1982ம்
ஆண்டில் மங்கை பத்திரிக்கையில் வந்த கட்டுரையை இத்துடன் இணைத்துள்ளேன். தமிழ்
நாட்டுக் கட்சிகள் எப்படி பிளவுபட்டன, எப்படி உதயமாயின
என்பதை விளக்கும் வரலாறு இது. வருங்கால சந்ததியினர் அறிய வேண்டிய விஷயம்
எழுதியவர்- ராஜலட்சுமி இளமதி
இதைப் படிப்பதற்கு இதை கம்ப்யூட்டரில்
இதை இறக்கி பெரிதாக்கலாம்.
மாலை மலர் 2019, ஜூலை
20ஆம் தேதி இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
தமிழகத்தின் தனிப்பெரும்
சகாப்தம் : சிவாஜி கணேசன்!
ச.நாகராஜன்
நடிப்புக்கு ஒரு திலகம்
அறிவியல் விளைவித்த அதிசயங்களுள் ஒன்று திரைப்படம். இந்தக் கலையில்
பல்வேறு துறைகள் உருவாக லட்சக்கணக்கானோர் இதில் ஈடுபட்டனர். உலகெங்கும் இதுவரை சுமார்
ஐந்து லட்சம் திரைப்படங்கள் உருவாகியுள்ளன என்பது மலைக்க வைக்கும் ஒரு செய்தி.
புதிதாக உருவான இந்தக் கலைக்கு இலக்கணம் என்பது இல்லை என்ற குறையைப்
போக்க சிவாஜி கணேசன் நடிப்புக்கு ஒரு இலக்கணம் வகுத்தார். காட்சிக்குக் காட்சி, கணத்திற்குக்
கணம் மாறி ஓடும் திரைப்படக் கதையோடு ஒன்றி அதற்கு ஈடு கொடுத்து பாத்திரங்களை நம் கண்
முன்னே கொண்டு வந்து நிறுத்தி, ஆனந்தம் அடையச் செய்வது, அழ வைப்பது, கோபப்பட வைப்பது,
சிருங்காரத்தில் தோய்ப்பது என்று உணர்வுகளின் உச்சத்தில் ஏற்றி கோடிக்கணக்கானவரை மகிழ்வித்தவர்
சிவாஜி.
விழுப்புரம் சின்னையா
கணேசன் எளிய குடும்பத்தில் பிறந்தவர். (தோற்றம் 1-10-1928 மறைவு 21-7-2001). இயல்பாகவே
நடிப்புக் கலைக்கெனவே பிறந்தவர் போல நாடகங்களில் பிரகாசிக்க ஆரம்பித்தவர் 300 தமிழ்த்
திரைப்படங்களில் நடித்துக் கொடிகட்டிப் பறந்தார். 9 தெலுங்குப் படங்கள், 2 ஹிந்திப்
படங்கள், ஒரு மலையாளப் படத்திலும் நடித்துப் புகழ் பெற்றார்.
1952இல் திரையுலகில் நுழைந்தவர் இறுதி வரை தனது திறமையை மக்களின்
முன் வைத்து மனமகிழ்ந்தார்; லட்சக்கணக்கானோரை மனம் மகிழ வைத்தார்.
நவரஸங்களையும் முகத்தில் தேக்கி வைப்பது, அதைக் கண நேரத்தில்
காட்சிக்குத் தக காண்பிப்பது சிவாஜிக்குக் கை வந்த கலை.
கட்டபொம்மன் முதல் கர்ணன் வரை
வீரபாண்டிய கட்டபொம்மனைப் பார்த்தவர் தற்போது இல்லை. ஆனால் சிவாஜி
கட்டபொம்மனை அப்படியே கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தினார். அடடா! என்ன ஒரு கம்பீரமான
தோற்றம்! ‘எங்களோடு வயலுக்கு வந்தாயா’ என்று வீர வசனத்தில்
விளையாடும் குரல் வளமும், போரில் வீர கர்ஜனை முழங்கப் புறப்படும் பாங்கும் வார்த்தைகளின்
வர்ணனைக்கு அப்பாற்பட்டவை. வீரத்திற்கு ஒரு திலகம் சிவாஜி கணேசன்.
