கீதையின் மூன்றாவது கட்டளை! (Post No.7108)

WRITTEN BY S NAGARAJAN
swami_48@yahoo.com

Date: 18 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 5-37 AM
Post No. 7108

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

கட்டுரை எண் : 7101 வெளியான தேதி : 16-10-2019 – கீதையின் இரண்டாவது கட்டளை-யைத் தொடர்ந்து வருவது இந்தக் கட்டுரை

கீதையின் மூன்றாவது கட்டளை!

ச.நாகராஜன்

ஜே.பி.வாஸ்வானி அவர்கள் கீதை ஏழு கட்டளைகளைத் தருவதாகக் கூறுகிறார்.

ஏழு கட்டளைகளுள் மூன்றாவது கட்டளை இது தான் :

 Thou Shalt Do Thy Duty and a Little More

நீ உனது கடமையை இன்னும் கொஞ்சம் அதிகமாகச் செய்

இதைப் பற்றி விளக்குகையில் அவர் தரும் சம்பவங்கள் சிலவற்றை இங்கே பார்ப்போம்:

இத்தாலியைச் சேர்ந்த மிகப் பெரும் பாடகியான மாப்ரிபான் (Mabribon) ஒரு நாள் மாலை தன்னைப் பார்க்க வருபவர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார்.

பல பேரைச் சந்தித்த பிறகு, தனது வேலைக்காரியிடம், “மிகவும் களைப்பாக இருக்கிறது. இனிமேல் யாரையும் அனுமதிக்க வேண்டாம்” என்றார்.

தனது விசிறிகளிடம் பேசி அவர்களைத் திருப்திப்படுத்துவதை அவர் தனது கடமைகளுள் ஒன்றாகக் கொண்டிருந்தார்.

“இன்னும் ஒரே ஒருவர் தான் இருக்கிறார்,அம்மா” என்றாள் வேலைக்காரி. “அதுவும் அவன் ஒரு சிறு பையன்” என்றாள் அவள்.

“சரி, உள்ளே அனுப்பு” என்றார் மாப்ரிபான்.

தயங்கித் தயங்கி அறைவாசலில் நின்று கொண்டிருந்த பையனைப் பார்த்த மாப்ரிபான். “வா, உள்ளே வா, உன் பெயர் என்ன?” என்றா.

“பியரி” என்றான் பையன்.

“சொல், உனக்கு என்ன வேண்டும்?” மாப்ரிபான் கேட்க பையன் பதில் சொன்னான் :” எனது அம்மா… மிகவும் நோய்வாய்ப்பட்டு இருக்கிறார். நான் எழுதிய ஒரு கவிதையைக் கொண்டு வந்திருக்கிறேன். அதை நீங்கள் பாடினால் .. அதற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமென்று நினைத்தால்.. மிகவும் உதவியாக இருக்கும். இந்த உதவியை நான் என்றுமே மறக்க மாட்டேன்”

“அட, உனது கவிதையைக் கொடு. அப்படியே உன் முகவரியையும் சேர்த்துக் கொடு.”

பையன் கவிதையுடன் முகவரியையும் சேர்த்துக் கொடுத்து விட்டுக் கிளம்பினான்.

மறுநாள் மாப்ரிமான் அந்தக் கவிதையை அரங்கத்தில் பாடினார்.

அனைவருக்கும் அந்தக் கவிதை பிடித்திருந்தது – அவருக்கும் தான்!

அனைவரும் ஆரவாரித்துக் கை தட்டினர்.

நிகழ்ச்சி முடிந்தவுடன் நேராக அவர் பியரியின் வீட்டிற்குச் சென்றார்.

அவனையும் அவனது தாயாரையும் பார்த்தார்.

“பியரி, உனது கவிதை பிரமாதம். அனைவரும் அதைப் பாராட்டினர். இதோ இந்தா” என்று அன்று நிகழ்ச்சியில் கிடைத்த முழுப்பணத்தையும் மாப்ரிபான் அளித்தார்.

“உனது தாயாருக்கு என்ன சிகிச்சை அளிக்க வேண்டுமோ அதை இப்போது செய்” என்று கூறிவிட்டு அவர் அங்கிருந்து சென்றார்.

நன்கொடை, உதவி என்ற வார்த்தைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு கடமைக்கும் சற்று மேலாகச் செய்வது தான் சேவை.

அதை செய்யத் தவறக் கூடாது

*

பிரபல ஓவியரான மைக்கேலேஞ்சலோவிற்கு 20 வருட காலம் நம்பிக்கைக்குரியவராயும் பணி செய்பவராகவும் இருந்தவர் ஆர்பினோ (Arbino) என்பவர்.

