நான் கண்ட சுனாமி அதிசயம் ! அலைகளில் ஆதி சேஷன்!! (Post No. 2722)

adisesha

 

tsunami snake

 

sesha, pullaboothangudi

Written by london swaminathan

Date: 14 April, 2016

 

Post No. 2722

 

Time uploaded in London :– காலை 6-19

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

நான் வாகன ஆராய்ச்சி செய்பவன். பல வாகன ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி, இதே பிளாக்கில் வெளியிட்டிருக்கிறேன். அப்படி நாக வாஹன படம் ஒன்றை எனது பைலில் ‘சேவ்’ செய்துவிட்டு அடுத்த நிமிடம் ஒரு சுனாமி படத்தைப் பார்த்தவுடன் அசந்தே போய்விட்டேன். ஏனெனில் அதே நாக வாஹனம் அந்த ஆழிப் பேரலைகளில் இருந்தது. இதை கண்கள் காணும் மாயத்தோற்றம் – ஆப்டிகல் இல்லூஷன் OPTICAL ILLUSION – என்பதா அல்லது இந்து மதம் கூறும் விஞ்ஞான உண்மை என்பதா என்பதை கட்டுரையைப் படித்துவிட்டு நீங்களே முடிவு செய்யுங்கள்.

 

15 நாடுகளில் 2004-ஆம் ஆண்டிலும், ஜப்பானில் 2011 ஆம் ஆண்டிலும் சுனாமி என்னும் ராட்சதப் பேரலைகள் தாக்கிப் பல லட்சம் மக்கள் உயிரிழந்தை நாம் அறிவோம். இதில் வரும் ராட்சதப் பேரலைகள் பாம்பு உருவத்தில் வருகின்றன. ஆயிரம் தலையுடைய ஆதி சேஷனின் படுக்கையில், பால் கடலில் பள்ளி கொண்ட பரமனை இந்து மத நூல்கள் துதி பாடுகின்றன. இந்த ஆதி சேஷன் ஒரு கல்பத்தின் முடிவில் விஷம் கக்கி உலகை அழிப்பான் என்று நமது புராணங்கள் சொல்லும். அது மட்டுமல்ல பாதாள உலகத்தின் அரசன் நாக தேவன் என்றும் நமது நூல்கள் செப்பும். (கல்பம் என்பது ஒரு பிரம்மாவின் ஆயுள்).

Wave

உலகில் நாகம் பற்றிக் குறிப்பிடாத மதமோ கலாசாரமோ கிடையாது. ஆஸ்திரேலிய வானவில் பாம்பு—ரெயின்போ ஸ்னேக்- பற்றி எனது ஆஸ்திரேலியப் பயணக்கட்டுரைகளில் எழுதி இருக்கிறேன். இந்தியாவில் அர்ஜுனனும் கிருஷ்ணனுன் காண்டவ வனத்தை (கோண்ட்வானா லாண்ட்) எரித்து வெளியேற்றிய மய தானவன் துவக்கிய கலாசாரம்தான் தென் அமெரிக்க மாயன் பண்பாடு என்றும் மூன்று ஆராய்ச்சிக் கட்டுரைகளில் எழுதியுள்ளேன். பைபிளில் பாம்பு உள்ளது; ரிக் வேதத்தில் பாம்பு உள்ளது. ரிக் வேதத்தில் உள்ள பாம்பு ராணியைத் தான் மினோவன், சிந்து சமவெளிகளில் அப்படியே படமாகக் காட்டியுள்ளனர் என்று இன்னுமொரு ஆராய்ச்சிக் கட்டுரையில் குறிப்பிட்டேன்.

காண்க: (Please read my post Serpent Queen: Indus Valley to Sabarimalai – posted on 17th June 2012)

 

velli naga asana

 

wavesp57arch

 

யுக முடிவில் ஆதி சேஷன் விஷம் கக்கி உலகம் அழியும் என்பதை, சுனாமி பேரலைகள் கக்கி உலகம் அழியும் என்று பொருள் கொண்டு சுனாமிப் படங்களைப் பார்த்தால் இன்னும் நன்கு விளங்கும்.

 

ஏனெனில் உலகில் இது வரை எந்த விஞ்ஞானியும், உயிரியல் அறிஞனும் பல தலைகளைக் கொண்ட பாம்புகளைக் கண்டதில்லை. மிக மிக அதிசயமாக இரண்டுதலை ஒட்டிப் பிறந்த பாம்புகள் மட்டுமே உண்டு. அவையும் உடனே இறந்து விடும். இது மனிதர்களுக்குப் பிறக்கும் சயாமிய இரட்டைக் குழந்தை வகை Siamese Twins. பேஸ்புக், பத்திரிக்கை முதலியவற்றில் நாம் காணும் பல தலை பாம்புகள் வெறும் ரப்பர் பொம்மைகள், கம்ப்யூட்டர் ஏமாற்று வித்தைகள் என்பதை கற்றோரும் மற்றோரும் அறிவர். பின்னர் ஏன் இந்துமத நூல்கள் ஆயிரம்தலை ஆதிசேடன் பற்றிப் பகருகின்றன? என்னை (ஏனெனில்), சுனாமிப் பேரலைகளின் படங்களைக் கூர்ந்து நோக்கினால் ஆயிரம் பாம்புத் தலைகளுடன் சுனாமி அலைகள் , நிலப் பகுதிக்குள் ஆக்ரோஷத்துடன் – சீற்றத்துடன் – பிரவேசிப்பதைப் பார்க்கலாம்.

 

உலகில் நாகர் பற்றிப் பகராத பண்பாடு இல்லை என்று முன்னரே சொன்னேன். ஆயினும் ரிக் வேத காலம் முதல், சிந்து சமவெளியில் கிடைத்த பாம்புராணி முத்திரை முதல்– இன்று சபரிமலையில் உள்ள நாகராணி வரை— தொடர்ச்சியாக நாக வழிபாடு உள்ள மதம் – கலாசாரம் இந்துமதம் மட்டுமே. இமயம் முதல் குமரி வரை கோவில்களில் உள்ள நாகர்கள் சிலை பல லட்சம்! ஆயிரம் தலையுடைய வகனத்தைச் செய்ய முடியாதென்பதால் நமது கோவில் நாக வாஹனத்தில் 5, 7, 9 தலைகள்மட்டுமே சித்தரிக்கப் பட்டிருக்கும் – வடிவமைக்கப் பட்டிருக்கும்.

 

ஸ்னேக் (ஸ்+நாக), செர்பெண்ட் (ஸர்ப்ப) என்ற ஆங்கிலச் சொற்கள் சம்ஸ்கிருதத்திலிருந்து வந்தவை என்பதையும் நோக்குக. சுருக்கமாகச் சொன்னால், ரிக்வேத நாகர் வழிபாடு இன்று நாகர்கோவில், நாக்பூர், நாகாலாந்து வரை இருப்பது நம் பண்பாட்டில் மட்டுமே. மறைபொருளில்—நான் ‘மறை’ பாடிய ரிஷிகள், பாம்பு வடிவ சுனாமிப் பேரலைகளையே ஆதி சேடன் – ஆயிரம் தலையுடைய ஆதி சேடன் – என்று பாடினரோ என்று வியக்க வேண்டியுள்ளது. எக்காலத்திலும் இப்படிப்பட்ட பாம்பு இல்லாததால், நமது நூல்களை நாம் விஞ்ஞான முறையில் அனுகினால் அது சுனாமி பாம்பு அலைகள்தான் என்பது விளங்கும். அகத்தியர் கடல் நீரைக் குடித்தது, பகீரதன் கங்கையை திசை திருப்பிவிட்டது முதலிய பல ‘எஞ்சினீயரிங்’ பணிகளையும் மனதிற்கொண்டு பார்த்தால் நமது “மறை”மொழி விளங்கும்

nagadevata,tamil uma,fb

 

tsunami snake2

(எனது முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் புராதன பாரதத்தின் எஞ்ஜினீயர்கள் – அகத்தியன், பகீரதன், பலராமன் – பற்றிப் படிக்கவும்).

