பழைய கால நூல் தற்காலத்துக்குப் பொருந்துமா? (Post No.2960)

YogaVasishta_front_cover

Article Written S NAGARAJAN

Date: 11 July 2016

Post No. 2960

Time uploaded in London :– 6-25 AM

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

உலகின் அதிசய நூல் யோகவாசிஷ்டம் ! – 5

பழைய கால நூல் தற்காலத்திற்குப் பொருந்துமா?

ச.நாகராஜன்

யோக வாசிஷ்டம் என்னும் நூலோ பழைய காலத்தில் இயற்றப்பட்டது. இன்னும் சொல்லப் போனால் வசிஷ்ட முனிவர் பழைய யுகம் ஒன்றில் ராமருக்கு உபதேசித்த நூல் அது.
இன்றைய நவீன இண்டர்நெட் யுகத்திற்கு அது பொருந்துமா?
எத்தனை தொழில்நுட்பங்கள்! எத்தனை அறிவியல் முன்னேற்றங்கள்!!
இந்தக் காலத்திற்கு அந்த நூல் பத்தாம்பசலித்தனமான நூல் அல்லவா? பகுத்தறிவுக்கு ஒத்த நூலாகுமா?
இப்படி கேள்விகளைப் பகுத்தறிவாளர்கள் கிளப்பினால் சாதாரண மனங்களே குழம்பி விடும்! விடையைப் பார்க்கலாம்.
முதலில் விஞ்ஞான முன்னேற்றம் புறவுலகை அளப்பதில் தான் இருக்கிறது. விண்வெளியில் விண்கலங்கள் சுழல்கின்றன. நெட் உலகில் தகவல் பரிமாற்றம் நன்கு நடைபெறுகிறது. உண்மை தான்!
ஆனால் அகவுலகைப் பொருத்த வரையில் விஞ்ஞானம் திகைக்கவே செய்கிறது! உயிர் என்பது என்ன? அது எப்படி கருவில் எப்போது வந்து சேர்கிறது? உடலை விட்டு உயிர் எப்போது எப்படி நீங்குகிறது? மனம் என்பது என்ன? பிரக்ஞை என்பது என்ன” – என்றெல்லாம் கேட்கப் போனால் விஞ்ஞானம் விலகி ஓடுகிறது.

YogaVasishta_large
ஆகவே விஞ்ஞானம் பதில் சொல்ல முடியாமல் திகைக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் ஒரே நூல் யோக வாசிஷ்டம் தான்! ஒருவேளை விஞ்ஞானமும் மனம், பிரக்ஞை, உயிர் என்பது பற்றியெல்லாம் விளக்கி இருந்தால் அப்போது மட்டுமே நாம் ‘பகுத்தறிவாளர் நம்மைக் குழப்புகின்ற’ மேலே கூறியுள்ள கேள்விகளைக் கேட்கலாம்.
அப்படி விஞ்ஞானம் விளக்காத நிலையில் அப்படிப்பட்ட கேள்விகளே தவறு என்று சொல்லி விடலாம்.
சரி, இன்றைய யுகத்திற்கு யோக வாசிஷ்டம் பொருந்துவது எப்படி என்பதற்குப் பதில் உண்டா?
உண்டு!
உண்மையில் யோக வாசிஷ்டம் தான் அறிவியல் ரீதியிலான நூல். எதையும் ஆராய்ந்து பார் என்று அது கூறுகிறது. விசாரம் என்ற சம்ஸ்கிருத பதம் இதற்காக உபயோகப்படுத்தப் படுகிறது.
ஸந்தோஷம், ஸத் ஸங்கம், ஸத் விசாரம், ஸமஸ்தம் என்ற நான்கு வழிகளே மனிதனின் இக வுலக மற்றும் மறு உலக வெற்றிக்கான வழிகள். (விசாரத்துடன் ஒரு ஸத் சேர்க்கப்பட்டுள்ளதன் காரணம் நான்கு ‘ஸ’காரங்களை சுலபமாக நினைவில் இருத்திக் கொள்ளலாம் என்ற காரணத்திற்காகவே!)

இவற்றில் எந்த ஒன்றைப் பயின்றாலும் மற்ற மூன்றையும் எய்தி வெற்றியைப் பெறலாம் என்கிறது யோக வாசிஷ்டம்.
ஸத் விசாரம் என்பது நல்லதைப் பற்றிய ஆராய்ச்சி. இதை ஆங்கிலத்தில் Rational investigation என்று கூறலாம்,
உலக வாழ்க்கையில் உள்ள ஏற்றத் தாழ்வுகள். சோதனைகள் ஆகியவற்றிலிருந்து மீள்வதற்கான ஒரே மருந்து விசாரம் தான் என்று வசிஷ்டர் அறிவுறுத்துகிறார்.
ஆசைகள் மற்றும் விருப்பங்களினாலேயே வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள், ஏற்படுகின்றன.
ஆகவே பகுத்தறிவு ஆய்வு மற்றும் அமைதியான சிந்தனை ஆகியவற்றின் மூலமாகவே துன்பங்களை வெல்ல முடியும்.
நமது திறமைகள் ஒரு பக்கம். சமுதாய சூழ்நிலை ஒரு பக்கம் நம்முடைய உடல் தகுதி இன்னொரு பக்கம் இப்படி மூன்றினுக்கும் இடையே அகப்பட்டுள்ள நாம் இவற்றிற்கு உட்பட்டுத் தான் நமது ஆசைகளை நிறைவேற்றும் சூழ்நிலை ஏற்படுகிறது. நமது ஆசைகள் இவற்றிற்கு இசைய அமைந்தால் அப்போது நமது முயற்சிகள் பலனை அளிக்கின்றன.
இல்லையேல் வலியும் ஏமாற்றமுமே மிஞ்சும்.
இவற்றிற்கெல்லாம் மேலே மோகம் என்னும் மாயை இருக்கிறது.
இந்த மாயைக்கு நாம் வசப்பட்டு நமது திறமைகளை அதிகமாக மதிப்பீடு செய்து கொள்கிறோம். நமது ஆசைகள் நமது திறமைகளை தகுதிக்கு அதிகமாக எண்ண வைத்து பிரத்யட்ச நிலை பற்றித் தெரியாமல் நம்மை குருடாக ஆக்கி விடுகிறது.

Yoga-Vasishta-Maha-Ramayana-free-pdf-ebook-185x300

Free e book
ஆகவே நமக்குத் தேவையானது விசாரமும் விவேகமும் தான்.
இதற்கு வசிஷ்டர் வெளிச்சத்தை உதாரணமாகத் தருகிறார்.

இருட்டில் இருக்கும் ஒருவன் பயப்படுகிறான்.அவனால் நகரக் கூட முடியவில்லை. ஒரு விளக்கு ஏற்றப்பட்டு வெளிச்சம் வந்து விட்டால். எல்லாமே தெளிவாக ஆகி விடுகிறது.
அது போல துன்பம் வரும் போது கோபமோ அல்லது பயத்தையோ அடையாமல் விசாரம் செய்ய ஆரம்பித்தால் தெளிவு பிறக்கும். விசாரம் என்ற வெளிச்சம் துன்பம் என்ற இருளை நீக்கும்.
இதுவே உலகியல் வாழ்க்கையில் வெற்றி பெற வழி!
******

 

 

எந்த நிழலில் நிற்கலாம்? எந்த நிழலில் நிற்கக்கூடாது? (Post No.2927)

shadow

Compiled by london swaminathan

Date: 29 June 2016

Post No. 2927

Time uploaded in London :– 8-07 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

தீபச் சாயா நரச் சாயா ஹந்தி புண்யம் புராதனம்
சாச்சேத்வேதவிச் சாயா ஹந்தி பாபம் புராதனம்

விளக்கின் நிழலும், மனிதர்களின் நிழலும் யார் மீது விழுகிறதோ
அவர்கள் சேர்த்து வைத்த பழயை புண்யம் கூட அழிந்து விடும்.

 

 

வேதம் ஓதுபவரின் நிழல் நம் மீது பட்டால் முன் செய்த பாவங்களும் அழிந்து விடும்.

