ஆஸ்திரேலியா நாட்டு மலையில் அதிசய கணபதி! (Post No. 2500)

DSCF5335

Written by london swaminathan

Date: 2 February 2016

 

Post No. 2500

 

Time uploaded in London :–  9-46 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

aussi ganesh

“காமாலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்”- என்றும் “அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” – என்றும் தமிழில் பழமொழிகள் உண்டு. இது போல தெய்வ பக்தியுடையோருக்கு பாறையும் கடவுள் சிலையாகத் தோன்றும்! காதல் பித்து ஏறியவர்களுக்கு எதைப் பார்த்தாலும் காதலன் அல்லது காதலி போலத் தோன்றும். பக்தி என்னும் பேய் ஏறியவர்களின் குணங்களை நாரத பக்திசூத்ரமும் பாகவதமும் விளக்கும். இதை அப்பர் தேவாரத்திலும் பாடியிருக்கிறார்.

 

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்

மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்

பின்னம் அவளுடைய ஆரூர் கேட்டாள்

பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்;

இது போல பக்திப் பித்து ஏறினால் பாறையெல்லாம் கடவுள் சிலையாகத் தோன்றும்!

 

நாங்கள் பன்னிருவர் ஒரு பெரிய காரில் (12 seater van) ஏறிக்கொண்டு,  ஆஸ்திரேலியாவில் நீலகிரிக்குச் – BLUE MOUNTAIN ப்ளூ மவுன்டைந்—சென்றோம். அங்கு மூன்று பாறைகள் செங்குத்தாக இருக்குமிடத்துக்கு மூன்று சகோதரிகள் – THREE SISTERS த்ரீ சிஸ்டர்ஸ்—என்று போர்டு வைத்துள்ளனர். நாங்கள் பன்னிருவரும் அதற்கு துர்கா, லெட்சுமி, சரஸ்வதி என்று புதிய பெயர் சூட்டி மகிழ்ந்தோம். அதற்குள் ஒருவர் எலிபெண்டா குகை த்ரிமூர்த்தியை நினைவுபடுத்தி—ஏன் பிரம்மா, விஷ்ணு, சிவா என்று சொல்லக்கூடாது என்று கேட்டார். அதையும் ஏற்றுக் கொண்டு அடுத்த எக்கோ பாயிண்டுக்கு ECHO POINT  வந்தோம். இந்த எதிரொலி மலையில் நாம் எதைச் சொன்னாலும் எதிரொலி கேட்கும் என்றனர். நான் ராமா, கிருஷ்ணா என்று பெரிதாகக் கூக்கூரல் எழுப்பினேன். பலனில்லை. ஒருவேளை சரியான பருவநிலை இருக்க வேண்டும் போல. ஏனெனில் நாங்கள் நின்று கொண்டிருக்கும்போதே பெரிய மேகம் சூழ்ந்து அந்த இடமெல்லாம் புகைமூட்டம் போட்டது போல ஆகிவிட்டது.

 

தமிழ்நாட்டில் கொடைக்கனலிலும் எதிரொலி கேட்குமிடம் உள்ளது. பில்லர்ஸ் ராக் PILLARS ROCK என்னுமிடத்தில் திடீர் திடீரென்று இப்படி மேகம் சூழும். இதையெல்லாம் பேசிக்கொண்டே 12 பேரும் நகர்ந்தோம். அங்கு ஒரு பெரிய பெயர்ப் பலகையில் அங்கு பார்க்க வேண்டிய ஏழு இடங்கள் பற்றிய குறிப்புகளை எழுதி இருந்தனர். எங்கள் 12 பேரில் ஒருவர் அதைப் பார்த்துவிட்டு, “இதோ பாருங்கள் ஒரு மலை, பிள்ளையார் வடிவத்தில் இருக்கிறது” என்று காட்டினார். அந்தப் படத்தில் மூன்றாவதும் கணபதி போல இருந்தது (KINGS TABLELAND). எல்லோரும் ஒரு கும்பிடுபோட்டுவிட்டு வேகமாகக் காரில் ஏறினோம். மேக மூட்டத்தில் முழு வெளிச்சம் போட்டுக் கொண்டு காரை மேதுவாகச் செலுத்தி ஒரு வழியாக சிட்னி நகருக்கு வந்தோம்.

DSCF5335 (2)

படத்திலுள்ள பாறைகளைப் பாருங்கள்! உங்களுக்கும் பல கடவுள் உருவங்கள் தோன்றும்!!

 

புது வகை அமேஸான் விளையாட்டு! (Post No.2496)

IMG_2678

Picture from Nan Tien Temple, Australia

 

Written by S Nagarajan

 

Date: 1 February 2016

 

Post No. 2496

 

Time uploaded in London :–  9-12  AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

29-1-2016 பாக்யா வார இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

புத்தர் வழி

 

அமேஸான் விளையாட்டு!

 

ச.நாகராஜன்

IMG_2704

நல்ல புத்திசாலியான ஒருவன் எப்போழுதும் எதிலும் முதலாவதாக வந்து கொண்டிருந்தான். விளையாட்டுக்களிலும் அவன் தான் முதல். யாருடனும் சேராமல் இருந்த அவனை அவனது நண்பர்கள் ஊருக்கு வந்திருந்த ‘புத்த பிட்சு ஒருவரை பார்க்கப் போகலாம்,வா’ என்று கூறினர்.

புத்த பிட்சுவை தரிசித்த அவன், அவரிடம் எப்படி வாழ வேண்டும் என்று ஒரு கேள்வியைக் கேட்டான்.

 

அவர் புன்சிரிப்புடன், “உனக்கு அமேஸான் விளையாட்டு தெரியுமா?” என்று கேட்டார்.

 

“அமேஸான் விளையாட்டா? கிரிக்கட், ஃபுட் பால், டென்னிஸ் போன்ற விளையாட்டுக்களை கேள்விப் பட்டிருக்கிறேன். அதென்ன அமேஸான் விளையாட்டு?” என்று ஆர்வத்துடன் கேட்டான்.

 

பிட்சு புன்முறுவல் மாறாமல். “அது நிஜமாகவே நடக்கும் ஒரு விளையாட்டு. அமேஸான் காடுகளில், பாய்ந்து வரும் அழகிய அமேஸான் நதிக் கரையோரம் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். அவர்கள் ஆடும் விளையாட்டு அந்த அமேஸான் விளையாட்டு. அங்கு பணியாற்றச் சென்ற பிரிட்டிஷ் தன்னார்வத் தொண்டர் ஒருவர் அந்த விளையாட்டைப் பார்க்க ஆரம்பித்தார். அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆட்டமும் புரியவில்லை, ஆட்டத்தின் விதிகளும் புரியவில்லை.

 

 

முதலில் அங்குள்ளோர் எல்லோரும் ஆண், பெண் வித்தியாசம், வயது வித்தியாசம் பாராமல் முதலில் ஒன்று சேர்ந்தனர். பின்னர் இரண்டு குழுக்களாகப் பிரிந்தனர். அந்தக் குழுக்களில் எண்ணிக்கை சரி பாதியாகவும் இல்லை. ஆண்கள், பெண்கள், மூத்தவர், இளையவர் என்ற வயது வித்தியாசம் பலசாலி, பலமில்லாதவர் என்று எந்த பேதமும் இல்லை.

இப்படி இரண்டு குழுக்களாகப் பிரிந்தவர்கள் திடீரென வரிசையாக நின்று ஒரு மரத்தைத் தோளில் தூக்கிக் கொண்டனர்.  இன்னொரு போட்டியாளர் வரிசையும் ஒரு மரத்தைத் தூக்கிக் கொண்டது. மரத்திலாவது எடை, நீளம் ஆகியவற்றில் ஒரு சமத்தன்மை நிலவியதா என்றால் அதுவும் இல்லை. அணிக்கு ஏதோ ஒரு மரம், அவ்வளவு தான்!

 

 

சற்று தூரத்தில் – சுமார் 100 மீட்டர் தூரம் – இருக்கும் எல்லையை நோக்கி ஆரவாரக் கூச்சலிட்டுக் கொண்டே அவர்கள் ஓடினர்.

எல்லையை முதலில் அடைந்த கோஷ்டியிலிருந்து வெற்றி பெறாத கோஷ்டிக்கு ஒரு உறுப்பினர் மாறினார். மீண்டும் பந்தயம் தொடங்கியது. இப்படி வெற்றி பெறாத கோஷ்டிக்கு அவனோ அல்லது அவளோ மாறிக் கொண்டே இருந்தனர். போகப் போக விளையாட்டு சூடு பிடித்தது. இரு அணிகளும் கிட்டத்தட்ட சமபலம் உடையவர்களாக ஆகிக் கொண்டு வந்தனர்.. இரு அணிகளுக்கும் தூரத்தில் உள்ள இடைவெளியும் குறுகிக் கொண்டே வந்தது. நேரம் ஆக ஆக ஒரே ஆரவாரம்.

கடைசியில் இரு அணிகளும் ஒரே சமயத்தில் எல்லைக் கோட்டைத் தொட்டது.

 

 

இரு அணி வீரர்களும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்”

புத்த பிட்சு பேச்சை நிறுத்தினார்.

 

IMG_2703

sculptures of Nan Tien Temple, Australia

பின்னர் மெதுவாகத் தொடர்ந்தார். “விளையாட்டைப் பற்றி ஒன்றுமே புரியவில்லை என்ற பிரிட்டிஷ் தன்னார்வத் தொண்டருக்கு இப்போது எல்லாம் புரிந்து விட்டது. பரவசத்தின் உச்சத்தில் இருந்த அவர் இது போன்ற ஒரு விளையாட்டைப் பார்த்ததே இல்லை என்று எண்ணி மகிழ்ந்தார்.”

பேச்சை நிறுத்திய பிட்சு கேள்வி கேட்ட புத்திசாலியை கூர்மையாக நோக்கினார்.

 

 

“என்ன கேள்வி கேட்டாய்? எப்படி வாழ்வது என்றா? அது சரி, இந்த அமேஸான் விளையாட்டிலிருந்து உனக்கு என்ன புரிகிறது, அதை முதலில் சொல்!” என்றார்.

 

புத்திசாலியாகத் திகழ்ந்த அவன் கண்களில் நீர் துளிர்த்தது.

புத்த பிட்சுவை நமஸ்கரித்து வணங்கினான்;”ஐயனே! எனக்கு வாழும் வழி புரிந்து விட்டது. சொன்னதற்கு என்றும் உங்களுக்கும் புத்தருக்கும் கடமைப்பட்டுள்ளேன்” என்றான்.

அனைவரும் அவனை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

பிட்சு என்ன சொன்னார்? இவன் என்ன புரிந்து கொண்டான்?

அந்த புத்திசாலியே விளக்கினான்.