ஆர்பினோவிற்கு வயது அதிகமாகவே தள்ளாமை வந்து விட்டது. நீண்டகாலம் தான் இருக்கப் போவதில்லை என்பதை அவர் உணர்ந்தார்.

மைக்கேலேஞ்சலோ அவரை நன்கு ஓய்வு எடுத்து சக்தியை சேமிக்கும்படி கூறி அதனால் நீண்ட நாள் வாழ முடியும் என்று எடுத்துரைத்தார்.

ஆர்பினோ அதற்கு இணங்கவில்லை.”உங்களுக்கு நான் ஒரு சுமையாக ஆகி விடுவேனே” என்றார்.

ஆனால் மைக்கேலேஞ்சலோ அவரை ஆசுவாசப்படுத்தினார்.

“ஒரு சுமையும் இல்லை நான் இரவும் பகலும் உங்களைப்பார்த்துக் கொள்கிறேன்” என்றார் அவர்.

சொன்னபடியே தன் வார்த்தையை அவர் காப்பாற்றினார்.

ஆர்பினோ நோய்வாய்ப்பட்டார். அவரை நன்கு பார்த்துக் கொண்ட மைக்கேலேஞ்சலோ ஆர்பினோவின் இறுதி நாட்களில் அவர் படுக்கை அருகே அமர்ந்து ஒரு பெரிய அற்புதமான ஓவியத்தையும் வரைந்து முடித்தார்.

*

அமெரிக்க ஜனாதிபதி க்ளீவ்லேண்ட் (Cleaveland)  ஒரு பயணத்திற்காக ரயிலில் ஏறினார். அவருடன் அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய ரிச்சர்ட் கில்டரும் (Richard Gilder) அதே ரயிலில் பயணம் செய்தார்.

ஜனாதிபதி அந்த ரயிலில் பயணம் செய்வதைக் கேட்ட ரிச்சர்ட் அவரைத் தேடி ஒவ்வொரு கம்பார்ட்மெண்டாகப் பார்க்க ஆரம்பித்தார். அவருக்கு ஜனாதிபதியிடம் சொல்ல வேண்டிய  முக்கியமான விஷயம் ஒன்று இருந்தது.

 ஆனால் எவ்வளவு தேடியும் அவரால் ஜனாதிபதியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

குழப்பமடைந்த ரிச்சர்ட் கடைசி கோச்சுக்குச் சென்று ரயில் கண்டக்டரிடம் ஜனாதிபதி எங்கே என்று கேட்டார்.

என்ன ஆச்சரியம். அங்கே ஒரு மர பெஞ்சில் ஜனாதிபதி அமர்ந்திருந்தார்.

ஒரு பெண்மணி தனது குழந்தையுடன் ரயிலில் ஏற தனது சீட்டை அந்தப் பெண்மணிக்குக் கொடுத்து விட்டு மர பெஞ்சில் அமர்ந்து பயணிக்கலானார் க்ளீவ்லேண்ட்!

*

இது போன்ற இன்னும் ஏராளமான சம்பவங்களை அடுக்கடுக்காகச் சொல்லி சாது வாஸ்வானி கடமையைச் செய்யும் போது அதில் பிறருக்கு உதவும் சேவை மனப்பான்மையுடன் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

****

ஏழு யக்ஞங்கள், 7 சந்தங்கள், 7 ஸ்வரங்கள் (Post No.7106)

WRITTEN BY london Swaminathan
swami_48@yahoo.com

Date: 17 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 15-54
Post No. 7106

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

கீதையின் இரண்டாவது கட்டளை! (Post No.7101)

WRITTEN BY S NAGARAJAN
swami_48@yahoo.com

Date: 16 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 6-45 AM
Post No. 7101

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

கட்டுரை எண் 7085 வெளியான தேதி 11-10-2019 – ‘கீதை தரும் ஏழு கட்டளைகள்! ஜே.பி. வாஸ்வானி விளக்கம்”

கட்டுரை எண் : 7088 வெளியான தேதி : 12-10-2019 – கீதை : மனிதகுலத்திற்கான அற நூல் : பைபிள் ஆஃப் ஹ்யூமானிடி!-யைத் தொடர்ந்து வருவது இந்தக் கட்டுரை

கீதையின் இரண்டாவது  கட்டளை!

ச.நாகராஜன்

ஜே.பி.வாஸ்வானி அவர்கள் கீதை தருவதாகக் கூறும் ஏழு கட்டளைகளுள் இரண்டாவது கட்டளையைப் பார்ப்போம் :

இரண்டாவது கட்டளை : Thou Shalt Not fail to do Thy Duty

                          நீ உனது கடமையைச் செய்யத் தவறாதே

இதைப் பற்றி விளக்குகையில் அவர் தரும் சம்பவங்கள் பல.