தமிழ் மன்னன் ராஜராஜ சோழனை இன்று காண முடியுமா? முடியும் என
நிரூபித்தார் சிவாஜி. படம் முழுவதும் தமிழனின் சிறப்பு ஓங்கி நிற்பதைக் கண்டு தமிழ்
நெஞ்சங்கள் குளிரும்!
திருவருட்செல்வராக அப்பரை அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்தி
அருள் பொங்கும் முகத்தைக் காட்டினார் சிவாஜி. காஞ்சி பெரியவரை நினவில் கொண்டு நடித்தேன்
என்று அவர் கூறினார்; பெறுதற்கரிய காஞ்சிப் பெரியவரின் பாராட்டையும் ஆசியையும் பெற்றார்.
மஹாபாரதத்தில் சிக்கலான ஒரு கதாபாத்திரம் கர்ணன். பலவித தர்மசங்கடங்களுக்கு
ஆளான, ‘உள்ளத்தில் நல்ல உள்ளமான’, அற்புத கர்ணனைச் சொல்லால் வடித்து விட்டார் வியாஸர். அதை நேரில்
காண்பிப்பது சாத்தியமா? சாத்தியமே என்று கணத்திற்குக் கணம் நிருபித்து மக்களை அதிசயிக்க
வைத்தார் சிவாஜி.
தேசபக்தியை ஊட்டி சுதந்திரத்திற்கு வித்திட்ட கப்பலோட்டிய தமிழனான
வ.உ.சியை அப்படியே லட்சக் கணக்கானோரின் முன் கொண்டு வந்து நிறுத்தியபோது கடைசியில்
கிழிந்த கோட்டுடன் அவர் செல்வது நெஞ்சத்தை உருக்கி அழ வைத்தது.
போட்டியை விரும்பி ஏற்பவர் அவர். தருமியாக நடித்து சக்கை போடு போட்ட நாகேஷ் உற்சாக மிகுதியால் திரைப்பட வசனத்தில் இல்லாத சிலவற்றைத் தானே சேர்த்து நடிக்க, இதை அறிந்து கொண்ட அவர், “அட, எனக்கே தெரியாம, பிரமாதமா செஞ்சுட்டியே” என மனம் திறந்து பாராட்டினார். இப்படிப்பட்ட ஒரு சிறந்த கலைஞனின் பாராட்டைப் பெற்ற நாகேஷ் அதைத் திருப்பித் திருப்பிக் கூறி பெருமிதம் கொள்வார்.
படமே ஒரு போட்டியில்
தான் ஆரம்பம். கதையோ ஆனந்தவிகடனில் வெளியாகி ஆயிரக்கணக்கான வாசகர்களை வாராவாரம் கவர்ந்த
நாவல்- கொத்தமங்கலம் சுப்பு எழுதியது – தில்லானா மோகனாம்பாள். பத்மினியும் சிவாஜியும்
போட்டி போட்டுக் கொண்டு நடிக்க இசைமேதை சிக்கல் சண்முகசுந்தரத்தை – நாதஸ்வர வித்வானை
– அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்தி மகிழ வைத்தார் சிவாஜி.
28 விநாடிகளில் ஒரு குட்டிச் சரித்திரம்
கை கொடுத்த தெய்வம்
படத்தில் பாரதியாராக சிந்து நதி மிசை நிலவினிலே பாடலில் அவர் காண்பிக்கும் முக பாவங்கள்
ஒன்றே அவர் நடிப்புக் கலை மன்னன் என்பதைப் பறை சாற்றப் போதுமானது. ஆறு நிமிடங்கள்
18 விநாடிகள் நீடிக்கும் அந்தப் பாடலில் சுமார் 28 விநாடிகளில் அவர் காண்பிக்கும் முக
பாவங்கள், கண்ணசைவுகள் …. என்ன ஒரு பெருமிதம்! நடிகர் திலகத்தின் குட்டிச் சரித்திரம்
இந்தச் சில விநாடிகள்!
