புத்த தரிசனம் (Post No.3263)

buddha-china

Written by S. NAGARAJAN


Date: 18 October 2016

Time uploaded in London: 6-24 AM

Post No.3263

Pictures are taken from various sources; thanks

 

Contact :– swami_48@yahoo.com

 

 

வலை வாசம்!

பாக்யா 14-10-2016 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

புத்த தரிசனம்

 

By ச.நாகராஜன்

 

இணைய தளத்தில் ஆயிரக்கணக்கான ப்ளாக்குகள்! வலைகளில் பூக்கும் மலர்களின் வாசமே தனி தான்!

அறிவியல் ஆன்மீகம், உள்வியல், திரைப்படம், கவிதை, கதை, ஜோக் என எந்தப் பொருளிலும் அறிய வேண்டிய ஆர்வமூட்டும் ஏராளமான விஷயங்கள் உள்ளன.

சாம்பிளுக்கு ஆன்மீகத்தில் ஒன்று ஜோக்கில் ஒன்று பார்ப்போம்:

 

புத்த தரிசனம்

 

முன்னொரு காலத்தில் சீனாவில் நடந்தது இது. யுங் ஃபு என்ற ஒரு இளைஞன் சிசுவான் என்ற இடத்தை நோக்கிப் பயணமானான். அவனது இலட்சியம் போதிசத்வர் வூஜியைத் தரிசிப்பது தான்!

வூஜி என்றால் எல்லையற்ற அல்லது அளவே இல்லாத என்று பொருள்.

 

செல்லும் வழியில் பிட்சு ஒருவரை அவன் பார்த்தான்.

“நீ எங்கே போகிறாய்?” என்று கேட்டார் பிட்சு.

இளைஞன் போதிசத்வர் வூஜியைத் தரிசித்து அவரிடம் சிஷ்ய்னாகப் போவதாக பதிலிறுத்தான்.

“புத்தரைப் பார்ப்பது என்பது போதிசத்வர் வூஜியைப் பார்ப்பதற்கு இணையாகாது:”என்றார் துறவி.

 

 

இளைஞன் ஒத்துக் கொண்டான். ஆனால் புத்தரை எப்படிப் பார்க்க முடியும்.

அது இறுதியான ஞானம் அடையும் போதல்லவா முடியும்!

‘புத்தரை எங்கே பார்ப்பது?” என்று திகைப்புடன் வினவினான் இளைஞன்.

 

“ஒன்றும் கவலைப்பட வேண்டாம்” என்று கூறிய பிட்சு, “இப்போது புத்தர் உங்கள் வீட்டிலே தான் இருக்கிறார்!” என்றார்.

திகைத்துப் போன இளைஞன்.” அப்படியா! அவர் புத்தர் தான் என்பதை எப்படித் தெரிந்து கொள்ள முடியும்? அடையாளம் என்ன?” என்று கேட்டான்.

 

buddha-erkadu

“ஒன்றும் சிரமமில்லை. ஒரு போர்வையைத் தாறுமாறாகப் போர்த்திக் கொண்டு செருப்பை யார் மாற்றி அணிந்திருக்கிறாரோ அவர் தான் புத்தர். அடையாளம் காண்பது எளிது!” என்றார் பிட்சு.

மனம்  மகிழ்ந்த இளைஞன் அவரை அடி பணிந்து வணங்கி உட்னே தன் வீட்டிற்குத் திரும்பினான்.

 

ஒடோடி வந்த அவன் தன் வீட்டுக் கதவைத் தடதடவென்று தட்டி அம்மா என்று அழைத்தான்.

தன் பிள்ளையின் குரலைக் கேட்ட வயதான தாய் மனம்  மகிழ்ந்தாள். வயதான அவள் ஒரு பாயில் படுத்துக் கிடந்தாள். மனமோ நெடுந்தூரம் சென்றிருந்த தன் மகன் ந்ல்லபடியாக இருக்க வேண்டுமே: என்று கவலைப் பட்டுக் கொண்டிருந்தது. அவன் நலத்தைப் பற்றியே ஓயாமல் சிந்தித்துக் கொண்டிருந்த அவள் தன் மகனின் குரலைக் கேட்டு எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தாள்.

 

 

போர்த்தியிருந்த போர்வையை அப்படியே மூடிக் கொண்டாள். விரைவாக ஓடோடி வந்த அவள் செருப்பைத் தாறுமாறாக மாற்றி அணிந்தாள். கதவைத் திறந்தாள்.

 

இளைஞன் தன் தாயைக் கண்டான். போர்வை தாறுமாறாக, செருப்புகள் மாறி இருக்க;… அவரே புத்தர்! பிட்சுவின் வாசகங்கள் நினைவிற்கு வந்தன.

 

தனது தாயின் முகத்தைப் பார்த்தான்.

எல்லையற்ற ஆனந்தம் பூத்திருக்கும் முகத்தைக் கண்டான். அங்கிருந்து பொழியும் அன்பை உணர்ந்தான்.

அந்த கணத்தில அவன் மனதில் அமைதி நிலவியது. ஆனந்தம் பொங்கியது. அவனுக்கு பரிபூரண ஞானம் ஏற்பட்டு விட்டது;

 

 

புத்த தரிசனமும் ஞானமும் அவனுக்குக் கிடைத்து விட்டது.

 

எனக்கும் அந்தத் தொழில் தான்!

 

இனி வலையில் ப(பி)டித்த ஒரு ஜோக் ..

 

ஒரு மூளையியல் நிபுணர் தன் காரை ரிப்பேருக்குக் கொடுத்திருந்தார்.

மெக்கானிக்கை அணுகிய அவர், “என்ன எல்லா வேலையும் முடிந்ததா? கியர் சரியாகி விட்டதா? சார்ஜ் எவ்வளவு?” என்று கேட்டார்.

 

“எல்லாம சரியாக இருக்கிறது” என்று உறுதிபடக் கூறிய மெக்கானிக், “சார்ஜ் அதிகமில்லை. எழுநூறு ரூபாய் தான்” என்றான்.

 

திகைத்துப் போன நியூரோ சர்ஜன், “ எழுநூறா! எனக்குக் கூட அவ்வளவு கிடைப்பதில்லையே!” என்றார்.

 

“டாக்டர், அதனால் தான் அந்தத் தொழிலிலிருந்து நான் இதற்கு மாறி விட்டேன்!” என்றான் முன்னாள் நியுரோ சர்ஜனான அந்த இந்நாள் மெக்கானிக்!

*******

 

வள்ளுவரும் வானவரும்! (Post No.3260)

hy14-pushkar_2472025g-jpghindu-2

Written by S. NAGARAJAN

Date: 17 October 2016

Time uploaded in London: 5-21 AM

Post No.3260

Pictures are taken from various sources; thanks

 

Contact :– swami_48@yahoo.com

 

 

திருக்குறளில் தேவர் உலகம்

வள்ளுவரும் வானவரும்!

By ச.நாகராஜன்

 

 

 img_5160-2

பாரத நாடெங்கும் தொன்று தொட்டு இருந்து வ்ரும் பண்பாடு ஒன்றே தான்!

 

மிகப் பழைய சங்க இலக்கிய  நூலான திருக்குறளில் இந்தப் பண்பாட்டை விளக்கும் நூற்றுக் கணக்கான குறட்பாக்களைக் காணலாம்.

 

தேவர் அல்லது வானவரைப் பற்றிய ஏராளமான செய்திகளை பாரத நாடெங்கும் உள்ள மக்கள் அறிவர். ஹிந்துப் பண்பாட்டை விளக்கும் ஏராளமான கதைகளும் அதைச் சார்ந்த சடங்குகளும், விழாக்களும், நம்பிக்கைகளும் தொன்மங்களும் வான உலகில் –விண்ணுலகில் – இருக்கும் வானவரைச் சார்ந்தே உள்ளன.

 

 

திருக்குறளை இயற்றிய வள்ளுவருக்கே தேவர் என்ற பெயரும் உண்டு. அவருக்குரிய பத்துப் பெயர்களும் அவரது உயரிய பண்பையும் அருமையையும் எண்ணி, போற்றித் தரப்பட்டு வழிவழியாக வழங்கப்பட்டு வருகின்றன.

 

 

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்                   

மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை                        

 திருவாசகமும் திருமூலர் சொல்லும்                        

ஒருவா சகமென் றுணர் 

 

–என்ற ஔவையாரின் பாடலில் தமிழ்ம்றையும் நான்மறையும் ஒன்றே என்று அறுதியிட்டு உறுதி கூறப்படுகிறது!

 

 img_5163-2

இனி, வள்ளுவரின் கிண்டல் குறள்கள் அவரது அரிய மேதைத் தனமையையும் அதில் இழைந்து ஊடாடி விளங்கும் நகைச்சுவையையும் காட்டுவன.

 

 

இந்த நகைச்சுவைக் குறள்களில் முக்கியமான குறள் ஒன்று தேவர் குறள்.

 

 

தேவர் அனையர் கயவர் அவருந்தாம்

மேவன செய்தொழுகலான்        –  குறள் 1073

 

“தேவர் அனையர் கயவர்”

தேவரும் கயவரும் ஒன்று போலத் தான் என்று வள்ளுவர் கூறியதைக் கேட்டவுடன் திடுக்கிடுகிறோம். தூக்கிவாரிப் போடுகிறது.

 

 

ஆனால் அவர் அடுத்து அதற்கான காரணத்தை விளக்கும் போது சிரிக்கிறோம். இருவரும் தம் மனம் போன போக்கிலேயே அனைத்தையும் செய்யும் தன்மை வாய்ந்தவர்கள் என்பதால் தேவர் அனையர் கயவர்!!

வையத்துள் புண்ணியச் செயல்களைச் செய்பவரே வானுறையும் பேறு பெற்றவர்கள். அவர்கள் மனம் போன போக்கில் நல்லதையே செய்வர்.

 

 img_5164-2

ஆனால் பூமியில் மனம் போன போக்கைச் செய்யும் கயவர் தீயவற்றையே செய்வர். உயர்ச்சியும் இழிவுமாகிய காரண வேறுபாட்டால் நகைச்சுவையை ஊட்டி நம்மைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார் வள்ளுவர்.

நகைச்சுவையுடன் கூடிய கருத்தால் மிகவும் ஈர்க்கப்படுகிறோம்.

