Please click below for the article:
All posts in category திருவள்ளுவன் குறள்
வினவுங்கள் விடைதருவோம்: அறவாழி அந்தணன்
Posted by Tamil and Vedas on January 2, 2014
https://tamilandvedas.com/2014/01/02/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b5%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/
Albert Einstein and Thiruvalluvar
By London Swaminathan; Post No. 749 dated 17th December 2013.
Tiru Valluvar is the most popular Tamil poet and the author of Tirukkural which is called Tamil Veda. Valluvar lived at least 1500 years ago. Albert Einstein was the greatest physicist of our time. He was the author of the Theory of Relativity.Einstein was born in 1879 in Germany and died in 1955in Princeton, USA. Both were great thinkers in their own fields. Let me compare a few quotations of Einstein with the Tamil poet Valluvar.
ZEAL
“One should not pursue goals that are easily achieved. One must develop an instinct for what one can just barely achieve through one’s greatest efforts.” —Albert Einstein
All thought should be the thought of rising high though it fails; it is the nature of success. Your aspirations keep you on a higher plane (Tirukkural 596)
Though wounded with arrows, the elephant stands firm in his greatness; he who has spirit never loses heart when he fails (Tirukkural 597)
Let a man lift himself by himself; let him not degrade himself; for the self alone is the friend of the self and self alone is the enemy of the self. (Bhagavad Gita 6-5)
Purananuru verse 214 of Kopperum Chozan also advises everyone to Aim High. A person who wanted to hunt an elephant will come with an elephant after a successful hunt. A person who wants to hunt quails may come even without a single bird. So aim high in life.
LOVE
Gravitation cannot be held responsible for people falling in love. How on earth can you explain in terms of chemistry and physics so important a biological phenomenon as first love? Put your hand on a stove for a minute and it seems like an hour. Sit with that special girl for an hour and it seems like a minute. That is relativity.
—Albert Einstein
For those who are counting days for the final return, of the beloved so long away, A single day will drag on like seven (Tirukkural 1269)

WISDOM
The important thing is not to stop questioning —Albert Einstein
To discern the truth from whatever source it emanates Is the true quality of wisdom (Tirukkural 423)
VEGETARIANISM
Although I have been prevented by outward circumstances from observing a strictly vegetarian diet, I have long been an adherent to the cause in principle. Besides agreeing with the aims of vegetarianism for aesthetic and moral reasons, it is my view that a vegetarian manner of living by its purely physical effect on the human temperament would most beneficially influence the lot of mankind—Albert Einstein
It is inconsistent with the way of living compassion
To fatten oneself on the flesh of a fellow creature ( Tirukkural 251)
Those who have a vision that is not blurred by mental confusion,
Will not eat the meat of dead carcasses (Tirukkural 258)
EXPLAINING
If you can’t explain simply, you don’t understand it well enough—Albert Einstein
Those, who cannot express their thought acquired after deep study,
Are like a bunch of flowers without fragrance (Tirukkural 650)
GENIUS
Everybody is a genius. But if you judge a fish by its ability to climb a tree, it will live its whole life believing that it is stupid—Albert Einstein
One should not slacken under a feeling that a job is too difficult to be done; effort will give the greatness necessary to do it (Tirukkural 611)
T hose who labour on untiringly and without fault will overcome even fate (Tirukkural 620)

IDLENESS
The world will not be destroyed by those who do evil, but by those who watch them without doing anything—Albert Einstein
A person steeped in indolence without noble deeds will see his home ruined by growing vices (Tirukkural 604)
These four are pleasure boats of loss and ruin: Procrastination, Forgetfulness, Idleness and Dozing (Tirukkural 605)
*******
Where Parimelazakar went wrong!!
“The Lord Indra himself is effective witness to the prowess of a sage
Who has really conquered the five senses” (Tirukkural 25)
(Indra, the king of the Devas himself, will bear testimony to the will power of those who curbed the desires of the five senses).
Parimel azakar interpreted it wrongly. He took it as an insult to Indra. But Manakkudavar, another old commentator, has correctly interpreted it. Indra has trepidations of the heart, whenever a sage effectively controls all his senses and reaches the height of the penance, lest he should ultimately endanger his own position—and so naturally, he is witness to the ascetic’s prowess. Dr S M Diaz has rightly pointed out it.
This is confirmed by other references in Hindu and Buddhist scriptures:
“And Indra through Brahmacharya brought the heavenly lustres to Devas” (AV 11/5/19)
“It was by the watchfulness that Indra became the chief of the Gods” ( Buddha in Dhammapada 2-10)
“Who was Tiruvalluvar?” was written and posted in this blog sometime ago. I quote only GU Pope’s verse below:
‘’Sage Valluvar, priest of the lowly clan,
No tongue repeats, no speech reveals thy name;
Yet, all things changing, dieth not thy fame
For thou art bard of universal man;
And still thy ‘book’ above the waters wan’
Virtue, true wealth, and joy, and being’s aim,
In sweetest mystic couplets doth proclaim
Where winds sea-wafted palmy forests fan.
