங்கரர முந்தீக்கீழ் உற்றிடும் எந்நாளும்

நீங்கா வகாரமும் நீள்கண்டத்தாயிடும்

பாங்கார் நகாரம் பயில் நெற்றியுற்றிடும்

வீங்காகும் விந்துவும் நாதமே லாகுமே–திருமந்திரம் 988

 

35.ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்- பராசக்தி

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்.

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்- பராசக்தி

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்– பாரதி

 

 

36.ஆமையொன் றேறி அகம்படி யானென

ஓமஎன் றோதியெம் உள்ளொளி யாய்நிற்கும்

தாம நறுங்குழல் தையலைக் கண்டபின்

சோமநறுமலர் சூடி நின்றாளே–திருமந்திரம் 1182

37.உணர்ந்தெழு மந்திரம் ஓமெனும் உள்ளே

மணந்தெழு மாங்கதி யாகிய தாகுங்

குணர்ந்தெழு சூதனுஞ் சூதியுங் கூடிக்

கணந்தெழுங் காணுமக் காமுகை யாமே–திருமந்திரம் 1198

 

38.ஓம்காரத் துள்ளொளி உள்ளே உதயமுற்

றாங்கார மற்ற அனுபவங் கைகூடார்

சார்ங்கால முன்னார் பிறவாமை சார்வுற்றார்

நீங்காச் சமயத்துள் நின்றொழிந்தார்களே–திருமந்திரம் 1531

 

 

39.இலிங்க நற்பீடம் இசையும் ஓங்காரம்

இலிங்க நற்கண்ட நிறையு மகாரம்

இலிங்கத்துள் வட்ட நிறையும் உகாரம்

இலிங்க மகார நிறைவிந்து நாதமே–திருமந்திரம் 1722

 

 

40.ஒளியை யொளிசெய்து வோமென்றெழுப்பி

வளியை வளிசெய்து வாய்த்திட வாங்கி

வெளியை வெளிசெய்து மேலெழவைத்துத்

தெளியத் தெளியுஞ் சிவபதந்தானே–திருமந்திரம் 2447

 

41.வைத்துச் சிவத்தை மதிசொரூபானந்தத்து

உய்த்துப் பிரணவ மாம் உபதேசத்தை

மெய்த்த இதயத்து விட்டிடு மெய்யுணர்ந்து

அத்தற்கடிமை யடைந்து நின்றானன்றே–திருமந்திரம் 2452

 

42.ஓமெனும் ஓங்காரத்துள்ளே யொருமொழி

ஓமெனும் ஓங்காரத்துள்ளே  யுருவரு

ஓமெனும் ஓங்காரத்துள்ளே பல பேதம்

ஓமெனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே–திருமந்திரம் 2627

 

 

43.ஓமெனும் ஓரெழுத்துள் நின்ற ஓசைபோல்

மேனின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள்

சேய் நின்ற செஞ்சுடர் எம்பெருமானடி

ஆய்நின்ற தேவர் அகம்படியாகுமே–திருமந்திரம் 2781

 

–Subham–

 

 

 

அழுதால் உன்னைப் பெறலாமே – மாணிக்க வாசகர் (Post No.3491)

Written by London swaminathan

 

Date: 28 December 2016

 

Time uploaded in London:-  11-05 am

 

Post No.3491

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

“அழுத பிள்ளை பால் குடிக்கும்” என்பது தமிழ் பழமொழி. இது அநேகமாக பல்வேறு மொழிகளிலும் உள்ள பழமொழி. ஏசு கிறிஸ்துவும் மலைப் பிரசங்கத்தில் “அழுகின்றவான்களே பாக்கியவான்கள் ஏனெனில் அவர்கள் ஆறுதல் அடைவார்கள்” என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். அழுதே கடவுளை அடைந்தவர்கள் அல்லது அவன் அருளைப் பெற்றவர்கள் இந்து மதத்தில் நிறைய பேர் உண்டு.

 

துச்சாதனனால் துகில் உரிக்கப்பட்ட திரவுபதி தன் மானத்தைக் காக்க எவ்வளவு கதறியும் யாரும் காப்பாற்றவில்லை . அதுவரை புடவையை ஒரு கையால் பற்றி இருந்த திரவுபதி, இரு கைகளையும் உயர்த்தி கண்ணா காப்பாற்று என்று கதறியவுடன் இறைவனே வந்து ஆடை கொடுத்தான்.

 

இதனால் “எனக்கு எப்போதும் துக்கமே தா கண்ணா, அப்போதுதான் உன் நினைவு நீங்காது நிற்கிறது” என்பாள் இன்னொரு பெண்மணி: “துன்பக் கண்ணீரைத் துடைக்கும் உன் தரிசனம் துன்பம் வரும்போது கிட்டுவதால் அடிக்கடி துன்பம் வரட்டும் என்பது என் பிரார்த்தனை”– இது குந்தியின் பிராத்தனை.

 

முதலையிடம் சிக்கிய ஒரு யானையை எவ்வளவோ யானைகள் மீட்க முயன்றும் பலனில்லாமற் போகவே, ஆதிமூலமே என்று கதறியது அந்த யானை. உடனே கஜேந்திர மோட்சமளிக்க கருட  வாஹனத்தில் ஏறி விரைந்தோடி வந்தான் விஷ்ணு பகவான்.

 

கண்ணனும் பகவத் கீதையில் தன்னை நான்குவிதமான பக்தர்கள் நாடுகின்றனர் என்றும் அவர்களுக்குத் தான் அருள் பாலிப்பதாகவும் சொல்கிறான்.

 

அர்ஜுனா! துன்பம் அடைந்தோன், ஞானத்தைத் தேடுவோன், செல்வத்தை நாடுவோன், ஞானி ஆகிய நால்வரும்  என்னைப் பூஜிக்கும் புண்யவான்கள் ஆவர்.(பகவத் கீதை 7-16)

 

இதன் தாத்பர்யம் என்னவென்றால், ஒருவன் அழும் நிலைக்கு துக்கம் வரும்போது பரிபூரண சரணாகதி அடைந்து விடுகிறான். அதற்கு முன்வரை,  “தான்” என்னும் அஹங்காரத்துடன் சாம, தான, பேத, தண்டம் என்ற நான்கு விதமான உபாயங்களையும் கடைப் பிடித்துப் பார்க்கிறான்.

மாணிக்க வாசகர் சொல்லுவதைக் கேட்போம்

யானே பொய் என் நெஞ்சும்

பொய் என் அன்பும் பொய்

யானால் வினையேன் அழுதால்

உன்னைப் பெறலாமே

தேனே அமுதே கரும்பின்

தெளிவே தித்திக்கும்

மானே அருளாய் அடியேன்

உனைவந்துறுமாறே

 

பொருள்:-

தேனும் அமுதமும் கருப்பஞ்சாறும் போலட் தித்திக்கும் பெருமானே! அடியேன் உன்னை வந்து அடையும் உபாயத்தினை அறிவித்து அருள்வாயாக. யானும், என் நெஞ்சும், அன்பும் பொய். ஆனாலும் வினையேனாகிய யான் அழுதால் உன்னை டையலாமா?

 

இந்தப் பாட்டில் கேள்வி கேட்பது போல உரை எழுதப்படிருந்தாலும், அழுதால் உன்னைப் பெறலாம் என்றே பொருள் கொள்ளவேஎண்டும் ஏனெனில் இரண்டு பாடல்களுக்கு முந்தியுள்ள பாட்டில்

அழுதேன் நின்பால் அன்பாய்

மனமாய் அழல் சேர்ந்த

மெழுகேயன்னார்  – என்ற வரிகளில் தான் தனித்து நின்று அழுவதாய்ப் பாடுகின்றார்.

 

பாரதியாரும் கூறுவார்:-

 

துன்பம் நெருங்கிவந்தபோதும் – நாம்

சோர்ந்து விடலாகாது பாப்பா!

அன்பு மிகுந்த தெய்வம் உண்டு – துன்பம்

அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!

 

திருவிளையாடற் புராணத்தில் 2 கதைகள்

மதுரை மாநகரில் சிவபெருமான் நடத்திய 64 லீலைகளும் பல்வேறு நீதிகளை உணர்த்தும் கதைகளாம்.

 

பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணத்தில் இரண்டு கதைகளில் இறைவனிடம் அழுது மன்றாடியவர்க்கு சிவ பெருமான் உதவிய கதைகள் வருகின்றன. இது போல தேவார மூவர் வாழ்விலும் பாம்புக் கடியினாலும் முதலைத் தாக்குதலினாலும் இறந்த பக்தர்களின் பிள்ளைகளை, அவர்களுடைய பெற்றோரின் அழுகை நீங்க, உயிர்மீட்ட வரலாற்றையும் படிக்கிறோம்.

 

மாமனாக வந்து வழக்குரைத்த படலம்

மதுரையில் வணிக குலத்தில் பிறந்து குபேரன் போலப் பெருஞ் செல்வம் படைத்து வாழ்ந்து வந்தான் தனபதி என்பான். அவன் மனைவி சுசீலை கற்பும் லெட்சுமீகரமும் பொருந்தி வாழ்ந்து வந்தாள். அவர்களுக்கு புத்திர  பாக்கியம் இல்லாததால்  தனபதி, அவருடைய தங்கை மகனை சுவீகார புத்ரனாக ஏற்று வாழ்ந்து வந்தார். நாளடைவில் தனபதிக்கும் அவருடைய தங்கைக்கும் இடையே பிணக்கு வளரவே, ஒரு நாள், பிள்ளைப் பேரற்ற பாவியே! என்னாலன்றோ உனக்கு ஒரு பிள்ளை கிடைத்தது? என்று சுடு சொற்களைப் பெய்துவிட்டாள். இதனால் மனமுடைந்த தனபதி, அடுத்த பிறவியிலாவது தனக்கு மகப்பேறு கிட்டவேண்டும் என்று தவம் செய்யும் நோக்கத்தோடு கானகம் சென்றான். போகும்போது தங்கையின் பிள்ளை பேருக்கே சொத்து சுகங்களை உடமையாக்கிச் சென்றான்.