 

அடுத்து வான் நாட்டை புத்தேள் நாடு என்றும் வானவரை புத்தேளிர் என்றும் வள்ளுவர் கூறி இருக்கும் குறட்பாக்கள் சுவையானவை.

 

 

இப்படி வரும் ஆறு குறள்களைப் பார்ப்போம்.

 

 

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே

ஒப்புரவின் நல்ல பிற              – குறள் 213

 

பிறர்க்கு உதவி செய்யும் நல்ல பிரதிபலன் பாராத உதவி செய்யும் தன்மை தேவர் உலகத்திலும் பூவுலகத்திலும் காண்பது அரிதாகும்.

 

ஈவாரும் இல்லை, ஏற்பாரும் இல்லை என்பதால் தேவருலகில் ஒப்புரவு அரிது. யாவருக்கும் ஒப்பது இது போல வேறு ஒன்று இல்லாமையால் பூவுலகில் இது அரிது.

 img_3203

 

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

போற்றாது புத்தேள் உலகு           – குறள்  234

 

ஒருவன் நிலவுலகில் பொன்றாத புகழைச் செய்வானாயின் வான் உலகம் அவனை வரவேற்குமேயல்லால் தன்னை எய்தி இருக்கும் ஞானிகளைப் போற்றாது.         

 

                      

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்                     

தள்ளாது புத்தே ளுலகு                   குறள் 290

 

களவினைச் செய்வார்க்கு உடம்பில் உள்ள உயிர் தவறும். அந்தக் களவினைச் செய்யாதவர்க்கு வானுலகம் வாய்த்தல் தவறாது.

 

 

புகழ் இன்றால் புத்தேள் நாட்டு உய்யாதால் என்மற்று           

இகழ்வார் பின் சென்று நிலை              குறள் 966

 

மானத்தை விட்டுத் தன்னை அவமதிப்பவர்கள் பின்னே ஒருவன் சென்று நிற்கின்ற நிலை அவனுக்கு இவ்வுலகப் புகழைத் தராது. தேவர் உலகத்திலும் கொண்டு சேர்க்காது. இப்படி அவமதிப்பார் பின் செல்வதால் அவனுக்குப் பின் என்ன தான் பயன்?

 

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு                              

நீர் இயைந்து அன்னார் அகத்து             குறள் 1323

 

 

நிலத்தில் நீர் கலந்தாற் போல ஒன்று ப்ட்ட நெஞ்சம் உடைய காதலரிடத்தில் ஊடலில் காணப்படுவது போன்ற இன்பம் தேவருலகில் உண்டா?

 

 img_3425

பெற்றார் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்                புத்தேளிர் வாழும் உலகு                   குறள் 58

 

பெண்டிர் தம்மை எய்திய கணவனை வழிபடுவாராயின் தேவருலகில் அவரால் பெருஞ்சிறப்பினைப் பெறுவர்.

 

அடுத்து வரும் மூன்று குறள்களில் அமரர் என்ற வார்த்தையையும், வானவர் என்ற வார்த்தையையும் தேவர் பயன்படுத்துகிறார்.

 

 

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை                 

ஆரிருள் உய்த்து விடும்                  குறள் 121

 

ஒருவனை அடக்கம் ஆகிய அறம் பின் தேவர் உலகத்து உய்க்கும். அடங்காமையோ ஆர் இருள் கொண்ட நரகத்தில் செலுத்தும்.

 

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்                         

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு     (குறள் 18)

 

 

வானம் வறண்டு மழை இல்லாது போனால் இவ்வுலகில் வானவர்க்குச் செய்யும் பூஜை, திருவிழா எதுவும் நடைபெறாது.

 

 

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்விருந்து  வானத்தவர்க்கு        (குறள் 86)

 

தேவர்கள் விரும்பி வரவேற்கும் விருந்தினர் யார் தெரியுமா? பூவுலகில் வந்திருந்த விருந்தினரை நன்கு  உபசரித்து அனுப்பி விட்டு அடுத்து வரும் விருந்தினருக்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கின்றானே அந்த உத்தமன், அவனைத் தம் விருந்தினராக ஆவலோடு வரவேற்பார்களாம் தேவர்கள்!

 

 brahadeeswar-2

இன்னும் ஒரு குறளில் வானோர்க்கும் மேலான உலகத்தைப் பற்றிப் பேசுகிறார்.

 

யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு               

உயர்ந்த உலகம் புகும்           (குறள் 346)

 

 

யான் எனது என்ற மயக்கத்தை அறுப்பார்க்கு வானோரும் எய்தற்கு அரிதான வீட்டுலகம் கிடைக்கும்.

 

தேவர் உலகத்தைச் சேர்ந்தோர் இமைக்க மாட்டார்கள் என்பதை ஒரு குறள் சுட்டிக் காட்டுகிறது.

 

இமையாரின் வாழினும் பாடிலரே இல்லான்              

அமையார்தோள் அஞ்சு பவர்   (குறள்  906)                             

மனைவியின் அழகிய தோளுக்கு அஞ்சி நடக்கின்றவர் தேவரைப் போல இந்த உலகில் வாழ்ந்தாலும் கூட ஆண்மை இல்லாதவரே ஆவர்.

 

 

ஹிந்துக்களின் வேதம், உபநிடதம், புராணம் ஆகியவை கூறும் பெரும்பாலான செய்திகளை சங்க இலக்கியத்தில் பரக்கக் காணலாம்.

 

 

பாரதம் முழுவதற்குமான ஒரே பண்பாட்டைச் சேர்ந்தவரே வள்ளுவர் என்பதும் அதைத் தன் குறள் நெடுகிலும் சுட்டிக் காட்டுகிறார் என்பதற்கும் வேறு என்ன சான்றுகள் வேண்டும்.

 

கடைசியாக் ஒன்று. இமையவர் கோமானான இந்திரனையும் அவர் விட்டு விடவில்லை.

 

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்               

இந்திரனே சாலுங் கரி   (குறள் 25)

 

ஐந்து புலன்களின் ஆசையை ஒழித்தவர்க்குச் சான்று கூற விசும்புளார் கோமானான இந்திரனே வருவான்

 andal-krishnan

ஆஹா, பதிமூன்று குறள்களில் பண்பாட்டைத் தெள்ளென விளக்கும அனைத்தையும் வள்ளுவர் தரும் பாங்கிற்கு ஈடு இணை உண்டோ!

 

 

ஏராளமான செய்திகளைப் பெறுகிறோம்.

 

வானவர் உலகம் உண்டு.

 

அதற்கும்  மேலான உலகமும் உண்டு.

 

வானவர்க்கு பூவுலகினர் பூஜையும் திருவிழாவும் எடுப்பர். மழை இல்லையேல் அவை நடைபெறா. (இந்திரவிழா உள்ளிட்ட பழைய செய்திகளையும், மழை தரும் பொறுப்பு இந்திரனுக்கு உண்டு என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.)

 

 

அடக்கம் தேவ லோகத்தையும் அடங்காமை நரகத்தையும் தரும். மனைவி கணவனைப் போற்றல் வேண்டும். அது அரிய வானுலக வரத்தைத் தரும்.

 

தாம்பத்ய இன்ப உறவில் ஏற்படும் இன்பம் தேவலோகத்திலும் கிடைக்காது.

 

புகழுடைச் செயல்களைப் புரிபவன் பொன்னுலகம் போவான்.

களவுத் தொழில் செய்தலும், தன்னை அவமதிப்போரின் பின்னால் செல்லுதலும் தேவர் உலகை அடைய முடியாமல் தடுக்கும் தீமைகளாகும்

 

.

இன்னும் தேவாமிர்தத்தைச் சொல்லாமல் வள்ளுவரால் சும்மா இருக்க முடியுமா?

 

நான்கு குறள்களில் சாவா மருந்தான தேவாமிர்தத்தையும் குறிப்பிட்டு விடுகிறார்.

 

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று     – (குறள் 11)

 

 ambaji-temple-gujarat

மழையை உலகம் அமிழ்தம் எனப் போற்றுவதை இங்கு வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

 

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ்            (குறள் 64)

 

தன் குழந்தையின் சிறுகை அளாவிய கூழை விட தேவாமிர்தம் சிறந்ததா, என்ன? இல்லை என்று ஓங்கிச் சொல்வோம் நாம். உலகியல்பு இது!

 

 

நம் முகத்தைச் சுளிக்க வைக்கும் ஒரு உவமையையும் அவர் தந்து விடுகிறார்.ஏனெனில் அப்படிச் சொன்னால் தான் அவர் சொல்ல வரும் பொருளுக்கு வலிமை சேரும்! அதனால் தான்!

நல்ல கற்றறிந்தோர் கூடிப் பேசும் அவையில் ஒன்றுமே படிக்காத ஒரு  முட்டாள் உளற ஆரம்பித்தால், ஐயகோ, அது தூய்மை இல்லாத முற்றத்தில் படைக்கப்பட்ட நல்ல அமிர்ததிற்கு ஒப்பாகும். (‘அசுத்தம்’ உள்ள இலையில் அமிழ்தம் வைக்கப்பட்டால்….?!)

 

அங்கணத்துள் உக்க அமிழ்தத்தால் தங்கணத்தார்          அல்லார் முன் கோட்டி கொளல்        (குறள் 720)

 

இன்னும் ஒரு குறள்- தலைவியின் தோள் அமிர்தத்தினால் ஆனது!

 

 

உறுதோறு உயிர்தளிப்பத் தீண்டலால் பேதைக்கு          

அமிழ்தின் இயன்றன தோள்           (குறள் 1106) 

 

தலைவியின் தோளைத் தீண்டும் போதெல்லாம் (போக இருக்கும்) உயிர் தளிர்ப்பதால் இவள் தோள் அமிர்தத்தினால் செய்யப்பட்

டிருக்க வேண்டும்!

 

எப்படி இருக்கிறது நான்கு குறள்கள்.

 

1330 குறள்களில் சுமார் 17 குறள்களில் தேவலோகத்தைக் காட்டுகிறார் தேவர்! அதாவது ஒரு சதவிகிதத்திற்கும் மேலாக!

 

இதுவே அவர் தன் கருத்துக்களுக்கு வானுலகைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.

 ganga-shiva

என்ன இருந்தாலும் அவரும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வான் உறையும் தெய்வத்துள் சேர்ந்தவர் தானே

‘தனது இனத்தை’ விட்டுக் கொடுப்பாரா என்ன?

