வேத பிராயம் நூறு வயதை எட்டிய பெரியோர்! -1 (Post No. 2566)

number-100.jpg-12707

Written by S Nagarajan

 

Date: 23  February 2016

 

Post No. 2566

 

Time uploaded in London :–  6-12 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

வேதவழி

 

வேத பிராயம் நூறு வயதை எட்டிய பெரியோர்! -1

 

ச.நாகராஜன்

 

 

 

மனிதருக்கு வேதம் வகுத்த ஆயுள் நூறு.

 

ஜீவேம சரத சதம்- நூறு ஆண்டுகள் வாழ்வோமாக என்று தினமும் ஆரோக்கியத்தையும் ஆயுளையும் அருள வேண்டி சூரியனைத் துதிப்பது பண்டைய காலத்திலிருந்து ஹிந்து சமூகத்தில் இருந்து வரும் பழக்கம்.

 

 

இப்படி வேதம் வகுத்த நெறிகளின் படி வாழ்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட வயதைத் தாண்டியோர் ஏராளம். அவர்கள் அனைவரையும் பற்றிய விரிவான சரித்திரம் நம்மிடம் இல்லை; ஏனெனில் அதை ஒரு அற்புதம் என்று அப்படி வாழ்ந்தவர்கள் நினைக்கவே இல்லை.

 

 

ஆனால் நூறில் பாதியை எட்டுவதையே அதிசயமாகப் பார்க்கும் இந்தக் காலத்தில் அப்படிப்பட்ட மகான்களை நினைப்பதும் அவர்கள் வாழ்க்கை முறையை உன்னிப்பாக கவனித்துப் பார்ப்பதும் உத்வேகம் அளிக்கும்.

 

இந்த வகையில் சமீப காலத்தில் வாழ்ந்த  சிலரைப் பற்றியேனும் அறிந்து கொள்வது வேதநெறிக்கு நாம் கொடுக்கும் மரியாதையாகும்.

 go mata, kanchi

முதலில் நால்வரைப்  பார்ப்போம்.

 

காஞ்சி காமகோடி ஜகத்குரு சங்காராசாரியார் (ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர சரஸ்வதி – 68 பீடாதிபதி)

 

பண்டிட் ஸ்ரீபத் தாமோதர சாத்வலேகர்

 

யோகி ஸ்ரீ கிருஷ்ணமாசாரியா

நிரோத்பரன்

 

சமீபகாலத்தில் வாழ்ந்த இந்த நால்வரில் ஒருவர் ஜகத்குரு.உலக நன்மையை வேண்டி தன் ஆயுளை அர்ப்பணித்த பெரும் அருளாளர்.

 

 

இன்னொருவர் வேத வாழ்க்கையை வாழ்ந்து காட்டி நூறு வயதை எட்டியவர். பண்டிட் ஸ்ரீபத் தாமோதர சாத்வலேகர்

இன்னொருவர் ஹிந்து வாழ்க்கை முறை கற்பிக்கும் யோகத்தைக் கற்று அதன்படி வாழ்ந்தால் நூறு வயதை சுலபமாக எட்டலாம் என்று நிரூபித்த யோகாசாரியர் – யோகி ஸ்ரீகிருஷ்ணமாசாரியார்.

மஹரிஷி ஒருவரை அண்டி அவரின் அணுக்க பகதராக இருந்து அவர் கூறிய யோக முறைப்படி வாழ்ந்தால் நூறையும் தாண்டலாம் என்று நிரூபித்தவர் அரவிந்த மஹரிஷியுடன் நீண்ட காலம் இருந்த் அணுக்கத் தொண்டர் நிரோத்பரன்!

 

 

இந்த நால்வரும் நமக்காக விட்டுச் சென்ற அன்புரைகளும் அறிவுரைகளும் ஏராளம்.

 

ஏராளமான சொற்பொழிவுகள். ஏராளமான நூல்கள்! ஏராள்மான இரகசியங்களைச் சுட்டிக் காட்டி அன்பர்களுக்குத் தந்த அருளுரைகள்.

 

இவையெல்லாம் நல்ல வேளையாக தொகுக்கப்பட்டுள்ளன.

தேடி ஓடி நாட வேண்டியது ஒன்று தான் நம் வேலை.

நாலவரைப்  பற்றியும் இந்தச் சிறு குறுந்தொடரில் அறிமுகம் செய்து கொள்வோம்!   – தொடரும்

 

 

மூலிகைப் போர்! (Post No 2538)

IMG_6701

Written by S Nagarajan

 

Date: 14  February 2016

 

Post No. 2538

 

Time uploaded in London :–  6-57  AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

பாக்யா 12-2-2016 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

 

மூலிகைப் போர்!

.நாகராஜன்

 

 

IMG_6703

ஆயுர்வேதத்தில் இருக்கும் பெரிய நன்மை என்னவென்றால் அது பக்க விளைவுகளை ஏற்படுத்தவே ஏற்படுத்தாது. பக்க ஆதாயங்களைத் தான் ஏற்படுத்தும்                         – சுப்ரா கிஷன்

                              

கடைசி கடைசியாக, அதிசயமாக நாம் விழித்துக் கொண்டோம். எதில்?  மூலிகைப் போரில்!

பிரம்மாண்டமான இமயமலை வடக்கில் இருக்க விந்தியாசலம், கொல்லி மலை, மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத் தொடர்ச்சி மலை என்று நம் தேசத்தில் உள்ள மலைகளைச் சார்ந்துள்ள விஸ்தாரமான காடுகள் அபூர்வ மூலிகைகளைக் கொண்டுள்ளன. இந்த மூலிகைகளின் பயன்பாட்டைத் தெரிந்து கொண்டு அவற்றை இன்றும் ப்ழங்குடி மக்கள் சர்வ சாதாரணமாக உப்யோகிக்கின்றனர். பெரிய வியாதிகள் கூட உடனடியாகத் தீருகிறது. வாதம், பித்தம், கபம் ஆகிய திரி தோஷங்களையும் தனி நபருக்கே உரித்தான பிரக்ருதியையும் அடிப்படையாகக் கொண்டது நமது ஆயுர் வேதம்.

 

இதை நமது விஞ்ஞானிகள் முதல் முறையாக ஆராய்ந்து அதன் அருமை பெருமைகளைக் கண்டுபிடித்து உரைத்துள்ளனர்.

ஆனால் நமக்கு முன்பாகவே விழித்துக் கொண்ட சீனா கன்ஃப்யூசியஸ் கூறிய நெறிகளின் படி மூலிகை ஆராய்ச்சியில் இறங்கி திபெத்தில் உள்ள அரிய பெரிய மூலிகைகளை இனம் கண்டு அதிலிருந்து பல்வேறு மருந்துகளைத் தயார் செய்து வருகிறது. உலகின் பிரம்மாண்டமான மருந்து உற்பத்தி மற்றும் விற்பனை சந்தையில் முதலிடத்தைப் பிடிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் இந்த மூலிகைப் போரை சீனா ஆரம்பித்துள்ளது.

அமெரிக்காவோ வெளியில் அல்லோபதி என்று சொன்னாலும் மூலிகை மற்றும் தாவரங்களிலிருந்தே உயிர்காக்கும் மருந்துகளைத் தயாரிக்கிறது.

 

1820ஆம் ஆண்டு இரண்டு பிரெஞ்சு ஆய்வாளர்கள் மூலிகையிலிருந்து மலேரியாவைப் போக்கும் கொய்னா மாத்திரையைக் கண்டுபிடித்ததிலிருந்து இந்த மூலிகை வேட்டை ஆரம்பித்தது. சரக சம்ஹிதாவில் சரக முனிவர் கூறிய அற்புதமான சர்ப்பகந்தியை நாம் விட்டு விட அமெரிக்கா அதை எடுத்துக் கொண்டது. அதை உபயோகித்து,  பன்னாட்டு மருந்து நிறுவனமான சிபா-கெய்கி  ரெஸர்பைன் (Reserpine) மாத்திரையைக் கண்டுபிடித்து பெரும்புகழைப் பெற்றது. மஞ்சளை அமெரிக்கா பேடண்ட் எடுத்த கதையையும் நாம் அறிவோம்.

 

2009ஆம் ஆண்டு சீனா ஹார்வர்டு பல்கலைக் கழகத்துடன் இணைந்து மூலிகைகளிலிருந்து மருந்துகளைத் தயாரிக்கும் உயர்தர உத்திகளை வகுத்துக் கொண்டது.

இமயமலைப் பகுதியை முற்றிலுமாக ஆராய்ந்து அங்கிருக்கும் அபூர்வ மூலிககைகளை இனம் கண்டு உயர்தர மருந்துகளை சீனா தயாரிக்கும் வேகத்தைப் பார்த்தால் மூலிகைப் போரில் அது வெற்றி பெற்று விடுமோ என்ற பயம் ஏற்படுவதாக நமது விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

 

இமயமலைப் பகுதியில் கங்கோத்ரி யமுனோத்ரி என கங்கையும் யமுனையும் உருவாகும் பகுதிகளில் அற்புதமான மூலிகை வளம் உள்ளது.