அவற்றில் முக்கியமான சிலவற்றை இங்கே பார்ப்போம்:

மஹாத்மா காந்திஜி கடமையைத் தன் உயிரினும் மேலாக நேசித்தார். பலனை எதிர்பாராமல் நிஷ்காம்யகர்மமாக தேசத் தொண்டை அவர் செய்த போது ஒரு கணத்தைக் கூட வீணாக்கக் கூடாது என்பது அவரது எண்ணம்; அவரது சங்கல்பம்.

இதே போல தன்னுடன் இருந்தவர்களும் தங்கள் நேரத்தை வீணாக்காது முழு நேரத்தையும் தேசப் பணிக்கென அர்ப்பணிக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார்.

அவருடைய காரியதரிசியான மஹாதேவ தேசாய் அவருடனேயே இருப்பவர். அண்ணலைக் கண் போலப் பாதுகாத்து வந்தவர்.

ஒரு சமயம் மஹாதேவ தேசாய் பிரெஞ்சு மொழி படிக்கிறார் என்பது காந்திஜிக்குத் தெரிய வந்தது.

ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் இதற்காக அவர் செலவிடுகிறார் என்பதும் அவருக்குச் சொல்லப்பட்டது.

அவர் மஹாதேவ தேசாயை அழைத்தார்.

காந்திஜி :- “மஹாதேவ், நீங்கள் பிரெஞ்சு மொழி கற்று வருவது உண்மைதானா? –

மஹாதேவ் :- ஆமாம், பாபுஜி

காந்திஜி :- ‘எப்பொழுது படிக்கிறீர்கள்? எவ்வளவு நேரம் படிக்கிறீர்கள்?

மஹாதேவ் :- ஒரு மணி நேரம் பாபுஜி

காந்திஜி: – இன்னும் எத்தனை நாள் படிக்க வேண்டும்

மஹாதேவ் – இன்னும் ஒரு ஆறு மாதம் ..

காந்திஜி : – ஓஹோ! அதாவது 180 நாட்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம், சரி தானே!

மஹாதேவ் :- என்னால் அது முடியும். சீக்கிரமாகவே கற்றுக் கொள்வேன்.

காந்திஜி :- அதாவது அத்தனை மணி நேரம் தேசப் பணிக்கான நேரத்திலிருந்து எடுத்துக் கொள்கிறீர்கள் என்று ஆகிறது. ஒவ்வொரு கணமும் தேசத்திற்காகத் தான் என்று நாம் உறுதி மொழி எடுத்துக் கொண்டோமில்லையா? மற்ற எல்லாம் அது எவ்வளவு நல்லதாக இருந்தாலும் சரி, அவை நமக்கு ஆடம்பரம் போலத் தான். இப்போது நமது நேரத்தை ஆடம்பரத்தில் வீணாக்க முடியாது.

    மஹாதேவ தேசாய் காந்திஜியின் வார்த்தைகளுக்கு மிக்க மதிப்பு தருபவர். பிரெஞ்சு மொழி கற்பதை அவர் நிறுத்தி விட்டார்.

*

பாரத பிரதம மந்திரியாக ஜவஹர்லால் நேரு இருந்த போது நடந்த சம்பவம் இது :

ஒரு முறை அவர் தனது காரில் ஒரு அவசரக் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்று கொண்டிருந்தார். ரெயில்வே க்ராஸிங் ஒன்று வந்தது. அது மூடப்பட்டிருந்தது.

காரின் டிரைவர், கேட் கீப்பர் அருகே சென்று, “கேட்டைத் திற. உள்ளே உட்கார்ந்திருப்பது யார் தெரியுமா? பாரதப் பிரதமர். அவராலெல்லாம் காத்திருக்க முடியாது. கதவைத் திற”

கேட் கீப்பர் மரியாதையாக பதிலளித்தார் இப்படி : “ எனது கடமை சிக்னல் வந்தவுடன் கேட்டை மூட வேண்டியது தான். திறக்கும்படி சிக்னல் வந்தவுடன் தான் என்னால் திறக்க முடியும்.”

டிரைவருக்குக் கோபம் வந்து விட்டது. “உன்னை எச்சரிக்கிறேன். உன்னை டிஸ்மிஸ் செய்யச் சொல்லப் போகிறேன், பார். உனது வேலை போகப் பொகிறது.கதவைத் திற.”

ஆனால் கதவு திறக்கப்படவில்லை.

பண்டிட் நேரு இதைக் கேட்ட போது கேட் கீப்பரின் கடமை உணர்ச்சியை எண்ணி சந்தோஷப்பட்டார். அந்த கேட்கீப்பரைப் பாராட்டுவித்து அடுத்த பிரமோஷனுக்கு அவர் ஏற்பாடு செய்தார்.