 

Lighting-a-lamp

Picture from wikipedia

Xxx

நடக்க முடியாத விஷயங்கள்

கானல் நீரில் மூழ்கி,  முயல் கொம்பினால் ஆன வில்லை ஏந்தி, ஆகாயப் பூவாலான
மாலையை அணிந்து கொண்டு மலடியின் மகன் போகிறான்

ம்ருக த்ருஷ்னாம்பசி ஸ்நாத:சசச்ருங்க தணுர்தர:
ஏஷ வந்த்யா சுத: யாதி கபுஷ்ப க்ருத சகேர:

 

xxxx

 

 

யாருக்கு எது முக்கியம்  ?
அலங்காரத்துக்கு ஆடை முக்கியம்

உணவுக்கு அன்பு முக்கியம்

பெண்ணுக்கு நல்ல குணம் முக்கியம்

அந்தணணுக்கு கல்வி முக்கியம்

 

வத்ஸ்த்ர முக்யஸ்த்வலங்கார: ப்ரிய முக்யந்து போஜனம்

குணமுக்யா பவேன்னாரி வித்யா முக்யஸ்து ப்ராஹ்மண:

Xxx

 

 

அமிர்தம் எது?

மனு கூறுகிறார்:

விகசாசி பவேன்னித்யம் நித்யன்னாம்ருத போஜன:

விகசோ புக்த சேஷந்து யக்ஞசேஷம் ததா அம்ருதம்

…மனு 3-285

 

திதி செய்த பின்னுள்ள மிச்சத்தை சாப்பிட வேண்டும்.

யக்ஞம் செய்த பின் மிஞ்சுவது அமிர்தத்துக்கு ஒப்பாகும்.

இவைகளை ஒருவன் தினமும் புசிக்க வேண்டும்.

இது தினமும் செய்யவேண்டிய பஞ்சமஹா யக்ஞம்

தொடர்பாக சொல்லப்பட்டவை.

 

Xxxx SUBHAM xxxx

 

 

 

 

மறு பிறப்பு உண்டா என்ன? – சரகர் தரும் பதில்!! (Post No 2901)

punarjanma 4

Article written by S.NAGARAJAN

 

Date: 17 June 2016

 

Post No. 2901

 

Time uploaded in London :–  5-42 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

திரு ஆர் சி ராஜா அவர்களை ஆசிரியராகக் கொண்டு மாதம் தோறும் நெல்லையிலிருந்து தமிழில் வெளி வரும் மருத்துவ மாத இதழான ஹெல்த்கேர் இதழில் மே 2016 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.

 

ஆரோக்கிய ஆன்மீக இரகசியம்

 

மறு பிறப்பு உண்டா என்ன? – சரகர் தரும் பதில்!!

 

.நாகராஜன்

 punarjanma5

று பிறப்பு பற்றிய சந்தேகங்கள்

 

மறு பிறப்பு பற்றி ஏராளமான சந்தேகங்கள் இயல்பாகவே எழுகின்றன. புண்ணிய காரியங்களைச் செய், மறு உலகில் சந்தோஷமாக இருக்கலாம்; மறு பிறப்பில் நன்றாக வாழலாம் என்ற கொள்கை முன் வைக்கப்படும் போது அதற்கு என்ன ஆதாரம் என்ற கேள்வி எழுகிறது? கண்ணால் பார்ப்பதே மெய் என்று எடுத்துக் கொண்டால் மறு உலகத்தைக் கண்ணால் காண முடிவதில்லையே!எப்படி அதை நம்ப முடியும் என்ற கேள்வி எழுகிறது.

 

 

சாஸ்திரங்களை நம்புவோர் மறு பிறப்பு உண்டு என்று சொல்லும் போது அதை ஏற்காதவர்கள் அதற்கு என்ன ஆதாரம் என்கின்றனர்.

 

தாய் தந்தையே இந்தப் பிறவிக்குக் காரணம் என்றால் இந்தப் பிறவிக்குப் பின்னால் உள்ள பிறவிக்கு யார் காரணம்? இயற்கை தான் நம்மைப் படைக்கிறது என்று வைத்துக் கொண்டால் அப்போதும் கூட இன்னொரு பிறவிக்கு காரணம் எது?மதியே அனைத்திற்கும் காரணம் என்று வைத்துக் கொண்டாலும் மறு பிறப்பு கொள்கை அடிபட்டுப் போகிறது.

இப்படி அனைத்துக் கோணங்களையும் எடுத்துக் கொண்டு அலசி ஆராய்கிறார் சரகர்.

 

 

 

எல்லைக்குட்பட்ட புலன்களின் செயல்பாடுகள்

 

புத்திசாலியாக இருக்கும் ஒருவன் மறுபிறப்புக்கு மாறாகப் பேசப்படும் வாதங்களை ஏற்கக் கூடாது.ஏன்? ஏனெனில் புலனுக்கு உள்ளடங்கிய பார்வை ஒரு எல்லைக்கு உட்பட்டவை. ஆனால் அறிவோ – சாஸ்திரங்கள் மூலமாகப் பெறப்படுவது, ஊகம், தர்க்கம் மூலமாக அறிதல் ஆகியவை மூலமாகப் பெறப்படும் அறிவோ – எல்லையற்றது. அதன் மூலம் புலன்களுக்கு அப்பாற்பட்ட அனைத்தையும் பற்றிய சரியான பார்வையைப் பெற முடியும்.

 

இன்னொரு விஷயம். கண்ணால் பார்ப்பது மட்டுமே மெய்; புலன்களால் உணரப்படுவது மட்டுமே உண்மை என்று கூறுவது சரியான் ஒன்றல்ல. புலனுக்கு மீறிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளன. மிகுந்த தொலைவில் உள்ள ஒன்றை எப்படிப் பார்க்க முடியும்? தடைப்படுத்தப்பட்டிருக்கும் ஒரு பொருளைப் பார்ப்பது சாத்தியமா? எடுத்துக்காட்டாக சுவர் ஒன்றின்  பின்னால் இருக்கும் ஒரு பொருளை எப்படிப் பார்ப்பது? புலன்கள் கூர்மையின்றி இருந்தால் அப்போது அந்தப் புலன்கள் பார்க்க முடிபவை மட்டுமே தான் உண்மையா? புலன்கள் கூர்மையாக இருந்தாலும் மனம் ஒன்றில் ஈடுபடவில்லையெனில் எதிர்த்தாற் போல இருப்பதும் தெரிவதில்லை; காதில் ஒலி விழுந்தாலும் கவனம் இல்லையேல் அது கேட்பதில்லையே! ஒரே பொருள் போன்ற இரண்டு பொருள்களைக் கண்டால் மயக்கம் ஏற்படுகிறது. மிகச் சிறிய பொருளைக் காண முடிவதில்லை. நிழல் பட்டால் அப்போது எதிரில் இருப்பதும் மறைகிறது. ஆக இப்படி எவ்வளவோ விஷயங்கள் புலன்களை எல்லைக்குட்பட்டவை என்பதை நிரூபிக்கிறதே

 

 

பெற்றோர் தான் பிறப்புக்கு காரணம் என்றால் அது இரண்டு விதமாக ஏற்பட வேண்டும். ஒன்று  முழுமையாக அவர்கள் பிறப்புக்குரிய உயிரில் மாற வேண்டும். அப்படி என்றால் அவர்கள் புதிய உயிர் பிறந்தவுடன் மரிக்க வேண்டும். அப்படி ஏற்படவில்லை.

 

 

அடுத்து ஒரு பகுதி மட்டும் புதிய உயிரில் மாற் வேண்டும். அப்படி தாயோ தந்தையோ பகுதியைப் பிரித்துக் கொடுக்கவில்லை. அப்படி என்றால் வேறு எதோ ஒன்று புதிய உயிரின் படைப்பில் இருக்கிறது, இல்லையா?

பெற்றோர் மட்டுமே பிள்ளைகளின் பிறப்புக்குக் காரணம் என்றால், அவர்களின் மனமும், புத்தியும் பிள்ளைகளுக்கு மாற்றி விடப்படுகிறது என்றால் அப்படிப் பிள்ளை பிறந்தவுடனேயே அவர்களது மனம் புத்தி ஆகியவை இயங்காமல் நின்று விட வேண்டும்..ஆக, அதுவும் சரியல்ல.

 

 

ஒரு பிறப்பு ஏற்படும் போது ஐந்து அடிப்படை பூதங்களும் ஆத்மாவும் இணைகிறது; பின்னர் பிரிகிறது. ஆத்மா முடிவற்ற ஒன்று.

 

 punarjanma 6

உலகம் தற்செயலாக ஏற்பட்ட ஒன்றா?

 

உலகம் தற்செயலாக ஏற்பட்ட ஒன்று என்ற வாதமும் சரியில்லை.  ஏனெனில் இப்படிச் சொல்பவருக்கு எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமும் இல்லை; ஆராய வேண்டிய அவசியமும் இல்லை. அது அது தன் பாட்டிற்கு ஏற்படுகிறது என்றால் மேலே பேசுவதற்கு ஒன்றுமே இல்லை!

