ஆழ்வார் தரும் அதிசயத் தகவல் : 7 மலை, 7 கடல், 7 முகில்! (Post No.3064)

chart-cloud-types.jpg

Written by London swaminathan

Date : 15th August 2016

Time uploaded in London: 9-21 AM

Post No.3064

Pictures are taken from various sources; thanks for the pictures.

நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்னும் தொகுப்பு நூலிலே பன்னிரெண்டு ஆழ்வார்களின் அற்புதமான பாசுரங்கள் உள்ளன. அத்தனையிலும் பக்தித் தேன் சொட்டும். கடவுளைப் பற்றிக் கவிஞர்கள் கவிதை பாடினால் அதில் இலக்கிய அழகு அதிகம் இருக்கும். பக்தர்கள் கவி பாடினாலோ அதில் சொந்த ஆன்மீக அனுபவச் சுவை அதிகம் இருக்கும். ஆயினும் ஆராய்ச்சி நோக்குடன் படிப்போருக்கு வேறு பல விஷயங்களும் கிடைக்கும்.

 

நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழியும் பக்திச் சுவை மிக்கதே. ஆயினும் போகிற போக்கில் அவர் பல அதிசய விஷயங்களை யும் சொல்கிறார். ஒரு பாசுரத்தில் 7 மலைகள், 7 கடல்கள், 7 மேகங்கள் பற்றிச் சொல்லுகிறார்.

 

நாங்கள் எல்லோரும் சிறுவர்களாக இருந்தபோது,  பல பாலர் பத்திரிக்கைகளில் வரும் மந்திரவாதி, மாயா ஜாலக் கதைககளைப் படிப்போம். அதில் பல கதைகளில் 7 மலை, 7 கடல் தாண்டி ஒரு குகையில்…………………..!! என்று படிப்போம். நம்மாழ்வாரும் 7 மலை, 7 கடல்  பாடி இருக்கிறார்:–

பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து

பேரேன் என்று, என் நெஞ்சு நிறையப் புகுந்தான்

கார் ஏழ், கடல் ஏழ், மலை ஏழ், உலகு உண்டும்

ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே

பாடல் 3969, நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

 

பொருள்:-

“திருப்பேர் நகரில் உள்ள பெருமான் இன்று வந்து நின்று என் உள்ளத்தில் புகுந்து  இதைவிட்டுப் போகேன் என்று உறைகின்றான்.

ஏழு மேகங்கள், ஏழு கடல்கள், ஏழு மலைகள் உள்ள இந்தப் பூமியை அப்படியே உண்டும்,  வயிறு நிறையாத, வயிற்றை உடைய அப்பெருமானை நான் உள்ளத்தில் சிறைப் படுத்தி விட்டேன்.”

 

இதில் அதிசய விஷயம் மேகம்/ மழை/ காற்று மண்டலம் பற்றியதுதான். இது பற்றி நம்மாழ்வாரும், காளிதாசரும் பாடியிருப்பது இந்துக்களின் கால நிலை பற்றிய அறிவைக் காட்டும்

earth-atmosphere-layers

காளிதாசர் தரும் அற்புதச் செய்தி

காளிதாசர், சாகுந்தலம் என்ற நாடகம் செய்திருக்கிறார். அதில் (7-5) காற்று மண்டலம் ஏழு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டதில் நமது விமானம் எந்தப் பிரிவில் உள்ளது என்று மன்னர் கேட்கிறார். அதற்கு உரைகாரர்கள் எழுதிய உரையில் இந்து புராணங்கள் வாயு மண்டலத்தை ஏழு பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் கொடுத்திருப்பதை எடுத்துக் காட்டுகின்றனர்.

முதலாவது வாயு ஆவாஹ என்றும் அது  புவர்லோகத்தில் பாயும் என்றும் அந்தப்பிரிவில் பூலோகம், பாதாள லோகம், மற்றும் சூரியன் வரையுள்ள வாயு மண்டலம் அடங்கும் என்றும் உரைகாரர் கூறுவர். மற்ற ஆறு வாயு மண்டலங்களும் சுவர் லோகத்தில் (சுவர்க) இருப்பதாகவும் சொல்லுவர். இதிலுள்ள இரண்டாவது வழி ப்ரவாக என்றும் இந்த வாயுதான் சூரியனைச் சுற்றச் செய்கிறது என்றும் சொல்கின்றனர். மூன்றாவது வாயு சம்வாஹ- அது சந்திரனை இயங்கச் செய்கிறது. நாலாவது நட்சத்திர மண்டலம்; அங்கே உத்வாஹ என்னும் காற்றுள்ளது. ஐந்தாவது கிரகங்கள் அருகிலுள்ள காற்று; அதன் பெயர் விவாஹ; ஆறாவது காற்று சப்தரிஷி மண்டலத்தில் இயங்கும் அதன் பெயர் பரிவாஹ. அதுதான் பால்வளி மண்டலம் – மில்கி வே –  நட்சத்திரப் பகுதி. அங்கேதான் இப்பொழுது இந்திரனுடைய விமானம் சென்று கொண்டிருக்கிறது.

 

ஏழாவது வாயு துருவ நட்சத்திரப் பகுதியில் உள்ளது. அந்த துருவன் தான் எல்லா நட்சத்திரங்களியும் கிரகங்களையும்  சக்கரத்திலுள்ள ஆரம் எல்லாம் அச்சாணியில் இணைக்கப்பட்டிருப்பது போல கட்டி வைத்திருக்கிறான்.  அங்கே இயங்கும் காற்று பரவாஹ.

 

இதற்கு ஆதாரமான சம்ஸ்கிருத ஸ்லோகம்:–

ஆவஹோ நிவஹஸ்சைவ உத்வஹ: சம்வஹஸ்ததா

விவஹ: ப்ரவஸ்சைவ பரிவாஹஸ்ததைவ ச

ஒவ்வொரு மழைக்கும் உலகில் நடந்த அதிசய நிகழ்ச்சிகள் மூலம் பழைய கட்டுரையில்விளக்கியுள்ளேன்.

 

ஏழுவகை மழைகள்:-

சம்வர்த்தம் – மணி (ரத்தினக் கற்கள்)

ஆவர்த்தம்- நீர் மழை

புஷ்கலாவர்த்தம்- பொன் (தங்க) மழை

சங்காரித்தம் – பூ மழை (பூ மாரி)

துரோணம் – மண் மழை

காளமுகி- கல் மழை

நீலவருணம் – தீ மழை (எரிமலை, சுனாமி)

 

ஏழு மலைகள்

இமயம்/கயிலை, மந்த்ரம், விந்தியம், நிடதம், ஹேமகூடம், நீலம், கந்தமாதனம்

 

ஏழு கடல்கள்

உவர் நீர், தேன்/மது, நன்னீர், பால், தயிர், நெய், கரும்புச் சாறு

 

உப்பு, தேன், மது, ஒண் தயிர், பால், கரும்பு,

அப்புத்தான் என்று உரைத்தன ஆழிகள்

துப்புப்போல் குருதிப் புனல் சுற்றலால்,

தப்பிற்று அவ் உரை, இன்று ஓர் தனுவினால்.

cloud_types

எண்கள் பற்றி நான் எழுதிய முந்தைய கட்டுரைகள்:—-

இந்துக்களின் கண்டுபிடிப்பு: ஏழு வகை மழை, ஏழு வகை காற்று (Post No 2878), 8 June 2016

ஏழு எண்ணின் ரகசியம்: ரிக் வேதம் முதல் சிந்துவெளி வரை! ரிக் வேதம் முதல் சிந்து வெளி வரை!, posted on 22-11-2014

தமிழர்களின் எண் ஜோதிடம்(posted on 16th April 2012)
நீங்கள் நாலும் தெரிந்தவரா? (தமிழ் க்விஸ்)
Mystic No.7 in Music! (posted on 13th April 2013)
Numbers in the Rig Veda (posted on 3rd September2014)
Hindus’ Magic Numbers 18,108,1008! (posted on 26th November 2011)
Most Hated Numbers 666 and 13 (posted on 29th July 2012)
King and 8 Ministries in Vedic Period (posted on 28th May 2013)
Four Stages and Seven Ages of Man (posted on 21st March 2013)

கீழ்கண்ட கட்டுரைகளிலும் ஏழு எண் பற்றிய தகவல்கள் உள்ளன:–

தமிழர்கள் இழந்த நாடுகளும் நூல்களும், posted on 15 February 2015பனை மரங்கள் வாழ்க!, posted on 27 January 2014பனை மர வழிபாடு: மகாவம்ச, சங்க இலக்கியச் சான்றுகள், posted 25 September 2014

–subham–

 

டர்பா (DARPA) காண்பிக்கும் அடுத்த தலைமுறை உலகம்!(Post No.3059)

 darpa 2

Article Written S NAGARAJAN

Date: 14th  August 2016

Post No. 3059

Time uploaded in London :– 6-31 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

12-8-16 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

டர்பா காண்பிக்கும் அடுத்த தலைமுறை உலகம்!

.நாகராஜன்

 

darpa 3

“இனி மேல் பிறக்கப் போகிறவர்களுக்கு நல்லவர்களாக இருங்கள். நீங்கள் வந்து சேர்ந்த இடத்தை விடச் சிறந்ததான இடத்தை அவர்களுக்காக உருவாக்குங்கள். அவர்கள் உங்களுக்கு நன்றியுடைய்வர்களாக இருப்பார்கள்.” – பங்காம்பிகி ஹப்யரிமானா

 

 

செயற்கை அவயவங்களைத் தயாரித்து மூளை செயல்பாட்டுடன் அதை ஒருங்கிணைக்க வைத்த அதிசயத்தை மட்டும் டர்பா (அமெரிக்க இராணுவத்தின் அறிவியல்  மற்றும் தொழில்நுட்பப் பிரிவு) செய்யவில்லை.

 

 

எதிர்கால உலகை எப்படி அமைப்பது என்பதையும் அது திட்டம் தீட்டி வருகிறது – இராணுவ நோக்கில்!

ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை அறிவு என்பதில் அது காட்டும் அக்கறையே தனி!

ஒரு வினாடிக்கும் கீழான நேரத்தில் எந்த ஒரு மொழியையும் இன்னொரு  மொழியில் கூற வல்ல மொழியாக்கத் தொழில் நுட்பம் அதனிடம் இப்போது தயார்! அதி நவீனமான காண்டாக்ட் லென்ஸுகளையும் அது தயாரித்து விட்டது.

அடுத்ததாக அதன் கவனம் செயற்கை அறிவு மற்றும் ரொபாட் வீரர்கள் ஆகியவற்றின் பயன்பாடு தான்!

2045ஆம் ஆண்டு உலகம் எப்படி இருக்கும் (அல்லது எப்படி இருக்க வேண்டும்) என்பதை அது தீர்மானித்து விட்டது!

எதிர்காலத்தை நோக்கி என்ற பொருள் படும் ‘ஃபார்வேர்ட் டு தி ஃப்யூச்சர்’ (Forward to the Future) என்ற ஒரு வீடியோ தொடரை அது யூ டியூபில் அண்மையில் வெளியிட்டுள்ளது

அதில் டர்பாவைச் சேர்ந்த மூன்று நிபுணர்கள் எப்படி தொழில்நுட்பம் இன்னும் 30 வருடங்களில் (அதாவது ஒரு தலைமுறையை முப்பது வருடங்கள் என்று கணக்கிடும் தற்போதைய கணக்கை எடுத்துக் கொண்டால், அடுத்த தலைமுறையில்) உலகை மாற்றப் போகிறது என்பதை விளக்குகின்றனர்.

 

 

இதில் முதல் அதிசயக் கணிப்பை வெளியிடுபவர் பாம் மெல்ராய் (Pam Melroy) என்னும் விண்வெளி விண்கல எஞ்ஜினியர், இவர் ஏற்கனவே விண்வெளியில் பறந்த விண்வெளி வீரரும் கூட.. இப்போது டர்பாவின் துணை டைரக்டர். தந்திர உத்திகளைக் கையாளும் பிரிவில் ட்ரோன்களை உருவாக்கும் பிரிவில் இவர் பணியாற்றி வருகிறார்.

 

 

இராணுவத்திற்காகக் கண்டு பிடிக்கப்பட்ட ‘வாம்பயர் ட்ரோன்ஸ்’ (Vampire Drones) என்று ஒரு திட்டம் உள்ளது. சூரிய ஒளியில் இந்த வாம்பயர் ட்ரோன் பறக்கும் போது அது இருப்பதே யாருக்கும் தெரியாது. மாயாஜாலமாகப் பறக்கும் பிசாசு ட்ரோன் அது. நமது குரலை இனம் கண்டு ஆணைகளை நிறைவேற்றும் செயற்கை அறிவைப் பயன்படுத்தும் ட்ரோன்கள் இப்போது தயாரிக்கப்படும் நிலையில் உள்ளன1 சிக்கலான பல காரியங்களை இந்த ட்ரோன்கள் ஒரே சமயத்தில் செய்யும்!

