Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
1992ம் ஆண்டில் தினமணியில் இதாலிய
கிறிஸ்தவப் பேய்களின் அட்டஹாசம் பற்றியும் பேய் ஓட்டுபவரே தன்னால் என்னவும் செய்ய
முடியாது என்று சொன்னதையும் வெளியிட்டேன். இப்போதைய நிலவரம் இதாலியில் ரோம்
நகருக்குள் இருக்கும் வாதிகன் சிட்டியில் வசிக்கும் போப்பாண்டவருக்குத்தான்
தெரியும்! நிற்க.
இது
ஒரு புறமிருக்க ஒவ்வொரு ஆண்டும் மேலை நாடுகளில் கொண்டாடப்படும் பேய்கள் தினமான
அக்டோபர் 31ம் தேதி பேய் வீடுகள் பற்றிய புதிய
தகவல்களை பத்திரிக்கைகள் வெளியிடும். இதை ஹாலோவின் தினம் என்றும் அழைப்பர்.
வழக்கமாக
லண்டனில் லூயிஷாம் பகுதியில் வசிக்கும்
பேய்தான் ஜெயிக்கும் . ஆனால் இந்த ஆண்டு லண்டனிலிருந்து 3 மணி தூர ரயி பயண தொலைவில் உள்ள
பர்மிங்ஹாம் நகர பேய் முதல்டம் பெற்றுவிட்டது!
அதிசய
சக்திகளை ஆராயும் குழுவினர் பர்மிங்ஹாம் நகரிலுள்ள ஆஸ்டன் ஹால் என்னும் கட்டிடத்தை
நாட்டின் அதிபயங்கரப் பேய் வீடு என்று அறிவித்துள்ளனர். காரணம் என்ன?
ஒரு
வேலைக்காரனுடன் ஓடிவிட எண்ணிய பெண்ணை அவருடைய தந்தை 16 ஆண்டுகள் சிறை வைத்த வீடு இது.
அவளுடைய பெயர் மேரி ஹாட்டி. அவள் சாம்பல் நிர பேயாக அங்கே உலவுகிறாள். அத்தோடு
வேலைக்காரன் பச்சை நிற உடை அணிந்து ஒரு நாற்காலியில் அமர்ந்து இருக்கிறான்.
இந்தப்
பேய்வீடுகளை தேசிய பாரம்பர்ய முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடத்தில்
சேர்த்திருப்பதால் தேசீய லாட்டரி நிதி உதவி வேறு கிடைத்து இருக்கிறது.
பேய்ய்களுக்குக் கூட நிதி உதவி!!
தென்
கிழக்கு லண்டனில் லூயிஷாமில் உள்ள மாளிகையும் பெக்கன்ஹாம் பூங்காவும் (Beckenham Place Park and Mansion in Lewisham, London) இரண்டாவது இடத்தைப் பிடித்த பேய்
வீடுகள். அங்கு முக்காடு அணிந்த பேய் ஒன்று ஏரியின் மேல் காட்சி தருகிறது இது தவிர
சிப்பாய் பேய்கள், பள்ளி மாணவ மானவி பேய்களும் காட்சி
தருகின்றன.
மூன்றாவது
இடம்
வட
அயர்லாந்து எஸ்பி கோட்டையில் (Castle
Espie Wetland Centre in Northern Ireland) உள்ள பெண் பேய், ஒரு குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு அலையும் பேய் ஆகும். உதவி
செய்யுங்கள் என்று அலறுவாள். கையில் ஒரு லாந்தர் விலக்கு ஏந்தி வருவாள். ஆயினும்
அருகில் போனால் மரத்துக்குப் பின்னர் மறைந்து ஓடி விடுவாளாம்.
லண்டனில்
க்ராய்டன் பகுதியில் சர் வால்டர் ராலேயின் பேய், முதலாம் எலிஸபெத் மஹாராணியின் பேயுடன்
குதிரை சவாரி செய்கிறது. ஆனால் எலிசபெத் மஹாராணிக்குத் தலை இல்லை ( (இப்போது
ராணியாக உள்ளாவர் இரண்டாம் எலிசபெத்) பேய் மஹராணி சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். சர் வால்டர் ராலே மர்ன தண்டனையில்
உயிர் இழந்தவர்.
