வீட்டில் தோட்டம் வளர்க்கலாமே! (Post No.2554)

vilvam22,fb

Written by S Nagarajan (Radio Talk)

 

Date: 19  February 2016

 

Post No. 2554

 

Time uploaded in London :–  8-33 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

      சுற்றுப்புறத்தைப் பாதுகாக்க உள்ள ஏராளமான வழிகளில் ஒரு பயனுள்ள வழி வீடுகளில் தோட்டம் வளர்ப்பதாகும்.பச்சைப் பசேலென பசுமைக் காட்சிகளைத் தருவதோடு உயிரைக் காப்பதிலும், ஆரோக்கியத்தைப் பேணுவதிலும் மூலிகைகள் தனி ஒரு இடத்தைப் பெறுகின்றன. இவற்றை அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியிருப்போர் கூட வளர்க்க முடியும். தனி வீட்டில் வாழ்வோர் தங்களின் வீட்டின் முற்றத்திலோ அல்லது வீட்டின் ஒரு குறிப்பிட்ட இடத்திலோ பயனுள்ள கறிகாய் வகைகளையும் மூலிகைகளையும் பயிரிட்டு வளர்க்கலாம்.

 

 

    மூலிகைகள் மருத்துவ குணங்கள் உள்ளவை. அழகைப் பராமரிப்பவை. சமையலுக்கும் உபயோகப்படுபவை. பழங்காலத்தில் நம் முன்னோர்கள் இவற்றை சமுதாய நலனுக்காக ஆங்காங்கே வளர்த்து வந்தனர் என்பதை எண்ணிப் பார்க்கும் போது அவர்கள் எவ்வளவு சமூகப் பொறுப்புள்ளவர்களாக இருந்தனர் என்பது தெரியவரும்.

 

 

    சந்தையிலே வாங்கும் கெமிக்கல் கலந்த உரத்தினால் உற்பத்தியாகும் கறிகாய்களைத் தவிர்த்து நம் வீட்டிலேயே இவற்றைப் பயிரிட்டு பயன்படுத்துவதால் ஆரோக்கியம் மேம்படும். செலவு குறையும். முக்கியமாக நமது வீட்டில் நம்மால் வளர்க்கப்பட்டவை என்ற ஆத்ம திருப்தி தோன்றி எல்லையற்ற மகிழ்ச்சி உண்டாகும்.

 

 iruvachi,fb

   அனைத்து செடிகளுக்குமே பொதுவாக சூரிய ஒளியும் ஈர மண்ணும் தேவை. சிறு சிறு ஓட்டைகள் உள்ள நல்ல பானைகளை வாங்கி உரிய மண்ணை நிரப்பி நல்ல விதைகளை விதைத்துப் பயன் பெறலாம். அழகிய மலர்ச் செடிகளை வளர்க்க விரும்புவோர்  நர்ஸரியில் அவற்றைப் பெற்று வளர்க்கலாம். பானைகளை சூரிய ஒளியில் அவ்வப்பொழுது படும் படி வைத்தல் இன்றியமையாதது.

 

 

    எதை வளர்க்க முடியும் என்ற பட்டியலுக்கு முடிவே இல்லை. சிறு சிறு கீரை வகைகள், கொத்தமல்லி, கருகப்பிலை, ரோஜா, மல்லிகை, சூரிய காந்தி என்று இடத்திற்கும் நம் மனத்திற்கும் தக்கபடி செடி வகைகளையும் மூலிகைகளையும் இனம் கண்டு வளர்க்கலாம்.

 

 

இது தனி மனிதனுக்கான ஆதாயம் மட்டுமல்ல; தனி மனிதன் நாட்டிற்கே செய்யும் சேவையும் கூட!

*********    

கடலுக்கும் ஆற்றுக்கும் இடையே உரையாடல்! (Post No 2551)

IMG_1927

Translated  by London swaminathan

 

Date: 18  February 2016

 

Post No. 2551

 

Time uploaded in London :–  6-07 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact swami_48@yahoo.com)

 

 

மழைக் காலம் வந்தது. ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடியது. எல்லா ஓடைகளும் தண்ணீரைக் கொண்டுவந்து கொட்டின. மறு கரையே தெரியாத அளவுக்குப் பரந்து ஓடியது. அக்கரையில் நின்ற பசுமாட்டுக்கும் வீட்டுக்கும் இடையே வித்தியாசம் சொல்ல முடியாத அளவுக்குச் சின்னதாகத் தெரிந்தது. ஆற்றுக்கு ஒரே குஷி! நேராக சமுத்திரதுக்குச் சென்றது. இது வரை தன்னைவிட சிற்றோடை களையே கண்ட, அந்த ஆற்றுக்கு சமுத்திரத்தைப் பார்த்த மாத்திரத்தில் ஒரே மலைப்பு, திகைப்பு. ஆர்ப்பரிக்கும் கடலைக் கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தது.

 

IMG_1928

ஆறு சொன்னது:

“அரை வேக்காடுகளுக்கு முழு உண்மை தெரியாது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். என் விஷயத்தில் அது உண்மையாகிவிட்டது. கடந்தகாலத்தில் கன்பூசியஸின் கல்வி அறிவையும், ‘போ’வின் வீரதீரத்தையும் குறைகூறுவதைக் கேட்டிருக்கிறேன். இப்போது விரிந்து பரந்த உன்னைக் கண்டவுடன் என்னால் நம்ப முடியவில்லை. உன்னை மட்டும் நான் இன்று கண்டிருக்காவிட்டால், என் சிற்றறிவைக் கண்டு, விஷயம் தெரிந்தோர் என்னைப் பார்த்துப் பரிகசித்திருப்பார்கள்.

