ரிக் வேத சரமா, கிரீஸ் நாட்டுக்கு போனது எப்படி?

indra

Research paper No 1953

Written by London swaminathan

Date: 25 June 2015

Uploaded in London at காலை 9-50

ரிக்வேதத்தில் (10-108) சரமா என்ற நாயின் கதை பத்தாவது மண்டலத்தில் உள்ளது. அந்த நாய்க்கு இரண்டு குழந்தைகள் (குட்டிகள்). அவற்றின் பெயர் சரமேயஸ். இந்து கிரேக்க நாட்டில் ஹெர்மஸ் ஆனது. பாரசீகர்களுக்கும் (ஈரான்), கிரேக்கர்களுக்கும் (கிரீஸ்) எஸ் – என்ற எழுத்து எல்லாம் எச்- என்ற எழுத்தாகி விடும். சிந்து என்ற நதியின் பெயரை உச்சரிக்க முடியாமல் நமக்கு ஹிந்து என்ற பெயர் சூட்டியவர்களும் அவர்கள்தான்.

சரமா என்பது ஹெர்மஸ் ஆனது மாக்ஸ்முல்லர் காலத்திலிருந்தே அடிபட்ட விஷயம்தான். ஆயினும் “ரிக் வேதத்தில் வரலாறு” — என்ற ஆங்கில நூலை எழுதிய ஸ்ரீகாந்த் தலகரி இதை மூன்று தலைப்புகளில் விரிவாக ஆராய்ந்து சில புதிய விஷயங்களைச் சொல்கிறார். சுருக்கமாகக் காண்போம்:

ரிக் வேதம் உலகிலேயே பழமையான நூல்; இந்துக்களின் பூர்வீக வரலாற்றை இதிலிருந்து ஓரளவு அறியலாம். ஏனெனில் இது வரலாற்று நூல் அல்ல. மதம் பற்றிய நூல்.

சர்மா கதை ரிக் வேதம் தவிர, ஜைமினீய பிராமணம், பிருஹத் தேவதா ஆகிய நூல்களிலும் இருக்கிறது.. சரமா பற்றிய துதி என்ன செப்புகிறது:

1.சரமா நீண்ட பாதை வழியாகச் சென்று ரசா நதியைக் கடந்து, பாணிக்களைச் சந்தித்து, அவர்களுடைய செல்வம் வேண்டும் என்று இந்திரன் கேட்டதைச் சொல்கிறது.

2.பாணிக்கள் அதை நிராகரித்து, இந்திரனை வேண்டுமானால் மாடு மேய்ப்பவனாக நியமிக்கத் தயார் என்று சொல்லி எள்ளி நகையாடுகின்றனர்.

3.சரமா, இதனால் வரும் விளைவுகளைச் சொல்லி எச்சரிக்கிறது.

4.இந்திரனுடன் போரிடத் தயார் என்று சொல்லும் பாணிக்கள், சரமாவைத் தங்கள் பக்கம் வரும்படி கோருகின்றனர்.

5.சரமா, அதை நிராகரித்துவிட்டு இந்திரனிடம் சென்று விடுகிறது.

6.பாணிக்கள், இந்திரனின் பசுக்களைத் திருடிச் சென்று குகைகளில் வைத்தனர். சரமா தூது சென்றும் பலிக்கவில்லை; பின்னர் இந்திரன் சண்டை போட்டு அவைகளை மீட்கிறான்.

சரமேயஸ் பற்றி என்ன அறிகிறோம்?

அவை இரண்டும் யம தர்மனின் காவல் நாய்கள்.

talagheri book

தலகரி சொல்கிறார்: இது அன்றாடம் நிகழும் இயற்கை நிகழ்வைப் பின்னர் கதையாக மாற்றி விட்டனர். அதாவது சூரியன் பூமிக்கு அடியில் (பின்புறம்) சென்று மறைவதையும் பின்னர் மறுநாள் வெளிவருவதையும் கூறும் கதை இது என்கிறார். துதியில் வரும் பசுக்கள்—சூரிய ஒளியையும், சரமா – உதயத்தையும், பாணிக்கள் — இருளையும் குறிக்கும் என்பார்.

எனது கருத்து: இது துவக்கத்தில் சரியாக இருக்கலாம். பின்னர் அதையே உவமையாக்கி மற்றொரு சம்பவத்தைக் குறிக்கவும் பயன்படுத்தி இருக்கலாம்.

பாணிக்கள் என்பவர்களை  பீனீஷியர்கள் என்று இன்னொரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அவர்கள்தான் பணம் (காசு) என்பதையும் அகர வரிசை எழுத்து முறை என்பதையும் உலகிற்குக் கற்றுக் கொடுத்தவர்கள் என்று மேலை நாட்டுப் புத்தகங்கள் கூறும்.

பாணி என்ற சொல்லிலிருந்து வந்த சம்ஸ்கிருதச் சொற்கள் அனைத்தும் வணிக சம்பந்தமானவை:

பாணி = பணம் = வணிக = பனியா/வியாபாரி = ஆபணம் = கடை/மார்க்கெட்

sarama_and_her_chil

முக்கிய தொடர்பு

சரமா கதை, கிரேக்க நாடு தவிர, உலகில் வேறு பல நாடுகளிலும் இருக்கிறது. பாரசீகத்திலும், ரோமானிய சாம்ராஜ்யத்திலும், ஸ்காண்டிநேவிய பண்பாடுள்ள நாடுகளிலும் இருக்கிறது. ஆயினும் அங்கெல்லாம் அது உருச் சிதைந்து காணப்படுகிறது. இவை எல்லாம் தொடர்பு படுத்தும் முழுக்கதை ரிக் வேதம் ஒன்றில்தன் இருக்கிறது!! எடுத்துக் காட்டாக ஹெர்மஸ் என்பது ரோம் கலாசரத்தில் மெர்குரி என்ற தெய்வமாக ஆனதாக எழுதுவர். அவரும் வணிகக் கடவுளே. மெர்கண்டைல் போன்ற வணிகச் சொற்கள் அதிலிருந்தே வந்தன. ஆனால் ஹெர்மஸ் – மெர்குரி வணிக விஷயத்தைத் தொடர்புபடுத்த ரிக் வேத பாணி ஒன்றால்தான் முடியும். இது போல ட்யூடானிக் (ஸ்காண்டிநேவிய) கலாசாரத்தில் அசீர் (அசுர என்பதன் உரு மாறிய வடிவம்), வாணீர் (பாணி என்பதன் சிதைந்த வடிவம்) என்ற இரண்டு வகைத் தெய்வங்கள் சண்டையிடும் கதைகள் உள்ளன. இது நமது புராணங்களில் தேவாசுர யுத்தமாக —- (கடல் கடைந்து அமிர்தம் எடுத்த கதை) —– வருகிறது.

சுருங்கச் சொல்லின் நான்கு நாட்டுக் கதைகளின் மூலம் வேதத்திலுள்ள சரமா கதையில் இருக்கிறது!!

வெள்ளைக்காரன் இந்தியாவுக்குள் நுழைந்தவுடன் ஒரு பெரிய கதை கட்டிவிட்டான். பாருங்கள்! சம்ஸ்கிருதம் போலவே ஐரோப்பிய மொழிகள் எல்லாம் இருக்கின்றன. ஆகையால் நீங்களும் எங்களைப் போல வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். பாருங்கள்! தமிழ் மொழி போலவே, சிதிய மொழி உள்ளது. ஆகையால் திராவிடர்களும் மத்திய தரைக் கடலிலிருந்து வந்தவர்கள் என்று மாக்ஸ்முல்லர், கால்டுவெல் பாதிரியார் எல்லாம் கதை கட்டிவிட்டனர். இவை எல்லாம் இப்போதைய ஆராய்ச்சியில் புஸ்வாணமாகப் போய்விட்டன.

dog3

யார் யாரிடமிருந்து கடன் வாங்கினர்?

இன்னும் சில திராவிடங்களும், மார்கஸீய வாதிகளும், அதுகளும் இதுகளும் — நீங்கள் எல்லாம் வெளியே இருந்து வந்தவர்கள் என்று வாதிடுகிறார்கள் அல்லவா?

அதற்குப் பதில்:

வேதம் என்பது கி.மு.1700 ஐ ஒட்டி எழுந்தது என்பது இப்போது எல்லோராலும் ஒப்புக் கொள்ளப் படுகிறது. அதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர்தான் கிரேக்க மொழியில் நூலே தோன்றியது. லத்தீன், தமிழ் முதலியன அதற்கும் மிகமிகப் பின்னே வந்தவை. ஸ்காண்டிநேவிய கதைகள் எல்லாம் நேற்று (கி.பி.700) வந்தவை. இப்படியெல்லாம் யாராவது புத்திசாலித் தனமாக சொல்லிவிடுவார் என்பதை அறிந்த தந்திரக்கார குள்ள நரி வெள்ளைக் காரன் – வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல- இன்னுமொரு பொய்யையும் ஏற்றிவைத்தான். இதற்கெல்லாம் மூலம் ஒன்று இருந்தது – அதிலிருந்து தோன்றியவை இவை என்றான். ஆனால் அதுவும் செல்லாக் காசு ஆகிவிட்டது.

சம்ஸ்கிருத மொழிக்கும் கிரேக்க மொழிக்கும் இடையே மட்டுமே ஆயிரம் ஆண்டு இடைவெளி! ஆட்டைச் சாப்பிட விரும்பிய ஓநாய் , அட நீ கலக்காவிடில் உன் அப்பன் கலக்கியிருப்பான் என்று சொல்லி ஆட்டை முழுங்கிய ஈசாப் கதை ஞாபகம் வருகிறதல்லவா? அந்த ஓநாய்தான் வெள்ளைத் தோல் படைத்த வெளிநாட்டான்! அந்த ஓநாய்க்காக முதலைக் கண்ணீர் விடுபவைதான் திராவிடங்களும் அதுகளும் இதுகளும்!

முடிவுரை:

1.இந்திய-ஐரோப்பிய புராணக் கதைகளில் வரும் எல்லா அம்சங்களையும் கொண்ட கதைகள் வேதங்களில் மட்டுமே உள்ளன (மற்ற கலாசாரங்களில் இதே கதைகளின் சில அம்சங்கள் மட்டும் உருமாறிச் சிதைக்கப்பட்டு சட்னியாகவோ அவியலாகவோ காணப்படுகின்றன. ஹெர்மஸ் என்னும் கிரேக்க தேவனின் கதையில் சரமா, பாணீக்களின் அம்சங்கள் – அவியல் போலக் காட்சி தரும்).

2.வேதங்களிலுள்ள கதைகள் இல்லாவிடில் இவைகளைத் தொடர்புபடுத்த முடியாமலே போயிருக்கும் (மொழி விஷயத்தில் ஒற்றுமை இருந்தால் மூலக் கதை. கலாசரத்திலும் தொடர்பு இருக்க வேண்டுமல்லவா? அது வேதத்தில் மட்டுமே உளது.

  1. மேலும் பீனிஷியர்கள் பற்றிய தகவல் எல்லாம் காலத்தால் மிகவும் பிந்தியவை. வேதத்தில் உள்ள பாணீக்களுடன் பணம், ஆபணம்(மார்க்கெட்/கடை) முதலியவற்ரைத் தொடர்புபடுத்துவது சரியெனக் கொண்டால், அந்தக் காலத்திலேயே வேத கால மக்கள் வணிகம், வியாபாரம் ஆகியவற்றில் சிறந்து விளங்கினர் என்றும் முடிவு செய்யலாம். (உலகிற்கு பணம் என்ற சொல்லே ரிக் வேதத்தில் இருந்து வந்தது என்று சில வாரங்களுக்கு முன் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன்).

4.எல்லாக் கதைகளிலும் இழையோடும் பொது அம்சங்கள்:–

அ)பசுக்களைத் திருடுதல்

ஆ)சரமா தூது போதல்

இ)பாணிக்கள் என்போர் தீயோராக வருதல்

ஈ)நாய்கள் இறந்தோருடன் செல்லுதல்

–சுபம்–

கலாப மயில் பெருமை!

mayil kuttam

Article No 1945

Written by S NAGARAJAN

Date: 21st  June 2015

Uploaded in London at 6-19 am

By ச.நாகராஜன்

அருணகிரிநாதர் அருளிய நூல்கள்

முருகனின் அனைத்துப் பெருமைகளும் சொல்லில் அடங்கா. ஆனால் அருணகிரிநாதர் அந்தப் பெருமைகளில் பெரும்பாலானவற்றைத் தன் பதினாறாயிரம் திருப்புகழ் பாடல்களில் பாடி வைத்துள்ளார். இன்று நமக்குக் கிடைத்திருப்பதோ சுமார் 1311 பாடல்கள் மட்டுமே!

திருப்புகழுடன் அருணகிரிநாதர் அருளியுள்ள இதர நூல்களாவன:-

கந்தர் அந்தாதி    (நூறு செய்யுள்கள்)

கந்தர் அலங்காரம் (நூறு பாடல்கள்)

கந்தர் அநுபூதி    (51 செய்யுள்கள்)

திருவகுப்பு (மொத்தம் 18 வகுப்புகள்)

வேல் விருத்தம்

மயில் விருத்தம்

சேவல் விருத்தம்

திரு எழு கூற்றிருக்கை

 

சிவத்தின் சாமி, நாம் புரியும் பிழை பொறுக்கும் சாமி

முருகனை அவர் விவரிக்கும் அழகை உணர இரு பாடல்களை மட்டும் இங்கு காண்போம்.

புவிக்குள் பாதமதை நினைபவர்க்கு எனத் தொடங்கும் திருப்புகழில் இறுதிப் பகுதி இது:-

சிவத்தின் சாமி, மயில்மிசை நடிக்கும் சாமி, எமதுளெ

சிறக்கும் சாமி, சொருபமி   தொளிகாணச்

செழிக்கும் சாமி, பிறவியை ஒழிக்கும் சாமி, பவமழை

தெறிக்கும் சாமி முனிவர்க ளிடமேவுந்

தவத்தின் சாமி, புரிபிழை பொறுக்கும் சாமி, குடிநிலை

தரிக்கும் சாமி, அசுரர்கள்     பொடியாகச்

சதைக்கும் சாமி, எமை பணி விதிக்கும் சாமி, சரவண

தகப்பன் சாமி என வரு                 பெருமாளே!

எப்படி? இனிய தமிழ். எளிய தமிழ். அரிய கருத்துக்கள்.

புரிபிழை பொறுத்து நம்மைக் காக்கும் முருகப் பிரானின் அருமைகளை சில வார்த்தைகளில் சொல்லி அருள்கிறார் அருணகிரிநாதர்.

murugan by akila k

வரோதயன்

மயில் விருத்தத்தில் பத்தாவது பாடலில் முருகப் பெருமானின் திருநாமங்கள் அருமையாக தொகுத்துக் கூறப்படுவதைக் காணலாம்.

