எமனைக் கை தட்டி அழைக்காதே! (Post No.2707)

yama

Written by S NAGARAJAN
Date: 9 April 2016

 

Post No. 2707

 

Time uploaded in London :–  9-19  AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

வள்ளுவர் வழி

 

எமனைக் கை தட்டி அழைக்காதே!

 

ச.நாகராஜன்

 

 

எமனைக் கை தட்டி அழைக்காதே!

 

 yama (1)

வள்ளுவரின் சொல் வீச்சு அபாரமானது. அதைச் சொல்லும் விதமோ அதை விட அபாரமானது.

 

எமன் என்றாலே எல்லோரும் ஓடிப் போவர். யாருக்கும் பிடிக்காத ஒரே வார்த்தை எமன் தான்.

 

அப்படிப்பட்ட எமனைக் கை தட்டி அழைக்காதே என்று வேடிக்கையாக ஆனால் மிகத் தீவிரமான ஆலோசனை ஒன்றைத் தருகிறார்ர் வள்ளுவர்.

 

“கூற்றத்தைக் கையால் விளித்தற்றால்”  என்று அவர் ஆரம்பிக்கிறார்.

 

எமனைக் கைதட்டி அழைப்பது போல இருக்கும் என்ற அவரது ஆரம்பமே நம்மை திடுக்கிட வைக்கிறது.

 

“ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல்” (குறள் 894)  என்று அவர் முடிக்கும் போது பெரிய அறிவுரையைப் பெறுகிறோம்.

ஆற்றலுடன் கூடியவருக்கு ஆற்றலே இல்லாதார் துன்பம் செய்தால் அது எமனைக் கை தட்டி அழைப்பதை ஒக்கும் என்கிறார் அவர்.. ஆற்றல் இல்லாவிட்டாலும் பரவாயில்லை; ஆற்றல் உள்ள வலியோரிடம் வாலை ஆட்டாமலாவது இருக்கக் கற்றுக் கொள் என்பது அன்புரை தானே!

 

எமன் என்று சொல்லும் போதே அவர் ஹிந்து என்பதையும் உணர்ந்து கொள்ளலாம். இந்திரன், மூதேவி போன்ற ஹிந்து தொன்மம் அல்லது நம்பிக்கை அல்லது கடவுளரை அவர் குறிப்பிடுவதையும் இங்கே நோக்கலாம்.

 

 

நீண்ட நாள் வாழ வழி!

 

அடுத்து நீண்ட நாள் வாழ வழியையும் அவர் கூறுகிறார். அதாவது எமனின் வருகையைத் தள்ளிப் போடச் செய்யும் வழி!

இதில் இரண்டு வகையை அவர் உபதேசிக்கிறார்.

ஒன்று உள்ளத்திற்கு; இன்னொன்று உடலுக்கு.

உடல் ரீதியாகவும் சாவைத் தள்ளிப் போட வழி; உள்ள ரீதியாகவும் மரணத்தைத் தள்ளிப் போட்டு நீடு வாழ வழி –இரண்டையும் அவர் விளக்குகிறார்.

 

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடு வாழ்வார் (குறள் 3)

 

இறைவனின் அடியை ஏகினால் போதும்; அவன் நம்மை நிலமிசை நீடு வாழச் செய்வான் என்கிறார்.

உள்ள ரீதியாக இறைவனுக்கு நம்மை அர்ப்பணம் செய்தால் மீதியை அவன் பார்த்துக் கொள்வான்.

அடுத்து உடல் ரீதியாக நீடு வாழ எளிய வழியையும் அவர் கூறுகிறார்:

 

அற்றால் அளவறிந்து உண்க; அஃது உடம்பு

பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு (குறள் 943)

உடம்பைப் பெற்றவர்களே, நீண்ட நாள் வாழ ஆசையா. அப்படியானால் அளவறிந்து உண்க என்கிறார்.

 

அளவறிந்து என்பது பொருள் பொதிந்த ஆழமான வார்த்தை.

இந்த வார்த்தையை அவர் உபயோகிக்கும் இடங்கள் மிகவும் சுவாரசியமானவை.

 

எது தேவையோ எவ்வளவு தேவையோ எப்போது தேவையோ அவ்வளவு மட்டுமே உண்ணுக என்பது அவர் அறிவுரை.

ஒரு குறளை மட்டும் படித்தால் முழுப் பொருளும் விளங்காது.

பின்னிப் பிணைக்கப்பட்டுள்ள குறள் அனைத்தையும் இணைத்துப் பார்த்தாலேயே பொருள் விளங்கும்.

 

அப்படி ஒரு அற்புத நூல் குறள். இது போலொரு நூல் உலகில் இல்லை என்பதை அடித்துச் சொல்லலாம்.

 

*******

 

நவக்கிரகங்கள் பூஜித்த தலங்கள் (Post No. 2692)

 

NAV1

Written by S NAGARAJAN

Date: 4 April 2016

 

Post No. 2692

 

Time uploaded in London :–  8-35  AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம்  ஏப்ரல் 2016 இதழில் வெளி வந்துள்ள கட்டுரை

 

 

.நாகராஜன்

Navagraha(route map)

கிரகங்களை ஆக்டிவேட் செய்வதா?

 

ஆன்மீகத்திற்குச் சற்றும் சம்பந்தமே இல்லாத பத்திரிகைகள் மற்றும் தொலைக் காட்சி சானல்களில் நட்சத்திர ஸ்தலங்கள், நவக்கிரகங்கள் பூஜை செய்த ஸ்தலங்கள் என்று நாளுக்கு ஒரு பட்டியல் வருகிறது. நவக்கிரகங்களை ‘ஆக்டிவேட்’ செய்யும் மாயாஜால வேலைகளை சிலர் செய்வது கண்டு ஆன்மீக அன்பர்கள் மனம் நொந்தூ போகிறார்கள். இது இயல்பே.

நெட் உலகில் வைக்கோல்போரில் ஊசி தேடுவது போல உண்மையைத் தேட வேண்டியிருக்கிறது.

 

 

தமிழ்த்தாத்தாவும் தி.வே.கோபாலையரும்

 

இந்த வகையில் நவக்கிரகங்கள் பூஜித்த தலங்களைப் பற்றிய சரியான உண்மையைத் தேடுவோருக்கு தமிழ்த்தாத்தா மஹாமஹோபாத்யாய உ.வே.சாமிநாதையரின் குறிப்புகள் பேருதவியாக இருக்கும். ஊர் ஊராகச் சென்று அனைத்துச் சுவடிகளையும் சேகரித்து அவற்றிலிருந்து அவர் எடுத்த குறிப்புகள் ஏராளம். ஸ்தலங்களைப் பற்றி அவர் எடுத்த குறிப்புகள் இரு பாகங்களாகப் பல்லாண்டுகளுக்கு முன்னர் வெளி வந்துள்ளன.

இன்னொரு தமிழ் அறிஞர் தி..வே. கோபாலையர். வெளி உலக விளம்பரத்தை விரும்பாது பாண்டிச்சேரியிலிருந்து இவர் ஆற்றிய பணி மிகவும் அரிய் பணி. தேவார ஆய்வுத் துணை என்ற நூலில் ஸ்தலங்களைப் பற்றி இவர் சேகரித்த ஆய்வுக் குறிப்புகள் அற்புதமானவை.

 

அந்தக் குறிப்புகளிலிருந்து சில தகவல்களைக் கீழே வழங்குகிறோம். இந்தக் குறிப்புகளின் அடிப்படையில் அந்தந்த தலங்களுக்குச் சென்று குறிப்பிட்ட கிரகங்களை ப்ரீதி செய்யும் விவரங்களைக் கேட்டு உரியனவற்றைச் செய்யலாம். சில சமயம் நாம் அறிந்த தகவல்களைப் பற்றி விசாரிக்கும் போது அந்த தலத்தின் குருக்களே, ‘அப்படியா’  என்று வியப்படைவதைக் கண்டு நாம் வியப்படைய வேண்டியதாக இருக்கிறது!