–சுபம்–

 

லண்டனில் புறா விடு தூது! (Post No 2691)

pigeons 2

Compiled by london swaminathan

Date: 3 April, 2016

 

Post No. 2691

 

Time uploaded in London :–  16-20

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

pigeon monitors

ஆதி காலத்தில் தமயந்தியும் நளனும் அன்னப் பறவை மூலம் செய்தி பரிமாறிக்கொண்டார்கள். இதே போல புறாக்கள் மூலமும் செய்திப் பரிவர்த்தனை நடந்தது. இப்பொழுதும்கூட பூகம்பம், பெரு வெள்ளம் ஏற்பட்டுச் செய்தித் தொடர்பு துண்டிக்கப்பட்ட இடங்களில் புறாக்கள் மூலம் கடிதங்கள் அனுப்பப்படுகின்றன. உலக மகா யுத்தங்களின் போது புறாக்கள் மூலம் சங்கேத மொழியில் ரஹசியங்களைப் பரிமாறிக்கொண்டனர். ஆனால் லண்டனில் சென்ற வாரம், வேறு ஒரு புதிய பணியில் புறாக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

 

ஐரோப்பிய நகரங்களில் மிக மோசமான அசுத்தக் காற்றுடைய நகரம் லண்டன்தான். இதனால் 120 நிலையங்களை அமைத்து நவீன கருவிகளைக் கொண்டு அவ்வப்பொழுது காற்றின் தூய்மையை கணக்கிடுகின்றனர். ஆயினும் இந்த நிலையங்கள் அனைத்தும் ஓரிடத்தில் நிலையாக இருப்பதால், இவைகளின் வீச்சுக்குள் வராத பல பகுதிகளும் இருக்கத்தான் செய்கின்றன. அங்குள்ள காற்றின் சுத்தம் பற்றி அறிய ஒரு கம்பெனி ஒரு புது யோசனையைத் தெரிவித்தது.

pigeon 3

அமெரிக்காவில் யுடா பகுதி மலைகளில் சுற்றுலாச் சென்று வருவோரை புகைப்படமெடுக்க, பயிற்றுவிக்கப்பட்ட புறாக்கள் பயன்படுத்தப் படுகின்றன. மலைகளில் ‘வாக்கிங்’ முடித்துவிட்டுத் திரும்புவதற்குள் நம்மை வானத்திலிருந்து புகைப்படம் எடுக்கும் புறாக்கள், அவைகளை தரை நிலயத்துக்கு அனுப்பும். அதை அங்குள்ளோர்  நாம் திரும்பிவந்தவுடன் புகைப்படமாகக் கொடுப்பர். இதே யோசனையை லண்டனில் பயன்படுத்த ஒரு கம்பெனி முன்வந்தது.

இந்த திட்டத்தின் கீழ் பத்து பந்தயப் புறாக்களின் முதுகில் 35 கிராம் மட்டுமே எடையுடைய கருவிகளைப் பொருத்தி பறக்கவிட்டனர். மூன்று நாட்களுக்குப் பறக்கும் இந்த புறாக்கள் கற்றிலுள்ள நைட்ரஜன் ஆக்ஸைட், ஓசோன் அளவுகளைப் பதிவு செய்யும். யார் ‘ட்வீட்” செய்தாலும் அந்த பகுதியிலுள்ள காற்றின் சுத்தத்தை உடனே ட்வீட் செய்துவிடும்.

 

பந்தயப் புறாக்கள், சாதாரணப் புறாக்கள் அல்ல. தெருக்களில் நாம் காணும் புறாக்கள் நாலு வருடம்தான் உயிர்வாழும். பந்தயப் புறாக்களோவெனில் 20 ஆண்டுகள் வரை வாழும். மேலும் மணிக்கு 60 முதல் 80 மைல் தூரம் பறக்கும்.

pigeonair_closeup-1200x800

லண்டன் அபாயம்

லண்டனில் காற்றின் அசுத்தம் மிகவும் மோசமாக இருப்பதால் ஆண்டுக்கு 9500 பேர் சாகின்றனர். டீசல் கார்களில் இருந்து வெளியாகும் விஷப் புகையே இதற்கு முக்கியக் காரணம். அருகாமை நாடுகளான, ஜெர்மனி, ஹாலந்து, போலந்து நாடுகளின் தொழிற்சாலைகளிலிருந்து வரும் விஷத் துகள்கள், லண்டன் டீசல் புகையுடன் கலந்து, மேலும் விஷத் தன்மை அடைகின்றன. இதிலுள்ள பி.எம்2-5 என்னும் விஷத் துகள் நுரையீரலின் திசுக்களையும் தாண்டி உள்ளே புகுந்துவிடும். உடலிலுள்ள எந்தப் பொருளும் இதை வெளியே தள்ள முடியாது. இதில் எந்த அளவுக்குப் போனால் ஆபத்து என்பதும் தெரியாது. இதனால் நுரையீரல் புற்று நோய் வருவது மட்டும் தெரியும். இந்த ஆபத்துக் காரணமாக காற்றின் அசுத்தத்தை அவ்வப்போது அவதானித்து வருகிறனர்.

 

புறாக்கள் மூலம் லண்டனில் நடைபெறும் சோதனை மூன்றே நாட்கள்தான் நடந்தன. இதற்கு அடுத்தபடியாக ஜெர்மனியைப் போல கழுகுகளையும் பயன்படுத்தலாம் என்று லண்டன் மாநகரப் போலீசார் கருதுகின்றனர். ஜெர்மனியில் கூட்டத்தைக் கண்காணிக்க கழுகுகளின் மீது சென்ஸார் கருவிகளைப்  பொருத்திவிடுவர்.

 

லண்டனில் புறாக்களைப் பயன்படுத்தும் நிறுவனம், மனிதர்கள் மீதும் இவைகளைப் பொருத்தி, அவர்களைப் பல தெருக்களில் உலவவிட்டு, ஆராயலாமே என்று கூறினர். இதுவும் வரவேற்கத் தக்க யோசனையே.

லண்டன் புறாக்கள் – காற்றின் சுத்தத்தை அளக்கின்றனவோ, இல்லையோ! ஆனால் காற்றின் தூய்மை பற்றிய ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திவிட்டன.

புறா விடு தூது வெற்றி!!

–சுபம்–

அருகி வரும் அரிய உயிரினங்களைக் காப்போம்! (Post No.2689)

Sem-título-15

Written by S NAGARAJAN (for AIR talk)
Date: 3 April 2016

 

Post No. 2689

 

Time uploaded in London :–  11-33  AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 endangered_animals72

 

அருகிவரும் – உயிரினங்களின் படங்கள்

 

சுறுசுறுப்பான தேனீக்களிலிருந்து மனிதரைப் பயப்பட வைக்கும் புலிகள் வரை பல்வேறு பூமி வாழ் உயிரினங்கள் வெகு வேகமாக அருகி வரும் உயிரினங்களில் பட்டியலில் சேருவது கவலை தரும் ஒரு விஷயம்!

பறவைகள், விலங்குகள், கடல் வாழ் உயிரினங்கள் என இப்படிப் பல்வேறு படைப்புகளைக் காப்பது மனிதனின் கடமை.