 

இதற்கு சமுத்திரம் பதில் சொன்னது:

“கிணற்றுத் தவளையிடம் போய் சமுத்திரத்தைப் பற்றிப் பேசினால் புரியுமா? கோடைகால ஈக்களிடம் போய், பனிக்கட்டி பற்றி பேசினால் அதுகளுக்கு விளங்குமா? அதிகம் படித்தவனிடம் சட்டம் பற்றிப் பேசினால் அவனுக்கு என்ன தெரியும்? இப்போது நீ, என்னைப் பார்த்துவிட்டதால், உனக்கு பெரியது, சிறியது தெரியும். இனிமேல் நான் உன்னிடம் பெரிய கொள்கைகளை எடுத்துரைக்கலாம். உலகில் சமுத்திரத்தை விடப்பெரியது கிடையாது. உலகிலுள்ள எல்லா நதிகளும் இதில் விழுகின்றன. ஆனால் கடல் நிரம்பி வழிந்ததே இல்லை. இதிலிருந்து எவ்வளவோ தண்ணீர் வெளியேறினாலும் இதற்கு வெள்ளம், வறட்சி என்ற பிரச்சனையே இல்லை. எல்லா ஆறுகளையும் ஓடைகளையும் விடப் பெரியது. ஆயினும் நான் என்னைப் பற்றி பெருமை பேசுவதில்லை. எனது உருவத்தை இந்தப் பிரபஞ்சம் எனக்கு அளித்துள்ளது. ஆக்க சக்தி, அழிவு சக்தி என்னும் பிரபஞ்சம் முழுதும் பரவிய கொள்கையிலிருந்து எனக்கு சக்தி கிடைக்கிறது. நான், பெரிய பூமியில் ஒரு கூழாங்கல்லைப் போன்றவன்; பெரிய மலையில் ஒரு சின்னப் புதர் போன்றவன். மனிதனைக்கூட ஒரு முடியின் (மயிர்)நுனிதான் என்று ஒப்பிடுகிறார்கள்.

 

அளவுகளுக்கு, உருவங்களுக்கு எல்லையே கிடையாது. காலம் எல்லையற்றது. நிலைமைகள் மாறிக்கொண்டே இருக்கும். நாம் இடக்கூடிய பெயர்களும் முடிவானவை அல்ல. இப்படி இருக்கையில் ஒரு முடியின் நுனிதான் அளவில் சிறியது என்றோ பிரபஞ்சம்தான் மிகவும் வியாபகமானது என்றும் எப்படிச் சொல்ல முடியும்?”

IMG_1926

–சுபம்-

மேற்குத் தொடர்ச்சி மலை வளத்தைக் காப்போம் (Post No 2548)

forest2

Written by S Nagarajan

 

Date: 17  February 2016

 

Post No. 2548

 

Time uploaded in London :–  7-50 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

train watr falls

சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு

 

ஆல் இந்தியா ரேடியோ சென்னை ஏ அலைவரிசை  11-12-2015 முதல் 20-12-2015முடிய ஒலிபரப்பிய 10 உரைகளில் முதலாவது உரை

 

 

மேற்குத் தொடர்ச்சி மலை வளத்தைக் காப்போம்

 

ச.நாகராஜன்

 

மேற்குத் தொடர்ச்சி மலை இந்தியாவின் அற்புதமான வளங்களில் ஒன்று. இந்த அரிய வளத்தில் அமைந்துள்ள காடுகள் கடந்த பல ஆண்டுகளாக அழிக்கப்பட்டு வருவது துரதிர்ஷ்டமான விஷயம்.

 

தாபியிலிருந்து கன்யாகுமாரி வரை உள்ள இந்த மலைத் தொடரின் நீளம் சுமார் 1500 கிலோமீட்டர். 1.6 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பைக் கொண்ட இதில் 30 ச்தவிகிதப் பரப்பு காடுகளில் உள்ளது. இதன் சிறப்புக்கள் பல. கிழக்குத் தொடர்ச்சி மலை போல விட்டு விட்டு இல்லாமல் இது தொடர்ந்த ஒரு மலைத் தொடராக உள்ளது. இதன் உயரம் 1500இலிருந்து 2000 மீட்டர் வரை உள்ளது. இது வெப்ப மண்டல பிரதேசமாகும். தென்னிந்தியாவின் முக்கிய நதிகளான கிருஷ்ணா, கோதாவரி மற்றும் காவேரி உருவாவது மேற்குத் தொடர்ச்சி மலையில் தான்.

 

பயோடைவர்ஸிடி எனப்படும் உயிரியப் பன்மயத்திற்கான அரிய இடம் இது. உலகில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் பத்து சதவிகிதம் இந்த மலைத் தொடரி பிரதேசத்தில் இருப்பதும் நீலகிரி மலைத்தொடரில் சுமார் பத்தாயிரம் யானைகள் இருப்பதும் இதன் முக்கியத்துவத்தை விளக்குகிறது.

 

இப்படிப்பட்ட காரணங்களால் யுனெஸ்கோ உலகின் எட்டு அரிய இயற்கை வளங்களால் மேற்குத் தொடர்ச்சி மலை வளத்தையும் ஒன்றாக அறிவித்திருக்கிறது.

 

இப்படிப்பட்ட உலகின் அரிய இயற்கை வளம் நவீன யுகத்தின் தொழில் மயமாக்கல், காட்டுச் செல்வத்தைச் சுரண்டி சுயந்லத்திற்காகப் பயன்படுத்தல் உள்ளிட்ட ஏராளமான காரணங்களால் அழிக்கப்பட்டு வருகிறது. ஓரின பயிர் வளர்ப்பு சாகுபடிக்காக காடுகள் விளைநிலங்களாக மாற்றப்படுவதும், இரும்பு போன்ற தாதுப் பொருட்கள் சுரண்டப்படுவதும் இந்த இயற்கை வளம் அழிவதற்கான முக்கியமான காரணங்களாகும்.

 

இந்த அழிவைத் தடுக்க இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. அத்துடன் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இப்பகுதி வாழ் மக்களிடம் விழிப்புணர்வை ஊட்டி வருகின்றன.கடத்தல்காரர்களையும் வேட்டையில் ஈடுபடுவோரையும் தடுப்பது, வனவிலங்குகளை அழிக்காமல் அவற்றையும் வாழ விடும் நோக்கத்தை அப்பகுதி வாழ் மனிதர்களிடையே ஏற்படுத்துவது, காடுகளை அழித்து விளைநிலம் ஆக்காமல் இருப்பது, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி அதை மேம்படுத்தும் ப்ணிகளை மக்களே உணர்ந்து செயல்படுத்துவது ஆகியவை இந்த அரிய வளத்தைக் காக்கும்.

