ஆத்திச்சூடி படித்த அதிகப் பிரசங்கி! (Post No. 2439)

IMG_9826

Compiled  by London swaminathan

Date: 29 December 2015

 

Post No. 2439

 

Time uploaded in London :– 13-39

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

 

விநோத விகட சிந்தாமணி- என்ற பழைய நூலிலிருந்து; (நூல் கொடுத்துதவியர்- ச.சீனிவாசன்,சென்னை).

 

ஒரு வைத்தியர் மருந்து கொடுக்க ஒரு வீட்டுக்குச் சென்றார். அதுசமயம் நோயாளி வாசல் நிலை (படி)யில் உட்கார்ந்தான். அப்போது…………………….

வைத்தியர்:– அப்பா! படியிலுட்காராதே; தோஷம்.

பையன்:என்னங்காணும்! “நிலையிற் பிரியேல்” என்று அவ்வை கூறியிருக்க நீர் அதிலிருக்கபடாதென்கிறீர்?

வைத்தியர்: சரி, எதற்காக உன் அம்மா கூப்பிட்டார். உடம்பின் நிலை என்ன? உள்ளதைச் சொல்.

பையன்: என்னய்யா? “உடையது விளம்பேல்” என்று அவ்வை கூறியிருப்பதை உணராமல் உள்ளது கூறென்கிறீர்?

வைத்தியர்: சரி, கையையாவது நீட்டு பார்ப்போம்.

பையன்: அட போமையா! நீர் ஆத்திச்சூடி படியாமல் என்ன வைத்தியர்காணும்? “ஏற்பது இகழ்ச்சி: என்று அவ்வை கூறியிருப்பதையறிந்தும் யாசகன் போல கையை நீட்டச் சொல்கிறீர். நான் என்ன பைத்தியமா?

வைத்தியர்: சரி, அது போகட்டும்;இந்த மருந்தையாவது சாப்பிடு

 

பையன்: ஐயா, இதில் பாதி நீர் சாப்பிடும்

வைத்தியர்: பையா, நான் எதற்காக………………….?

பையன்:ஐயமிட்டுண் – என்று அவ்வைப்பாட்டி கூறியிருப்பதால் உமக்குப் பாதி கொடுத்துவிட்டு, மீதியை நான் உண்ணுவேன்.

வைத்தியர்: பையா, இன்று மருந்து சாப்பிடாவிடினும், ராத்திரி கொள்ளைக் கஷாயம் போட்டு அதிலிந்த பஸ்பத்தைக் கலந்து சாப்பிடு.

பையன்: ஐயா, கொள்ளை விரும்பேல் –என்று ஆத்திச் சூடி சொல்கிறது. நீர் கொள்ளைக் கஷாயம் போடச் சொல்கிறீர். ஆத்திச் சூடியை அடியோடு மறந்துவிட்டீர் போலும்?

 

வைத்தியர்: சரி, சரி, நாளைக்கு நோன்பு என்பதால், கண்டதைக் கடியதைத் தின்னாமலாவது இரு; எல்லாம் சரியாகப் போகும்

பையன்: சீ, சீ, நீர் போங்காணும்; ஆத்திச் சூடி சுத்தமாகத் தெரியவில்லையே. “நோன்பென்பது கொன்று தின்னாமை”  (கொன்று+ தின்னு+ ஆமை) என்பதை அறியீரோ?

நோன்பென்பது- விரதமாவது

ஆ- பசுவையும்

மை-ஆட்டுக் கடாவையும்

கொன்று- வதைத்து

தின்னு- சாப்பிடு

என்று அர்த்தமாகிறது. இன்னொரு அர்த்தம் ஆமையைக் கொன்று தின்னு (கொன்று+தின்னு+ ஆமை)! உமது வைத்தியமும் பைத்தியமும் எனக்கு வேண்டாங்காணும்.

வைத்தியர்: தம்பி, உனக்கு ஆத்திச்சூடி நல்ல பாடமென்று தெரிகிறது. இனி இந்த நோய் அதிகப்படும் முன்னால், தயவு செய்து கொன்றை வேந்தனையும் பாடம் பண்ணிவிடு!!நான் வருகிறேன்!!

–சுபம்–

 

 

 

 

 

சிலைகளைக் கும்பிடுவது சரியா? ரமணரின் பதில்!

amman

Written by S NAGARAJAN

Date: 27 December 2015

 

Post No. 2433

 

Time uploaded in London :– 16-17

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

ரமண மஹரிஷியின் ஜயந்தி தினம். அதையொட்டிய சிறப்புக் கட்டுரை.

ஞான ஆலயம் டிசம்பர் 2015 இதழில் வெளிவந்துள்ள கட்டுரை

 

 

சிலைகளைக் கும்பிடுவது சரியா? மஹரிஷி ரமணரின் பதில்!

.நாகராஜன்

 

 ramana

முஸ்லீம் அன்பரின் சந்தேகம்

திருவண்ணாமலையில் அருளாட்சி செய்து கொண்டிருந்த ரமண மஹரிஷியை அணுகி தங்கள் சந்தேகங்களைப் போக்கிக் கொண்ட அன்பர்கள் ஏராளம். பெரும்பாலும் மௌனத்தையே பாஷையாகக் கொண்டு வந்திருந்தோரின் மனதில் சந்தேக விளக்கம் தானாகவே கிடைக்கும் படி அருள் பாலிப்பது அவர் வழக்கம். சில சமயம் வந்திருந்திருப்பவரின் பக்குவத்திற்கேற்ப பதிலை அருள்வதும் உண்டு.

ஒரு நாள் இரண்டு முஸ்லீம் அன்பர்கள் அவரை நாடி வந்தனர். அவர்களுக்கு உருவ வழிபாடு பற்றி சந்தேகம் இருந்தது.

பக்தர்: கடவுளுக்கு உருவம் உண்டா?

மஹரிஷி: அப்படி என்று யார் சொன்னது?

பக்தர்: அப்படி என்றால், கடவுளுக்கு உருவம் இல்லை என்றால், சிலைகளைக் கும்பிடுவது சரியா?

மஹரிஷி: கடவுளை விட்டு விடுவோம். ஏனென்றால் அவர் யாருக்கும் பிடிபடாதவர். உங்களை எடுத்துக் கொள்வோம். உங்களுக்கு உருவம் உண்டா?

பக்தர்: ஆம், எனக்கு உருவம் உண்டு; பெயர் உண்டு.

மஹரிஷி: அப்படி என்றால் உடல் அங்கங்களைக் கொண்ட ஒரு மனிதர் நீங்கள். ஆறடி உயரம், தாடி கொண்டவர். சரி தானே!

பக்தர்: நிச்சயமாக அப்படித்தான்!

மஹரிஷி: சரி, அப்படியானால் தூங்கும் போது உங்களை நீங்கள் காண்கிறீர்களா?

பக்தர்: விழித்து எழுந்தவுடன் நான் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறேன் என்பது தெரிகிறது. ஆகவே, அநுமானத்தின் மூலமாக நான் இப்படி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்திருக்கிறேன் என்பது தெரிய வருகிறது.

மஹரிஷி: நீங்கள் உடல் தான் என்றால் இறந்த பிறகு சவத்தை ஏன் புதைக்க வேண்டும்? உடல் தன்னைப் புதைப்பதை எதிர்க்க அல்லவா வேண்டும்?

 

ramana2

பக்தர்: இல்லை, நான் பரு உடலில் உள்ளே இருக்கின்ற உள்ளுறை ஜீவன்.

மஹரிஷி: ஓ! அப்படி என்றால் உண்மையிலேயே நீங்கள் உருவம் இல்லாதவர் என்றாகிறது. ஆனால் இப்போது  உடல் மூலமாக உங்களை அடையாளம் கண்டு சொல்கிறீர்கள். இப்படி உடலுடன் இருக்கும் போது அடையாளம் காணும் நீங்கள், உருவம் இல்லாத கடவுளை உருவமாகக் காண்பதில் என்ன தவறு இருக்கிறது?

கேள்வி கேட்டவர் திகைத்து விட்டார்.

ஓர் நாமம் ஒருருவம் இல்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடித் தெள்ளேணம் கொட்டோமோ என்பது அருளாளர் வாக்கு.

உருவமுமாகி அருவமுமாகி அதையும் கடந்தவனாகி இருப்பவன் இறைவன்.

மஹரிஷியின் அருள்வாக்கின் மூலமாக அனைவரும் உருவ வழிபாடு பற்றிய உண்மையை அறிந்தனர்.

 

 

ramanashram gate

சையத் உணர்ந்த சமத்துவம்

டாக்டர் முஹம்மத் ஹபிஸ் சையத் என்பவர் பெர்ஸிய மொழியிலும் உருது மொழியிலும் பேராசிரியராக அலஹாபாத் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வந்தார். அவர் திருவண்ணாமலை வந்து மஹரிஷியை தரிசித்தார். ஏராளமான கேள்விகள் அவரைக் குடைந்தன. ஒவ்வொன்றாகக் கேட்டுத் தெளிவு பெற்றார்.

சையத்: உண்மையை எப்படி உணர்வது? அதை எப்படி அனுபவிப்பது?

மஹரிஷி: புதிதாக எதையும் பெற வேண்டியதே இல்லை! ஆன்மாவைப் பற்றிய அறியாமையை விட்டு விட்டாலே போதும்! ஆன்மாவை ஆன்மா அல்லாதவற்றுடன் அடையாளம் காண்பது தான் அறியாமை. அதை விட வேண்டும்.

சையத்: சரி. எனக்கு இன்னும் புரிந்தபாடில்லை. உங்கள்  உதவி வேண்டும். இங்குள்ள ஒவ்வொருவரும் உங்களின் அருளுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர். நீங்களே ஒரு குரு அல்லது கடவுளின் உதவியை நாடி இருக்க வேண்டும். அந்த அருளை இப்போது எல்லோருக்கும் அருளுங்கள். என்னைக் காப்பாற்றுங்கள்.

இங்கு வருவதற்கு முன்னர் உங்களைக் காண்பதற்கு மிகவும் ஆவலுடன் இருந்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பு ஏனோ எனக்குக் கிடைக்கவில்லை. பெங்களூர் வந்த போது எப்படியும் உங்களை தரிசிப்பது என்று திடமாகத் தீர்மானித்தேன். மிஸ்டர் ஃப்ரைட்மேனையும் இன்னும் பலரையும் சந்தித்தேன். அவர்கள் என்னை இங்கே அனுப்பினர். என்னை நீங்கள் இழுத்திருக்கிறீர்கள். பால் பிரண்டன் பம்பாயில் இருந்த போது அவரது பயணத்தை ரத்து செய்ய வைத்து இங்கே அவரை இழுத்தீர்கள். அது போலத் தான் எனது கேஸும் இருக்கிறது.

அருப்புகொட்டை ரமணர்

ரமணர் தமிழ்

 

இங்கு வந்த போது ஒரே தயக்கம். என்னை உங்களின் அருகே வர அனுமதிப்பார்களா, பேச விடுவார்களா என்றெல்லாம் சந்தேகப்பட்டேன். ஆனால் எனது சந்தேகம் எல்லாம் நீங்கி விட்டன. இங்கு அனைவரும் சமம் என்பதை உணர்ந்து கொண்டேன். இங்கு சமத்துவத்தை நீங்கள் உருவாக்கியிருக்கிறீர்கள். உங்களுடன் சேர்ந்து மற்றவர்களைப் போலவே சாப்பிட்டேன். இங்கு நடந்ததை உத்தர பிரதேசத்தில் சொன்னால் நம்பவே மாட்டார்கள். அங்குள்ள அந்தணர்கள் என்னுடன் சமபந்தியில் சாப்பிடமாட்டார்கள்; வெற்றிலை கூடப் போட மாட்டார்கள். ஆனால் இங்கோ நீங்கள் என்னை உங்களுடன் ஒருவனாக ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள். காந்திஜி இதைச் செய்ய முயன்று கொண்டிருந்தாலும் கூட தேசத்தில் அப்படிப்பட்ட நிலையை உருவாக்க இன்னும் முடியவில்லை. உங்கள் முன்னால் இருப்பதே எனக்கு ஆனந்தமாக இருக்கிறது.

