ஹிந்து காந்திஜி! (Post No.4263)

Written by S.NAGARAJAN

 

 

Date: 2 October 2017

 

Time uploaded in London- 4-58 am

 

Post No. 4263

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

ஹிந்துத்வம் வாழ வழி காட்டியவர்

ஹிந்து காந்திஜி!

ச.நாகராஜன்

1

புனிதமான தினம் அக்டோபர் இரண்டாம் தேதி.

அண்ணல் அவதரித்த திருநாள்.

அவரைக் கொண்டாடும் விதமாக எழுத முற்படும் போது வந்த தலைப்பு தான் ஹிந்து காந்திஜி!

இந்தத் தலைப்பையே செகுலரிஸ்டுகள் விரும்பமாட்டார்கள்.

மாறாக கிறிஸ்துவ காந்திஜி என்றோ அல்லது இஸ்லாமிய காந்திஜி என்றோ தலைப்புக் கொடுத்திருந்தால் இமயமலை ரேஞ்சுக்கு என்னைப் பாராட்டுவார்கள்.

காந்திஜியின் வழியில் நடக்க விரும்புவதால் பாராட்டுக்கு பக்குவப்படாமல் உண்மையை எழுதத் துணிவேன்.

அதற்கு உகந்த தலைப்பு இது தான். ஹிந்து காந்திஜி!

 

2

சபர்மதி சிறையில் காந்திஜி இருந்த சமயம்.

ஒரு நாள் தி மான்செஸ்டர் கார்டியன் (The Manchester Guarding)  என்ற பத்திரிகையிலிருந்து அதன் பிரதிநிதி ஒருவர் 1922ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதிக்கு முன்னால் காந்திஜியைப் பேட்டி காண வந்தார்.

அந்தப் பேட்டியை மதராஸிலிருந்து வெளி வரும் ஆங்கிலப் பத்திரிகையான தி ஹிந்து 1922ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிட்டது.

ஒத்துழையாமை இயக்கம் என்பது கிறிஸ்துவின் உபதேசத்திற்கு முரணானது என்று பத்திரிகையாளர் காந்திஜியிடம் கூறினார். அதற்கு காந்திஜி, “ நான் ஒரு கிறிஸ்தவன் அல்ல; ஆகவே கிறிஸ்தவ கொள்கைகளுக்கு ஏற்றபடி எனது செயல்களை நியாயப்படுத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லைஎன்று முகத்தில் அடித்தாற்போல் பதில் கூறினார்

3

தன்னை இந்தியாவின் நீண்ட கால நண்பர் என்று கூறிக் கொண்ட ஒரு அமெரிக்கப் பெண்மணி, “ஹிந்து சமயத்தைப் பற்றி உங்களுடைய விளக்கத்தை நீங்கள் கொடுத்து ஹிந்து சமயத்தையும் ஏசுநாதரின் உப்தேசங்களையும் ஒப்பிட்டுக் கூறுவீர்களா?” என்று வேண்டிக் கொண்டார்.

 

20-̀10-1927 யங் இந்தியா இதழில் அவரது கடிதத்தையும் தன் பதிலையும் காந்திஜி வெளியிட்டார்.

விரிவான அந்த பதில் ஹிந்துவாக தான் இருப்பதற்கான காரணம் என்ற காந்திஜியின் நிலைப்பாட்டை விளக்கும் அற்புத பதிலாக அமைந்தது.

 

ஆனால் இன்றைய செகுலரிஸ்டுகள் காந்திஜியைத் தங்களின் கபடப் போர்வைக்குள் சுருட்டப் பார்ப்பதால் அதையெல்லாம் பற்றிப் பேசுவதில்லை;; வெளியிடுவதில்லை.

அவரது பதிலின் ஒரு பகுதி:

 

“பரம்பரையின் செல்வாக்கில் எனக்கு நம்பிக்கை உண்டு. எனவே, நான் ஓர் ஹிந்து குடும்பத்தில் பிறந்ததால், நான் ஹிந்துவாக இருந்து வருகிறேன்.

 

எனக்குத் தெரிந்த எல்லா சமயங்களுக்குள்ளும் ஹிநது சமயம் ஒன்று தான் மிகவும் சகிப்புத்தன்மை வாய்ந்தது என்பதை நான் அறிந்து கொண்டிருக்கிறேன்.

 

அதில் கண்மூடித்தனமான பிடிவாதத்திற்கு இடமில்லை. இது தான் என் மனத்தை மிகவும் கவர்ந்திருக்கிறது.

அதில் தான் அஹிம்சை நடைமுறையிலும் அனுசரிக்கப்படுகிறது. (ஜைன மதம் அல்லது புத்த மதத்தை ஹிந்து சமயத்திலிருந்து வேறானதாக நான் கருதவில்லை)

 

ஹிந்து சமயம் பசுவை வழிபடுவது, ஜீவ காருண்ய மலர்ச்சிக்கே அடிப்படையாகும். எல்லா உயிர்களும் ஒன்று என்பதையும், எனவே எல்லா உயிர்களும் புனிதமானவை என்பதையும் அது செயலில் காட்டுவதாக இருக்கிறது.

அந்த நம்பிக்கையின் நேரடியான பலனே, மறு ஜன்மத்தில் உள்ள மகத்தான நம்பிக்கையாகும்.

 

மேலும் சத்தியத்தை இடைவிடாது தேடியதன் அற்புதமான பலனாகவே, வர்ணாசிரம தருமம் கிடைத்தது.

ஹிந்து சமயத்தில் நான் இருந்து வருவதற்கான காரணமான சிறந்த அம்சங்கள் என்று எனக்குத் தோன்றியதையே இங்கே மிகவும் சுருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.

 

4

1937ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் தேதி  போலந்திலிருந்து தத்துவ பேராசிரியரான க்ரென்ஸ்கி காந்திஜியை வந்து சந்தித்தார்.

அனைவரும் படிக்க வேண்டிய பேட்டி இது.

முழுவதையும் தர இடம் இல்லை என்பதால் சில முக்கியப் பகுதிகளை மட்டும் இங்கு காணலாம்:

 

Krzenski : Catholicism is the only true religion

Gandhiji : Do you therefore say that other religions are untrue?

Krzenski : If others are convinced that their religions are true they are saved.

Gandhiji : Therefore you will say that everyone would be saved even through untruth.

Krzenski: But I have studied all religions and have found that mine is the only true religion.

 

Gandhiji : But so have others studied other religions. What about them?

Krzenski : I have examined the arguments in favour of other religions.

Gandhiji : But it is an intellectual examination. You require different scales to weigh spiritual truth…. My submission is that your position is arrogant. But I suggest you a better position. Accept all religions as equal, for all have the same root and the same laws of growth.

Professeor switched to a next question.

 

Gandhiji : It is no use trying to fight these forces without giving up the idea of conversion, which I assure you is the deadliest poison that ever sapped the fountain of truth.

 

 

மதமாற்றம் என்பது கொடிய விஷம்

 

மதமாற்றம் என்பது கொடிய விஷம் என்ற காந்திஜியின் கருத்து  செவிடன் காதில் ஊதிய சங்கு போலத் தான் ஆயிற்று பல கத்தோலிக்க பிஷப்புகளுக்கு.

காந்திஜியை “அறுவடை” செய்தால் ஒட்டு மொத்த இந்தியாவையுமே அறுவடை செய்தது போலத் தானே!

அதை நம்பி இந்த போலந்து புரபஸர் மட்டும் வரவில்லை.

ஸ்டான்லி ஜோன்ஸ் உள்ளிட்ட பிரபல பாதிரிகள் அவரை நோக்கிப் படை எடுத்து வந்தன.

ஆனால் ஏமாந்தே போயின.

அனைத்தையும் அன்பர்கள் விரிவாக முழுவதுமாகப் படிக்க வேண்டும்.

 

5

போலந்து மாணவன் ஒருவன் காந்திஜியின் போட்டோ ஒன்றை எடுத்து வந்தான். அவரிடம் அதில் கையெழுத்திட வேண்டினான்.

கத்தோலிக்க பாதிரிமார்கள் நடத்தும் பள்ளி ஒன்று இருக்கிறது.

உங்கள் கையெழுத்திட்ட இந்த போட்டோவை விற்று அதில் வரும் பணத்தை அவர்களிடம் கொடுத்து விடுவேன் என்றான அந்த மாணவன்.

 

“ஆ, அப்படியா சேதி! இதில் கையெழுத்திட்டு பாதிரிகளின் மதமாற்ற வேலைக்கு நான் உதவுவேன் என்று நீ எதிர்பார்க்கிறாயா?” என்று கூறியவாறே போட்டோவை அந்த மாணவனிடமே திருப்பிக் கொடுத்தார் காந்திஜி.

மஹாதேவ தேசாய் தனது டயரிக் குறிப்பில் இந்தச் சம்பவத்தை விரிவாகக் குறிப்பிடுகிறார்.

 

6

காந்திஜிக்கு பாதிரிகளின் அந்தரங்க எண்ணமும் தெரியும்;ஜிஹாதிகளின் உள் நோக்கமும் புரியும்.

அவர் தெளிவான ஹிந்துவாகவே வாழ விரும்பினார்.

ஏனெனில் ஒரு ஹிந்துவுக்கு யாரும் பகை இல்லை. அவனுக்கு அனைவரும் சமமே.

 

ஆனால் ஒரு கிறிஸ்துவனுக்கோ அவனுக்கு முன்னால் மற்றவர் சமம் இல்லை. அவன் ஏசுவுக்குத் தன்னை ஒப்புக் கொடுக்க வேண்டும்.

 

ஒரு இஸ்லாமியருக்கு அடுத்தவர் யாரானாலும் காஃபிர் தான்!

ஹிந்து மதம் வாழ்ந்தால் உலகில் அனைவரும் வாழலாம். ஆனால் இஸ்லாமோ அல்லது கிறிஸ்தவமோ வாழ்ந்தால் ஏனையது இருக்கக் கூடாது.

 

காந்திஜி அனைவரும் வாழ வேண்டுமென்று விரும்பினார்; அந்த நல்லெண்ண வேள்வியில் தன்னை ஆகுதி ஆக்கினார்.

இன்றைய போலி செகுலரிஸ்டுகளும், மதவாதிகளும் அவரை மறக்கடிக்கவே முயல்வர்.

 

அதைத் தோற்கடிக்க ஹிந்து காந்திஜியைப் போற்றுவோம். உண்மையான ஹிந்துவாகவே என்றும் இருப்போம்.