 

அரசின் ஆக்கபூர்வமான திட்டங்களுக்கு பெரும் நிறுவனங்களும் மக்களும் ஆதரவு தருவது இன்றைய நிலையில் அவசரமானதும் அவசியமானதுமான ஒரு நற்பணியாகும்.

 

***

ஆஸ்திரேலியாவில் கடலோர பொங்கு நீரூற்று (Post No 2512)

IMG_2594

Written by london swaminathan

Date: 6 February 2016

 

Post No. 2512

 

Time uploaded in London :– 4-57 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

IMG_2597

ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரிலிருந்து இரண்டு மணி நேர தொலைவில் – சுமார் 120 கிலோமீட்டர் தூரத்தில் – கடலோரமாகப் பொங்கும் நீரூற்று இருக்கிறது. இந்த ஊருக்கு கியாம என்று பெயர். இது ஒரு இயற்கை அதிசயம். கடலோரத்தில் குகைகள் இருந்து, அதன் ஒரு வாய் கடலிலும், மற்றொரு வாய் (திறப்பு) நிலத்திலும் இருக்கையில் இதுபோன்ற இயற்கை அதிசயம் உருவாகும் இதை BLOW HOLE என்பர்.

 

கடலின் அலை வீச்சு, காற்றோட்டம் முதலியவற்றைப் பொறுத்து சில நேரங்களில் 60 அடி உயரத்துக்கு வானில் நீர்த்திவலைகள் பீச்சி அடிக்கும். நாங்கள் சென்றபோது சுமார் 20 அடி உயரத்துக்கு மட்டுமே நீர் பொங்கியது. இது காணக் கண் கொள்ளாத காட்சி. அருகில் நின்றால், நம் மீது நீர்த்திவலைகள் பட்டு நம்மை நனைத்துவிடும். இதை இரவு நேரத்தில் வண்ண ஒலியில் காண மின் விளக்குகளும் போட்டிருக்கிறார்கள். அருகில் ஒரு அழகான கலங்கரை விளக்கு உள்ளது. ஆண்டுக்கு ஆறு லட்சம் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் இந்த இடத்தில் அழகான கடற்கரை, படகு சவாரி ஆகியனவும் உண்டு. தொலைதூர பாரைகளில் கடற்பறவைகள் அணிவகுத்து நிற்பதையும் கண்டு களிக்கலாம்.

IMG_2600

 

IMG_2595

 

IMG_9229

 

IMG_3099

 

IMG_2604

 

IMG_9224

(படங்கள்:- லண்டன் சுவாமிநாதன்)

 

 

பவளத்திட்டுகளைப் பாதுகாப்போம் (Post 2330)

coral stamps

Radio Talk written by S NAGARAJAN

Date: 15 November 2015

POST No. 2330

Time uploaded in London :– 17-47

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகள்

(நான்காம் பாகம்)

ச.நாகராஜன்

சென்னை வானொலி நிலையம் அலைவரிசை A யில் காலையில் ஒலிபரப்பப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்

Part 1 posted on 6th November 2015; Part 2 posted on 7th ;Part 3 on 8th nov.Part 4 on 9th nov.15;part 5 on 11th Nov.; Part 6- 12th; Part- 7- 13th.Nov.;part 8 on 14th nov.

 

 

உலகில் பயோடைவர்ஸிடி எனப்படும் பல்லுயிர்ப்பெருக்கத்திற்குப் பெரிதும் துணை செய்வது பவளப் பாறைகள் அல்லது பவளத் திட்டுகள் ஆகும். இவை வெகுவாக உலகெங்கும் அழிந்து வருகின்றன.சுமார் இருபத்தெட்டுலட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு பவளத் திட்டுகள் உலகெங்கும் உள்ளன.

இவை ஆயிரக்கணக்கான உயிரினங்கள் உயிர் வாழ உதவுகின்றன. இவற்றை ‘கடலில் உள்ள மழைக்காடுகள்’ (“rainforests of the seas”) என்றே அறிவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இவை தரும் நன்மைகள் எண்ணிலடங்கா.

கடல் அலைகளாலும் சூறாவளிகளாலும் கடற்கரைகள் அழியாமல் பாதுகாக்க பவளத் திட்டுகளே உதவுகின்றன. உணவாகவும் மருந்தாகவும் இவை அமைகின்றன.

சுற்றுலாவை மேம்படுத்திஆங்காங்கே வாழும் உள்ளூர் மக்களுக்கும் சமூகத்திற்கும் இவை பொருளாதார ரீதியாக  உதவுகின்றன.

சுற்றுப்புறச் சூழல் அமைப்பை எடுத்துக் கொண்டு பார்த்தோமானால் பெருங்கடல்களைப் பாதுகாக்கும் வண்ணம் கடல் அமைப்புகளோடு ஒரு அங்கமென இவைகள் திகழ்வதால் இவற்றின் மதிப்பு மிகவும் அதிகம். நிலத்தில் மழைக்காடுகள் என்று நாம் கூறுவது போல கடலுக்கடியில் அமைந்துள்ள மழைக்காடுகளாக இவை திகழ்கின்றன.