Haply undreamed of ‘visions’ glad thine eyes
In reals beyond thy fabled ‘seven fold birth’,
And clouds of darkness from thy spirit roll;
While lands far off have heard with strange surprise
Faint echoes of thy song. Though all the earth
Men hail thee brother, seer of spotless soul’’
—Written by Dr G.U. Pope
From the book The Sacred Kural by H.A.Popley, year 1931
Also read my earlier post: Who was Tiruvalluvar? In this blog.
Contact swami_48@yahoo.com
******************
Posted by Tamil and Vedas on December 17, 2013
https://tamilandvedas.com/2013/12/17/albert-einstein-and-thiruvalluvar/
திருவள்ளுவர் யார்?
இந்திரன் குறித்து பரிமேலழகர் செய்த தவறு!
By London Swaminathan; Post No. 748 dated 17th December 2013.
–லண்டன் சுவாமிநாதன்
தமிழ் வேதமான திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மரில் பரிமேலழகர் எழுதிய உரையே மேலானது என்பது அறிஞர் உலகம் ஒருமனதாக ஏற்றுக்கொண்ட முடிவு. ஆயினும் யானைக்கும் கூட அடி சறுக்கும் என்பது போல அவரும் சில தவறுகளைச் செய்திருக்கிறார். இன்று ஒரு குறளை மட்டும் காண்போம்:
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமான்
இந்திரனே சாலுங் கரி (குறள் 25)
‘ஐம்புல ஆசைகளை அறவே ஒழித்த ஒருவனுடைய ஆற்றலுக்கு தேவர் கோமான் இந்திரனே சான்று பகர்வான்’ என்பது இதன் பொருள்.
இந்தப் பொருளை எழுதி அதற்குப் பின் ஒரு ஆச்சர்யக் குறியையோ கேள்விக்குறியையோ போட்டுவிட்டால் அர்த்தம் அனர்த்தம் ஆகிவிடும். பரிமேலழகர் இது இந்திரனைக் கிண்டல் செய்து எழுதிய இகழ்ச்சிக் குறிப்பு என்று கொண்டுவிட்டார். அவன் அகல்யை இடத்தில் நடந்துகொண்ட ஒரு சம்பவத்தை வைத்துப் பலரும் இந்திரனை தவறாக எடைபோட்டுவிட்டனர்.
இந்துமத நூல்களிலும் புத்தமத வேதப் புத்தகமான தம்மபததிலும் இந்திரனை உயர்வாகவே கூறியுள்ளனர். பதின்மர் உரையில் மணக்குடவர் எழுதிய உரையில் இதை இகழ்ச்சிக் குறிப்பாகக் கொள்ளாமல், பாராட்டும்படியாகவே எழுதியுள்ளார். இதை டாக்டர் எஸ்.எம்.டயஸ் அவர்கள் எழுதியுள்ள ஆங்கில மொழிபெயர்ப்பில் குறிப்பிட்டு மணக்குடவர் உரையே திருவள்ளுவரின் மொத்த அணுகுமுறைக்கு இசைவாக இருக்கிறது என்றும் எழுதியிருக்கிறார்.
எனது கருத்து:
“இந்திரன் அவனுடைய பிரம்மசர்யத்தால் தேவர்களுக்கு தேஜஸை (ஒளியை) உண்டாக்கினான்”- என்று அதர்வ வேதம் கூறுகிறது ( அதர்வணம் 11-5-19).
“இந்திரன் மிகவும் கவனமாக/விழிப்பாக இருந்ததால் தேவர்களுக்கு எல்லாம் இறைவன் ஆனான்” – என்று புத்தர் தம்மபதத்தில் (2—10) கூறுகிறார்.
பூமியில் யாராவது தவம் செய்தாலோ, நூறு அஸ்வமேத யாகம் செய்தாலோ, தனது பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்று இந்திரன் நடுங்கத் துவங்கி மண், பெண், பொன் ஆசைகளால் துறவிகளைக் கவிழ்த்துவிடுவான். ஆகையால் மணக்குடவரும் மற்றவர்களின் தவ வலிமை இந்திரனை நடுங்கச் செய்வதே “ இந்திரனே சான்று பகர்வான்” என்பதன் பொருள் என்கிறார். பரிமேலழகர் சொல்லுவது போல இந்திரனை வள்ளுவர் பகடி செய்யவில்லை.
மணக்குடவர் உரை: ஐந்து= நுகர்ச்சியாகிய ஐந்து. இந்திரன் சான்று என்றது இவ்வுலகின் கண் மிகத் தவம் செய்வார் உளரானால், அவன் தன் பதம் இழக்கின்றானாக நடுங்குமாதலான், இது தேவரினும் வலியன் என்றவாறு.
பரிமேலழகர் உரை: ஐந்தும் என்னும் முற்றும்மையும் ஆற்றர்க்கு என்னும் நான்கனுருபும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. தான் ஐந்து அவியாது சாபம் எய்தி நின்று அவித்தானது ஆற்றல் உணர்த்தினானாகலின் ‘இந்திரனே சாலுங் கரி’ என்றார்.
திருவள்ளுவர் யார்?