*

மிகப் பெரிய இசைக் கலைஞரான ப்ராஹ்ம்ஸ் (Brahms) ஒரு இசை நிகழ்ச்சிக்காக ஹங்கேரிக்கு அழைக்கப்பட்டார். அவரது நண்பரன ஜொயாசிம்மும் (Joachim) அவருடன் கூட வரவே அவரது மகிழ்ச்சி இரட்டிப்பானது.

புடாபெஸ்ட் நகருக்கு மிகுந்த ஆவலுடன் அவர்கள் சென்று சேர்ந்தனர். ஆனால் என்ன ஏமாற்றம்! ஒரே ஒருவர் தான் மண்டபத்தில் அமர்ந்திருந்தார்.

ஜோயாசிம் வெறுப்புடன் கூறினார்: “சீ, என்ன இது! இந்த இசை நிகழ்ச்சியை கேன்ஸல் செய்து விடுவோம். அட்வான்ஸ் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுவோம்.” என்றார்.

ப்ராஹ்ம்ஸ் ஒப்புக் கொள்ளவில்லை. “இவர் நமது இசை நிகழ்ச்சியைக் கேட்பதற்காக வந்துள்ளார்.அவரை ஏமாற்றமடையச் செய்து எப்படித் திருப்பி அனுப்புவது. நமது கடமை இசை நிகழ்ச்சியை நடத்துவது தான்!’

அப்படியே முழுநேர இசை நிகழ்ச்சி அந்த ஒருவருக்காகவே நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியை வெகுவாக ரசித்த அந்த ரசிகர், “அந்த நிகழ்ச்சியைத் தன் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது என்று நெகிழ்ச்சியுடன் கூறிச் சென்றார்.

அடுத்து, இந்திய சாஸ்திரீய சங்கீத விற்பன்னரான விஷ்ணு திகம்பர் பண்டிட் அவர்களுக்கும் இதே போல ஒரு சம்பவம் நடந்தது.

ஒரு முறை சிறிய நகர் ஒன்றில் அவரது இசை நிகழ்ச்சி ஏற்பாடானது. அங்கு ஒரே ஒருவர் தான் வந்திருந்தார்.

விஷ்ணு தனது முழு இசைக் குழுவுடன் நிகழ்ச்சி முழுவதையும் நன்கு நடத்தி முடித்தார். 3 மணி நேர நிகழ்ச்சிக்கு அந்த ரஸிகர் கொடுத்தது 4 அணாக்கள் தான். (இந்தக் கால 25 பைசாக்கள்)

*

ஒரு  முறை பிரிட்டனைச் சேர்ந்த பிரபல நடிகர்கள்  மூவர் ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர். ஒரு சின்ன போக்குவரத்து விதியை அவர்கள்  மீறி விட்டனர்.

கார் நிறுத்தப்பட்டது. போலீஸ் ஆபீசர் காரின் அருகில் வந்தார்.

காரின் முன் சீட்டில் அமர்ந்திருந்த ரால்ஃப் ரிச்சர்ட்ஸன்(Ralph Richardson), “ஆபீஸர், நான் என்று உங்களுக்குத் தெரிகிறதா?” என்றார்.

“எஸ், சார்! நீங்கள் தான் டி.வி. நிகழ்ச்சிகளில் தோன்றும் ரால்ஃப் ரிச்சர்ட்ஸன். உங்களை அடிக்கடி டி.வியில் பார்ப்பேன்” என்றார் போலீஸ்காரர்.

“இதோ இருக்கிறாரே, இவர் தான் சர் செட்ரிக் ஹார்ட்விக் (Sir Cedric Harwicke ). பின்னால் இருக்கிறாரே அவர் தான் லாரன்ஸ் ஆலிவர் (Laurence Oliver). நிச்சயமாக நீங்கள் அபராத சீட்டைத் தரமாட்டீர்கள் என்று நான் நினைக்கிறேன்” என்றார் ரால்ஃப்.

“சார், நான் எனது கடமையைச் செய்ய வேண்டும். நீங்கள் மன்னர் ஆர்தரின் ரவுண்ட் டேபிளில் அமரும் பிரபுக்கள் என்றாலும் கூட நான் உங்களுக்கு டிக்கட்டைத் (அபராத சீட்டை) தந்தே ஆக வேண்டும் என்றார் அந்த போலீஸ் ஆபீசர்.

இப்படி கடமை உணர்ச்சி கொண்டவர்கள் உலகில் ஆங்காங்கே ஏராளம் பேர் உள்ளனர்.

சாது வாஸ்வானி இப்படி இன்னும் அநேக சம்பவங்களைக் கூறி கடமையைச் செய்வதிலிருந்து ஒரு நாளும் விலகக் கூடாது என்று விளக்கி விட்டு அடுத்த மூன்றாவது கட்டளைக்குச் சென்றார்.

