கலியுகத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்!! (Post No 2936)

yugas

Written by London swaminathan

 

Date: 2 July 2016

Post No. 2936

Time uploaded in London :–9-56 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

கடைகளுக்குப் போனால் “இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்” என்று பல பொருள்கள் மீது எழுதியிருப்பதைக் காண்கிறோம்.

 

அதே போல “ஐந்து பொருள் வாங்கினால் இவ்வளவு தள்ளுபடி, பத்து வாங்கினால் இவ்வளவு தள்ளுபடி” என்றெல்லாம் விளம்பரங்களைப் படிக்கிறோம்.

 

இதுபோலக் கடவுளும் கூட பக்தர்களுக்கு தள்ளுபடி சலுகைகளை அறிவிக்கிறார். இது விஷ்ணு புராணத்திலுள்ள விஷயம். புராணங்களில் மிகவும் பழமையானதும், புகழ்பெற்றதும் ஆகும். ஆகையால் இந்த செய்திக்கு மதிப்பு அதிகம்.

 

வியாசரிடம் போய்  முனிவர்கள் சந்தேகம் கேட்ட போது அவர் கங்கையில் குளித்துவிட்டு இந்த தகவலைத் தந்தார்.

 

கிருதயுகத்தில் தவம், தானம், பிரம்மசர்யம் முதலிய சிறந்த குணங்களுடன் இருப்பவர்க்கு நீண்டகாலம் தவம் செய்து கிடைக்கக்கூடிய பலன் கலியுகத்தில் சுலபமாகக் கிடைத்துவிடும்.

 

கலியுகத்தில் சங்கமே சக்தி என்பர். ஆதாவது கூட்டாகச் செய்யும் காரியத்துக்குப் பலன் அதிகம். அது மட்டுமல்ல யாக யக்ஞாதிகள் செய்யாமல் வெறும் “சிவ சிவ” அல்லது “ராம ராம” என்று நாம ஜபம் செய்தாலேயே புண்ணியம் சம்பாதித்துவிடலாம்.

 

 

Yugas

 

யத்க்ருதே தசபி: வர்ஷை: த்ரேதாயாம் ஹாயனேன யத்

த்வாபரே யது ச  சமாசேன அஹோராத்ரேண தத்கலௌ

 

தபஸோ ப்ரஹ்மசர்யஸ்ய ஜபதிஸ்ச பலம் த்விஜா:

ப்ராப்னோதி புருஷஸ்தேன கலிகலிஸ்ஸாத்விதி பாஷிணம்

விஷ்ணு புராணம் அங்கம் 6, அத்தியாயம் 2

 

கிருத யுக பத்து வருஷ தவம் = திரேதா யுகத்தில் ஒரு வருஷம் = துவாபர யுகத்தில் ஒரு மாஸம் = கலியில் ஒரே நாளுக்கு ஸமமாகும்.

 

தவம், ஜப , பிரம்மசர்ய பலன்களை இந்த ரீதியில் அடைகின்றனர்.

அதாவது ஒர் ரிஷியோ முனிவரோ பத்து வருஷம் தவம் செய்து கிடைக்கும் பலனை, திரேதாயுகத்தில் பிறந்தவர் ஒரு வருஷம் செய்தாலேயே அடைந்து விடுவார்.

 

அதே முனிவர், த்வாபர யுகத்தில் பிறந்திருந்தால் ஒரு மாதம் யாக, யக்ஞங்களைச் செய்தால் போதும்

 

அவரே கலியுகத்தில் பிறந்தால் ஒரே நாள் தவம் செய்தால் போதும்.

எவ்வளவு சலுகை பாருங்கள்!!

 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதிய புராணத்தில் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது.

 

உலகிலேயே மிகவும் அறிவியல் பூர்வமாக அமைந்தது இந்துமதம். முரட்டுத் தனமான, பிடிவாதமான கொள்கைகள் இதில் கிடையா. எல்லாம் செயல் முறைக்கு உகந்த மாதிரி, கால, தேச, வர்த்த மானங்களுக்கு அணுசரனையாக சொல்லப்பட்டிருக்கும்.

 

ஜெட் விமானத்தில் பறந்து, அலுவலக வேலைகளைச் செய்பவர்கள் கிருத யுகம் போல 12 ஆண்டு யாகம், 100 ஆண்டு யாகம் முதலியவற்றை செய்ய வேண்டியதில்லை. செய்யவும் முடியாது என்பதும் நம் முன்னோர்களுக்குத் தெரியும்.

 

ஆனால் கடையில் எவ்வளவுதான் சலுகைகளை அறிவித்தாலும், எத்தனை பொருட்களை வாங்குவது என்பது நம் கையில்தான் உள்ளது. அதாவது அந்த அளவுக்கு பர்ஸில் காசு வேண்டும் அல்லது கிரெடிட் கார்டில் உத்தரவாதம் வேண்டும். அது போல, இவ்வளவு சலுகைகளை கடவுள் அறிவித்தாலும் நல்ல குணமும் நல்ல எண்ணமும் தூய்மையும் வேண்டும். அப்போதுதான் கடவுள் அறிவித்த சலுகை, நமக்குக் கிடைக்கும்.

 

கலியுகத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்!!

 

–சுபம்–

 

 

இதனை இதனால் இவன் முடிக்கும்….. (Post No.2925)

கட்டுரை எண்–2925

எழுதியவர் – லண்டன் சுவாமிநாதன்

தேதி – 28 ஜுன் 2016

அருமையான திருக்குறள்!

யாருக்கு எந்த வேலையைக் கொடுத்தால், அவன் அதை நன்கு செய்வான் என்பதை அறிந்திருப்பவனே தலைவன்; கடவுள் ஒவ்வொருவருக்கும் ஒரு திறமையைக் கொடுத்திருக்கிறான். யாருமே பயனற்றவர் இல்லை. சீதையைக் கட்டாயம் கண்டுபிடிப்பவன் அனுமன் என்பதை ராமன் அறிந்ததால் அன்றோ அவனிடம் தனது மோதிரத்தைக் கொடுத்தனுப்பினான்.

 

இதனை இதனால்இவன் முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல் –குறள் 517

 

பொருள்:- இந்தச் செயலை அவன் இந்தவிதமாக முடிக்கக்கூடியவன் என்பதை ஆராய்ந்து முடிவு செய்து அதனை அவனிடம் விட்டுவிட வேண்டும்.

 

எல்லோருக்கும் ஒரு வித அரிய ஆற்றல் இருக்கிறது என்பதை ஒரு வடமொழி ஸ்லோகம் அழகாகக்கூறும்:–

 

அமந்த்ரம் அக்ஷரம் நாஸ்தி நாஸ்தி மூலம் ஔஷதம்

அயோக்யப் புருஷோ நாஸ்தி யோஜகஸ் தத்ர துர்லப:

 

எல்லா எழுத்துக்களும் மந்திரங்களில் பயன்படும்; மந்திரத்துக்கு உதவாத எழுத்து என்று எதுவுமே இல்லை.

 

எல்லா செடிகளின் வேரும் ஏதோ ஒரு மருத்துவ குணம் உடையது; பயன்படாத தாவரம் எதுவும் இல்லை.

 

தகுதியற்ற மனிதர், உதவாக்கறை என்று உலகில் யாருமே இல்லை; ஒவ்வொருவரும் ஒருதுறையில் வல்லவன்.

 

ஆனால் அரிதான விஷயம், அவர்களைக் கண்டுபிடித்து, அவரவர் திறமைக்கேற்ற பணியைக் கொடுப்பவன் இருக்கிறானே– அவன் தான் அரிதானவன்.

 

வள்ளுவன் குறளையும் இதையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

இதையே இன்னும் ஒரு தமிழ்ப் புலவர் அழகாகச் சொன்னார்:–

வான்குருவிக்கூடரக்குவாலுலண்டு கோற்றருதல்

தேன்புரிந்தியார்க்குஞ்செயலகா – தாம்புரீஇ

வல்லவர் வாய்ப்பன வென்னாரொரோவொருவர்க்

கொல்காதோ ரொன்று படும்—சிறுபஞ்சமூலம்

 

பொருள்:-

வான்குருவிக் கூடு – தூக்கணங் குருவிக் கூடும்

அரக்கும் – அரக்கும்

வால் உலண்டு தருதல் – தூய உலண்டு என்னும் புழுவால் நூற்கப்பட்ட (பட்டு) நூலும்,

கோல் தருதல் – கோல் என்னும் புழுவால் கட்டப்படும் கூடும்

தேன் – தேனீக்களால் கட்டப்படும் கூடும்

(ஆகிய இந்த ஐந்தும்)

புரிந்து யார்க்கும் செயல் ஆகா- எல்லோரும் விரும்பினாலும் செய்ய முடியாது.

வல்லவர் தம் புரீ இ என்னார் – (ஆதலால்) தொழில் வல்லமை படைத்தோரும் இதைச் செய்யத் துணியார்.

ஒரோ ஒருவர்க்கு ஓரொன்று ஒல்காது படும் – ஒவ்வொருவருக்கும் ஒரு தொழிலை நன்றாகச் செய்யமுடியும்.

குருவி, அரக்குப்பூச்சி, பட்டுப்பூச்சி, கோற்புழு, தேனீ ஆகிய ஐந்து இயற்கைப் பொருட்களை வைத்து அழகான கருத்தைச் சொல்லிவிட்டார்.

 

அன்பர்களே! உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை உள்ளது. அதை முதலில் கண்டுபிடியுங்கள்; உங்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை என்றால், நண்பர்களின், பெரியோரின் உதவியை நாடுங்கள். அனுமனுக்கு தன் வலிமை தெரியாது. அதை ஒருவர் சுட்டிக்காட்டினால் மகத்தான காரியங்களைச் செய்வான் என்று ராமாயணம் சொல்கிறது. உங்கள் வலிமை உங்களுக்குத் தெரியவில்லையானால் அதற்கென்று உதவும் அமைப்புகள் இருக்கின்றன. அவற்றின் உதவியை நாடுங்கள்.

