கிரேக்க, இதாலிய நாடுகளில் பாம்பு வழிபாடு (Post No.4875)

கிரேக்க, இதாலிய நாடுகளில் பாம்பு வழிபாடு (Post No.4875)

 


WRITTEN by London Swaminathan 

 

Date: 2 April 2018

 

Time uploaded in London –  15-58 (British Summer Time)

 

Post No. 4875

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

(பிறர் எழுதியதைத் திருடுபவனும் பிறர் மனைவியைத் திருடுபவனும் பிறர் 

 

பொருளைத் திருடுபவனும் ஒன்றே – ஐன்ஸ்டீனின் அண்ணன்பெர்னார்ட் 

 

ஷாவின் தம்பிகாந்திஜியின் தாத்தா சொன்னது!!!)

 

ஸர்ப்ப , நாக என்ற இரண்டு ஸம்ஸ்க்ருதச் சொற்களில் இருந்து ஆங்கிலச் சொற்கள் ஸ்நேக் (ஸ் நாக(S+nake)) ஸெர்பெண்ட் (serpent), ஆகியன வந்தன என்பது பலருக்கும் தெரிந்திருக்கும் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரையுள்ள ஊர்ப் பெயர்களில் ஆயிரக் கணக்கான பெயர்களில் நாக அல்லது ஸர்ப்ப வருகின்றன. இன்றும் பாம்புகளை வழிபடும் நாக பஞ்சமியையும் வருண பஞ்சமியையும் கொண்டாடும் நாடு நமது இந்தியாதான். நாக பாஸம் என்ற அஸ்த்ரத்தின் நினைவாக நமது ஏவுகணைகளுக்கும் நாம் ‘நாக’ பெயர் சூடியுள்ளோம்.

 

 

நாகர்- பாண்டவர் மோதல் காரணமாகப் புறப்பட்ட மாய தானவன் என்ற நாகன் தென் அமெரிக்க மாயன் (Mayan Civilization) நாகரீகத்தை ஸ்தாபித்ததையும், குப்தர் கல்வெட்டுகளில் பலர் நாகர் பெயர்கள் இருப்பதையும், சங்க காலப் புலவர்களில் இருபதுக்கும் மேற்பட்ட நாகர்கள் பெயர்கள் இருப்பதையும், சிந்து சமவெளி- ரிக் வேதம் ஆகியவற்றில் நாக ராணி (Snake Queen) பற்றி காணப்படுவதையும், நல்லோர் அவையில் புகுந்த நாகத்தைக்கூட இந்துக்கள் கொல்ல மாட்டார்கள் என்ற இலக்கியக் குறிப்புகளையும் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளில் வடித்தேன். இப்போது மேலும் ஒரு புத்தகததைப் படித்தேன். சுவையான குறிப்புகளைச் சுவைத்தேன்; அவைகளை உங்களுடன் பகிர்வேன்.

காஷ்மீரின் வரலாற்றைக் கூறும் ராஜ தரங்கிணி என்ற நூலை கல்ஹணர் என்ற பிராஹ்மணன் 1000 ஆண்டுகளுக்கு முன் ஸம்ஸ்க்ருதத்தில் எழுதினான். அவனுக்கு முன்பாக நீல மத புராணம் என்ற புஸ்தகத்தில் கூறிய பல விஷயங்களை அவனும் குறிப்பிட்டுள்ளான்.

 

காஷ்மீருக்கும் நாகர்களுக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு. இங்கே நாகர் என்பதை மலை ஜாதி மக்கள் என்று கொள்ளாமல் உண்மையான பாம்பு என்றே கொண்டு எழுதி இருப்பதால் இன்னும் சுவை கூடுகிறது. எததனையோ நாகர் பெயர்களை மஹாபாரதம் முதலிய நூல்கள் குறிப்பிட்டாலும் அதிகமான நாகர் பெயர்களின் பட்டியல் நீலமத புராணத்தில்தான் இருக்கிறது. 527 நாகர்களின் பெயர்கள் இதில் உள்ளன!

 

அபுல் பாஸல் என்பவர் மொகலாய மன்னன் அக்பரின் சபையில் பிரதம மந்திரி. அவர் எழுதிய நூலிலும் காஷ்மீரில் நாகர்கள் பற்றிய நம்பிக்கைககள், கதைகளைத் தொகுத்து நமக்கு அளித்துள்ளார்.

 

தென்னாட்டில் நாகர் சிலை இல்லாத கோவில்களே இல்லை என்றே சொல்லலாம்

 

கிரேக்க நாட்டில் பாம்பு வழிபாடு

நம்முடைய புராண விஷயங்களைக் காப்பியடித்து உருத்தெரியாமல் திரித்தவர்கள் கிரேக்கர்கள்- கிருஷ்ணர் செய்த பல லீலைகளை ஹெர்குலீஸ் செய்ததாக கிரேக்கர் சொல்லுவர். கிருஷ்ணன் கொடிய காளீயன் என்ற பாம்பை அடக்கி ஒடுக்கியது போல ஹெர்குலீஸும் ஒரு பாம்பை த்வம்சம் செய்ததாகக் கதை. அபல்லோ (Apollo Vs Python) என்னும் தெய்வம் பைதானுடன் (மலைப்   பாம்பு) சண்டை இட்டதாக இன்னும் ஒரு கதை.

 

கிரேக்க நாட்டில் மலைக் குகைகள், பாதாள அறைகள் ஆகியவற்றில் இருந்து ஆரூடம் சொல்லுவோர் மீது கிரேக்கர்களுக்கு அதிக நம்பிக்கை உண்டு.

 

கடமஸ் (Cadmus) என்பவன், அவனது ஆட்களைக் கொன்ற பாம்பை சண்டை போட்டுக் கொன்றதாகவும் புராணக் கதைகள் பேசுகின்றன.

 

எகிட்னா (Echidna) என்ற ஸர்ப்ப தேவதையைப் புணர்ந்து நாக வம்ஸத்தை ஹெர்குலீஸ் தோற்றுவித்தாராம்.அவர்கள் (Scythians) சிதியர், சகரர் எனப்படுவர்.

 

கிரேக்க நாட்டில் டெல்பி, த்ரோபோனியஸ் ஆகிய இடங்களில் குறி சொல்லும் அறைகளில் பாம்புகள் வைக்கப்பட்டிருந்தன எபிடேரஸ் என்ற இடத்தில் இருந்த பாம்புகளுக்கு இரண்டாம் நூற்றாண்டு வரை பால் வார்க்கப்பட்டது. புனித இடங்களைப் பாது காக்கவும், குறிகள் சொல்லவும், கடவுளைக் குறிக்கவும், நோய்களைத் தீர்க்கவும் பாம்புகள் உதவுவதாக கிரேக்கர் கதைகள் உள்ளன.

 

அலெக்ஸாண்டரின் தாய் ஒலிம்பியாஸ் அவரது வீட்டில் ஒரு பாம்பு வளர்த்ததாக ப்ளூடார்ச் (Plutarch) எழுதியுள்ளார். அலெக்ஸாண்டர் ஒரு நாக கன்னிகைக்குப் பிறந்ததாக லூஸியன்(Lucian)  எழுதி வைத்தார். ஒரு வேளை நாகர் வம்ஸத்தில் பிறந்த பெண், அவருடைய தாயார் போலும்!

 

 

இதாலியில் இந்தியப் பாம்புகள் இறக்குமதி

ரோமாபுரியை ஆண்ட டைபீரியஸ் Tiberius (கி.பி.14-37) ஒரு செல்லப் பிராணியாக ஒரு நாகத்தை வளர்த்து வந்தார். ஒரு நாள் எறும்புகள் அதைக் கடித்துக் குதறி இருந்ததைக் கண்டார். பின்னர் இந்தியாவில் இருந்து ஒரு நாகப் பாம்பை இறக்குமதி செய்து ஏதென்ஸ் நகரத்தில் ஜூபிடர் ஒலிம்பியஸ் கோவிலில் வைத்தார். பாம்பைக் கொன்ற பாபத்துக்குப் பரிகாரம் செய்ய இப்படி காணிக்கை கொடுத்தார் போலும்!

 

மினர்வா (Minerva) என்னும் தேவதை லவாகூன் என்பவரைக் கொல்ல இரண்டு பாம்புகளை அனுப்பியதாக ரோமாபுரி வரலாறு சொல்லும்.

 

அந்த இடம் புனிதமானது என்பதற்காக சுவரில் இரண்டு பாம்பு ஓவியங்கள் வரையப்பட்டனவாம்.

 

கி.மு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிபியோ ஆப்ரிகானஸ் (Scipio Africanus) என்ற ரோமாபுரி தளபதி ஒர் நாகத்தால் (நாக கன்னிகை) வளர்க்கப்பட்டாராம்.

 

அகஸ்டஸ் சீசரின் தாயார் அடியா ( Atia), அகஸ்டஸை ஒரு நாகத்திடம் பெற்றுக் கொண்டதாக நம்பினார். இந்தக் கதைகளில் சம்பந்தப்பட்டவர் எல்லாம் நாக வம்ச மனிதர்களாக இருக்க வேண்டும்.

 

கிரேக்க ரோமானிய நாணயங்களில் பாம்பு உருவங்கள் இருப்பது 2000 ஆண்டுக்கு முந்தைய நம்பிக்கைகளை உறுதி செய்கின்றன.

அழகிகளும் நாகங்களும்!

 

ஆர்கிவ் ஜோனோ (Argive Juno) கோவில் அருகில் ஒரு  இருண்ட பெரிய குகையில் ஒரு பாம்பு வசித்ததாக ஏலியன் (Aelian) எழுதுகிறார். லாடியத்தில் (Latium) வசித்த கன்னிப் பெண்கள் உண்மையில் கற்புக்கரசிகளா என்று கண்டறிய ஆண்டுதோறும் இந்தக் குகைக்குள் கன்னிப் பெண்கள் அனுப்பப்படுவராம். அவர்கள் கொடுக்கும் உணவுகளை அந்த நாகம் ஏற்றால் அவர்கள் கன்னித் தன்மை அழியாதவர் என்பது உறுதி ப்படுவதோடு அவ்வாண்டு அமோக விளைச்சல் கிடைக்குமாம். இதே போல் எபிரஸ் (Epirus) என்னும் இடத்தில் நிறைய பாம்புகள் இருந்தனவாம். அங்கு கன்னிப் பெண்கள் நிர்வாண நிலையில் உணவுகளைக் கொண்டு செல்வராம். பாம்புகள் சாப்பிட்டால் நல்ல அறுவடை நடக்குமாம்.

இப்படிப் பாம்புகள் பற்றிப் பல நம்பிக்கைகள் இருந்ததை மேற்குறித்த   கிரேக்க ரோமானிய எழுத்தர்கள் மூலமும் ஆசிரியர்கள் மூலமும் அறிகிறோம்.