 

 

“புரியவில்லையா! உலகில் பல்வேறு வித்தியாசங்களுடன் மக்கள் இருக்கத் தான் செய்வர். பலமுள்ளவன் பலமில்லாதவனுக்கு, அறிவாளி படிப்பில்லாதவனுக்கு, செல்வமுள்ளவன் வறியவனுக்கு உதவிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது சமுதாயம் சமநிலை உள்ளதாக மாறும். அப்போது வென்றவன் தோற்றவன் என்று எவனும் இல்லை. எல்லோரும் வென்றவரே.

விட்டுக் கொடுத்து பரஸ்பரம் உதவி செய்து வாழ்க! என்பதே புத்தரின் அறிவுரை. அதை விளக்குகிறது இந்த அமேஸான் விளையாட்டு. அதைத் தான் எனக்கு அருளுரையாக இந்த மகான் கூறினார்!”

 

IMITATION BUDDHA

 

பிட்சு கால்நடையாக அடுத்த ஊரில் உள்ள இன்னொரு புத்திசாலியைப் பார்க்க மெதுவாக நடந்து போனார். அவரை நோக்கி அனைவரும் கைகூப்பித் தொழுத வண்ணம் பிரியாவிடை கொடுத்தனர்.

 

அவன் அன்று முதல் அனைவருக்கும் உதவி செய்பவனாக மாறினான். உயர்ந்தான்!

 

புத்தர் காட்டும் வழி : – ஒருவருக்கொருவர் கொள்ளும் ஆன்மீக நட்பு என்பது தயை, இரக்கம், சேவை, ஒழுக்கம் ஆகியவற்றை உயர்த்தும் ஒரு வழிமுறை.!

 

*************

 

 

வாரியார் சொன்ன ஸஜ்ஜன சாருகர் கதை: ‘அவ்வினைக்கு இவ்வினை’ (Post No. 2483)

What-to-see-in-Pandharpur

COMPILED BY LONDON SWAMINATHAN

 

Date: 12 January 2016

 

Post No. 2483

 

Time uploaded in London :– 9-38 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

(லண்டன் ஸ்ரீ முருகன் கோவில் மஹா கும்பாபிஷேக மலர், 1984)

 

“நாம் இப்போது நுகர்கின்ற இன்ப துன்பங்கட்கு முற்பிறப்பில் செய்த நல்வினை, தீவினைகளே காரணமாகும். அவரவர் செய்தவினை ஊழாக மாறிவந்து உருத்து வந்தூட்டும். நம் உடம்பின் நிழல் நாம் நடந்தால் நம்மைத் தொடர்ந்து வருமாப்போல நாம் செய்த வினையும் நம்முடன் தொடர்ந்துவரும்.

 

இறைவன் நடுநிலை தவறாதவன். நாம் செய்த நல்வினைகளுக்கு ஏற்ப சுக, துக்கங்களை வகுத்து விதிக்கின்றான். இறைவனுடைய அருளாணையால் விதிக்கப்படட்டது ‘விதி’ எனப்படும்.

 

“விதி காணும் உடம்பைவிடா வினையேன்

கதிகாண மலர்க்கழல் என்றருள்வாய்”

என்பது கந்தரனுபூதி. விதியை வென்றவர் எவருமிலர். விதி வழி மதி செல்லும்.

“அவ்வினைக்கு இவ்வினை”

 

முதிர்தவ ராயினும் முனிவ ராயினும்

மதியின ராயினும் மன்னராயினும்

பொதுவறு திருவொடு பொலிவராயினும்

விதியினை யாவரே வெல்லும் நீர்மையார்?

–கந்த புராணம்

 

நாட்டையும் நகரத்தையும் பொன்னையும் மணியையும் விலையுயர்ந்த உடைகளையும் தூசாக எண்ணித் துறந்து உடுத்த உடையுடன் கானகம் சென்ற குணவதியாகிய சீதா தேவி ஒரு மானை விரும்பினாள் – கணவனுக்குக் கட்டளையிடாத அக்கற்புக்கரசி கணவனைப் பார்த்து “இம்மானைப் பிடித்துக்கொடும்” என்று ஏவினாள். கண்ணை இமை காத்து நின்றது போல் காத்துநின்ற பரம பக்தனாகிய இலெட்சுமணனை உள்ளம் வருந்த சூடாக வைது நெடிய வனத்திடை அனுப்பினாள்.

 

ஒருபோதும் மனைவியின் வார்த்தையையும் கேளாத வீர ராகவர் மனைவியின் சொல்லைக் கேட்டு கோதண்டமாகிய வில்லைத் தூக்கி மான் பின்னே சென்றார். வில்லையா தூக்கினார்? இல்லை பழிச் சொல்லைத் தூக்கினார். இவைகட்கு காரணம் விதிதான்.

வாரியார் 1

“வெஞ்சின விதியினை வெல்ல – வல்லமோ?”

 

அதிசயம் ஒருவரால் அமைக்கலாகுமோ

துதியறு பிறவியின் இன்ப துன்பந்தான்

விதிவயம் என்பதை மேற்கொள்ளாவிடின்

மதிவலி யான்விதி வெல்ல வல்லமோ

–கம்பராமாயணம்

 

விதியின் வலிமையை விளக்க ஒரு சான்று

ஒரு குளக்கரையில் ஓரந்தணர் மான் தோல்மீது அமர்ந்து காயத்திரி மந்திரம் ஜெபம் செய்துகொண்டிருந்தார். ஒரு புலையன் பசுவை வெட்டும்பொருட்டு கத்தியைத் தீட்டிக் கொண்டிருந்தான்.அறிவுள்ள அப்பசு, நம்மைக் கொல்லும்பொருட்டே இவன் கத்தியைத் தீட்டுகின்றான் என்று அறிந்து கட்டுத் தறியை அறுத்துக்கொண்டு அக்குளக்கரை வழியே ஓடியது. அந்தப் புலையன் பசுவைத் தேடிக்கொண்டு வந்தான்.அந்த ஜெபம் புரியும் பிராமணனைப் பார்த்து, “ஐயரே, பசு இந்த வழியாகச் சென்றதா?” என்று கேட்டான்.

 

ஜெபம் செய்துகொண்டிருந்த அந்தணர் இருகரங்களையும் நீட்டி பசு ஓடின வழியைக் காட்டினார். அவர் காட்டிய வழியே சென்று புலையன் பசுவைக் கொலை செய்துவிட்டான்.

 

வட நாட்டில் தாழ்ந்த குலத்தில் ஸஜ்ஜன சாருகர் என்பவர் பிறந்தார். சாருகர் என்ற குலத்தில் பிறந்தவர் உயர்ந்த குணங்களை உடையவராக விளங்கினார். அதனால் ஸஜ்ஜன சாருகர் என்று பெயர் பெற்றார். அவர் இளமையிலிருந்தே உத்தம குணங்களுக்கு உறைவிடமாகத் திகழ்ந்தார். அடக்கம், பொறுமை, சாந்தம், ஈஸ்வர பக்தி ஒழுக்கம், பண்பு முதலிய நற்குணங்களை அணிகலமாக அணிந்த அவர் ஆசார சீலராக இருந்தார். அவர் பண்டரிநாதனை உபாசனை புரிந்துவந்தார். பண்டரி நாதா! பண்டரிநாதா! எனு கூறி அலறுவார்.”விட்டல், விட்டல்” என்று பஜனை செய்வார். இரவு பகலாக எட்டெழுத்தை ஓதி உள்ளம் உருகுவார்., கண்ணீர் பெருகுவார்.

 

பண்டரீபுரம் பூலோக வைகுந்தம். அந்த க்ஷேத்திரத்தில் சதா தம்புராவின் நாதம் முழங்கிக்கொண்டிருக்கும். பக்த ஜனங்கள் மத்தளம், ஜால்ரா முதலிய வாத்தியங்களை ஒலித்து ஆடியும் பாடியும் பரவசம் அடைவார்கள் பாண்டுரங்கனைச் சேவிக்க வருகிற பக்த கோடிகளின் கூட்டம் அளவிட முடியாது. பாண்டுரங்கன், பக்தர்களின் வினைகளைக் களைந்து, விரும்பிய நலன்களை வழங்கி வரத மூர்த்தியாக விளங்கினார்.

Miracles-at-Pandharpur-2

பண்டரீபுரத்துக்கு அருகே சந்திரபாகா என்ற நதி அழகாக ஓடிக்கொண்டிருக்கும். அந்த நதி பன்னிரு ஜோதிலிங்கங்களில் ஒன்றான பீமா சங்கர் என்ற இடத்திலிருந்து உற்பத்தியாவது. அதனால் பீமாநதி என்று பெயர் பெற்றது. பண்டரீபுரத்துக்கு அருகில் பிறைச் சந்திரனைப் போல் வளைந்து போவதால் சந்திர பாகா என்ற பெயர் பெற்றது. தூய்மையான நீர் சல சலவென்று ஓடிக் கொண்டிருக்கும். நாமதேவர், துர்காராம், சக்குபாய், கோராகும்பர், ராமதாசர், கபீர்தாசர் முதலிய பலப்பல பக்தர்கள் வழிபட்டு முக்தியடைந்த திருத்தலம். பல ஞானியர்களின் சமாதிக் கோயில்கள் அங்கே காட்சி தருகின்றன.

 

ஸஜ்ஜன சாருகருக்கு பண்டரீபுரம் சென்று விட்டல நாதனைச் சேவிக்க வேண்டும் என்ற தாகம் மேலிட்டது. “பண்டரிநாதா, உன்னைச் சேவிக்கும் நாள் எந்நாளோ, அருட்கடலே! கருணைத் தெய்வமே! உன்னைக் கண்ட கண்களே கண்கள். உன்னை வணங்கும் பேறு எல்லோருக்கும் கிடைக்குமா? பல பிறவிகளில் செய்த புண்ணிய பலன் இருந்தால்தானே உன் தெரிசனம் கிடைக்கும்” என்று கூறிப் புலம்புவார், திசை நோக்கித் தொழுவார், அழுவார், மூர்ச்சித்து விழுவார்.“ நாளை பண்டரிக்குப் புறப்படலாம்” என்று கூறுவார். ஒரு சமயம் துணிந்து பண்டரிபுரத்தை நோக்கிப் புறப்பட்டார்.

 

 

அந்தக் காலத்தில் ரயில் பஸ் முதலிய வாகன வசதிகள் கிடையா. சாருகர் பஜனை செய்துகொண்டு நடந்து போகிறார். பகல் முழுதும் நடப்பார். பொழுதுபோன ஊரில் பிட்சை எடுத்து உண்டு சத்திரங்களில் தங்கி பஜனை செய்வார்.