மேற்கோள் விளக்கக் கதை அகர வரிசை,இரண்டாம் பகுதி, கருப்பக்கிளர் சு.அ. இராமசாமிப் புலவர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், திருநெல்வேலி-6, 1963 பக்கம் 714 கதை 805
805.பகவன் கதை
இவர் பெருஞ்சாகரன் என்னும் அந்தணனுடைய புதல்வர். தம்முடைய ஊரிலிருந்து காசிக்குப் பயணம் சென்றார்; திரும்பிவந்தார். தொண்டை மண்டலத்தில் அகரம் என்னும் ஊரில் தங்கியிருந்தார். அப்பொழுது ஆதி என்னும் பெயருடைய அந்தண மாது ஒருத்தி அங்கு வந்தாள். இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. ஔவை, அதிகமான், உப்பை, உறுவை, வள்ளி, கபிலர், திருவள்ளுவர் என்னும் பெயரினுடைய மக்கள் எழுவர் தோன்றினர். இவர்களில் திருவள்ளுவர் என்பவர்தாம் தமிழ் மறையாகிய திருக்குறளை உலகிற்கு வழங்கியவர். ஔவை, கபிலர் ஆகியவர்களும் சிறந்த புலவர்களாகவே திகழ்ந்தனர். தம்முடைய மக்கள் அறிவாளிகளாய் உலகிற்குப் பயன்பட்டதைக் கண்டு பகவனும் ஆதியும் மிகவும் களிப்படைந்தார்கள். தம்மைப் பார்க்கிலும் தம் மக்கள் அறிவுடைவர்களாக இருத்தல் உலகத்திற்கு மிகுந்த நன்மையை உண்டாக்கும் என்பதை இவர்கள் தம்முடைய மக்கள்பாற் கண்டு தெளிந்தனர்.
Also read my earlier post: Who was Tiruvalluvar? In this blog.
Contact swami_48@yahoo.com
Posted by Tamil and Vedas on December 17, 2013
https://tamilandvedas.com/2013/12/17/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/
வள்ளுவன் சொன்ன புராண, இதிஹாசக் கதைகள்
எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்
இதைப் படிப்பதற்கு முன் எனது முந்தைய கட்டுரைகளைப் படிக்கும்படி வேண்டுகிறேன்: 1. வள்ளுவர் சொன்ன சுவையான கதைகள் 2.வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன் 3. வள்ளுவனும் வன்முறையும் 4.Who was Tiruvalluvar?
புராண, இதிஹாசக் கதைகள்
குறள் 495-ல் மறைமுகமாக கஜேந்திர மோட்சக் கதையைச் சொல்கிறார்:
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.
பொருள்:ஆழமான நீர் நிலையில் இருந்தால் முதலை வெற்றிபெறும். அதே முதலை வெளியே வந்தாலோ மற்ற உயிரினங்கள், அதை எளிதில் வென்றுவிடும்.
முதலை வாயில் சிக்கிய கஜேந்திரனை காப்பாற்ற விஷ்ணுவே வரவேண்டி இருந்தது.
கூடா ஒழுக்கம் என்ற அதிகாரம் முழுதும் –271 முதல் 280 வரை– ஒவ்வொரு குறளும் ஒரு புராண, இதிஹாசக் கதையை மனதில் வைத்தே எழுதியது போல இருக்கிறது.
புலித்தோலைப் போர்த்திக் கொண்டு மேய்ந்த பசுவின் கதை ((273), மகாபலிபுரத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள ருத்திராட்சப் பூனை கதை (please read my earlier post THE STORY OF HYPOCRITICAL CAT) ஆகியனவற்றுக்குப் பொருத்தமான குறள்கள் இவை.
பசு-புலித்தோல் கதை ஈசாப் முதல் பல நாட்டுக் கதைகளில் வருகின்றன. ஆட்டுத் தோல் போர்த்திய ஓநாய் என்றும், சிங்கத் தோல் போர்த்திய கழுதை என்றும் பல கதைகள் உண்டு.
குறள் 269—ல் மார்கண்டேயர், சத்தியவான் சாவித்திரி கதையைக் கூறுகிறார்:
‘’கூற்றம் குதித்தலும் கைகூடும்’’ (எமனையும் வெல்ல முடியும்) என்பார் வள்ளுவர்
பிறனில்விழையாமை என்னும் அதிகாரத்தில் (141—150), ராவணன், இந்திரன் கதைளைச் சொல்கிறார்.
ததீசி முனிவரின் தியாகம்
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
பொருள்: அன்பில்லாதவர்கள் எல்லாப் பொருள்களையும் தமக்கே உரிமை ஆக்கிக் கொள்வர். ஆனால் அன்புடையாரோ, தனது எலும்பையும் கூடப் பிறர்க்கு அளிப்பர் (72).
ததீசி என்னும் முனிவர் தனது முதுகு எலும்பையே இந்திரனுக்குக் கொடுத்தார். அசுரர்களைக் கொல்வதற்கு ஆயுதங்கள் தேவைப்பட்டது. அப்போது எலும்பினால் செய்யப்பட்ட வஜ்ராயுதமே அசுரர்களைக் கொல்ல வல்லது என்று அறிந்தான். உடனே ததீசி முனிவரை அணுகினான். மனித குலத்தைக் காக்க தனது முதுகு எலும்பையே கொடுத்தார் ததீசி. அதையே வள்ளுவன் ‘’என்பும் உரியர் பிறர்க்கு’’ என்பான்.