உங்களை தெய்வமாக மதிக்கிறேன். ‘யார் வழிபட்டாலும் சரி, அப்படி வழிபடுபவர் என்னையே வழிபடுகிறார். அவரை நான் காப்பாற்றுவேன்” என்று ஶ்ரீ கிருஷ்ணர் அருளியுள்ளார். ஆனால் மற்றவர்களோ, என் மூலமாகத் தான் முக்தி என்று சொல்லி இருக்கின்றனர். ஶ்ரீ கிருஷ்ணர் ஒருவரே இப்படி பரந்த மனப்பான்மையுடன் கடவுளே பேசுவது போல அருளியுள்ளார். அதே சமத்துவத்தை நீங்களும் கடைப் பிடிக்கிறீர்கள்”

சையத் மனமுருக இப்படிப் பேசி விட்டு மஹரிஷியை வணங்கினார்.

இதிலிருந்து பல முறை அவர் மஹரிஷியைப் பார்க்க வருவது வழக்கமானது.

 

ramana sitting

என் வாழ்க்கையே என் உபதேசம்

கஷ்டமான கேள்விகளுக்கு தான் வாழும் வாழ்க்கை மூலமாகவே எளிய விடையை காண்பித்தவர் மஹரிஷி.

ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள், பார்ஸிகள், புத்த மதத்தினர், சீக்கியர், ஜைனர்கள் என அனைத்து மதத்தினரும் அவர் முன் சமமாக அணி வகுத்து நின்றனர்; சம உரிமையைப் பெற்றனர். தங்கள் தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டு திருப்தியுடன் அவர் அருளைப் பெற்றனர்.

மஹரிஷியின் அருளுரைகள் ஆன்மீகச் சுரங்கம்; அதைத் தோண்டத் தோண்ட அற்புதமான இதமான விஷயங்கள் கிடைக்கும்; இறைவனை வெளிப்படுத்தும்!

***************

 

ஏசு கிறிஸ்து பற்றி பாரதியார் (Post No. 2423)

painting jesus

(c) St Stephen’s House, University of Oxford; Supplied by The Public Catalogue Foundation

 

Compiled by london swaminathan

Date: 24 December 2015

Post No. 2423

Time uploaded in London:- 21-26
( Thanks for the Pictures  )

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

0637-christmas-stamps-2013

2013  பிரிட்டிஷ் கிறிஸ்துமஸ் தபால்தலைகள்

பாரதிக்கு எம்மதமும் சம்மதம். இந்திய ஞானிகளுக்கே உள்ள தனிப்பெரும் உயர்ந்த சிந்தனை அவருக்கும் இருந்தது. ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற பெரியோர்கள் ஒவ்வொரு மதத்துக்குள்ளும் நுழைந்து உண்மைப்பொருளை உலகிற்கு எடுத்துரைத்தனர். பாரதியோ பாடலின் மூலம், ஏசுவையும், மரியா மக்தலேனாவையும், அல்லாவையும் பாடிப் பரவியுள்ளார். இதோ அவரது பாடல்:

நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்

அந்தணனாம் சங்கராசார்யன் மாண்டான்

அதற்கடுத்த ராமனுஜனும் போனான்!

சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்

தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்

பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்

பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர்!

மலிவுகண்டீர் இவ்வுண்மை பொய் கூறேன் யான்,

மடிந்தாலும் பொய்கூறேன் மானுடர்க்கே

நலிவுமில்லை, சாவுமில்லை, கேளீர், கேளீர்.

 

இது ஒரு தத்துவப் பாடல். புத்தன், ஏசு, ராமன், கிருஷ்ணன் ஆகிய அனைவரும் இயற்கைக்கு மாறான மரணம் அடைந்தனர். ஆனாலும் ஆன்மா அழியாது. அவர்களுடைய பூத உடல் அழிந்தாலும் புகழ் உடம்பு நீடிக்கிறது. இந்தப் பொருளிலேயே பாரதியும் நான் சாகாதிருப்பேன் என்கிறார்.

Christmas Stamps revised artwork

2015 பிரிட்டிஷ்  கிறிஸ்துமஸ் தபால்தலைகள்

இந்தப் பாட்டின் அடுத்த செய்யுளில் “அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால் அப்போது சாவும் அங்கே அழிந்து போகும் மிச்சத்தைப் பின் சொல்வேன்” … என்று தொடர்கிறார். இதிலிருந்து அவர் சொல்லும் மரணமிலாப் பெரு வாழ்வு என்ன என்பது தெள்ளிதின் விளங்கும்.

 

ஏசு பிரான் பற்றி பாரதி பாடிய பாடல் இதோ:–

 

யேசு கிறிஸ்து

1.ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்

எழுந்துயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்

நேசமா மரியா மக்தலேநா

நேரிலே இந்தச் செய்தியைக் கண்டாள்

தேசத்தீர் இதன் உட்பொருள் கேளீர்;

தேவர் வந்து நமக்குட்புகுந்தே

நாசமின்றி நமை நித்தங் காப்பார்

நம் அகந்தையை நாம் கொன்றுவிட்டால்.

 

2.அன்புகாண் மரியா மக்தலேநா

ஆவி காணுதிர் யேசு கிறிஸ்து;

முன்பு தீமை வடிவினைக் கொன்றால்

மூன்று நாளில் நல்லுயிர் தோன்றும்;

பொன்பொலிந்த முகத்தினிற் கண்டே

போற்றுவள் அந்த நல்லுயிர்தன்னை;

அன்பெனும் மரியா மக்தலேநா

ஆஹ! சாலப் பெருங்களி யிஃதே.

 

3.உண்மையென்ற சிலுவையிற் கட்டி

உணர்வை ஆணித் தவங் கொண்டடித்தால்

வண்மைப் பேருயிர் யேசு கிறிஸ்து

வான மேனியில் அங்கு விளங்கும்

பெண்மைகாண் மரியா மக்தலேநா

பேணும்நல்லறம் யேசு கிறிஸ்து

நுண்மைகொண்ட பொருளிது கண்டீர்

நொடியிலிஃது பயின்றிடலாகும்.

 

 2014 X mas

கிறிஸ்தவ மத தத்துவம்

 

இந்தப் பாட்டில் ஏசு பிரான் மூன்று நாளில் உயிர்த்தெழுந்தது, சிலுவையில் அறையுண்டது எல்லாவற்றிற்கும் தத்துவ விளக்கம் தரப்படுகிறது.

 

தமிழில் பொருள் விளங்காதவர்களுக்கு ஒருவேளை, இதை ஆங்கிலத்தில் படித்தால் நன்றாகப் பொருள் விளங்கலாம்:-

1.The Lord came died upon the cross,

And rose up resurrected on the third day,

Devoted and glorious Mary Magdalene

Was witness to this wondrous event

Listen, countrymen, to its secret meaning;

The gods will come and live within us,

And shield us from evil, and redeem us for ever

If only we would shed our pride of self.

 

2.Look! Mary Magdalene is Love incarnate;

And look! Jesus Christ is the Holy Spirit!

If first we shed this embroiled evil,

Godly sacred life will manifest itself in three days.

Mary Magdalene, Love incarnate, saw the radiant vision

Of that godly sacred life beaming from the face

Of golden splendour, and praised it in adoration

This is bliss indeed! The greatest, most ecstatic bliss!’

 

3.If you tie the senses fast to the Cross called Truth,

And hammer them down with the nails of austere penance

Gloriously great and sacred life will shine with radiant splendour

In the sublime and celestial body of Lord Jesus Christ.

Look! Mary Magdalene is true womanhood incarnate;

And Jesus Christ is eternal virtue, which all cherish and revere!

Look! This is the finest, greatest secret, and inmost, mystic meaning;

Yet anyone can learn and practise it in just a moment’s time.

(Translated from Tamil into English by P N Appuswami)

 

இன்னுமொரு பாடலில் எல்லா மதங்களும் மனிதனை இறைநிலைக்கு இட்டுச் செல்வதைப் பாடுகிறார்:

2011_Xmas_set

2011 கிறிஸ்துமஸ் தபால்தலைகள்

 

பூமியிலே, கண்டம் ஐந்து, மதங்கள் கோடி!

புத்த மதம், சமண மதம், பார்ஸி மார்க்கம்,

சாமியென யேசுபதம் போற்றும் மார்க்கம்,

சநாதனமாம் ஹிந்துமதம், இஸ்லாம், யூதம்,

நாமமுயர் சீனத்துத் ‘தாவு’மார்க்கம்

நல்ல ‘கண்பூசி’ மதம் முதலாப் பார்மேல்

யாமறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே;

யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங்கொன்றே.

 

எல்லா மதங்களும் “சாமி நீ, சாமி நீ, கடவுள் நீயே, தத்வமஸி, தத்வமஸி, நீயே அஃதாம்” — என்று அடுத்தவரிகளில் சொல்லி, பெரிய அத்வைத கருதுக்களை “தத்வமஸி” என்ற உபநிஷத வாக்கியம் மூலம் போதிக்கிறார்.

பாரதி பாடாத பொருளே இல்லை!

xxxxx

பிரான்ஸிலும் முஸ்லீம் எதிர்ப்பு அலை!( Post No. 2419)

mizapur krishna

Written by S NAGARAJAN

Date: 24 December 2015

 

Post No. 2419

 

Time uploaded in London :– காலை 5-19

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

 

உலகப் போக்கு

 

First part of this article was published yesterday.

 

முஸ்லீம்களே, உணர்வீர்களா, உலகப் போக்கை!- 2

 

ச.நாகராஜன்

 

சென்ற கட்டுரையில் முஸ்லீம் தீவிரவாதிகளுக்கு எதிராக ஸ்விட்சர்லாந்து எடுத்த தீவிர நடவடிக்கையின் முதல் படியைப் பார்த்தோம். உலக நாடுகள் கடைசி கடைசியாக ஒன்று சேர்ந்து முஸ்லீம்களின் தீவிரவாதப் போக்கைத் தடுத்தே நிறுத்துவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு விட்டன. அப்பாவிகளை கொன்று குவிக்கும் அராஜகத்தை யார் தான் விரும்புவர்?

 

 

நவம்பர் மாதம் ஜனவரி மாதம் அல்ல என்பதை பிரான்ஸ் இப்போது உணர்த்தி விட்டது – முஸ்லீம்களுக்கு!

ஜனவரி 2015-இல் சார்லி ஹெப்டோ (Charlie Hebdo) பத்திரிகை அலுவலகம் உள்ளிட்ட இதர இடங்களில் முஸ்லீம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 அப்பாவிகள் உயிரை இழந்தனர். ஆனால் அப்போது பிரெஞ்சு ஊடகங்களும் மக்களும் வெகுவாக இதைக் கண்டிக்கவில்லை. வெகுஜன எழுச்சி ஏற்படவில்லை. ஆனால் இப்போது பாரிஸில் நடந்த அக்கிரமத்தால் 129 அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை (13-11-15) அன்று நடந்த தாக்குதல் உலக மக்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டுள்ளது.

 

 

இந்த முஸ்லீம்களிம் தீவிரப் போக்குக்கு ஒரு முடிவு கட்ட வேண்டிய கடைசித் தருணம் வந்து விட்டதாக பிரான்ஸ் முடிவு செய்தது. மிகவும் கவலையுடன் கூடிய செழுமையான கோபத்துடன் பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி பிரான்ஸ்வா ஒலாந்தே (Francois Hollande)  பாராளுமன்றம் அவசரநிலை பிரகடனத்தை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஒரு படி மேலே போய் முஸ்லீம்களின் தீவிரவாதத்தைக் கடுமையாக ஒழித்துக் கட்ட அரசியல் சட்டத்தையே திருத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

 

 

வெளிப்படையாக வார்த்தை ஜாலங்களால் தன் உணர்வை அவர் வெளிப்படுத்தவினல்லை தான்! என்றாலும் அவர் மனம் உணர்த்த விரும்பிய செய்தி தெளிவானது.

 

eid,bhadravathi

Picture: Posted by Ramesh Kumar on face book; Sathya Sai Educational institutes, Bhadravathi .

 

மத சார்பற்ற செகுலர் ஃபிரான்ஸ் ஒரு சிக்கலான உறவைத் தான் முஸ்லீம்களுடன் இது வரை கொண்டிருந்தது. ஆனால் இப்போது அந்த சிக்கலைத் தாண்டி தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டது. இதற்கு முஸ்லீம்களை எதிர்க்கத் தான் வேண்டுமென்றால் அதற்கும் தயார் என்பது தான் பிரான்ஸின் இன்றைய நிலை.

 

 

பிரான்ஸ் அரசின் உயர் அதிகாரிகள் தேசத்திற்கே ஒரு பெரும் எதிரி கிளம்பி விட்டான் என்றே உணர்கின்றனர். ஆகவே முஸ்லீம்களின் மசூதிகளுக்கு ஒரு புதிய பாதுகாப்பு தேவை என்கின்றனர். அவசரநிலை நீட்டிக்கப்பட வேண்டும் என்பதும் அவர்களின் எண்ணம். பத்தாயிரத்திற்கும் அதிகமான தீவிரவாதிகளின் பட்டியலை ஏற்கனவே தயார் செய்துள்ள பிரான்ஸ் அவர்களது நடமாட்டத்தைத் தீவிரமாகக் கண்காணிப்பதோடு அவர்களைக் கட்டுப்படுத்தவும் முடிவை எடுக்கவுள்ளது.

