இமயத்தில் சிவனது திருவிளையாடல்! (Post No.6148)

Written by S.Nagarajan


swami_48@yahoo.com


Date: 4 March 2019


GMT Time uploaded in London – 6-56 am


Post No. 6148

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

இன்று 4-3-19 சிவராத்திரி. அவனது பொருள் பொதிந்த திருவிளையாடலை பனி மலை அருகே நேரடியாக அனுபவிக்கும் கால கட்டம் இது!

அவனைப் போற்றுவோம்; துதிப்போம்!

இமயத்தில் சிவனது திருவிளையாடல்!

ச.நாகராஜன்

திருத்தமாய் ஒருத்தன் செவிப்புலன் கேட்பச்

   சிவ சிவ என்றிடில் பனைமேல்

இருத்திய இடி போல் எரிந்திடும் பாவம்;

   இறப்பொடு பிறப்பெல்லாம் இரியும்:

ஒருத்தன் வாயாரச் சிவ என முக்கால்

    உரைத்திடில் ஓருரை அதற்குக்

கருத்தன் வாழ் பதத்தில் இருத்திடும்; இரண்டும்

    கடவுள் மேல் கடன்களாய் நிற்கும்.

விருத்தாசல புராணத்தில் வரும் அழகான பாடல் இது.

சிவ நாம ம்ஹிமையை இதற்கு மேல் சிறப்புடன் யாராலும் உரைக்க முடியாது.

சிவ் சிவ என்று சொன்னால் பாவம் எல்லாம் இடியானது பனை மேல் விழுந்தது போல எரிந்து போகும். இறப்பும் பிறப்பும் – ஜென்ம மரணச் சுழற்சி – நீங்கும்.

சிவ என்று மூன்று தரம் சொன்னாலோ முதல் சிவ நாமத்திற்கு கடவுள் பதத்தில் இருக்கும் பேறு கிடைக்கும்.

மற்ற இரண்டு சிவ நாமம் சிவனிடம் கடன்களாய் நிற்கும்.

தேவையான நேரத்தில் சிவன் அருள் பாலிப்பார்.

சிவனுடைய 108 நாமங்களின் விளக்கம் அற்புதமானவை.

அதில் 70வது நாமம் : ஓம் ப்ரமதாதிபாய நம: என்பதாகும்.

சிவ பிரான் ப்ரமதர்களுக்குத் தலைவன்.

வைதிகம் அல்லாத அவைதிகர்களை அழிப்பதால் சிவனது சபையில் உள்ளவர்கள் ப்ரமதர்கள் என அழைக்கபப்டுகின்றனர்.

மஹா பாரதத்தில் வரும் விளக்கம் இது:

“ம்னதாலும் வாக்காலும் கர்மாவினாலும், பக்தர்களைப் புத்திரர் போல ரக்ஷிப்பவர் ப்ரமதர்.பிரும்ம த்வேஷிகளது ரத்த மாமிசங்களை கோபத்துடன் சிவ ப்ரமதர் பக்ஷிப்பார்.”

சிவபிரான் தானே களத்தில் இறங்கி 64 விளையாடல்களை நடத்தியதைக் கூறுவது திருவிளையாடல் புராணம்.

அவன் பிறப்பிலன்; இறப்பிலன்; என்றும் உளன்!

நேரே அவ்வப்பொழுது திருவிளையாடல்களைச் செய்வது ம்டட்டுமன்றி ப்ரமதர்களைக் கொண்டு துஷ்டர்களை சிக்ஷித்து பக்தர்களுக்கு அருளி அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்பவன் அவன்.

35வது நாம இது : ஓம் கைலாஸ வாஸிநே நம:

கைலாஸத்தில் வசிப்ப்வன் அவன்.

கேலி அதாவது விளையாட்டு – அதன் கூட்டம் கைலம். அது  உள்ள இடம் கைலாஸம். அதாவது சிவாலயம்.

கைலாஸம் என்றால் சிவனின் திருவிளையாடல் நடக்கும் என்று பொருள்.

இமயமலை,

மேரு மலை

வைகுண்டத்திற்கு மேல் உள்ள ஓரிடம்

என இப்படி மூன்று இடங்கள் உள்ளன.

இங்கு சென்றவர் புண்ணியம் கழிந்த பின்னர் பூமிக்குத் திரும்புவர்.

முதல் இடமான இமயமலை அருகே அவன் தனது திருவிளையாடலை இப்போது நடத்துகிறான் – துஷ்டர்களை ஒழித்துக் கட்டி பக்தர்களைப் பாதுகாக்க! ப்ரமதர்கள் அங்கு இறங்கி விட்டனர் போலும்!