‘’அடி அளந்தான்’’ என்ற சொற்றொடர் மூலம் (610) வாமனாவதாரக் கதையையும், ‘’இந்திரனே சாலுங்கரி’’ என்ற சொற்றொடர் மூலம் இந்திரன்—அகல்யா, இந்திரன்-நகுஷன் போன்ற கதைகளையும் படிக்கலாம்.
குறள் 801ல் கண்ணப்ப நாயனார் கதை, சபரி-ராமன் கதை, சாக்ரடீஸ்-சிவபெருமான் விஷம் அருந்திய கதை ஆகியவற்றைக் காணலாம்.
பழமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு (801)
பொருள்: பழகிய நண்பர் உரிமையால் செய்யும் எதையும் ஏற்றுக் கொள்ளவேண்டும்.
கபில முனிவரின் கோபம்
‘’குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்தல் அரிது’’ (குறள் 29)
நல்ல குணவான்கள் சிறு பிழைகளையும் பொறுக்கமாட்டார்கள். இதற்கு முனிவர்களின் கோபம் பற்றிய கதைகள் புராணத்தில் நிறைய இருக்கின்றன. அவைகளில் மிகவும் முக்கியமானது சகரர்கள்—கபில முனிவர் கதையாகும். சகர மன்னன் அஸ்வமேத யாகம் செய்த போது அவனுடைய குதிரை சென்ற இடமெல்லாம் அவனது புதல்வர்கள் 60,000 பேரும் அதைத் தொடர்ந்து சென்றனர். கபிலனின் தவத்தைக் கண்டு அஞ்சிய இந்திரன், அவருக்குக் கெட்ட பெயர் உண்டாக்குவதற்காக சகரனின் குதிரையைத் திருடி கபில முனிவருக்குப் பின்னால் கட்டிவிட்டனன். சகரனின் பிள்ளைகள் கபிலரைத் திருடன் என்று எண்ணி துன்புறுத்தவே அவர் தனது கோபக் கனலால் அந்தப் பிள்ளைகளை எரித்து விடுகிறார். பின்னர் பகீரதன் தவம் செய்து கங்கையைக் கொணர்கிறார். குணம் என்னும் குன்று ஏறி நின்றாரைப் பகைக்கக் கூடாது.
தெய்வந்தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை (குறள் 55)
கணவனையே கண்கண்ட தெய்வமாகப் போற்றிய வள்ளுவனின் மனைவி வாசுகி செய்த அற்புதங்கள், கற்புக்கரசிகளின் மாண்பைக் காட்டும். அரைக் கிணற்றில் தண்ணீர் வாளி நின்றதும், ‘’கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா’’ என்று முனிவரையே சாடியதும், சாவித்திரி எமனுடன் போராடி கணவன் உயிரை மீட்டதும், கண்ணகி மதுரை மாநகரையே எரித்ததும் இதற்குச் சில உதாரணங்கள்.
வேனன், நகுஷன் போன்ற கொடுங்கோலர் அழிந்த கதையை ‘கொடுங்கோன்மை’ அதிகாரத்தில் காணலாம்
சந்யாசிகள் நினைத்தால் ஒரு பேரரசையே உருவாக்கலாம், அழிக்கலாம் என்பதை தவம் என்ற அதிகாரத்தில் கூறுகிறார்:
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும் (264)
மொகலாயர்களின் கொடுங்கோலாட்சியை வீழ்த்த சிவாஜிக்கு அருள்புரிந்த சமர்த்த ராமதாசரும், அதற்கு முன் விஜயநகர சாம்ராஜ்யத்தை அமைக்க ஹரிஹரன், புக்கன் என்ற ஆட்டிடையர்களுக்கு அருள்புரிந்த வித்யாரண்யரும், ராமராஜ்யம் நிறுவ சபதம் பூண்ட மஹாத்மா காந்திக்கு உதவிய புராணக் கதைகளும் இதற்கு உதாரணங்கள்.
ஒவ்வொரு குறளுக்கும் உதாரணமான கதை நமது தமிழ்மொழி, வட மொழி நூல்களில் உள்ளன. விரிவஞ்சி இத்தோடு நிறுத்துகிறேன்.
(இலக்கியத் திருடர்களுக்கு அன்பான வேண்டுகோள். இந்தக் கட்டுரையை வேறு எங்காவது வெளியிடுகையில் லண்டன் சுவாமிநாதன் எழுதியது என்றோ அல்லது பிளாக் பெயரையோ வெளியிட்டு தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டுகிறேன். தமிழுக்குத் துரோகம் செய்யாதீர்கள். தமிழ்த் தாய் பொறுக்கமாட்டாள்.)
கீழ்கண்ட எனது கட்டுரைகளையும் படிக்க வேண்டுகிறேன்:
‘’Strange Link between Lord Shiva, Socrates and Thiruvalluvar’’– posted in this blog September 18, 2011.