 

ஒருநாள் ஒரு நகரத்தில் தங்கினார்.இரவில் வேறு  இடமின்மையால் ஒரு தனவந்தரின் வீட்டுத் திண்ணயில் அமர்ந்து ஜெபம் செய்துகொண்டிருந்தார். இரவு ஒரு மணி. நகரம் இருள் சூழ்ந்திருந்தது. ஒலியடங்கி இருந்தது. அங்கங்கே நாய்கள் குலைத்துக் கொண்டிருந்தன. அந்த வீட்டுப் பெண் சிறுநீர் கழிக்க கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தாள். சாருகரைக் கண்டாள். அவர் மீது மையல் கொண்டாள். அவரருகே சென்று, “தாங்கள் பூலோக மன்மதரைப் போல காட்சி தருகிறீரே! தாங்கள் யார்? என்று கேட்டாள்.

 

“அம்மா! வணக்கம், நான் ஒரு யாத்ரீகன்.என் பேர் சாருகன். நான் பண்டரிபுரம் போகின்றேன். “என் உள்ளததைக் கொள்ளைகொண்ட உத்தமரே! தாங்கள் என் இதய ராஜா. நான் உங்கள் இதய ராணி. இந்த விநாடி முதல் தாங்கள் என் இன்னுயிர்க் கணவர்.”

 

“அம்மா! இந்த உலகம் கடுகளவு. பாவத்தால் வரும் துன்பம் மலையளவு. நான் மனத்தினாலும் மாதரைத் தீண்டாதவன். பிரம்மச்சாரி. தாங்கள் உங்களுடைய கணவருடன் வாழ்வதுதான் கண்ணியம்; கற்பு நெறியில் நிற்பதுதான் புண்ணியம். அவநெறியில் புக வேண்டாம்.”

 

அவள் வெறி பிடித்தவளைப் போல ஓடி கொடுவாளை எடுத்து அயர்ந்து தூங்குகின்ற கணவனுடைய தலையை வெட்டித் துணித்தாள். “என் உயிரினும் இனிய உத்தமரே! என் கணவரைக் கொன்றுவிட்டேன். இனி நீர்தான் என் கணவர்”—என்று கூறி அவரைக் கட்டித் தழுவ வந்தாள்.

 

இந்தக் கொடுஞ்செயலைக் கண்டு சாருகர் நடுநடுங்கினார். ஐயோ! கணவரைக் கொன்ற இவள் ஒரு பெண்ணா? பூதமா?பேயா? என்று எண்ணித் திண்ணையை விட்டுக் குதித்து ஓடினார். அந்தப் பெண் அவரைத் தொடர்ந்தாள்.சாருகரைப் பற்ற முடியவில்லை. நான்கு தெரு கூடுமிடத்தில் நின்று அப்பெண் ஓவென்று கதறி ஓலமிட்டாள். அங்கு உறங்கியிருந்தவர்கள் கூடினார்கள்.

 

“பெரியோர்களே! இந்தப் பாவி எங்கள் வீட்டுத் திண்ணையில் படுத்திருந்தான். நான் சிறு நீர் கழிப்பதற்காக கதவைத் திறந்து வெளியே வந்தேன். என் கணவரை வெட்டிவிட்டு என்னைக் கற்பழிக்க என்னைத் துரத்தி வந்தான் என்று கூறி கதறியழுதாள்.

வாரியார் 2

ஊரவர், சாருகரைப் பிடித்து அடித்துத் துன்புறுத்தினர். காவல் துறையினர், அவரைச் சிறையில் அடைத்தார்கள். பொழுது விடிந்தபின். அவ்வூர் சிற்றரசன் வழக்கை விசாரித்தான். “எல்லாம் பாண்டுரங்கன் அறிவான். நான் ஒரு குற்றமும் செய்யவில்லை: என நடந்ததை உள்ளபடி சொன்னார். குற்றம்புரிந்தவன் ஒப்புக்கொள்வானா? என்று எல்லோரும் சொன்னார்கள். சாருகருடைய கரங்களைத் துண்டிக்குமாறு அரசன் ஆணையிட்டான். சாருகருடைய இரு கரங்களும் துண்டிக்கப்பட்டன. குற்றம் செய்யாத குணப் பெருங்குன்றான அவர் துடிதுடித்தார்.

 

“பாண்டுரங்கா! பரம தயாளா!அருட் பெருங்கடலே! ஒழுங்கு நெறியில் நின்ற எனக்கு இந்த தண்டனையா?ஐயனே! சர்வ பூத சாட்சியான தேவரீரை நம்பிய எனக்கு இத்துன்பமா? என்று கூறி அழுதார்.

 

பின்னர் எங்கும் தங்காமல் பண்டரீபுரம் வந்து சேர்ந்தார். அன்றிரவில் கோயில் அர்ச்சகர்கள், அறங்காவலர்கள், தக்கார்களின் கனவில் பண்டரீநாதர் தோன்றி, “நமது பரம பக்தனான ஸஜ்ஜன சாருகன் வருகிறான். கோயில் மேளம், குடை, சுருட்டி, பூரண கும்பம் வைத்து உபசரித்து அழைத்து வாருங்கள்” என்று பணித்தருளினார்.

 

எல்லோரும் வந்து சாருகருக்கு கோவில் பரிவட்டம் கட்டி கனவில் பாண்டுரங்கன் கூறியதைச் சொல்லி பேரன்பு காட்டினர். சாருகர் இதனைக் கேட்டு அழுதார். பாண்டுரங்கன் திருவுருவம் முன் நின்றார். கைகளில்லாமையால் தொழ முடிய வில்லையே என்று கதறினார்.”தேவ தேவா! உன்னை என்னடியார் என்று அருள் புரிந்தனையே. அன்று அரசன் என் கரங்களை வெட்டுமாறு ஆனையிட்டானே. அப்போது இவன் குற்றமற்றவன் என்று அசரீரியாகவாது ஒரு குரல் கொடுத்திருக்கலாமே. அன்று என்னைக் கை நழுவவிட்டீரே. இது நியாயமா? இதுதான் உன் கருணையா? இது தருமமா? நான் இப்பிறவியில் எவருக்கும் எந்தத்தீங்கும் செய்யவில்லையே. உன்னைக் கையெடுத்துக் கும்பிடக்கூட முடியவில்லையே என்று சொல்லி அழுதார்.

 

பாண்டுரங்கண் கூறினார்: “அன்பனே அழாதே. அவரவர் வினைகளை அவரவர் அனுபவித்தே தீர வேண்டும். அன்று ஒரு நாள் குளக்கரையில் ஓரந்தணன் காயத்ரி மந்திரம் ஜெபித்துக் கொண்டிருந்தான். பசுவை வெட்ட வந்த புலையன் பசு ஒடிப்போன வழியைக் கேட்டவுடன் இரு கரங்களையும் நீட்டி அது போன பக்கத்தைக் காட்டினான். புலையன் அவ்வழியே சென்று பூலோக காமதேனுவாகிய பசுவைக் கொன்று விட்டான். நீதான் அந்த காயத்ரி ஜபம் செய்த அந்தணன். பசுவின் கொலைக்குக் காரணமான உனது இரு கரங்களும் வெட்டப்பட்டன. கொலையுண்ட பசுதான் அப்பெண் (தனவந்தனின் மனைவி); பசுவைக் கொலை செய்த புலையன்தான், அவளுடைய கணவன். ஆகையால் இவை அனைத்தும் முற்பிறப்பில் செய்த தீவினையால் வந்தவை என்று கூறினார். பண்டரிநாதனின் திருவாக்குகளைக் கேட்டவுடன், அவர் ஆறுதலடைந்தார். பண்டரீநாதன் கருணையால் அவர் கரங்கள் வளர்ந்தன. பண்டரிநாதனின் இரு பாத மலரினைத் தொட்டுக் கட்டித் தழுவி அருச்சித்த காலத்தில் சஜ்ஜனசாருகர் பரமபதம் அடைந்தார்.

–சுபம்-

 

காயத்ரி மந்திரம் உச்சரித்த முஸ்லீம் பெரியார்! (Post No. 2481)

gayatri (2)

WRITTEN BY S NAGARAJAN, BANGALORE

Date: 12 January 2016

Post No. 2481

Time uploaded in London :–  5- 46 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

 

 

ஆன்மீக இரகசியம் 

காயத்ரி மந்திரம் உச்சரித்த முஸ்லீம் பெரியார்!

 

ச.நாகராஜன்

 

 

108 புத்தகங்களை எழுதிய ஸ்ரீராம் சர்மா ஆசார்ய!

 

மந்திரங்களில் மகோன்னதமானது காயத்ரி மந்திரம். இதன் அருமை பெருமைகளை அற்புதமாக உணர்த்தியவர் காயத்ரி பரிவார் அமைப்பை நிறுவிய ஸ்ரீராம் சர்மா ஆசார்ய! அவர் 108 அரிய புத்தகங்களை (ஹிந்தியில்) எழுதியுள்ளார். அவற்றில் பல ஹிந்து தர்ம மேன்மைகளையும் காயத்ரி பற்றிய அரிய இரகசியங்களையும் விளக்குபவை.

 

காயத்ரி  மந்திரத்தை உச்சரிப்பதால் ஏற்படும் பிரத்யட்ச பலன்களைத் தொகுத்து அவர் தந்துள்ளவற்றில் ஒரு சம்பவம் இது!

 

 pandit shri ram sharma acharya     head_i4

 

பாபா ராம்பரோஸேயின் பயணம்

 

மஹராஷ்டிர மாநிலத்தில் அகோலா ஜில்லாவில் பாபா ராம்பரோஸேவின் பெயர் மிகவும் பிரசித்தமான ஒன்று.

காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பதால் வரும் பலன்களைப் பற்றி அவர் அற்புதமாகக் கூறியுள்ளார்.

 

பாபா ராம்பரோஸே பிறவியில் ஒரு முஸ்லீமாகப் பிறந்தவர்.

தான் பிறந்த இஸ்லாம் சமயத்தை நன்கு அனுஷ்டித்து வந்ததால் உருவ வழிபாட்டை அவர் ஏற்கவில்லை.

ஒரு நாள் ஏதோ ஒரு விஷயமாக அவர் அயலூர் செல்ல நேர்ந்தது. இருள் சூழ்ந்த நேரத்தில் அவர் ஒரு காட்டு வழியே செல்ல நேர்ந்தது.

 

காலை விடிந்தவுடன் பயணத்தைத் தொடரலாம் என்ற முடிவுக்கு வந்த அவர் காட்டில் இருந்த ஒரு சிவாலயத்தில் தங்கினார்.

 

 gayatri homam2

Gayatri Homa by boys from face book.

கனவில் கண்ட காட்சி

 

இரவில் அவருக்கு நேரடியாக அநுபவிப்பது போன்ற ஒரு கனவு வந்ததுஅதில் ஒரு சாது தோன்றி அவரைப் பார்த்து, “நீ போன ஜன்மத்தில் ஒரு ஹிந்துவாக இருந்தாய். மாமிச உணவைச் சாப்பிட்ட காரணத்தினால் இந்த ஜன்மத்தில் முஸ்லீமாகப் பிறந்திருக்கிறாய். எந்த கிராமத்திற்கு நீ இப்போது செல்ல இருக்கிறாயோ அது தான் உன் பூர்வ ஜன்ம கிராமம்.