இந்தத் திருவிளையாடலின் ஒரு அங்கமாக ஆவோமாக!

சிவ சிவ சிவ என்று சொல்லி துஷ்டர்களை ஒழிக்கும் பணியில் அவனது கருவியாக ஆவோமாக!

வந்தே மாதரம்.

பாரத் மாதா கீ ஜெய்!

***

அனைத்துப் பதமும் அருளும் மயில் விருத்தம்! (Post N0.6145)

Written by S.Nagarajan


swami_48@yahoo.com


Date: 3 March 2019


GMT Time uploaded in London – 8-29 am


Post No. 6145
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

blog article published in a Tamil magazine is given below

சென்னையிலிருந்து மாதந்தோறும் வெளிவரும் ஆன்மீக மாத இதழ் ஞான ஆலயம். இதன் ஆசிரியப் பொறுப்பை வகிப்பவர் திருமதி மஞ்சுளா ரமேஷ்.பிப்ரவரி 2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

நான்கு வார்த்தைகளே போதும்!

ச.நாகராஜன்

கீதையை நன்கு புரிந்து கொள்ள விரும்பினாள் ஒரு மஹாராணி.

எத்தனை ஸ்லோகங்கள் என்று கீதையில் பாண்டித்யமுள்ள ஒரு பண்டிதரை வரவழைத்துக் கேட்டாள்.

எழுநூறு ஸ்லோகங்கள் என்றார் அவர்.

தனாதிகாரியை வரவழைத்த மஹாராணி, “700 பொற்காசுகளைத் தயார் செய்யுங்கள். கீதையின் ஒவ்வொரு ஸ்லோகத்தின் அர்த்தத்தையும் நம் பண்டிதர் சொல்லச் சொல்ல அவருக்கு ஒரு பொற்காசு தர வேண்டும். ஆக எழுநூறு ஸ்லோகங்களுக்கு எழுநூறு பொற்காசுகளைத் தயார் செய்யுங்கள்” என்றார்.

பண்டிதருக்கு மஹா ஆனந்தம். 700 பொற்காசுகளா?

வீடு சென்ற அவர் ஏராளமான நூல்களைப் படித்து குறிப்புகள் எடுத்துக் கொண்டார்.

மஹாராணிக்கு விளக்க வேண்டுமே!

மறுநாள் சபை ஆரம்பமானது.

700 பொற்காசுகள் குவியலாக இருக்க பண்டிதரின் கண்கள் அதை நோட்டம் விட்டன.

‘கடவுளே! மஹாராணிக்கு கீதையைப் புரிந்து கொள்ள அருள் செய்வாயாக! கண்ணபிரானே நீயே துணை.’

கம்பீரமாக முதல் ஸ்லோகத்தை ஆரம்பித்தார்.

‘தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே’

மஹாராணிக்குக் கண்களில் நீர் வழிந்தது.

“நிறுத்துங்கள்!” என்று பண்டிதரை நோக்கிக் கூவினாள்.

பண்டிதர் திடுக்கிட்டார்.

மஹாராணி மந்திரியை அழைத்துப் பல்லக்கைத் தயார் செய்யுங்கள், கிளம்பலாம் என்றார்.

‘அட 700 காசுகளும் போச்சே’ என்று பண்டிதர் வருந்தினார்.

அவருக்கு ஒன்றும் புரியவில்லை. “ராணியாரே! இன்னும் ஆரம்பிக்கக் கூட இல்லையே” என்று இழுத்தார்.

“அட என்ன அற்புதமான விளக்கம்; நான் நன்கு புரிந்து கொண்டு விட்டேன், கீதா தாத்பர்யத்தை. இதோ, இந்தாருங்கள் 700 பொற்காசுகள்; ஒரு கணமும் இனி தாமதிக்க மாட்டேன்; இதோ நீங்கள் கூறியபடியே செய்யப் போகிறேன்.”

மஹாராணி இப்படிச் சொன்னதைக் கேட்டவுடன் அவருக்குத் தலை சுற்றியது.

“நான் என்ன விளக்கினேன்?” அழாக் குறையாக அவர் கேட்டார்.