உடல் பேசும் மொழி
பாடி லாங்குவேஜ் எனப்படும் உடல் பேசும் மொழிக்கு ஒரு எடுத்துக்காட்டு
சிவாஜி கணேசன். ராஜாஜி பார்த்து மகிழ்ந்து போற்றிய படம் சம்பூர்ண ராமாயணம். அதில் அவர்
சிவாஜியின் நடிப்பை வெகுவாகப் பாராட்டினார்.
அயோத்தி ஒளியிழந்து களையிழந்து இருப்பதைப் பார்க்கிறான் பரதன்.
ஏதோ ஒரு தாங்கொணா விபரீதம் நடந்து விட்டதைக் குறிப்பால் உணர்கிறான். சாரதியை நோக்கி
விரலை அசைக்கிறான். அந்த விரல் அசைப்பு எந்த நடிப்பையும் மிஞ்சிய மொழி. இப்படி ஒவ்வொரு
படத்திலும் அவரது உடல் மொழியைச் சுட்டிக் காட்டும் கணங்களை மட்டும் தொகுத்தால் அது
நடிப்புக்கான என்க்சைக்ளோபீடியாவாக மாறும்; எதிர்கால சந்ததியினருக்கு உதவும்.
அவர் பட்டத்தைத் தேடிப் போகவில்லை. அவரை நாடி விருதுகள் வந்தன.
செவாலியே விருது. பத்ம பூஷண் விருது, தாதா சாகேப் பால்கே விருது உள்ளிட்ட பல விருதுகள்
அவரைத் தேடி வந்தன
அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி நயாகரா நகருக்கு ஒரு நாள் மேயராக
சிவாஜியை நியமித்து கௌரவப்படுத்தியது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சம்பவம்.
அமெரிக்காவிலிருந்து சிவாஜி வெற்றியுடன் வந்ததைப் பாராட்டி எம்.ஜி.ஆர் நடிகன் குரலில்
எழுதிய கட்டுரை அவர்களின் இணக்கத்தையும் பரஸ்பர பாராட்டுதலையும் காண்பிக்கும் ஒன்று.
குடும்பத்தின் ஏற்படும் பாச உணர்வுகள், சிக்கல்கள் இவற்றை சிவாஜி
நடிப்பில் கையாண்ட விதமே தனி.பாசத்திற்கு ஒரு பாசமலர், ஊனமுற்றவனாக வந்து நெகிழவைக்க
ஒரு பாகப்பிரிவினை, படிக்காத மேதையாக வந்து அழ வைக்க ஒரு படிக்காத மேதை, எழுத்தாளராக
வந்து பெருமிதப்படுத்த ஒரு பாவை விளக்கு, இரட்டை வேடத்தில் வந்து மாறுபட்ட நடிப்பை
ஒரே படத்தில் காண்பிக்க ஒரு உத்தம புத்திரன் .. விவசாயியாக, நீதிபதியாக, வக்கீலாக,
டாக்டராக .. எதை விட?! எதைச் சொல்ல??!!!!
சக கலைஞர்களை ஊக்கியவர்
சிவாஜி என்றாலே பாடல் காட்சிகளுக்கு ஒரு தனி மவுசு உண்டு. மேலை
நாட்டு படங்களில் இல்லாத ஒரு அம்சம் இந்தப் பாடல் காட்சிகளே. அதை மெருகூட்டி ஆச்சரியப்பட
வைத்தவர் சிவாஜி.
வசந்த முல்லை போலே வந்து, முல்லை மலர் மேலே, தேன் உண்ணும் வண்டு,
போனால் போகட்டும் போடா – முடிவில்லாத பட்டியல் இது. இதில் அவர் காட்டும் சிருங்கார
பாவங்கள் உள்ளிட்ட நவரஸங்கள் அவர் இதற்கெனவே பிறந்தவர் என்பதைச் சொல்லாமல் சொல்லும்.
பாடலைப் பதிவு செய்யும் ரிகார்டிங் போதும் அவர் அங்கு வந்து
பாடகர்களை உற்சாகப்படுத்துவது வழக்கம். கவிஞர்கள், இயக்குநர்கள், மற்றும் இதர தொழில்துறை
நண்பர்களும் அவரைப் போற்றிக் கூறும் சம்பவங்கள் எண்ணிலடங்கா.