எம்பதடிக் சிஸ்டம்  (Empathetic System) என்று ஒரு அமைப்பு. இதில் ரொபாட்டுகள் போர் புரிய போர்க்களம் செல்லும், அங்கு அந்த வினாடியில் எதிரிகளில் யார் என்ன உணர்ச்சியைக் கொண்டிருக்கிறார்கள்., அவர்களது உடல் தகுதி, திறன் எப்படி  இருக்கிறது என்பதை இவை நன்கு கணித்து அதற்குத் தக போரிடும்! 2030இல் மனிதர்கள் போர்க்களம் செல்ல மாட்டார்கள். கைகலப்பிற்காக ரொபாட்டுகள் களத்திற்குச் செல்லத் தயாராகிவிடும்.

 

DARPA_Logo

 

அடுத்து ஸ்டெஃபானி டாம்ப்கின்ஸ் (Stefanie Tompkins) என்ற நிலவியல் நிபுணர், 2045இல் நேனோ தொழில்நுட்பம் உலகை ஆளும் என்று கூறுகிறார். இவர் டர்பாவின் இராணுவ அறிவியல் அலுவலகத்தில் டைரக்டராக இருப்பவர். கற்பனைக்கு அப்பாற்பட்ட மிகச் சிறிய உலோகங்கள் பயன்பாட்டிற்கு வந்து விடும் என்கிறார் இவர். இப்போதே செயற்கை அங்கங்கள் வந்ததைச் சுட்டிக் காட்டும் இவர் அந்த அங்கங்களின் கனம் சில அணுக்களின் கனம் தான் என்கிறார். காண்டாக்ட் லென்ஸ்  உணரவே முடியாத அளவு மெலிதாக இருக்கும்1 எதிர்கால உலோகங்கள் மிக மெலிதாக இருக்கும். ஆனால் அதே சமயம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட அளவில் வலிமையுடன் இருக்கும் என்பது இவர் தரும் கணிப்பு.

ஜஸ்டின் சான்செஜ் (Justin Sanchez) என்பவர் மூளையியல் விஞ்ஞானி. டர்பாவின் உயிரியல் துறையில் பணியாற்றுபவர். இவர் கூறுவது : 2045இல் எண்ணத்தின் மூலமாக இயக்கப்படும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு விடும். 2045இல் நண்பர்களும் உறவினர்களும் மூளையின் மூலமாகவே ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள  முடியும். (அதாவது டெலிபோன் உள்ளிட்டவை அவுட் ஆஃப் டேட்!)

எலக்ட்ரானிக் ஆர்கிடெக்சர் எனப்படும் மின்னணுவியல் கட்டிடத் தொழில்நுட்பம் வீட்டைக் கட்ட உதவும். நினைத்தால் எண்ணம் மூலமாகவே பல்புகள் எரியும். சிறிய சென்ஸர்கள் தனக்குள்ளேயே சக்தியைக் கொண்டிருப்பதால் வயர்கள், மின்சாரம் என்பதெல்லாம் அவுட் ஆஃப் டேட்!

எதிர்கால வீடுகளுக்கும் இன்றைய வீடுகளுக்கும் துளிக் கூட சம்பந்தம் இருக்காது. அறிவியல் வீடுகளில் அடுத்த தலைமுறை வாழத் தொடங்கும்!

 

துள்ளிக் குதித்து ஓடி வரும் தொழில்நுட்பங்கள் மனிதர்களுக்குச் சேவை செய்யுமா அல்லது அவர்களை ஆளுமா?

 

முப்பதே வருடங்கள், பொறுத்திருங்கள்! முடிவு தெரிந்து விடும்!!

 

Wallace_Carothers,_in_the_lab

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ,,

அமெரிக்க இரசாயன நிபுணரான வாலஸ் ஹ்யூம் கரொதர்ஸ் (Wallace Hume Carothers 1895-1937) 1935ஆம் ஆண்டு நைலானைக் கண்டுபிடித்தார். அதைக் கண்டுபிடிக்க ஏழு வருடங்கள் அவர் கடுமையாக உழைக்க வேண்டிய்தாயிற்று. ஒரு சிறிய அதிர்ஷ்டமும் அவருக்குத் துணை செய்தது. நைலானைப் போன்ற ஒன்றை அவர் முதலில் தற்செயலாகக் கண்டு பிடிக்கவே, அதை மேம்படுத்தி தான் நினைத்தவாறு நைலானைக் கண்டுபிடித்தார்.

பட்டுப்பூச்சிகளைக் கொன்று அதிலிருந்து செய்யப்பட்ட பட்டு காலுறைகளின் விலை மிக அதிகம். ஆனால் நைலான் சாக்ஸ்களோ விலை  மிகவும் குறைவு. நைலான் முதன் முதலில் அமெரிக்காவில் 1940ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் தேதி உபயோகத்திற்கு வந்தது. 50 லட்சம் காலுறைகள் உற்பத்தி செய்யப்பட்டன. அவை அனைத்தும் ஒரே நாளில் விற்றுத் தீர்க்கப்பட்டது! இரண்டாம் உலகப் போர் மூளவே நைலானுக்கு ஏக கிராக்கி ஏற்பட்டது. பாராசூட்டுகளில் நைலான் பயன்படுத்தப்படவே அதன் மதிப்பு இன்னும் அதிகமானது.

தான் கண்டுபிடித்த நைலான் சந்தையில் இப்படி சக்கைப் போடு போட்டு விற்பனை ஆவதைப் பார்க்க வாலஸ் ஹ்யூமுக்குக் கொடுத்து வைக்கவில்லை.

மிக்க மனச்சோர்வினால் பாதிக்கப்பட்ட அவர் 1937இல் சயனைடைச் சாப்பிட்டுத் தன் உயிரைப் போக்கிக் கொண்டார். அவரது மனைவி அப்போது கர்ப்பிணி. வாலஸ் இறந்த பின்னர் அவருக்கு மகள் பிறந்தாள்.

நைலான் என்ற பெயர் வரக் காரணம் டூ பாண்ட் நிறுவனத்தின் இரு தலைமையகங்களான நியூ யார்க் மற்றும் லண்டன் ஆகியவை இணைக்கப்பட்ட வார்த்தை (New York LONdon) என்று சொல்வது வழக்கம். ஆனால் உண்மை அதுவல்ல. அனைவராலும் சுலபமாகச் சொல்லும் வார்த்தை எது என்று கண்டு பிடிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு அமைத்த வார்த்தையே இது. ஆனால் இதை ஒப்புக் கொள்ள மறுப்பவர்களும் உண்டு. நுசில்க், வகாரா(வாலஸை கௌரவிக்கும் பெயர் இது) என்ற பெயர்களெல்லாம் பரிசீலிக்கப்பட்டு நைலான் என்ற பெயர் பின்னால் தேர்ந்தெடுக்கப்பட்டது. இப்போது நைலானின் உற்பத்தி ஆண்டொன்றுக்கு 54 லட்சம் டன்கள் என்ற அளவையும் தாண்டி விட்டது!

நைலான் இன்று பயன்படாத இடமே இல்லை!

******

 

வானத்தில்அதிசய கருந்துளைகள்! கீதை, மனு தரும் தகவல்!! (Post No.3046)

galactic_black_hole

Research Article Written by london swaminathan

Date: 9th    August 2016

Post No. 3046

Time uploaded in London :– 6-27 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

மனு ஸ்மிருதியில் அதிசயச் செய்திகள்!-Part 2

 

விஞ்ஞானிகளை வியக்கவைக்கும் செய்திகள் தினமும் வருகின்றன. எங்கிருந்து? வானத்திலிருந்து!!

 

செவ்வாய், வியாழன் கிரகங்கள் பற்றியும் பல்லாயிரம் கோடி மைல்களுக்கு அப்பாலுள்ள நட்சத்திர (சூரியனைப் போன்றவை) மண்டலங்களில் புதுப் புது கிரககங்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்தும் நாம் தினமும் செய்திகளைப் படித்து வருகிறோம். இப்படிப்பட்ட ஒரு கண்டு பிடிப்புதான் கறுப்புத் துளைகள் (BLACK HOLES) அல்லது குழிகள்.

black-holes

இதுபற்றி வானவியலார் கூறுவது என்ன?

வானத்தில் ஈர்ப்புவிசை மிகுந்த  — மிகப் பெரிய அளவிலுள்ள — சில பகுதிகள் இருப்பதாகவும் இவை அருகிலுள்ள நட்சத்திரங்களைக் கபளீகரம் செய்வதாகவும் அவர்கள் சொல்லுவர்.

 

இதுவரை பிரபஞ்சத்தில் அதிக வேக வேகத்தில் செல்லக் கூடியது ஒளி-தான் என்றும் அது வினாடிக்கு 1,86,000 மைல்கள் செல்லும் என்றும் இந்த வேகத்தை அடையவே முடியாது என்றும் அறிவியல் அறிஞர்கள் செப்புவர். எவரேனும் ஒருவர் இந்த வேகத்தில் சென்றால் அவர் எப்போதும் மார்க்கண்டேயர் போல வாழலாம் என்றும், வேகத்தை இன்னும் கொஞ்சம் அதிகரித்தால் காலத்தில் முன்னோக்கிப் பயணம் செய்யலாம் என்றும் பகர்வர். அப்பேற்பட்ட ஒளியைக் கூட வெளியே விடாத அளவுக்கு ஈர்ப்பு சக்தி கொண்டவை Black கருந்துளைகள். நட்சத்திரங்கள் சுருங்கிப் போய் இதை உருவாக்குகின்றன

 

அது மட்டுமல்ல; இதற்குள் நுழையும் விண்வெளிப் பொருட்கள் பிரம்மாண்ட வெப்பத்தை உண்டாக்குவதால் இங்கிருந்து எக்ஸ்ரே கதிர்கள் வெளிப்படும். இதை வைத்தே கருந்துளைகள் எங்கே இருக்கின்றன என்பதை அறிஞர் பெருமக்கள் அறிவர்.

முதல் முதலில் அணுகுண்டு வெடித்த காட்சியைக் கண்ட ‘அணு குண்டின் தந்தை’ ராபர்ட் ஓப்பனஹைமர் (J Robert Oppenheimer, American Theoretical Physicist, Father of Atomic Bomb), ஆச்சர்யத்தில் மூழ்கி “திவிசூர்ய சஹஸ்ரஸ்ய” (கீதை 11-12) என்ற ஸ்லோகத்தை உச்சரித்தார். பல்லாயிரம் கோடி சூரியன்கள் ஒருங்கே உதித்தாற் போல இருந்ததாம் கிருஷ்ணனின் விஸ்வ ரூப தரிசனம்! இதே போலத்தான் முதல் அணுகுண்டு சோதனையை நடத்தியபோது வானத்தில் பல்லாயிரம் கோடி சூரியன் உத்தித காட்சியைக் கண்டார் ஓப்னஹைமர். இது பற்றி முன்னரே விரிவாக எழுதி இருக்கிறேன்.

 

இப்போது கருந்துளைகளுக்கு வருவோம். இந்தக் காட்சியும் பகவத் கீதையிலும் , மனு ஸ்மிருதியிலும் உள்ளது. அங்கே “கடவுள்”, “விஷ்ணு” என்பனவற்றை மறந்து விட்டுப் பார்த்தாலோ அந்தச் சொற்களை நீக்கிவிட்டுப் படித்தாலோ ஒரு விஞ்ஞானக் கட்டுரையைப் படிப்பது போலத் தோன்றும்.

 

இதோ அந்த   வரிகள்!

உலகங்களும், மன்னர்களும் உன் வாய்க்குள் புகுவதைக் காண்கிறேன் (கீதை 11-26)

 

எவ்வாறு வெள்ளப் பெருக்கெடுத்தோடும் நதிகள் அனைத்தும் கடலை நோக்கி விரைகின்றனவோ அவ்வாறே இந்த மானிட உலக வீரர்கள் எப்புறமும் கனல் வீசும் உன்வாய்களில் புகுவதைக் காண்கிறேன் (11-28)

 

எவ்வாறு விட்டிற்பூச்சிகள் அதிபயங்கர வேகத்துடன் நாசமடைவதற்காக, தீக்குள் புகுகின்றனவோ அவ்வண்ணம் உலகத்து உயிர்களும் நாசமடைவதற்காகவே உன் வாய்க்குள் நுழைகின்றன. 11-29

 

கனல் வீசும் வாய்கள் உலக ங்களை விழுங்குவதைக் காண்கிறேன். உன் நாக்குகள் அவைகளை நக்கி விழுங்குகின்றன. உன்னுடைய வெப்பம் மிக்க கிரணங்கள் உலகங்களை எரிப்பதையும் பார்க்கிறேன் 11-30

 

என்று அர்ஜுனன் இயம்புவதை படித்துவிட்டு கருந்துளைகள் பற்றி பார்த்தாலோ, அறிவியல் அறிஞர்கள் சொன்னது அப்படியே இருப்பதைக் கண்டு வியப்போம்.