இங்குள்ள துரோணகிரியின் அருகிலே தான் சஞசீவனி மூலிகை உள்ள் சஞ்சீவனி பர்வதம் உள்ளது.

 

லக்ஷ்மணனைக் காப்பாற்ற ஹநுமார் சஞ்சீவனி மூலிகையை எடுக்க வந்த பந்தர் பூஞ்ச் பகுதியில் பங்குனி மாதத்தில் ஒரே ஒரு குரங்கு மட்டும் வருகிறது. ஹரித்வார் வழியாக வரும் அந்தக் குரங்கை தரிசிக்க யாத்ரீகர்கள் கூட்டம் கூட்டமாகக் காத்திருப்பர். பலரும் தரிசிக்கின்றனர். ஒரு வருடம் மலை உச்சியில் வசிக்கும் அந்தக் குரங்கு அடுத்த குரங்கு வந்தவுடன் மலையை விட்டு இறங்கி விடும். இமயமலை தரும் நூற்றுக் கணக்கான அபூர்வங்களில் இதுவும் ஒன்று!

 

உயிரை மீட்டுத் தரும் சஞ்சீவனி மூலிகை உள்ளிட்ட ஏராளமான மூலிகைகளின் பெயரை சரகர் குறிப்பிடுகிறார்.  உயிரைக் கொல்லும் வியாதியான கான்ஸருக்கு வின்ப்ளாஸ்டைன் (Vinblastiine), மற்றும் வின்கிறிஸ்டைன்(Vincristine) ஆகிய மருந்துகள் மூலிகையிலிருந்தே தயாரிக்கப்படுகின்றன.

 

இந்திய அரசின் நிறுவனமான  சென்ட்ரல் ட்ரக் ரிஸர்ச் இன்ஸ்டிடியூட் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் குக்குள் மூலிகையிலிருந்து குக்குளிபிட் மருந்தை 1986இல் தயாரித்தது குறிப்பிடத் தகுந்தது.

 

இந்த வகையில் நமது ஆராய்ச்சிகள் தீவிரமடைந்துள்ளன. ஹைதராபாத்தைச் சேர்ந்த சென்டர் ஃபார் செல்லுலர் அண்ட் மாலிகுலர் பயாலஜியைச் (Centre for Cellular and Molecular Biology)  சேர்ந்த விஞ்ஞானிகள் ஆயுர்வேதத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கும் மனித அமைப்பு சரிதானா என்ற சோதனையில் ஈடுபட்டனர். இதற்காக  20 வயதிலிருந்து 40 வயது வரை உள்ள ஆரோக்கியமான ஆண்கள் 3416 பேரைத் தேர்ந்தெடுத்து இந்த நிறுவனம் ஆய்வை ஆரம்பித்தது. இறுதியில் வாத, பித்த, கபம் ஆகிய மூன்று தோஷங்களில் ஏதேனும் ஒரு தோஷம் 60 சதவிகிதத்திற்கு மேலாக உள்ள 262 பேர்களை தேர்ந்தெடுத்தது.

IMG_6704 - Copy

இவர்களின் மீது மரபணு, புள்ளியியல் அடிப்படையில் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 1.2கோடி ரூபாய் செலவில் ஆறு ஆண்டுகள் செய்யப்பட்ட இந்த ஆய்வு சமீபத்தில் 2015 வருட முடிவில் முடிந்து விட்டது.

இதன் முடிவுகள் ஆச்சரியமூட்டும் விதமாக நமது ஆயுர்வேத கொள்கைகளை உறுதி செய்கிறது!

 

இந்த ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட விஞ்ஞானி டாக்டர் குமாரசாமி தங்கராஜ் தனது குழுவினர் மரபணுவில் 52 மாறுபாடுகளைக் கண்டறிந்துள்ளனர் என்று தெரிவிக்கிறார். இந்த ஆராய்ச்சி மேலும் நடைபெற்றால் மூன்று தோஷங்களின் உட்பிரிவுகளையும் கண்டு பிடிக்க முடியும். அப்போது ஒவ்வொரு தனி நபருக்கும் உரிய தனித் தனி சிகிச்சை முறையை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

 

இந்திய அறிவியல் இதழ்களில் இடம் பெற்று விட்ட இந்த ஆராய்ச்சி மூலிகைப் போரில் இந்தியா வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை ஊக்குவிக்கிறது.

தொன்மமும் நம்பிக்கையும் ஒரு புறம் இருக்க அறிவியல் ரீதியாக ஆராய்ந்து அவை உறுதிப்படுத்தப் படும் போது வரும் மகிழ்ச்சிக்கு எல்லையே கிடையாதல்லவா!

 

ருத்ரமூலிகா, சஞ்சீவனி, சர்ப்பகந்தி உள்ளிட்ட அபூர்வ மூலிகைகளை இந்திய விஞ்ஞானிகள் இனம் கண்டு ஆய்வு நடத்தினால் புதியதோர் வியாதியில்லா உலகைப் படைக்க இந்திய விஞ்ஞானிகள் காரணமாகி விடுவார்கள். புராதனமான அறிவும் நவீன அறிவியலும் ஒன்றிணைந்தால் இந்தியா, ‘மூலிகை நாடு’ என்ற உயரிய அந்தஸ்தைப் பெற்று விடும்!

அந்த நாள் விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

பிரான்ஸை சேர்ந்த பிரபல் விலங்கியல் அறிஞரும் இயற்கையியலருமான (Zoologist and Naturalist)  ஜார்ஜ் குவியே         ( Georges Cuvier 1769-1832) ஒரு விநாடி கூட நேரத்தை வீணாக்க மாட்டார்.  உலகில் உள்ள சகல விதமான மிருகங்கள், பறவையினங்கள் உள்ளிட்ட உயிரினங்களைப் பற்றி அவருக்கு அத்துபடி. அந்த விவரங்களை எல்லாம் தனது அறையில் அவர் சேகரித்து வைத்திருந்தார்.

 

தன் வீட்டிற்குள் வந்து அநாவசியமாக யாரேனும் நேரத்தை வீணடிப்பது அவருக்கு அறவே பிடிக்காது. பிரபலமான ஒரு கனவான் அவரை மரியாதை நிமித்தம் சந்திக்க வருவார். ஒருமுறை அதைப் பற்றிக் கூறுகையில், “ அவர் வருவது ஒருவருக்கொருவர் முகமன் கூறிக் கொள்ள; அவ்வளவு தான்! யாராவது வந்து இன்று மழை பெய்யுமா, வெயில் அடிக்குமா என்று என்னிடம் தெரிவிக்கத் தேவையே இல்லை. அவர்கள் கூறுவதை விட எனது தெர்மாமீட்டரும் பாரோமீட்டரும் இன்னும் துல்லியமாக அனைத்தையும் தெரிவிக்கும்.” என்று கூறியவர் தன் அறையைச் சுட்டிக் காட்டி. “இதோ இங்கு இருக்கும் மிருக உலகத்தில் எந்த வகையிலும் சரி, எந்த இனத்திலும் சரி, எப்படி ஆனாலும் சரி என்னை பயமுறுத்தக் கூடிய ஒரு உயிரினமே கிடையாது. ஆனால் வெட்டியாய் நேரத்தைப் போக்கும் சோம்பேறிக்கும் நேரத்தை வீணடிக்கும் வீணரையும் கண்டால் நான் மிகவும் பயப்படுகிறேன்” என்றார். ஆகவே அவரைச் சந்திப்பவர்கள் ஒரு வினாடி நேரத்தையும் கவனமுடன் கணித்துக் கொள்வார்கள்.

IMG_6707

மேதைகள் அனைவருக்கும் நேரம் என்பது பொன்னைக் காட்டிலும் மதிப்பு மிக்கது. பிரான்ஸ் நாட்டின் சட்ட மேதையும் பிரதான அமைச்சராகவும் விளங்கிய ஹென்றி ப்ராங்கோய்ஸ் டி அகுஸா (Henry Francois de aguesseau 1688-1751)) என்பவர் ஒரு வினாடி நேரத்தையும் வீணாக்க மாட்டார்.

 

தின்சரி உணவு நேரத்தில் மேஜைக்கு சரியான நேரத்தில் அவர் வந்து அமர்வார். ஆனால் அவரது மனைவியோ தினமும் 15 நிமிடம் கழித்தே வருவார். எவ்வளவோ சொல்லியும் அவரது வழக்கம் மாறவில்லை.

 

பார்த்தார் அகுஸா. டைனிங் டேபிளுக்கு ஒரு நோட்டுடன் வந்து அமர ஆரம்பித்தார். 15 வருடங்கள் கழித்து பெரிய நான்கு தொகுதிகளை அவர் வெளியிட்டார். எல்லாம் டைனிங் டேபிள் நோட்புக்கில் எழுதிய நூல் தான்! அது பல பதிப்புகளைக் கண்டு பெரும் புகழை அவருக்குப் பெற்றுத் தந்தது.

 

எல்லா மேதைகளும் முதலில் மற்றவருக்குக் கற்றுத் தரும் முதல் பாடம்: நேரத்தை வீணாக்காதே என்பது தான்!