 

நீண்டகாலத்துக்கு தனபதி திரும்பிவராததை அறிந்த தாயாதிகள் (தூரத்துச் சொந்தங்கள்) தங்கையின் பிள்ளையிடம் இருந்து சொத்துகளை அபகரித்தார்கள். இதனால் வருந்திய மகனும் தாயும் மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சோமசுந்தரப் பெருமானிடம் அழுது புலம்பினர்.  அவள் நித்திரையில் கனவில் வந்த சிவபெருமான், மறு நாள் தாயத்தாரை எல்லாம் வழக்கிற்கு இழுத்து அரண்மனைக்குச் சென்றால் தான் வந்து உதவுதாக சொன்னார்.

மறுநாள் அந்தப் பெண்மணியும் அரசனிடம் சென்று முறையிடவே அரசனும் சேவகர்களை அனுப்பி தாயாதிகளை அழைத்துவரச் செய்தான்.  “திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை” என்பது உண்மையாகிவிட்டது என்று மகிழ்ந்து மறுநாள் அவள் வழக்குரைத் தாள்.

 

அவர்களோவெனில், தனபதி இல்லாத சூழ்நிலையைப் பயன்படுத்தி அந்த சொத்துகள் அனைத்தும் தங்கள் பங்கே என்று வாதிட்டனர். அந்த தருணத்தில் — காதில் விலைமிக்க குண்டலங்களையும், கழுத்திலே ரத்ன கண்டிகையையும், கையில் வைர மோதிரமும் விளங்க தனபதி செட்டியாரைப் போலவே சிவபெருமான் தோன்றினார். தன்னுடைய மருமகனுக்குத் தான் அணிவித்திருந்த ஐம்படை, காற்சிலம்பு, தோளில் மதாணி, காதில் கடுக்கன், நெற்றிச் சுட்டி ஆகியனவற்றைக் காணவில்லையே என்று கதறினார். அவர் தனபதி செட்டியார் அல்ல என்று தாயாதிகள் சொன்ன மாத்திரத்தில், தனபதி செட்டியாரின் வம்சத்தில் உதித்த அத்தனை முன்னோரின் பெயர்களையும் குண நலன்களையும் அவர் எடுத்துரைத்தவுடன் அதுவரை அங்கிருந்த தாயாதிகள் அனைவரும் ஆளுக்கு ஒரு சாக்குச் சொல்லி மறைந்தோடினர். . தனபதி செட்டியாராக வேடமணிந்து வந்த சிவபெருமானும் மறைந்தார். சொத்து சுகம் அனைத்தும் தங்கை மகனுக்கே கிடைத்தன.

 

வன்னியும் கிணறும் லிங்கமும் சாட்சியாக வந்த கதை

 

1400 ஆண்டுகளுக்கு முன் கடற்கரைப் பட்டிணம் ஒன்றில், புத்திர பாக்கியம் இல்லாத ஒரு செட்டியாரும் அவரது மனைவியும் ஒரு பெண்ணை சுவீகாரம் எடுத்து வளர்த்து வந்தனர். அவர்கள் இருவரும் அடுத்தடுத்து  இறந்தனர். அவர்களிடையே நிறைய செல்வம் குவிந்திருந்தது. இறப்பதற்கு முன்னரே அவர் மதுரையிலுள்ள தனது மருமகனுக்குத் தான் இந்தப் பெண் என்று கூறி வந்திருந்தார். அவர் இறந்தவுடன் அருகிலிருந்த உறவினர்கள் மதுரைக்கு ஓலை எழுதி அனுப்பினர். இறந்துபோன தனவந்தரின் விருப்பப்படி, இந்தப் பெண்ணை திருமணம் செய்துகொண்டு சொத்துக்களை ஏற்றுக்கொள் என்று அந்த ஓலையில் எழுதப்பட்டிருந்தது.

 

ஓலை கிடைத்தவுடன் நல்ல நாள் பார்த்து அந்தப் பெண்ணை அழைத்துச் செல்ல அவன் பட்டிணத்துக்கு வந்தான். ஆனால் அவனுக்கு ஏற்கனவே ஒரு கல்யாணம் ஆகி மனைவியும் உயிரோடு இருந்தாள். அப்படியும் பட்டிணத்துக்கு வந்து புதுப் பெண்ணை அழைத்துச் சென்றான். மதுரையை நெருங்குவதற்கு முன்னர், தன்னுடன் வந்திருந்தோரை மதுரைக்கு அனுப்பிவிட்டு  அருகிலுள்ள கிணற்றில் நீராடிவிட்டு  அந்தப் பெண்ணுடன் சமைத்துச் சாப்பிட்டு விட்டு ஒரு வனி மரத்தடியில் படுத்து உறங்கினான். அப்பொழுது அவனை ஒரு விஷ நாகம் தீண்டவே அவன் இறந்துபோனான். அவனுடன் வந்த பெண்ணும் ஊராரும் கூடி அழுதனர். அந்தப் பக்கமாக யாத்திரை மேற்கொண்ட ஞானசம்பந்தப் பெருமான் இந்த அழுகுரலைக் கேட்டு விஷயத்தை அறிந்தார். உடனே அந்த தனவந்தரின் உடலில் இருந்த விஷத்தை இறக்கி அவனை உயிர்ப்பித்தார். அங்கேயே திருமணத்தையும் நடத்திவைத்தார்.

இருவரும் நன்றி கூறி மதுரை சென்றனர்.

 

அந்த இளைஞனின் முதல் மனைவிக்கும் இளையவளுக்கும் நாளடைவில் சக்களத்தி சண்டை வந்தது. மூத்தவள், இளைவளைப் பார்த்து என் புருஷனை ஏமாற்றிய காமக்கிழத்தி நீ, அவனுக்கும் உனக்கும் திருமணமே நடக்கவில்லை என்றாள்.  அவள் கோவென்று கதறி அழுது, தங்களுக்கு முறையான திருமணம் நடந்தது என்றும் சொன்னாள். அதற்கு யார் சாட்சி என்றவுடன், அப்பெண் தாங்கள் திருமணம் செய்துகொண்ட இடத்தில் ஒரு வன்னி மரமும் கிணறும் லிங்கமும் இருந்தது என்று சொல்ல, மூத்தவள் சிரி சிரி என்று சிரித்து உனக்கு சாட்சி சொல்ல அவை வருமா? என்றாள். அந்தப் பெண் கண்கலங்கி சோமசுந்தரப் பெருமான் கோவிலுக்குச் சென்று  நெஞ்சுருகப் பிரார்த்தித்தாள். அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. ஒரு வன்னி மரமும் லிங்கமும் கிணறும் அங்கே தோன்றின. உடனே எல்லோரையும் அழைத்துக் காண்பிக்க அவர்ர்கள் அனைவரும் வியந்து, சிவபெருமானை வணங்கினர். உடனே அவன் மூத்தவளை வீட்டைவிட்டு வெளியேறு என்று சொல்ல இளையவள் மன்றாடி அவளையும் உடனிருக்க  அனுமதிக்கும்படி கெ,,,சினாள். அவனும் மனமிறங்கி சரி என்று சொன்ன பின்னர் இருவரும் சுகமாக வாழ்ந்தார்கள்.

 

(இன்றும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் வன்னிமரம், கிணறு, லிங்கம் சிலைகள் உள்ளன.)

 

நம்பினார் கெடுவதில்லை! இது நான்கு மறைத் தீர்ப்பு — மஹாகவி பாரதியார்.

–Subahm–

 

சிவனுக்குரிய எட்டு பூக்கள்: அப்பர், மாணிக்க வாசகர் தரும் தகவல் (Post no. 3485)

Written by London swaminathan

 

Date: 26 December 2016

 

Time uploaded in London:-  9-19 AM

 

Post No.3485

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

சிவ பூஜையில் பயன்படுத்தும் பூக்களில் நான், செண்பகத்தையும் சேர்த்து ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். ஒருவர், இது தவறு என்று சொல்லுவதாக எனக்கு பிப்ரவரி மாதம் ஈ மெயிலில் எழுதி இருந்தார்.

 

விஷ்ணுவும்  பிரம்மாவும் சிவனின் அடியையும் முடியையும் தேடிச் சென்ற கதையில் பிரம்மாவுக்கு ஆதரவாக பொய்ச் சாட்சி சொன்ன பூக்களில் தாழையும் செண்பகமும் உண்டு என்று வட நாட்டில் கருதப்படுவதால் இந்த நம்பிக்கை வலுத்தது. ஆயினும் தென்னாட்டுப் பாடல்களில் தாழை மட்டுமே இருப்பதாக நான் கருதுகிறேன்

 

நான் எதையும் ஆதாரம் இல்லாமல் எழுதுவதில்லை என்றும் நேரம் கிடைக்கும் போது எந்த இடத்தில் இது உள்ளது என்பதை எழுதுவேன் என்றும் சொன்னேன். இதோ அந்தப் பாட்டு:-

 

 

எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி

மட்டலரிடு வார் வினைமாயுமால்

கட்டித் தேன் கலந்தன்ன கெடில வீ

ரட்டானரடி சேருமவருக்கே

தேவாரம் 5-54-1

 

அப்பர் பாடிய இப்படலுக்கு உரை எழுதிய பெரியோர் எட்டு பூக்களின் பெயர்களைக் கொடுக்கின்றனர். அவை அலரி, பாதிரி, புன்னை, செந்தாமரை, குவளை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவட்டை.

 

நாம் வெளியே பூஜை செய்யும்போது மலர்களைப் பயன்படுத்துகிறோம். ஆத்ம பூஜை செய்கையிலும் இவ்வாறு எட்டு மலர்களைப் பயன்படுத்த வேண்டும் என்கிறார்:–

புகையெட்டும் போக்கெட்டும் புலன்களெட்டும்

பூதங்களவை யெட்டும் பொழில்களெட்டும்

கலையெட்டும் காப்பெட்டும் காட்சியெட்டுங்

கழற் சேவடியடைந்தார் களைகணெட்டும்

நகையெட்டும் நாளெட்டும் நன்மையெட்டும்

நலஞ்சிறந்தார் மனத்தகத்து மலர்களெட்டும்

திகையெட்டும் தரிப்பதற்கு முன்னோ பின்னோ

திருவாரூர்க் கோயிலாக் கொண்ட நாளே

————-ஆறாம் திருமுறை, அப்பர்

 

 

பாடலின் பொருள்  ( நமக்கு வேண்டிய வரிகள் மட்டும் ):-

மனதிலே மலர்கின்ற எட்டு  மலர்கள்:- கொல்லாமை, புலனடக்கம், அமைதி,  அன்பு, தியானம், தவம், சத்தியம், மெய்யறிவு. இவை எட்டும் ஞான மலர்களாம்.