நிராசத – ராஜஸ குணம் இல்லாதவர்

விராசத – ராஜஸ குணத்திற்கு மாறுபட்ட சத்வ குணம் உடையவர்

வரோதயன் – வர உதயன் – வரங்களுக்கு உறைவிடமானவர்

பராபரம் – மிக மேலான பரம் பொருள்

நிராகுலன் – நிர் ஆகுலன் – துன்பம் இல்லாதவர்

நிராமயன் – நிர் ஆமயன்  (ஆமயம் என்றால் நோய்) நோய் இல்லாதவர்

பிரான் – பிரியான் என்பதன் சுருக்கம் பிரான் ( உயிர்களை விட்டு ஒரு போதும் பிரியாதவர்)

நிலாதெழுதலாலலறமிலானெறி யிலான் —

அறமிலான், நெறியிலான் நிலாது எழுதலால் என மாற்றிப் பார்த்தால் வரும் அர்த்தம் – அறமில்லாதவர்களும் நெறியில்லாதவர்களும் முருகன் திருவடியில் நில்லாது விலகி விடுகிறார்கள்.

ஆக முருகனைத் தொழுவதற்கே ஒரு அடிப்படைத் தகுதி தேவையாக இருப்பதைக் காணலாம். முருக பக்தர்கள் அறநெறி தவறாது வாழ்பவர்கள், புண்ணியசாலிகள் என்பதை அறியலாம்.

நெறி நிலாவிய உலாச இதயன் – நன்னெறிகள் தம்மிடம் விளங்க மகிழ்வுடன் கூடிய உள்ளத்தைக் கொண்டவர்.

இப்படி அரும் பெயர்களைச் சுட்டிக் காட்டும் பாடல் இது தான்:-

நிராசத விராசத வரோதய பராபர

நிராகுல நிராமய பிரான்

இலாதெழு தலாலற மிலானெறி யிலானெறி

நிலாவிய உலாசவி தயன்

குராமலி விராவுமிழ் பராரை யமராநிழல்

குராநிழல் பராவு தணிகைக்

குலாசல சராசர மெலாமினி துலாவிய

குலாவிய கலாப மயிலாம்

புராரிகுமரா குருபரா வெனும் வரோதய

புராதன முராரி மருகன்

புலோசமசை சலாமிடு பலாசன வலாரிபுக

லாகுமயிலாயுதன் நெடுந்

தராதல கிராதர்கள் குலாதவபி ராமவல

சாதனன் விநோத சமரன்

தடாரி விகடாசுரன் குடாரித படாதிகழ்

ஷடாநநன் நடாவு மயிலே

அற்புதமான இந்தப் பாடலில் மயிலின் பெருமை தெரிகிறது.

mayil 1

“திரிபுரத்தை எரித்த சிவபெருமானுடைய குமரனே! குருமூர்த்தியே என்று புகழ்ந்த, வரங்களுக்கு இருப்பிடமானவனும், பழையோனும் ஆகிய திருமாலின் திருமருமகன், கிளி போன்ற இந்திராணி, வணங்குகின்ற இந்திரனுக்கு புகலிடமாகிய வேலாயுதக் கடவுள், நீண்ட, பூமியில் உள்ள, வேடர்கள், குலத்துக்கு சூரியனைப் போல மாப்பிள்ளையாய் வந்த அழகராம் வல்லமையைச் சாதித்தவன், விளையாட்டாகப் போர் புரிகின்றவர், கிரவுஞ்ச மலைக்குப் பகையாக இருப்பவர், தொந்தரவு தந்த அசுரனாகிய சூரனை (சூர்மாவை), வெட்டித் தள்ள கோடாரி போல இருந்தவர், மகிழ்ச்சியுற்று விளங்குகின்ற ஆறு திருமுகங்களை உடையவர், நடத்துகின்ற மயில் தான்  இராஜஸ குணம் இல்லாதவர், சத்வ குணத்தை உடையவர், வரங்களுக்கு இருப்பிடமானவர், மேலான பரம்பொருள், வருத்தம் இல்லாதவர், நோயற்றவர், உயிர்களை விட்டுப் பிரியாதவர், அறமில்லாதவனும் நெறியில்லாதவனும் தம்மிடத்தில் சாராது, விளங்குவதால், நன்னெறியில் விளங்குகின்ற, மகிழ்ச்சியுடன் கூடிய, உள்ளத்தை உடையவர், குராமரத்தில் நிறைந்து கலந்து வெளித் தோன்றும் பருத்த அடிப்பாகத்தில் (திருவிடைக்கழியில்) அமர்ந்து, ஒளி பொருந்திய குரா  மரங்களின் நிழல் மிகுந்துள்ள தணிகை என்கின்ற சிறந்த மலை முதலாக அசைவன, அசையாதனவாகிய எல்லாவற்றிலும் இனிது உலாவிய களித்த தோகை மயில் ஆகும்.”

இதுவே கிருபானந்தவாரியார் தரும் செய்யுளின் பொழிப்புரை. ஆறுமுகன் நடத்தும் மயில் உலகெலாம் உலாவி உவக்கும் பெருமையை உடையது.

சலாம் என்ற வார்த்தை பிரயோகமும் இந்த செய்யுளில் அமைந்திருப்பதைக் காணலாம்.

முருகனின் அழகை மயில் விருத்தம் மூலமாக அறியும் போது மனம் மிக மகிழ்கிறோம்.

இதே பிளாக்கில் லண்டன் சுவாமிநாதன் எழுதிய திருப்புகழ்ஆராய்ச்சிக் கட்டுரைகளையும்   படியுங்கள்:–

 

சலாம் முருகாசலாம் முருகா! அருணகிரிநாதரின் தனி வழி!! —வெளியிட்ட தேதி ஜூன் 25, 2014

அருணகிரிநாதருடன் 60 வினாடி பேட்டி – வெளியிட்ட தேதி ஜனவரி 16, 2012

சம்பந்தருக்கு அடிமை அருணகிரிநாதர்— வெளியிட்ட தேதி ஜனவரி 17, 2013

டாக்டர் முருகனும் ‘பேஷண்ட்’ அருணகிரிநாதரும் – வெளியிட்ட தேதிஜனவரி 15, 2013

தனிமையில் இனிமை –அருணகிரிநாதர் — வெளியிட்ட தேதி ஜனவரி 14, 2013

திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம் – வெளியிட்ட தேதி ஜனவரி22, 2013

நரகத்துக்குப் போவோர் பட்டியல் – வெளியிட்ட தேதி ஜனவரி 23, 2013

தமிழில் திட்டத் தெரியுமாவசைபாடுவது எப்படி? —வெளியிட்ட தேதிஜனவரி 21, 2013

((படங்கள் முக நூல் நண்பர்களனுப்பியவை;நன்றி உரித்தாகுக:சுவாமி))

***************

லண்டனைக் கலக்கிய அற்புதத் தேர்த் திருவிழா!

0a128-img_4265

Written by London swaminathan

Article No.1932

Date : 14th June 2015

Time uploaded in London: 21-34

லண்டனில் இன்று (14 ஜூன் 2015) நடந்த ஹரே க்ருஷ்ணா இயக்க தேர்த் திருவிழா— ரத யாத்ரா – லண்டனை ஒரு கலக்கு கலக்கி விட்டது. மத்திய லண்டனையே குலுக்கியது என்று சொன்னாலும் மிகை இல்லை. ஆண்டுதோறும் நடக்கும் தேர்த் திருவிழாதான் இது. என்றாலும் நான் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் லண்டனில் மீண்டும் ஹரே க்ருஷ்ணா தேர் விழாவில் கலந்து கொண்டதால் 25 ஆண்டுகளில் – கால் நூற்றாண்டில் – ஏற்பட்ட மாறுதல்களை எடை போட்டுப் பார்க்க முடிந்தது.

b9ce0-img_4272

லண்டனில் 25-க்கும் மேலான தமிழ்க் கோவில்கள் உள. அவற்றின் தேர்த் திருவிழாக்களிலும் நான் கலந்து கொள்வதுண்டு. இருந்தபோதிலும் ஹரே கிருஷ்ணா இயக்கத்தினரின் பக்கத்தில் கூட அவர்கள் வர முடியாது. இதற்குக் காரணம் வெள்ளைக்கார பக்தர்கள் இருப்பதாலும், கட்டுப்பாடான ஒரு இயக்கம் என்பதாலும் இவர்கள் ஒருவருக்கு மட்டுமே மத்திய லண்டனில் தேரை இழுக்க அனுமதி தருகிறார்கள். இது ஒரு பெரிய வேறுபாடு. மத்திய லண்டனின் முக்கிய சுற்றுலா இடங்களை தேர் கடந்து செல்வதால் பல்லாயிரம் சுற்றுலாப் பயணிகள் பார்க்கும் வாய்ப்பு கிட்டுகிறது.

இனி இன்றைய தேர்விழாவின் சொல் சித்திரம் இதோ:

ஆண்டுக்கு ஒரு முறை பிரிட்டிஷ் மஹாராணி, பக்கிங்ஹாம் அரண்மனையில்– கார்டன் பார்ட்டி—தோட்ட விருந்து தருவார். ஒரு முறை எனக்கும் என் மனைவிக்கும் அரண்மனைக்கு வர அழைப்பு வந்தது. நானும் என் மனைவியும் போனோம். மஹாராணி மிக அருகில் நின்றோம். ஆனால் அவரோ எங்களைக் கண்டு கொள்ளவில்லை. பகத்தில் இருந்த தெரிந்த முகங்களைப் பார்த்து குசலம் விசாரித்தார். இது ஆண்டுதோறும் நடக்கும். 1000 பேருக்கு அழைப்பு வரும். அங்கே எங்களைப் போன்ற வெஜிட்டேரியன்களுக்கு தனி ஸ்டாலில் உணவு. அது தவிர 20 வகையான ஐஸ்கிரீம், 20 வகையான கேக்குகள், 20 வகையான பானங்கள் என்று பரிமாறினர். இது ஆயிரம் பேருக்குதான்.

IMG_1158

ஆனால் இன்றோ தேர் வந்து நிலை சேரும் டிரபால்கர் சதுக்கத்தில் பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு இலவச சாப்பாடு!! பகல் 12 முதல் மாலை 5 மணி வரை மிக மிக நீண்ட வரிசையில் 200 நாடுகளைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகளும் பக்தர்களோடு நின்று உணவு உண்டு களித்தனர். இந்த அரிய காட்சியை காணும் இந்துக்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் துளிக்கும்.

நான் லண்டன் பல்கலைக் கழகத்தில் பாடம் சொல்லிக் கொடுக்கப் போகும்போது வாரத்தில் ஒரு நாள் ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் வந்து மாணவர்களுக்கு இலவச சாப்பாடு கொடுப்பர். அதை வாங்க எல்லா இன மாணவர்களும் வரிசையில் நிற்பர். இன்றோ அதை விட பல நூறு மடங்கு பல இன மக்கள் வரிசையில் நின்றனர்.

IMG_1219

நான் 25 ஆண்டுகளுக்கு முன் ‘’மார்பிள் ஆர்ச்’’ சென்றபோது தேர் இழுக்க குறைவான ஆட்களே இருந்ததால் நானும் ஒரு கை கொடுத்தேன். இன்றோ பல்லாயிரம் மக்கள்; தேர் பக்கத்தில் சென்று வடக் கயிறைத் தொடக்கூட முடியவில்லை! லண்டனின் முக்கிய கடைத்தெருக்கள், பிக்கடில்லி சர்கஸ், ஹைட் பார்க், டிரபால்கர் ஸ்கொயர் என்று எல்லா இடங்களும் தேர்ச்சக்கரத்தின் தடம் படும் புண்ணியம் பெற்றது. அடியார்களின் பாத துளிகள் பட்ட இடத்தில் நடு ரோட்டில் பல ஹரே கிருஷ்ணா பக்தர்கள் நெடுஞ்சான் கிடையாக விழுந்து நமஸ்கரித்தனர்.

பல்வேறு குழுக்கள் மதுரைத் தேர்த் திருவிழாவில் ஒயிலாட்டம் ஆடுவது போல ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் வந்தனர். ஹரே கிருஷ்ணா, ஹரே ராம என்ற புண்ய கோஷம் ஆங்கில உச்சரிப்பில் மைக்குகள் மூலம் அலறின. மத்திய லண்டன் முழுதும் பக்தி அலைகள் பரவின.

f79dc-img_4281

சில சிறுவர்கள் கிருஷ்ணனாகவும் ராதையாகவும் வேடம் தரித்து வந்து பலரையும் கவர்ந்தனர். தேர் சென்ற வழித்தடம் முழுதும் 200 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளின் காமெராக்கள் பல்லாயிரம் தடவை க்ளிக் சப்தம் எழுப்பின. கிருஷ்ணன் — ராதை வேடம் அணிந்தோருடன் படம் எடுத்துக் கொள்ள போட்ட போட்டி!!

தேர் நிலை சேர்ந்த இடத்தில் பல புத்தகக் கடைகள் — இலவச பகவத்கீதை புத்தகம் விநியோகம் — பொதுவாக அவர்கள் புத்தங்களை விற்பதில்லை. நன்கொடை கொடுத்தால் மட்டும் ஏற்பர்.

இது போன்ற தேர்த்திருவிழாவைப் பார்த்தாலேயே புத்துணர்ச்சி பெற முடியும். எங்கும் நல்ல உணர்வுகளை எழுப்பும் ஒரு சூழ்நிலை. 25 ஆண்டுகளில் ஹரே கிருஷ்ணா இயக்கம் பெரிய வளர்ச்சி அடைந்திருப்பதை உணர முடிந்தது. ஹரே கிருஷ்ணா இயக்கத்தினரின் அதீத பக்தி பாராட்டப்பட வேண்டியதே. சிவன் முதலிய தெய்வங்களை சிறு தெய்வங்கள் என்று கூறுவதால் அவர்கள் சொல்வதை நாம் அப்படியே ஏற்க முடியாவிட்டாலும்  அவர்களுடைய குருட்டுத் தனமான பக்தியையும் கட்டுப்பாட்டையும் மெச்சாமல் இருக்க முடியாது. மது, மாமிசம் சாப்பிடாததும், புகை பிடிக்காததும் அவர்களுடைய கட்டுப்பாட்டுக்கு எடுத்துக் காட்டு.

IMG_1148

இன்றைய லண்டன் தேர்த் திருவிழாவில் போலீஸ் ‘கார்’களும் வரவில்லை—போலீஸ்காரர்களும் வரவில்லை. இயக்கத் தொண்டர்களே கட்டுப்பாடாக வழி நடத்திச் சென்றனர். மற்ற விழாக்களில் முன்னும் பின்னும் போலீஸ்’கார்’கள் வரும். இந்த இயக்கத்தினர் மீது அவ்வளவு நம்பிக்கை! 30 ஆண்டுக்காலத்துக்கும் மேலாக உலகம் முழுதும் பெரிய நகரங்கள் அனைத்திலும் ஹரே கிருஷ்ணா இயக்கத் தேர்கள் பவனி வருவதிலிருந்தே இதை அறியலாம். இந்தியாவின் ஒரிஸ்ஸா மாநில பூரி ஜகந்நாதர்  ரதத்தைப் போல வடிவமைத்து கிருஷ்ணன், பலராமன், சுபத்ராவை வைத்து கொண்டு செல்வர்.

IMG_1150

IMG_1239

ஹரே கிருஷ்ணா, ஹரே ராமா! கிருஷ்ண, க்ருஷ்ணா ஹரே ஹரே!!