 

கருத்துக்களைப் பெற்று மகிழ்கிறோம். அமிழ்தம் உண்டது போல இருக்கிறது!

**********

 

 

 

பிள்ளையார் விளையாடிய கால்பந்து! கைப்பந்து! (Post No.3253)

img_8871

Written by London Swaminathan

 

Date: 15 October 2016

 

Time uploaded in London: 8-16 AM

 

Post No.3253

 

Pictures are taken from various sources; thanks.

 

Contact swami_48@yahoo.com

 

 

ராவணனைப் பிள்ளையார் பந்தாடிய கதை,  கணேச புராணத்தில், மிகவும் சுவைபடச் சொல்லப்பட்டிருக்கிறது.

 

கயிலை மலைக்குச் சென்று தவம் புரிந்தான் ராவணன். அவன் தியானத்தை மெச்சிய சிவபெருமான் அவனுக்கு முன் காட்சி தந்தார். நினக்கு வேண்டியவைகளைக் கேள் என்றார். அடியேன் வாழும் இலங்கையும் நானும் அபசயம் அடையா வண்ணம் அருள் புரிய வேண்டும் என்றனன். இவன் மொழிகேட்ட கருணை வள்ளல், அவன் கையில் ஒரு சிவலிங்கத்தைக் கொடுத்து, இதனை அருமையுடன் ஆராதித்து வா. ஆனால் ஆசாரத்தின் பொருட்டு இவைகளை வாஹனாதிகளில் ஏற்றாமலும், கீழே வையாமலும் எடுத்துச் செல் என்றார் இப்படி ஆசார அனுட்டானத்துடன் கொண்டு சென்று இலங்கையில் தாபித்தால் நீயும் அழிய மட்டாய், இலங்கையும் அழியாது என்றார். எங்கேனும் கீழே வைத்தால் லிங்கத்தை எடுக்க முடியாது அது அங்கேயே தாபிதமாகிவிடும் என்றும் கருணை வள்ளலான சிவ பெருமான் மொழிந்தார்.

 

உடனே ராவணன் அந்தச் சிவலிங்கத்தினை கையில் ஏந்தி தெற்கு நோக்கி நடந்து வந்தனன். இதைத் தேவர்கள் கண்டனர். நடு நடுங்கினர். இந்த ஆள் ஏற்கனவே நமக்குச் சொல்லொணாத் துய ரம் தருகின்றனன். இந்த லிங்கம் ராவணனின் தலைநகருக்குச் செல்லாமல் தடுப்பது எங்கனம் என்று ஆலோசித்தனர். இவன் இலங்கைக்கு இதைக் கொண்டு சென்றால் நமக்கு எல்லாம் முன்னை விட அதிக உபத்திரவம் செய்வான் என்று அஞ்சினர்.

 

முழுமுதற் கடவுளான விநாயகனை வேண்டி வழி காணுவோம் என்று விரைந்தோடினர். அவர்களைப் புன்சிரிப்புடன் வரவேற்றார் கணேசப் பெருமான். பெருமானே! மகா துஷ்டனான ராவ ணன் ஒரு சக்திவாய்ந்த லிங்கத்தினை இலங்கையில் பிரதிட்டி செய்ய விரைந்து செல்லுகிறான. அவனைத் தடுத்து நிறுத்தி இலங்கைக்கு அந்த லிங்கம் போகா வண் ணம் அருள்பாலிக்க வேண்டும் இதுவே எங்கள் விக்ஞாபனம் (appeal) என்றனர்.

 

உடனே பிள்ளையார் வருணனை அழைத்தார். நீ உடனே சென்று ராவணனின் உதரத்தில் (stomach) புகுந்து சலோபாதியை (மல, மூத்ர விசர்ஜன நெருக்கடி Nature’s call) உண்டாக்ககடவை. யாம் அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை அவன் உதரத்தில் இருக்கவும் (உதரம்=வயிறு) என்றார். வருணனும் அவ்வாறே செய்தான். இதற்கிடையில் தேவர்களும் கண்டு வியக்கும் வண் ணம், விநாயகப் பெருமானும் ஒரு அழகிய பார்ப்பனச் சிறுவன் வடிவம் கொண்டு ராவணனைப் பின் தொடர்ந்தார்.

ravana-3ht

 

ராவணன், காலைக் கடன் முடிக்கும் நெருக்கடிக்குள்ளானான்.; யாராவது ஆள் கிடைத்தால் அவன் தலையில் சிவலிங்கத்தை வைத்துவிட்டு குளத்தையோ ஏரிக் கரையையோ நோக்கி ஓடலாமே என்று வெண்ணிச் சுற்றிப் பார்க்கையில் விநாயகப் பெருமான் முஞ்சிப் புல்லரைஞாணும், முன் கையிலேந்திய தண்டமுமாக, ஒரு பிரம்மாச்சரியைப் போல ராவணன் முன் தோன்றினார்.

 

பையா! நீ தூய்மை உடைய பிரம்மச்சாரியாகக் காணப்படுகிறாய். நான் சலமோசனம் செய்துவருங்காறு இச் சிவலிங்கத்தினை நீ வைத்திரு. ஸ்நான முதலிய சுசி (சுத்தம்) இலாதவர் இதைத் தொடப்படாது; தரையிலும் வைக்கப்படாது என்றனன்.

பிள்ளையாரும், அதற்கென்ன, பேஷாய்ச் செய்கிறேன். ஆனால் நேரம் தாழ்த்தக் கூடாது; நான் நேரம் ஆகிவிட்டால் மூன்று முறை விளிப்பேன். அதற்குள் வராவிடில், வாங்கிக் கொள்ளாவிடில் கீழே வைத்துவிடுவேன் என்றார். ராவணன் , இதோ ஒரு நொடியில் திரும்புவேன் என்று சொல்லி ஓடினன். ஆனால் அவன் வயிற்றுக்குள் இருந்து வருணன் குடைந்த குடைவில் நேரம் போனதே தெரியவில்லை. விநாயகரும் முன்று முறை விளித்துவிட்டு சிவலிங்கத்தினை சுத்தமான தரையில் வைத்துவிட்டார். அதற்குப் பின் ராவணன் வயிற்றில் இருந்த வருணன், தன்னிடம் போய்ச் சேர்ந்தார்.

 

ராவணன் திரும்பி வந்தான் பிரம்மச்சாரி கையில் (விநாயகன்) சிவலிங்கம் இல்லாமை கண்டு திகைத்தான்; பதறினான். சிவலிங்கம் எங்கேடா? என்றான். அதற்கு அந்தப் பையன் நானோ துர்பலனுள்ள சிறுவன்; நெடுநேரம் ஆகியும் நீர் வராததால்  உன்னை மூன்று முறை கூப்பிட்டேன். அப்படியும் உம்மைக் காணமாட்டோமாய் அந்த இடத்தில் வைத்துவிட்டேன். நீவீர் அதை எடுத்துக்கொண்டு போம் என்றான்.

ravana6

ராவணனுக்கு ஒரே கோபம்; விழிகளை  உருட்டினான்; பிள்ளையாரை மிரட்டினான்; அதட்டினான்

அவசர புத்திக்காரனே!  இன்னும் சிறிது நேரம் பொறுக்கப்படதா? என்று சொல்லிக்கொண்டே கயிலை மலையையே பெயர்த்தெடுத்த எனக்கு இந்த சின்ன சிவலிங்கம் ஒரு பொருட்டா? என்று எண்ணி அதைத் தூக்க முயற்சித்தான். அதுவோ பாதாள ம் ஏழினும் கீழே படந்து வேரூன்றிவிட்டதனை அறியான். அதை பலம் கொண்ட மட்டும் இழுத்தான். ஒரு பக்கம் மட்டும் பசுவின் காதினைப் போல இழுபட்டு உருக்கொண்டது. ஆயினும் அது இருந்த இடத்தைவிட்டு அகலவில்லை. அந்த இடத்திலேயே அதை விட்டுச் சென்றான் இன்று வரை அந்த இடம் கோகர்ணம் (பசுவின் காது) என்றே அழைக் கப்படுகிறது. சிவனுக்கு மஹாபலநாதன்  என்ற பெயர் ஏற்பட்டது.

 

 

பிரம்மச்சாரி சிறுவனைப் பர்ர்த்து (பிள்ளையாரைப் பார்த்து) அடா! உன்னாலன்றோ இக்கேடு உண்டாயிற்று, என்று சொல்லி அவன் தலையில் குட்டவே, விநாயகப் பெருமான் சுயரூபம்  கொண்டார். யானை முகத்துடன் தோன்றி துதிக்கையினால் அவனைப் பிடித்து கறகரவென்றுசுழற்றி விண்ணுலக பரியந்தம் செல்லுமாறு தூக்கி வீசினார். அவன் மேலே சென்று தலை கீழாக கீழே விழுகையில் அவனைப் பிடித்து மீண்டும் தூக்கி எறிந்தார். இவ்வாறு அநேக முறை பிள்ளையார் அவனைப் பந்தாடினார். ராவணனுக்கு மூச்சு முட்டியது. என்னை மன்னிக்க வேண்டும், என்று பலமுறை சொல்லிக் கதறினான்.

 

உடனே விநாயகப் பெருமான் பந்தாடுதலை நிறுத்தி அவனை பூமியில் நிறுத்தினார். ராவணன் நடுநடுங்கி, விநாயப் பெருமானை துதித்தார். தவற்றுக்காக நெற்றியை பலமுறை நிலத்தில் மோதி மன்னிப்பு கேட்டார். அவரும் களி கூர்ந்து நின்னை மன்னித்தனம் நீ இப்போது குட்டிக்கொண்டது போல யார் குட்டிக் கொள்கிறாரோ அவர் குறைகளை எல்லாம் போக்குவன் என்றும் சொன்னார்.இதை கணேசப் புராணச் செய்யுளால் அறிக:

img_8724

மெல்லிய ஆக்கை யேனான் விழுச் சிவலிங்கந் தாங்கும்

வல்லமை   யுடையேனல்லேன் வலிதினீதருதிதந்தா

னல்லதே முக்காற்கூவ நண்ணிடாயாயின் மண்மேற்

செல்லுற விடுப்பனென் றான்றேவர் கடேவதேவன்

 

குட்டலும் மறைச் சிறான் போற்குறுகிய நாதன் வலே

யட்டும் மும்மத மாலயானை யானனாகி விண்ணின்

முட்டவொள்ளொளி கான்மோலி முதிர்ந்தபேருருவு கொண்டு

சட்டவல்லரக்கன் றன்னைத் தடக்கைப் பந்தாடினானே.