 

இதை ஒரு ஆங்கிலப் பழமொழி அழகாககச் சொல்லும்:-

 

Men are four:
He who knows not and knows not he knows not, he is a fool—shun him;
He who knows not and knows he knows not, he is simple—teach him;
He who knows and knows not he knows, he is asleep—wake him;
He who knows and knows he knows, he is wise—follow him!

–SUBAM–

 

 

இமயமலையில் அதிசய ஏரி: கம்பனும் பாடிய புகழ்மிகு ஏரி (Post No.2911)

12-gurla-mandhata-and-lake-manasarovar-from-seralung-gompa

Research Article written by London swaminathan

 

Date: 21 June 2016

 

Post No. 2911

 

Time uploaded in London :– 13-53

 

( Pictures are taken from various sources; thanks)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

இமயமலையிலுள்ள அதிசய ஏரி பற்றி கம்பனும் பாடியிருக்கிறான்! இன்று You Tube யூ ட்யூப், Whats up வாட்ஸ் அப், Facebook Fபேஸ் புக், Google கூகுள் மூலம் அரை நொடியில் பார்க்கக்கூடிய இமய மலை அதிசய ஏரி பற்றி தமிழர்களுக்கு 2000 ஆண்டுகளாகத் தெரியும்! ஒரு போக்குவரத்து வசதியும் இல்லாத, காட்டு மிருகங்கள் நிறைந்த பாதை வழியாக அந்தக் காலத்திலேயே ஆதிசங்கரரும் சாது சந்யாசிகளும் சென்ற புனித மலை இமய மலை. அதிலுள்ள கயிலை மலைக்கு நம்மவர் 2000 ஆண்டுகளாகச் செல்வது தேவாரம், திருவாசகம் மூலம் தெள்ளிதின் விளங்கும்.

 

இப்பொழுது கஞ்ஜன் ஜங்கா என்று அழைக்கப்படும் இமயமலைச் சிகரம் புறநானூற்றின் இரண்டாவது பாடலிலேயே முரஞ்சியூர் முடிநாகராயரால் பாடப்பட்டிருக்கிறது. காஞ்சன ஸ்ருங்கம் என்ற அருமையான சம்ஸ்கிருதச் சொல்லை இப்படிக் கஞ்சன் ஜங்கா ஆக்கிவிட்டனர். ஆனால் புறநானூற்றில் அழகாக பொற்கோடு என்று மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. இமயமலை பற்றி முடிநாகராயர் பாடியது அப்படியே காளிதாசனின் குமார சம்பவத்தில் இருக்கிறது. இதுதவிர பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டிய மன்னனை காரிகிழார் பாடிய ஆறாவது பாடலிலும் இமயமலை வருணனை வருகிறது. இவையெல்லாவற்றையும் காளிதாசன், சங்க காலத்துக்கும் முந்தைய புலவன் என்ற எனது  ஆராய்ச்சிக் கட்டுரையில் விளக்கி விட்டேன். அரைத்த மாவையே அரைக்காமல் கம்பன் சொன்னதைக் காண்பிக்கிறேன்.

கயிலை மலைபற்றியும், சிவபெருமான் பற்றியும் கம்ப ராமாயணத்தில் நிறைய குறிப்புகள் உள்ளன. ஆனால் அவன் உலக இயற்கை அதிசயங்களில் ஒன்றான மானச சரோவர் குறித்தும் பாடியது வியப்பை ஏற்படுத்தும்.

 

மானசமடுவில் தோன்றி வருதலால் சரயு என்றே

மேல்முறை அமரர் போற்றும் விழுநதி அதனினோடும்

ஆன கோமதிவந்து எய்தும் அரவம் அது என்ன அப்பால்

போனபின் பவங்கள் தீர்க்கும் புனித மா நதியை உற்றார்

-பால காண்டம், கம்ப ராமாயணம்

 

ராம லெட்சுமணர் ஆகிய இரண்டு டீன் ஏஜ் பாய்ஸ்களை “உலக நண்பன்” (விஸ்வாமித்ரன்) என்ற முனிவன் அழைத்து செல்கிறான். பெரிய இரைச்சல் கேட்டவுடன் இருவரும் அது என்ன சப்தம் என்று கேட்கின்றனர். விஸ்வாமித்ரர் (உலக நண்பன்) தனது பூகோள அறிவைக் காட்டுகிறான். ஏதோ வெள்ளைக்காரன்தான் இந்த நாட்டையே ஒன்றுபடுத்தினான், அவன் வந்தபிறகுதான் நாம் ‘டிராவல் செய்யவே துவங்கினோம் என்று பல அரைவேக்காடுகள் பிதற்றியதுக்கெல்லாம் கம்பன் பதில் சொல்கிறான்:–

பாடலின் பொருள்:–

மானஸம் என்னும் பொய்கையில் (மானஸ ஸரஸ்) உற்பத்தியாகிப் பாய்வதால் சரயூ நதி என்ற பெயரைப் பெற்று, மேன்மைமிகு வாழ்க்கை படைத்த தேவர்களால் போற்றப்பட்டது. அச்சிறந்த நதியோடு கோமதி நதி வந்து கலப்பதால் எழும் ஒலி இது – என்று உலகநண்பன்/விஸ்வாமித்ரன் செப்பினான். மூவரும் தொடர்ந்து சென்று, குளித்தவர்களின் பாவங்களையெல்லாம் போக்கும் நதியை (கங்கை) அடைந்தனர்.

 

அந்தக் காலத்தில் எவ்வளவு ஜியாக்ரபி/ புவியியல் அறிவு இருந்திருக்கிறது! வால்மீகி செப்பியதை கம்பனும் மொழிந்ததிலிருந்து அவர்களுடைய புவியியலறிவு புலப்படும்.

manasarowar-see

ஏரியின் அதிசயங்கள் பற்றிச் சொல்வதற்கு முன் இன்னும் இரண்டு பாடல்களைக் காண்போம்:-

அருவலிய திறலினர் ஆய் அறம் கெடுக்கும் விறல் அரக்கர்

வெருவரு திண் திறலார்கள் வில் ஏந்திவரும் மேருப்

பருவரையும் நெடுவெள்ளிப் பருப்பதமும் போல்வார்கள்

இருவரையும் இவ் இருவர்க்கு இளையாளும் ஈன்று எடுத்தாள்.

 

இலக்குவன் (லெட்சுமணன்), சத்துருக்கனன் ஆகிய இருவரையும் சுமித்திரை பெற்றெடுத்த செய்தியைச் சொல்லும் பாடல் இது. ஒருவரை பொன் மயமான மேரு மலைக்கும், மற்றொருவரை வெள்ளி நிறத்துடைய கயிலை மலைக்கும் ஒப்ப்டுகிறான் கம்பன்.

 

இன்னொரு பாடலில் கங்கை, கயிலை மலை பற்றிப் பாடுகிறான்:–

ஆறு எலாம் கங்கையே ஆய ஆழிதாம்

கூறு பாற்கடலையே ஒத்த குன்று எலாம்

ஈறு இலான் கயிலையே இயைந்த என் இனி

வேறு நாம் புகல்வது நிலவின் வீக்கமே

பொருள்:-

நிலவொளி பரவியதால், ஆறுகள் அனைத்தும் வெள்ளை நிறமுள்ள கங்கை ஆறுபோல் தோன்றின; கடல்கள் யாவும் பாற்கடலை ஒத்திருந்தன; மலைகள் எல்லாம் முடிவு என்று ஒன்றில்லாத சிவபெருமான் வீற்றிருக்கும் கயிலை மலையைப் போலிருந்தன. இவற்றுக்கு மேலே சந்திரனின் மிகுதியைப் பற்றி நான் சொல்ல  என்ன இருக்கிறது?

pic-yatra-map

 

Lasha- Kailash 1400 kilometres by road

 

ஏரி பற்றிய அதிசயச் செய்திகள்:-

இந்த அதிசய ஏரியில் நிர்மலமான, மேகமற்ற வானத்திலிருந்து பனி பெய்வதால் இந்தியில் ஒரு பொன்மொழி உண்டு:-

மானஸரோவர் மைன் பரசே (முதல் ‘ப’)

பின் பாதல் ஹிம் பரசே (மூன்றாவது ‘ப’)

 

மேகமே இல்லாமல் பனி மழை பெய்யும் மானசரோவரை யார் அணுக முடியும்? என்பது இதன் பொருள்.

இரவு நேரத்தில் ஏரியில் நட்சத்திரங்கள் விழுவதூ போலத் தோன்றும். வானியல் அறிஞர்கள் இவைகளை விண்கற்கள் என்று சொல்வர். பக்தர்கள், புண்யாத்மாக்கள் பூமியில் இறங்குவதாகச் சொல்வர்.

1.மானச சரோவர் என்பது பிரம்மாவின் மனதில் தோன்றிய ஏரி என்னும் பொருளுடைத்து.

2.இந்தியாவின் இதய இரத்தக் குழாய் போன்ற கங்கை, சிந்து, பிரம்மபுத்ரா ஆகிய மூன்று ஜீவநதிகளும் இந்த ஏரிக்கு அருகில் அல்லது ஏரியில்தான் உற்பத்தியாகின்றன. அதாவது அந்த ஜீவநதிகளுக்கு தண்ணீரைக் கொண்டு செல்லும் உபநதிகள் இங்கேதான் தோன்றுகின்றன.

  1. இது 54 மைல் சுற்றளவும் 320 சதுர மைல் பரப்புமுடையது. 300 அடிவரை ஆழம் கொண்டது.

4.நிர்மலமான, ஸ்படிகம் போன்ற அமைதியான நீர்ப்பரப்பு. கண்ணாடித் தொட்டிகளில் நீந்தும் மீன்களைப் பார்ப்பதுபோல தண்ணீருக்கடியில் உள்ள மீன்களைப் பார்க்கலாம்.