பிரார்த்தனையின் சிறப்பு

Indian devotees touches the foot while praying and seek blessings at a 52 foot tall idol of the elephant-headed Hindu god Lord Ganesh during the 'Ganesh Chaturthi' Hindu festival in Hyderabad on September 2, 2011. Hindu devotees bring home idols of Lord Ganesha during the 'Ganesh Chaturthi' in order to invoke his blessings for wisdom and prosperity, during the eleven day long festival which culminates with the immersion of the idols in the Arabian Sea.   AFP PHOTO / Noah SEELAM (Photo credit should read NOAH SEELAM/AFP/Getty Images)

 AFP PHOTO / Noah SEELAM (Photo credit should read NOAH SEELAM/AFP/Getty Images)

Compiled by S NAGARAJAN

Article No.1929

Date :13th June 2015

Time uploaded in London: 20-34

 

By ச.நாகராஜன்

பிரார்த்தனையின் சிறப்பு

பிரார்த்தனை மனிதனுக்கே உள்ள தனி உரிமை. தனிச் சிறப்பு. ஈ, எறும்பு, சிலந்தி, யானை போன்றவை இறைவனை அழைத்து உயர்ந்ததை புராண வாயிலாகப் படிக்கிறோம். என்றாலும் நூலறிவாலும் பட்டறிவாலும் இறைவனின் பெருமையை அறிந்து அவனைத் துதித்துப் போற்றுவது மனிதனுக்கே உரியதாகும்.

ஆகவே தான் அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என ஔவையாரும் ஜந்தூனாம் நர ஜன்ம துர்லபம் என ஆதி சங்கரரும் மனிதப் பிறப்பைச் சிறப்பித்தனர்.

மனிதர்களில் நாத்திகரைத் தவிர அனைவரும் பிரார்த்தனை புரிகின்றனர். பல்வேறு காரணங்களுக்காக. சி.ல பலிக்கின்றன. சில பலிப்பதில்லை.

அரவிந்தரின் அருளுரை

மஹரிஷி அரவிந்தர் இது பற்றிக் கூறியுள்ளதைப் பார்ப்போம். அவரது சீடராக இருந்தவர் இசை விற்பன்னர் திலிப் குமார் ராய்

“Sri Aurobindo came to me” என்ற நூலில் அரவிந்தருடனான தனது அனுபவங்களைச் சுவைபடத் தெரிவித்துள்ளார். அதில் ஒரு இடத்தில் பிரார்த்தனையின் பலிதம் பற்றி அரவிந்தரின் கருத்து தெரிவிக்கப்படுகிறது.

அரவிந்தரின் தாய்வழி மாமன் ஶ்ரீ கிருஷ்ண குமார் மித்ராவின் மூத்த பெண் டாக்டர்களால் கை விடப்பட்டு விட்ட நிலை. அவர் தந்தை கூறினார்: “கடவுள் ஒருவர் தான் இனி துணை; பிரார்த்தனை செய்வோம்” அவர் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தவுடன் குணம் தெரிய ஆரம்பித்தது. டைபாய்ட் ஜூரம் போயே போனது. நோயாளி பிழைத்தார். சில பிரார்த்தனை பலிக்கும். சில பலிக்காது. அனைத்து பிரார்த்தனைகளையும் ஏற்று பலிக்க வைத்தால் கடவுள் மிக மோசமான நிலையில் தள்ளப்படுவார்.

அரவிந்தரின் எழுத்துக்களில் இவை சொல்லப்படுகிறது இப்படி:-

“As for prayer, no hard and fast rule can be laid down. Some prayers are answered, all are not. The eldest daughter of my maternal uncle, Sri Krishna Kumar Mitra (the editor of Sanjivani – not by any means a romantic, occult, supra-physical or even an imaginative person) was abandoned by the doctors after using every resource, all medicines stopped as useless. The father said: ‘There is only God now, let us pray.’

He did and from that moment the girl began to recover, the typhoid fever and all symptoms fled, death also.

I know any number of cases like that. Well? You may ask why should not then all prayers be answered. But why should they? It is not a machinery; put a prayer in the slot and get your asking. Besides, considering all the contradictory things mankind is praying for at the same moment, God would be in a rather awkward hole if he had to grant all of them; it would not do.”

 

மிகத் தெளிவாக விளக்கப்படுகிறது. ஒரே சமயத்தில் இருவர் இரு வேறான நிலைகளில் எதிரும் புதிருமாக பிரார்த்தித்தால் கடவுள் யாருக்கு அருள்வார்?

இறைவனின் வழிகள் தனி. விளக்கத்திற்கு அப்பாற்பட்டவை. (ஏடிஎம் மெஷினில் கார்டை செருகி வேண்டியதை எடுப்பது போல அல்ல பிரார்த்தனை!)

THF_Memorial02

லண்டனிலொரு நிகழ்ச்சியில் திருமதி சீதா வெங்கட்ராமன், திரு.கல்யாண குருக்கள் பிரார்த்தனை

வள்ளுவர், மணிவாசகர், தாயுமானவர் ஆகியோரின் அருளுரைகள்

“வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல” என்ற வள்ளுவர் குறளில் (குறள் 4) இறைவன் இரண்டு நிலைகளுக்கும் அப்பாற்பட்டவன் என்பது தெரிகிறது.

வேண்டத்தக்கது அறிவோய் நீ;

வேண்ட முழுதும் தருவோய் நீ

வேண்டும் அயன் மாற்கு அரியோய்

வேண்டி என்னைப் பணி கொண்டாய்

வேண்டி நீ யாது அருள் செய்தாய்

யானும் அதுவே வேண்டின் அல்லால்

வேண்டும் பரிசொன்று உண்டென்னில்

அதுவும் உன்தன் விருப்பன்றே” என்கிறார் மாணிக்கவாசகர்.

எனக்கு நல்லது எது என்பது உனக்கே தெரியும்; அதை அருள்வது உனது பொறுப்பு என்ற அவரது அருளுரை மனித குலத்திற்கே ஒரு வழி காட்டுதலாக அமைகிறது.

தாயமானவரின்,

எனக்கெனச் செயல் வேறிலை யாவும் இங்கு ஒரு நின்                          தனக்கெனத் தகும் உடல் பொருள் ஆவியும் தந்தேன்                         மனத்தகத்து உள அழுக்கெலாம் மாற்றி                                     எம்பிரான் நீ நினைத்தது எப்படி அப்படி அருளுதல் நீதம்

(நீதம் – முறை)

என்ற பிரார்த்தனை அருமையான பிரார்த்தனை. என் மன அழுக்கை மாற்றி, நீ நினைத்ததை எனக்கு அருள் என்று இறைவனிடம் பொறுப்பை அவர் ஒப்படைக்கிறார்.

பிரார்த்தனை பற்றிய தெளிவு மகான்களின் வாக்கால் பிறக்கிறது.

***************

தஞ்சாவூர் பெரிய கோவில் அதிசயங்கள்

Thanjavur_Big_Temple

தொகுத்து வழங்குபவர்- லண்டன் சுவாமிநாதன்

கட்டுரை எண் 1920

கட்டுரை தேதி- 9 ஜூன் 2015

லண்டனில் பதிவு ஏற்றப்பட்ட நேரம்—காலை 11-00

உங்கள் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்; தஞ்சைப் பெரிய கோவில் ஒரு உலக அதிசயம் என்று; பலமுறை படித்திருப்பிர்கள்.. ஆயினும் இதில்,  பல நூல்களில் உள்ள சுவையான புள்ளி விவரங்களைத் தொகுத்துக் கொடுக்கிறேன்.

தஞ்சாவூர் பெரியகோவிலில் ஐந்து அதிசயங்கள் உள்ளன:

1.வானளாவிய கோபுரம்; 216 அடி உயரம்; எல்லா ஊர்களிலும் கர்ப்பக்கிரகத்துக்கு மேல் சின்ன கோபுரம்/விமானம் இருக்கும். வெளியே பெரிய கோபுரங்கள் இருக்கும். தஞ்சையிலோ கர்ப்பக்கிரகத்துக்கு மேல் 216 அடி கோபுரம்!

2.பெரிய சிவலிங்கம்; சிவலிங்கம் என்பதன் பொருள் கடவுள் உருவமற்றவர் என்பதாகும். 13 அடி உயரம்!

3.கர்ப்பகிரகத்துக்கு நேராக மிகப் பெரிய நந்தி; சிவபெருமானின் வாஹனம்; 12 அடி உயரம். எடை 12 டன்!

4.கோபுரத்தின் உச்சியில் வட்டவடிவ சிகரம். அங்குள்ள கல்லின் எடை 81 டன்!

5.இறுதியாக ஆயிரம் ஆண்டு பழமையான அற்புத ஓவியங்கள்

lord-shiva-linga-

பெரிய கோபுரம், பெரிய லிங்கம், பெரிய நந்தி – இவை அனைத்தும் இக்கோவிலைக் கட்டிய சோழ மாமன்னன் ராஜ ராஜ சோழனின் (கி.பி. 985-1014) பெரிய/ உயர்ந்த சிந்தனையைக் காட்டுகின்றன. நாமும்தான் எதைப் பற்றி எல்லாமோ பெரிய கற்பனை செய்கிறோம்; நடக்கிறதா? இல்லையே! எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் பெரியோர். அதனால்தான் ராஜ ராஜனை இன்றும் உலகம் போற்றுகிறது.

இந்தக் கோவிலை ராஜ ராஜன் தட்சிண மேரு என்றும் அழைத்தான. அதாவது வடதிசையில் மேரு மலை என்பது உயரத்துக்கும்,, புனிதத்துக்கும் பெயர் பெற்ற மலை. அது போல தென் திசையில் அளவிலும், புகழிலும், புனிதத்திலும் பெயர் பெற்றது இக்கோவில்.

இதற்கெல்லாம் அவனுக்கு உறுதுணையாக நின்றவர்கள் யார் தெரியுமா?

6.அவனது சகோதரி குந்தவை

  1. ராஜ ராஜனது குரு – கருவூர் சித்தர்

8.ராஜ ராஜனின் படைத் தளபதி கிருஷ்ணன் ராமன்

அது சரி, நாம் எண்ணதான் நினைத்தாலும் கட்டிடத்துக்கு அழகாக திட்டம் போட்டுக் கட்ட வேண்டுமே; அப்பேற்பட்ட கட்டிடக் கலை நிபுணர்கள் யார்? அவர்கள் பெயரையும் பொறித்து வைத்துள்ளான் ராஜ ராஜன். யார் அவர்கள்?

thanjavur plan

9.குஞ்சர மல்லன், ராஜராஜப் பெருந்தச்சன் என்ற இருவர்.

இந்தக் கோவிலில் வேறு என அதிசயங்கள்?

10.முழுக்க முழுக்க கருங்கற்களால் ஆனது. ஒரு இடத்திலும் காரை பயன்படுத்தவில்லை! (பிற்காலத்தில் நாயக்கர், மராத்தா ஆட்சியில் புதிய சிலைகள், கட்டிடங்கள் சேர்க்கப்பட்டன. அவைகளில் காரை முதலிய பொருட்கள் உண்டு)

  1. குறைந்தது எண்பைத்தைந்து கல்வெட்டுகள் இருக்கின்றன. இவை நமக்கு பல அரிய விஷயங்களைத் தருகின்றன. 400 ஆடல் அழகிகளின் பெயர்களும் அவர்கள் வசித்த வீட்டு இலக்கமும் இருக்கின்றன!

12.ஐம்பதுக்கும் மேலான இசைக்கலைஞர்கள் கோவிலில் இருந்தனர். அவர்கள் பெயர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

KONICA MINOLTA DIGITAL CAMERA

KONICA MINOLTA DIGITAL CAMERA

  1. மொத்தம் கோவில் பணியில் ஈடுபட்ட சுமார் 600 ஊழியர்களின் பெயர்கள், அவர்களுடைய வேலை, அவர்களுடைய ஊதியம் எல்லாம் கல்வெட்டுகளில் உள்ளன. இதையெல்லாம் நுணுக்கமாக கல்லில் பொறித்துவைத்த அவனது நிர்வாகம் எவ்வளவு சீரும் சிறப்புடனும் நடந்திருக்க வேண்டும்!

14.டாக்டர் நாகசாமி, தமிழ்நாடு தொல்பொருட்த் துறை இயக்குநராக இருந்த காலத்தில் இக் கல்வெட்டுகள் பிரசுரமாகியுள்ளன. அவைகளில் இருந்து சில ஆடல் அழகிகளின் பெயர்கள்: சேர மங்கை, எடுத்தபாதம், சோழகுலசுந்தரி, தில்லை அழகி, மதுரவாசகி, மாதேவடிகள், இரவிகுல மாணிக்கம், மா தேவி, சீருடையாள், ஆரா அமுது, மழலைச் சிலம்பு, திகைச் சுடர், காமக்கோடி, பொற்கேசி, ஆறாயிரம், தில்லைக் கூத்தி, செம்பொன், இன்னிளவஞ்சி, கயிலாயம், ஆடவல்லாள், இளங்கோயில், அறிவாட்டி, கல்லறை, சோமநாதி, சுந்தர சோழி, இராமி, சற்பதேவி, ஊதாரி, அரநெறி, குந்தவை, பொற்கேசி, கன்னரதேவி, அருள்மொழி.

15.கர்ப்பக்கிரகத்துக்குள் போவதற்கு முன் 12 அடி உயர துவரபாலகர் சிலைகளைக் காணலாம். இதில் சிற்பி ஒரு அழகிய கற்பனையைப் புகுத்தியுள்ளார். ஒரு யானையை ஒரு பாம்பு விழுங்குகிறது. அந்தப் பாம்பு, துவாரபாலகன் கையிலுள்ள கதையைச் சுற்றி ஒரு புழுப் போல காண்பிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது நாம் காற்பனை செய்ய வேண்டும். யானயின் அளவு நமக்குத் தெரியும். யானையும் பாம்பும் சிறிய அளவுக்கு இருக்குமானால் அந்த துவாரபாலகனின் கதை உருவம் எல்லாம் எவ்வளவு பெரியவை என்று நாம் கற்பனை செய்ய வேண்டும்! அந்தக் கதையைக் கையில் வைத்திருக்கும் துவார பாலகரின் உயரம் என்ன என்பதைக் கற்பனை செய்யவேண்டும். வாயிலைக் காக்கும் துவார பாலகரே இவ்வளவு பெரியவர் என்றால் அவரால் காக்கப்படும் பிருஹதீஸ்வரர் என்னும் பெருவுடையார் எவ்வளவு பெரியவர் என்று கற்பனை செய்யவேண்டும். துவார பாலகரோ பணிவின் சின்னமான விஸ்மய முத்திரையைக் காட்டிய வண்ணம் நிற்கின்றனர்.

Big_Temple-Lingam_Painting

  1. மற்றொரு அதிசயம். 81 டன் எடையுள்ள கல்லை 216 அடி உயரத்துக்கு எப்படி ஏற்றினர் என்பதாகும். தஞ்சைக்கு 9 மைல் தொலைவிலுள்ள சாரப்பள்ளம் என்ற கிராமத்திலிருந்து சரிவாக சாரம் கட்டி கற்களை ஏற்றினர் என்பது ஒரு கருத்து. கோபுரத்தைச் சுற்றி மலைப்பாதை போல சுழல் வட்டப் பாதை அமைத்து அதில் கற்களை இழுத்துச் சென்றிருக்கலாம் என்பது இன்னும் ஒரு கருத்து.