 

navagraha, irumbai

சூரியன் பூஜித்த ஸ்தலங்கள் 12

 

  1. கேதாரம்: இமயமலையில் உள்ளது
  2. திருக்கோலக்கா: சூரிய புட்கரணி உள்ள ஸ்தலம். கார்த்திகை ஞாயிறு விசேடம்.
  3. திருவெண்காடு: சூரிய புட்கரணி.ஆவணி ஞாயிறு விசேடம்.
  4. சாயாவனம்: ஆதித்ய புட்கரணி உள்ள ஸ்தலம்.கார்த்திகை ஞாயிறு விசேடம்.
  5. கருங்குயில்நாதபுரம்: மித்திர புட்கரணி. காவேரியில் கார்த்திகை ஞாயிறு விசேடம்
  6. திருத்துருத்தி: ரவி தீர்த்தம். கார்த்திகை ஞாயிறு கார்த்திகையில் விசேடம்,
  7. ஸ்ரீ வாஞ்சியம்: பூஷண தீர்த்தம். குப்த கங்கை. கார்த்திகை ஞாயிறு விசேடம்
  8. திருநாகேஸ்வரம்: சக்தி தீர்த்தம். கார்த்திகை ஞாயிறு விசேடம்
  9. குடந்தைக் கீழ்க்கோட்டம்: காவேரியில் மரீசி தீர்த்தம். கார்த்திகை ஞாயிறு விசேடம்
  10. தேதியூர்: அர்க்க புட்கரணி. கார்த்திகை ஞாயிறு விசேடம்
  11. மீயச்சூர் : ரத ஸப்தமி
  12. திருவாவடுதுறை: ரத ஸப்தமி. மீயச்சூரிலும் திருவாவடுதுறையிலும் திதி விசேஷம். இந்த ஸப்தமியில் ஞாயிறு சேர்ந்தால் மஹாயோகம்

மேற்கண்டவற்றில் சூரியனுக்கு ஆலயங்கள் உள்ள இடங்களாவன: ,மீயச்சூர்,திரு நாகேஸ்வரம், குடந்தைக் கீழ்க்கோட்டம்,

சூரியன் பூஜித்த இதர ஸ்தலங்கள்; இன்னம்பர் (இனன் என்றால் சூரியன்), திருவையாறு,திருத்தாளமுடையார் கோயில், கழுக்குன்றம், பருதி நியமம் மற்றும் ஆடானை

 

 

சந்திரன் பூஜித்தவை:

 

  • கேதாரம் 2) சோமநாதம் 3) கஞ்சனூர் 4) அச்சுதமங்கலம் 5) குடந்தைச் சோமேசம் 6) மானாமதுரை 7)திருவெண்காடு (சந்திர புட்கரணி) 8) பிரயாகை

சோமன் அதாவது சந்திரனால் பூஜிக்கப்பட்ட லிங்கங்கள் சோமேசுவரர் எனப் பெயர் பெறுவார்.

 

 

அங்காரகன் பூஜித்தவை

 

  • கேதாரம் 2)வேளூர் 3)அத்திப்புலியூர் (தை செவ்வாய்) 4) இலந்துறை (கார்த்திகைச் செவ்வாய்) 5) மங்கலக்குடி (மார்கழிச் செவ்வாய்) 6) கச்சித் திருநெறிக்காரைக்காடு

 

புதன் பூஜித்தவை

  • கேதாரம்
  • வெண்காடு (சந்திர புட்கரணியில் புத தீர்த்தம்.  வடக்கே தரையில் புதன் இருக்கிறார் ஆனி, புரட்டாசி புதன்கிழமை விசேடம்

3) சீர்காழி

4) குருகாவூர்

navabhasanam

 

குரு பூஜித்தவை

 

1.கேதாரம் 2) திருக்கொண்டீஸ்வரம் (கார்த்திகை வியாழன் விசேடம்)

3) பெருஞ்சேரி (மார்கழி வியாழன் விசேடம்)

4) மாங்குடி (பங்குனி வியாழன் விசேடம். இந்த ஊர் கொல்லு மாங்குடிக்கு மேல்புறம் உள்ளது)

5) சிதம்பரம்

 

 

சுக்கிரன் பூஜித்தவை

 

  • கேதாரம் 2) வாஞ்சியம் (ஆடி வெள்ளி விசேடம்)

3)சிதம்பரம்: புரட்டாசி வெள்ளி விசேடம். 4)திருக்கோடிகா (வைகாசி வெள்ளி விசேடம்) 4) காஞ்சீபுரம் (தை வெள்ளி ஸ்நான விசேடம்) 5) கரையபுரம்

 

 

சனி பூஜித்தவை

 

  • கேதாரம் 2) வழுவூர் (தை, மாசி சனி விசேடம்) 3) திருநள்ளாறு: (வைகாசிச் சனி விசேடம்) 4)வேதாரணியம் (கார்த்திகைச் சனி விசேடம்) 5)ஆரூர்: மேற்படி ஸ்நான விசேடம் 6) திருச்செங்காட்டங்குடி

ராகு பூஜித்தவை

 

  • கேதாரம் 2) சீர்காழி

கேது பூஜித்தவை

 

  • கேதீஸ்வரம் (இலங்கையில் உள்ளது)

 

சூரிய பூஜை ஸ்தலங்கள்

 

சூரியனின் கிரணங்கள் குறிப்பிட்ட நாளில் சிவலிங்கத்தின் மீது பட்டு சூரியன் பூஜை செய்வதை பல ஸ்தலங்களில் பார்க்கலாம்.  இப்படிப்பட்ட ஸ்தலங்கள் பாரதம் முழுவதும் ஏராளம் உள்ளன.

தமிழறிஞர் தி.வே.கோபாலையர் அவர்களின் குறிப்பின் படி:

 

  • கண்டியூர் 2) குடந்தைத் திருக்கோட்டம் 3) தெளிச்சேரி 4) நெல்லிக்கா 5) புறவார் பனங்காட்டூர் 6) வேதிகுடி ஆகிய ஸ்தலங்கள் சூரிய பூஜை ஸ்தலங்களாகும்

திங்களூர் சந்திர பூஜை ஸ்தலமாகும்.

இந்தப் பேரறிஞர்களின் ஆய்வுக் குறிப்புகள் கூறும் ஸ்தலங்கள் ஆன்மீக பக்தர்களின் யாத்திரைக்கு உகந்தவை. இவையல்லாது நவக்கிரகங்களை ஆக்டிவேட் செய்பவர்க்ள் கூறும் ஸ்தலங்கள், அவர்களால் “ஆக்டிவேட்” செய்யப்படுபவையே என்று கொள்ளலாம்!

 

********

 

 

அய்யங்கார் செய்த அற்புதம்! (Post No 2687)

sriranaga

Compiled  by london swaminathan

Date: 2 April, 2016

 

Post No. 2687

 

Time uploaded in London :–  9-02 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் என்பவர் செய்த அற்புதம் பற்றி 1908 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்ப் பெயரகராதியில் ஈக்காடு இரத்தினவேலு முதலியார் தந்துள்ள விவரத்தின் சுருக்கம் இதோ:-

பிள்ளைப் பெருமாள் அய்யங்கார், வேதியர் குலத்தில் உதித்து, வேத வேதாங்கங்களில் புலமை பெற்று வருணாசிரம தருமங்களை வழுவாது அனுசரித்து வருங்காலத்தில் மதுரையில் திருமலை நாயக்கர் அரசாட்சி செய்து வந்தார். அவரது ராஜாங்க சேவையில் ஈடுபட்ட அய்யங்கார் ஒரு நாள் அனைவர் முன்னிலையிலும் தனது (உத்தரீயத்தின்) மேல்துண்டின் முனைகளை சரசரவென்று தேய்த்தார்.