coral1

வெப்ப பிரதேசங்களில் உள்ள நீர்நிலைகளில் ஊட்டச் சத்துகள் குறைவாகவே இருக்கும். ஏனெனில் வெப்பமான நீர் இப்படிப்பட்ட சத்துக்களை எல்லைக்குட்பட்டதாக குறைவாகவே இருக்கச் செய்கிறது. ஆகவே தான் இவற்றை ‘கடலில் உள்ள பாலைவனங்கள்’ என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.இந்த நிலையில் பவளத் திட்டுகள் உணவுச் சங்கிலி ஒன்றை அமைத்து உணவை 25 சதவிகிதம் மீன்களுக்கு வழங்குகிறது.இந்த மீன்கள் தங்களது தங்குமிடமாக பவளத் திட்டுகளையே ஆக்கிக் கொள்கின்றன. கடலின் ஏராளமான உயிரினங்களுக்கு இளமைப் பருவத் தாலாட்டும் இடமாகவும் பவளத் திட்டுக்கள் அமைகின்றன. இந்த பவளத் திட்டுகளை அழிந்து பட்டால் இதை நம்பி உள்ள அனைத்து உயிரினங்களும் அழியும்; சுற்றுப்புறச் சூழலுக்கு மாபெரும் கேடு ஏற்படும்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இவை அழிக்கப்பட்டு வருவதாக இன் டர்நேஷனல் யூனியன் •பார் கன்ஸர்வேஷம் ஆ•ப் நேச்சர் (International Union for Conaservation of Nature- IUCN) எனப்படும் உலகின் இயற்கை பாதுகாப்பு பன்னாட்டு சங்கம் தனது ஆய்வின்  மூலமாகக் கண்டறிந்து எச்சரிக்கையை விடுத்துள்ளது.உலகின் இருபது சதவிகித பவளத் திட்டுக்கள் அழிக்கப்பட்டு விட்டதாகக் கூறும் இந்த நிறுவனம் இதைப் பாதுகாக்க அனைத்து நாட்டு மக்களும் ஒருங்கிணைய வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளது. கடல்புறம் சார்ந்த மக்களும் சுற்றுலாப் பயணமாக பவளத் திட்டுகளைப் பார்க்கச் செல்லும்  மக்களும் இவற்றின் முக்கியத்துவத்தை அறிந்து அவற்றிற்கு ஊறு விளைவிக்கக் கூடாது. இவற்றைப் பேணிப் பாதுகாக்க ஒவ்வொருவரும் உறுதி பூண வேண்டும்

To be continued………………………

தட்பவெப்ப நிலை மாற்றத்தால் ஏற்படும் அபாயம்!

Radio Talk written by S NAGARAJAN

Date: 14 November 2015

POST No. 2327

Time uploaded in London :– 10-11 AM

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகள்

(நான்காம் பாகம்)

ச.நாகராஜன்

சென்னை வானொலி நிலையம் அலைவரிசை A யில் காலையில் ஒலிபரப்பப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்

Part 1 posted on 6th November 2015; Part 2 posted on 7th ;Part 3 on 8th nov.

Part 4 on 9th nov.15;part 5 on 11th Nov.; Part 6- 12th; Part- 7- 13th.Nov.

 

8.தட்பவெப்ப நிலை மாற்றத்தால் ஏற்படும் அபாயம்!

உலகின் தட்பவெப்ப நிலை வெகு வேகமாக மாறி வருகிறது.புவி வெப்பமடைந்து வருகிறது.இந்த மாறுதலுக்குக் காரணம் மனிதனின் செயல்களே என்பது வருத்தமூட்டும் செய்தி!

புவி வெப்பம் அடைவதால் பல்வேறு உயிரினங்கள் அழிந்து வருகின்றன; அவற்றின் உறைவிடங்கள் மறைகின்றன; சுற்றுப்புறச் சூழல் அமைப்புகள் பாதிக்கப்படுகின்றன.பூமியை எதிர்நோக்கியுள்ள அபாயங்களில் மிகப் பெரிய அபாயம் புவி வெப்பமாதலே என்பதை விஞ்ஞானிகள் உள்ளிட்ட அனைவரும் ஒரு மனதாக ஒப்புக் கொண்டுள்ளனர். சமீபத்திய ஆய்வுகள் உலகின் பல்வேறு இடங்களிலும் உஷ்ணம் அதிகரித்து வருவதையும் தட்பவெப்ப நிலையில் சீரற்ற மாறுபாடுகள் அதிகரிப்பதையும் அறிவிக்கின்றன.

தொல்படிம எரிபொருள்களான நிலக்கரி, பெட்ரோல் உள்ளிட்டவை எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் போது அது காற்றை மாசுபடுத்துகிறது. சூரிய கிரணங்களை மேகங்கள் சூரியனிலிருந்து பிரதிபலிக்க வைத்து அவை விண்வெளியை அடையச் செய்கின்றன. இது ஒரு அசாதாரண விளைவை ஏற்படுத்துகிறது. இது க்ளோபல் டிம்மிங் (global dimming) என்ற சொற்றொடரால் குறிப்பிடப்படுகிறது. இந்த க்ளோபல் டிம்மிங்கின் விளைவாக குறைந்த வெப்பமும் ஆற்றலும் பூமியை அடைகிறது. முதலில் இது நலம் பயக்கும் ஒன்றாகத் தோன்றினாலும் இதுவே ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளிலும் எண்பதுகளிலும் எதியோப்பியாவில் ஏற்பட்ட பஞ்சத்திற்குக் காரணம் என கண்டறியப்பட்டது. ஏனெனில் வட துருவத்தில் உள்ள பெருங்கடல்கள் மழையை உருவாக்கும் வண்ணம் உரிய வெப்பத்தைக் கொண்டிருக்கவில்லை. ஆகவே இந்தப் பஞ்சங்களினால் லட்சக்கணக்கில் அங்கு மக்கள் மடிந்தனர்.

க்ளோபல் டிம்மிங்கிற்குக் காரணமாக அமையும் கார்பன் டை ஆக்ஸைடு போன்ற நச்சுப் புகை வளி மண்டலத்தில் கலப்பதைத் தடுப்பதே இதற்குச் சரியான தீர்வாக அமையும்.

க்ளோபல் டிம்மிங்கைத் தடுப்பதன்  மூலம் தட்பவெப்ப நிலை சீரடைந்து புவி வெப்பமயமாதல் தடுக்கப்படும். மக்களின் ஆரோக்கியம் மேம்படும். ஆகவே இன்றைய உடனடிக் கடமை புவி வெப்பமடைவதைத் தடுப்பதே ஆகும்.

தொடரும்…………………………….

உத்வேகமூட்டும் ஒரு காட்டின் கதை!

one man foresst

சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகள்

(நான்காம் பாகம்)

.நாகராஜன்

சென்னை வானொலி நிலையம் அலைவரிசை A யில் காலையில் ஒலிபரப்பப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்

Part 1 posted on 6th Nov.15;Part 2 posted on 7th ,Part 3 on 8th nov. Part 4 on 9th nov.15;part 5 on 11th Nov. and Part 6 on 12th Nov.2015

Radio Talk written by S NAGARAJAN

Date: 12 November 2015

POST No. 2322

 

Time uploaded in London :– 17-12

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

forest man

6.உத்வேகமூட்டும் ஒரு காட்டின் கதை!

