பூர்ணவர்மனின் 4 சுவையான கல்வெட்டுகள் (Post No.7362)

பூர்ணவர்மனின் 4 சுவையான கல்வெட்டுகள் (Post No.7362)

Written by London swaminathan

swami_48@yahoo.com

Date: 20 December 2019

Time in London – 7-37AM

Post No. 7362

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

இந்தோனேஷியாவின் ஜாவா தீவிலுள்ள பூர்ணவர்மனின் 4 கல்வெட்டுகள்

சுவையான தகவல்களைத் தருகின்றன. அவை   1500  ஆண்டுகளுக்கு முந்தையவை .

போர்னியோ தீவில் அடர்ந்த காட்டுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட மூலவர்மன் கல்வெட்டு போல, இவையும் கோ  தானம் பற்றிப் பேசுகின்றன.பூர்ணவர்மன் 1000 பசுக்களை பிராமணர்களுக்குத் தானம் கொடுத்ததை  ஒரு கல்வெட்டு கூறுகிறது. இந்த தகவலை சீன யாத்ரிகர் பாஹியானும் உறுதி செய்கிறார். அவர் இந்தியாவிலிருந்து சீனாவுக்குத் திரும்பி  செல்லும் முன் ஜாவாவில் ஐந்து மாதங்களுக்குத் தங்கியிருந்தார் அவர் கி.பி.415ல் ஜாவாவில் உள்ள நிலவரத்தைப் பின் வருமாறு எழுதுகிறார் .

“இங்கு தவறான பல மதங்களும் இந்து மதமும் இருக்கின்றன. ஆனால் புத்த மதம் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு எதுவும் இல்லை . ஆயினும் இதற்கு 100 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளிவந்த ‘புத்த குருமார்களின் சரித்திரம்’ என்ற  சீன புஸ்தகம் கி.பி 519ல் இந்திய அரசனான குணவர்மன் என்ற அரசன் புத்த மதத்தைத் தழுவி இலங்கை சீனா ஜாவா வரை சென்று வந்ததாகக் கூறுகிறது. அவன் ஜாவாவில் ராஜாவின் தாயாரை புத்தமதத்துக்கு மாற்றியதாகவும் அவள் மகனையும் மதம் மாற்றியதாகவும் சீனப் புஸ்தகம் சொல்கிறது. அந்த நேரத்தில் ஜாவாவை எதிரிகள் தாக்கியதாகவும் எதிரிகளைக் கொல்லுவது புத்த தர்மத்துக்கு விரோதமானதா என்று குணவர்மனைக் கேட்டபோது அவர் கொள்ளையர்களை ஒழிப்பது தர்மமே என்று சொன்னவுடன் ஜாவா மன்னன் எதிரிகளை அழி த்ததாகவும் சீன புஸ்தகம் சொல்கிறது. பின்னர் ஜாவா தீவில் புத்தமதம் படிப்படியாக வளர்ந்தது.

               ஜாவாவில்  சம்ஸ்கிருதம்

ஜாவாவில் முஸ்லீம் மதம் பரவும் வரை இருந்த மொழியை பழைய ஜாவானிய மொழி என்று அழைப்பர்.

இது சம்ஸ்கிருதமும் சுதேசி மொழியும் கலந்த கலப்பட மொழி.இந்த  மொழியில் உள்ள கவிதைகள் சம்ஸ்கிருத யாப்பிலக்கணத்தைப் பின்பற்றுகின்றன . மேலும் சம்ஸ்கிருதக் கவிதைகளையும் மேற்கோள் காட்டுகின்றன . அதிலுள்ள மிகப்பழைய நூல் அமரமாலா . இது உலகின் முதல் நிகண்டு நூலான அமரகோசத்தின் ஜாவானிய மொழிபெயர்ப்பு ஆகும் . இதே காலத்தில் எழுந்ததுதான்  ஜாவானிய

ராமாயணம்.கிட்டத்தட்ட வால்மீகி ராமாயணத்தைத் தழுவிய நூல். ஆனால் இராவணன் கொல்லப்பட்ட  பின்னர் ராமனும் சீதையும் ஒன்று சேர்ந்ததுடன் கதை முடிகிறது. அடுத்தபடியாக மகாபாரத உரைநடை நூல் கிடைத்துள்ளது . இது சுருக்கமான மகாபாரதம்.

                               இவை அனைத்தும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியவை. இதற்குப் பின்னர் அர்ஜுனன் விவாஹ, கிருஷ்ணாயண, சுமனசாந்தக ஆகிய நுல்களைக் காணலாம். கடைசி நூல், ஒரு மாலை(garland) காரணமாக இந்துமதி இறந்த விஷயத்தைத் தழுவியது. இது காளிதாசன் காவியத்தில் உள்ள கதை

மிகவும் குறிப்பிடத்தக்க நூல் ‘பாரத யுத்த’ என்பதாகும். இது கிரேக்க காவியங்களுக்கு இணையானது என்பது அறிஞர்களின் துணிபு . இதற்குப் பின்னர் பஞ்ச தந்திரம், ஹிதோபதேசம், நீதி சாஸ்திரம் என எல்லா சம்ஸ்கிருத நூல்களும் ஜாவானிய மொழியில் ஆக்கப்பட்டுள்ளன.

ஒரு பெரிய வித்தியாசத்தைக் குறிப்பிடுவது அவசியமாகும். கம்போடியா, வியட்னாம் ஆகிய இரண்டு நாடுகளில் நேரடியாக சம்ஸ்கிருத இலக்கியமும், கல்வெட்டுகளும் தோன்றின. ஆனால் சுதேசி மொழி இலக்கியம் கிடையாது. ஜாவாவில் சம்ஸ்கிருதத்தை வீட சுதேசி மொழி இலக்கியமே அதிகம்.

இது ஒரு புறமிருக்க இமயம் முதல் இந்தோனேஷியாவின் கடைக்கோடி வரை உலகிற்கு இந்துமதம் அளித்த மிகப்பெரிய கொடை  பிராமி எழுத்தாகும். தெகிழக்காசிய நாடுகள் அனைத்தும், இந்திய மொழிகள் அனைத்தும், பிராமியை பிடித்துக்கொண்டன. 2000 ஆண்டுகளில் அவை தேவைக்கேற்ப மாற்றப்பட்டன. இந்துமத அறிஞர்கள் கொடுத்த இந்தக் கொடையினால் அவர்கள் வெகு வேகமாக நாகரீகம் அடைந்தனர்.

Tags — பூர்ணவர்மன் , ஜாவானிய மொழி, பிராமி எழுத்து, சம்ஸ்கிருதம்

—-subham—

Yupa Inscription

ரிக் வேதம் 25,000 ஆண்டுப் பழமையானதா? (Post No.5532)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 12 October 2018

 

Time uploaded in London –9-36 am (British Summer Time)

 

Post No. 5532

 

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

உலகின் மிகப் பழைய புஸ்தகமான வேதத்துக்கு முதலில் கி.மு.1200 என்று முத்திரை குத்திவிட்டு, பின்னர் கடும் எதிர்ப்பு கிளம்பவே ‘ஜகா’ வாங்கிய மாக்ஸ்முல்லரை (Max Muller) எல்லோருக்கும் தெரியும்.

 

அவர் எப்படிக் குத்து மதிப்பாகக் கணக்குப் போட்டார்?

புத்தர் காலம் கி.மு. 600.

 

பிரம்மாண்டமான வேத இலக்கியங்களில் கடுகளவு கூட புத்த மத வாடை இல்லை. ஆகவே அவருக்கு முந்தைய உபநிஷத இலக்கியத்துக்கு கி.மு.800 என்று ஒரு முத்திரை குத்தினார்.

 

அதற்கு முந்தைய பிராமண, ஆரண்யக உரை நடை மொழி வேறு என்று சொல்லி, அதற்கு கி.மு 1000 என்று முத்திரை குத்தினார்.

அதாவது, ஒரு மொழி 200 ஆண்டுக்கு ஒரு முறை மாறும் அன்பது அவரது கணிப்பு.

(தமிழில் 200 ஆண்டுக் காலவீச்சில் வைக்கப்பட்டுள்ள தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், சங்க இலக்கியம் இடையே பயங்கர மொழி வேறுபாடு இருந்தும் நாம் அவற்றை

200 ஆண்டுக் கணக்கில் அடக்கி விடுகிறோம்)

பிராமண இலக்கியத்துக்கும் முந்தைய ஸம்ஹிதை எனப்படும் வேத துதிப் பாடல்கள் அவற்றுக்கும் முந்தி இருக்க வேண்டும் என்று சொல்லி, அதற்கு கி.மு 1200 என்று மாக்ஸ்முல்லர் போட்டார் ஒரு போடு.

 

அவர் சமகாலத்திய வேத விற்பன்னர்கள்– வெள்ளைத் தோல் அறிஞர்கள்- அவரைச் சாடினர். உடனே கி.மு 1500 அல்லது அதற்கு முன்னரும் இருக்கலாம் என்று  மாக்ஸ்முல்லர் பின்னோக்கி நடந்தார்.

வின்டர்நீட்ஸ் (Winternitz) என்பவர் சொன்னார்:- சில மொழிகள் வேகமாக மாறுகின்றன. சில மொழிகள் மெதுவாக மாறுகின்றன. ஆகையால் குத்து மதிப்புக் கணக்கு செல்லு படியாகாது.

 

வேறு சிலர் ஹிந்தி மொழியின் பேச்சு வழக்கான ‘கரி போலி’ கூட 600 ஆண்டுகள் மாறாமல் இருந்ததைச் சுட்டிக்காட்டினர்.

 

வேறு சிலர் வால்மீகி முதல் ஹர்ஷ மன்னன் வரை 1800 ஆண்டுகளுக்கு ஸம்ஸ்க்ருத மொழி இலக்கியம் மாறவில்லை என்பதைக் காட்டினர்.

 

இது ஒரு புறமிருக்க, ஜெர்மானிய ஆராய்ச்சியாளர் ஹெர்மன் ஜாகோபி, (Herman Jacobi) வேதத்தில் கிருத்திகா/ கார்த்திகை நட்சத்திரத்தை முதலாவதாகக் குறிப்பதால், வானவியல் கணக்குப்படி அந்த துதி கி.மு.4500 என்று உரைத்தார்.

அவருக்குத் தெரியாமல் வானவியல் குறிப்பை ஆராய்ந்த் பால கங்காதர திலகர் (B G Tilak) , துருவ நட்சத்திரக் கணக்குப்படி ரிக் வேத காலம் கி.மு 6000 என்றார்.

இந்த துதிகளுக்கு பல விதங்களில் வியாக்யானம் செய்ய முடியும் என்பதால் ஏற்பதற்கில்லை என்றார் வின்டர்நீட்ஸ்.

 

வில்ஸன் முதலானோர் வேத காலம் என்பது கி.மு 2000 என்றனர்.