 

இவற்றைப் பற்றி முதலில் நன்கு அறிவது நமக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும். நமது பகுதியில் உள்ள தாவரங்கள், விலங்குகள், பறவைகள் பற்றிய முழுச் செய்திகளையும் அறிதல் அவை எவ்வளவு இன்றியமையாதன் என்பதை நமக்குப் புரிய வைக்கும். தேசீய பூங்காக்கள், வன விலங்கு சரணாலயங்கள் ஆகியவற்றிற்கு ஒரு முறை சென்றாலேயே போதும், அவை பற்றிய செய்திகள் நம் உள்ளத்தைக் கவரும்.

 

நமது இல்லங்களை மிகவும் சுத்தமாக இருக்கும்படி செய்தால் பூச்சிகளின் தொல்லை இருக்காது, வீட்டில் வளர்க்கும் வளர்ப்புப் பிராணிகளுக்கும் தொந்தரவு இருக்காது.

 

உர வகைகளை அளவுக்கு மீறி நமது தோட்டங்களில் பயன்படுத்தும் போது உடனடிப் பலன்கள் ஏற்படுவது போலத் தோன்றினாலும் நீண்டகாலத் தொலைநோக்கில் பார்த்தால் அவை மண்ணின் வளத்தை அரிப்பவை என்பது தெரியவரும். இவை விலங்குகளையும் அழிக்கக் கூடியவை என்பதால் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தல் நலம்.

 

விலங்குகள் அதிகமுள்ள பகுதியில் வாகனங்களை ஓட்டுவோர் மெதுவாகவும் கவனமாகவும் வண்டியை ஓட்டுதல் வேண்டும். அதிவேக வாகனங்களால் அழிந்துபடும் விலங்குகள் அதிகம் என்பது கவலை அளிக்கும் ஒரு செய்தி.

         

மழைக்காடுகளை அழித்துச் செய்யப்படும் மரச் சாமான்களை வாங்க மாட்டேன் என்று ஒவ்வொருவரும் உறுதி மொழி எடுத்து மரங்களை அழிப்பதை நிறுத்தினால் எதிர்கால சமுதாயம் வளம் பெற வழி வகுத்தவர்களாவோம்.

 

புதிய பொருள்களை வாங்கும் போது இவற்றால் அருகி வரும் உயிரினங்கள் பாதிக்கப்பட்டுள்ளனவா எனப் பார்த்து வாங்குதல் வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக மனிதன் அனைத்து உயிரினங்களின் தோழன் என்ற நிலையில் வாழ்ந்தால் உயிரினங்கள் அருகிப் போகாது. வளமுடன் செழித்து வாழும்.

 

-Subham-

 

ஏப்ரல் 2016 காலண்டர் (மன்மத/துர்முகி ஆண்டு பங்குனி/சித்திரை) Post No.2674

 

hanuman raman

Compiled by london swaminathan

Date: 29 March,2016

 

Post No. 2674

 

Time uploaded in London :–  8-45 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

தாவரங்கள் பற்றிய 30 பழமொழிகள், இந்த மாத காலண்டரை அலங்கரிக்கின்றன.

 

முக்கிய நாட்கள்:-  8-யுகாதி/தெலுங்கு புத்தாண்டு,

14-தமிழ் புத்தாண்டு, 15-ஸ்ரீஇராமநவமி, 21-சித்திரா பவுர்ணமி.

ஏப்ரல் 20- மதுரை சித்திரைத் தேர், 22- கள்ளழகர், மதுரை வைகை ஆற்றில் இறங்குதல்.

முகூர்த்த நாட்கள்:-4, 25, 29, அமாவாசை:- 6/7, பௌர்ணமி:- 21

ஏகாதசி:- 3, 17/18 இம்மாத காலண்டரில் தாவரம் பற்றிய 30 பழமொழிகள் இடம்பெறுகின்றன.

 

raman full page

ஏப்ரல் 1 வெள்ளிக்கிழமை

அமாவாசையில் மழை பெய்தால், அரிசி விற்ற விலையில் நெல் விற்கும்.

ஏப்ரல் 2 சனிக்கிழமை

அணில் ஏறி, தென்னை மரம் அசையுமா?

ஏப்ரல் 3 ஞாயிற்றுக் கிழமை

அரச மரத்தைச் சுற்றிவிட்டு, அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தாளாம்.

ஏப்ரல் 4 திங்கட்கிழமை

அருகாகப் பழுத்தாலும் விளா மரத்தில் வெவ்வால் சேராது.

ஏப்ரல் 5 செவ்வாய்க்கிழமை

அறுக்க ஊறும் பூம்பாளை; அணுக ஊறும் சிற்றின்பம்.

 

arasamaram

 

ஏப்ரல் 6 புதன்கிழமை

ஆடிப் பட்டம் தேடி விதை; ஆடி வாழை தேடி நடு.

ஏப்ரல் 7 வியாழக்கிழமை

ஆயிரம் கலம் நெல்லுக்கு ஒரு அந்து

ஏப்ரல் 8 வெள்ளிக்கிழமை

ஆள் அறிந்து ஆசனம் போடு; பல் அறிந்து பாக்குப் போடு

ஏப்ரல் 9 சனிக்கிழமை

ஆமணக்கும் பருத்தியும் அடர விதைத்தால் ஆகாது.

ஏப்ரல் 10 ஞாயிற்றுக் கிழமை

ஆலும் வேலும் பல்லுக்குறுதி.

 

ஆலமரம்

ஏப்ரல் 11 திங்கட்கிழமை

ஆவணி மருதாணி அடுக்காய்ப் பற்றும்

ஏப்ரல் 12 செவ்வாய்க்கிழமை

ஆவும் தென்னையும் அஞ்சு வருஷத்தில் பலன் ஈயும்

ஏப்ரல் 13 புதன்கிழமை

இலை சாய்கிற பக்கம் குலை சாயும்

ஏப்ரல் 14 வியாழக்கிழமை

எட்டடி வாழை, பத்தடி பனை, பதினாறடி தென்னை

ஏப்ரல் 15 வெள்ளிக்கிழமை

எட்டி மரமானாலும் பச்சை மரத்தை வெட்டாதே.

 

2மர விநோதம்

 

ஏப்ரல் 16 சனிக்கிழமை

எட்டு எள்ளுக்குச் சொட்டு எண்ணெய் எடுப்பான்.

ஏப்ரல் 17 ஞாயிற்றுக் கிழமை

எள்ளும் கரும்பும் இறுக்கினால்தான் பலன் கொடுக்கும்

ஏப்ரல் 18 திங்கட்கிழமை

ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும், தன் நாற்றம் போகாதாம் பேய்ச் சுரைக் காய்க்கு.

ஏப்ரல் 19 செவ்வாய்க்கிழமை

ஐப்பசி நெல் விதைத்தால் அவலுக்கும் ஆகாது

ஏப்ரல் 20 புதன்கிழமை

கத்தரிக்காய் வாங்க பூசணிக்காய் கொசுரா?

brinjal white

 

ஏப்ரல் 21 வியாழக்கிழமை

கத்தரிக்காய்க்கு காம்பு ருசி; வெள்ளரிக்காய்க்கு விதை ருசி.

ஏப்ரல் 22 வெள்ளிக்கிழமை

யானை வாயில் போன கரும்பைப் போல

ஏப்ரல் 23 சனிக்கிழமை

கரும்பில் எறும்பு இருந்தால் ஆனைக்கு என்ன?

ஏப்ரல் 24 ஞாயிற்றுக் கிழமை

காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்

ஏப்ரல் 25 திங்கட்கிழமை

கனியிருக்க காயைத் தின்பரோ?