 

பகவத் கீதையின் விஸ்வரூப தரிசன யோகத்தில் 5000 ஆண்டு களுக்கு முன் வியாசர் என்ன எழுதினாரோ அதை அப்படியே இன்று கருந்துளைகளின் காட்சியாக வருணிப்பர் வானைனியல் வல்லுநர்கள்!

krishna

(முதல் ஏழு அதிசயங்கள் மனு பற்றிய முதல் பகுதியில் உள்ளன)


அதிசயம்
 8

மனு இதற்கும் மேலாக ஒருபடி சென்று ஆதியில் இருந்த கருந்துளைகள் பற்றி கறுப்பு (BLACK) என்றே சொல்லுகிறார்!

 

“கேள்! ஒரு காலத்தில் இந்தப் பிரபஞ்சம் முழுதும் இருள் சூழ்ந்திருந்தது (கறுப்பு). எது என்ன என்பதைக் காண இயலாதவாறு கும்மிருட்டு!!

அது என்ன என்றே யாருக்கும் புரியாது. எல்லாம் நெடுந் தூக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தது.

 

எப்போதுமுள்ள இறைவன், இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தான். தனது சக்தியை எல்லாம் பயன்படுத்தி காணும்படி செய்தான். இருளை விரட்டி அடித்தான்” – மனு ஸ்ம்ருதி — 1–5/6

 

மாபெரும் வெடிப்பு (BIG BANG பிக் பேங்) கருந்துளைகள் (BLACK HOLE)  ஆகியன இதில் அடக்கம்!

 

அறிவியல் செய்திகளை மக்களுக்கு இதைவிட எளிய சொற்களில் விளக்க முடியாது.

 

எதையேனும் ஒன்றை அறிவியலாளர் கண்டுபிடித்த பின்னர் எங்கள் சாத்திரங்கள் அதை முன்னரே சொல்லிவிட்டன என்று சொல்லுவது அறிவுடைமை அல்ல; முன் கூட்டியே வரப்போவதை உரைப்பவனே சிறந்தவன். இவ்வகையில் எதிர்காலத்தில் என்ன நிகழப்போகிறது என்று இந்து மதம் சொன்னதையும் ஏற்கனவே எழுதிவிட்டேன்.

black-hole-art

மீண்டும் சுருக்கமாக (In short):

1.ஒளியைவிட வேகத்தில் – மனோ (Mind) வேகத்தில் பயணம் செய்யும் வழி உண்டு விண்ணூலக வாசிகள் அதைப் பயன்படுத்தி பூலோகத்துக்கு மனோ வேகத்தில் வந்தனர். ஒளியைவிட வேகத்தில் செல்லுவது மனது. அதை ஓடம் போலப் பயன்படுத்தி எங்கும் செல்லும் ஆற்ற்றல் உண்டு.

 

காலப் பயணம் சாத்தியமே; காலத்தில் முன்னும் பின்னும் பயணம் செய்த செய்திகள் இந்து மத நூல்களில் இருக்கின்றன (எனது கட்டுரைகளில் காண்க)

 

மேலுலகவாசிகள் எப்படி இருப்பர் என்பதையும் எழுதியுள்ளேன்.

 

காலம் என்பது வட்டப் பாதையில் (Cyclical) செல்லும்; மேல் நாட்டினர் கூறுவது போல ஒரே நேர் கோட்டில் (Linear) செல்லுவது அல்ல.

 

பல்லாயிரம் கோடி உலகங்கள் உண்டு. பூமியிலிருந்து பார்ப்பவர்களு அந்தக் காலம் பிரம்மாண்டதாகத் தோன்றும். ஒரே நாள் மட்டும் வாழும் ஈ-க்கு (fly) 100 ஆண்டுகள் வாழும் மனிதன் எப்படியோ அப்படியே நமக்கு அவர்களுடைய ஆயுள். (இதுபற்றியும் தனிக் கட்டுரை எழுதியுள்ளேன்)

 

–சுபம்–

 

டர்பாவின் அதிசய ஆய்வுகள்!(Post No.3034)

b.myers

Article Written S NAGARAJAN

Date: 4th  August 2016

Post No. 3034

Time uploaded in London :– 8-25AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

பாக்யா 5-8-16 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

டர்பாவின் அதிசய ஆய்வுகள்!

.நாகராஜன்

durpa

ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு தருணத்தில் மருத்துவ துணை சாதனம் தேவையாக இருக்கிறது. உங்கள் கண்களுக்கான கண்ணாடிகள், அல்லது இடுப்பு அல்லது  முழங்கால் மூட்டை பொருத்துதல் என இப்படி ஏதோ ஒன்று தேவையாக இருக்கிறது. செயற்கை அங்கங்கள் பொருத்தப்பட்ட தலைமுறை நம்மைச் சுற்றிலும் உள்ளது – எய்மி மல்லின்ஸ்

 

 

அமெரிக்காவின் இராணுவத்திற்கான தொழில்நுட்ப மேம்பாடுகளை ஆராய்ச்சி செய்து வழங்கும் ஒரு அமைப்பின் பெயர் தான் டர்பா!  டிஃபென்ஸ் அட்வான்ஸ்ட் ரிஸர்ச் ப்ராஜக்ட்ஸ் ஏஜன்ஸி (Defense Advanced Research Projects Agency) என்பதின் சுருக்கமே டர்பா!

 

 

1957 ஆம் ஆண்டு ரஷியா ஸ்புட்னிக்கை விண்ணில் ஏவியதும் பதறிப் போன அமெரிக்கா தொழில்நுட்பத்தில் தான் மேம்பட வேண்டும் என்று எண்ணியது. ஜனாதிபதி ஐஸன்ஹோவர் உடனடியாக 1958இல் உயரிய ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை நிறுவினார். பல முறை பெயர் மாற்றப்பட்டு இப்போது டர்பா என அழைக்கப்படும் ஆய்வு நிறுவனம் முதலில் விண்வெளி சம்பந்தமான ஆய்வைத் தொடங்கினாலும் நாஸா அமைக்கப்பட்டவுடன் விண்வெளி சம்பந்தமான அனைத்துத் திட்டங்களையும் அதன் செயல்பாட்டிற்கு விட்டு விட்டது. இதர துறைகளில் கவனம் செலுத்திய அது பல்வேறு அதிசயக் கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடித்துள்ளது.

 

சுமார் 240 ஆய்வாளர்கள் இதில் பணியாற்றுகின்றனர். இதன் பட்ஜெட்டோ கற்பனைக்கு அப்பாற்பட்ட பல கோடி ரூபாய்கள்!

 

defense-advanced-research-projects-agency

ஆரம்ப காலத்தில் எதிரிகளின் ஆயுதங்களைக் கண்டுபிடித்து இலக்கை நிர்ணயித்து அழிக்கும் தானியங்கி இலக்கு நோக்கிகளை அது கண்டு பிடித்தது.

 

பின்னர் மனத்தைக் கட்டுப்படுத்தும் ஏராளமான அதிசயக் கண்டுபிடிப்புகளை அது கண்டு பிடித்து வருகிறது.

தொழில்நுட்ப மேம்பாடுகளைத் தெரிவிக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளை அவ்வப்பொழுது டர்பா ஏற்பாடு செய்து வருகிறது. செப்டம்பர் 2015 மற்றும் மே 2016இல் டர்பாவின் கண்டுபிடிப்புகளை நேரில் பார்த்த பத்திரிகையாளர்கள் அசந்து பிரமித்து நின்றனர்!

 

 

பத்திரிகையாளர்கள் பார்த்தது ஒரு செயற்கை கையை! 45 பவுண்டு எடையுள்ள ஒரு கர்லாக் கட்டையை நாள் முழுவதும் அது சுழற்றிக் கொண்டே இருந்தது – அதன் பாட்டரியின் சார்ஜ் போகும் வரை! எந்த வலுவுள்ள  மனிதனாலும் இப்படித் தொடர்ந்து கர்லாக் கட்டையை 24 மணி நேரம் தொடர்ந்து சுழற்ற முடியாது!

 

 

இந்த கையின் செயல்பாட்டை விளக்கினார் ஜானி மாத்னி என்ற விஞ்ஞானி. அந்தச் செயற்கை கையை ஒரு  பெண் நிருபரின் கையைப் பிடித்து  குலுக்க வைத்ததோடு டர்பாவின் கண்டுபிடிப்பைப் பற்றி எழுதவும் வேண்டுகோள் விடுத்தார்!

வலிமையிலும் நெளிவு சுளிவுகளுடன் லாகவமாக செயல்படுவதிலும் உலகிலேயே திறமை வாய்ந்த ஒரே கை இது தான் என்றார் ஜானி மாத்னி!

 

 

உலகின் பல இடங்களிலிருந்தும் போர்களில் ஈடுபட்டுத் திரும்பிய கை இழந்த அமெரிக்க வீரர்களுக்கு கரம் கொடுப்பது இனி சுலபம் என்றார் டர்பாவின் உயிரியல் தொழில்நுட்ப டைரக்டரான ஜஸ்டின் சி. சான்செஸ் (Justin C. Sanchez).

 

 metallic cheetah

Metallic Cheetah by Darpa

மூளையின் இயக்கங்களையும் அதன் நுட்பமான செயல்பாட்டையும் அறிந்த பின்னரே இந்த செயற்கைக் கையை உருவாக்க முடிந்தது என்று கூறிய ஜஸ்டின் இயற்கையான கையைப் போலவே இது செயல்படும் என்றார்.

விபத்துக்களில் கைகள் துண்டிக்கப்பட்டோருக்கு இனி இந்தத் தொழில்நுட்ப மேம்பாடு உடலில் பதிக்கப்படும். இந்தத் தொழில்நுட்பம் தசைகள் செயல்பட வேண்டிய விதத்தை அது பதிக்கப்பட்டவரின் எண்ணத்திற்கு ஏற்ப அவரது மூளைக்கு அறிவிக்கும்.

 

 

கைகள், கால்கள் இழந்தவருக்கு இந்த செயற்கை அங்கங்கள் இனி கிடைக்க இருப்பது அறிவியலின் ஒரு மாபெரும் வெற்றியாகும்.

 

 

எதிர்பாராத விபத்துக்களில் கைகளையும் கால்களையும் இழந்தவர்கள் வாழ்க்கையையே இழந்ததாக இனி கருத வேண்டாம் என்பதை எடுத்துக்காட்ட வீரர்கள் பலர் உள்ளனர்!

இரண்டு கால்களையும் சர்ஜரி மூலம் அகற்ற நேர்ந்த ஹ்யூ ஹெர் செயற்கைக் கால்களைப் பொருத்தி உயரமான மலைகளில் ஏறி சாகஸம் செய்கிறார்! செயற்கை கால்களைச் செய்யும் ஒரு லாபரட்டரியையும் அவர் இயக்கி வருகிறார்.

இறுதிச் சுற்றுக்கான தகுதியை இழந்தாலும் கூட 400 மீட்டர் ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் பங்கு கொண்ட தென்னாப்பிரிக்க வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸ் கால்களை இழந்து நொந்து கொண்டிருப்பவர்களுக்கான ஒரு ரோல் மாடல்! இவரைப் பார்த்து உத்வேகம் பெறாத ஆட்களே உலகில் இல்லை!

 

 

ஆப்கானிஸ்தானத்தில் ஒரு சாலையில் குண்டுத் தாக்குதலில் தனது இரு கால்களையும் கைகளையும் இழந்தார் ஸ்காட் ஷ்ரோடெர். மனம் கலங்காத அவர் செயற்கை அங்கங்களைப் பொருத்திக் கொண்டார். இப்போது ஸ்கூபா டைவிங் அடிக்கிறார்!

 darpa_02

 

நம்ப முடியாத இவரின் சாகஸ செயல்கள் கை, கால்களை இழந்தவர்களுக்கு நம்பிக்கையும் உத்வேகமூம் ஊட்டும் செயல்பாடுகள்!