 

அங்கே தான் உன் அன்னை தந்தை உள்ளிட்ட அனைவரும் உள்ளனர் என்றார். கனவில் அனைவரது பெயர்களும் தெளிவாகக் கூறப்பட்டன!

 

கனவில் சாது இன்னொன்றையும் தெளிவாகக் கூறினார்: நீ காயத்ரியை உபாசனை செய்ய ஆரம்பி. நீ உத்தாரணம் அடைவாய்!

 

 

பொழுது புலர்ந்தது. தான் கண்ட கனவினால் பிரமித்துப் போனவர் பயணத்தைத் தொடர்ந்து செல்லவிருந்த கிராமத்தை அடைந்தார்.

என்ன ஆச்சரியம்!கனவில் சொல்லப்பட்ட அனைத்தும் உண்மையாக இருந்தது. அந்தப் பயணம் அவர் வாழ்க்கையையே மாற்றி விட்டது.

 

 

 

காயத்ரி மந்திர உபதேசம்

 

காயத்ரி மந்திரத்தை விதிப்படி உச்சரிக்க உபதேசத்தைப் பெற்றார்.

அதை ஆயிரக்கணக்கில் சொல்ல ஆரம்பித்தார். (புரஸ்சரணம் என இதைச் சொல்வர்)

 

தேவியின் தரிசனம் அவருக்குக் கிடைத்தது.

ஏராளமான பக்தர்களுக்கு காயத்ரியின் பெருமையைச் சொல்ல ஆரம்பித்தார் அவர்.

அவரிடம் நூற்றுக்கணக்கானோர் சீடர்களாக மாறி காயத்ரி உபாஸனையை மேற்கொண்டனர்.

 

இது போன்ற ஏராளமான சம்பவங்களை ஸ்ரீராம் சர்மா ஆசார்ய  தொகுத்துள்ளார்.

ஸ்ரீராம் சர்மா ஆசார்ய அவர்களின் வாழ்க்கையே அதி அற்புதமானது.

(அதை இன்னொரு கட்டுரை வாயிலாகக் காண்போம்)

காயத்ரி மந்திரத்தை உச்சரிப்போம். உய்வோம்!

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

*******

திருமூலர் சொன்ன கதை: முதலைக்குப் பயந்து கரடியிடம் அகப்பட்டவன்! (Post No. 2478)

bear_with_cubs_-_original-1 

WRITTEN BY S NAGARAJAN, BANGALORE

 

Date: 11 January 2016

 

Post No. 2478

 

Time uploaded in London :–  7- 41 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

தேவார சுகம்

முதலைப் பாடல்கள் – 2

ச.நாகராஜன்

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact swami_48@yahoo.com)

முதலை வாய்ப்பட்ட குழந்தையை மீட்ட சுந்தரர்

 

அவிநாசி தலம் புகழ் பெற்ற ஒரு சம்பவத்தைக் கொண்ட ஆன்மீகத் தலம்.

 

 

இதை அறிவியல்  நோக்கில் பார்த்தால் டைம் மெஷின் என்னும் கால இயந்திரத்தில் பின்னோக்கிச் சென்று இறந்திருந்த குழந்தை மீட்கப்பட்ட  தலம் என்று சொல்லி அதிசயிக்கலாம்.

 

 

ஆன்மீக நோக்கில் பார்த்தால் அருளாளர் சுந்தரர் இறைவனைத் தொழுது வேண்டி சிவபிரான் அருளால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இறந்திருந்த குழந்தையை உயிர்ப்பித்த ஆன்மீக அருள் தலம் என்று கொள்ளலாம்.

 

croc, bear

வரலாறு இது தான்.

 

 

சிவ தலங்கள் தோறும் வழிபட்டு வந்த சுந்தரர் அவிநாசி வந்தார். அங்குள்ள தெருவில் ஒரு வீட்டில் விழா ஒலி எழும்ப இன்னொரு வீட்டிலோ அழுகைக் குரல் ஒலித்தது.

ஏழு வயது அந்தணச் சிறுவனுக்கு பூணூல் கல்யாணம் நடந்த

 

வீட்டில் விழா ஒலி.

 

இன்னொரு வீட்டிலோ..

 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இரு குழந்தைகள் மடுவிலே குளிக்கப் போயிருந்த சமயம் முதலை ஒன்று ஒரு குழந்தையை இழுத்துச் சென்றது.

 

முதலையிடம் பறி கொடுத்த தங்கள் குழந்தைக்கு இப்போது ஏழாம் வயது நடந்து கொண்டிருக்கும். அக்குழந்தைக்கு பூணூல் கல்யாணம் நடத்திப் பார்க்கும் பாக்கியம் நமக்கு இல்லையே என்று குழந்தையை இழந்த தம்பதிகள் இன்னொரு வீட்டில் தவித்து அழுது கொண்டிருந்தனர்.

அந்த அன்பரது வீட்டினுள் நுழைந்த சுந்தரர் காரணத்தை அறிந்து கண்ணீர் சிந்தினார்.

 

 

நேராகக் குளத்திற்குச் சென்றார். அங்கு ‘எற்றான் மறக்கேன்’ எனத் தொடங்கும் பதிகத்தைப் பாட ஆரம்பித்தார்.

இரண்டாவது பாடலில் உன்னை வணங்க வந்த அந்தணச் சிறுவன் செய்த குற்றம் என்ன (புக்கொளியூரில் குளத்து இடை இழியாக் குளித்த மாணி என்னைக் கீறி செய்ததே?) என்று வினவினார். சிவபிரானைத் தோழனாகக் கொண்ட வன்தொண்டர் இல்லையா அவர்!

 

நான்காவது பாடலில், ‘காலனையும் முதலையையும் சிறுவனைத் தருமாறு ஆணையிடுக’ என சிவனை வேண்டி நின்றார்.

 

“உரைப்பார் உரை உகந்து உள்க வல்லார் தங்கள் உச்சியாய்   அரைக்கு ஆடு அரவர் ஆதியும் அந்தமும் ஆயினாய்         புரைக் காடு சோலைப் புக்கொளியூர் அவினாசியே         கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே

 

 

பாடலின் பொருள் :

“உன்னைத் தோத்திரம் செய்பவர் உரையை உகப்பவனே! உன்னை நினைப்பவர் தலை மேல் இருப்பவனே! அரையில் ஆடும் பாம்பை அணிந்தவனே! ஆதியும் அந்தமுமாய் இலங்குபவனே! சிறந்த முல்லை நிலமும் சோலைகளையும் கொண்ட திருப்புக்கொளியூர் அவிநாசியில் எழுந்தருளியிருப்பவனே!

காலனையும் முதலையையும் பிள்ளையைக் கொண்டுவந்து தருமாறு ஆணையிடுக”

 

connected English article: TIME TRAVEL by TWO TAMIL SAINTS posted in swamiindology.blogspot.com on 14th February 2012.

Five beautiful Stories on Hindu Concept of Time; posted on 16 May 2015 in tamilandvedas.com

 

உடனே மடுவிலிருந்து வெளிப்பட்ட முதலை தன் வாயில் சிறுவனைக் கொண்டு வந்து தந்தது.

அப்போது அவன் (இரண்டு ஆண்டுகள் வளர்ந்த) ஏழு வயதுச் சிறுவனாக உயிர் மீண்டு வந்தான்.

 

 

அவிநாசியப்பர் சந்நிதியிலேயே அந்த அந்தணச் சிறுவனுக்கு பூணூல் கல்யாணமும் நடந்தது. இன்றும் இந்த உற்சவம் அவிநாசியில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரத்தில், ‘முதலை வாய்ப் பிள்ளை உற்சவம்’ என்று விமரிசையாக நடக்கிறது. அவிநாசியப்பர் கோவிலின் தெற்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில் குளம் உள்ளது. இங்கு சுந்தரரர் பாடல் பாட, முதலை தன் வாயிலிருந்து குழந்தையை உமிழும் விழாவும், சுந்தரர் கோவிலில் உபநயனம் செய்விப்பதும் ஐதீகத்தை விளக்கும் விதமாக நடைபெறுகிறது.

 

விஞ்ஞானிகளின் பார்வையிலும் முக்கியமானதாக விளங்குகிறது இந்தச் சம்பவம். காலத்தில் பின்னோக்கிச் சென்று இறந்தவனை மீட்க முடியும் என்பதை அதிசயமாக நிரூபிக்கும் விழா அல்லவா இது!

 

 

மயிலையில் பூம்பாவையை திருஞானசம்பந்தர் உயிர்ப்பித்ததையும் இங்கு நினைந்து மகிழலாம்.

 crocodile_vs_bear_

முதலைக்குப் பயந்து கரடியிடம் அகப்பட்டவன் கதை!

 

அடுத்து இன்னொரு பாடல் பத்தாம் திருமுறையான திருமூலரின் திருமந்திரத்தில் இடம் பெறும் பாடல்!

 

ஆற்றிற் கிடந்த முதலைக் கண்டஞ்சிப்போய் 

ஈற்றுக்கரடிகெதிர்ப்பட்ட தன்னொக்கும்                     

நோற்றுத் தவஞ்செய்வார் நூலறியாதவர்      

சோற்றுக்கு நின்று சுழல்கின்றவாறே

(ஆறாம் தந்திரம் தவநிந்தை- பத்தாம் பாடல்)

 

 

ஒருவன் ஆற்றைக் கடக்க எண்ணி ஆற்றில் இறங்கினான். பார்த்தால் எதிரே முதலை ஒன்று ஆவென்று வாயைத் திறந்து இவனை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது. பயந்து போனவன் தலைதெறிக்க காட்டு வழியில் ஓடினான்.

 

ஓடியவனை ஒரு கரடி பிடித்துக் கொண்டது. அதுவோ ஈற்றுக் கரடி, அதாவது குட்டிகளை ஈன்ற கரடி. குட்டிகளை ஈன்ற கரடியின் கோபம் எல்லைக்கடங்காத ஒன்றாக இருக்கும். அது அவன் மீது பாய்ந்தது.

 

 

இது எதைப் போல உள்ளது? ஆகமம் உள்ளிட்ட நூல்களை அறிதல், கடினமாக நோற்றுத் தவம்  செய்தல் ஆகியவற்றிற்கு அஞ்சி பிறப்பு இறப்பு என்ற வலையில் அகப்பட்டு சோற்றுக்கு அலைகின்றவரைப் போல இருக்கிறது!

 

(Written by S Nagarajan; posted by tamilandvedas.com and swamiindology.blogspot.com)

திருமுறைகளில் மட்டுமல்ல, இதர சங்க இலக்கியம் உள்ளிட்ட நூல்களிலும் முதலைப் பாடல்கள் உள்ளன,

 

அவிநாசி மட்டுமல்ல, இதர முதலை ஸ்தலங்களும் தமிழ்நாட்டில் உள்ளன.