IMG_6708

*******

 

 

 

திருவள்ளுவர் பற்றிய பழைய புத்தகம் (Post No. 2532)

IMG_3156 (2)

Written by london swaminathan

 

Post No. 2532

Date: 12th February 2016

 

Time uploaded in London  காலை 8-48

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

IMG_3147

 

IMG_3154 (2)

IMG_3157 (2)

 

புத்த மதம் பற்றிய ஒரு நூலின் பின்னட்டையில் இந்த புத்தக விளம்பரம் வெளியாகியுள்ளது. இதை பிரிட்டிஷ் லைப்ரரியில் நேற்று புகைப்படமெடுத்தேன். வருங்கால ஆராய்ச்சியாளர்களுக்கு  உதவும் என்பதால் இங்கே பதிவு செய்கிறேன்.

 

சுமார் நூறு ஆண்டுகளுக்கு  முன் வெளியான எல்லா, தமிழ் ஆங்கிலப் புத்தகங்களிலும் திருவள்ளுவர் பற்றிப் பல தகவல்கள் உள்ளன. ஆனால் சமீப காலத்தில் வெளிவரும் நூல்களில் அவை இருட்டடிப்புச் செய்யப்பட்டுவருகின்றன. இதே போல திருக்குறள் நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டு நூல் என்ற உண்மையும் மறைக்கப்பட்டு வருகிறது.

 

நாங்கள் லண்டனில் பல்கலைக் கழக வளாகத்தில் வள்ளுவர் சிலை நிறுவியபோது, இவர் ஐந்தாம் நூற்றாண்டுப் புலவர் என்றே எழுதி அழைப்பிதழ் வெளியிட்டோம். வள்ளுவர் ஆண்டை கி.மு.31 என்று நிர்ணயித்த மகநாட்டில், கடும் எதிர்ப்பு, வெளிநடப்புகள் நடந்த விஷயங்களை தமிழ்கூறு நல்லுக அறிஞர்கள் அறிவர். அதிகாரம் என்ற சொல்லும், ஒவ்வொரு அதிகாரத்திலும் சம்ஸ்கிருதச் சொல்லும் இருப்பதால் வள்ளுவனின் காலத்தை மொழியியல் ரீதியில் ஐந்தாம் நூற்றாண்டிலேயே வைக்கமுடியும்.

 

இன்றுள்ள நிலையில் தொல்காப்பியம் (குறிப்பாகப் பொருளதிகாரம்), சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகிய மூன்றும் தமிழ்நாட்டின் வரலாற்றில் இருண்ட காலம் என்று கருதப்படும் 4 அல்லது 5 ஆம் நூற்றாண்டிலேயே தோன்றின. தொல்காப்பிய காலம் பற்றிய எனது ஆராய்ச்சிக் கட்டுரைகளில் இதை விரிவாக எழுதியுள்ளேன்.

எனது வேறு சில பழைய கட்டுரைகள்:

Who was Tiruvalluvar? written and posted by me on 24 July 2013

 

Abert Einstein and Tiruvalluvar, posted on 17 December 2013

Tamil Merchant who dumped god into sea, posted on 17 August 2014

Elelasingan Kathai (Tamil), posted on 17 August 2014

 

வள்ளுவனும் வன்முறையும் (ஜூலை 24, 2013)

 

வள்ளுவன்  ஒரு  சம்ஸ்கிருத  அறிஞன் (நவம்பர் 5, 2012)

 

வள்ளுவான் சொன்ன புராண, இதிஹாசக் கதைகள் (ஜூலை 30, 2013)

 

வள்ளுவன் காமெடி ( 5 ஜனவரி, 2015)

தொல்காப்பியம் பற்றி சுமார் பத்து கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

 

–சுபம்–

ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களிடையே இந்துமத கருத்துக்கள் (Post No. 2520)

IMG_2255

Research Article written by london swaminathan

Post No. 2520

Date: 8th February 2016

Time uploaded in London 9-18 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

IMG_2338

 

கட்டுரையின் முதல் பகுதி நேற்று வெளியானது – “ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் தமிழர்களா?” – என்ற தலைப்பில். அதைப் படித்துவிட்டு, இந்தக் கட்டுரையைப் படிப்பது நலம் பயக்கும்.

 

“பிறந்தனவெல்லாம் இறப்பது உறுதி

இறந்தனவெல்லாம் பிறப்பது உறுதி” – என்பது இந்து மதத்தின் தலையாய கருத்து. “புனரபி ஜனனம், புனரபி மரணம்,புனரபி ஜனனி ஜடரே சயனம்” – என்று இதையே ஆதி சங்கரர் அழகாகப் பாடி வைத்தார். அதற்கெல்லாம் முன்னதாக காலத்தால் அழியாத பகவத் கீதையில் கண்ண பிரானும், “ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர், த்ருவம் ஜன்ம ம்ருதஸ்ய ச (பகவத் கீதை 2-27) – என்று சொல்லிவைத்தார். மறு பிறப்பில் நம்பிக்கை இலாதோருக்குக் கூட பிறந்தன எல்லாம் இறப்பது உறுதி – என்பது தெரிந்த விஷயமே. ஆனால் இதை எழுத்தில் வடிக்கும்போதுதான், ஒரு இனம் இதுபற்றி எவ்வளவு கவலைப் படுகிறது என்பது தெரியவரும். நான் சிட்னி நகரில் ஆஸ்திரேலிய மியூசியத்தில், பழங்குடி இனத்தின் பிரிவுக்குச் சென்றபோது, அவர்களுடைய நம்பிக்கைகளைப் படங்களுடன் போர்டு, போர்டாக எழுதி வைத்துள்ளதைக் கண்டு மகிழ்ந்தேன். அதில் ஒரு போர்டின் வாசகம் பிறந்தன எல்லாம் இறப்பது உறுதி. இதற்கும் மேலே அவர்கள் எழுதிய விஷயமும் இந்து மதக் கருத்தே! இறந்த பின்னர் ஆவிகள் மேலுலகம் செல்லும், அதற்குச் சரியான பாதை காட்ட வேண்டும் என்பதாகும்.

ஒருவர் வீட்டில் மரணம் அடைந்த பின்னர், பிராமண புரோகிதர்கள் ஓதும் வேத மந்திரங்களும் இதையே சொல்கிறது. இறந்தவரின் ஆவி நல்ல நிலையை அடைய பல கடவுளர்களை வேண்டும் மந்திரங்கள் அவை. இதற்கும் மேலாக இறப்போர் பற்றி மேலும் ஒரு ஒற்றுமையையும் கண்டேன்.

 

பழங்குடி மக்கள், பல முகமூடிகளை அணிந்து நடனம் ஆடிவிட்டு, இறந்தோர் நினைவாக கம்பங்களை நட்டு வைக்கின்றனர். ஆதி காலத்தில் தமிழர்களும் நடு கல் நட்டு இறந்தோரை வழிபட்டனர். இந்தச் செய்தி நிறைய சங்கத் தமிழ் பாடல்களில் உள. கர்நாடகத்தில் மாஸ்தி கல் என்றும் ராஜஸ்தானில் கை சின்னங்களுடன் நினைவுச் சின்னங்களும் வைத்தனர். சாது சந்யாசிகள் இறந்தால் அவர்கள் சமாதிக்கு மேல் சிவலிங்கம் அல்லது, துளசி மாடம் எழுப்பினர். பிராமணர்கள், இறந்தோர் நினைவாக ஒரு கல்லை தோட்டத்தில் புதைத்து வைப்பர். இப்போது இது எல்லாம் அருகிவிட்டது. ஆக ஆதி காலத்தில் எல்லோரும் பின்பற்றிய வழக்கங்கள் பின்னர் கூனிக் குறுகி அறவே மறைந்துவிட்டன என்று கொள்ளல் பொருந்தும்.

IMG_2399

இறந்தவர்களைப் போற்றி வழிபடும் வழக்கம் இந்துமத்தில் உள்ளது போல வேறு எந்த மத்திலுமில்லை. தென்புலத்தாரை தினமும் வழிபடும் ஐவேள்வி (பஞ்ச யக்ஞம்) பற்றி வள்ளுவனும், மனுவும் பாடி வைத்தனர். இது இந்துக்கள் தினமும் செய்வது நின்று இப்பொழுது மாவாசை தர்ப்பணம் என்று மாதமொரு சடங்காக மலிந்துவிட்டது.

IMG_2331

சம்ஸ்கிருதச் சொற்கள்

ஆதி மக்களிடையே பல சம்ஸ்கிருத சொற்களும், தமிழ்ச் சொற்களும் புழங்குவது அவர்கள் இந்தியாவிலிருந்து சென்றவர்களே என்பதைக் காட்டுகிறது. ஆஸ்திரேலியப் பழங்குடிகள்வெளியிலிருந்து வந்ததாகச் சொல்லும் வாசகமும் மியூசியத்திலுள்ளது. நேற்று அணங்கு என்ற தூய தமிழ்ச் சொல்லைக் கண்டோம். மற்ரஒரு மக்கள் பெயர் துர்கா இன மக்கள். இறந்தோர் நினைவாக எழுப்பும் கம்பங்களை துங்கம் என்பர். இது வடமொழிச் சொல். உயரமான, உஅய்ர்த்தப் பட்ட என்பது இதன் பொருள்.