 

img_8881

திருக்குறளில் மறுபிறப்புத் தத்துவம்! (Post No.3246)

7books

Written by S. NAGARAJAN

Date: 13 October 2016

Time uploaded in London: 6-11 AM

Post No.3246

Pictures are taken from various sources; thanks

 

Contact :– swami_48@yahoo.com

 

 

ஹிந்துக்களின் மறுபிறப்புக் கொள்கை சங்க இலக்கியங்களில் நூற்றுக் கணக்கான இடங்களில் காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக திருக்குறளில் மறுபிறப்பு பற்றி கூறப்படுவதை ஆய்வு செய்கிறது இந்தக் கட்டுரை

திருக்குறளில் மறுபிறப்புத் தத்துவம்!

 

ச.நாகராஜன்

 

valluvar-4

கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமிய மதங்களிலிருந்து ஹிந்து மதத்தைப் பிரித்துக் காட்டும் சிறப்பியல்புகளில் முக்கியமான் ஒன்று மறு பிறப்பு தத்துவம்.

இதர மதங்கள் ஒரே ஒரு பிறப்பு தான் மனிதனுக்கு உண்டு என்றும் அதில் ஒன்று உய்ய வேண்டும் அல்லது எடர்னல் ஹெல்லில் (Eternal Hell) முடிவற்ற நரகத்தில் ஆழ்ந்து அமிழ வேண்டும் என்று போதிக்கின்றன.

ஆனால் நம்பிக்கை ஊட்டும் ஹிந்து  மதம் உன் செயல்களால் பிறப்புகள் அமைகின்றன. நல்ல வினை மூலம் நீ ஒரு கால கட்டத்தில் நிச்சயம் முக்தி பெற முடியும் என்று சூக்ஷ்மமான ஸ்விட்சை நம் கையிலேயே கொடுக்கிறது.

இதை பாரத தேசமெங்கும் உள்ள ஹிந்துக்கள் ஒப்புக் கொண்டு அதன் படி பாவ புண்ணியத்திற்குப் பயந்து வாழ்கின்றனர். தனக்கு ஒரு இழிவு நேரும் போதெல்லாம், ‘தெரிந்தோ தெரியாமலோ நான செய்த பாவம். அதனால் இதை நான் அனுபவிக்கிறேன்’ என்று மனத் தெளிவைப் பெறுகின்றனர். நல்லன வரும் போது பூர்வ ஜன்ம புண்ணிய்ம் என்று மகிழ்கின்றனர்.

நமது அற நூல்கள், மற்றும் இலக்கியங்கள் இந்த மறுபிறப்புத் தத்துவத்தை இடையறாது சுட்டிக் காட்டுகின்றன

இராமாயணம், மஹாபாரதம் ஆகிய இதிஹாஸங்களில் வரும் நூற்றுக் கணக்கான மறுபிறப்புத் தக்வல்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன

இந்த பாரதப் பண்பாடு தான் – பின்னால் ஹிந்துப் பண்பாடு என்று அறியப்படுவது –   பாரத தேசம் முழுவதும் பரவியிருந்த ஒரே பண்பாடு.

இதை சங்க இலக்கியங்களில் நூற்றுக் கணக்கான இடங்களில் காண முடிகிறது. இந்தப் பாரதப் பண்பாட்டின் ஒரு முக்கியமான அங்கமாகத் தான் தமிழர்களும் வாழ்ந்து வரலாறு படைத்திருக்கின்றனர்.

எடுத்துக் காட்டிற்குத் திருக்குறளை எடுத்துக் கொள்வோம்.

எழு பிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின்    (குறள் 62)

பழி இல்லாத நல்ல பண்புள்ள மக்களை ஒருவர் பெற்றால அவரை ஏழு பிறப்பிலும் தீவினைப் பயன் தீண்டாது.

 

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்

விழுமந் துடைத்தவர் நட்பு    (குறள் 107)

 

தமக்கு நேர்ந்த துன்பத்தினைத் துடைத்தவரின் நட்பினை பெரியோர் ஏழு பிறப்புகளிலும் தொடர்ந்து நினைத்துப் பார்ப்பர்.

 

ஒருமையுள் ஆமை போல ஐந்தடக்கலாற்றின்

எழுமையும் ஏமாப் புடைத்து    (குறள் 126)

 

ஒரு பிறவியில் ஆமை போல் ஒருவன் ஐந்து புலன்களையும் அடக்கி வாழக் கற்றுக் கொண்டால் அது அவனுக்கு ஏழு பிறவிக்கும் பாதுகாவலாக வந்து அமையும்.

 

ஒருமைக்கண் தான் கற்ற கல்வி  ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து       (குறள் 398)

 

ஒரு பிறவியில் ஒருவர் கற்கும் கல்வி அறிவானது அவர் எடுக்கும் ஏழு பிறவிகளிலும் பாதுகாவலாக வந்து அமையும்.

 

புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் செய்யாது

இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்     (குறள் 538)

 

பெரியோரால் புகழ்ந்து போற்றிக் கூறப்பட்ட்வற்றின் படி செயல் பட வேண்டும். அப்படிச் செயல்படாதவர்க்கு ஏழு பிறவிகளிலும் நன்மை உண்டாகாது.

 

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்

தான்புக் கழுந்தும் அன்று        (குறள் 835)

 

முட்டாளான ஒருவன் ஒரு பிறவியிலேயே ஏழு பிறவிகளில் தான் அனுபவிக்க வேண்டிய நரகத் துன்பத்திற்கானவற்றைச் செய்து  முடிக்க வல்லவன்!

 

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவார்

மற்றீண்டு வாரா நெறி           (குறள் 356)

 

கல்வி கேள்விகளால் மெய்ப்பொருளை உணர்ந்தோர் மீண்டும் இவ்வுலகில் பிறந்து துன்பம் அடையாத நெறியை அடைவ்ர்.

 

வீழ்நாள் ப்டாஅமை நன்று ஆற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்குங் கல்    (குறள் 38)

 

ஒவ்வொரு நாளையும் அறம் செய்யாமல் கழித்த நாளாக இல்லாமல் பார்த்துக் கொண்டு அறத்தை அன்றாடம் செய்து வந்தால் அதுவே ஒருவனுக்கு இனி பிறவி ஏற்படாதவாறு பிறவியை அடைக்கும் கல்லாகும்.

ஆக இப்படி வள்ளுவர் மறுபிறப்பிற்கு உரிய முறையில் தன் குறளில் முக்கியத்துவம் கொடுத்து சொல்ல வேண்டிய செய்திக்ளை எல்லாம் சொல்லி விட்டார்.

நமது வள்ளுவரை கிறிஸ்தவராகக் காட்ட முயற்சி செய்து எழுந்த நூல்களும் உண்டு.

அப்படிப்பட்ட முயற்சிகளை இந்த மறுபிறப்புத் தத்துவம் ஒன்றே தகர்த்து விடுகிறது.  அப்படிப்பட்ட முயற்சிகளை எள்ளி நகையாடும் போதே, வள்ளுவரைத் ‘தம்மவராக’ ஒவ்வொருவரும் காட்டும் அளவு தமிழ்க் குறள் உயர்ந்துள்ளது என்ற பெருமையை நினைத்து மனம் மகிழ்கிறோம்.

 

valluva-nayanar

எந்தக் காலத்திற்கும் பொருந்தும் ஹிந்துப்  பண்பாட்டை மிகச் சரியாக முத்திரைக் குறட்பாக்களினால் வலியுறுத்திய ஒரு தமிழ் மஹானைச் சிரம் தாழ்த்தி வணங்கிக்கொண்டே இருக்கலாம்.

அவர் குறளைப் படித்து அதன் படி வாழ்வதே வாழ்நாள் வழி அடைக்கும் கல்லாக அமையும், இல்லையா!

********

 

ஒன்றரைக் கண்ணன்! அப்பர் கிண்டல்! (Post No.3241)

ardhanareeswara-form

Written by London Swaminathan

 

Date: 11 October 2016

 

Time uploaded in London: 8-54 AM

 

Post No.3241

 

Pictures are taken from various sources; thanks.

 

Contact swami_48@yahoo.com

 

ardhanari

Ardhanaareeswarar painted by Robert Ryan (Half Siva+Half Uma)

இந்துமதத்தின் மகத்தான சிறப்பு கடவுளையும் கூட நக்கல் அடிக்கலாம்; கிண்டல் செய்யலாம்; பகடி பேசலாம். இது மரியாதைக் குறைவின் பேரில் பிறந்ததல்ல; அன்பின் மிகுதியால் தோன்றியது. கண்ணனை சேவகனாகவும் தாயாகவும், நண்பனாகவும் உருவகிக்கும் பாரதி பாடல்களில் இதைக் காணலாம். கண்ணனை வெண்ணை திருடிக் கண்ணன் (Chor) என்று ஹிந்தி பஜனைப் பாடல்கள் பேசும்; சிவ பெருமானை பிச்சைக்காரன்/ பிக்ஷாடனர் என்று பக்திப் பாடல்கள் பாடிப் பரவும். இது இந்து மதத்துக்கே உள்ள சிறப்பு. மற்ற மதங்களில் கடவுளை எட்டாத தூரத்தில் இருக்கும் ஒரு “கடுமையான ஆண்மகன்” என்று வருணிப்பர். ஆனால் இந்துவோ, தனது வீட்டில் பிறந்த குழந்தைகளை வாய்க்கு வந்த பெயர் எல்லாம் சொல்லிக் கொஞ்சுவது போல, பட்டப் பெயர்களைச் சூட்டுவது போல, பிறந்த அப்பா, அம்மாவையே அன்பாகப் பட்ட பெயர் சொல்லி அழைப்பதுபோல, அழைப்பான்.