 

முதலை வழிபட்ட தலம் திருமுல்லை வாயில்!

 

கொண்டதை விடாத முதலையைப் பற்றி “மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா என்ற பழமொழியும் உள்ளது.

முதலைப் பாடல்கள் சுவையாக அறிவுரை தருவதாக இருக்கிறதல்லவா?

 

contact: swami_48@yahoo.com

 

******

லலிதா சஹஸ்ரநாமம் சொல்வதில் ஒரு இரகசியம் (Post No. 2472)

Shri-Kuzhandhaiyanandha-Swamigal

WRITTEN BY S NAGARAJAN, BANGALORE

 

Date: 9 January 2016

 

Post No. 2472

 

Time uploaded in London :–  5-45 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

ஆன்மீக இரகசியம்

 

லலிதா சஹஸ்ரநாமம் சொல்வதில் ஒரு இரகசியம்

 

ச.நாகராஜன்

 

குழந்தையானந்த ஸ்வாமிகள்

 

பல நூறு ஆண்டுகளாக பாரதத்தில் லலிதா சஹஸ்ரநாமத்தைச் சொல்லி வருவது இயல்பான ஒரு பழக்கமாக பல்லாயிரம் குடும்பங்களில் ஆகி விட்டது.

 

ஆனால் இதைச் சொல்லுவதில் உள்ள இரகசியத்தை குழந்தையானந்த ஸ்வாமிகள் தன் பக்தை ஒருவருக்கு அனுக்ரஹித்துள்ளார்.

 

சுவையான அந்த சம்பவத்தின் மூலம் இரகசியம் அனைவருக்கும் வெளிப்பட அனைவரும் அதன் மூலம் பலன் பெறும் பாக்கியமும் ஏற்பட்டுள்ளது.

 

1927ஆம் ஆண்டு. புதுக்கோட்டை சீஃப் கோர்ட் வக்கீல் சுவாமிநாத ஐயரும் அவரது மனைவி பாகீரதி அம்மாளும் ஸ்வாமிகளின் அநுக்ரஹத்திற்குப் பாத்திரமான சிறந்த பக்தர்கள். ஸ்வாமிகளின் மீது பரம் பக்தி அவர்களுக்கு.ஸ்வாமிகள் இரு முறை அவர்கள் வீட்டிற்கு விஜயம் செய்து பல நாட்கள் அங்கு தங்கி இருக்கிறார்.

இரண்டாம் முறை (1927இல்) ஸ்வாமிகள் அவர்கள் வீட்டிற்கு விஜயம் செய்த போது பாகீரதி அம்மாள் ஒன்பது மாத கர்ப்பிணி.

ஸ்வாமிகள் வாய் சிறு குழந்தைகள் குழறுவது போலக் குழறிச் சொற்களை வெளிப்படுத்தும்.

‘பாயி’ என்று பாகீரதி அம்மாளை மாடியிலிருந்து விளித்து ஸ்வாமிகள் கஞ்சியோ காப்பியோ கொண்டு வரச் சொல்லுவது வழக்கம்.

 

நிறைமாத கர்ப்பிணி படி ஏறி வருதைப் பார்த்து, “உனக்கு சிரமமாய் இருக்கிறதா?” என்று ஸ்வாமிகள் பரிவோடு கேட்பார்.

“நல்ல காரியங்கள் நடக்கும் போது சற்று சிரமம் கூடவே இருக்கும்.ஆனால் அதைப் பொருட்படுத்தக் கூடாது” என்று அருளுரை வழங்கிய ஸ்வாமிகள்,” ஸ் என்று சொல்லாதே! ஸ் என்று போய் விடும்’ என்று அன்பாகக் கூறினார்.

om tamil

 

கரை கட்டி ஸஹஸ்ர நாமத்தைச் சொல்

 

லலிதா சஹஸ்ர நாமம் சொல்லும் வழக்கத்தை பாகீரதி அம்மாள் கொண்டிருந்தார்.

 

ஒரு நாள் அவரிடம் ஸ்வாமிகள்,”லலிதா சஹஸ்ர நாமம் சொல்லும் போது ஆற்றுக்குக் கரை கட்டுவது போல ஒவ்வொரு நாமத்திற்கும் முன்னும் பின்னும் பிரணவமாகிய ஓம் என்பதைச் சேர்த்துச் சொல்” என்று அருளினார்.

 

ஸ்வாமிகள் மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மன் வளர்த்த மீனாட்சி அம்மையின் அருள் குழந்தை.

 

தன் அன்னையை எப்படி வழிபட்டால் முழுப் பலனும் கிடைக்கும் என்ற இரகசியத்தை அவர் அருளியது அனைவருக்குமான காலத்திற்கேற்ற உபதேசம்.

 

 om swasik

ஓம் என்னும் உயரிய மந்திரம்

தானம் யக்ஞம் போன்ற சகல காரியங்களையும் ஆரம்பிக்கும் போது ப்ரணவமாகிய ஓம் மந்திரத்தைச் சொல்ல வேண்டும் என்று சாட்யாயனர் அருளியுள்ளார்.

 

அதே போல காத்யாயனர் ப்ரண்வத்தை சொல்லியே அனைத்துக் காரியங்களையும் ஆரம்பிக்க வேண்டும் என்று அருளியுள்ளார்.

தால்ப்ய பரிசிஷ்டம் என்ற நூலில் ஓம்காரத்தைச் சொல்லாமல் கூறும் சகல மந்திரங்களும் சித்தியைக் கொடுக்க மாட்டாது என்று கூறப்பட்டுள்ளது.

ஆகவே தான் லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் ஒவ்வொரு நாமாவுக்கு முன்னரும் பின்னரும் ஸ்வாமிகள் ஓம்காரத்தைச் சேர்த்துச் சொல் என்றார்.

 

முதலில் சொல்லாவிட்டால் மந்திரம் ஒழுகி விடுமென்றும் கடைசியில் சொல்லாவிட்டால் மந்திரம் பொங்கி வழிந்து விடும் என்றும் காளிகா புராணம் போன்றவற்றில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

 

இந்த அரிய இரகசியத்தை ஸ்வாமிகள் பக்தைக்கு அருளினார்.

 

பக்தைக்கு ஆண் குழந்தை பிறக்க அது புஷ்ய நட்சத்திரத்தில் பிறந்ததைக் கேட்டு அறிந்த ஸ்வாமிகள், “புஷ்ய நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறான். ஜெகதீசன் என்று பெயர் வை. நன்றாக இருப்பான்” என்று ஆசீர்வாதம் செய்தார்.

ஒவ்வொரு மந்திரம் சொல்லும் விதத்தையும் ஆசார்யர் மூலமாகவே கற்றுத் தெளிந்து உச்சரிக்க வேண்டும் என்பது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கம்.

காலம் கலி காலமானதால் நமக்குத் தெரியாத இரகசியங்களை இப்படிப் பெரும் மகான்கள் கூறி அருளுவது வழக்கம்.

ஆக லலிதா சஹஸ்ரநாமம் கூறும் வழியை பெரும் மகானான குழந்தையானந்த ஸ்வாமிகள் அருளியுள்ளார். அதைக் கடைப்பிடித்து சஹஸ்ர நாமம் சொல்லி முழுப்பலனையும் அன்னையின் அருளால் பெறுவோமாக!

 

*****

 

வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க………….. தீயினில் தூசாகும் – ஆண்டாள் (Post No. 2467)

30 திருப்பாவை

COMPILED BY LONDON SWAMINATHAN

 

Date: 7 January 2016

 

Post No. 2467

 

Time uploaded in London :–  8-37 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

கடவுள் பற்றி 275 பொன்மொழிகள், பழமொழிகள்

 

இந்துமதம் பற்றிய 200 பழமொழிகள்- பகுதி 1 (ஜூன் 21, 2012)

இந்துமதம் பற்றிய 200 பழமொழிகள்- பகுதி 2 (ஜூன் 22, 2012)

எனது முந்தைய தொகுப்புகளில் 200 பழமொழிகளும் இன்றைய தொகுப்பில் 75 பழமொழிகளும், ஆக மொத்தம் 275 பழமொழிகள் பொன்மொழிகள் உள:

2 கோதாவரி

கீழ்கண்ட தொகுப்பில் பல ஆங்கிலப் பழமொழிகளின் மொழி பெயர்ப்பும் உள.

 

1.சொர்கம் ஏன் காலியாக இல்லை? நம் பாவங்களை கடவுள் மன்னிப்பதால்!

 

2.முதல் எழுத்து அ போல உலகிற்கு மூல முதல்வன் பகவான் –வள்ளுவன் குறள்

 

3.வேண்டுதல் வேண்டாமை இலாதவன் –குறள்

 

4.தனக்குவமை இலாதான் – குறள்

 

5.வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க, போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் – ஆண்டாள்

 

6.கொடுக்கும் தெய்வம் கூரையைப் பிய்த்து கொண்டு கொடுக்கும்

 

7.நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்

 

8.நம்பினார் கெடுவதில்லை, நான்கு மறை தீர்ப்பு – பாரதியார்

 

9.அவனருளாலே அவன் தாள் வணங்கி- மாணிக்கவாசகர்

10.அன்பே சிவம் – திருமூலர்

11.கடவுள்,மர்மமான வழிகளில் செயல்படுகிறார்- வில்லியம் கவ்பர்

2.cosmic dancer, Boston Museum, US

12.குணப்படுத்துபவன் கடவுள்; நன்றியை வாங்கிக் கொள்பவன் டாக்டர்!

13.கடவுள் கட்டாயமாகக் கூலி கொடுக்கும் எஜமானன்

 

14.கடவுள் மெதுவாக வருவார்; ஆனால் அடிக்கும்போது இரும்புக்கரத்தால் அடிப்பார்

15.கடவுள் கோவிலில் இருப்பார்; அருகில் சின்னக் கோவிலில் சாத்தான் வசிப்பான்

 

16.கடவுள் கல்லைப் படைக்கிறார்; மனிதன் வடிவமைக்கிறான்

 

17.கடவுள் நாட்டுப்புறம் படைத்தார்; மனிதன் நகரத்தை உருவாக்கினான்.

 

18.எல்லாம் வல்லவன், எங்கும் நிறைந்தவன், எல்லாம் அறிந்தவன் இறைவன்

 

19.திக்கற்றவருக்கு தெய்வமே துணை

 

20.யாண்டும் இடும்பை இல – குறள் (கடவுளை நம்புவோருக்கு துன்பமே இல்லை)

 

21.சங்கீர்த்ய நாராயண சப்தமாத்ரம், விமுக்த துக்கா சுகினோ பவந்து – விஷ்ணு சஹஸ்ரநாமம் (நாராயண சப்தமுள்ள இடத்தில் துக்கம் பறந்தோடும்)

 

3 goddesses

22.சாமிவரம் கொடுத்தாலும் பூசாரி வரம்தர மாட்டான்

23.தெய்வச் செயல் இருந்தால் செத்தவனும் எழும்புவான்

 

24.தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிக்கேற்ற பலன் கிடைக்கும் – வள்ளுவன் வாக்கு

25.தெய்வப் புலவனுக்கு நா உணரும், சித்திர ஓடாவிக்கு கை உணரும்

 

26.தெய்வமிலாதேயா பொழுது போகிறதும், பொழுது விடிகிறதும்?

