120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்!– 6 (Post No.2843)

buddha gold

Article written by S.NAGARAJAN

 

Date: 267May 2016

 

Post No. 2843

 

Time uploaded in London :–  7-53 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact swami_48@yahoo.com

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 6

 

ச.நாகராஜன்

 

 

ஸு யுன்னுக்கு இப்போது வயது 61. அவரது அதிசய அனுபவங்கள் தொடர்ந்து கொண்டே இருந்தன.

ஒரு நாள் சிதிலமடைந்திருந்த ஆலயம் ஒன்றில் அவர் நுழைந்தார். அங்கு தங்க எண்ணினார். அங்கு உடைந்திருந்த சவப்பெட்டி கிடந்தது. அதனுடைய மூடி தலைகீழாக இருந்தது.  அது ஒரு பழைய சவப் பெட்டி என்பதால் அதன் மீது படுத்து தூங்க எண்ணினார் ஸூ யுன்.

ந்ள்ளிரவானது. சவப்பெட்டியினுள்ளே ஏதோ ஒரு அசைவு தெரிந்தது.

திடீரென்று எதிர்பாராத விதமாக ஒரு குரல் கேட்டது.

“நான் வெளியில் வர விரும்புகிறேன்”

உடனே ஸு யுன் கேட்டார்: “யார் நீ? மனிதனா? பேயா, பிசாசா?”

“ஒரு மனிதன்” பதில் வந்தது.

“நீ யார்?”

“ஒரு பிச்சைக்காரன்”

சிரித்தவாறே ஸு யுன் சவப்பெட்டியின் மேலிருந்து எழுந்தார். உள்ளிருந்து அவலட்சணமான பிச்சைக்காரன் ஒருவன் வெளியே வந்தான்.

அவன் ஸு யுன்னைப் பார்த்து, “ நீ யார்?” என்று கேட்டான்.

“நான் ஒரு துறவி” என்றார் ஸு யுன்.

 

buddha in SL

அந்தப் பிச்சைக்காரனுக்கு அவர் மேல் ஒரே கோபம். தன் மண்டையை  அமுக்கி அவர் உடைத்து விட்டதாக அவனுக்கு எண்ணம். அவன் அவரைத் தாக்க வந்தான்.

ஸு யுன் புன்சிரிப்புடன் கூறினார்” “ நீ இருப்பது தெரியாமல் நான் சவப்பெட்டியின் மீது படுத்தேன். உன்னால் அசையக்கூட முடியவில்லை. இப்போது எப்படி என்னைத் தாக்கப் போகிறாய்?”

அவன் மௌனமானான. வெளியில் சென்று சிறுநீர் கழித்து விட்டு வந்து மீண்டும் படுத்து விட்டான்.

மறு நாள் சூரியோதயத்திற்கு முன்னர் ஸு யுன் அங்கிருந்து கிளம்பி விட்டார்.

அப்போது ஷாங்டாங் மாநிலத்தில் பாக்ஸர் இயக்கம் என்ற புரட்சிக்காரர்களின் இயக்கம் ஆரம்பமாகி இருந்தது.

ஒரு நாள் புரட்சிக்காரரில் ஒருவன் திடீரென அவர் முன் வந்து துப்பாக்கியை நீட்டினான்.

“நீ சாவதற்குப் பயப்படுகிறாயா?” என்று அவன் கேட்டான்.

“”எனது விதி நீ சுட்டுத் தான் முடிய வேண்டும் என்றிருந்தால், துப்பாக்கியால் என்னைச் சுடு” என்றார் அவர்.

அவர் கலங்காமல் இப்படிச் சொன்னதால் அசந்து போன அவன்,  “நீங்கள் போகலாம்” என்று அவரை விட்டு விட்டான்.

இந்த இயக்கம் சற்று தீவிரம் அடையவே ஸூ யுன் பீஜிங்கிற்குத் திரும்பினார்.

பின்னர் மவுண்ட் ஹாங்-லோ என்ற மலையில் புத்தரின் திருநாமத்தை உச்சரிக்கும் ஒரு கூட்டத்தில் பங்கு கொள்ள அங்கு சென்றார். அங்கு 87000 காட்டிஸ் எடையுள்ள வெங்கல மணியைக் கண்டார் ( ஒரு காட்டிஸ் என்றால் ஒரு பிண்ட் எடை) அது 15 அடி உய்ரமுள்ளது. 7 அடி நீளமுள்ள மணி அடிக்கும் நாக்கைக் கொண்டது. அதன் குறுக்களவோ 14 அடி!

அந்த  மணியின் வெளிப்புறத்தில் “அவதமசக சூத்ரங்கள்” தெளிவாக முழுதுமாக பொறிக்கப்பட்டிருந்தது!

இந்த மணியை தன் தாய் முக்தி பெறுவதற்காக  மிங் வமிசத்தைச் சேர்ந்த மன்னரான செங் ஸு இந்த ஆலயத்திற்கு கொடையாக அளித்திருந்தார் ( அவர் காலம் 1403-24)

பாக்ஸர் இயக்கம் உச்ச கட்டத்தை அடைய எங்கும் ஒரே இரத்தக் களரி.

கடைசியில் வைசிராய் சென் சுவான்-சுவான் அந்தப் பிராந்தியத்திற்கு வந்தார். அவ்ர ஸூ யுன்னை  வோ லாங் ஆலயத்திற்கு பிரார்த்தனை புரிய அழைத்தார். கடுமையான பஞ்சத்தைத் தீர்க்குமாறு அவர் வேண்டிக் கொள்ள ஸூ யுன் பிரார்த்தனை செய்தார்.

அங்கு மலையில் ஒரு துளி நீர் கூட இல்லை. காலையில் கிடைக்கும் பனித்துளிகளைச் சேகரித்து அதை ஸூ யுன் அருந்தினார், அங்கு அவர் வளர்த்த மூலிகைகளே அவருக்கு உணவு.

நாட்கள் உருண்டோடின. ஒரு நாள் ஃபாசெங் உள்ளிட்ட சில துறவிகள் அவரது குடிசைக் கதவைத் திறந்தனர்.

உள்ளே இருந்தது ஸூ யுன். அவர்கள் அதிசயித்துப் போனார்கள்.

“உங்களைக் காணவே காணோமே. இங்கா அமைதியாகப் படுத்திருக்கிறீர்கள்?”

ஸூ யுன் கூறினார்: “இங்கே” என்பதை விட்டு விடுங்கள். “அங்கே” எப்படி இருக்கிறது என்பதைச் சொல்லுங்கள்!”

அனைவரும் சிரித்தனர்.

அவரது யாத்திரை தொடர்ந்தது.

-தொடரும்

 

 

கம்ப ராமாயணத்தில் பஞ்ச மா பாதகம்- 5 பாவங்கள்(Post No.2838)

murder-laurie-silva

Article written by London swaminathan

 

Date: 25 May 2016

 

Post No. 2838

 

Time uploaded in London :–  11-00 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 Drug Abuse 029-0053

ஐந்து தீய செயல்களை இந்துக்கள் பெரிய பாவச் செயல்களாகக் கருதுகின்றனர். அவை

கள், களவு, கொலை, பொய், காமம் (பிறர் மனைவியை விரும்பும் காமம்).

ஓதநீர் மண் இவை முதல் ஓதிய

பூதம் ஓர் ஐந்தினில் பொருந்திற்று அஞ்சியே

வேத நூல் வரன் முறை விதிக்கும் ஐம்பெரும்

பாதகம் திரண்டு உயிர்ப் படைத்த பண்பினான்

-ஆரண்ய காண்டம், கவந்தன் படலம், கம்ப ராமாயணம்

பொருள்:–

கவந்தன் என்னும் அசுரன் பஞ்ச பூதங்களால் மட்டும் ஆனவன் அன்று; பஞ்ச மா பாதகங்கள் ஒன்று சேர்த்து ஒரு உருவம் செய்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தானாம்.