இந்தப் பேய்களால் சுற்றுலா வளர்ச்சி பெறுகிறது. பகல் நேரத்தில் எல்லோரும் வருகின்றனார். இரவு நேரத்தில் பேய்ப் பிரியர்களும் பேய் ஆராய்ச்சியாளர்களும் வருகின்றனர்.
இதோ
முழுப்பட்டியல் (ஆங்கிலத்தில்)—
The
Top Ten Haunted Historic Sites 2019
1.
Aston Hall, Birmingham – home to Dick the houseboy who hanged himself after
being accused of stealing
2.
Beckenham Place Park and Mansion, Lewisham – home to a hooded ghost who floats
on the lake
3.
WWT Castle Espie Wetland Centre, Northern Ireland – home to a Victorian girl
carrying her baby
4.
Tamworth Castle, Staffordshire – home to the Black Lady, a 9th Century nun who
returned to avenge herself
5.
Beddington Park & The Grange (Carew Manor), Croydon – home to ghosts of Sir
Walter Raleigh and Queen Elizabeth
6.
Tower of London – residents include Thomas A. Beckett and Anne Boleyn
7.
Ruthin Gaol, Wales – home to Josephine, a spirit who moves objects
8.
Muncaster Castle, Cumbria – home to the ghost of Tom Fool, a notoriously cruel
court jester
9.
Llancaiach Fawr Manor, South Wales – home to Mattie, a former maid who burned
to death in an accident
10.
Swanbourne Area, Buckinghamshire – home to a ghost dressed in a long black cape
and black hat
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
~கொழுநனனைக் கொளுத்தினால் பொய்யெனப்
பொய்யும் மழை~
கணவனைத் தொழுதால் போதும்; தெய்வத்தைத் தொழ வேண்டாம் என்றான் சநாதனி ஹிந்து, ஹிந்து தீவிரவாதி, பழைய பத்தாம் பசலி திருவள்ளுவன்.
இப்போது ~டேய்,
வாடா, போடா~ என்று
காதலனைக் கூப்பிடும் பெண்கள் வள்ளுவனைப் பார்த்துச் சிரிக்கின்றனர்;பரிகசிக்கின்றனர்.
~கணவனையா? தொழ
வேண்டுமா? மசூதீல வேணும்னா தொழுகை நடக்கும். எங்க
வீட்ல அவர்தான் என்னைத் தொழுவார்; காரணம் என்ன வென்றால். திருவள்ளுவன்
குறளை இலக்கணப்படியே இரண்டு விதங்களிலும் அர்த்தம் சொல்லலாம்~– என்பாள் படிதாண்டாப் பத்தினிகள்!!
தெய்வம் தொழாள்;
கணவன் தொழுது எழுந்திருப்பாள் – என்று!`
இப்போது கூட பல வீடுகளில்
பார்க்கிறோம்.
அம்மா தாயே; பிள்ளைங்கெல்லாம்
ஸ்கூலுக்குப் போகனும்; எனக்கு காப்பி கூட வேனாம். அதுகளுக்கு
உடுப்பைப் போட்டு மத்தியானச் சாப்பாட்டைக் கட்டிக்கொடு; உன்னை
யாரு ராத்ரி ஒரு மணி வரைக்கும் டெலிவிஷன் பாக்கச் சொன்னான் – என்று கணவன்மார்கள் கதறுவதை!!
பிரிட்டனில் 1992-லேயே கொலைகாரிக்கு மாலை போட்டார்கள். இதோ நான் எழுதிய 15-11-1992 அலுவாலியா
கட்டுரை.
அலுவாலியா கட்டுரையைப் படிச்சிட்டு
அழுவலியா?
தெய்வம் தொழாள் கொழுநனனைக்
கொளுத்துவாள்
பொய் எனப் பொய்க்கும் மழை
(கலியுகத்தில்)–
சுவாமிநாதன் எழுதிய அருட்குறள்.
இதோ வள்ளூவன் எழுதிய உண்மைக் குறள்:–
தெய்வம்
தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப்
பெய்யும் மழை (குறள் 55)
தெய்வத்தைத்
தொழாமல் தன் கணவனைத் தொழுது எழுகின்ற ஒரு பெண் பெய் என்றால் மழை பெய்யும்.
எனது
கட்டுரைக்குப்பின்னர் வந்த செய்திகள்………………….