 

ரிக் வேதத்தில் உள்ள பூகர்ப்பவியல் குறிப்புகளை (geological factors) காட்டி கி.மு25,000 என்று மொழிந்தார் டாக்டர் ஏ.ஸி. தாஸ் (Dr A C Das). ஆனால் ஒரு மொழி இவ்வளவு காலம் மாறாமல் இருந்ததற்குச் சான்றுகள் இல்லை என்று சொல்லி அறிஞர் பெருமக்கள் அந்த வாதத்தை நிராகரித்தனர்.

 

புராணங்களில் நந்த வம்ஸ மன்னர்களுக்கு முன்னர் 140 தலை முறை ஆண்ட குறிப்புகள் இருப்பதால், மனு என்று  ரிக் வேதம் குறிப்பிடும் மன்னர் கி.மு 3000 வாக்கில் இருந்திருக்க வேண்டும் என்பர் பலர்.

 

 

தற்காலத்தில் ஸரஸ்வதி நதி பற்றி விண்கலத்தில் இருந்தும், நிலத்தடி நீரை அணுசக்திவியல் (space and Nuclear science) மூலமும் ஆராய்ந்ததில் கி.மு.2000க்கு முன், அந்த நதியின் கரையில் வேத துதிகள் பாட்டப்பட்டிருக்க வேண்டும் என்பதைக் காட்டுகின்றன.

இது ஸிந்து-ஸரஸ்வதி நதி தீர நாகரீக காலம் ஆதலால் மொஹஞ்சதாரோ- ஹரப்பா வேத கால நாகரீகமே என்றும் தெரிகிறது.

ஆயினும் இப்போது வரும் செய்திகள் மொஹஞ்சதாரோ- ஹரப்பா நாகரீகத்தின் துவக்கம் கி.மு.7000 ஆக இருக்கலாம் என்பதால் இந்திய வரலாறும் பின்னுக்குத் தள்ளிக் கொண்டே போகிறது.

 

–சுபம்–

 

ரிக் வேத அசுரர்கள் வெளிநாடு சென்றது ஏன்? (Post No.5531)

Research Article Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 12 October 2018

 

Time uploaded in London –9-59 am (British Summer Time)

 

Post No. 5531

 

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

ரிக் வேத அசுரர்கள் வெளிநாடு சென்றது ஏன்? (Post No.5531)

 

அஸீரியா என்னும் பழைய நாட்டின் பெயர் அசுரர் தேசம் என்பதாகும். அசுரர் (Ashur) என்றால் கடவுள் என்று சுமேரியன் அகராதி சொல்லும். அஸீரியா(Assyria) என்பது தற்போதைய இராக் நாட்டில் டைக்ரீஸ் (Tigris) நதி பாயும் பிரதேஸம். அங்கே கி.மு.2000 முதல் கி.மு 1000 வரை 20 மன்னர்களுக்கு மேல் அசுரர் என்ற பெயர் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே கி.மு.2000 வாக்கில் ரிக்வேத அசுரர்கள் கருத்து வேற்பாடு காரணமாக இராக், ஈரான் பகுதிகளுக்குச் சென்றது உறுதியாகிறது.

 

இதற்கு ரிக் வேதத்திலும் வரலாற்றிலும் அசைக்க முடியாத ஆதாரங்கள் உள.

 

சான்று 1

கி.மு 800 முதல் கி.மு 1000 வரை தேதி முத்திரை குத்தப்பட்ட பார்ஸீ மத ஸ்தாபகர் ஜொராஸ்டர் (Zoroaster), சௌராஷ்டிர என்ற குஜராத் பகுதியிலிருந்து ஈரான் சென்று பாரஸீக மதத்தைப் பிரபலப் படுத்தினார். ஈரான் என்ற பெயரே ஆர்யன் என்ற சொல்லிலிருந்து வந்ததும், ஈரானிய ஜெண்ட் அவஸ்தா (Zend Avesta) வேதப் புத்தகத்துக்கும், ரிக் வேதத்துக்கும் உள்ள ஒற்றுமையும் உலகறிந்த விஷயம். எல்லா என்ஸைக்ளோபீடியாக்களிலும் உள.

 

சௌராஷ்டிரர் என்பது ஜொராஸ்டர் என்று மாறியதை காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் 75 ஆண்டுகளுக்கு முன்னரே மைலாப்பூர் சொற்பொழிவுகளில் செப்பியுள்ளார். ஈரானை முஸ்லீம்கள்  எட்டாம் நூற்றாண்டில் கபளீகரம் செய்தவுடன் பார்சீக்கள், தனது தாயகமான குஜராத்துக்கு ஓடி வந்து அடைக்கலம் புகுந்ததை முன்னம் ஒரு கட்டுரையில் மொழிந்து விட்டேன்.

 

இரண்டாவது சான்று

அசுரர்களுக்கு சுக்ராச்சார்யார் குரு; தேவர்களுக்கு பிருஹஸ்பதி குரு. கீதையில் கண்ணன் வாயால் புகழப்பட்ட சுக்ர கவியின் வம்ஸம் திடீரென்று ரிக் வேதத்தில் மறைந்து போகிறது. ஏனைய ரிஷிகளின் வம்ஸங்கள் தொடர்கதையாக உள்ள போழ்தில் உசனஸ் கவி என்ற உலக மஹா கவி, — கண்னன் தன்னை கவிஞர்களுள் நான் உசனஸ் என்னும் போற்றும் கவி– காணாமற் போய் விடுகிறார்.அவரும் அவர்தம் சீடர்களும் அஸீரியா. ஈராக் ஃநாட்டிற்குக் குடியேறி விட்டனர் போலும்.

 

மூன்றாவது சான்று

ரிக் வேதத்தின் பழைய பகுதிகளில் இந்திரன், வருணன், மித்திரன் ஆகியோர் ‘அசுர’ என்ற அடை மொழியுடன் போற்றப் படுகின்றனர். சுமேரியாவில் இப்பொழுதும் ‘அசுர்’ (ASHUR) என்பது கடவுள் என்றே மொழி பெயர்க்கப்படுகிறது.

நாலாவது சான்று

ஜொராஸ்டர் தன்னை ‘ஸ்பிடம’ (spitama=white) ஜௌராஷ்ட்ர என்று அழைத்துக் கொள்கிறார். அதாவது வெள்ளை (சுக்ர, சுக்ல=வெள்ளை) என்று பெருமை பேசுகிறார். சுக்ராச்சார்யார் வ ழியில் வந்தவன் நான் என்று தம்பட்டம் அடிப்பதே இதன் தாத்பர்யம்.

 

ஐந்தாவது சான்று

 

ரிக்வேதத்தைப் போற்றும் மற்றொரு கோஷ்டி, துருக்கி பகுதியைச் சென்று ஆண்டதை உலகம் முழுதுமுள்ள வரலாற்றுப் புத்தககங்கள் மூலம் அறியலாம். காஞ்சி பரமசார்ய ஸ்வாமிகள் 75 ஆண்டுகளுக்கு முந்தைய மைலாப்பூர் பிரசங்கங்களில் மொழிந்தும் உள்ளார். மிட்டனி (Mitanni Civilization) என்னும் நாகரீகத்தில் தசரதன் பிரதர்தனன், சத்யவசன் முதலிய மன்னர்கள் பெயர் கி.மு 1400 முதல் உள்ளதை விக்கிபீடியா முதல் என்ஸைக்ளோபீடியா பிரிட்டானியா வரை எல்லா கலைக்களஞ்சியங்களிலும் காணலாம். அது மட்டுமின்றி ரிக்வேத தெய்வங்களின் பெயர்களில் ஸத்தியம் செய்து அவர்கள் உடன்படிக்கை கையெ ழுத்திட்டதும், தஸ்ரதமன்னன் எகிப்திய மன்னனுக்கு எழுதிய கடிதங்களும் அப்படியே களிமண் பலகைகளில் க்யூனிபார்ம் கல்வெட்டுகளாகப் பொறிக்கப்பட்டுள்ளன.

சுமேயாவில் ராம சந்திரன்

ஆறாவது சான்று

தஸரதன் பெயர் மட்டுமின்றி ராமன் பெயரும் சுமேரியாவில் கி.மு.2000 வாக்கில் பல மன்னர் பெயர்களில் கணப்படுகிறது.

ரிமூஷ், ரிம் சைன் (Rimush, Rim Sin) என்ற பெயர்களில் குறைந்தது மூன்று மன்னர்கள் உளர்.

 

சுமேரிய அகராதியில் சைன் (sin) அல்லது சின் என்றால் சந்திரன் / நிலவு என்று பொருள்.

 

ரிம் சைன் என்பது ராம சந்திரன் என்பதன் திரிபாகும்.

 

சைன்/சந்திரன் என்பதை நாம் எப்படி பெயரில் விகுதியாகவும் பகுதியாகவும் பயன் படுத்துகிறோமா அப்படியே சுமேரிய மன்னர்களும் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்துவது ஸம்ஸ்க்ருத மொழியின் தாக்கத்தைக் காட்டுகிறது.

நாம்,

சந்திர மூர்த்தி, சந்திர ஹாஸன், சந்திரமதி, சந்திர ஸேகரனென்றும்

 

மற்றொரு புறம் ராம சந்திரன், பூர்ண சந்திரன், விபின சந்திரன் என்றும் பயபடுத்துவது போல அவர்களும் சின், சைன் என்பதை பெயர்களில் முன்னொட்டாகவும் பின்னொட்டாகவும் பயன் படுத்துகின்றனர்.

 

சுமேரிய, அஸீரிய, பாபிலோனிய  மன்னர்களின் பட்டியலை அப்படியே எனது ஆங்கிலக் கட்டுரையில் இருந்து கொடுக்கிறேன். இவை என்ன காட்டுகின்றன என்பதை முதலில் மொழிவேன்:

 

1.’அசுர’   ன்ற சொல்லின் ‘மூலம்’  (root) தெரியாமல் சுமேரிய ஆராய்ச்சியளர் முழிக்கின்றனர். ‘அசுர்’ Ashur என்பது ஒரு பிரதேசத்தின் பெயரிலிருந்தோ அல்லது கடவுள் என்ற அர்த்தத்தில் இருந்தோ வந்திருக்கலாம் என்பது சுமேரிய ஆராய்ச்சியளர் துணிபு. இரண்டும் இந்துக்கள் செப்பியதே. மத்ஸ்ய தேசம், நாக நாடு என்று நமது புராணங்கள் சொல்கையில் அங்கு மீன்களோ நாகப் பாம்புகளோ அதிகம் இருப்பதால் அல்ல மத்ஸ்யர்கள், நாகர்கள் என்ற இனத்தினர் நாடு என்ப தை நாம் அற்கிறோம். அது போல, கி.மு.2000 ஆண்டில் தேவர்களுடன் கருத்து மோதல் காரணமாக புதுக் கட்சி துவங்கிய அசுரர்கள் குடியேறிய தேசம் -அசுர தேசம் =அஸீரியா

என்று அழைக்கப்பட்டது. அந்த ‘அஸூர்’  Ashur என்பது கடவுளைக் குறிக்கும் என்பது ரிக் வேதத்தாலும் ஜெண்ட் அவஸ்தாவாலும் மெய்ப்பிக்கப்ப ட் டது. பாரஸீக நாட்டின் (ஈரான்) பாரஸீக மதத்தின் தலையாய கடவுள் அசுர மஸ்டா (Azura Mazda). அவர்கள் எதிர்க்கட்சி துவங்கியதால் பழைய தலைவரான இந்திரனை ஒழித்துவிட்டு வருணனை கட்சித் தலைவராக ஏற்றுக்கொண்டு வருணனை மஹா அசுரான் (பெரிய கடவுள்) என்று விதந்து ஓதுகின்றனர்.