 

 

அறிவால் ஆய்ந்து பார்!

ஆகவே புத்திசாலியாக இருக்கும் ஒருவன் தன் அறிவைக் கொண்டு ஆராய வேண்டும்.

எந்த ஒன்றும் இரண்டே இரண்டுக்குள் தான் அடங்கியிருக்கிறது.

ஒன்று அது உண்மையாக இருக்க வேண்டும் அல்லது பொய்யாக இருக்க வேண்டும்.

 

 

ஒரு விஷயம் உண்மையா அல்லது பொய்யா என்பதைக் கண்டுபிடிக்க நான்கு வழிகள் உள்ளன.

  • ஆன்றோர் அல்லது ரிஷிகள் கூற்று
  • நேரடிப் பார்வை (புலனறிவு)
  • ஊகம்
  • தர்க்கம் மூலமாக அறிவது

ரஜஸ், தமஸ் ஆகிய இரண்டையும் கடந்து நிகழ் காலம் எதிர் காலம், இறந்த காலம் ஆகிய மூன்று காலங்களையும் பார்க்க வல்ல்வர்கள் ஆப்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்களிடம் பொய்யே இருக்க முடியாது. ஆக அவர்கள் கூறுவதை நம்பலாம்.

 

punarajanma3

ப்ரத்யக்ஷ பிரமாணம் என்பது ஒரு எல்லைக்குட்பட்டது.

ஊகம் என்பதோ மூன்று வகைகளைக் கொண்டது. நிகழ்காலம், இறந்தகாலம் எதிர்காலம் ஆகியவற்றுடன் அது தொடர்பு கொண்டது. புகை மூலம் தீ இருப்பது தெரிகிறது. குழந்தை பிறப்பதன் மூலம் பாலியல் சேர்க்கை உணரப்படுகிறது. இவை இரண்டும் நிகழ்காலம் இறந்தகாலம் ஆகியவற்றிற்கான உதாரணங்கள்.ஒரு மரத்தின் விதையை விதைக்கும் போது அது எந்த மரமாக வளரும் என்பதை ஊகிக்க முடிகிறது. இது எதிர்காலத்திற்கான விளக்கம்.

 

 

தர்க்கம் மூலமாக அறிவதைப் பல உதாரணங்களால் விளங்கிக் கொள்ளலாம். நிலத்தைப் பண்படுத்தி உழுது. விதை விதைத்து பருவ காலத்தில் மழையும் பெய்தால் விளைச்சல் நன்கு ஏற்படும்.ஆணும் பெண்ணும் பருவ காலத்தில் இணைந்தால் கரு உருப்பெறும். நிகழ்காலம் இறந்த காலம் எதிர்காலம் ஆகிய மூன்றிற்கும் பொருந்தும் ஒன்றைப் பலவேறு காரணிகளால் புத்தி பார்த்து அறிவது யுக்தி எனப்படும்.

இது மனித வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கும் தர்மம் (புண்ய காரியங்கள்), அர்த்தம் (பொருள்), காமம் (இன்பம்) ஆகிய மூன்றைப் பூர்த்தி செய்ய உதவுகிறது.

ஆகவே இந்த அடிப்படையில் மறுபிறப்பு பற்றி ஆராய வேண்டும்.

 

punarjanma1

 

மறுபிறப்பு உண்மையே என்பதற்கான காரணங்கள்

ஒரு வித ஆசையும் அற்ற பெரும் ரிஷிகள் கூறுவது உண்மை. அவர்கள் காரண காரிய தொடர்பு பற்றி ஆய்ந்து மறு பிறப்பு உள்ளது என்கின்றனர்.

 

 

இரண்டாவதாக பிறக்கும் குழந்தைகளில் பிறக்கும் போதே ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. நிறம், எடை, வடிவம், அழகு,புத்தி, மனம், குரல் இப்படி எல்லாவற்றிலும் தனித் தனி வேறுபாடு இருக்கிறது. ஒரு குழந்தை ராஜ குமாரனாகப் பிறக்கிறது. இன்னொன்றோ பிச்சைக்காரனாகப் பிறக்கிறது.

ஒன்று பிறந்தவுடன் இறக்கிறது. இன்னொன்றோ நூறு வயது வ்ரை வாழ்கிறது. தாய்ப் பாலைக் குடிப்பது, அழுவது, சிரிப்பது ஆகிய எல்லாவற்றிலும் கூட ஒரு குழந்தை போல இன்னொரு குழந்தை இருப்பதில்லை.

 

 

இந்த ஜன்மத்தில் செய்யும் நல்ல அல்லது கெட்ட வினைகளுக்கேற்ப அடுத்த பிறவி அமைகிறது என்பதை ஊகித்து அறியலாம்.

 

தர்க்கப் படியாகப் பார்த்தாலும் மறு பிறப்பு சரியே. கர்த்தா, காரணம் ஆகியவற்றிற்கேற்ப செயல்கள் அமைகின்றன. விதையின்றி மரமில்லை.

 

ஆகவே மேற்கூறிய அனைத்தையும் நன்கு ஆராய்ந்து பார்த்தால் மறு பிறப்பு உண்டு என்பது நன்கு புரியும்.

ஒரு புத்திசாலி நாத்திக வாதத்தால் மயங்க மாட்டான். அவன் நல்ல காரியங்களைத் தொடர்ந்து செய்து நல்லதையே பெற முயல்வான்.

 

ஆக சரகரின் இந்த விரிவான விளக்கம் மறு பிறப்பு பற்றிய தெளிவை நமக்கு ஏற்படுத்துகிறது, இல்லையா?!

************.

 

கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல! (Post No.2893)

blindfolded1

Article written by S.NAGARAJAN

 

Date: 14 June 2016

 

Post No. 2893

 

Time uploaded in London :–  6-56 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

உலகின் அதிசய நூல் யோகவாசிஷ்டம் ! – 4

 

கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல!

 

ச.நாகராஜன்

 

யோக வாசிஷ்டம் என்னும் பெரிய நூலை படிக்கலாம் என்று அதன் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படிக்க ஆரம்பிப்பது  கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல இருக்கிறது என்று அன்பர்கள் சொன்னால் அதில் ஒரு நியாயம் இருக்கத்தான் இருக்கிறது.

 

 

விஷயம் சூக்ஷ்மமான விஷயம். ஆர்வம் உள்ளவர்களுக்கே 32000 சுலோகங்களைப் படிப்பது என்பது எளிதான காரியமல்ல. அதுவும் ஆங்கிலத்தில் படிக்கும் போது முழு சாரத்தையும் கிரகிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுவது இயல்பே.

இதனால் அன்பர்கள் முதலில் “Quintessence of Yogavasishtha” என்ற புத்தகத்தை முதலில் படிக்கலாம். ருசி வந்து விடும்,

 

 

பின்னர் சம்ஸ்கிருதத்தின் அழகைக் காணவும் அதில் ஆழ்ந்த அர்த்தமுள்ள பல்வேறு விஷயங்களைப் படிக்கவும் ஒரு நல்ல நூல் உள்ளது.  தேர்ந்தெடுத்த சுமார் 2500 சுலோகங்கள் சம்ஸ்கிருதத்திலும் அதன் ஆங்கில மொழியாக்கமும் உள்ள புத்தகம் அது        


B.L. Atreya
தேர்ந்தெடுத்த ஸ்லோகங்களை Samvid  என்பவர்அழகுற ஆங்கிலத்தில்  மொழியாக்கம் செய்துள்ளார். இந்த நூலின் பெயர் ‘The Vision and the way of Vasistha’.  583 பக்கங்கள் கொண்ட புத்தகத்தில் யோக வாசிஷ்டம் எதைச் சொல்ல வருகிறது என்பதைப் புரிந்து கொண்டு பிரமிக்கலாம் இதன் இன்றைய விலை ரூ 400/

 

 

அழகிய எளிய சம்ஸ்கிருதம் இந்த நூலில் அமைந்துள்ளது என்பதை எடுத்துக்காட்ட இரு ஸ்லோகங்களை இங்கு பார்க்கலாம். நூலின் பெருமையைக் கூறும் ஸ்லோகங்கள் இவை.

 

 

க்ரந்தேனானேன லோகோயமஸ்மாத் ஸம்சார சங்கடாத்

சமுத்தரிஷ்யதி க்ஷிப்ரம் போதேனேவாஷு ஸாகராத்

 

This mankind will cross over this peril of worldly existence speedily by this work, as (one crossed over) the ocean quickly by a boat.

.