 

My Old Research Articles

நாகர் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/நாகர்/

யாதவர்கள் மீதும் பாண்டவர்கள் மீதும் கோபம் கொண்டநாகர்கள் பழிவாங்குவதற்காக ஒரு தருணத்தை எதிர் பார்த்துக் காத்திருந்தனர். மய தானவன் என்ற ஒரு நாகர்தலைவன் மட்டும் அர்ஜுனன் கிருஷ்ணர் தரப்பில் இருந்தான்.அவனைக் கானகத் தீயிலிருந்து மீட்டதால்பாண்டவர்களுக்கு …

நாகர் கதை | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/நாகர்-கதை/

அர்ஜுனனும் கிருஷ்ணனும் பழங்குடி நாகர்கள் எதிர்ப்பையும் மீறி காண்டவ வனத்தை எரித்ததையும் இதனால் நாகர்கள் –பாண்டவர்கள் ஜன்மப் பகை பல தலைமுறைகளுக்குப் பரவி பரீட்சித் கொல்லப்படவும், ஒரு நாகா இன ஆள் (பாம்பு) அவரைக் கொன்றதால் ஜனமேஜயன் சர்ப்ப யக்ஞம் …

 

Tamil | Tamil and Vedas | Page 64

https://tamilandvedas.com/category/tamil/…:/tamilandvedas…/64/ –

8 Dec 2012 – மாயாக்கள் சொன்னதன் உண்மை என்ன? மாயா இன மக்கள் இந்தியாவிலிருந்து சென்ற நாகர்கள் என்றும்பாண்டவர்கள்– நாகா இன மோதல் அதிகரித்து ஜனமேஜயனின் சர்ப்ப யாகத்தில் (அதாவது நாகர்கள்படுகொலை) முடிவடைந்தது என்றும் நான் ஏற்கனவே எழுதிய கட்டுரைகளில் …

நாக ராணி | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/நாக-ராணி/

Minoan Snake Goddess 1600 BC. சிந்து சமவெளியில் கிடைத்த முத்திரையில் ஒரு கடவுளுக்கு இரு புறமும் இரண்டு நாகங்கள் படம் எடுத்த நிலையில் இருக்கின்றன. வேதங்களில் நாகராணியைப் பற்றி பல குறிப்புகள் உள்ளன. இப்போது நடை பெறும் வேத ஆராய்ச்சிகள் பல புதிய உண்மைகளைத் …

 

 

நான் கண்ட சுனாமி அதிசயம் ! அலைகளில் …

swamiindology.blogspot.com/2016/04/post-no-2722.html

13 Apr 2016 – (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). sesha, pullaboothangudi. Wave. பாம்புத் தலை வடிவில் பேரலைகள்!! நான் வாகன ஆராய்ச்சி செய்பவன். பல வாகன ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி, இதே பிளாக்கில் வெளியிட்டிருக்கிறேன். அப்படி நாக வாஹன படம் ஒன்றை எனது பைலில் ‘சேவ்’ …

 

Picture from Meera Rai post

Serpent Queen:Indus Valley to Sabarimalai | Tamil and Vedas

Serpent Queen:Indus Valley to Sabarimalai

17 Jun 2012 – British archaeologist Arthur Evans excavated at the palace of Knossos in Crete and revealed to the world the fascinating details of a new civilization that existed between 2700 BC and 1500 BC coinciding with theIndus Valley Civilization. The famous serpent queen figure is of a priestess holding two snakes …

 

 

 

Snakes and Snake Bites in Mahabharata! | Swami’s Indology Blog

swamiindology.blogspot.com/2015/03/snakes-and-snake-bites-in-mahabharata.html

10 Mar 2015 – The stories in Hindu scriptures are real life stories. They are not concocted. The best examples are stories of snake bites. From the story of Parikshit to down south Tamil stories of Periya Purana and Tiruvilaiyadal Purana, we hear about several deaths due to snake bites. In some stories gods or saints came ..

 

included the Olmec, the Mixtec, the Toltec, the Aztec, and the Maya.

snake miracle | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/snake-miracle/

(for old articles go to tamilandvedas.com ORswamiindology.blogspot.com). sesha … Though there is no religion or culture without a snake in it, Hindus are the only community who worship snakes from the Vedic days until today. There are millions of … All the Hindu gods are linked with a snake in one way or another. All the .

 

Are Mayas, Indian Nagas? | Tamil and Vedas

Are Mayas, Indian Nagas?

28 Apr 2012 – Maya calendar begins on 11th August 3114 BC. Indiancalendar Kaliyuga begins in 3102 BC. But Hindu mythology is very clear about their existence long before Kali yuga. Kaliyuga is the last of the four yugas. But Mayas are silent about their existence before this date 3114 BC. The amazing co incidence …

Amazing Similarities between Mayas and Hindu Nagas | Tamil and …

https://tamilandvedas.com/…/amazing-similarities-between-mayas-and-hindu-nagas/

28 Apr 2012 – Amazing Similarities between Mayas and Hindu NagasAmazing Similarities between Mayas and Hindu Nagas ( The first part of this article is Are Mayas, Indian Nagas?) 1. Strange co incidence: Kali Yuga 3102 BC and Maya Yuga beginning 3114 BC 2. Maya appearance:Maya people of Central America …

 

Naga Yakshi | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/naga-yakshi/

We have Nagapanchami celebrations celebrated throughout India where live snakes are worshipped. Hindus respect Nature and Environment and use the natural resorces to the minimum. Snake Goddesses such as Manasa Devi and Naga Yakshi are worshipped in India. The Vedas has an authoress named as Serpent …

Gondwana | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/gondwana/

They celebrate Hindu festivals such as Dasara and Naga Panchami. Like any other village community they have their own stories for everything. They are well versed in arts and building. They have divided themselves into four different castes lie the four divisions of work in ancient Hindu society. They form the biggest tribe …

 

–சுபம்–

 

என் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்? – 4 (Post No.4867)

என் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்? – 4 (Post No.4867)

 

Date: MARCH 31, 2018

 

 

Time uploaded in London- 5-35 am

 

 

WRITTEN by S NAGARAJAN

 

 

Post No. 4867

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

சம்ஸ்கிருதச் சிறப்பு :

நீங்கள் படிப்பது அயர்லாந்து சம்ஸ்கிருத ஆசிரியர் ரட்கெர் கோர்டன்ஹார்ஸ்ட் நிகழ்த்திய உரையின் இறுதிப் பகுதி.

 

என் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்? – 4

 

ச.நாகராஜன்

நரேந்திரா தனது வழிமுறை அரவிந்தராலும் அன்னையாலும் தரப்பட்டது என்று கூறுகிறார். அந்த வழிமுறையைத் தான் நாங்கள் இங்கு டப்ளினில்  இன்று கடைப்பிடிக்கிறோம்.

அன்னை கூறிய பல ஊக்கமூட்டும் மொழிகளில் இதுவும் ஒன்று:-

“Teach logically. Your method should be most natural, efficient and stimulating to the mind. It should carry one forward at a great pace. You need not cling there to any past or present manner of teaching.”

 

 

Renaissance எனப்படும் மறுமலர்ச்சியின் 500 ஆண்டு கால சுழற்சியைப் பார்ப்போம்.

 

ஐரோப்பாவின் கடைசி மறுமலர்ச்சி நாம் வாழும் இன்றைய உலகை மாற்றி அமைத்த மூன்று விஷயங்களை மேம்படுத்தியது.

கலை, இசை மற்றும் விஞ்ஞானம்!

 

நாஸாவின்  ஸ்பேஸ் புரொகிராம் (விண்வெளித் திட்டம்) இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி மற்றும் ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் ஆகியவற்றிற்கு சம்ஸ்கிருதத்தைப் பயன்படுத்த அதி தீவிர முயற்சியை எடுத்து வருகிறது.

ஸ்ரீ அரவிந்தர் கூறினார்:

 

”…. at once majestic and sweet and flexible,  strong and clearly formed and full and vibrant and subtle…”

 

ஜான் ஸ்காட்ஸ் பள்ளி மாணவர்கள் கூறுவது இது:-

 

It makes your mind bright, sharp and clear.

It makes you feel peaceful and happy.

It makes you feel BIG.

It clears and loosens your tongue so you can pronounce any language easily.

 

நாஸாவில் உள்ள சம்ஸ்கிருத ஆர்வலர் ரிக் ப்ரிக்ஸ் (rick Briggs)  கூறுகிறார்:-

 

It gives you access to a vast and liberating literature.

It can describe all aspects of human life from the most abstract philosophical to the latest scientific discoveries, hinting at further development.

 It can describe all aspects of human life from the most abstract philosophical to the latest scientific discoveries, hinting at further developments.

Sanskrit and computers are a perfect fit. The precision play of Sanskrit with computer tools will awaken the capacity in human beings to utilize their innate higher mental faculty with a momentum that would inevitably transform the mind. In fact, the mere learning of Sanskrit by large numbers of people in itself represents a quantum leap in consciousness, not to mention the rich endowment it will provide in the arena of future communication. NASA, California

After many thousands of years, Sanskrit still lives with a vitality that can breathe life, restore unity and inspire peace on our tired and troubled planet. It is a sacred gift, an opportunity. The future could be very bright.

 

நாஸாவின் ரிக் ப்ரிக்ஸ் (rick Briggs)  கூறும் வார்த்தைகளையே எனது கடைசி வார்த்தைகளாகக் கூறுகிறேன்:-

 

One thing is certain; Sanskrit will only become the planetary language when it is taught in a way which is exiting and enjoyable. Furthermore it must address individual learning inhibitions with clarity and compassion in a setting which encourages everyone to step forth, take risks, make mistakes and learn.

Rick Briggs [NASA]

 

***

சம்ஸ்கிருதத்தின் சிறப்பு பற்றிய இந்தத் தொடர் முற்றும்.

இதன் ஆங்கில மூலத்தை அடுத்த கட்டுரையாகக் காணலாம்.

 

பின்னு செஞ்சடையாள், பேரழகி சிலை உடைய திருமுட்டம் (Post No.4846)

Written by London Swaminathan 

 

 

Date: 24 MARCH 2018

 

 

Time uploaded in London – 7-15 am

 

Post No. 4846

Pictures shown here are taken by london swaminathan

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

திருமுட்டம் என்றும், ஸ்ரீமுஷ்ணம் என்றும் அழைக்கப்படும் தலம் வைணவக் கோவிலும் சிவன் கோவிலும் இடம்பெற்ற தலம் ஆகும். இங்குள்ள வராஹ அவதாரக் கோலம் கொண்ட பூவராக- அம்புஜவல்லி தாயார் கோவில் மிகவும் பிரபமானது. இதே கோவிலில் குழந்தை அம்மன் சந்நிதி என்று ஒன்றும் இருப்பதும் வேறு எங்கும் காணாத புதுமை ஆகும்.

 

மார்ச் மாத (2018) முதல் வாரத்தில் இக்கோவிலுக்குச் சென்றேன். சில முக்கிய விஷயங்களை மட்டும் காண்போம்:-

கண்டவர் வியக்கும் அற்புதமான அழகிகளின் சிலைகள் உடைய கோவில் இது. ஒரு பெண்ணின் ‘பின்னல்’ தத்ரூபமாகக் காட்சி அளிக்கிறது. தமிழகத்தில் வேறு எங்கும் இது போலச் சிலை ஒன்றைக் கண்டதில்லை.

இன்னும் ஒரு புதுமை– அரச மரம், நித்ய புஷ்கரணி என்னும் குளம், பூவராஹ சுவாமி ஆகிய மூன்றும் விஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படுவதாகும்.

வராஹ அவதாரம், விஷ்ணுவின் பத்து முக்கிய அவதாரங்களில் ஒன்று. இங்கே இரண்டு கைகளையுமிடுப்பில் வைத்துக் காட்சி தருகிறார்.

 

திரு என்ற அடைமொழி இருந்தும் ஆழ்வார்களால் பாடப்பெறாத தலம் இது.

 

 

பெரிய சாது சந்யாசிகளுடன் தொடர்புடையது இத்தலம். காஞ்சி காமகோடி பீடத்தின் 25-ஆவது சங்கராசார்யார் இந்த ஊரில் அவதரித்தார்; அஹோபில மடத்தின் மூன்றாவது பட்டத்து அழகிய சிங்கர் இவ்வூரில் சமாதி அடைந்தார்

 

மத்வாசார்யார் தண்ட தீர்த்தத்தை இவ்வூரில் தோற்றுவித்தார். இங்கு நடக்கும் விழாவுக்கு கர்நாடகத்தில் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.

 

திருமுட்டத்திலும் விருத்தாசலம் சிவன் கோவிலிலும்  வாசல் அருகில் உள்ள சிறிய நாட்டிய சிலைகள் சிதம்பரம் 108 நடன கரணங்களை நினைவு படுத்துவதோடு இரண்டும் ஒரே சிற்பி கட்டியவை என்பதையும் காட்டி நிற்கிறது.