ஹிந்து ராஷ்டிரத்தை நிறுவுவோம்.

***

 

உலகின் ஒப்பற்ற வைரம் கோஹினூர் மீட்கப்படுமா? – 1 (Post No.4254)

Written by S.NAGARAJAN

 

Date: 29 September 2017

 

Time uploaded in London- 6-10 am

 

Post No. 4254

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பாக்யா 28-9-2017 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் (ஏழாம் ஆண்டு 32வது கட்டுரை)  வெளியாகியுள்ள கட்டுரை

 

 

உலகின் ஒப்பற்ற வைரம் கோஹினூர், மீட்கப்படுமா? – 1

 

 

 ச.நாகராஜன்

 

 

“இயற்கையில் கிடைப்பதில் மிகவும் கடினமானது வைரமே. வைரத்தை வைரத்தால் மட்டுமே அறுக்க முடியும் – அறிவியல் தகவல்

      இயற்கை நமக்கு அளிக்கும் செல்வத்தில் தங்கத்திற்கு அடுத்தபடியாக அனைவரும் விரும்புவது வைரத்தையே. இதில் மதம், ஜாதி, மொழி, நாடு, இனம், பால் என்ற பாகுபாடே இல்லை.

அனைவரும் விரும்பும் ஜொலிக்கும் வைரத்தைக் கண்டு அறிவியல் கூட வியக்கிறது.

வைரம் பல பில்லியன் ( ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி) ஆண்டுகள் பழமையானவை. சில சமயம் 300 கோடி ஆண்டுகள் பழமையான வைரங்கள் கிடைக்கின்றன.

நூறு மைல் ஆழத்தில் பூமியில் புதைந்து கிடைக்கும் வைரம் எரிமலை வெடிப்புகளினால் மேலே வருகிறது.

வைரத்தில் இருப்பது ஒரே ஒரு பொருள் தான் – கார்பன் தான் அது. நூறு சதவிகிதம் கார்பன்!!

பூமியின் கீழே உள்ள அதீத வெப்பத்தினாலும் அழுத்தத்தினாலும் கார்பன் அணுக்கள் தனித்தன்மையினால் ஒன்றிணைகின்றன. அதிசயமான வைரமாக ஆகின்றன.

அடமாஸ் (adamas) என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து உருவான ஆங்கில வார்த்தை தான் டயமண்ட். இதன் பொருள் அழிக்க முடியாதது, ஜெயிக்க முடியாதது என்பதாகும். வைரத்தை முதன் முதலில் உலகில் கொண்டிருந்த ஒரே நாடு இந்தியா தான்.

கிறிஸ்துவுக்கு முன் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரேயே வைரத்தை இந்திய மக்கள் அணிந்திருந்தனர். தாங்கள் வணங்கும் தெய்வச் சிலைகளிலும் அதை அணிவித்திருந்தனர்.

      வைரத்தை அணியாத பெரிய மன்னனே கிடையாது. ஆடைக்கும் மேலாக வைரத்தை மன்னர்கள் மதித்து அதை அணிந்து வந்தனர். அரசவைகளில் எந்த அந்தஸ்து உள்ளவர் எப்படிப்பட்ட நவரத்ன மணியை எந்த விதத்தில் பதித்து அணிய வேண்டும் என்பதற்கு கடுமையான விதி முறைகள் இருந்தன.

   வைரத்தைப் பற்றி அக்னி புராணம் உள்ளிட்ட பல நூல்கள் பல அரிய, இரகசியமான கருத்துக்களைத் தெரிவிக்கின்றன.

     இந்திய வைரங்களை உலகினர் போட்டி போட்டுக் கொண்டு வாங்கினர். வைர நாடு என்றே இந்தியா அழைக்கப்பட்டது. வெனிஸ் நகரிலும் ஐரோப்பாவில் பல நகரங்களிலும் இந்திய வைரங்களை விற்கும் வைரச் சந்தைகள் இருந்தன.

1725ஆம் ஆண்டு தான் பிரேஜிலில் ஒரு வைரச் சுரங்கம் கண்டு பிடிக்கப்பட்டது.

ஆயிரத்தி எண்ணூறுகளில் தான் தென் ஆப்பிரிக்காவில் வைரம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இப்போது கனடா, போட்ஸ்வானா, நமீபியா, ரஷியா உள்ளிட்ட நாடுகளிலும் வைரம் கிடைக்கிறது.

     உலக வைரங்களில் பெரிய வைரம் தென் ஆப்பிரிக்காவில் எடுக்கப்பட்ட கல்லினன் வைரம் தான். இதன் எடை 3106 காரட், (ஒரு காரட் என்பது 0.2 கிராம்). இது எட்வர்ட் மன்னனுக்கு அளிக்கப்பட்டது. பின்னர் இது ஒன்பது பெரிய துண்டுகளாகவும் நூறு சிறிய துண்டுகளாகவும் வெட்டப்பட்டது. மூன்று பெரிய துண்டுகளை டவர் அஃப் லண்டனில் உள்ள கண்காட்சியில் காணலாம்.

    ஆனால் இந்த வைரங்களில் எல்லாம் மிகச் சிறந்த வைரமாக இந்தியர்களின் உரிமைச் சொத்தாகக் கருதப்படுவது கோஹினூர் வைரம் தான்.

அதன் கதையே விசித்திரமானது; சுவையுடன் சோகம் கலந்த ஒன்று.

கோஹினூர் வைரம் இந்தியாவின் பரம்பரைச் சொத்து. அது இன்று இங்கிலாந்தில் இருக்கிறது.

வெள்ளையர் அடித்த கொள்ளையில் கோஹினூரும் ஒன்று. அதை மீட்டு இந்தியாவிற்குக் கொண்டு வர வேண்டும் என்று நீண்ட காலமாகப் பெரும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

 

கோஹினூர் என்றால் பாரசீக மொழியில் ஒளி மலை என்று பொருள்.

இது எவ்வளவு பழமையானது என்பது யாருக்கும் தெரியாது.

இதன் பழைய காலப் பெயர் ஸ்மயந்தக மணி.சம்ஸ்கிருத நூல்கள் பலவற்றிலும் இதன் புகழ் மற்றும் அருமை பெருமைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. பகவான் கிருஷ்ணர் உள்ளிட்டோரால் இந்த மணி மதிக்கப்பட்டது என்பது பரம்பரையாக வழங்கி வரும் ஐதீகம்.

   அத்துடன் இந்த கோஹினூருடன் கூடவே ஒரு சாபமும் உண்டு என்று நம்பப்படுகிறது.

   ஆண்களிடம் இது இருந்தால் அது அவர்களுக்கு ஆபத்தையே தரும். பெண்கள் இதை அணியலாம். இது தான் சாபம்.

  இதன் பழைய கால எடை 793 கிராம். இன்றோ வெட்டப்பட்டு வெட்டப்பட்டு சுமார் 105 கிராமாகச் சுருங்கி விட்டது.

   காகதீய வம்சம் இந்தியாவில் ஆட்சி புரிந்த போது ஆந்திர பிரதேச்த்தில் கோல்கொண்டா பிரதேசத்தில் இது மீண்டும் கிடைத்ததாக ஒரு வரலாறும் உண்டு.

மத்திய ஆசியாவிலிருந்து கைபர் கண்வாய் (இன்றைய ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ளது இது) வழியே இந்தியாவினுள் 1526ஆம் ஆண்டு நுழைந்த பாபர் முகலாய சாம்ராஜ்யத்தை நிறுவினார். அதிலிருந்து சுமார் 300 ஆண்டுகள் இந்த முகலாய ஆட்சி தொடர்ந்தது.

    முகலாய அரசரான ஷாஜஹான் 1628ஆம் ஆண்டு தனது சிம்மாசனத்தில் வைரங்களைப் பதித்தார். இதைச் செய்ய சுமார் ஏழு ஆண்டுகள் பிடித்தது.

இதன் விலையோ தாஜ்மஹாலுக்கு ஆன செலவைப் போல நான்கு ம்டங்கு அதிகம்! தாஜ்மஹால் கட்டப்பட்டு வந்த அதே காலகட்டத்தில் தான் இந்த சிம்மாசனமும் உருவாகிக் கொண்டிருந்தது. இந்தச் செய்தியை அரசவை குறிப்புகளை எழுதி வந்த அஹ்மத் ஷா லாகூர் எழுதி வைத்துள்ளார்.

                        (கோஹினூரின் கதை தொடரும்)

அறிவியல் அறிஞர் வாழ்வில் . ..

பிரபல கணித மேதையான் ஆட்ண்ரூ வைல்ஸ் (Andrew Wiles)  358 ஆண்டுகளாக யாராலும் தீர்க்கப்பட முடியாமல் இருந்த ஃப்ரெமெட்டின் லாஸ்ட் தியரம் (Fermet’s Last Theorem) என்ற கணிதப் புதிரை விடுவித்தது உலகையே வியப்பில் ஆழ்த்திய ஒரு சம்பவம்.

1637ஆம் ஆண்டு  பிரான்ஸை சேர்ந்த சட்ட வல்லுநரும் கணிதத்தைப் பொழுதுபோக்காகக் கொண்டவருமான ஃபெர்மெட் ஒரு சாதாரணப் புதிர் கணிதத்தை கணித மேதைகள் முன்னர்  சவாலாக தீர்வுக்காக வைத்தார். அதை யாராலும் தீர்க்க முடியவில்லை.

ஆண்ட் ரூ வைல்ஸ் பத்து வயதில் சிறுவனாக இருந்த போதே இந்த தீர்க்கப்பட முடியாமல் இருந்த புதிர் மீது ஒரு கண்ணை வைத்தார். அதற்கான விடையை எப்படியாவது கண்டு பிடித்து விடுவது என்று தணியாத வெறியைக் கொண்டார். 1986ஆம் ஆண்டு பிரின்ஸ்டனில் கணிதத்துறையில் சேர்ந்தவுடன் மிகவும் இரகசியமாக இந்தப் புதிரை ஆராய ஆரம்பித்தார்.ஏழு வருடங்கள் ஓடின.

இங்கிலாந்தில் 1993இல் நடந்த ஒரு கணித மாநாட்டில் திடீரென்று தனது உரையின் மூன்றாவ்து பகுதியில் இந்தக் கணிதப் புதிரை தான் விடுவித்து விட்டதாகக் கூறவே உலகமே பரபரப்படைந்தது. மறு நாளே நியூயார்க் டைம்ஸ் இதைப் பெரிதாக வெளியிட்டது.