அந்தக் கவந்தன், குளிர்ச்சி பொருந்திய நீரும் பூமியும் ஆகிய இவை முதலாகக் கூறப்பட்ட பஞ்ச பூதங்களினால் இவன் உடல் ஆக்கப்பட்டது அல்லாமல், வேத நூல்கள் முறைப்படி உரைக்கும் கள், களவு, பிறர் மனை விரும்புவதாகிய காமம், பொய், கொலை ஆகிய பஞ்ச மா பாதகங்கள் ஒன்றாகச் சேர்த்து உயிர்பெற்று வந்தவன் என்னும் தன்மை உடையவன்.

 

பகவத் கீதை

பகவத் கீதையில் (1-36) அர்ஜுனன், போர் புரிய மறுத்து அதற்குப் பல காரணங்களைக் கூறுகிறான். அதில் ஒன்று கொடும் பாவிகளான, திருதராஷ்டரன் பிள்ளைகளான கௌரவர்களைக் கொன்றால் மிகவும் பாபம் வருமே என்கிறான். கொடும் பாவிகள் என்பதற்கு அர்ஜுனன் பயன்படுத்தும் சொல், ‘ஆததாயின:’ என்பதாகும்.

lies_377131546 (1)

யார் ஆததாயினர்கள் என்பதை ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகம் அழகாக விவரிக்கிறது. அதில் பஞ்ச மஹா பாதகங்களோடு, ‘தீ வைத்தல்’ என்ற மற்றொரு பாபமும் சேர்க்கப்படுகிறது:–

 

அக்னிதோ கரதச்சைவ சஸ்த்ரபாணிர்த் தனாபஹ:

க்ஷேத்ர தார ஹரச்சைவ ஷடேதே ஹ்யாததாயின:

 

பொருள்:

தீவைப்பவன், விஷம் வைப்பவன் (கொலை), ஆயுதம் கொண்டு ஆயுதமில்லாதவரைக் கொல்பவன், பிறர் பொருளை அபகரிப்பவன், பிறர் நிலத்தை அபகரிப்பவன், பிறர் மனைவியை அபகரிப்பவன் – இந்த ஆறு பேரும் ஆததாயிகள் (கொடும் பாவிகள்) எனப்படுவர்.

ஆக வேத காலம் முதல் இந்தப் பாவப் பட்டியல் இருப்பதால்தான் “வேத நூல் வரன் முறை விதிக்கும் ஐம்பெரும் பாதகம்” என்று கம்பன் சொல்கிறான். வேத நூல்களைக் கரைத்துக்குடித்தவன் கம்பன்!

 

சிறுபஞ்ச மூலத்தில், காரியாசான் கொஞ்சம் மாறுதலான பாவப் பட்டியல் தருகிறார்:

பொய்யாமை பொன் பெறினும் கள்ளாமை மெல்லியலார்

வையாமை வார்குழலார் நச்சினும் – நையாமை

ஓர்த்துடம்பு பேருமென்று ஊன்வாய் உண்ணானேல்

பேர்த்துடம்பு கோடல் அரிது

பொருள்:-

ஒருவர்க்கு தங்கக் கட்டிகள் கிடைக்கும் என்றாலும் பொய் சொல்லாதிருத்தல், திருடாமல் இருத்தல், தன்னைவிட வலிமை குறைந்தவரை திட்டாமை, பெண்களே மேலே வந்து விழுந்தாலும் அவர்களை விரும்பாமை, உடல் மெலிகிறதே என்று எண்ணி ஆடு, மாடு, கோழிகளைக் கொன்று உண்ணாமை – இந்த ஐந்தையும் பின்பற்றுவோருக்கு மறு பிறவி இல்லை; முக்தி கிட்டும்.

theft

தம்மபதம்

இதையே புத்தமதத்தினரின் வேத நூலான தம்மபதத்திலும் புத்தர் கூறுவார்:-

யார் ஒருவன் மற்ற உயிரைப் பறிக்கிறானோ (கொலை), யார் ஒருவன் தனக்குக் கொடுக்கப்படாததை எடுத்துக் கொள்கிறானோ (களவு), யார் ஒருவன் பிறர் மனைவியை அனுபவிக்கிறானோ (காமம்), யார் ஒருவன் பொய் சொல்கிறானோ, யார் ஒருவன் மதுபானம் அருந்துகிறானோ அவன் தனக்குத்தானே வேர் செல்லும் ஆழத்துக்குக் குழி பறித்துக் கொள்கிறான். (தம்மபதம் -246, 247)

ஆன்றோர் சொல்லை மனதில் கல்லெழுத்தாகப் பதித்து, அவர் சொற்படி நடப்போம்.

 

–சுபம்–

 

 

 

ஆனந்த ராமாயணத்தில் ஒரு புதுக்கதை (கட்டுரை எண். 2814)

ராம சீதா

Written by london swaminathan

 

Date: 15 May 2016

 

Post No. 2814

Time uploaded in London :–  17-24

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

ராமரும் லெட்சுமணரும் வனவாசத்துக்குப் புறப்பட்டனர். சீதையுடன் கோதாவரி நதிக்கரையில் இருக்கும் பஞ்சவடி என்ற இடத்தை அடைந்தனர். ஐந்து ஆலமரங்கள் அழகாக ஒரே இடத்தில் இருந்ததால் அந்த இடத்துக்கு சம்ஸ்கிருதத்தில் பஞ்சவடி ( தமிழில் 5 ஆலமரம்) என்று பெயர்.

 

அங்கே பர்ணசாலை அமைக்க தீர்மானித்தனர் (இலைகளால் வேயப்படும் குடிசைக்கு பர்ணசாலை என்று சம்ஸ்கிருதத்தில் பெயர்). இங்கே பர்ணசாலை அமைக்க, இந்த இடத்துக்குச் சொந்தக்காரரைச் சந்தித்து அனுமதி பெற்று வா என்று லெட்சுமணனை ராமபிரான் அனுப்பினார்.

 

லெட்சுமணன், அந்த இடத்தின் சொந்தக்காரரைத் தேடிப்போகையில் ஒரு மரத்துக்கு அடியில் ஒரு சிறு உருவம் தோன்றியது. அவர்தான் அந்த இடத்தின் சொந்தக்காரர் என்று லெட்சுமணன் நினைத்தான். அவரிடம் அனுமதி பெறுவதற்காக அவன் அங்கே தியானத்தில் அமர்ந்தான். அவனது தியானத்தில் ஒரு உருவம் பற்றிய வருணனை மனக் கண்கள் முன்னால் வந்தது. அதாவது குணம் குறியுடையதாக ஒரு உருவம் கையால் நாக்கை இழுத்துப் பிடிப்பது போலும், மற்றொரு கையால் கௌபீனத்தை (கோமணத்தை) இழுத்துப் பிடிப்பது போலும் கண்டான். தியானம் முடிந்தவுடன் ராமனிடம் வந்து தான் கண்ட காட்சியைச்சொன்னான்.

RAMA ARCH

இராமன் உடனே நமக்கு உத்தரவு கிடைத்துவிட்டது. நாம் குடிசை அமைக்கும் பணியைத் துவக்கலாம் என்றான்.

எப்படி அண்ணா, உத்தரவுகிடைத்தது என்று நினைக்கிறாய்? என்று இளவல் (தம்பி) வினவினான்.