கிரன் ஜித் அலுவாலியா வழக்கு திரைப்படமாக எடுக்கப்பட்டது. அதில் ஐஸ்வர்யா ராய் நடித்தார். கிரன் ஜித் தனது வாழ்க்கையை சர்க்கிள் ஆFப் லைட் என்ற தலைப்பில் சுயசரிதையாகவும் எழுதினார்.
3 Jun 2017 – Written by S
NAGARAJAN. Date: 3 June 2017. Time uploaded in London:- 6-29 am. Post No.3966.
Pictures are taken from different sources such as Face book, Wikipedia,
Newspapers etc; thanks. contact: swami_48@yahoo.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
கொங்கு மண்டல சதகம்
புலவரின் பல்லக்கைச் சுமந்த உலகுடையான்!
ச.நாகராஜன்
குறும்பு நாடு என்பது கொங்குமண்டலத்தில் ஒரு பகுதி.
அங்குள்ள ஒரு படைத்தலைவன் பெயர் உலகுடையான். தமிழின் பால் மிக்க பற்று கொண்டவன். புலவர்களைப்
பெரிதும் ஆதரித்தவன்.
புலவர் ஒருவர் அவனை அணுகி அருமையான அகத்துறைக் கோவை
ஒன்றைப் பாடினார்.
அந்த இனிமையான செய்யுள்களைக் கேட்ட உலகுடையான் பெரு
மகிழ்ச்சி அடைந்தான்.
அந்தப் புலவரைப் பல்லக்கில் ஏற்றி அதைச் சுமந்ததோடு
அவருக்குப் பரிசும் பொருளும் கொடுத்ததோடு வயலும்
கொடுத்தான்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்தப் புலவர் பெயரும் தெரியவில்லை;
அவர் பாடிய அகத்துறைக் கோவையும் கிடைக்கவில்லை.
கொங்குமண்டல சதகத்தின் 82வது பாடலால் இந்த வரலாறு
நமக்குக் கிடைக்கிறது.
பாடல் :-
சொல்லிக் கனைய வகத்துறை க் கோவை சொன புலவன்
பல்லக் கெடுத்துக் கழனியும் பொன்னும் பரிசளித்த
வெல்லப் படைத்தலை விர னுலகுடை
வீரனமர்
மல்லர்க் கினிய குறுப்பணை நீள்
கொங்கு மண்டலமே
பொருள் :- இனிமையான அகத்துறைக்
கோவை பாடிய புலவனுடைய பல்லக்கைச் சுமந்து வயல் நிலமும் பொன்னும் பரிசாகக் கொடுத்தவனான
படைத்தலை வேளாளர்களில் உலகுடையான் என்பவனது குறும்பு நாடு சூழ்ந்தது கொங்கு மண்டலமே.
இந்த உலகுடையான் பற்றிய சாசனம் ஒன்று விஜய நகரம் நாகேஸ்வர ஸ்வாமி கோவிலில் புறச் சுவரில் இருக்கிறது.
சிதிலமடைந்த சாசனத்தின் சில
பகுதிகள் :-
சாசனம் நம்பர் : 565-1905 – ஸ்வஸ்தி ஸ்ரீ பாண்டிய தேவற்கு திருவெழுத்திட்டுச் செல்லா
நின்ற … கசு-வது தை மாதம் குறும்பு நாட்டு விஜயமங்கலத்து வெள்ளாழர் படைத்தலைவர்களில்
நம் உலகுடையானேன் விஜயமங்கலம் ஆன அவத்தூரில் நாயனார் வி..சு..ம சோழீஸ்வரமுடையாற்கு வைத்த திரு நந்தா
விளக்கு ஒன்றுக்கு ஒடுக்கின பணம் …ங்கைக் கொண்டோமிக் கோவில் காணியுடைய சில
…….
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
உலகெங்கிலும், குறிப்பாக வட கோளார்த்தத்தில் (Northern
Hemisphere) , பனிக்காலத்தின் போது சொக்கப்பனை (Bonfire)
கொளுத்துவது வழக்கம். நம்முடைய தீபாவளி, கார்த்திகையை ஒட்டி இது வரும். இதற்கு
இரண்டு காரணங்கள்:
மக்கள்
குளிர் காய ஒரு வாய்ப்பு; பழைய பொருட்களை அகற்றவும் ஒரு வாய்ப்பு
இரண்டாவதாக
பயிர்களை அழிக்கும் பூச்சிகள் தாமாகவே வந்து தீயில் விழுந்து தம்மை அழித்துக்
கொள்ளூம். இதனால் பயிர் வளம் பெருகும்.