Posted by Tamil and Vedas on July 30, 2013
https://tamilandvedas.com/2013/07/30/%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%bf/
Who was Tiruvalluvar?
Valluvar Staue with Brahmin’s sacred thread;14th century, Chennai
by London Swaminathan
‘’Sage Valluvar, priest of the lowly clan,
No tonge repeats, no speech reveals thy name;
Yet, all things changing, dieth not thy fame
For thou art bard of universal man;
And still thy ‘book’ above the waters wan’
Virtue, true wealth, and joy, and being’s aim,
In sweetest mystic couplets doth proclaim
Where winds sea-wafted palmy forests fan.
Haply undreamed of ‘visions’ glad thine eyes
In reals beyond thy fabled ‘seven fold birth’,
And clouds of darkness from thy spirit roll;
While lands far off have heard with strange surprise
Faint echoes of thy song. Though all the earth
Men hail thee brother, seer of spotless soul’’
—Written by Dr G.U. Pope
From the book The Sacred Kural by H.A.Popley, year 1931
Tradition tells us that he was a weaver of the little town of Mayilapur—the village of the peacock—and this may perhaps record the truth. For this reason he is often called ,’the Weaver of Mayilapur’ he was said to have belonged to a low caste, the caste of Valluvars, who were then, and are still, the priests of the outcaste group, and so he has been knwn from time immemorial, as Tiruvalluvar or Sage Valluvar. Tradition makes him out to have been one of a family of seven, born of an illegitimate union between a Brahman and an outcaste woman, among the others being poets Kapilar and Avvaiyar; but there is absolutely no evidence for the truth of this tradition, nor does it appear until very late.
Valluvar lived at least 1500 years ago. Prof. Vaiyapuri Pillay gave the reasons for dating him in post Sangam period. His style of language and his usage of Tamil words help us to fix his date. He used Brahminical language like ‘Acharam of the low life’ and Hindu Sanskrit phrase ‘Dhanam and Tapas’ and many Sanskrit words. He mentioned only Hindu Gods such as Lakshmi, Indra, Vamana avatar (adi Alanthan), Thamarai Kannan (Vishnu), Brahma etc.
In his very first chapter on Prayer to God, he mentioned Pada Namaskaram in 7 out of 10 couplets. This is typical Hindu. He used lot of Puranic, epic and Pancha tantra stories in his couplets. Tamil Nadu Government’s Date for Valluvar: 31 BC
Singaravelu Mudaliyar’s Abhidana Chintamani (Tamil Encyclopaedia, page 849) gives the following details:
Father of Valluvar: Bhagavan
Mother’s name: Adhi
Patron and Friend: Elela Singhan, a business man
Another name of Valluvar’s father :Yali Dutta, a Brahmin (according to Gnanamirtham)
Valuuvar’s Wife: Vasuki who did several miracles because of her chastity
Valluvar clashed with Madurai Sangam Tamil poets who refused to accept his Tirukkural ( a book of moral ethics with 1330 couplets). At last they accepted his book.
Valluvar’s temple : Mylapore, Chenai
Death: Tamil Month Masi, Star: Uttara.
Name given by Jains: Elacharya
Pictures are used from other websites; thanks; swami_48@yahoo.com
Posted by Tamil and Vedas on July 24, 2013
https://tamilandvedas.com/2013/07/24/who-was-tiruvalluvar/
வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன்
Picture: Tamil Poet Valluvar’s statue at SOAS, University of London
பொய்யா மொழிப் புலவன் திருவள்ளுவன் ஒரு பெரிய சம்ஸ்கிருத அறிஞன். அவன் செய்த திருக்குறள் போல வேறு எம்மொழியிலும் நூல் இல்லை. இனி ஒரு காலத்திலும் இவ்வளவு அழகாக ஒரு புலவர் செய்ய முடியுமா, அப்படியே செய்தாலும் அதை வள்ளுவனை ஏற்றார் போல உலகம் ஏற்குமா என்பதெல்லாம் கேள்விக்குறியாகவே தொக்கி நிற்கும். இப்படி வான் புகழ் பெற்று தேன் தமிழில், தென் தமிழில், தெள்ளு தமிழில் குறள் செய்த வள்ளுவன் தமிழில் ஒரு அமைதிப் புரட்சியையும் செய்தான். தமிழில் முதல் தடவையாகத் துணிந்து சம்ஸ்கிருதத்தைப் புகுத்தினான். அதனால் தமிழ் அழகு பெற்றதே அன்றி சோபை குன்றவில்லை. மொழியைக் கெடுக்காமல், அளவோடு செய்தான். நம் காலத்தில் பாரதியார் செய்ததைப் போல.
வள்ளுவப் பெருமான், பகவத் கீதையைக் கரைத்துக் குடித்திருப்பாற் போலத் தோன்றுகிறது. ஏனெனில் தானம்,தவம் என்ற சொற்றொடரும் குணம் என்ற சொல்லும் சமன் என்ற சொல்லும் பகவத் கீதையில் ஏராளமான ஸ்லோகங்களில் வரும். தமிழில் தைரியமாக இப்படி சம்ஸ்கிருதச் சொற்களுடன் வேறு யாரும் கவிதையையோ பாடலையோ துவக்கியதில்லை.