 

(காம்போஜர் என்ற இனம் இருக்கும் இடமெல்லாம் காம்போஜம் என்பது இந்தியாவிலுள்ள காம்போஜத்தாலும் கம்போடியாவிலுள்ள காம்போஜத்தாலும் அறியப்படும்.)

 

இது தெரியாமல் புராணத்தை விமரிசித்த, துவக்க கால இந்திய வரலாற்றை எழுதிய, வெளிநாட்டினர் திணறிப்[போயினர். சோழர்கள் உள்ள பகுதி சோழ தேசம். அவர்கள் பாண்டிய நாட்டைப் பிடித்துவிட்டால் ‘சோழ தேசத்துக்குள் உள்ள’ என்று கல்வெட்டுகள் துவங்கும். இது போல, மத்ஸ்யர்கள் உள்ள இடம் மத்ஸ்ய தேசம்; அவர்கள் எல்லையை விஸ்தரித்தால் அந்த இடமெல்லாம் மத்ஸ்யர் தேசம்; இது தெரியாத அரை வேக்காடுகள் இந்தியாவின் வடமேற்கில் எல்லையை விஸ்தரித்த யவனர் பற்றி தத்துப் பித்து என்று உளறிக்கொட்டி கிளறி மூடி இருக்கின்றனர். அலெக்ஸாண்டர் படையெடுப்புக்கு முன்னர் இந்தியருக்கு யவனர் தெரியாது என்று எண்ணி மஹாபாரத யவனர், சங்க இலக்கிய யவனர் பற்றி எல்லாம் உளறி விட்டனர்.

 

மற்றொரு முக்கியமான விஷயம் ஒரே மன்னர் பெயர்கள் பல இடங்களில் தோன்றுவதாகும்.

 

புராணங்களை மிகவும் ஆராய்ந்து தேதி குத்திய பர்ஜிட்டர் Pargitter முதலிய வெளி நாட்டுக்காரர்கள், சில புராணங்களுக்கு முட்டாள் பட்டம் கட்டி அவை எல்லாம் பெயர்களை இருமுறை எழுதி குழப்பி விட்டதாக எழுதி நம்மைக் குழப்பினர். எகிப்திய வரலாற்றில் ராமர் பெயரில் ராமேஸ்ஸஸ் என்ற பெயரில் 14 மன்னர்கள் உள்ளனர்.

 

சுமேரியா, அஸ்ஸீரியாவில் பல சற்குணர்கள்/ சத்ருக்னன் உளர் (ஸர்கோன் என்று அவர்கள் அழைப்பர்). அஸீரியாவில் ஒரே மன்னர் பெயர் ஆறு ஏழு முறை வருகின்றன. ஆக அடுத்தடுத்து இரண்டு மன்னர்கள் ஒரே பெயரில் வர முடியும் என்பதை எகிப்திய சுமேரிய, அஸீரிய மன்னர் பட்டியல் காட்டுகின்றன. இது தெரியாமல் புராணங்கள் புளுகிவிட்டன என்று பகர்ந்தோர் பலர்.

 

சின்/ சைன் என்று முடியும் பெயரகள் சந்திரன் என்று மேலே குறிப்பிட்டு இருந்தேன். இவை சேன என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லாகவும் இருக்க முடியும் மஹாபாரதத்தில் மட்டும் 24 மன்னர்களின் பெயர்கள் ‘சேன’ என்று முடிவது எனது ஆராய்ச்சியில் தெரியவந்தது.

 

காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் (1894-1994) தனது உபந்யாஸங்களில் எகிப்திய ராமஸெஸ் , ராமபிரானின் பெயர் என்று குறிப்பிட்டார். இது ரமேஷ், ரமேசன் என்ற சிவ பிரான் பெயராகவும் இருக்க லாம். எகிப்திய மன்னர் அனைவரும் சிவ பிரான் போல நாகப் பாம்புகளை முடியில் சூடியது பற்றி எனது ஆராய்ச்சிக் கட்டுரையில் முன்னரே விளக்கி இருக்கிறேன்.

 

மற்ற ஒரு அதிசய விஷயம் கடவுள் நம்பிக்கை பற்றியது.

சுமார் 40 மத்தியக் கிழக்கு நாட்டு மன்னர்கள் கடவுளின் பெயருடன் துவங்குகின்றன. ‘மர்துக்’, ‘அதாத்’, ‘அசுர’ என்பதெல்லாம் கடவுளின் பெயர்கள். இவ்வாறு குறைந்தது 40 மன்னர்களின் பெயர்கள் உள.

 

முடிவுரை

ஒரு மன்னர் பெயர் பல முறை வந்ததால் குழம்ப்பிப் போய் வரலாற்றைத் திரிக்கக் கூடாது. அசோகனின் பெயரன் தஸரதன். துருக்கியை கிமு.138-0ல் ஆண்டவன் தஸரதன். ராமாயண தஸரதனுக்கு முன்னால் உள்ள தஸரதன் பெயரும் மன்னர் பட்டியலில் உள.

 

இரண்டாவதாக,

பெயர்கள் எப்படி திரிபடையும், மாறுபடும் என்றும் அறிவதற்கு சுமேரியா, அஸீரிய, பாபிலோனிய, எகிப்திய மன்னர் பட்டியல் முன் உதாரணமாகத் திகழ்கின்றன. தற்காலத்திலும் மொரீஷியஸ், மலேஷியா, இலங்கையில் வாழும் தமிழர்கள் ஸஸ்க்ருதப் பெயர்களைக் குதறி, தவறான பெயர்களாக, எழுதுவது போல எகிப்திலும் மத்தியக் கிழக்கிலும் எழுதினர். க்யூனி பார்ம் கல்வெட்டில் ‘துஷ்ட்ரத’ என்று தஸரதன் பெயர் உளது. இதே போல பிரதர்தனன், சத்யவாசன் பெயர்களும் குதறப் ப்பட்டுள்ளன. வெளிநாட்டுத் தமிழர் பெயர்களின் ஆங்கில ஸ்பெல்லிங் spellings பார்ப்போருக்கு நாம் சொல்லுவது தெள்ளிதின் விளங்கும்.

 

மூன்றாவதாக,

நாம் நமது குழந்தைகளுக்குக் கொஞ்சம் எகிப்திய, சுமேரிய வரலாற்றையும் சேர்த்து ஒப்பிட்டுக் காட்ட வேண்டும்

 

நாலாவதாக,

வெளிநாட்டினர் செய்த அயோக்கியத் தனத்தை உடனே அகற்ற வேண்டும். கி.மு ஆறாம் நூற்றாண்டு புத்தர் கால அஜாத சத்ரு, உதயணன் போன்றோர் முதல் வரலாறு துவங்குவதாக மார்கஸீயவாதிகளும் வெள்ளைக்காரகளும் எழுதி வைத்துள்ளனர் ஆனால் அதற்கு முந்தைய 140 தலை முறை மன்னர் பட்டியல் நமது புராணங்களில் உள. அவற்றை சேர்த்து மாணவர்களின் ஆராய்ச்சிக்கு அவைகளை (Home Work/ assignment) ஹோம் ஒர்க் ஆகக் கொடுக்க வேண்டும்.

 

இறுதியாக உடனே வரலாற்றை திருத்தி எழுதி துருக்கி நாட்டு மிட்டன்னி கல்வெட்டு, எகிப்திலுள்ள தஸரதன் கடிதங்கள் (அமர்ணா லெட்டர்ஸ்), முன்று தமிழ் சங்கங்களில் உள்ள மன்னர்களின் பெயர்கள், உலகம் முழுதும், மத்திய ஆஸியப் பாலைவனம் முதல் தென்கிழக்காஸிய நாடுகள் வரை,கண்டு பிடிக்கப்பட்ட தமிழ், ஸம்ஸ்க்ருத கல்வெட்டுகளின் உலக வரைபடம்/மேப் ஆகியவற்றை சிலபஸில் சேர்க்க வேண்டும்.

வரலாற்றை திருத்தி எழுதுவது மிகமிக அவஸியம்.

 

நேரம் போதாமையால் மன்னர் பட்டியலை ஆங்கிலக் கட்டுரையிலிருந்து இணைத்துள்ளேன் கீழே காண்க.

Puzur Ashur I 2000 BCE

Naram Sin (Nara simha or Nara Chandra or Nara Sena)

Sena titles are very common in Mahabharata; at least 24 kings with Sena names in Mahabharata.

Ashur Rabi – around 1500 BCE (Rabi- Ravi/Surya/Sun)

Ashur nadin ahhe

Ashur Nirari 1426 BCE (N and M are interchangeable; it may be Murari)

Ashur bel nishesu 1410 BCE

Ashur nadin ahhe II 1402 BCE

Ashur Ubalit I 1365 BCE

 

Then there are seven kings with ASHUR title  until 1000 BCE.

Some kings names were used up to four times with I, II, III, IV numbers.

 

We come across at least Four Dasarathas until Asoka’s grand son’s time in Indian History.

 

Ram’s Name

 

Rim Sin (Rama Chandra or Rama Sena) – 1822 BCE (ruled from Larsa)

Rim sin II – 1741 BCE

Sin in Sumerian is Moon God; Sin= Chandra

 

There is another proof for using only Gods names in Sumeria:

ADAD and MARDUK- gods’ names were used by at least 20 kings.

 

Sin Iddinam 1849 BCE

Sin Eribam 1842 BCE

Sin Iquisham 1840 BCE

 

xxx

 

Rimush ruled Akkad in 2284 BCE

Naram Sin in 2260  BCE ( other areas also had this name)

Amar sin (Amara Sena or Amara Chandra)- 2046 BCE from Ur

Shu Sin 2037 BCE (ruled from Ur) Susena or Suchandra

Ibbi sin – 2026 BCE

 

 

-சுபம்–

 

ராமனின் அதிசயப் பயணம்- 5 (நிறைவு)- Post No.5271

Written by London swaminathan

Date: 30 JULY 2018

 

Time uploaded in London – 9-12 am  (British Summer Time)

 

Post No. 5271

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

அயோத்தியில் புறப்பட்டு, இலங்கைத் தீவுக்கு வந்து விட்டு, மீண்டும் அயோத்திக்குப் போன ராம பிரான் 5113 நாட்களுக்கு நடந்து உலக சாதனை படைத்தான். அவன் சென்ற இடமெல்லாம் புனிதமானது; அவன் தொட்டதெல்லாம் பொன் ஆனது; அவன் கண் பட்ட இடமெல்லாம் அருள் சுரந்தது. இந்தியாவில் எங்கு சென்றாலும், இது ராமர் வந்த இடம், இது பஞ்ச பாண்டவர் வந்த இடம் என்று சொல்லுவதில் வியப்பொன்றும் இல்லை.