 

நாயக்கர், ஹோய்சாள (புலிகடிமால்) மன்னர்களின் பேராதரவு பெற்ற இக்கோயில் அவர்களுடைய கால கட்டிடக் கலையை காட்டுகின்றன.

 

எல்லா நாயக்கர் கோவில்களிலும் உள்ளதைப் போலவே ஆயிரம் கால் மண்டபம் 16 கால் மண்டபம் ஆகியனவும் உண்டு.

 

வேப்பமரத்தடியில் அமர்ந்திருக்கும் சப்த மாதர் சந்நிதியும், அரச மரமும் குழந்தைப் பேறு இல்லாதோருக்கு வரமளிக்கும் இடமாகக் காட்சி தருகிறது.

 

வானளாவிய கோபுரத்தின் ஏழு நிலை மாடங்களும் ஒன்பது கலசங்களும் வண்ணச் சிலைகளும் வருவோரை ‘வா வா’ என்று அழைப்பது போல உள்ளது.

 

புருஷசூக்த மண்டபம் எனப்படும் 16 கால் மண்டபத்தில் உள்ள குதிரை வீரர்களும் யாளியும் மெருகூட்டுகின்றன.

 

இங்கு செல்லுவோர் ஆற அமர இருந்து சிலைகளைச் சுற்றிச் சுற்றிப் பார்க்க வேண்டும். வாசலில் சதுரம் சதுரமான கட்டங்களில் உள்ள நடன மாதர் கோலங்களை கொஞ்சம் கொஞ்சமாக ரசிக்க வேண்டும்.

 

இங்குள்ள மூலவரின் சிறப்பு– அது சாளக்கிராமத்தினால் ஆன ஸ்வயம்பு என்பதாகும்

ஸ்வயம்பூ என்றால் – மனிதனால் செதுக்கப்படாத- ‘தான் தோன்றி’ என்று பொருள்.

சாளக்கிராமம் என்பது கடல் வாழ் உயிரினங்களின் வடிவம் பதிந்த கல் படிமங்கள் (fossils) ஆகும். இவை பல கோடி ஆண்டுகள் பழமை உடைத்து என்பதும் இதனால் பூமியின் வரலாறு துலங்கும் என்பதும் விஞ்ஞானம் படித்தோருக்கு விளங்கும்

கடல் வாழ் உயிரினங்களான சங்கு நத்தை முதலியவற்றின் சின்னங்களைத் திருமாலின் சங்கு சக்கரத்துடன் பக்தர்கள் ஒப்பிடுவர். இயற்கையிலும் ஒவ்வொரு மனிதரிடத்திலும் இறைமையைக் காண்பது இந்து மதத்தின் ஒப்பற்ற ஈடு இணையற்ற மஹத்தான தத்துவம்.

 

கோரைக் கிழங்கால் செய்யப்பட்ட லட்டு இந்தக் கோவிலின் சிறப்புப் பிரசாதம்- ஒவ்வொரு கோவிலிலும் ஒரு விநோதமான, சிறப்பான பிரசாதம்-  இருப்பது இந்து மதக் கோவில்களின் சிறப்பு அம்சம்.

 

விருத்தாசலம் அருகில் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இக்கோவில் விழாக் காலத்தில் அதிகமான பக்தர்களைக் கவர்ந்திழுக்கிறது. ஆண்டு தோறும் திருவிழாக் காலத்தில் சுவாமி எழுந்தருளி ஒரு மசூதியின் முன் நிற்கும்போது அவர்களும் மரியாதை செய்யும் சிறப்புடைத்து; இது ஆற்காட்டு நவாப் காலத்தில் துவங்கியது.

ஆண்டாள் சந்நிதி, உடையவர் சந்நிதி ஆகியன வைஷ்ணவர்கள் கொண்டாடும் சிறப்பு பெற்றவை.

இந்த ஊரில் ராமர், சிவன் கோவில்களும் உஅள.

 

திருமுட்டம் / ஸ்ரீமுஷ்ணம் என்றால் என்ன?

 

கேரளத்தில் ஒரு திருமுட்டம் கோவில் உளது; சபரிமலையில் திருமுட்டம் என்ற சொல் உளது. ஆனால் சம்ஸ்க்ருதத்தில் முஷ்ணம் இல்லை; ஆகவே முற்றம்= முட்டம்= என்பதே முஷ்ணம் ஆயிற்றோ என்று எண்ண வேண்டியிருக்கிறது.

 

சபரி மலையில் புனித முற்றம் (open, sacred court yard) உள்ள பகுதியை திரு முட்டம் என்பர்.

 

முற்றம்:– ஒரு கட்டிடம் அல்லது வீட்டுக்குள் இருக்கும் திறந்த வெளிப்பகுதி முற்றம் எனப்படும்.

 

 

–Subham–

தமிழில் இருந்து ஆங்கிலமும் உலக மொழிகளும் தோன்றினவா? (Post No 4790)

RESEARCH ARTICLE Written by London Swaminathan 

 

Date: 27 FEBRUARY 2018

 

Time uploaded in London – 14-15

 

Post No. 4790

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

This follows my earlier articles that shows t English and other languages came from the root words of Sanskrit and Tamil

 

 

தமிழில் இருந்து ஆங்கிலமும் உலக மொழிகளும்  தோன்றினவா? (Post No 4790)

நான் 50 ஆண்டுகளாக மொழி ஆராய்ச்சி செய்கிறேன். சின்னப் பையனாக இருந்த போது காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் (1894-1994) ஸம்ஸ்க்ருதம்- ஆங்கிலம் தொடர்பு பற்றிப் பேசிய உபந்யாஸத்தில் மாதா=மதர், ப்ராதா= ப்ரதர், ஹோரா= ஹவர் (MAATHAA-MOTHER, BRAATHAA- BROTHER, HORA- HOUR) இப்படிப் பல சொற்களை மேற்கோள் காட்டி மொழிந்த சொற்பொழிவு அது.

 

(அந்தக் காலத்தில் ‘தெய்வத்தின் குரல்’ என்ற நுல் கிடையாது; காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகளின் பேருரைகளை மடத்தினரே சிறு சிறு புத்தகங்களாக வெளியிட்டனர்; பின்னர் கலைமகள் காரியாலயம் வெளியிட்டது. அவைகளில் அவர் சொன்ன ஸம்ஸ்க்ருத ஸ்லோககங்கள் அப்படியே ஸம்ஸ்ருதத்தில் இருக்கும்; இப்போதும் அந்தப் புஸ்தகங்கள் சில என்னிடம் உள்ளன)

உலகம் முழுதும் மொழியியலாளர்கள் (LINGUISTS) இன்று வரை ஒப்புக்கொண்ட ஒரு “உண்மை” — இந்திய ஐரோப்பிய மொழி (INDO- EUROPEAN )ஒன்றின் கிளையே ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்து ஐரோப்பிய மொழிகள் என்பதாகும். பின்னர் மதுரைப் பல்கலைக் கழக லைப்ரரி உறுப்பினராக இருந்தபோது ஒரு புத்தகம் கிடைத்தது. அதில் சுமார் 1380 ஆங்கிலச் சொற்களுக்கும் ஸம்ஸ்க்ருதத்துக்கும் உள்ள தொடர்பை ஒருவர் மொழியியல்  ரீதியில் சமர்ப்பித்து காசி இந்து பல்கலைக் கழகத்தில் (BENARES HINDU UNIVERSITY) டாக்டர் பட்டம் வாங்கிய நூல் அது. அந்த நூலை அப்படியே

கைப்பட ஒரு கொயர் நோட்டுப் புத்தகத்தில் எழுதி லண்டனுக்கு கொண்டு வைத்து இருக்கிறேன்.

 

பின்னர் லண்டனுக்கு வந்து வசிக்கத் தொடங்கியபோது,  25 ஆண்டுகளுக்கு முன்னர்,  பி.பி.சி.யில் (B B C TAMIL SERVICE) சாத்தூர் சேகரன் (30-09-1991)என்ற மொழி ஆர்வலரைப் பேட்டி கண்டு ஒலிபரப்பினேன். தமிழோசை நேயர்கள் அதற்கு பெரும் வரவேற்பு கொடுத்தனர். ஆனால் அவர் உலகிலுள்ள 140-க்கும் மேலான மொழிகள்

தமிழ் மொழியில் இருந்து தோன்றியதற்கான சான்றுகள் இருப்பதாகச் சொல்லி பல புத்தகங்களை எனக்கும் தமிழோசை சங்கர் அண்ணாவுக்கும் வழங்கினார். அவர் சொன்ன கருத்தில் எனக்கு ஒப்புதல் இல்லை என்பதை தனிப்பட்ட உரையாடலில் விளம்பினேன்.

 

அதற்குப் பின்னர் லண்டனில் CHANNEL FOUR சானல் ஃபோர் (4) நிகழ்ச்சியில் ஒரு சுவையான நிகழ்ச்சி ஒலிபரப்பாகியது. அதில் புதிய மொழிக் கொள்கையை முன்வைத்த ஒரு ரஷ்யயரையும் இஸ்ரேலியரையும் காட்டினார்கள். அவர்களின் கூற்றுப்படி பைபிளில் கூறப்படும் TOWER OF BABEL பேபல் கோபுரக் கதை உண்மையே என்றும் ஆதிகாலத்தில் நம் முன்னோர்கள் ஒரே கூரையின் கீழ் வாழ்ந்ததால் ஒரு மொழிதான் பேசினர் என்றும் காலப்போக்கில் அவர்கள் பிரிந்து சென்ற பின்னர் மொழிகள் கிளைவிட்டுப் பரவின என்றும் பகர்ந்தனர்.

 

அண்மையில் லண்டன் பல்கலைக் கழக நூலகத்த்தில் இருந்து உலக மொழிகளின் அட்லஸ் (ATLAS OF WORLD LANGUAGES) என்ற புத்தகத்தைப் படித்தபோது நியூ கினி (NEW GUINEA) தீவில் ஆதி வாசி மக்கள் 750-க்கும் அதிகமான மொழிகள் பேசுவதும், ஆஸ்திரேலியப் பழங்குடி (AUSTRALIAN ABORIGINES) மக்கள் 250 -க்கும் அதிகமான மொழிகள் பேசுவதும், உலக மொழி இயல் அறிஞர்களுக்குப் புதிராக விளங்குகிறது; பழைய மொழியியல் கொள்கைகளுக்குச் சவாலாக அமைந்துள்ளது என்று செப்பியு ள்ளதை அறிந்தேன்.

 

எமனோ, பர்ரோ போன்ற அறிஞர்கள் திராவிட மூல சொற்கள் சுமார் 4500 மட்டுமே என்று எழுதிய (ETYMOLOGICAL DICTIONARY OF DRAVIDIAN LANGUAGES) புத்தகத்திலும் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டி ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினேன். அரிசி,  நீர் என்பன மற்ற ஐரோப்பிய மொழிகளில் ஆதிகாலத்தில் இருப்பதைக் காட்டினேன். கிரேக்க மொழியில் பழைய (PALEO) தொலை (TELE) ஓடு (ODOMETER) கை (CHI), நீர் (NEREIDS=WATER NYMPHS)  முதலிய சொற்கள் அலக்ஸாண்டரின் இந்தியப் படையெடுப்புக்கு முன்னரும் இருப்பதைக் காட்டினேன். யவன, ஹோரா (தொல்காப்பியத்தில் ஓரை) முதலிய சொற்கள் பற்றி மயிலை வேங்கட சாமி வையாபுரிப் பிள்ளை ஆகியோர் எழுதியவையும் தவறு என்று கண்டேன். யவன என்ற சொல் ஆதிகாலத்தில் இருந்தே மஹாபாரதம் முதலிய நூல்களில் உள்ளது.