 

 

எய்மி மல்லின்ஸ் ஒரு அழகான வலிமையான உத்வேகமூட்டும் பெண்மணி. பிறக்கும் போதே அவருக்கு கால்களில் குறைபாடு. அதனால்  மனம் தளரவில்லை அவர். முழங்காலுக்கு கீழே ஆம்புடேட் செய்யப்பட்டது. இரண்டு வயதாகும் போதே செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்டு நடக்க ஆர்மபித்தார். பின்னர் வயதானவுடன் நீந்த அரம்பித்தார். சைக்கிள் ஓட்டுவது, கால்பந்து விளையாடுவது என அனைத்து விளையாட்டுக்களிலும் பங்கேற்றார். மாடலாகக் கூட மாறினார். அவரைப் பார்த்து உத்வேகம் பெறாதவர்களே இல்லை என்ற நிலையில் அவரது செயல்பாடுகள் இப்போது உள்ளன! பிரபலமான பீப்பிள் பத்திரிகை உலகின் 50 அழகிகளில் அவரையும் ஒருவராகத் தேர்ந்தெடுத்து உள்ளது.

 

 

இந்த வீரர்களையும் வீராங்கனைகளையும் பார்த்து விட்டு அமெரிக்க டர்பாவின் கண்டுபிடிப்பையும் நினைத்துப் பார்த்தால் மனித குலத்தில் அங்கங்களை இழந்தவர்கள் இனி வருத்தப்பட வேண்டியதில்லை என்ற நிலை தோன்றி விட்டதை அறிந்து மகிழலாம்!

 

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ,,

 

இன்று நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் அலுமினியம் ஒரு காலத்தில் வெள்ளியை விட விலை அதிகமாக விற்கப்பட்ட உலோகமாகும். பிரான்ஸ் மன்னனான நெப்போலியன் ராஜாங்க விருந்துகளில் சிறப்பு விருந்தினர்களுக்கு அலுமினிய பாத்திரங்களில் தான் உணவுப் பொருள்களைப் பரிமாறச் செய்வானாம். அதுமட்டுமல்ல, விழாக்காலங்களில் அவன் அணியும் கிரீடமும் அலுமினியத்தால் செய்யப்பட்ட ஒன்றாக இருந்தது.

அப்படி அலுமினியம் விலை உயர்ந்த பொருளாக இருந்ததன் காரணம் அதைத் தாதுப் பொருளிலிருந்து பிரித்தெடுக்கும் முறை எளிதாக இல்லை என்பது தான்.

 

 Charles_Martin_Hall_1880s  Paul-Heroult-1863-1914-Chemist

Charles Martin and Paul, who made Aluminium cheaper.

ஆனால் அலுமினியத்தை எப்படி எளிதாகப் பிரித்தெடுப்பது என்பதை இரு வேறு விஞ்ஞானிகள் தனித்தனியே ஒருவர் செய்வதை இன்னொருவர் அறியாமல் ஆராய்ந்து வந்தனர். ஒருவர் சார்லஸ் மார்டின் ஹால் (Charles Martin Hall) என்ற அமெரிக்கர். இன்னொருவர் பால் ஹெரால்ட் (Paul Heroult) என்ற பிரான்ஸ் தேசத்து விஞ்ஞானி. எலக்ட்ராலிஸிஸ் முறை மூலமாக அலுமினியத்தைப் பிரித்தெடுப்பது எளிதாக ஆகவே அதன் விலை வீழ்ந்து, இன்று மிகவும் மலிவாகக் கிடைக்கும் உலோகமாக ஆகியுள்ளது..

 

 

அட்லாண்டிக்கின் வெவ்வேறு  பக்கங்களில் இருந்து ஆராய்ந்த இந்த இருவரும் 1886ஆம் ஆண்டு – அதாவது ஒரே ஆண்டில் –  தங்கள் ஆராய்ச்சியில் வெற்றி பெற்றனர். ஒரே ஆண்டில் இருவரும் வெற்றி பெற்றது மட்டுமல்ல, இவர்கள் இருவரும் 1863 ஆம் ஆண்டு – ஒரே ஆண்டில் பிறந்தனர். அது மட்டுமல்ல, இருவரும் 1914ஆம் ஆண்டில் – ஒரே ஆண்டில் மரணமடைந்தனர்.

 

என்ன அதிசய ஒற்றுமை!

 

Tags: டர்பா, செயற்கைக் கை, கால்கள், கர்லாக் கட்டை, அலுமினியம்

-Subham-

 

 

 

 

கம்ப ராமாயணத்தில் ‘காஸ்மாலஜி’ (Post No.3033)

Big-Crunch-to-Be-the-

Written by london swaminathan

Date: 4th    August 2016

Post No. 3033

Time uploaded in London :–  6-00 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

From the book, “Life and Labour of The People of India” by Abdullah Yusuf-Ali, Barrister at Law, Year 1907, London)

 

 

வால்மீகி என்னும் ஆதி கவி சம்ஸ்கிருத மொழியில் எழுதிய ராமாயணத்தை கம்பன் தமிழில் எழுதியதை நாம் அறிவோம்.

 

காஸ்மாலஜி/ COSMOLOGY-யை பெரும்பாலோர் அறியோம். காஸ்மாலஜி என்றால் என்ன? பிரபஞ்ச இயல். அதாவது இந்த பிரபஞ்சம் எப்படி தோன்றியது? அதன் அமைப்பு என்ன? அதன் தற்போதைய நிலை என்ன? என்பனவற்றை ஆராயும் ஒரு துறை. முதலில் பட்டாணி அளவுக்கு இருந்த பிரபஞ்சம் திடீரென  வெடித்து (BIG BANG) பல்வேறு உலகங்களை உருவாக்கி, இன்னும் விரிந்து கொண்டே இருக்கிறது என்பது இதில் விளக்கப்படுகிறது.

bigbang_expansion

இப்படி விரிந்துகொண்டே போக்கும் பிரபஞ்சம் ஒரு நாள் சுருங்கிவிடும் (BIG CRUNCH-பிக் க்ரஞ்ச்) என்று இப்பொழுது எழுதத்துவங்கியுள்ளனர். ஆனால் இதை கம்பனும் அவனுக்கு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புராண முனிவர்களும் செப்பிவிட்டனர்.

 

உலகில் முதல் முதலில் காஸ்மாலஜி பற்றிப் பாடியவர்கள் ரிக்வேத முனிவர்களே! ரிக்வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் 129, 130 ஆகிய இரண்டு மந்திரங்களும் (நாசதீய சூக்தம்) இந்தப் பிரபஞ்சத் தோற்றத்தைக் கண்டு வியக்கும் பாடல்கள் —  விளக்கும் பாடல்கள். உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் இப்படி ஒரு அருமையான கவிதை இருப்பதைப் பற்றி நூற்றுக் கணக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியாகின.

 

 

நாம் கம்ப ராமாயணப் பாடலுக்கு வருவோம்:–

 

ஒன்று ஆகி மூலத்து உருவம் பல ஆகி

உணர்வும் உயிரும் பிறிது ஆகி ஊழி

சென்று ஆசறும் காலத்து அந்நிலையது ஆகி

திறத்து உலகம்தான் ஆகி செஞ்சவே நின்ற

நன்று ஆய ஞானத் தனிக் கொழுந்தே எங்கள்

நவைதீர்க்கும் நாயகமே நல் வினையே நோக்கி

நின்றாரைக் காத்தி அயல் பேரைக் காய்தி

நிலை இல்லாத் தீவினையும் நீ தந்தது அன்றே

–ஆரண்ய காண்டம், கம்பராமாயணம்

 

பொருள்:–

 

ஆதிகாலத்தில் ஒன்றாக இருந்து, பின்னர் பலவேறு (BIG BANG) வடிவங்களாகி, அவ்வடிவங்களில் அறிவும், உயி ரும் வெவ்வேறாகி, ஊழிக் காலம் மஹா பிரளயத்தால் முடியும் போது, முதலில் இருந்த ஒன்றாகும் நிலையைப் பெற்று (BIG CRUNCH) , மீண்டும் படைப்பு நிகழும்போது பலவகைப்பட்ட உலகங்களாகி, செம்மையாய் நின்ற ஞானக் கொழுந்தே! நீ புண்ணிய செயல்களை மேற்கொண்டவர்களைக் காக்கின்றாய், பாவம் செய்பவர்களை அழிக்கின்றாய் (பரித்ராணாய சாதூனாம், விநாசாய ச துஷ்க்ருதாம் – கீதை 4-8). நிலையில்லாத அப் பாவமும் நீ படைத்தது அல்லவா?

 

big-crunch-theory-big-bounce

உலக விஞ்ஞானிகள் சொல்லாததை எல்லாம் இந்து மதம் முன்னரே சொல்லிவிட்டது. நாம் சொன்ன பேரண்ட வெடிப்பு, பேரண்டச் சுருக்கம் (மஹா பிர்ளயம்) ஆகியவற்றை பிரபஞ்சவியல் (COSMOLOGISTS) அறிஞர்கள் இப்போது ஒப்புக் கொண்டனர். இனி இது சுழற்சியாக நடை பெறும் ஒரு செயல் பாடு (CYCLICAL) என்பதையும் ஒப்புக்கொள்வர்!

 

–subham—

 

நாசதீய சூக்தம், காஸ்மாலஜி, ரிக் வேதம்,பேரண்ட வெடிப்பு, சுருக்கம், மகா பிரளயம்

முப்பது கோடி உலகங்கள்: கம்பன் தரும் அதிசயத் தகவல்! (Post No.3031)

PLANETS VIEWS

Research Article written by london swaminathan

Date: 3RD   August 2016

Post No. 3031

Time uploaded in London :–  16-02

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

பூமியைப்போல பல்லாயிரக் கணக்கில் கிரகங்கள் இருப்பதும், பால்வெளி மண்டலம் (MILKY WAY –மில்கி வே)  போல கோடிக் கணக்கில் பிரபஞ்சங்கள் இருப்பதும் இப்பொழுது விஞ்ஞானிகள் வெளியிடும் தகவல்கள். ஆனால் இது இந்துக்களுக்கு எப்பொழுதோ தெரிந்த விஷயம்!

 

நக்கபிரான் அருளால் இங்கே நடைபெறும்

உலகங்கள் கணக்கிலவாம்!

தொக்கன அண்டங்கள் — வளர்

தொகைபல கோடிபல்கோடிகளாம்

இக்கணக்கெவர் அறிவார் – புவி

எத்தனையுளதென்பது யார் அறிவார்?

— என்று பாரதி பாடியதில் வியப்பில்லை. அவர் நம் காலத்தவர்

 

ஆனால் அப்பருக்கும், சம்பந்தருக்கும் முன்னால் வாழ்ந்த மாணிக்கவாசகரே — அதாவது இற்றைக்கு 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவரே — இந்த அரிய உணமையைப் பாடியுள்ளார். கலிலியோ, கோபர்நிகசுக்கு முன்னதாக வானத்தை அளந்தவர்கள் நாம்!

GALAXI

இதோ திருவாசகப் பாடல்:–

 

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்                               

 அளப்பருந் தன்மை வளப்பெரும் காட்சி                               

ஒன்றனுக்கு ஒன்று நின்று எழில் பகரின்                                    

நூற்று ஒரு கோடியின் மேற்பட விரிந்தன                                  

இல் நுழை கதிரின் துன்அணுப் புரையச்     

–திரு அண்டப் பகுதி, திருவாசகம்

 

இதில் அண்டம் என்பது உருண்டை வடிவானது, அது நூற்றுக்கணக்கான கோடி அண்டங்களாக விரிவடைகிறது என்ற வானவியல் கருத்துகள் சொல்லப்படுகிறது.

 

இந்தப் பிரபஞ்சம் காற்றால் ஊதப்படும் பலூன் போல விரிவடைந்து கொண்டே இருக்கிறது என்பதெல்லாம் தற்காலக் கண்டுபிடிப்புகள். ஆனால் இதை சம்ஸ்கிருத நூல்களும் , தமிழ் நூல்ல்களும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே செப்பிவிட்டன.

 

நமக்கு 900 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கம்பனும் எல்லோருக்கும் தெரிந்த  — எல்லா இந்துக்களுக்கும் தெரிந்த — இவ்வுண்மையை போகும் போக்கில் சொல்லிவிடுகிறான்:–

தோன்றல் நீ முனியின் புவனத் தொகை

மூன்று போல்வன முப்பது கோடி வந்து

ஏன்ற போதும் எதிர் அல என்றலின்

சான்று வேதம் தவம் பெரும் ஞானமே

–ஆரண்ய காண்டம், கம்ப ராமாயணம்

 

இதன் பொருள்:-

தலைவனே நீ சினம் கொண்டால், இம் மூவுலகங்கள் போல முப்பது கோடி உலகங்கள் ஒன்றாகக்கூடி எதிர்த்தாலும், அவை உன் ஆற்றலுக்கு ஏற்றவை அல்ல. இவ்வாறு கூறுவதற்கு வேதங்களும், எமது தவமும், தத்துவ ஞானமும் சான்றுகள் ஆகும்.