மாணிக்க வாசகரின் திருவாசகத்தில்

பரவுவார் இமையோர்கள்

பாடுவன நால்வேதம்

குரவுவார் குழன்மடவாள்

கூறுடையாள் ஒருபாகம்

விரவுவார் மெய்யன்பின்

அடியார்கள் மேன்மேலுன்

அரவுவார் கழலிணைகள்

காண்பரோ அரியானே

–திருச்சதகம், 17, திருவாசகம்

 

பொருள்: காண்பதற்கு அரியவனே; தேவர்கள் உன் முன்னால் நின்று உன்னை வாழ்த்துவர்; நான்கு வேதங்களும் உன்னைப் பாராட்டுகின்றன. குராமலரை கூந்தலில் அணிந்த உமா தேவியார் உனது உடலில் இடப்பாகத்தை ஏற்றுக்கொண்டார். உண்மை அன்பினுடைய மெய்யடியார்கள் எப்போதும் உன்னுடன் இருக்கின்றனர். ஒலிக்கின்ற வீரக்கழல் அணிந்த உன் திருவடிகள் இரண்டையும் இவர்கள் அனைவரும் காண்பரோ!

 

இதற்கு விரிவுரை எழுதிய தண்டபாணி தேசிகர் அவர்கள், “இறைவன் வழிபாட்டிற்குரிய பூக்களில் குரா, மரா, கொன்றை, பாதிரி, செண்பகம் முதலிய  எல்லாம் உரியவாதலின் குரவுவார் குழல் மடவாள் என்று குறிக்கபெற்றார்- என்று எழுதியுள்ளார்.

 

பழைய சான்றோர்களின் உரைகள்தான் நமக்கு ஆதாரங்கள். இதையொட்டியே நானும் சிவ பெருமானுக்கு செண்பக மலரும் பிடிக்கும் என்று ஓராண்டுக்கு முன் ஒரு கட்டுரையில்  எழுதினேன்.

 

கொன்றைப் பூவின் சிறப்பு

திருவாசகத்தில் ஒரு பாடலில் சிவனைப் போற்றும் வரிகளில் தேனேயும் மலர்க் கொன்றைச் சிவனே எம்பெருமானே – என்று பாடியுள்ளார். இதில் சிவனுக்கு கொன்றைப்  பூவைப் பயன்படுத்துவது ஏன் என்று உரைகாரர் எழுதுவர்:-

கொன்றை இறைவனுக்கு அடயாளப் பூ; இதன் கேசரங்கள் பிரணவ வடிவமாக இருப்பதாலும் (பிரணவம் = ஓம்காரம்) பூ பொன்னிறமாய் இறைவன்  மேனியை ஒத்திருத்தலாலும்  இறைவனுக்கு அது  உககந்ததாயிற்று.

 

–Subham–

5 ஜோதிகளும், 4 விளக்குகளும்: திருமூலர், அப்பர் தரும் அரிய தகவல் (Post No.3482)

Written by London swaminathan

 

Date: 25 December 2016

 

Time uploaded in London:-  8-09 AM

 

Post No.3482

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

 

உலகிலேயே மிகப் பழைய நூலான ரிக்வேதம் முதல் முதலில் கடவுளை ஜோதி வடிவில் கும்பிட எல்லோருக்கும் காயத்ரீ மந்திரத்தைச் சொல்லித் தந்தது.

 

ஓம் பூர் புவஸ்ஸுவஹ, தத்சவிதுர் வரேண்யம்

பர்கோ தேவஸ்ய தீமஹீ

தியோ யோநஹ பிரசோதயாத்

–என்ற இந்த மந்திரத்தை எல்லோரும் அறிந்து பயன் பெறுவதற்காக மஹாகவி பாரதியார்

செங்கதிர்த் தேவன் ஒளியினைத் தேர்ந்து தெளிகின்றோம் அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக

—-என்று அழகிய தமிழில் மொழிபெயர்த்து அருளினார்.

 

ரிக்வேதத்துக்குப் பின்னர் வந்த பிருஹத் ஆரண்யக (பெருங்காட்டு) உபநிஷத்தில் தமஸோ மா ஜ்யோதிர் கமய (இருளிலிருந்து என்னை ஒளிக்கு அழைத்துச் செல்வாய்) என்ற மந்திரத்திலும் ஒளி இடம் பெற்றது.

அருணகிரிநாதரோ திருப்புகழில் தீப மங்கள ஜோதீ நமோ நம என்று பாடினார். அவருக்குப் பின்னர் வந்த அருட்பிரகாச வள்ளலாரோ அருட் பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை என்று பாடினார்.

 

அருணகிரிக்கும் வள்ளலாருக்கும் முன்னால் வாழ்ந்த திருமூலர் ஐந்து ஜோதிகள் பற்றிப் பாடினார். திருமூலருக்கும் முன்னால் வாழ்ந்த அப்பரோ நான்கு விளக்குகள் பற்றிப் பாடினார்.

 

இந்த ஐந்து ஜோதி (ஒளி), நான்கு விளக்குகள் பற்றிப் புரிந்துகொள்ள பாரதியாரின்  சில வரிகள் உதவும்:-

 

உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்

பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடர் எல்லாம் விழிபெற்றுப் பதவி கொள்வார்  – என்று பாரதி பாடினார்.

 

நமக்குத் தெரிந்த ஒளி எல்லாம் விளக்கின் மூலம் வரும் ஒளிதான். ஆனால் ஞானிகளுக்கும் கவிஞர்களுக்கும் மனத்தின் ஒளி (உள்ளத்தில் ஒளி), அறிவு ஒளி (ஞானதீபம்) முதலியனவும் தெரியும்.

 

எப்படி சூரியன் சந்திரன் அக்னி (நெருப்பு) ஆகிய மூன்றும் ஒளியை உண்டாக்கி இருளகற்றுகின்றனவோ அதே போல ஞான ஒளி அறியாமை என்னும் இருளை அகற்றும்.  நம்மைப் போன்ற ‘கண்ணிருந்தும் குருடராய்’ வாழ்வோரை வாக்கினிலேயுள்ள ஒளி மூலம் பெரியோர்கள் கரை ஏற்றுவர். பாரதியார் சொன்னதைப் போலவே அவருக்கும் 1300 ஆண்டுகளுக்கு முன்னரே தேவார மூவரும் திருவாசகப் பெரியாரும், திருமூலரும் பாடி வைத்தனர்.

 

 

சோதி=  ஜோதி= ஒளி = விளக்கு

 

அப்பர் காட்டும் 4 விளக்கு

 

இல்லக விளக்கது விருள்கெ டுப்பது

சொல்லக விளக்கது சோதி யுள்ளது

பல்லக விளக்கது பலருங் காண்பது

நல்லக விளக்கது நமச்சி வாயவே.

அப்பர் தேவாரம் 4-11-8

 

 

பொருள்

 

1.இல்லத்தினுள் உள்ள விளக்கானது இருளை கெடுப்பது. அதாவது ஒளி தருவது;

 

  1. சொல்லினுள் உள்ள விளக்கானது ஜோதி வடிவில் உள்ளது;

3.பலருடைய மனதில் உள்ள விளக்கு அது எல்லோரும் காண்பது.

 

4.நல்லவர்களின் மனதில் உள்ள விளக்கு நமச்சிவாய” என்ற மந்திரம்

 

நமச்சிவாய என்னும் விளக்கு அறியாமை எனும் இருளை அகற்றும்; சிவஜோதியில் கலக்க உதவும்.

 

 

திருமூலர் சொல்லும் 5 ஜோதி

அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன்

பிண்ட ஒளியுடன் பிதற்றும் பெருமையை

உண்டவெளிக்குள் ஒளிக்குள் ஒளித்தது

கொண்டகுறியைக் குலைத்ததுதானே

–திருமூலரின் திருமந்திரம் 1975

 

பொருள்:-

மானிடர் உடம்பைச் சூழ்ந்துள்ள அண்ட ஒளியானது, உலகில் வானமண்டலத்தில் விளங்கும் ஒளியுடன்  — உடலிலுள்ள உட்கருவிகளின்  அறிவால் பிதற்றும்  வீணான பெருமையை விழுங்கி —  உடல் கடந்துள்ள ஆகாய வெளியில் திகழும்  ஒளியினுள்ளே மறைந்தது. அதனால் உடலின் அமைப்புகள் காணாமல் போகும்; உடலும் ஒளியாய்த் திகழும்.

 

ஐந்து வகை ஜோதிகள்:-

 

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்

சோதியை யாம்பாடக் கேட்டேயும் — என்ற மாணிக்க வாசகரின் (திருவாசக/திருவெம்பாவை) பாடலுக்கு உரை எழுதிய திரு தண்டபாணி தேசிகர் மேற்கூறிய திருமந்திரப் பாடலை மேற்கோள் காட்டிப் பின் வருமாறு எழுதுகிறார்:-

 

“சோதியுள் அண்ட ஜோதி, பிண்ட ஜோதி, மன ஜோதி, ஞான ஜோதி, சிவ ஜோதி என ஐந்து என்பார் திருமூலர். அவற்றுள் அண்ட ஒளி ஒவ்வோர் அண்டங்களிலும் உள்ள சூரியன் சந்திரன் அங்கி (தீ), விண்மீன் முதலியன (திருமந்திரம் 1975).

பிண்ட ஒளி உடம்போடு கூடிய உயிர் அறிவின் கண்ணதாய் —  மல நாசம் விளைக்க உபாயமாகும் பசுஞான ஒளி (பாடல் 1985);

உயிரைச் சூரியன், சந்திரன், அனல், கலையாகிய நான்குமாக அறிதல் மனவொளி (பாடல் 1990);

ஞான ஒளி பர நாதத்தின் செயலாய்  வைகரியாதி வாக்குகள் உதயமானதற்கு இடமாய் இருப்பது.

 

Kartikai Deepa on top of Tiruvannamalai

சிவ ஒளி :-

முற்கூறிய நான்கு ஒளிகளும் சிவ ஒளியின் முன், இருள் போல அகன்றொழியும் —  குடங்கள் தோறும் (அதிலுள்ள நீரில்) சூரிய ஒளி தோன்றினும், அந்தக் குடங்களின் வாயை மூடச் சூரிய ஒளி அந்தக் குடங்களில் மட்டும் அடங்கியதாகச் சொல்ல முடியாததுபோல எல்லா உயிர்களிடத்தும் விளங்குவதாயிருப்பது அகண்ட ஒளி எனப்படும்.