BANANA HILL

ஏப்ரல் 26 செவ்வாய்க்கிழமை

காய்த்த மரம்தான் கல்லடி படும்

ஏப்ரல் 27 புதன்கிழமை

கேட்காத கடனும் பார்க்காத பயிரும் பாழ்

ஏப்ரல் 28 வியாழக்கிழமை

கொடிக்குக் காய் பாரமா?

ஏப்ரல் 29 வெள்ளிக்கிழமை

சாணி சுமப்பவளுக்கு சந்தனப் பூச்சு எதற்கு?

ஏப்ரல் 30 சனிக்கிழமை

சுண்டைக் காய் கால் பணம்; சுமைகூலி முக்கால் பணம்.

மே 1 ஞாயிற்றுக் கிழமை

–சுபம்–

 

 

 

மல்யுத்த வீரர் ஒருவரின் புதிய யுத்தம் (Post No. 2668)

Green Sea Turtle. Chelonia mydas. Maui, Hawaii, USA.

Green Sea Turtle. Chelonia mydas. Maui, Hawaii, USA.

Written by S NAGARAJAN
Date: 27 March 2016

 

Post No. 2668

 

Time uploaded in London :–  9-59 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 Common Map Turtle.jpg

மெக்ஸிகோவைச் சேர்ந்த பிரபல மல்யுத்த வீரர் எல் ஹிஜோ டெல் சான்டோ (El Hijo del Santo) புதிய யுத்தம் ஒன்றில் ஈடுபட்டு உலகத்தினரிடையே பாராட்டைப் பெற்றிருக்கிறார்.

 

இந்த யுத்தம் நீரில் வாழும் ஆமைகளை வேட்டையாடுவோரையும் கடல் வாழ் திமிங்கிலங்களை அழிப்போரையும் எதிர்த்துச் செய்யும் யுத்தம்.

முகமூடியை அணிந்து மல்யுத்த அரங்கத்தில் எதிரியுடன் சண்டை செய்து வழக்கமாக வெற்றியையே பெறும் இந்த வீரர் முகமூடி இல்லாமல் நேருக்கு நேர் கடல் வாழ் உயிரினங்களைக் காக்கச் செய்யும் போர் அனைவருக்கும் முன் உதாரணமாக இலங்குகிறது.

 

டிஜுவானா என்ற நதி வடமேற்கு மெக்ஸிகோவில் ஓடுகின்ற நதி. இந்த நதியில் குப்பைகளும், கழிவு நீரும் சேர்வதைக் கண்டு மனம் பொறாத அவர் இப் பகுதி வாழ் மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதைத் தனது தலையாய பணியாக மேற்கொண்டார். “மல்யுத்தம் செய்வதை விட சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதை எதிர்த்துப் போர் புரிவது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.இதில் அனைவரும் சேர வாரீர்என்கிறார் அவர்.

கடலில் வாழும் திமிங்கிலங்களும் ஆமைகளும் பெருமளவில் அழிந்துபட்டு வருவதைக் கண்ட அவர் அவற்றிற்காகக் குரல் கொடுக்க ஆரம்பித்தார்.

ஊடகங்களில் பெரும் செல்வாக்கு பெற்றிருக்கும் அவரது குரலைக் கேட்ட பல்லாயிரக்கணக்கானோர் அவருக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

 

 

ஆமைகளை உணவாகச் சாப்பிட வேண்டாம் என்ற அவரது வேண்டுகோளை ஏற்று கடல் ஓரமாக ஒதுங்கும் ஆமைகளைப் பிடித்து உணவாக உண்பதை மெக்ஸிகோ மக்கள் தவிர்க்க ஆரம்பித்ததோடு ஆமை முட்டைகளையும் கூட காப்பாற்ற ஆரம்பித்து விட்டனர். மெக்ஸிகோ அரசு இதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்ட போதிலும் கூட மல்யுத்த வீரரின் ஈடுபாடு காரணமாக கடந்த 50 ஆண்டு காலமாக வெகு வேகமாக அழிந்து வந்த இந்தக் கடல் வாழ் உயிரினம் இன்று காப்பாற்றப்பட்டுள்ளது.

 

 

மலைக்க வைக்கும் தொகையான் எட்டு லட்சம் டாலர் தொகையுடன் ஆமைகளையும் திமிங்கிலங்களையும் காக்க இறங்கிய அவரது பணி மாபெரும் வெற்றி பெற்று உலகத்தினருக்கு ஒரு முன் மாதிரியாக அமைந்து விட்டது. மல்யுத்த வீரரின் புதிய யுத்தத்தில் மக்களும் ஈடுபட்டு வெற்றி பெற்றது ஒரு புதிய சுவையான செய்தி தானே!

 

 

சிவபிரானின் தலையில் கங்கை இடம் பெற்ற காரணம் (Post No 2658)

ganga-river-route

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 24 March 2016

 

Post No. 2658

 

Time uploaded in London :–  8-56 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

விவேகானந்தர் வழி

 

 

கங்கையின் புனிதம்!

 

ச.நாகராஜன்

ganga-dussera-23

பிரம்மானந்தர் வாக்கு

 

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் ஆன்மீக புத்திரன் (Spiritual son) என்று அவராலேயே கூறப்பட்டவர் சுவாமி பிரம்மானந்தர். ராக்கால் என்று பூர்வாசிரம பெயரைக் கொண்ட இவரே பரமஹம்ஸ சீடர்களுள் முதலாவதாக அவரை வந்து அடைந்தவர்.

 

ராமகிருஷ்ண மடத்தின் தலைவராக சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வழி நடத்தியவர்.

அவர் கங்கையைப் பற்றிக் கூறிய கருத்துக்கள் ஆழ்ந்த பொருளைக் கொண்டிருக்கின்றன.

 

The water of Ganges is verily the holiest of all waters; it fulfils one’s desires and is a help to realizing the ishtam. Sri Ramakrishna has said” “The water of the Ganges, the holy prasadam of Jagannath (at Puri) and the sacred dust of Vrindavan are verily Brahman in reality.”

 

 

“கங்கையின் ஜலம் உலகிலுள்ள நீர்களிலெல்லாம் புனிதமானது. அது ஒருவனுடைய ஆசையைப் பூர்த்தி செய்கிறது அவனது இஷடத்தை உணர உதவுகிறது. ஸ்ரீ ராமகிருஷ்ணர் கூறியிருக்கிறார்: “கங்கையின் ஜலம். பூரி ஜகன்னாதரின் பிரசாதம், பிருந்தாவனத்தின் தூசி ஆகிய உண்மையில் பிரம்மமே.”

 

 ganga

சிவபிரானின் தலையில் கங்கை இடம் பெற்ற காரணம்

 

தேவலோகத்திலிருந்து பூமிக்கு வந்த கங்கை முதலில் சிவபிரானின் ஜடாமுடியில் விழுந்து, அதன் பிறகு பூமியில் நதியாக ஓடினாள் என்று ஒரு புராணக் கதை உண்டு. சுவாமி விவேகானந்தர் அதற்கான காரணத்தை புதுமையாக விளக்கினார் இப்படி:

 

“கங்கை வீழ்வதற்கு ஏன் சிவபெருமானின் தலையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? ஏனெனில்  கங்கை என்றல்ல; அனைத்து நதிகளும் அருவிகளும் சிவ பக்தைகள், சிவ பெருமானை வழிபடுபவர்கள். புரண்டோடும் நதிகளும், உச்சியிலிருந்து விழும் அருவிகளும் என்ன பாடுகின்றன, என்ன பேசுகின்றன என்பதை உற்றுக் கேட்டால், அது ‘வ்யோம், வ்யோம், ஹர ஹர(வ்யோம் என்பது சிவ பெருமானின் பெயர்களில் ஒன்று. வ்யோம் என்றால் ஆகாயம் அல்லது வெளி. அவர் எங்கு நிறைந்தவர் என்பது இதன் பொருள்) சிவ பக்தையாக இருப்பதால் தான் கங்கை சிவ பெருமானின் தலையை முதல் இருப்பிடமாகத் தேர்ந்தெடுத்தாள்.”