கிறிஸ்தவ
மதம் பரவுவதற்கு முன்னரே உள்ள வழக்கங்களை அழிக்க முடியவில்லை. ஆகையால் பழைய
வழக்கங்களுடன் புதுக்கதைகளை இணைத்து பிரிட்டனிலும் பிற நாடுகளிலும் ஈஸ்டர், கை பாக்ஸ் டே (Easter,
Guy Fawke’s Day) முதலியவற்றைக்
கொண்டாடி வருகின்றனர். கிறிஸ்துமஸ் மரம், சாண்டா
கிளாஸ் (Christmas Tree, Santa Claus) என்பனவும் கிறிஸ்தவ மதத்துக்குத்
தொடர்பில்லாதவை. இது பற்றி முன்னரே கட்டுரை எழுதிவிட்டேன். 1992 நவம்பர் 15 தினமணியில் நான் எழுதிய கட்டுரை – “இங்கிலீஷ் தீபாவளி”. படித்துப் பாருங்கள். நேற்று நவம்பர்
5ம் தேதியும் பிரிட்டனில், குறிப்பாக லண்டனில்,
பட்டாஸ்
சப்தம் காதைப் பிளந்தது
நாம் ராம்லீலா, தசராவில், அசுரர்களின் உருவ பொம்மைகளை எரிப்பது போல அவர்களும் தீயோரின் உருவ பொம்மைகளை எரிப்பர்.
London Swaminathan articles in Dinamani dated 15th November 1992.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
இன்று
நவம்பர் 5, 2019. இதே
நாளில் 25
ஆண்டுகளுக்கு முன்னர் சவுத் இந்தியன் South Indian
Society (United Kingdom)
ஸொஸைட்டியில் ஒரே பரபரப்பு. எங்கள் நாடகம் இனிதே
நிறைவேற வேண்டுமே என்ற கவலை. இரவு பத்து மணிக்கு எல்லோரும் நிம்மதிப் பெருமூச்சு
விட்டோம். நானும் எனது நண்பர்களும் நடித்த ஹம்ப்டி டம்ப்டி (HUMPTY
DUMPTY) நாடகம்
பெரிய கைதட்டலையும் வரவேற்பையும் பெற்றது. ஏறத்தாழ 6 மாதங்களுக்கு வாரம் தோறும் நண்பர்கள்
வீட்டில் ரிஹர்ஸல்/ (REHEARSAL) ஒத்திகை நடந்தது.
நாடகத்தை
எழுதிய கிரிதரும் மதுரைக்காரர். நாங்கள் 50 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையில்
வசித்த காலத்திலேயே டாக்டர் சூர்ய நாராயணன், அவரது புதல்வர்கள் டாக்டர் மணி, கவிஞர் கிரிதர் மற்றுறுமுள்ள சகோதரர்களுடன்
பழக்கம் உண்டு. அதனாலும்
நான்
பி.பி.சி.தமிழோசையின் `பூக்காரி` (TAMIL VERSION OF BERNARD SHAW’S PYGMALION) நாடகத்தில் நடிகை ராதிகா சரத்
குமாருடன் முக்கிய வேடத்தில் (AS PROF. HENRY HIGGINS) நடித்ததாலும் எனக்கும் நடிக்க அழைப்பு வந்தது.
பெர்னார்ட் ஷாவின் பிக்மாலியன் நாடகத்தை பி.பி.சி. சங்கர் அண்ணா தமிழாக்கம்
செய்யவே நடிகை ராதிகாவை இந்தியாவில் இருந்து அழைத்து வந்து ஒரே வாரத்தில் ரேடியோ
ஒலிப்பதிவு செய்தோம். அது சிறப்பாக முடிந்தவுடன் இந்த நாடகம். இது வெற்றிகரமாக
முடிந்தவுடம் லண்டன் பாரதீய வித்யா பவனுக்கு நிதி எழுப்ப கிட்நாப் இன்
கேளம்பாக்கம் நாடகத்தில் நடிக்க
திருமதி
மைத்ரேயி கணேசனிடமிருந்து அழைப்பு வந்தது. இப்படி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுக்
காலம் வேலைப் பளுவுடன் நடிக்கும் பளுவும் சேர்ந்து கொண்டது
எனது
சுய புராணத்தையும் தற்பெருமைத் தம்பட்டத்தையும் நிறுத்திவிட்டு ஹம்டி டம்டி
நாடகத்துக்கு வருகிறேன். இதன் மூலம் சவுத் இந்தியன் சொசைட்டிக்கு சில ஆயிரம்
பவுண்ட் நிதி கிடைத்தது( செலவு போக).