 

முப்பது கோடி உலகங்கள் என்பதை அப்படியே அர்த்தம் (LITERAL MEANING)  கொள்ளாமல் பல கோடி உலகங்கள் என்று படிக்க வேண்டும்.

 

ஆக கம்பன் காலத்திலேயே இப்படி வானியல் அறிவு இருந்தது. கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒரு சூரிய மண்டலம் போன்றவை எ து அவர்களுக்குத் தெரியும்.

 planets_image

பிற கிரகங்களில் உயிரினங்கள்

 

விஞ்ஞானிகள் இதுவரை பிற கிரகங்களில் உயிரினங்களைக் கண்டு பிடிக்கவில்லை. ஆனால் இந்து புராணங்கள் மற்ற கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வதையும் அவர்களுடைய நிலையையும் தெளிவாகக் கூறியுள்ளன:–

 

பிற கிரகங்களில் வாழ்வோருக்கு கண்கள் இமைக்காது

1.கால்கள் நிலத்தில் பதியாது

2.அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பர்.

3.நினைத்த மத்திரத்தில் கிரகம் விட்டு (INTER GALACTIC TRAVEL) கிரகம் செல்வர்.

4.வேண்டிய உருவங்கள் எடுக்கவல்லவர்.

5.அவர்கள் போட்டுக்கொண்ட மாலைகள் வாடா.

6.அவர்கள் மேல் உலகில் செக்ஸில் (NO SEX REGION) (உடல் உறவில்) ஈடுபடமுடியாது.

7.அவர்களுக்கு ஒளிமிகுந்த (PHOSPHOROUS) உடல் உண்டு.

 

கம்பனும் புற அண்டம் (EXTRA TERRESTRIAL) பற்றிப் பாடுகிறான்:–

கம்பன் காலத்திலேயே புற அண்டங்களில் உயிரினங்கள் வாழ்பவது தெரியும்!

புகல் புகுந்திலரேல் புறத்து அண்டத்தின்

அகல்வரேனும் எம் அம்பொடு வீழ்வரால்

தகவு இல் துன்பம் தவிருதிர்  நீர்  எனா

பகலவன் குல மைந்தன் பணிக்கின்றான்

–ஆரண்ய காண்டம், கம்ப ராமாயணம்

 

இதன் பொருள்:-

 

முனிவர் உரைத்ததைக் கேட்ட சூரிய குல ராமன், அவரிடம், இவ்வரக்கர்கள் இனிமேல் தீங்கு செய்ய மாட்டோம் என்று கூறி என்னிடம் அடைக்கலம் அடையாவிட்டால், அவர்கள் இந்த அண்டத்தை விட்டு வேறோர் அண்டத்துக்கு ஓடிப்போனாலும் என் அம்பால தாக்கப்பட்டு அழிந்தொழி வார்கள் எனவே நீங்கள் துன்பத்தை ஒழியுங்கள்.

 

இப்பாட்டில் சொல்லப்படும் அறிவியல் கருத்துகள்:–

1.புற அண்டம் உண்டு

2.அவற்றுக்கு பயணம் செய்வதும் சாத்தியமே.

 

இந்த அறிவியல் கருத்துகள் இல்லாவிடில் இத்தகைய சொற்கள் பாடலில் இடம்பெறா.

IMG_4976

இல்லாத ஒன்றை கற்பிப்பது புலவர்க்கு இயலா.

இருப்பதையே அவர்கள் சொல்லுவர்.

 

ஆக கம்பராமாயணம் முழுதும் வரும் வானில் கருத்துகளை ஒட்டு மொத்தமாக தொகுத்துப் பார்த்தால் அக்காலத்தில் மக்களுக்கு எவ்வளவு தெரிந்தது என்பதை அளவிட முடியும்

 

 

கோள், கோளம், அண்டம்

 

அண்டம் என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு முட்டை என்று பொருள்.

 

இந்த பிரபசம் , விண்வெளியில் உலவும் கிரகங்கள் இவறுக்கு நம் முன்னோர்கள் பயன்படுத்திய இச்சொல்லிலிருந்து அவர்களுக்கு அக்காலத்திலேயே பூமி, பிரபஞ்சம் எல்லாம் வட்டவடிவமானவை என்பது தெரிந்திருந்தது என்பது தெளிவாகிறது.

 

பூகோளம், மண்டலம், கோள் என்பன எல்லாம் வட்ட வடிவத்தையே குறிக்கும்.

 

தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரே மூலத்திலிருந்து பிறந்ததால் கோள், கோளம் என்பன கி கங்களுடன் தொடர்புடைய சொற்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. கால்டுவெல்களும், மாக்ஸ்முல்லர்களும் பிதற்றிய ஆரிய– திராவிட மொழிக் கொள்கைகளை உதறிவிட்டுப் பார்த்தால் அற்புதமான மூல  மொழி– உலகிற்கெல்லாம் தாய்மொழி தெரியும்.

–சுபம்–

உங்கள் எண்ணங்களைத் திரையில் பார்க்கலாம்! (Post No.3017)

Gallant

Article Written S NAGARAJAN

Date: 29 July 2016

Post No. 3017

Time uploaded in London :– 6-45 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

29-7-16 பாக்யா  இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

உங்கள் எண்ணங்களைத் திரையில் பார்க்கலாம்!

.நாகராஜன்

vision

மனதில் நினைப்பதை அறிவது என்பது குழந்தைகளின் மாயாஜாலக் கதைகளிலிருந்து இப்போது நிஜமாக ஆகிறது’                    – டெய்லி மெயில் பத்திரிகை                 

உலகம் மாறுகிறது! வேகமாக!! விளையாட்டாக முன்பு பேசியதெல்லாம் வினையாக ஆகிறது.

‘ஆமாம், இவரு நாம நினைச்சதை எல்லாம் கண்டு பிடிச்சிடுவாரில்லை!’ என்று கேலியாகப் பேசியதெல்லாம் பழைய கதையாக ஆகி விடப் போகிறது.

ஒருவர் என்ன நினனக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்வது மட்டுமில்லை. அதை திரையிலும் பார்க்க முடியும், இனிமேல்!

அறிவியல் காட்டும் அற்புதங்களில் இதுவும் ஒன்றாகச் சேரப் போகிறது!

அமெரிக்காவில் புரட்சிகரமான கண்டுபிடிப்பு வரிசைகளில் ஒன்றாக நினைத்ததைப் படமாகக் காட்டும் முயற்சி வெற்றியை நோக்கி பீடு நடை போடுகிறது.

அமெரிக்க விஞ்ஞானிகளின் குழு ஒன்று, இரு தன்னார்வலர்கள்  வீடியோ ஒன்றைப் பார்க்கும் போது அவர்களின்  மூளைகளை ஸ்கேன் செய்து அந்த முடிவுகளை வைத்து அவர்கள் பார்த்தனவற்றை மறுபடியும் உருவாக்க முய்னறு வெற்றி பெற்றுள்ளது!

இந்தக் குழுவினரின் கண்டுபிடிப்பு இப்போது துல்லியமாக இல்லை என்றாலும், இந்த உத்தியின் மூலமாக ஒருவர் மனதில் நினைப்பதைச் சித்திரமாக திரையில் படமிட்டுக் காட்ட முடியும் என்ற நம்பிக்கையைத் தந்து விட்டது!

ஒரு மனிதனை நினைத்த போது விஞ்ஞானிகள் ஒரு மனிதனின் படத்தையும் அவன் பின்னணியில் ஆகாயத்தையும் உருவாக்க முடிந்திருக்கிறது.

பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜாக் காலண்ட் (Professor Jack Gallant) இந்த முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார்.

 

how it works

“நீங்கள் பார்க்கும் எதையாவது விவரிக்க வேண்டுமென்றால் இப்போது வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. அல்லது அதைப் படமாக வரைந்து காட்ட வேண்டியிருக்கிறது. இது சில சமயம் சரிப்பட்டு வருவதில்லை. இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் தொழில்நுட்ப உத்தியானது குற்றம் ஒன்றைப் பார்த்த ஒருவர் என்ன பார்த்தார் என்பதைத் துல்லியமாக மீண்டும் நினைவுக்குக் கொண்டு வர உதவும்” என்கிறார் அவர்.

இது பற்றிய ஆய்வுகளில் மேற்கொள்ளப்பட்ட பல சோதனைகளில் இந்த சோதனை எப்படி மூளை ஸ்கேன்கள் ஒருவரின் உள்ளார்ந்த எண்ணங்களைப் படமாகக் காட்ட முடியும் என்பதற்கான முத்தாய்ப்பான சோதனையாக அமைந்துள்ளது.

இன்று சர்வ சாதாரணமாக மருத்துவ மனைகளில் பயன்படுத்தப்பட்டு வரும் ஃபங்ஷனல் மாக்னெடிக் ரெஸொனென்ஸ் இமேஜிங் (Functional magnectiv resonance imaging – fMRI) ஸ்கேனரை வைத்து அமெரிக்க குழுவினர் இரண்டு தன்னார்வலர்கள் ஒரு வீடியோவைப் பார்க்கும் போது  அவர்களின் மூளைகளை ஸ்கேன் செய்ததன் விளைவே இந்த சோதனையை வெற்றியாக்கியது.

ஒரு கணினியில் அவர்கள் தங்கள்  முடிவுகளை ஏற்றினர். அதில் அவர்கள் நினைத்த எண்ணங்களுக்கான வண்ணங்கள், உருவங்கள், இயக்கங்கள், செயல்பாடுகளில் ஏற்படும் பாட்டர்ன் எனப்படும் ஒழுங்குகள் ஆகியவற்றைத் தொகுத்தனர்.

பிறகு கம்ப்யூட்டர் மென்பொருளில் தன்னார்வலர்கள் இன்னொரு வீடியோவைப் பார்த்து அதனுடைய ஸ்கேன் முடிவுகளை ஏற்றினர்.

இப்போது கணினியிடம் அவர்கள் பார்த்ததைப் படமாக வரையுமாறு ஆணையிட்டனர்.

கணினி தந்த முடிவைப் பார்த்த பேராசிரியர் காலண்ட் அசந்து போனார்.

அவரது முடிவுகள் இன்னும் பரம இரகசியமாக உள்ளன என்றாலும் அவர் பெற்ற வெற்றியை உலகம் அறிந்து விட்டது!

துல்லியத்திற்கு மிக நெருங்கியவையாக கணினியில் படங்கள் அமைந்துள்ளன!

இன்னொரு சோதனையில் காமடி நடிகர் ஸ்டீவ் மார்டின் வெள்ளை நிற சட்டையை அணிந்திருந்ததை அப்படியே கணினி சித்தரித்துப் படமாக்கிக் காண்பித்தது. ஆனால் அவர் முகத்தைக் காண்பிக்க முடியாமல் அது திணறியது. ஆனால் எதிர்காலத்தில் அதனுள் உள்ளிடும் தகவல்கள் துல்லியமாக் அனைத்தையும் காட்டும் என்பதை விஞ்ஞானிகள் அறிந்து மகிழ்கின்றனர்.

jack-gallant-engineering-thoughts

இன்னொரு சோதனையில் அதில் கலந்து கொண்டவர்களிடம் வானத்தின் பரப்பையும் அதில் விமானம் ஒன்று பறந்து செல்வதையும் காண்பித்தனர்.

கணினி வானத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டியது. விமானத்தை அதனால் படம் பிடித்துக் காட்ட முடியவில்லை. ஆனால் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டால் எதையும் கணினி காண்பிக்கும் என்பது உறுதி.

‘நீங்கள் நினையுங்கள்; உங்கள் எண்ணங்களைப் பிடித்துத் திரையில் காட்டுகிறோம்’, என்கின்றனர் விஞ்ஞானிகள் மிகுந்த நம்பிக்கையுடன்!

இந்த் புது விதமான உத்தி உலகில் ஏற்படுத்தப் போகும் மாற்றங்களை நினைத்தாலேயே பிரமிப்பு ஏற்படுகிறது, இல்லையா!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

ஜப்பானில் பிறந்து அமெரிக்க  குடிமகனாக இன்று வாழ்பவரான ஷுஜி நகாமுரா (Shuji Nakamura – தோற்றம் 22-5-1954) ஒரு பெரிய விஞ்ஞானி. இயற்பியலில் 2014ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை இவர் பெற்றார். லைட் எமிட்டிங் டையோடுகளைச் சுருக்கமாக நாம் இப்போது எல் இ டி (LED) என்கிறோம். ப்ளூ எல் இ டி கண்டுபிடிப்பிற்காக நகாமுரா நோபல் பரிசைப் பெற்றார்.