தனது 200 பக்க உரையை அவர் வெளியிடவே அது சரிதானா என்று ஆராய ஆறு மதிப்பீட்டாளர்கள் நியமிக்கப்பட்டனர். அனைவரின் சந்தேகங்களுக்கும் பொறுமையாக் விடையளித்தார் வைல்ஸ். உலகமே அவரைக் கொண்டாட ஆரம்பித்தது. எந்த ஒரு விஷயத்தையும் தணியாத ஏகாக்கிர சிந்தையுடன் அணுகினால் அதில் வெற்றி பெறலாம் என்பதை நிரூபித்து விட்ட மாமேதையாக இலங்குகிறார் வைல்ஸ்

***

விதுரர் கூறும் விதுர நீதி – 3 (Post No.4236)

Written by S.NAGARAJAN

 

Date: 23 September 2017

 

Time uploaded in London- 4-24 am

 

Post No. 4236

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

by ச.நாகராஜன்

 

3

அடுத்தவன்

அடுக்கிறவன்

நான் உன்னைச் சேர்ந்தவனாகிறேன் என்று கூறிச் சரணமடைகிறவன்

ஆகிய இம்மூவரையும் தனக்குக் கஷ்டம் நேரிட்ட காலத்திலும் கூடக் கைவிடக் கூடாது.

 

4

வரம் பெறுதல்

அரசனாதல் *

மகனைப் பெறுதல்

கஷ்டப்பட்டு எதிரியிடமிருந்து  விடுபடுதல்

இந்த நான்கும் ஒன்றுக்கு ஒன்று சமமானவை.

(* அரசன் என்பதற்கு இந்தக் காலத்தில் முக்கிய் உயரிய பதவி என்று எடுத்துக் கொள்ளலாம்.)

 

அரசன் விலக்க வேண்டிய கர்ரியங்கள் நான்கு.

புல்லறிவினர்

விரைந்து  செய்ய வேண்டிய காரியத்தைத் தாமதமாகச் செய்கிறவன்

சோம்பேறிகள்

முகஸ்துதி செய்பவர்கள்

இவர்களுடன் ஆலோசனை நடத்தக் கூடாது. இதைப் பண்டிதனானவன் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

செல்வத்துடன் கூடிய ஒரு இல்லறத்தான் கீழ்க்கண்ட நான்கு நபர்களுக்கும் பூரண வசதி அளித்து தன் வீட்டில் தங்கச் செய்ய வேண்டும்.

வயதான ஞாதி (அவன் நமக்குக் குல தர்மங்களை உபதேசிப்பான்)

தற்காலம் கஷ்ட தசையில் இருக்கும் நல்ல குலத்தில் பிறந்த ஒருவன் ( அவன் வீட்டிலுள்ள சிறுவர் சிறுமியர்க்குக் நல்ல ஒழுக்கங்களைக் கற்றுக் கொடுப்பான்)

ஏழையான ஒரு நண்பன் (அவன் நமது நன்மைகளை எடுத்துச் சொல்வான்)

குழந்தையில்லாத ஒரு சகோதரி (அவல் நமது சொத்தை நன்கு பாதுகாப்பாள்)

 

உடனே பலிக்கின்ற நான்கு எவை என்று இந்திரன் கேட்க பிரஹஸ்பது (குரு பகவான்)) கீழ்க்கண்ட நான்கை எடுத்துரைத்தார்.

தேவதைகளுடைய சங்கல்பம்

புத்திமான்களுடைய மகிமை

அறிஞர்களுடைய வினயம்

நாச கர்மம் ( நாசம் விளைவிக்கும் திருட்டு, வெடிகுண்டு வைத்தல், தீவிரவாதிகளின் இதர குற்றச் செயல்கள் என்று கொள்ளலாம்)

ஆகியவை உடனே பலன் அளிக்கும்.

 

அக்னிஹோத்ரம்

மௌனம்

அத்தியயனம்

யாகம்

ஆகிய் இந்த நான்கும் முறைப்படி அனுஷ்டிக்கப்பட்டால் மோக்ஷம் வரை உள்ள பயனை அளிக்கும்.

இவற்றை கௌரவத்திற்காக முறை தவறி ஆடம்பரமாகச் செய்தால் தீங்கையே விளைவிக்கும்.

 

PICTURE FROM WIKIPEDIA

5

எப்போதும் போற்ற வேண்டியவர்கள் ஐவர்

தாய்

தந்தை

அக்னி

ஆத்மா

குரு

இந்த ஐவகையினரையும் பூஜிக்கின்றவன் மிகுந்த புகழை அடைவான்

 

தேவர்கள்

பித்ருக்கள் (முன்னோர்)

பெரியோர்

சந்யாசிகள்

அதிதி (விருந்தினர்)

ஆகிய் இந்த ஐவரையும் கொண்டாட வேண்டும்

 

நண்பர்கள்

விரோதிகள்

நடு நிலைமையில் உள்ளவர்கள்

உன்னால் போற்றப்பட வேண்டிய குரு

உன்னை அண்டுகின்றவர்கள்

ஆகிய் இந்த ஐவரும் நீ போகும் இடமெல்லாம் கூடவே தொடர்ந்து வருவர்.

 

கண், காது, மூக்கு, நாக்கு, த்வக் (மெய்)  என்ற ஐந்து இந்திரியங்களுடன் கூடிய மனிதன் எந்த ஒரு புலனையும் சரியாகப் பாதுகாக்காமல் இருந்தாலும் அதன் வழியே அவனது புத்தி ஓட்டைப் பாத்திரத்தின் வழியே ஒழுகும் ஜலம் போல அழிந்து விடும்.

ஆதலால் ஒருவனது புத்தி சரியான நிலையில் இருக்க எல்லாப் புலன்களையும் சரியாகப் பாதுகாக்க வேண்டும்.

விதுர நீதி தொடரும்

***

 

 

 

 

எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே! (Post No.4189)

Written  by S.NAGARAJAN

 

Date: 7 September 2017

 

Time uploaded in London-11-57 am

 

Post No. 4189

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

நாட்டு நடப்பு

எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே!

 

ச.நாகராஜன்

 

இறப்பு என்பது துயரமானது.

யாராக இருந்தாலும் சரி.

ஆனால் ஒரு இறப்பை ஆதாயமாக வைத்து உணர்ச்சிகளைத் தூண்டி கிளர்ச்சிகளுக்கு வித்திட்டு தனது சுயலாபங்களை அடைய நினைப்போரை எப்படி விவரிப்பது?

கீழே ஒரு கோடிட்ட வரியைத் தருகிறேன்.

நீங்களே அவர்களுக்கான அடைமொழியைப் பூர்த்தி செய்து கொள்ளலாம்.

——————–

தமிழகத்தில் நடக்கும் பல நிகழ்வுகள்  சுய லாபத்தின் அடிப்படையில் அதிகாரத்தையும் பணத்தையும் “பிடிக்க நினைக்கும்” பூதங்களைச் சுட்டிக் காட்டுகின்றன.

நீட் தேர்வு இந்தியா முழுவதற்குமான ஒரு தேர்வு.

அதில் எப்படித் தேர்ச்சி பெறுவது என்பதற்கான வழியை சிந்திக்க வேண்டும். அதற்கான கால அவகாசம் தேவையெனில் உரிய முறையில் காரணங்களைச் சுட்டிக் காட்டி அதைப் பெற வழி வகை செய்ய வேண்டும்.

 

மாறாக கிளர்ச்சிகள், வன்முறைகள் உள்ளிட்டவை நீட் தேர்வை நீக்குவதற்காக இல்லை என்பது மட்டும் நிச்சயம் என்பதை நடுநிலையாளர்கள் அனைவரும் உணர்கின்றனர்.

ஒரே ஒரு வாதத்தை மட்டும் முன் வைப்போம்:

திருநெல்வேலியில் அரசினர் பள்ளியில் நீட் தேர்வுக்கான ஆயத்தங்களை நன்கு செய்ததால் எட்டு பேர் மருத்துவ படிப்பிற்கான அனுமதி பெற்றுள்ளனர்.

 

ஆனால் யாரை வைத்து சுய லாபம் அடைய நினைக்கிறார்களோ அந்தப் பெண் தனியார் பள்ளியில் படித்தவர். 1176 பெற்றாலும் அனைத்திந்தியாவிற்கும் பொதுவான தேர்வில் அவர் திறமையைக் காட்டி எழுதவில்லை.

 

தனியார் பள்ளியில் படித்து நல்ல மதிப்பெண் பெறாதவர் ஒரு பக்கம்.

 

எப்போதுமே ஏளனம் செய்யப்படும் அரசினர் பள்ளியில் எட்டுப் பேர் உன்னத மார்க்குகளைப் பெற்றது ஒரு புறம்.

சிந்திக்க வேண்டும்.

ஏழைகளை உயர்த்துவது சரி தான். அதற்காக பணக்காரர்களை அடித்து அவர்கள் பணத்தைப் பிடுங்குவது சரியல்ல. இது கம்யூனிஸ தோழர்களின் வழி.

இழிவான வ்ழி.

 

சொந்த சோவியத் யூனியன் தொழிலாளர்களையே ஒன்று படுத்த முடியாமல் அதை சிதற விட்டவர்கள் உலகத் தொழிலாளர்களை எந்தக் காலத்தில் ஒன்று சேர்க்க முடியும்!

சிரிப்புத் தான் வருகிறது.

 

அதே போல படிக்காத மாணவர்களை விசேஷ வகுப்புகளை நடத்தி அவர்களுக்கு அறிவூட்டி நல்ல முறையில் தேர்வுக்கான ஆயத்தங்களைச் செய்ய வேண்டுவது அனைவரின் கடமையாகும்.

அதை விட்டு விட்டு தேர்வே வேண்டாம் என்பது நியாயமில்லை, அல்லவா!

 

அல்லது 99.99 மார்க்குகள் வாங்கியவர்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது அதையும் கூட சமுக நீதி அடிப்படையில் எந்த மார்க் எடுத்தவர்களுக்கும் தர வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம்?

சரி,ஒரு வாதத்திற்காகப் பேசுவோம். மூன்று நாட்களுக்கு  முன்னர் (3-9-2017) வந்த செய்தியை அகில இந்திய அளவில் அமுல் படுத்தினால் நன்றாக இருக்குமே!

செய்தி இது தான்:

 

நீதி மன்றம் அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வீட்டுக் குழந்தைகள் அரசினர் பள்ளியிலேயே படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது.