 

மரங்களை மனம் போன போக்கில் வெட்டி வீழ்த்தி சுற்றுப்புறச் சூழலுக்குப் பெருங்கேட்டைப் பலரும் ஏற்படுத்தும் இந்தக் காலத்தில் அனைவருக்கும் உத்வேகமூட்டும் விதத்தில் தனிநபராக இருந்து ஒரு காட்டையே உருவாக்கியுள்ளார் ஒருவர் என்றால் அது ஆச்சரியமான விஷயம் தானே!

கௌஹாத்தியிலிருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜோர்ஹாட்டை அடுத்துள்ள பிரம்மபுத்ரா நதியின் படுகை அருகே உள்ள பெரும் மணற்பரப்பில் ஜாதவ் பேரிக் (Jadav ) என்பவர் ஒரு காட்டையே அமைத்துள்ளார்.550 ஹெக்டேர் நிலப்பரப்பில் இவர் அமைத்துள்ள காடு தனி மனிதன் அமைத்த காடுகளில் மிகப் பெரிய ஒன்றாகும்.

1979ஆம் ஆண்டு பிரம்மபுத்ரா நதியில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக ஏராளமான பாம்புகள் மணற்பரப்பில் ஒதுங்க அருகில் மரங்கள் ஏதும் இல்லாததால் அவை மடிந்தன,இதைப் பார்த்து மனம் நெகிழ்ந்த பதினாறே வயதான சிறுவன் ஜாதவ் அந்த உயிரினங்களைக் காக்க காடு ஒன்றை அமைப்பது என உறுதி பூண்டான்.

forest-man-jadav-rhino

இடைவிடாத உழைப்பினால் அங்கிருந்த, எதுவுமே விளையமுடியாத மணற்பரப்பை மாற்ற ஆரம்பித்தான். இதற்கென செவ்வெறும்புகளை தூரத்திலிருந்த கிராமங்களிலிருந்து கொண்டு வந்து அந்த மணற்பரப்பில் வாழ வைத்து செடிகளை வளர்க்கலானான். இன்றோ ஆயிரமாயிரம் மரங்களைக் கொண்டு அனைவரையும் அதிசயக்க வைக்கும் அடர்ந்த காடாக அது மலர்ந்துள்ளது. கடந்த 32 ஆண்டுகளில் அந்தக் காடு ஏராளமான பறவைகளுக்கு இருப்பிடமாக ஆகியுள்ளது. முதலில் சிறு பறவைகள் வர ஆரம்பிக்கவே பின்னால் பருந்துகள் போன்றவையும் அங்கே வர ஆரம்பித்து வாழ ஆரம்பித்தன.

அதுமட்டுமின்றி அருகி வரும் இனமான புலிகள் கூட சிறிய அளவில் அங்கே வசித்து வருகின்றன. யானைகளோ விரும்பி கூட்டம் கூட்டமாக அங்கே வசிப்பதற்கு வந்து விட்டன.இயற்கை எப்போதுமே தானாகவே ஒரு உணவுச் சங்கிலியை அமைக்கிறது என்கிறார் ஜாதவ்.

இந்த உணவுக்காகவும் உறைவிடத்திற்காகவும் ஏராளமான மிருகங்கள் அங்கே வந்து சேரவே அது இயற்கைக் காடு போல இப்போது திகழ்கிறது.  சீதோஷ்ண நிலையை அந்தப் பகுதியில் மேம்படுத்தியுள்ளது.

அற்புதமான காட்டை இவர் உருவாக்கியதால் அவரது செல்லப் பெயரான மொலாய் என்பதை அதற்குச் சூட்டி அதை “மொலாய்க் காடு” என்றே அனைவரும் அழைக்கின்றனர்.

இந்த முயற்சியினால் ஏற்பட்ட வெற்றியைக் கவனித்த சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்கள் இவரைப் பாராட்டியுள்ளனர். அரசும் பல்வேறு விதங்களில் உதவி புர முன் வந்துள்ளது.

Jadav-Payeng-from-India-spent-2505

தனி மனிதனாக இருந்து ஏழையான ஒருவர் இயற்கைச் செல்வத்தைக் காக்க ஒரு காட்டையே அமைத்திருக்கும் போது நாமும் நமது பங்கிற்கு இயற்கையைக் காக்க ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை மேற்கொள்வோம்; இயற்கை அன்னையைக் காப்போம்!

*****************

தற்குறிப்பேற்ற அணி!

kokku sunset

Compiled  by S NAGARAJAN

Post No.2274

Date: 26 October 2015

Time uploaded in London: 7-56 AM

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

தமிழ் என்னும் விந்தை

கவிஞன் தன் குறிப்பைச் சொல்லும் தற்குறிப்பேற்ற அணி!

 

.நாகராஜன்

 

கவிதா அலங்காரம்

கவிதைக்கு அழகு அலங்காரம். அணி. இந்திய இலக்கியங்களுக்கே உரித்தான தனி ஒரு சிறப்பு அணிகள்.

அணிகள் நூற்றுக் கணக்கில் உள்ளன. ஆனால் தமிழில் தண்டியலங்காரம் 37 அணிகளைப் பற்றி விவரிக்கிறது.

இவற்றை அறிந்து கவிதையைச் சுவைப்பதால் தனி ஒரு இன்பம் ஏற்படும்.

உதாரணத்திற்கு ஒரு அணியை எடுத்துக் கொள்வோம்.

சூரியன் உதயம், சூரியன் அஸ்தமனம், சந்திரோதயம் ஆகியவை அன்றாடம் ஏற்படும் இயற்கை நிகழ்வுகள். சூரிய சந்திரர் உள்ளவரை என்பது நாம் அன்றாடம் உபயோக்கிக்கும் வார்த்தைகள் – ஒரு கருத்திற்கு அழுத்தம் தர இதைப் பயன்படுத்துகிறோம்.

இராமன் சூரிய குலத் தோன்றல். பாண்டவர்கள் சந்திர குலத்தில் உதித்தவர்கள். இராமாயணத்தில் வால்மீகி, கம்பன் சூரியனை தங்கள் மனதில் ஏற்றி வணங்கி அவ்வப்பொழுது தங்களின் குறிப்பை சூரியன் வாயிலாகச் சொல்வர். சந்திரன் வாயிலாகச் சொல்வர்.