1979 ஆம் ஆண்டு மாஸ்டர் டிகிரியைப் பெற்ற அவர் டோகுஷிமா என்ற சிறிய நகரத்தில் இருந்த  நிசியா கெமிக்கல் (Nichia chemical) என்ற கம்பெனியில் வேலை பார்க்க ஆரம்பித்தார். பலத்த போட்டியின் காரணமாக அந்த கம்பெனி நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்தது.

 

ucsb_nakamura

1988இல் நகாமுரா நிறுவனத்தின் உரிமையாளரான் ஒகவா நொபுவோவிடம் நேரடியாகச் சென்றார். 30 லட்சம் அமெரிக்க டாலர்களைத் தருவதோடு ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் ஒரு வருடம் ஆராய்ச்சி செய்ய அனுமதியையும் வேண்டினார். அவரே ஆச்சரியப்படும்படி உரிமையாளர் சரி என்று சொல்லி விட்டார்,

நகாமுரா தனது இடைவிடாத ஆராய்ச்சியினால் ப்ளூ எல் இ டிக்களை உருவாக்கும் உத்தியைக் கண்டு பிடிக்கவே கம்பெனி பெருத்த லாபம் அடைந்தது. கற்பனைக்கு எட்டாத அளவு லாபம்! ஆனால் நிறுவனமோ நகாமுராவைக் கண்டு கொள்ளவே இல்லை.

2000ஆம் ஆண்டில் நிறுவனம் நகாமுராவிடம் தனது கண்டுபிடிப்பை யாரிடமும் சொல்லக் கூடாது என்று நிபந்தனை விதித்தது.

கலிபோர்னியா பல்கலைக் கழகமோ இப்படி ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டாம் என்று நகாமுராவுக்கு அறிவுரை வழங்கியது.

நகாமுராவின் மீது நிசியா, வணிக ரகசியங்களை வெளியிடுவதாக வழக்கு ஒன்றைத்  தொடர்ந்தது. நகாமுராவும் பதில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

1930 லட்சம் டாலரை (ஒரு டாலர் சுமார் 67 ரூபாய்கள்) த்னது கண்டுபிடிப்பிற்கான தொகையாக நகாமுரா கேட்டார். கம்பெனி வழங்கியதோ வெறும் 180 டாலர்கள் தான்!

இறுதியாக 81 லட்சம் டாலர் தர கம்பெனி சம்மதித்தது. நகாமுராவிற்கு இதில் ஏமாற்றம் தான்! என்றாலும் வெறும் 180 டாலரிலிருந்து 81 லட்சம் டாலரைத் தர கம்பெனி சம்மதித்ததை வழக்கின் வெற்றியாக அவர் ஏற்றுக் கொண்டார்.

உலக வரலாற்றில், குறிப்பாக ஜப்பானிய வணிக நிறுவன வரலாற்றில் இந்த வழக்கு குறிப்பிடத்தகுந்த வழக்காக அமைந்து விட்டது.நகாமுரா இன்று நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி மட்டுமல்ல; பெரிய பணக்காரரும் கூட!

*********

 

 

உப்பு நீரில் ஓடும் கார் (Post No.2987)

salt powereeed

Article Written S NAGARAJAN

Date: 20 July 2016

Post No. 2987

Time uploaded in London :– 5-16 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

22-7-16 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை
உப்பு நீரால் ஓடும் கார்!
ச.நாகராஜன்

“படிம எரிபொருள் சீக்கிரமே அரிதாகி விடும் என்பதால் மாற்று எரிபொருள் இன்றியமையாதது.”
– காதத் பகத்

 

salt water car

Toy Salt Car Kit: You can do it

பெட்ரோல் மற்றும் டீஸல் ஆகியவற்றின் விலையை நினைத்தாலேயே நடுத்தர மக்களுக்கு பகீர் என்கிறது. படிம எரிபொருளை விட்டு விட்டு மாற்று எரிபொருளைக் கண்டுபிடிக்க உலகெங்கும் பெரும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
ஹைட்ரஜன் கார், எலக்ட்ரிக் கார், ஆர்கானிக் எதனால் கார், சூரிய சக்தியால் இயங்கும் சோலார் கார் என பல்வேறு விதமாக மாற்று எரிபொருள் முயற்சிகளை உலகிலுள்ள பல நிறுவனங்களும் மேற்கொண்டு மாதிரி கார்களை உருவாக்கியுள்ளன.
ஆனால் பரவலாக அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் மாற்று எரிபொருள் கார்கள் அன்றாடப் பயன்பாட்டிற்கென உருவாகவில்லை.
இந்த நிலையில் உப்பு நீரை வைத்து காரை ஓட்டலாம் என்ற செய்தி எவ்வளவு இனிப்பான செய்தி!
மரீனா கடற்கரையில் வரிசையில் நின்று ஆளுக்கு தினமும் ஒரு வாளி அல்லது பீப்பாய் கடல் நீரை இலவசமாக எடுத்துச் சென்று அதைக் காரில் போட்டுக் கொண்டு ஓட்டினால்?!!
நினைக்கவே நெஞ்சம் இனிக்கிறது இல்லையா!

ஜெர்மனியைச் சேர்ந்த நேனோ ஃப்ளோசெல் (Nano Flowcell) என்ற நிறுவனம் ஒரு மந்திரக் காரைக் கண்டுபிடித்துள்ளது. அது உப்பு நீரினால் ஓடுகிறது! இந்த உப்பு நீர் காரானது பெட்ரோல் டீஸல் கார்களை விட மூன்று மடங்கு அதிக தூரம் ஓடுகிறது!
ஹைட்ரஜனால் ஓடுகின்ற கார்களைப் போன்றே இந்த உப்பு நீர் காரும் ஓடுகிறது.
உப்பு நீரிலிருந்து மின்சக்தி உருவாக்கப்படுகிறது. ஆனால் ஹைட்ரஜன் காரில் உள்ளது போல சிக்கலான உயர் அழுத்த அமைப்புகள் (high pressure system) இதில் தேவையில்லை!
கொஞ்சம் ‘டெக்னிகலாக’ இதன் செயல்பாட்டை விளக்கவும் முடியும். இந்தக் காரில் இரண்டு எரிபொருள் டாங்குகள் இருக்கும். அது கரைக்கப்பட்ட உலோக உப்புகளினால் (dissolved metallic salts) நிரப்பப் பட்டிருக்கும். இந்த உப்பு எதிர்மறை அயோனிக் மின்னூட்டத்தைக் கொண்டிருக்கும் அது ஒரு மென்படலத்தின் மூலம் பம்ப் செய்யப்படும். இரசாய்ன வினை மூலம் சக்தி உருவாகி நான்கு மின் மோட்டார்கள் இயக்கப்படும். இவை சூப்பர் கபாசிடர்களினால் காரின் சக்கரங்களை இயங்க வைக்கும்.
நேனோ ஃப்ளோசெல் இதுவரை மூன்று உப்பு நீர் கார்களை உருவாக்கி உள்ளது. ஒன்று ஸ்போர்ட்ஸ் கார். இன்னொன்று சாதாரணப் பயன்பாட்டிற்காக உள்ளது. அடுத்தது முதலாக அமைக்கப்பட்ட ப்ரோடோ கார்!
இந்தக் கார்கள் ஐரோப்பாவில் சோதனை ஓட்டத்திற்கான அனுமதியைப் பெற்றுள்ளன.

பொதுமக்களின் பயன்பாட்டிற்கான காரின் பெயர் க்வாண்டினோ (Quantino).
இதன் ஹார்ஸ்பவர் 108. ஐந்து வினாடிகளில் இது 100 கிலோமீட்டர் வேகத்தை எடுத்து விடும்! ரேஸ் கார்களோ 200 ஹார்ஸ் பவர் கொண்டது.
சரி, இதன் மைலேஜ் என்ன? எவ்வளவு மைல்கள் இது ஓடும்?
ஒரு முறை டேங்கை நிரப்பினால் 1000 கிலோமீட்டர் இது ஓடும்!

இதைத் தொடர்ந்து ஓட்டிய டிரைவர் 14 மணி மூன்று நிமிடங்களில் களைத்துப் போய் நிறுத்தினார். ஆனால் கார் தொட்ர்ந்து ஓடும் நிலையில் நல்ல கண்டிஷனில் இருந்தது.ஸ்போர்ட்ஸ் கார் மணிக்கு 300 மைல் வேகத்தில் ஓடும், 1090 ஹார்ஸ் பவரைக் கொண்டது

இது போன்ற கார்களை உருவாக்கிய கம்பெனிகள் சில உண்டு என்றாலும் அவை சந்தைக்கு உரிய வண்டிகளை இதுவரை தயாரிக்கவில்லை. ஜப்பானிய நிறுவனமான ஜெனிபகஸ் என்ற நிறுவனம் ஒரு ஹைட்ரஜன் காரைத் தயாரித்தது. ஆனால் நிறுவனமே திவாலாகி விட்டது.!
ஸ்டான்லி ஆலன் மேயர் என்பவர் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனால் ஓடக் கூடிய காரைக் கண்டுபிடித்துத் தயாரித்தார். அது உற்பத்திக்கான நிலை வரும் போது அவரை விஷம் வைத்துக் கொல்ல முயற்சி நடந்தது. முதலீட்டாளர்களிடம் கார் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையிலேயே விஷத்தினால் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தார். அத்தோடு அந்தக் கார் பற்றிய திட்டமும் நின்றது.
இப்போது உப்பு நீர் காரினால் ஒரு புதிய உற்சாகம் ஏற்பட்டுள்ளது.
கடற்கரை ஓரம் வாழ்பவர்கள் இனி புதிதாக ஒரு பெரும் மக்கள் கூட்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும். மாற்று எரிபொருளான உப்பு நீரை வேண்டி நிற்கும் வாகனச் சொந்தக்காரர்கள் இனி கடலை நோக்கித் தானே திரண்டு வருவார்கள்! அல்லது அங்கு அமைந்திருக்கும் உப்பு தொழிற்சாலைகளை நோக்கி வரலாம்!
பெட்ரோலும் டீஸலும் போய் உப்பு நீர் எரி பொருளானால் ஏற்படும் பொருளாதார மாற்றங்களை நினைத்தாலே மனம் இனிக்கிறது.

 

lauterber 2
அறிவியல் செய்யும் ஜாலங்களுக்கு ஒரு முடிவே இல்லை!
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
அமெரிக்கரான பால் சி.லாடர்பெர் (Paul C Lauterber : தோற்றம் 6-5-1929 மறைவு : 27-3-2007) 2003ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோப்ல பரிசைப் பெற்ற மேதை. எம் ஆர் ஐ எனப்படும் மாக்னெடிக் ரெசோனென்ஸ் இமேஜிங் கண்டுபிடிப்பிற்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. நோய் அறிகுறிக்கான சோதனையில் இன்று உலகெங்கும் வருடந்தோறும் 6 கோடி பேர்களால் எம் ஆர் ஐ சோதனை மேற்கொள்ளப்படுகிறது. பக்கவிளைவு இல்லாத பாதுகாப்பான நோய் அறிகுறிக்கான சோதனை இது என்பது குறிப்பிடத்தகுந்த ஒன்று.
முதலில் தனது கண்டுபிடிப்பைப் பற்றி நேச்சர் பத்திரிகைக்கு இவர் எழுதி அனுப்பினார். ஆனால் பத்திரிகை இவரது கண்டுபிடிப்பை நிராகரித்து விட்டது.
மனம் நொந்து போன அவர்,” கடந்த 50 ஆண்டுகளில் விஞ்ஞானத்தாலோ அல்லதுநேச்சரினாலோ நிராகரிக்கப்பட்டதை வைத்து விஞ்ஞானத்தின் முழுச் சரித்திரத்தையே எழுதலாம்” என்று நேச்சர் பத்திரிகைக்கு எழுதினார். பின்னர் இவரது கண்டுபிடிப்பின் அருமையையும் பயன்பாட்டையும் கண்ட உலகம் வியந்தது. இவருக்கு நோபல் பரிசும் கிடைத்தது.
சுமார் 60க்கும் மேற்பட்ட பிரபல விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு முதலில் எள்ளி நகையாடப்பட்டன.