 

ஆக நான் கண்ட உண்மை இதுதான்:

உலகிலுள்ள பழைய மொழிகளில் சில சொற்கள் ஒன்றாகவே இருக்கும்; தமிழ் சொற்களான அப்பா. அம்மா உலகில் பல மொழிகளில் உள்ளன. இதை வைத்து மட்டும் அவை தம்ழில் இருந்த வந்ததாகச் சொல்ல முடியாது. இன்னும் சில சொற்கள் ஒலியை அடிப்படையாக வைத்து வரும் உலகிலுள்ள பெரும்பாலான மொழிகளில் பறவைகளின் பெயர்கள் கா, கீ, கு, கொ,கெ, கோ, கே என்ற சொற்களில் துவங்கும்; மனிதன் அவைகளின் ஒலியில் இருந்து உருவாக்கிய சொற்கள் இவை. இதில் வியப்பு எதுவும் இல்லை.

 

 

உலகிலுள்ள பழைய மொழிகளை ஆராய்ந்தால் அவைகளின் சொற்கள் ஸம்ஸ்க்ருதத்தில் இருந்தோ தமிழில் இருந்தோ கிளைவிட்டுப் பரவியிருப்பதைக் காணலாம்.

 

சில அடிப்படை மொழி இயல் கொள்கைகளைப் பயன்படுத்தினால் அவை எப்படி மாறின என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

உதாரணமாக உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் ஆர் (R=L) என்பதும் எல் என்பதும் இடம் மாறும்

எம் வி பி (M=V=P/B) என்பன இடம் மாறும்

ஆர் (R=D) டி என்பது இடம் மாறும்

T=S ( சீர், திரு) Sri= Ceres (Goddess of Wealth in the West)

மிர்ரர் இமேஜ் (MIRROR IMAGE) ஏற்படும்; கண்ணாடி விளைவு.

 

அதாவது யாளி  (YAALI= LEO) என்பதை எழுதி கண்ணாடியில் காட்டினால் லியோ என்று வரும் (LEO= சிங்கம், சிம்ம ராசி)

 

தமிழில் கூட இலக்கணப் போலி உண்டு வாயில் என்றாலும் இல்வாய் என்றாலும் ஒன்றே.

ஆக எனது கொள்கை இதுதான்.

 

ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் சொற்கள் உண்டு. அவைகள் அனைத்திற்கும் ஸம்ஸ்க்ருத மூலம் கிடையாது .மொழியியல் அறிஞர்கள் ஆங்கிலம் என்பது ஸம்ஸ்க்ருதத்துடன் தொடர்புடையது, திராவிட மொழி என்பது வேறு என்று இயம்புவர். அது தவறு.

 

ஸம்ஸ்க்ருத மூலம் இல்லாத ஆங்கில ச் சொற்களில் தமிழ் மூலமிருப்பதை உற்று நோக்கினால் புரிந்து கொள்ளலாம். சில சொற்களுக்கு ஸம்ஸ்க்ருதத்தைவிட தமிழ் நெருக்கமாக இருப்பதையும் காணலாம்; ONE ஒன்று=ஒன், EIGHT எட்டு= எய்ட், COT கட்டில்=காட்

 

 

ஆகவே உலக மொழிகள் அனைத்தும் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தில் புகல்வதைப் போல சிவனின் உடுக்கை ஒலியில் இருந்து (மாஹேஸ்வர சூத்ரம்) பிறந்தவையே; அது ஒரு புறம் தமிழாகவும் மறு புறம் ஸம்ஸ்க்ருதமாகவும் பரிணமித்தது. உலக மொழிகள் அனைத்தும் தமிழ்-ஸம்ஸ்க்ருத மூல ஒலிகளில் இருந்து தோன்றியவையே. அப்படிப் பார்க்கையில் ஆங்கிலமும் தமிழ் -ஸம்ஸ்க்ருத மூல மொழியில் இருந்து பிறந்ததே. கீழ்கண்ட சொற் பட்டியல் மாதிரிக்காக கொடுக்கப்பட்டுள்ளது. எனது அகராதி மார்ஜினில் (MARGINAL NOTES) உள்ள சொற்கள் அனைத்தையும் போடுவது இயலாது; ஆதாவது ஆயிரக்கணக்கான சொற்கள் தமிழ் தொடர்புடையவை. 1991 ஆம் ஆண்டில் சாத்தூர் சேகரன் என்னிடம் பி பி ஸி தமிழோசைப் பேட்டியில் சொன்னது ஓரளவு உண்மையே. அவர் ஸம்ஸ்க்ருதத்தைச் சொல்லத் தவறிவிட்டார் (எனது முந்தைய மொழி இயல் கட்டுரைகளில் மேலும் பல உதாரணங்கள் உள்ளன. கிரேக்க- தமிழ் தொடர்பு ஆராய்ச்சிக் கட்டுரையிலும் பல எடுத்துக் காட்டுகளை முன் வைத்துள்ளேன். கண்டு மகிழ்க!

இந்த வகையில் நோக்கினால் ஒரு சொல் தமிழ் சொல்லா, அல்லது ஸம்ஸ்க்ருதச் சொல்லா என்று நீண்ட காலமாக நிகழ்ந்துவரும் சர்ச்சையும், வாதப் ப்ரதிவாதங்களும் முடிவுக்கு வரும்


(
நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

COGNATE WORDS

 

சில சொற்கள் ஸம்ஸ்க்ருதத்திலும் காணப்படும்

Tamil/ Sanskrit                                          English

 

Deivam/ Deva                                     Deo தெய்வம்;

Kadavul                                               God கடவுள்

Periya/ Bruhath                                               Big பெரிய

Ondru                                                  One ஒன்று

Ettu /Ashta                                                      Eight எட்டு

 

Paraththai/ Para Stree                                    Prostitute பரத்தை

Veera                                                              Hero வீரன்

Manathu/ Manas                                            Mind மனது காம

Kama/ Kama                                       amorous காம

Patha=Adi                                                        Path, Pedestal, Foot பத, பாத, அடி

Dharma=aram                                    Moral அறம்

Neer                                                                Nereids= water nymphs நீர்

Puttil                                                                Bottle புட்டில்

Arukan/ Bargo                                    Argos (light, sun) அருகன்

Andira/ Aindra/Indra                          Andrew (English name) அண்டிரன் /ஐந்திர,  இந்திர

Pillai                                                                Fille (French) பிள்ளை

Tarai                                                                Terrain தரை

Tele (phone, scope, vision)                 Tolai தொலை

Pazaiya                                                            Paleo (ntology) பழைய

Piththu                                                 Fad பித்து

Kuuli                                                                Ghoul/Ghost கூலி

Vathuvai /Bride                                               Wed வதுவை

Paiyul (Purananuru)                            Paiyon (Greek)= song பையுள்

Aiyavi (smallest seed)                         Iota ஐயவி

Maaya                                                 Magic (g=y) மாய

Staanu/ Thun                                      Stand தாணு

AAndu                                                  Annum, annual ஆண்டு

 

Duusi                                                               Dust தூசி

 

LIST 2 OF COGNATE WORDS

TAMIL WORDS                        ENGLISH WORDS

ATHLETE -ATALAR அடலர் ஏர் உழுதல்;  AUGURY- ARIKURI அறிகுறி

ARABLE- ER UZAKKUUTIYA ஏர் உழுதல்;

APOLLO- PAKALAVAN (MIRROR IMAGE) பகலவன் AURUM/GOLD- AADAKAM (AOR/HEBREW WORD, MIRROR IMAGE RAYI SKT.WORD) ஆடகம்

 

ANTHEM/ANTHOLOGY – SANTHAM சந்தம்; ATHRO(POLOGY)- AAN=MAN ஆண்

MAN- AAN மனிதன்/மானுடன்; ARGOTER (BEG)- ERPATHU (IKAZSSI) ஏற்பது (இகழ்ச்சி); AVER(T)- THAVIR தவிர் ;A-VENGE- VANJI வஞ்சி; AWE- ACHCHAM அச்சம்; AXIS-ACHU அச்சு A-TTACK- THAAKKU தாக்கு ; ANCHOR- NANGUURAM நங்கூரம்; ATTIRE-AADAI ஆடை ;ARDENT, ARDOUR- AARVAM ஆர்வம் ;CUMULATE/ACUMULATE- KUVI, KUMITHTHU குவி/குமித்து;  AWARE- ARI (VEN) அறி ;ANTIQUITY- AATHI (KUTI) ஆதி ;ALL-ELLAA (MIRROR IMAGE) எல்லா;ATTAIN-ADAI அடை

ADAMANT- ADAAVADI அடாவடி ;AMPHORA- AMBARAA (SHAPE) அம்பறா (துணி- வடிவம்); BAY-VAAY வாய்; BURG- PURA, UUR புரம்/ஊர்; BOAT-PATAKU படகு

BETEL-VETTALAI வெற்றிலை; BIRD- PARAVAI, ANNAP’’PEDU’’SEVAR PEDU பறவை/ பேடு; BRIDE- VADUVAI வதுவை; BIRTH-PIRATHTHAL பிறத்தல்

BARRIER- VARAIYARAI வரையறை; BLAZING- PALAPALAPPU பளபளப்பு

BARN- ARAN/LOFT பரண்; BLUFF-ULARU உளறு; BOY- PAIYAN பையன்/பியூன்

 

BARE – VERUM வெறும் ;BARREN- VARANDA வறண்ட ;BURY-PUTHAI புதை;

BEAT- PUTAI- NAIYAP PUDAI புடை/ நையப்புடை; BLAST- PILA, VIlAASU பிள/விளாசு; FLAW- PIZAI பிழை ;BATTER- PAATARAI பட்டறை வேகு/வேக்காடு; BAKE- VEGU, VEKKAADU வேகு/வேக்காடு;

BABY- PAAPPAA பாப்பா ;BAG- PAKKU (SANGAM TAMIL) பக்கு

 

C

CONCH- SANGU சங்கு சரடு கயிறு; CORD- KODI, SARADU சரடு

COIR- KAYIRU  கயிறு; COWRY- SOZI சோழி; CHIRO- KAI/HAND கை கல் செறி, செழுமை, சீர், திரு; CAL- KAL (STONE), CALCULATE கல் ;CERES- SIIR, SRI, SEZUMAI, THIRU, செறி, செழுமை, சீர், திரு

 

CHAFF- SAAVI சாவி செப்பு/செம்பு; COPPER- SEPPU செப்பு/செம்பு

CRORE- KODI கோடி; CLAY- KALI (MAN) களி; COPRA- KOPPARAI கொப்பறை

CASH- KAASU காசு; CHOULTRY- SATTHTHIRAM சத்திரம் ; CHIT- SIITU (KKAVI), SITTAI சீட்டு/சிட்டை; CURRY- KARI கறி; CURL- SURUL சுருள் ; CUTE-SUTTI சுட்டி ;

CHAR- KARI கரி ;CUP- KOPPAI, KUVALAI  கோப்பை,குவளை; CROOKED- KURUKIYA குறுக்கு  குறுகிய

COLD, CHILL- KULIR குளிர் ; CURVE- SUZIVU சுழிவு ; COOPT- KUUTTU கூட்டு

CUDDLE-KATTU கட்டு ; CROWD- KUUTTAM கூட்டம்; CHAOS- KUZAPPAM குழப்பம்

CHEER – SIRI சிரி ; CELEBRATE- KALI (PPU) களி(ப்பு); COARSE- SORASORA(PPU) கரகர, சொர சொர; CHATEAU –KOTTAI கோட்டை; COASTAL- KADAL +ORA கடல் ஓர

CYST- KATTI  கட்டி; CRACK- KIRUKKU கிறுக்கு ; CODNEMN- KANDI, KANDANAM கண்டி/கண்டனம், ;COIL- SUZAL, சுழல்/குழல்

 

Words about genital organs are same In most of the languages with slight changes)

This is not a comprehensive list; only some examples are given.