 

இம்மந்திரத்தினுள்ளும் அண்ட ஒளி, பிண்ட ஒளி, பிதற்றும் பெருமையை உண்ட வெளியாகிய மனத்துள் விளங்கும் ஒளியாம் மனவொளி, அவ்வொளிக்குள் ஒளியாகிய ஞான ஒளி, அகண்ட ஒளி என்று ஐந்து கூறுதல் காண்க. இவ்வண்ணம் இறைவன் நால்வகை ஒளியினும் சிறந்து, பெரிய ஒளியாகிய சிவஞானமாகிய முதற்படியில் நின்றாரும் அரிதற்கரிதாய் இருத்தலின் அரும்பெருஞ் சோதியை  என்றார் மாணிக்கவாசகர்.

 

திருவெம்பாவை இயற்றப்பட்ட இடம் திருவண்ணாமலையாதலின் திருமாலும் பிரமனும் அடியையும் முடியையும் தேடி அறிய முடியாத ஒளிப் பிழம்பாக நின்றார் இறைவன் என்னும் தல புராண வரலாற்றை அடக்கிக் கூறியதாக உரைத்தலுமாம்” — என்பது தண்ட பாணி தேசிகரின் உரை.

பாரதியாரும் சோதிமிக்க நவகவிதை என்று பாடுவதைக் காண்க.

 

–சுபம்-

 

 

மாணிக்கவாசகரின் உண்மைப் பெயர் என்ன? (Post No. 3475)

Written by London swaminathan

 

Date: 23 December 2016

 

Time uploaded in London:- 8-27 AM

 

Post No.3475

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

மாணிக்கவாசகர் வாழ்க்கை வரலாற்றில் எல்லாம் ஒரே மர்மம்தான். அவர் வாழ்ந்த காலம் என்ன? ஒரே புதிர்! இருந்தபோதிலும் அப்பர் நரி-பரி ஆன லீலையைக் குறிப்பிடுவதால் சம்பந்தருக்கும் அப்பருக்கும் முன்னர் வாழ்ந்தவர் என்று தெரிகிறது. (நான் சில ஆண்டுகளுக்கு முன் இதே பிளாக்கில் எழுதிய எனது ஆய்வுக் கட்டுரையில் மேலும் பல சான்றுகளைக் கொடுத்துள்ளேன்).

 

 

அது சரி! அப்படியானால் இவர் ஏன் அப்பரையும் சம்பந்தரையும் குறிப்பிடவில்லை. அவர்கள் ஏன் இவர் பெயரைச் சொல்லவில்லை? ஒரே மர்மம்

 

அது போகட்டும்? இவரை 63 நாயன்மார்களில் சேர்க்காதது ஏன்? ஒரே புதிர்! திருத் தொண்டத்தொகையிலும் பாடவில்லை ( ஆனால் நான் இவர் பெயர் சத்ய வாகீஸ்வரர் என்று கண்டுபிடித்துள்ளேன்; அதை பொய்யடிமை இலாத புலவர் என்று திருத்தொண்டத் தொகையும் குறிப்பிடும்)

 

எனினும் எல்லோரும் அவர் பெயரை எங்குமே சொல்லாமல் திருவாதவூரர் என்றும் இறைவன் கொடுத்த மாணிக்க வாசகர் என்ற பெயரையுமே பயன்படுத்துகின்றனர். அப்பா, அம்மா வைத்த பெயர் என்ன என்பது எழுத்தில் எங்ஙனும் இல்லை. மதுரைக்குப் பக்கத்தில் இருக்கும் திருவாதவூரில் பிறந்ததால் ஊர்ப்பெயரே இவருக்குச் சூட்டப்பட்டது.

 

 

சரி, பெயர்தான் தெரியவில்லை. சத்யவாகீஸ்வரன் என்பதெல்லாம் ஊகமே. கடவுள் ஏன் இவரை “மாணிக்க வாசக” என்று அழைத்தார்?

 

இவர் பாடிய 656 பாடல்களில், 3000 வரிகளுக்கு மேலுள்ள திருவாசகத்தில் அருமையான சொற்பிரயோகம் இருப்பதை தமிழ் ஆர்வலர் எல்லோரும் ரசிப்பர். ஒரு சில சொற்களை மட்டும் காண்போம்.

 

இரும்பின் பாவை

நம் எல்லோருக்கும் மரப்பாவை (மரப்பாச்சி), மண் பொம்மைகள் (சுதை) தெரியும். பார்த்து இருக்கிறோம். பஞ்சலோக விக்ரஹம் எனப்படும் ஐம்பொன் சிலைகளும் தெரியும். பாவை விளக்கு போன்ற பித்தளை பொம்மைகளையும் பார்த்து இருக்கிறோம். இவரோ தன்னை “இரும்பின் பாவை” என்று சொல்லுகிறார். யாருக்கும் இல்லாத ஒரு கற்பனை! இதற்கு உரை எழுதிய ஆன்றோர், இறைவன் காந்தம் என்றும் அவரால் இவர் கவர்ந்திழுக்கப்பட்டதால் இரும்பின் பாவை என்றும் சொல்லுகிறார் என்பர். மிகப் பெருத்தமகவே தோன்றுகிறது. ஏனெனில் இரும்பு-காந்த உவமையை காளிதாசன், திருமூலர், ஆதிசங்கரர் போன்ற பலரும் பயனன்படுத்தியுள்ளனர்.

 

 

வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று

போதுநான் வினைக்கேடன் என்பாய் போல

இனையனானென்றுன்னை யறிவித்தென்னை

ஆட்கொண்டெம்பிரானாய் இரும்பின் பாவை

அனைய நான் பாடேனின் றாடே நந்தோ

அலறிடேன், உலறிடேன் ஆவி சோரேன்

முனைவனே முறையோ நானானவாறு

முடிவறியேன் முதல் அந்தம் ஆயினானே

 

பொருள்:

கடவுளே! தோற்றம், இறுதிக்குக் காரணமானவனே! இருவினைக் குவியலில் கிடந்து வருந்தும் என்னை வலிய ஆட்கொண்டு, ” வா, உன் வினைகளை ஒழிப்பேன் என்று கூறுவது போல சொல்லி என்னை அடிமையாக ஏற்றாய்.  நானோ இரும்பின் பாவை போல இருக்கிறேன். உன்னைப் பாடவில்லை; ஆடவில்லை; வாய் உலரவில்லை;  உயிர் மயங்கவில்லை. நான் இப்படி இருப்பது முறையா? இதன் முடிவை அடியேன் அறிகின்றேன். இல்லை

 

பொல்லாமணி

புகவேதகேன் உனக்கன்பருள்

யானென் பொல்லா மணியே

தவே யெனை யுனக் காட்கொண்ட

தன்மையெப்புன்மையரை

மிகவேயுயர்த்திவிண் நோரைப்

பணித்தியண்ணாவமுதே

நகவேதகும் எம்பிரான் என்னை

நீ செய்த நாடகமே

–திருச்சதகம் பாடல் 10, திருவாசகம்

பொருள்:

என் முழு மாணிக்கமே! யான் உன் அடியார் கூட்டத்தில் புகவே தகுதி இல்லாதவன். அங்கனம் இருந்தும் என்னை ஏற்றுக் கொண்டாய்? இது உனக்கு பெருமை தருமா? எவ்வளவு இழிந்தவரானாலும் அவர்களை  மிகவும் உயரச் செய்கிறாய். உயர்ந்த தேவர்களைத் தாழ்த்துகிறாய். தந்தையே! அமுதமே! எம்பிரானே! நீ செய்த நாடகம் தான் என்ன? இது நகைப்புக்கு இடம் தருகிறதே!

 

இதில் பொல்லாமணி என்ற சொல் மிகவும் முக்கியமானது. பொள்ளல் என்றால் துளைபோடுதல் என்று பெயர். முத்து, பவளம் போன்ற நவரத்னங்களை மாலையாகக் கட்டுகையில் அதில் துளைபோட்டுக் கோர்க்கமுடியும். ஆனால் வைரம், மாணிக்கம், மரகதம் போன்ற உயர்ந்த ரத்னக் கற்களைத் துளையிட முடியாது; அதாவது பொள்ள முடியாது. ஆகையால் இறைவா நீ ஒரு முழு மாணிக்கம். (இதைத் தங்கத்துக்கிடையே வைத்துதான் மாலை கட்டலாமே தவிர ஓட்டை போட முடியாது. ஆகையால் பொல்லா மணியே என்றழைக்கிறார்.)

 

நான்கு முறை ஓம்காரம்!

 

போற்றியோ நமச்சிவாய

புயங்கனே மயங்குகின்றேன்

போற்றியோ நமச்சிவாய

புகலிடம் பிறிதொன்றில்லை

போற்றியோ நமச்சிவாய

புறமெனப் போக்கல் கண்டாய்

போற்றியோ நமச்சிவாய

சயசய போற்றி போற்றி

—–திருச்சதகம் பாடல் 64, திருவாசகம்

 

பொருள்:-

ஓம் நமச்சிவாய போற்றி. பாம்பை அணிந்தவனே மயங்குகின்றேன். ஓம் நமச்சிவாய போற்றி. அடைக்கலம் புகுவதற்கு வேறு வழியொன்றும் இல்லை. ஓம் நமச்சிவாய போற்றி. அடியேனைப் புறத்தே தள்ளிவிடாதே; ஓம் நமச்சிவாய போற்றி. ஜய ஜய போற்றி

 

இதில் ஓம் நமச்சிவாய என்ற பிரணவ பஞ்சாக்ஷரம் நான்கு முறை வந்திருத்தல் காண்க.

 

வேதங்களைப் போலவே ஓம்காரத்துடன் துவங்கி அதிலேயே முடிக்க வேண்டும் என்று கருதி திருவாசகத்தில் முதல்பாட்டையும் (சிவ புராணம்), கடைசி பாட்டையும் (அச்சோ பதிகம்) ஓம்காரத்துடன் அமை த்துள்ளார் என்பதை முன்னரே ஓம்காரம் பற்றிய கட்டுரையில் கொடுத்துள்ளேன்.

 

இது போல இன்னும் நிறைய சொற்கள் உள்ளன. நேரம் கிடைத்தபோது பகிர்வேன்.