அனைவரும் இது கண்டு நகைத்து, ‘ஐயன்மீர் ஏன் இப்படித் தேய்த்தீர்?’ என்று வினவ அவர் ஸ்ரீரங்கம் தேர்த்திருவிழாவில், தீவட்டி ஏந்தி வந்தவர்களின் தீச்சுவாலைபட்டு, தேர்த் திரைச் சீலை தீப்பற்றியதாகவும் அதை அணைக்கவே அவ்வாறு செய்ததாகவும் பதில் தந்தார்.

srirangam row of towers

இதைக் கேட்ட பலரும் அய்யங்காருக்குச் சித்தப் பிரமை பிடித்துவிட்டது என்று நாயக்க மன்னரிடம் தெரிவித்தனர்.

மன்னரோ, அய்யங்கார் மீதுள்ள மதிப்பு காரணமாக, திருவரங்கத்திற்கு ஒரு ஆளை அனுப்பி, தீரவிசாரித்து வருமாறு உத்தரவிட்டார். அவர் திருவரங்கம் அர்ச்சகர்களைக் கண்டு தேரின் திரைகள் தீப்பிடித்ததா என்று கேட்டனர். அவர்கள், ஆம் தேர்த்துணிகள் தீபிடித்தவுடன், அருகிலிருந்த அய்யங்கார் அவைகளை அவித்தார் என்றும் சொன்னார்கள்.

இதைக் கேட்ட நாயக்கர் ஆனந்தப் பரவசப்பட்டு அய்யங்காரை வரவழைத்து, திருவரங்கத்தான் தேர்த் தீபிடித்தபோது நீவீர், இங்கேயல்லவா இருந்தீர், அங்கே போனதாகப் பலரும் சொல்வதெப்படியென வினவ, அவர் தன் மனதளவில் அங்கே என்று எம்பெருமானை சேவித்தேன் என்றார். அருகிலுள்ளவர்களும் ஆமாம், இவர் கிருஷ்ண, கிருஷ்ண என்று சொல்லி உத்தரீயத்தைத் தேய்த்தார் என்றும் அப்போது காரணம் கேட்டதற்கு இதையே சொன்னதாகவும் உறுதி செய்தனர். உடனே நாயக்க மன்னர் அவரை சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து பூஜித்து அனுப்பிவைத்தார்.

 

அன்றிரவு நாயக்க மன்னர் ஒரு கனவு கண்டார். அதில் தான் , காவிரி நதியில் ஸ்நானம் செய்துவிட்டுப் பிள்ளைப் பெருமாள் அய்யங்காருடன் சென்று, திருவரங்கப் பெருமானைச் சேவித்ததாகவும், திரும்பி வருகையில் திடீரென்று அய்யங்கார் காணாமற் போனதாகவும் கனவு கண்டார்.

 

நாயக்க மன்னர் மிகவும் விசனப்பட்டு மறு நாள் காலையில் அய்யங்காரை வரவழைத்துச் சேவித்து, ‘தேவரீர்! உங்களைப் போன்ற பெரியோரை நான் லௌகீகத் தொழிலில் இதுவரை ஈடுபடுத்தியது தவறு. நீங்கள் என்னைச் க்ஷமித்து (மன்னித்து) இனி வைதீக காரியங்களில் ஈடுபட்டு காலட்சேபம் செய்ய அடியேன் யாது செய்யவேண்டு’ மென்று இறைஞ்சினார்.

tirumalai nayak1

அய்யங்காரும் தான், திருவரங்கப் பெருமானுக்கு அருகிலிருக்க விரும்புவதாகச் சொல்லவே, கோவிலுக்கு வடமேற்கில் ஒரு திருமாளிகை புதுக்கி, அதில் அவரை எழுந்தருளச் செய்து தானும் அடிக்கடி திருவரங்கம் சென்று அவரை உபசரித்து மகிழ்ந்தனன்.

 

அங்கெழுந்தருளிய அய்யங்கார் நூற்றெட்டு திருப்பதி அந்தாதி, திருவேங்கட மாலை, திருவேங்கட அந்தாதி, அழகர் அந்தாதி, திருவரங்கத்துக் கலம்பகம், திருவரங்க மாலை, அந்தாதி, அஷ்டப் பிரபந்தம், பரப்ரம்ம விவேகம் என்னும் பல நூல்கள் செய்து பகவத் கைங்கரியத்தில் காலம் தள்ளினார். ஒருநாள் கோவிலில் தரிசனம் செய்துகொண்டிருக்கையில் ஒரு நொண்டிப் பசு இடறி அவர் காலில் விழுந்தது. அதுவே தனது இறுதிக்காலம் என்று ஒரு பாடலில் சொல்லிவிட்டு கொஞ்சம் காலம் கழித்து பரமபதம் சேர்ந்தார்.

எனது முந்தைய கட்டுரைகள்
1.ஆண்டாளுடன் 60 வினாடி பேட்டி (20 ஜனவரி 2012)

2.வங்கக் கடல் கடைந்த ஆண்டாள் தரும் அற்புதத் தகவல்- 9 ஜனவரி 2014

3. ‘இனித்தான் எழுந்திராய்! ஈதென்ன பேருறக்கம்!’ ஆண்டாள் அறைகூவல்! – 28 நவம்பர் 2014

4. Sri Ramanuja’s Favourite Tamil Hymn! (Article No.1443; Dated 28th November 2014.)

 

5. Amazing Andal: Where did she see the Lion? ( 30 -1-2013)

6. Ramanuja and Non Brahmins ( 13-5-2013)

7.காலா! என் காலருகே வாடா! ஞானிகளின் ஞானத் திமிர்!! (கட்டுரை எண்: 925 தேதி: 23 March 2014.)

 

8. Andal by C.Subrahmanya Bharati (Post No.924 Date: 22nd March 2014.)

9. கொக்கைப் போல இருப்பான், கோழி போல இருப்பான், உப்பைப் போல இருப்பான் பக்தன் (Post No. 900 Dated 11th March 2014)

10. Vaishnavite Saint NAMMALWAR (Post no 915 date 18th March 2014)

 

11.ஆழ்வார் முக்கியப் பாடல்கள் (மே சிந்தனைச் சிற்பிகள் காலண்டர்) (Post No.1011; Date:30 ஏப்ரல் 2014

 

And more articles about Alvars and other Vaishnavite saints

-subham-

சிவபிரானின் தலையில் கங்கை இடம் பெற்ற காரணம் (Post No 2658)

ganga-river-route

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 24 March 2016

 

Post No. 2658

 

Time uploaded in London :–  8-56 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

விவேகானந்தர் வழி

 

 

கங்கையின் புனிதம்!

 

ச.நாகராஜன்

ganga-dussera-23

பிரம்மானந்தர் வாக்கு

 

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் ஆன்மீக புத்திரன் (Spiritual son) என்று அவராலேயே கூறப்பட்டவர் சுவாமி பிரம்மானந்தர். ராக்கால் என்று பூர்வாசிரம பெயரைக் கொண்ட இவரே பரமஹம்ஸ சீடர்களுள் முதலாவதாக அவரை வந்து அடைந்தவர்.

 

ராமகிருஷ்ண மடத்தின் தலைவராக சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வழி நடத்தியவர்.

அவர் கங்கையைப் பற்றிக் கூறிய கருத்துக்கள் ஆழ்ந்த பொருளைக் கொண்டிருக்கின்றன.

 

The water of Ganges is verily the holiest of all waters; it fulfils one’s desires and is a help to realizing the ishtam. Sri Ramakrishna has said” “The water of the Ganges, the holy prasadam of Jagannath (at Puri) and the sacred dust of Vrindavan are verily Brahman in reality.”

 

 

“கங்கையின் ஜலம் உலகிலுள்ள நீர்களிலெல்லாம் புனிதமானது. அது ஒருவனுடைய ஆசையைப் பூர்த்தி செய்கிறது அவனது இஷடத்தை உணர உதவுகிறது. ஸ்ரீ ராமகிருஷ்ணர் கூறியிருக்கிறார்: “கங்கையின் ஜலம். பூரி ஜகன்னாதரின் பிரசாதம், பிருந்தாவனத்தின் தூசி ஆகிய உண்மையில் பிரம்மமே.”