எனக்கு
ராம்லால் ஷேட்ஜி வேஷம். என் நண்பர்கள் சிவ சங்கரன், ராம்தாஸ் ஆகியோருக்கு மகாதேவன் ,சகாதேவன் வேஷம். ஆடிட்டர் ஜெகந்நாதனு
க்கு 4 வேடங்கள். பெண்களில் முக்கிய கதா பத்திரம் ஜில்ஜில் தேவி மாதாஜி; அதை செவ்வனே செய்தவர் திருமதி கல்பனா
மூர்த்தி. நாடக ஆசிரியர் கிரிதர், `புலவர் புகழேந்தி`யாக நடித்தார். இது ஒன்றரை மணி நேர முழு நீள நாடகம். இப்போதெல்லாம்
அந்தக் காலம் போல யாருக்கும் நேரம் கிடைக்கததால் குறு நாடகங்கள் மட்டுமே லண்டனில்
மேடை ஏறுகின்றன. ஒன்றரை மணி நேர கதையுள்ள நாடகங்களுக்கு 6 மாதம் தேவைப்படும்
(வாரம் தோறும் இரண்டு நாள் ஒத்திகை வீதம்).
இது
தீபாவளி நிகழ்ச்சி நாடகம். இதன் தமிழ்ப் பெயர் ‘தில்லுமுல்லு – குல்மால்’.
சாமியார்கள்
பெயரில் நடக்கும் மோசடி பற்றிய நகைச் சுவை நாடகம்.
நாடகத்தில்
நாங்கள் சேர்த்த நகைச் சுவைக் காட்சிகளுடன் ஆக்ஸிடெண்டாக நகைச் சுவைக் காட்சிகளும்
ஏற்பட்டன. ஜில்ஜில் தேவி மாதாஜிக்கு நாங்கள் போட்ட ஆசன மேடை சரியவே புது வசனக்களை
சேர்த்து சமயோஜிதமாக சமாளித்தோம். எங்களுக்கும் சிரிப்பு! வேடிக்கை பார்த்த
ரசிகர்களுக்கும் சிரிப்பு!!
இந்த
நாடகத்துக்கு உறுதுணையாகவும் ஊற்றுணர்ச்சியாகவும் நின்றவர்கள் அப்போதைய ஸாஈஸ்
டலைவர் டாக்டர் ஐயங்காரும். அவரது மனைவி சித்ரா ஐயங்காரும் ஆவர். சித்ரா ஐயங்கார்
பார்கவியாக நடித்தார். ரிஹர்ஸல் நேரத்தில் கல்பனா மூர்த்தியுடன் சேர்ந்து இன்சுவை
திண்பண்டங்கள் படைப்பார். டாக்டர் ஐயங்கார் கடை, கடையாக ஏறி இறங்கி ஏராளமான விளம்பரங்களைச் சேகரித்தார். அவருடன்
சென்று விளம்பரம் வாங்கி அதை வடிவமைத்துக் கொடுத்தவர் கிழக்கு லண்டன் பாரஸ்ட்கேட்
திருமதி லதா ஐயர்.சிறிய ப்ரோஷரில் முப்பதுக்கும் மேலான விளம்பரங்கள்!!
ஆக
ஒரு சிலர் நடிப்பினால் மட்டுமின்றி ஏராளமானோரின் முயற்சியால் சிறந்தது இந்த
நாடகம். அப்போதைய கமிட்டி மெம்பர்களின் விவரத்தையும் நாடகத்துகு உதவி செய்தோரின்
பட்டியலையும், நடிகர், நடிகையர் விவரங்களையும் இத்துடன் இணத்துள்ளேன்.