 

–subham–

Rare Letters of Netaji, நேதாஜியின் அரிய கடிதங்கள்- Post No.4780

நேதாஜியின் அரிய கடிதங்கள் ( IN ENGLISH AND TAMIL)- Post No.4780

 

Date: 24 FEBRUARY 2018

Time uploaded in London- 7-38 am

Compiled by London swaminathan

Post No. 4780

PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் (1897- 1945??) அரிய கடிதங்கள் எட்டும், அவர் கைப்பட எழுதிய நாட்குறிப்புகளும் அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பும் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியாவில் பிரம்மச்சாரி கைலாசம் என்பவரால் வெளியிடப்பட்டது. இந்தக் கடிதங்களை பிரம்மச்சாரி கைலாசத்துக்கு நேதாஜி எழுதினார். அடித்தல், திருத்தல் இல்லாத அவரது எழுத்துகளும், போர் முனையில் கூடத் தெளிவான அவரது சிந்தனையும் கடிதங்களின் மதிப்பை உயர்த்துகின்றன. ஒவ்வொரு முறையும் சுவாமிஜிக்கு அவர் பணிவான வணக்கங்களைத் தெரிவிப்பது அவரது பணிவைக் காட்டுகிறது. மணிப்பூரில் மழை காரணமாக தோல்வி ஏற்பட்டபோதும் அவரது வெற்றி வேட்கையும் நம்பிக்கையும் கொஞ்சமும் குறையவில்லை என்பதை இந்தப் புத்தகத்தில் உள்ள எட்டுக் கடிதங்களும் காட்டுகின்றன. பிரிட்டிஷ் லைப்ரரியில் (லண்டன்) இந்த அரிய, சிறிய நூல் உள்ளது. காப்பிரைட் விதிகள் காரணமாக முழுப் புத்தகத்தையும் வெளியிடவில்லை.

 

 

 

 

 

 

 

Jai Hind

 

–Subahm–

 

மாணவர்கள் நாடகம் (சினிமா) பார்க்கக்கூடாது! சாணக்கியன் கட்டளை (Post No.4770)

Date: 21 FEBRUARY 2018

 

Time uploaded in London- 7-06 am

 

Written by London swaminathan

 

Post No. 4770

 

PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

சாணக்கியன் என்ற பிராஹ்மணன் 2300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தான். உலகம் வியக்கும் முதல் பொருளாதார நூலான அர்த்தசாஸ்திரத்தை யாத்தான்; பல நீதி மொழிகளை புகன்றான். மகத சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்து அலெக்ஸாண்டரின் படைகளை நடுநடுங்க வைத்தான். ஆனால் வியப்பான விஷயம் என்ன வென்றால் ஒரு குடிசையில் வாழ்ந்தான். விருப்பு வெறுப்பற்ற ஒரு யோகி போல வாழ்ந்ததால் யாருக்கும் கட்டளை இடும் துணிவு அந்த பிராஹ்மணனுக்கு இருந்தது.

 

அவன் செப்பாத விஷயம் இல்லை; பேசாத பொருள் இல்லை. சாணக்கிய நீதி என்னும் நீதி நூலில் அவன் மொழிவதாவது:

 

முட்டாளாக இருக்கும் மந்தமான மாணவர்களுக்குக் கற்பிக்கும் , புத்திசாலியான ஆசிரியர்களும் துன்பமே அடைவார்கள்;

கெட்ட பெண்களைக் கவனித்துக் கொள்வோர் நிலையும் அஃதே;

கெட்டவர்களுடன் நட்பு பாராட்டுவோரும் பரிதாபத்துக்கு உரியவர்களே;

சாணக்கிய நீதி, அத்தியாயம் 1, ஸ்லோகம் 4

 

மூர்க்க சிஷ்ய உபதேசேன  துஷ்ட ஸ்த்ரீபரணேன ச

துக்கிதைஹி ஸம்ப்ரயோகேன பண்டிதோஅப்யவஸீததி

 

xxx

 

மாணவர்கள் நாடகம் (சினிமா) பார்க்கக்கூடாது!

 

மாணவர்கள் Make-up மேக் அப் போட்டு அலங்காரம் செய்து கொள்ளக் கூடாது; ஆடல் பாடல், நாடக ( தற்காலத்தில் திரைப்படம்) நிகழ்ச்சிகளில் ஈடுபடக் கூடாது; காமம் க்ரோதம் (கோபம்) இருக்கக்கூடாது.

 

 

ஒரு மாணவன் கீழ்க்கண்ட எட்டு விஷயங்களைக் கைவிட வேண்டும்:

காமம் , கோபம், பேராசை, கேளிக்கை நிகழ்ச்சிகள், அலங்காரம் (மேக்- அப்), ஆடல், நாடக நிகழ்ச்சிகள், அதிக தூக்கம், மற்றவர்களைப் புகழ்ந்து வாழுதல் (காரியம் நடப்பதற்காக இச்சகம் பேசுதல்)

காமம் க்ரோதம் ததா லோபம் ஸ்வாதம் ச்ருங்காரகௌதுகே

அதி நித்ராதி ஸேவே ச வித்யார்த்தீ ஹ்யாஷ்ட வர்ஜயேத்

 

சாணக்கிய நீதி 11-10

 

xxx

வாத்தியாருக்கு நன்றிக்கடன்

 

ஆசிரியர் ஆனவர் உனக்கு ஒரு அக்ஷரம் (எழுத்து) சொல்லிக் கொடுத்தவர் ஆகட்டும்; அப்படியும் கூட அவருக்கு நன்றிக் கடன் செலுத்த உலகில் ஒரு பொருளும் இல்லை.

ஏக மேவாக்ஷரம் யஸ்து குருஹு சிஷ்யம் ப்ரபோதயேத்

ப்ருதிவ்யாம் நாஸ்தி தத் த்ரவ்யம் யத் தத்வா சான்ருணீ பவேத்

சாணக்கிய நீதி 15-1

 

((பெண்கள், பெற்றோர்கள், ஆசிரியர் ஆகியோரை இந்துமத இலக்கியங்கள் உயர்த்தி வைக்கும் அளவுக்கு உலகில் வேறு எந்த இலக்கியமும் உயர்த்தி வைக்கவில்லை; அப்படி இருந்தால் அவை எல்லாம் நமக்கு 1000, 2000 ஆண்டுகளுக்குப் பின்னர் எழுதப்பட்டவையே.

விருந்தோம்பல், தூது, அமைச்சர், அரசன், கொடி, முரசு, கோ மாதா , தானம், தவம் – முதலிய விஷயங்களும் உலகில் எந்த நாட்டுப் பழைய இலக்கியங்களிலும் கிடையாது. இவை எல்லாம் இந்தியாவே உலகின் பழைய நாடு, இந்தியாவே உலகிற்கு நாகரீகத்தைப் பரப்பிய நாடு என்பதற்குச் சான்று பகரும். ரிக் வேதத்தின் கடைசி பாடல், இன்று ஐ.நா. முதலிய அமைப்புகளின் நோக்கமாக இருக்கின்றது. இத்தகைய உயர் சிந்தனை மலர, ஒரு சமுதாயம் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த பின்னரே உதிக்கும்.

xxx

 

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது

ஒரு ஆசிரியரிடம் செல்லாது, புத்தகத்தில் இருந்து மட்டும் படித்தவன், ஒரு சபையில் சோபிக்க முடியாது; ஒரு பெண் கள்ளக் காதல் கொண்டால் எப்படியோ அப்படித்தான் இதுவும்!

 

புஸ்தகேஷு ச யா அதீதம் நாதீதம் குருஸந்நிதௌ

ஸபாமத்யே ந சோபந்தே ஜாரகர்பா இவ ஸ்த்ரியஹ

சாணக்கிய நீதி 17-1

ஒரு பெண், பெரிய பெரிய ஆட்களுடன் எல்லாம் படுத்து இருக்கலாம்; இருந்த போதிலும் அதை பொது இடங்களில் பேச முடியாது பேசினால் குட்டு வெளிப்பட்டுவிடும்; அது போலவே புத்தகத்தை மட்டும் படித்துப் பொருள் அறிபவன்; பொது சபைகளில் நாலு பேர் கேள்வி கேட்டால், திரு திருவென முழிப்பான்; அவன் குட்டு வெளிப்பட்டுவிடும்; ஆசிரியர் கற்பித்து இருந்தால், அவரே தடை எழுப்பி விடைகாணக் கற்றுக் கொடுத்து இருப்பார்.

 

ஆசிரியர்- மாணவர் உறவு பற்றி 2300 ஆண்டுகளுக்கு முன்னர் உலகில் இவ்வளவு தெளிவாக யாரும் சொல்லியிருக்க முடியாது.

அலெக்ஸாண்டரின் குரு அரிஸ்டாடில் (Aristotle)- அரிஸ்டாடிலின் குரு பிளாட்டோ (Plato) — பிளாட்டோவின் குரு சாக்ரடீஸ் (Socrates)- அவர் சாணக்கியனுக்கு ஒரு நூற்றாண்டு முன்னர் வாழ்ந்தார். அவருடைய கேள்வி கேட்டுப் பதில் காணும் முறையும் (Socratic Method) அவருக்கு 500 ஆண்டுகளுக்கு முன்னர் உபநிடதத்தில் உள்ளது. அவரும் ஏசு கிறிஸ்துவும் உபநிடதங்களைக் கற்றது அவர்களின் உபதேசங்களில் வெள்ளிடை மலை என விளங்குகிறது.

 

(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

டெலிபோனுக்கு முஸ்லீம்கள் கடும் எதிர்ப்பு (Post No.4724)

Date: 10 FEBRUARY 2018

 

Time uploaded in London- 9-11 am

 

WRITTEN by London swaminathan

 

Post No. 4724

 

PICTURES ARE TAKEN BY LONDON SWAMINATHAN

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

எந்த ஒரு புதுத் திட்டம் வந்தாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரு கும்பல் இருக்கும்; அதற்குப் பின்னுள்ள காரணம் என்னவென்றால் அவர்களின் பிழைப்பில் மண் விழுந்திருக்கும்.

 

சவூதி அரேபியாவில் டெலிபோன் அமைப்பது, ‘சாத்தான் வேலை’ என்று குரல் கொடுத்த முஸ்லீம் மதத் தலைவர்களை அந்த நாட்டு மன்னர் எப்படிச் சமாளித்தார் என்ற சுவையான சம்பவம் ஒரு பழைய ஆங்கிலப் புத்தகத்தில் உள்ளது.

 

அச்சுக்கூடங்களை கூடன்பர்க் நிறுவியவுடன் கிறிஸ்தவப் பாதிரிகள், இது ‘சாத்தான் வேலை’ என்று பயங்கரக் கூச்சல் போட்டார்கள். ஏனெனில் அதுவரை பைபிள் கையினால் எழுதப்பட்டு விற்கப்பட்டது. அதில் பாதிரிகளுக்கு ஏராளமான பணம் கிடைத்தது. அவர்கள் அனுமதி இல்லாமல் பைபிளை யாரும் வாங்கவும் முடியாது; வைத்துக்கொள்ளவும் முடியாது — ஒரு போப்பாண்டவர் பைபிள் எந்த வீட்டிலும் இருக்கக்கூடாது. அது சர்ச்சில் மட்டுமே இருக்கலாம என்று தடையும் விதித்து இருந்தார்!

 

மதுரையில் நான் தினமணியில் வேலை பார்த்த காலத்தில் வாரத்துக்கு ஒரு முறை கம்யூனிஸ்ட் ( மார்கஸீய மூடர்கள்) யூனியன்கள் வங்கி (BANK) வாசலில், எல்.ஐ.சி (L.I.C) அலுவலக வாசலில் கூச்சல் போடுவார்கள்– கம்யூட்டர்களை எதிர்த்து! ——அவர்கள் எவ்வளவு முட்டாள்கள் என்பதை லண்டனில் உள்ள அவர்களுடைய மகன்கள் (COMPUTER PERSONNEL) இப்போதும் சொல்கிறார்கள்.