 

இப்படி நிறைய சம்ஸ்கிருதச் சொற்களை – ஆனால் மாறுபட்ட பொருளுடன் வழங்குவதைக் காணலாம்.

 

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி….

பாரத தேசம் பற்றிப் பாரதியார் பாடினார்:-

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே – அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து

முடிந்ததும் இந்நாடே (அவரும் கூட இந்தப் பாட்டில் ‘துங்கம்’ என்ற சொல்லைப் பயிலுகிறார்!)

 

இப்படிப்பட்ட தேசபக்தப் பாடல்கள் அதர்வ வேதத்தில் உள்ளன. பூ சூக்தம் என்ற பாடலில் பூமியை மிக விரிவாகப் போற்றிப் புகழ்கின்றனர் வேத கால ரிஷிகள். ஆஸி. பழங்குடி மக்களும் பூமி பற்றி இதே கருத்தைக் கொண்டுள்ளனர். இயற்கைச் சக்திகளை அவர்களும் போற்றுகின்றனர். நாடு, மண், காற்று, மரம் ஆகியவற்றை உடலின் உறுப்பாக உணருகின்றனர்.

தைத்ரீய ஆரண்யகத்தில் உள்ள வேத மந்திரம் சொல்கிறது (மது வாதா ருதாயதே….)

“காற்று இனிமையாக வீசட்டும். நதிகள் இனிமையாகப் பெருக்கெடுத்து ஓடட்டும். செடி, கொடிகள் இனிமை அளிப்பவையாக இர்க்கட்டும். வன விருக்ஷங்கள் இன்பம் நிறைந்தவகளாய் இருக்கட்டும். சூரியன் இன்பம் தரட்டும். பசுக்கள் மதுரமான பாலையளிக்கட்டும் – தைத்ரீய ஆரண்யகம்

 

IMG_2327

எனைத்தானும் நல்லவை கேட்க…

மூத்தோர் சொல் அமிர்தம்- என்பது தமிழ்ப் பொன்மொழி. ஏதேனும் கொஞ்சமாவது நல்லதைக் கேளுங்கள் (திருக்குறள் 416) என்கிறார் வள்ளுவர். செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் என்பார் வள்ளுவர். இவையெல்லாம் வேதத்திலுளது. எல்லா இடங்களிருந்தும் எங்ளுக்கு நல்ல கருத்துக்கள் வரட்டுமென்று உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதம் (1-89-1) கூறுகின்றது.

ஆஸி. பழங்குடி மக்க: இதை ‘இங்காரா’ என்பர். நாங்கள் பிறந்த அன்றே எங்களுக்கு ‘இங்காரா’வைச் சொல்லித்தந்துவிட்டனர். நாங்கள் முதியோர் சொல்லைக் கேட்போம். நாலு பேர் என்ன சொல்கின்றார்கள் என்பதைக் கேட்போம். எங்களுடைய செயல்கள் உயிரினங்கள் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் அறிவோம். அறிவு, ஞானம், விவேகம் அடையவும் உயிர் பிழைக்கவும் ஒரே பாதை ‘இங்காரா’தான். எங்கள் முன்னோர்கள் அறிவியல், தொழில்நுட்ப அறிவின் உறைவிடம்”

 

இது போன்ற சிந்தனை ஒரு குழுவின் மத்தியில் தோன்றவேண்டுமானால் அவர்கள் பக்குவம் அடைந்த, முன்னேறிய ஒரு இனம் என்றே நாம் கருதுவோம். இவை அனைத்தும் வேதத்திலும் உள்ளது.

IMG_2282

வான சாத்திர நிபுணர்கள்

ஆஸி. பழங்குடி மக்களின் பூகோள அறிவு அபாரமானது. அவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மூலை, முடுக்கெல்லாம் தெரியும். அவர்கள் உதவியுடந்தான் வெள்ளைக்கார குடியேற்றக்காரர்கள் உட்பகுதிகளுக்குச் சென்றனர். அவர்கள் வானில் இயங்கும் கிரகங்கள், நட்சத்திரங்களை நன்கு அறிவர். அவைகளின் இயக்கத்தைக் கணகிட்டே அவர்கள் காலத்தை அளந்தனர். பெரிய வட்டக் கற்கள் அமைத்து காலம் முதலியவற்றை அளந்தனர். வேதங்களிலும் ஏராளமான வானியல் குறிப்புகள் உண்டு. அவற்றைக் கொண்டே ஜெர்மன் அறிஞர் ஜாகோபியும் சுதந்திரப் போராட்ட வீரர் திலகரும் ரிக் வேதம் 6000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று சொன்னார்கள். பழங்குடியினர் நட்சத்திரங்கள் பற்றி கதைகள் சொல்லி, அவைகளுக்குப் பெயரிட்டது போல நாமும் துருவன் , அகஸ்தியன், சப்த ரிஷிக்கள், சந்திரனின் 27 மனைவியர், திரிசங்கு நட்சத்திரக் கூட்டம் என்றெல்லாம் பெயரிட்டோம். இப்படிக் கதை சொன்னால் பாமரர்களும் நினைவு வைத்துக் கொண்டு, அடர்ந்த காடுகளிலும், பாலைவனத்திலும் எது வடதிசை, எது தென் திசை என்று இரவு நேரத்தில் வழி கண்டுபிடித்துவிடுவார்கள். ஆஸி. பழங்குடி மக்களுக்கு ஆஸ்திரேலியாவில் தெரியாத இடமே இல்லை. 300 ஆண்டுகளுக்கு முன்னர்தான் அங்கே வெள்ளைக் காரர்கள் வந்தனர். பழங்குடியினரோ 30,000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் நாட்டின் வழியாக அங்கே சென்று, சிறப்புடன் வாழ்ந்துள்ளனர்.

ஆஸி. பழங்குடி மக்களைப் பற்றி ஆராய்ச்சிகள் விரிவடைய, விரிவடைய அவர்களுடைய அபூர்வ திறமைகளை உலகம் உணரத் துவங்கியுள்ளது.

 

IMG_2403

 

 

IMG_2398

தொடரும்………………………………..

 

 

 

 

ஆஸ்திரேலியப் பழங்குடிகள் தமிழர்களா? (Post No. 2517)

IMG_2347

Research Article Written by london swaminathan

Date: 7 February 2016

 

Post No. 2517

 

Time uploaded in London :– 7-57 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

IMG_2250

சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்திய நிலப்பரப்பிலிருந்து தமிழர்கள், இந்தோநேஷியா வழியாக ஆஸ்திரேலியாவுக்குள் குடியேறினர். அப்போதெல்லாம் கடலுக்கும் நிலத்துக்கும் இடையிலுள்ள தூரம் குறைவு. ஒரு தீவிலிருந்து எளிதாகப் படகில், கட்டுமரத்தில் தாவித் தாவிச் சென்று விடலாம். அதற்கும் லடசக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் எல்லா கண்டங்களும் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டேயிருந்தன.

 

1932 ஆம் ஆண்டில் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் சென்னை மைலாப்பூரில் நிகழ்த்திய சமயச் சொற்பொழிவுகளில் உலகமெங்கும் ஒரே மதம் – சநாதன தர்மம் – நிலவிய காலம் பற்றிப் பேசியிருக்கிறார். அதன் மிச்ச சொச்சங்களையே இன்று உலகம் முழுதும் காணமுடிகிறது. உலகில் ஒரு ஆளின் பெயரால் அல்லது இனத்தின் பெயரால் இல்லாத மதம் இந்து மதம் ஒன்றே! பாரசீகர்களும் கிரேக்கர்களும் ‘ச’ என்பதைச் சொல்ல முடியது. ஆகையால் ‘சி’ந்து நதிக்கரையின் அப்பால் இருப்பவர்கள் ‘ஹி’ந்துக்கள் என்று சொன்னார்கள். அந்தப் பெயரே இன்று சநாதன தர்மத்துக்கு நிலைத்துவிட்டது. சநாதன தர்மம் என்றால் ‘ஆதியந்தமற்ற அற வழி’ என்று பொருள். இதே போல ஒரு இனத்தின் பெயரால் இல்லாத மொழி சம்ஸ்கிருதம் ஒன்றே. இதுவும் ஆதியந்தமற்ற மொழியின் பிற்கால (செம்மைப்படுத்தப்பட்ட) வடிவம்!

 

என்ன சொன்னார் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள்?

ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் விபூதி போலப் பூசிக் கொண்டு நடனம் ஆடுகிறார்கள். அதற்கு சிவா டான்ஸ்/ நடனம் என்று பெயர் என்று தான் படித்த புத்தகத்தின் பெயரைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். அவர் சொன்ன இந்த விசயம் என் மனதில் பதிந்தவுடன் என்றாவது நேரில்சென்று ஆராய வேண்டுமென்று எண்ணியிருந்தேன். அருமையான வாய்ப்பு கிடைத்தது.