 

சம் நீதி கேட்பவர்கள் இதை ஆதரிக்க வேண்டும். தங்கள் பிள்ளைகளை அரசினர் பள்ளியில் மட்டுமே படிக்க வைக்க வேண்டும்.

முன் வருவார்களா? இதை இன்னும் சற்று விரிவு படுத்திப் பார்ப்போம்:

 

சமூக நீதி கேட்டு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவர்களானவர்களிடம் மட்டுமே இப்படிப் போராடி அவர்களை உயர்நிலைக்குக் கொண்டு சென்ற காரணத்தால் – தங்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் அனைவரையும்

அவர்களிடம் மட்டுமே வைத்தியம் பார்க்க போராட்டம் நடத்துவோர் அனுப்ப வேண்டும்.

 

சமூக நீதி கேட்டு வக்கீல் படிப்பு படித்து உயர்நிலை அடைந்தோரிடம் மட்டுமே தங்கள் வழக்குகளுக்கு ஆஜராக வழக்குகளைத் தர வேண்டும்.

கிண்டலுக்காக அல்ல, சிந்த்னையைக் கிளறி விடும் உண்மையின் அடிப்படையில் இதை அமுல் படுத்தலாம்.

 

அருமையான இளம் தலைவரான ராஜீவ் காந்தியைக் கொலை செய்ததைப் பற்றிச் சற்றும் கவலைப்படாதவர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நாட்டினரின் இழப்பைப் பற்றிக் க்வலை படாதவர்கள் அவரைக் கொலை செய்தவர்களை விடுவிக்க எவ்வளவு அரும்பாடு படுகிறார்கள். அட, கலி காலமே!!

இவர்கள் ஆக்டிவிஸ்டாம். இதற்கு பல செய்தித் தாள்களும் தொலைக்காட்சிகளும் துணை.

ஒரே ஒரு கேள்வி தான் தோன்றுகிறது. அதற்கு பழைய சினிமா பாடல் துணைக்கு வருகிறது.

எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே?

சொந்த நாட்டிலே?!!!

 

****                               பின் குறிப்பு: புதிய யோசனையைத் தந்த நீதி மன்றத்திற்கு எதிராக சமூக நீதி கேட்டு ஒரு போராட்டம் ஆரம்பிக்கப்படுமா அத்துடன் நீட் தேர்வில் வெற்றி பெற்றாலும் கூட அதைத் தகுதியாகக் கொண்டு அட்மிஷன் தர முடியாது என்று சொல்லும் வேலூர் கிறிஸ்தவ மெடிகல் காலேஜை எதிர்த்து ஒரு சமூக நீதி போராட்டம் ஆரம்பிக்கப்படுமா?

ஆக்டிவிஸ்டுகள் பதில் சொல்வார்களா?!!!நண்பர்கள் ﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽

கார்ல் மார்க்ஸை விஞ்சிய பாரத மகான்கள்! (Post No.4171)

Written by S.NAGARAJAN

 

Date: 29 August 2017

 

Time uploaded in London- 5-40 am

 

Post No. 4171

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

சிந்திக்க வேண்டும் தோழர்களே!

கார்ல் மார்க்ஸை விஞ்சிய பாரத மகான்கள்!

 

ச.நாகராஜன்

 

கார்ல்மார்க்ஸ் ஒரு புது வித தத்துவத்தைத் தந்து விட்டார் எனவும் அது உலகத்தையே உயரத்திற்குக் கொண்டு செல்லும் என்றும் சொல்லும் கம்யூனிஸ்டுகளை நினைத்தால் சிரிப்புத் தான் வருகிறது.

 

பாரத தேசத்தின் பழம் பெரும் அறிவுக் கருவூலங்களைப் படித்தவர்கள் அனைவருக்கும அந்தச் சிரிப்பு வரும்.

உன் சக்திக்குத் தக உழை; உன் தேவைக்குத் தக எடுத்துக் கொள்; உலகத் தொழிலாள வர்க்கமே ஒன்று படு

என்று இப்படியெல்லாம் கோஷம் எழுப்பி இது ஒரு புதிய கண்டு பிடிப்பு போல கம்யூனிஸ்டுகள் “அபூர்வக் காட்சியைத்” தருவது அவர்கள் சம்ஸ்கிருத செல்வத்தையோ அல்லது குறைந்த பட்சம் வள்ளலாரின் திரு அருட்பாவையோ கூடப் படிக்காததால் தான் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லலாம்.

 

“அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்

ஆருயிர்கட்கு எல்லாம் நான் அன்புசெயல் வேண்டும்

எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே  நினதருட்புகழை

இயம்பியிடல் வேண்டும்”

 

 

என்று அவர் கூறும் போது அந்த மனம் எவ்வளவு விசாலமானது; இதை விட ஒரு பெரிய கருத்தையா கார்ல் மார்க்ஸ் சொல்லி விட்டார் என்று கேட்கத்த் தோன்றும்.

கம்யூனிஸத்திற்கும் அருட்பா கொள்கைக்கும் ஒரு வித்தியாசம் உண்டு.

 

கம்யூனிஸம் அடிதடி, வன்முறை, கொள்ளை, பணக்காரனை ஒழி; அழி என்று கூறும். ஆனால் அருட்பாவோ அனைவரும் நன்றாக வாழட்டும்; அன்பு பொங்க வாழட்டும் என்கிறது.

எது உயர்ந்தது? யார் வேண்டுமானாலும் சிந்தித்துத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்!

 

 

அடுத்து காலத்தாற் முற்பட்ட பாகவத ஸ்லோகம் ஒன்றைப் பார்ப்போம்:

“ஒரு மனிதன் அவன் உயிர் வாழ எவ்வளவு தேவையோ அவ்வளவை மட்டுமே கொள்ள அவனுக்குத் தகுதி உண்டு;  அதை விட மேலாக ஒருவன் அடைய முற்படுவானேயானால் அவன் ஒரு திருடனாகக் கருதப்பட வேண்டும்; அவன் தண்டனைக்கு உரியவனே” என்கிறது பாகவதம்.

 

“யாவத் ப்ரீயேத ஜாதரம் தாவத் ஸ்வத்வம் ஹி தேஹினாம் I

அதிகம் யோபிமான்யேத ச ஸ்தனோ தண்டமார்ஹதி” II

 

ஈஸாவாஸ்ய உபநிடதத்தின் முதல் ஸ்லோகமும் கூட அனைத்தும் கடவுளால் படைக்கப்பட்டது. இதில் அடுத்தவன் தனத்திற்கு ஆசைப்படாதே என்று அருளுரை பகர்கிறது.

 

மனுவைத் திட்டும் திராவிடப் பிசாசுகளும் கம்யூனிஸ சைத்தான்களும் மனுவைச் சரியாகப் படிக்கவில்லை என்று அடித்துக் கூறலாம்.

 

ஏனெனில் அவர்கள் கூறும் தத்துவத்தை விட அழகாக அவர் கூறுவது:

 

“உழுபவனுக்கே நிலம் சொந்தம்”

ஆச்சரியமாக இருக்கிறதா? மனுவைப் படிக்க வேண்டும்!

ஸ்தாணுச்சேதஸ்ய கேதாரமாஹு சல்யவதோ ம்ருஹம்

என்கிறார் மனு.இது தான் மனு நீதி!

மனு நீதி பாரதம் முழுவதற்கும் பொது;

க்ருண்வந்தோ விஸ்வம் ஆர்யம்

உலகம் முழுவதையும் பண்பாடுள்ளதாக மாற்றுவோம் என்பது வேத முழக்கம்.

 

 

ஆகவே மனு நீதி உலகம் முழுமைக்கும் பொது!

வேதம் என்பது தனி மனிதனின் சொத்து அல்ல; அது பிராம்மண, க்ஷத்ரிய, வைசிய, சூத்ர என்ற நான்கு வருணத்திற்கும் உரியது. பொது.

 

 

ரஷியாவிலும் கூட, ஏன் சீனாவிலும் கூட கொள்கை வகுக்கும் அறிவு சால் மக்கள் அல்லது தலைவர்கள் அல்லது அனைவருக்கும் இதத்தைத் தர உழைப்பவர்கள்- பிராமணர்கள் – உள்ளனர்.

 

அங்கும் நாட்டைப் பாதுகாக்க ராணுவத்தினர் – க்ஷத்ரியர் – உள்ளனர்.

அங்கும் வணிகம் புரியும் வணிகர் – வைசியர் – உள்ளனர்.

அங்கும் அன்றாட இதரப் பணிகளைப் புரிவோர் – சூத்ரர் – உள்ளனர்.

 

 

இந்த நான்கு வகுப்பில் உயர்வு தாழ்வு இல்லை.

ஒரு சமூகத்திற்குத் தேவையானது இந்த அமைப்பு; அவ்வளவு தான்.

 

வேதமறிந்தவன் பார்ப்பான், பல

  வித்தை தெரிந்தவன் பார்ப்பான்

நீதி நிலை தவறாமல்  – தண்ட

   நேமங்கள் செய்பவன் நாய்க்கன்

பண்டங்கள் விற்பவன் செட்டி – பிறர்

    பட்டினி தீர்ப்பவன் செட்டி

 

தொண்டரென்றோர் வகுப்பில்லை – தொழில்

    சோம்பலைப் போல் இழிவில்லை

நாலு வகுப்பும் இங்கொன்றே – இந்த

      நான்கினில் ஒன்று குறைந்தால்

வேலை தவறிச் சிதைந்தே செத்து

    வீழ்ந்திடும் மானிடச் சாதி

 

என்ற பாரதியின் வார்த்தைகளை விட வேறு எந்த வார்த்தைகளால் இந்த நான்கு வருண தத்துவத்தைக் கூற முடியும்?

 

பண்டைய ரிஷிகளும் தொடர்ந்து தோன்றி வரும் பாரத மகான்களும் – வியாசர் முதல் வள்ளலார் வரை அனைவரும் -வலியுறுத்தும் கருத்து ஒன்றே தான்!

 

ஆருயிர் அனைத்தும் ஒரே நிறை; ஒரே எடை; ஆருயிர்க்கெல்லாம் அனைவரும் அன்பு செய்தல் வேண்டும்

 

கார்ல் மார்க்ஸ் தத்துவத்தை விட பாரத மகான்கள் வலியுறுத்தும் தத்துவம் மிக மேலானதா, இல்லையா?

தோழர்கள் சிந்திக்க வேண்டும்!