அது தான் அழகாகச் சொல்லி விட்டீர்களே; கீதா தாத்பர்யத்தை! தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே – அதை எப்படிப் பிரிக்க வேண்டும்? ‘க்ஷேத்ரே க்ஷேத்ரே தர்மம் குரு!’ என்று. க்ஷேத்ரே க்ஷேத்ரே -க்ஷேத்ரம் க்ஷேத்ரமாகச் சென்று அதாவது ஒவ்வொரு திருத்தலமாகச் சென்று- தர்மம் குரு – தர்மத்தைச் செய்- அதாவது தர்மத்தைச் செய்ய வேண்டும். அது தானே கீதை காட்டும் பாதை! கீதையின் போதனை! இதோ தர்மம் செய்யக் கிளம்பி விட்டேன்” என்றாள் ராணி.

பண்டிதர் தன் ஆயுளிலும் அறியாத ஒரு பெரிய உபதேசத்தை கால் ஸ்லோகத்தில் – முதல் நான்கு வார்த்தைகளிலேயே – ராணி அறிந்து விட்டாரே என்று மகிழ்ந்தார்.

இத்தனை நாள் படித்தும் தமக்கு கீதா போதனை ஏறவில்லையே என்று வருந்தினார்.

‘மஹாராணியாரே! உங்களிடமிருந்து கீதா பாடம் கற்றுக் கொண்டேன். இந்தப் பொற்காசுகளை என் சார்பாக நீங்களே தர்மத்திற்குச் செலவிடுங்கள்; இதோ உலகைத் துறக்கிறேன். என் வழியில் போகிறேன்’  என்று சொல்லி விட்டுத் தவம் புரியச் சென்றார்;பின்னர் பெரும் மஹான் ஆனார்.

*

கண்ணன் அருளிய கீதையின் முதல் ஸ்லோகத்தின் கால் ஸ்லோகம் பார்த்தாலும் கூட நாடு முழுவதும் தர்மம் பெருகும்; தழைக்கும்!

கீதை காட்டும் பாதையை முழுவதுமாகப் படித்து அறிவோம்; உயர்வோம்!

***

சென்னை கோடம்பாக்கம் கல்லூரியில் சில வருடங்களுக்கு  முன்னர்  நடந்த ஆன்மீக மாநாட்டில் ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த துறவி ஒருவர் சொன்ன ராணியின் கதைக்கு இங்கு எனது நன்றியைப் பதிவு செய்கிறேன்.

 –subham–

கங்கையின் புனிதம் பற்றிய மேலை நாட்டார் புளுகு! (Post No.6141)

Written by S.Nagarajan



swami_48@yahoo.com


Date: 2 March 2019


GMT Time uploaded in London – 6-05 am


Post No. 6141

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

புனித பூமி பாரதம்

கங்கையின் புனிதம் பற்றிய மேலை நாட்டார் புளுகு!

ச.நாகராஜன்

திட்டமிட்டு பாரத தேசத்தின் எந்த விஷயத்தையும் பற்றி புளுகுவதே மேலை நாட்டு அறிஞர்களின் வேலை; பாதிரிகளின் பழக்கம்.

இந்த வகையில் கங்கை நீர் புனிதம் என்பதெல்லாம் கட்டுக்கதை என்றும் இதைச் சொல்வது புராணங்கள் தாம் என்றும் அந்தப் புராணங்கள் எல்லாம் கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து எட்டாம் நூற்றாண்டிற்குள் தோன்றியவையே என்றும் பல மேலை நாட்டு “அறிஞர்கள்” எழுதி வைத்துள்ளனர்.

இது எவ்வளவு பெரிய புளுகு என்பதைப் பல ஆதாரங்கள் நிரூபிக்கின்றன.

பின்னால் வந்த முகம்மதிய படையெடுப்பாளர்களும் அரசர்களும் கூட – அக்பர் உள்ளிட்டவர்களும் கூட – கங்கை நீரை மட்டுமே பருகும் பழக்கத்தைக் கொண்டிருந்ததை ஏற்கனவே கட்டுரைகள் வாயிலாகத் தெரிவித்திருக்கிறேன்.

 கங்கை புனிதமானது என்பதைப் புராணங்கள் தாம் கிளப்பி விட்டது என்று இவர்கள் சொல்லும் பொய்யையும் உடைக்கும் ஆதாரம் உள்ளது. முதலில் புராணம் இவர்கள் சொல்லும் கி.பி. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்ததே இல்லை; மிகவும் பண்டைய காலத்தது.

அது ஒரு புறம் இருக்கட்டும். கிறிஸ்துவுக்கு முன் இருக்கும் சரித்திரத்திற்கு வருவோம்.