 

–சுபம்—

நமசிவாய படகில் போகலாம்– மாணிக்கவாசகர் (Post No. 3473)

Written by London swaminathan

 

Date: 22 December 2016

 

Time uploaded in London:- 10-26 AM

 

Post No.3473

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

பிறப்பு-இறப்பு என்னும் பெருங்கடலில் இருந்து தப்பிக்க என்ன வழி என்று அப்பரும், மாணிக்க வாசகரும் சொல்லும் வழிகள் இலக்கிய நயம் படைத்த பாடல்கள் ஆகும். முதலில் மாணிக்க வாசகர், திருவாசகத்தில் கூறியதைப் பார்ப்போம்:-

 

தனியனேன் பெரும்பிறவிப் பௌவத் தெவ்வத்

தடத்திரையா லெற்றுண்டு பற்றொன்றிக்

கனியை நேர் துவர் வாயாரென்னும் காலால்

கலக்குண்டு காமவாள் சுறவின் வாய்ப்பட்

டினி யென்னே யுய்யுமாறென்றென்றெண்ணி

அஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின்றேனை

முனைவனே முதலந்தமில்லா மல்லற்

கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே (27)

திருவாசகம் திருச்சதகம்

 

 

பொருள்:

கடவுளே! நான் பிறவிப் பெருங்கடலில் (ஒப்பிடுக- குறள் “பிறவிப் பெருங்கடல் நீந்துவார்…..) விழுந்தேன்; துன்பங்கள் என்ற அலைகள் என்னை ஆட்டிப் படைக்கின்றன; கொவ்வைக்கனி போல சிவந்த வாயுடைய பெண்கள் என்ற புயற்காற்றும், காமம் என்னும் சுறாமீன்களும் (ஒப்பிடுக-ஆதிசங்கரரின் விவேக சூடாமணி ஸ்லோகம்  79, 141) என்னைப் பிடித்துவிட்டன. என்ன செய்வதென்று திகைத்தபோது ஐந்தெழுத்து என்னும் படகு கிடைத்தது. அதைப் பற்றிக்கொண்டு விட்டேன்; நீ என்னைக் காத்தருள்வாயாக.

பிறவிப் பெருங்கடல் என்பது கீதை முதலிய சம்ஸ்கிருத நூல்களில் காணப்படும் சம்சார சாகரம் என்பதன் தமிழ் வடிவமாகும்.

 

பக்தர்கள் இரண்டு வகை. பூனைக்குட்டி, குரங்குக் குட்டி போல இரண்டு வகையினர். ஆனால் மாணிக்க வாசகரும் அப்பரும் அதற்குப் பதிலாக ஏணியையும் தோணியையும் (படகு, தெப்பம்) பயன்படுத்துகின்றனர். ஐந்தெழுத்து என்பது நமசிவாய என்னும் அரிய பெரிய மந்திரம். யஜூர்வேதத்தில் ருத்ரம் என்னும் பகுதியில் அமைந்த மந்திரம் ஆகும்.

 

மற்கட நியாயம், மார்ஜர நியாயம்

இதை பல தருணங்களில் பல விஷயங்களை விளக்கப் பயன்படுத்தலாம். இருந்த போதிலும் பக்தர்களின் வகைகள் எத்தனை என்று விளக்க இதைப் பெரும்பாலும் பயன்படுத்துவர்.

பக்தி இலக்கியத்தைப் படைத்தவர்கள் பொதுவாக பக்தர்களை இரண்டு வகையாகப் பிரித்து இருக்கின்றனர். குரங்கு போன்ற பக்தர்கள், பூனை போன்ற பக்தர்கள் என்று.

குரங்குகள் என்ன செய்யும்? மரத்தை விட்டு மரத்துக்கு தாவிக் கொண்டே இருக்கும். அதனுடைய குட்டியும் கூடவே செல்ல வேண்டும்.. இதற்கு என்ன வழி? குரங்குக் குட்டி தனது தாயை இறுகக் கட்டிப் பிடித்துக் கொள்ளும். எத்தனை உயரத்தில் இருந்து குரங்குகள் கீழே குதித்தாலும், மேலே தாவினாலும் மிக மிக அபூர்வமாகவே குட்டி கீழே விழும். ஆக பக்தர்களில் குரங்கு போன்ற பக்தர்கள் தாமாகவே சென்று இறைவனைப் பிடித்துக் கொள்வார்கள். தமிழில் ‘குரங்குப் பிடி’ என்ற சொற்றொடரே இருக்கிறது.

 
மாணிக்கவாசகர் போன்ற அடியார்கள், “சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே” என்று பாடுவர்.

பூனைகள் என்ன செய்யும். குட்டி போட்ட பின்னர், தாய்ப் பூனை இடம் விட்டு இடம் போனால் குட்டியை தானே வாயில் கவ்விக் கொண்டு போகும். குட்டிகளோ வெறும் ஜடம் போல சும்மா இருக்கும். அதாவது எல்லாப் பொறுப்புகளையும் அம்மாவிடம் விட்டுவிட்டு அம்மாவே பார்த்துக்கொள்ளட்டும் என்று குட்டிப் பூனை பேசாமல் இருந்துவிடும். இது மற்றொரு வகை பக்தர்களுக்கு எடுத்துக்காட்டு.

சுருக்கமாக, நாமே சென்று கடவுளைச் சிக்கெனப் பிடித்தால் நாம் குரங்கு போன்ற பக்தர்கள். எதையுமே கேட்பதில்லை. கடவுள் விட்ட வழி என்று அவனைச் சரண் அடைந்து இருப்பவர்கள் பூனை போன்ற பக்தர்கள்.

இதே மற்கட, மார்ஜர நியாயத்தை அப்பர் பெருமான் தனக்கே உரிய பாணியில் வழங்குகிறார். அவர் பக்தர்களை 1.ஏணி வகை, 2.தோணி வகை என்று இரண்டாகப் பிரிக்கிறார்.

 

ஏணி என்ன செய்யும்? தாமாக மேலே ஏற முயன்றவர்களை மேலே ஏற்றிச் செல்லும். நாம் தான் ஜாக்கிரதையாகப் பிடித்துக் கொள்ளவேண்டும். இது மற்கட நியாயத்துக்கு சமம். எப்படிக் குரங்குக் குட்டிகள் தாயை இறுகப் பற்றியதோ அப்படி நாமும் ஏணியைப் பிடிக்கவேண்டும். இது ஏணி நியாயம்.

தோணி (படகு) வகைப் பக்தர்கள் எப்படிப்பட்டவர்கள்? படகில் ஏறிவிட்டால், படகோட்டியே நம்மை அக்கரைக்குக் கொண்டு செல்லுவான். அதற்குப் பின்னர் நம் வேலை எதுவும் இல்லை. இது பூனை வகை பக்தர்களுக்குச் சமம். இறைவனைச் சரணடைந்துவிட்டு ஆண்டவனே நீயே என்னை அக்கரைக்கு கொண்டு செல் என்று அவன் கையில் பொறுப்பை ஒப்படைத்து விடும் பக்தர்கள் இந்த வகையில் வருவர். இது தோணி நியாயம்.

இதோ பாருங்கள், அப்பர் பெருமானின் ஆறாம் திருமுறை தேவாரப் பாடலை:–
பேணிய நல் பிறை தவழ் செஞ்சடையினானை
பித்தர் தம் அடியார்க்கு முத்தி காட்டும்
ஏணியை, இடர்க்கடலுள் சுழிக்கப்பட்டு இங்கு,
இளைகின்றேற்கு அக்கரைக்கே ஏற வாங்கும்
தோணியை, தொண்டனேன் தூய சோதிச்
சுலா வெண்குழையானை, சுடர் பொன்காசின்
ஆணியை, — ஆவடுதண்துறையுள் மேய
அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்தேனே (6—461)

 

பொருள்: பிறை சூடிய பெருமான் (சிவன்), அவனுடைய பக்தர்களை முக்தி பெற அழைத்துச் செல்லும் ஏணி ஆவான். பிறவிக் கடல் என்னும் துன்பக் கடலில் சிக்கித் தவிக்கும் என்னை அக்கரைக்கு , அதாவது, முக்திக்கு அழைத்துச் செல்லும் தோணி போன்றவன் அவன். காதில் ஆடும் அழகான வெள்ளை நிறக் குழை அணிந்தவன். பொற்காசை உரைத்து பார்க்கும் கட்டளைக்கல் போன்றவன். குளிர்ந்த ஆவடுதுறையில் வசிக்கும் அவனைக் கடையனுக்கும் கடையேனாகிய நான் அடைந்து உய்வுபெற்று விட்டேன்.

 

இவ்வாறு திருக்குறள், விவேக சூடாமணி, தேவாரம், திருவாசகம் ஆகிய பல நூல்களில் ஒரே கருத்து நிலவுவது பாரதீய அணுகுமுறை ஒன்றே என்பதை எடுத்துக்காட்டும்.

 

–Subahm–

 

 

2 கதைகள்: ‘வேண்ட முழுதும் தருவோய் நீ’ (Post No.3467)

Written by London swaminathan

 

Date: 20 December 2016

 

Time uploaded in London:- 10-20 am

 

Post No.3467

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

எனது சொற்பொழிவின் இரண்டாம் பகுதி இது.

 

 

லண்டன் உயர்வாசற் குன்று முருகன் கோவிலின் (LONDON HIGH GATE MURUGAN TEMPLE) திருவாசக விழாவில் பேசுவதற்கு என்னை அழைத்திருந்தார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை 18-12-2016 அந்த விழா நடந்தது. பலர் சொற்பொழிவாற்றினர். மாணவ மாணவியர் தேவார திருவாசக இன்னிசை விருந்து அளிததனர்.

 

“நீண்ட நாள் வாழ ஒரு யோஜனை”– என்ற தலைப்பில் நேற்று முதல் பகுதியை வெளி யிட்டேன்.

 

என்னுடைய சிற்றுரையின் சுருக்கம் இதோ.