***

சர்ச்சிலின் ராஸ்கல் மேற்கோள் (Post No.4049)

Written by S NAGARAJAN

 

Date: 4 July 2017

 

Time uploaded in London:-  5-59 am

 

 

Post No.4049

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

தெய்வ தேசம்

 

சர்ச்சிலின் ராஸ்கல் மேற்கோள்; பலிக்காமல் போக வைக்க முடியுமா?!

ச.நாகராஜன்

 

‘ராஸ்கல்,ரௌடிகள், கொள்ளைக்காரர்கள் கைக்கு அதிகாரம் போகும்; எல்லா இந்திய தலைவர்களும் மிக மோசமான,போலியான தலைவர்களாக இருப்பார்கள். இனிக்க இனிக்கப் பேசுவர்; ஆனால் வஞ்சக நெஞ்சைக் கொண்டிருப்பர். அதிகாரத்திற்காகத் தங்களுக்குள் தாங்களே  சண்டையிடுவர். அரசியல் குழப்பங்களில் இந்தியா காணாமல் போகும். இந்தியாவில் காற்றும் நீரும் கூட வரி விதிக்கப்படும் ஒரு நாள் வந்து சேரும்.’ -வின்ஸ்டன் சர்ச்சில்

 

 

“Power will go to the hands of rascals, rogues, freebooters; all Indian leaders will be of low calibre & men of straw. They will have sweet tongues and silly hearts. They will fight amongst themselves for power and India will be lost in political squabbles. A day would come when even air and water would be taxed in India.”

 

வின்ஸ்டன் சர்ச்சிலின் மிக பிரபலமான இந்த மேற்கோள் ‘ராஸ்கல் மேற்கோள்’ (Rascal Quote)  என்று உலகெங்கும் பரவலாகப் பேசப்படுகிறது.

இதைக் கேட்கும் உண்மையான் தேசபக்தியுடைய இந்தியர்கள் சிரிப்பார்கள்.

எங்கள் தேசம் உயர் தேசம் என்று நமது பரம்பரையைச் சுட்டிக் காட்டி நெஞ்சு நிமிர்ந்து நடப்பர்.

சரி தான்! நல்லவர்கள் அப்படித்தான் சொல்ல வேண்டும்.

ஆனால் நாட்டு நடப்பு?

நாட்டு நடப்பை அறிந்தவர்கள் கீழ்க்கண்ட விதமாகச் சொல்லுகின்றனர்:-

எல்லா பல்கலைத் துணை வேந்தர்களும அயோக்கிய ராஸ்கல்கள். அந்தப் பதவிக்கு ஐந்து கோடி குறைந்த பட்ச தொகையாகக் கொடுத்து அதை ‘வாங்க’ வேண்டுமாம்.

டி.எஸ்.பி. என்றால் அரை சி அதாவது 50 ல.

இன்ஸ்பெக்டர் என்றால் கால் சி.

வாத்தியார் என்றால் கூட ஒரு ல.

அரசு பதவிக்கு குறைந்த பட்ச தகுதி அரசியல் கட்சி ஆபீஸுக்குத் தினசரி போக வேண்டும். அரசு அலுவலகம் “தானாக” இயங்கும் அல்லது தூங்கும். யாருக்குக் கவலை.

நீதியரசர் பதவி பற்றிச் சொல்லாமல் இருப்பதே நல்லது.

தனக்குத் தானே வழக்கை விசாரித்து தன்னை நிரபராதி என்று தீர்ப்புச் சொல்லிக் கொண்டு மற்ற நீதியரசர்களுக்குத் தண்டனை விதிக்கும் நீதியரசர் ஒரு நல்ல உதாரணம்.

எஞ்ஜினியரிங், மெடிகல் என எடுத்துக் கொண்டால் 80 ல வேண்டும் – ஒரு சீட்டைப் பெற.

லா பற்றிச் சொல்லாம’லா’  இருக்க முடியும்? வேண்டாமப்பா, கல்’லா’த பேர்களே நல்லவர்கள். இங்கு இல்’லா’த பேர்களே யோக்கியர்கள்!

ஊடகங்கள் பொய்மூட்டையின் இருப்பிடம்; போலிகளின் விவாத மேடை விபரீத மேடை! தொலைக்காட்சியும் பத்திரிகைகளும் ஐந்தாம் படையாக மாறிக் கொண்டிருப்பதால் நாடு படும் பாடு பெரும்பாடு.

கோவில்களைக் கொள்ளையடிப்பதோ கைவந்த ஒரு தனிக் கலை!

இவற்றால் பண்பாடு படும் பாடு பற்றி ஒரு ‘பண்’ பாடு என்றால் கவிஞர்களாலும் கூட முடியாது.

அரசியலோ ரௌடிகளின் கூடாரம். கொலை கேஸ்களில் மாட்டிக் கொண்டவர்களின் இருப்பிடம். பல் லட்சம் கோடிகள் ஊழல் வழக்கில் சிக்குவதே அடிப்ப்டைத் தகுதி.

சி என்பது சீச்சீ என்று சொல்லுமளவு மிக அற்பமான தொகை அவர்களுக்கு.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காமராஜர் சாதி மத வேறுபாடின்றி அனைத்துக் குழந்தைகளுக்கும் வயிறாரச் சோறிட்டு கல்விக் கண்களைத் திறக்க முயற்சித்ததை நன்கு அறிவோம்.

பின்னால் திராவிடப் பிசாசுகள் ஊழல்,பொய், லஞ்ச் லாவண்யங்களை அவிழ்த்து விட்டு அதில் தமது குடும்பத்தை வளர்த்த கதையையும் அறிவோம்.

தமிழ்நாடு மட்டுமல்ல, பீஹார், உ.பி. கேரளம், கர்நாடகம், வங்காளம் எந்த மாநிலத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் – அங்கும் இதே கதை தான்! ஊழல் அரசியலே தான்!

இது தான் நாட்டு நடப்பு அறிந்தோர் கூறுவது!

 

சர்ச்சிலின் மேற்கோளை நிச்சயமாக விரைவில் நடைமுறைப்படுத்தி விடுவோம் என்று ஆவேசமாகச் செயல்படுபவர்களின் எண்ணிக்கையைக் கண்டு அதிர்ந்து போகிறோம்.

நல்லவர்கள் நடுங்குகிறார்கள். யோக்கியமான்வர்கள் திகைக்கிறார்கள். எப்படித் தான் இந்த நாட்டில் வாழ்வது?

ஆறுகள் வறள்கின்றன – மணல் கொள்ளையால் – நல்ல மனங்கள் வறள்வது போல.

மலைகள் பொடியாகின்றன, கற்களைக் கொள்ளை அடிப்பதால் – நல்லவர் உள்ளம் பொடிப்பொடியாகி நொறுங்குவது போல.

இது தவிர,

மைனாரிடி அப்பீஸ்மெண்ட்.

தாழ்ந்தவர் கார்டைக் காட்டி சலுகை பெற முயல்வது.

எதையாவது இலவசமாகப் பெற்று வோட்டைத் தருவது.

இன்ன பிற அலங்கோலங்களை ‘எண்ணி’, ‘எண்ணி’ ( counting and thinking) மாய்ந்து போகிறோம்.

சர்ச்சில் கூறியது நடந்து விடுமா? சற்று யோசிப்போம்.

 

அவரைத் திட்ட வேண்டாம்; நம்மைச் சார்ந்தவர்கள் திருந்த வழி உண்டா என்று யோசிப்போம்.

அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்பது அறநூல்களின் முடிபு. என்றாலும் அறத்தை வெல்ல வைக்க போதுமான நல்லவர்கள் தேவை அல்லவா?

ந்ல்லவர்கள் பகிரங்கமாக ஒன்று கூட முடியாத நிலை கூட ஏற்பட்டு விடும் போல இருக்கிறது.

ஒரு இரகசிய இயக்கமாக மாறி இவர்கள் நம் தேசத்தைக் காப்பாற்ற முன் வர வேண்டும்.

சர்ச்சிலின் மேற்கோள் பலிக்காமல் இருக்க நமது பாரம்பரிய அடிப்படையிலான ஒரு ‘வேத உத்வேகம்’ தேவை

ஜனநாயகத்தைக் காப்போம். நீதித்துறையை சரியானபடி பாதுகாப்போம்.

இந்திய அரசியல் சாஸனம் நமது இன்றைய தர்ம சாஸனம் என்பதை மனதில் இருத்திச் செயல்படுவோம்.

தர்மநெறி முறைகளைக் காப்போம்.

நல்ல ஊடகங்களை மட்டும் வளர்ப்போம்.

திறமைக்கும் தகுதிக்கும் மதிப்புத் தருவோம்.

வேலை செய்வது கடமை என உணர்வோம்.

சத்யமேவ ஜயதே என்ற பாரத அடிப்படை உண்மையை வெற்றி பெறச் செய்வோம். நமது ராணுவத்தைப் போற்றுவோம். வீரர்களுக்கு உறுதுணையாகத் தோள் கொடுப்போம்.

தர்மமே அரசியலுக்கு அடிப்படை என்பதை உலகிற்குக் காட்டுவோம்.

 

பாதை பிறழாமல் இருக்க அருள் புரி பாரத தேவியே!

போகுமிடம் வெகு தூரம்;

போக வேண்டும் நெடு நேரம்!

துணை இருப்பாய் காளி!

நீயே எமக்கு தர்ம வேலி!!

***                                                             ல என்றால் லட்சம் சி என்றால் க்ரோர். எல்லோரும் இந்நாட்டு ரியல் எஸ்டேட் மன்னர்கள் என்பதால் இதற்கு அர்த்தம் புரிந்திருக்க வேண்டும்.

 

31 Beautiful Quotations from the Panchatantra! (Post No.3675)

March 2017 GOOD THOUGHTS Calendar

 

Compiled by London swaminathan

 

Date: 27 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 20-33

 

Post No. 3675

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

March 11 Masi Makam; 13 Holi; 14 Karadaiyan Nonbu;  29 Telugu New Year (Yugadhi); March 8 -International Women’s Day

27– New Moon Day

12 –Full Moon Day

Auspicious Days— 9, 15, 23, 26.

March 1 Wednesday

Wealth: “Let the wealth you earn circulate (invest)

and you keep it still

Water in a full tank, lacking an outlet

spills over and go to water (Chapter 1-2)

 

March 2 Thursday

Wealth: “Wealth lures wealth as tame elephants the wild;

wealth cannot be earned by wishful thinking

there can be no trade without wealth (1-3)

 

March 3 Friday

Wealth: “The man who lets the wealth that Fortune showers on him

sit idle, finds no happiness in the world,

nor I the next. What is he then?