17.கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப் பசேல் என்று காட்சிதரும் வயல் பிரதேசங்களை எல்லாம் கடந்து எங்கோ ஒரு மலையிலிருந்து கற்களைக் கொணர்ந்து சோழ நாடு முழுதும் கோவில்களைக் கட்டியது அதிசயத்திலும் அதிசயம். இது சோழ மாமன்னர்களின் பக்திக்கு எடுத்துக்காட்டு. அதே நேரத்தில் நிர்வாகம், படையெடுப்புகள் ஆகியவற்றிலும் அவர்கள் பின் தங்கவில்லை.

18.இறுதியாக இங்கு ராஜராஜனுடன் அழகிய உருவத்துடன் கருவூர்த்தேவர் என்னும் சித்தரும் காட்சியளிக்கும் ஓவியம் உள்பட பல ஓவியங்களும் உள்ளன. இவை அஜந்தா குகை ஓவியங்களுக்கு இணையான சிறப்பு வாய்ந்தவை.

ஆயிரம் ஆண்டுக்கு முன்னிருந்த சோழ சாம்ராஜ்யத்தில் நாமும் வாழ்ந்திருந்தால் இன்னும் இதன் பெருமைகள் தெரிந்திருக்கும். ஏனெனில் ராஜராஜன் அளித்த பெரும்பாலான நகைகள் இன்று அங்கே இல்லை!

Rajaraja_mural-2

வெளிநாட்டுப் படை எடுப்பாளர்களாலும் தகர்க்கமுடியாத கருங்கல் கோவிலைக் கட்டிய அவன் புகழ் என்றும் நிடித்து, நிலைத்து நிற்கும்.

-சுபம்-

ரோம், கிரீஸில் வாஸ்து கடவுள்

vestatemple_nero

ரோம் நகர வெஸ்டா (வாஸ்து) தேவதை கோவில் (நாணயத்தில்)

Research article by London swaminathan

Article No.1918; Dated 8 June 2015.

Uploaded at London time: காலை 6-09 மணி

வீட்டிலும், கோவில் போன்ற கட்டிடங்களிலும் வாஸ்து புருஷனைப் பூஜிப்பது, வாஸ்து அடிப்படையில் கட்டிடங்களை நிர்மாணிப்பது எல்லாம் ரிக் வேத காலத்திலேயே துவங்கிவிட்டது. அது மட்டுமல்ல அதே பெயரில், அதே நோக்கத்தில் இத்தாலிநாட்டின் தலைநகரான ரோமிலும், கிரேக்க நாட்டிலும் வழிபாடுகள் நடத்தப்பட் டூள்ளன. ஆயினும் அங்கே நிறைய புதிய கதைகளும் எட்டுக்கட்டப் பட்டுள்ளன. எப்படி நம் நாட்டில் ஒரே சிவ பெருமானும், ஒரே மஹாவிஷ்ணுவும் ஊருக்கு ஊருள்ள கோவில்களில் பல ஸ்தல புராணக் கதைகளுடன் விளங்குகின்றனரோ அதைப் போல ரோம், கிரிஸில் வேறுபாடுகள் உண்டு. ஏதோ ஒரு காலத்தில் அங்கு குடியேறிய இந்துக்கள், காலப் போக்கில் பாரதத்துடன் தொடர்பை இழந்தவுடன் அந்த ஊர்க் கடவுளுடன் இணைத்து புதிய கதைகளை உருவாக்கினர் என்று சொல்லலாம்.

ரோம் நகரில் வெஸ்டா என்ற பெயரிலும் கிரேக்க நாட்டில் ஹெஸ்தியா என்ற பெயரிலும் வீட்டிலுள்ள அக்னிமூலையில் இந்த தெய்வங்கள் வழிபட்டன. ஒவ்வொரு வீட்டிலும் குளிர்காலத்தில் சூடு ஏற்றுவதற்காக நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் அக்னி மூலை இருக்கும்.

vesta_coin4

முதலில் ரிக்வேதத்தில் உள்ள விஷயங்களைக் காண்போம். உலகின் மிகப் பழைய மத நூலான் ரிக்வேதம் குறைந்து 3700 ஆண்டுப் பழமையுடையது. இதில் வசிஷ்டர் கோத்ர ரிஷிகள் பாடிய பாடல்கள் ஏழாவது மண்டலத்தில் இருக்கின்றன. அதில் ஒரு பாடலில் (7-54-1) வாஸ்தோஸ்பதி வணங்கப்படுகிறார். வாஸ்தோஸ்பதி என்றால் வீட்டின் கடவுள் எனப்பொருள். மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் நன்மை செய்யவேண்டும்; கால்நடைகளும் குதிரைகளும் பெருகவேண்டும்;நோய்கள் அழிய வேண்டும்; பாதுகாப்பு கிடைக்கவேண்டும் என்று முனிவர்கள் வாஸ்துக் கடவுளை வேண்டுகின்றனர்.

இன்னொரு துதியில் சோமன், த்வஸ்டா ஆகியோராக வழிபடப்படுகிறார். இந்திரனுடன் ஒப்பிடப்படுகிறார்.

பத்தாவது மண்டலத்தில் வரும் ஒரு பாடலில் (10-61-7) அவர் சட்ட நியதிகளை பராமரிப்பவராகவும் கடவுளால் உருவாக்கப்பட்டவராகவும் சித்தரிக்கப்படுகிறார். பிற்காலத்தில் எழுதப்பட்ட கிருஹ்ய சூத்திரங்களில் கிரகப்பிரவேசத்தின் போது அவருக்கு படைப்புகள், காணிக்கைகள் செலுத்தவேண்டும் என்று உள்ளது. அவர் ருத்ரன் போல ஒரு துதியில் போற்றப்பாடாலும் இல்லுறை தெய்வம் அவரே என்று துதிபாடுகின்றனர்.

vesta 3

வெஸ்டா—ஹெஸ்தியா

ரோம் நகர தேவதையாக வெஸ்டா வழிபடப்படுகிறார். ஒவ்வொரு வீட்டிலும் அவர் நெருப்பு மூட்டப்படும் இடத்தில் அவள் உறைவாள். அவளுக்கு நாள் தோறும் படைப்புகள்/காணிக்கைகள் செலுத்த வேண்டும். ரோம் நகரில் ‘போரம்’ என்னும் இடத்தில் அவளுடைய பிரதான கோவில் உள்ளது. அங்கு மார்ச், ஜூன் மாதங்களில் வெஸ்டாலியா என்னும் விழா நடை பெறும். ரோம் நகரிலேயே சிறந்த பெண்கள் அந்தக் கோவிலுக்கு அர்ப்பணிக்கப்படுவர். அவர்கள் அங்கேயே வாழ்ந்து குறைந்தது 30 ஆண்டுகள் ப்ரம்மசாரிணியாக இருந்து விட்டு வெளியே வரலாம். இடையில் கற்புநிலை தவறினால் அவருக்கு கசையடி கொடுக்கப்படும் பின்னர் இந்தக் கசையடிக்குப் பதிலாக அவரைச் சுற்றி சுவர் எழுப்பும் விதிகள் வந்தன. எல்லா பணிகளுக்கும் அந்தக் கோவிலில் எரியும் நந்தாவிளக்கின் ஒளியிலிருந்து தீயை எடுத்துச் செல்ல வேண்டும். விழாக் காலங்களில் பெண்கள் வெறும் கால்களுடன் நடந்து வந்து ரொட்டிகள், அப்பங்களைச் சுட்டுப் படைக்கவேண்டும். வருடம் முழுதும் அங்கு தீ அணையாமல் பாதுகாக்கப்பட்டது. ரோம் நகரில் வெஸ்டாவின் தீ வட்டவடிவான குண்டத்தில் ஏற்றப்பட்டது.

இந்துமத வழக்கங்கள்

இப்பொழுது இவைகளை இந்து மதக் கடவுளருடன் ஒப்பிட்டுப் பார்ப்போம்:-

1.வாஸ்து என்பதே வெஸ்டா என்றும், கிரேக்க மொழியில் ஹெஸ்தியா என்றும் மருவியது

2.எல்லா இடங்களிலும் அக்னியாக, வீட்டுக்கு ஒளியூட்டும் கடவுளாக வழிபடப்பட்டது.

3.பிராமணர் வீடுகளில் தினமும் அக்னிஹோத்ரம், அவுபாசனம், சமிதாதானம் முதலிய ஹோமங்களைச் செய்வர். இதற்காக அணையாத தீ எப்பொழுதும் ஒரு சட்டியில் (உமி) வைக்கப்பட்டிருக்கும். பிறப்பு முதல் இறக்கும்போது தகனக் கிரியை வரை இதிலிருந்தே அக்னியை எடுப்பர்.

4.ஒவ்வொரு பிராமணர் வீட்டிலும் மூன்று வடிவங்களில் தட்சிணாக்கினீயம் (அரை வட்ட ஹோம குண்டம்), கார்கபத்யம் (வட்ட வடிவம்), ஆஹவனீயம் (சதுர வடிவ ஹோம் குண்டம்) ஹோம குண்டங்கள் இருந்தன. இதில் ரோம் நகரில் எப்பொழுதும் வட்டவடிவத்தில் இருக்கவேண்டும் என்று விதித்தனர்.

5.இந்துக்கள் ஆண் தெய்வமாக வஸ்தோஸ்பதியை வழிபட்டனர். ரோமானியர்கள் பெண் தெய்வமாக வழிபட்டனர். ஆனால் நாமும் கிருஹ லெட்சுமி என்றே சொல்லுவோம்

6.இந்துக்கள் கோவில்களில் நந்தாவிளக்கு என்று அனையாத தீபம் வைத்திருப்பர். அதே போல ரோமிலும் வெஸ்டா கோவிலில் தீயை அணையாமல் பாதுகாத்தனர்.இந்துப் பெண்கள் வெறும் கால்களுடன் கோவிலுக்குச் சென்று நைவேத்யம் செய்தது போல ரோமானியர்களும் செய்தனர்.

kalibanganfirealtars.

சிந்து சமவெளியில் யாக குண்டங்கள் (காளிபங்கன்)

  1. பால்டிக், ஸ்லாவ் இனமக்கள் வாழும் நாடுகளில் பெண்கள் திருமணமாகி மறுவீடு செல்லுகையில் அம்மா வீட்டிலுள்ள அக்னி மூலையிலிருந்து அக்னியை (விளக்கு) எடுத்துச் செல்லும் வழக்கம் உண்டு. பிராமணர் வீடுகளிலும் ஆண்கள் பரம்பரை பரம்பரையாக அணையாத தீ வைத்திருப்பர். அந்தக் காலத்தில் மூன்று வடிவங்களில் இருந்த ஹோம இடங்கள் இப்பொழுது ஒரு சட்டியில் எரியும் உமிக்கரியாகச் சுருங்கிவிட்டது. எனது நண்பர்கள் சிலர் இன்றும் இதே முறையில் அக்னிஹோத்ரம் செய்துவருகின்றனர்.
  2. இந்த மூன்று வடிவ யாக குண்டங்கள் சிந்து சமவெளி நாகரீக நகரான காளிபங்கனில் கண்டுபிடிக்கபட்டுள்ளன. இவைகளுக்கு சில அளவுகள், சட்டதிட்டங்கள் உண்டு. அந்தக் கணக்குகள் மிகவும் சிக்கலானவை. அவைகளை விளக்கும் சூல்வ சூத்திரங்கள் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்டன. அதிலிருந்துதான் ஜியோமிதி என்னும் கணித சாத்திரம் உலகிற்கு கிடைத்தது. இது எகிப்து நாட்டில் பிரமிடுகள் கட்டவும் உதவியது. இந்து மத எஞ்ஜினீயர்கள் அங்கு சென்றதால் பிரமிடு கட்டுவோருக்கும் நூல் பிடிப்போர் (சூல்வ சாத்திர நிபுணர்கள்) என்ற பெயர் ஏற்பட்டது. ‘பை’ முதலிய கணித எண்களை அறிந்தோரே வேத கால யாக குண்டங்களை அமைக்கமுடியும்.

9.வெஸ்டா கோவிலில் கன்னிப் பெண்கள் இருந்தது போல இந்துக் கோவில்களிலும் தேவதாசிகள் இருந்தனர்.

10.இந்தியாவில் எப்படி ஒவ்வொரு நகரத்துக்கும் ஒரு தேவதை உண்டோ அப்படியே ரோம் நகர தேவதையாக வெஸ்டா வணக்கப்பட்டாள்.

temple3

ஆதி காலத்தில் பிராமணர் வீடுகளில், இருந்த மூன்று வடிவ யாக குண்டங்கள்

நான்கு நூல்களில் கிடைத்த விஷயங்களைத் தொகுத்து நான் இவைகளை ஒப்பிட்டு ஆராய்ந்தேன். அதன் விளைவே இக்கட்டுரை.

சங்கத் தமிழ் இலக்கியங்களில் உள்ள வாஸ்து சாஸ்திர விஷயங்களைத் தனி கட்டுரையாகத் தருவேன்.

ரிக் வேதத்தில் பத்து ராஜா யுத்தம் !

fdabc-om2bdeepam

ஆராய்ச்சிக் கட்டுரை எண்: 1905

எழுதியவர்- லண்டன் சுவாமிநாதன்

தேதி: 2 ஜூன் 2015

லண்டன் நேரம்: காலை 10-58

உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் ஒரு முக்கியமான வரலாற்று விஷயம் இருக்கிறது. மஹாபாரத யுத்தம்தான் உலகில் முதல் முதலில் அதிக நாடுகள் கலந்து கொண்ட யுத்தம். அந்தப் போரில் 29 நாடுகள் கலந்து கொண்டன. ஆனால் அதற்கும் முன்னதாக ஒரு பெரிய யுத்தம் நடந்தது. அதை வேதத்தை மொழி பெயர்த்த 20 வெளிநாட்டு “அறிஞர்கள்” மூடி மறைத்துவிட்டனர். ஆனால் இது பற்றி ரிக்வேதத்தில் நிறைய இடங்களில் வருகிறது.

எப்படி அர்ஜுனனும், கிருஷ்ணனும் காண்டவ வனத்தை எரித்தவுடன் மய தானவன் தலைமையில் ஒரு பெரிய அணி தென் அமெரிக்காவிலுள்ள பல இடங்களுக்குச் சென்று மாயா நாகரீகத்தைத் துவக்கினார்களோ அதே போல பத்து ராஜா யுத்தத்துக்குப் பிறகு நம்மவர்கள் ஈரான், கிரீஸ் வரை சென்று நாகரீகத்தைப் பரப்பினர். காண்டவ வனம் எரிப்புக்குப் பின்னர் , பாரதத்திலேயே தங்கியோர் கோண்டு இன மலைஜாதி மக்கள் ஆவர். அவர்கள் இருக்கும் இடம் கோண்டுவானா பிரதேசம் என்று இன்றும் அழைக்கப்படுகிறது. கோண்ட் பழங்குடிகளின் பெயர், கோண்ட்வானா (காண்டவ வனா) பிரதேசம் ஆகியன எல்லாம் காண்டவ வனம் என்னும் சொல்லிலிருந்து வந்தது என்பது கூட பலருக்குத் தெரியாது.