இப்படிப்பட்ட ஒரு திலகத்தை (கவிச் சக்கரவர்த்தி கம்பன் மிக உயரிய
அரிதான பட்டத்தை சீதைக்கு மட்டுமே கொடுத்திருப்பது கவனிக்க வேண்டிய ஒன்று. வனிதையர்
திலகம் என சீதையை அவன் குறிப்பிட்டான்!) – நடிகர் திலகத்தைப் பெறத் தமிழகம் பெருந்தவம்
செய்திருந்ததோ!
காலத்தால் அவர் பூதவுடல் மறைந்தாலும் அவர் புகழ் மறையுமா என்ன?
அது எதிர்கால சந்ததியினருக்கு – குறிப்பாகத் திரைப்படத் துறையினருக்கு உத்வேகம் ஊட்டும்.
தமிழகத்தின் தனிப்பெரும் சகாப்தம்
சரி இப்படிப்பட்ட ஒரு மகோன்னத மனிதரை ஒரே வரியில் என்ன சொல்லி
அழைக்கலாம்?
‘தமிழகத்தின் தனிப் பெரும் சகாப்தம் – சிவாஜி கணேசன்’ என்றே சொல்லி
முடித்து விடலாம்!
ஆங்கில அகராதி Epoh making person -ஐப் பற்றி என்ன விளக்கம்
தருகிறது? A
human being
marked with simplicity, clarity, and good sense beyond praise என்று தானே!
அப்படியானால் தனிப்பெரும் சகாப்தம் என்ற சொற்றொடர் நமது சிவாஜிக்குப்
பொருத்தம் தானே!
நல்ல ஆரோக்கியம் என்கிறோமே ஆரோக்கியம் என்றால் என்ன?
உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சமூக ரீதியாகவும் நன்றாக
இருந்து வாழ்க்கையை முழு வாழ்க்கையாக நீடித்த ஆயுளுடன் வாழச் செய்வதே ஆரோக்கியம்.
வியாதிகள் இல்லாமல் இருப்பது தான் ஆரோக்கியம் என்பதல்ல,
அப்படி ஒருவேளை வியாதிகளோ உடல் ரீதியான பிரச்சினைகளோ வந்தாலும் அதிலிருந்து
சீக்கிரமே குணமடைந்து எழச் செய்வது தான் நல்ல ஆரோக்கியம் எனப்படுகிறது.
நல்ல ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக அமைவது நான்கு
காரணங்கள். 1)மரபணு ரீதியாக வருவது 2) சூழ்நிலை ரீதியாக வருவது 3) உறவுகள் ரீதியாக
வருவது 4) கல்வி
ஆரோக்கியமான உணவுத் திட்டம், உடல் பயிற்சி, வியாதிகள்
வருவதை உடனுக்குடன் அறிவது, அவற்றை நீக்க நல்ல உத்திகளைக் கையாளுவது இவை அனைத்துமே
ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழிகளாகும்.
உலக சுகாதார நிறுவனமான
WHO – WORLD HEALTH ORGANISATION 1948இல் ஆரோக்கியத்திற்கான விளக்கமாக,“Health is
a state of complete physical, mental and social well-being and not merely the
absence of disease or infirmity” என்று கூறியுள்ளது.
ஆரோக்கியம் என்பது
மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் நன்றாக வாழ்வது என்று சொல்லப்பட்டிருந்த அடிப்படை
இன்று சற்று விரிவடைந்து ஆன்மீக ஆரோக்கியம், உணர்ச்சி பூர்வமான ஆரோக்கியம், பொருளாதார
ரீதியான ஆரோக்கியம் என்றெல்லாம் கூறப்படுகிறது. மனமும் உடலும் சரியாக இருந்து மன அழுத்தம்
இல்லாமல் அமைதியாக வாழ்வதே ஆரோக்கிய வாழ்க்கை என்று சுருக்கமாகச் சொல்லி விடலாம்.
உடல் ரீதியான ஆரோக்கியம்
வியாதி இல்லாமல் உடல் இயக்கங்கள்
அனைத்தும் சரியாக இயங்கி வேலைத் திறனில் பூரணமாக இருந்து வாழ்வதற்கு, சரியான
சமச்சீரான உணவு, உடல் பயிற்சி, தேவையான ஓய்வு ஆகிய மூன்றும் அவசியம்.