அதை அடுத்துப் பார்ப்போம்.

***

வியட்நாமில் இந்துப் பண்டிகை மஹாளய அமாவாசை! (Post No.7090)

Research Article written by London swaminathan
swami_48@yahoo.com

Date: 13 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 10-36 am
Post No. 7090

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

கீதை: மனித குலத்திற்கான அற நூல்: பைபிள் ஆஃப் ஹ்யூமானிடி! (Post No.7088)

Written  by S Nagarajan
swami_48@yahoo.com

Date: 12 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 13-31
Post No. 7088

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

கீதை தரும் ஏழு கட்டளைகள்! (Post No. 7085)

WRITTEN  by S Nagarajan
swami_48@yahoo.com

Date: 11 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 11-14 am
Post No. 7085

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

–subham–

மனதின் 7 நிலைகள்; முனிவர்களின் 7 குணங்கள் (Post No.7084)

WRITTEN  by London swaminathan
swami_48@yahoo.com

Date: 11 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 8-57 am
Post No. 7084

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

PICTURE BY LALGUDI VEDA

GAJA BRUSHTA SANCTUM SANCTORUM (LOOKS LIKE BACKSIDE OF AN ELEPHANT), PICTURE BY LALGUDI VEDA.

–SUBHAM —

51 INTERESTING HINDU COUPLES; FOUR TYPES OF WOMEN IN NATYA SHASTRA (Post No.7077)

Written by London swaminathan

swami_48@yahoo.com

Date: 9 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 20-52
Post No. 7077

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

My Old Posts–

five types of women | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › five-types-of-women

9 Apr 2016 – Things forbidden for Women. Vapanam – tonsuring of head. Gaamanuvrajanam – following a cow. Raatrau gosthe vaasah – staying in a …

You visited this page on 08/10/19.

four types of women | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › four-types-of-women

21 May 2019 – Written by London swaminathan swami_48@yahoo.com. Date: 21 May 2019. British Summer Time uploaded in London – 8-07 am. Post No.

அஷ்ட சரஸ்வதி, அஷ்ட சக்தி (Post No.7075)

Sarasvati in Kurdoli

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 9 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 7-15 am
Post No. 7075

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

Indra on Airavata
Agni on goat, picture by Lalgudi Veda
Mount Kailash, Abode of Lord Shiva
pictures by Radhika Balakrishnan

கலைமகளே, கடவுளர் தெய்வமே, கண் கண்ட தெய்வமே சரணம்! (Post No.7068)

WRITTEN by S Nagarajan

swami_48@yahoo.com

Date: 7 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 9-18 am
Post No. 7068

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

7-10-2019 சரஸ்வதி பூஜை. இதையொட்டி 6-10-2019 மாலைமலர் நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

கலைமகளே, கடவுளர் தெய்வமே, கண் கண்ட தெய்வமே சரணம்!

ச.நாகராஜன்

கவிஞர் தெய்வம், கடவுளர் தெய்வம் யார்?

தெய்வம் யாவும் உணர்ந்திடும் தெய்வம்,

      தீமை காட்டி விலக்கிடும் தெய்வம்,

உய்வம் என்ற கருத்துடையோர்கள்

     உயிரினுக்கு உயிர் ஆகிய தெய்வம்

செய்வம் என்று ஒரு செய்கை எடுப்போர்

      செம்மை நாடிப் பணிந்திடும் தெய்வம்

கைவருந்தி உழைப்பவர் தெய்வம்

     கவிஞர் தெய்வம் கடவுளர் தெய்வம் – சரஸ்வதியே தான்.

‘சரஸ்வதி தேவியின் புகழ்’ என்ற கவிதையில் இப்படிக் கூறும் மஹாகவி பாரதியார் கலைமகளைக் கொண்டாடிப் பாடிய பாடல்கள் நிறைய உள்ளன.

‘ஆணி முத்தைப் போலே அறிவு முத்து மாலையினாளைத்’ தொழுதால் என்னென்ன பெறலாம் என்று அவரே பட்டியலிட்டுத் தருகிறார்.

தான் என்னும் பேய் கெடும்.

பல சஞ்சலக் குரங்குகள் தளைப்படும்.

வான் என்னும் ஒளி பெறலாம்.

நல்ல வாய்மையிலே மதி நிலைத்திடும்.

ஊனங்கள் போக்கிடலாம்.

நல்ல ஊக்கமும் பெருமையும் பெறலாம்.

இதை விட வேறு என்ன வேண்டும், ஒரு மனித வாழ்க்கையில்?

அவ்ள் எங்கிருப்பாள் என்பதையும் அவரே அருமையாக விளக்கி விடுகிறார்:

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்

வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்.

கொள்ளை இன்பம் குலவு கவிதை கூறு பாவலர் உள்ளத்து இருப்பாள்,

வேதத்தின் உள் நின்று ஒளிர்வாள்.