 

 

இவர்களை தேசீய எதிரிகள் என அறிவிக்கும் பிரான்ஸ் அதிகாரிகள், தீவிரவாதிகளான இமாம்களை தேசத்தை விட்டே வெளியேற்ற வேண்டும் என்ற முடிவுக்கும் வந்து விட்டனர். பிரான்ஸ் பிரதம மந்திரி மானுவல் வால்ஸ் (Manuel Valls)  14-11-15 சனிக்கிழமையன்று “expel all these radicalized imams”  – இந்த புரட்சிகரமான இமாம்களை வெளியே தள்ளுங்கள் – என்றே பிரகடனம் செய்தார்.

 

 

உலக முஸ்லீம்கள் ஒன்றை உணர வேண்டும். அரபு நாடுகளை விட பாகிஸ்தானை விட முஸ்லீம்களுக்கு சர்வ சுதந்திரமும் பாதுகாப்பும் அரசியல் ரீதியிலான சமத்துவத்தையும் உலகில் தரும் ஒரே நாடு இந்தியா தான்.

 

 

சகிப்புத்தன்மையின் எல்லையையும் மீறி முஸ்லீம்களை இந்தியா ஆதரிக்கிறது – பம்பாயைத் தகர்க்கும் நாசவேலையில் முஸ்லீம் தீவிரவாதிகள் ஈடுபட்ட பின்னரும் கூட.

இந்தியப் பாராளுமன்றத்தைத் தாக்கிய போதும் கூட. ஆனால் உலகப் போக்கைக் கவனிக்கும் போது எல்லையற்ற சகிப்புத்தன்மைக்கு ஒரு உதாரண உருவமாக இருக்கும் ஹிந்து இனம் உலகப் போக்கிற்கேற்ப நடக்க வேண்டிய அவசியம் இனி ஏற்படும்! முஸ்லீம்கள் உலகப் போக்கை உன்னிப்பாக உணர வேண்டும். குறிப்பாக முஸ்லீம் இளைஞர்களும் பெண்மணிகளும் விழித்தெழ வேண்டும்.

eid2, bahdravathi

 

நவம்பர் மாதம் ஜனவரி அல்ல என்பதை பிரான்ஸ் உணர்த்தி விட்டது. நவம்பரில் பாதை திசை மாறி விட்டது. இனி முஸ்லீம் தீவிரவாதம் ஒழிக்கப்படும் – ஒட்டுமொத்தமாக.

 

ஆக இந்த நிலையில் முஸ்லீம்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களிடையே ஊடுருவி இருக்கும் தீவிரவாதிகளான இமாம்கள், தீவிரவாதிகளின் பட்டியலைத் தாமே தயாரித்து அந்தந்த அரசுகளிடம் சமர்ப்பித்து நடவடிக்கை எடுக்க உதவ வேண்டும்.

இது உலகத்தை மட்டும் காப்பாற்றாது, அவர்களையும் காப்பாற்றும்.

 

முஸ்லீம்கள் ஒரு இனமாக, மதத்தினராக வாழ இதுவே சிறந்த வழி! உலகப் போக்கை உணர்வார்களா, முஸ்லீம்கள்?!

*********

 

முஸ்லீம்களே, உணர்வீர்களா, உலகப் போக்கை! (Post No. 2417)

arabian wonder

Written by S NAGARAJAN

Date: 23 December 2015

 

Post No. 2417

 

Time uploaded in London :– காலை 8-32

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

உலகப் போக்கு

முஸ்லீம்களே, உணர்வீர்களா, உலகப் போக்கை!

 

ச.நாகராஜன்

 

முஸ்லீம்கள் உலகப்போக்கை நன்கு கவனிக்க வேண்டிய கடைசித் தருணம் வந்து விட்டது. தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இந்தத் தருணத்தை விட்டு விட்டால் இனி ஒரு தருணம் கிடைப்பது அரிது.

 

 

ஒரு சில தீவிரவாதிகளால் உலகெங்குமுள்ள முஸ்லீம்களை “ஓரம் கட்ட” உலக நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

நடப்பவற்றைப் பார்ப்போம்.

 

 

தி இண்டிபெண்டண்ட் பத்திரிகை தரும் செய்தி இது:-

ஸ்விட்சர்லாந்தில் டிசினோ (Ticino) பிராந்தியத்தில் முகத்தை மூடி பர்கா (BURKA) அணிவது இனி கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் 6500 ஸ்டர்லிங் பவுண்டுகள் அபராதம். இந்தப் பிராந்தியத்தின் பார்லிமெண்ட் இதற்கான சட்டத்தை சமீபத்தில் 23-11-2015 திங்களன்று இயற்றி நிறைவேற்றியுள்ளது.

 

 

ஐரோப்பாவில் மிக அதிக அளவில் அதிகரித்து வரும் தீவிரவாத நடவடிக்கைகளை முற்றிலுமாக முறியடிக்கும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என ஸ்விட்சர்லாந்து பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

ஸ்விட்சர்லாந்தின் தென் பகுதியான இத்தாலி மொழி பேசும் டிசினோ பிராந்தியம், பொது இடங்களில் இப்படி முகத்திரை அணிந்து வந்தால் தண்டனைக்குரிய குற்றம் என அறிவித்து விட்டது. பொது இடங்கள் என்றால் கடைகள்,உணவு விடுதிகள், பொது கட்டிடங்கள் என்று அர்த்தம். காரில் அமர்ந்து செல்லும் போதும் பர்கா அணியக் கூடாது. சுற்றுலாப் பயணிகளுக்கும் விதிவிலக்கு இல்லை. அவர்களும் இந்த விதியை நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும்.

 

 

ஆனால் முகமூடி, க்ராஷ் ஹெல்மெட் போன்றவற்றை அணியத் தடை இல்லை.

 

இந்தப் பிராந்தியத்தில் ஜனநாயக முறைப்படி கருத்து வாக்கெடுப்பு எடுக்கப்பட்டது. மூன்றில் இரண்டு பங்கு வாக்காளர்கள் இப்படி தடை விதிப்பதை ஆதரித்தனர். இந்த வாக்கெடுப்பு 2013ஆம் ஆண்டு செப்டம்பரில் எடுக்கப்பட்டது. பின்னர் சட்டம் இயற்றப்பட்டு சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

 

 

இதை முன்னின்று வரைவுச் சட்டத்தை அமைத்த ஜியார்ஜியோ கிரின்ஹெல்லி (George Ghiringhelli), “இந்தத் தடையானது டிசினோ மற்றும் ஸ்விட்சர்லாந்து பகுதியில் பதுங்கி இருக்கும் முஸ்லீம் தீவிரவாதிகளுக்கு ஒரு செய்தியை அனுப்புகிறது” என்றார்.

ராய்ட்டர் செய்தி நிறுவனம் தரும் இந்தச் செய்தி தனியான ஒரு செய்தி அல்ல.

2 முஸ்லீம் கண்ணன்

 

உலகெங்கும் உள்ள நாடுகளின் பார்வை முஸ்லீம்களின் மீது சந்தேகத்தைக் கொண்டுள்ளதாக மாறி வருவதைத் தெரிவிக்கும் பல செய்திகளில் ஒன்று.

முஸ்லீம்கள் அனைவரும் தீவிரவாதிகள் இல்லை என்று பல முஸ்லீம் அறிவுஜீவிகளும், நல்லவர்களும் கூறுவது உண்மையே!

 

 

ஆனால் அந்த அறிவு ஜீவிகளும், நல்லவர்களும், அவர்களை ஆதரிக்கும் அரசியல்வாதிகளும் தீவிரவாத நடவடிக்கைக்கு எதிராக ஒன்றையும் செய்யவில்லையே (அல்லது அவர்களைத் தீவிரவாதிகளும் அவர்களின் இயக்கத் தலைவர்களும் செய்ய விடவில்லையே)

 

ஆகவே முஸ்லீம்கள், குறிப்பாக முஸ்லீம் பெண்மணிகள் எழ வேண்டிய தருணம் வந்து விட்டது. அவர்கள் தங்கள் கணவன்மார்களை, சகோதரர்களை, உறவினர்களை அழைத்து தீவிரவாதத்தை முஸ்லீம் சமுதாயத்திலிருந்து அறவே அழித்தொழிக்க முன் வர வேண்டும். சொர்க்கத்தை இங்கேயே ஸ்தாபிக்கும் வண்ணம் அமைதியான சமாதானமுள்ள அழகிய பூமியை உருவாக்க உதவ வேண்டும்.

 

 

இல்லையேல்… காலம் அவர்களுக்குக் கடுமையான படிப்பினையைத் தந்து விடும். உணர்வார்களா?

********

அடுத்து பிரான்ஸ் என்ன செய்கிறது என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்

 

பக்காத் திருடனுக்கு நிதியமைச்சர் பதவி! (Post No. 2416)

king raja

Compiled by London swaminathan
Date: 23 December 2015

Post No. 2416

Time uploaded in London:- காலை 8-11
( Thanks for the Pictures  )

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான். அவன் தினமும் திருடப் போவதற்கு முன்னர், ஒரு கோவிலுக்குள் நுழைந்து “சாமி, இன்னிக்கு எனக்கு நல்ல வரும்படி கிடைக்க வேண்டும்” என்று வேண்டிக்கொண்டு புறப்படுவான். அந்தக் கோவில் மண்டபத்தில் தினமும் ஒரு சாமியார் உபந்யாசம்/ சொற்பொழிவு ஆற்றிவந்தார். சில நேரங்களில் அங்கிருக்கும் கூட்டம் சிரிப்பதைக் கேட்டு நாமும் சாமியார் சொல்லும் ‘ஜோக்’கைக் கேட்போமே என்று போவான். நல்ல குட்டிக் கதைகள் சொன்னால் அதையும் கேட்டுவிட்டு திருடப் போவான்.

 

ஒரு நாள் அவனுக்கு பூர்வ ஜன்ம வாசனையால் ஞானோதயம் ஏற்பட்டது. பகற்பொழுதில் அந்த சாமியார் இருக்கும் குடிலுக்குச் சென்று, “குருவே! வணக்கம் பல! எனக்கு ஒரு மந்திரம் சொல்லித் தாருங்களேன்” என்றான். அவரும் , “மகனே! நீ யார்?” என்று கேட்டார். அவன் கூசாமல் உண்மையைச் சொன்னான்: “நான் ஒரு பக்காத்திருடன்! பத்து வயது முதல் திருட்டுத் தொழில்தான் செய்து வருகிறேன்”

 

சாமியார் : அடக் கடவுளே! வேறு எதுவும் நல்ல தொழில் செய்யக்கூடாதா?

திருடன்: இப்போதைக்கு எனக்குத் தெரிந்த தொழில் அது ஒன்றுதான். மனைவி மைந்தர்களைக் காப்பாற்ற 30 ஆண்டுகளாகச் செய்யும் தொழில் இது.

சாமியார்: சரி, போ. நீ உண்மை பேசுவதால் உனது உள்ளத்தில் ஏதோ சில நல்ல அம்சங்களிருப்பதை உணர்கிறேன். இன்று, வேதத்திலுள்ள, எல்லோருக்கும் சொல்லித் தரும் முதலாவது மந்திரத்தை உனக்கும் போதிக்கிறேன். அதைப் பின்பற்றினால் அந்த மந்திரம் பலித்து சில அற்புதங்களைச் செய்யும்.

திருடன்: சரிங்க சாமி! அப்படியே செய்வேன்.

சாமியார்: முதல் மந்திரம்: ‘சத்தியம் வத’ – அதாவது, ‘உண்மையே பேசு”

 

திருடன்: சாமி, இது ரொம்ப எளிதான மந்திரம். பின்பற்றுவதும் எளிது. கைகள் தானே திருட்டுத் தொழில் செய்யும்; வாய், உண்மையைப் பேசுவது ஒன்றும் கடினமில்லையே’ என்றான்.

சாமியார் புன்னகை பூத்தார்; அவனும் விடை பெற்றுச் சென்றான்.

 

மனைவியிடம் போய் நடந்ததைச் சொன்னான். அவளுக்கு ஒரே சிரிப்பு. இது என்னங்க? நெசவாளி குரங்கு வளர்த்த கதையாய் இருக்கு’ என்றாள்.