சவூதி அரேபிய மன்னர் அரண்மனையில் புதிய டெலிபோன் அமைப்பு வேலைகள் துவங்கியவுடன் செய்தி காட்டுத் தீ போல பரவியது. உடனே முஸ்லீம் மதத் தலைவர்கள் ‘’ஹராம் ஹராம்! அபச்சாரம், அபச்சாரம்’’: சாத்தான்களை அரண்மனக்குள் நுழையவிடக்கூடாது என்று கூக்குரல் எழுப்பினர். மன்னரும் யோசித்தார்; இந்த மூடர்களுக்கு எப்படி அறிவு புகட்டுவது என்று ஆலோசித்தார். எல்லா மதத்திலும் சாணக்கியர் போன்ற அறிவாளிகள் உண்டு அல்லவா?

 

நல்ல யோஜனை பிறந்தது! மதத் தலைவர்களை சவூதி மன்னர் அழைத்தார். “அன்பர்களே! நண்பர்களே! தோழர்களே; காம்ரேட்களே!

ஒரு மௌல்வி டெலிபோனின் ஒரு புறத்தில் இருந்து குரானை ஓதட்டும். டெலிபோனின் மறு புறம் மற்றொரு மௌல்வி காது வைத்துக் குரானைக் கேட்கட்டும். அப்படியே பிழை இன்றிக் கேட்டால், புனித குரான் வந்த டெலிபோன் சாத்தானின் வேலையாக இருக்காதல்லவா?” என்றார். மௌல்விகள் பலமாக தலையை ஆட்டினர். அவ்வாறே குரானும் ஓதப்பட்டது; அது மறுபுறமும் ஒலித்தது. எல்லோருக்கும் பரம திருப்தி; பஹு சந்தோஷம்.

 

XXXXX

பேய்கள் இருக்கிறதா?

ஆங்கிலக் கவிஞர், தத்துவ வித்தகர், இலக்கிய விமர்சகர் காலரிட்ஜ் (SAMUEL TAYLOR COLERIDGE).

 

அவரிடம் ஒரு பெண்மணி வந்தார்.

“ஐயா, பேய்கள் இருக்கிறதா? உங்களுக்குப் பேய்கள் மீது நம்பிக்கை உண்டா?”

 

காலரிட்ஜ் செப்பினார்_

“அம்மணி! அதை ஏன் கேட்கிறீர்கள்; எங்கு  பார்த்தாலும், ஏராளமான பேய்களைப் பார்ப்பதால் எப்படி நம்புவது என்றே புரியவில்லை!”

 

xxxxxx

 

ஏசு கிறிஸ்து சக்தி வாய்ந்தவரா?

லூயிஸ் நெப்போலியன் (LOUIS LITTLE NAPOLEON)  சிறுவனாக இருந்தபோது நடந்த நிகழ்ச்சி. இவர் நெப்போலியன் போனபர்ட்டின் வாரிசு. பிரான்ஸில் தேர்தலில் வெற்றி பெற்று முதல் ஜனாதிபதியாக இருந்தார்- அதுவும் மிகவும் இளம் வயதிலேயே!

 

பள்ளிக்கூடடத்தில் பாடம் நடந்தது. வாத்தியார் மிகவும் உருக்கமாக ஏசு கிறிஸ்துவின் துயரங்களை வருணித்தார். மக்களுக்காக உயிர் நீத்த மஹான் அவர் என்றார். அவர் பட்ட துன்பம் கொஞ்சமா, நஞ்சமா என்றார். அவர் ஏசு பிரானின் கஷ்டங்களையும் சிலுவையில் அறையப்பட்டதையும் சொன்னபோது எல்லா மாணவர் முகத்திலும் சோகமே ததும்பியது; சிலர் கண்களில் கண்ணீரும் உருண்டோடியது.

 

 

லூயிஸ் நெப்போலியனின் முகத்தை ஆசிரியர் கவனித்தார்; அவர் முகத்தில் சிறிதும் மாறுதல் இல்லை; அன்றலர்ந்த தாமரைபோல அவர் முகம் பிரஸன்ன வதனமாய் இருந்தது. என்ன லூயிஸ், நான் சொன்னதை கேட்டாயா? உனக்குக் கொஞ்சமும் வருத்தமே இல்லையா?

 

லூயிஸ் சொன்னான்:

அதானே கேட்டேன்! நீங்கள் சொல்லுவது போல ஏசு பிரான் சக்தி வாய்ந்தவராக இருந்தால், அவரால் ஏன் இதைத் தடுக்க முடியவில்லை?

 

வாத்தியார் ஐயா வாயடைத்துப் போனார். ‘’அம்மாடி! நாய் வாலை நிமிர்த்த முடியாது’’ என்று எண்ணினார்!

 

XXXXX

 

நாத்தீகம் பற்றிக் கதைப்போமா?

பிரபல பிரெஞ்சு எழுத்தாளர், தத்துவ ஞானி அறையில் அறிஞர்கள் குழுமி இருந்தனர். கொஞ்சம் கொஞ்சமாக விவாதம், நாத்திகத்தை நோக்கித் திரும்பியது.

 

‘’சரி, நாத்திகம் பற்றி இப்போது கதைப்போம்’’ என்றனர்.

 

இதைக் கேட்டுக்கொண்டிருந்த வால்டேர் திடீரெனப் பாய்ந்தார்; எல்லார் காதிலும் கிசுகிசுத்தார்.

 

‘’ஐயா வாயை மூடுங்கள்; என் வேலைக் காரர்கள் எல்லாம் முதலில் வெளியே போகட்டும்ம். அவர்கள் இந்தப் பேச்சைக் கேட்டால், உங்களை இங்கே அனுமதித்ததற்காக இன்றிரவு நான் தூங்கும் போது என் குரல்வளையை நெறித்து விடுவார்கள்! — என்று.

 

 

(பிரான்ஸில் அவ்வளவு மத நம்பிக்கை இருந்த காலம் அது!)

 

(இது ஆங்கிலத்திலும் பதிவு இடப்பட்டுள்ளது)

 

-சுபம்–

சிலப்பதிகாரம் பிராமண காவியமா? இளங்கோ பிராமணரைப் புகழ்வது ஏன்? (Post No.4616)

((தமிழ் திருடர்களின் குலம் வேருடன் அழியாமல் இருக்க அன்பான வேண்டுகோள்!! உங்கள் குலம் வாழ வேண்டுமானால், தமிழ் வாழ வேண்டுமானால், இந்து மதம் வாழ வேண்டுமானால், எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக.))

சிலப்பதிகாரம் பிராமண காவியமா? இளங்கோ பிராமணரைப் புகழ்வது ஏன்? (Post No.4616)

Research Paper Written by London Swaminathan 

 

Date: 14 JANUARY 2018

 

Time uploaded in London  11-28 am

 

 

 

Post No. 4616

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

சென்னையில் 2107 டிசம்பரில் நடந்த சுதேசி மஹாநாட்டுக்கு அனுப்பிய நீண்ட ஆங்கில ஆராய்ச்சிக் கட்டுரையின் சுருக்கம் இது.  தமிழில் சிலப்பதிகாரம் எளிதில் கிடைப்பதால் பொருத்தமான விஷயங்கள் வரும் காதைகளின் பெயர்களை மட்டும் அளிக்கிறேன். முடிவுரையில் எனது துணிபு என்ன என்பதை உரைக்கிறேன்

 

‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று பாரதியால் புகழப்பட்ட சிலப்பதிகாரம், தமிழ் மொழியில் உள்ள ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று. இளங்கோ அடிகளால் எழுதப்பட்டது. அவர் சமணர் என்று ஒரு கொள்கை உண்டு. ஆனால் சிலப்பதிகாரத்தில் இந்துமதமே மிகவும் புகழ்ப்படுகிறது. பலருக்கும் தெரியாத ஒரு அதிசய விஷயம் என்றால், இதில் பிராமணரை இளங்கோ புகழ்ந்து தள்ளுவதாகும். அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வரிகளின் எண்ணிக்கை, கிட்டத்தட்ட காப்பியத்தின் நாலில் அல்லது ஐந்தில் ஒரு பகுதியாகும்.

 

மேலும் காப்பியத்தின் கதைப் போக்கில் உள்ள இடைவெளிகளை இட்டு நிரப்புவதும் பிராமண கதா பாத்திரம் மூலமே.

காப்பியத்தின் முதல் பகுதியில் கண்ணகி-கோவலன் திருமணத்தை அக்கினி சாட்சியாக பார்ப்பன புரோகிதர்கள் நடத்திய செய்தியில் இருந்து கடைசியில் மாடல மறையோன் என்னும் பார்ப்பனர் நெடுஞ்செழியனுக்கு அறிவுரை சொல்லுவது வரை ஏராளமான பிராமணர்களைச் சந்திக்கிறோம்.

 

மாடல மறையோன் என்ற பிராமணரும், பராசரன் என்ற பிராமணரும் முக்கிய பிராமண கதாபாத்திரங்கள் ஆவர். இவர்களில் மிகச் செல்வாக்குடைவர் பிராமண கதாபாத்திரம் மாடல மறையோன். அவர் மூலம் மாதவி, மணிமேகலை, மாதரி, கோவலன்- கண்ணகி யின் பெற்றோர்கள் ஆகியோருக்கு என்ன நடந்தது என்றும் இளங்கோ கூறுகிறார்.

 

பிராமண புரோகிதர்களுடன் தீ வலம் வந்து நடந்த கல்யாணத்தை முதல் முதலில் சொன்னவர் இளங்கோ.

 

ஆலமர் செல்வன் என்ற சிறுவன் பராசரன் என்ற முதிய பிராமணருடன் போட்டி போட்டுக் கொண்டு வேதம் சொன்னவுடன் தனது தங்க நகை மூட்டையை அந்தச் சிறுவனிடம் கொடுத்த காட்சியையும் இளங்கோ வருணித்து பிராமணர்களின் தன்னலமற்ற போ க்கையும் காட்டுகிறார்.

 

மாடல மறையோனும் பராசரனும் சதுர்வேதிகள்; நான்கு வேதங்களின் கரை கண்டவர்கள். இதில் மாடல மறையோன்  4 காதைகளில் வந்து பெரும்பணி ஆற்றுகிறார். பாண்டிய  நாட்டில் 1000 பொற்கொல்லர்கள் பலி கொடுக்கப்பட்டது, சோழ நாட்டின் அக்கால அரசியல் நிலை ஆகியவற்றையும் சொல்கிறார்.

பிராமண தூதர், பிராமண நடிகர் ஆகியோரையும் நமக்கு இளங்கோ அடிகள் அறிமுகப்படுத்துகிறார்.

 

மேலும் (ஆராய்ச்சி) “மணி நா ஓசை கேட்காத பாண்டிய நாட்டில் மறை (வேத) ஒலி” கேட்டே பாண்டிய மன்னர் துயில் எழுவான் என்கிறார் இளங்கோ

இவை எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பான ஒரு செய்தியைக் கூறி பிராமணரின் செல்வாக்கைக் காட்டுகிறார் இளங்கோ.

சேரன் செங்குட்டுவன் என்பவன் சக்தி வாய்ந்த சேர மன்னன். இமயம் வரை இரு முறை சென்று வெற்றிக்கொடி நாட்டியவன். கடல் சூழ் இலங்கை கஜபாகுவையும் தென்னாட்டின் சக்தி வாய்ந்த பேரரசர்களான சாதகர்ணிகளையும் நண்பகளாகக் கொண்டவன். அப்பேற்பட்ட சக்திவாய்ந்த செங்குட்டுவனை “நீ மறக்கள வேள்வி (போர்கள்) செய்தது போதும் அறக்கள வேள்வி (யாக யக்ஞங்களை) நடத்துவாயாக” – என்று பகிரங்கமாக புத்திமதி சொல்கிறான் மாடல மறையோன் அதை உடனே செவி மடுத்து வேள்வி செய்ய உத்தரவிடும் காட்சியையும் இளங்கோ நம் முன் படைக்கிறார்.