  1. இந்த ஏரியில் அழகிய, பெரிய அன்னப் பறவைகள் (ராஜ ஹம்சம்) இருக்கின்றன.
  2. உலகில் அதிகமான உயரத்திலுள்ள சுத்த நீர் ஏரிகளில் இது முதலிடத்தில் நிற்கிறது.

7.ஏரியைச் சுற்றி எட்டு பௌத்த துறவிகளின் மடாலயங்கள் இருக்கின்றன.

  1. இது திபெத் பிராந்தியத்தில் இருந்தாலும், அது இப்பொழுது சீனாவின் ஆக்ரமிப்பில் இருக்கிறது

9.இந்த ஏரி பனிக்காலத்தில் ஐஸ்கட்டியாக மாறிவிடும். கோடைகாலத்தில் அந்தப் பனி உடைவதன் பேரொலிகளைக் கேட்கலாம்.

 

  1. ஏரியின் நீரில் கயிலை மலையின் பிம்பங்களைப் பார்த்து ஒரே நேரத்தில் இரண்டு கயிலை மலைகளை தரிசிக்கமுடியும்

11.ஏரிக்கரையில் அழகிய கூழாங்கற்களையும், வேறு எங்கும் காண முடியாத தாவர வகைகளையும் பார்க்கலாம்.

  1. உத்தரப்பிரதேசத்திலுள்ள அல்மோராவிலிருந்து 240 மைல் தூரத்திலும் திபெத்தின் தலைநகர் லாசாவிலிருந்து 800 மைல் தொலைவிலும் கயிலை மலையும் மானசரோவரும் உள்ளன. இமயமலையின் அற்புதமான இயற்கைக் காட்சி இது. கடல் மட்டத்திலிருந்து 15,000 அடிக்கு மேல் இது இருக்கிறது. ஒரு புறம் கைலாஷ் மறுபுறம் மாந்தாதா சிகரங்கள் காட்சி தரும்.

13.திபெத்திய பௌத்தர்களுக்கும் இந்த ஏரி முக்கியமானது. ட்சோ மவாங் என்று அழைப்பர். மன அமைதியையும், ஆன்மீக உணர்வையும் தூண்டும் இடம் இது.ஒரு மிகப்பெரிய நீலக்கல் ரத்தினம் அல்லது மரகதப்  பச்சைக் கல் போலத் தோன்றும்.

14.காங்ரி கஞ்சாக் என்ற பெயரில் திபெத்திய மொழியில் இரண்டு கைலாஷ் புராணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

  1. மானச ஏரியின் நீர் சுவையானது. ஏரிக் கரையில் குகைகளும் உண்டு. சாது, சந்யாசிகள் தவம் செய்ய ஏற்ற இடம். ஏரிக்கரையில் வெப்ப நீர் ஊற்றுகளும் காணப்படுகின்றன.

15.ஒரு புத்த மடாலயத்திலிருந்து கயிலை மலையின் அற்புதமான தோற்றமும், மற்றொரு மடாலயத்திலிருந்து ராக்ஷச தல் ஏரியின் அழகிய தோற்றமும் கண்கொள்ளாக் காட்சி ஆகும்

16.காலை முதல் இரவு வரை வெவ்வேறு நேரத்தில் இது வெவ்வேறு அழகில் தோன்றும். நிறமும் சூரிய வெளிச்சத்தில் வேறுபடும்.

17.மூன்று வகையான அன்னப் பறவைகள் இங்கே வசிக்கின்றன. அவைகளில் ஒன்று ஒரிஸ்ஸாவில் சில்கா ஏரி வரயும், மற்றொரு திசையில் மால்வா வரையும் பறந்து செல்லும். இன்னொரு வகை சதபத பிராமணம் என்னும் கி.மு எட்டாம் நூற்றாண்டு நூலில் காணப்படுகிறது. ஆகவே குறைந்தது 3000 ஆண்டுகளாக பறவைகள் பற்றிய அறிவு இருந்திருக்கிறது. காளிதாசனும் மேக தூதத்தில் இதுபற்றிக் கூறியுள்ளான்.

18.இங்கே நடக்கும் அற்புதங்களில் ஒன்று ஜனவரி முதல் நடக்கும் பனி வெடிப்புகளாகும். சில நேரங்களில் பெரிய பனிப்பாறைகள் கரையிலுருந்து 60 அடிக்கு அப்பால் விழுந்து கிடக்கும்.

திடீரென்று பனிக்கட்டிகளிடையே நீர் ஊற்றுகள் தோன்றும். ஏரிக் கரைக்கு அப்பால் சிலமைல் தொலைவில் மூன்று வெப்ப நீர் ஊற்றுகள் காணப்படுகின்றன.

19.தூமா என்ற அற்புத மூலிகைக் கிழங்கு இங்கே கிடைக்கிறது. மலை எலிகள் இவற்றைச் சேமித்துவைக்கும். இது காமசுகம் தரும் செக்ஸ் மூலிகை.

simikot-to-kailash-manasarowar-trekking

20.ராக்ஷச தல்

ராக்ஷச தல் அல்லது ராவண ஹ்ருதா (லாங்காகி ட்ஸோ) என்னும் மற்றொரு ஏரி அருகில் இருக்கிறது. மானசரோவரிலிருந்து 2 முதல் 5 மைல் தொலைவில் ராக்ஷச ஏரி உள்ளது. லாங்காகி ட்சோ என்றால் ஐந்து மலைகளை உள்ளடக்கிய ஏரி என்று பொருளாம். (லா என்றால் மலை, ங்கா என்றால் ஐந்து, ட்ஸோ என்றால் ஏரி) இங்குதான் இலங்கை மன்னன் ராவணன், சிவபெருமானை நோக்கித் தவம் செய்தான். பூகம்பத்தில் ஐந்து மலை அடுக்குகள் உள்ளே சென்று இந்த ஏரி உருவாகி இருக்கக்கூடும். இதன் சுற்றளவு 77 மைல். இதில் இரண்டு தீவுகளும் உண்டு. மானச ஏரியின் அதிகத் தண்ணீர் வழிந்தோடி இங்கே வந்துவிடும்.

கயிலை மலை பற்றி மற்றொரு கட்டுரையில் காண்போம். 1949-ல் வெளியான ஒரு ஆங்கில நூலிலிருந்து தொகுத்த விஷயங்களிவை.

 

-சுபம்-

 

விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் அதிசய மனிதர்கள்! (Post No.2896)

eyeanat

Article written by S.NAGARAJAN

 

Date: 15 June 2016

 

Post No. 2896

 

Time uploaded in London :–  6-17 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

17-6-16 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் அதிசய மனிதர்கள்!

ச.நாகராஜன்

eye3

அற்புதங்கள் தினமும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அற்புதங்கள் பற்றிய உங்கள் பார்வையை மாற்றிக் கொண்டு பாருங்கள். உங்களைச் சுற்றி ஏராளமான அற்புதங்கள் நிகழ்வதை நீங்கள் காண்பீர்கள்.” – ஜோன் போன் ஜோவி

 

 

அறிவுஜீவியான இண்டிகோ  பையன் (மிகவும் அறிவு மிக்கவர்களை இண்டிகோ என்று அழைப்பர்) தான் முற்பிறவி ஒன்றில் செவ்வாய் கிரகத்தில் பிறந்தவன் என்று சொன்னதைப் பார்த்தோம். ரஷியாவைச் சேர்ந்த இந்தப் பையனின் பெயர் போரிஸ்கா (Boriska). நாளுக்கு நாள், வளர வளர, வயது ஏற ஏற, தன் வியத்தகு அறிவினால் அனைத்து விஞ்ஞானிகளையும் அசத்தி வருகிறான் போரிஸ்கா.

 

 

அறிவியலுக்குச் சவால் விடும் வகையில் உலகெங்கும் பலர் இப்படி அடிக்கடி பிறந்து கொண்டே தான் இருக்கின்றனர். விஞ்ஞானிகளால் திகைப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை. பார்ப்பதற்கு ஆதாரமாக இருக்கும் விழிகளின் கட்புல மேலுறை (Visual Cortex) இல்லாமல் ஒருவரால் பார்க்க முடியுமா? முடியும் என்று சொன்னால் விஞ்ஞானிகள் என்ன, சாமான்ய மனிதர்களே சிரிப்பார்கள்.

விழிகளின் பார்வைக்கு ஆதாரமான கார்டெக்ஸ் இல்லாமல் பார்ப்பது எப்படி என்று கேலியும் செய்வார்கள்.

ஆனால் மருத்துவ ரீதியாக “பார்வையற்ற” ஒருவர், விஷுவல் கார்டெக்ஸ் இல்லாமல் பார்க்க முடிகிறது என்றால் அதை விஞ்ஞானிகளாலேயே நம்ப முடியவில்லை!

 

 

‘பயலாஜி’ என்ற விஞ்ஞான இதழில் 2008ஆம் ஆண்டு இவரைப் பற்றிய அதிசய விவரங்கள் வெளியிடப்பட்டன.

இவரது முழுப்பயரைச் சொல்லாமல் இவர் டிஎன் (TN) என்று குறிப்பிட்ப்பட்டார்

 

டி என் ஒரு டாக்டர். துரதிர்ஷ்டவச்மாக இவர் இருமுறை பக்கவாதத்தால் தாக்கப்பட்டார். இரு விழிகளின்  மேலுறையும் முற்றிலுமாக பழுதுபட்டன. உறுப்புகள் சிதைந்தே விட்டன. ஒன்றும் செய்ய முடியாத நிலை.

 

ஆனால் இவர் எதிரில் இருக்கும் தடைகளை எல்லாம் “பார்க்கிறார்” அல்லது உணர்கிறார்.

இதை நம்ப  மறுத்த விஞ்ஞானிகள் இவருக்கு ஒரு சோதனையை வைத்தனர்.

 

நெதர்லாண்ட்ஸ் பல்கலைக் கழகம் இந்த ஆய்வை முன்னின்று நடத்தியது.