A confounded fool performing a watchman’s role- 1-4

 

March 4 Saturday

Earned by valour alone:

“No rite of consecration

no sacred ablution

do beasts of the forests perform

to crown the lion as king? (1-6)

 

March 5 Sunday

Poking Nose: “He who pokes his nose where it does not belong,

surely meets his end;

for that’s what happened to the monkey who meddled

with the wedge, my friend” (1-8)

March 6 Monday

Kin and kith: If a man does not hold dear the well-being

of parents, kin, dependants, and himself,

what good is his living in the world of men?

A crow too lives long eating ritual offerings (1-11)

 

March 7 Tuesday

Scurvy: Easily filled is a tiny stream

easily filled the cupped paws of a mouse

easily pleased a scurvy fellow;

he gives thanks for crumbs (1-14)

 

March 8 Wednesday

Effort and Conduct: By no man’s smile is any many raised high;

frown is any man cast down;

By no man’s up or down, a man rises or falls in life,

by the true worth of his actions and conduct 1-18

 

March 9 Thursday

Virtue and Vice: With greatest effort are stones carried uphill;

and with the greatest ease do they tumble down;

so too with our own self, through Virtue and Vice 1-19

 

March 10 Friday

Understanding: “What is left unsaid, the learned, wise, infer

The intellect sees clearly revealed

another’s true intent and purpose,

gains knowledge from expression of face and eyes

from tone of voice, gait

from gesture and deportment 1-20

March 11 Saturday

Courtier: “A courtier in the palace should act with extreme caution;

a pupil in his teacher’s house, with respect and discretion;

Those unmannerly who do not know their place

will soon meet with extinction like oil lamps

lighted at dusk in dwellings of the poor -1-25

 

March 12 Sunday

Women: Kings and women and slender climbing wines

cling to whatever they find close to them

such is the way of the world 1-27

 

March 13 Monday

Wise: “The wise do not care to serve the King

Who cannot recognise each ones individual merit

Such service is wholly barren of all fruit

Like the tillage of a salt meadow 1-31

 

March 14 Tuesday

He who stands in the forefront in battle

But walks behind King in the city

Waits in the palace at the Royal chamber door

He is beloved of princes 1-35

March 15 Wednesday

He who looks upon dice as Deaths messenger

And drink as Deadly Poison

Who sees other men’s wives simply as forms

He is beloved of princes 1-44

 

March 16 Thursday

If the master gets angry, his man bends low

Sings his praise, extols at his largesse

Hates his foes, dotes on those who he favours,

That is the sure way to win someone over

Without recourse to magical arts 1-53

 

March 17 Friday

Even a worthless bit of straw comes in handy

For the great ones to pick their teeth or scratch their ears

What today then of the service a person

Endowed with speech and limbs can render, O King 1-58

 

March 18 Saturday

A fine gem fit to grace a gold jewel,

If mounted in a cheap tin setting

Does not scream, nor refuses to gleam

It is the jeweller who is put to shame 1-63

 

March 19 Sunday

In a place where no difference is perceived

Between a priceless gem with eye of fire

And a fragment of pale crystal

How can a gem trade flourish there? 1-66

 

March 20 Monday

Shaping: A horse, a weapon, a text, a lute

A voice, a man and a woman

They perform Ill, or well

According to who master’s them 1-68

 

March 21 Tuesday

Birth: Silk is spun by the humble worm

gold is born of rock

the lotus from the mud

ruby from the serpent’s hood

A person of merit shines

by the light of his own rising merits

of what consequence is his birth? 1-69

 

March 22 Wednesday

Confiding: A man might confide some things to his wife

some to his close friends, and some to his son;

these deserve his trust; but not reveal

all matters to everyone in sight 1-73

 

March 23 Thursday

Relief:  true and tested friend, a faithful wife,

a loyal servant, a powerful master,

disclosing his troubles to these

a man discovers great relief 1-74

 

March 24 Friday

Son: Joyous in prosperity,

not cast down in adversity

steadfast in battle

rarely does a mother bear such a son

the ornament of the three worlds  1-79

 

March 25 Saturday

Sycophants: A blade of grass bends low, powerless,

tosses about, light, lacking inner strength

A man who lacks a sense of honour and pride,

is like a pitiful blade of grass -1-80

 

March 26 Sunday

King: As a man in perfect health

disdains all doctors and drugs

so, a king free of troubles

thinks little of his ministers 1-89

 

March 27 Monday

Lie: Even the smallest lie spoken before a king

has the gravest consequences;

the ruin of the speaker’s parent and teacher

and that of the gods as well 1-90

 

March 28 Tuesday

King is God: Blended of essences of all gods,

a king is formed; so sages sing

Look upon him, therefore, as a god

never speak an untruth to a king 1-91

 

March 29 Wednesday

Humility: A hurricane does not uproot the pliant grass

that bends low before its fury;

it snaps only proud, lordly trees;

A man might let his valour speak

only to others of equal might 1-93

 

March 30 Thursday

Ministers: A kingdom is held firm by ministers

who are tested and true, straight, resourceful,

accomplished and endowed with inner strength,

as a temple is well-supported by pillars

straight, strong, well polished and firmly grounded 1-95

 

March 31 Friday

Sweetness: Sweet as nectar is the fire’s warmth in winter;

Sweet as nectar is the sight one’s beloved;

Sweet as nectar is royal favour;

Sweet as nectar is food cooked in milk 1-97

 

Book used : The Pancatantra, translated by Chandra Rajan (Panchatantra was written by Vishnu Sarma before fifth century CE in Sanskrit)

 

–Subham–

Business is Business!(Post No.3545)

Written by S NAGARAJAN

 

Date: 15 January 2017

 

Time uploaded in London:-  5-47 am

 

 

Post No.3545

 

 

Pictures are taken from different sources; thanks.

 

Contact: swami_48@yahoo.com

 

 

Business is Business and How to win the game

by S. Nagarajan

 

The nature of the world is to find fault with everybody. You have to bear these comments and you have to sail smooth against the rough waves.

Be it a manager, or a CEO, or a club president, nobody could satisfy all.

 

If he begins on time,                        He is a tyrant

If he waits for late-comers               He is too tolerant

If he requires constant attention       He is a despot

If he does not care                            He makes himself foolish

If he assumes the spokesman’ role   He becomes a bore

If he yields                                        He becomes unnecessary

If he calls for silence                         it is an abuse of power

If he permits disorder                        He falls in authority

If he is firm                                        He takes himself too seriously

If he is good-natured                          He does not maintain his rank

If he expounds his own ideas             People are perforce against him

If he asks for a choice                        He is irresolute

If he is dynamic                                 He is worked up

If he remains cautious                       He is inefficient

If he does everything on his own      He is conceited

If he delegates                                   He is lazy

If he is attentive to the ladies            He is obsequious

If he is not                                         He is a snob!!!

 

I.P.Guillon, Rotary Club of Marmande, France has written the above  under the caption The Club President  in French.. This has been translated in English by Wallace Flint, Rotary Club of Hilton Head Island, South Carolina, U.S.A  The Rotary Club magazine ‘The Rotarian’ has published it in its July 1982 issue.

 

Well, let us formulate and plan our own good principles and action plan to achieve our goal.

 

What is business? There is an internet joke as to how one should win the game of business.

 

Father:  I want you to marry a girl of my choice

Son   : I will choose my own bride

Father: But the girl is Bill Gates’ daughter

Son    : Well in that case…. OK

 

Next father approaches Bill Gates.

 

Father: I have a husband for your daughter

Bill Gates : But my daughter is too young to marry!

Father: But this young man is a vice – president of World Bank

Bill Gates: Ah! In that  case… Ok

 

xxx

Finally father goes to see the president of the World Bank.

Father : I have a young man to be recommended as a vice-president

President : But I already have more vice-presidents than I need!

Father : But this young man is Bill Gates’s son-in-law.

President : Ah! In that case… OK

 

xxx

 

This is how good business is done.

 

Manipulate intelligently supply and demand and win the game without harming anybody but to the satisfaction of all concerned.

Keep the secret in your heart and start playing.

 

GOOD LUCK!

 

*******

 

அரவிந்தரின் கண்களில் அரும்பிய நீர்! (Post No.3418)

Article Written by S NAGARAJAN

 

Date: 5 December 2016

 

Time uploaded in London: 5-59 AM

 

Post No.3418

 

Pictures are taken from various sources; thanks. They are representational.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

 

 

 

சென்ற வார பாக்யா இதழில் வெளிவந்த கட்டுரை

மகாகவி பாரதியார் பிறந்த தேதி டிசம்பர் 11. மஹரிஷி அரவிந்தர் மறைந்த தேதி டிசம்பர் 5. இருவரின் அழியா நட்பும் ஆன்மீக ரீதியிலானது. இந்த இருவரையும் பற்றிய சிறப்புக் கட்டுரை.

 

அரவிந்தரின் கண்களில் அரும்பிய நீர்!

 

ச.நாகராஜன்

 

விடுதலைப் போரில் ஈடுபட்டு அலிபூர் சிறையில் உயரிய ஆன்மீக அனுபவம் பெற்ற பின்னர் மஹரிஷி அரவிந்தரின் மனம் ஆன்மீக சிந்தனையில் ஊறித் திளைத்தது. ஒரு புதிய அரும் பெரும் சக்தியை பூவுலகில் இறக்குவதற்கான யோகத்தில் அவர் மனம் விழைந்தது.

இதையொட்டி அவர் உள் மனதில் ஒரு குரல் ஒலித்தது: ‘பாண்டிச்சேரிக்குப் போ’ என்று.!

அந்தக் குரலின் கட்டளையை ஏற்று அரவிந்தர் புதுவைக்கு ஒரு படகில் விரைந்தார்.

அப்போது புதுவையில் இருந்த சுதேசிகளான மகாகவி பாரதியார், ஸ்ரீநிவாசாச்சாரி, கிருஷ்ணமாச்சாரி ஆகியோருக்கு அரவிந்தர் வருகை இரகசியமாக ஒருவர் மூலமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் அவர்கள் அந்த தூதர் கொண்டு வந்த செய்தியை நம்பவில்லை.

ஆங்கிலேய் அரசின் சூழ்ச்சிகளில் இதுவும் ஒரு திட்டமே என நம்பினர்.