யதிஹாஸ்தி ததன்யத்ர யத்ரேஹாஸ்தி ந தத் க்வசித்

இமம் சமஸ்தவிஞ்ஞான சாஸ்த்ர கோஷம் விதுர்புதா:

 

What is here (in this work), that is elsewhere.  What is not here that is nowhere. The wise consider this as the repository of all scriptures of Higher Knowldege.  (Translation by Samvid)

 

 

 

இந்த நூலைப் படித்த பின்னர் யோகவாசிஷ்டம் முழுவதையும் ப்டிப்பதில் கஷ்டம் இருக்காது.

 

இவ்வளவு பீடிகைக்குப் பின்னரும் இந்த அதிச்ய நூலைப் படிக்காமல் இருந்தால் அது பாக்கியக் குறைவே.

படிப்பவர்களுக்கு மற்றவர்களுக்குப் புரியாத பிரபஞ்ச இரகசியங்கள் புரியும்.

 

********

மன்மதன்,காம தேவன்: சங்கத் தமிழ் இலக்கியத்தில் காதல் தெய்வம்!(Post No.2862)

rathi.meenakshi13

Research Article written by London swaminathan

 

Date: 2 June 2016

 

Post No. 2862

 

Time uploaded in London :–  6-33 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact swami_48@yahoo.com

 

(English version of this article was published here yesterday)

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாரதத்தின் தென்கோடி முதல் வடகோடி வரை ஒரே பண்பாடு நிலவிவந்தது. தொல்காப்பியத்திலேயே வேதத்தில் போற்றப்படும் இந்திரன், வருணன், துர்கை ஆகியோரை தமிழர் தெய்வங்களாகப் போற்றுவதையும், தொல்காப்பியரும் மனுதர்ம சாத்திரத்திலுள்ள எண்வகை மணத்தைப் போற்றுவதையும் அவரும் தர்மார்த்த காம மோக்ஷம் ஆகிய வாழ்க்கை மூல்யங்களை பெரும் பண்புகளாகப் (அறம் பொருள் இன்பத்தைப்) போற்றுவதையும் சில கட்டுரைகளில் தந்தேன். மன்மதன் பற்றிய நம்பிக்கையும் அவ்வாறே இருந்துள்ளது!

 

மன்மதனுடைய கொடி மகரக் கொடி. மகரம் என்னும்  சொல் மீன், டால்பின் மற்றும் முதலையைக் குறிக்கப் பயன்பட்ட சொல். மன்மதனின் மகரக் கொடி பற்றிய குறிப்பு 2000 ஆண்டுகளுக்கு முந்தைய அக நானூற்றிலேயே வந்துவிடுகிறது. மேலும் இதைப் பாடிய பார்ப்பனப் புலவன் பரணன், அதே பாட்டில் மன்மதனை எரித்த சிவபெருமானையும் பாடியிருக்கிறார். பட்டினப்பாலையில் மன்மதன் கோவில் குறிப்பிடப்படுகிறது.

 

காளிதாசனின் காலம் பல சம்ஸ்கிருத அறிஞர்கள் கூறியது போல கி.மு. இரண்டாம் அல்லது முதலாம் நூற்றாண்டு என்று ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் சங்க இலக்கியம் வாயிலாக நிரூபித்தேன். மன்மதன் பற்றி காளிதாசன் சொன்னதை நம்மவர்களும் சொல்வதிலிருந்து எனது வாதம் மேலும் உறுதிப்படுகிறது.

 

rathi 1

1.அகநானூறு (பாடல் 181)

நான்மறை முதுநூல் முக்கட்செல்வன்

ஆலமுற்றம் கவின்பெறத் தைஇய

பொய்கைசூழ்ந்த பொழில்மனைமகளிர்

கைசெய்பாவைத் துறைக்கண் இறுக்கும்

மகரநெற்றி வாந்தோய் புரிசைச்

சிகரம் தோன்றா சேணுயர் நல் இல்

பொருள்:-

பழமையான நான்கு வேதங்களை அருளிய முக்கண்ணனின் ஆலமுற்றம் என்னும் இடத்திலே, அழகாக அமைந்த பொய்கைகள் சூழ்ந்த பூங்காவில், சிறு வீடுகட்டி விளையாடும் சிறுமியர் செய்த மண்பாவைகள் (பொம்மைகள்) இருக்கும் துறையில் மகரக்கொடியை மதில் உச்சியில் கொண்ட மிக உயர்ந்த மாடங்களை உடைய அரண்மனைகளையுடைய புகார் நகரம்…..

 

காமன் விழா நடபெறுகையில் கட்டப்படும் மகர தோரணத்தை இது குறிக்கும் என்று  பழைய உரைகள் விளக்கும்.

இந்தக் காமன் பண்டிகை குறித்து வடமொழி பிருஹத் கதாவிலும், அதன் மொழிபெயர்ப்பான பெருங்கதையிலும் உண்டு.

நாடு முழுதும் காமன் பண்டிகை கொண்டாடப்பட்டதை இது உறுதி செய்யும்.

 

2.கலித்தொகை, பரிபாடல்

மன்மதன், மகரக் கொடி ஆகியன பற்றி கலித்தொகை, பரிபாடல் ஆகிய இரண்டு சங்க இலக்கியங்களிலும் நிறைய குறிப்புகள் கிடைக்கின்றன. ஒரு சில குறிப்புகளைக் காண்போம்:-

காமற்கு வேனில் விருந்தெதிர்கொண்டு (கலி. 92-67/68)

 

கலித்தொகையில் வரும் மற்ற குறிப்புகள்: கலி. 108-4; 109-19/20; 147-59/60; பரிபாடல்11-123

மேற்கூறிய எல்லாவற்றிலும் சம்ஸ்கிருதச் சொல்லான காமன் வருகிறது. கலி.94-33ல் காமர் என்று இருக்கிறது.

காமவேள்- கலி.27-24, பரி.18-28

மன்மதனின் மற்றொரு சம்ஸ்கிருதப் பெயர் மாரன். இச்சொல் பரிபாடலில் (8-119) கையாளப்படுகிறது.

rathi3

3.ரதியும் காமனும்

உலகிலேயே மிகவும் அழகான பெண் ரதி. அவள் மன்மதனின் மனைவி. இரதிகாமன் என்ற சொல் பரிபாடலில் 19-48/49) பயன்படுத்தப்படுகிறது.

மன்மதன் என்பவன் விஷ்ணுவின் மனதில் பிறந்தவன் என்று சம்ஸ்கிருத புராணங்கள் கூறும். இதை நெடியோன் மகன் என்று கலித்தொகை இயம்பும் (140-89)

 

4.ஐந்து மலர் அம்பு

மன்மதனின் கரும்புவில்லிலிருந்து மலர் அம்புகளை விடுவான் என்று காளிதாசனும் பிற கவிஞர்களும் பாடுவர். இதை ‘அரிபடு ஐவிரை என்றும் (பரி.10-97), விரைமலர் அம்பினோன்’ என்றும் (பரி.22-26) பரிபாடலில் காணலாம்.

காமனின் அம்புப் புட்டில் பரி.18-30ல் வருகிறது.

ஓவியக்கூடம் காமனின் சிலம்பக்கூடம் போன்றது என்ற உவமை ‘எழுது எழில் அம்பலம் காமவேள் தொழில் வீற்றிருந்த நகர்’- என்ற வரிகளில் பளிச்சிடும் (பரி 18-27)

ஐந்து மலர்கள்:

மன்மதனின் அம்பிலுள்ள ஐந்து மலர்கள்:-தாமரை, அசோகம், மாம் பூ, முல்லை, நீலோத்பலம்.

 

5.மீன்கொடி

உலகில் கொடிகளையும், வாகனங்களையும்,சின்னங்களையும் பயன்படுத்திய முதல் நாடு பாரதம் என்று கொடிகள், வாகனங்கள் பற்றிய கட்டுரைகளில் சொன்னேன். இங்கே மீன் கொடி பற்றி கலித்தொகை புலவர்கள், மீனேற்றுக் கொடியோன் (கலி.26-3), காமன் கொடியெழுதி (கலி.84-24) என்ற வரிகளில் விளக்குவர்.

 

6.காமனின் தம்பி சாமன்

காமனின் தம்பி சாமன் பற்றி சம்ஸ்கிருதத்தில் பல குறிப்புகள் உண்டு. அதையும் தமிழ்ப் புலவர்கள் குறிப்பிடத் தவறவில்லை( கலி. 26-4; 94-33/34)

இதுதவிர இன்னும் சில குறிப்புகளும் உண்டு.