கீதையில் தானம்,தவம் என்ற 2 சொற்களும் சேர்ந்தே வரும் (கீதை 10-5, 16-1,17-7,17-28,18-5; கீதையில் 14ஆவது அத்யாயம் குணத்ரய விபாக யோகம். ஒவ்வொரு செய்யுளிலும் குணம் என்ற சொல் வருகிறது. அதே சொல்லுடன் தவங்கும் ஸ்லோகமும் உண்டு. சமம் என்ற சொல்லுடன் கீதையில் குறைந்தது ஆறு ஸ்லோகங்களாவது துவங்குகின்றன. இதை எல்லாம் பார்க்கையில் அவர் குறளை எட்டுக்கட்டும்போது அவரை அறியாமலே இந்தச் சொற்கள் பீறிட்டெழுந்திருக்க வேண்டும்.
வள்ளுவன் கையாண்ட பல கருத்துக்கள் வடமொழி நூல்களான பர்த்ருஹரியின் சதகங்கள், மனுதர்ம சாஸ்திரம், கீதை, தம்மபதம் ஆகியவற்றில் இருப்பதைச் சுட்டிக்காட்டி நிறைய கட்டுரைகள் வந்துவிட்டதால் அவைகளைத் திரும்பச் சொல்லப் போவதில்லை.
‘தானம் தவம் இரண்டும்’ (குறள் 19, 295) என்றும், ‘குணம் என்னும் குன்று ஏறி’ என்றும் ‘சமன்’ செய்து என்றும் துணிவாகச் சம்ஸ்கிருதச் சொற்களுடன் குறளைத் துவக்குகிறார். முதல் குறளிலேயே அ’கரம்’, ‘ஆதி பகவன்’ என்றும் அடித்து நொறுக்குகிறார். இந்தத் துணிவு இவர் ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்ததால்தான் வந்தது. மனம், கருமம், காமம்,தெய்வம், முகம் போன்ற சம்ஸ்கிருதச் சொற்களுடன் இன்னும் நிறைய குறள்களைத் துவக்குகிறார். இவருக்குப் பின் வந்த நாயன்மார்களும், ஆழ்வார்களும் ஏராளமான வட மொழிச் சொற்களைப் பயன்படுத்த வள்ளுவனே வழி வகுத்தான் போலும்.
வள்ளுவன் உள்ளத்தால் பொய்யாதொழுகிய உத்தமன். அதனால்தான் அவன் உலகத்தாற் உள்ளத்துள் எல்லாம் உளன். அவனுக்கு வட மொழி தென் மொழி என்ற காழ்ப்புணர்ச்சி இல்லை. இரு மொழியும் இரு கண்கள் என்பதை உணர்ந்த பெரியோன் அவன். யாராவது திருக்குறளில் இருந்து வடமொழிச் சொற்களை எடுத்தால் அது செல்லரித்துப் போன ஏடு போல, வைரஸ் பாதிப்புக்குள்ளான ‘சாFட்வேர்’ போல ஆகிவிடும்.
தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியத்திலும் வட மொழிச் சொற்கள் இல்லாமல் இல்லை. நக்கீரர் கூட ‘உலகம்’ (லோக) என்ற வடமொழிச் சொல்லோடு திருமுருகாற்றுப் படையைத் துவக்குகிறார். சிறுபாணாற்றுப் படை, ‘மணி’மலை என்று துவங்குகிறது. ஆனால் இவ்விரு நூல்களும் பிற்காலத்தில் எழுந்தவை என்பது சில ஆராய்ச்சியாளரின் கருத்து. சிறுபாணாற்றுப்படை, கடை எழு வள்ளல்களை வரிசைப்படுத்தி உரைப்பதால், இப்படி ஏற்பட கபிலர் பரணர் காலத்திலிருந்து 200, 300 ஆண்டுகளாவது ஆயிருக்கும். ஆனால் தொல்காப்பியர், வள்ளுவர், இளங்கோ ஆகிய மூவரும் ஒரே காலத்தில் வாழ்ந்ததால்தான் “அதிகாரம்” என்ற சொல்லை மூவரும் தங்கள் நூல்களில் பயன்படுத்தினர். (காண்க என் கட்டுரை: தொல்காப்பியர் காலம் தவறு)
The Opening Ceremony took place on 13th May 1996. Dr L M Singhvi, High Commissioner of India in grey suit is at left extreme, Dr Stuart Blackburn in grey suit is in the middle and I am (London Swaminathan, author of this article) at the far right in the picture.
அதிகாரம் என்ற சொல்லைக் கருத்திற் கொண்டால் வள்ளுவன் சம்ஸ்கிருத் சொற்களைப் பயன்படுத்தாத அதிகாரமே இல்லை! ஒவ்வொரு அதிகாரத்திலும் சம்ஸ்கிருதச் சொற்களைக் குறள்களிலும் காண்கிறோம். நான் ‘ஹைலைட்டரை’க் கொண்டு வடமொழிச் சொற்களை ‘ஹைலைட்’ செய்தபோது எல்லா பக்கங்களிலும் வடமொழிச் சொற்கள் இருப்பதைக் கண்டேன்.