 

நாக்கை இழுத்துப் பிடிக்கும் காட்சி– எவனுக்கு சுவையையும், சொல்லையும் அடக்கி ஆளும் திறன் உண்டோ என்பதையும் கோமணத்தை இழுத்துப்பிடிக்கும் காட்சி— எவனுக்கு காமத்தை அடக்கி ஆளும் திறன் உண்டோ — அவனுக்கு எங்கும் எல்லா உரிமையும் உண்டு என்பதையே காட்டுகிறது என்று ராமன் விளக்கினான். நாம் அந்நெறியில் பிறழாது வாழ்வதால் நமக்கு உத்தரவாகிவிட்டது என்றான்.

 

இருவரும் குடில் அமைக்கும் பணியைச் செவ்வனே செய்து முடித்தனர்.

‘யா காவாராயினும் நா காக்க’ – என்ற வள்ளுவன் சொல்லும், ‘இராமன் இருக்கும் இடத்தில் காமன் இரான்’ – என்ற பெரியோர் வாக்கும் இந்த நிகழ்ச்சிக்குப் பொருத்தமாக இருக்கிறது.

 

ஆனந்த ராமாயணம்

‘300 ராமாயணம்’ என்று ஒருவர் ஆங்கிலத்தில் நூல் எழுதினார். ஆனால் நான் பிரிட்டிஷ் லைப்ரரிக்கு போகும் ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய தமிழ் ராமாயணம் கிடைத்து வருவதைப் பார்க்கையில் 3000 ராமாயணங்கள் இருக்கலாம் என்று எழுதினேன். சென்ற வாரம் பிரிட்டிஷ் நூலகத்துக்குச் சென்ற போது ராமஸ்வாமி அய்யர் என்பவர் பாடல் வடிவில் சில ராமாயண காண்டங்களை இயற்றி அதற்கு ‘ராமஸ்வாமீயம்’ என்று பெயர் கொடுத்திருப்பதைக் கண்டேன். அந்த நூலின் சில பக்கங்களையும் அட்டையையும் ‘பேஸ்புக்கில்’ வெளியிட்டேன்.

 

ஆனந்த ராமாயணம் என்பது வால்மீகி, கம்பன், துளசி ராமாயணம் அளவுக்குப் பிரசித்தமாகவில்லை. இதையும் வால்மீகி இயற்றினார் என்றே சொல்லுவர். இதில் ஒன்பது காண்டங்களும் 12,252 ஸ்லோகங்களும் சம்ஸ்கிருதத்தில் உள்ளன. வால்மீகி ராமாயணத்தில் காணப்படாத பல விஷயங்களும் கதைகளும் இதில் இருக்கின்றன.

-சுபம்-

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 5 (Post No.2800)

HUGE BUDDHA

Written  BY S NAGARAJAN

Date: 11 May 2016

 

Post No. 2800

 

 

Time uploaded in London :–  6-30 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 5

ச.நாகராஜன்

 

ஸு யுன்னுக்கு இப்போது வயது 58. அவருக்கு ஒரே ஒரு வருத்தம்.

 

 

தன் தாயை ஒரு முறை கூட அவர் பார்த்ததில்லை. அவர் பிறக்கும் போதே தாய் இறந்து விட்டாரே! ஒரே ஒரு முறை தன் தாயைக் காண அவர் விரும்பினார்.

 

 

தன் தாய்க்கு  முக்தி அளிக்க ஒரு கடுமையான சபதத்தை அவர் மேற் கொண்டார். அது தான் விரலை எரிக்கும் விரதம்.

இதை அசோகா மடாலயத்தில் நிறைவேற்றுவது என்று அவர் நிச்சயித்தார்.

 

 

அங்கு புத்தரின் எச்சங்கள் இருந்தன. அசோகா மடால்யம் சென்று புத்தரின் எச்சங்களுக்கு தன் மரியாதையுடன் கூடிய நமஸ்காரத்தை அவர் செய்தார்.

 

 

ஒரு நாள் இரவு திடீரென்று மிக நீளமான  கோல்டன் ட்ராகன் (தங்க கடல்நாகம்) மிக பிரகாசமாக அவர் கண்ணுக்குத் தெரிந்தது. அங்கு அறைக்கு முன்னால் இருந்த குளத்தில் அது இறங்கியது. அதன் முதுகின்  மீது  ஸு யுன்  ஏறி அமர்ந்தார். அது வானத்தில் பறந்தது.

அடடா, மலைகள், நீரோடைகள், மரங்கள், மலர்கள் என அழகுக்கு அழகு தரும் அனைத்தையும் அவர் பார்த்தார். மிக கம்பீரமான அதி அழகான அரண்மனைகள், மாளிகைகளை எல்லாம் அது கடந்தது. ஒரு அறையை அடைந்தது.

ஸு யுன்  அந்த அறையில் தன் அன்னையைக் கண்டார். “அம்மா! தயவு செய்து இந்த ட்ராகனின் மீது ஏறி மேற்கு சுவர்க்கத்தில் உள்ள அமிதாப புத்தரை அடையுங்கள்’ என்று கூறினார்.

ட்ராகன் மீண்டும் கீழிறங்க  ஸு யுன்  கண்ணை விழித்தார். மனமும் உடலும் குளிர்ந்திருக்க பார்வையோ முழுவதும் அறியத்தக்க விதத்தில் தீர்க்கமாக இருந்தது.

 

 

அந்த ஒரே ஒரு தடவை தான் அவர் தன் அன்னையைப் பார்த்தார்!

 

 

தினமும் நமஸ்காரம் செய்வது தொடர்ந்தது. ஒரு நாள் திடீரென்று உடல் நலம் சீரில்லாமல் போனது.

உட்காரக் கூட முடியவில்லை. எல்லோரும் ஸு யுன்னின் இறுதி நாள் நெருங்கி விட்டது என்றே நினைத்தனர்.

தன் விரதத்தை முடிக்காமல் சாகக் கூடாது என்று நினைத்தார் அவர்.

 

 

ஆனால் இந்த உடல் நிலையில் விரலை எரிப்பதாவது! அனைவரும் அதை எதிர்த்தனர்.

 

ஸு யுன்  கண்ணீர் ததும்ப மடாலய நிர்வாகியாக இருந்த துறவியை நோக்கி, “எனக்கு உடலும் உயிரும் தந்த அன்னைக்கு நான் செய்ய வேண்டிய க்டனைச் செய்ய விரும்புகிறேன். அதில் என் உயிர் போனால் தான் என்ன?” என்றார்.

 

 

அந்த துறவிக்கோ வயது 21 தான்.  அவர் பெயர் ஸான் லியாங். அவர் கண்ணீர் ததும்ப, “ அதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன். நாளை தான் நிச்சயிக்கப்பட்ட நாள். அனைவருக்கும் ஆகும் உணவுக்கான செலவு என்னுடையது” என்றார்.

மறு நாள் வந்தது.அனைவரும் கூடினர். ஒருமனப்பட்ட மனதோடு புத்தரை துதித்து வணங்கி ஸு யுன் விரலை எரிக்கும் சடங்கைத் தொடங்கினார். விரல் கொஞ்சம் கொஞ்சமாக தீபத்தில் காட்டப்பட்டது!