முனிவர்கள் கூறும் கருணை வாசகத்தின் உள் பொருளில் இருப்பாள்.

சாஸ்த்ர புராண நாடக மஹா காவ்யாதி சஞ்சாரிணீம் என  இலக்கியங்களில் சஞ்சரிக்கும் அவளைப் புகழ்கிறது சரஸ்வதி ஸ்தோத்திரம்.

கவிஞர் தெய்வம் என்று பாரதியார் கூறியதை அப்படியே பலர் வாழ்க்கையிலும் கண் கூடாகக் காணலாம்.

காலம் – பதினேழாம் நூற்றாண்டு.

ஸ்ரீ வைகுண்டத்திலே பிறந்த குமரகுருபரருக்கு ஐந்து வயது வரை பேச்சு வரவில்லை. திருச்செந்தூர் முருகனைத் தொழ அவர் நாவிலிருந்து கவி மழை அருவியெனப் பொழியத் தொடங்கியது. கந்தர் கலி வெண்பாவைப் பாடினார்.

பின்னர் தல யாத்திரை மேற்கொண்டு வட தேசம் சென்று காசியை அடைந்தார். அங்கு ஒரு மடத்தை நிறுவி இறைப்பணி செய்ய நினைத்தார். அதற்கென காசியை ஆண்ட பாதுஷாவைச் சந்திக்க விரும்பினார்.

பாதுஷாவிற்கோ ஹிந்துஸ்தானி மொழி மட்டுமே தான் தெரியும்.

குமரகுருபரர் கலைமகளை வேண்டி மனமுருகிப் பாடினார். பத்துப் பாடல்களைக் கொண்ட சகலகலாவல்லி மாலை மலர்ந்தது.

சகலகலாவல்லி ஆயிற்றே, அவள் அருளால், ஒரு கணத்தில் ஹிந்துஸ்தானி பாஷையில் வல்லவரானார் குமரகுருபரர்.

பாதுஷாவின் அவையில் நுழைந்தார். அரியாசனத்தில் அமரிந்திருந்த பாதுஷா அவரை நிற்க வைத்துப் பேசுவதைக் கண்ட குமரகுருபரர் அரியாசனத்திற்கு நிகரான சரியாசனமாக ஒரு சிங்கத்தை வரவழைத்து அதன் மேலேறி அமர்ந்தார்.

பாதுஷா திகைத்தார்; பிரமித்தார். அவரது பல சந்தேகங்களைத் தீர்த்த குமரகுருபரர் அவருக்கும் அருள் பாலித்தார்.

பாதுஷா அவரது இறைப்பணிக்கு உதவிகள் செய்ய முன் வந்தார். காசித் திருத்தலத்தில் காசி மடம் உதித்தது.

 தென்னாடு வந்த அவர் திருப்பனந்தாளில் மடத்தை நிறுவினார்; அது இப்போதும் செய்யும் இறைத்தொண்டை அனைவரும் அறிவர்.

திருமலை நாயக்கரின் அரசவையிலே குமரகுருபரர் ஆற்றிய அற்புதங்கள் பல.

‘பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்

எண்ணும் பொழுது எளிதெய்த நல்காய் எழுதா மறையும்

விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்

கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகல கலாவல்லியே’

என்று அவர் சகல கலாவல்லியைத் தொழுத பாடல் உள்ளிட்ட சகல கலாவல்லி மாலையின் பத்துப் பாடல்களையும் தினமும் ஓதினால் அன்னை கலைமகள் அருளைப் பெறலாம் என்பது திண்ணம்.

சரஸ்வதி தேவியைத் துதித்தால் அவள் அருளால் ‘தூக்கும் பனுவல் துறை தோய்ந்த கல்வியும் சொற்சுவை தோய் வாக்கும் பெருகும்’ என்பது அவரது சத்திய வாக்கு..

கம்பரோ ‘ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என் அம்மை’யைத் துதித்தால் ‘கல்லும் சொல்லாதோ கவி’ என்று கேட்கிறார்.

30 பாடல்கள் கொண்ட சரஸ்வதி அந்தாதியைப் பாடிய கம்பர் கலைமகளைத் துதித்தால் எதையும் ‘துணிந்து சாதிக்கலாம்’ என்ற பெரிய ரகசியத்தைப் பாடலிலேயே கூறுகிறார்.

அவர் பத்தாயிரம் பாடல்களால் இராமாயணம் பாடித் துணிந்து சாதித்தது சரஸ்வதி அருளாலேயே என்பது இதனால் பெறப்படுகிறது.

தமிழகத்தில் சரஸ்வதிக்கு உள்ள ஒரே கோவில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் கூத்தனூரில் உள்ளது.