 

 ganga

சிவபிரானின் தலையில் கங்கை இடம் பெற்ற காரணம்

 

தேவலோகத்திலிருந்து பூமிக்கு வந்த கங்கை முதலில் சிவபிரானின் ஜடாமுடியில் விழுந்து, அதன் பிறகு பூமியில் நதியாக ஓடினாள் என்று ஒரு புராணக் கதை உண்டு. சுவாமி விவேகானந்தர் அதற்கான காரணத்தை புதுமையாக விளக்கினார் இப்படி:

 

“கங்கை வீழ்வதற்கு ஏன் சிவபெருமானின் தலையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? ஏனெனில்  கங்கை என்றல்ல; அனைத்து நதிகளும் அருவிகளும் சிவ பக்தைகள், சிவ பெருமானை வழிபடுபவர்கள். புரண்டோடும் நதிகளும், உச்சியிலிருந்து விழும் அருவிகளும் என்ன பாடுகின்றன, என்ன பேசுகின்றன என்பதை உற்றுக் கேட்டால், அது ‘வ்யோம், வ்யோம், ஹர ஹர(வ்யோம் என்பது சிவ பெருமானின் பெயர்களில் ஒன்று. வ்யோம் என்றால் ஆகாயம் அல்லது வெளி. அவர் எங்கு நிறைந்தவர் என்பது இதன் பொருள்) சிவ பக்தையாக இருப்பதால் தான் கங்கை சிவ பெருமானின் தலையை முதல் இருப்பிடமாகத் தேர்ந்தெடுத்தாள்.”

 

எப்படி ஸ்வாமிஜியின் அருமையான விளக்கம்!

 

கங்கை மீது ஸ்வாமிஜியின் பக்தி

 

அவரவர் பக்குவத்திற்கும் கேள்வி கேட்கும் நிலைக்கும் ஏற்ப ஸ்வாமிஜியின் பதில் அமைவது வழக்கம்.

ஒரு முறை இளைஞன் ஒருவன் அவரிடம் வந்தான். “ஸ்வாமிஜி, இந்தியாவிலும் மேலை நாடுகளிலும் நீங்கள் புதிய மதம் ஒன்றைப் பிரசாரம் செய்கிறீர்களா” என்று கேட்டான் அவன்..

ஸ்வாமிஜி: “அது என்ன புதிய மதம்?

 

இளைஞன்: “கங்கையில் குளிப்பதால் முக்தி கிடைக்கும் என்பது போன்ற நம்பிக்கைகளை நீங்கள் ஏற்றுக் கொள்வதில்லை அல்லவா, அதைச் சொன்னேன்.”

 

ஸ்வாமிஜி: “அது என்ன பேச்சு, அப்பா! நானே தினமும் கங்கையில் தான் குளிக்கிறேன். குளிக்க முடியவில்லை என்றால் கங்கை நீரைத் தலையில் தெளிக்கவாவது செய்யாமல் நான் இருந்ததில்லை. தலையில் தெளித்துக் கொள்கிறேன். ஒரிரு துளிகளைப் பருகவும் செய்கிறேன்.”

வந்த இளைஞன் தெளிந்தான்.

இப்படித் தவறாகத் தம்மைப் புரிந்து கொள்பவர்களை உடனுக்குடன் அந்த இடத்திலேயே தெளிவு படுத்தி விடுவார் ஸ்வாமிஜி.

கங்கையின் புனிதம் பற்றி புனிதமே உருவான அவர் சொல்வதைக் கேட்பதே அனைவருக்கும் ஆனந்தம்!

Haridwar-Tourism-Holy-Ganga-1

 

கங்கையின் கிழக்குப் பகுதியும் மேற்குப் பகுதியும்

 

 

கங்கைக்குக் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது தட்சிணேஸ்வரம். கங்கையின் கங்கோத்ரியாக அமைந்திருப்பது மேற்குக் கரையில் அமைந்துள்ள பேலும் மடம்.

 

பரமஹம்ஸரின் அனைத்து அமுத மொழிகளையும் உலகிற்குத் தொகுத்து அளித்த மஹேந்திரநாத் குப்தா (எம் என்று அழைக்கப்படுபவர்) ஒரு முறை தனது சீடர்களிடம் சொன்னார் இப்படி: “கங்கையின் மேற்குப் பகுதி வாரணாசி எவ்வளவு புனிதமானதோ அவ்வளவு புனிதமானது.  சாதாரண சின்ன புண்ணியத்தின் பயனா என்ன அது?”

 

கங்கையின் புனிதம் பற்றி மகான்களின் அமுத வாசகங்களுக்கு எல்லையே இல்லை!

*********

 

பார்வையற்ற முஸ்லீம் சிறுமி கூறும் பகவத் கீதை (Post No. 2656)

blind muslim

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 23 March 2016

 

Post No. 2656

 

Time uploaded in London :–  8-17 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

பாராட்டு

 

பார்வையற்ற முஸ்லீம் சிறுமி கூறும் பகவத் கீதை

 

ச.நாகராஜன்

o-MUSLIM-GIRL-facebook

 

நல்ல செய்திகளை அரிதாகவே கேட்க முடிகிறது. அதைப் பாராட்டுபவர்களையோ இன்னும் அரிதாகவே பார்க்க முடிகிறது.

 

 

நாம் நல்லதைப் பாராடுகின்ற அரியவர்கள் பட்டியலில் நம்மை இணைத்துக் கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

ரீடா ஜெஹ்ரா என்ற ஏழு வயது முஸ்லீம் சிறுமி கைகளைக் கூப்பியவாறே கீதை சொல்லும் அழகு அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.

 

 

மீரட்டில் வாழும் ரீடா கீதை நூலைக் கண்ணால் கண்டதில்லை. பிறக்கும் போதே 80 சதவிகிதம் பார்வையை இழந்த குழந்தை மூன்று வயதிலிருந்தே ஒரு பராமரிப்புப் பள்ளியில் இருந்து வருகிறாள். அவருடைய ஆசிரியர் அவளுக்கு கீதையைப் படித்துக் காண்பிக்க அவள் அதை மனதில் வாங்கிக் கொண்டு சொல்ல ஆரம்பித்து விட்டாள்.

இத்தனைக்கும் அவள் பார்வையற்றோருக்கான ப்ரெய்லி கூட கற்கவில்லை.

 

 

எந்தக் கடவுளாய் இருந்தால் என்ன, என்னால் பார்க்க முடியப் போவதில்லை. கீதையோ குர் ஆனோ அதைப் படித்து கடவுளை நான் துதிக்கிறேன்” என்று நம்மை நெகிழ வைக்கும் சொற்களைக் கூறும் ரீடா மீரட்டில் ஜாக்ரிதி விஹாரில் பார்வையற்றோருக்காக அமைந்துள்ள ப்ரிஜ் மோகன் பள்ளியில் மூன்றாவது வகுப்பு படிக்கிறாள். ரிடாவின் பெற்றோரும் உடன்பிறப்புகளும் லோஹியா நகரில் வசிக்கின்றனர். கோடை விடுமுறைக்கும் பண்டிகைகளுக்கும் தவறாமல் வீட்டுக்குச் சென்று விடுவாள் ரீடா.

அவளுடைய பள்ளி முதல்வர் ப்ரவீண் சர்மா, “2015ஆம் ஆண்டு குழந்தைகளுக்கான கீதை சொல்லும் போட்டி ஒன்று நடக்கவிருப்பது பற்றி அறிந்தேன். ஏன் நமது பள்ளிக் குழந்தைகளும் இதில் சேரக் கூடாது என்று நினைத்தேன். ரீடா கீதையை நன்கு கற்றுக் கொண்டாள்” என்று பெருமிதத்துடன் கூறுகிறார்.

 

 

ரீடாவின் பெற்றோருக்கு பாராட்டு. ரீடாவின் பிரின்ஸிபாலுக்கும் கீதையைக் கற்றுத் தந்த ஆசிரியருக்கும் பாராட்டு.

 

 

ரீடாவுக்கு…

 

நமது பாராட்டோ பாராட்டு.