தச ராக்ஞ யுத்தம்

ராஜா என்ற சொல் இன்று வரை இமயம் முதல் இலங்கையின் தென் கோடி வரை எல்லா மொழிகளிலும் வழங்கிவருகிறது. தமிழில் “ர” என்ற எழுத்தில் சொற்கள் துவங்கக் கூடாது என்று தொல்காப்பியர் தடை போட்டதால் ராஜாவை “அரசன்” என்று ஆக்கி சங்க காலம் முதல் தமிழர்களும் சம்ஸ்கிருதச் சொல்லைப் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் வேத காலத்தில் பத்து அரசர்கள் இருந்ததாகச் சொன்னால் தங்களுடைய ஆரிய-திராவிட இனவெறிக் கொள்கை எல்லாம் தவிடு பொடியாகி விடும் என்று பயந்து பத்துப் பேரும் பழங்குடி இனக் குழுக்களின் தலைவர்கள் என்று வெளிநாட்டினர் முத்திரை குத்தி இதை அடியோடு மறைத்துவிட்டனர். இந்திய வரலாறு படித்த எவருக்கும் வேதத்தில் ஏராளமான இடங்களில் இந்த பத்து ராஜா யுத்தம் வருவதும் அவர்கள் கிரேக்கம் வரை சென்று நாகரீகத்தை நிறுவியதும் தெரியாது.

ad4fe-lamp2bsara2bvilakku

எல்லோரும் கால்டுவெல் பாதிரியார் சொன்னமாதிரி தமிழர்கள், வடமேற்கு திசையிலிருந்து (துருக்கி) இந்தியாவில் புகுந்தனர், மாக்ஸ் முல்லர் சொன்ன மாதிரி ஆரியர்கள் மத்திய ஆசியாவில் இருந்து இந்தியாவுக்குள் புகுந்தனர் என்று எண்ணி ஏமாந்திருந்தனர். இளிச்சவாயனைக் கண்டால் எருதும் மச்சான் முறை கொண்டாடும் – என்பது தமிழ்ப் பழமொழி. இங்கிலாந்தில் ரவுடி என்று பெயர் எடுத்து தற்கொலை செய்துகொள்ளப் போன ராபர்ட் கிளைவ் இங்கு கைப்பிடி ஆட்களுடன் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையே நிறுவியவுடன் இந்துக்கள் ஒற்றுமையற்ற நெல்லிக்காய் மூட்டை என்றும் இளிச்சவாயர்கள் என்றும் கண்டு கொண்டனர். ஆக 20 வெளிநாட்டு “அறிஞர்களும்’ மனம் போன போக்கில் வேதத்தை மொழி பெயர்த்தனர். நம்மவர்களுக்கோ தமிழும் தெரியாது, சம்ஸ்கிருதமும் தெரியாது. ஆங்கிலமும் தெரியாது. ஆக ஆங்கிலத்தில் எதையும் எதிர்த்து எழுதவில்லை.

ஆங்கிலத்தில் இரண்டு கடிகாரங்கள் எப்பொழுதும் ஒரே நேரத்தைக் காட்டாது – என்று ஒரு பழமொழி உண்டு. அது போல இரண்டு வெள்ளைக்காரர்கள் வேதம் பற்றி ஒரே மொழி பெயர்ப்பை வெளியிடவில்ல. ஆயினும் வெள்ளைத் தோல் அறிஞர்கள் அனைவரும் ஒப்புக் கொண்ட விஷயம் வடக்கத்தியானும் தமிழனும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களே என்று.

மேலும் உலகம் கி.மு4004ல் அக்டோபர் 23ம் தேதி காலை ஒன்பது மணிக்குக் கடவுளால் படைக்கப்பட்டது என்று பைபிள் பிரசாரகர்கள் உரத்த குரலில் பிரசாரம் செய்வதை இவர்கள் மனதார நம்பினர். ஆகையால் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களைக் குறைகூறி ஒரு வரி கூட எழுதவில்லை. இத்தனை வெளிநாட்டோர் வேதங்களை அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்தும் மற்ற மதங்களைத் தொடவே இல்லை.

கிரேக்கர்கள்தான் நாகரீகத்தின் சிகரத்தைத் தொட்டவர்கள் என்று அவர்களை இந்திரனே சந்திரனே என்று புகழ்ந்து தள்ளினர். ஏனெனில் கிரேக்க நாட்டை இவர்கள் அடிமைப் படுத்த முடியவில்லை.

இதுமட்டுமின்றி இந்தியர்களை மட்டமும் தட்டினர். எகிப்தியர்களுக்கு கி.மு.3100 முதல் அரசர்கள் உண்டு

சுமேரியர்களுக்கு கி.மு.3100 முதல் அரசர்கள் உண்டு

சீனர்களுக்கு கி.மு.3100 முதல் அரசர்கள் உண்டு

மாயா இனத்தினருக்கு கி.மு.3100 முதல் அரசர்கள் உண்டு. ஆனால் இந்தியாவில் மட்டும் புத்தர் காலத்துக்குப் பின்னர்தான் (கி.மு.600) அரசர்கள் உண்டு. சிந்து சமவெளி நாகரீகத்தில் கூடக் கிடையாது என்று புத்தகம் எழுதினர். அதை இன்று வரை நாம் படித்துக் கொண்டும் இருக்கிறோம். அவர்களுக்குத் தெரியும் இது சுய மரியாதை கெட்ட இனம். அப்படி சுயமரியாதையுடன் யாராவது குரல் கொடுத்தால், 2 திராவிடங்களையும் மார்க்சிஸ்டுகளையும் காசு கொடுத்து ஏவி விடலாம் என்று.

வெள்ளைக்காரன் சதி இன்றும் நடக்கிறது. யாராவது இந்துமததை எதிர்த்து கதை எழுதினால் அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டு அவனுடைய வங்கிக் கணக்கில் ஒரு மில்லியன் டாலரைப் ‘பம்ப்’ செய்வர். ஏதேனும் புறச்சூழல் பற்றி கிளர்ச்சிகளைத் தூண்டிவிட்டு அவர்களுக்கு நிதி உதவி செய்வர். இதை எல்லாம் லண்டனில் உடகார்ந்து கொண்டு பார்க்கையில் தெளிவாகக் காண முடிகிறது.வெறும் திகிடுதத்தங் களையும், புறம்போக்குகளையும் திரைக்குப் பின்னால் இருந்து இயக்குவர்.

44971-deepa2bmangala

இப்பொழுது பத்து ராஜா யுத்தத்துக்கு வருவோம்:

சுதாஸ் என்று ஒரு மன்னன் இருந்தான். அவன் பரத ராஜ்யத்தை ஆண்டு வந்தான் அவனுக்கு விஸ்வாமித்ரர் குல குரு. அவரது ஆலோசனையில் படை எடுத்துச் சென்று விபாஸ், சுதுத்ரி நதிக்கரைகளில் சில அரசர்களை வென்றான். பின்னர் விஸ்வாமித்ரருடன் கருத்து வேறுபாடு ஏற்படவே அவரைப் பதவி நீக்கம் செய்துவிட்டு வசிஷ்டரை குல குருவாக நியமித்தான். இதனால் வசிட்டர்-விசுவாமித்திரர் இடையே நிரந்தரப் பகைமை ஏற்பட்டது.

விசுவாமித்திரர், பத்து ராஜ்யங்களின் அரசர்களைக் கூட்டிக் கொண்டு வந்து சுதாஸைத் தாக்கினார். ஆனால் அந்தப் பத்துப் பேரையும் சுதாஸ், மண்ணைக் கவ்வ வைத்தான். வந்த பத்து அரசர்களில் இரண்டு பேர் நதியில் மூழ்கி இறந்தனர். மற்றொருவர் போர்க்களத்தில் வீர மரணம் அடைந்தார். ஏனையோர் ஓடிப்போனார்கள் என்று சொல்லத் தேவை இல்லை. இது பாருஸ்னி நதிக் கரையில் நடந்தது.

இதற்குப் பின்னர் மேலும் மூவர் அவருடன் யமுனைக் கரையில் மோதினான். அவர்களுக்கும் அதே கதி—அதாவது சகதி!

சுதாசுடன் மோதிய பத்து ராஜாக்கள்: புரு, யது, துர்வாச, அனு, த்ருஹ்யு, பலனஸ், அலின, பக்து, சிவா, விஸ்வானின்

இவர்களை நான் அரசர்கள் என்று சொல்லுவதற்குக் காரணம் என்ன?

1.வேதத்தின் பழைய பகுதிலேயே கங்கைச் சமவெளி பற்றி பாடப் பட்டுள்ளது. கங்கை முதல் ஈரான் வரை பரவியிருந்த உலகின் அப்போதைய மிகப் பெரிய நாட்டில் பல ராஜாக்கள் இருப்பது இயல்பே. இதே போல பாபிலோனியாவில் ஒரே நேரத்தில் ஆறு ஏழு ராஜ்யங்கள் இருந்ததைக் காண்கிறாம். கிரேக்க நாட்டில் ஒவ்வொரு நகரமும் ஒரு நாடு. சுதாஸ் காலத்திலேயே யமுனைக் கரையிலும் ஒரு போர் நிகழ்ந்தது.

2.ரிக் வேததை அடுத்துள்ள வேதங்களிலேயே அஸ்வமேத யக்ஞம் பற்றி வருகிறது. இது சிறு பிள்ளை விளையாடும் அம்மா, அப்பா விளையாட்டல்ல. மாபெரும் சாம்ராஜ்யங்களை உருவாக்க பக்கத்து நாடுகளில் குதிரையை உலவவிட்டு அதை எல்லாம் வென்ற கதை இது. அப்படிச் செய்த மன்னர்களின் பட்டியல் சதபத பிராமணத்தில் உள்ளது.

  1. மேலும் புத்தர் காலத்திலேயே 16 பெரிய நாடுகள் இருந்தது உறுதியாகத் தெரிகிறது. மாபாரதக் கதையில் 29 நாடுகள் வருகின்றன. இவை எல்லாம் ஓரிரவில் ஆகாசத்திலுந்து குதிக்க முதியாது.
  1. இதை விட பெரிய சான்று ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் சபா, சமிதி என்ற் அமைப்புகளில் உள்ளன. ரிக் வேத சபை என்ற சம்ஸ்கிருதச் சொல்லை இன்றுகூட தமிழர்கள் அவை என்று பயன்படுத்துகிறோம். ச என்னும் எழுத்தை தமிழர்கள் பயன்படுத்தக் கூடாது என்று தொல்காப்பியர் தடை போட்டதால் சபை என்பதை அவை என்று மாற்றிக் கொண்டோம். சமிதி என்பது இன்றும் ஆங்கிலத்தில் கமிட்டி என்ற பெயரில் புழங்குகிறது. இந்த இரண்டு சபைகளும் அரசனுக்கு ஆலோசனை வழங்கியது வேதங்களில் வருகிறது. உலகின் முதல் ஜனநாயக அமைப்பு இவைதான். ஆக வேத காலத்திலேயே அரசன் இருந்தது மட்டும் அல்ல. அரசனுக்கு ஆலோசனை வழங்கும் பொது மக்கள் அமைப்பும் இருந்தன. இந்த விஷயம் எல்லாம் ஆரிய-திராவிட இனவெறிக் கொள்கையைப் பரப்புவோர் வயிற்றில் புளி கரைத்தது. ஆக பத்து ராஜா யுத்தம் சின்னப் பயல்கள் சண்டை என்று எழுதிவிட்டனர்.

பத்துராஜா யுத்தத்துக்குப் பின்னர் பேட என்ற மன்னன் தலைமையில் அஜஸ், சிக்ருஸ், யக்சுஸ் ஆகிய மூன்று நாட்டு மன்னர்கள் சுதாசைத் தாக்கி தோல்வி கண்டனர்.

5c3af-lamp2bdeepa

இதில் யக்சுஸ் எனப்படும் யக்ஷர்கள் கி.மு 1800 ல் எகிப்தைத் தாக்கி நீண்ட காலம் எகிப்தை ஆண்டனர். அவர்கள்தான் முதல் முதலில் எகிப்தில் குதிரைகளைப் போரில் பயன்படுத்தி எகிப்தியர்களுக்கும் குதிரைப் படை பற்றி கற்றுத்தந்தனர். த்ருஹ்யூ எற நாட்டில் இருந்து சென்றோர் ட்ரூய்ட்ஸ் என்ற பெயரில் ஐரோப்பா முழுவதும் சூரிய வழிபாட்டைப் பரப்பினர்.

முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்கமுடியுமா? இப்பொழுது ஸ்ரீகாந்த் தலகரி போன்ற அறிஞர்கள் வெளி நாட்டு அறிஞர்களைச் சமைத்து புளிக்கறி வைக்கின்றனர். அது என்ன? தலகரி செய்யும் புளிக்கறி? ஆக உலகம் முழுதும் வேத கால நாகரீகத்தைப் பரப்பிய புகழ் இந்த பத்து நாட்டு மக்களியே சேரும்.

ப்ருதுஸ் அல்லது பார்த்தவாஸ்

பரசுஸ் அல்லது பார்ஸ்வாஸ்

பக்தஸ், பக்தூன்ஸ்

பலனாஸ்/பலூசிஸ்

சிவாஸ் (சிபி முதலியோர்/சோழர்களின் மூதாதையர்)

விசானின்ஸ்/பைசாசாஸ்

சிம்யூஸ்/ அல்பேனியார்கள்

அலைனஸ்- ஹெல்லனீஸ்/ கிரேக்கர்

ப்ருகுஸ்- துருக்கியர்.

ஒரு நாட்டு மக்கள் அந்த நாட்டின் பெயரால் அழைக்கப்படுவது தொன்றுதொட்டு இருந்து வரும் பழக்கம். சோழ நாட்டு பிராமணர்கள் சோழியா என்றும் குஜராத்துக்குப் பாண்டிய நாட்டிலிருந்து சென்ற பிராமணர் பாண்டியா என்றும், தெலுங்கு தேசத்தில் இருந்து சென்றோர் தில்லான் (த்ரிலிங்க தேச=தில்லன்) என்றும், சரஸ்வதி நதிதீரத்தில் இருந்து சென்றவர்கள் சாரஸ்வத பிராமணர் என்றும், திராவிட (தென்) பகுதிலிருந்து சென்றவர்கள் திராவிட் என்றும் அழைக்கப்படுகின்றனர். இவை இனப் பெயர்கள் இல்லை; நாட்டின் பெயர்கள்.

Prthus or Parthavas (RV 7-83-1) Parthians

Parsus or Parsvas (7-83-1) Persians

Pakthas (7-18-7) Paktoons

Bhalanas (7-18-7) Baluchis

Sivas (7-18-7) Kivas

Visanins  (7-18-7) Pisachas/Dards

Simyus (718-5) Sarmatians(ancient Albanians)

Alinas (7-18-7) Alans /Hellennes/ Ancient Greeks

Bhrgus (7-18-6) Phyrgians

ஆக வெள்ளைக்காரன் எழுதியதெல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய்விட்டன.