 

எனது சம்பந்தி, நாங்கள் அனைவரும் குடும்ப சகிதம் சிட்னி நகருக்கு வருவதை அறிந்து பெருந்தொகை செலவிட்டு இந்திய- ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டிக்கு டிக்கெட் வாங்கியிருந்தார். எனக்கும் கிரிக்கெட்டிற்கும் ஸ்நானப் பிராப்தி கூட கிடையாது. கவாஸ்கர் எத்தனை ‘கோல்’ போட்டார்? என்று கேட்பவன் நான். ஆகையால் அவரிடம், மரியாதையுடன் அந்த டிக்கெட்டை வேறு ஒருவருக்குக் கொடுக்கும்படி பணிவுடன் வேண்டிக்கொண்டுவிட்டு நான் ஆஸ்திரேலிய மியூசியத்துக்கு விரைந்தேன். எனது மனைவியும் மக்களும் மட்டும் கிரிக்கெட் பார்க்கச் சென்றனர். நான் ஆஸ்திரேலிய மியூசியத்துக்குப் போய் என் வயது 68 என்று சொன்னவுடன் எனக்கு முதியோருக்கான தள்ளுபடி விலை டிக்கெட் கொடுத்தனர். மியூசியம் மேப்/வரைபடத்டை வாங்கிக்கொண்டு பழங்குடி மக்கள் பிரிவு எது என்று நோட்டமிட்டேன். அதுதான் முதல் பிரிவு! ஏக சந்தோஷம்!

 

ஐ போன், ஐ பேட், இரண்டு காமிராக்கள் சகிதம் உள்ளே பிரவேசித்தேன். பேரானந்தம்?

ஒவ்வொரு எழுத்தாகப் படிதத்தில் சட்டென மனதில் பதிந்தவிஷயம்!

அவர்கள் நிலம், நீர் தீ, காற்று, மலை, கடல், மனித இனம், மரணம் ஆகியன பற்றிக் கொண்டுள்ள விஷயங்களைப் படிக்கையில் வேத உபநிஷத மந்திரங்களைப் படிப்பதுபோல ஒரு எண்ணம் மனதில் தோன்றியது. இன்று ஒரு சில விஷயங்களை மட்டும் காண்போம்.

uluru2

ஆஸ்திரேலியாவின் நட்ட நடுவில், அதி பயங்கர பாலைவனப் பொட்டல் காட்டில் ஒரு பெரிய மலை நிற்கிறது. இதற்கு அய்யர் மலை என்று பெயர். சர் ஹென்றி அய்யர் என்ற ஆஸ்திரேலிய அதிகாரியின் பெயரைச் சூட்டி இருக்கின்றனர். அவருக்கு அய்யர் என்ற பெயர் ஒட்டிக் கொண்டது எப்படி என்பதை வேறு ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் எழுதுகிறேன்.

 

அய்யர் ராக்ஸ்= கைலாஷ் மலை

 

அய்யர் ராக்ஸ் என்பதன் உண்மைப் பெயர் உள்ளூரு. இதைப் புனித மலையாக வணங்குகின்றனர் அங்கே வாழும் பழங்குடி மக்கள். அதிபயங்கர பொட்டல் காட்டில் தன்னந்தனி ராஜாவாக விளங்கும் இந்த மலையைப் பார்த்தவுடன் நமக்கு நினைவுக்கு வருவது இமய மலையில் தன்னந்தனியனாக நீட்டிக் கொண்டிருக்கும் கைலாஷ் மலைதான். உலகில் பூஜியாமா (ஜப்பான்) எரிமலையாகட்டும், மவுண்ட் மேரு (கென்யா) ஆகட்டும். எது, எது சிவலிங்கம் போல தனியாக நிற்கிறதோ அவை எல்லாம் புனிதப் பொருட்களாகக் கருதப்படுகின்றன. ஆகவே ஆஸ்திரேலியாவில் தன்னதனியாக நிற்கும் இந்த உள்ளுரு என்பதை அவர்கள் வழிபடுவது பொருத்தமே. இதையும் காஞ்சி சுவாமிகள் சொன்ன விபூதி பெயிண்ட், சிவா டான்ஸ் என்பதையும் பொருத்திப் பார்க்கையில் மேலும் நெருக்கம் புலப்பட்டது.

 

நான் தினசரி சந்தியா வந்தனம் செய்யும் பிராமணன் ஆனதால், “உத்தமே சிகரே தேவி” என்ற காயத்ரீ தேவி வணக்கமும் மனதில் பளிச்சிட்டது. பிராமணர்கள் தினமும் மூன்று முறை காயத்ரீ தேவியை மலை உச்சியிலிருந்து அழைத்து, இதயத்தில் நிறுத்தி (ஆவாஹனம் செய்து) வழிபாடு செய்துவிட்டு “தாயே எனது வழிபாடு இப்போதைக்கு முடிந்துவிட்டது. போய் வருவாயாக” என்பர். ஆக, “ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கும்” காயத்ரீ (சூரிய தேவன்/தேவி) மலை உச்சியில் வைக்கப் படுவதால் மலை வழிபாடு வேதத்தில் உள்ள வழிபாடாகும்.

 

இது எல்லாம் ஒரு புறமிருக்க அந்தப் பழங்குடி மக்களின் பெயரைப் படித்த போது உடலில் மின்னலை பாய்ந்தது. செந்தமிழ் சொல்லைக் கேட்டவுடன் ‘இன்பத் தேன் வந்து பாய்ந்தது” அந்தப் பழங்குடி மக்களின் பெயர் ‘அணங்கு’ என்பதாகும். இந்த தூய தமிழ் சொல், சங்கத் தமிழ் இலக்கியத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் விதந்து ஓதப்படுகிறது. காடு, மலை, ஆறு கடல், மரம் கொடி, புனித இடங்கள், தோப்பு, துறவு ஆகிய இடங்களில் வாழும் புனித தேவதையை தமிழர்கள் அணங்கு என்பர். அதே பெயரை தங்களுக்கு வைத்துக் கொண்டு புனித உள்ளுரு மலையை அவர்கள் வழிபடுவது சாலப்பொருத்தமே. மேலும் ‘உள்ளூர்’ என்பதில்கூட தமிழ் வாசனை அடிக்கிறது!

 

நான் தினமணி பத்திரிக்கையில் சீனியர் சப் எடிட்டராக இருந்த போது பிரபல நாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் ஆஸ்திரேலியா சென்று வந்தது பற்றி ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் அவர் தனக்காக ஆஸ்திரேலிய கலைத்துறை ஏற்பாடு செய்த பழங்குடி மக்களின் நடனத்தைப் பார்த்தபோது குறைந்தது 25 தமிழ்ச் சொற்களையாவது எண்ண முடிந்தது என்று சொன்னதும் நினைவுக்கு வந்தது. என்ன பொருத்தம்! இந்தப் பொருத்தம்!

IMG_2336

மூத்தோர் சொல் அமிர்தம்

 

பழங்குடி மக்களின் நம்பிக்ககள் பற்றி ஒரு போர்டு எழுதி வைத்திருந்தனர். அதைப் படித்துத் திகைத்து நின்றேன். அவர்கள் மிகவும் மதிப்பது மூத்தோர்கள் என்றும் அவர்களுடைய ஞானமும், அறிவும் பெரிதும்  மதிக்கப்படும் என்றும் அவர்களுக்கு பழங்குடி இனங்களிடையே தனி மதிப்பும் மரியாதையும் உள்ளது என்றும் எழுதி இருந்தனர். இது இந்துக்களின் நம்பிக்கை. உலகில் வேறு எந்த மத நூலிலும் இல்லாத விஷயம் “மாதா, பிதா, குரு, தெய்வம்” என்பதாகும் அது மட்டு மல்ல தினமும் இந்துக்கள் செய்யும் பஞ்ச யக்ஞத்தில் ஒன்று “தென்புலத்தார்” கடன். இதைத் திருவள்ளுவரும் பல குறள்களில் பாடியிருக்கிறார். முன்னோர்களுக்குக் கடன் செலுத்துவதை, இந்துக்கள் போல வேறு எவரும் செய்வதில்லை.

 

ரிக் வேதம் என்பது உலகின் மிகப் பழைய நூல். அதற்கு அருகில் கூட வேறு எந்த மத நூலும் வர முடியாது. அவ்வளவு பழமையான நூல். அதில் ஆடிப் பாடி, ஆனந்தக்கூத்தாடும் ரிஷி முனிவர்கள் அவர்களுடைய முந்தையோர் பற்றிப் பாடுகின்றனர். “பூர்வேப்யோ ரிஷி:” என்று மந்திரம் ஓதுகின்றனர். அவ்வளவு பழமையானது சநாதன மதம். ஆக முந்தையோரைப் போற்றிப் புகழ்வது வேத வழக்கு என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

 

இதைவிட அருமையான விஷயம் அந்த மியூசியம் போர்டில் இருக்கிறது . ஆஸ்திரேலியப் பழங்குடிகள் எல்லா முதிய ஆண்களையும் மாமா (அங்கிள்) என்றும், முதிய பெண்களை மாமி (ஆண்ட்டி) என்றும் மரியாதையுடன் அழைப்பர் என்று எழுதப்பட்டது. இன்று வரை இந்துக் குடும்பங்களில், குறிப்பாகத் தமிழ்க் குடும்பங்களில் இது பின்பற்றப்படுகிறது.