 

27.தெய்வமே துணை

 

28.தெய்வம் உண்டெபார்க்கு உண்டு, இல்லை என்பார்க்கு இல்லை

 

29.எல்லாம் அவன் செயல்

 

30.தெய்வம் காட்டுமே தவிர, ஊட்டாது

 

31.தெய்வம் பண்ணின திருக்கூத்து

 

32.பரமம் பவித்ரம் லீலா விபூதிம் (எல்லாம் அவன் லீலா விநோதம்)

 

33.தெய்வ வணக்கமே நரக வாசலை அடைக்கும் தாழ்

9krish_AP.jpgallbad, new IE

34.சாகற நேரத்தில் சங்கரா, சங்கரா என்றானாம்

 

35.சம்யாத்மா விநஸ்யதி (சந்தேகப்படுவான் அழிவான்)- பகவத் கீதை

36.அகதிக்குத் தெய்வமே துணை

37.அரசன் அன்று கேட்பான், தெய்வம் நின்று கேட்கும் (அரசன் அன்றே கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்)

 

 

38.யோகக்ஷேமம் வஹாம்யஹம்- பகவத் கீதை 9-22 (பக்தன் விரும்பியதை அடையச்செய்வதும் அதைக் காப்பதும் என் பொறுப்பு)

39.கடவுள் நினைத்தால் காற்றில்லாமலே மேகம், மழை வரும்

 

40.சத்யம் ஞானம் அனதம் பிரம்மா

 

41.சத்யம், சிவம், சுந்தரம்

 

42.வேலை வணங்குவதே எமக்கு வேலை- பாரதியார்

 

18 steps

43.அஹம் பிரம்மாஸ்மி (நானே பிரம்மம்)

44.தத் த்வம் அஸி ( நீ அதுவாக (கடவுள்) இருக்கிறாய்)

45.ராமன் இருக்கும் இடத்தில் காமன் இரான்

46.அரங்கனைப் பாடின வாயால் குரங்கனைப் பாடுவேனா?

47.சிவநி ஆக்ஞலேக சீம கறவது (சிவனுடைய ஆணையின்றி எறும்பும் கடிக்காது)

48.ஓ ராம நீ நாமமு ஏமி ருசிரா? (தியாகராஜர்)

 

49.ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற்கு ஆயிரம் திருநாமம் பாடிநாம் தெள்ளேனம் கொட்டாமோ- திருவாசகம்

 

50.பிள்ளையார் பிடிக்கக் குரங்கானது

 

51.அனுமார் வால் போல நீளும்

 

52.முன்னைப் பழமைக்கும் பழமையாய், பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் (சிவன் பற்றி மாணிக்கவாசகர்)

 

53.சோற்றுக்குப் பின்னர்தான் சொக்கரும் மீனாட்சியும்

54.சிதம்பர ரகசியமா?

55.சிவத்தைப் போற்றிர் தவத்திற்கு அழகு – கொன்றைவேந்தன்

 

56.ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் – உலகநீதி

 

57.தெய்வம் நமக்குத் துணை பாப்பா- ஒரு தீங்குவரலாகாது பாப்பா – பாரதியார்

 

58.சிவாத் பரதரம் நாஸ்தி (சிவனுக்கு மேல் தெய்வமில்லை)

 

59.சுக்குக்கு மேல் மருந்தும் இல்லை; சுப்பிரமணியத்துக்கு மேல் தெய்வமும் இல்லை

 

60.சிவன் அபிஷேகப் பிரியன்; விஷ்ணு அலங்காரப் ப்ரியன்

 

61.அவனினின்றி ஓர் அணுவும் அசையாது.

 

62.ஒன்றே குலம் ஒருவனே தேவன் –திருமூலர்

 

63.சிவனே என்று கிட

1377607696503-Janmashtami in jammu

Jammu,August 27 An children dressed up as Shri Krishna and his friends during shoba yatra on the eve of Janmashtami in Jammu city on Tuesday. Photo by Vishal Dutta

64.அரியும் சிவனும் ஒன்னு; அறியாதவன் வாயில மண்ணு

65.சிவனொடொக்கும் தெய்வம் தேடினுமில்லை

 

66.ஈசனுக்கு ஒப்பு எங்கனும் இல்லை

 

67.ஈசன் எப்படி, அப்படி தாசன்

68.ஈசன் செயலை நீசன் குறை சொன்னானாம்

69.ஈசன் செயல் எண்ணத் தொலையாது

70.ஈசுவரன் கோயில் திருநாள் ஒருநாள் கந்தாயம்

71.இறைவன், அடியார் நெஞ்சில் குடியாய் இருப்பான்

 

72தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்

73.காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி, மதுரை மீனாட்சி

74.ஜகஜ்ஜனனி, லோக மாதா, அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி

75.ஈக்கும் எறும்புக்கும் படி அளப்பவன் நமக்கும் படி அளப்பான்

 

alwarpet govindarajan

–Subham—

பாவச் செயல்களைப் பரப்பாதே! (Post No. 2450)

mahabharata_

Written by S NAGARAJAN

 

Date: 2 January 2016

 

Post No. 2450

 

Time uploaded in London :–  6-06 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

 

வில்லி பாரதம்

 

பாவச் செயல்களைப் பரப்பாதே!

ச.நாகராஜன்

 

 

இரகசியம் விண்டுரைக்கும் வில்லிப்புத்தூரார்

 

வில்லிபாரதத்தில் ஏராளமான இரகசியங்களை வில்லிப்புத்தூரார் போகின்ற போக்கில் சொல்லிக் கொண்டே போவார். உன்னிப்பாகப் படிப்பவர்கள் அதை சட்டென்று பிடித்துக் கொண்டு நம் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளலாம்.

இன்றைய நாளில் ஃபேஸ் புக்கில் வம்பு வளர்க்கும் நம்மவர்களில் பலர் அதில் அடுத்தவர்களின் பாவச் செயல்களைப் பகிர்ந்து கொள்வதையே தமது முதல் கடமையாகக் கொண்டுள்ளனர்.

 

 

ஃபேஸ் புக்கை நலம் பரப்பும் வலிமை வாய்ந்த ஆயுதமாகப் பயன்படுத்தாமல் வம்பில் ஈடுபட்டிருப்பதால் நமக்கு நினைவாற்றல் குறைகிறது என்றும், மனச் சோர்வு ஏற்படுகிறது என்றும் விஞ்ஞான ஆய்வுகள் தற்போது தெரிவிக்கின்றன. ஆக இந்த பாவம் பகிரும் ஃபேஸ்புக் நண்பர்களுக்கு பாரதம் தரும் செய்தி ஒன்று உண்டு!

 

 

ஐயோ பாடல்

 

பாரதத்தில் வரும் அவலமான காட்சி ஒன்றைப் பார்ப்போம். திரௌபதியின் துகில் உரியும் காட்சி அது.

விகர்ணன் திரௌபதியை அலங்கோலமாக இழுத்து வர சூழ்ந்திருக்கும் அரசர் எல்லாம் “ஊமர்கணம்” போல அமர்ந்திருக்கும் கொடுமையான காட்சி.

திரௌபதி சபையோரை நோக்கி இது நியாயமா, நீதியைச் சொல்லுங்கள் என்று கேட்கிறாள்.

சபையோர் மௌனமாக இருக்கின்றனர்.

 

 

கவிஞருக்குப் பொறுக்கவில்லை. பிறக்கிறது ஒரு “ஐயோ” பாடல்.

(நேயர்கள் எமது “ஐயோ பாட்ல்கள்” கட்டுரையைப் படித்ததை நினைவு கூரலாம். படிக்காதவர்கள் படிக்கலாம்)

 

 

மையோ டரிக்கண் மழை பொழிய வாடுங் கொடியின் மொழிக்காகார்

வெய்யோ னெண்ணந்தனக்கா கார் விறல் வேந்தர் வெரூஉக் கொண்டு

பொய்யோ வன்று மெய்யாகப் புனையோ வியம்போ லிருத்தாரை ஐயோ வந்தக் கொடுமையையா முரைக்கும் பொழுதைக் கதிபாவம்

 

(சூது போர்ச் சருக்கம் பாடல் 236)

 

 

இதன் பொருள்: – (வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியார் உரையின் படி)

கௌரவர் சபையில் உள்ள பராக்கிரமம் உள்ள வேலாயுதத்தை ஏந்திய அரசர்கள் துரியோதனனிடத்தில் கொண்ட அச்சத்துடன்,  மையையும் செவ்வரியையும் உடைய கண்களிலிருந்து மழை போல நீர் பெருக வாடும் பூங்கொடி போன்ற திரௌபதியினது கேள்விக்குச் சரியான பதில் கூறத் திறனற்றவர்களாக இருந்ததால் கொடியவனாகிய துரியோதனனின் எண்ணத்திற்கு உடன்பட்டுக் கூறாதவ்ர்களாயும் பொய்யே இல்லாமல் உண்மையாகவே அழகாக எழுதிய ஓவியம் போலவே இருந்தார்கள்.

 

mahabharat

ஐயோ!

அந்தக் கொடுமையைக் குறித்து யாம் எடுத்துச் சொன்னாலும் கூட அப்பொழுது நமக்குப் பெரும் பாவம் உண்டாகும்.

 

ஒரு பெரிய இரகசியத்தை கவிஞர் இங்குச் சுட்டிக் காட்டுகிறார்.

ஒருவன் பாவச் செயலை இன்னொருவன் எடுத்துரைத்தால் அவ்வாறு உரைப்போனையும் அந்தப் பாவத்தில் பாதிப் பங்கு சேரும் என்பது அறநூல் கொள்கை.

 

 

ஆகவே ஐயோ, கவிதைக்கென்று நடந்ததைச் சொன்னாலும்  கூட  எனக்கும் அல்லவா அந்தப் பாவத்தில் பாதி வந்து சேரும் (ஐயோ அந்தக் கொடுமையை யாம் உரைக்கும் பொழுதைக்கு  அதிபாவம்) என்று புலம்புகிறார் வில்லிப் புத்தூரார்.

ஆகவே தான், ‘அடுத்த வீட்டுப் பெண் ஒடிப் போய் விட்டாள் என்று வீடு வீடாகச் சென்று வம்பளப்பதற்கு முன்னர் உன் வீட்டுப் பையன் வீட்டில் இருக்கிறானா என்று  உறுதி செய்து கொள்’ என்று சொன்னார்கள் பெரியோர்.