உடல் ரீதியான ஆரோக்கியம்
வாழ்க்கை முறையை அபாயம் இல்லாமல் அதாவது நோயில்லாமல் அமைத்துக் கொள்வதில் இருக்கிறது.
சரியாக சுவாசிப்பது,
இதயத்தின் இயக்கம், தசைகளின் வலு, நெகிழ்வுத் தன்மை, உடல் அமைப்பு ஆகியவற்றை நல்ல ஆரோக்கியம்
தருகிறது. அத்துடன் மட்டுமின்றி பணியிடங்களில் அபாயம் இல்லாமல் ரிஸ்க் இல்லாமல் பணியாற்றும்
சூழ்நிலை, சரியான செக்ஸ் உறவு, ஆரோக்கியத்தை நீடித்து கொள்வதற்கான வழிமுறைகளைத் தவறாது
பின்பற்றுவது, புகையிலை, சிகரெட், மது ஆகியவற்றைத் தவிர்ப்பது, போதை மருந்துகளையும்
தடை செய்யப்பட்ட மருந்துகளையும் உட்கொள்ளாமல் இருப்பது ஆகியவையும் ஆரோக்கியத்திற்கு
இன்றியமையாதவை.
மன ரீதியான ஆரோக்கியம்
மன ரீதியான ஆரோக்கியம்
என்பதற்குச் சரியான வரையறுப்பைத் தருவது சுலபமல்ல. ஏனெனில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சூழ்நிலையையும்,
அனுபவத்தையும் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அது அமைகிறது.
மனச்சோர்வு, கவலை
இவை இல்லாமல் இருப்பது மட்டுமல்ல மன ஆரோக்கியம்.
வாழ்க்கையை ஜாலியாக
அனுபவிப்பது, பிரச்சினைகள் வரும்போது அதிலிருந்து மீள்வது, எப்போதும் பாலன்ஸாக சமச்சீர்
நிலையுடன் இருப்பது, ஆபத்து வரும்போது அதற்குத் தக நெளிவு சுளிவுடன் இருந்து
அதிலிருந்து மீள்வது, எப்போதும் பாதுகாப்புடனும் பயமின்றியும் இருப்பது இவை அனைத்தையும்
தருவது தான் மன ஆரோக்கியம்.
உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் ஒன்றை ஒன்று சார்ந்தவை.
நீடித்த வியாதியால் ஒருவன் படுத்த படுக்கையாகக் கிடப்பானாகில் அவன் மனச்சோர்வை
தானாகவே அடைவான்; மன ரீதியாக பாதிக்கப்படுவான்.
மனோவியாதி உடலை இளைக்க வைக்கும்; செயல்திறனைக் குறைக்கும்.
மரபணு ரீதியாக வரும் வியாதிகள்
ஆரோக்கியக் கேட்டை உருவாக்கும்.மோசமான சூழ்நிலைகளில் வாழ்வதும்
ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.
உலக சுகாதார நிறுவனம் கீழ்க்கண்ட
காரணிகள் ஒருவரின் ஆரோக்கியத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறது:
ஒருவர் எங்கு வாழ்கிறார் என்பதுஅவரது
சுற்றுப்புறம் எப்படி இருக்கிறது என்பதுமரபணு ரீதியான காரணங்கள்ஒருவரது
வருமானம்ஒருவரது கல்வி அறிவுஒருவர்
உறவினர்களுடனும் குடும்பத்தினரிடமும் எப்படிப் பழகுகிறார் என்பது
சமூக ரீதியான காரணங்கள்
பின்வருமாறு;ஒரு குடும்பம் எவ்வளவு பண வசதியுடன் இருக்கிறது
அல்லது அவர் சார்ந்த சமூகம் எப்படிப்பட்ட வசதியுடன் இருக்கிறது.