 

நாநிலம் வியக்கும் வீரர் பெரு மக்கள், மாபெரும் சாம்ராஜ்யத்தின் மன்னர்கள் நடந்து வந்தால், உலகமே வரவேற்காதா! வியக்காதா!

 

இதோ ராமனின் 128 மண்டகப்படிகளில் கடைசி கட்டம்; இந்த ஐந்தாவது பகுதியுடன் ராமன் பயணம் நிறைவு பெறுகிறது. அலெக்ஸாண்டர் நடக்க வில்லை; குதிரையில் வந்தான்! ராமன் நடந்தான். ஆதி சங்கரரும், ராமனைப் பின்பற்றி நடந்தார். இமயத்திலிருந்து தமிழ் இலக்கணம் எழுத தென்னகம் வந்த அகஸ்தியர், ஒரு வேளை பல்லக்குகளைப் பயன்படுத்தி இருக்கலாம். ராமனோ என்றும் பாத சாரி! உலக இலக்கியங்களில் இது போல யாரும் இல்லை; ஹோமரின் கிரேக்க கதா பாத்திரங்கள் குதிரையிலும் கப்பலிலும் சென்றனர். இந்து மத வீரகளோ உலகின் மிகப்பெரிய நாட்டை (அக்காலத்தில்) நடந்தே கடந்தனர். அவர்களால் இந்த மண் புனிதம் பெற்றதா? புனித மண் என்பதால் அவர்கள் நடந்தார்களா? சிந்திக்க வேண்டிய விஷயம்!

 

106.கபிஸ்தலம் (தஞ்சை வட்டம்)

ஹனுமார் தாவிச் சென்ற இடம்

 

107.பாபநாசம் சிவன் கோவில்

கர, தூஷண, திரிசிரஸ் என்ற பிராஹ்மண அசுரர்கள்ளைக் கொன்ற பாபம் நீங்க சிவனை ராமன் வழிபட்ட இடம்

108.கோடிக்கரை (வேதாரண்யம்)

 

முதலில் ராமனிடம் எஞ்சினீயர் நீலன் கொடுத்த ப்ளூப்ரிண்ட் படி இங்கிருந்து அணை கட்ட திட்டமிட்டனர். பின்னர் ராமன் அந்த திட்டத்தைக் கைவிட்டு தனுஷ்கோடி சென்றான். அவன் ஒரு ஆலமரத்தடியில் இருந்து ஆலோசானை செய்கையில் பறவைகள் காச்சு மூச்சென்று கத்தின ராமன் உஷ் என்று சொன்னவுடன் அவை அதிசயமாக அடங்கிவிட்டன; 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சங்கத் தமிழ் இலக்கியத்தில் உள்ள பாடலில் இது பற்றியுள்ளது. அகநானூறு 70ம் பாடலில் மேல் விவரம் காண்க)

 

 

109.உப்பூர் வெயில் உகந்த விநாயகர் கோவில்

ஸீதா தேவியை மீட்கும் விஷயத்தில் வெற்றி கிடைக்கப் பிரார்த்தித்த இடம்

 

110.தேவிப்பட்டணம்/ நவபாஷாணம்

இங்கு ராமர் நவக்ரஹங்களை வழிபட்டார்.

111.திருப்புள்ளானி / தர்ப சயனம்

 

கடல் பயணத்தில் வெற்றி பெற ராமன் வருண பகவானை பிரார்த்தித்த இடம்

 

112.புள்ளபூதங்குடி வல்வில் ராமர் கோவில்

ஜடாயுவுக்குத் தர்ப்பணம் செய்த இடம்; வடக்கிலும் இப்படி ஒரு ஸ்தலம் உள்ளது. ஆண்டு தோறும் திதி செய்யப்படுவதால் இரண்டும் சரியாக இருக்கலாம்.

 

 

113.சேதுக்கரை

 

இங்கு இலங்கைக்கான பாலத்துக்கு அடிக்கல் நாட்டினார் ராமபிரான்

 

114.தங்கச்சிமடம் வில்லூன்றி தீர்த்தம்

 

இங்கே வானரப் படைகளுக்காக ராமர் வில் மூலம் ஒரு ஊற்றை உண்டாக்கினார்.

 

 

115.கந்தமாதன் பர்வத, ராமேஸ்வரம்

இங்கிருந்து ராமர் கடலின் விஸ்தீரணததைக் கண்டார்.

116.அக்னி தீர்த்தம்

ராமர் குளித்த புனித நீர்நிலை

 

117.ராமேஸ்வரம் கோவில்

ராமர் பூஜித்த சிவலிங்கம்

118.தனுஷ்கோடி

ராவணனை வென்ற பின்னர்,  விபீஷணன் வேண்டுகோளின் பேரில், பாலத்தைப் பிரித்த இடம்

 

119.திரு அப்பனுர்- ராமர் பாலம் மண்

பாலம் கட்ட ராமர் 14 புனித இடங்களிலிருந்து மண் எடுக்க வேண்டும் என்றும் அதில் அப்பனூர் ஒரு இடம் என்றும் தல புராணம் சொல்லும். ராமர் கொண்டுவந்த 2 யானைகள் இறக்க்வே அவைகளை இங்கு புதைத்ததாகவும் அங்கே இப்பொழுது கண்மாய்கள் இருப்பதகவும் மக்கள் நம்புகின்றனர். இது ராமநாதபுரம் மாவட்டத்தில் உளது

மீண்டும் அயோத்தி சென்றபோது

120.தில்லை விளாகம் கோதண்டராமர் கோவில்

 

ராவண சம்ஹாரத்துக்குப் பின்னர் ராமர் வந்த இடம்.திருவாரூரிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது (சிதம்பரத்தையும் இப்பெயரால் அழைப்பர்; இது வேறு தலம்).

இங்கு ராம சரம் என்று பொறிக்கப்பட்ட அம்புடன் கூடிய அழகாக்ன ராம விக்ரஹம் உள்ளது. பங்குனி மாத ராம நவமி உற்சவத்தில் 11ஆவது நாளன்று மான் வஹனத்தில் ராமர் பவனி வருவது ஒரு அரிய காட்சி; வேறெங்கும் இல்லாத புதுமை!

121.நம்புநாயகி அம்மன் கோவில், ராமேஸ்வரம் தீவு

முன்னர் தனுஷ்கோடியில் இருந்த கோவில்  கடல் உள்ளே வர வர, இடம் மாற்றப்பட்டு இப்போதுள்ள இடத்துக்கு வந்தது; இங்கு ராமர் விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் செய்ததாக தல புராணம் சொல்லும்.

 

122.காஞ்சி விஜயராகவப் பெருமாள் கோவில் (திருப்புட்குழி)

இங்குள்ள ஜடாயு புஷ்கரணியில் ராமர் குளித்ததாக அதீகம்

 

123.வடுவூர் கோதண்டராமர் கோவில்

 

ராமன் இலங்கைக்குச் செல்லும் போதும் அயோத்திக்குத் திரும்பும் போதும் இங்கு வந்ததாகச் சொல்லுவர். இரண்டும் சாத்தியமே

 

124.பதர்ஷா (நந்தி க்ராமம)

ராமனின் புஷ்பக விமானத்தைக் கண்டு மக்கள் ஆரவாரம், கூதுகலம் அடைந்த இடம்

 

125.பரத குண்டம்

ராமரும் பரதனும் கட்டித் தழுவி ஆனனதம் அடைந்த இடம்

 

126.ஜடா குண்டம்

 

ராமர் முதலில் தனது தம்பிகளின் முடிகளைச் சுத்தம் செய்து பின்னர் தனது தலை முடியையும் அலம்பிய குளம்.

 

 

வால்மீகி ராமாயணம், ஆங்காங்குள்ள தல புராணங்கள் முதலியவற்றின் அடிப்படையில் டாக்டர் ராமாவ்தார் ஷர்மா தொகுத்த பட்டியல் இது; தமிழ் நாட்டைப் பொறுத்த மட்டில் நான் சில இடங்களை மாற்றியுள்ளேன். இதை ஒரு தொடக்கமாகக் கொண்டு பட்டியலை மேலும் நீட்டலாம். 5113 நாட்களில் ராம லக்ஷ்மணர்கள் இன்னும் பல இடங்களுக்குச் சென்றிருப்பது சாத்தியமே.

 

ராமன் நாமம் வாழ்க; ராமன் புகழ் வெல்க!

ராமனின் அதிசயப் பயணம்-4 (post no.5265)

WRITTEN by London swaminathan

Date: 28 JULY 2018

 

Time uploaded in London – 13-19  (British Summer Time)

 

Post No. 5265

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

COMPARISION BETWEEN KASHMIR POET KALHANA AND TAMIL POET TIRUVALLUVAR

 

ராம பிரான் நடந்தது 14 ஆண்டுகள்; அதாவது சுமார் 5113 நாட்கள்; சில இடங்களில் பல மாதங்கள் கூட ஓய்வெடுத்தார். உதாரணத்துக்கு மழைக் காலங்களில் காட்டு வழியே நடக்க மாட்டார்கள். ஆகையால் ரிஷி முனிவர்கள் சாதுர் மாஸ்ய விரதம் ( நான்கு மாத நோன்பு) அனுஷ்டிப்பர். ராமனும் அதைப் பின்பற்றியதற்கு சான்று உள்ளது. கிஷ்கிந்தையில் சுக்ரீவனுக்கு நான்கு மாத கெடு விதிக்கிறார். படை திரட்டிக் கொண்டு திரும்பி வா என்று அனுப்புகிறார். அவன் 4 மாதங்கள் ஆகியும் வராததால் லெட்சுமணனை தூது அனுப்புகிறார்.  ஆக, ராமாயணம் நடந்ததை நடந்தவாறு சொல்கிறது.

 

முதல்  மூன்று பகுதிகளில் ராமன் சென்ற இடங்களைக் கண்டோம்; இதோ நாலாவது பகுதி.

 

75.சுதீக்ஷண ஆஸ்ரமம் (ஆகோலா)

முனிவருடன் சந்திப்பு

 

(முன்னரே வேறு ஒரு சுதீக்ஷ்ண ஆஸ்ரமம் குறிப்பிடப்பட்டது. ராமன் மீண்டும் அங்கு சென்றாரா? அல்லது ஒரே முனிவரின் பல ஆஸ்ரமங்களில் இதுவும் ஒன்றா? என்பது குறிப்பிடப்  படவில்லை)

 

76.அகஸ்த்ய ஆஸ்ரமம்

அகஸ்த்ய முனிவருடன் சந்திப்பு.