 

எப்படி ஸ்வாமிஜியின் அருமையான விளக்கம்!

 

கங்கை மீது ஸ்வாமிஜியின் பக்தி

 

அவரவர் பக்குவத்திற்கும் கேள்வி கேட்கும் நிலைக்கும் ஏற்ப ஸ்வாமிஜியின் பதில் அமைவது வழக்கம்.

ஒரு முறை இளைஞன் ஒருவன் அவரிடம் வந்தான். “ஸ்வாமிஜி, இந்தியாவிலும் மேலை நாடுகளிலும் நீங்கள் புதிய மதம் ஒன்றைப் பிரசாரம் செய்கிறீர்களா” என்று கேட்டான் அவன்..

ஸ்வாமிஜி: “அது என்ன புதிய மதம்?

 

இளைஞன்: “கங்கையில் குளிப்பதால் முக்தி கிடைக்கும் என்பது போன்ற நம்பிக்கைகளை நீங்கள் ஏற்றுக் கொள்வதில்லை அல்லவா, அதைச் சொன்னேன்.”

 

ஸ்வாமிஜி: “அது என்ன பேச்சு, அப்பா! நானே தினமும் கங்கையில் தான் குளிக்கிறேன். குளிக்க முடியவில்லை என்றால் கங்கை நீரைத் தலையில் தெளிக்கவாவது செய்யாமல் நான் இருந்ததில்லை. தலையில் தெளித்துக் கொள்கிறேன். ஒரிரு துளிகளைப் பருகவும் செய்கிறேன்.”

வந்த இளைஞன் தெளிந்தான்.

இப்படித் தவறாகத் தம்மைப் புரிந்து கொள்பவர்களை உடனுக்குடன் அந்த இடத்திலேயே தெளிவு படுத்தி விடுவார் ஸ்வாமிஜி.

கங்கையின் புனிதம் பற்றி புனிதமே உருவான அவர் சொல்வதைக் கேட்பதே அனைவருக்கும் ஆனந்தம்!

Haridwar-Tourism-Holy-Ganga-1

 

கங்கையின் கிழக்குப் பகுதியும் மேற்குப் பகுதியும்

 

 

கங்கைக்குக் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது தட்சிணேஸ்வரம். கங்கையின் கங்கோத்ரியாக அமைந்திருப்பது மேற்குக் கரையில் அமைந்துள்ள பேலும் மடம்.

 

பரமஹம்ஸரின் அனைத்து அமுத மொழிகளையும் உலகிற்குத் தொகுத்து அளித்த மஹேந்திரநாத் குப்தா (எம் என்று அழைக்கப்படுபவர்) ஒரு முறை தனது சீடர்களிடம் சொன்னார் இப்படி: “கங்கையின் மேற்குப் பகுதி வாரணாசி எவ்வளவு புனிதமானதோ அவ்வளவு புனிதமானது.  சாதாரண சின்ன புண்ணியத்தின் பயனா என்ன அது?”

 

கங்கையின் புனிதம் பற்றி மகான்களின் அமுத வாசகங்களுக்கு எல்லையே இல்லை!

*********

 

கொடுங்கோலன் கஜினி முகமதுவுக்கு ஆந்தைகள் கற்பித்த பாடம் (Post 2636)

owl story

Compiled by london swaminathan

 

Date: 16 March 2016

 

Post No. 2636

 

Time uploaded in London :–  காலை 5-56

 

(Thanks for the Pictures; they are taken from various sources)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

இந்தியாவை ஆண்ட வெளிநாட்டினர் செய்த அக்கிரமங்களை மஹா கவி பாரதி ஒரே வரியில் சொல்லிவிட்டார்: “ ஆயிரம் ஆண்டு அன்பிலா அந்நியர் ஆட்சி” என்று. அப்படிப்பட்ட அன்பில்லாத கொடுங்கோலர்களில் மிகக் கொடியவர்கள் கஜினி முகமதுவும் அவுரங்கசீப்பும் ஆவர். இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடித்ததோடு நிற்காமல், 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான சோமநாதபுரத்தில் இருந்த 15 அடி உயர சிவலிங்கத்தை சுக்கு நூறாக உடைத்த மதவெறியன் கஜினி முகமது. அவன்கூட ஆந்தைகளிடம் பாடம் கற்று அடங்கி ஒடுங்கிய ஒரு சம்பவம் இதோ:-

 

கஜினி நகருக்கு மேற்கே தொலைதூரத்திலுள்ள கிராமங்களை முகமதுவின் படை வீரர்கள் அழித்து நாசமாக்கி வந்தனர். ஆடுமாடுகளைக் கொள்ளையடிப்பது, பயிர்பச்சைகளை அழிப்பது அகியவற்றில் ஈடுபட்டதால் கிராம மக்கள் ஓடி ஒளிந்தனர். கிராமங்கள் எல்லாம் பாழடைந்த திடல்களாகிவிட்டன.

 

கஜினி முகமதுவிடம் மந்திரியாக வேலை பார்த்த ஒருவருக்கு தெய்வ பக்தி இருந்தது. “இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பாரிலானும் கெடும்” என்பது வள்ளுவன் குறள். ஆகையால் தன் கடமை கஜினி முகமதுவிடம் சொல்லி அட்டூழியங்களை நிறுத்துவதே என்று உறுதி பூண்டார். அவருக்கு பீர் என்ற முஸ்லீம் சந்யாசி பறவைகளின் பாஷையைக் கற்பித்திருந்தார். இது விஷயம், கஜினி முகமதுவுக்கும் தெரியும். ஒரு நாள் இருவரும் வேட்டையாடப் போனார்கள்.

 

இருவரும் மாலையில் திரும்பிவருகையில் ஒரு மரத்தின் மீது இரண்டு ஆந்தைகள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தன. கஜினி முகமது, குதிரைகளை நிறுத்தச் சொல்லி, மந்திரியிடம் சொன்னார்:

உனக்குத்தான் பறவைகளின் மொழி தெரியுமே! அவைகள் என்ன பேசிக்கொள்கின்றன? என்று கேட்டார்.

அமைச்சரும் அதை உற்றுக் கேட்பதுபோல கொஞ்ச நேரம் பாவனை செய்தார். பின்னர் வந்து, “அரசே அவைகள் பேசுவதைச் சொல்வதற்குத் தயக்கமாக இருக்கிறது. அது உங்களுக்கு உகந்ததல்ல” என்றார்.

கஜினி முகமது அதைச் சொல்லும்படி வலியுறுத்தவே, “நான் சொல்கிறேன். ஆனால் கோபத்தில் என்னைக் கொன்று விடக்கூடாது” என்று சொன்னார். கஜினி முகமதுவும் ஒரு தீங்கும் வராது என்று உறுதி கூறியவுடன் அமைச்சர் (மந்திரி) சொன்னார்:

அந்த ஆந்தைகளில் ஒன்று ஆண், மற்றொன்று பெண். அவைகள் இரண்டும் கல்யாணப் பேச்சில் ஈடுபட்டுள்ளன. ஒரு ஆந்தையின் பையனை மற்றொரு ஆந்தையின் பெண்ணுக்கு மணம் முடிப்பதைப் பற்றி பேசுகையில் ஆணின் தந்தை (ஆந்தை) சொன்னது: “இதோ பார் உன் பெண்ணை என் பையனுக்குத் திருமணம் செய்யத் தயார்தான். ஆனால் பெண்ணுடன் எனக்கு 50 பாழான கிராமங்களைச் சீதனமாக அனுப்ப வேண்டும்” என்றது. அதற்குப் பெண்ணின் தாயார் “நமது சுல்தான் ஆட்சியில் இருக்கும் வரை பாழாய்ப்போகும் கிராமங்களுக்கு என்ன குறை? 50 என்ன 500 கிராமங்களை வேண்டுமானாலும் தருவேன்” என்றது

கஜினி முகமது இதைக் கேட்டுவிட்டு வெட்கித் தலை குனிந்தான்.