அது என்னடி கதை? என்றான்.

ஒரு நெசவாளி குரங்கு வளர்க்க ஆசைப்பட்டு குரங்கை வாங்கினான். அது அவன் செய்த ஒவ்வொரு துணியையும், நூலாக இருக்கையிலேயே பிய்த்துப் போட்டது. அது போல நீர் உண்மை பேசினால் திருடும் முன்னரே அகப்பட்டுக் கொள்வீர்” என்றாள்.

“கண்மணி! கவலைப்படாதே, குருவருள் கிட்டும்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.

இரவு நெருங்கியதும், கன்னக் கோல், நூலேணி, சுத்தியல், கடப்பாரை, அளவுபார்க்கும் நூல் எல்லாவறையும் எடுத்துக்கொண்டு போனான்.

 

இன்று மந்திர உபதேசம் இருப்பதால், பெரிய இடத்தில் கைவைத்து பெரிய சாதனை புரியவேண்டுமென்றெண்ணி, அரண்மனையில் திருடப் போனான். நள்ளிரவுக்குப் பின், கும்மிருட்டு. அரண்மனை மதிலைச் சுற்றி வருகையில், அந்நாட்டு மன்னரும் கையில் விளக்குடன் மாறு வேடத்தில் வந்தார். இந்து சமய ராஜாக்கள் நாட்டு மக்களின் நாடி பிடித்துப் பார்க்க இப்படி நள்ளிரவில் மாறுவேடத்தில்  நகர் வலம் வருவதுண்டு.

ராஜா: நில், யார் அங்கே?

திருடன்: ஐயா, நான் பக்காத் திருடன்.

ராஜா: அட நான் பாக்தாத் திருடன். அசலூரிலிருந்து வந்திருக்கிறேன். எனக்கும் பணம் வேண்டும். உன்னுடன் வரட்டுமா? பங்கில் பாதி கொடுத்தால் போதும்

திருடன்: மிக நல்லது. வா போவோம் என்றான்.

 

ராஜாவுக்கு அவரது அரண்மனை வழியெல்லாம் அத்துபடி என்பதால் திருடனை நேரே கஜானாவுக்கு அழைத்துச் சென்றார்.

இருவரும் ஒரு பெரிய பெட்டியைத் திறந்தனர். அதில் மூன்று விலையுயர்ந்த பெரிய மாணிக்கக் கற்கள் இருந்தன.

திருடன்: இன்று நமக்கு அதிர்ஷ்ட நாள். உனக்கு ஒன்று , எனக்கு ஒன்று. மூன்றாவது ரத்தினக் கல்லை அதன் சொந்தக் காரனுக்கு இந்தப் பெட்டியிலேயே வைத்துவிடுவோம்.

ராஜா: அட உனக்கு என்ன பைத்தியமா? நாமோ திருடர்கள் இதில், சொந்தக்காரனுக்கு ஒரு பங்கா?

திருடன்: நண்பா! நான் உனக்கு பாதி தருவதாக ஒப்புக் கொண்டேன். இப்பொழுது இந்த மூன்றாவது ரத்தினக் கல்லை நான் எடுத்தாலும், நீ எடுத்தாலும், 50-50 வராது ஒருவருக்குக் கூடுதலாகிவிடும். அதுமட்டுமல்ல. இதை இவ்வளவு காலம் கஜானாவில் வைத்திருக்கும் மன்னன் , ஒரு கல்லாவது திருடுபோகாமல் இருந்ததே என்று சந்தோஷப் படுவானில்லையா?

ராஜாவும் அவன் சொன்ன வாதத்தில் பசையிருப்பதை ஒப்புக் கொண்டு வீடு திரும்பலாம் என்றார். அந்தத் திருடன் விடைபெற்றுச் சென்றபோதும், அவனுக்குத் தெரியாமல் அவனைப் பின் தொடர்ந்து சென்று அவன் எங்கே வசிக்கிறான் என்பதை குறித்துக்கொண்டார்.

IMG_2802

மறு நாள் அரசவை கூடியது.

ராஜா: ஒரு முக்கிய அறிவிப்பு! நமது அரண்மனை கஜானாவில் திருடு நடந்திருப்பதாக் நமது உளவாளிகள் எனக்குத் தகவல் தந்துள்ளனர்.

நிதி அமைச்சர்: மன்னர் மன்னவா! சிறிது நேரத்துக்கு முன் நாங்கள் மந்திரிசபை கூட்டம் நடத்தினோம். அதில் கூட யாரும் இதுபற்றிச் சொல்லவில்லை. இதோ, உடனே சென்று பார்த்து அறிக்கை சமர்ப்பிபேன்.

அவர்  கஜானாவுக்குச் சென்று பார்த்ததில் திருடன் ஒரு மாணிக்கக் கல்லை மட்டும் விட்டுச் சென்றிருப்பதைக் கண்டார். திடீரென அவருக்குப் பேராசை வரவே அதை இடுப்பில் வேட்டியில் முடிந்து வைத்துக் கொண்டார்.

அரசவைக்கு ஓடோடி வந்தார்.

நிதியமைச்சர்: மன்னரே, நமது உளவாளிகள் மிகவும் திறமைசாலிகள், ராஜ விசுவாசிகள். அவர்கள் சொன்னது சரியே. கஜானாவில் உள்ள ஒரு பெட்டி உடைக்கப்பட்டு, மூன்று மாணிக்கக் கற்கள் திருடப்பட்டிருக்கின்றன.

 

ராஜா: அப்படியா? ஒரு கல்லைக் கூட அவர்கள் விட்டுச் செல்லவில்லையா?

நிதியமைச்சர்: மன்னவா, திருடர்கள் என்ன முட்டாள்களா? ஒரு கல்லை நமக்கு விட்டுச் செல்ல. இருப்பதையெலாம் சுருட்டுவதுதானே அவர்கள் தொழில்

ராஜா: போகட்டும் எனக்கு இன்னும் ஒரு உளவுத் தகவலும் வந்துள்ளது. யார் அங்கே? காவலர்கள் எங்கே?

அவர்கள் ஓடி வந்து, மன்னவன் முன் நிற்க, இதோ இந்த முகவரியிலுள்ள திருடனை உடனே பிடித்து வாருங்கள். ஆனால் அவனை ஒன்றும் செய்துவிடாதீர்கள்.

குதிரை மீது விரைந்து சென்ற காவலர், அந்தத் திருடனைப் பிடித்துவந்து, அரசன் முன்னர் நிறுத்தினர்.

திருடன்: ராஜா, வணக்கமுங்க (நடுங்கிக் கொண்டே)

ராஜா: நேற்று இரவு என்ன நடந்தது? சொல்.

திருடன்: நானும் இன்னொருவனும் உங்கள் அரண்மனை கஜானாவுக்குள் நுழைந்து பெட்டியை உடைத்தோம். அதில் மூன்று மாணிக்கக் கற்கள் இருந்தன. நான் ஒன்றை எடுத்துக்கொண்டு, என்னுடன் வந்த மற்றொருவனுக்கு ஒன்றைக் கொடுத்தேன். மூன்றாவது ரத்தினக் கல்லை உங்களுக்கே இருக்கட்டும் என்று வைத்துவிட்டேன். இதோ நான் எடுத்த மாணிக்கம். (அதை அரசர் முன் பயபக்தியுடன் சமர்ப்பிக்கிறான்)

ராஜா: உன்னுடன் வந்தவன் திருடனில்லை. நான்தான் மாறுவேடத்தில் வந்து உன்னுடன் கஜானாவில் நுழைந்தேன். இதோ நீ என் பங்காகக் கொடுத்த மாணிக்கக் கல் (அரசனும் அதை முதல் கல்லுடன் வைக்கிறார்.)

நிதி அமைச்சரே, மூன்றாவது கல்லை வையுங்கள்.

நிதியமைச்சர்: மன்னர் மன்னவா! என்ன அபவாதம் இது? மூன்று தலைமுறைகளாக எங்கள் குடும்பம் உங்களுக்குச் சேவை செய்துவருகிறது. ஒரு நிமிடத்தில் எனக்குத் திருட்டுப் பட்டம் கட்டிவிட்டீர்களே. அந்தக் கல்லையும் இந்தத் திருடன்தான் எடுத்திருப்பான்; திருடர்களுக்குக் கண்கட்டு வித்தை தெரியும்

ராஜா: நிதியமைச்சரே! இன்னும் ஒரு நிமிடத்தில் அந்த ரத்தினக் கல்லை சமர்ப்பிக்கவில்லையானால், உமது வேட்டியை உருவி சோதனை செய்ய உத்தரவிடுவேன். உமது வீடு முழுவதையும் சோதனையிட உத்தரவிடுவேன்.

நிதியமைச்சர் (நடுங்கிக் கொண்டே): மன்னவா! என்னை மன்னித்துவிடுங்கள்; அரை நிமிட காலத்தில் பேராசை என் கண்களை மறைத்துவிட்டது. நான்தான் திருடினேன்; இதோ அந்தக் கல் என்று வேட்டியின் முடிச்சிலிருந்து எடுத்து வைத்தார்.

 

ராஜா: யார் அங்கே? (காவலர்கள் ஓடி வருகின்றனர்); இந்த நிதியமைச்சரை சிறையில் தள்ளுங்கள்.

முக்கிய அறிவிப்பு: (அனைவரும் கவனத்துடன் கேட்கின்றனர்); இன்று முதல் நமது நாட்டின் நிதியமைச்சராக இந்தத் திருடனை நியமிக்கிறேன். உங்கள் அனைவரையும் விட உண்மையுடனும் ராஜ விசுவாசத்துடனும் இருந்தமைக்காக அவரே இப்பகுதிக்குத் தகுதியுடையவர்.

 

அனைவரும்: புதிய நிதி அமைச்சர் வாழ்க! வாழ்க, வாழ்க; மன்னர் மன்னவர் வாழ்க, வாழ்க!!

 

புதிய நிதியமைச்சர் (பழைய திருடன்), மறு நாளைக்குச் சாமியாரைச் சந்தித்து உண்மை விளம்பியதால் ஏற்பட்ட நன்மைகளைக் குருநாதரிடம் ஒப்புவித்தார்.

சாமியார்: சத்தியம் வத (உண்மையே பேசு) என்பதுதான் வேதத்தின் முக்கியக் கட்டளை. நீ அதைக் கடைபிடித்தால் வேறு எதுவும் தேவையில்லை. “எனைத்தானும் நல்லவை கேட்க”- என்று வள்ளுவன் சொன்னான். நீயும் அப்படிச் சிறிது உபதேசம் கேட்டு இந்நிலைக்கு உயர்ந்தாய்.

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற

செய்யாமை செய்யாமை நன்று (குறள் 297)

என்று வள்ளுவனும் செப்பினான். அடுத்த முறை சந்திக்கும்போது உனக்கு வேறு ஒரு மந்திரம் உபதேசம் செய்கிறேன் இன்னும் உயர்வாய்- என்றார்.

-சுபம்-

 

தமிழுக்கு அரசர்! நாவுக்கரசர்!! ( Post No. 2404)

நால்வர் சிலைகள்

படம்: சம்பந்தர், அப்பர்(திருநாவுக்கரசர்), சுந்தரர், மாணிக்கவாசகர்

Written by S NAGARAJAN

Date: 19 December 2015

 

Post No. 2404

 

Time uploaded in London :– காலை 6-38

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

தேவார சுகம்

பிறவி வேண்டும் பேரருளாளர்!

ச.நாகராஜன்

 

 

புரட்சிக்கரசர்

 

நாவுக்கரசர் நாவுக்கு மட்டும் அரசர் அல்ல; தமிழுக்கும் அரசர் அவரே! அற்புதமான அருள் பாக்களைப் பாடியவர் புரட்சிகரமான ஏராளமான கருத்துக்களையும் தேவாரத்தில் ஆங்காங்கே அள்ளித் தெளித்திருப்பதைப் பார்க்கலாம்.

 

 

எல்லோரும் மனிதப் பிறவியே வேண்டாம் என்று பாடி இருக்கும் போது அதற்கு மாறாக பூவுலகில்  மனிதப் பிறவியும் வேண்டுகின்ற ஒன்று தான் என்று அவர் புரட்சிகரமாகக் கூறுகிறார். ஆனால் அதற்கான நிபந்தனை ஒன்றையும் அவர் விதிப்பதை அறியும் போது எவ்வளவு பெரிய பேரருளாளர் அவர், எவ்வளவு பெரிய சிவ பக்தர் அவர் என்பதை அறிய முடிகிறது.