 

 

அசோகா மடாலயத்தில் புத்தரின் எச்சங்கள் ஏராளம் இருந்தன. புத்தரின் 84000 எச்சங்களை அசோகர் வெவ்வேறு ஸ்தூபங்களில் நிறுவி அந்த எச்சங்களை பூமிக்கடியில் புதைக்குமாறு  கடவுளருக்கு ஆணையிட்டார். கிழக்கில் சீனாவில் இது 19 இடங்களில் உள்ளன. இவற்றில் இரண்டு இடங்களீல் ஒன்று மவுண்ட் வு –டாய் இன்னொன்று அசோகா மடாலயம்.

மவுண்ட் வு-டாயில் ஸ்தூபத்திற்கு அடியில் எச்சம் உள்ளது. அதைக் காண முடியாது.ஆனால் அசோகா மடாலயத்திலோ அது டாய்- காங் என்ற அரசன் அரசாண்ட போது பூமிக்குள்ளிருந்து வெளியே வந்து விட்டது. அங்கே ஒரு ம்டாலயம் ஸ்தாபிக்கப்பட்டு புத்தரின் எச்சம் ஒரு தூணில் வைக்கப்பட்டது.

வரிசையாக நின்று ஒவ்வொருவரும் ஸ்தூபத்திற்கு அருகில் சென்று வணக்கம் செலுத்த வேண்டும்.

 

 

அங்கு தரிசிப்பவரின் மனப் பக்குவத்திற்கு ஏற்ப எச்சம் சிறிதாகவோ பெரிதாகவோ அவர்களுக்குத் தோன்றும். சில்ர் ஒன்றைக் காண்பர். சிலரோ பலவற்றைக் காண்பர். வண்ணமும் மாறும் – பார்ப்ப்வர்களின் நிலைக்குத் தக்கபடி.

 

ஸு யுன் எச்சத்தை தரிசித்த பின்னர் கூடியிருந்த அனைவருக்கும் வணக்கத்தைத் தெரிவித்து தன் அறைக்கு மீண்டார்.

அவர் மனம் திருப்தி அடைந்திருந்தது.

தாயை தரிசித்ததோடு  மட்டுமின்றி அவ்ரது முக்திக்கும் அவர் வழி வகுத்து விட்டார்!

-தொடரும்

நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள் – 5 (Post No.2791)

2srirangam

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 8 May 2016

 

Post No. 2791

 

Time uploaded in London :–  5-36 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

(THIS WAS WRITTEN BY MY BROTHER S NAGARAJAN FOR THE TAMIL MAGAZINE JNANA ALAYAM:—London swaminathan)

 

 

ஞான ஆலயம் பத்திரிகை மே 2016 இதழுடன் நட்சத்திரங்கள் பூஜித்த பரிகார தலங்கள் என்ற இலவச இணைப்பு இதழ் வெளி வந்திருக்கிறது. அதை இங்கு வழங்குகிறோம்..

சிறந்த ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம் பத்திரிகை சென்னையிலிருந்து வெளி வருகிறது. இதன் ஆசிரியப் பொறுப்பில் பெரும் பணி ஆற்றி வருபவர் திருமதி மஞ்சுளா ரமேஷ். சந்தா உள்ளிட்ட விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :: editorial @ aalyam.co.in.

 

நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள் – 5

 

.நாகராஜன்

 

IMG_9630 (2)

ஏகாதசி –  சிந்தாமணி என்ற காவேரியில் ஏகாதசியில் ஸ்நானம்.

ஜம்புகேஸ்வரம், மாத்ருபூதம் ரங்கநாதர் இம்முவர்களுடைய வீக்ஷண்யம் இருப்பதால் சிந்தாமணி என்று பெயர் வந்தது. எல்லா ஏகாசதியும் விசேடமே. மார்கழி ஏகாதசி மிகவும் விசேடம். சிதம்பரம் வடமேற்கில் ஏகாதசி விசேடம்

 

துவாதசி – ஐம்பு தீர்த்தம்,  ஸ்ரீரங்கம் லட்சுமி ஸந்நிதானத்தில் உள்ள தீர்த்தம்

 

திரயோதசி – கோகர்ணம் கோடி தீர்த்தம்

 

சதுர்த்தசி – கோகர்ணம்,  ஸ்ரீகாளஹஸ்தி, கேதாரம்,காசி, மத்யார்ச்சுனம், திருவையாறு, மாயூரம் ஆகிய தலங்களில் சிவராத்திரி சதுர்த்தசி தவிர மாயூரத்திலும் கேதாரத்திலும் நாக சதுர்த்தசி விசேடம். தீபாவளியோடு கேதார பூஜை முடிவு பெறும்.

திருவையாறு: காவேரி வடகரையில் ஒரு மைல் தொலைவில் உள்ளது. இதற்கு தக்ஷிண கைலாஸம் என்று பெயர்.பஞ்சநத க்ஷேத்திரம். தர்மஸம்வர்த்தனி சமேத பஞ்சநாதேசுவரர் ஆலயம். அப்பருக்கு கைலாஸ தரிசனம் கொடுத்த தலம்.இந்திரன், வாலி ஆகியோரும் பூஜித்த தலம்.

 

 

மாயூரம்: காவேரி தென்கரையில் ஒரு மைல் தூரத்தில் உள்ள தலம். ஒரு அசுரன் காவேரி ஜலத்தைக் குடிக்க ஆரம்பித்தான். பரமசிவன் அவனை வதம் செய்து, தான் அந்த தீர்த்தத்திலேயே வசித்தார். மயூர நாதர் கோவில் உள்ளது. தேவி மயில் ரூபம் எடுத்து ஈஸ்வரனை பூஜித்த தலம்.இந்திராணியும் இங்கு பூஜித்தாள்.

 

அமாவாசை, பௌர்ணமி – காளத்தி, மல்லிகார்ஜுனம் (சிவராத்திரி) அமாவாசை, பௌர்ணமி. ஸகலதீர்த்தம், மாயூரம், அர்த்தோதயம். மஹோதயம்.

 

 

வாரங்கள் பூஜித்த தலங்கள்

 

ஞாயிறு:  திருநாகேஸ்வரம், ஸ்ரீ வாஞ்சியம், திருத்தானமுடையார் கோயில், சாயாவனம்

திங்கள்: திருக்கடையூர்,(திருக்கடவூர்), சிவபுரம், திருவாலவாய், காசி

1859 tiruvaiyaru ther

செவ்வாய்: வைத்தீசுவரன் கோவில், அத்திப்புலியூர், இலந்துறை

புதன்: வெண்காடு (சந்திர புஷ்கரணி)

 

வியாழன்: பெருஞ்சேரி, திருக்கொண்டீசுவரம், கச்சி, கழுக்குன்றம்

வெள்ளி: காஞ்சி (வாமதீர்த்தம்)

சனி: திருநள்ளாறு, ஆரூர்

 

மாதங்களும் பர்வங்களும் பூஜை செய்த இடங்களை ஆகமங்கள் மூலம் அறியலாம்.

 

மேலே கண்ட குறிப்புகளை ஆழ்ந்து ஊன்றி கவனித்து அவரவர்கள் தங்கள் தங்களுக்குரிய தலங்களுக்குச் சென்று வழிபடலாம்.

 

mahamakam tank view

தலங்கள் பற்றிய அபூர்வ புத்தகங்கள்

தல முறை பற்றி அபூர்வமான புத்தகங்கள் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் வெளியாகி உள்ளன.

 

 

திரு இராமசுவாமிப் பிள்ளை அவர்கள் தலமுறைப் பதிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் பயனபடுத்தியது போலவே  ஸ்ரீ உ.வே.சாவும் தொடர் எண்ணிட்டு தலங்கள், தீர்த்தங்கள், விமானங்கள் ஆகியவற்றின் சிறப்புகளைத் தொகுத்துள்ளார். 8135 என்ற தொடர் எண்ணை இவரது குறிப்புகளில் காணும் போது எண்ணாயிரத்திற்கும் மேற்பட்ட எத்துணை விஷயங்களை இவர் சேர்த்திருக்கிறார் என்ற பிரமிப்பு ஏற்படுகிறது. ஆனால் அவை என்னவாயின?!! வருங்காலம் மீட்டுத் தருமா?