ஒட்டக்கூத்தர் என்னும் பெரும் தமிழ்ப் புலவர் இங்கு வழிபட்டு அன்னையின் அருளைப் பெற்று பெரும் கவிஞராகி ‘கவி ராட்சதன்’ என்ற பட்டப் பெயரையும் பெற்றார். அவரே பூந்தோட்டம் என்னும் ஊரில் சரஸ்வதிக்குக் கோவில் அமைத்தார்; அதனால் இந்த ஊர் கூத்தனூர் என அழைக்கப்படுகிறது.

இந்த ஆலயத்தில் வெண்ணிற ஆடையுடன் வெண்தாமரையில் பத்மாசனத்தில் சரஸ்வதி தேவி வீற்றிருக்க அவர் வலது கீழ் கையில் சின் முத்திரை உள்ளது. இடது கையில் புத்தகமுள்ளது. வலது மேல்கையில் அட்சர மாலையும் இடது மேல் கையில் அமிர்தகலசமும் உள்ளது.

பழம் பெரும் புனித நூலான ரிக் வேதத்தில் சரஸ்வதியைப் பற்றிய் பல குறிப்புகளைக் காணலாம்.

யாக்ஞவல்க்யர் என்ற பெரும் முனிவர் சரஸ்வதியைத் துதிக்க அவர் முன் தோன்றி ஓம் என்பதைச் சொல்லி அனைத்து அட்சரங்களையும் சரஸ்வதி அருளினாள் என மஹாபாரதம் சாந்தி பர்வம் தெரிவிக்கிறது.

சரஸ்வதி என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

சரஸ் என்றால் நீர். ஆக சரஸ்வதி என்பது தெய்வீக நதியான சரஸ்வதி நதியைக் குறிக்கிறது. அத்துடன் மட்டுமன்றி பெரும் நீர்நிலைகளையும் குறிக்கிறது.

இன்னொரு பொருள் சரஸ் என்றால் வாக்கு அல்லது பேச்சு;

வதி என்றால் தரித்திருப்பவள். ஆக சரஸ்வதி என்ற சொல்லுக்கு வாக்தேவி அல்லது வாணி என்ற பொருளும் ஏற்படுகிறது.

ஸ்வாமி சின்மயாநந்தர், ‘ஸ்வ’ என்றால் ஒருவரின் ஆன்மா என்றும் ‘சார’ என்றால் சாரம் என்றும் அர்த்தம் கூறி சரஸ்வதி என்றால் ஒருவரின் ஆன்மாவின் சாரத்தைத் தருபவள் (She who gives the essence (Saara) of our own Self (Sva)) என்று விளக்குகிறார்.

சரஸ்வதியின் வாகனம் ஹம்ஸம். சரஸ்வதியின் பூஜைக்கு உகந்த மலர்கள் வெண்தாமரை மற்றும் செந்தாமரை மலர்கள்.

சில்ப சாஸ்திரம் 12 விதமான சரஸ்வதி சிற்பங்களை விளக்குகிறது; 1) வாக் சரஸ்வதி 2) வித்யா சரஸ்வதி 3) கமலா 4) ஜயா 5) விஜயா 6) சாரங்கி 7) தம்புரி  8) நாரதி 9) சர்வ மங்களா 10)  வித்யா தாரி 11) சர்வ வித்யா 12) சாரதா

சரஸ்வதி தேவியின் கீழ்க்கண்ட 12 பெயர்களை புராணங்கள் விவரிக்கின்றன.

  1. பாரதி 2) சரஸ்வதி 3) சாரதா தேவி 4) ஹம்ஸவாஹினி 5) ஜகதி க்யாதா 6) வாகீஸ்வரி 7) குமுதி 8) ப்ரஹ்மசாரிணி 9) புத்திதாத்ரி 10 ) வரதாயினி 11) சந்த்ரகாந்தி 12) புவனேஸ்வரி

தேவியின் ஆயிரம் திரு நாமங்களை சரஸ்வதி சஹஸ்ரநாமமும் சரஸ்வதி அஷ்டோத்திரம் தேவியின் 108 திருநாமங்களையும் தருகின்றன.

சரஸ்வதிக்கு ஸ்ரீ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இதனால் அனைத்தும் அருள்பவள் சரஸ்வதி என்பது பெறப்படுகிறது.

 சகல கலாவல்லி மாலை, சரஸ்வதி சஹஸ்ரநாமம், அஷ்டோத்திரம், சரஸ்வதி அஷ்டகம், சரஸ்வதி சூக்தம், சரஸ்வதி கவசம் மற்றும் சரஸ்வதி ஸ்தோத்திரங்கள் ஏராளம் உள்ளன. இவற்றால் சரஸ்வதி தேவியை வழிபடலாம்; சுடர் விடும் அறிவைப் பெறலாம்.