 

தமிழ் என்சைக்ளோபீடியாவான அபிதான சிந்தாமணியில் மன்மதன் வருணனையை, சிங்காரவேலு முதலியார் தந்துள்ளார்.

(சில புத்தகங்களில் கலித்தொகை பாடல் எண்களில் சிறிய மாற்றம் இருக்கும் ஆகையால் சங்கம் வோர்ட் இண்டெக்ஸ் புத்தகத்திலுள்ள வரிகளையும் தருகிறேன்:- மாரன் பரி. 8-119, காம வேள் கலி.27-24, பரி.18-28;காமற்கு கலி.92-67; காமன் கலி 84-24, 108-4, 109-19, 147-59, பரி. 11-123, 19-48; காமனது கலி.139-22;)

rthi2

7.திருக்குறளில்

பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்

ஒருவர்கண் நின்றொழுகுவான் (1197)

பொருள்:-

காமதேவன், காதலர் இருவர் இடையேயும் இருந்து இயங்காது, ஒருவர் பக்கத்திலேயே இருந்து செயல்படுவதால், அவன் என்னுடைய வருத்தத்தையும் தடுமாற்றத்தையும், உணரமாட்டான் போலும்!

 

8.மன்மதனுக்கு 19 பெயர்கள்!!!

உலகின் முதல் நிகண்டான (திசாரஸ்) அமர கோசத்தில், மன்மதனின் 19 சம்ஸ்கிருதப் பெயர்கள் பட்டியலிடப் பட்டுள்ளன. அவையாவன:-

மதன:, மன்மத: (மனதைக் கடைபவன்), மாரன், ப்ரத்யும்னன், மீனகேதன: (மீன் கொடியோன்), கந்தர்ப:, தர்பகன், அனங்க: (உடல் அற்றவன்), காமன், பஞ்சசர: (ஐந்து அம்புடையோன்), ஸ்மர:, சம்பராரி: (அலிகளுக்கு எதிரி), மனசிஜ: (மனதில் பிறந்தோன்), குசுமேஷு (மலர் அம்பன்), அனன்யஜ:, புஷ்ப தன்வா (மலர் வில்லன்), ரதிபதி (ரதியின் கணவன்), மகரத்வஜ; (மீன் கொடியோன்), ஆத்மபூ: (மனதில் தோற்றுவிக்கப்பட்டவன்).

சம்ஸ்கிருத நூல்களில் காமனுக்குப் பல அடைமொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன (எனது ஆங்கிலக் கட்டுரையில் நிறைய பெயர்கள் கொடுத்துள்ளேன்; இங்கே அந்தப் பட்டியலை எழுதினால் காமதேவன் அஷ்டோத்திரம் போல ஆகிவிடும்!)

 

  1. கற்பனைக் கதா பாத்திரம்

அனங்கன் என்ற சம்ஸ்கிருத்ச் சொல்லுக்கு அங்கம்/ உடல் அற்றவன் எனப் பொருள்; சிவன் மனதில் காம உணர்வை ஏற்படுத்த மன்மதன் முயன்றபோது அவர் நெற்றிக் கண்ணைத் திறக்கவே மன்மதன் எரிந்து சாம்பலானான். அவன் மனைவி ரதி தேவி அழுது புலம்பவே உன் கண்ணுக்கு மட்டும் தெரிவான் என்று சிவன் வரம் கொடுத்ததாக வரலாறு. இது ஒரு தத்துவார்த்த கதை. உடல் ரீதியான கீழ்த்தரக் காமத்தை ஒழித்தால் முகநக நட்பு போய், மனைவியரிடதே அகநக நட்பு மலரும் என்பதே இதில் அடங்கிய தத்துவம்; சுருக்கமாக சிவன் எரித்தது காம வெறியைத் தான். உள்ளன்பு பூர்வமான காமத்தை அன்று.

இதே போல திருமாலின் மனதில் பிறந்தவன் என்ற பெயரும் அடையாள பூர்வ கதையே; எல்லோருக்கும் மனதில் பிறக்கும் காதலே/ காமமே கல்யாணத்திலும், இனப் பெருக்கத்திலும் முடிகிறது.

மன்மதன்= மனதைக் கடைபவன் என்பதும் காரணப் பெயரே. ஒருவருக்கு காதல் வியாதி வந்துவிட்டால், அதௌ மனதைக் கடைந்து படாதபாடு படுத்தும்!

மொத்தத்தில் மன்மதன் என்பது ஒரு எண்ணத்துக்கு (அப்ஸ்ட்ராக்ட் ஐடியா), ஒரு உருவம் கொடுத்த (கான்க்ரீட் ஷேப்) கற்பனைக் கதையே.

rati or who

10.காளிதாசனில்

காளிதாசன் காவியங்களில் வரும் மன்மதன் பற்றிய குறிப்புகள்:–

சாகுந்தலம்:– காமன் வழிபாடு(6-3), மதன பாண/அம்பு (3), மகரகேது/மீன் கொடி (3-5).

இது தவிர குசுமாயுத (பூ ஆயுதம்), குசுமாஸ்திர (பூ ஆயுதம்).

விக்ரமோர்வசீயம்:–மகர கேது 2-2;

குமாரசம்பவம்:– 1-41 மகர கேது

ரகுவம்சம்:– மகர கேது 9-39

ஐந்து மலர் அம்பு பற்றிய குறிப்புகள்:– குமாரசம்பவம் 7-92; விக்ரம 2-6,11; மாளவிகாக்னிமித்ரம் 4-12 (பஞ்சசார);

குசுமசர, குசுமாயுத என்ற மலர் அம்பு பற்றிய சொற்கள் காளிதாசனின் எல்லா நூல்களிலும் (மேகதூதம் 104, ரகு 9-39, 11-45, குமார சம்பவம் 3-10, 4-40, 45) முதலிய இடங்களில் வருகின்றன.

 

காளிதாசன் நூல்களில் வரும் உவமைகள் சங்க இலக்கியத்தில் 200க்கும் மேலான இடங்களில் வருவதால், சங்ககாலத்தின் அவன் நூல்கள் கற்ற புலவரிடத்தே பரவியிருந்ததை அறியமுடிகிறது. ரெவரெண்ட் ஜி.யூ.போப்பும் இந்தக் கருத்தைக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

11.வேதங்களில்

மன்மதன் அல்லது காமதேவனின் மூலம், உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதத்தில் இருக்கிறது. ஆசையே (காமம்) பிரபஞ்சத்தின் வித்து என்னும் அற்புதமான பாடல் ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் இருக்கிறது. அதன் பிறகு அதர்வ வேதம், காமனை கடவுள் நிலைக்கு உயர்த்துகிறது. இறைவனின் லீலா விநோதம்தான் இந்த உலகின், மனித இனத்தின் படைப்பு. அவர் மனதில் எழுந்த ஆசையே, விருப்பமே பிரபஞ்சமாக உருவானது. அறிவியலோ மாபெரும் வெடிப்பு – BIG BANG பிக் பாங்- ஏற்பட்டு பிரபஞ்சம் தோன்றியது என்று விளம்பும். ஆனால் அதற்கு முன் என்ன இருந்தது, ஏன் பெர்ம் வெடிப்பு ஏற்பட்டது என்பதற்கு விஞ்ஞானத்தால் விடைகூற முடியவில்லை. பிரஜாபதி பரமேஷ்டின் என்ற ரிஷி உலகின் முதல் விஞ்ஞானி ஆவார். அவர் ரிக்வேதத்தில் சொல்லும் மந்திரத்தில் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிப் பாடி வியக்கிறார். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இப்படி ஒரு ரிஷி பாடியது உலகின் முதல் நாகரீகம், பாரதத்தில் தோன்றியதை மெய்ப்பிக்கிறது.

 

“ஆரம்பத்தில் காமம் (ஆசை) இருந்தது

மனதின் மூல வித்து அதுவே;

ரிஷிகள் உள்ளத்தில் எழுந்த ஞானத்தால் தேடி,

இல்லாத ஒன்றில் இருப்பதைக் கண்டுபிடித்தனர்”

–ரிக் வேதம் 10-129

 

Haridass_1944_film_2

12.திரைப்படத்தில்

12.இறுதியாக முந்தைய தலைமுறையிரிடையே பிரபலமான திரைப்படப் பாடல்:–

பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்
பாடியவர் : எம்.கே. தியாகராஜ பாகவதர்
திரைப்படம் : ஹரிதாஸ்

மன்மத லீலையை வென்றார் உண்டோ?
என் மேல் உனக்கேனோ பாராமுகம்?