சிலோன் என்று கூறப்பட்ட லங்கையின் அரசனாக திசா கி.மு.47இல் பதவியேற்றான். அப்போது மாபெரும் சக்கரவர்த்தியாக அசோகன் மகதத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான். அவனுக்குத் தன் மரியாதையையும் விசுவாசத்தையும் தெரிவிக்கும் விதமாக மன்னன் திசா, தான் அரியணை ஏறியவுடன் பல பரிசுப் பொருள்களைத் தன் தூதர்கள் வசம் கொடுத்து அனுப்பினான்.

அவற்றைப் பெற்ற சக்கரவர்த்தி அசோகன் மனம் மிக மகிழ்ந்தான்.

தூதுவர்கள் திரும்ப யத்தனிக்கையில் ஒரு கடிதத்தையும் திசாவின் பதவியேற்பைக் கருதி  கங்கை நீரையும் சில சன்மானங்களையும் தூதுவர்களிடம் தந்தான்.

கடிதத்தில் புத்த தர்மம் பற்றி எழுதிய அசோகன் அதில் சேருமாறு திசாவை வேண்டிக் கொண்டான்.

கடிதத்தையும் கங்கை நீரையும் பரிசுப் பொருள்களையும் தூதுவர்கள் மன்னன் திசாவிடம் சென்று கொடுத்தனர்.

அத்துடன் நிற்காமல் அசோகன் லங்காவிற்கு தன் மகேந்திரனையும் மகள் சங்கமித்திரையையும் புத்த மதம் பற்றிக் கூற நேரில் அனுப்பினான்.

ஆக கங்கை புனிதமானது என்பதும் பதவியேற்பு சமயத்தில் புனிதம் தரும் திவ்ய ஜலம் என்பதும் பெறப்படுகிறது. இது கிறிஸ்துவிற்கு முன் இருக்கும் சரித்திரத்திலேயே இடம் பெறும் ஒன்று என்பதும் பெறப்படுகிறது.

இப்படி ஏராளமான சரித்திர ஆதாரங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் மேலை நாட்டினரின் ஒவ்வொரு பொய்யையும் உடைக்கும் ஆதாரங்களாகும்.

இவற்றைத் தொகுத்து உண்மையான இந்திய சரித்திரத்தை எழுதுதல் வேண்டும். அதற்கு முன்னர் பாரதத்தை இகழும் வகையில் உள்ள பொய், புளுகுகளை பாட புத்தகங்களிலிருந்து நீக்க வேண்டும். இப்படிப்பட்ட புளுகுகளை அறிஞர்கள் யாரேனும் மேற்கோளாகக் காட்டினால் அந்தத் தவறை உடனடியாக அனைவரும் சுட்டிக் காட்ட வேண்டும். வேண்டுமென்றே இவற்றை ஆய்வுப் பேப்பர்களிலும் கட்டுரைகளிலும் மேற்கோளாகக் காண்பித்தால் அந்த “அறிஞர்களின்” புத்தகங்களுக்கு உடனுக்குடன் மறுப்புரை எழுதும் புத்தகங்களை ஆதரிப்பதுடன் அவற்றைப் பிரச்சாரமும் செய்ய வேண்டும்.

இது ஒவ்வொரு பாரதீயனின் கடமையாகும்!

வெல்க பாரதம்!

OLD ARTICLE IN THE BLOG

இலங்கைக்கு அசோகன் கங்கை நீர் …



  1.  

Translate this page

18 Sep 2014 – இலங்கைக்கு அசோகன் கங்கை நீர் அனுப்பியது ஏன்? river map_srilanka. Ganges is everywhere in Sri Lanka! கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்

***

தோபா சுவாமிகள் செய்த அற்புதங்கள் (Post No.6099)

Compiled by london swaminathan

W

swami_48@yahoo.com


Date: 20 FEBRUARY 2019


GMT Time uploaded in London – 5-50 am


Post No. 6099

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

மனதிற்கு மனம் மூலமாக அனுப்பப்பட்ட புத்தரின் முதல் உபதேசம்! POST6098

Written by S NAGARAJAN

swami_48@yahoo.com


Date: 20 FEBRUARY 2019


GMT Time uploaded in London – 5-24 am


Post No. 6098

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ஒரு பூனைக் கதை சொல்லவா? (Post No.6083)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 16 FEBRUARY 2019


GMT Time uploaded in London – 17-29


Post No. 6083

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

MORE RARE PICTURES FROM 100 YEAR OLD BHAGAVATHA BOOK-1 (Post No.5957)

MORE RARE PICTURES FROM ANOTHER 100 YEAR OLD BHAGAVATHA  BOOK-1 (Post No.5957)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date:19 JANUARY 2019


GMT Time uploaded in London – 13-16
Post No. 5957
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 I HAVE PUBLISHED SOME PICTURES FROM A BHAGAVATHA PURANA BOOK ALREADY. NOW I HAVE GOT ANOTHER BOOK FROM THE BRITISH LIBRARY IN LONDON. I HAVE ALREADY PUBLISHED SOME OF THESE PICTURES ON FACE BOOK. NOW I HAVE EDITED THEM AND SELECTED THE BEST.