இந்தப் பூவுலகில் யாராலும் வேதங்களின் காலத்தை சொல்லமுடியாது: மாக்ஸ்முல்லர்

சிந்துவெளி ஆண் மிருகங்கள்

சிந்து வெளி முத்திரைகளில்,  ஆண் மிருகங்களின்  ஆதிக்கம்

Compiled by London swaminathan

Article No.1902; Dated 1 June 2015.

Uploaded at London time: 9-23 am

தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும்

சூழ்கலை வாணர்களும் — இவள்

என்று பிறந்தவள் என்றுணராத

இயல்பினளாம் எங்கள் தாய்.

 

நாவினில் வேதம் உடையவள் கையில்

நலந்திகழ் வாளுடையாள் – தனை

மேவினர்க்கு இன்னருள் செய்பவள் தீயரை

வீழ்த்திடும் தோளுடையாள். –பாரதியார்

 

பாரத அன்னையைப் புகழ்ந்த பாரதியார், உடனே அவள் நாவினில் வேதம் உடையவள் என்று சொல்லி, பாரதம் எவ்வளவு பழமையானதோ, அவ்வளவு பழமையானது வேதமும் என்பதை உறுதிபடக் கூறுகிறார்.

எக்காலத்தும் இந்தியாவுக்கே வராமல், இங்கிலாந்தில் இருந்துகொண்டே வேதத்தை மொழிபெயர்த்த ஜெர்மானியர் மாக்ஸ் முல்லர், வேதங்களின் காலம் கி.மு.1200–க்கு முன்னதாக இருக்கலாம் என்று சொன்னார். உடனே அதை எதிர்த்து அறிஞர் உலகம் போர்க்கொடி உயர்த்தியது. இப்படி போர்க்கொடி உயர்த்தியவர்களும் மேலை நாட்டவரே! வில்சன், பார்த்தலேமி, செயின்ட் ஹில்லேர், விட்னி, கோல்ட்ஸ்டக்கர் (Wilson, Barthelemy, St.Hillaire, Whitney, Goldstucker)

போன்றோர் மாக்ஸ் முல்லர் கருத்தை ஏற்கவில்லை. உடனே மாக்ஸ்முல்லர் ஜகா வாங்கினார். அறிஞர்கள் அனைவர் சொல்லுவதையும் நான் அப்படியே ஏற்கிறேன். நான் கி.மு.1200–க்கும் கீழாக யாரும் வேதத்தைக் கொண்டுவரக்கூடாது என்று சொன்னேனே தவிர, அதுதான் வேதத்தின் காலம் என்று சொல்லவில்லை என்றார்.

ரிக் வேதத்தில் இருக்கும்  வான சாத்திரக் குறிப்புகளைக் கொண்டு, மாக்ஸ் முல்லருக்கு நீண்ட நெடுங்காலம் முன்னரே ஆராய்ச்சி மேற்கொண்ட, இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் திலகரும், ஜெர்மன் அறிஞர் ஜாகோபியும் (Tilak 1904, Jacobi 1894) வேத காலத்தை கி. மு 4000 என்று காட்டினர்.

17ef9-vedapatam

Max Muller:–

I need hardly say that I agree with every word of my critics. I have repeatedly dwelt on the hypothetical character of the dates., which I ventured to assign to the first periods of Vedic literature; all I have claimed for them has been that they are the minimum dates………………

If now we ask how we can fix the dates of these three periods, it is quite clear that we cannot hope to fix a terminum a qua. Whether the Vedic hymns were composed 1000 or  1500 or  2000 or 3000 years BC, NO POWER ON EARTH WILL EVER DETERMINE” (Max Muller 1890)

ஆனால் ஆரிய-திராவிட இனவெறிக் கொள்கையைப் பின்பற்றுவோர், ஆரியர்கள் வந்து, கறுப்புத் தோலுடைய பூர்வ குடிமக்களை விரட்டி விட்டதாக நீண்ட நெடுங்காலமாகப் பிரசாரம் செய்துவந்தனர். இந்தப் பிரசாரம் 200 வருடங்கள் நடந்தபின்னர் 1920 ஆம் ஆண்டுக்குப் பின், சிந்து வெளியில் இரண்டு நகரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. “வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது”. பார்த்தீர்களா, நாங்கள் அன்றே சொன்னோம். ஆரியர்கள் வந்து இந்த மக்களை விரட்டினார்கள் என்று. இது உண்மையானது என்பதற்கு சான்று கிடைத்துவிட்டது என்றனர். ஆக மீண்டும் எல்லோரும் வேதத்தின் காலம் கி.மு. 1200 என்று எழுதத் துவங்கினர். இப்பொழுது இது எல்லாம் பொய்யாய் பழங்கதையாய்ப் போய்விட்டது.

காரணம்?

சிந்து சமவெளியில் ஒரு திராவிடர் எலும்புக்கூடு கூட கிடைக்கவில்லை! கிடைத்தது எல்லாம் ஆரிய எலும்புக்கூடுகளே. அதுவரை ஆகாசத்துக்கும் பூமிக்கும் குதித்தவர்கள் எலும்புக்கூடு விஷயத்தில் கப்புச்சிப்பு என்று வாய் மூடி மௌனம் ஆகிவிட்டனர். கிடைத்த எலும்புக்கூடுகள் எல்லாம் பஞ்சாபியரை போல அந்த இடத்து மக்களின் உடல் ஆகிருதி உடையவர்கள். வேறு சிலவும் உண்டு. ஆனால் திராவிடம் இல்லை. கிடைத்த எலும்புக்கூடுகளும் மிகச் சில. ஆரியர்கள் படுகொலை நடத்தியிருந்தால். பல்லாயிரம் திராவிட எலும்புக்கூடுகள் இருக்க வேண்டுமே என்று யாரவது ஒரு சிலர் கேட்டு விடப் போகிறார்களே என்று எண்ணி, திராவிடர்கள், பயந்துகொண்டு 3000 மைல்களுக்கு ஓடிப் போய் தமிழ் நாட்டில் உகார்ந்து கொண்டனர் என்று சொல்லி திராவிடர்களுக்கு அதி பயங்கரக் கோழை என்று பட்டமும் சூட்டினர்.

சிந்து சமவெளிப் பகுதியில் ஆராய்சி நடத்திய ஜான் மார்ஷல் போன்றவர்களை ஆராய்ச்சியாளர்கள் என்று சொல்லுவதா, மதப் பிரசாரகர்கள் என்று சொல்லுவதா என்று கூட எண்ணத் தோன்றுகிறது ஆராய்ச்சியாளர்கள் யாரும் 30 எலும்புக்கூடுகளைப் பார்த்துவிட்டு இந்திரன் குற்றவாளி என்று சொல்லமாட்டார்கள். ஒரு ஆரய்ச்சியளனுக்குள்ள மனப் பக்குவம் இல்லாத இனவெறியன் என்பது இதன் மூலம் சொல்லாமலே விளங்கும்!

vedic fire altar.chattisgarh

வேத யாக குண்டம், சட்டிஷ்கர்

மேலும் இப்பொழுது சிந்துவெளி முத்திரைகளில் காணப்படும் மர்மச் சின்னம் சோம ரசம் வடிகட்டும் பாத்திரம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக் கொள்கின்றனர். இதுவரை சிறிதும் பெரிதுமாக 2000 சிந்து வெளி நகர, கிராமங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. மேலும் சரஸ்வதி நதியின் காலமும் அது மறைந்த காலமும் தெரிந்துவிட்டதால், வேதங்களின் பழமையும் குறைந்தது கி.மு 1700 என்று இந்துமத எதிரிகளும் ஒப்புக்கொள்ளத் துவங்கி விட்டனர்.

மொஹஞ்சதாரோ ஹரப்பாவில் பெரிய அகலமான மதில் சுவர்கள் கி.மு 2000 வாக்கிலேயே உள்ளன. இவர்கள் யாரைக் கண்டு பயந்து கி.மு 2000 வாக்கில் அவ்வளவு பெரிய மதில் சுவர்களை எழுப்பினர்? ஒரு வேளை சேர, சோழ, பாண்டியர்கள் 1800 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து மோதிக் கொண்டது போல ஹரப்பாவும், மொஹஞ்சதாரோவும் சண்டை போட்டார்களா?

மேலும் காலிபங்கன், லோதல், டோலவீரா முதலிய பல இடங்களில் யாக குண்டங்கள், கருகிய ஹோம சாம்பல் ஆகியனவும் கிடைத்திருக்கின்றன.

எல்லா இடங்களிலும் ஏன் முத்திரைகள் கிடைக்கவில்லை? கிடைத்த எல்லா முத்திரைகளிலும் மிருகங்களின் ஆண் வகை மட்டும் காணப்படுகிறதே? இவர்கள் பெண்களை எதிர்க்கும் அல்லது மட்டம் தட்டும் கும்பலா? ஆயிரத்துக்கும் அதிகமான சின்னங்களில் காளைச் சின்னத்தைப் பொறித்த மக்கள் ஏன் பசுமாட்டைப் பொறிக்கவில்லை? ஒருவேளை புனிதச் சின்னம் என்பதால் பசுவை விட்டு விட்டனரா? குதிரை எலும்புகள் கிடைத்தபோது மட்டும் அது மேல் மட்டத்தில் கிடைத்தது என்று சொல்லிவிட்டு, முழு ஒட்டக எலும்புக்கூடு கிடைதது பற்றி மௌனம் சாதிப்பது ஏன்? இப்படிப் பல கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கின்றன.

ஒட்டுமொத்த முடிவுரை:

1அங்கு வாழ்ந்தவர்கள் ஆரியர்களும் இல்லை, திராவிடர்களும் இல்லை. வேதகால இந்துக்கள்.

2.அவர்களில் இப்பொழுது இந்து மதத்தில் இருப்பது போலவே பலதரப்பட்ட மக்கள் இருந்தனர். சிலர் கிராமதேவதைகளை வழிபடுவது போல பெண் தெய்வங்களையும் மற்றும் பலர் ஆண் தெய்வங்களையும் வணங்கினர்.

3.ஒர்புறம் கந்தர்வர்கள் ஆதிக்கம் இருந்ததால் இசை, நடனம் ஆகியன வளர்ந்தன.

4.உலகிலுள்ள எல்லா பழைய நாகரீகங்களிலும் பெரிய கோவில்கள்/ வழிபாட்டு இடங்கள் இருக்கின்றன. ஆனால் சிந்து வெளியில் அப்படி இல்லை. ஆகவே அது வேத காலத்தை ஒட்டிய– பெரிய கோவில்கள் இல்லாத நாகரீகமே

5.ஹரப்பா நகரத்தில் பல இன மக்கள் வசித்தது குறித்து 2013-ல் நேஷனல் ஜியாக்ரபிக் மேகஸின் ஒரு ஆரய்ச்சிக் கட்டுரையையும் வெளியிட்டு இருக்கிறது.

விவேகாநந்தரின் 30 அற்புதப் பொன் மொழிகள்!

vive1

Compiled by London Swaminathan

Article No.1892;  Dated 27 மே 2015.

Uploaded at London time 11-55 am 

 

2015 ஜூன் காலண்டர்

விவேகாநந்தரின் 30 அற்புதப் பொன் மொழிகள்!

இந்த மேற்கோள்கள் எல்லாம் “எழுமின்! விழிமின்!” என்ற விவேகானந்த கேந்திர வெளியீட்டில் இருந்து எடுக்கப்பட்டவை; நன்றி.

சுவாமியின் பொன்மொழி காலண்டர் – மன்மத வருடம்- ஆனி (ஜூன் 2015)

இந்த பிளாக்—கில் இதுவரை தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆயிரத்துக்கும் மேலான தமிழ், சம்ஸ்கிருத பொன் மொழிகள் வெளியிடப் பட்டுள்ளன! படித்துப் பயன் பெறுக!!

முக்கிய நாட்கள்/ விழாக்கள்:– ஜூன் 1: வைகாசி விசாகம்; 19-ரம்ஜான் மாத துவக்கம், 24- ஆனி உத்தரம் நடராஜர் அபிஷேகம்

 

ஏகாதசி  : 12 & 28; அமாவாசை- 16;  பவுர்ணமி- 2.

முகூர்த்த நாட்கள்:– 4, 7, 8, 12, 26, 29

 

 vive2

ஜூன் 1 திங்கட்கிழமை

 

தன்னம்பிக்கை இலாதவன் தான் நாஸ்தீகன்.. கடோபநிஷதத்தைப் படித்தவர்களுக்கு நினைவிருக்கும். நசிகேதன் சொல்கிறான்,” நான் பலரினும் மேம்பட்டவன்; எவருக்கும் தாழ்ந்தவனல்லன்; எங்குமே நான் கடைசி அல்ல; ஏதாவதொன்றைச் செய்ய முடியும்” – பக்கம் 81

 

ஜூன் 2 செவ்வாய்க்கிழமை

நசிகேதனின் நம்பிக்கையுடன் 12 சிறுவர்கள் கிடைத்தால்  இந்த நாட்டின் சிந்தனையையும், நாட்டங்களையும், அபிலாஷைகளையும் புதியதொரு பாதையில் என்னால் திருப்பிவிட்டுவிட முடியும் –பக்கம் 206

 

ஜூன் 3 புதன்கிழமை

படித்த இளஞர்களை ஒன்றுதிரட்டி இணையுங்கள். புல்லைக்கூட கயிறாகத் திரித்துப் பின்னிப் இணைத்தால் அதைகொண்டு மத யானையையும் கட்டிப் போட்டுவிட முடியும் என்பதை நினைவிற் கொள்ளுங்கள் -–பக்கம் 207

 

ஜூன் 4 வியாழக்கிழமை

பெரிய கோப அலை மனதில் எழுந்தால் அதற்கு எதிரிடையான ஒரு அலையை எழுப்புவதால் கோபத்தைக் கட்டுப் படுத்தலாம்.அப்பொழுது அன்பைப் பற்றி நினைக்க வேண்டும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே கடும் கோபம் நிலவும் நேரத்தில் குழந்தை உள்ளே வருகிறது. குழந்தையை அவள் அணைத்து முத்தமிடுகிறாள். அங்கே  பழைய கோப அலை செத்துப் போய் புதிய அன்பு அலை எழுகிறது. –பக்கம் 203

 

ஜூன் 5 வெள்ளிக்கிழமை

தோல்விகள் வாழ்க்கையை அழகு பண்ணுகின்றன. அவையின்றி வாழ்வு எப்படி இருக்கும்? போராட்டங்கள் இல்லை என்றால் வாழ்க்கையே வாழத் தகுதி அற்றதாகிவிடும். வாழ்க்கையாகிற கவிதை எங்கே இருக்கும்? –பக்கம் 194

 

vive3

ஜூன் 6 சனிக்கிழமை

சோதிடம், ரகசிய வித்தைகள் இவற்றை எல்லாம் நாடுவது பொதுவாக பலவீனமான மனதின் அறிகுறி. ஆகவே இப்படி எண்ணம் வரும்போது ஒரு டாக்டரிடம் உடம்பைக் காட்டி, நல்ல உணவு சாப்பிட்டுவிட்டு, ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும்–பக்கம் 191