 

பழங்குடி மக்கள், அவரவர்கள் இனத்தை (கோத்திரம்) மதித்தனர். ஒருவருக்குப் புனிதமான விலங்கை மற்றவர் வேட்டையாட மாட்டார்கள். நம்முடைய கோத்திரப் பெயர்களும் இனப் பெயர்களும் பிராணிகளின் அடிப்படையில் எழுந்தவையே. உலகிலேயே முதல் முதல் கொடிகளைக் கண்டுபிடித்துப் பயன்படுத்திய இனம் இந்து இனம் என்பதை கொடிகள், சின்னங்கள் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையில் ஏற்கனவே எழுதிவிட்டேன். காஸ்யப (ஆமை), கௌசிக (ஆந்தை), ஜாம்பவான் (கரடி அடையாளம் உடைய இனம்), ஜடாயு, சம்பாதி (கழுகு அடையாளம் பொறித்த இனம்) அனுமான் (குரங்கு முத்திரை பொறித்த இனம்) என்பதையெல்லாம் காணுகையில் ஆஸ்திரேலியப் பழங்குடிகள் தங்களை ஏன் பிராணிகளின் பெயரில் அழைத்துக் கொண்டனர் என்பம்து வெள்ளிடை மலையென விளங்கியது.

 

ஆராய்ச்சிக் கட்டுரை தொடரும்………….

 

–சுபம்–

தமிழ்ப் பாஷையறியாத தர்மராஜ பிள்ளை (Post No 2507)

IMG_9777

Written by london swaminathan

Date: 4 February 2016

 

Post No. 2507

 

Time uploaded in London :–  8-23 (காலை)

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

நூறு ஆண்டு பழமையான ஜோக்குகள்; சென்னை சீனிவாசன் , அனுப்பிய விநோத விகட சிந்தாமணி  என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டவை.

 

RES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

மடயசாம்பிராணி

ஒரு நாட்டுப்புரத்து பிரமணன் திருவையாற்றிற்குப் போகப்புறப்பட்டுத் தஞ்சாவூரிலிறங்கி அங்கே வழியில் போய்க்கொண்டிருக்கும் பட்டணத்தானொரு வனைப் பார்த்து ஐயா! திருவையாற்றிற்குப் போவதற்கு வழி எது என்றான்.

 

அதற்கவன், ஸ்வாமி! இப்படி நெடுக வடக்கே பூனீங்கன்னா சந்துபூவுது, அதிலே விழுந்து கிழக்கே பூனா ஒரு டிரையின்சு இருக்குது. அதிலே விழுந்து பூனா ஒரு ஆலமரம் நிக்குது, அதிலே ஏறிப்பூனா ஒரு கூரை வீடு இருக்குது. அதுமேலே ஏறி மேற்கே பூவது வழி என்றான்.

 

இந்தப் பிராமணன் பிரமித்து ஒகோ ஒருக்கால் அப்படித்தான் போகவெண்டுமோ என்று நினைத்துப் பட்டணத்தான் பகர்ந்ததையே நோக்கி சந்திலே விழுந்து, டிரைன்சிலேயும் விழுந்து,  ஆலமரத்து மேலேறி, மறுபடியும் கூரைமீதேறிப்போகும் போது அவ்வீட்டுக்காரன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அப்போது அவர் மனைவி நெய் பரிமாறும்போது நாட்டுப்புரத்து பிராமணன் கூரை மீதேறிய அதிர்ச்சியால், கீழே சாப்பிட்டுக் கொண்டிருந்த வீட்டுக்காரன் இலையில் இரண்டு மூன்று செத்தை விழுந்தது.  உடனே வீட்டுக்காரன் யார் உயர இருக்கிறது என்றான்.

 

அதற்கு உயர நடந்து கொண்டிருக்கும்  பிராமணன், “ஏண்டா! நான் திருவையாற்றிற்குப் போகிறேன். உனக்கென்ன! நீயேன் கேட்கிறாய்? என்றான். அதற்கு வீட்டுக்காரன், புத்திசாலி மனைவியின் கன்னத்தில் ஓங்கி அறைந்து, “ஏண்டி! லவண்டி! திருவையாற்றுக்குப் போகிற வழியில் ஏன் சாதம் போட்டாய்” என்று பலவிதமாய் வைது அடித்தான். இதில் யார் புத்திசாலி என்பதை இதை வாசிப்போர்கள் அறிந்து கொள்ளுங்கள்.

Xxx

IMG_9769

தமிழ்ப் பாஷையறியாத தர்மராஜ பிள்ளை

இவர் சிறுவயதிலேயே சீமைக்குப் போய் ஆங்கில பாஷையில் தேர்ச்சியுற்று பெரிய பரீக்ஷைகள் எழுதி, நமது ஜில்லாவுக்கு டெபுடி கலெக்டர் உத்தியோகம் பெற்றுவந்திருந்தார். அக்காலத்தில் ஹெட்கிளார்க் கிருஷ்ணாராவ் என்பவர்.

 

புரட்டாசி சனிக்கிழமையன்று விடுமுறை கேட்கவேண்டுமென்று கேட்க, சென்ற வருஷத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறதாவென்று எஜமான் கேட்க, , ஹெட்கிளர்க் அதிக வணக்கத்துடன், “ஸார்! சென்ற வருஷத்தில், புரட்டாசி சனிக்கிழமை ஞாயிற்றுக் கிழமையன்று வந்ததினால் விடுமுறை கொடுக்கப்படவில்லை” யென்று தமிழில் பதில் சொன்னார்.

 

உடனே எஜமான், “ஆல்ரைட்” என்று தலையசைத்துக் கொண்டு விடுமுறை யளித்தார்

–சுபம்–

பாரதியாரின் நூலுக்கு 1908 ஆம் ஆண்டு செந்தமிழ் மதிப்புரை! (Post No. 2503)

IMG_2549 (3)

Written by london swaminathan

Date: 3 February 2016

 

Post No. 2503

 

Time uploaded in London :– காலை 8-30

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

பிரிட்டிஷ் நூலத்தில் பழைய செந்தமிழ் இதழ்களைப் புரட்டிக் கொண்டிருந்தபோது ஒரு சுவையான விஷயம் அகப்பட்டது. “செந்தமிழ்” என்னும் பத்திரிக்கை மதுரைத் தமிழ் சங்கத்தால் பாண்டித்துரைத் தேவர் தலைமையில் வெளியிடப்பட்டது. ராகவ ஐய்யங்கார், பத்திரிக்கை ஆசிரியராகப் பணியாற்றிய காலம் அது. அதில் நூல் மதிப்புரையில் பல நூல்களுடன் பாரதியாரின் முதல் வெளியீடான ஸ்வதேச கீதங்கள் மதிப்புரையும் வெளிவந்துள்ளது. அதே இதழில் பங்கிம் சந்திர சாட்டர்ஜியின் “ஆனந்தமடம்” பற்றியும் மதிப்புரை வந்துள்ளது. இதை வெளியிடவே தைரியம் வேண்டும்!

 

இதன் சம காலத்தில் வெளியான பல புத்தகங்கள், இதழ்களை நான் தொடர்ந்து பேஸ் புக்கில் ஓராண்டுக் காலமாக வெளியிட்டு வருகிறேன். அவை எல்லாவற்றிலும் ஒரு விஷயம் இழையோடுவதைக் கண்டேன். எல்லோரும் முதல் பக்கத்திலோ, கடைசி பக்கத்திலோ விக்டோரியா மஹாராணி, ஜார்ஜ் சக்ரவர்த்தி, வேல்ஸ் இள்வரசர் ஆகியோருக்கு ஜால்ரா அடித்துள்ளனர். அவர்களைப் போற்றி கவிதை, கும்மி பாடல் முதலியனவற்றைப் பிரசுரித்துள்ளனர். இதனால்தான் பாரதியார், “நெஞ்சு பொறுக்குதில்லையே” என்று பாடி தனது நெஞ்சக் குமுறலைக் கொட்டியிருக்கிறார். அந்த அஞ்சாத சிங்கம் வெளியிட்ட பாடல் தொகுப்புக்கு துணிவுடன் மதிப்புரை – பாராட்டுரை—எழுதிய செந்தமிழுக்கும் நாம் வணக்கம் சொல்ல கடமைப் பட்டுள்ளோம்.