பாவச் செயல்களைச் செய்யாதே; பங்கு கொள்ளாதே; அதைப் பரப்பாதே என்பது அறநூல் தரும் அறிவுரை.

பரப்புவது பற்றித் தெரியாதவர்களுக்கு வில்லி பாரதத்தில் இந்த இடம் மாபெரும் இரகசியத்தை அறிவிக்கிறது.

இந்த ஐயோ பாடல் அழகான பாடல்!

 

 

பாவத்தைத் தடு; புண்ணியம் சேரும்

 

பாவம் புண்ணியம் பற்றிய இன்னொரு இரகசியத்தை கீசகன் வதைச் சருக்கத்தில் வில்லிப்புத்தூரார் அற்புதமாக விண்டுரைக்கிறார்.

 

 

பண்ணிய வினைகளின் பயனலாது தாம்                 எண்ணிய கரும மற்றி யாவரெய்தினார்                            திண்ணிய கீசகன் செய்த தீங்கிவன்               புண்ணியமானதாற் புகல்வதென்கொலாம்

(கீசகன் வதைச் சருக்கம் பாடல் எண் 83)

 

 

கீசகன் திரௌபதியை அடையக் கருதுகிறான். அந்தத் தீச்செயலால் அவனது தீவினைப் பயன் அவனை அழிக்கிறது. அதுவே பீமனுக்கு புண்ணியப் பயனாக இருந்தது என்று ஒரு அழகிய இரகசிய உண்மையை இங்கு வில்லிப்புத்தூரார் உலகினருக்கு எடுத்துரைக்கிறார்.

 

பாடலின் பொருள் : அவரவர் செய்த புண்ணிய பாவ ரூபமான செய்கைகளின் பயனை அடைவதல்லாமல் தாம் நினைத்த செயலை வினைப்பயனுக்கு மாறாக அடைந்தவர் யார் தான் இருக்கிறார்கள்? வலிமை வாய்ந்த கீசகனின் தீச்செயல் பீமனுக்குப் புண்ணியப் பயனைத் தருவதாக ஆயிற்று.

இதைப் பற்றி யாம் சொல்வதற்கு என்ன இருக்கிறது (புகல்வது என் கொல்?)

 

 

ஒரு இரகசியத்தை வெளியிடும் போதெல்லாம் கவிஞர் வில்லிப்புத்தூரார் திரைமறைவிலிருந்து வெளிவந்து தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார்.

 

எத்தனை அற்புதமான கவிஞர் அவர்!

பாவச் செயலைத் தடுப்பவன் ஒருவனுக்கு பாவியின் தீவினையே புண்ணியமாகிறது. கீசகப் பாவியை அழிக்க வந்த பீமனுக்கு அந்தப் பாவியின் பாவமே புண்ணியமாகிறது.

 

புண்ணிய பாவ மெக்கானிஸத்தில் இந்த ‘ட்ரான்ஸ்பர்” நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

 

 

ஆக பாவச் செயலைப் பரப்பக் கூடாது என்பது மட்டுமல்ல; பாவச் செயலைத் தடுத்தால் புண்யம் தானே சேரும் என்பதும் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு இரகசியம் தானே!

 

*******

ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடலாமா? (Post No. 2444)

SL ganesh stamp

Research Article written by London swaminathan

 

Date: 31  December 2015

 

Post No. 2444

 

Time uploaded in London :– 9-37 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

This article is uploaded in English as well.

ganesh nepal

ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாட வேண்டும். ஆனால் குடித்துவிட்டுக் கும்மாளம் போடக்கூடாது. அதே நேரத்தில் தமிழ் புத்தாண்டையும் மறக்கலாகாது.

ஆங்கிலப் புத்தாண்டை ஏன் கொண்டாட வேண்டும்?

ஏனெனில்,அதைக் கொண்டாடும்வரை சம்ஸ்கிருதம் வாழும். இந்துமதம் வாழும். அது எப்படி?

 

கணபதி=ஜனவரி; ஜனவரி=கணபதி!!

நீங்கள் ஒரு பஜனைப் பாடலே பாடலாம்!

கணபதி=ஜனவரி; ஜனவரி=கணபதி! பாஹிமாம்!

ஜனவரி=கணபதி!! கணபதி=ஜனவரி!! ரக்ஷமாம்!!

 

ஏனெனில் ஜனவரி என்ற மாதப் பெயர் ‘ஜேனஸ்’ என்ற ரோமானிய கடவுள் பெயரிலிருந்து வந்தது என்பர். உண்மையில் ‘ஜேனஸ்’ என்பது ‘கணேஷ்’ என்பதன் திரிபு!

Janus-Vatican

Janus/Ganesh  in Vatican

ஆங்கிலத்தில் ‘ஜி’ என்ற எழுத்தும் ‘ஜே’என்ற எழுத்தும் இடம் மாறுவது சர்வ சாதாரண விஷயம்!

 

ஜேனஸ்=கணேஸ் யார்?

ஜேனஸ் என்ற ரோம் நகர தெய்வத்துக்கு இரண்டு முகங்கள்: ஒன்று கடந்த காலத்தைப் பார்க்கும்; மற்றொன்று எதிர்காலத்தைப் பார்க்கும். இதை வாசல்படிகளில், நுழைவாயில்களில் வைப்பர். நமது இந்துக் கோவில்களில் நுழைவாயிலில் கணபதி/கணேஷ் இருப்பதைப் பார்த்தே அவர்களும் இப்படி வைத்தனர்.

 

மேலும் இந்துக்கள் எல்லா காரியங்களையும் துவங்குவதற்கு முன் கணேஷை வணங்குவர். ஆகவே அவர்களும் ஜனவரியை ஆண்டுக்கு முதல் மாதமாக வைத்தனர். ஆகையால் இது ஆங்கிலப் புத்தாண்டு இல்லை. இந்துப் புத்தாண்டே!

 

ரோமானியர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9ஆம் தேதி கணேஷ் சதுர்த்தி கொண்டாடினர். இன்றைக்கு அல்ல. 2000 ஆண்டுகளுக்கு முன்பு!

 

Sesterce_temple_janus.JPGNERO

Janus Temple coin issued by Roman Emperor Nero

 

ஜேனஸ் கோவில்கள் கி.மு.400 முதல் கி.பி.400 வரை 800 ஆண்டுகளுக்கு இத்தாலி முழுதும் இருந்தன. அவருடைய கோவில்கள் சதுர வடிவில் – 4 பருவங்களைக் குறிக்க—அமைக்கப்பட்டிருந்தன. இதையும் இந்துக்களைப் பார்த்தே செய்தனர். கணபதியின் தனிக் கோவில்கள் தமிழ்நாடு முழுதும் சதுர வடிவிலே இருக்கும்.

 

இத்தாலியில், டைபர் நதிக்கரையில் ஜனிகுலம் என்ற இடத்தில் கணபதி நகரமே அமைக்கப்பட்டது!

 

ஜேனஸ் கையில் ஒரு சாவியும் மற்றொரு கையில் ஒரு தண்டமும் இருக்கும். நாம் அங்குசம், பாசக் கயிற்றைக் கைகளில் காட்டினோம். அவர்கள் சிறிது மாற்றி வைத்தனர். ஜேனஸுக்கும், போருக்கும் தொடர்பு உண்டு. இந்து புராணக் கதைகளிலும் அவர்தான் பூதகணத் தலைவர்.

janus

கணபதி கோவில்களை சாலை ஓரங்களிலும் ரோமானியர் கட்டினர். இன்றும் தமிழ் நாட்டின் சாலை ஓரங்களில் கணபதியைக் காணலாம். இதையெல்லாம் பார்க்கும்போது தமிழ் நாட்டிலிருந்துதான் ரோமுக்கு இவர் போனாரோ என்று என்ன வேண்டியிருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டிலுள்ள பிள்ளையார்பட்டி, திருப்பரங்குன்ற குகையிலுள்ள பிள்ளையார் சிற்பங்கள் ரோமானிய ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின்னால் எழுந்தவை.

மாதங்களில் சம்ஸ்கிருதம்!!!!!!!!!!

சப்த- ம்பர்= செப்டெம்பர்= சப்த =7

அஷ்ட- ஓபர்= அக்டோபர்= 8

நவ- ம்பர்= நவம்பர் = 9

தச- ம்பர் = டிசம்பர்= 10

முன்காலத்தில் மார்ச் மாதம்தான் ஆண்டின் முதல் மாதம். பின்னால் வந்தவர்கள் இதை மாற்றி வைத்தனர். அதற்கும் பின்னர், ஜூலியன் என்ற போப்பாண்டவர் இன்னும் சில காலண்டர் சீர்திருத்தங்களைச் செய்தார். மார்ச் மாதம் முத்லாவது மாதம் என்றால் சப்த, அஷ்ட, நவ, தச= 7,8,9,10 என்பது பொருந்தும். ஆகவே இதுவும் இந்து ஆண்டே. இன்றும் இந்தியவின் தேசிய வருடமான சக வருடம் (தெலுங்கு, கன்னட, மகாராஷ்டிர புத்தாண்டு) மார்ச் மாதத்தை ஒட்டியே துவங்கும். அதுதான் நமது உண்மையான புத்தாண்டு. ஆனால் தமிழ் புத்தாண்டு சூரிய இயக்கத்தின் (சோலார்) அடிப்படையிலும், மற்ற இந்திய புத்தாண்டுகள் சந்திர இயக்க (லூனார்) அடிப்படையிலும் அமைந்தன. ஆகவே இரண்டும் சரியே.

ஆக ஆங்கிலப் புத்தாண்டு ஆங்கிலப் புத்தாண்டல்ல. இந்துப் புத்தாண்டே!! அது வாழும் வரை சம்ஸ்கிருத எண்கள் நினைவில் நிற்கும்.

 

மேலும் இந்துமதம் எதையும் ஜீரணம் செய்துவிடும். ஆங்கிலப் புத்தாண்டன்று பலர், திருத்தணி, பழநி, திருப்பதிக்குப் பாதயாத்திரை செல்வது பெரிய இயக்கமாக வளர்ந்து வருகிறது. சகரர், ஹூணர், கிரேக்கர், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களை ஜீரணம் செய்த நாடு பாரதம். அகாவே இந்து மதம் எதையும் ஜீரண செய்து தனதாக்கிக் கொண்டுவிடும். அஞ்சற்க.

gold ganesh

உலகில் கிறிஸ்தவ, முஸ்லீம் படையெடுப்பாளர்கள் சென்ற அவ்வளவு நாடுகளும் அவர்கள் மயமாய்விட்டன. தென் அமெரிக்கா முழுவதையும் ஸ்பானியர்களும் போர்ச்சுகீசியர்களும், ரோமன் கத்தோலிக்க நாடுகளாக்கினர். ஆப்ரிக்க நாடுகளை முஸ்லீகளும் கிறிஸ்தவர்களும் தமதாக்கினர். அனல் இந்தியாவில் “ஆயிரம் ஆண்டு அன்பிலா அந்நியர் ஆட்சி”க்கும் (பாரதியாரின் வரி) பின்னர், பத்து சதவீதமே மதம் மாற்றப்பட்டனர். அவர்களும் பெரும்பாலும் நம்பிக்கையிலும், கலாசாரத்திலும் இந்துக்களே!