அதே போல வியாஸரும், வில்லிப்புத்தூராரும் தங்கள் கருத்தை சூரிய, சந்திரர் வாயிலாக அழகுறச் சொல்வர்.

moon

ஏனைய கவிஞர்களையும் எடுத்து அலசி ஆராய்ந்தால் சூரிய, சந்திரருக்கு மட்டுமே பல்லாயிரக்கணக்கான பக்கங்களை ஒதுக்க வேண்டியிருக்கும்.

இதே போலத் தான் வானிலிருந்து பொழியும் மழை. இது அவ்வப்பொழுது நிகழும் ஒரு இயற்கை நிகழ்வு. இதிலும் கவிஞன் தன் கண்ணோட்டத்தில் ஒரு சிறப்பைக் காணுகிறான். இப்படி ஒவ்வொன்றாகத் தொகுக்க ஆரம்பித்தால் பல உயர்ந்த கருத்துக்களின் பொக்கிஷம் நம்மிடம் இருக்கும்!

சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா, சூரிய சந்திரரோ!

அனுமனின் கண்களை வர்ணிக்க வந்த வால்மீகி மஹரிஷி இப்படிக் கூறுகிறார்:

பிங்கே பிங்காக்ஷமுக்யஸ்ய ப்ருஹதீ பரிமண்டலே I

சக்ஷுஷீ சம்ப்ராகாஸேதே சந்த்ர ஸூர்யா விவோதிதௌ II (வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டம் ஸ்லோகம் 59)

இதன் பொருள்: வானரச்ரேஷ்டரான அனுமாருடைய பிங்கள வர்ணமான பெரிய இரண்டு கண்கள் பரிமண்டலத்தில் உதயமான சந்திர சூரியர் போல் நன்கு விளங்கின!

இதைப் படித்தவுடன் நமக்கு உடனடியாக நினைவுக்கு வருவது பாரதியாரின் பாடல் தான்!

சுட்டும் விழிச்சுடர் தான் கண்ணம்மா! சூரிய சந்திரரோ!

விழிகளைச் சூரியனுக்கும் சந்திரனுக்கும் உவமையாகக் கூறுவதில் தான் என்ன ஒரு இன்பம்! ஆழ்ந்த கருத்து!!

வள்ளலைப் போல வழங்கும் வானம்

தற்குறிப்பேற்ற அணி என்று பெயர் பெற்ற சிறப்பான அணியில் கவிஞர்கள் தம் மனோதர்மத்திற்கு ஏற்றவாறு தரும் உண்மைகள், கற்பனைகள், கருத்துக்கள் ஏராளம்.

ஒன்றே ஒன்றை மட்டும் பார்ப்போமா?

கம்பனின் பால காண்டம். ஆற்றுப்படலம். நான்காவது பாடல்:

புள்ளி மால்வரை பொன்னென னோக்கிவான்                                          

வெள்ளி வீழிடை வீழ்த்தெனத் தாரைகள்                                        

உள்ளி யுள்ளவெ லாமுவந் தீயுமவ்                                            

வள்ளியோரின் வழங்கின மேகமே

 

இமயமலை பொன் நிறமாக ஒளிர்கிறது. அதைப் பார்த்த ஆகாயத்திற்கு ஒரே சந்தோஷம்! அதனால் மழைத் தாரையைக் கொட்டியது.

வானத்திலிருந்து மழை பெய்யும் சாதாரண சம்பவம் தான்! ஆனால் கவிஞனின் கண்களில் அது பட்டவுடன் பிரம்மாண்டமான சிறப்பைப் பெறுகிறதுமலையைப் பார்த்த வானம் சந்தோஷமடைந்து நீரைப் பெய்ததே, அது எது போல இருந்தது தெரியுமாதன்னிடமுள்ள பொருளை எல்லாம் மனமுவந்து கொடுக்கும் வள்ளலைப் போல இருந்தது!

 

 

வள்ளியோர்கொடுக்கும் குணம் உடைய வள்ளல்கள்; உள்ளி என்ற சொல்லுக்கான பொருளாக பயனைக் கருதிக் கொடுப்பதை எண்ணிஎன்ற பொருளில் எடுத்துக் கொள்ளக் கூடாது. உள்ளி என்பதற்கு செல்வம் நிலையாக இருப்பதல்ல என்பதை எண்ணிஎன்று கொள்ளல் வேண்டும். நில்லா உலகத்து நிலைமை தூக்கி என பொருநராற்றுப் படை இந்தக் கருத்தைச் சிறப்பித்துக் கூறுகிறது.

தன்மைத் தற்குறிப்பேற்ற அணிக்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டை மேலே பார்த்தோம்.

 

இது போன்ற லட்சக் கணக்கான பாடல்கள் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் உள்ளன.

அவ்வப்பொழுது இவற்றைக் கருத்தூன்றிப் படித்தால் உயர்ந்த கருத்துக்கள் உள்ளத்தில் ஏறும். உன்னத உயரத்திற்கு ஏறி விடுவோம்! இல்லையா!

****************

மரங்கள் பழுப்பது ஏன்? நதிகள் ஓடுவது ஏன்?

cherry bunch

செர்ரி பழம் படம்

Don’t Reblog it for at least a week; don’t use pictures.

 

Article written by London swaminathan

Date: 19th  September 2015

Post No: 2170

Time uploaded in London :– 7-05 am

(Thanks  for the pictures) 

உதவி – உபகாரம் பற்றிய பொன்மொழிகள்

(1).பரோபகாராய பலந்தி வ்ருக்ஷா:

பரோபகாராய வஹந்தி நத்யா:

பரோபகாராய துஹந்தி காவ:

பரோபகாரார்த்தம் இதம் சரீரம் – விக்ரம சரிதம்

பொருள்:–

மற்றவர்களுக்காகவே மரங்கள் பழுக்கின்றன

மற்றவர்களுக்காகவே நதிகள் ஓடுகின்றன

மற்றவர்களுக்காகவே பசுக்கள் பாலைப் பொழிகின்றன

மற்றவர்களுக்காகவே இந்த உடல் இருக்கிறது

(2).பரோபகாராய சதாம் விபூதய: – சமயோசித பத்ய மாலிகா

நல்லோருடைய செல்வம் பிறருக்காகவே உளது

(3).விபாதி காய: கருணாபராணாம் பரோபகாரைர்ன து சந்தனேன – பர்த்ருஹரி

ஒருவனுடைய உடல் ஒளிருவது சந்தனத்தால் அல்ல; பிறருக்கு உதவி செய்வதன் மூலமே.