 

ஒரு ஹாலில் ஏராள்மான தடைகளை ஏற்படுத்தி   – நாற்காலி,மேஜை ஆகியவற்றைக் குறுக்கும் நெடுக்குமாக  வைத்து – அதில் இவரை நடந்து போகச் சொன்னார்கள்.

என்ன ஆச்சரியம், சரியாக கண்பார்வை உள்ளவர் போல இவர் தடையின்றி எதன்  மீதும் இடிக்காமல் நடந்தார்.

இது எப்படி சாத்தியம் என்று யாராலும் விளக்கமுடியவில்லை.

மூளைக்கு இன்னொரு பாதை இருக்கிறதா – பார்ப்பதற்கு?!

பிரப்ல விஞ்ஞான இதழான, ‘தி ஸயின்டிஸ்ட்’ பத்திரிகையில் இவர் இன்னொருவரின்  முகபாவத்தில் ஏற்படும் கோபம் மற்றும் பயத்தைக் கூட உணர்கிறார் என்று எழுதப்பட்ட கட்டுரை உலகையே பரபரப்புக்குள்ளாக்கியது.

 

 

உலகில் பார்வையற்ற நிலையில் இப்படிப் பார்க்கும் ஒரே நோயாளி இவர் தான் என்று அறிவிய்ல் உலகம் கூறுகிறது.

இவர் எப்படிப் பார்க்கிறார் என்ற மர்மத்தை விடுவிக்க இன்னும் முடியவில்லை!

elizabeth susler

இன்னொரு அதிசயப் பெண்மணி எலிஸபத் சல்ஸெர் (Elisabeth Sulser) என்பவர். இவருக்கு இரு புலன்கள் ஒரே சமயத்தில் வேலை செய்கின்றன.

 

பதினாறு வயதிலேயே அவர் இதைக் கண்டு பிடித்து விட்டார். தொழில் துறையில் இவர் ஒரு இசைக் கலைஞர்.

2004, 2005ஆம் ஆண்டுகளில் ஸ்விட்ஸர்லாந்தில்  ஜூரிச் பல்கலைக் கழகம் இவரை ஆய்வுக்காக அழைத்தது.

 

ஒலியைக் கேட்கும் போது அதன் வடிவத்தை இவர் உணர்கிறார். உதாரணமாக இசை ஸ்வரத்தில் சி நோட் (C Note)

இசைக்கப்பட்டால் அதை சிவப்பாக இவர் காண்கிறார். டி நோட் என்றால் நீல நிறத்தை இவர் காண்கிறார். கலைடாஸ்கோப் போல பல்வேறு வண்ணங்களை ஸ்வர மாறுதலுக்குத் தக்கபடி இவர் தொடர்ந்து காண்கிறார்.

 

 

அதே போல இசையில் ஒரு நோட்டிற்கும் இன்னொரு நோட்டிற்கும் இடையே உள்ள சிறிய இடைவெளியில் இவர் நாக்கில் சுவையை உணர்கிறார். ஒரு சமயம் புளிப்புச் சுவை. இன்னொரு சமயம் கசப்புச் சுவை. ஒரு சமயம் நீரை அருந்தும் உணர்வு. இன்னொரு சமயம் ஐஸ் க்ரீம் சாப்பிடும் உணர்வு. ஒவ்வொரு ஸ்வர இடைவெளிக்கும் இடையே ஒவ்வொரு விதமான சுவை.

 

 

இந்த அரிய அனுப்வத்தை அறிவியல் ‘ஸினஸ்திசியா’ (Synesthesia) என்று அழைக்கிறது. உலகில் உள்ள 750 கோடி பேரில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான பேருக்கே இப்படிப்பட்ட இரு புலன்களின் கலப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறதாம்! மூளையில் உள்ள சில அமைப்புகள் தீவிரமாக இணைக்கப்பட்டிருப்பதால் இப்படி புலன் கலவை ஏற்படுகிறதாம்.

 

 

ஸினஸ்தீசியா என்ற வார்த்தை கிரேக்க மொழியிலிருந்து வந்த வார்த்தை. பல்வேறு உணர்வுகளின் அனுபவம் என்று இதற்குப் பொருள்.

 

இப்படிப்பட்டவர்களில் வெளி உலகிற்குத் தெரியும் வகையில் ஆய்வுக்கு வந்த முதல் இசைக் கலைஞர் இவர் என்பதால் இவருக்கு ஏகமான புகழ். விஞ்ஞானிகளும் இவரை எல்லா ஆராய்ச்சிகளுக்கும் அழைத்து சோதனைகளைச் செய்து வருகின்றனர்.

7_Sulser

 

இதுவரை அறுபதுக்கும் மேற்பட்ட இரு புலன் உணர்வுகளை அறிவியல் இனம் கண்டுள்ளது. சிலருக்கு எண்களை வண்ணங்கள் மூலமாக மட்டுமே அறிய  முடிகிறது! எந்த எண்ணைச் சொன்னாலும் அவர்களுக்கு அதற்குரிய வண்ணமே தோன்றும்!

 

ஆனால் இப்படி ஏன் அதீத புலன் உணர்வு சிலருக்கு  மட்டும் வருகிறது என்பதை விஞ்ஞானிகளால் இது வரை கண்டு பிடிக்க முடியவில்லை.

விநோதமான உலகத்திலே வித விதமான் அதிசயங்கள்! அதைச் செய்து காட்டும் மனிதர்கள்!! அறிவியலும் விடுவதாயில்லை. அவர்களின் மீதான தனது ஆராய்ச்சியைத் தொடர்கிறது!!!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

இயற்பியலில் பெரும் மேதை ஜான் பர்டீன் (John Bardeen – தோற்றம் 23-5-1908 மறைவு 30-1-1991)

இயற்பியலில் இரு முறை நோபல் பரிசு பெற்ற பெருமை இவர் ஒருவரை மட்டுமே சாரும்.

 

john bardeen

டிரான்ஸிஸ்டரைக் கண்டுபிடித்ததற்காக 1956இல் முதல் முறையாக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. பின்னர் சூபர்கண்டக்டிவிடி துறையில் இவர் செய்த ஆராய்ச்சிக்காக 1972இல் இரண்டாம் முறையாக நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.

 

அதிகம் பேசாத மேதை இவர். சொற்களை யோசித்துப் பேசுவார்.

டிரான்ஸிஸ்டர் கண்டுபிடிப்பு மின்னணுவியலில் ஒரு பிரம்மாண்டமான மாறுதலை ஏற்படுத்தியது. கம்ப்யூட்டர் உருவாக இது பெரிதும் காரணமாக அமைந்தது.

முதல் முறை பரிசைப் பெற இவர் ஸ்வீடனுக்குச் சென்றார். சாதாரணமாக நோபல் பரிசு பெறும் அறிஞர்கள் இந்த வாய்ப்பை நழுவ விடாமல் தன் குடும்பத்துடன் விழாவிற்குச் செல்வது வழக்கம்.

 

 

ஜான் பர்டீனுக்கு  மூன்று  மகன்கள். மூவரில் ஒருவரை மட்டும் ஸ்டாக்ஹோமில் நடந்த விழாவிற்குத் தன்னுடன் அழைத்துச் சென்றார் அவர்.

அவரை வரவேற்ற ஸ்வீடன்  மன்னர் ஆறாம் குஸ்டாஃப் (King Gustaf VI) , “கூட யாரெல்லாம் வந்திருக்கிறார்கள்?: என்று அவரிடம் வினவினார். தன் மகன்களில் ஒருவர் மட்டுமே தன்னுடன் வந்திருப்பதாக பர்டீன் பதிலளித்தார்.

 

 

உடனே அவரைச் செல்லமாகக் கடிந்து கொண்டார் மன்னர். அனைவரையும் கூட்டிக் கொண்டு வந்திருக்க வேண்டாமா என்றார் அவர்.

எப்போதுமே மெதுவாக பதில் சொல்லும் பர்டீன் இப்போது, உடனடியாக, “அடுத்த முறை குடும்பத்துடன் வருகிறேன்” என்று பதிலளித்தார்.

 

 

அனைவரும் பிரமித்துப் போயினர். ஒருமுறை நோபல் பரிசு பெறுவதே முடியாத காரியம். அடுத்த முறை அழைத்து வருவதாவது?

 

ஆனால் மேதை தன் வாக்கை மெய்யாக்கிக் காட்டினார்.

1972இல் இரண்டாம் முறை நோபல் பரிசைப் பெற்றார்; விழாவிற்கும் குடுபத்துடன் சென்றார்!

************

 

உத்தமன் யார்? மத்யமன் யார்? அதமன் யார்? (Post No.2894)

Logo Three people on podium

Written by London swaminathan

 

Date: 14 June 2016

 

Post No. 2894

 

Time uploaded in London :– 16-16

 

( Pictures are taken by London swaminathan)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

three figures

நல்லவன் யார்?

மீண்டும் மீண்டும் இடையூறு வரினும் எடுத்த காரியத்தை முடிப்பவனே (உத்தமன்) சிறந்தவன்.

சிலர், ஒரு வேலையைத் துவக்கியபின்னர், இடையூறு வந்தால் அதை விட்டு விடுவார்கள். இவர்கள் (மத்யமன்) இடைப்பட்ட நிலையிலுள்ளவர்கள்.

இடையூறு வரும் என்று பயந்துகொண்டு வேலையையே துவங்கமாட்டார்கள் கீழ்நிலையிலுள்ளவர்கள் (அதமன்).

 

ப்ராரப்யதே ந கலு விக்னபயேன நீசை:

ப்ராரப்யதே விக்னவிஹதா விரமந்தி மத்யமா:

விக்னைர் முஹுர்முஹுர் அபி ப்ரதிஹன்யமானா:

ப்ராரப்தம் உத்தமகுணா ந பரித்யஜந்தி

 

கருமமே கண்ணாயினார்

உத்தமர் யார் என்று நீதிவெண்பா கூறுகிறது:-

ஒரு வேலையைச் செய்யும்போது, உடலுக்கு வரும் கஷ்டத்தைப் பற்றிக் கவலைப்படமாட்டார். பசியைப்பற்றி கவலைப்படமாட்டார். வேலை முடியும் வரை தூங்க மாட்டார். யார் இடையூறு செய்தாலும் அதைப் பொருட்படுத்தார். காலம் வீணாகுமோ என்று கவலைப்படமாட்டார். யார் இகழ்வதையும் பொருட்படுத்தமாட்டார்.