 

 

இது தவிர காசியைப் பற்றிய அபூர்வ விவரங்களை காஞ்சி பரமாசார்யாள் ஆசியுடன் தொகுத்துள்ளவர் திரு ரா.வீழிநாதன். (1987)

 

இன்னொரு தலங்களைப் பற்றிய குறிப்பிடத் தகுந்த அபூர்வமான புத்தகம்  ஸ்ரீகாவேரி ரஹஸ்யம் (1962) என்ற நூலாகும்.காஞ்சி பரமாசார்யாள், தமது தொடர்ச்சியான முயற்சியின் மூலம் பல பக்தர்களிடமும் அரிய தல விஷயங்களைச் சேகரிக்குமாறு ஆணையிட்டார். இந்த அபூர்வமான குறிப்புகள் அனைத்தும் ஓய்வு பெற்ற கல்வி இலாகா அதிகாரியான  ஸ்ரீ ஈ.வி. கோபாலையரிடம் ஒப்படைக்கப்பட்டன. அவர் காவேரி நதியை ஒட்டி உள்ள வடபுற க்ஷேத்திரங்கள், தென்புற க்ஷேத்திரங்கள், காவேரி வளர்த்த மகான்கள், காவேரி ப்ரதக்ஷிண விதி, ஸ்நான முறை, காவேரி பற்றிய இலக்கியக் குறிப்புகள், புராணக் குறிப்புகள் உள்ளிட்ட ஏராளமான விஷயங்களைத் தொகுத்து காவேரி கலைக் களஞ்சியமாக ஒரு நூலை வெளியிட்டார்.

 

 

ஆன்மீக அன்பர்கள் தல விசேடங்களைப் பற்றிய உண்மையான தொன்மக் குறிப்புகளை அறிய வேண்டுமெனில் இது போன்ற புத்தங்களையும் இது பற்றி நன்கு அறிந்த வல்லாரையும் நாட வேண்டும்.

ganga-arati-modi-abe

Prime Minister of Japan Shinzo Abe and Indian Prime Minister Narendra Modi performing Ganga Arti at Dhashvmegh Ghat in Varanasi on saturday.Express photo by Vishal Srivastav 12.12.2015

வைக்கோல்போரில் ஊசியைக் கண்டெடுத்தவர்கள் நமது தேடலைச் சுலபமாக்கி விட்டார்கள். அவர்களுக்கு வரும் காலமெல்லாம் நன்றி சொல்லும்!

–Subham–

********

 

முருகப் பெருமானும் எண்களும்: ஒரு ‘க்விஸ்’ (Post No.2769)

thanga murukan

Compiled by london swaminathan

 

Date: 30 April 2016

 

Post No. 2769

 

Time uploaded in London :– 6-46 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

நீங்கள் முருக பக்தரா? எங்கே, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள் பார்ப்போம். இதில் பத்துக்கு பத்து கிடைக்கவில்லையென்றால் நான் கடந்த ஐந்து ஆண்டுகளில் இதே பிளாக்கில் போட்ட 25-க்கும் மேலான கேள்வி பதில்களுக்குப் போங்கள். ஏதாவது ஒன்றிலாவது நூற்றுக்கு நூறு எடுக்க முடிந்தால் நீங்கள் மெத்தப் படித்தவர். மிகவும் குறைவாக மதிப்பெண்கள் கிடைத்தால் மெதுவாகப் படிப்பவர்கள்!!!

muruga,doddappalapura,karnataka

1.முதலில் ஒன்று என்ற எண்ணுடன் துவங்குவோம். எந்த ஓரெழுத்து மந்திரத்தின் பொருளை சிவனுக்கு முருகன் உபதேசித்தார்? எங்கு?

 

2.முருகனுக்கு எத்தனை மனைவியர்? யார் அவர்கள்?

 

3.திருத்தணியில் எத்தனை படிகள் உள்ளன?

4.கதிர்காமத்தில் எத்தனை திரைகள் உள்ளன?

5.நமக்கு திருப்புகழ் பாடல்கள் எவ்வளவு கிடைத்துள்ளன?

6.பழனியிலுள்ள முருகன் சிலை எத்தனை பொருட்களால் ஆனது?

7.முருகப் பெருமானுடன் தொடர்புடைய முக்கிய எண் எது?

8.பழனி மலையில் எத்தனை படிகள் ஏறிச் சென்றால் முருகனை தரிசிக்கலாம்?

9.மலேசியாவில் பத்துமலைக் குகைக் (Batu Caves) கோவிலில் எத்தனை படிகள் இருக்கின்றன?

10.நக்கீரரை பிடித்த பூதம் அவரை எத்தனையாவது ஆளாகப் பிடித்தது?

 

mayil murugan

விடைகள்: 1.ஓம், சுவாமி மலை 2.இரண்டு மனைவியர்:வள்ளி, தெய்வானை 3. மொத்தம் முன்னூற்று அறுபத்தைந்து படிகள் 4.ஏழு திரைகள்  5.அருணகிரிநாதர் பாடியது 16,000க்கும் மேலான  திருப்புகழ் பாடல்கள்; இன்று பட்டியலிடப்பட்டவை 1334; யாரேனும் 1300 அல்லது அதற்கு நெருங்கிய எண் சொன்னால் முழு மதிப்பெண். 6.நவபாஷாணம் எனப்படும் ஒன்பதுவகை மருந்துப் பொருட்களால் ஆன சிலை என்பது  ஐதீகம் 7.முருகப் பெருமானுடன் மிகவும் தொடர்புடைய எண் ஆறு; அவன் பெயரே ஆறுமுகன், ஷண்முகன், அவனது புகழ்பெற்ற தலங்கள் ஆறு படைவீடு, அவனை வளர்த்த கார்த்திகைப் பெண்கள் ஆறு பேர்; அவனது யந்திரம் அறுகோணம் 8.பழனியின் படிகள் 689 அல்லது 690 என்ற இரண்டும் சரியே; நாம் கடைசி படியைக் கோவிலாகவோ அல்லது அதையும் ஒரு படியாகவோ எண்ணலாம் 9.பாட்டு கேவ்ஸ் (Batu Caves) என்றும் பத்துமலை என்றும் அழைக்கப்படும் மலேசியாவின் புகல் மிகு முருகன் கோவிலில் 272 படிகள் உள 10. குகையில் 999 பேரை அடைத்து வைத்து ஆயிரமாவது ஆளாக நக்கீரரைப் பிடித்தது ஒரு பூதம்; அப்போது அவர் முருகன் அருள் வேண்டிப் பாடியதே திருமுருகாற்றுப்படை..