பாரத நாடெங்கும் சரஸ்வதி தேவிக்கான ஆலயங்கள் பல உள்ளன. அவற்றில் குறிப்பித் தகுந்த சிலவற்றைப் பார்க்கலாம்.

பெஹோவா : ஹரியானா மாநிலத்தில் குருக்ஷேத்திர மாவட்டத்தில் உள்ள ஊர் இது. இதன் பழைய காலப் பெயர் ப்ரூதக்.

மன்னன் ப்ருது, தான் இறக்கும் சமயம் சரஸ்வதி நதிக் கரையில் இறக்க விரும்பியதால் அவனது மகன் அவரை அங்கு அழைத்துச் சென்றான். அவர் இறந்தவுடன் அவரது சிரார்த்ததையும் அங்கேயே செய்தான்.

விஸ்வாமித்திரர் இங்கு தான் பிரம்ம ரிஷி என்ற பட்டத்தைப் பெற்றார். இங்குள்ள சரஸ்வதி தேவியின் ஆலயம் மிகவும் புகழ் பெற்றது.

மஹாபாரத காலத்திற்கும் முற்பட்ட காலத்தில் அமைந்த நகர் இது.

 பிலானியில் உள்ள சரஸ்வதி ஆலயம் : 1959ஆம் ஆண்டு ராஜஸ்தானில் ஜி.டி. பிர்லாவினால் அமைக்கப்பட்ட ஆலயம் இது. ஐந்து பகுதிகளைக் கொண்ட இந்த ஆலயம் 70 தூண்களின் மேல் அமைக்கப்பட்டுள்ளது.

மதுரா : உத்தரபிரதேசத்தில் மதுரா நகருக்கு மேற்கே ஒரு சரஸ்வதி ஆலயம் உள்ளது. மஹாவித்யா தேவி ஆலயம் என அழைக்கப்படும் இதன் அருகில் சரஸ்வதி குண்ட் என்ற குளமும் உள்ளது.

சிருங்கேரியில் உள்ள பெருமை மிக்க சாரதா பீடம் விளக்க முடியா மஹிமை கொண்ட சரஸ்வதியின் பீடம்.

இன்னும் குஜராத், மஹராஷ்டிரம், பீஹார், காஷ்மீர், கர்நாடகம், மத்ய பிரதேஷ் உள்ளிட்ட மாநிலங்களில் சரஸ்வதி தேவிக்கெனவே பிரத்யேக ஆலயங்கள் உள்ளன.

சரஸ்வதி தேவியை வசந்த ருதுவில் மாசி மாதம் சுக்ல பட்சத்தில் வரும் பஞ்சமியில் நாடெங்கும் கோலகலமாகக் கொண்டாடுகின்றனர். இது சரஸ்வதி தேவி தோன்றிய தினமாக கருதப்படுகிறது.

ஒரிஸாவில் இந்த தினம் சரஸ்வதி பூஜை தினமாகவும் ஆந்திர பிரதேச்த்தில் ஸ்ரீ பஞ்சமியாகவும் கொண்டாடப்படுகிறது.

சரஸ்வதி தேவியின் சிறப்பு வழிபாடு நவராத்ரியில் அமைகிறது. காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை கொண்டாடப்படும் பண்டிகை நவராத்ரி.

புரட்டாசி மாதம் அமாவாசை கழிந்த பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி முடிய ஒன்பது நாட்கள் நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

காளி, லக்ஷ்மி, சரஸ்வதி ஆக மூன்று தெய்வங்களும் மூன்று நாட்கள் வீதம் முறையே வழிபடப்பட்டு ஒன்பதாம் நாளான நவமி அன்று சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது.

துர்க்கா தேவி மகிஷாசுரனை எட்டு நாட்கள் போரிட்டு ஒன்பதாம் நாளன்று நவமியில் வதம் செய்தாள்.

அடுத்த நாள் வெற்றிக்கான விஜய தசமி நாளாக அமைகிறது

இசை, நாடகம் உள்ளிட்ட 64 கலையைப் பயில்பவர்களும் தமக்கு உரிய சாதனங்களுடன் ஆய கலைகள் அறுபத்திநான்கினுக்கும் அதி தேவதையான சரஸ்வதியை வழிபடுகின்றனர்.

 விஜய தசமித் திருநாளை, அடுத்த மேல் நிலையை அடைவதற்கான துவக்க நாளாகக் கொள்கின்றனர்.

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண்கண்டளவிற் பணியச் செய்வாய் படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல் கோடி உண்டேனும் விளம்பில் உன் போல்
கண்கண்ட தெய்வம் உளதோ சகல கலாவல்லியே என வாக் தேவியைத் துதித்து வளம் பெறுவோமாக!    

***