 

நான் பாரதியார் பணியாற்றிய மதுரை சேதுபதி உயர் நிலைப் பள்ளியில் படித்தேன். அங்கு தமிழ் ஆசிரியர் ஒருவர் இருந்தார். அவருக்கு ஒன்றரைக் கண்; அதாவது மாறு கண் (SQUINT EYE). எனது சஹ மாணவர்கள் அவருக்கு வைத்த பெயர் அரைப் பரம சிவம்; முதலில் எனக்குப் புரியவில்லை. ஏனெனில், அவரோ ஐய்யங்கார். பட்டை நாமத்துடன் வந்துதான் வகுப் பு நடத்துவார். பின்னர்தான் புரிந்தது சிவபெருமானுக்கு மூன்று கண்கள்; இந்த வாத்தியாருக்கு அதில் பாதி — ஒன்றரைக் கண்—என்று!

 

பள்ளிப் பாடங்களில் ‘பாஸ் மார்க்’கான (Pass Mark) நூற்றுக்கு 35 மதிப்பெண்கூட எடுக்கத் தவிக்கும்    மாணவர்கள், வாத்தியார்களுக்கு வைக்கும் பட்டப் பெயர்களைப் பார்த்தால் அவர்களுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசே கொடுக்கலாம் போலிருக்கும்! மதிய வேளைகளில் மதியச் சாப்பாட்டுக்குக்காக ஸ்கூல் கிரவுண்டில் (School Ground) மரத்துக்கு அடியில் மணல் வெளியில் உட்காருவோம்; அப்பொழுது அவர்கள் தமிழ் திரைப்படம் பற்றிச் செய்யும் விமர்சன ங்களைப் (Film Criticism) பார்த்தால், “அடப் பாவிப் பயல்களா! இவ்வளவு அறிவையும் தமிழ்ப் பாடத்தில்– ஆங்கிலப் பாடத்தில்—செலுத்தக்  கூ டாதா என்று வியக்கத் தோன்றும். அப்படி விமர்சனம் செய்வார்கள். இதையெல்லாம் நினைவுக்குக் கொண்டுவந்தது அப்பரின் தேவாரப் பாடல்; இதோ அந்தப் பாடல்:–

 

 

இன்று அரைக் கண் உடையார் எங்கும்

இல்லை; இமயமென்னும்

குன்றரைக் கண்ணன் குலமகட்

பாவைக்குக் கூறிட்ட நாள்

அன்றுஅரைக் கண்ணும் கொடுத்து உமை

யாளையும் பாகம்வைத்த

ஒன்றரைக் கண்ணன் கண்டீர்! ஒற்றி

ஊர் உறை உத்தமனே

–திருநாவுக்கரசர் (அப்பர்),நாலாம் திருமுறை  தேவாரப் பதிகம் 86, பாடல் எண்.7

tird-eye

மாதொருபாகனாகிய– அர்த்தநாரீஸ்வரனாகிய — சிவ பெருமானை வருணிக்கும் அப்பர் சொல்லுகிறார்:–

 

இரு கண் உடயவர்கள் உலகெங்கும் உளர்; ஆனால் அரைக் கண் உடையவர் இலர்; இமயமலக்கு உரிய – பர்வத ராஜன் புதல்வியான குலமகள் — பார்வதிக்கு — உமையம்மைக்கு — நீ பாதி வடிவத்தைக் கொடுத்ததா ல் அரைக் கண் உடையவனாகிவிட்டாய்.  நீயோ முக்கண்ணன் உடலில் பாதிப் போனதால் மிஞ்சியிருப்பது ஒன்றரைக் கண் அல்லவோ! திரு ஒற்றியூரில் அமர்ந்து அருளும் உத்தமனே ஆகிய ஒன்றரைக் கண்ணனை எல்லோரும் காண வாரீர்.

 

என்ன அற்புதமான கிண்டல்.

இறைவன் முழுக் கண்ணால் பார்த்தால் நாம் தாங்க மாட்டோம். எப்போதும் உன் கடைக்  கண் பார்வை வேண்டும் என்றுதான் இந்துக்கள் வேண்டுவர். ஒன்றரைக் கண் பார்வையைக் கூடத் தாங்க மாட்டாதவர்கள் நாம். அவன் முக்கண் திறந்துவிட்டாலோ மன்மதனை எரித்தது போல நமது பாவங்கள் எரிந் து பொடிபடும். ஏனெனில் அந்த மூன்றாவது கண் ஞானக் கண்; ஊனக் கண் அல்ல.

 

சிவ, சிவ சிவ! ஓம் நமசிவாய!!

 

திராவிட (தமிழ)ர்களின் மூட நம்பிக்கைகள் (Post No.3239)

tiger-seal-3  tiger-seal

Picture: Indus Valley Seals with Tiger Gods

Written  by London Swaminathan

 

Date: 10 October 2016

 

Time uploaded in London: 16-22

 

Post No.3239

 

Pictures are taken from various sources; thanks.

 

Contact swami_48@yahoo.com

 

 

கருப்புத் தோல் உடைய அனைவரும் திராவிடர்கள் அல்லது இந்நாட்டுப் பூர்வ குடிகள் என்றும் மற்றவர்கள் எல்லோரும் வெளிநாட்டிலிருந்து வந்த ஆரியர்கள் என்றும் முத்திரை குத்தினர் நாடு பிடிக்க வந்த வெள்ளைத்தோலினர்.

 

இல்லை திராவிடர்களும் வெளிநாட்டி லிருந்துதான் வந்தனர் என்று கால்டுவெல்களும் கனகசபைகளும் பேசினர். ஆனால் இந்திய இலக்கியங்களோ இங்கே வாழும் மக்கள் அனைவரும் இந்த தேசத்தின் பூர்வ குடிகள் என்றும் உலகெங்கும் சென்று நாகரீகத்தை நிலை நாட்டினர் என்றும் ((ரிக் வேதமும், அதர்வண வேதமும், சங்கத் தமிழ் இலக்கியங்களும்)) செப்புகின்றன.

 

நரபலி, எருமை பலி, களிமண் குடிசை முதலிய பல பழக்க வழக்கங்களை திராவிடர்களின் வழக்கம் என்று மதத்தைப் பரப்பவந்தோர் சித்தரித்துள்ளனர். உண்மை என்னவென்றால் வேத கால, இதிஹாச-புராண கால, சிந்து சமவெளி கால, சங்கத்தமிழ் காலங்களிலேயே மலைஜாதி மக்கள் இருந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. சிறிய எண்ணிக்கையில் இருந்தவர்களுடைய தனிப்பட்ட வாழ்வு யாரையும் பாதிக்கவில்லை. ஆனால் வெளிநாட்டினர் வந்து, அவர்கள் பகுதிக்குள் நுழைந்தவுடன், காம சம்பந்தமான நோய்களும், அமைதி யின்மையும் பரவின.

 

உலகில் மூட நம்பிக்கைகள் இல்லாத சமுதாயமே கிடையாது. இன்றும் கூட மில்லியன் கணக்கில் சம்பாதிக்கும் கால்பந்து வீரர்கள், டெலிவிஷன் கலைஞர்கள், திரைப்பட நடிகர் நடிகையர், அரசியல்வாதிகள்— சட்டையின் நிறம், புறப்படும் நேரம், நாள் பற்றி பலவிதமான நம்பிக்கைகள்– வைத்திருப்பதைப் பத்திரிக்கை பேட்டிகளில் படிக்கலாம். ஆனால் கருணாநிதியாரின் ‘மஞ்சள் துண்டு’ போல இதற்குப் பல விளக்கங்கள் கொடுத்து மழுப்புவர்.

 

இதோ திராவிடர்களின் பெயரில், வெளிநாட்டினர், பட்டியலிட்ட மூட நம்பிக்கைகள்:–

tiger-seal-2

பழங்குடி மக்களின் ‘புலித்தேவன்’

பழங்குடி இனத்தவர் தாங்கள் புலிகளாகவோ பாம்புகளாகவோ மாறமுடியும் என்று நம்புகின்றனர். ஆன்மாவில் பாதி மட்டும் வெளியே சென்று மிருக உரு எடுத்து, எதிரியைக் கொல்ல முடியும் அல்லது ஆடு, மாடுகளைச் சாப்பிட்டு பசியாற்றிக்கொள்ள முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர். இப்படி பாதி உயிர் வெளியே போகையில் சோம்பேறியாய் விடுவர் அல்லது வேலையே செய்யாமல் சோர்ந்துவிடுவர் என்பது அவர்கள் நம்பிக்கை. (இப்படிப் பல புலித் தேவன் முத்திரைகள் சிந்து வெளியில் கிடைக்கின்றன).

 

பெண் வந்தால் அபசகுனம்

 

கோண்ட் இனத்தினர் வேட்டைக்குப் புறப்படும்போது எதிரில் பெண்கள் வந்தால் அபசகுனம். உடனே வீட்டிற்குப் போய்விட்டு, எல்லாப் பெண்களையும் ம றைந்திருக்கும்படி சத்தம் கொடுத்துவிட்டு வெளியே வருவர்.

 

(இதை எழுதும்போது எனக்கு என்னுடைய சென்னை புரசவாக்கம் சித்தி நாள் தோறும் செய்யும் செயல் நினைவுக்கு வருகிறது. எனது சித்தப்பா பக்ககா தி.மு.க. சாமி, பூமி நம்பிக்கை கிடையாது. ஆனால் சித்தியின் பூஜை வழிபாடுகளைத் தடுக்க மாட்டார். தினமும் அலுவலகம் செல்லும்போது மட்டும் மனைவியின் சொல்லுக்கு, ‘மந்திரத்துக்குக் கட்டுண்ட பாம்பு போல’ கட்டுப்படுவார். முத லில் சித்தி வாசல் வரை சென்று இரு புறமும் எட்டிப்பார்ப்பார். எந்த அபசகுனமும் இல்லை என்று தெரிந்தவுடன் கையால் சைகை தருவார். உடனே, தயாராக வாசலில் நின்றுகொண்டிருக்கும் சித்தப்பா புறப்படுவார். நாங்கள் மதுரையிலிருந்து சென்று அவர் வீட்டில் தங்கும் போதெல்லாம் இதை வேடிக்கை பார்ப்போம். இந்து மத சகுன சாஸ்திரப்படி, விதவை, ஒரு பிராமணன் ஆகியோர் வந்தால் அபசகுனம்)

 

கோண்டு இனப் பெண் மாதவிலக்கு காலத்தில் அந்த வீட்டிலுள்ள யாரும்  வேட்டைக்குப் போக மாட்டார்கள். அப்படிப்போனால் ஒரு மிருகமும் சிக்காது என்பது அவர்களுடைய (மூட) நம்பிக்கை!

crow2

காகா நண்பன்!