இருந்தாலும் கூட அவர் ஒருவேளை வந்து விட்டால் அவர் தங்குவதற்கென சர்க்கரை செட்டியார் என்ற அன்பரின் வீடு ஏற்பாடு செய்யப்பட்டது.

அரவிந்தர் 1910ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி புதுவை வந்து சேர்ந்தார். பாரதியார் அவரை வரவேற்றார்.

அன்றிலிருந்து ஒரு அற்புதமான நட்பின் அபூர்வ விளைவுகளாக வேத ஆராய்ச்சி, அரவிந்தர் தமிழ்க் கவிதைகளை இரசித்து, ஆண்டாள், பாசுரத்தை (To the Cuckoo, I dreamed a dream) ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது, பாரதியார் அவரை  தினமும் சந்தித்துப் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிததது என்று ஏராளமான நற் பணிகள் நடைபெற ஆரம்பித்தன.

அரவிந்தர் மேல் பேரன்பு கொண்டிருந்த மகாகவி, அவரைப் புகழ்ந்து,

“ஆதிசிவன் மேலிருக்கும் நாகப் பாம்பே  – எங்கள்

அரவிந்தப் பேர் புனைந்த அன்புப் பாம்பே!

சோதிப்படத் தூக்கி நட மாடி வருவாய்! – அந்தச்

சோலை நிழலால் எமது துன்பம் ஒழிவோம்!”

என்று பாடினார்.

 

 

ஒரு நாள் மண்டயம் ஸ்ரீநிவாஸாசசாரியார் வீட்டிற்கு வந்த பாரதியார் சரஸ்வதி ஸ்தோத்திரமான எங்ஙனம் சென்றிருந்தீர் என்று தான் புனைந்த பாடலை பாடிக் காட்டினார். அப்போது அங்கு வ.வே.சு ஐயரும் வந்தார்.

அப்போது நடந்த உரையாடலை ஸ்ரீநிவாஸாசசாரியாரின் புதல்வியான யதுகிரி அம்மாள் ‘பாரதி நினைவுகள்’ என்ற தனது நூலில் இப்படிக் குறிப்பிடுகிறார்:

ஸ்ரீநிவாஸாசசாரியார் : ஒரு பதத்தில் நூறு பொருள்களை அடக்கும் சக்தி பாரதி தவிர வேறு யாருக்கும் வராது.

பாரதி: நம் நால்வருக்குள் நம் குண விசேஷங்கள் அடங்கி விட்டன. நான் நன்றாகப் பாடுகிறேன் என்கிறீர் நீர். உம்மைப் போன்ற எழுத்தாளர் இல்லை என்கிறேன் நான். ஐயரைப் போன்று மொழிபெயர்ப்பு நிபுணர் கிடையாது என்று நாம் சொல்கிறோம். பாபுவைப் போல் (அரவிந்தரைப் போல்) பழைய வேதங்களை இங்கிலீஷில் மொழிபெயர்த்து அடுக்குபவர் கிடையாது என்கிறோம். நாலு பேர் நாலு பக்கத்திற்கு.

ஸ்ரீநிவாஸாசசாரியார் : காலம் வரும். அவசரப்பட வேண்டாம். இது சோதனைக் காலம்.

ஐயரும் ஆறுதல் கூறினார் பாரதியாருக்கு. மஹாகவியாக இருந்தும் வறுமையில் ஆழ்ந்திருந்தது, உலகினர் தன்னை அறியாதிருந்தது அவரை வேதனைப் படுத்தியது.

புதுவையில் அடிக்கடி ஆங்கிலேயரின்  சூழ்ச்சித் திட்டங்கள் அரங்கேறும்.

இந்த சூழ்ச்சியின் ஒரு பகுதியாக புதுவையை ஆங்கிலேயருக்கு பிரெஞ்சுக்காரர்கள் விற்று விடுவதாகப் பேச்சு நடந்தது. அதைப் பற்றி பாரதியாரின் புதல்வியான சகுந்தலா பாரதி, ‘என் தந்தை’ என்ற நூலில் விவரமாகக் குறிப்பிடுகிறார் இப்படி:

“ ஒரு சமயம் புதுவை நகரை பிரெஞ்சுக்காரர்கள் ஆங்கிலேயருக்கு விற்றுவிடுவதாகப் பேச்சு நடந்தது. அப்பொழுது அங்கிருந்த ‘ஸ்வதேசிகளை’ ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடாமல், பிரெஞ்சுக்காரருக்குச் சொந்தமான அல்ஜேரியாவுக்கு அனுப்புவதாக பிரெஞ்சு கவர்னர் ஒப்புக்கொண்டார். அவ்வாறே போவதற்கு ஸ்ரீ வ.வே.சு. ஐயர், ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ ஸ்ரீநிவாஸாசசாரியார்  எல்லோரும் சம்மதித்து விட்டார்கள். என் தந்தை மட்டும், தன் மனைவி மக்களையும் தன்னுடன் வர அனுமதித்தால் தான் போக முடியும். இல்லாது போனால் விதிப்படி நடக்கட்டுமென்று ‘நான் புதுவையிலேயே தங்கியிருப்பேன்’ என்று கூறினார். அவ்வாறே அனுப்பவும் பிரெஞ்சுக்காரர்கள் சம்மதித்து விட்டார்கள். கடவுளின் அருளால் புதுவையை விற்கவுமில்லை. நாங்கள் பாலைவனத்திற்குப் போக வேண்டிய அவசியமும் நேரவில்லை”

 

இந்தக் கால கட்டத்தில் தினமும் பாரதியார் சகுந்தலாவிற்கு பாலைவனக் கதைகள் சொல்வாராம்

ஆனால் நல்ல வேளையாக அல்ஜீரியா பாலைவனத்திற்கு அரவிந்தர், பாரதியார் உட்பட்ட யாரும் போகவில்லை.

புதுவை வாழ்க்கை சகிக்க முடியாத ஒரு நிலை ஏற்படவே பாரதியார் சென்னைக்குத் திரும்ப முடிவு செய்தார்.

கடைசியாக அரவிந்தரிடமிருந்து விடை பெறும் நாளும் வந்தது.

அந்த நாளைப் பற்றி சகுந்தலா பாரதி தனது நூலில் இப்படி விவரிக்கிறார்:

“ஸ்ரீ அரவிந்தரிடம் என் தந்தை விடை பெறுவதற்காகச் சென்றார். நாங்களும் போயிருந்தோம். அந்தாளில் ஸ்ரீ அரவிந்தரின் ஆஸ்ரமத்திற்கு இப்போதுள்ளது போன்ற கட்டுக் காவல் கிடையாது. எங்களுக்கு விருப்பமானபோதெல்லாம்,ஸ்ரீ அரவிந்தரின் மாளிகைக்குச் செல்வதுண்டு. அங்கு ஸ்ரீ அரவிந்தரும், என் தந்தையாரும், ஸ்ரீ வ.வெ.சு ஐயரும் பல விஷயங்களைச் சம்பாஷிப்பார்கள். குழந்தைகளாகிய நாங்கள் சிறிது நேரம் கேட்டிருப்போம். பின்பு அவரது மாளிகையைச் சூழ்ந்த விசாலமான தோட்டத்தில் விளையாடியும், ஸ்ரீ அரவிந்தருடன் வசித்து வந்த அவரது சிஷ்யர்களுடன் பேசியும் சில நேரம் கழிப்போம்……

கடைசிமுறையாக் என் தந்தை அரவிந்தரிடம் விடை பெறப் போனபோது அவர்கள் தனியறையில் சம்பாஷணை நடத்தியதால் அதன் விவரம் எனக்குத் தெரியாது. ஆனால் விடைபெற்றுத் திரும்புகையில் ஸ்ரீ அரவிந்தரின் சாந்தி நிறைந்த ஞானவொளி வீசும் கண்கள் கண்ணீரால் மங்கியிருந்தன. என் தந்தையின் வீர விழிகளில் கண்ணீர் ததும்பி நின்றது. அது மட்டும் தான் நான் கண்டேன்.

ஸ்ரீ அரவிந்தரது ஆசீர்வாதத்தைப் பெற்று வீடு திரும்பினோம். அவரது சீடர்கள் எங்களுடன் வீடு மட்டும் வந்தார்கள்.நண்பர்கள் யாவரையும் பிரிய மனமில்லாமல் பிரிந்து புதுவையிலிருந்து புறப்பட்டோம்.”

சகுந்தலா பாரதியின் புதுவை வாசம் இப்படி உருக்கமுடன் கண்ணீருடன் முடிகிறது.

 

ஆங்கில சாம்ராஜ்யத்தையே ஆட்டுவித்த மகாவீரர், ஆன்மீக சிகரத்தில் ஏறி புதிய யோக சக்தியைப் பூவுலகில் இறக்கியவர் அரவிந்தர்.

தன் பாட்டுத்திறத்தாலே இந்த வையத்தைப் பாலித்திட வந்தவர் தமிழ்க் கவிஞர் பாரதியார். வாராது வந்த மாமணி. வீயாச் சிறப்புடையவர்.

இவர்களின் கண்களில் பிரிவினால் அரும்பியது நீர் என்றால் அது புனித நீர் அல்லவா!

கொடுத்த வைத்த புதுவை பூமி சரித்திரத்தில் புனித பூமியாக நிரந்தர இடம் பெற்று விட்டது!

******

 

 

 

பிரிட்டிஷ் பார்லிமெண்டில் 2 குட்டிக் கதைகள்! (Post No.3393)

Written by London swaminathan

 

Date: 27 November 2016

 

Time uploaded in London: 7-00 AM

 

Post No.3393

 

Pictures are taken by Mr Prabhakar Kaza and Mr Aditya Kaza; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

I have already posted it in English

 

பிரிட்டிஷ் பார்லிமெண்ட் கட்டிடத்திற்குள் கமிட்டீ ரூம் எண்.12-ல் புதன் கிழமை 23-11-2016 அன்று இந்தியன் போரம் ஆன் பிரிட்டிஷ் மீடியா (INDIAN FORUM ON BRITISH MEDIA) என்ற அமைப்பின் கீழ் ஒரு கூட்டம் நடந்தது. சுமார் 100 பேர் வந்திருந்தனர்.

 

எதற்காக இந்தக் கூட்டம்?