இதோ அந்தச் சின்ன மதிப்புரை:–

 

IMG_0703 (2)

 

IMG_0704 (2)

 

IMG_2554 (2)

 

–சுபம்–

அண்டப்புளுகன், ஆகாசப் புளுகன், கச்சந்திப் புளுகன், பீப்பாய் புளுகன் கதை (Post No. 2487)

IMG_3347

COMPILED BY LONDON SWAMINATHAN

 

Date: 29 January 2016

 

Post No. 2487

 

Time uploaded in London :–  14-00

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

நூறு ஆண்டு பழமையான ‘ஜோக்’குகள்

பெரும்புளுகர் சமஸ்தானம்

ஒரு ராஜ சமஸ்தானத்தில் அண்டப்புளுகன், ஆகாசப் புளுகன், கச்சந்திப் புளுகன், பீப்பாய் புளுகன் ஆகிய நால்வரும் அரசனிடம் வந்து நாங்கள் சமஸ்தானப் புளுகனை ஜெயிக்கவந்தோம் என்று கூற, இதைக்கேட்ட அரசன், சமஸ்தானப் புளுகன் எங்கே தோற்றுவிடுவானோ என்று அஞ்சி அருகிலிருக்கும் சமஸ்தானப் புளுகனை  ஒரு பார்வை பார்த்தான்.

 

உடனே சம்ஸ்தானப் புளுகன், திடீரென்றெழுந்து கம்பீரமாய் நின்று, “ஓ,ஓ! கீர்த்தி பெற்ற கிண்டப்புலி புளுகர்களே! என்னை ஜெயிப்பதன் முன்னர், நானே புளுகிவிடுகிறேன். பின்பு உங்களிஷ்டம் போல் புளுகலாம், என்று கூறியவர்களைச் சம்மதிக்கச் செய்து, பிறகு சொல்லத் தொடங்கினான்:

“சபையோர்களே! என் பாட்டி கல்யாணத்திற்கு முகூர்த்தக்கால் நட்டார்கள். அப்போது நான் தான் தேங்காயுடைத்தேன். அதில் மேல் மூடி சப்த லோகமாகப் பரவிய ஆகாசமாயிற்று. கீழ்மூடி அதல, விதல, சுதல, தராதலமென்ற கீழ் ஏழு லோகமாயிற்று. நடுவிலிருக்கும் தேங்காய் நீர் சப்த சமுத்ரமாயிற்று. அதிலுள்ள திப்பி, நார் முதலியன சூரிய,சந்திர, நக்ஷத்ராதீ, தேவ, மனுஷ, மிருக, பக்ஷி, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரமென்ற மற்றெல்லாமாயின. ஐய! இனிப் புளுகுவோரெல்லாம் இந்த ஈரேழு பதினான்கு லோகங்களுக்கு  அப்ப்லாலிருந்து புளுக வேண்டுகிறேன்” என்று சொல்லி சமஸ்தானப் புளுகன் உட்கார்ந்தான்.

 

இதுகண்டு வந்தவர்கள் இவனேது அண்டரண்டப் புளுகனாயிருக்கிறானென்று பயந்து, வந்தனஞ்செய்துவிட்டுத் தம் பதிக்கேகினர்.

 

xxx

காளிகோவில் பூசாரி : வாரியார் சொன்ன கதை (Post No. 2486)

durga many hands

COMPILED BY LONDON SWAMINATHAN

 

Date: 13 January 2016

 

Post No. 2486

 

Time uploaded in London :– 9-31 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

 

(லண்டன் ஸ்ரீ முருகன் கோவில் மஹா கும்பாபிஷேக மலர், 1984)

நேற்று வெளியிட்ட சஜ்ஜன சாருகர் கதையையும் படியுங்கள்

durga killing asura

அவ்வினைக்கு இவ்வினை: மற்றொரு சான்று

ஒரு காளிகோவில் பூசாரி ஒருவன் பூஜை செய்து கொண்டிருந்தான். மார்கழி மாதம் அதிகாலையில் குளிர்ந்த நீரில் முழுகி காளி தேவிக்கு தயிர் அன்னம் நிவேதனம் செய்தான். ஒவ்வொரு நாள் ஒவ்வொருவருடைய உபயம். தட்டில் பணம் போடும் பெரியவர்கட்குத் தயிரன்னத்தை விளாம்பழம் அளவு உருட்டித் தருவான். பிள்ளைகள் கையில் தயிரன்னத்தைத் தடவி விடுவான். அப்பிள்ளைகள் வெளியே வந்து பூதக்கண்ணாடி போட்டுப்பார்த்தால்தான் கையில் பிரசாதம் சிறிது இருப்பது தெரியும்!

 

பூசாரிக்கு ஆகார மாறுபாட்டால் காய்ச்சல் வந்தது. அதற்குத் தகுந்த மருந்து   உண்பதுதான் முறை. அவன் அறிவில்லாதவன். “காளியாயீ! இந்தக் காய்ச்சலிலிருந்து என்னைக் காப்பாற்று. உனக்கு இரு ஆடுகள் பலி தருவேன்” என்று பிரார்த்தனை செய்துகொண்டான். அவன் மனைவி மிளகு- திப்பிலி கஷாயம் செய்து தந்தாள். காய்ச்சல் நின்றுவிட்டது.

 

ஆடிமாதம அம்மனுக்கு, பூசாரி, அபிஷேகம் செய்து இரு ஆடுகளைக் கொண்டுவந்து அவைகளுக்கு மஞ்சள் நீர் ஊற்றி நீராட்டினான். மஞ்சள் நீர் பட்டதும் இரு ஆடுகளும் தலையை உதறின.- உடனே பூசாரி, “அம்மன் உத்தரவாகிவிட்டது. அதற்கு அடையாளம் ஆடுகள் தலையை ஆட்டிவிட்டன” என்று சொல்லி இரு ஆடுகளையும் வெட்டிவிட்டான். தண்ணீர்பட்டால் உதறுவது இயற்கைதானே, அதற்காக ஆட்டை வெட்டலாமா?

 

அந்த நகரை ஆட்சிபுரிகின்ற மன்னவனுக்கு ஒரு மன்னனும், மந்திரிக்கு ஒரு மகனும் பிறந்தார்கள். மந்திரி மகனும், மன்னன் மகனும் கலைகளில் வல்லவர்கள் ஆனார்கள். மன்னன் மகனுக்கு முடிசூட்டு விழா நடைபெற்றது.

 

மன்னன் மகனுக்கு மகுடாபிஷேகம் செய்தபின்னர், 12 ஆண்டுகளுக்கு மழை பெய்யவில்லை. மக்கள் உண்ணீரும் தண்ணீரும் இன்றித் தவித்தார்கள். ஒருநாள் மன்னவன் மகனும் மந்திரி மகனும்  இரவு பத்து மணிக்கு அந்தக் காளிதேவியிடம் இக்குறையைச் சொல்லி வழிபாடு செய்யச் சென்றார்கள். நம்மைத் தண்டிக்க வருகிறார்களோ என்று அஞ்சிய பூசாரி காளிதேவிக்குப் பின்புறம் ஒளிந்து கொண்டான்.

 

மன்னவன் மகன், அம்பிகையை அஞ்சலி செய்து, “தேவி! கருணாம்பிகை! அகிலாண்டநாயகி! எனக்கு முடிசூட்டிய பின்னர் 12 ஆண்டுகளாக மழையில்லை. அம்மையே! மழை பொழியச் செய்வாய்” என்று உள்ளம் உருக வேண்டினான்.

 

காளிதேவி, “மன்னன் மகனே! என் சந்நிதியில் நரபலி தந்தால் மழை பொழியும்” என்று அசரீரியாகக் கூறினாள்.

 

இதையறிந்த மன்னன் மந்திரியுடன் ஓடோடி வந்தான், மந்திரியைப் பார்த்து, “ தோழனே மக்களுக்கு நான் தந்தை. மக்கள் பொருட்டு என் உயிரைத் தியாகம் செய்ய வேண்டும். என்னைப் பலியிடு. நீ அரசாட்சியை ஏற்று நாட்டை ஆள் என்றான். மந்திரியோவெனில், “அரசே!

உடுக்கை இழந்தவன் கை போல

ஆங்கன் இடுக்கண் களைவதாம் நட்பு

 

 

durga,Bvar

தங்களின் நண்பனாகிய நான் தங்களை பலியிடுவதா? வேண்டாம். என்னைப் பலியிடுங்கள். மந்திரி பதவிக்குப் பலர் ஆலாப் பறக்கிறார்கள். யாரையாவது அமைசராக வைத்து அரசு புரியுங்கள்” என்றான்.

“என்னைப் பலியிடு”, “என்னைப் பலியிடு” – என்று இருவரும் வாதிட்டனர்.

 

அரசன், அன்பனே எனக்கும் உனக்கும் வாக்குவாதம் வேண்டாம்; அம்பிகையைக் கேட்போம். அம்பிகை யாரைக் கேட்கின்றாளோ, அவ்வாறே செய்வோம்” என்று கூறினான்.

 

தேவி! உன் சந்நிதியில் அடியேன் பலியாக வேண்டுமா? அல்லது அமைச்சர் பலியாக வேண்டுமா? என்று வினாவினான்.