 

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்

எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்- செவ்வி

அருமையும் பாரார் அவமதிப்புங்கொள்ளார்

கருமமே கண்ணாயினார்

Snakes---Banded-Egyptian-Cobra

விஷப் பாம்பும், தீயோரும்

தாழ்ந்தோருக்கு செய்யும் (உபகாரம்) உதவியால் கெடுதலே (அபகாரம்) வரும். பாம்புக்கு பால் வார்த்தால் விஷம்தான் அதிகரிக்கும்.

உபகாரேண நீசானாம் அபஹாரோ ஹி ஜாயதே

பய: பானம் புஜங்கானாம் கேவலம் விஷவர்தனம்

–சுபம்–

ஜமைகா சத்திரம்: கடத்தல்காரர்கள் சொர்கம் (Post No.2892)

jam 1

Written by London swaminathan

 

Date: 13 June 2016

 

Post No. 2892

 

Time uploaded in London :– 17-59

 

(  Pictures are taken by london swaminathan)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

jam 2

 

இங்கிலாந்தின் கார்ன்வாலில்(Cornwall) உள்ள ஜமைகா இன் (சத்திரம்) Jamaica Inn என்ற மியூசியத்துக்கு ஜூன் 11 (2016) போயிருந்தேன். அங்கு கடற் கொள்ளைக் காரர்கள், கடத்தல் காரர்கள் பற்றி ஒரு சிறிய மியூசியமும், ஹோட்டலும், மதுபான விடுதியும் உள்ளன. லண்டனிலிருந்து ஐந்து மணி நேரம் காரில் சென்றால் இந்த இடத்தை அடையலாம். கார்ன்வால் என்னும் பிராந்தியம் அழகான கடற்கரை, பழங்காலச் சின்னங்கள், நீர்வீழ்ச்சிகள் முதலியவற்றுக் கும் பெரிய மார்க்கெட்டுக்கும் பெயர் பெற்ற இடம். நாங்கள் இரண்டே நாள் விடுமுறையில் சென்றதால் ஜமைகா இன், நியூ கீ கடற்கரை, ஈடன் கார்டன் Eden Garden என்ற மிகப்பெரிய தாவரவியல் பூங்கா, செயின்ட் ஆஸ்டல் (St Austell) வாரச் சந்தை ஆகியவற்றை மட்டுமே பார்க்கமுடிந்தது.

 

ஒருகாலத்தில் கார்ன்வால் என்பது யாரும் அதிகம் வராத ஒரு பகுதியாக இருந்ததால் அது கஞ்சா முதலிய பொருட்களை கடத்துவோரின் சொர்கபூமியாக மாறியது. வெளி உலகிற்கே இப்படி ஒரு கடத்தல்காரர் பூமி இருப்பதும் அவர்கள் ஒரு ஹோட்டலில் வழக்கமாக சந்தித்து பண்டமாற்றம் செய்வதும் யாருக்கும் தெரியாமல் இருந்தது. 1936 ஆம் ஆண்டுகளில் இவ்விஷயங்களைக் கூர்மையாகக் கவனித்த டாப்னி டூ மோரியர் (Daphne du Mauriere) என்ற பெண்மணி கடத்தல்காரர், கடற்கொள்ளைக்காரர்கள் பற்றி நல்லதொரு நாவல் எழுதினார். அவர் வாயிலாக இந்த இடம் பற்றி எல்லோரும் அறிந்தனர். பின்னர் ஆல்ப்ரெட் ஹிட்ச்காக் இதே பெயரில் ஒரு திரைப்படம் எடுத்தார்.

jam5

அந்தத் திரைப்படத்தில் கடல் கொள்ளையர்கள், எப்படிக் கப்பல்களைக் கவிழ்த்து, மாலுமிகளைக் கொன்று பொருள்களைக் கொள்ளையடிக்கின்றனர் என்று காட்டப்படுகிறது.

 

இப்பொழுது பாட்மின், லான்சஸ்டன் என்ற இரண்டு ஊர்களுக்கிடையேயுள்ள ஜமைகா இன், ஒரு சுற்றுலா இடமாக மாறிவிட்டது. ஒரு சின்ன மியூசியத்தில் கடத்தல் காரர்கள் பற்றிய நாவல்களின் தொகுப்பு, பழைய ஓவியங்கள், அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், அவர்கள் கடத்திய பொருட்கள் ஆகியன காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

 

தமிழ்நாட்டில் சணல் நாரினால் பின்னப்பட்ட பைகளில் சாமான்கள் வாங்குவோம். அது மாதிரிப் பையின் மீது கஞ்சா படம் போட்டு இத்தனை கிலோ என்று எழுதி இருக்கிறார்கள். ஒருகாலத்தில் இப்படி கிலோ கணக்கில் ஜமைகா தீவில் கஞ்சா விற்கப்பட்டது. அந்தப் பைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பாம்பாட்டிகள் வைத்திருக்கும் மகுடிகள் அங்கே பழங்கால இசைக்கருவிகள் என்றும் எழுதி வைக்கப்பட்டுள்ளன. ஜமைகா என்னும் நாடு மேற்கிந்தியத் தீவு நாடுகளில் ஒன்று ஆகும்.

ஒரு தனி அறையில் பத்து நிமிட வீடியோ திரைப்படமும் காட்டப்படுகிறது. டாப்னி எழுதிய நாவல்களும் உள்ளன. ஜமைகா இன் என்ற பெயரில் பி.பி.சி.சீரியல், நாடகம் ஆகியனவும் வந்திருப்பதால், இந்தக் கதைகளை அறிந்தோருக்கு இது ஒரு நல்ல மியூசியமாகத் திகழும். ஒரு சிறிய நுழைவுக் கட்டணம் இருந்தபோதிலும், நாவலைப் படித்தவர்களும், திரைப்படத்தைப் பார்த்தவர்களும் ஜமைகா இன் – சத்திரத்தைப் பார்க்காமல் வரமாட்டார்கள். சுமார் 300 ஆண்டுப் பழமையான இடம் இது.

 

jam 7

 

jam11

 

jam10

–சுபம்–

 

 

கொம்புள்ள மாட்டுக்கு 5 முழம் போதும், தீயோருக்கு…………… (Post No.2881)

beauty bull

Article written by London swaminathan

 

Date: 9 June 2016

 

Post No. 2881

 

Time uploaded in London :– 8-28 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

நீதி வெண்பா என்ற அருமையான நூலில் 100 பாடல்கள் உள்ளன.விவேக சிந்தாமணி என்ற நூலைப் போலவே இதை எழுதிய ஆசிரியர் பெயரும் கிடைக்கவில்லை. அதில் ஒரு அருமையான பாட்டு:-

கொம்புளதற்கு ஐந்து குதிரைக்கு பத்துமுழம்
வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே – வம்புசெறி
 
தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து
நீங்குவதே நல்ல நெறி. (பாடல் 20, நீதி வெண்பா)

 

கொம்பு இருக்கும் மாடு முதலிய மிருகங்களுக்கு அருகில் போகாதீர்கள். குறைந்தது ஐந்து முழமாவது தள்ளி நில்லுங்கள். குதிரைக்கு பத்து முழ தூரத்தில் நின்றால் பாதுகாப்பாக இருப்பீர்கள். யானைக்கு ஆயிரம் முழம் தள்ளி நில்லுங்கள். திடீரென்று மதம் பிடித்து ஓடிவந்தால் அதை உங்களால் முந்தமுடியாது. ஆகையால் 1000 முழமாவது தள்ளி இருங்கள். ஆனால் தீயோரைக் கண்டால் – துஷ்டர்களைக் கண்டாலோ, கண் காணாத தூரத்துக்கு ஓடிப் போய்விடுங்கள். அப்படிப்பட்ட ஆள் வருகிறான் என்றால் அந்தப் பக்கமே போகாதீர்கள். அவர்களை போலீசாரும், நீதித் துறையும் கவனித்துக்கொள்ளும். இது நல்லதொரு புத்திமதி.

India Rampaging Elephant

இதே விஷயம் சம்ஸ்கிருதத்திலும் அழகாக உள்ளது:-

சகடம் பஞ்சஹஸ்தேஷு தசஹஸ்தேஷு வாஜினம்

கஜம் ஹஸ்த சஹஸ்ரேண துஷ்டம் தூரேண வர்ஜயேத்

வண்டிகள் (சகடம்) நின்றால் அதற்கு அருகில் நிற்காதீர்கள். அது திடீரென நகரக்கூடும். குறைந்தது ஐந்து முழமாவது தள்ளி நில்லுங்கள். குதிரைகள் (வாஜினம்) இருந்தால் முனால் பாய்ந்து கடிக்கவும் செய்யும்; பின் காலால் உதையவும் செய்யும்; ஆகையால் பத்து முழம் தள்ளி நில்லுங்கள். யானைக்கு (கஜம்) ஆயிரம் முழம் தள்ளி நில்லுங்கள். துஷ்டர்களைக் கண்டாலோ வெகு தொலைவில் போய் விடுங்கள்.

 

அவ்வையாரோ இதற்கும் ஒரு படி மேலே போகிறார்; காந்திஜியின் குரங்கு பொம்மை இதிலிருந்து தோன்றியதே என்று முன்னரே ஒரு கட்டுரையில் சொன்னேன்:–

தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற

தீயார் சொல் கேட்பதுவும் தீதேயாம் – தீயார்

குணங்களுரைப்பதுவும் தீதே யவரோ

டிணங்கி யிருப்பதுவுந் தீதேவாக்குண்டாம், அவ்வையார்.