குழந்தைக்குக் கண்ணனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்க கண்ணனை வேண்டுவோம்!

 

maryam

மரியம், என்ற பெண் கீதை போட்டியில் முதலாவது வந்தாள்.

**********

பாதிரியாருக்குத் தக்க பாடம் புகட்டிய விவேகானந்தர்! (Post No 2653)

vivekananda saffron

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 22 March 2016

 

Post No. 2653

 

Time uploaded in London :–  6-07 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

விவேகானந்தர் வழி

 

பாதிரியாருக்குத் தக்க பாடம் புகட்டிய விவேகானந்தர்!

 

ச.நாகராஜன்

 

கல்கத்தாவில் தன்னைச் சந்திக்க வந்த சிஷ்யர் பிரியநாத் சின்ஹாவிடம், ‘ஒரு மனிதன் தன் ம்தத்தை உண்மையாக நேசிக்கையில் அவன் தைரியசாலியாகவும்  துணிச்சலுடனும் திகழ்வான். அப்படிப்பட்ட தைரியம் ஒற்றுமையை உருவாக்கும்.

அது தான் ஹிந்துக்களிடையே இல்லை’ என்று ஸ்வாமி விவேகானந்தர் கூறினார்.

 

 

இதைத் தொடர்ந்து தனது அனுபவம் ஒன்றையும் அவர் கூறலானார்.

 

அவர் மேலை நாட்டுக்குச் செல்கையில் கடற்பயணத்தின் போது இரு பாதிரியார்கள் அவ்ரிடம் வந்து கிறிஸ்தவ மதம் ஹிந்து மதம் ஆகிய இரு மதங்களுக்கிடையே உள்ள நல்ல் அம்சங்கள் மற்றும் தீய அம்சங்களைப் பற்றி விவாதிக்க வலியுறுத்தினர். வாதம் ஆரம்பமானது.

 

 

தங்கள் பக்கம் தோல்வி நிச்சயம் என்ற சூழ்நிலையில் அந்த பாதிரிமார்கள் இருவரும் மிக மோசமாக ஹிந்து மதத்தையும் ஹிந்துக்களையும் திட்ட ஆரம்பித்தனர். ஸ்வாமிஜி பொறுத்துப் பார்த்தார்.

 

 

வசை பாடல் தொடர்ந்தது. ஸ்வாமிஜியால் பொறுக்க முடியாத சூழ்நிலை. ஸ்வாமிஜி இருவரில் ஒருவரின் காலரைப் பற்றினார்.

சிரித்தவாறே ஆனால் மிகவும் தீவிரமான தொனியில் , :”இனியும் என் மதத்தைப் பற்றி தூஷித்தால் இந்தக் கடலில் உங்களைத் தூக்கி வீசி எறிந்து விடுவேன்” என்றார்.

 

ஸ்வாமிஜியின் கட்டுமஸ்தான உடல் வாகு அனைவரும் அறிந்ததே!

 

நடுநடுங்கிப் போன பாதிரியார், “ஐயா! என்னை விட்டு விடுங்கள். நான் போகிறேன்.இனிமேல் இப்படிப் பேச மாட்டேன்” என்று கெஞ்சலானார்.

 

ஸ்வாமிஜி அவரை விடுவித்தார். அன்று முதல் அந்த்ப் பயணம் முழுவதும் ஸ்வாமிஜியிடம் அந்தப் பாதிரியார் மிகுந்த மரியாதையுடன் நடக்கலானார்.இதைக் கூறி முடித்த ஸ்வாமிஜி பிரியநாத்திடம், “உன்னிடம் உன் தாயாரைப் பற்றி ஒருவர் தூஷித்தால் நீ என்ன செய்வாய்?” என்று கேட்டார்.

“அவன் கழுத்தைப் பிடித்து அவனுக்குத் தக்க பாடம் கற்பிப்பேன்” என்றார் பிரியநாத்.

 

அந்த பதிலால் ஸ்வாமிஜி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

“நன்றாய் சொன்னாய், சின்ஹா! நீ இப்படி அசைக்க முடியாத நம்பிக்கையை உன் ம்தத்தின் மீது கொண்டால், இந்த பாரத நாட்டின் மீது கொண்டால், உன் சகோதர ஹிந்துக்களை இந்த பாதிரிமார்கள் மதமாற்றம் செய்வதைக் காணப் பொறுக்கமாட்டாய்.. ஒவ்வொரு நாளும் இந்த மதமாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. என்றாலும் கூட நீ சும்மாதான் இருக்கிறாய்? எங்கே உன் மதப்பற்று? எங்கே உன் தேசபக்தி? ஒவ்வொரு நாளும் கிறிஸ்தவ பிரசாரகர்கள் உன் கண் முன்னாலேயே ஹிந்து மதத்தை இழிவு படுத்திப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதைக் கண்டித்து ஹிந்து மதத்தைக் காப்பாற்றும் வகையில் எத்தனை பேர் முன் வருகிறார்கள்?” என்று கேட்டார்.

 

ஸ்வாமிஜி எல்லா மதத்தையும் மதிக்க வேண்டும் என்று சொன்ன அதே தருணம் நம் மதத்தை நேசித்துப் போற்றுதல் மட்டும் போதாது; மதமாற்றம் என்று வரும் போது அதைத் தடுக்க வேண்டும் என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தினார்.

அதற்குத் தானே உதாரணமாக இருந்ததை தன் கடல் பயண சம்பவம் மூலம் உணர்த்தினார்.

 

 

ஸ்வாமிஜி கூறிய வழியில் நடக்க வேண்டியது நமது கடமை!

************

 

நூறு வயதை எட்டிய பெரியோர்! – காஞ்சிப் பெரியவர்! (Post No 2629)

2kanchi on mat

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 14 March 2016

 

Post No. 2629

 

Time uploaded in London :–  7-57 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 kanchi new pose

வேத வழி

இதற்கு முந்தைய இரு கட்டுரைகளைத் தொடர்ந்து, வெளியாகும் மூன்றாவது கட்டுரை இது!

 

பிராயம் நூறு வயதை எட்டிய பெரியோர்! -3

காஞ்சி காமகோடி ஜகத்குரு சங்காராசாரியார் (ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர சரஸ்வதி – 68வது பீடாதிபதி)

 

 

.நாகராஜன்

 

 பரமாசார்யாள் என்றும் பெரியவா என்றும் உள்ளார்ந்த பக்தியுடனும் அன்புடனும் அழைக்கப்படும் காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர சரஸ்வதி அவர்களை இனி வரும் வரலாறு அதிசயத்துடனேயே நோக்கும்.

 

 

உலகில் கடவுளை நேரில் பார்த்தல் சுலபமான ஒன்று இல்லை. ஆனால் கடவுள் நிகழ்த்தும் அதிசயங்களைப் பார்க்கிறோம்; அற்புதங்களைப் பார்த்து பிரமிக்கிறோம்.

இப்படி கடவுளின் அதிசய அற்புதமாக அவதரித்தவர் பெரியவா என்றால் அது மிகையாது.

 

 

ஒரு கஷ்டமான கால கட்டத்தில் அவதரித்து ஹிந்து மதத்தை ஏற்றம் பெறச் செய்த அவரை இறையருளே உருக்கொண்ட ஒரு அற்புத ஆசார்யர் என்றே சொல்லலாம்.

 

 

1894ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் தேதி தோன்றி 1994ஆம் ஆண்டு ஜனவரி  மாதம் 8ஆம் தேதி நீக்கமற நிறைந்த பரம்பொருளுடன் ஐக்கியமான அவரை வர்ணித்தல் இயலாது.

பிள்ளையாரை உடை; கொளுத்து புராணங்களை; அர்ச்சகர்களை அடி என்று தீய சக்திகள் தலை தூக்கி விரித்த காலகட்டத்தில் ஆன்மீக நாட்டம் கொண்டோரைக் காப்பாற்றி வீதிக்கு வீதி கோவிலுக்குக் கோவில் வழிபாட்டை மேம்படச் செய்தார் அவர்.

 kanchi rinkled skin

 

கோவில் கோபுரம்தோறும் மார்கழி  மாதம் திருப்பாவை திருவெம்பாவை பாட்லகளை ஒலிக்கச் செய்து தமிழகத்தையே தெய்வீக மணம் கமழச் செய்தார்.