 

முதல் கதை

 

 

திருவாசகத்தை நமக்கு அருளிய மாணிக்க வாசகர் பாடுகிறார்:-

 

 

வேண்டத்தக்கது அறிவோய் நீ

வேண்ட முழுதும் தருவோய் நீ

வேண்டும் அயன்மாற்கு அரியாய் நீ

வேண்டி என்னைப் பணிகொண்டாய்

வேண்டி நீயா தருள் செய்தாய்

யானும் அதுவே வேண்டின் அல்லால்

வேண்டும் பரிசு ஒன்று உண்டென்னில்

அதுவும் உன்றன் விருப்பன்றே

–குழைத்தபத்து, திருவாசகம்

 

பொருள்:-

எனக்கு வேண்டிய எல்லாவற்றையும் நீயே அறிவாய். நான் எதைக் கேட்டாலும் அருளும் கருணை வள்ளல் நீ. உன்னிடம் பல பொருள்களை வேண்டும் திருமாலுக்கும், பிரம்மாவுக்கும் அரியவன் நீ;  எனக்கு வேண்டியவற்றை கொடுத்து , நீயே என்னை ஏற்று அருளும் செய்தாய்; நானும் அதைத்தான் விரும்பினேன். இப்போது நான் வேண்டுவது ஏதாவது இருக்குமானால், அதுவும் உன்னுடைய விருப்பமே.

 

திருவாசகத்திலுள்ள 656 பாடல்களுக்கும் ஒரு கதை சொல்லி விளக்கமுடியும். சொல்லப்போனால் சிவபுராணம், கீர்த்தித் திரு அகவல் போன்ற நீண்ட பாடல்களுக்கு  ஒவ்வொரு மூன்று வரிகளுக்கும் ஒரு கதை சொல்லலாம். எனக்குள்ள சிறிது நேரத்தில் வேண்டியது முழுதும் அருள்வோய் நீ — என்ற வரிக்கு ராமகிருஷ் ண பரமஹம்சர் சொன்ன கதையை சொல்லுகிறேன்:

ஒரு வழிப்போக்கன் நீண்ட நெடுந்தூரம் பயணம் செய்து களைத்துப் போனான். ஒரு மரத்தின் நிழலில் படுத்துக் கொண்டு சிந்திக்கத் துவங்கினான். அடடா! இங்கு மட்டும் ஒரு மெத்தை இருந்தால் எவ்வளவு சுகமாக இருக்கும் என்று நினைத்தான். அடுத்த கணத்தில் அவன் உடல் மெத்தை மீது இருந்தது. அவனுக்கு ஒரே ஆச்சரியம்; சிறிது நேரம் அதில் விழுந்து புரண்டு ஆனந்தித்தான். அடடா! இபோது மட்டும் என் உடல் வலி தீர ஐந்தாறு அழகான பெண்கள் வந்து என் கால்களைப் பிடித்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணினான்.

என்ன அதிசயம்! அடுத்த நொடியில் அங்கே சில அழகிகள் வந்து அவனுக்கு ‘மஸாஜ்’ செய்யத் துவங்கினர். சிறிது நேரம் ஆனபின்னர் பசி, வயிற்றைக் கிள்ளியது. நல்ல அறுசுவை உண்டி கிடைத்தால் சுகமாக இருக்குமே என்று நினத்ததுதான் தாமதம்! ஆவி பறக்க அறுசுவை உண்டி கிடைத்தது. எல்லா தேவைகளும் கிடைத்துவிட்டால் தேவையற்ற பயம் வந்துவிடும்.

 

பாருங்கள் நாம் கூட நிறைய பணம் சேர்ந்தால் அதைப் பாதுகாத்து வைப்பது பற்றிக் கவலைப் படுகிறோம். லாக்கரில் கொண்டு நகைகளைப் பாதுகாப்பாக வைப்பதற்குப் பயம். அதை யாராவது வழிப்பறி செய்துவிடுவானோ என்று நகைகளை எடுக்கும் போது பயம். வீட்டில் அரிசிப் பானைக்குள் நகைகளை வைத்தால் Metal Detector மெடல் டிடெக்டர் வைத்து எடுத் துக்கொண்டு போய்விடுவானோ என்று பயம்! இது போலவே அந்த வழிப்போக்கனுக்கும் வேண்டாத ஒரு பயம் வந்தது அடடா! நம் நடுக்காட்டில் அல்லவா மரத்துக்கு அடியில் படுத் துக் கொண்டிருக்கிறோம் இப்போது ஒரு புலி வந்து நம்மை அடித்துக் கொன்றுவிட்டால் நான் என்ன செய்வது என்று நினைத்தான். அடுத்த வினாடி, புலி தோன்றி அவனைக் கடித்துக் குதறி கொன்றுவிட்டது.

இந்தக் கதையை சொன்ன ராமகிருஷண பரமஹம்சர் நம்மை எச்சரிக்கிறார்:- இறைவன் கருணைக்கடல்; கற்பக விருட்சம்; கேட்டதை எல்லாம் கொடுத்துவிடுவான்; நாம்தான் கேட்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

அன்பர்களே!

பாருங்கள், மாணிக்கவாசகரும் இதைத்தான் மேற்கூறிய பாட்டில் எதிரொலிக்கிறார். நாம் கடவுளை வேண்டும் போது எனக்கு நல்லன எல்லாவற்றையும் கொடு என்று வேண்டினால் போதும்.

 

இரண்டாம் கதை

 

நாடகத்தால் உன்னடியார்

போல் நடித்து நான் நடுவே

வீடகத்தே புகுந்திடுவான்

மிகப் பெரிதும் விரைகின்றேன்

ஆடகச் சீர் மணிக்குன்றே

இடையறா அன்புனக்கென்

ஊடகத்தே நின்றுருகத்

தந்தருளும் எம்முடையானே

திருச்சதகம் 11

பொருள்:-

தங்கத்துக்கு நடுவே எழுந்த மாணிக்க மலையே! எம்மை ஆட்கொண்ட இறைவா! உன்னுடைய அடியார்களைப் போலவே நடிக்கிறேன். அவர்களிடையே இருந்து மோட்ச உலகத்துக்குச் செல்ல விழைகின்றேன். நான் உன் அடிமை என்பதால், நீங்காத அன்பு அகலாதபடி எனக்கு அருள்புரி.

 

நாடகத்தால் நடித்து — என்ற வரியைப் பார்த்டவுடன் ராமகிருஷ்ணர் சொன்ன இன்னும் ஒரு கதை நினைவுக் கு வருகிறது.

 

நாடகத்தில் நடிப்பதுபோல நடித்தாலும் கூட இறைவன் அருள்புரிந்த கதை இதோ: ஒரு திருடன் ஒருநாள், ராஜாவின் அரண்மனைக்குள் புகுந்து திருடுவதற்காக ஒளிந்திருந்தான். அப்போது மன்னன், தன்னுடைய மகளின் கல்யாணம் பற்றி மந்திரியுடன் விவாதித்துக் கொண்டிருந்தான். தன்னுடைய மகளுக்கு நல்ல ஆன்மீக நாட்டம் கொண்ட ஒருவனையே மணம் முடிக்க விரும்புவதாகவும் மந்திரி, ஒரு நல்ல மாப்பிள்ளையை கண்டுபிடித்துவர வேண்டும் என்றும் சொன்னான்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த திருடனுக்கு ஒரு யோஜனை மின்னல் போலப் பளிச்சிட்டது. நாம் ஏன் இங்கே திருட வேண்டும்? அகப்பட்டுவிடால் தலை போய்விடும். இதற்குப் பதிலாக நாம் ஒரு சந்யாசி போல நடிதால், ஒரு வேளை மன்னன் மகள் தன்னைக் கல்யாணம் செய்துவிடால் முழு ராஜ்யத்தையுமே அமுக்கிவிடலாமே என்று எண்ணி, சந்யாசி வேடம் போட்டுக் கொண்டு ஊருக்கு வெளியே சந்யாசிகள் எல்லாம் தங்கி இருக்கும் மடத்துக்குப் போனான்.

 

இதற்கிடையில்  மந்திரிக்கும் கவலை; மன்னன் கட்டளை ஆயிற்றே. மாப்பிள்ளைக் கிடைக்காவிடில் தன் தலை போய்விடுமே என்று மறு நாள் ஊருக்கு வெளியே மரத்தடியில் வசிக்கும் சந்யாசிகளிடையே போனான்

 

ஒவ்வொரு சந்யாசியையும் மந்திரி கேட்ட போது அவர்கள் எல்லாம் திருமணத்துக்கு சம்மதம் தரவில்லை. புதிய சந்யாசியாக வந்த திருடன் மட்டும் முதலில் ஒப்புக்கொண்டான். அவனுக்கு உடனே கிடைத்த ராஜ உபசாரத்தைப் பார்த்தவுடன் அவன் எண்ணினான்: சந்யாசியாக வேடம் போட்டதுக்கே இவ்வளவு மதிப்பு என்றால், உண்மையான சந்யாசியானால் எவ்வளவு மதிப்பும் சுகமும் கிடைக்கும் என்று எண்ணி அவனும் சந்யாசி ஆகிவிட்டான்.

 

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் அல்லவா?

 

அடுத்த முறை வரும்போது ஒரு மணி நேரம் சங்கீத உபந்யாசம் செய்ய ஆசை. ஒவ்வொரு திருவாசகப் பாடலுக்கும் ஒரு கதை சொல்கிறேன்.

நன்றி வணக்கம்.

 

–சுபம்

 

நீண்ட நாள் வாழ ஒரு யோஜனை (Post No.3463)

Written by London swaminathan

 

Date: 19 December 2016

 

Time uploaded in London:- 14-43

 

Post No.3463

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

லண்டன் உயர்வாசற் குன்று முருகன் கோவிலின் (LONDON HIGH GATE MURUGAN TEMPLE) திருவாசக விழாவில் பேசுவதற்கு என்னை அழைத்திருந்தார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை 18-12-2016 அந்த விழா நடந்தது. பலர் சொற்பொழிவாற்றினர். மாணவ மாணனவியர் தேவார திருவாசக இன்னிசை விருந்து அளிததனர் என்னுடைய சிற்றுரையின் சுருக்கம் இதோ.

 

 

அன்புடையீர்,

முதற்கண் என் பணிவான வணக்கங்கள்; என்னை இங்கு பேச அழைத்த கோவில் நிர்வாகத்துக்கு முதலிலேயே நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

வள்ளுவன் சொன்னான் “தமிழா! கொஞ்சமாவது நல்ல விஷயங்களைக் கேள்; அந்த அளவுக்காவவது உனக்கு நன்மை கிடைக்கும்”

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும் —-என்றான்.

 

இங்கு பெருந்திரளான மக்கள் கூடி எனக்கு முன்னே பேசிய அறிஞர் பெருமக்களின் உரைகளைச் செவி மடுத்தீர்கள். நானும் சில விஷயங்களைச் சொல்ல விழைகிறேன்.

திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்ற ஆன்றோர் மொழியை நாம் அனைவரும் அறிவோம்.