 

அந்த பிராமணனுக்கு எடைக்கு எடை (துலாபாரம்) தங்கக் கட்டிகளை பரிசளித்த கௌரவச் செய்தியையும் இளங்கோ காட்டுகிறார்.

 

சிலப்பதிகார சம்பவங்கள் நடந்த கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் வேதக் கல்வி தழைத்தோங்கியதையும், பிராமணர்கள் காலில் மன்னர்களும் வணிகர்களும் விழுந்து வணங்கியதையும் சொல்லத் தவறவில்லை இளங்கோ. பார்ப்பனர்களை  ஏன் இப்படிப் புகழ்கிறார் இளங்கோ? கட்டுரையின் முடிவுரையில் காண்க.

தமிழ் திருடர்களின் குலம் வேருடன் அழியாமல் இருக்க அன்பான வேண்டுகோள்!! உங்கள் குலம் வாழ வேண்டுமானால், தமிழ் வாழ வேண்டுமானால், இந்து மதம் வாழ வேண்டுமானால், எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக.))

1.பார்ப்பன புரோகிதர் முன்னிலையில் கண்ணகி-கோவலன் அக்னி சாட்சியாகக் கல்யாணம்– மங்கல வாழ்த்துப் பாடல்

 

2.மாடல மறையோன் அறிமுகம்- அடைக்கலக் காதை

 

3.கோவலன் ஒரு பிராஹ்மணனைக் காப்பாற்றியதை மாடல மறையோன்  உரைத்தல்

 

4.கோவலன் ஒரு பிராஹ்மணப் பெண்மணிக்கு உதவிய சம்பவம்

 

5.பூதம் விழுங்கிய மனிதன் கதை– மறையோன் வாய் வழியாக

 

6.பராசரன் தட்சிணாமூர்த்தி சம்பவம்- கட்டுரைக் காதை

7.வேதம் நிறைந்த தமிழ் நாடு

 

8.கார்த்திகை- வார்த்திகன் (ப்ராஹ்மண தம்பதி) அற்புத நிகழ்ச்சி; பிராமணர் காலில் விழுந்து மன்னன் மன்னிப்பு கேட்டல்

 

9.பிராஹ்மணர்கள் வண்டமிழ் மறையோர்– கட்டுரைக் காதை

 

10.மீண்டும் மாடல மறையோன் மூன்று காதைகளில் தோன்றல்–

நீர்ப்படைக் காதை

நடுகற் காதை

வரந்தரு காதை

 

Kannaki Temple

11.நாட்டின் அரசியல் நிலவரம் பற்றி மாடலன் உரைத்தல்- நீர்ப்படைக் காதை

 

12.மாதரி தற்கொலைச் செய்தி

 

  1. கவுந்தி அடிகள் பட்டினி கிடந்து மரணம்

 

14.கோவலன் அம்மா மன நோய் கண்டு மரணம்

 

  1. மாதவி- மணிமேகலை நிலைமை

16.பிராஹ்மணர்களுக்கு சாப்பாடு போடமுடியவில்லையே- கண்ணகி வருத்தம்– கொலைக்கள காதை

 

  1. ஆயிரம் பொற்கொல்லர்கள் பலி

 

  1. பிராஹ்மணனுக்கு 50 கிலோ தங்கம்!

 

19.செங்குட்டுவனுக்கு பார்ப்பனன் கட்டளை- நடுகற் காதை

 

  1. மாடலன் செல்லுதல்– பிராமண அற்புதம்- சாமி ஆடுதல்; பிராஹ்மணன் புத்திமதி

 

21.பிராஹ்மண தூதர் (புறன்சேரி இறுத்த காதை)

22.பிராஹ்மண நடிகர் – சாக்கையர் கூத்து

 

 

Kannaki Anklet

23.கீரந்தை என்ற பார்ப்பானைக் காக்க பாண்டியன் கையை வெட்டிக்கொண்டு பொற்கை பாண்டியன் ஆன கதை

 

24.பாலைக் கௌதமனார் என்ற சங்க காலப் புலவர், சேர மன்னன் செய்த யாகத்தின் பின்னர் பார்ப்பனியுடன் உயிருடன் சுவர்க்கம் புகும் கதை– நடுகற் காதை

 

25.மதுரை நகரம் முழுதும் பார்ப்பனர்களின் வேள்விப்புகை– நாடு காண் காதை

 

ஐயர், அந்தணன், பார்ப்பனன், மறையோன்

முழுக்க, முழுக்க, முழுக்க பிராஹ்மணர் புகழ்!!!

 

சிலப்பதிகாரத்தில் முக்கியச் செய்திகள் எல்லாம் ஐயர் வாயிலாக வருகிறது.

ஐயர் காலில் மன்னன் விழுகிறான்.

 

பேரரசன் செங்குட்டுவனுக்கு பார்ப்பனன் கட்ட ளை இடுகிறான்; அவனும் உடனே அதைக் கேட்கிறான்.

 

ஏன்? ஏன்? ஏன்?

 

முடிவுரை:

இளங்கோவின் பெயரில் யாரோ ஒரு பார்ப்பான் இந்த நூலை எழுதிவிட்டானோ? அல்லது இவை எல்லாம் இடைச் செருகலோ? அல்லது மிகைப் படுத்தப்பட்ட கூற்றோ? அல்லது ஆரியர்களின் சதியோ? மந்திரம் போட்டு மன்னர்களை பார்ப்பனர்கள், ஏமாற்றி விட்டனரோ?

 

இல்லவே இல்லை.

 

இரண்டாம் நூற்றாண்டில் தமிழகம் எப்படி இருந்ததோ அப்படியே இளங்கோ நமக்குப் படம் பிடித்து காட்டி விட்டார். பராசரன் போன்ற பண ஆசையற்ற வேத விற்பன்னன், தன்னலமற்ற தூய ஒழுக்கம் உடைய மாடல மறையோன் ஆகியோர் வாழ்ந்த நேரம் அது. மணி ஓசைக்குப் பதிலாக மறை ஓசை — வேத ஒலியும் – வேள்விப்புகையும்– எழுந்த காலம் அது. ஆகவே இளங்கோ சொன்ன யாவையும் உண்மையே; மிகைப்படுத்தப்பட்ட கூற்று அல்ல.

 

பிராமணர் புகழ் பாடும் சிலப்பதிகாரத்தை ப்ராஹ்மண காவியம் என்றால் மிகை ஆகாது.

 

வாழ்க இளங்கோ! வளர்க தமிழ்!!

Kannaki Cooking, World Tamil Conference Souvenir

References:

The Cilappatikaram,Prof. V R Ramachandra Dikshitar,The South India Saiavasiddhanta Works Publishing Society, Tinnelvelly Limited, Madras,600 001, 1978

Akananuru, Varthamanan Pathippakam, A Manikkanar,Chennai- 600 017,1999

Srimad Bhagavad Gita, Anna, Sri Ramakrishna Mutt, Chennai-600 004,1965

 

 

–Subahm–

IS SILAPPADIKARAM A BRAHMANA KAVYA? (Post No.4612)- Part 2

KANNAKI COOKING, WORLD TAMIL CONFERENCE SOUVENIR PICTURE

 

Research Paper Written by London Swaminathan 

 

Date: 13 JANUARY 2018

 

Time uploaded in London  6-16 AM

 

 

 

Post No. 4612

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

WARNING: DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND  BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

PART 2 (PART 1 WAS PUBLISHED YESTERDAY)

6.Parasaran- Dakshinamurthy Anecdote in the Katturai Katai is equally interesting:

 

“An able Brahmana, Parasara, who belonged to the good and fertile Kingdom of the Lord of the highly reputed Pukar wielding a righteous sceptre and a triumphant sword – one of whose kings weighed (his flesh) to save a dove (Story of Sibi) and another awarded justice to a cow (story of Manu Niti Cholan) who had heard the peerless munificence of the Cera of the curved lance, by offering the heavens to a Tamil Brahmana poet, said to himself, “I shall see the Cera of great valour and long lance”. He then passed through jungles and country places and towns leaving behind him the tall Malaya Hills. There by the force of his dialectical skill which he had acquired in the traditional manner, from the twice born Brahmana—who with the thought of achieving oneness with the Infinite, kindled the three fires as ordained in the four Vedas and performed the five great sacrifices (Pancha Maha Yajna) and the six great duties- he defeated his rivals and earned the title of Parpana Vakai.

(A typical Brahmin’s profile!)

As he was returning home with great and valuable gifts, he reached the village of Tankal (Tirutankal near Sivakasi) of the righteous Pandyan and of Dharmic Brahmanas. In this village, on a platform beneath the Bodi tree, luxuriant with green leaves, the tired man stayed awhile with his staff, water bowl, white umbrella, fire stick, a small bundle of articles and slippers (the impedimenta of an orthodox Brahmana; white umbrellas can be used only by the Kings and Brahmins who did Soma yaga) and said,

“Long live the victor whose protecting white umbrella assures his certain success. Long live the protector who uprooted the Katampu from the sea (Marine attack on sea pirates)! Long live the king who engraved his bow on the Himalayas! Long live the Poraiyan, possessor of the cool and beautiful Porunai! Long live King Mantaran Ceral! (contemporary king of Ceran Senkuttuvan)

 

Surrounded by a group of playful youths, some with curly hair and some with tufts and some with lisping mouths and coral lips, toddling some distance from their homes, he addressed them,

“Young Brahmana boys, if you can recite the Veda after me you may go away taking this little bundle of jewels.” Then the son of famous Brahmana Vartikan, by name Aalamar Selvan (Dakshinamurthy) whose rose lisps still retained the fragrance of his mother’s milk, in the presence of his playmates, with prattling tongue and great inward pleasure, recited the Veda, faultlessly observing the correct rhythm. The elderly man was exceedingly pleased with young Dakshinan and presented him with a sacred thread of pearls and bright jewels, as well as with bangles and earrings before departed for his native place”.

7.VEDIC  TAMIL NADU

Here Ilango was so poetic that we are captivated by every word he said here. This gave the beautiful description of Vedic education in the second century Tamil Nadu. Every word of Ilango praised the Brahmins and Brahmin boys. A little boy could recite Vedas with a learned Pundit. He described the appearance of Vedic Brahmins in minute details

 

The translator adds a beautiful note here:

The Brahman’s love for the Veda and his magnanimity in giving away the valuable jewels to a child reciting Vedas according to established practice show how unselfish were the learned Brahmins of those golden days.

 

Through Matalan  and Parasaran and a little boy we know that Vedas were recited in nook and corner of Tamil Nadu.

 

8.A MIRACLE HAPPENED!

“When Vartikan’s child departed with the little bundle of jewels, Vartikan was accused of misappropriating treasure trove which belongs to the king. So Vartikan was imprisoned. His wife Kartikai grew frantic. She wept in grief. She threw herself on to the ground rolling and fulminating. Seeing this the Goddess Durga of untarnished glory refused to open the door of her temple for the conduct of daily worship. When the king of the mighty spear heard that the massive door remained shut and would not open, he was confounded, and inquired, “Has any injustice been done? Come and tell me if you have heard of any failure in the discharge of our duties to the Goddess of Victory”.

 

“Then his young messengers made obeisance to the protecting king and informed him the case of Vartikan. “This is not fair, burst forth the king in anger and addressed Vartikan, It is your duty to forgive me. My righteous rule still has life, though owing to the ignorance of my men, it has deviated from the ordained path”.

 

“The king granted him Tankal with its paddy fields watered by tanks and Vayalur of immeasurable yield and prostrated himself on the ground before Vartikan, the husband of Kartikai. Then the door of the Goddess who rode upon the stag, opened so loudly as to be heard throughout the long and broad streets of mountain like mansions of the ancient city.

Then he issued a proclamation to release all the prisoners and allowed everyone to enjoy the treasures they find!”

 

Such is the power of Brahmins. Even mighty kings fell at their feet!