 

அவரை தரிசித்த மேதைகள், ராஜாக்கள், ராணிகள் ஏராளம் எனில் சாமானியர் லட்சக்கணக்கில் இருந்தனர்; அவரின் அருளைப் பெற்றனர் என்றே கூறலாம்.

 

 

ஆகம சில்ப மகாநாடு ஒரு புறம், வேத பாடசாலைகள் ஒரு புறம், நலிவடைந்து இருந்த கரகாட்டம் உள்ளிட்ட புராதன கலைகளை மேம்படுத்தல் ஒரு புறம் என்று அவர் தொடாத ஹிந்து மதம் சார்ந்த துறைகளே இல்லை.

 

 

இந்திய அரசியல் சட்டத்தில் ஹிந்துக்களைப் பாதுகாத்து அவர்களின் உரிமைகளைக் காப்பாற்றியவர் அவரே என்பதைப் பெரும்பாலானோர் அறியார். உரிய சட்ட வல்லுநர்களை அழைத்து அறிவுரைகளை அருளியவர் அவர்.

கிரீஸ் தேசத்து ராணி அவரை பரம குருவாகப் போற்றி வணங்கினார்.

 

 

மஹாத்மா காந்திஜியோ அவரைச் சந்தித்த மாலை வேளையில் நன்கு அளவளாவி மகிழந்தார். உரிய நேரத்தில் அவர் சாப்பிட வேண்டிய தருணத்தை ராஜாஜி நினைவு படுத்துகையில், “இன்று உணவு தேவை இல்லை; இப்போது  இந்த சந்திப்பில் பெற்றதே உணவு” என்று தான் அவரிடமிருந்து பெற்ற ஆன்ம உணவை எண்ணிக் களித்தார்.

கண்ணதாசனை வழிப்படுத்தினார்; எம்.ஜி.ஆரை தமிழ் மாநாடு நடத்த ஊக்குவித்து அவருக்கு நேரிட்ட சங்கடங்களிலிருந்து அவரைக் காப்பாற்றினார்.

 

 

இந்திரா காந்திக்கு அருளினார். அவரது கை சின்னம் உதிக்க அவரது ஆசிக் கரமே உதவியது.

 

 

காவிரித் தலங்களைப் பற்றி எழுத ஒருவரைப் பணித்தார்.காசியையும் கங்கையையும்  எழுத ஒருவரை ஊக்கினார். சுமார் எண்பது ஆண்டு கால வரலாற்றை வேடிக்கைக்காக எடுத்துப் பார்த்தாலும் எந்த ஒரு நல்ல ஆன்மீக காரியத்தின் ஆரம்பமும் அவரையே சுட்டிக் காட்டும்.

 

எல்லா நல்ல புத்தகங்களும் தவறாமல் முன்னுரையில் அவரது அருளாசியாலும் ஊக்கத்தாலும் அந்தப் புத்தகம் மலர்ந்தது என்று குறிக்கப்படும்.

 

 

கலைமகள் நிறுவனத்தார் ஆசாரிய ஸ்வாமிகளின் உபதேசங்கள் என்று அவரது உரைகளைப் பதிப்பித்தது.

கல்கி பத்திரிகை வாரம் தோறும் அவரது அற்புதமான அருளுரைகளை விடாமல் பிரசுரித்தது.

 

 

தெய்வத்தின் குரல் என்று அவரது உபதேச உரைகளை பல பாகங்களாக அன்பர் ரா. கணபதி தொகுத்து வெளியிட்டார்.

ஆயிரக்கணக்கான நூல்களில் தெவிட்டாத அவரது உபதேச உரைகள், அவர் ஆற்றிய அற்புதங்கள் உள்ளிட்டவற்றைப் படிக்க முடிகிறது.

 

 

நூறாண்டு வாழ்ந்த இந்த மகானின் பெருமையைச் சொல்லும் போது வார்த்தைகள் தோற்கின்றன.

 

 two shankaras

எங்கு வார்த்தைகள் தோற்கின்றனவோ எதை வார்த்தைகளால் அடக்க முடியாதோ அதுவே அது” என்று சொல்ல முடியா பிரம்மத்தை உபநிடதங்கள் விளக்கும்.

அதையே பரமாசார்யருக்கும் பொருந்தக் கூறலாம்.

எங்கே வார்த்தைகள் விவரிக்க முடியாமல் திணறுகின்றனவோ அங்கே பரமாசார்யாரின் திவ்ய சரிதம் அடங்குகிறது.

 

 

அவரின் நூறாண்டு பணியை நினைத்து அவர் காட்டிய வழியில் ஹிந்து மத தத்துவத்தை உலகெங்கும் பரப்புவதே அவருக்கு நாம் செலுத்தும் சிறந்த அஞ்சலியாக அமையும்!

ஓம் சாந்தி சாந்தி சாந்தி!

 

******        

சுழற்சி பற்றிய அபூர்வமான ஹிந்து தத்துவம்!Post No 2626

circarro

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 13 March 2016

 

 

Post No. 2626

 

Time uploaded in London :–  7-15 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

ஹிந்து தத்துவம்

 

சுழற்சி பற்றிய அபூர்வமான ஹிந்து தத்துவம்!

 

ச.நாகராஜன்

 

சுழற்சித் தத்துவம்!

 

ஒரு ஹிந்து,  வாழ்க்கையைப் பற்றிய சரியான கண்ணோட்டத்துடன் ஆனந்தமாக அலட்டிக் கொள்ளாமல் வாழ முடிவது எப்படி? அது கூறும் சுழற்சி தத்துவத்தினால் தான்!

கல்பம் என்ற நீண்ட நெடும் காலம் கூட சுழற்சிக்கு உட்பட்டதே!

நான்கு யுகங்கள் தோன்றும்; நடக்கும்; உரிய காலத்தில் உள் வாங்கி ஒடுங்கும். பின் மீண்டும் தோன்றும்; மலரும்!

ஜீவன்களும் அப்படித் தான்! சுழற்சிக்கு உட்பட்ட ஜீவன்கள் மீண்டும் அதே போல அதே செய்கையைச் செய்து வாழும்; மறையும் மீண்டும் தோன்றும்!

 

 

விவேகானந்தரின் விளக்கம்

 

ஒரு முறை ஸ்வாமி விவேகானந்தர் வட கலிபோர்னியாவில் சீடர்களுக்கு கீதையின் சுலோகம் ஒன்றுக்கு உரை சொல்லி அதை விளக்கிக் கொண்டிருந்தார்.

 

அது கீதையில் 18ஆம் அத்தியாயத்தில் வரும் 61ஆம் சுலோகம்!