-சுபம்-

இமயமலைக் காடுகளைக் காப்போம்! (Post No. 2606)

forest_of_great_himalayan

Written by S Nagarajan (written for AIR)

 

Date: 7 March 2016

 

Post No. 2606

 

Time uploaded in London :–  8-44 AM

 

( Thanks for the Pictures;

படங்கள் வெவ்வேறு இடங்களிருந்து எடுக்கப்பட்டவை;நன்றி  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

    உலகில் மாறி வரும் தட்பவெப்ப மாறுபாடுகள் அனைவருக்கும் கவலையளிக்கும் ஒரு பெரிய விஷயமாக ஆகி கொண்டு வரும் நேரத்தில் இமயமலைக் காடுகளைப் பற்றிய சமீபத்திய செய்தி ஒன்று அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

 

 

   சமீபத்திய ஆய்வு ஒன்று  கிழக்கு இமாலயப் பகுதி  பழுப்பு நிறமாக ஆகிக் கொண்டு வருகிறது என்ற அதிர்ச்சியூட்டும் உண்மையை முன் வைக்கிறது! அதாவது இமயமலைக் காடுகளில் பச்சைப் பசேலென அழகுடன் திகழ்ந்து வந்த மரங்கள் பழுப்பு நிறமாக மாறி வாடி வருகின்றன என்பதே இதன் பொருள்!

 

   சாதாரணமாக வளம் கொழிக்கும் நாட்களில் கூட இவை பசுமை இழந்து வருகின் என்பது ஆய்வு தரும் செய்தி!

 

    1982ஆம் ஆண்டிலிருந்து 2006ஆம் ஆண்டு முடிய எடுக்கப்பட்ட சாடலைட் காட்சிச் சித்திரங்களை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 1990 ஆம் ஆண்டு வரை பசுமையாகக் காட்சி அளித்த இமயமலைக் காடுகளின் மரங்கள் திடீரெனத் தங்கள் பசுமையை இழந்து ஒளி இழந்து வாடும் காட்சிகளை அதற்குப் பின்னர் காண்பித்தன. இவை வறண்டு பட்டுப் போவதாலேயே பழுப்பு வர்ணமாக மாறி வருகின்றன.

 

     இந்த ஆய்வின் முடிவுகள் சமீபத்திய க்ளோபல் சேஞ்ஜ் பயாலஜி ஜர்னலில் (Global Change Biology Journal) வெளியிடப்பட்டுள்ளன.

 Global Change 2008 Cover

    கிழக்கு இமாலப் பகுதி காடுகளில் உள்ள மரங்கள் ஒளிச்சேர்க்கை இல்லாமல் வாடுவதையே இது குறிக்கிறது. இதன் மூல காரணம் புவி வெப்பமயமாதலே ஆகும். நாளுக்கு நாள் உஷ்ணம் அதிகமாகிக் கொண்டே போவதால் அதன் நேரடி விளைவுகளில் ஒன்றாக நமதுக் காட்டுச் செல்வமும் அழிய ஆரம்பிப்பதையே இது காட்டுகிறது!

 

 

    வாகனங்கள் வெளியேற்றும் நச்சுப்புகையே புவி அதிக வெப்பமயமாவதற்கான காரணம் என்பதால் உடனடியாக வாகன நச்சுப் புகை வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தல் நமது தலையாய கடமை ஆகும்!

 

********                

 

 

ஆர்டிக் பிரதேச பனிக்கட்டிக்கு அடியில் வைரக்கற்கள்! (Post No 2561)

canadian_diamonds

Research Article  by London swaminathan

 

Date: 21 February 2016

 

Post No. 2561

 

Time uploaded in London :–  7-00 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Please go to swamiindology.blogspot.com

OR

tamilandvedas.com

 

For 2500 more articles and research papers.

 

diamonds

வடதுருவப் பிரதேசம் ஆர்க்டிக் வட்டத்துக்குள் இருக்கிறது. பூமியின் தென் கோளார்த்ததிலுள்ள அண்டார்ட்டிக் பிரதேசம் தென் துருவத்தில் உள்ளது. இந்த இரண்டு பனிக்கட்டிப் பிரதேசங்களிலும் பெட்ரோலியம் மற்றும் பல கனிம வளங்கள் இருக்கின்றன. ஆனால் அண்டார்ட்டிகாவின் இயற்கை அமைப்பைக் கெடுத்துவிடக் கூடாதென்பதற்காக எல்லா நாடுகளும்  சில கட்டுப்பாடுகளை ஏற்றுள்ளன. ஆர்டிக் பிரதேசத்தில் கட்டுப்பாடுகள் குறைவு. ஏனெனில் அது ஏற்கனவே, கனடா, அமெரிக்கா, நார்வே, பின்லாந்து, சுவீடன், ரஷ்யா முதலிய நாடுகளின் நில எல்கைக்குள் வந்துவிட்டது.

 

கனடா நாட்டின் எல்லைக்குட்பட்ட ஆர்டிக் பிரதேசத்தில் பனிக்கட்டிக்கடியில் நல்ல தரமான வைரங்கள் கிடைக்கின்றன. அதை வெட்டி எடுத்து பயன்படுத்தும் முறை பற்றிய சுவையான விவரங்கள் இதோ:–

 

கனடாவின் வடமேற்குப் பிராந்தியத்தில் (Northwest Territories)  வெப்ப நிலை மைனஸ் 35 (செல்ஸியஸ்) டிகிரிக்குப் போய்விடுகிறது. குளிர்காற்று வீசுகையில் மைனஸ் 70 டிகிரிக்கும் கீழே போய்விடும். அதாவது மனிதர்கள் வேலையே செய்யமுடியாது. மைனஸ் 30 டிகிரியில் யாரும் ஐந்து நிமிடத்துக்கு மேல் வேலை செய்ய இயலாது. இதனால் இரண்டிரண்டு பேராக சுரங்கத்துக்குச் செல்லுவர். ஒரு சூப்பர்வைசர் ஸ்டாப் வாட்ச் (Stop watch) வைத்து ஐந்து நிமிடம் ஆனவுடன் வேலையை நிறுத்தச் சொல்லுவார். இந்த இடத்துக்குப் பெயர் ஸ்நாப் லேக் (Snap Lake Diamond mine) வைரச் சுரங்கம். இதை வைரத் தொழிலில் உலகில் முன்னணியில் நிற்கும் டிபியர்ஸ் நடத்துகிறது.

 

canada map

 

கனடாவின் ரியோ டிந்தோ (Rio Tinto) கம்பெனி வைத்திருக்கும் வைரச் சுரங்கம் நீருக்கடியில் இருக்கிறது. அக்டோபர் முதல் ஜூலை வரை பனிக்கட்டியால் சூழப்பட்டுவிடும். இந்தச் சுரங்கத்தின் பெயர் டையாவிக் (Diavik Mine) சுரங்கம். இது இருக்குமிடத்தில் மரங்களே இல்லாததால் அந்த இடத்தை (Barren Lands) பேர்ரன் லண்ட்ஸ் (வறட்டுப் பகுதி) என்பர்.