நின்மதி வதனமும் நீள் விழியும் கண்டு
என்மதி மயங்கினேன் நான்
என்மதி மயங்கினேன் மூன்று உலகிலும்

என்னுடனே நீ பேசினால் வாய்முத்துதிர்ந்து விடுமோ? – உனை
எந்நேரமும் நினைந்துருகும் என்னிடம் வந்தால் மெனக்கெடுமோ? – உனை
எந்நேரமும் நினைந்துருகும் என்னிடம் வந்தால் மெனக்கெடுமோ?

உன்னை நயந்து நான் வேண்டிய ஓர் முத்தம் தந்தால் குறைந்திடுமோ?
ஒருபிழை அறியா என்மனம் மலர்க்கணை பாய்ந்து அல்லல் படுமோ?
ஒருபிழை அறியா என்மனம் மலர்க்கணை பாய்ந்து அல்லல் படுமோ? –  மனம் கவர்

மன்மத லீலையை வென்றார் உண்டோ?
என் மேல் உனக்கேனோ பாராமுகம்?

 

தற்காலத்தில் வந்த மன்மத லீலை என்ற திரைப்படத்தை அனைவரும் அறிவர்.

 

–சுபம்–

 

 

 

 

பாரதத்தின் பெருமை! (Post No.2849)

IMG_3442

Article written by S.NAGARAJAN

 

Date: 29 May 2016

 

Post No. 2849

 

Time uploaded in London :–  5-53 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact swami_48@yahoo.com

 

 

 

சம்ஸ்கிருதச் செல்வம்

 

பாரதத்தின் பெருமை!

ச.நாகராஜன்

 

பாரில் உள்ள தேசங்களில் எங்கள் தேசம் உயர் தேசம் என்று ஆனந்தமாக இந்தியர்கள் பாடினால் அது பொருள் பொதிந்த ஒரு விஷயமாகும்.

 

ஏனெனில் உலகில் உள்ள நாகரிகங்களில் எல்லாம் பழமையான ஜீவனுள்ள ஒரே நாகரிகம் ஹிந்து நாகரிகம் மட்டுமே தான்!

 

எகிப்திய, அஸிரிய, ரோமானிய நாகரிகங்கள் உள்ளிட்ட பல பழம் பெரும் நாகரிகங்கள் அழிந்து பட்ட போதிலும் இன்றும் தன் இளமை மணம் மாறா நாகரிகமாக உலகில் இருக்கும் ஒரே நாகரிகம் ஹிந்து நாகரிகம் தான்!

 

பாரத தேசத்தின் பெருமையை விஷ்ணு புராணம் இப்படிச் சொல்கிறது:

 

1947_India_Flag_3½_annas

காயந்தி தேவா: கில கீதகானி

      தன்யாத் து தே பாரதபூமிபாகே

ஸ்வர்கார்பவர்காஸ்பதமார்கபூதே

      பவந்தி பூய: புருஷா: சுரத்வாத்

 

தேவர்களாயிருந்தும் கூட மனிதர்களாக பாரதவர்ஷத்தில் பிறந்தவர்கள் சந்தோஷமுள்ளவர்களே! ஏனெனில் கடவுளரும் அவ்ர்களது கீதத்தை இசைக்கின்றார்கள். ஏனெனில் அதுவே சொர்க்க இன்பங்களுக்கான நுழைவாயில் அல்லது முக்திக்கான பெரிய இன்ப வழியாகும்

தேவர்களும் கூட பாரதத்தில் பிறப்பு எடுக்க ஏங்குகின்றனராம்!

 

இதை ஹெச் ஹெச் வில்ஸன் ஆங்கிலத்தில் இப்படி மொழிபெயர்த்துள்ளார்:

 

 

Happy are those who are born, even from the conditions of gods as men in Bharatvarsha as the gods sings their songs and as that is the way to the pleasures of the paradise, or the greater blessing of final liberation . (H.H. Wilson)

 

பரம பூஜனீய குருஜி ஸ்ரீ எம். எஸ். கோல்வால்கர் தனது பஞ்ச் ஆஃப் தாட்ஸ்(Bunch of thoughts) என்ற நூலில் இந்த ஸ்லோகத்தை மேற்கோள் காட்டியதோடு பாரதத்தின் அருமை  பெருமையை மிக நன்றாக  விளக்கியுள்ளார்.

 

 

ஸ்வாமி விவேகானந்தர் மேலை நாட்டிலிருந்து திரும்பி தாயகம் வருகையில் 15-1-1897 அன்று கொழும்பில் அற்புதமான உரை ஒன்றை ஆற்றினார். அதில் பாரதத்தின் பெருமையைக் கூறும் போது,

 

 

 

“If there is any land on this earth that can lay claim to be the blessed Punya Bhumi, to be the land to which all souls on this earth must come to account for Karma, the land to which every soul that is wending its way Godward must come to attain its last home, the land where humanity has attained its highest towards gentleness, towards generosity, towards purity, towards calmness, above all, the land of introspection and of spirituality — it is India. “

என்று உரைத்தார்.

 

பாரதத்தின் பெருமை உரைக்க ஒண்ணா ஒன்று. தேவர்களும் பிறக்க விரும்பும் புண்ணிய பூமி பாரதம்!

********

 

 

 

 

 

இளம் பெண்களும், கிழட்டு கணவன்மார்களும்! (Post No.2752)

women9

Translated  by London swaminathan

Date: 24 April 2016

 

Post No. 2752

 

Time uploaded in London :– 12-15

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

woman mirror2
பெண்கள் பற்றிய 150 சம்ஸ்கிருதப் பழமொழிகள்- பகுதி 6

87.உயர்குலப் பெண்களின் மனது பூப்போல மென்மையானது

புரந்த்ரீணாம் சித்தம் குசும சுகுமார ஹி பவதி –உத்தம ராம சரிதம்

Xxx

88.காதல் வயப்பட்ட, உயர்குலப் பெண்களின் மனது, புரிந்து கொள்ளமுடியாதது.

புரந்த்ரீணாம் ப்ரேம  க்ரஹிலம் அவிசாரம் கலு மம: –கௌமுதீ மித்ரானந்த

Xxx

89.ஒரு பெண்ணுக்கு கணவனின் மரணம்தான் முதல் அடி.

ப்ரதமம் மரணம் நார்யா  பர்துர் வைகுண்யம் உச்யதே- வால்மீகி ராமாயணம்

Xxx

90.அடாவடியான பெண்களுக்கும் கூட, கணவன் மீது கோபம் கொள்ள சரியான காரணம் தேவைப்படுகிறது.

ப்ரபவந்த்யோபி ஹி பர்த்ருஷு காரண கோபா: குடும்பின்ய: — மாளவிகாக்னிமித்ரம் 1-18, காளிதாசன்

Xxx

91.மனைவியர் , கணவன்களைப் பின்பற்றுவதை முட்டாள்களும், அறிவர்.

ப்ரதமா: பதிவர்த்மகா இதி ப்ரதிபன்னம் ஹி விசேதனைரபி – குமார சம்பவம் 4-33, காளிதாசன்

Xxx

92.கணவனின் அன்பு குறையும்போது, பெண்கள் பெருமூச்சு விடுகிறார்கள்.

ப்ராணாஸ்தூர்ணம் ஹி நாரீணாம் ப்ரியப்ரணயதானவே – ப்ருஹத் கதா மஞ்சரி

Xxx

 

women23

93.வயதான கணவர்களை, அழகான இளம் பெண்கள், திறமையாக சமாளிக்கின்றனர்.

ப்ராய: ப்ராகல்ப்யம் ஆயாந்து தருண்ய: ஸ்தவிரே வரே- ராமாயண மஞ்சரி

Xxx

94.புதல்வியரின் விஷயங்களை மனைவியின் கண்கள் ஊடாகவே கணவர்கள் காண்கின்றனர்.

ப்ராயேண க்ருஹிணீ நேத்ரா: கன்யார்தேஷு குடும்பின: -– குமார சம்பவம், 6-85, காளிதாசன்

Xxx

 

95.காதல் வயப்பட்ட கணவனுக்கு, மனைவியின் கெட்டபுத்தியும் கண்ணுக்குத் தெரிவதில்லை.

ப்ராயேண பார்யாத் ஔசீல்யம்  ஸ்நேஹாந்தோ நேக்ஷதே ஜன: – கதாசரித் சாகரம்

Xxx

96.உயிரையும் விட மேலானவள் மனைவி.