ஈஸ்²வர: ஸர்வபூ⁴தாநாம் ஹ்ருத்³தே³ஸே²ऽர்ஜுந திஷ்ட²தி |
ப்⁴ராமயந்ஸர்வபூ⁴தாநி யந்த்ராரூடா⁴நி மாயயா || 18- 61||

அர்ஜுந = அர்ஜுனா
யந்த்ராரூடா⁴நி ஸர்வபூ⁴தாநி = உடல் என்கிற எந்திரத்தில் ஏற்றி அனைத்து உயிர்களையும்
ஈஸ்²வர: = ஈசுவரன்
மாயயா ப்⁴ராமயந் = மாயையினால் சுழற்றிக் கொண்டு
ஸர்வபூ⁴தாநாம் ஹ்ருத்³தே³ஸே² = எல்லா உயிர்களின் உள்ளத்தில்
திஷ்ட²தி = நிற்கிறான்

இதன் திரண்ட கருத்து இது: அர்ஜுனா, எல்லா உயிர்களிலும் ஈசன் உள்ளத்தில் நிற்கிறான். மாயையால் அவன் எல்லா உயிர்களையும் சக்கரத்திலேற்றிச் சுழற்றுகிறான்.

potter figure

ஒரு குயவனின் சக்கரத்தில் வைத்துச் சுழற்றுவது போல தமது மாயா சக்தியால் உயிரினங்களை இறைவன் சுழலச் செய்கிறார் என்ற கருத்தை ஸ்வாமிஜி நன்கு விளக்கி விட்டு இப்படிக் கூறினார்:” இப்போது நாம் காண்கின்ற இந்த நிகழ்ச்சிகள் அனைத்துமே ஏற்கனவே நடைபெற்றவை தான்! விளையாடுபவன் தாயக்கட்டையைக் குலுக்கி இடுகிறான். எண்கள் வருகின்றன. ஒரே விதமான சேர்க்கை பல நேரங்களில் வரலாம். வாழ்க்கையும் அப்படித்தான். சக்கரம் சுழலுகிறது. ஒரு முறை நிகழ்ந்ததே மீண்டும் நிகழ்கிறது. அதோ அந்தப் பானை, அந்த டம்ளர், இந்த வெங்காயம், இந்த உருளைக் கிழங்கு எல்லாம் ஏற்கனவே ஒரு முறை இதே இடத்தில் இப்படியே இருந்தன. இப்போது அந்தச் சேர்க்கையில் மீண்டும் இங்கே இருக்கின்றன. நாம் என்ன செய்யலாம், அம்மா! வாழ்க்கையின் சக்கரத்தில் நம்மை வைத்துச் சுழற்றுவது அவர் அல்லவா!”

 

 

 

 

சீதை காடு செல்லக் கூறும் காரணம்!

 

ஆனந்த ராமாயணத்திலில் இந்தக் கருத்தை விளக்கும் ஒரு அற்புதமான சம்பவம் இது:

 

ராமன் சீதையைக் காட்டுக்கு வர வேண்டாம் என்று கூறும் போது அவள் காட்டிற்கு வருவேன் என்பதை வலியுறுத்திக் கூறும் பல காரணங்களுள் ஒரு காரணம் இது:

 

“ஓ! ராமா! இது வரை நடந்த எந்த ராமாயணத்திலாவது சீதை இல்லாமல் ராமர் காட்டுக்குப் போயிருக்கிறாரா?”

 

 

கவி சமத்காரமாக இதை எடுத்துக் கொண்டாலும் கூட இது ஒரு அற்புதமான சுழற்சித் தத்துவத்தை வலியுறுத்தவே செய்கிறது.

 

circular2

கர்ம யோகம்

 

எல்லாமே நடந்தது தான் என்றால் அல்லது நடப்பது நடந்தே தீரும் என்றால் நாம் எதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

இருக்கும் இடத்தில் தர்மத்திற்கேற்ப உன் வேலையைச் செய்! அதில் பலனை எதிர்பார்க்காமல் கடமையை கர்ம யோகமாகச் செய் என்பது கண்ணனின் அருளுரை!

 

கீதை வலியுறுத்தும் தத்துவத்தை விளக்கும் விதமாக மாயக் கண்ணன் ஒரு கணம் கூட ஓய்வின்றி கர்மம் புரிகிறான்; எடுத்துக் காட்டாக விளங்குகிறான்!

நத்திங் டைஸ்!

 

  1. DUNNE என்பவர் எழுதிய ‘NOTHING DIES’ என்ற நூல் எதுவும் இறப்பதில்லை; யாரும் இறப்பதில்லை என்ற கருத்தை அழகுற விளக்குகிறது!

இறப்பது போலத் தோன்றும் ஒரு உயிர் இன்னொரு இடத்தில் வாழ்கிறது; அது மீண்டும் பூவுலகில் வருகிறது.

 

‘இந்த ஜனன மரணச் சுழற்சியை நீக்க முக்தி அடைவதை குறிக்கோளாகக் கொள்! நீண்ட நெடும் பயணத்தில் அனைவரும் ஒரு நாள் இந்த லட்சியத்தை எய்துவோம்’ என்கிறது  ஹிந்து மதம்!

 

என்ன ஒரு ஆறுதலான செய்தி!

 

 

 

இறந்தவரை மீட்ட சம்பவங்கள்!

 

இன்னும் ஒரு கண்ணோட்டத்தில் வாழ்கின்ற அனைவரும் அவர்கள் ஆற்றிய அனைத்துச் செயல்களும் எல்லையற்ற பிரபஞ்சத்தில் பதிவு செய்யப்படுகின்றன.

 

வல்லவர்கள் அந்த பிரபஞ்சத்தில் எங்கு வேண்டுமானாலும் எந்தக் காலத்திற்கு வேண்டுமானாலும் பயணப்படலாம்.

 

அதனால் தான் ஞான சம்பந்தர் பூம்பாவையை உயிர்ப்பிக்க முடிந்தது.

கிருஷ்ணர் குரு தக்ஷிணையாக சாந்தீபனி முனிவருக்கு அவரது புதல்வரை காலம் சென்றாலும் வளர்ந்த நிலையில் மீட்டுத் தர முடிந்தது.

சுந்தரர் முதலை வாய்ப்பட்ட சிறுவனை இரு வருடங்கள் கழித்து மீட்டாலும் உரிய வளர்ச்சியுடன் பெற முடிந்தது.

 

அற்புதமான இந்த சுழற்சித் தத்துவம் ஹிந்து மதம் ஒன்றுக்கே உரியது என்பது எவ்வளவு அற்புதமான விஷயம்!

 

சிந்திப்போம்; உரிய வினையை ஆற்றி உயர்வோம்!!

*******

 

அதிசய ஆற்றல்: பிறர் மனதை அறிவது எப்படி? (Post No. 2615)

vivekananda-stamps

Written by S Nagarajan 

 

Date: 10 March 2016

 

Post No. 2615

 

Time uploaded in London :–  8-49 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

அதீத உளவியல் ஆற்றல்

 

ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத அனுபவங்களும் ஆற்றலும்! – (6)

ச.நாகராஜன்

 

 

பிறர் மனதை அறிதல்

 vivek2

பிறரின் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிவது ஸ்வாமிஜிக்கு எளிதான ஒன்று. ஒருவர் ஸ்வாமிஜியைப் பார்க்க வரும்போதே அவர் எதற்காக வருகிறார் என்ன நினைக்கிறார் என்   பதை அவர் மிக எளிதாக அறிந்து கொள்வார்.

 

ஒரு முறை பிராணாயாமம் பற்றிக் கேட்க வேண்டுமென்று சிலர் ஸ்வாமிஜியை அணுகினர்.

 

ஸ்வாமிஜி மற்றவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறி விட்டு பிராணாயாமம் பற்றி அவர்கள் கேட்கும் முன்னரே தானாகவே அது பற்றிக் கூறலானார். வந்தவர்கள் வியந்தனர். அவர்கள் கேட்க நினைத்த சந்தேகங்களுக்கெல்லாம் அவருடைய பேச்சில் பதில் இருந்தது.பிற்பகல் மூன்று மணிக்கு ஆரம்பித்த உரை இரவு ஏழு மணிக்கு முடிந்தது.

 

 

எப்படி தாங்கள் கேட்காமலேயே அவரால் பதில் சொல்ல முடிந்தது என்று சீடர் ஒருவர் கேட்ட போது ஸ்வாமிஜி, “இது போன்ற நிகழ்ச்சிகள் மேலை நாட்டில் பல முறை நடந்துள்ளன. மக்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் அது பற்றி என்னிடம் கேட்டுள்ளனர்” என்றார்.

 

மனதைப் படிக்கலாமா?

 

சிஸ்டர் கிறிஸ்டைன் ஸ்வாமிஜியை விட மூன்று வயது இளையவர். அவர் ஸ்வாமிஜியிடம் தீட்சை பெற விரும்பினார்.