 

இந்த சுரங்கங்களுக்கு பக்கத்தில் ஊர்களே கிடையாது. நூறு மைலுக்கு அப்பால்தான் நகரங்கள் உள்ளன. அதாவது மனிதர்கள் வசிக்குமிடத்தில் வைரங்கள் கிடைப்பதில்லை!

 

வரவர வைரம் கிடைப்பது அரிதாகி வருகிறது. இதனால் பிரபல வைரக் கம்பெனிகள் ஜிம்பாப்வே நாட்டில் (ஆப்பிரிக்க நாடு) வைர வியாபாரத்துக்கு மூடு விழா நடத்திவிட்டன.

 

வைரத்தைக் கண்டுபிடிக்க பல கோடி டாலர் செலவிட்டும் பயனில்லை. கிடைக்கும் என்று உத்தரவாதம் எதுவும் கிடையாது. கிடைத்தாலும் அது கட்டுபடியாகக் கூடிய செலவில் எடுக்கப்படுமா என்பது கேள்விக்குறியே.

ekati-diamond-mine-nwt-

வைரக் கற்களுக்கு ஆசைப்பட்டு 2000 முதல் 2014 ஆம் ஆண்டுவரை 700 கோடி டாலரைப் பலரும் முதலீடு செய்தனர் என்றும் பெரிய கண்டுபிடிப்புகள் எதுவும் நிகழ்வில்லை என்றும் டி பியர்ஸ் ஆய்வு காட்டுகிறது.

 

கடந்த 140 வருடங்களில் வைரத்துக்கு ஆசைப்பட்டு 7000 இடங்களைத் தோண்டினரென்றும், அவைகளில் 1000ல் மட்டுமே வைரங்கள் இருந்தனவென்றும் டிபியர்ஸ் (De Beers) கூறுகிறது. அதிலும் 60 சுரங்கங்களே, கட்டுபடியாகக் கூடிய விலயில் வைரங்களை உற்பத்தி செய்தன (வைரக் கற்களில் தரம் குறைந்த வைரங்களே அதிகம் கிடைக்கின்றன. இவைகளைப் பல்வேறு கருவிகளில் பயன்படுத்துவர்; நல்ல ஜாதி வைரங்கள் மட்டுமே நகைகளுக்குகந்தவை.)

 

சில இடங்களில் வைரம் எடுப்பது கடினம்; செலவும் அதிகமாகும். டையாவிக் சுரங்கம், ஏரியின் தண்ணீருக்கடியில் இருப்பதால் மிகவும் கஷ்டபட்டு வைரத்தை எடுக்கின்றனர்.

ஒரு குறிப்பிட்ட சுரங்கம் வருடத்தில் இரண்டு மாதம் (Ekati Diamond Mine) மட்டுமே திறந்திருக்கும்!

 

இரண்டு கம்பெனிகளும் சுமார் 1300 பேரை வேலைக்கு வைத்துள்ளன.

 

“இயற்கை அன்னை தனது பொக்கிஷங்களை கண்காணாத இடத்தில், தொலைவில் ஒளித்து வைக்கிறாள்” என்று ரியோ டிண்டோ கம்பெனியின் நிர்வாக இயக்குனர் ஜீன் மார்க் சொல்கிறார்.

 

டையாவிக் என்னுமிடத்தில் ஆண்டுக்கு  60 லட்சம் காரட் முதல் 70 லட்சம் காரட் வரை வைரங்கள் தோண்டி எடுக்கப்படுகின்றன. இவைகளில் நிறைய வைரங்கள், நகைக்கு எற்ற உயர் ஜாதி வைரங்களாம்.

ekati-diamond-mine

இரண்டு கம்பெனிகளும் புறச்சூழல் பாதுகாப்பு விதிகளை மீறாமலிருக்க கண்காணிப்புக் குழுக்கள் (Environmental Monitoring Agency) உள்ளன. அவ்வபோது நீர், மீன், கரடி இவைகளைப் பிடித்து விஞ்ஞான சோதனை நடத்தி ஏதேனும் மாறுதல் ஏற்படுகிறதா என்றும் கண்காணித்து வருகின்றனர்.

 

மேலும் பனிக்கட்டிப் பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் சில இடங்களைப் புனிதமாகக் கருதுவதால் அங்கும் ஆராய்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

சென்ற ஆண்டு டிபியர்ஸ் உற்பத்தி செய்த 36 மில்லியன் காரட் வைரத்தில் 2 மில்லியன் மட்டுமே கனடாவிலிருந்து வந்தன.

 

தென் ஆப்பிரிக்கா, பாட்ஸ்வானா ஆகிய நாடுகளின் வைர உற்பத்தி யைவிட கனடாவில் குறைவு என்றாலும், வைரத்தின் தரம் மிகவும் அதிகமென்று டிபியர்ஸ் அதிகாரி லைனட் கூல்ட் கூறினார். உலகின் மிகச் (Exquisite diamonds) சிறந்த, விலையுயர்ந்த வைரங்களில் பல, கனடிய ஆர்டிக் பிரதேசத்தில் கிடைத்தவைதான்” என்றும் கூல்ட் கூறினார்.

 

–சுபம்–

 

 

வால்டேர் வளர்த்த கழுகு (Post No 2558)

eagle1

Written by S Nagarajan

 

Date: 20  February 2016

 

Post No. 2558

 

Time uploaded in London :–  6-21 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

  19-2-16 பாக்யா இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

மேதை உள்ளம்

வால்டேர் வளர்த்த கழுகு

 

.நாகராஜன்

 voltaire

உலகின் பிரபலமான மேதைகளில் ஒருவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த  வால்டேர்.(பிறப்பு 21-11-1694 மறைவு 30-5-1778) அறிவும் செல்வமும் ஒருங்கே சேர்ந்திருந்த அபூர்வமான மேதைகளை வரலாற்றில் காண்பது மிகவும் அரிது. அப்படிப்பட்ட ஜீனியஸ்களில் ஒருவராக வால்டேர் திகழ்ந்தார். அவரது மேதைத் தன்மையைப் பற்றி மேடம் நெக்கர் (Madam Necher) கூறுகையில், ‘அவர் எதையும் ஒருமுறை படித்தாலே போதும் கடைசிச் சொட்டு வரை உறிஞ்சி விடுவார். அவர் ஒரு ஸ்பாஞ்ஜ் போல.’ என்று வியப்புடன் கூறினார்

ஏராளமான நூல்களைக் கரைத்துக் குடித்த அவர் ஹிந்து நாகரிகத்தையும் ஹிந்து அறிவு மேன்மையையும் கண்டு வியந்தார்.

“நமக்கு எல்லாமே கங்கைக் கரையிலிருந்து தான் வந்திருக்கிறது” என்று பிரமித்துப் போய்க் கூறினார் அவர்.

தன் வாழ்நாளில் 2000 புத்தகங்களையும் 20000 கடிதங்களையும் அவர் எழுதியுள்ளார்!

அப்படிப்பட்ட அபூர்வ மேதை மிகவும் ஆசையாக ஒரு கழுகுக் குஞ்சை வளர்க்க ஆரம்பித்தார். அதை ஃபெர்னி என்ற இடத்தில் இருந்த தன் மாளிகையில் அது எங்கும் பறந்து போய் விடக் கூடாது என்று நினைத்து ஒரு செயினுடன் இணைத்து வளர்க்க ஆரம்பித்தார்.

ஒரு நாள் இரண்டு சேவல்கள் அந்தக் கழுகைத் தாக்க அது படுகாயம் அடைந்தது.தனது செல்லக் கழுகு காயமடைந்ததைப் பார்த்த வால்டேர் துடிதுடித்துப் போனார்.