 

 

சிதம்பர தரிசனம்

 

கோயில் என்றாலே அது சிதம்பர ஸ்தலத்தைத் தான் குறிக்கிறது.

ஆடல் வல்லானின் அற்புத தரிசனத்தைக் கண்ணுற்ற அப்பர் பாடுகிறார்:-

 

குனித்த புருவமும், கொவ்வைச் செவ்

வாயில் குமிண் சிரிப்பும்,

பனித்த சடையும், பவளம் போல்

மேனியில் பால் வெண்ணீறும்

இனித்தமுடைய எடுத்த பொற்

பாதமும் காணப் பெற்றால்

மனித்தப் பிறவியும் வேண்டுவதே

இந்த மாநிலத்தே

 

என்ன ஒரு அற்புதமான தெய்வீகத் திரு உரு! வளைந்த புருவம், கொவ்வைச் செவ்வாய், அதில் முகிழ்கின்ற குமிண் சிரிப்பு, பவளம் போன்ற மேனி, அதில் தீட்டப்பட்டிருக்கும் அழகிய திருநீறு, இனித்தமுடைய அருள் தரும் பாதங்கள்!

 

ஆஹா! என்ன ஒரு அற்புதக் காட்சி!

இதைக் கண்டாலே முக்தி நிச்சயம்!

 

ஆக, இந்தக் காட்சியைக் கண்டு முக்தி பெற்று மீண்டும் மீண்டும் அவன் அருளால் பிறப்பு எடுப்போம். முக்தி பெறுவோம்.

அவன் ஆடல் விளையாட்டை நடத்தட்டும்; நாம் பிறந்து பிறந்து ஆடல் வல்லானின் தரிசனத்தைக் கண்டு கண்டு முக்தி அடைந்து அடைந்து மீண்டும் பிறந்து பிறந்து…..

என்ன ஒரு அற்புதமான கருத்து!

 

 நால்வர், கலர்

இன்னம் பாலிக்குமோ

 

இதையே இன்னொரு பாடலிலும் வற்புறுத்துகிறார்:-

 

அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்

பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை

என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற

இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே.

 

தில்லைச் சிற்றம்பலத்தைக் கண்டு களிக்க இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே!

 

 

உன்னை மறவாமை வேண்டும்

 

காரைக்கால் அம்மையாரை சிவ்பிரான் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டபோது அவர்

“இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்

பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்

மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி

அறவா நீ ஆடும்போது உன்னடியின் கீழ்இருக்க”

என்று இப்படிக் கூறியதாக பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான் குறிப்பிடுகிறார்.

 

 

புழுவானாலும் உன்னடி நினைப்பேனாகுக

 

அப்பரும் திருப்பாதிரிப்புலியூர் பதிகத்தில் புழுவாகப் பிறந்தாலும் உன் திருவடி மறவாதிருக்க வரம் தா என வேண்டுகிறார்:-

 

 

புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி யென்மனத்தே

வழுவா திருக்க வரந்தர வேண்டுமிவ் வையகத்தே

தொழுவார்க் கிரங்கி யிருந்தருள் செய்பா திரிப்புலியூர்ச்

செழுநீர்ப்புனற்கங்கை செஞ்சடைமேல்வைத்த தீவண்ணனே.

 

எல்லாப் பாடல்களிலும் அடிப்படைக் கருத்தாக இழை ஓடுவது ஒரு முறை அவனை நினைத்தாலே சிவ லோகம் நிச்சயம்; ஆக அந்த நினைப்பு இருந்தாலே போதும்; அதிலும் பிறந்து பிறந்து அவனை நினைந்து அவனைத் தரிசனம் செய்யும் சுகத்தை இன்னும் அதிகம் பெற வேண்டும் என்பது தான்!

 

தேவார சுகம்

 

உள்ளுவார் உள்ளத்தில் உளன் என்பது ஒரு புறம் இருக்க அவனைத் தில்லையிலே கண்ணாரக் காணும் சுகம் தனி தானே!

இந்த சுகத்தைத் தரும் அப்பரின் தேவார சுகமே சுகம்!

 

*********

 

 

 

எனது பஞ்சவடி யாத்திரை! Post No. 2383

IMG_9470

படம்: பஞ்சவடியில் வால்மீகி முனிவர்

This article was published already in English

Written by London swaminathan

Date: 12 December 2015

Post No. 2383

 

Time uploaded in London :–9-38 AM

( Thanks for the Pictures  ) 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

IMG_9502

படம்: பஞ்சவடியில் சீதா தேவி

நாசிக்கிலிருந்து ஒரு மணி நேரத்துக்குள் பஞ்சவடி என்னும் தலத்துக்குச் சென்றோம். ‘பஞ்ச’ என்றால் ஐந்து, ‘வட’ என்றால் ஆலமரம்; இங்கே ஐந்து ஆலமரங்கள் இருக்கின்றன. இங்குள்ள குகையில் ராம, லெட்சுமணர், சீதை ஆகியோர் தங்கினர். இங்குதான் சூர்ப்பநகை வந்து ராமன் மீது காதல் கொள்ள, அவளுடைய மூக்கை லெட்சுமணன் அறுக்க, மாரீசன் வந்து பொன் மான் வேடம் பூண்டு ராம, லெட்சுமணர்களையும் சீதையையும் ஏமாற்ற, அதே நேரத்தில் ராவணன் தவ வேடம் பூண்டு சீதையைக் கடத்த — ராமாயணம் புதிய திருப்பத்தை அடைகிறது.

 

ஊருக்குள் நுழைந்தவுடனே ராமாயணக் காட்சிகள், சுவரில் பளிச்செனத் தெரிகின்றன. அருகிலுள்ள பூங்காவில் வால்மீகீ, சுவாமி விவேகாநந்தர் சிலைகளும் உள்ளன.

 

இந்தக் காட்சிகளையெல்லாம் பஞ்சவடியில் சித்திரமாக செதுக்கியும் வரைந்தும் வைத்துள்ளனர். அருகிலேயே காளா ராம் (கறுப்பு ராமன்) கோவில் இருகிறது.

IMG_9503

முனிவர் வேஷத்தில் ராவணன்

(ராமன், கிருஷ்ணன், வியாசர், திரவுபதி ஆகியோர் எல்லாம் கறுப்பர்கள்! ஆரிய- திராவிட பேதம் கற்பிக்கும் மூடர்களுக்கு இவர்கள் உருவம் செமை அடி கொடுக்கும்!!)

 

காளா ராம் கோவில், மிகவும் நல்ல படிமங்களைக் கொண்ட கோவில். கோவிலுக்குள் சென்று வணங்கிவிட்டு வெளியே வந்து கொஞ்சம் விளக்கு முதலிய பித்தளைப் பொருட்களை வாங்கினோம்.எல்லாம் இந்தியில் எழுதபட்டிருப்பதால் விவரங்களை அறியமுடியவில்லை. இந்தி தவிர தமிழ் முதலிய பிராந்திய மொழிகளிலோ அல்லது ஆங்கிலத்திலோஒ போர்டு இருந்தால் நலம்.

 

சீதை குகையை, குடிகாரர்கள் மிகவும் மோசமாக்கி விட்டதாக டிரைவர் சொன்னதாலும், இரவில் சென்றதாலும் தொலைவிலிருந்தே பார்த்தோம். அருகில் வேறு ஒரு மண்டபத்தில் எல்லா காட்சிகளையும் உருவங்களாகச் செய்து வைத்துள்ளனர். மாரீசன் வதை, சீதையை அபஹரித்தல் முதலியன சித்தரிக்கப்பட்டுள்ளன. அனைவரும் பார்க்கவேஎண்டிய இடம் இது.

IMG_9487

ஐந்து ஆலமரங்களையும் எளிதில் கண்டுபிடிக்கும் வகையில் பெரிதாக எண்/ நம்பர் எழுதி வைத்துள்ளனர். பொதுவாக மகாராஷ்டிரத்தில் நிறைய ஆலமரங்கள் காணப்படுகின்றன. ஆலமரங்களில் நூல் கட்டி வைத்துள்ளனர். அருகிலுள்ள பூங்காவில் வால்மீகி சிலை, சுவாமி விவேகாநந்தர் சிலை ஆகியன உள்ளன. சுவரில் ராமாயணக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.

 

வெளியில் கடைகளில் ஆமை யந்திரம், சூரியன் யந்திரம் முதலினவற்றை விற்றனர் (முந்தைய கட்டுரையில் ஆமை மர்மம் பற்றி படிக்கவும்).

IMG_9483

(கறுப்பு ராமன்/ காளா ராம் கோவில்

முக்திதாம் யாத்திரை

பஞ்சவடிக்கு அருகில் முக்திதாமென்ற ஊர் உள்ளது. அங்கு பெரிய சலவைக் கல் கோவில் இருக்கிறது. அதில் ராம லெட்சுமணர் மூர்த்திகளும், 12 ஜோதிர்லிங்க தலங்களின் மாதிரி உருவங்களும் நவக்ரஹ உருவங்களும் உள.

 

கார்த்திகேயர்/ முருகன் சந்நிதிக்குள் பெண்கள் அனுமதிக் கப்படமாட்டார்கள் என்று எழுதிப் போட்டுள்ளனர். பெண்கள் யாரும் அங்கே வருவதில்லை. இந்த நம்பிக்கை சங்க இலக்கியத்திலும், காளிதாசன் கவிதையிலும் உளது (இது பற்றி சில ஆண்டுகளுக்கு முன்னர் இதே பிளாக்கில் கட்டுரை எழுதியுள்ளேன்).

 

வடநாட்டில் நாங்கள் சென்ற எந்தக் கோவிலுக்கும் அனுமதிக் கட்டணம் கிடையாது. பட்டு வேட்டி, கறுப்பு-சிவப்பு துண்டுகளின் இடையூறும் கிடையாது. எந்த தலங்களிலும் வியாபாரிகளும், விஷமிகளும் உண்டு. நாம் உஷாராக இருந்தால் ஏமாறமாட்டோம்.

IMG_9515

முக்திதாம் கோவிலில் 50 ரூபாய்க்கு கோவில் சாப்பாடு உண்டு. எங்கள் குழுவில் சிலர் வலியுறுத்தவே, அதே காம்பவுண்டிலுள்ள புரோஹித் என்ற ஹோட்டலில் நுழைந்தோம். சாதத்தைத் தவிர மீதி எல்லா, கறி கூட்டுகளும் எண்ணையில் மிதந்தன. ஒரு சாப்பாட்டின் விலை 230 ரூபாய்! தப்பித் தவறி உள்ளே நுழைந்துவிடாதீர்கள்.

 

முக்திதாம் கோவிலுக்குள் புகைப்படம் எடுக்க அனுமதியில்லை. கோவில் படங்களுடன் ஏதாவது புத்தகம் விலைக்குக் கிடைக்குமா என்று விசாரித்ததில் அப்படி புத்தகம் எதுவுமில்லை. கோவில் நிர்வாகம், எல்லா சிலைகளின் படங்களுடன் புத்தகமோ, பட அட்டைகளோ விற்க வேண்டும். அல்லது ஒரு கட்டணம் வசூலித்துக் கொண்டு, கூட்டமில்லாத நேரத்தில் புகைப்படம் எடுக்க அனுமதிக்க வேண்டும்

 

பஞ்சவடி, நாசிக், திரயம்பகேஸ்வர் முதலிய இடங்கள் கோதாவரி நதியின் தோற்றுவாய்க்கு அருகில் இருப்பதால், இஅயற்கையை ரசிக்கவிரும்புவோர் பகற்பொழுதில் செல்ல வேண்டும். நாங்கள் திரயம்பகேஸ்வர் கோவிலில் நன்கு மணி நேரம் கியூவில் நின்றதால் இஅயற்கைக் காட்சிகளை ரசிக்க இயலவில்லை.

IMG_8092

அனுபவ முத்துக்கள்!!!

கடவுளைப் பார்க்க வேண்டுமானால் மற்ற காட்சிகளையும், காமெராவையும் மறக்கவேண்டும்.

காட்சிகளைக் கண்டுகளிக்க வேண்டுமானால் கடவுளை மறந்து விடவேண்டும் – சுவாமிநாதன் பொன்மொழி

 

வடக்கத்தி ஹோட்டலில், மசாலாதோசை ‘ஆர்டர் ‘ செய்யாதே. தெற்கத்திய ஹோட்டல்களில் சப்பாத்தி ஆர்டர் செய்யாதே- அவரவர்களுக்குத் தெரிந்த விஷயங்களைப் பயன்படுத்தவேண்டும் — சுவாமிநாதன் அனுபவ மொழி.