அகஸ்தியரின் ஆஸ்ரமங்கள் நாடு முழுதுமுள. இது ஒரு கோத்திரப் பெயர் என்பதால் பல முனிவர்கள் அந்தப் பெயரால் அழைக்கப்பட்டிருக்கலாம்)

 

77.பஞ்சவடி (ஐந்து ஆல மரம்)

கோதாவரி நதிக்கரையில் ஐந்து பெரிய ஆலமரங்கள் உள்ள இடம். நாஸிக் அருகில் உள்ளது. ராவணனின் சஹோதரி சூர்ப்பநகையின் மூக்கை லக்ஷ்மணன் அறுத்த இடம்; ஸீதா தேவியை ராவணன் கடத்திய இடம்.

 

(ராவணன், பருவக்காற்றைப் பயன்படுத்தி பல நதிகள் வழியாகப் பல இடங்களுக்குச் சென்று அட்டூழியம் செய்ததை ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் விளக்கியுள்ளேன் . அசோகனின் குழு ஏழே நாட்களில் இலங்கையிலிருந்து பாட்னாவுக்கு திரும்பி வந்ததை மஹாவம்ஸம் இயம்பும். இதை அறியாத அரை வேக்காட்டு ஆராய்ச்சியாளர் கோதாவரி நதித்  தீவுதான் லங்கா என்று உளறிக்   கொட்டினர்)

 

78.ஸர்வ தீர்த் (கோடி)

ராவணனுடன் சண்டையிட்டு ஜடாயு மாண்ட இடம்; இங்கே ஜடாயுவை ராமன் தஹனம் செய்து ஜல அஞ்சலி (தர்ப்பணம்) செய்தான். (ஜடாயு என்பது கழுகு அல்ல; கழுகை அடையாளமாகக் கொண்ட ஒரு இனம். அவர்களும் மனிதர்களே; வானரர்கள் என்போர், குரங்கு போல முறையற்ற வாழ்க்கை நடத்திய மனிதர்களே. அவர்களுடைய அடையாளம் குரங்கு. இப்பொழுதும் ஆப்பிரிக்காவிலும், தென் அமெரிக்காவிலும் மூக்கு, முகம், வாய் முதலியவற்றை இனம் வாரியாக, வெவ்வேறு வகையில்  சிதைத்துக் கொள்ளும் பழக்கம், கானக வாஸிகள் இடையே உண்டு. அது போலவே வானர இனங்களும்).

  1. சுகல் தீர்த்

சுதீக்ஷண முனிவர் ஆஸ்ரமத்தில் ராமர் ஓய்வெடுத்தார்

 

(இமயம் முதல் குமரி வரை காடுகளில் முனிவர்கள் வசித்ததும் அவர்களுடன் ராமன் தங்கியதும் இதன் மூலம் தெரிகிறது. அமைதியான வாழ்வு நடத்தி, இறைவனை நோக்கி தவம் இயற்றுவதும், கானகப் பொருட்களை- கனி காய், தேன் வரகு அரிசி  — உணவாகப் பயன் படுத்தியதும் தெரிகிறது.)

 

மும்பை வட்டாரம்

 

80.பாலுகேஷ்வர் மந்திர், மும்பை

மணலினால் ராமர் உருவாக்கிய லிங்கம்; இங்கு ராமர் வில்லினால் ஒரு ஊற்று உண்டாகினார். வால்கேஷ்வர் கோவில் என்றும் அழைப்பர்.

 

81.புனே வட்டாரம்

81.ராம் தாரியா

இந்த வழியாக ராமர் தென் திசை நோக்கிப் பயணித்தார்.

82.ராம்லிங் (யட்ஸி)

ராமன் சிவனை வழிபட்ட இடம்

 

83.ஸ்ரீ ராம வர்தாயனி

துல்ஜாபூரில் ராமரை ஸதி மாதா சோதித்துவிட்டு, ஸீதையைக் கண்டுபிடிக்க ஒரு பொருளைக் கொடுத்ததாக ஐதீகம்

 

84.காட் ஷிலா மந்திர் (துல்ஜாபூர்)

ஒரு கல்லில் ஸதி மாதவின் உருவத்தை ராமர் கண்டதாகவும்அவள், ராமனை தெற்கு திசை நோக்கிச் செல்ல உத்த்ரவிட்டதாகவும் ஐதீகம்

 

85, 86 ராமேஷவர் (அதானி), ஜாம் கண்டி ஷிவ் மந்திர்

 

இரண்டு இடங்களும் ராமர் சிவ பூஜை செய்த இடங்கள்

  1. அயோமுகி கௌபா( ராம் த்ர்க்)

தொல்லை கொடுத்த ஒரு அரக்கியின் காதுகளையும், மூக்கையும் லக்ஷ்மணன் அறுத்த இடம்

 

  1. கபந்த ஆஸ்ரமம் (ராம் துர்க்)

கபந்தன் என்னும் அரக்கனை ராமன் கொன்ற இடம்

89.சபரி ஆஸ்ரமம்

காட்டுக்குள் சபரி ஆஸ்ரமம் இருக்கிறது. அவள்  கானகப் பழங்களை இனிக்கிறதா என்று கடித்துப் பார்த்தபின்னர் ராமனிடம் கொடுத்தாள்; அதை ராமன் அன்போடு வாங்கிச் சப்பிட்டான்.

 

90.பம்பாசர் (ஹம்பி- துங்கபத்ரா)

ஸீதையைத் தேடுகையில் ராமன் சென்ற  இவ்விடத்தில் வரிசையாகக் கோவில்கள் இருக்கின்றன.

91.ஹனுமான் ஹல்லி (ஹம்பி)

ராம லக்ஷ்மணர்களை அனுமன் சந்தித்த இடம்.

 

ரிஷ்யமுக பர்வதம்

சுக்ரீவனை சந்தித்த இடம்

 

  1. கந்தமாதன் பஹரி (ஹம்பி)

ஐந்து குரங்குகளைக் கண்ட ஸீதா தேவி தனது ஆபரணங்களைக் கீழே போட்ட இடம் (புறநானூற்றில் இது உள்ளது)

 

94.துங்கபத்ரா சக்ர தீர்த

வாலி- சுக்ரீவன் சண்டையை ராமன் மரத்தின் பின்னால் இருந்து பார்த்த இடம்

 

  1. கிஷ்கிந்தா (ஹம்பி)

வாலியின் தலைநகருக்கு ராமன் வந்தான்

96.பரஸ்ராவன் பர்வத் (ஹம்பி)

 

ராமன் இங்கே 4 மாதங்கள் (சாதுர் மாஸ்ய வ்ரத காலம்/ மழைக் காலம்) தங்கினார்.

97.ஸ்படிக சிலா

ஸீதையைத் தேடுவதற்கான திட்டங்களை அனுமான் அறிவித்த இடம்

98, 99, 100, 101.கர் ஸித்தேஸ்வர் மந்திர், ஹல் ராமேஷ்வர், கூடட் நைலிகர், சோம்வார் பேட்

 

இங்கு ராமன், சிவனை வழிபட்டார்.

இதில் நைலிகேர் என்னும் இடத்தில் தசரதனுக்கு ராமர் திதி கொடுத்தார்– சிரார்த்தம் செய்தார்.

  1. தனுஷ் கோடி (மேலி கௌடி)

வானர சேனை இங்கே காலை உணவு உண்டனர். ராமரின் அம்பு மூலம் ஒரு ஊற்று ஏற்படுத்தப்பட்டது.

 

103, 104, 105- சிவ, விஷ்ணு மந்திர்

மைசூர் மவட்டத்தில் கவி ராயன் பேட்டையில் ஒரு சிவன் கோவில் இருக்கிறது. இந்த ஊரில் அரக்கன் கவியை ராமன் கொன்றார். ராம நகரில் ஒரு ராமர் கோவில் இருக்கிறது. இது அவர் ஓய்வெடுத்த இடம். இதே போல ராம் மந்திரும் (ராம் நகர்) அவர் ஓய்வெடுத்த இடம். ராவணனின் சஹோதரன் த்ரிசிரா கட்டிய ஊரில் விஷ்ணு மந்திர் உள்ளது.

 

ராமனும் பஞ்ச பாண்டவர்களும் 14, 13 ஆண்டுகள் சஞ்சாரம் செய்ததால் அவர்கள் காலடி படாத இடமே பாரதத்தில் இல்லை. ஆகவே அவர்கள் வந்த வழியெல்லாம் புனிதத் தலமாக மாறியதில் வியப்பொன்றும் இல்லை. மேலும் அவர்கள் மிகப்பெரிய அரசுகளின் பிரதிநிதிகள் என்பதால் அவர்களுக்கு அரசுகளின் மஹத்தான ஆதரவும் மக்களின் மாபெரும் வரவேற்பும் கிடைத்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை!

–தொடரும்

 

 

ராமனின் அதிசயப் பயணம்-2 (Post.5255)

Written by London swaminathan

Date: 25 JULY 2018

 

Time uploaded in London – 7-24 am  (British Summer Time)

 

Post No. 5255

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ராம பிரான் 14 ஆண்டுகள் அயோத்திக்கு வெளியே இருந்தார். இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து கால் நடையாக இலங்கை வரை வந்தார். புராண கால மனிதர்களில் அதிக தூரம் நடந்து, சாதனைப் புஸ்தகத்தில் முதலிடம் பெற்றார். அவரைப் போல கால் நடையாக நடந்த மனிதர் எவரையும் நாம் அறியோம் . சுமார் 5113 நாட்கள் நாட்டை வலம் வந்தார். அவருக்குச் சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் ஆதிசங்கரர் இப்படிப் பலமுறை வலம் வந்தார்

 

இதோ ராமனின் பயணம் தொடர்கிறது: (முதல் பகுதியைப் படித்துவிட்டு இதைப் படிப்பது சாலச் சிறந்தது)

 

20.ஸீதா பஹரி- ரிஷியான் ஜங்கல்

ஸீதையும் ராமரும் இங்கே ஓய்வு எடுத்தனர்

 

21.ஹனுமன் மந்திர் (முர்கா)

ராமருக்குத் துணையாக அனுப்பப்பட்ட

பரத்வாஜ ரிஷியின் மாணவர்கள் விடை பெற்றுச் சென்றனர்.

 

22.குமார் த்வய (ராம நகர்)

ராமரும் லக்ஷ்மணனும் குளித்துவிட்டு சிவனை வழிபட்ட இடம்

 

23.வால்மீகி ஆஸ்ரமம்- லாலாபூர்

மகரிஷி வால்மீகியுடன் சந்திப்பு

 

24.காமத் கிரி – சித்ர கூடம்- மந்தாகினி நதி

ராமபிரான் இங்கே நீண்ட காலம் தங்கினார்.