(4).சர்வ பூத உபகாராச்ச கிம் அன்யத் சுக்ருதம் பரம் – கதாசரித் சாகரம்

எல்லா உயிர்களுக்கும் உதவி செய்வதைவிடப் புண்ணியமானது எது?

yellow plums

பிளம்ஸ் பழம் படம்

மனிதரில் முதன்மையானவன் யார்?

(5).ஸ்வார்த்தோ யஸ்ய பரார்த்த ஏவ ஸ ந்ருணாம் அக்ரணீ: – பர்த்ருஹரி

பிறர் நலனைத் தன்னலமாகக் கருதுபவனே மனிதரில் முதன்மையானவன்.

(6).அனபேக்ஷித: குணதோஷ: பரோபகார: சதாம் வ்யசனம் – மஹாபாரதம்

குற்றம், குறைகளைக் கருத்திற் கொள்ளாமல் நல்லோர் உதவி செய்வர்.

(7).அனுத்ததா: சத்புருஷா: சம்ருத்திபி: ஸ்வபாவ ஏவைஷ பரோபகாரிணாம் – சாகுந்தலம்/ பர்த்ருஹரி

வளமுள்ள, செழிப்பான காலங்களில் கூட நல்லோர் அடாவடித்தனம் செய்யமாட்டார்கள்; அவர்களுடையை  இயல்பே பிறருக்கு உதவுவதுதான்.

TWIN TREES

நிழழ் தரும் மரத்தின் படம்

வெய்யிலை வாங்கி நிழலைத் தருவது மரங்களின் குணம்!

(8).அனுபவதி ஹி மூர்த்னா பாதப: தீவ்ரமுஷ்ணம்

சமயதி ப்ரிதாபம் சாயயா சம்ஸ்ரிதானாம் – சாகுந்தலம்

மரங்கள் கடும் வெய்யிலைத் தலையில் தாங்கி, தன் கீழ் இருப்போருக்கு நிழலை மட்டும் தரும் (நல்லோரும் கடும் துயரங்களைச் சுமந்து பிறருக்கு உதவி செய்கிறார்கள்).

(9).அஷ்டதச புராணேஷு வ்யாஸஸ்ய வசனத்வயம்

பரோபகார: புண்யாய பாபாய பரபீடனம்- பஞ்சதந்திரம்

பதினெட்டு புராணங்களிலும் வியாசர் சொல்வது இரண்டே வாக்கியங்கள்தான். 1) மற்றவர்களுக்கு உதவி செய்வது புண்ணியம் 2) மற்றவர்களுக்கு கெடுதல் செய்வது பாபம்.

(10).தனானி ஜீவிதம் சைவ பராத்தே ப்ராக்ஞ உத்ஸ்ருஜேத் – ஹிதோபதேசம்

அறிவாளிகள் தன்னுடைய பொருளையும், உயிரையும் பிறருக்காகவே செலவிட வேண்டும்.

(11).நஹி க்ருதம் உபகாரம் சாதவோ விஸ்மரந்தி – சுபாஷித ரத்ன பாண்டாகாரம் (சு.ர.பா)

செய்த உதவியை நல்லோர் மறப்பதில்லை.

managai

மா மரத்தின் படம்

சந்தன மரத்தில் குளிர்ச்சி இருப்பது யாருக்காக?

(12).ந ஹி ஸ்வதேஹசைத்யாய ஜாயந்தே சந்தன த்ருமா: -(சு.ர.பா)

சந்தன மரம் “தன்னுடைய” குளிர்ச்சிக்காக வளருவதில்லை

(13).பரம் பரோபகாரத்தம் யோ ஜீவதி ச ஜீவதி — சுபாஷித ரத்ன பாண்டாகாரம் (சு.ர.பா)

பிறருக்காக வாழ்பவனே வாழ்பவன்.

They alone live who live for others; the rest are more dead than alive – Swami Vivekananda

sandalwood

சந்தன மரம் படம்

-சுபம்–

பாரதி பாடலில் மிருகங்கள்!

bharati boat

Written by London swaminathan

Date : 10 September  2015

Post No. 2144

Time uploaded in London: –  காலை 8-38

சின்னஞ் சிறு குருவி போலே – நீ

திரிந்து பறந்து வா பாப்பா!

வன்னப் பறவைகளைக் கண்டு – நீ

மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா

kuruvi

கொத்தித் திரியும் அந்தக் கோழி – அதைக்

கூட்டி விளையாடு பாப்பா

எத்தித் திருடும் அந்த காக்காய் – அதற்கு

இரக்கப்பட வேணும் பாப்பா!

பாலைப் பொழிந்து தரும், பாப்பா- அந்தப்

பசுமிக நல்லதடி பாப்பா

வாலைக் குழைத்துவரும் நாய்தான் – அது

மனிதர்க்குத் தோழனடி பாப்பா!

pasuvum kandrum, fb

வண்டி இழுக்கும் நல்ல குதிரை – நெல்லு

வயலில் உழுதுவரும் மாடு

அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு – இவை

ஆதரிக்க வேணுமடி பாப்பா!

என்று பாடி, சின்னக் குழந்தைகளிடம் எடுத்த எடுப்பிலேயே அன்பை, அஹிம்சையைப் போதிக்கிறான். இப்படிச் சின்ன வயதில் கற்றுக் கொடுத்துவிட்டால் உலகம் முழுதும் அஹிம்சை, கொல்லாமை பரவும் என்பது அவ்னது கணிப்பு.

இயற்கையைப் பாடாத கவிஞன் இல்லை. நேரடியாக இயற்கையை ரசித்துப் பாடுவது ஒரு வகை. அந்த இயற்கை மூலம் மனிதன் கற்க வேண்டியது என்ன என்பதை உணர்த்தும்வகையில் பாடுவது இன்னொரு முறை. இந்த இரண்டு வகைப் பாடல்களையும் பாரதி பாடல்களில் காணலாம்.