 

ஜூன் 7 ஞாயிற்றுக் கிழமை

ஓவியம் தீட்டுகிறவன், தான் என்ற அஹங்காரத்தை இழந்துவிட்டுத் தனது ஓவியத்தில் மூழ்கி விடுவானாயின், அவனால் உன்னதமான ஓவியங்களைத் தீட்டமுடியும். யோகத்தின் மூலம் இறைவனுடன் ஒன்றிவிட்ட மனிதன் தன்னலம் கருத மாட்டான். எல்லாக் காரியங்களையும் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று கீதை உபதேசிக்கிறது. –பக்கம் 185

 

ஜூன் 8 திங்கட்கிழமை

பண ஆசையோ, புகழ் ஆசையோ, வேறெந்த ஆசையோ இன்றி, வேறு எந்த உள் நோக்கமும் இல்லாமல், வேலை செய்கிறவன் தான் மிகச் சிறப்பாக வேலை செய்யமுடியும். அவ்வாறு ஒரு மனிதனால் வேலை செய்ய முடியும்  பொழுது அவன் ஒரு புத்தன்  ஆகி விடுவான். –பக்கம் 182

 

ஜூன் 9 செவ்வாய்க்கிழமை

நாம் எல்லாம் பிச்சைக்காரர்கள். நாம் எதைச்செய்தாலும் பிரதிபலனை எதிர்பார்க்கிறோம். நாம் எல்லாம் வியாபாரிகள்; வாழ்க்கையை, நல்ல குணங்களை, சமயத்தை நாம் விலை பேசுகிறோம்.அந்தோ! அன்பைக் கூட நாம் வியாபாரம் பண்ணுகிறோமே! பக்கம் 181

 

ஜூன் 10 புதன்கிழமை

மனிதனுக்குள் புதைந்திருக்கும் பூரணத்தை வெளிப்படுத்துவதே கல்வி எனப்படும். மனிதனுக்குள் புதைந்திருக்கும் தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்துவதே சமயம் எனப்படும்—பக்கம் 173

 

vive4

ஜூன் 11 வியாழக்கிழமை

ஒரு தலைவனிடம் ஒழுக்கம் இல்லாவிட்டால் அவனிடம் மக்களுக்குப் பக்தி ஏற்பட முடியாது. அவனிடம் மாசு மறுவற்ற தூய்மை இருக்குமாயின் மக்களுக்கு அவனிடம் நிரந்தரமான பக்தியும் நம்பிக்கையும் நிச்சயமாக இருக்கும் – பக்கம் 168

 

 

ஜூன் 12 வெள்ளிக்கிழமை

மகாவீர ஹனுமானின் ஒழுக்கப் பண்பினை உங்களது லட்சியமாக நீங்கள் ஆக்கிக்கொள்ள வேண்டும். ராமச் சந்திரனின் ஆணையால் அவர் எவ்வாறு கடலைக் கடந்தார் என்று பாருங்கள், வாழ்வையோ, சாவையோ பற்றி அவர் ஒரு சிறிதும் அக்கறைப் படவில்லை. புலன்களனைத்தும் அவர் வசப்பட்டிருந்தன. ஆச்சரியமான விவேகி அவர். எப்படித் தொண்டாற்ற வேண்டும் என்பதற்கு பெரும் உதாரணமாக விளங்கிய அவரது வாழ்க்கையை ஒட்டி நீங்கள் உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் –பக்கம் 176

 

ஜூன் 13 சனிக்கிழமை

உலகத்தின் பாரங்களை எல்லாம் சுமக்க நீங்கள் ஆயத்தம் என்றால் தாராளமாக அதனை ஏற்றுக்கொள்ளுங்கள்..ஓர் எருதின் கொம்பில் ஒரு கொசு நீண்ட நேரம் உட்கார்ந்து இருந்தது. அதற்கு மனச் சாட்சி உறுத்தவே, மன்னிக்கவும் நான் உங்களைத் தொந்தரவு செய்து விட்டேன்; போய்விடுகிறேன் என்றது. எருதோ, தொந்தரவு எதுவுமில்லை. உங்கள் குடும்ப சகிதமாக வந்து உட்கார்ந்து விட்டுப் போங்கள். நீங்கள் என்னை என்ன செய்துவிட முடியும் என்றது. –பக்கம் 194

 

ஜூன் 14 ஞாயிற்றுக் கிழமை

யாருக்குக் கீழ்ப்படிதல் தெரியுமோ, அவனுக்குத் த்லைமை தாங்கவும் தெரியும். முதலில் கீழ்ப்படியக் கற்றுக் கொள்ளுங்கள். மேலை நாட்டினரிடையே சுதந்திர உணர்ச்சி தீவிரமானதாக இருந்தாலும், கீழ்ப்படிகிற உணர்ச்சியும் அதே அளவுக்குத் தீவிரமாக உள்ளது – பக்கம் 166

 

ஜூன் 15 திங்கட்கிழமை

ஒவ்வொரு பணியும் மூன்று நிலைகளைக் கடந்தே செல்ல வேண்டும். முதலில் அதனை இகழ்ச்சியாக நினைப்பார்கள்; இரண்டாவதாக எதிர்ப்பு வரும்; மூன்றாவதாக தனை ஒப்புக் கொள்வார்கள் – பக்கம் 164

vive5

ஜூன் 16 செவ்வாய்க்கிழமை

ஐரோப்பியர்களே! உங்களை நான் ஒன்று கேட்கலாமா? எந்த ஒரு நாட்டையாவது நீங்கள் மேல் நிலைக்கு உயர்த்தி இருக்கிறீர்களா? எங்காவது பல்வீனமான இனத்தினரைக் கண்டால் அவர்களைப் பூண்டோடு வேரறுத்திருக்கிறீர்கள். அவர்கள் நிலங்களில் நீங்கள் குடி ஏறி இருக்கிறீர்கள். உங்களுடைய அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியுஜிலாந்து, பசிபிக் தீவுகள், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் வரலாறு என்ன? தாம் வாழ்வதற்காக மற்ற னைவரையும் அழிப்பது ஐரோப்பிய மக்களின் குறிக்கோள் ஆகும் – பக்கம் 136

 

ஜூன் 17 புதன்கிழமை

பாரத தேசம் முழுவதும் எழுந்து நின்று ஹிந்து மஹா சமுத்திரத்துக்கு அடியிலுள்ள எலா மண்ணையும் வாரியெடுத்து மேற்கத்திய நாடுகளின் மீது வீசினாலும்கூட, நீங்கள் இன்று எங்கள் மீது சேறு வீசுகிற அளவில் தினையளவுகூடப் பதிலுக்குப் பதில் செய்ததாக ஆகாது. — பக்கம் 156

 

ஜூன் 18 வியாழக்கிழமை

ஆரியர்கள் வெளி நாட்டிலிருந்து படை எடுத்து வந்தார்கள் என்றும் பூர்வீக குடிகளிடமிருந்து அவர்களுடைய நிலங்களைப் பிடுங்கிக் கொண்டார்கள் என்றும், அவர்களை நிர்மூலமாக்கிவிட்டுப் பாரதத்தில் குடி ஏறினார்கள் என்றும் கூறுகிறார்கள். இதெல்லாம் கலப்படமற்ற பொய்; முட்டாள்தனமான பேச்சு ஆகும்; இந்த ராட்சதப் புளுகுகள் எல்லாம் நமது பிள்ளைகளுக்குக் கற்பிக்கப்படு வருகின்றன. இது உண்மையில் மிக மிக மோசமான செயல் ஆகும். – பக்கம் 134

 

ஜூன் 19 வெள்ளிக்கிழமை

நாம் அச்சமற்ற உயர்ந்த வீராங்கனைகளைத் தோற்றுவிப்போம். சங்க மித்திரை, மீரா, அஹல்யா, லீலா முதலியோர் விட்டுச் சென்ற உயர் பரபம்பரையைப் பின்பறக்கூடிய பெண்மணிகளை உண்டாக்குவோம். தியாகிகளை, திருத் தொண்டர்களை, வீரர்களைப் பெற்றெடுக்கும் தாய்மார்களாக அவர்களை நாம் உருவாக்குவோம் – பக்கம் 128

ஜூன் 20 சனிக்கிழமை

உபநிடதங்கள், பெரும் சக்திச் சுரங்கமாகும். உலகம் முழுவதற்கும் வீரமளிக்கப் போதுமான அளவு சக்தி இதற்கு உண்டு. இதைக் கொண்டு உலகமனைத்தையும் புத்துயிர் பெறச் செய்ய, பலம் பெறச் செய்ய, சக்தித் துடிப்பு பெறச் செய்ய முடியும் – பக்கம் 108

 

vive6

ஜூன் 21 ஞாயிற்றுக் கிழமை

நான் ஆண்களுக்கு எதைக் கூறுவேனோ அதையே பெண்களுக்கும் கூறுவேன். பாரத நாட்டின் மீது நம்பிக்கை வையுங்கள். பாரத நாட்டின் கோட்பாடுகளின் மீது நம்பிக்கை வையுங்கள்; வலைமை பெற்றிருங்கள்:நம்பிக்கை கொள்ளுங்கள்; வெட்கப்படாதிருங்கள்; பிறரிடமிருந்து வாங்கிக் கொள்வதற்கு ஒரு சிறிது உண்டென்றாலும், பிறருக்குக் கொடுப்பதற்கு ஹிந்து மக்களிடம் உலகில் எந்த மக்களினத்தைக் காட்டிலும் அளவிட முடியாத விஷயங்கள் உள்ளன என்பதை நினைவிற் கொள்ளுங்கள் – பகம் 129

 

ஜூன் 22 திங்கட்கிழமை

அதர்வ வேத சம்ஹிதையிலிருந்து அற்புதமான ஒரு மந்திரம் என் நினைவுக்கு வருகிறது:-“நீங்கள் அனைவரும் ஒரே மனத்துடன் இருங்கள்; நீங்கள் அனைவரும் ஒரே சிந்தனையுடன் இருங்கள். ஏனெனில் பழங்காலத்தில் தெய்வங்கள் ஒரே மனத்துடன் இருந்ததால் ஆகுதிகளைப் பெற முடிந்தது. கடவுளர் ஒரே மனத்துடன் இருப்பதால்தான் மனிதர்களால் அவர்களை வழிபட முடிகிறது.” – என்று கூறுகிறது. ஒருமனப்பட்டு விளங்குவதே ஒரு இயக்கத்தின் வலிமையின் ரகசியம் – பக்கம் 99

 

ஜூன் 23 செவ்வாய்க்கிழமை

நான் ஒரு ஆங்கிலேயன், எதையும் என்னால் செய்து முடிக்க முடியும் என்று ஒரு ஆங்கிலச் சிறுவன் கூறுவான்.அமெரிக்கச் சிறுவனும், ஐரோப்பியச் சிறுவனும் கூட அப்படியே கூறுவார்கள். இங்கே நமது சிறுவர்கள் அப்படிச் சொல்லுவார்களா? முடியாது. அவர்களுடைய தந்தையர்கள் கூட அப்படிச் சொல்ல மாட்டார்களே! நாம் அந்த அளவுக்குத் தன்னம்பிக்கையை இழந்து விட்டோம் – பக்கம் 110

 

ஜூன் 24 புதன்கிழமை

பிறரிடமிருந்து நாம் பல விஷயங்களைக் கற்கத்தான் வேண்டும்; ஆம், கற்க மறுப்பவன் செத்தவன் ஆகிவிட்டான் எனக் கொள்க.”மாணிக்கத்தை நிகர்த்த பெண்மணி தாழ்ந்த ஜாதியில் தோன்றினாலும், அவளை நீ மனைவியாகக் கொள்ளுவாயாக. தாழ் குடிப் பிறந்த ஞானியிடமிருந் தாவது, உயர்ந்த ஞானத்தை, அவர் திருவடிகளில் சேவை செய்து பெறுவாயாக; சண்டாளனிடமிருந்தாவது, அவனுக்குத் தொண்டு செய்து முக்திக்கு மார்க்கத்தைப் பெறுவாயாக – என்று மனு (2-238) கூறியுள்ளார். பிறரிடமிருந்து நல்லன அனைத்தையும் கற்போம் –பக்கம் 89

 

ஜூன் 25 வியாழக்கிழமை

நண்பர்களே! பலமுள்ளவர்களாகுங்கள். நான் அளிக்கக்கூடிய புத்திமதி இதுதான்; நீங்கள் கீதையைப் படிப்பதைவிடக் கால்பந்து ஆடுவதன் மூலம் சுவர்க்கத்துக்கு அருகில் செல்வீர்கள். நான் தைரியமாகவே இதைச் சொல்கிறேன். உங்களுக்கு இவற்றைச் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது; ஏனெனில் உங்களை நான் நேசிக்கிறேன் – பக்கம் 96

vive7 

ஜூன் 26 வெள்ளிக்கிழமை

சமூக சீர்திருத்தவாதிகளின் ஆவேச மனோ வேகம் மின்சார அதிர்ச்சி போல ஆகி, தூங்குகிற இந்த பிரம்மாண்டமான சமூகத்தை எழுப்ப அவசியமாகவே இருந்தது. ஆனால் அவர்கள் நிர்மாணிப்பவர்களாக இராமல், தகர்க்கிறவர்களாக இருந்தார்கள். ஆகவே அவர்களே அழிந்து போகும் தன்மையினராதலால் மடிந்தனர். –பக்கம் 55

 

ஜூன் 27 சனிக்கிழமை

ஸ்ரீ இராமகிருஷ்ணரின் அவதார காலம் முதல் கீழ்த் திசையின் அடிவானத்தில் இளம் சூரியனின் கதிர்களால் அருணோதய ஒளி தோன்றியுள்ளது. காலம் செல்லச் செல்ல அது இந்த நாட்டை மத்தியான கால சூரியனின் வெளிச்சத்தால் ஒளிபெறச் செய்யும் – பக்கம் 72

ஜூன் 28 ஞாயிற்றுக் கிழமை

நாம் ஒருபோதும் புதிதாகப் படைப்பதில்லை; இருப்பனவற்றை இடம் மாற்றி வைக்கிறோம்; புதிதாக எதுவும் நமக்குக் கிடைக்காது. பொருள்களின் அமைப்பு நிலையைத் தான் மாற்ற முடியும், விதையானது பொறுமையாக மெதுவாக மரமாக வளர்கிறது. உண்மைக்காக நமது சக்திகளைச் செலவிட வேண்டும் புதிய உண்மைகளை உற்பத்தி செய்ய முயலக் கூடாது.  பக்கம் 63

ஜூன் 29 திங்கட்கிழமை

வாழும் அளவு நான் கற்கிறேன் – என்று சொல்வார் ஸ்ரீ இராம கிருஷ்ணர்.கற்றுக் கொள்வதற்கு ஒன்றுமில்லை என்று கருதுகிற மனிதனோ, சமூகமோ மரணத்தின் வாய்க்குள் புகுந்துவிட்டதாக அறிந்து கொள்ளுங்கள். ஆம்! மேலை நாட்டினரிடமிருந்து நாம் கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டியவை பல உள்ளன. ஆனால் அஞ்ச வேண்டுவனவும் உள்ளன.—பக்கம் 52

 

ஜூன் 30 செவ்வாய்க்கிழமை

இந்த நாடு தத்துவ ஞானத்துக்குப் புனிதமான இடம்; நீதி நெறி ஒழுக்கத்துக்கும் ஆன்மீகத்துக்கும் புனிதமான இடம்; தனது மிருக சக்திகளுடன் இடையறாது போராடுகிற மனிதனுக்குச் சிறிது ஓய்வு தந்து, சிந்திக்கத் தூண்டுகிற புனிதமான பூமி இது. உலகில் மிகச் சிறந்தவர்களின் திருவடிகள் நடமாடிய பூமி பாரதம்- பக்கம் 23 

 -சுபம்-

ரிக் வேதத்திலிருந்து வந்தது “பணம்”!

dac86-baal012b18002bbce252c2blouvre2bmuseum252c2bparis

குழந்தைகளைப் பலி வாங்கும் பால் (வேதத்தில் வால என்னும்    அசுரன்)

Written by London swaminathan

Research Article No.1891

Date: 26 May 2015; London Time 14-59

ரிக் வேதத்தில் நிறைய ரகசியங்கள் உள்ளன. அதில் சில பாணி, பண(ம்) என்ற சொற்களாகும். இந்தியா முழுவதும்  பணம் (காசு) என்ற சொல் தமிழ் உள்பட எல்லா மொழிகளிலும் புழக்கத்தில் உள்ளது. இதே போல ஆங்கிலத்தில் மணி என்ற சொல் இந்த அர்த்ததில் பயன்படுத்தப்படுகிறது. இவை எல்லாம் ரிக் வேதத்தில் பல இடங்களில் குறிப்பிடப்படும் “பாணி” என்ற இனத்திலிருந்து வந்த சொற்களாகும்.