கோண்ட் இன மக்கள் காகத்தைக் கொல்ல மாட்டார்கள். காகத்தைக் கொன்றால் ஒரு நண்பனைக் கொன்றதற்குச் சமம்! இதற்கு ஒரு கதை சொல்லுவார்கள். கடவுள் உலகத்தைப் படைத்த காலத்தில் ஒர் வயதான ஆணும் பெண்ணும் அவர்களுடைய ஐந்து பிள்ளைகளுடன் வசித்துவந்தனர். கொள்ளை நோய் வந்து ஒருவர் ஒருவர் பின் ஒருவராக ஐந்து பிள்ளைகளும் இறந்தார்கள். பெற்றோர்களோ மிகவும் வயதானவர்கள்; வறியவர்களும் கூட. ஆகையால் சடலங்களை எடுத்துச் சென்று தகனம் செய்ய இயலவில்லை. சடலங்களை வீட்டிற்கு அருகிலேயே தூக்கி எறிந்துவிட்டனர்.

ஒரு நாள் இரவில் அவர்களுடைய கனவில் விஷ்ணு தோன்றினார். ஒரு காகத்தைப் படைப்பதாகவும், அது இறந்தவர்களின் சடலத்தைத் தின்றுவிடும் என்றும் கனவில் சொன்னார். ஆகையால் காகங்கள் நண்பர்கள்.

 

 

ஏழாம் நம்பர் ஆகாது!

seven-fire

குறவர்கள் திருடப் போவதற்கு முன்னால் சகுனம் பார்ப்பார்கள். ஏழு என்ற எண் அவர்களுக்குத் துரதிருஷ்டமானது. ஆகையால் ஏழு பேராகச் செல்லமாட்டார்கள். அப்படி ஏழு பேராகச் செல்ல நேர்ந்தால், கன்னம் வைக்கப் பயன்படும் கருவியை ஒரு ஆளாகக் கருதி எட்டு பேர் என்று சொல்லிக் கொள்வார்கள். போகும் வழியில் விதவை, பால் பானை, மாடு கத்துதல் ஆகியாவற்றை அப சகுனமாக கருதுவர். திருமணமாகி வந்தவன், சிறையிலிருந்து வந்தவன் ஆகியோர் திருட்டுக் கும்பலில் இருக்கக்கூடாதாம்.

 

குறவர் இனப் பெண்கள் நீர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கும் வித்தை முதலியன தெரிந்தவர்கள்.  கணவன்மார்கள் நீண்ட நாட்களுக்குத் திரும்பிவராவிடில் கெட்ட சகுனம் ஆம்.  உடனே ஒரு விளக்குமாற்றுக் குச்சியை எடுத்து , அதில் மேலும் பல குச்சிகளைக் கட்டி எண்ணையில் தோய்த்து தண்ணீரில் மிதக்க விடுவர். அது தண்ணீரில் மிதந்தால் கவலைப்படத் தேவை இல்லை. மூழ்கிவிட்டால் கணவனைத் தேடி மனைவி புறப்பட்டுவிடுவாள்.

 

தமிழர்களின் தும்மல் நம்பிக்கை பற்றி திருவள்ளுவர் எழுதிய குறள்கள், பல்லி சொல்லுக்குப் பயப்படுதல், காட்டுப் பன்றி கேட்ட பல்லி சொல்– பற்றிய சங்க இலக்கியப் பாடல்கள்  ஆகியவற்றை முன்னரே பட்டியலிட்டுவிட்டேன். எனது பழைய கட்டுரைகளைப் படித்தறிக.

 

sneeze-03

Read also my articles:

சகுனமும் ஆரூடமும்: வேத கால நம்பிக்கைகள்,Research Article No.1811; Date: 19th April 2015

புதையல் கிடைக்க, காதலில் வெற்றி பெற சோதிடம்!!, Research Article No.1669; Dated 23 February 2015.

டெல்பி ஆரூடமும் குறி சொல்வோரும், ஏப்ரல் 15, 2012

தமிழர்களின் சோதிட நம்பிக்கை

 

Can Birds Predict Your Future? (Posted on 22 July 2012)

Beware of Wagtail Birds: Prediction by Varahamihira (19 February 2015)

How to find water in the Desert? Varahamihira on Water Divination (Posted on 16 February 2015)

Tamil Astrology: Rope Trick for Predictions (Posed on 27 February 2013)

Two Tamil Articles posted on 12 April 2012 on Greek Delphi Oracles and Tamils

Birds and Gods.

 

—SUBHAM–

 

 

 

 

 

வேதத்தில் ஸரஸ்வதி: பாரதியார் மொழிபெயர்ப்பு (Post No.3235)

drawing-of-goddess-saraswati

Compiled by London Swaminathan

 

Date: 9 October 2016

 

Time uploaded in London: 17-15

 

Post No.3235

 

Pictures are taken from various sources; thanks.

 

Contact swami_48@yahoo.com

 

 

நூலின் பெயர்: வேத ரிஷிகளின் கவிதை

சி.சுப்பிரமணிய பாரதி

 

img_8416img_8417img_8418img_8419

 

இந்திரன் என்பது விஞ்ஞான சக்தி: பாரதியார் (Post No.3231)

bharati-drawing

Compiled by London Swaminathan

 

Date: 8 October 2016

 

Time uploaded in London: 8-44 AM

 

Post No.3231

 

Pictures are taken from various sources; thanks.

 

img_8280

பாரதியாரின் அற்புத வேத மொழிபெயர்ப்பு-  Part 2

 

ரிக் வேதத்தின்   சில சூக்தங்களை மொழிபெயர்த்த பாரதியார், இந்திரன் என்பது விஞ்ஞான சக்தி என்றும் விருத்திரன் என்பது இருள் என்றும் விளக்குகிறார். அவருக்கு 100 ஆண்டுகளுக்கு முன் வேதத்தை மொழிபெயர்க்கத் துவங்கிய வெள்ளைக்காரர்களுக்கு நமது கலாசாரத்தில் தொடர்பு இல்லையாதலால், விருத்திரன் என்பது பாம்பு என்றும், அவர்கள் இந்தியாவை ஆண்ட பூர்வகுடிமக்கள் என்றும் தத்துப் பித்து என்று உளறி வைத்துள்ளனர். வேதத்தின் முழு சூக்தத்தைப் படிப்போருக்கு உண்மைப் பொருள் எளிதில் விளங்கும்.

 

நல்ல சக்திகளை ஒளி என்றும் தீய சக்திகளை இருள் என்றும் பாம்பு என்றும் வருணிப்பது பல கலாசாரங்களில் இருக்கிறது. இது தெரியாத வெளிநாட்டு “அறிஞர்கள்” விருத்திரன், அஹி என்பதை நாகர்களாகவும் இந்தியாவின் பூர்வ குடிகளகவும் சித்தரித்தனர். இன்னும் சிலர் இந்திரன் என்பது ஒரே ஆளையோ தெய்வத்தையோ குறிக்கும் என்று மொழிபெயர்த்தனர்.

 

பாரதியாரின் அருமையான மொழிபெயர்ப்பு இதோ:-

 

img_8289img_8290

img_8291img_8292

 

img_8293

img_8294

img_8295

 

img_8296

 

–suBham–

 

‘மணி’யான உபந்யாசம் (Post No.3229)

templ1

Written by S. NAGARAJAN

Date: 8 October 2016

Time uploaded in London: 5-37 AM

Post No.3229

Pictures are taken from various sources; thanks

 

 

 

நடைச்சித்திரம்

‘மணியான உபந்யாசம்

ச.நாகராஜன்

 

 money

ஹனுமார் கோவில்.

 

கூட்டம் பரவாயில்லை என்று சொல்வார்களே அந்த ரகம். பொதுஜன அபிப்ராயம் எப்படி உருவாகப் போகிறதோ என்று உபந்யாசத்தை ஏற்பாடு செய்த ஹரிஹரனுக்குக் கவலை. சாஸ்திரிகளுக்கும் தான்! சாஸ்திரிகள் யார் என்கிறீர்களா?

சுப்புணி சாஸ்திரிகள் ராமாயண உபந்யாசம் செய்கிறார். அவருக்குத் தான் ரொம்பக் கவலை. இந்த உப்ந்யாசத்திலாவது ஏதேனும் “கொஞ்சம்” வந்தால் மாதச் செலவை ஈடு கட்டி விடலாம்.

 

இராமனே துணை!

 

இன்று முக்கியமான கட்டம். திரிஜடைக்கு சுப ஸ்வப்னம். அதனால் சீதா பிராட்டிக்கும் சுப சகுனம்!

கதையை ஆரம்பிக்கலானார்.

 

“ஆதௌ கீர்த்தனாம்பரத்திலே இராமயணத்திலே இன்று ஒரு சுபமான இடம். சீதா பிராட்டியின்  மனக் கவலை தீர திரிஜடை அன்னையிடம் வந்து என்ன சொல்றாள்னா….”

 

திடீரென்று ஒரு சலசலப்பு கூட்டத்தில். தள்ளுங்கோ தள்ளுங்கோ என்று கட்டைக் குரலில் ஹரிஹரன் கத்திக் கொண்டே முன்னே வர பின்னால் ஒருவர் – அவரைப் பார்த்தால் பெரிய மனுஷராய்த்தான் இருக்க வேண்டும். சாஸ்திரிகளுக்கு ஒருவரின் தோரணையைப் பார்த்தால் தெரியாதா என்ன?

சற்று நிறுத்தினார்.

ஹரிஹரன் வந்தவரை முன்னால் சௌகரியமாக் அமர வைத்தார்.

 

சாஸ்திரிகளிடம் வந்தார். “இவர் தான் ஊர் பெரிய மனுஷர். இந்த கோவிலையே கட்டியவர். பேர் மணி. மணியானவர்.” மீண்டும் ஹரிஹரன் அழுத்திச் சொன்னார். “MONEY ஆனவர். இவர் வந்தாலே எனக்கு சம்பாவனையைப் பற்றிய கவலை தீர்ந்தது”

சாஸ்திரிகளுக்கு விஷயம் புரிந்து விட்டது.

 

MONEY ஆனவரா?

 

வாங்கோ வாங்கோ என்று இரு கரம் கூப்பி அவரை வரவேற்றார்.

மணியானவருக்கு இந்த உபசாரத்தால் உச்சி குளிர்ந்தது. அனைவரின் பார்வையும் அவர் பக்கம்.