வள்ளுவனுக்கு பகவத் கீதை அத்துபடி என்பதற்கு இன்னும் ஒரு சான்றும் இருக்கிறது. கீதையில்:
“ப்ரஹ்மார்ப்பணம் ப்ரஹ்மஹவிர் ப்ரஹ்மாக்னௌ ப்ரஹ்மனாஹுதம்
ப்ரஹ்மைவ தேன கந்தவ்யம் ப்ரஹ்மகர்ம சமாதினா” (4-24)
என்று ஒரு ஸ்லோகம் வருகிறது. இதே போல உபநிஷதத்தில்
“பூர்ணமதப் பூர்ணமிதப் பூர்ணாத் பூர்ணமுதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வஷிஷ்யதே” –
என்று ஒரு மந்திரம் வருகிறது. இதே ‘ஸ்டைலில்’—பாணியில்– வள்ளுவனும்
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை —-(குறள் 12)
என்று பாடுகிறான். முன் எவரும் இப்படிச் செய்ததில்லை.
வடமொழிச் சொற்பட்டியல்
வள்ளுவர் பயன்படுத்திய வடமொழிச் சொற்கள் பட்டியலை தமிழ் பேரறிஞர் வையாபுரிப் பிள்ளை அளிக்கிறார். அத்தோடு வள்ளுவர் பயன்படுத்தும் புதிய தமிழ் இலக்கண அமைப்புகளும் அவர் எக்காலத்தவர் என்பதை காட்டிவிடுகிறது.வள்ளுவர் 137 வட மொழிச் சொற்களைப் பயன்படுத்துகிறார். ஒவ்வொரு சொல்லையும் பலமுறை பயன்படுத்தும் போது இது பன்மடங்கு அதிகரிக்கும்.:
அகரம், அச்சு, அதி, அவி, அந்தம், அமிர்தம், அங்கணம், அரங்கு, அமர், அமரர், அமைச்சு, அரங்கு, அரண், அரசர், அவம்,அவலம், அவை, ஆசை, ஆகுலம், ஆசாரம், ஆதி, ஆணி, ஆயிரம், ஆயம், இசை, இந்திரன், இமை, இரா, இலக்கம்,உரு, உருவு, உலகு, உல்கு, உவமை, உறு, ஏமம், ஏர், கஃசு, கருமம், கணம், கணிச்சி, கதம்,காந்து, கலுழும், கவரி, கவுள், கழகம், களம், களன், கனம், காரிகை,கானம், காமம், காரணம், காமன், காலம், குணம், குடங்கர், குலம், குவளை, கூர், கூகை, கொக்கு, கோடி, கோட்டி, கோட்டம், சலம், சமன்,சிவிகை,சுதை,சூது,சூதர் , தகர், தண்டம், தவம், தானம், தாமரை, திண்மை, திரு, துகில், துலை,தூது, தெய்வம், தேயம், தேவர்,தொடி, தோட்டி, தோணி, தோள், நத்தம், நயம், நாகம், நாவாய், நாகரிகம், நாமம், நிச்சம், நீர், நுதுப்பேம்,பகவன், பக்கம், பகுதி, படாம், படிவத்தர், பதம், பயன், பரத்தன், பண்டம்,பளிங்கு, பள்ளி, பாக்கியம்,பாகம், பாவம்,பாவி, பூரியர்,பூசனை. புருவம், பூதம், பீழிக்கும் ,பீழை, புருவம், பூசனை, பூதங்கள் பேடி, பேய், மங்கலம், மடமை, மதலை, மயிர், மயில், மனம், மந்திரி, மணி, மதி, மா, மாடு, மாதர், மாத்திரை, மாயம், மானம், மீன், முகம், யாமம், வஞ்சம், வண்ணம்,வளை, வாணிகம், வித்தகர்
பொய்யாமொழியைச் சுற்றி ஒரே பொய் மூட்டைகள்!!!
வள்ளுவன் காலம் அவன் பயன்படுத்தும் வடமொழிச் சொற்களாலும், புதிய சொற்றொடர்களாலும், பிற்கால இலக்கணத்தாலும் நன்கு தெரிந்த பின்னரும், இதை வையாபுரியார் முதற்கொண்டு பல அறிஞர் பெருமக்கள் எடுத்துக்காட்டிய பின்னரும், சிலர் ‘கட்டைப் பஞ்சாயத்து’ முறையில் வள்ளுவனை கி.மு.31 என்று முத்திரை குத்தியது பொய்யாமொழிப் புலவனையே அவமானப் படுத்துவதாகும். இது தொடர்பான பழைய மகாநாட்டில் காரசார விவாதங்கள் நடந்து வெளிநடப்பு நடந்தபின்னர் ஒரு கோஷ்டி இப்படி வள்ளுவருக்குப் பொய்க் காலம் போட்டுக் கொடுத்தது. இதை வள்ளுவனே மன்னிக்கமாட்டான்.