 

உடனடியாக ஒரு அவசரச் செய்தியை ஜெனிவாவிற்கு அனுப்பினார் – நல்ல ஒரு மிருக வைத்தியரை உடனே அனுப்பி வைக்கவும் என்று. வைத்தியர் வரும் வரைக்கும் பொறுமையாக இருக்க அவரால் முடியவில்லை.

பறவை இருந்த கூண்டிற்கும் தனது சாளரத்திற்குமாக அலைந்தார். அந்த சாளரத்திலிருந்து நீண்ட நெடுஞ்சாலை நன்கு தெரியும்.

கடைசியாக தனது தூதுவனுடன் ஒரு டாக்டரும் வருவதைப் பார்த்து ஆஹா என்று மகிழ்ச்சியுடன் கூவி அவரை வரவேற்க ஓடினார்.

மாளிகையில் ஒரு பெரிய வரவேற்பு அந்த வைத்தியருக்குத் தரப்பட்டது.

“எனது கழுகை மட்டும் குணமாக்கி விடுங்கள். உங்களுக்கு வேண்டியதைத் தருகிறேன் என்றார் வால்டேர்.”

இப்படி ஒரு வரவேற்பைத் தன் வாழ்நாளிலேயே பார்த்திராத அந்த மிருக வைத்தியர் திகைத்துப் போனார்.

பறவையை நன்கு சோதனை செய்தார். அதற்குள் மிக்க கவலையுடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்த வால்டேர், ‘என்ன, கழுக்குக்கு ஒன்றுமில்லையே” என்று கவலையுடன் கேட்டார்.

 

eagle2

வைத்தியரோ,” இப்போதைக்கு ஒன்றும் சொல்ல முடியாது. முதலில் கட்டைப் போடுகிறேன். கட்டை அவிழ்க்கும் போது தான் எதையும் உறுதியாகச் சொல்ல முடியும்” என்று சொன்னார்.

அவருக்கு ஏராளமான பணத்தைத் தந்த வால்டேர், “நாளை காலை கட்டை அவிழ்த்துப் பார்த்து எனக்குச் சொல்லுங்கள்” என்றார்.

மறுநாள் கழுகின் கட்டை அவிழ்த்துப் பார்த்த வைத்தியர். கழுகின் உயிருக்கு உறுதி சொல்ல முடியாது என்றார். ஆனால் வைத்தியத்தைத் தொடர்ந்தார்.

வால்டேருக்கு புதிய வேலையாக இது  வந்து சேர்ந்தது. தனது நம்பிக்கைக்கு உரிய பணிப்பெண்ணான மேடலைனை அழைத்து கழுகை உரிய முறையில் சரியாகப் பார்க்குமாறு உத்தரவிட்டார்.

காலையில் எழுந்தவுடன் வால்டேரின் முதல் கேள்வி:” மேடலைன். என் கழுகு எப்படி இருக்கிறது?” என்பது தான்!
“ரொம்ப மோசம், ஐயா, ரொம்ப மோசம்” என்பது மேடலைனின் வாடிக்கையான பதில்.

ஒரு நாள் காலை சிரித்துக் கொண்டே மேடலைன் வால்டேரிடம் வந்து, “ஐயா, உங்கள் கழுகுக்கு இனி வைத்தியம் தேவையே  இல்லை” என்று கூறவே வால்டேர் மிகுந்த மகிழ்ச்சியுடன் கூவி “ஆஹா! எப்படிப்பட்ட நல்ல செய்தி! என் கழுகு நன்கு குணமாகி விட்டதா?” என்றார்

 

.”இல்லை ஐயா!  அது வாழவே லாயக்கில்லாத படி மிகவும் மெலிந்து விட்டது. அதற்கு வைத்தியமே தேவை இல்லை. அது  செத்துப் போய்விட்டது.” என்றாள் பணிப்பெண்.

இதைக் கேட்டவுடன் மிகுந்த சோகமடைந்தார் வால்டேர்.

“என் செல்லக் கழுகு செத்து விட்டது என்று சிரித்துக் கொண்டா சொல்கிறாய். உடனே இங்கிருந்து வெளியே ஓடி விடு!” என்று ஒரு கூப்பாடு போட்டார்.

நடுங்கிப்போன மேடலைன் வெளியே ஓட இந்தச் சத்தத்தைக் கேட்ட அவரின் மருமகள் டெனிஸ் ஓடோடி வந்து, “என்ன நடந்தது, மாமா?’ என்று கேட்டாள்.

ரௌத்ராகாரமாக இருந்த வால்டேர்,’இதோ இந்த மேடலைன் என் கண் முன்னால் இனி என்றும் இருக்கவே கூடாது. விரட்டி விடு அவளை”” என்று உத்தரவு போட்டார்.

“மெலிந்து விட்டதாம் மெலிந்து. செத்து விட்டதாம்! நான் கூடத் தான் ஒல்லியாக இருக்கிறேன். அதனால் என்னையும் கொலை செய்து விடலாமா? விரட்டு அவளை உடனே வெளியில்” என்று அவர் கத்தவே அந்த பணிப்பெண்ணை உடனடியாக மாளிகையை விட்டு வெளியே அனுப்பினாள் டெனிஸ்.

 

eagle-flying-on-sky

இரண்டு மாதங்கள் ஓடின. மேடலைனைப் பற்றி வால்டேர் ஒன்றுமே கேட்கவில்லை. ஒரு நாள் மெதுவாக அவர் டெனிஸிடம், அந்த மேடலைன் என்ன ஆனாள்?” என்று கேட்டார்

“ஐயோ, பாவம் அந்த மேடலைன். ஜெனிவாவில் கூட அவளுக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. இங்கிருந்து அனுப்பப்பட்ட அவளை யார் தான் வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள்?” என்றாள் டெனிஸ்.

“எதற்காக அவள் என் கழுகு இறந்ததைப் பார்த்துச் சிரித்தாள்? ஒல்லியாக இருந்தால் சாக வேண்டுமா என்ன? இருந்தாலும் அவள் பட்டினியாக இருக்கக் கூடாது. அவளுக்கு ஒரு வேலை போட்டுக் கொடு. ஆனால் என் கண் முன்னால் மட்டும் வரக் கூடாது. வந்தால் அவள் வேலைக்கு நான்  உத்தரவாதம் இல்லை: என்றார் வால்டேர்.

மிக்க மகிழ்ச்சியுடன் மறைவாக வைத்திருந்த மேடலைனை வேலை பார்க்க உத்தரவிட்டாள் டெனிஸ்.

ஆனால் ஒரு நாள் தற்செயலாக மேஜையிலிருந்து எழுந்த வால்டேர் மேடலைன் எதிரே நிற்பதைப் பார்த்து விட்டார். நடுநடுங்கிப் போன மேடலைன் மன்னிப்பு கேட்டவாறு முணுமுணுத்தாள்.

“ஒரு வார்த்தையும் பேசாதே! ஒன்று மட்டும் தெரிந்து கொள். மெலிந்து இருக்கும் காரணத்தினால் யாரையும் சாகடிக்கக் கூடாது. புரிந்ததா! ஓடிப் போ” என்றார் வால்டேர்.

பதறி அடித்துக் கொண்டு ஓடினாள் மேடலைன்.

 

 

கருணை வாய்ந்த உள்ளம் வால்டேருக்கு எப்போதுமே இருந்தது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

மேதையின் அபாரமான உள்ளம் மிக்க இளகிய உள்ளம்.

கஷ்டப்பட்டு செல்லம்மாள் வாங்கி வைத்திருந்த அரிசியை மகாகவி பாரதியார் சிட்டுக் குருவிகளுக்கு வாரி வாரி இறைத்துப் போட்ட சம்பவத்தை இதனுடன் ஒப்பிடலாம்.

கருணை உள்ளம் மேதைகளின் இயல்பான சொத்து!

************

.