ஆயிரம் தீவு பூங்காவில் ஸ்வாமிஜியுடன் இருக்கும் பேறு பெற்றார் அவர். மறு நாள் பலருக்கு மந்திர தீட்சை தர ஸ்வாமிஜி உத்தேசித்திருந்தார். முதல் நாள் அவரை அழைத்த ஸ்வாமிஜி, “ உனக்கும் தீட்சை தர விரும்புகிறேன். ஆனால் உன்னை எனக்கு அவ்வளவாகத் தெரியாது.அதனால் தீட்சைக்கு நீ தயாராக இருக்கிறாயா என்பது புரியவில்லை” என்று கூறிய ஸ்வாமிஜி சற்றே தயக்கத்துடன் தொடர்ந்தார்:” என்னிடம் பிறரின் மனதைப் படிக்கும் ஆற்றல் இருக்கிறது. அதை மிகவும் அபூர்வமாகவே நான் பயன்படுத்துவேன். உனக்கும் தீட்சை தர இருப்பதால், நீ அனுமதித்தால் நான் உன் மனதைப் படிக்க விரும்புகிறேன்” என்றார்.

 

உடனே கிறிஸ்டைன், “தாராளமாகப் படியுங்கள்” என்றார்.

“முற்றிலும் படிக்கலாமா?” என்று கேட்டார் ஸ்வாமிஜி.

“படிக்கலாம்” என்று உறுதியாகக் கூறினார் அவர்.

“தைரியசாலிப் பெண் நீ” என்று அவரைப் பாராட்டிய ஸ்வாமிஜி அவரது மனதைப் படித்தார். பின்னர் கூறினார்:’ உனக்கு இன்னும் மூன்று திரைகளே உள்ளன. இப்பிறவியிலேயே உனக்கு மூன்றாவது கண் திறக்கும்” என்று கூறி அருளினார்.

பிற்காலத்தில் ஒரு முறை ஸ்வாமிஜி, மேலை நாட்டில் இந்த சக்தியைப் பயன்படுத்தியதால் தன் தவ ஆற்றல் குறைவு பட்டு விட்டது என்று கூறி வருந்தினார்

 

 

மனதின் ஆற்றல் பற்றிய உரை

 

ஏற்கனவே இந்த தொடரில் நாம் குறிப்பிட்டிருக்கும் ஸ்வாமிஜியின் மனதின் ஆற்றல் பற்றி கலிபோர்னியா லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 1900ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதி ஆற்றிய உரையில் சில பகுதிகளை ஆங்கிலத்தில் கீழே பார்க்கலாம். இவை மனதின் ஆற்றல் பற்றிய சில புதிய விஷயங்களை விளக்கும் பகுதிகளாகும்:

 

malaysian-postal-stamp-on-swami-vivekananda

Have you ever noticed the phenomenon that is called thought-transference? A man here is thinking something, and that thought is manifested in somebody else, in some other place. With preparations — not by chance — a man wants to send a thought to another mind at a distance, and this other mind knows that a thought is coming, and he receives it exactly as it is sent out. Distance makes no difference. The thought goes and reaches the other man, and he understands it. If your mind were an isolated something here, and my mind were an isolated something there, and there were no connection between the two, how would it be possible for my thought to reach you? In the ordinary cases, it is not my thought that is reaching you direct; but my thought has got to be dissolved into ethereal vibrations and those ethereal vibrations go into your brain, and they have to be resolved again into your own thoughts. Here is a dissolution of thought, and there is a resolution of thought. It is a roundabout process. But in telepathy, there is no such thing; it is direct.

 

 

I can see only at a distance of so many feet. But I have seen a man close his eyes and see what is happening in another room. If you say you do not believe it, perhaps in three weeks that man can make you do the same. It can be taught to anybody. Some persons, in five minutes even, can be made to read what is happening in another man’s mind. These facts can be demonstrated.

 

I shall tell you a story which I heard from a great scholar in the West. It was told him by a Governor of Ceylon who saw the performance. A girl was brought forward and seated cross-legged upon a stool made of sticks crossed. After she had been seated for a time, the show-man began to take out, one after another, these cross-bars; and when all were taken out, the girl was left floating in the air. The Governor thought there was some trick, so he drew his sword and violently passed it under the girl; nothing was there. Now, what was this? It was not magic or something extraordinary. That is the peculiarity. No one in India would tell you that things like this do not exist. To the Hindu it is a matter of course. You know what the Hindus would often say when they have to fight their enemies — “Oh, one of our Yogis will come and drive the whole lot out!” It is the extreme belief of the race. What power is there in the hand or the sword? The power is all in the spirit.

 

****** முற்றும்

 

ஸ்வாமிஜியின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஏராளமான அற்புதமான அனுபவங்களை அன்பர்கள் படிக்க இந்தத் தொடர் உத்வேகம் அளிக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்தத் தொடர் இத்துடன் நிறைவு பெறுகிறது.

 

எட்டாம் நாள் திரு நாள் – வேட்டைத் திருநாள் – ஏன்? (Post No. 2613)

arjuna hunter

Article written by london swaminathan

Date:  9 March, 2016

 

Post No. 2613

 

Time uploaded in London :–  8-28

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

பிரிட்டிஷ் லைப்ரரியில் இலங்கை கொழும்பு நகரைச் சேர்ந்த ருத்ர கணிகை அஞ்சுகம், 1911ஆம் ஆண்டில் எழுதிய புத்தகம் கிடைத்தது. அதில் கிடைத்த வேட்டைத் திருநாள் உற்சவ மகிமைக் கதையைக் கீழே கொடுக்கிறேன். பக்கங்களைப் படிக்க முடியாதவர்கள் அல்லது பழைய தமிழ் நடை புரியாதவர்கள் முதலில் சுருக்கக் கதையைப் படியுங்கள்:-

 

 

 

 

கதைச் சுருக்கம்:

அர்ஜுனன் பாசுபதாஸ்திரம் வேண்டி தவம் செய்தான். அப்பொழுது, துர்யோதனின் ஏவலின் பேரில் முகாசுரன் என்னும் அசுரன் பன்றி உருவம் கொண்டு அர்ஜுனனைத் தாக்க வந்தான். அர்ஜுனனைக் காப்பாற்றுவதற்காக சிவபெருமானும் வேடன் உரு தாங்கி வந்தான். அடிபட்ட பன்றி ஒரு முனிவனிடம் தஞ்சமடைய அர்ஜுனனும், சிவபெருமானும் தானே பன்றியை முதலில் வில்லால் அடித்ததால் தனக்கே சொந்தமென்று உரிமை கொண்டாடுகின்றனர்.

 

siva hunter

இருவரும் இது குறித்து பெரும் சண்டையில் ஈடுபட்டவுடன், தேவர்கள் அனைவரும் கூடினர். அப்பொழுதுதான் அர்ஜுனனுக்கு, தான் யாரைக் குறித்து தவம் செய்தானோ அந்த சிவ பெருமானே நேரில் வந்ததைக் கண்டு காலில் விழுகிறான். சிவனும், அர்ஜுனனின் பக்தியை மெச்சி, அவன் கேட்ட பாசு பத அஸ்திரத்தைத் தருகிறான். ஆனால் வேடனென்று தன்னை ஏசியதால், அர்ஜுனனும் ஒரு ஜன்மத்தில் காளஹஸ்தியில் வேடனாகப் பிறந்து சிவனை அடைவான் என்று ஒரு சிறிய சாபம் இடுகிறார். அவரே காளஹஸ்தியில் பிறந்த திண்ணன் என்னும் கண்ணப்ப நாயனார் ஆவார்.

 

இந்த சிவனின் வேடமே, சிவன் கோவில் உற்சவங்களில் எட்டாம் நாளன்று வேட்டைத் திருநாளாகக் கொண்டாடப் படுகிறதென்றும், அவ்வாறு வேடுவ வேடம் தரித்து சுவாமிக்கு முன்னால் செல்லும் உரிமை ருத்ர கணிகைகளுக்கே உண்டு என்றும் ஆதாரங்களுடன் எழுதுகிறார் அஞ்சுகம்.

shiva_arjuna

இதோ அந்த மூன்று பக்கங்கள்:–

 

pandri1

pandri2

 

pandri3

–subam-