அவர் வாழுமிடத்தில் கொசு போன்ற தொல்லைகள்
இல்லாமல் இருக்கிறதா என்பது
பழக்க வழக்கங்கள், வாழ்க்கை நடைமுறைகள் –
இவற்றில் ஒருவர் தனது விருப்பத் தேர்வாக எதையெதைத் தேர்ந்தெடுக்கிறார் என்பது
நல்ல ஆரோக்கியத்தை
அடைவது எப்படி?
ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை
நாமே உடனடியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
நல்ல ஆரோக்கியம்
என்பது அன்றாடம் மேற்கூறிய அனைத்தையும் சரிபார்த்து தீயனவற்றைக் களைந்து நம்மை நல்வழிப்
படுத்திக் கொள்வதாகும்.
சரியான வழிகாட்டல்
(நீங்கள் படிக்கும் ஹெல்த்கேர் இதழில் வெளியாகும் கட்டுரைகள் சரியான வழிகாட்டிகளாக
அமையும்)
சரியான உணவுத் திட்டம்
சரியான உடல் பயிற்சிகள்
வியாதிகள் வருமுன்னரே
உடலை அவ்வப்பொழுது செக் செய்து கொள்ளல்
மனநலத்தை சீராக வைத்துக்
கொள்ளல்
சிகரெட், புகையிலை,
மது, போதை மருந்துகளை நீக்குதல்
பாஸிடிவ் அவுட் லுக்
எனப்படும் சரியான, நேர்மறை அணுகுமுறையை எதிலும் மேற்கொள்ளல்
உறவுகளைச் சீர்பட
அமைத்துக் கொள்ளல்
சமூகத்தோடு இணங்கி
வாழக் கற்றல்
நமது வாழ்க்கை முறை
பற்றிய நமது மதிப்பீடுகளை உயரிய ஒன்றாக அமைத்துக் கொள்ளல்
இவை அனைத்தும் அற்புதமான
ஆரோக்கியமான வாழ்வை மன ரீதியாக, உடல் ரீதியாக, சமூக ரீதியாக உறுதிப் படுத்தும்.
உடனடியாக நாம் செய்ய
வேண்டியது நமக்கென ஒரு செக் லிஸ்ட் (Check List –சரி பார்க்கும் பட்டியல்) தயாரித்து, அதை மதிப்பிட்டு முன்னேற வேண்டும், அவ்வளவு
தான்!
சென்னையைச்
சேர்ந்த ஜ்யோதிர்மயாநந்தா ஹிந்து பத்திரிகையில்
18-11-1998 இதழில் The greatness of Sanskrit என்று எழுதியுள்ள கடிதம் இது :
While some politicians run down
Sanskrit and vehemently oppose its introduction in our educational
institutions, the erudite scholars of the West who having realized its glory
and uniqueness and charmed by its elegance, have spoken about it in glowing
terms. The following excerpts from Sir Monier Williams introduction to his
monumental work, Sanskrit English Dictionary (brought out by the Oxford
University Press more than a century ago
– in 1872) should provide some food for thought to all concerned:
By
Sanskrit is meant the learned language of India – the language of its cultured inhabitants, the language of its religion, its literature and science – not by any means a dead language, but one still
spoken and written by educated men by all parts of the country, from Kashmir to Cape
Comorin, from Bombay to Calcutta and Madras. We are appalled by the length of some of India’s literary
productions (in Sanskrit) as compared with those of European countries. In some
subjects too, especially in poetical descriptions of nature and domestic
affections, Indian works do not suffer by comparison with the best specimens of
Greece and Rome while in wisdom, depth and shrewdness of their moral
apophthegms they are unrivalled. The Hindus are perhaps the only nation, except
the Greeks, who have investigated independently and in a true scientific manner
the potential laws which govern the
evolution of languages. More than this, the Hindus had made considerable
advances in astronomy, algebra, arithmetic, botany and medicine, not to mention
their superiority in grammar, long before some of these sciences were
cultivated by the most ancient nations of Europe.
Going through the above statement in
glorifications of Sanskrit by the renowned orientalist and professor of
Sanskrit in Oxford University, our present day secularists may dub him a
“communalist”, because he is vouchsafing the hard truth which is naturally
unpalatable.
Jyothirmayananda , Chennai
இன்னும் பல கடிதங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றையேனும்
அடுத்துக் காண்போம்.