 

முதலில் ஒரு ரஹசியம். நீங்கள் நீண்ட நாட்கள் வாழ ஒரு ரஹசியத்தைச் சொல்லுகிறார் ரெவெரண்ட் ஜி.யு.போப் (Rev G U Pope):–

 

திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த டாக்டர் ஜி.யு. போப்,இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்ட் நகரைச் சேர்ந்தவர். அவர் 1900 ஆம் ஆண்டில் திருவாசகப் புத்தகத்ததை எப்படி வெளியிட்டார் என்ற அதிசயச் செய்தியை அவரே அப்புத்தகத்தின் முன்னுரையில் எழுதியுள்ளார். இதோ அந்த முன்னுரை:–

 

“இன்று என்னுடைய எண்பதாவது பிறந்த தினம். நான் எழுதி வைத்த குறிப்புகளைப் பார்க்கப் போனபோது நான் 1837 ஆம் ஆண்டில் தமிழ் கற்கத் துவங்கினேன் என்பது தெரிந்தது. நீண்டகாலத்துக்கு தமிழ் அன்னையின் பக்தனாக இருந்தேன்; அது முடிவுக்கு வருகிறது என்றே தோன்றுகிறது. என்னுடைய வாழ்க்கையின் முக்கியமான இலக்கியப் படைப்பை சமர்ப்பணம் செய்து இப்பணியை முடிக்கும்போது மிகவும் உணர்ச்சி வசமாகி விட்டேன்.

 

 

 

பல ஆண்டுகளுக்கு முன், நடந்த ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன். அப்போது இப்படி ஒரு புத்தகம் வெளியிடும் திட்டம் என் மனதில் இல்லை. ஒரு நாள் மாலையில் பிரார்த்தனைக் கூட்டம் முடிந்தவுடன், என் கல்லூரித் தலைவருடன் (பாலிலோல் கல்லூரி மாஸ்டர்) நடந்து கொண்டிருந்தேன். எக்களுடைய சம்பாஷனை திடீரென்று தமிழ் வரலாறு, இலக்கியம், தத்துவம் பற்றித் திரும்பியது. நீண்ட உரையாடலின்நடுவே ஒரு இடைவெளி நேரிட்டது. என்னுடைய மாஸ்டர் எப்போதுமே வேகமாகப் பேசக்கூடியவர். திடீரென்று ‘அதை நீ அச்சிட்டே ஆகவேண்டும்” என்றார்.

 

 
நான் 80 வயதுக்காரன் என்ன பதில் சொல்லுவானோ அதையே அவரிடம் சொன்னேன்: மாஸ்டர் நான் என்ன சாகாவரம் வாங்கி வந்திருக்கிறேன் என்று நினைத்து விட்டீர்களா? இதை வெளியிடத் துவங்கினால் அதை முடிக்க நீண்ட காலம் ஆகும். இப்போது அவர் முகத்தை பார்த்தேன்; அவர் என்னை நோக்கித் திரும்பினார். அவருடைய வெண்

தாடி மீதும் அன்பே உருவான முகத்தின் மீதும் நிலவொளி பட்டொளி வீசிப் பரவியது. அவர் அன்போடு என் தோளின் மீது கைகளைப் போட்டார் — ஒரு நீண்ட பணியை எடுத்துக்கொண்டுவிட்டால் அது முடியும் வரை நீ மரணம் அடைய மாட்டாய். இது நீண்டகாலம் வாழவுள்ள ஒரு வழி! அது நிறைவடையும் வரைக்கும் நீ வாழ்வாய்” என்று சொல்லி முடித்தார்.

 

 

 

இதை அவர் சொன்னபோது எனக்குக் கொஞ்சம்கூட நம்பிக்கை இல்லை. ஆனால் அவர் சொன்ன சொற்கள் மட்டும் என் மனதில் அசரீரி போல எதிரொலித்துக் கொண்டே இருந்தது. நான் களைபுற்றபோதெல்லாம் அந்த ஆரூடச் சொற்கள் எனக்கு உத்வேகம் ஊட்டின. அவர் இப் பூவுலகில் இருந்து மறைந்துவிட்டார். ஆனால் அவர் சொன்ன காரியம் நிறைவேறிவிட்டது.

 

 

அந்த அன்பான ,சிறந்த, பொறுமை மிக்க பெஞ்சமின் ஜோவெட் அவர்களை இன்று நன்றியுடன் நினைவுகூறுகிறேன். இது எல்லாம் அவருக்கே சமர்ப்பணம். என்னுடைய நன்றியையும் மரியாதையையும் தெரிவித்து வணங்குகிறேன்”.

 

(இது போப் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியதை நான் மொழிபெயர்த்தது)

 

நமது வீடுகளில் கூட நாம் பார்த்திருக்கிறோம்; வீட்டில் வயதான கிழவன் கிழவி — தாத்தா, பாட்டி இருப்பார்கள் அவர்கள் நான் என் பேரப் பிள்ளையின் கல்யாணத்தைப் பார்க்கவேண்டும் என்பர்; அல்லது பேரக் குழந்தை பிறப்பதைப் பார்க்க வேண்டும் என்பர். அந்த்த நல்ல காரியம் நடக்கும்வரை அவர்கள் இறக்க மாட்டார்கள். நடந்தவுடன் திடீரென்று ஒரெ மாதத்தில் இறந்துவிடுவர். ஆகையால் உங்கள் மனதிலும் நல்ல ஒரு பெரிய லட்சியம் இருக்குமானால் நீண்ட காலம் வாழலாம். இந்த ரஹசியத்தை நீங்களும் புரிந்து கொண்டு பின்பற்றுங்கள்; உங்கள் வாழ்க்கையில் மகத்தானதொரு காரியத்தை முன்னே வைத்துக் கொண்டால இன்று முதல் இன்னும் நூறு ஆண்டுகள் நீங்கள் வாழ்வீர்கள். பன்னிரு திருமுறையில் மட்டும் 18,000 பாடல்கள் உள்ளன. இது தவிர தாயுமானவர், பட்டினத்தார்,என்று ஆயிரக்கணக்கான அடியார் எழுதிய நூல்கள் உள. இன்று முதல் அவை அனைத்தையும் படித்துவிட வேண்டுமென்று உறுதி பூணுங்கள். நீங்கள் நூறாண்டுக் காலம் வாழ்வீர்கள்

 

திரு வாசகத்தில் மட்டும் 51 பாடற் தொகுப்புகள், 656 பாடலகள் 3000 வரிகளுக்கு மேல் உள்ளது. 74 இடங்களில் மாணிக்கவாசக ர் தன்னை நாயேன் என்று அழைத்துக் கொள்கிறார். உண்மையில் அவர் உயரிய நிலை எய்திய பெரியார். அவர் நம்மைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்கே—- நம்மைப் போன்றவர்களை எண்ணியே—- நாய் என்று சொல்லிவைத்தார்.

 

மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதிலோர்

மகிமை இல்லை-திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கம் செய்தல் வேண்டும்—- என்று பாரதி சொன்னான். அப்படி வெளி நாட்டாரும் வணக்கம் செய்த புத்தகம் திருவாசகம் என்பது போப் அவர்களின் வாழ்க்கையிலிருந்து தெரிகிறது.

போப் அவர்கள் 63 ஆண்டுகளுக்குத் தமிழ் படித்தார்! என்ன அதிசயமான விஷயம் பாருங்கள்; நம்மில் எத்தனை பேர் 63 ஆண்டுகளுக்குத் தமிழ் படிப்போம் அல்லது படித்தோம்; எண்ணிப்பாருங்கள்.

 

இதன் பிறகு ஓம் பற்றிய திருவாசககக் குறிப்புகளைச் சொன்னேன். அது தமிழ் இலக்கியத்தில் ஓம்காரம் என்ற கட்டுரையில் வந்த விஷயம் என்பதால் இங்கே மீண்டும் தரவில்லை. (சில நாட்களுக்கு முன் நான் எழுதிய கட்டுரையில் ஓம்கார விளக்கம் காண்க)

 

எனது உரையில் 2 திருவாசகப் பாடல்களை எடுத்துக் கொண்டு இரண்டு கதைகளைச் சொன்னேன்; அதை நாளை காண்போம்.

—தொடரும்

 

தமிழ் இலக்கியத்தில் ஓம்காரத்தின் பெருமை (Post No. 3461)

Written by London swaminathan

 

Date: 18 December 2016

 

Time uploaded in London:- 10-44 AM

 

Post No.3461

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

உலகின் மிகப்   பழமையான நூல் ரிக்வேதம். அது ஓம்காரத்தில் துவங்கி ஓம்காரத்தில் முடியும்.

ஓம் அக்னிமீளே புரோஹிதம் என்று துவங்கி இறுதியில் ஹரி: ஓம் என்று முடிப்பர்.

 

ஓம்காரத்தில் வேதம் துவங்குவதை  யார் சொன்னார்?

உலகப் புகழ்பெற்ற கவிஞன் காளிதாசன் சொன்னான்:

 

வைவஸ்வதோ மனுர் நாம மானனீயோ மனீஷிணாம்

ஆசித் மஹீக்ஷிதாம் ஆத்ய: ப்ரணவ: சந்தசாம் இவ

–ரகுவம்சம் 1-11

 

வேதங்களுக்கெல்லாம் முதலில் பிரணவம் இருப்பது போல அரசர்களுக்கெல்லாம் முதல் அரசராக இருந்தவர் வைவஸ்வத மனு என்பவர். அவர் சூரியனுடைய புத்ரர். அறிவாளிகளாலும் மதிக்கத் தக்கவராய் இருந்தார்.

 

திருவாசகத்தில்

 

ஓம்காரத்தின் மற்றொரு பெயர் பிரணவம். இதை ஏகாக்ஷரம் என்று பகவத் கீதை பகரும். எப்படி ரிக்வேதம் ஓம்காரத்தில் துவங்கியதோ அப்படி மாணிக்க வாசகரின் திருவாசகமும் ஓம்காரத்தில்  துவங்கி அதில் முடிவடைகிறது. திருவாசகத்தில் 51 பாடற் பகுதிகளில் முதலில் உள்ளது சிவ புராணம். அதில்

உய்ய என்னுள்ளத்துள் ஓம்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா – என்று சிவபுராணத்தில் ஓம்காரத்தை அமைத்துள்ளார்.