ஓடி விளையாடு பாப்பா என்ற பாப்பா பாட்டில் பிரணிகளிடத்தில் அன்பு செலுத்த வேண்டும் என்று போதிக்கும் பாரதி, காக்கைச் சிறகினிலே நந்த லாலா உந்தன் கரிய நிறம் தோன்றுதையா நந்தலாலா என்ற பாடலில் பெரிய தத்துவத்தின் உச்சிக்குப் போய்விடுகிறான்.

eagle-and-seagull

குயில் பாட்டு, குருவிப்பாட்டு, கிளிக்கண்ணி என்று அவன் பாடாதே பறவையே இல்லை. விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச் சிட்டுக்குருவியைப் போலே என்று பாடி ஆன்மீக விடுதலை, நாட்டு விடுதலை, அடிமைத்தனத்திலிருந்து விடுதலை என்ற எல்லா வகை விடுதலை உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறான்.

ஈயைக் கருட நிலைக்கு ஏற்றுவேன் என்ற குரு கோவிந்த சிம்ம்ன் பாடல் வரிகள் மூலம் எதையும் சாதிக்கும் குணத்தை, பாஸிட்டிவ் வைப்ரேஷனைப் பரப்புகிறான்.

திட்ட வேண்டிய இடங்களில் நரியின் சிறுமைக் குணத்தைப் பாடுகிறான். நாயை ஒப்பிடுகிறான்.

நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு என்று ஏசுகிறான். சகுந்தலை பெற்ற பிள்ளை ஓர் சிங்கத்தினை தட்டி விளையாடி என்ற வரிகள்மூலம் இந்தியாவுக்கு பாரதம் என்ற பெயரை ஈந்த பரதனைப் பாடுகிறான்.

காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் மலையும் கடலும் எங்கள் கூட்டம் என்று பாடி தாவர ஜங்கமப் பொருட்கள் அனைத்தும் நாமே—இறைவனின் வடிவமே – என்ற பகவத் கீதை விபூதி யோக கருத்துக்களை உரைக்கிறான்.

kakak close up

வேள்வித்தீ பாட்டில் காட்டில் மேயுங் காளை, வெங்கடேசு ரெட்டப்ப பூபதி பாட்டில் எல்லினைக் காணப் பாயும் இடபம் போல் முற்படாயோ? என்று இடபம் (ரிஷபம்=காளை), கிளிப்பாட்டில் துன்ப நினைவுகளும் சோர்வும் பயமும் எல்லாம் அன்பில் அழியுமடீ – கிளியே – அன்புக்கு அழிவில்லை காண் என்ற உயர்ந்த கருத்துரை – இப்பை பட்டியல் நீளும்

குயில் பாட்டு என்று சிறிய கவிதை நூலே எழுதி குயிலுக்கு அழியாத இடம் தருகிறான்.

நரிவகுத்த வலையினிலே சிங்கம் நழுவி

விழும், சிற்றெறும்பால் யானை சாகும்;

Snakes-

வரிவகுத்த உடற்புலியைப் புழுவும் கொல்லும் – என்று பாஞ்சாலி சபதம் பாடி விதியின் வலிமையைக் காட்டுகிறான்.

பக்தி எனும் பாட்டில் பொய்ப் பாம்பு மடியும் என்று பாம்பையும் பாடுகிறான்.ஜயபேரிகை பாட்டிலும் பயம் எனும் பேய்தனை அடித்தோம் – பொய்மைப் பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம் என்று முழக்கம் இடுகிறான்.

அன்பு என்று வந்துவிட்டால் சந்யாசியைப் போல தின்ன வரும் புலியிடத்திலும் அன்பைக் காட்டசொல்கிறான்:-

தின்னவரும் புலி தன்னையும் அன்பொடு

சிந்தயிற் போற்றிடுவாய் நன்னெஞ்சே என்பான்

கடலில் வாழும் முத்துச் சிப்பிகளும் , பவளமும் அவன் பாட்டில் இடம்பெறுகின்றன.

சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடும் செய்தி அறியாயோ – நன்னெஞ்சே – என்று பகைவனூகருள்வாய் பாட்டில் பாடுகிறான்

வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால்………………….

வெள்ளை நிறத்தொரு பூனை- எங்கள்

வீட்டில் வளருது கண்டீர்;

பிள்ளைகள் பெற்றதப் பூனை – அவை

பேருக்கொரு நிறமாகும்

என்று பல வண்ணப் பூனைகளைச் சொல்லி

வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில்

மானுடர் வேற்றுமை இல்லை

cats

என்ற அரிய- பெரிய நிற வேற்றுமை எதிர்ப்புக் கொள்கையை பிரசாரம் செய்கிறான். தென் ஆப்பிரிக்க மண்டேலாவுக்கும் முன்னதாக, ஐநா. சபைக்கும் முன்னதாக நிற வேற்றுமை எதிர்ப்புப் பிராசரத்தைப் பூணைகள் மூலம் விளக்கிவீட்டவன் பாரதி!

பாரதி பாடிய அளவுக்கு ஒரு கவிஞன் இத்தனை பறவைகள், மிருகங்களைப் பாடி ஒரு தத்துவத்தைக் கற்பித்து இருப்பானா என்பது சந்தேகமே. வால்மீகியும், காளிதாசனும் எத்தனையோ இயற்கை வருணனைகளில் எத்தனையோ பறவைகள், மிருகங்களைக் குறிப்பிடுகிறார்கள்; அவை எல்லாம் இயற்கை ரசனை. ஆனால் பாரதியோ ஒவ்வொன்றிலும் ஒரு குனத்தை, தத்துவத்தைக் காண்கிறான்!

முருகன் பாடல்களில் மான், மயில் ஆகியவற்றையும், விநாயகர் பால்களில் யானையையும் பாடத் தவறவில்லை.

mayil2yanai nama srirangam

பாரதி பாடிய எறும்பு முதல் யானை வரை, எலி முதல் – புலி வரை அத்தனை வைகலையும் ஆராய்ந்தால் அது பிஎச். டி. ஆய்வுரை போல ஆகிவிடும். பாரதியின் பரந்த மனப்பான்மையைத் தொட்டுக் காடுவதே இக்கட்டுரையின் நோக்கம். அது இனிதே நிறைவேறுக!

dog,monkey3

—சுபம்–