 

Earlier Quiz posted by me:
(1&2) 27 Star Quiz (In English and Tamil)
(3&4)Hindu Picture Quiz-1 (In English and Tamil)
5.தமிழ் தெரியுமா? Tamil Quiz—1
6.தமிழ் தெரியுமா? Tamil Quiz—2
7.Tamil Quiz—3 தமிழ் தெரியுமா?
8.Hindu Tamil Quiz (in Tamil)
9.Hindu Tamil Quiz (in Tamil)-2
10.Hindu Tamil Quiz (in Tamil)-3
11.Hindu Tamil Quiz (in Tamil)-4
12.Hindu Quiz–1
13.Hindu Quiz–2
14.Hindu Quiz–3
15.Hindu Quiz–4
16.Hindu Quiz on Holy Forests
17.காடுகள் பற்றி இந்து மதம்: கேள்வி பதில்
18.ராமாயண வினா விடை
19.பிள்ளையார் பற்றி வினா விடை
(20&21)Quiz on Saivaite Saints (Both Tamil and English)
22.சைவம் பற்றி வினா விடை
23 & 24) Quiz on Hindu Hymns in English and Tamil
25. Are you familiar with Number Four?
26. நீங்கள் நாலும் தெரிந்தவரா?

murugan vattam
Contact swami_48@yahoo.com

அர்ஜுனன் சபதமும், ராமன் சபதமும் (Post No.2766)

arjuna, bali, indonesia

PICTURE: ARJUNA IN INDONESIA

Translated by london swaminathan

Date: 29 April, 2016

Post No. 2766

Time uploaded in London :–  8-33

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

அர்ஜுனன் உறுதி மொழி (பிரதிக்ஞா)

ந தைன்யம் – என்றும் பரிதாபத்துக்குரிய நிலையை அடையமட்டேன்

ந பலாயனம் – என்றும் புறமுதுகு காட்ட மாட்டேன் (போரில்).

 

“அர்ஜுனஸ்ய பிரதிக்ஞே த்வே ந தைன்யம் ந பலாயனம்”

Xxx

tiruvallur rama

ஒரே சொல், ஒரே அம்பு

தத் ப்ரூஹி வசனம் தேவி ராக்ஞா யதபிகாங்க்ஷிதம்

கரிஷ்யே ப்ரதிக்ஞாதே ச ராமோ த்வினார்பிபாஷதே

வால்மீகி ராமாயணம், அயோத்யா காண்டம், 18-30

 

தேவி! நீ சொல். அரசனால் விரும்பப்பட்டராமன், இரண்டாவது முறை அம்பு தொடுப்பதுமில்லை; இரண்டாவது தடவை உறுதிமொழி செய்வதுமில்லை.

 

ராமனுக்கு சொல் ஒன்றே; அதிலிருந்து மாற மாட்டான். அதே போல அவன் ஒரு வில் விட்டால் போதும்; எதிரிகள் வீழ்வர். அதற்குப்பின், மற்றொரு அம்பைத் தொடுக்கும் தேவையே இராது.

 

த்வி: சரம் நாபிசந்தத்தே ராமோ த்விநார்பிபாஷதே— மஹாநாடகம்

இரண்டாவது அம்பு தொடுப்பது இல்லை; இரண்டாவது சொல் பேசுவதுமில்லை.

 

கைகேயி, சீதை, பரதன், அனுமன், சுக்ரீவன்,குகன், விபீஷணன் ஆகிய எல்லோருக்கும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றினான்.

இந்த இப்பிறவியில் சிந்தையாலும் இரு மாதரைத் தொடேன் (மனதாலும் மற்ற பெண்களை நினைக்க மாட்டேன் என்று சீதைக்கு வாக்குக் கொடுத்தான்). அதனால் தான் ராமர் இருக்கும் இடத்தில் காமன் இருக்க மாட்டான் என்பர் பெரியோர். மண், பெண், பொன் ஆசையைத் துறந்தவன் அவன். இலங்கையின் பொன்மயமான கோட்டைகளை லெட்சுமணன் புகழ்ந்த போது “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே” (ஜனனி ஜன்ம பூமிஸ்ச ஸ்வர்காதபி கரீயசி)

இந்த உறுதி மொழிகளால்தான் வில்லுக்கு விஜயன், சொல்லுக்கு ராமன் என்று உலகம் புகழ்கிறது.

xxx

 

RAMA ARCH

முந்தைய கட்டுரை

ராமனுக்கு ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் !!!

தமிழ் திரைப்படங்களில் ராமர் – 2 by ச.நாகராஜன்; Post No 1635; Dated 9th February 2015

 

–Subham—

 

 

வேதாந்த தேசிகர் வாழ்க்கையில் சுவையான சம்பவங்கள் (Post No.2730)

sri_vedanta_desika_makers_of_indian_literature_idg228

Written by london swaminathan

Date: 16 April, 2016

 

Post No. 2730

 

Time uploaded in London :– 8-50 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

DAYA-SATAKAM_BY_VEDANTA_D

வேதாந்த தேசிகர், ஸ்ரீ இராமனுஜர் காலத்தைத் தொடர்ந்து வந்த பெரிய வைஷ்ணவ ஆச்சார்யார்; தத்துவ வித்தகர்; கவிஞர்; பல நூற்கண்ட பெருமகனார். நூற்றுக்கும் மேலான தமிழ், சம்ஸ்கிருத நூல்களை யாத்தவர். மாலிக்காபூர் தலைமையில் வந்த முஸ்லீம் வெறியர்களின் தாக்குதலுக்குப் பின்னர், ஸ்ரீரங்கப்பெருமாளை கோவிலில் மீண்டும் ஸ்தாபிக்க ஊற்றுணர்ச்சி தந்தவர். இவர் இற்றைக்கு 750 ஆண்டுகளுக்கு முன் வழ்ந்தவர். வித்யாரண்ய ஸ்வாமிகளின் சம்காலத்தவர். இவருடைய பாதுகா சஹஸ்ரம் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்.

 

காஞ்சீபுரம் அருகிலுள்ள தூப்புலில் அவதரித்த வேங்கடநாதன் (பிற்காலப் பெயர் வேதாந்த தேசிகர்) ஆதி சங்கரர் போலவே இளம் வயதிலேயே வேத, வேதாந்த நூல்களில் கரைகண்டார். அவரைப் போலவே கீதை, உபநிஷதம் முதலியவற்றுக்கு விசிஷ்டாத்வைத பூர்வமாக உரையும் கண்டார். (ஆதி சங்கரர் அத்வைத பூவமாக உரைகண்டர்)

 

 

ஒரு நாள் சிற்பி ஒருவன் தேசிகரிடம் வந்து நீங்கள் சிற்ப நூலிலும் வல்லவராமே; என்னை வெற்றிகொள்வீரானால் உமது ‘சர்வ தந்திர சுதந்திரர் – என்னும் பட்டம் நீடிக்கும் அல்லது உமக்களிக்கப்பட்ட பட்டத்தை விட்டுவிட வேண்டும் என்றார்.

இது சிற்பியின் வேலை அல்ல, தன் மீது பொறாமை கொண்ட கும்பலின் வேலை என்பது வேதாந்த தேசிகருக்கு நன்கு தெரியும். பெருமாளின் அருளுடன் போட்டியில் வெல்லலாம் என்ற நம்பிக்கையுடன் அவரும் போட்டிக்கு இசைந்தார். ஆனால் தான் செய்யும் மூர்த்திக்குப் பீடம் அமைத்து அதை நிறுவும் பணியைச் சிற்பி செய்யவேண்டுமென்று தேசிகர் பதில் நிபந்தனை போட்டார். அதைச் சிற்பியும் ஏற்றான்.

 

என்ன விக்ரகம் செய்வதென்று எண்ணியபோது, அவருக்கு ஆவேசம் வந்தது. இடது கையில் கோசமும், வலது கையில்  ஞான முத்திரையும் உள்ள கோலத்தில் அமைக்கவும் என்று ஸ்ரீரங்கநாதரே உத்தரவிட்டார். அப்படியே தேசிகர், ஒரு விக்கிரகமும் செய்து கொடுத்தார்.