-சுபம்–

(இது போன்ற 2400 ஆராய்ச்சிக் கட்டுரைகள், எனது பிளாக்குகளில் உள. படித்து மகிழ்க)

 

ijanus0001p1

ijanus0001p1

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

 

ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை (Post No. 2440)

KRISHNA MUSLIM

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 30  December 2015

 

Post No. 2440

 

Time uploaded in London :– 6-20 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

உலகப்போக்கு

 

ஹிந்து முஸ்லீம் ஒற்றுமையைக் குலைக்கச் சதி செய்யும் முஸ்லீம் தீவிரவாதிகள்!

 

ச.நாகராஜன்

 

ஹிந்து முஸ்லீம் ஒற்றுமையைக் குலைக்கச் சதி செய்யும் முஸ்லீம் தீவிரவாதிகள் இப்போது அகலக்கால் வைத்துள்ளனர். கிறிஸ்தவ மதம் சார்ந்த மேலை நாடுகளையும் தீவிரவாதத்தால் நடுநடுங்கச் செய்ய வேண்டும் என்ற ‘பரந்த நோக்கத்தை’ இப்போது அவர்கள் கொண்டுள்ளதால் அவர்கள் அடையப் போவது என்ன?

 

இஸ்லாமே அழிந்து போக அல்லது செல்வாக்கு இழந்து போக வழிவகை செய்தவர்கள் ஆகப்போகின்றனர்.

இந்தியாவின் சகிப்புத்தன்மை எல்லையற்றது. உலக சரித்திரத்தில் இதற்கு உவமையாக இன்னொரு நாட்டைக் காண்பிக்க முடியாது.

 

ஹிந்து மதத்தின் பரந்த நோக்கம் ஒப்பற்ற தனி இலக்கணம் கொண்ட ஒன்று. இதற்கு ஒப்பான சர்வமத சமரஸம் என்னும் பரந்த நோக்கத்தைக் கொண்ட இன்னொரு மதம் இல்லை என்பதே உண்மை.

 

இதை ஆர்னால்ட் டாய்ன்பி போன்ற உலக சர்த்திர வல்லுநர்கள் முத்தாய்ப்பாக தங்கள் நூலின் இறுதி உரையில் எழுதி வைத்துள்ளனர்.

 

பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சி, தாங்கள் நாட்டை விட்டு வெளியேறப் போகிறோம் என்று தெரிந்தவுடன் முழு முனைப்பு கொண்ட ஒன்றாக் ஆனது. இதன் விளைவே பாகிஸ்தான்.

அந்த பாகிஸ்தானில் வாழும் முஸ்லீம்களும் கூட   இஸ்லாம் கூறும் சுவர்க்கத்தைக் காணவில்லை. மாறாக தீராத வறுமையையும் ஓயாத சண்டையையும் எப்போதும் திகில கலந்த வாழ்க்கையையுமே கொண்டிருக்கின்றனர்.

இந்தியாவில் ஹிந்துக்களுடன் வாழ்ந்த முஸ்லீம்களின் நல்ல போக்கிற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. அந்த நல்லை போக்கை பிரிட்டிஷார் கெடுத்தது உண்மை. அதைத் தீவிரப்படுத்தியது முஸ்லீம் தீவிரவாதிகள்.

 

diparadana muslims

சரித்திரத்தைப் புரட்டிப் பார்ப்போம்.

 

 

கல்கத்தாவிலிருந்து வெளிவரும் ஆங்கில வார இதழான ட்ரூத் (TRUTH) அதன் பத்தாம் தொகுதியில் 11-12-1942 தேதியிட்ட இதழில் தரும் செய்தி இது:

 

 

ஒரு முஸ்லீம் டெபுடி மாஜிஸ்ட்ரேட் இஸ்லாமை தீவிரமாக பின்பற்றும் நல்லவர். மாமிசத்தை அவர் தொட்டதே இல்லை. கல்கத்தாவில் நடந்த துர்கா பூஜைக்கு அவரும் மற்றவர்க்ளுடன் அழைக்கப்பட்டார்.

 

“நீங்கள் அனைவரும் துர்க்கையின் அருளை வேண்டுகிறீர்கள். அதற்காக இந்த பூஜையை நடத்தி அதற்குத் தங்களால் இயன்ற அளவு உதவி செய்கிறீர்கள். என்னையும் இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். நானும் துர்க்காதேவியின் அருளைப் பெறுகிறேன்” என்று கூறிய அவர் பத்து ரூபாயை நன்கொடையாக அளித்தார்.

(1942இல் பத்து ரூபாய் என்பது பெரிய தொகை!)

 

கிருஷ்ணர் பிறந்த ஜன்மாஷ்டமி அன்று அழைப்பு ஏதுமின்றி விழாவிற்குச் சென்ற அவர் கீர்த்தனையில் கலந்து கொண்டார். கடைசியில் கரமயோகம் பற்றி கீதை உபநிடதங்களை மேற்கோள் காட்டி அரிய சொற்பொழிவு ஒன்றையும் நிகழ்த்தினார்.

இப்படிப்பட்ட சம்பவங்கள் தனித்த ஒன்றாக அந்தக் காலத்தில் அமையவில்லை.ஊருக்கு ஒன்றிரண்டு இது போன்ற எடுத்துக்காட்டுகளைக் காணலாம்.

 

பிரிட்டிஷாரின் திட்டமிட்ட சதி வேலையே தீவிரவாதத்தை விதைத்தது. அது இப்போது வளர்ந்து அவர்களையே தாக்குகிறது.

வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாக!

 

ஹிந்துக்களும் முஸ்லீம்களுடன் ஒற்றுமையாக வாழ்ந்ததை ‘தி இல்லஸ்ட்ரேடட் வீக்லி’ என்ற பிரபல ஆங்கில வாரப் பத்திரிகை ஒரு கட்டுரையாக வெளியிட்டது. இதை  மேலே கூறிய கல்கத்தாவிலிருந்து வெளிவரும் ஆங்கில வார இதழான ட்ரூத் (TRUTH) அதன் ஆறாம் தொகுதியில் 16-12-1938 தேதியிட்ட இதழில் வெளியிட்டது

 

அந்தக் கட்டுரை தரும் செய்தி இது:-

 

மைசூர் மாநிலத்தில் சித்ரதுர்க் மாவட்டத்தில் தவளப்பன குட்டா மலை என்ற செங்குத்தான மலை ஒன்று உள்ளது. இது ஹிந்துக்களாலும் முஸ்லீம்களாலும் போற்றி வணங்கப்படும் ஒரு இடம். தவளப்பா என்ற சிவ பக்தர் கடைசியில் இங்கு வாழ்ந்த இடம் என்பதாலும் அவர் தவளப்ப லிங்கத்தை வழி பட்டு வந்ததாலும் இந்த இடம் ஹிந்துக்களுக்குப் புனித இடமானது. முஸ்லீம்களுக்கோ சியாதுல்லா என்ற முஸ்லீம் சாதுவின் இடமாக அமைந்ததால் வழிபடும் இடமானது.

அடுத்து அனந்தப்பூர் மாவட்டத்தில் ஹிந்துக்களும் முஸ்லீம்களும் இணக்கமாக உள்ள ஒரு ஹிந்துக் கோவிலும் மசூதியும் உள்ளது. மொஹரம் மாதத்தில் ஹிந்துக் கோவிலிலிருந்து அதிகாரிகள் சுண்ணாமபுடன் பிரஷ்களை எடுத்துக் கொண்டு கொஞ்சம் பணத்துடன் மசூதிக்குச் சென்று அதை வெள்ளை அடித்துக் கொடுப்பது வழக்கம். மசூதியில் உள்ளோர் அனைவரும் அன்புடன் அவர்களை வரவேற்று உபசரிப்பதும் வழக்கமானது.

 

 

அதே அனந்தப்பூர் மாவட்டத்தில் சந்த்ரவதன மொஹியார் என்பவரது சமாதி உள்ளது. அதை ஹிந்துக்களும் முஸ்லீம்களும் வழிபடுகின்றனர்.

 

மதுரையின் அருகில் உள்ள முருகனின் ஆறுபடை வீடுகளில்    ஒன்றான திருப்பரங்குன்றத்தில் மலை மீது காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது. அதன் அருகிலேயே சிக்கந்தர் என்ற முஸ்லீம் பெரியாரின் சமாதியும் உள்ளது. இங்கும் ஹிந்துக்களும் முஸ்லீம்களும் இணைந்து வழிபடுகின்றனர்.

 

பெனுகொண்டா மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட வகுப்பாருக்கு இரு குருமார்கள் உள்ளனர்., ஒரு குரு ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர். இன்னொருவர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர். இந்த வகுப்பினர் “ஹொன்னூர் ஃபகீர்கள்’ என்று அழைக்கப்படுகின்றனர்.

இப்படி ஏராளமான உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

 

இந்த இணக்கத்தை மாற்றியது பிரிட்டிஷாரின் சூழ்ச்சி. அதனால் ஏற்பட்டது பாகிஸ்தான்!

 

தவறான வழிகாட்டுதலால் முஸ்லீம் இளைஞர்கள் தங்களின் ஒற்றுமை வழியை மறந்தனர். தீவிரவாதிகளோ அவர்களை மூளைச் சலவை செய்து தங்க்ள் வலையில் “அகப்பட்டவர்களை” இழுத்து நாசகார வேலைகளில் ஈடுபடுத்துகின்றனர்.

அனைத்து ஹிந்துக்களும் எளிய முஸ்லீம்களும் பெரும்பாலும் ஒற்றுமையுடனேயே இந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர். இதை எந்த கிராமத்திலும் நகரத்திலும் நேரடியாகச் சென்று எவரும் காணலாம்.

 

இவர்களைப் பிளவுபடுத்துவது இஸ்லாம் கொள்கைகளைத் தவறாகச் சித்தரிக்கும் கெடுமதியாளர்களே!

 

இவர்களால் இஸ்லாம் தன் பெருமையை இழப்பது தான் வருத்தப்பட வேண்டிய விஷயம்.

 

இழந்து வரும் இந்தப் பெருமையை மீட்பது யார் கையில் உள்ளது?

 

நல்ல இஸ்லாமியர்களின் கையிலேயே உள்ளது.

இழந்த பெருமையை மீட்பார்களா? அல்லது இருப்பதையும்  இழப்பார்களா?

 

காலம் பதில் சொல்லும்!

*****