பார்யா ப்ராணேப்யோ அபி அதிகப்ரியா– கதாசரித் சாகரம்

Xxxx

97.பார்யா ரூபவதீ சத்ரு: – சாணக்யநீதி 9-12

அழகான மனைவி – ஒரு எதிரி

Xxx

98.துன்பப்படும் அனவருக்கும் மூத்த சகோதரரின் மனைவி, தாயாராகி விடுகிறார்.

ப்ராத்ருஜாயா ஹி சர்வேஷாம்  தீனானாம்  வாமலோசனா – கஹாவத்ரத்னாகர்

Xxx

99.உங்கள் மனைவியைக் காப்பாற்றுவதுபோல, மாற்றார் மனைவியருக்கும் பாதுகாப்பு அவசியம்.

யதா தவ ததா அன்யேஷாம் தாரா ரக்ஷ்யா – வால்மீகீ ராமாயணம் 5-21-8

Xxx

100.மனைவியர் இருக்கும் வரை, வேலைகளும் இருக்கத்தான் செய்யும்

யாவத் க்ருஹிணீ, தாவத் கார்யம்- கஹாவத்ரத்னாகர்

Xxx

IMG_3350

101.சக்களத்தி என்பவள், துன்பத்தின் ஊற்று

சபத்னீ சர்வதா சிந்த்யா — கதாசரித் சாகரம்.

Xxx

102.காதல் நோய்க்கு அருமருந்து, காதலியின் – அமுதம் போன்ற அணைப்புதான்.

ஸ்மர ஜ்வர சிகித்சா ஹி தயித ஆலிங்கன அம்ருதை: – ப்ருஹத் கதா மஞ்சரி

Xxx

103.வெண்சாமரம் போன்ற ப்ரகாசமான, புன்னகை மிளிரும் அன்புள்ள மனைவியை யார்தான் போற்றமாட்டார்?

ஸ்மேர சாமர  ஹசின்ய: வல்லபா: கஸ்ய ந ப்ரியா:? – பாரத மஞ்சரி

–சுபம்–

 

ஆய கலைகள் 64 முழு விவரம் – பகுதி-2 (Post No 2699)

chatus-shasti-kala

Compiled by london swaminathan

Date: 6 April, 2016

Post No. 2699

Time uploaded in London :–  8-11 AM

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

நேற்று இதன் முதல் பகுதி வெளியிடப்பட்டது. அதில் முதல் 21 கலைகளின் விவரங்கள் உள்ளன.

 

முந்தைய கட்டுரைகள்

Previous articles on 64 Arts:

உலகம் வியக்கும் பெண்கள் பாட திட்டம் !! ( 4 May 2014)

 

Wonderful Syllabus for Women (Posted on 4 May 2014)

பெண்களின் 64 கலைகள்! (29 May 2012)

Techniques of Secret Writing in India ( 19 March 2013)

காதல் கடிதம் எழுத ரகசிய சங்கேத மொழி ( 19 March 2013)

64 art-13

 

64 art-14

 

 

64 art -15

64 art-15

 

64 art-16

64 art-17

64 art-18

64 art-19

 

64 art-20

 

64 art-21

 

64 art-22

 

64 art-23

 

64 art-24

64 art-25

64 art-26

–சுபம்–

 

 

சுபாஷித இலக்கியம் (Post No. 2427)

raghavan 2

Picture of Dr Raghavan, Sanskrit Scholar

 

Written by S NAGARAJAN

Date: 26 December 2015

 

Post No. 2427

 

Time uploaded in London :– காலை 6-35

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

 

சம்ஸ்கிருதச் செல்வம்

சுபாஷித இலக்கியம்

ச.நாகராஜன்

 

 

கூகிளின் புத்தகத் திட்டம்

 

உலகில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கையைச் சொல்வது முடியக் கூடிய காரியமா என்ன?

மலைக்க வேண்டாம்.

 

வானத்தில் உள்ள கோடிக்கணக்கான நட்சத்திரங்களையே பட்டியலிடும் இந்தக் காலத்தில் முடியாதது என்று ஒன்று உண்டா என்ன?

 

கூகிள் களத்தில் இறங்கியது. தி டெலகிராஃப் பத்திரிகை 6-8-2010 தேதியிட்ட இதழில் செய்தி ஒன்றை வெளியிட்டது. அதன்படி புத்தகம் பற்றிய கூகிள் திட்டம் முடிந்து விட்டதென்றும் உலகில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கை சரியாக 129,864,880 (பன்னிரண்டு கோடியே தொண்ணூற்றெட்டு லட்சத்து அறுபத்தி நான்காயிரத்து எண்ணூற்றி எண்பது) என்றும் அந்தச் செய்தி கூறியது.

 

புத்தகங்களின் கணக்கு ஒருவாறாக வந்து விட்டது!

 

dr raghavan

டாக்டர் வி.ராகவனின் அரிய பணி

 

நல்லது, புத்தகமாக வெளி வராத சுவடிகள் எவ்வளவு? அதில் சம்ஸ்கிருதச் செல்வம் எவ்வளவு உள்ளது? மலைக்க வைக்கும் அளவில் பல லட்சக்கணக்கான சுவடிகள் உலகெங்கும் பல்வேறு இடங்களில், – பல்கலைக் கழகங்களில், கோவில்களில், மடாலயங்களில், தனியாரது சேகரிப்பில், அருங்காட்சியகங்களில் என்று இப்படிப் பல்வேறு இடங்களில்  –  உள்ளன.

இதை மொத்தமாகப் பட்டியலிடும் பெரிய திட்டத்தை யாரும் மேற்கொள்ளவில்லை.

 

சம்ஸ்கிருத பேரறிஞர் டாக்டர் வி.ராகவன் (1908-1979) இந்தப் பணியில் தீவிரமாக இறங்கினார். உலகெங்கும் பயணம் செய்தார். ஓரளவுக்கு பல்லாயிரம் சுவடிகள் மற்றும் புத்தகங்களின் விவரத் தொகுப்பை நூலாக்கினார்.

 

ஆனால் தஞ்சையில் உள்ள சரஸ்வதி மஹாலில்  தொடங்கி  கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வரை பகல்லாயிரக்கணக்கான இடங்களில் உள்ளவற்றை முழுவதுமாக யாரே தொகுப்பர்? காலம் தான் விடை சொல்ல வேண்டும்.

 

என்றாலும் கூட தங்களால் முடிந்த அளவில் பல அறிஞர்கள் தங்கள் வாழ்நாள் பணியாக சம்ஸ்கிருதச் செல்வத்தைக் காக்க முயற்சி எடுத்திருப்பதை சரித்திரம் சொல்கிறது.

 

SUBASHITA BIG

மஹாசுபாஷித சம்க்ரஹா – லுட்விக் ஸ்டர்ன்பாக்

 

சம்ஸ்கிருத இலக்கியத்தில் சுபாஷிதம் ஒரு தனி இடத்தைப் பெறுகிறது.

 

பல்லாயிரக்கணக்கான சுபாஷித ஸ்லோகங்களை வெளியிடுவது ஒன்றையே தன் வாழ்நாள் பணியாக மேற்கொண்ட அறிஞர் லுட்விக் ஸ்டர்ன்பாக் (Ludwik Sternbach) அனைத்து சம்ஸ்கிருத ஆர்வலர்களாலும் போற்றிக் கொண்டாடப்பட வேண்டிய ஒரு பெரியார்.

 

 

மஹாசுபாஷித சம்க்ரஹா என இவர் அரிய சுபாஷிதங்களைத் தொகுக்கும் பணியை ஆரம்பித்தார். இந்தத் திட்டத்தின் கீழ் எட்டுத் தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில்

அகரவரிசைப்படி ஸ்லோகங்கள்/செய்யுள்கள்  தொகுக்கப்பட்டுள்ளன.

 

சம்ஸ்கிருத மூலமும் அதன் கீழ் ஆங்கில மொழிபெயர்ப்பும் அரிய குறிப்புகளும் இந்த எட்டுத் தொகுதிகளில் உள்ளன.