 

விக்கிரகததை வாங்கிய சிற்பி, அதில் கண்பார்வை சரியில்லை என்று சொல்லி, அதைச் சரி செய்வதாக, விக்கிரகத்தின் கன்னத்தில் ஆயுதத்தால் தட்டினான். உடனே எதிரேயிருந்த  தேசிகர் கன்னத்தில் ரத்தம் கசிந்தது. அங்குள்ளோர் உடனே விக்கிரகத்தில் பிழை இல்லை, சிற்பி செய்த பீடத்தில்தான் தப்பு என்று சொன்னார்கள்.

உடனே தேசிகரே பீடத்தை வாங்கிச் சீராக்கி, அதில் விக்கிரகத்தை எழுந்தருளச் செய்தார். பின்னர் சிற்பி, அவரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு, வந்த வழியே திரும்பிப் போனான்.

Xxx

eleven-rahasya-granthas-of-sri-vedanta-desika

டில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக்காபூர் தமிழ் நாட்டிற்குப் படையெடுத்து வந்து, மதுரை ஸ்ரீரங்கம் கோவில்களைச் சூறையாடினான். கோவிலை இடித்து டன் கணக்கில் தங்க நகைகளைக் கொள்ளையடித்தான். ஆனால் இதை முன்கூட்டியே அறிந்த பட்டர்கள், மூலஸ்தான விக்கிரகத்துக்கு முன்னால் ஒரு போலிச் சுவர் எழுப்பி அதுதான் கோவில் என்பது போலவும் சிலைகள் வேறிடத்துக்கு மாற்றப்பட்டன என்பன போலும் காட்டினர். உற்சவ விக்கிரகங்களை திருமலை/திருப்பதிக்கு அனுப்பினர். அதை எடுத்துச் சென்ற குழுவில் தேசிகரும் ஒருவர்.

 

அக்காலத்தில் செஞ்சி பகுதியை  கொப்பணாரியர் என்பவர் ஆண்டுவந்தார். அவருடைய ஆளுகையிலிருந்த அழகிய மணவாளம் என்ற கிராமத்திலிருந்த  சிங்கப்பிரான் என்பவன், முஸ்லீம் படைத்தலைவருடன் நட்பு ஏற்படுத்திக்கொண்டு, அவருடைய நம்பிக்கையைப் பெற்றான். எல்லா செல்வங்களையும் கொள்ளையடித்து அவனிடம் ஒப்படைப்பதாகவும் சொன்னான். துருக்கப்படைகள் அனைத்தும் அவரது கட்டுப்பாட்டில் வந்தது.

 

செஞ்சி அரசன் கொப்பணாரியனுக்குச் சிங்கப்பிரான் ஒரு ரகசிய கடிதம் எழுதி ஒரு குறிப்பிட்ட நாளன்று ஸ்ரீரங்கம் கோட்டைக் கதவுகளைத் திறந்து வைப்பதாகவும், செஞ்சி அரசன் படைகளுடன் வந்து அதைக் கைப்பற்றலாம் என்றும் கடிதத்தில் எழுதியிருந்தான். அந்தத் திட்டப்படி செஞ்சி அரசனும் திருவரங்கத்துக்குப் படைகளுடன் வந்து சேர்ந்தான். சிங்கப்பிரான், முன் ஜாக்கிரதையாக கண்ணனூரில் தங்கியிருந்த படைகளுக்கு மதுபான விருந்து வைத்து அதில் மயங்கி மூழ்கும்படி செய்து வைத்தான். கோட்டைக்குள் புகுந்து கோவிலுக்குள் வந்த செஞ்சி அரசன், அங்கு இருந்த மிலேச்சர்களை விரட்டிவிட்டு, வைணவ ஆச்சார்யார்களை மீண்டும் அழைத்து, கோவிலைச் சுத்தம் செய்து, அலங்கரித்து மீண்டும் உற்சவ மூர்த்திகளைக் கொண்டுவந்தார். மூலத்தானத்திலுள்ள கல்திரையை அகற்றி பெருமாள் சேவையை முன்போல் மீண்டும் துவக்கினார்.

 

திருவரங்கத்தில் நடந்த இந்த விருத்தாந்தங்களையெல்லாம் கேட்டறிந்த வேதாந்த தேசிகர் தம் பரிவாரம் புடை சூழவந்து பெருமாளைத் தரிசித்து ஆனந்தப் பரவசக் கடலில் மூழ்கினார். அப்பொழுது கோவிலிலிருந்த பட்டரின் வேண்டுகோளின்படி கொப்பணாரியர் செய்த அரும்பணியை இரண்டு ஸ்லோகங்களில் பாராட்டினார்.  அவை சேனை முதலியார் பிரகாரத்தில் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டன.

 

அவர் பாடிய பாடலின் பொருள்:-

“நீல நிறமான சிகரங்களோடு கூடி மக்களுக்குப் ப்ரீதியை உண்டாக்குகிற அழகிய மணவாளனை, உபய நாச்சிமாருடனும், திருமலையிலிருந்து இங்கே எழுந்தருளப் பண்ணி, (அதற்கு முன்) செஞ்சி  நாட்டிலே சில நாள் ஆராதனம் செய்வித்துப் பிறகு, துருக்கரை வெற்றி கொண்டு, பெருமாளை அவரது இடத்தில் எழுந்தருளச் செய்த, ஸ்படிகம் போல மாசுமருவற்ற புகழுடைய   கொப்பணாரியர் விசேஷமான பணிகளைச் செய்து ஸ்ரீரங்கத்தில் மீண்டும் கிருதயுகத்தை உதிக்கச் செய்தார்.”

VEDANTA_DESIKA_HIS_LIFE_WORKS_PHILOSOPHY_by_Satyavrata_Singh_Chowkhamba_Sanskrit_Series_1958

இதற்குப் பின்னர், தேசிகர் நாள்தோறும், அழகிய மணவாளனுக்கு மங்களாசாசனம் செய்துகொண்டு சுகமாக ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்து வந்தார்.

–சுபம்–

உங்கள் அதிர்ஷ்டத்தை அறிய தொடுகுறி சாஸ்திரம்! –பகுதி 1 (Post No 2728)

todu spare1

Hindu Astrology – Magic Square (I will give the English Translation separately)

Compiled by london swaminathan

Date: 15 April, 2016

 

Post No. 2728

 

Time uploaded in London :– 21-02

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

ஏதேனும் ஒரு காரியம் நிறைவேறுமா இல்லையா என்பதை அறிய நமது முன்னோர்கள் பல வழிகளைக் கையாண்டனர். ஜோதிடரிடம் ஜாதகத்தையோ, கைரேகையையோ காட்டி பலன் அறிவது அல்லது ரோட்டில் “சோசியம் பார்க்கல்லியோ, சோசியம்!” என்று கூவிக்கொண்டுவரும் நரிக்குறத்தி அல்லது குறிபார்க்கும் பெண்ணிடம் கேட்பது, அல்லது கோவில் மதில்சுவரை ஒட்டிக் கடை போட்டுள்ள கிளி ஜோதிடனிடம் கேட்பது என்று பல வழிகள் உண்டு. ஆனால் இதற்கு பணம் கொடுக்கவெண்டும்.

 

வீட்டிற்குள்ளேயே சுவாமி படத்துக்கு முன்னால் சீட்டு எழுதிப் போட்டு, உண்டா, இல்லையா? செய்யலாமா, செய்யக்கூடாதா? என்றும் பார்ப்பதுண்டு. நாம் படிக்கும் தேவாரம், திவ்யப் பிரபந்தம், ராமாயணம், பகவத் கீதை முதலிய புனித நூல்களில் ஒரு கயிறு அல்லது நூலை நுழைத்து அந்தப் பக்கத்திலுள்ள செய்தியின் படி சுபமா, அசுபமா என்று அறிவதுமுண்டு. இந்த நூல் பார்க்கும் முறை பற்றியும் கிளி ஜோதிடம் பற்றியும் ஏற்கனவே  கட்டுரை எழுதிவிட்டேன்.