 

25.மாண்டவ்ய ஆஸ்ரமம்

பரதன் புகழ் பாடும் இடம்

 

26.பரத் கூப் – பரத்பூர்

அத்ரி மஹரிஷியின் உத்தரவின் பேரில், அண்ணனின் பட்டாபிஷேகத்துக்காக தம்பி பரதன், எல்லாப் புனித நீர் நிலைகளிலிருந்தும் ஜலத்தை எடுத்து இங்குள்ள கூவத்தில் ( கிணறு) சேமித்து வைத்தான்.

 

27.ஸ்படிக சிலா- சித்திரகூடம்

இந்திரனின் மகனான ஜயந்த், காகத்தின் வடிவத்தில்

ஸீதையைத் தாக்கினான்

 

28.குப்த கோதாவரி -சித்திரகூடம்

ஸீதையின் துணிமணிகளைத் திருடிய மாயாங்கனை, லக்ஷ்மணன் தண்டித்தான்

 

29.ததி காட்

மந்தாகினி நதி வட்ட வடிவில் ஓடும் அழகிய இடம் (ராமன், ஒரு இயற்கை அன்பன்; அவன் ரஸித்த இயற்கைக் காட்சிகளை வால்மீகியும் ரஸித்து எழுதி இருக்கிறார்)

 

30.அத்ரி – அனுசுயா ஆஸ்ரமம்

அத்ரி முனிவரையும் அனுசுயையையும் ராமன் சந்தித்த இடம்

 

31.ஆம்ரவதி

விராடன் என்ற அசுரன் ராம லக்ஷ்மணர்களைத் தாக்கினான்

 

  1. விராட்குண்டம் – ஜமுனிஹை

 

ராம லக்ஷ்மணர்கள், இங்கே விராடனைக் கொன்று புதைத்தனர்.

 

33.புஷ்கரணி — டிகாரியா

விராடனைக் கொன்ற ரத்தக் கறை படிந்த

ஆயுதங்களையும் துணிமணிகளையும்  கழுவிய புஷ்கரணி

34.மார்கண்டேய ஆஸ்ரமம்- மார்க்கண்டி

சிவனை வழிபட்ட இடம்

 

சதானா மாவட்டத்தில்  நுழைகின்றனர்

 

35.சித்த பஹார்-  சதேஹ சாதனா

ரிஷி முனிவர்களின் எலும்புக் குவியல்களில் இருந்து உருவான மேட்டுப் பகுதிகள்

 

(எனது கருத்து– இது போன்ற இடங்களை விஞ்ஞான முறையில் ஆராய்ந்தால் ராமாயண கால, அதற்கு முந்திய கால முனிவர்களின் காலத்தை துல்லியமாக மதிப்பிடலாம்)

 

36.சுதீக்ஷண ஆஸ்ரமம்

ராமர், சுதீக்ஷண முனிவரைச் சந்தித்த இடம்

 

37.சரபங்க ஆஸ்ரமம்- சர்பங்கா

சர பங்க முனிவர் ராம, லக்ஷ்மணர்களைச் சந்தித்தபின்னர், வாழ்க்கையின் பயன் நிறைவேறியது என்று கூறி யோக அக்னியில் புகுந்து ஜோதிமயமான இடம்

 

38.ஸீதா ரஸோய்

 

இங்கு ஸீதை அறு சுவை உணவு சமைத்த பின்னர், வனவாஸி சஹோதரர்களை ராமன் சந்தித்து நலம் விசாரித்தான்.

 

பன்னா மாவட்டத்தில் நுழைகின்றனர் (மத்தியப் பிரதேச மாநிலம்)

 

  1. தேவ பஹர் (அஜய் கர்)

ராமனுக்காக சிவன் கோவிலும். வசதியான குகைகளும் எழுப்பப்பட்ட இடம் ( ஏற்கனவே இருந்த குகைகளைச் சுத்தம் செய்து, காற்றோட்டம் உண்டாக்கி, இலை தழை மெத்தைப் படுக்கை உண்டாக்கினர் என்பதே பொருத்தம்- எனது கருத்து)

 

40.வ்ரிஹஸ்பதி- பஹரி கேரா

தேவ குரு பிருஹஸ்பதி உருவாக்கிய இந்த ஆஸ்ரமத்தில் ராமன், பல ரிஷிகளைச் சந்திக்கிறான். ரிஷிகள் மஹா நாடு என்றும் சொல்லலாம்!

 

126 மைல் கற்களில் 40 மைல் கற்களைக் கண்டோம். இன்னும் 86 மைல் கற்களையும் காண்போம்

–தொடரும்

ராமனின் அதிசயப் பயணம்! 5113 நாட்கள் எங்கே போனார்?- Part 1 (Post No.5250)

Written by London swaminathan

Date: 23 JULY 2018

 

Time uploaded in London – 13-52  (British Summer Time)

 

Post No. 5250

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ராமனின் அதிசயப் பயணம்! 5113 நாட்கள் என்ன செய்தார்? எங்கே போனார்?-1 (Post No.5250)

 

ஒரு அருமையான ராமாயண ஆராய்ச்சிப் புத்தகம், லண்டன் பல்கலைக் கழக நூலகத்தில் கிடைத்தது. ராமன் 14 ஆண்டுகள் நாடு கடத்தப்பட்டார். அதாவது 365 நாட்கள் X 14 ஆண்டுகள் + 3 லீப் வருட நாட்கள் = 5113 நாட்கள்.

 

இந்த 5113 நாட்களில் அவர் எங்கெங்கு போனார்? யார் யாரைப் பார்த்தார்? என்னென்ன செய்தார்? நாம் அனைவரும் யோசிக்காத வகையில் யோசித்து வால்மீகி ராமாயணப்படி தொகுத்துக் கொடுத்துள்ளார் டாக்டர் ராமாவதார் சர்மா .

 

ராமன் 14 ஆண்டுகளுக்குள் வராவிடில் தீக்குளித்து விடுவேன் என்று அருமைத் தம்பி பரதன் செப்பியதும், அதன்படி சரியாக 14 ஆண்டுகள் முடியும் தருவாயில் ராமன் வந்ததும், பரதன் சொன்ன சொல் மீறாதவன் அவசரப்பட்டு ஏதேனும் செய்து விடப்போகிறான் என்று ஹனுமாரை ‘எமர்ஜென்ஸி’ பயணத்தில் ராமன் அனுப்பியதும் நாம் அறிந்ததே.

 

மற்ற விஷயங்களை நாம் நுணுகிப் பார்க்கவில்லை. டாக்டர் ராமாவதார் சர்மா செய்த ஆராய்ச்சியை டாக்டர் ராஜேந்திர சிங் குஷ்வாஹா – ‘’பாரதீய வரலாறு- ஒரு கண்ணோட்டம்’’ என்ற ஆங்கிலப் புத்தகத்தில் பட்டியலிட்டுள்ளார். இதோ சில சுவையான தகவல்கள்:–

 

கைகேயி உத்தரவு போட்டபின்னர் என்ன நடந்தது?

 

1.அயோத்தி- பிறந்த ஊரில்– ராம ஜன்ம பூமியில் — எல்லோரையும் நமஸ்கரித்து விட்டுப் புறப்பட்டார்- ஸீதா தேவியோடு கடும் வாக்குவாதம்; காடு என்பது கல், முள் நிறைந்தது என்பது ராமர் வாதம்- ஸீதையோ பிடிவாதம்- கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை- ராமன் ஸாமியே அப்பப்பா! என்றாள். கணவனே கண் கண்ட தெய்வம் என்றாள். ராமனும் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்- போகும் இடம் வெகு தூரம்!- புறப்படு என்றான்.

 

2.முதல் ஸ்டாப் (முதல் மண்டகப்படி)- தமஸா நதி

 

முதல் நாள் இரவு தமஸா நதிக் கரையில் தங்கினார்; ஏன்? அயோத்தி நகரமே திரண்டு எழுந்து பின்னால் வந்து விட்டது; அவர்களுடைய உணர்ச்சிக் கொந்தளிப்புகள் அடங்க வேண்டுமே! ராமனோ- சாந்த குண ஸ்வரூபன் – கோபமோ தாபமோ இல்லாத ஜீவன் முக்தன்.

 

3.அடுத்த மண்டகப்படி- பூர்வ சகியா–

அயோத்தி மக்களுக்கு பெரிய கும்பிடு போட்டார்; காம்ரேட்ஸ் (Comrades)! உங்கள் ஆதரவுக்கு நன்றி; தயவு செய்து திரும்பிப் போங்கள். என்னப்பன் தஸரதனும் , என் தம்பி பரதனும் உங்களைக் காத்து ரக்ஷிப்பர் என்றார். ராமன் சொல்லைத் தட்ட எவரால் முடியும்? தயக்கத்தோடு, மனக் கலக்கத்தோடு திரும்பினர்.

 

4.சூர்ய குண்டம்

ராமன், லக்ஷ்மணன், சீதா ஆகிய மூவரும் சூர்ய குண்டத்தில் குளித்தனர். சூர்ய பகவானை வணங்கினர்.

 

இப்பொழுது பைஸாபத் (அயோத்தி) மாவட்டத்திலிருந்து உத்தர பிரதேஸத்தின் சுல்தான்பூர் மாவட்டத்தில் நுழைந்தனர்.

 

 

  1. 5-வது மண்டகப்படி- வேதஸ்ருதி நதி

தற்போதைய அஷோக் நகர் அருகில் நதி யைக் கடந்தனர்.

  1. கோமதி நதி

அடுத்ததாக வழியில் தடை போட்ட நதி கோமதி. அதைத் தற்போதைய வால்மீகி ஆஸ்ரமம் அருகே கடந்து எதிர்க் கரை அடைந்தனர்.

 

ஆசையே அலை போலே, நாமெலாம் அதன் மேலே
ஓடம்போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே!

(ஆசையே அலை போலே நாமெலாம் அதன் மேலே)

பருவம் என்னும் காற்றிலே
பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார்
சுகம் பெறுவார் அதிசயம் காண்பார்!
நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்?

என்ற திரைப் படப் பாடல் என் காதில் ஒலிக்கிறது ( இதை எழுதும் போது)

 

 

7.பிரதாப்கார் மாவட்டத்தில் நுழைகின்றனர்

ஸ்யந்திகா (சாய் ஆறு) — ஸாய் நதியும் பராரியா ஆறும் கலக்கும் இடத்தில் நின்று இயற்கையை ரஸிக்கின்றனர்.

 

8.அடுத்ததாக வேத்ரவதி நதியை அடைகின்றனர் – தற்போது இந்த நதிக்கு சாகர்னி என்று பெயர்.

 

9.பாலுக்னி நதி –

நிறைய மணலும் கூழாங்கற்களும் நிறைந்ததால் இந்த நதியை பாலுக்னி என்று அழைப்பராம்.

 

இதைத் தாண்டியவுடன் ராமன் உத்தரப் பிரதேஸத்தின் பிரயாகை மாவட்டத்துக்குள் (இப்போதைய பெயர் அலஹாபாத்) பிரவேஸிக்கிறான்.