 

கெட்டவர்களைப் பார்ப்பது தீது; அவர் சொல் கேட்பதும் தீது; அவர்களுடன் சேருவது தீது (இதெல்லாம் முன்னர் சொன்ன விஷயங்களே. அவரைப் பற்றிப் பேசுவதும் தீதே. அதாவது பேஸ் புக்கிலும், ஈ மெயிலிலும், திண்ணைப் பேச்சிலும், நண்பர்களின் அரட்டைக் கச்சேரியிலும் அவர்களைப் பற்றிப் பேசாதே. ஏன்?

1.நேரம் வீண், 2.எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. யார் உங்களுக்கு குழி பறிப்பார்கள் என்பதும் தெரியாது என்று எச்சரிக்கிறார் அவ்வையார்.

3 snakes

இறுதியாக மேலும் ஒரு சம்ஸ்கிருதப் பாடல்:–

துர்ஜன: பரிஹர்தவ்யோ வித்யா அலங்க்ருதோ அபி சன்

மணினா பூஷித ஸர்ப: கிம் அசௌ ந பயங்கர:

படித்தவர்களாக இருந்தாலும் கெட்டவர்களாக இருந்தால், அவர்களை விட்டுவிடவேண்டும். நாகரத்தின மணி வைத்திருந்தாலும் பாம்பு என்பது பயங்கரமானது இல்லையா!

படித்தும் கெட்டவர்கள் = மாணிக்கம் தரித்த விஷப் பாம்பு

அழகான உவமை!

 

வாழ்க தமிழ்; வளர்க சம்ஸ்கிருதம்.

–சுபம்–

 

 

இந்துக்களின் கண்டுபிடிப்பு: ஏழு வகை மழை, ஏழு வகை காற்று (Post No 2878)

earth-atmosphere-layers

Research Article written  by London swaminathan

 

Date: 8 June 2016

 

Post No. 2878

 

Time uploaded in London :–  17-45

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

உலகின் முதல் நிகண்டான அமரகோசத்தில் மேகத்துக்கு 15 சம்ஸ்கிருத சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏழு வகை அதிசய மழைகளையும் சம்ஸ்கிருத நூல்கள் உரைக்கின்றன. காளிதாசனின் சாகுந்தல நாடகத்துக்கு உரை எழுதியோர் ஏழு வகை ஆகாய மார்கங்களையும் எடுத்துக் காட்டுகின்றனர். இவைகளில் 75 விழுக்காட்டுக்கு விஞ்ஞான விளக்கம் கிடைக்கிறது. மீதியை இனித்தான் விஞ்ஞானம் கண்டுபிடிக்குமோ!

 

ஏழுவகை மழைகள்:-

சம்வர்த்தம் – மணி (ரத்தினக் கற்கள்)

ஆவர்த்தம்- நீர் மழை

புஷ்கலாவர்த்தம்- பொன் (தங்க) மழை

சங்காரித்தம் – பூ மழை (பூ மாரி)

துரோணம் – மண் மழை

காளமுகி- கல் மழை

நீலவருணம் – தீ மழை (எரிமலை, சுனாமி)

cloud_types

இந்த ஏழு வகை மழைகளில் நாம் எல்லோரும் அறிந்தது நீரைப் பொழியும் மழை.

மற்ற மழைகளைப் பற்றி பத்திரிக்கைகளிலும் புத்தகங்களிலும் படித்து வியக்கிறோம். சில எடுத்துக் காட்டுகளைப் பார்ப்போம்.

தங்க மழை:

ஆதி சங்கரர் சிறு வயதில் ஒரு வீட்டு வாயிலில் நின்று “பவதி பிக்ஷாம் தேஹி” (தாயே! பிச்சை போடுங்கள்) என்று சொன்னார். அந்த வீட்டுப் பெண்மணி, பரம ஏழை. ஓடிப்போய் சமையல் அறையில் பார்த்தாள்; ஒன்றும் கிடைக்கவில்லை. பாத்திரங்களை உருட்டினாள். ஒரு ஊறுகாய் ஜாடியின் கீழே ஒரே ஒரு நெல்லிக்காய் ஒட்டிக்கொண்டிருந்தது. ஓடோடி வந்து அதைப் பிச்சைப் பாத்திரத்தில் போட்டார். சங்கரனின் கண்களில் இருந்து கண்ணீர் ‘பொல பொல’ என்று உருண்டோடியது. பரம கருணை மிக்க தாயே! உனது நல்லாட்சியில் இப்படி ஒரு வறுமையா? என்று அம்பாளை வேண்டி ஒரு துதி பாடினார். தங்க நெல்லிக்காய்கள் மழையாகப் பொழிந்தது. அந்தத் துதியின் பெயர், ‘தங்க மழை போற்றி’ (கனகதாரா தோத்திரம்).

பூ மழை

தேவர்கள் சந்தோஷப் படும்போதெல்லாம் பூ மாரி பெய்ததாக நமது புராணங்கள் பேசுகின்றன. அது உண்மையோ இல்லையோ நாம் அரசியல் தலைவர்கள் மீது பூ மாரி பெய்யும் பல படங்கள் அவ்வப்போது வெளி வருகின்றன. இதுபோல உற்சவ காலங்களில் கடவுள் சிலை மீது பூ மாரி பெய்கிறோம். திருமணத்தில் ஆசீர்வாத காலத்தில் மணமக்கள் மீது பூ மழை பெய்கிறோம். பிராமணர்கள் ‘யோபாம் புஷ்பம் வேதா’ – என்ற நீண்ட மந்திரம் சொல்லி இறைவனுக்கு பூமாரி பெய்வதுமுண்டு.

sandstorm

 

மண்மழை

உறையூரும், திருமலைராயன் பட்டிணமும் எப்படி மண்மழையில் அழிந்தது என்று முன்னரே எழுதிவிட்டேன். கீழ்கண்ட எனது கட்டுரையைப் படிக்கவும்.

மணலில் புதைந்த இரண்டு தமிழ் நகரங்கள் ( 7 டிசம்பர் 2013)

Sand Storms destroyed Two Tamil Towns! (7-12-2013)

 

பாலைவனத்தில் அவ்வப்பொழுது மணற் புயல் ஏற்பட்டு விமான சர்வீஸ் ரத்தாவது வட ஆப்பிரிக்க நாடுகளிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் வசிப்போருக்குத் தெரியும். சஹாரா பாலவன மண், ஐரோப்பா வரை வந்து வானிலை மாற்றங்களை உண்டாக்குவதையும் பத்திரிக்கைகளில் காணலாம்.

கல் மழை

சில நேரங்களில் ஐஸ்கட்டி மழை பெய்கையில் அதை ஆலங்கட்டி மழை என்போம். பெரிய பெரிய கூழாங்கற்கள் அளவுக்கு பனிக்கட்டி விழும். ஆனால் சில நேரங்களில் காற்றின் சுழற்சி காரணாமாக மேகங்கள் நீர் நிலைகளிலுள்ள மீன்கள், தவளைகள், கற்களுடன் மழை பெய்த செய்திகளையும் நாளேடுகளில் படிக்கிறோம்.

 

எரிமலை அருகில் வசிப்போருக்கு கல் மழை மிகவும் சர்வ சாதாரணம். இது தவிர பூமி தனது வட்டப் பாதையில் செல்கையில் ஆண்டுதோறும், சில குட்டி கிரகங்கள், விண்கற்கள் ‘பெல்ட்’டைக் கடக்கையில் எரிகற்கள் மழை பெய்வதுண்டு. அவைகளில் பெரும்பாலானவை காற்று மண்டலத்தில் எரிந்து விடும்.

 

Tungurahua-volcano-

தீ மழை

சுனாமி வருகையிலும், எரிமலை பொங்குகையிலும் தீ மழை பொழிகிறது. சுனாமி பேரலைகள் மிகவும் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்வதால், கடலில் தீ தோன்றும் அதிசயச் செய்திகளுமுண்டு.

காளிதாசர் தரும் அற்புதச் செய்தி

காளிதாசர், சாகுந்தலம் என்ற நாடகம் செய்திருக்கிறார். அதில் (7-5) காற்று மண்டலம் ஏழு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டதில் நமது விமானம் எந்தப் பிரிவில் உள்ளது என்று மன்னர் கேட்கிறார். அதற்கு உரைகாரர்கள் எழுதிய உரையில் இந்து புராணங்கள் வாயு மண்டலத்தை ஏழு பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் கொடுத்திருப்பதை எடுத்துக் காட்டுகின்றனர்.

முதலாவது வாயு ஆவாஹ என்றும் அது  புவர்லோகத்தில் பாயும் என்றும் அந்தப்பிரிவில் பூலோகம், பாதாள லோகம், மற்றும் சூரியன் வரையுள்ள வாயு மண்டலம் அடங்கும் என்றும் உரைகாரர் கூறுவர். மற்ற ஆறு வாயு மண்டலங்களும் சுவர் லோகத்தில் (சுவர்க) இருப்பதாகவும் சொல்லுவர். இதிலுள்ள இரண்டாவது வழி ப்ரவாக என்றும் இந்த வாயுதான் சூரியனைச் சுற்றச் செய்கிறது என்றும் சொல்கின்றனர். மூன்றாவது வாயு சம்வாஹ- அது சந்திரனை இயங்கச் செய்கிறது. நாலாவது நட்சத்திர மண்டலம்; அங்கே உத்வாஹ என்னும் காற்றுள்ளது. ஐந்தாவது கிரகங்கள் அருகிலுள்ள காற்று; அதன் பெயர் விவாஹ; ஆறாவது காற்று சப்தரிஷி மண்டலத்தில் இயங்கும் அதன் பெயர் பரிவாஹ. அதுதான் பால்வளி மண்டலம் – மில்கி வே –  நட்சத்திரப் பகுதி. அங்கேதான் இப்பொழுது இந்திரனுடைய விமானம் சென்று கொண்டிருக்கிறது.