 

சாமியார் ஆஸ்ரமத்தில் “பார்ட்டிக்கிள் பிஸிக்ஸ்” கேள்விகளைக் கேட்காதே; அறிவியல்கூடத்தில் கடவுள் ஆராய்ச்சி செய்யாதே; அறிவியல் முடியும் எல்லையில் ஆன்மீகம் துவங்குகிறது- சுவாமிநாதன் பொன்மொழி.

வடதுருவத்தில் பெங்குவின் பறவையைப் பார்க்கமுடியாது; தென் துருவத்தில் வெள்ளைக் கரடிகளைக் காணமுடியாது; இருக்குமிடத்தைவிட்டு இல்லாத இடமெல்லாம்………………….

சுவாமிநாதன் அனுபவ மொழி

 

IMG_9500

 

IMG_9489

IMG_9466

சூர்ப்பநகையின் மூக்கறுக்கும் காட்சி

IMG_9462

 

IMG_8076

IMG_8089 (2)

பஞ்சவடி கடைகளில் சூர்ய யந்திரம், ஆமை யந்திரம் விற்பனை

IMG_8087

IMG_8088

பஞ்சவடி காட்சிகள்

-சுபம்-

எனது ஷீரடி யாத்திரை! Post No. 2372

Written by London swaminathan

Date: 8 December 2015

Post No. 2372

 

Time uploaded in London :– 6-41 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

தத்தாவதார ராதகுரு சாயி

கஜலா தாவு தாவா பாயி

 

எனது டயரியில் (Diary) வைத்திருக்கும் படங்களில் ஒன்று சீரடி சாய் பாபா படம். அதன்கீழ் “தத்தாவதார ராதகுரு சாயி. கஜலா தாவு தாவா பாயி” என்று எழுதியிருக்கும். பொருள் தெரியாமலேயே, இந்த ஸ்லோகத்தைப் படித்துவிட்டு அன்றாட வேலைகளைத் துவக்குவேன். பாபாவின் பொன்மொழிகளில் பிடித்தது “நானிருக்க பயமேன்?” Why fear when I am here?

 

1964-ம் ஆண்டுமுதல் பல முறை புட்டபர்த்திக்குச் சென்று ஸ்ரீ சத்யபாபாவைத் தரிசனம் செய்துள்ளேன். அதுமுதல் சீரடி பாபா பற்றி கேள்விப்பட்டு பல நூல்களில் சீரடி பாபா செய்த அற்புதங்களைக் படித்தறிந்தேன். புட்டபர்த்திக்குப் போனதுபோலவே சீரடிக்கும் போகவேண்டுமென்று பல ஆண்டுகளுக்குத் திட்டமிட்டு இறுதியில் அந்த ஆசை 2015 நவம்பர் 30ஆம் தேதி நிறைவேறியது.

 

பம்பாயிலிருந்து நவம்பர் 29ஆம் தேதி புறப்பட்டு நாசிக் சென்றோம். அங்கிருந்து 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்றான த்ரயம்பகேஸ்வரம் சென்றுவிட்டு, பஞ்சவடி (Panchavati), முக்திதாம் (Muktidham) ஸ்தலங்களை தரிசித்துவிட்டு (இவை பற்றி அடுத்த கட்டுரையில் காண்க)  இரவு சீரடியில் தங்கினோம். ஒரு நடுத்தர ஹோட்டலில் ஒரு நாளைக்கு 2000 ரூபாய்வீதம் (Double Room) டபுள் ரூம் (இரண்டு படுக்கை அறை) எடுத்தோம். கோவில் ஐந்து நிமிட தூரத்தில் இருந்தது. காலையில் ஆறு மணிக்கு போய் வரிசையில் நின்றோம். 45 நிமிடங்களில் பாபாவின் சமாதியுள்ள சந்நிதியில் நின்று தரிசித்தோம். நல்ல சூழ்நிலை. காலை நாலு மணிக்கு காகடி (Kakadi) ஆரத்தி இருந்த போதிலும் அதற்குச் செல்லவில்லை.

எங்களை அழைத்துச் சென்ற டாக்ஸி டிரைவர், இது கூட்டமில்லாத ஒரு நாள் என்றார். பொதுவாக வியாழக்கிழமை மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமிருக்கும் என்று சொன்னார். காலையில் அறையில் குளித்துக் கொண்டிருக்கும் போதே பாபாவின் ஆரத்தி பாடல்கள், சஹஸ்ரநாமம் முதலியன ஒலிபெருக்கி மூலம் காதில் விழுந்தது.

 

கோவிலுக்குள் பாபா சந்நிதியை தங்க கவசத்தால் அலங்கரித்துள்ளனர். ஆயினும் மொபைல் போன், கேமரா, மற்றும் வீடியோ புகைப்படக் (Mobile Phones, Cameras, Video Equipments) கருவிகளுக்கு அனுமதியில்லை.

 

ஒரு ஐடியா (IDEA) / யோஜனை!

இது எனக்கு மிகவும் பிடித்த பாலிஸி. ஏனெனில் வெறி பிடித்ததுபோல் மொபைல் போனில் கத்துவதும், அல்லது இளம் பெண்களும் ஆண்களும் மொபைனில் “கிளுக் கிளுக்”கு என்று சிரித்து நமக்கு எரிச்சல் ஊட்டுவதும் இருக்காது. மேலும் ‘’செல்பி’’ (Selfie) எடுப்பது போல முன்னாலுள்ள பின்னாலுள்ள அழகிகளைப் படமெடுக்கும் வாய்ப்புகளும் இராது. ஆகவே எந்த இந்துக் கோவிலிலும் மொபைல் போன், காமெராக்களைப் பிடுங்கிவைக்க வேண்டுமென்பதை பலமாக ஆதரிப்பவன் நான். எனக்கும் புகைப்படமெடுத்து போட ஆசைதான். அத்தகையோருக்கு கோவில் நிர்வாகம் தனி நேரம் ஒதுக்கி, ‘’எஸ்கார்ட்’’ (Escort) செய்து அழைத்துச் செல்லலாம். அதற்குத் தனி கட்டணம் வசூலிக்கலாம். ஐம்பது ஆண்டுகளாக நூற்றுக் கணக்கான கோவில்களுக்குச் சென்றதில் கண்டுபிடித்த ஒரு உண்மை இதோ:—-

“சாமி கும்பிடச் செல்லும்போது கலை அழகு ரசிக்கச் செல்லாதே; புகைப்படம் எடுக்காதே.

புகைப்படம் எடுக்கவோ, சிலை அழகுகளை ரசிக்கச் சென்றாலோ சாமியை மறந்து விடு” – இது எனது பொன்மொழி!!

 

முஸ்லீம் சமாதி:

சீரடி பாபா கோவிலுக்குள் பல பாபா பக்தர் சமாதிகளும் உள்ளன. சில முஸ்லீம் பக்தர்கள், அவருடைய நெருங்கிய பக்தரான ஏ.எஸ். ஐயர் சமாதி ஆகியன உள்பட குறைந்து நாலு சமாதிகளை வலம் வந்துவிட்டு, பாபா விபூதி பொட்டலம் கொடுக்குமிடத்தில் கீயூ (Queue) வில் நின்று அதையும் வாங்கினோம். உண்டியலில் காசு போட்டோம். இந்த விபூதி ‘உடி’ எனப்படும். சமாதியில் எப்போதும் எரிந்துகொண்டிருக்கும் அக்னியின் சாம்பல் இது.

 

சமாதியில் மியூசியம்

சமாதி காம்பவுண்டுக்குள் பபவின் மியூசியமும் உள்ளது. இதில் அவர் பயன்படுத்திய அனைத்து பொருட்களும் உள்ளன. அரிய புகைப்படங்களும் உள்ளன. இவ்வளவு விஷயங்களையும் வேறு எந்த புத்தகத்திலும் கண்டதில்லை. பாபா பக்தர்கள் பார்க்கவேண்டிய இடம்.

கோவிலுக்கு வெளியே தேநீர்க்கடை

எங்களை அழைத்துச் சென்ற பம்பாய் தமிழ் டிரைவர் அடிக்கடி அங்கே செல்வதால் காலை நாலரை மணி முதல் சாலையின் இருமருங்கிலும் டீ விற்பார்கள் என்று சொல்லியிருந்த்தார். அது உண்மைதான். கோவிலுக்கு அதிகாலை 4 மணிக்குப் போவோர் டீ அருந்திச் செல்லலாம். இது நல்ல (Idea) ஐடியா. மற்ற தலங்களிலும் இதைப் பின்பற்றலாம். பேப்பர் கோப்பைகள் (Paper Cups) என்பதால் சுகாதாரம் பற்றி கவலைப்படத் தேவையில்லை. சாப்பிட்டவுடன் நாமே அவைகளைக் கசக்கித் தூக்கி எறிந்துவிடலாம்.

 

நல்ல பிசினஸ் (Business)

நாங்கள் சென்ற கோவில்களுக்கு வாசலில் நூற்றுக் கணக்கான இடங்களில் “இங்கே உங்கள் , காமெராக்களை விட்டுச் செல்லுங்கள், மொபைல் போன்களை விட்டுச் செல்லுங்கள், பூ வாங்குங்கள், செருப்புகளை விட்டுச் செல்லுங்கள்”— என்று வணிகர்கள் நச்சரிக்கிறார்கள். கோவில் நிர்வாகம் இதை ஏற்பாடு செய்யாததால், அவர்களில் ஒருவரை நம்பி காமெரா, போன் – ஆகியவற்றை விட்டுச் சென்றோம். திரயம்பகேஸ்வரர் கோவிலில் நாங்கள் கொண்டு சென்ற பூக்களை சந்நிதிக்குள் நுழையும் முன்னரே ஒரு பெண் வாங்கி ஒரு கூடையில் போட்டுவிட்டு இரண்டு மூன்று பூக்களை நமக்கு பிரசாதம் என்று கொடுக்கிறார். ஆனால் சீரடியில் பாபா சமாதி வரை பூக்களைக் கொண்டு செல்லலாம். பிரசாதமும் பெறலாம்.

 

நாங்கள் வரிசையில் நின்று சமாதியை அடையும் முன்னரே ஒருவர் வந்து மலைபோல பிரசாத பாக்கெட்டு (Packets) களைக் குவித்தார். அதில் சுவையான இனிப்பான பூந்திப் பிரசாதம் இருந்தது. உங்களுக்கு விருப்பமிருந்தால் சர்க்கரை உருண்டை பிரசாத பாக்கெட்டும் வாங்கிச் செல்லலாம்.

 

சீரடியிலும் விஷேச தரிசன வசதிகள் உண்டு. முதியோர்கள் ஒருவரை துணைக்கு அழைத்துச் சென்று விரைவில் தரிசிக்கலாம். மின்னணுப்பதிவின் மூலம் குறிப்பிட்ட நேரத்தில் கோவிலுக்குள் நுழைந்து விரைவில் திரும்பிவரலாம். ஆனால் ஒவ்வொன்றுக்கும் நேரம் முதலிய கட்டுப்பாடுகள் இருக்கின்றன.

சீரடி பாபா சமாதி முகப்பு தோற்றம்

 

ஏமாற்றுப் பேர்வழிகள்!

எல்லா மதங்களும் சொல்லித்தருவது – சத்தியத்தைக் கடைப்பிடி; உண்மையாக இரு, அன்பாக இரு. இதைக் கடைப் பிடிப்போர், வேறு எந்த தெய்வத்தையும் வணங்கத் தேவையில்லை. ஆனால் பாபாவின் அருளைப் பெற வந்த ஒரு கும்பல், ஒரு நீல நிற கயிற்றில் ஒரு பாட்ஜை அணிந்துகொண்டு, ஏதோ அங்கு வேலை பார்ப்போர் மாதிரி எல்லாரையும் முந்திக் கொண்டு சென்றது. இந்தக் கும்பல் பாபாவைக் கும்பிட்டென்ன பயன்? கும்பிடாமல் போனால் என்ன? கழுதை, கழுதையே!

 

எனக்கு பிடிக்காத விஷயம் இரண்டு!!

புட்டபர்த்தியில் சத்ய சாய்பாபா கொண்டுவந்த புதிய பழக்கம் இப்பொழுது இந்து மதத்தை விஷமாக அரித்து வருகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம்முடைய ஞானிகள் பாடிவைத்த அருமையான, சக்தி வாய்ந்த பஜனைப் பாடல்களில் எல்லாம் கடைசி வரியை மாற்றி பாபாவின் பெயரைப் புகுத்தினர். இது தவறு – மிகப் பெரிய தவறு. பாபாவைப் புகழ்ந்து பாடுங்கள் அவரே கடவுள் என்று சொல்லிக் கொள்ளுங்கள். ஆனால் ஏற்கனவே இருக்கும் பாடல்களில் கை வைக்காதீர்கள்.