 

10.சிருங்கிபேர புரம்

‘குகனுடன் ஐவரானோம்’ என்ற கம்பன் பாடல் மூலம் பிரஸித்தி பெற்ற குகன் என்னும் வேடனைக் காண்கிறான் ராமன். ஸஹோதரனைப் போல அவன்  பாஸமும் பரிவும் நேஸமும் நட்பும் பாராட்டுகிறான். அவன் நிஷாத குல மன்னன். கங்கையைக் கடக்க நூற்றுக் கணக்கான படகுகளை அணிவகுக்கிறான்.

11.ஸீதா குண்டம்

கங்கையைக் கடந்தவுடன், அமைச்சன் ஸுமந்திரனைத் திருப்பி அனுப்புகிறான் ராமன்.

 

12.சிவன் கோவில்

ஸீதா தேவி, ஒரு குளத்திலிருந்து மண் எடுத்து சிவ லிங்கம் செய்து வழிபடுகிறாள்.

 

( இதை எழுதியவர் வால்மீகீ ராமாயணத்தோடு ஆங்காங்கே உள்ள ஸ்தல புராணக் கதைகளையும் இணைத்துப் படைத்துள்ளார் என்பதை நினைவிற் கொள்க.)

 

13.ராம ஜோய்தா

சரவா கிராமம் அருகில் ராமர் குளித்தார்.

 

14.பரத்வாஜ மஹரிஷியுடன் சந்திப்பு

 

ராமன் முதலில் சந்தித்த பெரிய ரிஷி பரத்வாஜர். அவரது ஆஸ்ரமத்தில் அவர்களுக்கு பெரிய வரவேற்பு. அது கங்கை நதிக் கரையில் அமைந்தது.

 

15.ஆலமர வழிபாடு (யமுனை நதிக்கரை)

 

ஸீதா தேவி அக்ஷய வடம் என்னும் ஆலமரத்தை வழிபடுகிறாள்

 

16.. பதினாறாவது மண்டகப்படி – சங்கம்

 

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகின் மிகப் பெரிய கும்பமேளா திருவிழா நடக்கும் த்ரிவேணி சங்கமத்தில் கங்கை– யமுனை- ஸரஸ்வதி — நதி கலக்குமிடத்தில் புண்ய ஸ்நானம்.

17.ஸீதா ரஸோய் (ஜஸ்ரா பஜார்)

இங்கு மிகப் பழைய குகை ஒன்று இருக்கிறது. அங்கு ராமனுக்கும், லக்ஷ்மணனுக்கும் ஸீதா சமைத்து அறுசுவை உண்டி படைத்தாள்

 

பாண்டா மாவட்டத்தில் நுழைகின்றனர்

  1. சிவ் மந்திர்/ சிவன் கோவில் (ரிஷ்யான் ஜங்கல்)

கானகம் வாழ் ரிஷிகளின் கூட்டத்துடன் ராமன் சந்திப்பு

  1. ஸீதா ரஸோய் (ஜன் வன்)

ஸீதா தேவி இங்கு அரிசிச் சோறு உண்டாக்கினாள்.

 

TO BE CONTINUED……………………………….

சங்க இலக்கியத்தில் யூபம்- பகுதி 2 (Post No.5187)

RESEARCH ARTICLE by London swaminathan

 

Date: 6 JULY 2018

 

Time uploaded in London –   7-26 am

 (British Summer Time)

 

Post No. 5187

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

நேற்றைய கட்டுரையில் புறநானூறு, அகநானூறு, பெரும்பாணாற்றுபடை முதலிய சங்ல நூல்களில் காணப்படும் யூபம் எனும் வேள்வித் தூண் பற்றிய செய்திகளைக் கண்டோம். ரிக் வேத ஸம்ஸ்க்ருதச் சொல்லை புறநானூற்றுப் புலவர்கள் தயக்கமின்றி தமிழ் பாக்களில் அள்ளித் தெளித்திருப்பதையும் சுவைத்தோம். இன்று எண்-17 க்கும் யூபத்துக்கும் உள்ள தொடர்பையும் ராவணன் மகன் மேகநாதன் நூற்றுக் கணக்கில் யூபங்கள் நட்டதையும் காண்போம்.

 

முதுகுடுமிப் பெருவழுதியைப் பாராட்டிய நெட்டிமையார், “நீ வென்ற பகைவர்கள் எண்ணிக்கை அதிகமா? அல்லது நீ செய்த யாகங்களும், அதன் காரணமாக நட்ட யூபத் தூண்களும் அதிகமா? என்று வியந்தார். அவனுக்குப் போட்டி ராவணன் மகன் மேக நாதன். அவனூடைய யாக பூமியில் நூற்றுக் கணக்கான யூப ஸ்தம்பங்கள் இருந்ததாக வால்மீகி ராமாயணத்தின் உத்தரகாண்டம் செப்பும்.

யூபம் என்பது இருவகைப்படும் ஒன்று அலங்காரத்துக்காக யாகப் பந்தல்களில் நடப்படும் தூண்கள். மற்றொன்று வேள்விக்காக நடப்படும் யூபம். இது 17 முழம் அளவு உடையது.

ஏன் 17 முழம்?

இது ஒரு மர்மமான எண்; வேதத்தில் பல இடங்களில் இது காணப்படுகிறது. வாஜபேய யாகத்தில் 17 குதிரை ரதங்களின் போட்டி நடைபெறும் ஏனெனில் 17 என்பது பிரஜாபதியின் எண் என்றெல்லாம் விளக்கப்படுகிறது (எனது முந்தைய கட்டுரைகளில் விளக்கம் உளது)

அது மட்டுமல்ல இந்த 17-க்கும் அடி முதல் நுனி முடிய 17 பெயர்களும் இருக்கின்றன. (எனது ஆங்கிலக் கட்டுரையில் பெயர்கள் உள; கண்டு மகிழ்க)

 

 

 

பால காண்டத்திலும் (14-22) யூபம் பற்றிய சுவையான செய்திகள் உண்டு.

பால காண்டத்தில் அஸ்வமேத யாகம் பற்றிய செய்திகளில் 21 கம்பங்கள் நடப்பட்டதாக வால்மீகி பாடுகிறார். அதன் உயரம் 21 முழம் என்பார்.

 

ஏன் 21?

பிராஹ்மணர்கள் முத்தீ வழிபடுவோர். அதாவது ஆஹவனீயம், கார்கபத்யம், தக்ஷிணாக்னி என்ற முத்தீயை வழிபடுவதால் ஒவ்வொன்றுக்கும் ஏழு ரிஷிகள் வீதம் (ஸப்த ரிஷி 3×7= 21) 21 நடப்பட்டதாம்.

யூபஸ்தம்பத்தை– வேள்வித்தூணை– புத்தாடை கட்டி அலங்கரித்து அதன் மேல் பழக்குலைகள், இலை தழை தோரணங்கள் கட்டுவராம். யூப ஸ்தம்பத்தின் இடை, நடு, அடி, முடி ஆகியவற்றுக்குப் பிரத்யேக மான ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

 

முதல் கட்டுரையில் யூபம் நட்ட தமிழ் மன்னர்களின் பெயர்களைக் கண்டோம். இந்தோநேஷியவில் மூலவர்மன், அஸ்வ வர்மன், குண்டுங்கா பெயர்களைக் கண்டோம். ராஜஸ்தான், உத்தரப் பிரதேச யூபங்களில் குஷாண, மாளவ, மோகாரி அரச குடும்பங்களின் பெயர்களும் விக்ரம, குஷாண, க்ருத யுக ஆண்டுகளின் பெயர்களும் காணப்படுகின்றன.

 

பொது ஆண்டு 102 முதல் மூல வர்மனின் பொ.ஆ.400 வரை ஆண்டுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. இது இந்துக்களின் வரலாற்று உணர்வைக் காட்டும்.

 

இதில் பிராஹ்மணர்களுக்குக் கொடுத்த தக்ஷிணையும் இடம்பெறுகிறது. இந்தோநேஷியா நாட்டில் மூல வர்மன் நடத்திய யாகத்தின் பெயர் பஹுசுவர்ணகம். இதில் ஐயர்களுக்கு தங்கம் தரப்படும்.

 

இது வால்மீகி ராமாயணம் பால காண்டத்திலும் (1-95) உளது; ஆக வால்மிகீ ராமாயணம் சொல்வதும் கல்வெட்டு சொல்வதும் வரலாற்று உண்மைகளே!

 

யூபம் என்ற சொல்லை யாதவ ப்ரகாஸரின் ‘வைஜயந்தி’ எனும் ஸம்ஸ்க்ருத அகராதி நன்கு விளக்குகிறது.

யூபம் பற்றிய அலங்காரம், தோற்றம், எண்ணிக்கை, அதன் தாத்பர்யங்கள் ஆகியவற்றைக் காண்கையில் இது யாக பலிக்கான தூண் அல்ல, பெரிய தத்துவங்களை விளக்க வந்த வேள்வித்தூண் என்பது குன்றிலிட்ட விளக்கு போல விளங்கும். பலிக்கான மிருகம் தூணிலிருந்து அவிழ்த்து விடப்பட்ட பின்னரே யாகம் நடந்ததையும் மாவு ரூபத்தில் மிருக பொம்மைகள் யாகத்தீயில் இடப்பட்டதையும் வியாக்யானங்கள் விளக்குகின்றன.

 

அவையனத்தையும் மெய்ப்பிக்கிறது 17, 21 முதலான மர்ம எண்கள். வெறும் பலிக்கு ஒரு தூண் என்றால் இவ்வளவு விளக்கம் வந்திராது.

 

காஞ்சி சுவாமிகள் 400 வகை யாகங்கள் இருப்பதாக்ச் சொன்ன விஷயத்தை தனிக் கட்டுரையில் முன்னர் தந்தேன். இதோ மேகநாதன் செய்த 7 யாகங்கள்:

அக்னிஷ்டோம

அஸ்வமேத

பஹுஸுவர்ணக

ராஜசூய

கோமேத

வைஷ்ணவ

மஹேஸ்வர

(வால்மீகி ராமாயணம், உத்தரகாண்டம் 25-8)

வாழ்க யூப ஸ்தம்பம்! வளர்க தமிழ்!!

OLD ARTICLE

Mysterious Number 17 in the Vedas! (Post No.3916) | Tamil and …

tamilandvedas.com/2017/05/17/mysterious-number…

 

 

  1. 400 Types of Yagas (Fire Ceremonies) | Tamil and Vedas

tamilandvedas.com/2014/03/06/400-types-of-yagas…

Prince Charles and Camilla Parker with Swami Chidananda Saraswati at Rishikesh taking part in a Yajna. “The Brahmin spoiled himself and spoiled others. By …

 

  1. Pancha Maha Yajnas | Tamil and Vedas

tamilandvedas.com/tag/pancha-maha-yajnas

Posts about Pancha Maha Yajnas written by Tamil and Vedas. about; … Prince Charles doing Yajna in … called also Veda-yajnah,Sacrifice to Brahman or the Vedas.