 

ஏழாவது வாயு துருவ நட்சத்திரப் பகுதியில் உள்ளது. அந்த துருவன் தான் எல்லா நட்சத்திரங்களியும் கிரகங்களையும்  சக்கரத்திலுள்ள ஆரம் எல்லாம் அச்சாணியில் இணைக்கப்பட்டிருப்பது போல கட்டி வைத்திருக்கிறான்.  அங்கே இயங்கும் காற்று பரவாஹ.

chart-cloud-types

அறிவியல் சிந்தனை:

விஷ்ணு புராணத்திலும் இக்கருத்துள்ளதால் 2000 ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் மில்கி வே, சப்தரிஷி மண்டலம் வரை சிந்தித்துள்ளனர் என்று தெரிகிறது. எல்லாம் ஓவியத்தில் வரைந்த படங்கள் போலில்லாமல் இயங்குவதையும் அறிந்திருந்தனர். அவர்கள் சொல்லும் வாயுவை நாம் காற்று என்று மொழிபெயர்க்காமல்  பலவித கதிர்கள், அலைகள், ஒலிகள் என்று பொருள் கொள்ள வேண்டும். முதலில் இப்படி மேகங்களையும் காற்று மண்டலத்தையும் பிரித்த முதல் விஞ்ஞானிகள் இந்துக்களே. இப்போது நாம் மேகங்களை வேறுவிதமாகப் பிரிப்ப்தை வானிலை இயல் நூல்களில் காண்கிறோம். அறிவியல் சிந்தனை இருந்தால்தான் இப்படிப் பலவகை பிரிவுகளைச் செய்திருக்க முடியும்.

அமரகோசத்தில் 15 பெயர்கள்

உலகின் முதல் நிகண்டான (திசாரஸ்) அமரத்தில் கீழ்கண்ட பெயர்கள் மேகம் என்ற பொருளில் வழங்கப் படுவதாக அமர சிம்மன் சமஸ்கிருதத்தில் எழுதியுள்ளார்:–

அப்ரம், மேக:, வாரிவாஹ:, ஸ்தனயுத்னு:,

பலாஹக:, தாராதர:, ஜலதர:, தடித்வான், வாரித:, அம்புப்ருத், கண:, ஜீமூத:, முதிர:, ஜலமுக், தூமயோணி:.

மேகக் கூட்டத்துக்கு மேக மாலா, காதம்பினி என்று பெயர்.

 

தமிழில்:– கொண்டல், கொண்மூ, புயல், கார், மாரி, முகில், மங்குல், விண்டு, ஊரி, மாசு, மஞ்சு, எழில், செல், மை என்ற சொற்கள் மேகத்துக்கு உண்டு.

சிலப்பதிகாரத்தில் கடவுள் வாழ்த்தில், ஞாயிறு, திங்கள் ஆகியவற்றுடன் மழைக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வள்ளுவர் வான் சிறப்பு என்று பத்து குறள் பாடி கடவுள் வாழ்த்துக்கு அடுத்த அதிகாரமாக வைத்திருப்பதும் மேகத்தின், மழையின் சிறப்பை விளக்கும்.

காளிதாசனும் தமிழ் புலவர்களும் கடல், ஆறு, ஏரி, குளம் ஆகியவற்றின் நீர்தான் ஆவியாகி, மேகமாகி, மழையாகப் பொழிகிறது என்று தெள்ளத் தெளிவாகப் பாடி வைத்துள்ளனர். ஓரிடத்தில் அல்லது ஈரிடத்தில் மட்டுமல்ல. பல நூறு இடங்களில் பாடிவைத்துள்ளனர்.அவர்கள் முதல் முதல் தோன்றிய வானிலை இயல்துறை நிபுணர்கள் என்றால் மிகையாகாது!!

ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியவர்- லண்டன் சுவாமிநாதன்.

–சுபம்–

 

அதிசய மலர் மருந்துகள்! (Post No.2861)

flower medicine 3

Article written by S.NAGARAJAN

 

Date: 2 June 2016

 

Post No. 2861

 

Time uploaded in London :–  5-46 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact swami_48@yahoo.com

 

 flower medicine1

பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் 3-6-2016 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

அதிசய ‘பாட்ச்’ மலர் மருந்துகள்!

ச.நாகராஜன்

 

மலர்கள் எப்போதும் மனிதர்களைச் சிறந்தவர்களாகவும் சந்தோஷமுடையவர்களாகவும் மற்றவருக்கு உதவி புரிவபவராகவும் ஆக்குகின்றன. அவை ஒளி பொருந்தியவை. அவை உணவாக இருக்கின்றன; அவை ஆன்மாவிற்கான மருந்தாகவும் அமைகின்றன” – லூதர் பர்பேங்க்          

 

உடல் மற்றும் மனம் சம்பந்தப்பட்ட வியாதிகளைக் குணமாக்குவதில் மலர் மருந்துகள் ஒரு தனி இடத்தை வகிக்கின்றன.

இந்த மலர் மருந்துகளைக் கண்டு பிடித்தவர் டாக்டர் எட்வர்ட் பாட்ச் (Dr Edward Batch) என்னும் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு மருத்துவர்.

டாக்டர் பாட்ச் (தோற்றம் 24, செப்டம்பர்1886 ;  மறைவு 27, நவம்பர் 1936) ஹோமியோபதி மருத்துவத்தில் நிபுணர். பாக்டீரியா இயல் நிபுணரும் கூட.

ஒவ்வொரு மனிதரின் வியாதிக்கும் காரணம் உடல் மட்டும் சம்பந்தப்பட்ட ஒன்று அல்ல; ஆத்மாவுடனும் சம்பந்தப்பட்டது என்று அவர் நம்பினார். அது மட்டுமின்றி பிரபஞ்சம் முழுவதும அதிர்வுகளால் இணைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே ஒவ்வொருவரின் தனித் தன்மையையும் அறிந்து அதற்கேற்ப  மருந்து கொடுத்தால் அது பலன் அளிக்கும் என்றும் அவர்  நம்பினார்.

இயற்கை தந்துள்ள அரிய பல  மலர்களை அவர் ஆராய ஆரம்பித்தார். புலர் காலைப் பொழுதில் மலர்களின் பனித்துளிகளில் இருக்கும் மலரின் சக்தி வாய்ந்த சாரத்தை எடுத்து அவர் பெரிய ஆராய்ச்சியை மேற்கொண்டார்.  ஆயிரத்தி தொள்ளாயிரத்து முப்பதுகளில் அவர் ஆராய்ச்சி ஒரு முடிவுக்கு வந்தது.

அதன் விளைவாக 38 வித  மலர் மருந்துகளை உள்ளுணர்வினால்  கண்டு பிடித்து அவர் தயார் செய்தார். மலர்களின்  சாரமான துளிகளை அதற்குச் சம்மான அளவு பிராந்தியுடன் கலந்து தன் கலவையை அவர்  முதலில் உருவாக்கினார். பின்னர் அதை  மேம்படுத்தி தன்  மலர் மருந்தைப் பக்குவப்படுத்தி பூரணமான மருந்தாக்கினார்.

இதில் குறிப்பான ஒரு மருந்தாக ரெஸ்க்யூ ரெமடி என்று ஒரு வகை உருவானது.

திடீரென எதிர்பாராத ஆபத்தில் சிக்கிய ஒருவரின் அதிர்ச்சியுற்ற நிலையை இந்த ரெஸ்க்யூ ரெமடி உடனடியாகப் போக்கும்.

இன்று வரை இது தனது அபூர்வமான் ஆற்றலை நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

அறிவியல் ரீதியாக இந்த மலர் மருந்துகளின் சக்தியை ஆய்வு செய்த டாக்டர் எர்னஸ்ட் என்பவர் தனக்குக் கிடைத்த முடிவுகளின் படி அப்படி ஒன்றும் இவை சக்தி கொண்டவை அல்ல என்று கூறினார்.

ஆனால் பல்வேறு நாடுகளிலும் நடத்தப்பட்ட விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் மலர் மருந்துகளுக்கு சக்தி உண்டு என்று கூறுகின்றன.

குறிப்பாக உணர்ச்சி சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு இவை உடனடி நிவாரணம் அளிக்கின்றன என்பது ஒரு சுவையான செய்தி.

‘ஃப்ளவர் எஸன்ஸ் சொஸைடி’ நடத்திய ஒரு ஆய்வில் ஆய்வு முடிவுகள் இவை எவ்வளவு சக்தி வாய்ந்தவை என்பதைத் தெரிவிக்கின்றன! டாக்டர் ஜெஃப்ரி க்ராம் (Dr Jeffrey Cram) என்பவர் நுட்பமான ஆற்றல்களை இந்த மலர் மருந்துகள் உருவாக்குகின்றன என்று கூறியுள்ளார்.

நீருக்கு தகவல்களை ஏந்திச் செல்லும் அரிய தன்மை உண்டு என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த நீருடன் சக்தி வாய்ந்த மலரின் சாரமும் சேர்ந்து வியாதிகளைக் குணமாக்குகின்றன என்று ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இந்த மலர்  மருந்துகள் முப்பத்தெட்டின் விலையும் அதிகம் இல்லை.

இவை ஏழை முதல் பணக்காரர் வரை ஆண் பெண் பேதமின்றி அனைவரும் வாங்கிப் பயனடைய முடியும். அத்தோடு இந்த மலர் மருந்துகளால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுவதில்லை என்பது ஒரு பெரிய ஆறுதலான செய்தி!

 

flower medicine2

மலர் மருந்துகளைத் தரும் ஒரு வைத்தியரிடம் ஒருவர் சென்றவுடன் அவரிடம் அவருக்குள்ள தொந்தரவு என்ன என்பதை அவர் வாய் மொழி மூலமாகக் கேட்டறியப்படுகிறது. அவரிடமிருந்து வெளி வரும் சொற்களை வைத்து அவரது மனநிலை நன்கு அறியப்பட்டு அதற்குத் தக மலர் மருந்துகள் அளிக்கப்படுகின்றன.