வள்ளுவன் பெருமை அவன் வாழ்ந்த காலத்தால் அல்ல. அவன் எழுதிய நூலால்தான். இன்று வள்ளுவன் இப்படி ஒரு நூல் எழுதியிருந்தாலும் இந்தியாவிலேயே அவன் ஒருவன் தான் இப்படிப்பட்ட சாதனையைச் செய்தவனாக இருந்திருப்பான். ஏற்கனவே நேர்மையற்ற அரசியல்வாதிகள் எல்லாம் அவன் குறளை மேடை தோறும் முழக்கி அவனை மஹாத்மா காந்தியைப் போல மதிப்பு இல்லாமல் நகைப்புக்குரியவராகச் செய்துவிட்டார்கள். அவன் வாழ்ந்த காலம் பற்றிய மோசடியையாவது மாற்றி உண்மையைச் சொன்னால் அவனுக்கு ஆத்ம சாந்தியாவது ஏற்படுமே.
மொழியியல் ரீதியில் வள்ளுவனை கி.மு.வில் வைக்க முடியாது. அப்படி வைத்தால் சங்க இலக்கியம் முழுவதையும் கி.மு 4 அல்லது 5ஆம் நூற்றாண்டுக்குத் தள்ள வேண்டியிருக்கும். அதுவும் முடியாது. கடல் வணிகம் பற்றிய சங்க இலக்கிய குறிப்புகளும் ரோமானிய ,கிரேக்க எழுத்தர் குறிப்புகளும் சங்க இலக்கியத்தை முதல் மூன்று (கி.பி) நூற்றாண்டுகள் தான் என ஐயம் திரிபு அற முடிவு செய்துவிட்டன (காண்க கனக சபைப் பிள்ளை, டாக்டர் இரா.நாகசாமி, கமில் சுவலெபில் நூல்கள்)
வள்ளுவன் வடமொழி வாசகத்துடன் பாடலைத் துவக்கியதோடு நிற்காமல் ஆங்காங்கே சில சம்ஸ்கிருதச் சொற்றொடர்களுக்கு அருமையான மொழிபெயர்ப்பும் செய்திருக்கிறான். சினம் பற்றிய அதிகாரத்தில் ‘சேர்ந்தாரைக் கொல்லி ‘என்ற சொல் ‘ஆஸ்ரயாச:’ என்பதன் தமிழாக்கம். தாமரைக் கண்ணன் என்பது கமலநயன, அரவிந்தாக்ஷன் என்பதன் தமிழாக்கம். தர்ம,அர்த்த,காம (அறம், பொருள், இன்பம்) என்ற இந்து மதக் கோட்பாடுகளுடன் இந்திரன் முதலாக பல்வேறு இந்துக் கடவுளரையும் குறிப்பிடுகிறார்.
வள்ளுவனின் வேறு சில அழகான மொழிபெயர்ப்பு:சம்சார சாகரம்=பிறவிப் பெருங்கடல்,அஹங்காரம்,மமகாரம்=யான்,எனது என்னும் செருக்கு, ரிக்வேதத்தில் வரும் கவீம் கவீனாம்=நூலாருல் நூல் வல்லான், கீதை ஸ்லோகம் உத்தரேத் ஆத்மநாத்மானம்= உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல், தர்மோ ரக்ஷதி ரக்ஷித:= அல்லவை தேய அறம் பெருகும்.
வள்ளுவர் “இந் நான்கும்”, “இம்முன்றும்” என்று சொல்லுவதும் வட மொழி அணுகுமுறை. பழந்தமிழ் நூல்களில் காணப்படா.
கடவுள் வாழ்த்தில் உள்ள பத்து பாக்களில் ஏழு குறள்களில் இறைவனுக்கு பாத நமஸ்காரம் செய்கிறார் (அடி போற்றுதல், தாள் வணங்குதல்). இது சம்ஸ்கிருத நூல்களில் தடுக்கி விழுந்தால் பார்க்கக்கூடியது. (Please read my post WHY DO HINDUS WORSHIP SHOES?).
கோடி என்ற வடமொழிச் சொல்லை இவர் பயன்படுத்திய அளவு வேறு எந்த பழந்தமிழ் கவிஞனும் பயன்படுத்தியிருக்க மாட்டான். சின்னக் குழந்தை சொல்லும் வடமொழி ஸ்லோகத்தில் கூட “சூர்யகோடி சமப்ரபா” என்ற வடமொழி வாசகம் வரும்.
வேறு யாரும் சொல்லாத இன்னொரு விஷயம். வள்ளுவர் பஞ்ச தந்திரக் கதைகளையும் நன்கு படித்தவர் என்பது குறள்கள் 273, 274, 277, 481, 495, 633 முதலியவை மூலம் தெரிகிறது.
வாழ்க வள்ளுவன் புகழ். வளர்க வாய்மை, பொலிக தூய்மை!
Posted by Tamil and Vedas on November 5, 2012
https://tamilandvedas.com/2012/11/05/%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4/

















You must be logged in to post a comment.