 

இப்பொழுதே நமது குழந்தைகளும், பேரக்குழந்தைகளும் கேட்கும் நூற்றுக் கணக்கான கேள்விகளுக்குப் பெரும்பாலான பெற்றோர்களால் பதில் சொல்ல முடிவதில்லை. இதற்கு அடுத்த தலைமுறை “நேற்று வந்த பாபாதான் கடவுள்” என்று பாடினால் அவர்கள் குழம்பிப்போவார்கள். ஆகையால் தயவு செய்து ட்ரடிஷனல்’ (Traditional) /சம்பிரதாய பஜனைகளை மாற்றாதீர்கள். பாபா பற்றி தனியே பாடுங்கள், ஆடுங்கள்— அது உங்களின் தனி உரிமை.

இதே போல பாபா கொண்டுவந்த மற்றொரு வழக்கம்- காட்டுத் தீ போல பரவி வருகிறது- அதாவது தனி மனித தீபாரதனை. எனது அப்பா, அம்மா, குருமார்கள், சங்கராசார்யார்கள் எல்லோரும் கடவுள் படங்களுக்கும் சிலைகளுக்கும் தான் ஆரத்தி (Arti) காட்டினர். இன்றோ பாபாவைப் பார்த்து, தோழான், துருத்தி, குப்பன், சுப்பன் எல்லாம் – ஆனந்தா பெயரைச் சேர்த்து வைத்துக்கொண்டு தனக்கு தீபாரதனை வாங்கிக் கொள்ளுகின்ரனர். பின்னர் அந்த பாபாக்கள், ஆனந்தாக்கள் எல்லாம் கொலை வழக்கிலும், கற்பழிப்பு வழக்குகளிலும் கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர் (கம்பி எண்ணுதல்= சிறைவாசம்).

 

ஏன் இந்தப் புலம்பல்?

சீரடி விஷயம் எழுதப் போய், திடீரென இதை ஏன் எழுதுகிறேன் என்று நீங்கள் வியக்கலாம். காரணம் என்ன? தமிழ்நாட்டில் சில அயோக்கியர்கள், இப்படி பாபா வேஷம், பகவான் வேஷம், ஆனந்தா வேஷம் போட்டு காசு பணம் அடிப்பதை நான் அறிவேன். மேலும் சீரடியில் எனது டாக்ஸி டிரைவர் வாங்கிய ஒரு புதி சி.டி.யைக் (Compact Disc) காரில் போட்டு ‘சுவிட்’சை அமுக்கினார். அருமையான குரல், அருமையான மியூசிக் (Music) ஆனால் பாடலின் பொருள்: காசி, மதுரா சென்றபோதெல்லாம் கிடைக்காத அருள் ஆனந்தம், சீரடி சென்றால் கிடைக்கும்!!!!! நீ ராமனுக்கு மேல், அல்லாவுக்கு மேல், ஜீசசுக்கு மேல், மோசசுக்கு மேல் என்று ஒரே பிதற்றல்!!

இந்துக்களின் வீக்னெஸ் Weakness/ பலவீனம்

மஹாத்மா காந்தி செய்த பயங்கரத் தவற்றை (ஹிமாலயன் பிளண்டர் HIMALAYAN BLUNDER), பாபா பக்தர்கள் பின்பற்றுகின்றனர். ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக நாம் பாடும் ரகுபதி ராகவ ராஜா ராமில் அல்லா, குல்லா என்ற வார்த்தைகளை நுழைத்து பாடலை களங்கப் படுத்தினார் காந்தி. அதையே பர்த்தி, சீரடிக்காரர்களும் பின்பற்றி பிதற்றத் துவங்கிவிட்டனர். அல்லாவை, ஏசுவை, நானக்கை, மோசசை சேர்க்க நமக்கு உரிமையுமில்லை, தேவையுமில்லை. அப்படிப் பாடுவதற்கு அந்தந்த மதத்தினர் முன்வர வேண்டும்.  காந்தி பாடிய ரகுபதி ராகவ ராஜாராமை முஸ்லீம் எவரும் பாடுவதில்லை. காந்தி சொன்ன வந்தே மாதர கோஷத்தை ஏற்க மறுத்து அல்லாஹூ அக்பர் கோஷமிட்டு பாகிஸ்தானை உருவாக்கினர். இந்தப் பாடத்தை இந்துக்கள் மறக்கக்கூடாது.

 

ஷீரடி: சமாதியின் நுழை வாயில்

 

எனக்கு பயங்கர அனுபவம்!!!

ஒரு முறை பிரபல தமிழ் உபந்யாசகர் ஒருவரை லண்டன் முருகன் கோவிலுக்கு அழைத்துச் சென்றேன். முருகன் சந்நிதியில் விபூதி கொடுத்தவுடன் அதை வாங்கி, அர்ச்சகர் முன்னிலையிலே கீழே போட்டுவிட்டார். எனக்கும் அவர்களுக்கும் ரத்தம் கொதித்தது. ஆயினும் கடவுள் சந்நிதி என்பதால் அவரை மன்னித்து விட்டனர். நானும் அவரை உபந்யாச ஹால்/ மண்டபம் அங்கிருப்பதால்தான் கோவிலுக்கு அழைத்துச் சென்றேன். யார் வந்தாலும் அவர்களுக்குரிய மரியாதை செய்து அர்ச்சகர்கள் ஆளுக்கு ஐந்து பவுன் போட்டு ஒரு ஐம்பது பவுனை ஒரு கவரில் போட்டுக் கொடுத்து, மரியாதை செய்வது அவர்களுடைய வழக்கம். ஆகையால்தான் சந்நிதியில் நுழைய நேரிட்டது. ஆனால் அவருடைய மனைவி, முருகனை அலட்சியம் செய்யாமல் விழுந்து கும்பிட்டார். அவர்களிருவரும் காரில் ஏறிச் சென்றவுடன் அர்ச்சகர்கள் அந்த பண உறையுடன் ஓடிவந்தனர். “முதலில் நாங்கள் கொடுக்கத் தயங்கினோம். நீங்கள் கூட்டி வந்ததால் கொடுப்பது முறை என்று ஓடிவந்தோம்” என்றனர். நான் சொன்னேன்: நீங்கள் செய்தது மிகவும் சரியே! நானும் இதையேதான் செய்திருப்பேன். இந்தப் பணத்தை அடுத்த உபந்யாசகருக்குப் பயன்படுத்துங்கள்” – என்றேன்.

 

இதே போல ஹரே கிருஷ்ணா இயக்கத்திலும் பல பிருஹஸ்பதிகள், அசமஞ்சங்கள் உண்டு. ராமனையும், கிருஷ்ணனையும், போற்றிப் பரவி ஆடிப்பாடி, உச்சுக் குடுமியுடன் தெருவில் தேர் இழுத்துவந்து, வாழ்நாள் முழுதும் குடி, கூத்து இன்றி, முழு வெஜிட்டேரியனாக இருப்பதால் அவர்கள் மீது எனக்கு அலாதிப் பிரியம் உண்டு. ஆனால் இத்தனைக்கும் நடுவில் சிவ பெருமானை டெமி காட்/ உப தேவதை (DEMI GOD) என்று வலிய, வம்புக்கு இழுத்துப் பேசும்போது “அடப் பாவி மகன்களா! ஒரு குடம் அமிர்தம் கொண்டு வந்து அதில் ஒரு சொட்டு விஷம் சேர்க்கிறீர்களே” என்று மனதுக்குள் நொந்துபோவேன்.

 

 

குஜராத்தி ஸ்வாமிநாராயணன்களும் இதே போலத்தான். அவர்களுக்கு ஸ்வாமிநாராயணன் என்பவர் நீலகண்டன் என்ற பிராமணச் சிறுவன் என்பதுகூடத் தெரியாமல் அவர்தான் ஆதி தெய்வம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

 

ஆயினும் பல பாபாக்களும், பகவான்களும், ஆனந்தாக்களும் செய்த மிகப்பெரிய நன்மை:– வேற்று மதங்களில், இந்துக்கள் போய் விழாமலிருக்க, இவர்களுடைய கவர்ச்சி உதவுகிறது. அதுவும் சத்ய சாய்பாபா போன்றோர் செய்த பொதுநல சேவைகளும் இமயம் போல உயர்ந்தவை. அவருடைய கல்வி நிறுவனங்களும், மருத்துவ மனைகளும், குடிநீர்திட்டங்களும் அவர்தம் புகழை எந்நாளும் காப்பாற்றும், போற்றும்.

ஷீரடியில் பிச்சைக்காரர்கள்

 

நாம் என்ன செய்ய வேண்டும்?

சின்மயா, சிவானந்தா ஆஸ்ரமம் போல பேஸிக் BASIC/ அடிப்படை இந்துமத தத்துவங்களைப் போதிக்க வேண்டும். ராமாயண, மஹாபாரத, புராணக் கதைகளின் ஆழ்ந்த தத்துவங்களையும் புனிதக் கொள்கைகளையும் போதிக்க வேண்டும். பழைய பாடல்களில் வேற்று மதத்தினரின் பெயர்களைச் சேர்த்தாலோ, தனி மனிதரைத் தெய்வம்போலப் பாராட்டி தீபாரதனை , ஆரத்தி காட்டினாலோ அவர்களிடமிருந்து ஒதுங்க வேண்டும்; புராதன இந்துமதத்தை ‘’கரப்ட்’’ CORRUPT ஆகாமல், துருப்பிடிக்க (RUSTY) விடாமல் காப்பது நம் கடமை.

ஆதி சங்கரர், மத்வர், ராமானுஜர், ராமகிருஷ்ணர், விவேகாநந்தர், ரமணர் போன்றோரின் கொள்கைகளைப் பரப்ப வேண்டும்.

ஷீரடி பாபாவுக்கு நமஸ்காரம்! புட்டபர்த்தி சத்ய சாய்பாபாவுக்கு நமஸ்காரம்.

 

 

சீரடியில் சமாதியருகே சிறு வியாபாரிகள்.

-சுபம்-

 

பாபாவின் அருள் விளையாடல்கள்!(Post No.2350)

baba-kalam

Baba with President Abdul Kalam

ஶ்ரீ சத்யசாயிபாபாவின் ஜயந்தி தினம் நவம்பர் 23. அதையொட்டிய சிறப்புக் கட்டுரை! ஞான ஆலயம் நவம்பர் இதழில் வெளியானது.

WRIITEN BY S NAGARAJAN

Date: 22 November 2015

Post No.2350

 

Time uploaded in London :– 6-12 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

பாபாவின் அருள் விளையாடல்கள்!

.நாகராஜன்

 

லட்சக்கணக்கானோர் அருள் பெற்ற நவீன அவதாரம்

 

நம்முடைய காலத்திலேயே நம்முடன் வாழ்ந்து வந்த ஶ்ரீ சத்ய பாபாவின் அவதாரம் ஒப்பற்ற தனித் தன்மை உடைய ஒரு அவதாரமாக இலங்குகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் லட்சக் கணக்கான பக்தர்களை வாழ்நாள் முழுவதும் பார்த்துப் பழகி உபதேசித்தவர். பல நாடுகளின் பிரதமர்கள், ஜனாதிபதிகள், மந்திரிகள், தொழில் துறை கோடீஸ்வரர்கள், ஞானிகள், விளையாட்டு வீரர்கள், நடிக, நடிகையர், பாடகர்கள், வேத விற்பன்னர்கள், சமயப் பெரியோர், கலைஞர்கள் என அனைத்துத் துறைகளிலிருந்தும் அவரிடம் வந்த பிரபலங்கள் மட்டுமே ஆயிரக் கணக்கில் உண்டு; அருளாசியுடன் உத்வேகமும் பெற்று அவர்கள் தம் பணியைத் தொடர்ந்ததை நம் கண் முன்னாலேயே கண்டோம் என்பது அவரது அவதார மஹிமைகளில் தனிச் சிறப்பு கொண்ட ஒன்று. முன்னாள் ஜனாதிபதி பாரத் ரத்னா அப்துல் கலாம், முன்னாள் பிரதமர் பாரத் ரத்னா வாஜ்பாயி, பிரபல பாடகி பாரத் ரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமி, பிரபல கிரிக்கட் வீரர் பாரத் ரத்னா சச்சின் டெண்டுல்கர் போன்ற ரத்தினங்கள் அவரைப் போற்றி வணங்கி அவர் அருள் சங்கமத்துள் இணைந்த காட்சியைக் கோடிக் கணக்கானவர்கள் கண்டு மகிழ்ந்தது நிதரிசனமான சரித்திர உண்மை!