 

கடைசியாக அமைந்த பாடற்பகுதி அச்சோ பதிகம். அதிலும், உய்யு நெறி காட்டுவித்திட்டோங்காரத்துட் பொருளை ஐயனெனக்கருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே – என்று சொல்லி முத்தாய்ப்பு வைக்கிறார்.

மாணிக்கவாசகர் செய்த எல்லாவற்றையும் செய்ய முயன்ரறவர் பாரதியார். மணிவாசகப் பெருமானைப்போல திருப்பள்ளி எழுச்சி, அகவல், திருத்த்சாங்கம்,  குயிற்பாட்டு முதலிய பல செய்யுட்களை யாத்த பாரதி, அவரது புகழ் மிகு நூலான பாஞ்சாலி சபதத்தையும் ஓம்காரத்தில் துவங்கி அதிலேயே முடிக்கிறார்.

 

பாரதி பாடலில்

பாஞ்சாலி சபதத்தின் முதல் பாடல்:

ஓமெனப் பெரியோர்கள் – என்றும்

ஓதுவதாய் வினை மோதுவதாய்,

தீமைகள் மாய்ப்பதுவாய் – துயர்

தேய்ப்பதுவாய் நலம் வாய்ப்பதுவாய்

நாமமும் உருவும் அற்றே – மனம்

நாடரிதாய் புந்தி தேடரிதாய்

ஆமெனும் பொருளனைத்தாய் – வெறும்

அறிவுடன் ஆனந்த இயல்புடைத்தாய்

 

நின்றிடும் பிரமம் என்பார் – அந்த

நிர்மலப் பொருளினை நினைத்திடுவேன்

 

என்று பாடுகிறார். இதில் ஓம்காரத்தின் பெருமை முழுதும் கூறப்பட்டுள்ளது.

 

 

 

பாஞ்சாலி சபதத்தின் முடிவுப் பாடல் ஓம்கார கர்ஜனையுடன் முடிகிறது:

 

ஓமென்றுரைத்தனர் தேவர் – ஓம்

ஓமென்று சொல்லி உறுமிற்று வானம்

பூமியதிர்ச்சி உண்டாச்சு – விண்ணை

பூழிப்படுத்தியதாஞ் சுழற் காற்று

சாமி தருமன் புவிக்கே – என்று

சாட்சியுரைத்தன பூதங்களைந்தும்!

நாமுங் கதையை முடித்தோம் – இந்த

நானில முற்றும் நல்லின்பத்தில் வாழ்க.

 

அருமையான முடிவு.

 

திருமந்திரத்தில்

 

ஓம்காரத்து உள்ளே உதித்த ஐம்பூதங்கள்

ஓம்காரத்து உள்ளே உதித்த சராசரம்

ஓம்கார தீதத்து உயிர் மூன்றும் உற்றன

ஓம்கார சீவ பரசிவ ரூபமே

பொருள்:-

நீர் நிலம் காற்று நெருப்பு ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களும் ஓம் என்னும் பிரணவத்திலிருந்தே உண்டாயின –ஓம்காரத்திலிருந்துதான் அசையும், அசையாப் பொருட்கள் உண்டாயின. ஓம் எனும் பிரணவத்துள்ளே விஞ்ஞானகலர் (ஆணவ மலம் பற்றிய ஆன்மா), பிரளயாகலர் (ஆணவம், கன்மம் இரண்டும்), சகலர் (ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களும் பற்றிய ஆன்மா) ஆகிய மூன்று வகைப்பட்ட உயிர்களும் ஒடுங்கியுள்ளன. ஓம்காரம் என்பது சிவ சொரூபமாகவும் பரசிவ வடிவமாகவும் அமைந்தது. ஓம் எனும் பிரணவம் மந்திரம் மட்டும் அல்ல; மகேசனின் உருவமும் ஆகும்.

 

திருப்புகழில்

 

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் நிறைய இடங்களில் ஓம்காரப் பெருமை கூறப்படுகிறது. இதோ ஒரே ஒரு திருப்புபுகழ்:

காமியத்தில் அழுந்தி இளையாதே

காலர் கைப்படிந்து மடியாதே

ஓமெழுத்தில் அன்பு மிகவூறி

ஓவியத்தில் அந்தமருள்வாயே

தூமமெய்க் கணிந்த சுக லீலா

சூரனைக் கடிந்த கதிர்வேலா

ஏமவெற்புயர்ந்த மயில்வீரா

ஏரகத்தமர்ந்த பெருமாளே

 

வள்ளலார் பாடலில்

அகத்திய முனிவனுக்கு முருகப் பெருமான் ஓம்கார மகிமையை உபதேசித்ததை, தெய்வ மணிமாலையில் வள்ளலாரும் பாடுகிறார்:-

 

சேமமிகு மாமறையின் ஓமெனும் அருட்பதத்

திறனருளி மலைய முனிவன்

சிந்தனையின் வந்தனையும் வந்த மெய்ஞ்ஞானசிவ

தேசிகாரத்னமே

 

என்று புகழ்கிறார்.

 

 

சம்ஸ்கிருத ஸ்லோகம் ஒன்று சொல்லும்:–

ஓம்காரஸ்ச அதசப்தஸ்ச த்வாவேதௌ ப்ரஹ்மண: புரா

கண்டம் பித்வா விநிர்யாதௌ தஸ்மான் மாங்கலிகாஉபௌ

–பாதஞ்ஜலதர்சனம்

பொருள்:– ஓம், அத என்ற இரண்டு சொற்களும் பிரம்மனின் திருவாயிலிருந்து வெளிவந்ததால் இரண்டும் மங்கலச் சொற்களாக கருதப்படும்.

பழங்கால சம்ஸ்கிருத நூல்கள் அனைத்தும் இவ்விரு சொற்களுடனேயே துவங்கும்.

சுவாமி விவேகாநந்தர்  ஒரு அருமையான கருத்தை முன்வைக்கிறார்; எல்லா எண்ணங்களுக்கும் ஒரு சொல் உண்டு. சொல்லையும் அந்த எண்ணத்தையும் (Thought and Word cannot be separated) பிரிக்கமுடியாது. எல்லாப் பொருளுக்கும் ஒரு அர்த்தம் உண்டு அவை இரண்டையும் பிரிக்க முடியாது (Word and Meaning). ஆனால் ஒவ்வொரு எண்ணத்துக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் பல சொற்கள் இருக்கும்– கடவுள் என்றால் ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு சொல் இருக்கும்— தண்ணீர் என்றால் ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு சொல் இருக்கும். ஆகையால் ஒரே சொல்லை வைத்து அந்தப் பொருளை விளக்கமுடியாது. ஆனால் ஓம் என்ற சொல் மட்டும் மொழிக்கு அப்பாற்பட்ட சப்தம் – அது இறைவனையே குறிக்கும். வைஷ்ணவர்கள் விஷ்ணு என்றால்தான் கடவுள் என்று ஒப்புக்கொள்வர்; சைவர்கள் சிவன் என்றால்தான் கடவுள் என்று ஒப்புக்கொள்வர். ஆனால் ஓம் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர். சைவ வைஷ்ணவ சாக்தர்கள் மட்டுமின்றி, சமணர்கள், பௌத்தர்கள் சீக்கியர்களும் ஓம்காரத்தை ஒப்புக் கொள்கின்றனர் என்பார்.

 

இது மிகப்பெரிய உண்மை: இந்தியாவில் தோன்றிய எல்லா மதங்களுக்கும் ஓம் என்பது பொது; அதை சம்ஸ்கிருதத்திலும் எழுதலாம்; தமிழிலும் எழுதலாம் வெவ்வேறு உருவில் இருக்கும். ஆனால் சப்தம் ஒன்றே!

கடவுளை சப்தப் பிரம்ம என்பர்; இந்த உலகமே ஓம்காரத்தில் துவங்கியது. ஓம்காரத்தின் பெருமையை எல்லா முக்கிய உபநிஷத்துகளும் பறை சாற்றுகின்றன.

 

சிவபரத்துவ நிச்சயம் 

பாடல் 2

பிரணவத்தின் அர்த்த மாத்திரையிற் சிவலோக மிருக்குமென்பதால் அவ்வர்த்த மாத்ரா தெய்வம் சிவ பிரானே யென்பது.

 

அவ்வதி லிருக்கும் பூமி யந்தர மிருக்கு முவ்வில் 

மவ்வதி லிருக்குஞ் சொர்க்கம் வாக்கொடு மனமுஞ் செல்லாத 

திவ்விய வுமைவாழ் பாகச் சிவபிரான் சோம லோக 

மெவ்வமி லருத்தந் தன்னி லிருக்குமென் றுரைக்கும் வேதம். 

 

(அ-ரை) அந்தரம் – அந்தரிக்ஷம்; உமைவாழ் பாகச்சிவபிரான் என்றது சோமன் என்றதை விளக்கியபடி; சோமலோகம் – சிவலோகம்; எவ்வம் – கேடு; அருந்தந் தன்னில் – அருத்த மாத்திரையில்.

 

‘கேவலமகாரோகார மகாரார்த மாத்ரா ஸஹிதம் ப்ரணவமூஹ்ய’ என்ற ராம ரஹஸ்யோபநிஷத்தும், ‘அகாரோகார மகாரார்த மாத்ராத்மிகா’ என்ற வராகோபநிஷத்தும், ‘அர்த்தமாத்ரா ஸமாயுக்த: ப்ரணவோ மோக்ஷதாயக:’, “ப்ருதிவி – – அகாரே – – அந்தரிக்ஷம் – – உகாரே – – த்யெள: – – மகாரே – – பஞ்ச தைவதம் ஓங்காரம் ‘ என்ற தியாநபிந்தூப நிஷத்தும், ‘ப்ருதிவ்யகார: – – அந்த ரிக்ஷம் ஸ உகார: – – த்யெள: ஸ மகார: – – ஸோமலோக ஒங்கார:’ என்ற நரஸிம்ஹ பூர்வ உத்தாதாபிநியுபநிஷத்துக்களும் அதர்வ சிகோபநிஷத்தும், ‘அரைமாத்திரையி லடங்கும்மடி’ என்ற தேவாரமும், ‘மஹோசாநமவாங்மநஸகோசரம்’ என்ற சரபோநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.

 

ஓமின் புகழை ஒரு கட்டுரையில் அடக்க முடியாது.சுட்டிக்காட்டவே இயலும்!

ஓம் நம சிவாய; ஓம் நமோ நாராயணாய

 

–subam–