பிரிட்டிஷ் சமத்துவ சட்டத்தில் (Equality Act 2010) வேற்றுமை ஏற்படுத்தக் கூடிய அம்சங்களில் “ஜாதி” (CASTE) என்ற சொல்லையும் சேர்க்க வேண்டும் என்று சொல்லி கிறிஸ்தவ மற்றும் தலித் அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன. நான் சேர்க்கக்கூடாது என்ற தரப்பில் பேசினேன். அப்போது இரண்டு கதைகள் சொன்னேன். பிரிட்டிஷ் எம்.பி. பாப் பிளாக்மேன் முதலானோர் நான் சொன்ன 2 குட்டிக் கதைகளையும் ரசித்துக் கேட்டனர்.

 

நண்பர்களே,

ஜாதி பற்றி நமது பிள்ளைகளுக்குத் தெரியும். ஆனால் ஜாதியின் பேரில் வேற்றுமை காட்டுவது பற்றி அவர்கள் ஏதுமறியார். தூய பால் குடித்துக் கொண்டிருக்கும் நமது பிள்ளைகளின் பாலில் ஜாதி வேற்றுமை என்ற விஷத்தைக் கலந்து விடாதீர்கள். இந்தக் கூட்டத்துக்கு வருவதற்கு முன் நான் ஒரு குட்டி சர்வே (Mini Survey)  நடத்தினேன். லண்டனிலுள்ள எல்லா இளைஞர்களும் ஜாதி வேற்றுமை இந்த நாட்டில் இல்லை என்று சொன்னார்கள். ஒரு வேளை லண்டனுக்கு வெளியே அப்படி ஒரு பிரச்சனை சிறிய அளவில் இருந்தாலும் அதைத் தீர்க்க பல வழிகள் உள்ளன. ஒன்றும் அறியா த நமது அப்பாவி இளைஞர்கள் ஜாதி வேற்றுமையை அறியார். வருங்கால சந்ததியில் இந்தப் பிரச்சினை இந்த நாட்டில் இருக்காது.

 

செருப்பு கண்டுபிடித்த கதை!

உங்களில் பெரும்பாலோருக்கு இக்கதை தெரியுமாதலால் விரிவாகச் சொல்ல மாட்டேன். மிகச் சுருக்கமாக சொல்கிறேன்:-

ஒரு ஊரில் ஒரு அரசன் இருந்தான்.

அவன் மகனின் காலில் முள் குத்தி ரத்தம் குபுகுபு என்று வந்தது.

எல்லா மருத்துவர்களும் வந்து அவனைக் குணப்படுத்தினர்.

ராஜாவுக்கு அப்படியும் கவலை விடவில்லை.

தண்டோரா போட்டான்:

நாட்டு மக்களே! இதனால் சகலமானவர்களுக்கும் நமது மாட்சிமை தாங்கிய மன்னர் அறிவிப்பது யாதெனில்,

இனி, மன்னன் மகன் காலில் முள் தைக்காமல் இருக்க யோசனை சொல்லுவோருக்கு 1000 பொற்காசுகள் அளித்து மன்னன் கவுரவிப்பார்.

 

ஒரு அறிஞர் சொன்னார்:

மன்னர், மன்னவா!

நாடு முழுவதும் கம்பளம் விரித்து காலில் முள் தைக்காமல் செய்வோம்.

மற்றொரு அறிஞர் சொன்னார்:

ராஜாதி ராஜனே!

நாட்டு மக்களுக்கு உத்தரவிடுங்கள்; முள் செடிகள் அனைத்தையும் அகற்றி விடுவார்கள்.

புத்திசாலி மந்திரி எழுந்து சொன்னார்:

மன்னா, இது எல்லாவற்றையும் செய்தால் நமது கஜானா காலியாகிவிடும். எல்லோரும் காலணி (செருப்பு) அணியலாம்.

 

காலணியா? அப்படியானல் என்ன?

 

உடனே அமைச்சர் பெருமான் தான் கண்டுபிடித்த தோல் செருப்பைக் காட்டினார். அன்று முதல் உலக மக்கள் செருப்பு அணியக் கற்றுக்கொண்டார்கள்!

பெரிய பிரச்சனைக்கு சின்ன தீர்வு!

நண்பர்களே!

நம் எல்லோருக்கும் கடவுள் பிரச்சினைகளைக் கொடுத்திருக்கிறான். ஆனால் அதற்கான தீர்வையும் கொடுத்து இருக்கிறான். அதைக் கண்டுபிடித்து எளிய வழியில் தீர்க்கலாம். ஜாதி என்ற சொல்லை சேர்த்து அது பற்றி அறியாத இளம் உள்ளங்களை மாசு படுத்தாமல் அறிவு ஒளி, விழிப்புணர்ச்சியைப் பரப்பி இப்பிரச்சினையை இல்லாமல் செய்வதே புத்திசாலித்தனம் . நாம் எல்லோரும் காலணி போன்ற அறிவு அணியை அணிந்தால் எளிய வழியில் பிரச்சினை தீரும்.

 

எனக்கு முன் பேசிய தலித் ஆதரவாளர்கள் ஏதோ பெரியபிரச்சினை இருப்பதாக அனல் கக்க பேசினார்கள். இதை ஆங்கிலத்தில் பூதத்தை உருவாக்கி சண்டை போடுவது Creating a phantom and fighting with it என்று சொல்லுவர். ஏன் இல்லாத பிரச்சினைகளை விசிறிவிட்டுப் பெரிதாக்கப் பார்க்கிறீர்கள்?

 

கிருஷ்ணனை மிரட்டிய பேய்க் கதை

இதோ இந்த பேய்க்கதையைக் கேளுங்கள். மிகச் சுருக்கமாகச் சொல்லுவேன்:

 

பஞ்ச பாண்டவர்கள் காட்டில் வசித்தனர். அவர்களது கூடாரத்தைக் காவல் காக்கும் பொறுப்பு கிருஷ்ணனுக்கும் சாத்யகிக்கும் வந்தது. இந்துக்கள் இரவு நேரத்தை 4 ஜாமங்களாகப் பிரித்து வைத்துள்ளனர். சாத்யகி சொன்னான்:

கிருஷ்ணா! முதல் ஜாமம் நான் காவல் காப்பேன், இரண்டாம் ஜாமமும் நா லாம் ஜாமமும் உன்னுடைய முறை.

 

கண்ணனும் சரியென்று தலை அசைத்தான்.

 

முதல் ஜாமம்; கூடாரத்துக்கு வெளியே சாத்யகி நின்றான். மரத்திலிருந்து ஒரு பேய் (பிரம்ம ராக்ஷசன்) குதித்தான். கடுகு அளவுதான். ஆனால் சத்தமோ இடி முழக்கம் சாத்யகியைக் கேலி செய்து சண்டைக்குச் சீண்டினான்; சாத்யகி அவனைக் காலால் நசுக்க முயன்றபோது அது கால் பந்து (Foot Ball) அளவுக்கு பெருகியது. சாத்யகி ஒரு உதை விட்டவுடன் அது பெரிய பூசனிக்காய் (Pumpkin) அளவுக்கு உருவெடுத்தது . அதை ஓங்கி அடித்தவுடன் அது சாத்யகியையும் விடப் பெரிதாகி ஒரே அடியில் சாத்யகியை விழுத்தாட்டியது. சாத்யகி மயக்கம் அடைந்தவுடன், பேய் மரத்துக்கு மேல் ஏறிவிட்டது.

 

முதல் ஜாமம் முடிந்தவுடன் தப்பித்தோம், பிழைத்தோம் என்று சாத்யகி ஓடிப்போய்,

கிருஷ்ணா! உன் முறை; வெளியே போய்க் காவலுக்கு நில் என்றான்.

 

கிருஷ்ணன் வெளியே நின்றான். பிரம்ம ராக்ஷஸ் பேய் மரத்திலிருந்து குதித்தது; கடுகளவே இருந்த அந்த உருவம் கன்னா பின்னா என்று சத்தம் போட்டுக் கிருஷ்ணனைச் சண்டைக்கு அழைத்தது. கிருஷ்ணன அதைப் பார்த்து

அட; ஆணழகா!  உன்னைப் போல அழகான ஒரு உருவத்தை நான் கண்டதேயில்லை; பக்கத்தில் வா என்று அழைத்து தட்டிக் கொடுத்தான். அது கூனிக் குறுகி சிறியதானது. அதைத் தட்டிக் கொடுத்துப் பாராரட்டப் பாராட்ட, அது மிகமிகச் சிறியதாகி மறைந்தே போனது.

மூன்றாம் ஜாமம்; சாத்யகி வந்தான்; பழைய கதைதான்— அடி, குத்து மயக்கம்.

நாலாம் ஜாமம் கண்ணன் வந்தான்; பழைய கதைதான்; பாராட்டு சீராட்டு; பேயின் மறைவு.

 

காலையில் கிருஷ்ணனுன் சாத்யகியும் சந்தித்தனர்.

சாத்யகி: கண்ணா, நேற்று இரவு எப்படி இருந்தது?

கண்ணன்: சுகம் சுகமே. அருமையாகக் கழித்தேன்.

 

(எல்லாம் அறிந்த கண்ண பரமாத்வுக்கு தெரியாதது என்ன?)

 

சாத்யகி வெட்கப்பட்டுக் கொண்டே தனக்கு ஏற்பட்ட அவமானம் அடி, குத்து, உதை, மயக்கம் எல்லாவற்றையும் சொல்லி,

உன்னை அந்தப் பேய் ஒன்றுமே செய்யவில்லையா? என்று கேட்டான்.

எல்லாம் அறிந்த கண்ணன் புனன்னகைத்துச் சொன்னான்:

அப்பனே, சாத்யகி! பிரச்சினை ஒன்று வந்தால் அதை எதிர்த்தால் அது பெரிதாகும்; அதை எதிர்க்காமல் தட்டிக் கொடுத்தால் பிரச்சினை மறைந்துவிடும். உனக்கு விழுந்த அடி,  குத்து, உதை எல்லாவற்றையும் நான் அறிவேன் என்று சொல்லி சிரித்தான்.

 

நண்பர்களே!

 

நாம் இந்த ஜாதிப் பிரச்சினையை சாத்யகி போலப் பெரிதாக்க வேண்டுமா? கண்ணன் போல சிறிதாக்கி மறையச் செய்ய வேண்டுமா? தயவு செய்து சிந்தியுங்கள்.

மக்களுக்கு அறிவுபுகட்டி விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதே சாலச் சிறந்தது.

ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் (OXFORD ENGLISH DICTIONARY) பறையன் PARIAH என்ற தமிழ் சொல் இருக்கிறது அதை அகற்ற நான் போராடியதைச் சொல்கிறேன். கேளுங்கள்……………..

 

தொடரும்………………………..