 

baba-stamps

மர்யாதா புருஷோத்தமனான கம்பீர ராமனாகவும், தீராத விளையாட்டுப் பிள்ளை கிருஷ்ணனாகவும் அவர் திகழ்ந்து நிகழ்த்திய திருவிளையாடல்கள் ஆயிரக் கணக்கில் உண்டு.

அவதாரங்களின் நகைச்சுவை உணர்வு (Humour sense) பாபாவிடம் இருந்ததைப் போல இன்னொரு அவதாரத்தில் நாம் பார்த்ததில்லை.

 

 

நீங்கள் அனைவருமே எனது மிராக்கிள் தான்!

அணுக்கத் தொண்டரான கஸ்தூரி அவர் அருகில் கூடவே பழகினாலும் அவர் ஒரு நெருப்புப் பிழம்பு என்ற பயத்துடனேயே இறுதி வரை பழகி வந்தார். சாதாரண மனிதர் போல அவர் இருந்தாலும், ஒவ்வொரு க்ஷணத்திலும்  தெய்வீகப் பொறி அவரிடமிருந்து தெறிக்கும் என்பது அவரது அனுபவம்.

 

ஒரு நாள் கஸ்தூரி பாபாவிடம், ‘இன்று பௌர்ணமி. சித்ராவதி நதிக்குப் போகலாம்’ என ஆவலுடன் தெரிவித்தார். அங்கு மாலை நேரங்களில் செல்லும் பாபா, குழுமியோருக்கு மணலிலிருந்து லாக்கட், மோதிரம் போன்ற எதையாவது ‘உருவாக்கி’ அற்புதங்கள் நிகழ்த்துவது வழக்கம்.

 

பாபா சிரித்தவாறே, ‘சித்ராவதி மணல் இருந்தால் தான், நான் அற்புதங்களை நிகழ்த்துவேன் என்று எண்ணிக் கொண்டிருக்கிறாய் போலும்!” என்றார்.

‘இல்லை, பௌர்ணமி நிலவில் உங்களுடன் இருக்க ஆசை’, என்றார் கஸ்தூரி.

“மிராகிள்! மிராகிள்!  அற்புதங்களுக்காக அலைகிறீர்கள்!” என்று நிறுத்திய பாபா பளீரென்று கூறினார்:” நீங்கள் ஒவ்வொருவருமே என் மிராகிள் தான், தெரியுமா?!”

baba-vibhutim

ஒரு கணம் கஸ்தூரி அசந்து நின்று விட்டார். மனித சரித்திரத்திலேயே ஒரு பிரம்மாண்டமான அவதாரம் தசை, எலும்பு, ரத்தத்துடன் தன் எதிரில் இருப்பதை எண்ணிய அவர் உடலும் உள்ளமும் சிலிர்த்தது.

அனைத்துக்குமான ஆதி விதை – ஆதி பீஜம் தான் தான் என்ற இரகசியத்தை ஒரு க்ஷணத்தில் மின்னல் வெட்டுவதைப் போலக் கூறி விட்டாரே!

 

 

கேமரா ட்ரிக்!

பக்தர்களுடன் விளையாடிக் கொண்டே இருப்பார்; ஆனால் ஒவ்வொரு விளையாட்டிலும் பெரும் அவதார மஹிமை வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும்!

ஒரு முறை பார்த்தசாரதி என்ற அன்பர், சோபாவில் பாபா அமர்ந்திருக்க, அவர் அருகில் அனைவரும் இருப்பதை போட்டோ எடுக்க எண்ணித் தன் கேமராவை எடுத்தார்.

பாபா, ‘அந்தப் போட்டோவை நானே எடுக்கிறேன். நீங்கள் அவரவர் இடத்தில் அமருந்திருங்கள்’ என்று கேமராவை வாங்கி சோபாவின் எதிரில் சென்று நின்றார்.

 

பாபாவே போட்டோவை எடுத்தால், அவர் அதில் விழ மாட்டாரே! அழாக்குறையாக அப்படி அவரே எடுக்க வேண்டாம் என்பதைச் சொன்ன போதும் அவர் கேட்கவில்லை.

‘போட்டோவை பிரிண்ட் போடு. அதில் நான் நிச்சயம் இருப்பேன்’ என்று அருளினார் பாபா. சொன்னபடியே பிரிண்ட் போட்ட போது நடுநாயகமாக போட்டோவில் அவர் இருந்தார்.

 

எங்குமே  எல்லாமாய் ஒரே சமயத்தில் இருப்பவருக்கு பிரிண்டில் ‘உட்கார்வது’ கஷ்டமான காரியமா என்ன?

ஒரு நாள் கஸ்தூரியை அழைத்த பாபா ஹைதராபாத்திலிருந்து வெளி வரும் நாளிதழ் ஒன்று கஸ்தூரியின் போட்டோவைக் கேட்டிருப்பதாகவும் போட்டோவைத் தானே எடுக்கப் போவதாகவும் சொன்னார். மிகுந்த மகிழ்ச்சி அடைந்த கஸ்தூரி வேக வேகமாகச் சென்று நல்ல ஆடை அலங்காரம் செய்து கொண்டு பாபாவின் முன்னர் வந்து நின்றார்.

 

 

கேமராவுடன் இருந்த பாபா, ஸ்டடி, ரெடி என்று அவரைத் தயாராகுமாறு கூறி க்ளிக் செய்தார். அப்போது திடீரென்று வாலுடனும் முடியுடனும் இருந்த ஒரு சின்ன கறுப்பு உருவம் அவர் மீது பாய்ந்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத கஸ்தூரி அலறினார். எலியா? வேறு ஏதாவதா? எது தன் மீது பாய்ந்தது?

மெதுவாக பயத்துடன் கீழே விழுந்ததை அவர் ஆராய்ந்த போது அது பஞ்சினால் செய்யப்பட்ட ஒரு பொம்மை எலி என்று கண்டார். மிகவும் தந்திரமாக கேமராவுக்குள் அது வைக்கப்பட்டிருந்தது. க்ளிக் செய்தால் பாயும் படியான ஏற்பாடுள்ள கேமரா அது!

 

கஸ்தூரியின் பயத்தைக் கண்டு பாபா சிரித்தார். கஸ்தூரியும் சிரித்தார். அதில் அடங்கி இருந்த செய்தியை கஸ்தூரி உணர்ந்து கொண்டார். சனாதன சாரதியின் ஆசிரியர் பொறுப்பால் அவருக்கு அகங்காரம் வந்து விடக் கூடாது என்பதற்காக அந்த  விளையாட்டு செய்யப்பட்டது என்பதை அவர் உணர்ந்து கொண்டார். பின்னால் மிகப் பெரும் பொறுப்பையெல்லாம் பாபா அவரிடம் தந்த போது அவருக்கு அகங்காரமே தோன்றவில்லை. அவர் மீது பாய்ந்த எலி தந்த படிப்பினை அவரிடம் கடைசி மூச்சு வரை இருந்தது.

sathya-sai-padapujya-deva

பாத நமஸ்காரத்தில் ஒரு லீலை!

பாபா நிகழ்த்திய இன்னொரு எளிய விளையாட்டு சுவையான ஒன்று. பிரசாந்தி நிலையத்தில் ஆரம்ப காலத்தில் பள்ளி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் திறந்த காலம் அது. அடிக்கடி மாணவர்களைப் பார்க்க வந்து விடுவார் பாபா. சுய தேவைப் பூர்த்தி என்ற கொள்கையின் அடிப்படையில் மாணவர் விடுதியில் பராமரிப்பு, சமையல் போன்ற பல பிரிவுகள் அங்கு உருவாயின. ஒரு புது ஸ்டோரை  உருவாக்கி அங்கு பாபாவை அழைக்கலாம் என மாணவர்கள் திட்டம் போட்டனர். இன்னொரு முறை பாபாவை அருகிலிருந்து தரிசனம் செய்ய அவர்களின் டெக்னிக் திட்டம் அது! அதில் “முக்கிய” மாணவர்கள் ஸ்டோரை நிர்வகிக்கும் சாக்கில் பாபாவின் பாத நமஸ்காரம் பெறவும் தீட்டம் தீட்டப்பட்டது.

 

ஆனால் அவர்களிடம் மிகவும் கடுமையாக எச்சரிக்கப்பட்டிருந்தது. பாபா அனுமதி கொடுத்தால் மட்டுமே பாத நமஸ்காரம் பெறலாம்!

 

தங்களுக்குள் அவர்கள் பேசி முடிவெடுத்துக் கொண்டனர் : அப்படி அனுமதி தந்தால் சில விநாடிகளுக்குள் அவரை நமஸ்கரித்து எழ வேண்டும். நெடுநேரம் அவர் பாதங்களின் முன் இருந்தால் பல பேருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போய் விடக் கூடும். எச்சரிக்கை! ஓரிரு வினாடிகள் தான் ஒவ்வொருவருக்கும்!

 

பாபாவும் வந்தார். ஸ்டோருக்கும் விஜயம் செய்தார். திரும்பிப் போகையில் கதவருகே சென்று விட்ட அவரிடம் பாத நமஸ்காரம் செய்ய அனுமதி கேட்டனர் மாணவர்கள். ‘சரி’ என்றார் அவர்.

முதல் மாணவன் ஓரிரு விநாடிகளில் பாத நமஸ்காரத்தை முடித்தான். அடுத்தவன் பாதங்களிலிருந்து எழுந்திருக்கவே இல்லை. அனைவருக்கும் ஆத்திரம், கோபம், அவசரமும் கூட!

fdc-baba

ஒரு ஊழிக் காலம் கடந்தது. மெதுவாக அந்த மாணவன் எழுந்தான். அவன் கண்களில் கண்ணீர். ஆனந்தக் கண்ணீரோ! மூக்கு சிவந்திருந்தது. மற்ற அனைவரும் விரைவில் பாத நமஸ்காரம் செய்ய, பாபாவும் புறப்பட்டார்.

எல்லோரும் இப்போது அந்த மாணவன் பக்கம் திரும்பினர் கோபத்துடன்!

“கோபப்படாதீர்கள்! என்ன நடந்தது என்று நான் சொல்கிறேன். அவர் பாதங்கள் இரண்டிலும் என் முகம் பட்டவுடன் இரு கால்களுக்கு இடையே என் மூக்கு சிக்கி விட்டது. அவர் அதை விடவே இல்லை. எனது முயற்சி எதுவும் பலிக்கவில்லை. அவரே விட்டார், எழுந்தேன். அதனால் தான் என் மூக்கு சிவந்திருக்கிறது. கண்களில் கண்ணீர் வருகிறது

 

அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். கோகுலத்தில் அந்த அவதாரத்தில் கோபியருடன் லீலை செய்தது கிருஷ்ணன். இங்கோ பிரசாந்தியில் இளம் சிறுவர்களிடையே ஆனந்த விளையாடலை அருளாகப் புரிந்தவன் சாயி கிருஷ்ணன்.

stamp-baba-project

உள்ளத்தில் நிலையாக என்னை பிரதிஷ்டை செய்

பிரபல விஞ்ஞானியான பகவந்தத்திடம் தங்கத்தையும் கரைக்கும் ராஜ திரவத்தில் சாயி போட்ட தங்க மோதிரம் கரையவில்லை! விநாடியில் நூற்றில் ஒரு பங்கு நடக்கும் எதையும் படம் பிடிக்கும் அதி நவீன கேமாராவின் துணை கொண்டு பிரபல விஞ்ஞானி கார்லிஸ் ஓஸிஸ் சாயி கை அசைவில் எப்படி எந்தக் கணத்தில் செயின், விபூதி  உருவாகிறது என்பதை எடுக்க முடியவில்லை!

 

பாரத் ரத்னாக்கள் ஆனாலும் சரி, விஞ்ஞானிகள் ஆனாலும் சரி, சாமானியரானாலும் சரி, பக்தர்கள் என்ற நிலையில் அவர்களிடம் பகவானின் அணுகுமுறை ஒன்றே தான்; அதுவும் தனித்தன்மை கொண்டது தான்! அருள் விளையாடலே அது! கணம் தோறும் ஆனந்தம் பூரிக்கும் அவர்கள் உள்ளத்தில் நிலையாக நிற்பதே அவரது அவதார நோக்கம்!

 

அவரது ஜயந்தி நாளில் அவரை மனதில் பிரதிஷ்டை செய்து இருத்துவோம்; ஆனந்த அருளைப் பெறுவோம்!

*******************