பாணிக்கள், “பீனிஷியர்கள்” என்று அழைக்கப்படுவர். அவர்கள் கி.மு.2000 முதல் கார்த்தேஜ் (இப்பொழுது ஆப்பிரிக்காவில் உள்ள டுனீஷியா) மற்றும் மத்திய தரைக் கடல் நாடுகளான லெபனான், சிரியா போன்ற இடங்களில் காலனி வைத்து ஆதிக்கம் செலுத்தினர். இவர்கள்தான் உலகத்திற்கு அகரவரிசை எழுத்துக்களைக் கற்பித்தவர்கள் என்றும், பணம் என்பதைச் சொல்லிக் கொடுத்தவர்கள் என்றும் அதற்கு முன் பண்ட மாற்று முறையே உலகெங்கிலும் இருந்தது என்றும் என்சைக்ளோபீடியாக்கள் (கலைக் களஞ்சியங்கள்) சொல்லும்.

பீனிஷியர்களின் ஆல்பபெட்/அகரவரிசைதான் பிராமி என்னும் இந்திய எழுத்து முறைக்கு மூலம். நம் மூலமாக தென் கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்துக்கும் எழுத்து முறை ஏற்றுமதியானது என்று ஆராய்ச்சியாளர்கள் பகர்வர்.

ரிக் வேத பாணிகளுக்கும், வட ஆப்பிரிக்க பீனிஷியர்களுக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்று கதைத்த வெளிநாட்டு அறிஞர்கள், பின்னர் அதைப் பூசி மெழுகி மழுப்பிவிட்டனர். எது எதெல்லாம் தாங்கள் கூறும் ஆரிய-திராவிட இனவெறிக்  கொள்கைகளுக்கு முரண்படுகிறதோ அதை எல்லாம் சத்தம் போடாமல் அமுக்கிவிடுவது அவர்கள் வழக்கம்.

உண்மையில் பாணீக்கள் பற்றி ரிக்வேதம், அதர்வ வேதம் சொல்லும் பல கருத்துக்கள், அவர்கள் பீனிஷியர்களே என்று காட்டுகின்றன. பாணி என்பது வணிக (வியாபாரிகள்) என்று மாறி இன்று இந்தியாவில் எல்லா மொழிகளிலும் உள்ளது.வணிக என்பதும் ரிக் வேதத்தில் வருகிறது.

ப=வ=ம ஆகிய மூன்று எழுத்துக்களும் ஒன்றுக்கொன்று இடம் மாறும் என்பது மொழி இயல் அறிஞர்களுக்குத் தெரியும். இது பற்றி ஒரு பட்டியலையே எனது மொழி ஆராய்ச்சிக் கட்டுரைகளில் கொடுத்து இருக்கிறேன். நாம் வங்கம் என்று சொன்னால் அந்தப் பகுதி மக்கள் பெங்கால் என்பர். மற்ற சில சொற்கள்—மானம் = வானம், முழித்தான்=விழித்தான்.

85777-map2bof2bphoenicia

வட  ஆப்பிரிக்க கார்த்தேஜ் (டுனீசியா), மத்திய தரைக் கடல் நாடுகள்

ஆக இதே விதியை பாணி, வணிக ஆகியவற்றுக்கும் பயன்படுத்தலாம்:-

பாணி=வாணிக=வணிஜ்= பண= மணி(ஆங்கிலச் சொல்)

இவர்கள் பற்றி உலகின் பழைய நூலான ரிக் வேதம் என்ன சொல்கிறது?

1.பாணீக்கள் பணக்காரர்கள், கஞ்சர்கள்

2.அவர்கள் திருடர்கள்; கொள்ளைக்காரர்கள். வேத கால இந்துக்களின் பசுக்களைத் திருடிச் சென்றனர்.

3.பேராசைக்காரர்கள்; செல்வத்தைக் குவிப்பவர்கள்

4.அவர்கள் வேதமுறைப்படி யாக யக்ஞங்கள் செய்ய மாட்டார்கள்; கடவுளைக் கும்பிட மாட்டார்கள்; ஐயர்களுக்கு தட்சிணை கொடுக்க மாட்டார்கள்.

5.அவர்கள் தஸ்யூக்கள்; தாசர்கள்

6.அவர்கள் க்ராதின் (இதற்கு எந்த அறிஞருக்கும் இது வரையும் பொருள் தெரியவில்லை).

7.இவர்கள் வட மொழி அல்லாத கொடுமையான ஒரு மொழி (ம்ருத்ரவாச) பேசினர். ஆனால் எப்பொழுதுமே வேற்று மொழி பேசுவோரை மற்ற மொழியினர் இப்படி மட்டம் தட்டுவது தெரிந்ததே. கிரேக்கர்கள், மற்ற நாட்டினரை காட்டுமிராண்டிகள் (பார்பாரிக்) என்றும் தமிழர்களைத் தெலுங்கர்கள் அரவா என்றும் பைபிளைப் பின்பற்றாதவர்கள் பேகன் என்றும் குரானைப் பின்பற்றாதாரை காபிர் என்றும் அவரவர் அழைப்பதும் தெரிந்ததே.

  1. அவர்களை வேதங்கள் சில இடங்களில் புராண கதா பாத்திரங்கள் போல வருணிக்கின்றன. அவர்களிடம் தூது செல்ல இந்திரன், சரமா என்ற பெண் நாயை அனுப்பியதாக பல இடங்களில் வேதம் சொல்லும். இந்த சரமா என்பது ,பாரசீகம் வழியாக கிரேக்க நாடு வரை சென்றுவிட்டது. பாரசீக கிரேக்க மொழிகளில் எஸ் என்பது கிடையாது ஆகவே அவர்கள் சரம என்பதை ஹர்ம என்று எழுதினர். இதைப் பற்றி நிறைய ஆராய்ச்சி நடந்திருப்பதால் தனிக் கட்டுரையில் தருவேன். சிந்து நதி என்பதை இந்து என்று மாற்றியவர்களும் அவர்களே!!

ef545-leviticus-20-molech

குழந்தைகளைத் தீயில் வீசுவோர்!!

பாணீக்கள் பற்றி ரிக்வேதத்தில் காணப்படாத முக்கிய விஷயம் அவர்கள் குழந்தைகளைத் தீயில் பலி கொடுப்பவர்கள் என்பதாகும். பீனிஷியர்கள் வணங்கி வந்த இரண்டு தெய்வங்கள் பால் மற்றும் மாலிக் (மெலக்) என்பன ஆகும். இவ்விருவர் சிலைகள் முன்னாலும் எப்பொழுதும் தீ எரிந்து கொண்டே இருக்கும். ஜெரூசலத்தில் எரியும் தீயில் இப்படிப் பிள்ளைகளைப் பலி கொடுத்தது பைபிளில் இரண்டு மூன்று இடங்களில் சொல்லப்பட்டுள்ளது.

பாணீக்களின் குழந்தைப் பலி பற்றி ரிவேதத்தில் இல்லாவிட்டாலும் வால என்னும் அசுரனை இந்திரன் கொன்றது பற்றிய பாடல் வேதத்தில் வருகிறது வால என்பதே பால் என்னும் தெய்வத்தின் பெயர் என்று கொள்ள மொழியியல் வழிகாட்டுகிறது.

இப்பொழுது பஹ்ரைன், டுனீஷியா, மத்திய தரைக் கடல் நாடுகளில் பல்லாயிரக் கணக்கான புதைகுழிக்கள் கண்டு பிடிக்கப்பட்டு வருகின்றன. அவை அத்தனையிலும் ஈமப் பானையில் குழந்தைகளின் கருகிய சாம்பலும், மிருகங்களின் சாம்பலும் கிடைத்துவருகின்றன. ஒரு வேளை இவர்களை வேத கால இந்துக்கள் வெறுத்து தஸ்யூ, தாசர் என்று திட்டியதற்கு இதுவும் காரணமாக இருக்கலாம். “மிலேச்ச” என்னும் சொல்லும் இவர்கள் வழிப்பட்ட மாலிக், மொலக், மிளக் என்னும் குழந்தைகளைப் பலி கேட்ட தெய்வத்தின் பெயரில் இருந்து வந்திருக்கும் என்பது நான் கண்ட முடிவு.

பாணீக்களின் மன்னர் பெயர் “ப்ருபு” என்று ரிக் வேதத்தில் இருக்கிறது. பீனிஷியர்களின் முக்கிய நகரான பிப்லோஸ் என்பது இதிலிருந்து வந்ததே.  “ர, ல” ஆகிய இரண்டு எழுத்துக்களும் இடம் மாறுவது பற்றி பாணினி கூட சூத்திரம் எழுதி இருக்கிறார்.

மேலும் விக்கிபீடியாவில் பீனிஷியர் காலனி என்ற பட்டியலில் பல சம்ஸ்கிருதப் பெயர்கள் உள்ளன ( சுந்தர, சூர்ய, சோபன,தாரா முதலியன)

பாணீக்கள் வேற்று மொழி பேசினாலும் எல்லா வணிகர்களையும் போல அவர்களுக்கு வேறு (சம்ஸ்கிருதம் போன்ற)  மொழிகளும் தெரிந்திருக்க நியாயம் உண்டு. பிப்ளோஸ் என்ற நகரம் 7000 ஆண்டு பழமையுடைத்து! வேத மந்திரங்கள் பல காலத்துக்குச் சொந்தமானவை. எல்லா மந்திரங்களும் உருப்பெற குறைந்தது 500 ஆண்டுகள் ஆகியிருக்கலாம். சங்கத் தமிழ் இலக்கியத்தில் 450+ புலவர்கள் பெயர்கள் இருப்பது போலவே ரிக் வேதத்திலும் 450+ புலவர் பெயர்கள் உள. சங்கப் பாடல்கள் உருவாக குறைந்தது 300 ஆண்டுகள் ஆயின. ஆக பாணீக்கள் பற்றிய குறிப்புகளும் ரிக் வேதத்தின் பெரும்பாலான மண்டலங்களில் வருவதால் இவர்களுடன் நீண்ட நெடுங்காலத்தில் சுமுக உறவு நிலவிய காலமும் இருந்திருக்கலாம்.

eb915-byblos

லெபனான் (சம்ஸ்கிருதத்தில் லவண/ வெள்ளை)

இவர்கள் பற்றி “வேத கால ஹரப்பா மக்கள்” என்ற நூலை எழுதிய ஆராய்ச்சியளர் பகவான் சிங் வேறு ஒரு தகவலையும் தருகிறார். சில வேத மந்திரங்கள், “பாறைகளுக்கு அடியே பாணீக்கள் மறைத்து வைத்த செல்வம்” பற்றிப் பாடுகின்றன. அவைகளைப் பெற இந்திரன் சரமாவை தூது அனுப்பிய செய்தியும் வருகிறது. பாறைக்கு அடியில் மறைத்த செல்வம் என்பது சுரங்கக் கனிவளம் என்றும் இவர்கள் உலகமெங்கும் லபிஸ் லசூலி என்ற கற்களை ஏற்றுமதி செய்தனர் என்றும் எழுதுகிறார். லாபிஸ் லசூலி பற்றிய எனது முந்தைய தனியான ஆராய்ச்சிக் கட்டுரையில் நிறைய விசயங்களைத் தந்திருக்கிறேன்.

பிற்காலத்தில் கிரேக்கர்கள் எழுதிய வரலாற்றுக் குறிப்புகளில் ரோமானிய ராஜாக்களுக்கும், கிறிஸ்தவ பாதிரிமார்களுக்கும் தேவைப்பட்ட பிங்க் (இளம் சிவப்பு) சாயத்தை கடலில் கிடைக்கும் ஒரு வகைக் கிழிஞ்சல் பூச்சியில் இருந்து எடுத்து இவர்கள் ஏற்றுமதி செய்ததையும் குறிப்பிட்டுள்ளனர். அந்தச் சாய ஏற்றுமதி இவர்கள் கையில் இருந்ததால் இவர்கள் மிகவும் பணக்காரர் ஆனார்கள்.

பாணீக்கள் என்போர் திசை மாறிப்போன, வழி தவறிய இந்துக்களே (விராத்யர்) என்று ஆர்ய தரங்கிணி என்ற நூலில் ஏ.கல்யாணராமன் எழுதுகிறார்.

கிரேக்க மொழியில் முதல் முதல் நூலை எழுதிய ஹோமரும் முதல் நூலான இலியட்டில் இவர்களைப் புகழ்ந்துவிட்டு, ஆடிஸி என்னும் அடுத்த நூலில் பீனிஷியர்களை அயோக்கியத் திருடர்கள் என்று திட்டுகிறார். ரிக்வேதக் கருத்துக்களை அப்படியே எதிரொலிக்கிறார்!

மேற்கூறிய எல்லாத் தகவல்களையும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் இவர்கள் பணத்துக்காக எதையும் செய்யத் துணிந்த கிராதகர்கள் என்பது தெரிகிறது. வேதத்தில் இவர்கள் பற்றி இதுவரை பொருள் விளங்காமல் உள்ள “கிராதின்” என்பதற்குக் கிராதகர் என்று பொருள் கொண்டாலும் தவறில்லை!

(வேதங்களில் இவர்கள் பற்றிய குறிப்புகள் எங்கேயுள்ளன என்ற விவரங்களை நேற்று வெளியான எனது ஆங்கிலக் கட்டுரையில் கொடுத்திருக்கிறேன்.)