முதல் தொகுதியில் 1 முதல் 1873 ஸ்லோகங்களும் இரண்டாம் தொகுதியில் 1874 முதல் 4208 முடிய உள்ள ஸ்லோகங்களும் மூன்றாம் தொகுதியில் 4209 முதல் 8285 முடிய உள்ள ஸ்லோகங்களும் நான்காம் தொகுதியில் 6286 முதல் 8264 முடிய உள்ள ஸ்லோகங்களும் ஐந்தாம் தொகுதியில் 8265 முதல் 9979 முடிய உள்ள ஸ்லோகங்களும் ஆறாம் தொகுதியில் 9980 முதல் 11491 முடிய உள்ள ஸ்லோகங்களும் ஏழாம் தொகுதியில் 11492 முதல் 13018 முடிய உள்ள ஸ்லோகங்களும் எட்டாம் தொகுதியில் 13019 முதல் 14653 முடிய உள்ள ஸ்லோகங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

 

LUDWIG 2

முதல் பாகம் 586 பக்கங்களையும் இரண்டாம் பாகம் 608 பக்கங்களையும் மூன்றாம் பாகம் 564 பக்கங்களையும் நான்காம் பாகம் 571 பக்கங்களையும் ஐந்தாம் பாகம் 492 பக்கங்களையும் ஆறாம் பாகம் 575 பக்கங்களையும் ஏழாம் பாகம் 671 பக்கங்களையும் எட்டாம் பாகம் 732 பக்கங்களையும் கொண்டுள்ளது. ஆக சுமார் 4799 பக்கங்களில் 14653 சுபாஷித செய்யுள்களைப் படிக்க முடியும்.

 

 

அறிஞர் லுட்விக் ஸ்டர்ன்பாக்கிற்கு அறிவுச் செல்வத்தைப் போற்றும் உலகினர் அனைவரும் நன்றிக் கடன் பட்டுள்ளனர். இந்தத் தொகுதிகளை விலை கொடுத்து வாங்க முடியாதவர்கள் தக்க நூலகத்தை அணுகி இவற்றைப் படிக்கலாம். இணையதளத்திற்கான இணைப்பு வசதி உள்ள,

சுபாஷிதத்தைப் படிக்க ஆரம்பிக்க விரும்பும் ஆர்வலர்கள் கீழே குறிப்பிட்டுள்ள இணையதளங்களை நாடலாம்; நற்பயன் பெறலாம் :-

LUDWIG3

http://sanskritdocuments.org/doc_z_misc_subhaashita/doc_z_misc_subh_1_index.html

http://www.scribd.com/doc/94115369/Sanskrit-Subhashita-Collection#scribd

 

—Subham—-

முள்ளைத் தின்று மகிழும் ஒட்டகம்!

camel thorn

Compiled by Santanam Nagarajan

Article no. 1701; dated 9 March 2015

 

சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்

21. முள்ளைத் தின்று மகிழும் ஒட்டகம்!

.நாகராஜன்

நியாயங்களின் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்:

उष्ट्रकण्टकभक्षणन्यायः

ustrakantakabhaksana nyayah

உஷ்ட்ரகண்டகபக்ஷண நியாயம்

உஷ்ட்ரம்ஒட்டகம்; கண்டகம்முள்; பக்ஷணம்உணவு

ஒட்டகமும் முள்ளும் பற்றிய நியாயம் இது.

தாவரங்களுள் முள் என்றால் ஒட்டகத்திற்கு அதிகம் பிடிக்கும். ஆனால் அதைச் சாப்பிடும்போதோ அதன் வாயிலிருந்து ரத்தம் ஒழுகும். அதன் வாயில் முள் குத்தலினால் ஏற்படும் வலி தாங்க முடியாத ஒன்று! என்றாலும் கூட அது முள் சாப்பிடுவதை விடுவதில்லை!

என்ன கஷ்டம் வந்தாலும் சரி தான், தான் செய்வதை ஒருவன் விடுவதில்லை என்னும் சமயத்தில் இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும். நியாயமாகப் பார்த்தால் அவன் செய்வது சரியில்லை என்றாலும் கூட தனக்குப் பிடித்ததை ஒருவன் செய்யும் போது அது ஒட்டகம் சாப்பிடும் முள் போல என்று சொல்லப்படும்.

Camels_Eating_Thorns

एकसम्बन्धिदर्शने अन्यसम्बन्धिस्मरणम्

ekasambandhidarsane anyasambandhismaranam

ஏகசம்பந்திதர்ஷனே அன்யசம்பந்தி ஸ்மரணம்

ஒன்றை இன்னொன்று தொடர்பு படுத்துவது பற்றிய நியாயம் இது!

ஒரு சம்பந்தியைப் பார்க்க்கும் போது இன்னொரு சம்பந்தியின் ஞாபகம் ஏற்படுகிறது.

ஒன்றை இன்னொன்று ஞாபகப்படுத்தும் போது அல்லது அதே போல இருக்கும் இன்னொன்றைச் சுட்டிக் காட்டும் போது தொடர்பைச் சுட்டிக் காட்ட இந்த நியாயம் சொல்லப்படும்.

titanic-1

काशकुशावलम्बनन्यायः

kasakusavalambana nyayah

காஷகுஷாவலம்பன நியாயம்

துரும்பைப் பிடிப்பது அல்லது புல்லைப் பிடிப்பது பற்றிய நியாயம் இது.

கப்பல் ஒன்று நீரில் மூழ்குகிறது. பயணிகள் நீரில் மூழ்குகின்றனர். அப்போது எப்படியேனும் உயிர் பிழைக்க வேண்டும் என்ற நிலையில் கையில் கிடைத்ததைப் பிடித்துக் கொண்டு உயிர் தப்ப அனைவருமே நினைப்பர்கரை ஓரமாக வளர்ந்திருக்கும் நாணலாகவோ அல்லது தர்ப்பைப் புல்லாகவோ இருந்தாலும் சரி, அதைப் பிடித்து நதியின் வெள்ளத்திலிருந்து தப்ப நினைப்பதே மனித இயல்பு.

இந்த நியாயம் பட்டிமன்றம் அல்லது விவாத மேடையில் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு விவாதத்தில் நிச்சயம் தோற்று விடுவோம் என்ற நிலையில் சிறிய முக்கியமற்ற ஒரு விஷயம் கைக்குக் கிடைத்தால் அதைப் பிடித்துக் கொண்டு (தொங்குவது போல) விவாதத்தைத் தொடர முயலும் ஒருவரின் நிலையை இந்த நியாயம் சரியாகப் படம் பிடித்துக் காட்டுகிறது! ஆனால் இப்படி (விதண்டா) வாதம் புரிவோர் அனைவரின் ஏளனத்திற்கும் இலக்காவர்.

donkeys

Birmingham Donkey Sanctuary, UK

गर्दभरोमगणनन्यायः

gardabharomaganana nyayah

கர்தப ரோம கணன நியாயம்

கர்தபம்கழுதை; ரோமம்மயிர் அல்லது ரோமம்

கழுதையின் ரோமம் பற்றிய நியாயம் இது.

கழுதையே பொதுவாக அசுத்தம் என்று அனைவரும் நினைக்கும் ஒரு பிராணி.

அதனுடைய ரோமமும் கூட யாருக்கும் பிடிக்காது. ஆக அதை வெட்ட நினைக்கும் ஒருவனை என்ன சொல்வது? அந்த ரோமத்தால் அவனுக்கு எந்த பயனும் ஏற்படப்போவதில்லை!

பயனற்ற ஒரு செயலை ஒருவன் செய்ய முற்படும் போது இந்த நியாயம் சுட்டிக்காட்டப்படும்.

spinning wheel

चक्रभ्रमणन्यायः

cakrabhramana nyayah

சக்ர ப்ரமண நியாயம்

சுழற்றி விடப்படும் சக்கரம் பற்றிய நியாயம் இது.

ஒரு சக்கரத்தைச் சுழற்ற அதை இயக்கும் விசை வேண்டும். விசை இருக்கும் வரை அது ஓடிக் கொண்டிருக்கும். அந்த விசை நிறுத்தப்பட்டு விட்டால் அது அந்த விசையின் விளைவு இருக்கும் வரை ஓடும். பின்னர் நின்று விடும்.

ஒரு இயக்கமானது அதை ஆரம்பித்து அதை இயக்குபவர் இயக்கும் வரை நன்கு இயங்கும். அது நிறுத்தப்பட்டு விட்டால் இயக்கும் தளர்வடைந்து விடும்.

சமூக இயக்கமாக இருந்தாலும் சரி, ஒரு மத ரீதியிலான இயக்கமாக இருந்தாலும் சரி அதை ஊக்கப்படுத்தி செயல்படுத்துபவர் இருக்கும் வரை உற்சாகமாக இயங்கும். ஆனால் அந்த ஊக்கம் அதை இயக்குபவர் இல்லாத போதோ அல்லது அவர் செயல்படாத போதோ தானே நின்று விடும்.

இதைக் குறிக்கும் நியாயம் இது.இடைவிடாத ஊக்கமூட்டும் ஆற்றல் இருந்தால் மட்டுமே எந்த ஒரு விஷயமும் வெற்றியைக் கொண்டிருக்கும்!

*******************