 

தேவி சொன்னாள்: “மன்னவனே! நீயும் பலியாக வேண்டாம், மந்திரியும் பலியாக வேண்டாம். என் பின்னே ஒளிந்திருக்கும் பூசாரிதான் பலியாக வேண்டும். அதுவும் நீயும் மந்திரியும் பூசாரியை என் சந்நிதி முன்னே நிறுத்தி, அவனுக்கு முன்னும் பின்னுமாக நின்று, ஏக காலத்தில், உங்கள் மகன்கள் இருவரும் பூசாரியின் தலையை வெட்டித்தள்ள வேண்டும்”.

 

பூசாரி இதைக் கேட்டு நடுநடுங்கினான். வெளியே வந்தான். அவனுடைய கண்கள் சிவந்தன. மீசை படபடத்தது. புருவம் நெளிந்தது. “காளியாயீ! நீ ஒரு தெய்வமா! உனக்கு 55 ஆண்டுகளாகப் பூசை செய்தேனே! என்னையா பலியிடச் சொல்கின்றாய்? உனக்கு கருணையில்லையா? 84 நூறாயிர யோனி பேதங்கட்கும் நீ தாயல்லவா? நான் உனக்கு சேயல்லவா? கொடியவளே! உனக்கு இரக்கம் இல்லையா? பலகாலம் தொண்டு செய்த என்னையே பலிவாங்க முற்பட்டனையா? உன் மனம் இரும்பா? கல்லா? இரக்கமில்லாத அரக்கியே! நீ ஒரு தெய்வமா?” என்று கூறி வசைமாறி பொழிந்தான்.

 

காளிதேவி சொன்னாள்: “பூசாரி! பதட்டம் அடையாதே. தானத்தில் நிதானம் பெரியது. தயிரன்னம் உண்டு உனக்குக் காய்ச்சல் வந்தால் கோனாரின் வீட்டில் வாழும் ஆடுகள் என்ன பாவம் செய்தன? எண்பத்துநான்கு நூறாயிரம் யோனி பேதங்கட்கும் நான் தாய் என்று இன்றுதான் உணர்ந்தனையா? நீ பல ஆண்டுகளுக்கு முன் வெட்டிய ஆடுகட்கும் நான் தாயல்லவா? வாயில்லாத குற்றமற்ற ஆடுகளைக் கதறக் கதற அன்று நீ பலியிட்டனையே! நீ பலியிட்ட இரண்டு  ஆடுகளும் மன்னவன் மகனாகவும், மந்திரி மகனாகவும் பிறந்து வந்திருக்கின்றனர்.

Durga puja in Allahabad

Allahabad: Devotees immerse goddess Durga idol on the last day of puja festival in a pond near the confluence the Ganga, Yamuna, and Saraswati on Friday in Allahabad. PTI Photo (PTI10_23_2015_000199A)

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் – தமக்கின்னா

பிற்பகல் தாமே வரும் – என்பது பெரியோர் வாக்கு. அவ்வினைக்கு இவ்வினை” – என்றாள்.

 

பூசாரி குனிந்து நின்றான். மன்னவன் மகன் வாளும் மந்திரி மகன் வாளும் பூசாரியின் தலையை ஏக காலத்தில் சோதித்தன. அம்பிகை காட்சிதந்தாள். மன்னனே! உனக்கு வேண்டிய வரத்தைக் கேள் என்றாள்.

 

மன்னன், “தாயே! இந்த பூசாரி குற்ரத்தை உணர்ந்துகொண்டான். மன்னிப்பது உன் இயல்பு. தேவி! இவனை மன்னித்து உயிர்ப்பிச்சை கொடு என்றான்.பின்னர் மழை பெய்து, மக்கள் சுகமடைய அருள்புரிவயாக” என்றான்.

 

அம்பிகை அருள் புரிந்தாள். பூசாரி எழுந்தான். அதுமுதல் ஆலயத்தில் பலியிடும் கொடுமையை அகற்றினான். நன்கு மழை பொழிந்தது. நாடு செழித்தது. ஆதலால் செய்தவினை செய்தவனை வந்தடையும்.

“அவ்வினைக்கு இவ்வினை” என உணர்க. யாருக்கும் எப்போதும் இடர் புரியாது, நலமே புரிந்து இறையறும் பெறுக.

 

வாரியார் 1

(கிருபானந்த வாரியார் சுவாமிகள் 1984 ஆம் ஆண்டில் எழுதியது)

-சுபம்-

 

 

பழைய ஜோக்குகள்:ஸ்ரீதேவிக்கும், மூதேவிக்கும் சம்வாதம்! (Post No. 2476)

lakshmi

COMPILED BY LONDON SWAMINATHAN

 

Date: 10 January 2016

 

Post No. 2476

 

Time uploaded in London :– 11-44 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(விநோத விகட சிந்தாமணி என்ற பழைய நகைச்சுவை புத்தகத்திலிருந்து; உதவியவர் சென்னை சந்தானம் சீனிவாசன்)

 

நிரட்சரக்குக்ஷி நீலகண்டமய்யன்

ஒருநாள் ஒரு கோர்ட்டு விசாரணையில் கக்ஷிக்காரராகிய நீலகண்ட ஐயரை வக்கீல் பார்த்து, விவாத வேலி எத்தனை அடி நீளமிருக்கும், என்றார்.

கக்ஷிக்காரரகிய ஐயர் சொன்னதாவது,

“ஐயா! என் வீட்டுக் குட்டிச் சுவரிலிருந்து பாழுங்கிணறு வரையிருக்கும்” என்றார். இங்கே அந்தத் தூரத்தை அளந்து காட்டும் பார்ப்போம் என்று வக்கீல் கேட்க அவர் நீதிபதியைக் காண்பித்து “எசமான்கள்தான் பாழுங்கிணறு என்றால் வக்கீலய்யர்தான் குட்டிச் சுவரு” என்றார். சகலரும் புன்னகையோடிருந்தனர்கள்

Xxx

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact swami_48@yahoo.com)

 

 

lakshmi in kshetras

ஸ்ரீதேவி x மூதேவி

ஒரு காலத்தில் ஸ்ரீதேவியும் மூதேவியும் “நான்தான் பெரியவள், நான் தான் பெரியவள்”- என்று சச்சரவு செய்துகொண்டு இதைப்பற்றி பூலோகத்தில் யாரிடத்திலாவது விசாரித்துத் தெரிந்துகொள்ளுவோம் என்று ஊரூராய்ச் சுற்றிவருகையில் வழியில் ஒரு செட்டியைக் கண்டு, “ஓய், வணிகரே! உலகத்தில் ஸ்ரீதேவியகிய நான் பெரியவளா, மூதேவியாகிய என் அக்காள் பெரியவளா? என்று கேட்க, செட்டி நகைத்துப் பின்வருவதறியாமல் மூதேவிதான் நல்லவள் என்றான்.

 

காரணம் என்னவென்று இருவரும் கேட்க செட்டியானவள், “ஸ்ரீதேவி வஞ்சகக்காரி.எங்கும் நிலயாதிருப்பதில்லை. அவள் மோசக்காரி ஒருவனைச் சீமானாகவும், மற்றொருவனைப் பேதையாகவும் செய்கிறாள். மூதேவியானவள் அப்படியில்லை. உலகத்திலுள்ள ஜீவராசிகள் யாவற்றிலும் வியாபகமாயிருக்கிறாள்” என்று சொல்லக்கேட்டு ஸ்ரீதேவி சினமுற்று, “சீ, போ! இன்று முதல் நான் உன்னிடத்திருக்கமாட்டேன்” என்று சொல்லிவிட்டுச் செல்ல, மூதேவி, செட்டியாரைத் தொத்திக்கொண்டாள். செல்வம் முழுதும் தொலைந்து அவன் ஏழையானான்.

 

அதன்பின் இருவரும் தர்க்கித்துக்கொண்டு, மற்றொரு கிராமத்தில் புகுந்த தருணம் ஒரு பிச்சையெடுக்கும் பிராமணன் எதிர்வர இருவரும் பிராமணரையழைத்து, “ஐயா, வேதியரே! உலகத்தில் சீதேவி, மூதேவி- ஆகிய இருவரில் யார் வந்தால் உலகத்தார் சந்தோஷப்படுகிறார்கள்?” என்று கேட்டனர். அதைக்கேட்ட பிராமணன் யோசித்து, சீதேவியைச் சிலாக்கியமாகச் சொன்னாள் அவள் நம்மை அணுகுவாள், மூதேவியைச் சிலாக்கியமாகச் சொன்னாலோ, சீதேவி போய்விடுவாள் என்று நினைத்து, “அம்மா! இவ்வுலகில் சீதேவியின் வருகையைப் பற்றி சந்தோஷிக்கிறார்கள்; மூதேவி போதலைப் பற்றிச் சந்தோஷிக்கிறார்கள், ஆகையால் இருவர் விஷயத்திலும் மக்கள் சந்தோஷம் சமமே என்றார். அதைக்கேட்டு இருவரும் பிராமணனின் வாக்கு சாதுர்யத்தை மெச்சிச் சென்றுவிட்டனர்.

Compiled by London swaminathan; posted by tamilandvedas.com and swamiindology.blogspot.com

-சுபம்-