 

lauterber
அவர்களின் விடாமுயற்சியால் பின்னர் அறிவியல் உலகம அவர்களை அங்கீகரித்தது.. அவர்களுள் பலரும் நோப்ல பரிசை வென்றிருக்கின்றனர்..
எந்த ஒரு புதிய அறிவியல் கண்டுபிடிப்பையும் உலகம் பொதுவாக திறந்த மனதுடன் பாராட்டி ஏற்றுக் கொண்டதில்லை என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன.
ஆன் லைன் மூலமாக இன்று அன்றாடம் நடைபெறும் ஷாப்பிங்கை 1966ஆம் வருடம டைம் பத்திரிகை, “இதெல்லாம சரிப்பட்டு வராது. பெண்கள் கடைக்குச் சென்று ஷாப்பிங் செய்வதையே விரும்புவர்” என்று விமர்சித்தது.
1904ஆம் வருடம் பிரான்ஸை சேர்ந்த உத்திகளை வகுக்கும் பேராசிரியர் ஈகோல் டீ கர், “விமானங்கள் என்பது சுவையான பொம்மைகள் தான். அவை இராணுவ உபயோகத்திற்குச் சரிப்பட்டு வராது” என்றார். இரண்டாம் உலகப் போரில் விமானப் படைகளின் சேவை பற்றி அனைவரும் அறிவர்.
தாமஸ் எடிஸனே, “ஆல்டர்னேடிங் கரண்ட்” என்பதைப் பற்றிச் சிந்திப்பதே வேஸ்ட் ஆஃப் டைம்” என்றார். ஆனால் ஏசி- யே உலகை இன்று ஆள்கிறது.
இப்படி நூற்றுக் கணக்கான உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்..
அறிவுடன் விடாமுயற்சியும் இணைந்தாலேயே உலகம் அங்கீகரிக்கிறது என்பது உண்மை!
*********

வீடியோ விளையாட்டுகள் ஆபத்தானதா? (Post No.2967)

Girl playing video games

Article Written S NAGARAJAN

Date: 13 July 2016

Post No. 2967

Time uploaded in London :– 5-42 AM

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

15-7-16 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை
குழந்தைகள் விளையாடும் வீடியோ மூளை விளையாட்டு ஆபத்தானதா?
ச.நாகராஜன்

“வீடியோ விளையாட்டுக்களின் முக்கிய குறிக்கோள், மக்களுக்கு புதிய அனுபவங்களைக் கொடுத்து ஆச்சரியப்படுத்தி அவர்களுக்கு மன மகிழ்ச்சியை ஊட்டுவது தான்! – ஷிகெரு மியாமோடோ

உலகில் தற்போதுள்ள குழந்தைகளில் ‘வீடியோ கேம்ஸ்’ விளையாடாத குழந்தைகளே இல்லை. கணினியிலும் ஐ-பாடிலும் ‘மைன் க்ராஃப்ட்’ உள்ளிட்ட விளையாட்டுக்களை விளையாடும் குழந்தைகளை அதிலிருந்து மீட்டு சாப்பிடவோ, படிக்கவோ வைக்க எந்தத் தாய்மர்களாலும் லேசில் முடிவதில்லை.
இப்படி விளையாடினால் குழந்தைகள் கதி என்ன ஆகுமோ என்ற கவலை அவர்களுக்கு உண்டு.
அவர்களுக்கு ஒரு நற்செய்தி!
குழந்தைகள் விளையாடும் மூளை விளையாட்டுக்கள் ஆபத்தை விளைவிக்காது என்கிறது அறிவியல் சோதனை. ஜூலை 2016 ஸயிண்டிபிக் அமெரிகன் இதழில் உளவியல் விஞ்ஞானிகளான டப்னி பவேலியர் மற்றும் சி, ஷான் க்ரீன் (Daphne Bavelier & C.Shawn Green) ஆகியோர் இந்த வீடியோ கேம்கள் பற்றித் தரும் ஆய்வறிக்கைத் தகவல்கள் சுவையானவை.
துரித விளையாட்டுக்கள் என்று சொல்ல்ப்படும் ஷீட்டிங் விளையாட்டுக்களில் சிறுவர்கள் அபாரமான ஈடுபாட்டைக் காண்பிக்கின்றனர். இந்த விளையாட்டு மூளையில் சில பகுதிகளை நன்கு செயல்படச் செய்கின்றன என்கின்றனர் இந்த விஞ்ஞானிகள்.
இந்த விளையாட்டுக்களினால் கவனம் சிதறாமல் குவிக்கப்படும் தன்மை வளர்கிறது. ஒரு விளைவு ஏற்படும் போது அதற்கான எதிர் விளைவுக்குத் தயார் செய்து கொள்வதை இது வளர்க்கிறது. அத்தோடு ஒரு விஷயத்திலிருந்து இன்னொரு விஷயத்திற்கு உடனே மாறும் அபாரமான திறமையை வளர்க்கிறது.

 
இந்த விளையாட்டுக்களில் துப்பாக்கியை வைத்துச் சுடும் வன்முறைகள் உள்ளனவே, அவற்றால் குழந்தைகள் கெட்டுப் போக மாட்டார்களா என்ற கேள்வி எழுவதைச் சுட்டிக் காட்டும் அவர்கள், “அதைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம், அப்படிப்பட்ட துப்பாக்கி சுடுவது இல்லாத விளையாட்டுக்கள் ஏராளமாக உள்ளன. இனிமேலும் அது போல வன்முறையற்ற அதி சுவாரசியமான விளையாட்டுக்கள் குழந்தைகளுக்காகத் தோன்றும் வகையில் இந்த விளையாட்டுக்கள் ஒரு மேம்பாட்டிற்கு வழி வகுத்து விட்டன” என்கின்றனர்.

2 Girls playing video game
ல்யூமாஸிடி, காக்மெட் போன்ற நிறுவனங்கள் இது போன்ற மூளை விளையாட்டுக்களை சுமார் எட்டாயிரம் ரூபாய்க்கு விற்கின்றன. இந்த விளையாட்டுக்கள் அறிவியல் பூர்வமான ஆராய்ச்சிகளாலேயே உருவாக்கப்பட்டதாக அவை கூறுகின்றன. இவற்றை விளையாடுவதால் நினைவாற்றல் கூடும், எதையும் வெகு சீக்கிரமாக கிரகித்து செயல்படலாம், பிரச்சினைகளைத் தீர்க்கும் சக்தி மேம்படுகிறது, ஏன், சில வயதானவர்க்ள் இந்த விளையாட்டை விளையாடினால் அவர்களது மறதி நோய் எனப்படும் அல்ஜெமிர் நோயே தீர்கிறது என்கின்றன அந்த நிறுவனங்கள்!.
இந்த விளையாட்டுக்களை பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த நியூரோ-ஸயிண்டிஸ்டுகளே உருவாக்கியுள்ளதாகவும் அவைக்ள் தெரிவிக்கின்றன.
வீடியோ விளையாட்டுக்களைப் பற்றி ஏராளமான அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விட்டன. அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
‘ஸ்டார் க்ராஃப்ட்’ என்று ஒரு விளையாட்டு உள்ளது. இதை விளையாடினால் மூளையின் செயலாற்றல் கூடுகிறது என்பதை லண்டனில் உள்ள க்வீன் மேரீஸ் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. உளவியல் சோதனைகளில், இந்த விளையாட்டை விளையாடுவோர் மிக சுலபமாக, மிகுந்த வேகத்துடன் துல்லியமாக அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பதை ஆய்வாளர்கள் கண்டனர்.
வயதானவர்கள் இதை விளையாடும் போது என்ன நிகழ்கிறது?

 

50 வ்யதுக்கு மேற்பட்ட 681 பேரிடம் பத்து மணி நேரம் மூளை விளையாட்டை விளையாடுமாறு சொல்லப்பட்டது. அவர்களது மூப்படையும் தன்மை நிறுத்தப்பட்டதைக் கண்டு ஆய்வை நடத்தியவர்கள் அசந்து போனார்கள். அவர்களை இரு பிரிவாகப் பிரித்து ஒரு பிரிவினர் குறுக்கெழுத்துப் போட்டியை மேற்கொள்ள இன்னொரு பிரிவினர், ‘ரோட் டூர்’ என்ற கணினி விளையாட்டை மேற்கொண்டனர். வாகனங்களின் பாகங்களின் வெட்டப்பட்ட படங்களை அவர்கள் செல்லுகின்ற வழிகளில் உள்ள சாலை குறியீட்டு அடையாளங்களுடன் இணைத்து மிக சிக்கலான பிரச்சினைகளை உருவாக்கி அவற்றை ஒழுங்குபடுத்துவதே விளையாட்டு. ஒரு டிரைவருக்கு நெடுஞ்சாலையில் ஏற்படும் பிரச்சினைகளை, இந்த விளையாட்டு சிக்கலுடன் எடுத்துக் காட்டுகிறது. இதை விளையாடுபவர்கள் மூளை ஆற்றலைப் பயன்படுத்த வேண்டியிருப்பதால் அவர்களது ஆற்றல் கூடியது.
இத்தாலியில் மேற்கொண்ட ஆய்வு ஒன்று மூளை விளையாட்டை விளையாடிய படிப்பில் ஆர்வம் இல்லாத குழந்தைகள் பின்னர் படிப்பதில் ஆர்வம் கொண்டதை எடுத்துக் காட்டியது.
2010ஆம் ஆண்டு அமெரிக்கன் பெய்ன் சொஸைடி ஒரு ஆய்வை நடத்தியது. அதில் வீடியோ விளையாட்டுக்களை விளையாடுவோருக்கு வலி குறைவதைக் கண்டறிந்தது. மிக அதிக வலியைத் தரும் கீமோதெராபி, தீக்காயங்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டோர் இந்த விளையாட்டால் வலி குறைந்து நிவாரணம் அடைந்தனர்.
ரோசெஸ்டர் பல்கலைக் கழகம் விசித்திரமான ஒரு ஆய்வை மேற்கொண்டது. ‘கால் ஆஃப் டியூடி’ என்று ஒரு விளையாட்டு. இதில் எதிரிகள் கண்ணுக்குப் புலப்படாமல் இருப்பதோடு திடீர் திடீரென்று தோன்றுவர். அவர்களைக் கண்டு பிடித்து வெல்ல வேண்டும். இதை விளையாடிவர்களின் கண் பார்வை மேம்பட்டதை ஆய்வு எடுத்துக் காட்டியது!
டெல் அவி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்று பக்கவாதத்தால் பேச்சுத் திறன் பாதிக்கப்பட்டோர் மூளை விளையாட்டை மேற்கொண்டவுடன் பேச முடிந்ததை எடுத்துக் காட்டியது.
ஆக சிறுவர்கள் முதல் முதியோர் வரை இந்த மூளை விளையாட்டுக்களால் நல்ல பயன்களையே பெறுகின்றனர் என்பதைப் பல்வேறு ஆய்வுகளும் நிரூபித்து வருகின்றன.
என்றாலும் அளவுக்கு மீறினால் எதுவும் ஆபத்தே என்ற பழைய மொழியுடன் புதிய அறிவியல் முடிவுகளையும் இணைத்துக் கொண்டு இவற்றை விளையாடி ‘புத்திசாலிகள்’ ஆகலாம் என்பதே உண்மை!.

 

stanley_wendell

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
வைரஸ் என்றாலே அனைவரும் பயந்து ஓடுவார்கள். வாழ்நாள் முழுவதும் வைரஸ்களுடனேயே இருந்து அவற்றை ஆராய வேண்டும் என்றால் எவ்வளவு தைரியம் வேண்டும்! அந்த தைரியத்தைக் கொண்டு வைரஸ் பற்றி ஆராய்ந்து இரசாயனத்திற்கான நோபல் பரிசை 1946 ஆம் ஆண்டு பெற்ற மேதை தான் வெண்டெல் ஸ்டான்லி. (Wendell Stanley) (தோற்றம்: 16-8-1904 மறைவு :15-6-1971)
வைரஸ் பற்றிய எந்த சந்தேக்ம் என்றாலும், நிபுணர்களாக இருந்தாலும் கூட அவர்கள் நாடும் ஒரே அமெரிக்கர் இவர் தான்! வைரஸ்கள் பற்றி 150க்கும் மேலான அற்புதமான ஆய்வேடுகளை இவர் எழுதியுள்ளார். இவரது கெமிஸ்ட்ரி : ஏ ஃபியூடிஃபுல் திங்” என்ற நூல் பிரபலமானது.

இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவடைந்த சமயம். ஒரு நாள் கலிபோர்னியா பல்கலை கழகத் தலைவர் ராபர்ட் ஸ்ப்ரௌல் (Robert Sproul) விமானம் ஒன்றில் அமெரிக்காவில் பயணித்துக் கொண்டிருந்தார். அதே சமயம் ஸ்டான்லியும் இன்னொரு விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தார். திடீரென்று ஏற்பட்ட பனிப்புயல் ஒன்றினால் இரு விமானங்களும் ஓரிடத்தில் தரை இறங்கின. தற்செயலாக இருவரும் அங்கே சந்திக்க நேர்ந்தது. பயோகெமிஸ்ட்ரிக்கென தனியாக ஒரு பிரிவு வேண்டும் என்பது ஸ்டான்லியின் ஆசை. இருவரும் பேசிக் கொண்டிருந்த போது அதை ஸ்டான்லி சொல்ல, ‘அதெற்கென்ன, உடனே வாருங்கள், ஆரம்பித்து விடலாம்” என்றார் ராபர்ட்.
உடனே பெர்க்லி நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் பயோகெமிஸ்ட்ரி பிரிவு ஆரம்பிக்கப்பட்டு அதன் தலைவரானார் ஸ்டான்லி.
அங்கு படிக்க வரும் அனைவருக்கும் தவறாமல் இந்த சம்பவம் சொல்லப்படுமாம். இதைக் கேட்டு மகிழாத ஆராய்ச்சியாளரே பெர்க்லியில் இல்லையாம்!
ஒரு பனிப்புயல் சந்திப்பு பெரிய ஒரு பிரிவை ஆரம்பிக்கக் காரணமானது. பெர்க்லியில் இரசாயன அறிஞர்கள் அனைவரும் அங்கு ஒன்று கூடுவது வழக்கமானது!
சிறிய நிகழ்வுகள் பெரிய விளைவுகளை ஏற்படுத்துவது உண்மையே!
**********
 

 

சீனாவின் விண்கலம் விழப்போகும் விபரீதம்! (Post No.2957)

tiangong space station

Article Written S NAGARAJAN

Date: 10 July 2016

Post No. 2957

Time uploaded in London :– 5-29 AM

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

பாக்யா 8-7-16 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை
சீனாவின் விண்கலம் விழப்போகும் விபரீதம்!
ச.நாகராஜன்

“விண்வெளியில் 1071 சாடலைட்டுகள் சுற்றி வருகின்றன” –
– யுனிவர்ஸ் டுடே பத்திரிகை 24-10-2013இல் வெளியிட்ட செய்தி

ஆட்டம் போடும் சீனாவின் விண்வெளி ஆசைக்கு ஒரு எல்லை இல்லாமல் போய் விட்டது. நமது எல்லைப் புறத்தில் படையை அனுப்பி நம்மை சீண்டுவது போதாது என்று விண்வெளியையே ஆக்கிரமிக்க நினைக்கும் அதன் விண்கலம் ஒன்று தள்ளாட்டம் போடுகிறது! ஹெவன்லி பாலஸ் என்று சீனா அழைக்கும் அந்த ‘சுவர்க்க அரண்மனை’ எந்த நாட்டில் எப்போது விழுந்து எத்தனை பேரை சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப் போகிறதோ என்ற கவ்லை உலக மக்களுக்கு இப்போது தோன்றி இருக்கிறது!
ஏழாயிரத்திமுன்னூறு கிலோ எடையுள்ள இந்த விண்கலத்தின் பெயர் டியாங்காங் 1 (Tiangong – 1). டியாங்காங் என்றால் சீன மொழியில் சுவர்க்க அரண்மனை என்று பொருள்!

சீனா இப்படி தன் விண்கலம் தள்ளாட்டம் போடுவதை இதுவரை ஒப்புக்கொள்ளவும் இல்லை; உலகிற்கு அறிவிக்கத் தயாராகவும் இல்லை.
தாமஸ் டோர்மேன் என்பவர் வானில் பறக்கும் அனைத்து விண்கலங்களையும் டெலஸ்கோப், பைனாகுலர், வீடியோ மற்றும் இதர காமராக்களை வைத்துக் கொண்டு ஆராய்ந்து குறிப்புகளை எடுத்து வரும் நிபுணர்.
“நான் கணிப்பது சரியென்றால் சீனா கடைசி நிமிடம் வரை காத்திருந்து வேறு வழி இல்லை என்ற நிலையில் உலகிற்கு இதை அறிவிக்கும்“என்று கூறுகிறார் அவர்.

 
தனது ஸ்பேஸ் ஸ்டேஷன் தள்ளாடித் தரையில் விழுவதை சீனா ஒப்புக் கொள்ளும் வரை உலகம் கவலைப்படாமல் காத்திருக்குமா? விண்கலம் வெடித்து துண்டு துண்டாகிச் சிதறி பல்வேறு இடங்களில் பூமி மீது மோதினால் என்ன ஆகும்? அதுவும் நெருக்கமாக ஜனத்தொகை உள்ள பெரிய நகரங்களில் அது விழுந்து விட்டால்…! நினைக்கவே பயமாய் இருக்கிறது என்கிறனர் விஞ்ஞானிகள்.
ஆனால் பொதுவாக விண்கலம் கடலிலோ அல்லது ஜனசந்தடி அற்ற இடங்களிலோ தான் இறங்கும்படி செய்வது வழக்கம் என்பதால் பயப்படாமல் இருக்கலாம்.
ஆனாலும் பழுதுபட்ட விண்கலம் எப்படி இயங்கி விழுமோ என்பதால் இதை மிக உன்னிப்பாகக் கவனிக்க வேண்டி இருக்கும் என்கின்றனர் அவர்கள்.
சீனா வெளிஉலகிற்கு இந்த விண்கலத்தின் உண்மை நிலையை இதுவரை தெரிவிக்காமல் இருப்பதற்கான காரணம் அது விண்கலத்தைத் தன் கட்டுப்பாட்டின் மூலமாகத் தரை இறக்க முடியும் என்று இன்னமும் நம்பி வருவது தான்!

 
2020இல் சீனா மிகப் பெரிய விண்வெளி நிலையம் அமைக்க எண்ணியுள்ளது. அதற்கான முன்னோடி விண்வெளி நிலையம் இது. ஒரு விண்கலத்தை இன்னொரு விண்கலத்தோடு பொருத்தும் முறைகளில் வெற்றி கொள்வதற்காக இது விண்வெளியில் ஏவப்பட்டது. 2011இல் ஷென்ஷோ 8 மற்றும் 2012இல் ஷென்ஷோ 9, 2013 இல் ஷென்ஷோ 10 ஆகிய கலங்களில் இந்த ‘டாக்கிங்’ (docking) பயிற்சிகளை அது செய்து முடித்தது. கடைசியாக ஷென்ஷோ 10 என்ற விண்கலம் 2013இல் பூமியில் இறங்கியது.
அத்துடன் இந்த சுவர்க்க அரண்மனையின் வேலை முடிந்தது போலத் தான்.
பூமியில் உள்ள தாது வளங்களைக் கண்டு பிடித்தல், காட்டு வளத்தைப் பற்றி அறிதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் இது ஏராளமான அறிவியல் தகவல்களைத் திரட்டியுள்ள்து.

tiangong 1
ஒரு விண்கலம் நிலை கெட்டுத் தடுமாறி பூமி மீது மோத வந்தால் என்ன நடக்கும் என்பதை உலகம் ஏற்கனவே ஒரு முறை பார்த்து விட்டது.
1979ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி உலகமே பயத்துடனும் வியப்புடனும் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்ததை அனைவரும் அறிவர். அமெரிக்கா விண்ணில் ஏவிய ஸ்கைலாப் பழுதான நிலையில் பூமியை நோக்கி விரைந்து கீழே வந்து கொண்டிருந்தது. அதன் எடையோ 77 டன்கள். பதறிப் போன அமெரிக்க விண்வெளி விஞ்ஞானிகள் பூஸ்டர் ராக்கெட்டுகளை விண்ணில் ஏவி ஸ்கைலாப்பை கடலில் விழுமாறு செய்தனர். பெரும்பாலான துண்டுகள் கடலில் விழுந்தாலும் சில துண்டுகள் மேற்கு ஆஸ்திரேலியாவிலும் விழுந்தன. நல்ல வேளையாக, அது விழுந்த பகுதியில் மனித நடமாட்டமே இல்லை.
ஸ்கைலாப் விழப் போவதை அறிந்தவுடன் ஐரோப்பா, ஆசியா கண்டங்களில் உள்ள நாடுகள் பரபரப்படைந்து முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தன.
அமெரிக்க பத்திரிகைகள் ஸ்கைலாப் இன்ஷூரன்ஸ் திட்டம் என்ற தமாஷ் திட்டங்களை அறிவித்தன. ‘சான்ஃபிரான்ஸிஸ்கோ எக்ஸாமினர்’ என்ற பத்திரிகை ஒரு படி மேலே போய்,. யார் ஒருவர் ஸ்கைலாபின் ஒரு சிறிய துண்டையாவது எடுத்து 72 மணி நேரத்திற்குள் முதலில் தங்கள் அலுவலகத்தில் ஒப்படைக்கிறார்களோ அவருக்கு பத்தாயிரம் டாலர் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தது. நிச்சயம் ஸ்கைலாப் அமெரிக்காவில் விழாது என்ற கணிப்பில் அது இப்படி அறிவிப்பைச் செய்தது.
ஆனால் ஆஸ்திரேலியாவில் பதினேழே வயதான இளைஞன் ஸ்டான் தார்ண்டன் இந்த அறிவிப்பைக் கேள்விப்பட்ட பெரும் அதிர்ஷ்டசாலியாக இருந்தான். ஸ்கைலாப் அவன் இருந்த பகுதியில் விழவே ஒரு சிறிய துண்டை எடுத்துக் கொண்டு உடனடியாக ஒரு விமானத்தைப் பிடித்து குறித்த கால கெடுவான் 72 மணி நேரத்திற்குள் பத்திரிகை அலுவலகத்தில் கொண்டு வந்து அதைக் காண்பித்தான்.
அனைவரும் அதிசயித்துப் போனார்கள். பத்திரிகை நிறுவனமும் நல்ல மனதுட்ன் பத்தாயிரம் டாலரை அவனுக்கு வழங்கிக் கௌரவித்து தன் பெயரையும் காப்பாற்றிக் கொண்டது.

ஆனால் சீன சுவர்க்க அரண்மனையைப் பொறுத்த வ்ரை இதெல்லாம் நடை பெறாது என்பதை அனைவரும் அறிவர். அது
எங்கு எப்போது விழும் என்பது சஸ்பென்ஸ் தான்!
இந்த சஸ்பென்ஸ் விரைவில் நீங்கும். அது வரை பொறுத்திருப்போம்!

 

sidney altman

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
1989ஆம் ஆண்டு இரசாயனத்திற்கான நோபல் பரிசைப் பெற்ற மேதை சிட்னி ஆல்ட்மேன் (Sidney Altman) (தோற்றம் : 7-5-1939)
அவர் மிகவும் கடினமான உழைப்பாளி. ஏழை அகதிகளுக்கு மகனாகப் பிறந்தவர். அவரது தாய் ஒரு பஞ்சாலையில் வேலை பார்த்து வந்தார். தந்தையோ ஒரு மளிகைக் கடை வைத்திருந்தார். இருவரும் சந்தித்து மணம் முடித்துக் கொண்டனர்.
மளிகைக் கடையில் தந்தை வேலை பார்ப்பதையும் தாய் பஞ்சாலையில் வேலை பார்ப்பதையும் கூர்மையாகக் கவனித்து வந்த அவர், கடின உழைப்பு சிறு சிறு கூறுகளாக இருந்தாலும் வெற்றியைத் தரும் என்று உணர்ந்தார். தன் வாழ்க்கை கற்றுத் தந்த பாடத்தால் அனைவரையும் ஊக்குவிக்கும் ஏராளமான பொன்மொழிகளை அவர் வழங்கியுள்ளார்.
“1939ஆம் ஆண்டு மாண்ட்ரீலில் நான் ஏழை அகதிகளுக்கு மகனாகப் பிறந்தேன். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கிராஜுவேட் மாணவனாக இருந்தேன். 18 மாத காலம் ஒரு லாபரட்டரியில் வேலை செய்ய மாட்டாமோ என்று ஏங்கி இருந்தேன். வாய்ப்பு வந்தது. முன்னேறினேன்” என்று உருக்கமாகத் தான் முன்னேறிய விதத்தைப் பற்றி அவர் கூறுவதுண்டு. டி என் ஏ என்ற மரபணு போல ஆர் என் ஏ (ரிபோ நியூக்ளிக் அமிலம்) என்பதும் முக்கியமான ஒன்று. ஆர் என் ஏயில் ஊக்குவிக்கும் குணாதிசயங்களை அவர் கண்டு பிடித்து அதற்காக நோபல் பரிசை வென்றார். கடின உழைப்பு வெற்றியைத் தரும் என்பதற்கான உதாரணம் சிட்னி ஆல்ட்மேன்!
********