 

–சுபம்–

 

டேய் நில்லடா! சொல்லடா! கம்பனின் ஏகவசனம்! (Post No.5106)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 13 JUNE 2018

 

Time uploaded in London –  15-53  (British Summer Time)

 

Post No. 5106

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

டேய் நில்லடா! சொல்லடா! கம்பனின் ஏகவசனம்! (Post No.5106)

 

வாடா, போடா, ஏண்டா– என்பதெல்லாம் ஏக வசனப் பேச்சு; மரியாதைக் குறைவான பேச்சு. ஆயினும் கம்பன் அதை அழகாகக் கையாளுகிறான். இதன் மூலம் இராவணாதியர்களின் தரமும் ராம லஷ்மாணாதியர்களின் உயர்வும் தெள்ளிதின் விளங்கும்.

 

கம்பராமாயமண, யுத்த காண்டம், நாகபாசப் படலத்தில் இந்திரஜித் சொல்கிறான் அனுமனைப் பார்த்து:-

“அடேய் நில்லடா! சிறிது நேரம் நில்லடா! உன்னுடன் சண்டை போடத்தான் வந்துள்ளேன்; வெறும் பேச்சோடு போய்விடாதே. உனது வீரத்தைப் புகழ்ந்து கொண்டு இங்கு வந்திருக்கிறாயே; நீ உயிருடன் விளையாடுகிறாய். நீ எறியும் கற்களும் மரங்களும் என் வலிமையைக் கடந்து போகுமாடா! அடேய், சொல்லடா என்று ;போரிலே புகழ் வாய்ந்த இந்திரஜித் புகன்றான். உடனே அனுமன் மறு மொழி பகர்ந்தான்.

 

இந்திரஜித் சொன்னது:-

 

நில் அடா சிறிது உனை

நினைந்து வந்தேன் முனைக்கு நான்

வில் எடாமை நினது ஆண்மை பேசி உயி

ரோடு நின்று விளையாடினாய்

கல் அடா நெடு மரங்களோ வரு

கருத்தினேன் வலி கடப்பவோ

சொல் அடா என இயம்பினான்  இகல்

அரக்கன் ஐயன் இவை சொல்லினான்

 

அனுமன் பதில்

“டேய் மாப்ளே! நான் சொல்றதைக் கேளு!” என்று அனுமன் உரைத்தான்

 

“ஏய்! நாங்கள் எல்லாரும் கல், மரப் படை என்று நினைத்தயோ! எங்களிடம் வில் வீரர்களும் உண்டு; வில்லும் எடுப்போம், கல்லும் எடுப்போம். அதை இன்றோ நாளையோ காணப்போகிறாய். இந்திரன் முதலியோர் உன்னிடம் தோற்றுப் போய் புல்லைக் கவ்வியிருக்கலாம். இதுவரை காணாத புது வகைப்  போர்களை காணப் போகிறாய்

 

(இந்தப் பாடலுக்கு உரை எழுதியோர் போரில் தோற்றவர்கள் புல்லைக் கவ்வுதல் மரபு என்று அடிக்குறிப்பு எழுதியுள்ளனர். அதாவது பழங்காலத்தில் போரில் தோற்ற பின் அவர்கள் குனிந்து புல்லைக் கவ்வினால் பின்னர் யாரும் தாக்க மாட்டார்கள் போலும்!)

 

அனுமன் சொன்னது:

வில் எடுக்க உரியார்கள் வெய்ய சில

வீரர் இங்கும் உளர், மெல்லியோய்!

கல் எடுக்க உரியானும் நின்றனன்

அது இன்று நாளையிடை காணலாம்

எல் எடுத்த படை இந்திராதியர் உனக்கு

இடைந்து உயிர்கொடு ஏகுவார்

புல் எடுத்தவர்கள் அல்லம் வேறு சில

போர் எடுத்து எதிர் புகுந்துளோம்

இத்தோடு அனுமன் சில கேள்விகளையும் கேட்கிறான்:

நீ என்னோடு போர் புரிகிறாயா ? அல்லது

இலக்குவனுடன் போர் புரிகிறாயா?

அல்லது உன் தலையை அறுத்து எறியப் போகின்ற ராமனுடன் போர் புரிகிறாயா?

 

இப்படி அழகாக அனுமன் பேசுகிறான்.

பாடல் தோறும் புதுப் புது செய்தியைக் கொடுப்பதாலும் போர்க் க ளத்தின் பல முனைகளுக்கு கம்பன் காமெராவைத் திருப்பி ராமாயணத் திரைப்படத்ததை நன்கு காட்டுவதாலும் சுவை அதிகரிக்கிறது

–சுபம்–

ராமாயணத்தில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ (Post No.5049)

Written by London Swaminathan 

 

Date: 26 May 2018

 

Time uploaded in London – 18–17

 

Post No. 5049

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

புறநானூற்றில் கனியன் பூங்குன்றன் பாடிய “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பாடலும் “வசுதைவ குடும்பகம்” என்ற ஸம்ஸ்க்ருத ஸ்லோகமும் மிகவும் பிரஸித்தமானவை. சுருக்கமான கருத்து– உலகமே ஒரே குடும்பம்.

 

“எல்லாம் நம்ம ஊருதான்; எல்லாரும் நம்மாளுங்கதான்” என்று சொல்லலாம். ஆனால் அதை நிஜ வாழ்வில் கடைப் பிடிப்பவர் சிலரே. இது எப்படித் தெரியும்?

 

பத்திரிக்கைகளில் நாள்தோறும் வரும் அடிதடிச் செய்திகளைப் பார்க்கையில், ஜாதி, இன, மொழி, அரசியல் மோதல்களைப் பார்க்கையில், உண்மையில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது கடினம் என்று தெரிகிறது. உதட்டளவிலேயே உண்மை.

 

ராமன் வாழ்வில் இதை நேரிடையாக காண்கிறோம். சரணடைந்தவர்கள் ராக்ஷஸர்களாலும் ராமன் மன்னித்து அருளினான். ராவணனுக்கும் கூட வாய்ப்பு கொடுத்தான். சீதையை விடுவித்தால் தப்பிக்கலாம் என்றான்.

ராமனுக்கு ஆறு சஹோதரர்கள்!

 

குகன் என்ற வேடனைச் சந்தித்த ராமன் முதலில் அவனை ஐந்தாவது சஹோதரன் என்கிறான்; பின்னர் குரங்கினத் தலைவன் சுக்ரீவனைச் சந்தித்து அவனை ஆறாவதாக சேர்த்துக் கொள்கிறான். பின்னர் விபீஷணனை ஏழாவது சஹோதரன் என்கிறான். இது கம்ப ராமாயணத்தில் மிகவும் புகழ் பெற்ற பாடல்:-

 

குகனொடும் ஐவர் ஆனேம் முன்பு பின் குன்று சூழ்வான்

மகனொடும் அறுவரானேம் எம்முழை அன்பின்வந்த

அகம் அமர் காதல் ஐய நின்னொடும் எழுவர் ஆனேம்

புகல் அருங்கானம் தந்து புதல்வரால் பொ லிந்தான் நுந்தை

–வீடணன் அடைக்கலப் படலம், யுத்த காண்டம், கம்ப ராமாயணம்

 

 

பொருள்

அன்பின் காரணமாக எம்முடன் வந்து சேர்ந்தவனே! நாங்கள் பிறப்பால் நான்கு சகோதரர்கள்; கங்கைக் கரையில் குகனுடன் நட்புக் கொண்டு ஐவர் ஆனோம்; பின்னர் கிட்கிந்தையில், மேருவை வலம் வரும் சூரியனின் புதல்வனான, சுக்ரீவனுடன் அறுவர் ஆனோம்; இன்று உன்னுடன் நட்பு பூண்டு எழுவர் ஆகிவிட்டோம் . என் தந்தை எனக்கு காட்டை அளித்ததால் நிறைய பிள்ளைகள் ஏற்பட்ட மன நிறைவு அவனுக்கு கிடைத்துவிட்டது.- என்று ராமன் சொன்னான்

 

 

என்ன அற்புதமான பாடல்! இதுதான் உண்மையான ‘யாதும் ஊரே, யாவரும் சுற்றத்தார் (கேளிர்)’.

உலகின் முதல் வெளிநாட்டு தற்காலிக அரசு!

Government in Exile

 

பல சுதந்திர  இயக்ககங்கள்  சொந்த நாட்டை பிறர் ஆள்வதால் வெளிநாட்டில்     அரசு  ஒன்றை (Exile Government)  நிறுவி பிரகடனம் செய்வர். அந்த நாட்டின் அரசும் அதை ஆதரிக்கும். இப்படிப்பட்ட முதல் அரசை அமைத்தவன்

 

ராமன் என்றே தோன்றுகிறது. ஏனெனில் விபீஷணனை  இந்தியாவில் சந்தித்த போதே அவனை இலங்கை அரசின் மன்னன் என்று முடிசூட்டி விடுகிறான் ராமன். அதாவது பின்னர் நடக்கப் போவதை உணர்ந்து இப்படி செய்தான் என்று சொல்லலாம். ஒருவேளை ராவணன் கொல்லப்படாமல் இருந்திருந்தால் கதையே மாறி இருக்கும்

 

ஆனால் அறம் பிழைத்த ராவணன் கட்டாயம் இறப்பான் என்பது உறுதியாகிவிட்டதால் ராமன் இப்படிச் செய்கிறான்.

இதோ அந்தப் பாடல்

 

உய்ஞ்சனென் அடியனேன் என்று ஊழ்முறை வணங்கி நின்ற

அஞ்சன மேனியானை யழகனும் அருளின் நோக்கி

தஞ்சநல் துணைவன் ஆன தவறு இலாப் புகழான் தன்னை

துஞ்சல் இல் நயனத்துஐய சூட்டுதி மகுடம் என்றான்

—-வீடணன் அடைக்கலப் படலம், யுத்த காண்டம், கம்ப ராமாயணம்

 

பொருள்

அழகிய மேனியை உடைய ராமனும் , அடியேன் பிழைத்டேன் தேன் என்று வணங்கி நின்ற மை போல கருத்த நிறமுடைய விபீஷணனக் கருணையோடு பார்த்தான்.  பின்னர் லெட்சுமணனைப் பர்த்து, உறங்குதல் இல்லாத கண்களை உடையவனே! நம்மை அடைக் கலம் புகுந்த சிறந்தவனாகிய விபிஷணனுக்கு இலங்கை அரசன் என்று தெரிவிக்கும் மகுடத்தைச்  சூட்டுவாயாக என்றான் ராமன்.

 

ஆக உலகில்  உண்டான முதல் வெளிநாட்டு அரசு இதுதான்!

 

பல்வேறு இன மக்களையும் அன்பினால் பிணைத்த இராமன் உலகத்தார் உள்ளதுள்  எலாம் உளன் என்றால் மிகை இல்லை!

-சுபம்-