வீடு அல்லது வாகனம் வாங்க ஒருவர் செல்கிறார். அவரது பேரம் படிவதற்கு அவர் உட்கொள்ள வேண்டிய மலர் மருந்து அக்ரிமனி என்பதாகும்.

பார்ப்பதற்கே பரிதாபகரமாகத் தோற்றமளிக்கும் ஒரு நோயாளிக்கு மலர் மருத்துவர் உடனடியாகத் தருவது ராக் ரோஸ் என்னும் ம்லர் மருந்து.

தாங்க முடியாத கோபம், வறுமை, வாழ்க்கையே பிரச்சினை என்றால் அவருக்குப் பரிந்துரைக்கப்படுவது செர்ரி ப்ளம்.

காதலில் தோல்வி என்றால் சிக்கரி.

அகம்பாவம், மண்டைக்கனம் போக வைன்.

இருட்டில் போக பயம், வியாதி, முதுமை பற்றிய பயம் என்றால் மிமுலஸ்

போர் அடிக்கிறது என்று சொல்பவருக்கு வால்நட். தன்னம்பிக்கை  கூடுவதற்கு லார்ச். செல்வம் சேர கார்ஸ்.

ஒரு நோயாளிக்குத் தேவையானப்டி மலர் மருந்துகளில் ஒன்றோ இரண்டோ அல்லது அதற்கும் மேலாகவோ மருத்துவர் தேர்ந்தெடுத்துத் தருவதும் நடைமுறைப் பழக்கமாக இருந்து வருகிறது.

எடுத்துக்காட்டாக ஒரு வியாதியிலிருந்து மீண்ட நோயாளி எடுத்துக் கொள்ள வேண்டியது கிராப் ஆப்பிள் மற்றும் வால்நட்.

கற்பனை ஆற்றலை மேம்படுத்த விரும்பும் ஒருவர் எடுத்துக் கொள்ள வேண்டியவை ஒய்ட்செஸ்நட் ம்ற்றும் க்ளிமாடிஸ்.

 

இப்படி மன நிலைகளுக்குத் தகுந்தபடி மருந்துகள் இதில் தேர்ச்சி பெற்ற நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன.

பத்தியம் இல்லாத விலை குறைவான மருந்து என்பதால் இதை பரீட்சித்துப் பார்ப்போரின் தொகை இப்போது அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நகரிலும் மலர் மருந்துக் கடைகள் அதிகமாகி வருகின்றன; மலர் மருத்துவ நிபுணர்களும் பெருகி வருகின்றனர்.

மல்ர் மருந்துகள் இன்றைய உலகில் ஒரு அரிய வரபிரசாதம் என்றால் அது மிகையல்ல!

cycle

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

1896ஆம் ஆண்டு ஐயோவாவைச் சேர்ந்த ஒருவரால் இசை சைக்கிள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு இசைப் பெட்டி முன் சக்கர போர்க்குகளுடன் இணைக்கப்பட்டிருக்க அது சுற்றும் போது ஒரு பல்சக்கரம் இசைப் பெட்டியை இயக்க வெவ்வேறு விதமான இசை ஒலிகள் எழுப்பப்பட்டன. மக்கள் இதை வியந்து பார்த்தனர்.

இதற்கு  வெகு காலம் முன்பே 1824 ஆம் ஆண்டு வின்கெல் (M. Winkel) என்பவர் மெக்கானிகல் இசைப் பெட்டி ஒன்றை வடிவமைத்து அனைவரையும் அசத்தினார். அது தானாகவே இசையை அமைக்கும் என்ற அவர் பத்திரிகையாளர்களையும் விஞ்ஞானிகளையும் அழைத்துப் பரிசோதித்து மதிப்புரை எழுதச் சொன்னார்.  பிரெஞ்சு அகாடமியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் 1824 பிப்ரவரி 2ஆம் தேதி  வந்து ஆராய்ந்து பார்த்து மெக்கானிகல் இசைப்பெட்டியின் உள்ளே ஒன்றும் ஒளித்து வைக்கப்பட்டிருக்கவில்லை என்றும் வெவ்வேறு வித இசை அமைப்புகள் தானாக கம்போஸ் செய்யப்படுகின்றன என்றும் மதிப்புரை தந்தனர். பத்திரிகைகளும் இந்தக் கண்டுபிடிப்பைப் பாராட்டி எழுதின! இந்த இசைப் பெட்டியின் பெயர் கம்போனியம் (Componium)

அன்றே இப்படிப்பட்ட கண்டுபிடிப்புகள் எழுந்துள்ளன என்பது சுவையான ஒரு செய்தி!

************

 

 

சமயோசித புத்தி! நறுக்கென பதில்கள்!! (Post No 2821)

politics-clipart

Translated by London swaminathan

 

Date: 18 May 2016

 

Post No. 2821

 

Time uploaded in London :– 8-32 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

(இந்த சம்பவங்கள் ஏற்கனவே இங்கு ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்டன. மொழி பெயர்ப்பளர்- லண்டன் சுவாமிநாதன்)

அமெரிக்காவில் சென்ற நூற்றண்டில் பிரபல வணிகராக இருந்தவர் மார்க் ஹன்னா. அவர் அரசியலிலும் மிகவும் செல்வாக்கு பெற்றவர்.

 

ஒரு நாள் தனது கம்பெனியில் நடந்துசென்று கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு இளம் தொழிலாளி இப்படிச் சொன்னார்:

“இதோ போகிறானே, நம்ம முதலாளி; இவன் நம்மைப் போல குடிசையிலும், நாம அவனைப் போல பங்களாவிலும் வாழனும்; நமக்கு அவனைப் போல நல்ல பணம் இருக்கனும்; அப்பத்தான் இந்தப் பயலுக்கு நாம படற கஷ்டமெல்லாம் தெரியும்”.

 

இது முதலாளி காதில் விழுந்திருக்காது என்று நினைத்து அவன் சொல்லிவிட்டான். ஆனால் இது மார்க் ஹன்னா காதிலும் விழுந்துவிட்டது.

 

மார்க் ஹன்னா தனது அலுவலகத்தில் உட்கார்ந்தபின்னர் அந்த இளைஞனை அலுவலகத்துக்கு அழைத்தார். அவன் நினைத்தான், “இன்றோடு நம்ம ‘சீட்டு’ கிழிந்துவிட்டது; வீட்டுக்கு அனுப்பப்போகிறார்” என்று.

முதலாளி: “நீ என்னைப் பற்றி சொன்னதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். அது சரி, நான் உன் குடிசையில் வாழத் தயார்; நீ என் பங்களாவுக்கு வா; அந்தப் பணம் எல்லாம் எடுத்துக்கொள். அப்படிக் கிடைத்தால் என்ன செய்வாய்?”

இளைஞன்: “உங்களை முதலில் குடிசை வாழ்விலிருந்து உயர்த்தி மேலிடத்துக்கு வர வைப்பேன்”.

இதை கேட்டவுடன் முதலாளி மார்க் ஹன்னாவின் மனம் நெகிழ்ந்தது. உடனே அவனுக்கு சம்பள உயர்வு அளித்தார்.

 

சமயோசிதமான பதில்கள், ஒருவரின் அடி மனத்திலுள்ள நல்ல எண்ணத்தையோ கெட்ட எண்ணத்தையோ பளிச்செனக் காட்டிவிடும்.

 

Xxx

speech-clipart-1

கழுதை அல்ல; நீ ஒரு மிருகம்!

அமெரிக்க காங்கிரஸில் (பார்லிமெண்டின் ஒரு சபை) சாம்ப் கிளார்க் என்பவர் சபாநாயகராக இருந்த போது இந்தியானா மாகாண உறுப்பினர் ஜான்சன், மற்றொரு உறுப்பினர் பேசுகையில் குறுக்கிட்டு, “சீ, கழுதை, பேச்சை நிறுத்து” என்றார்.

 

கழுதை என்று திட்டுவது பார்லிமெண்டில் சொல்லக்கூடாத தகாத சொல் என்று அவர் உடனே ஆட்சேபனை எழுப்பினார். உடனே சபாநாயகர் அதைச் சபைக்குறிப்பிலிருந்து நீக்கினார். ஜான்சனும் மன்னிப்புக் கேட்டார். அப்படியும் விடாமல் தாக்குதலைத் தொடர்ந்தார்.

அந்த உறுப்பினரிடத்தில் கோளாறு இருக்கிறது; குறைபாடு இருக்கிறது என்றார்.

 

உடனே தாக்குதலுக்குள்ளான உறுப்பினர்,

என்ன கோளாறு, குறைபாட்டைக் கண்டீர்? தைரியம் இருந்தால் சொல்” – என்றார்.

உடனே ஜான்சன் சூடாக பதில் தந்தார், “அது எப்படி எனக்குத் தெரியும். மிருக வைத்திய சாலைக்குப் போய்ப் பார்; அவர் சொல்லுவார்” – என்றார்.

இப்பொழுது அந்த உறுப்பினரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. முதலில் கழுதை என்பதை நீக்குவதில் வெற்றி பெற்றார். ஆனால் அவர் மிருக (கால்நடை) மருத்துவ மனைக்குப் போய்ச் சோதனைக்குள்ளாக வேண்டும் – என்பதை நீக்க வைக்க முடியவில்லை. அப்படியே சபைக் குறிப்பேட்டில் பதிவாகியது.

கழுதை என்று நேரடியாகத் திட்ட காங்கிரஸ் (அமெரிக்க பார்லிமெண்ட்) அனுமதிக்காவிட்டாலும் ஒருவரை மிருக வைத்தியசாலைக்குப் போய் உன்னைச் சோதித்துக் கொள் என்று சொல்லுவதை அனுமதித்தது. இதுதான் சமயோசிதம்! அரசியல்வாதிக்கே உரித்தான பேச்சுத் திறமை!!

–சுபம்–