எல்லோரும் எப்படி மதிக்கிறார்கள்!

சாஸ்திரிகள் மீண்டும் ஆரம்பித்தார்.

 

“ஆதௌ கீர்த்தனாம்பரத்திலே இராமயணத்திலே இன்று ஒரு சுபமான இடம். சீதா பிராட்டியின்  மனக் கவலை தீர திரிஜடை அன்னையிடம் வந்து என்ன சொல்றாள்னா….”

ஊர்ப் பெரியவர் ஹரிஹரனை ஏதோ சைகை காட்டி அழைத்தார்.

அவரும் அவர் அருகே ஓடி வந்தார். தன் இடுப்புத் துண்டை வாயினால் பொத்தி அதன் மீது கையை வைத்துக் கொண்டு உன்னிப்பாகக் கேட்டார்.

என்ன நடக்கிறது.?

 

சாஸ்திரிகள் ஒரு நிமிடம் நிறுத்தினார்.

அடுத்த கணம் ஹரிஹரன் மேடை முன்னால் வந்து சாஸ்திரிகளிடம் ஒரே ஒரு நிமிஷம் என்றார்.

பின்னர் பேச ஆரம்பித்தார்.

indian_rupees-498x295

“பெரியோர்களே, தாய்மார்களே. இராமபிரான் அருளால் நமக்கு நல்லது நடக்கும் என்பது ஸ்பஷ்டமாகத் தெரிகிறது. இதோ எந்தக் கூட்டத்திலும் பேச அழைத்தாலும் பேசாத அடக்க புருஷர் இப்போது சாஸ்திரிகளைப் பற்றி  ஓரிரு வார்த்தைகள் சொல்ல இசைந்திருக்கிறார். நம் பாக்கியம்!”

 

பெரியவர் வந்தார். கன குஷியாக ஆரம்பித்தார். இராமாயணம் எப்படி உலகின் மகத்தான் காவியம் என்பதில் ஆரம்பித்த அவர் நேராக சுப்புணி சாஸ்திரிகளுக்கே வ்ந்து விட்டார்.

அடடா, சாஸ்திரிகளின் உபந்யாசத்தில் தான் என்ன ஒரு நயம்! பதினெட்டு புராணங்களையும் ஆங்காங்கே மேற்கோள் காட்டி இனிய சாரீரத்துடன் அவ்வப்பொழுது கானம் செய்து சுலோகங்களை முறைப்படி சொல்லும் அவர் பாணியே தனி!

சாஸ்திரிகள் ஒரு கணம் மலைத்தார்.

 

தான் தான் அப்படிச் சொல்கிறோமா? கந்தர்வ கானம் இசைக்கிறோமா?

இன்று என்ன நடக்கிறது.!!

 

கூட்டத்தினர் ஆரவார கரகோஷம் செய்தனர்.

அரை மணி நேரம் வெளுத்து வாங்கிய ‘மணி’ ஆனவர் முக்கிய விஷயத்திற்கு வந்தார்.

 

“இந்த நல்ல நாளிலே இந்தக் கூட்டத்தில் வந்திருக்கும் பாக்கியவான்கள் அனைவருக்கும் இப்போதே என் கையெழுத்திட்ட கூப்பன்களை விநியோகிக்கப் போகிறேன். ஆண், பெண், குழந்தை என்ற பேதமில்லாமல் நாளைக்கே நம் கடைத் தெருவில் இருக்கும் என் ஜவுளிக்கடைகளில் உங்களுக்குத் தேவையான ரவிக்கைத் துணி, வேஷ்டி, குழந்தை சட்டை என ஆளுக்கு ஒன்றை தேர்ந்தெடுத்துப் பெற்றுக் கொள்ளலாம். நாளைக்கு வர முடியாதவர்கள் இந்த உபந்யாசம் முடியும் நாள் வரை இந்த சலுகையை அனுபவிக்க்லாம். ஆனால் உப்ந்யாசத்திற்கு நீங்கள் கட்டாயம் வர வேண்டுமென்பதால் மாலை ஏழு மணி முதல் இந்த சலுகையைப் பெற முடியாது. காலை முதல் மாலை வரை கடைக்கு வாருங்கள்” கூட்டத்தினரின் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது.

ஹரிஹரன் ராமா ராமா என்று கூவினார்.

 

 

சாஸ்திரிகளுக்கு ஒரே மகிழ்ச்சி. கூட்டத்தினர் ஒரு  க்யூவாக நின்றனர். கையில் இருந்த பேப்பர் ஸ்லிப்பில் கையெழுத்திட்டு ஒவ்வொருவருக்கும் கூப்பனை அயராமல் கொடுத்துக் கொண்டிருந்த பெரியவர் கோவில் பட்டரைக் கூப்பிட்டு ஏதோ சொன்னார். அவர் பெரிதாகத் தலையாட்டி விட்டு ஓடினார்.

நாற்பத்தைந்து நிமிடத்தில் அனைவரின் முகத்திலும் மலர்ச்சி காணப்பட்டது. அனைவருக்கும் கூப்பன் வந்து விட்டது போலும்!

சாஸ்திரிகள் சற்று சாந்தமடைந்தார்.

மீண்டும் ஆரம்பித்தார்.

 

“ஆதௌ கீர்த்தனாம்பரத்திலே இராமயணத்திலே இன்று ஒரு சுபமான இடம். சீதா பிராட்டியின்  மனக் கவலை தீர திரிஜடை அன்னையிடம் வந்து என்ன சொல்றாள்னா….”

மக்கள் அவரைக் கவனிக்கத் தொடங்கிய அதே வேளையில் ‘நகரு நகரு’ என்று ஒரு பெரிய கோஷம் கேட்டது.

அண்டா அண்டாவாக வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கள், புளியோதரை  . அத்தோடு பெரிய பெரிய தொன்னைகள் வேறு.

சாஸ்திரிகள் முழித்தார். அவருக்கு உதவ ஹரிஹரன் ஓடோடி வந்தார்.

 

 

“அண்ணா, வேறொண்ணுமில்லை. பெரியவர் இன்று பிரசாதம் தன் உபயம்னு சொல்லி தடபுடலாக எற்பாடு பண்ணிட்டார். கூப்பன் கொடுக்கற்துக்குள்ளே ஸ்பெஷல் அடுப்புகள் மூட்டி எல்லாம் ரெடி!. டைம் ஆறது. பஸ்ஸிலே போறவாளுக்கு பஸ் கிடைக்கணும். முதல்லே நைவேத்யம் பண்ணிடுங்கோ” கூட்டத்தில்  முன் வரிசையில் இதைக் கேட்டவர்கள் தலையை ஆட்டி அதை ஆமோதித்தனர். விவரம் காதோடு கிசு கிசுவென்று பரவ கூட்டம் மொத்தமும் கலகலப்பாகக் கை தட்டியது.

நைவேத்யம் நடந்தது.

 

இவர்களுக்கு விநியோகம் நடக்க ஒரு முக்கால் மணி நேரமாவது ஆகும்!

அனைவரும் வரிசையாக நின்றனர்.

கூட்டத்தில் நிற்பவர்கள் சும்மாவா நிற்பார்கள்! ஒருவருக்கொருவர் – சாஸ்திரிகள் காது படவே தான் – பேசிக் கொண்டனர்.

 

“இந்த மாதிரி உபந்யாசம் இது வரை கேட்டதே இல்லை. எவ்வளவு படித்தவா! எத்தனை பெரியவர்! சுப சகுனம் என்று ஆரம்பித்தார் பாரு, வேஷ்டி, ரவிக்கை, சட்டைன்னு ஒவ்வொருவருக்கும் கூரையிலேர்ந்து கொட்டறது. இவர் சொன்னா எதுவும் நடக்கிற மஹிமை இவர்ட்ட இருக்கு!”

“அட அதை விடு! இங்க பாரு! பெரிய தொன்னைலே வயிற்றுக்கு நிறைய வெண் பொங்கல், மூட நெய் முழங்கை வழி வார நெய் மிதக்கும் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை….”

 

 

தாய்க்குலம் சாஸ்திரிகளை நமஸ்கரித்து மகிழ்ந்தது. அன்று வீட்டில் சமைக்க வேண்டாம் என்பதாலோ!

கடைசி வரைக்கும் திரிஜடை சீதையிடம் சொன்னது என்ன என்று சாஸ்திரிகளால் சொல்ல முடியவில்லை.

ஆனால் மணியான பிரசங்கம் என்று பெயர் கிடைத்து விட்டதே! இதற்கு மேல் என்ன ஸார் வேணும்!

 

MONEY ஆன பிரசங்கம் சார் அது! ஒப்புக் கொள்கிறீர்களா!

**********

 

 

 

 

 

பேயை வணங்குவோர் தமிழர்கள்! பிஷப் கால்டுவெல் உளறல்! (Post No.3226)

caldwell-four

Written by London Swaminathan

 

Date: 7 October 2016

 

Time uploaded in London: 11-12 AM

 

Post No.3226

 

Pictures are taken from various sources; thanks.

 

caldwell

கால்டுவெல் பாதிரியார் (BISHOP CALDWELL) அதிபயங்கர உளறல் பேர்வழி. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற அவருடைய நூலுக்கு எவ்வளவு பாராட்டுதல்கள் கிடைத்ததோ அவ்வளவுக்கு மறுப்புரைகளும் எழுந்தன. ஆனால் இரண்டையும் படித்தறியாத அசடுகள் இன்று வரை அவரைப் புகழ்ந்துகொண்டு நிற்கும்.

 

கால்டுவெல்லின் மிகப்பெரிய உளறல் சம்ஸ்கிருதம் பற்றியதாகும். அவரது நூலை வெளியிட்ட எல்லோரும் அடிக்குறிப்பில் மன்னிப்புக் கேட்கும் தொனியில் “இது கால்டுவெல்,அறியாமையின் காரணமாக எழுதியது” என்று எழுதிச் சேர்த்துள்ளனர். சம்ஸ்கிருதத்தில் இலக்கியம் எதுவும் இல்லை என்று அந்த அசடு உளறி வைத்தது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். பிஷப் கால்டுவெல்லின் அறியாமைக்கு வேறு உதாரணங்களும் தருவேன். சாணார் ஜாதியினர் பேயை வணங்கு கின்றனர் என்றும் தமிழர்கள் அனைவரும் பேயை வனங்குவோர் என்றும் ஆரியர்   னைவரும் தெய்வங்களை வணங்குவோர் என்றும் அது எழுதிவைத்துள்ளது.