PART 1 OF BHAGAVATHA PURANA-RARE PICTURES

–subham–

Rare Pictures from Siva Purana (Part 6) சிவ புராணத்திலிருந்து அபூர்வ படங்கள்- 6(Post.5949)

Rare Pictures from Siva Purana (Part 6)  சிவ புராணத்திலிருந்து அபூர்வ படங்கள்- 6(Post.5949)

Compiled by London swaminathan

swami_48@yahoo.com


Date:17 JANUARY 2019


GMT Time uploaded in London –21-25
Post No. 5949
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

Siva Purana Rare Pictures Part 6 (Last Part)

Picture 39

Dakshayayani skinned elephants and lions and called for a fight with Ruru

Picture 40

Ruru destroyed

Picture 41

Churning of Milky Ocean by Devas and Asuras

Picture 42

In the underground world Shiva gave Vishnu a new Wheel/ Chakra Ayudha

Picture 43

Tila Hasti(elephant)Donation (Dhanam)

Picture 44

Tula Purusha Dhanam (weighing a man and gives something as donation to the weight of that man.)

This is the last picture in the book.

Here comes the last page

–subham–

Rare Pictures from Siva Purana (Part 4) சிவ புராண அபூர்வ படங்கள்-4 (Post.5934)

Compiled by London swaminathan

swami_48@yahoo.com


Date: 14 JANUARY 2019


GMT Time uploaded in London –9-06 am
Post No. 5934
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

Part 4 of Rare Pictures from Siva Purana

Picture 21

Adi saiva brahmin came r dinner and he was given all honours like king.

Picture 22

Story of Someswara, one of the 12 Jyotir lingas (soma= Moon)

Picture 23

Story of Maha Kaleswar,Ujjain, one of the 12 Jyotir lingas;Siva destroyed the Dudhanas to save Vedapriya

Picture 24

Siva on the banks of Maha Kosa river; destroyed the demons to save his devotees, one of the 12 Jyotir lingas

Picture 25

Brahma’s central head (of his five heads) did not bow to Lord Shiva and so Shiva cut it off.

Picture 26

Saint Gautama threw a handful of hay stalk on a wayward cow, which died immediately; his colleagues said he did a cow slaughter.

Picture 27

When Ravana did a great penance in Kailash and received great boons from Lord Shiva, Narada cursed him to suffer from loss of limbs and heads in a battle (he lost them in Rama-Ravana Yuddha)

Picture 28

Rama and Lakshmana worshipped Lord Shiva at Rameswaram, one of the 12 Jyotir lingas.

Picture 29

Story of Kusmeswara, one of the 12 Jyotir lingas. Shiva saved the son of the gentle man’s wife. He was killed by his first wife.

Picture 30 and 31 are missing in my photocopying file. I will get the book again and post them. Total Number of Pictures 45.

.to be continued………………

Xxx subham xxx

Rare Pictures from Siva Purana (Part 3) சிவ புராணத்திலிருந்து அபூர்வ படங்கள்- 3(Post.5928)

Compiled by London swaminathan

swami_48@yahoo.com


Date: 13 JANUARY 2019


GMT Time uploaded in London –10-33 am
Post No. 5928
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

Part 3 of Rare Pictures from Siva Purana

Picture 11

God of Fire Agni Deva comes in the form of a pigeon and on the other side God Kartikeya is born in Saravana Region (Reed filled area) of Ganges.

Picture 12

Lord Subrahmanya (Kartikeya/Muruga/Skanda) is destroying the demon Taraka.

Picture 13

Siva burns down the Tri Pura- three hanging forts of demons.

Picture 14

Viswakarma is  distributing Shiva Lingas to Devas

Picture 15

All Devas performed Linga Puja in the presence of Lord  Vishnu.

Picture 16

Thazam Pu (Flower of Pandanus Plant- Pandanus odoratissimus; Ketaki flower)is cursed and banned from Shiva Worship.

Picture 17

Lord is fighting with Ganapalan.

Picture 18

Lord Ganesh is crowned.

Picture 19

Ganesh is marrying Siddhi and Buddhi.

Picture 20

Siva in the guise of a beggar and Vishnu in the guise of a beauty reached Taruka forest

To be continued with 25 more pictures……………..

–subahm–