 

 

நமது பஞ்சாங்கத்தில் சிறிதாக, சீதா-ராம சக்கரங்கள் உண்டு. பலரும் பார்த்த்திருப்பீர்கள். ஆனால் அதில் ‘கலகம்’, ‘நாசம்’ போன்ற சொற்கள் நம்மை மிரட்டுவதால் பலரும் அதைத் தொடுவதில்லை. இதன் பெரிய வடிவம்தான் இந்த தொடுகுறி சாஸ்திரம். இந்தப் புத்தகத்தை லண்டன் பிரிட்டிஷ் லைப்ரரியில் கண்டேன். 16 பக்கம் என்பதால் புத்தகம் முழுதையும் ‘காப்பி’ எடுத்தேன். இது பஞ்ச பாண்டவர்களில் சோதிடத்தில் வல்லவனான சகதேவன் அருளியது என்று புத்தகத்திலுள்ள பாடல் கூறும்.

 

 

நம்பிக்கையுடையோர், குளித்துவிட்டு மடியாக/சுத்தமாக, பூஜை அறை அல்லது கோவிலில் ஒரு கட்டத்தைத் தொட்டு அதற்கான பலனை அறியலாம். சாதகமான விடை வராவிடில் கடுமையான பிரார்த்தனைக்குப் பின்னர் மீண்டும் ஒரு முறைதொட்டுப் பார்க்கலாம். அப்பொழுதும் நாம் எதிர்பார்க்கும் நல்ல சகுனம்/ பதில் கிடைக்காவிடில், “கடவுளே நீ தருவதை நான் ஏற்கிறேன், அது என்னை எந்த விதத்திலும் பாதிக்காமல் தடு அல்லது அதை புல்லென மதிக்கும் இரும்பு மனத்தை எனக்கருளுவாயாக” என்று மனமாறப் பிரார்த்திக்கலாம். அர்ஜுனன் மீது ஏவப்பட்ட பிரம்மாஸ்திரத்தை, கண்ண பிரான் அருளால், தலைக்கு வந்தது தலைப் பாகையுடன் (கிரீடத்துடன்) போனது என்று தடுத்தாட்கொண்டது போல நமக்கும் கண்ணன் அருள் கிட்டும்.

மொத்தம் 64 கட்டங்கள் இருக்கின்றன. ஏதேனும் ஒன்றைக் கண்ணை மூடிக்கொண்டு தொடலாம் அல்லது ஒரு சிறுவனைக் கொண்டு தொடச் சொல்லலாம். அல்லது ஜோதிடம் கேட்க வருவோரை 111 அல்லது அதற்கு மேலே ஒரு எண்ணைச் சொல்லும்படி கேட்கலாம். பின்னர் ஒவ்வொரு எண்ணுக்குமுள்ள பாடலைப் படிக்கவும். சுருக்கமான பொருளும் கொடுக்கப்பட்டுளது.

-சுபம்-

இதோ தொடுகுறி சாஸ்திரம்:–

 

toduspare2

 

toduspare3

 

toduspare4

 

todu5

 

todu6

 

todu7

 

todu8

 

todu9

 

todu10

 

todu11

 

todu12

 

 

தொடரும்………………….

இரண்டாம் பகுதிக்குச் செல்க.

–சுபம்–

 

 

பெருமாள் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்ட முஸ்லிம் பெண்கள (Post No 2719)

jatari to muslim

WRITTEN BY S NAGARAJAN

Date: 13 April 2016

 

Post No. 2719

 

Time uploaded in London :–  8-29  AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

ச.நாகராஜன்

ganesh muslim

எப்போதுமே மதக் கலவரம் என்ற செய்திகளைக் கேட்டு மனம் நொந்து போனவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் ஒரு செய்தியைப் படிக்கும் போது மனம் மிக மகிழும்.

 

அனைவரின் மனம் மகிழும் ஒரு செய்தி இதோ: –

 

 10th April 2016: Today in Cuddapah, Muslims come to Sri Lakshmi venkateswara perumal Temple and take Ugadi pachadi as prasadam. They treat perumal as son-in-law (bibi nachiar’s husband).

 

This Temple is the first door of bhooloka vaikuntam Tirumala

 

கடப்பா:

சமய நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக, ஆந்திராவின் கடப்பா நகரிலுள்ள ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா ஸ்வாமி கோயிலுக்கு, யுகாதி தினத்தன்று, முஸ்லிம்கள் கணிசமானோர் வந்து வழிபட்டு செல்வது பாரம்பரியாக உள்ளதாம்.

 

 

இந்த கோயில், தேவுனி கடப்பா என்ற பெயரால் பிரபலமாக உள்ளது. தெலுங்கு புத்தாண்டான யுகாதி தினமான நேற்று, பெருவாரியான முஸ்லிம் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்ததை பார்க்க முடிந்தது.

 

பர்தா அணிந்தபடி பல முஸ்லிம் பெண்கள் வந்திருந்தனர். கணிசமான முஸ்லிம் ஆண்களும் வந்திருந்தனர். பக்தர்கள் வரிசையில் நான்கில் ஒரு பங்கினர் முஸ்லிம்கள்தான் என்று கூறும் அளவுக்கு அவர்கள் கோயிலுக்கு வந்திருந்தனர்.

முஸ்லிம் பெண்கள் கைகளில் பூக்கள், வெல்லம், கரும்பு துண்டுகள், மஞ்சள் மற்றும் வேப்பம்பழம் போன்றவற்றை எடுத்து வந்து சுவாமிக்கு அர்ச்சனை செய்ய கொடுத்தனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது, கோயிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் முஸ்லிம் பெண்களும், ஆண்களும், சுவாமி தரிசனத்திற்காக காத்து நின்றிருந்ததை பார்க்க முடிந்தது.

muslim worship in AP

 

 

ஆந்திராவின் ராயலசீமா மண்டலத்தில் இருந்து அதிகப்படியான சிறுபான்மை மதத்தினர் இக்கோயிலுக்கு வருகை தந்திருந்தனர்.

லட்சுமி நாராயணா என்ற சமூக ஆர்வலர் இதுபற்றி கூறுகையில், ‘சகிப்பின்மை குறித்த விவாதங்கள் நாட்டில் எதிரொலிக்கும் இக்காலகட்டத்தில் இதுபோன்ற சமய நல்லிணக்க செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது. இதே கடப்பா நகரிலுள்ள ‘பெத்த’ (பெரிய) தர்க்காவுக்கு, முஸ்லிம்கள் மட்டுமின்றி, இந்துக்களும் பெரும்பான்மையாக சென்று வழிபாடு செய்கிறார்கள்’ என்றார்.

கடப்பா லட்சுமி வெங்கடேஸ்வரா கோயிலுக்கு வரும் பக்தர்கள் அதை தொடர்ந்து, திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு சென்று தங்களது ஆன்மீக பயணத்தை நிறைவு செய்வது வழக்கமாம். முஸ்லிம்கள் அதிக அளவில் கடப்பா கோயிலுக்கு வர நீண்ட நெடிய வரலாற்று காரணங்கள் இருப்பதாக அப்பகுதியினர் கூறுகிறார்கள்.

 

muslim in temple 2

subham

*******