 

சம்ஸ்கிருதத்திலுள்ள எல்லா கடவுள் பெயர்களும் தெய்வத்தைக் குறிக்கும் பெயர்கள் என்றும்  தமிழில் உள்ள எல்லா தெய்வப் பெய ர்களும் “பேய்” அடிப்படையில் அமைந்தவை என்றும்  இதை திருநெல்வேலி சாணார் வழிபாட்டின் மூலம் கண்டுபிடித்ததாகவும் கால்டுவெல் பாதிரியார் ‘திருவாய் மலர்ந்து அருளி’ இருக்கிறார். இதை அவர் எழுதிய சில வருடங்களுக்குள்ளேயே ஈ. கோவர் (E Gower) என்ற வெள்ளைக்காரர் அவருக்கு சம்மட்டி அடி கொடுத்துவிட்டார். தென்னிந்திய நாட்டுப்புற பாடல்களை எல்லாம் தொகுத்து 1871 ஆம் ஆண்டில் கோவர் வெளியிட்ட நூலின் முன்னுரையில் செமை அடி — சொல்லடிதான் — கல்லடி அல்ல — கொடுத்து இருக்கிறார்.

 

பேய் என்பது “பே, பிணம்” என்பதுடன் தொடர்புடைய சொல் என்றும் ஆனால் ஆரியர்களின் “தெய்வ என்பது தேவ” என்ற சொல்லுடன் தொடர்புடையதென்றும் கால்டுவெல் பிதற்றினார்.

 

கோவர் மறுப்புரையில் பேய் என்பது “பை—சாச” என்ற சம்ஸ்கிருதச் சொல்லில் இருந்து பிறந்தது என்றும் பெண், பெண்ணு என்பது ஒளியைக் குறிக்கும் என்றும் எழுதினார். கோண்ட் இனப் பழங்குடியினர் “பூரா பெண்ணு, பெல்லா பெண்ணு, தாரி பெண்ணூ” என்றெல்லாம் கடவுள் பெயர்கள் வைத்துள்ளனர். அதில் பெண்னு என்பது ஒளி என்பதாகும் பெல்லா பெண்ணு என்பது சூரியனைக் குறிக்கும் என்றும் கோவர் எழுதினார்.

 

அத்தோடு நில்லாமல் கால்டுவெல் தூய தமிழ்ச் சொல் என்று கொடுத்துள்ள பட்டீயல் முழுதும் வடமொழிப் பெயர்கள் என்பதை வேறு ஒரு வெள்ளைக்காரர் மறுத்து எழுதியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

தேவன் DEVA (கடவுள்)  என்பதும் டீமன் DEMON (பேய்) என்பதும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய சொல்லே. ஒன்றிற்குப் பதிலாக மற்றொன்றைப் பயன்படுத்தலாம் (INTER CHANGEABLE); இரண்டும் ஒளி எனப் பொருள்படும் என்பதும் அவரது துணிபு.

“பா” என்ற சம்ஸ்கிருதச் சொல் ஒளியைக் குறிக்கும்.

 caldwell-book

எனது கருத்து

நான் கோண்டு இன ஆராய்ச்சியில் இறங்கியிருக்கும் தருணத்தில் எனக்கு கோவரின் 1871ஆம் ஆண்டு புத்தகம் கிடைத்தது வியப்பை உண்டாக்கியது. ஏனெனில் எனது கருத்தை வலுப்படுத்துல் சில வாக்கியங்களை அதில் கண்டேன். அவர் சம்ஸ்கிருதத்திலிருந்து இவை தமிழுக்கு வந்ததா? அல்லது தமிழில் இருந்து சம்ஸ்கிருதத்துக்குப் போனதா என்று தெரியாது என்று எழுதியுள்ளார்.

 

நான் சிவனின் உடுக்கை ஒலியின் ஒரு புறத்திலிருந்து சம்ஸ்கிருதமும் மற்றொரு புறத்திலிருந்து தமிழும் வந்ததாகவும் அதனால்தான் வட இமய வெள்ளிப் பனித் தலையனான அகத்தியனை தமிழுக்கு இலக்கணம் எழுத சிவன் அனுப்பினான் என்றும் எழுதினேன். அது மட்டுமல்ல; தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் மூல மொழி ஒன்று உண்டென்றும் உ லகிலுள்ள பழைய மொழிச் சொற்கள் அனைத்தும் இந்தியர்கள் கற்பித்ததே என்றும் எனது ஆராய்ச்சி முடிபை எழுதினேன். இதனால்தான் ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்கள் இருக்கிறது என்றும் எழுதினேன். அது எல்லாம் இப்பொழுது வலுப்பட்டு வருகிறது.

 

இதை எல்லாம் ஆராயும் போது இன்னொரு பேருண்மை வெளிச்சத்துக்கு வந்தது. எகிபது நாட்டின்ன பிரமிடுகளில்  திருமூலர் கருத்துகள் இருப்பதை ஒரு கட்டுரையில் தந்தேன். வேத மந்திரங்களின் மொழி பெயர்ப்பு இருப்பதி ந்னும் சில கட்டுரைகளில் ஹந்தேன். எகிப்திய பிரமிடு கட்டினோர் சூத்ர (நூல் பிடித்தல்) முறை கொண்டு கோணததை அலந்தௌ வடமொழியில் இருப்பதை எல்லாம் ஆதாரம் காட்டினேன். கோவர் கட்டுரையை படித்துவிட்டு கடவுள் பெயர் கலைக் களஞ்சியத்தைத் திரந்து பார்த்தால் அங்கேயும் பெண்ணு என்ற கடவுள் ஒளிக்கடவுள்– சூரியனைக் குறிப்பது- என்று என்சைக்ளோபீடியா சொல்கிறது.

 

பேனு

எகிப்தியரின் சூரிய கடவுள்.— கி.மு. 2500 வாக்கில் எகிப்திய பிரமிடுகளில் காணப்படும் பெயர். — பறவை வடிவத்தில் குறிக்கப்படுகிறது.— ஹீலியோபாலிஸில் (Heliopolis) ஆதம் ATUM என்ற சூரியக்கடவுளுடன் தொடர்பு படுத்தபடும் சொல்.  ஆதிகா ல கடலில் இருந்து படைக்கப்பட்டது. மறுபிறப்பையும் பரலோக வாழ்வவையும் குறிப்பது. ஒருவேளை தீயிலிருந்து மீண்டும் உயிர்த்தெ ழும் பீனிக்ஸ்  PHOENIX என்ற பறவைக் கதை இதிலிருந்துதான் உருவானது போலும். ஏனெனில்  முதலில் வாலாட்டிக் குருவிப் பறவையாகவும், பின்னர் நாரையாகவும் காட்டப்படுகிறது. UPPER EGYPT  “மேல் எகிப்து” மன்னர் கிரீடத்தில் இரண்டு இறக்கைகளாகக் காட்டப்படுகிறது.

caldwell-book-2

பூரா பெண்ணு

இது ஒரிஸ்ஸா மாநிலத்தில் கோண்ட் இன மக்களின் ஒளிக்கடவுள். பூமிக்கடவுளான தாரிப்  (தரை = தரணி == தாரி=Terra = Terrain) பெண்ணையும் பல கடவுளரையும் உண்டாக்கியது. மரியா என்னும் சடங்கில் நரபலி கொடுக்கப்பட்ட தெய்வம் இது.

 

இவை இரண்டும் கடவுள் பெயர் என்சைக்ளோபீடியாவிலிருந்து (Encyclopaedia)  எடுக்கப்பட்டவை. எல்லா விஷயங்களும் வேதத்திலும் தமி ழிலிலும் உள்ள சொற்கள்.

வேதத்தில் ‘சுபர்ண’ SUPARNA என்ற பொன்னிறப் பறவையை சூரியனுடன் ஒப்பிடுவர். அதுவே பிற்காலத்தில் விஷ்ணுவின் வாஹனம் ஆகியது.

 

பெண் என்பவளை “மனைக்கு விளக்கு” என்று புறநானூறு  ம் மனு தர்ம சாத்திரமும் போற்றுகின்றன. பெண் என்பதை விளக்கு, ஒளி என்று இந்துமதமும் பாராட் டுகிறது. “பெண்”ணு என்பது பேணுதல் என்ற சொல்லிலிருந்து வந்ததாகவும் கருதலாம்.

 

எது எப்படியாகிலும் பெண்ணு என்பது ஒளி என்பது கோண்ட் இனத்திலும் எகிப்திலும் இருக்கி ற து. மரியா என்ற சொல் ம்ருத்=மரணம் MORTAL என்பதுடன் தொடர்புடையதால் நரபலிக்கு கோண்ட் இன மக்கள் ‘மரியா’ சடங்கு என்பர். அவர்களை திராவிட இனம் என்று வெள்ளைக்கார எழுதுவர். சிந்து சமவெளி, எகிப்து நரபலி முதலியன குறித்து நான் எழுதிய விஷ்யங்களையும் படித்து ஒப்பிடுக.

 

கால்டுவெல் எழுதிய தூய தமிழ் சொற்கள் எப்படி வடமொழிச் சொறள் என்று நிரூபிக்கப்பட்டதோ அதே போல பைபிளிலுள்ள  கபி, துகி என்பன தமிழ்ச் சொற்கள் என்று கென்னடி கூறியது தவறு என்று நானும் நிரூபித்து கட்டுரை எழுதினேன். நீர் என்ற ரிக்வேதச் சொல் கிரேக்கத்திலும் இருப்பதால் அது தமிழ் சொல் என்று சுநீத் குமார் சாட்டர்ஜி எழுதியது தவறு என்றும் ஒரு கட்டுரையில் காட்டினேன்.

 

இப்பொழுது எல்லாவற் றை யும் மறந்துவிட்டு உலக மொழிகள் அனைத்தும், தமிழ்–சம்ஸ்கிருத மூல மொழியில் இருந்து வந்தன என்று பார்த்தால் அதுவே சரி என்று தோன்றுகிறது. கி.மு 2500ஆம் ஆண்டிலேயே எகிப்திய பிரமிடுகளில் “பெண்ணு” இருப்பதால் என் கருத்து மேலும் வலுப்படுகிறது.

 

–subham—