 

9.In this chapter (Katturai Katai) , Brahmins are praised as Vandamil Maraiyor i.e people who speak chaste Tamil. This answered the question whether Brahmins are sons of the soil!

 

10.Matalan Again!

Matala Maraiyon, the influential Brahmin, appears again in the last three sections:

Nirppataik Katai

Natukar Katai

Varantaru katai

 

Matalan giving Important News!

Ilango uses Matalan to fill the gaps in the epic. Mighty Cera King Senkuttuvan brought the stone from the holy Himalayas and bathed it in the Holy Ganges and carved the stone into the Goddess Pattini.

Following is in the Nirppataik Katai

“While Senkuttuvan was sitting on his throne ( in North India), the Brahmana Matalan appeared before him and said, Long live our king! The seashore song of the lady Matavi made the crowns of Kanaka and Vijaya bear a weight (the implied meaning is that Kovalan left Matavi’s house and other events followed resulting in Kannaki becoming a goddess; Kanaka and Vijaya who challenged Senkuttuvan made to carry the stone on their heads).

 

The Brahmana Matalan then continued: “The maid Matavi, whilst sporting on the cool beach, had a lover’s quarrel with Kovalan. Then governed by fate she sang the seashore song appropriate to her dance. This not resulted in their reunion but in their separation, and necessitated his entry with his virtuous wife into the ancient towered city of Madura, whose reigning king with his wreath of leaves attained blissful heaven as a result of the murder of Kovalan, whose wife, O Lord of the Kutavar, entered your country. And now she is being borne upon the crowned heads of the northern kings”.

 

11.Matari commits suicide!

“Be good enough to listen also to the reason for my coming here, O king of kings holding the illustrious spear! After going round the Potiyil Hills sacred to the great sage (Agastya) and bathing in the famous ghat of Kumari, I was returning, when as if impelled by fate, I went into Madura belonging to far famed Tennavan of the sharp sword. There when Matari heard that the beautiful Kannaki had defeated the Pandyan king of the mighty army with her anklet, she proclaimed in the Taateru manrdram (common meeting point of the Yadava community), ‘O People of the cowherd community! Kovalan has done no wrong; it is the king who has erred; I have lost her to whom I gave refuge. Have the king’s umbrella and the sceptre fallen from the righteous path? With these words she threw herself into the burning flames in the dead of night!

12.Kavunti died of Starvation!

Kavunti, distinguished for her holy penance, waxed wroth; but when she heard of the death of the great king renowned for his righteous sceptre, her ire was appeased and she burst out: Was this the fate of those who joined my company? She took a vow to die of starvation and thus gave up her life.

 

13.Kovalan’s mother died of Depression!

I heard in full detail all this and also of the devastation that overtook the great city of Madura ruled by the Pandyan of the golden car. Overcome by great I went back to my native place, the ancient capital of the Colas, and informed the chief men there of this. Kovalan’s father heard what happened to his son and daughter in law and also to the righteous monarch of Madura and became deeply afflicted. He distributed all his wealth in charity, and entered Seven Indra Viharas (The Buddhist Temple) and began to practise self -denial like the three hundred monks who roam the sky, having renounced the world to obtain release from the cycle of births. The wife of him who thus renounced, unable to endure the sorrowful news of the death of her son under such tragic circumstances, died of pity.

 

Kannaki’s father also gave away his wealth in religious gifts and adopted Dharma in the presence of Ajivakas like sages engaged in penance of a high order. The noble wife of him who made these gifts gave up her good life within a few days.

 

TO BE CONTINUED……………………………………….

 

புஸ்தக ஆசிரியர் படுகொலை (Post No.4578)

Written by London Swaminathan 

 

Date: 3 JANUARY 2018

 

Time uploaded in London- 8-23 am

 

 

Post No. 4578

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

மொகலய சாம்ராஜ்யத்தில் பஞ்சம் இல்லாத பொருள்– படுகொலைகள். அப்பன் மகனைக் கொல்வதும், மகன் தந்தையைக் கொல்வதும், சஹோ தரர்கள் ஒருவருக்கு ஒருவரைத் தீர்த்துக் கட்டுவதும் சர்வ சாதாரணம்– அன்றாட நிகழ்ச்சிகள். அக்பரின் மகன் சலீம் — அதாவது மொகலாயப் பேரரசன் ஜஹாங்கீர்- நடத்திய ஒரு படுகொலை, வரலாற்றில் ஆதாரத்தோடு பதிவாகிவிட்டது.

அபுல் பாசல் என்பவர் புகழ்பெற்ற எழுத்தாளர். அவர் பாரசீக மொழியில் அக்பர்நாமா என்ற ஒரு புத்தகத்தில் அக்பரின் முழு வரலாற்றையும் தந்துள்ளார்; அதன் ஒரு பகுதி அயினி அக்பரி ஆகும். அக்பரின் நெருங்கிய நண்பர்; அவரது சபையில் இருந்த நவ ரத்னங்களில் ஒருவர்.

 

அக்பர் தனது மகன் சலீமை அலஹாபாத் பகுதிக்கு அதிகாரியாக- ஆட்சிப் பிரதிநிதியாக நியமித்தார். அங்கே பணம் வெள்ளம் போல பெருகியது. வரி வசூல் மிகப் பிரமாதமாக இருந்தது. பணம் இருக்கும் இடத்தில் குணம் இருக்குமா? இருக்காதே!

 

சலீம் தன்னை சுதந்திர ஆட்சியாளராகப் பிரகடனம் செய்து கொண்டார்.  அது மட்டும் அல்ல. பணத் திமிரில் தங்கக் காசுகளையும், தாமிரக் காசுகளையும் அடித்து — அச்சடித்து– அவைகளை அக்பரின் பார்வைக்கு அனுப்பினார்.

 

அக்பர் அதைப் பார்த்தார்; ஆஹாசத்துக்கும் பூமிக்கும் குதித்தார்; கோபக் கனல் பொங்கியது; கூப்பிட்டார் ஆப்த நண்பர் அபுல் பாஸலை; என் மகன் சலீமுக்கு நல்ல புத்திமதி சொல்லி வாருங்கள்; இப்படி ஊதாரியாகவும் தான் தோன்றியாகவும் இருக்கிறானே! என்றார்.

 

அக்பரின் மகன் சலீம், பிற்காலத்தில் ஜஹாங்கீர் என்ற பெயருடன் ஆட்சியைப் பிடித்தவர். அவருக்கு அபுல் பாஸல் புறப்படும் திட்டமும் அவரது நோக்கமும் உளவாளிகள் மூலம் தெரிய வந்தது. நல்ல சதித் திட்டம் போட்டார்.

 

அந்தக் காலத்தில் மத்தியப் பிரதேச காடுமலைகள் அடங்கிய ஓர்ச்சா (Orcha) பிரதேசத்தை வீர சிம்ஹ தேவன் (பீர்சிங்தேவ்) ஆண்டு வந்தான்; மாபெரும் வீரன் அவனை சலீம் அழைத்தார். அன் பரே! அபுல் பாஸலைத் தீர்த்துக்கட்டும் என்றார்.

பீர் சிங் தேவ் 500 வீரர்களுடன் காட்டில் மறைந்திருந்தார். அபுல் பாஸலுக்கு ஏதோ ஆபத்து வரப்போகிறது என்பது பராபரியாகத் தெரியும்; ஆயினும் அக்பரின் மகன் குட்டிப் பயல் — சலீம் கொலை செய்யும் அளவுக்கு கிராதகன் — மாபதகன் — என்பது அவரது அறிவுக்கு எட்ட வில்லை. அக்பர் சும்மாவா ஆளை அனுப்புவார்? அவரும் படை வீரர்களின் பாதுகாவலோடுதான் பாசலை அனுப்பினார். ஆயினும் வீர சிங்க தேவனின் 500 வீரர்களுக்கு அவர்கள் ஈடு கொடுக்க முடியவில்லை. அபுல் பாஸலை ‘பைசல்’ செய்தனர்; ஆள் காலி; தலை பூமியில் உருண்டது; அதை ஜாக்கிரதையாக எடுத்து அந்தப் பொக்கிஷத்தை ஜஹாங்கீருக்கு அனுப்பியும் வைத்தார்.

 

 

ஜாஹாங்கீருக்கு ஏக குஷி! பிற்காலத்தில் ஜஹாங்கீர் இது பற்றி தமது நினைவலைகளில் — ஞாபகார்த்தக் குறிப்புகளில் எழுதினார்:-

 

அபுல் பாஸலை ஒரு  சண்டையில் வீர சிங்க தேவன் கொன்றார். அவருடைய தலையையும் எனக்கு அனுப்பி வைத்தார்.

 

அபுல் பாஸல் தனக்கு எதிராகச் சதி செய்ததாகவும், தனக்கும் தன் தந்தை அக்பருக்கும் இடையே சமரஸம் நிலவாதபடித் தடுத்ததாகவும் ஜஹாங்கீர் குற்றமும் சாட்டினார். எப்படி இருக்கிறது கதை!

 

சலீம், ஜஹாங்கீர் என்ற பெயரில் பட்டம் ஏற்றவுடன் வீர் சிங்க தேவனுக்கு பதவி உயர்வு கொடுத் து அவர் ஒர்ச்சா பிரதேசத்தின் தனிப்பெரும் தலைவர் என்ற அங்கீகாரத்தையும் அளித்தார்.

 

வீர சிங்க தேவன், பண்டேல் கண்ட் பிரதேசத்தில் தெய்வ நிலை எட்டிய மா புருடன்; அவரைத் தெய்வமாகவே அந்தப் பிரதேச மக்கள் வழிபாடுகின்றனர்.

 

இதற்கு இன்னும் ஒரு காரணமும் உண்டு. அவர் வீரர் மட்டுமல்ல; கோவில் குளங்களையும் அரண்  மனைளையும் கோட்டை கொத்தளங்களையும் கட்டிய ஒரு அரசனும் ஆவார். ஜோதிடர்களைக் கலந்தாலோசித்து ஒரு முஹூர்த்தத்தில் 52 கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அவர் கட்டிய கோவில்கள் கோட்டைகளை இன்றும் காணலாம். டிக்கம் கார் என்னும் இடத்தில் அபுல் பாஸலைக் கொலை செய்த கத்தி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது அவரது சமாதியும் பேட்வா (Betwa)வில் உள்ளது

 

வீர சிம்ஹ தேவின் புகழும் அவரது மகன் ஹர்தாள் (ஹரி தயாள் ) லாலாவின் புகழும் கொடிகட்டிப் பறக்கிறது. மகன் ஹர்தாள் லாலாவுக்கு (Datia) டாடியா என்னும் இடத்தில் கோவிலும் உள்ளது. ஏன் தெரியுமா? ஹரி தயாளுவை அவரது சஹோதரர் குற்றம் சாட்டிக் கொன்று விட்டார். என் மனைவியுடன் நீ கள்ளக் காதல் கொண்டாய், ஆகவே ஊமத்தை செடியின் விஷ விதைகளைச் சாப்பீட்டுச் செத்துப் போ! என்று சொல்ல அவரும் அப்படியே செய்தார்; செத்தார்; பூத உடல்போயிற்று ; புகழ் உடம்பு வந்து சேர்ந்தது. கல்யாணம், கார்த்திகை என்றால் அவருக்கு ஆராதனை; பூஜை. அது மட்டும் அல்ல அவர் காலரா நோயைத் தீர்த்துவைக்கும் தெய்வம் என்ற புதுப் பட்டமும் கிடைத்தது.

இதெல்லாம் நடந்து 400 ஆண்டுகள் ஆகிவிட்டன.  அம்மக்கள் பிற்காலத்தில் போரிட்டபோதெல்லாம் ஹர்தயாள், வீர சிந்தேவ் ஆகியோர் ஆவி ரூபத்தில் வந்து உதவியதாகவும் கதைகள் உண்டு.

 

–சுபம்- சுபம்–