ஒரு
சோகச் செய்தி:– இதில் முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவராக நடித்த ராம்தாஸ் சென்ற
மாதம் இறந்துவிட்டார். அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமதி மங்காளம்
மாத்ருபூதம் இறந்தார்.
நான்
இரண்டு பீரோக்கள் முழுதும் சேர்த்து வைத்த 40 ஆண்டு பேப்பர் கட்டிங் (PAPER CUTTINGS) குகளையும் ஆராய்ச்சிக் குறிப்புகளையும்
களைந்து வருகிறேன் அப்போது கிடைத்த நாடக விஷயத்தைக் கண்டு வியந்தேன் 25 ஆண்டுகள் உருண்டோடிவிடன!!
லண்டனில்
தமிழர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருந்தபோது நாடகக் கொடி பறக்கவிட்ட
சீதா மாமி,
முரளிராவ், சர்மா மாமா, காந்தன், கோடீஸ்வரன் ஜெயஸ்ரீ லக்ஷ்மிகாந்த் ஆகியோர் எங்களுக்கு ஊக்குவிப்பும் உற்சாகமும் தந்தனர்.
எங்களில்
எவருக்கும் பெயரிலோ புகழிலோ ஆசையே இல்லை (!!!
???) என்பதற்கு ஒரு உதாரணம் சொல்லட்டுமா? இந்த நாடகத்தின் போட்டோ யாரிடமும்
இல்லை. எடுக்கவே இல்லை போலும். அந்தக் காலத்தில் சிலர் காமெராவுடன் உலவினர்.
அவர்களாலும் போட்டோவையோ வீடியோவையோ கண்டுபிடிக்க முடியவில்லை; மொபைல் போன், ஐ பேட் (MOBILE PHONES, I PAD) கிடையாது. . நல்ல வேளை என்னிடம் மட்டும் ப்ரோஷர் BROCHURE இருந்தது! மற்றவர்களிடம் அதுவும் இல்லை.
எங்களுக்குப் பெயரிலோ புகழிலோ ஆசை இல்லை என்பதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்!!!???
நாடகத்தோடு
தீபாவளி விருந்தும் சேர்ந்ததால் மேலும் சுவை கூடியது.
உதவியோர்
அனைவருக்கும் நன்றி. சங்கத்தின்
கமிட்டிக்கும் நன்றி.
வாழ்க
S.I.S.!
வளர்க தமிழ்!!
3 OUT OF 33 ADVERTISEMENTS in S I S DIWALI BROCHURE —-
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
வெற்றி பெற்ற மேதைகள்
கடைப்பிடிக்கும் 10 விஷயங்கள்!
ச.நாகராஜன்
டாக்டர் ஹென்றி க்ளவுட் எழுதியுள்ள நெவர் கோ பேக் : 10 திங்ஸ் யூ வில் நெவர்
டூ எகெய்ன் என்ற புத்தகம் வெற்றி பெற்ற மேதைகள் திருப்பிச் செய்யாத 10 விஷயங்களைச்
சொல்கிறது.
அந்த 10 விஷயங்களை அலசிப் பார்த்தால் நமக்குக் கிடைக்கும் முக்கிய
கருத்துக்கள் :
ஒரு வேலையோ அல்லது உறவில் விரிசலோ எதானாலும் சரி, ஒரு நல்ல காரியத்தை
முன்னிட்டு முடிந்து விட்டது என்றால் அதை மீண்டும் திருப்பிக் கிளறக் கூடாது.
எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும், இதை நான் ஏன் செய்கிறேன், இதற்கு நான்
தகுதியானவன் தான, இது எனக்குப் பொருந்துமா, இது நீடித்து நிலைக்குமா என்று கேட்க
வேண்டும். ஆம் என்ற பதில் கிடைத்தால் அதைச் செய்ய வேண்டும்.
இன்னொருவரை மாற்ற முயலுதல் : இன்னொருவரை மாற்ற முயலாமல் இருந்தால் அவருக்குத்
தனது சுதந்திரத்தை நீங்கள் வழங்குகிறீர்கள். அதன் விளவாக என்ன ஏற்படும் என்பதை அனுபவிக்க
அவரை அனுமதிக்கிறீர்கள். இப்படிச் செய்தால் உங்களது சுதந்திரமும் உறுதிப் படுகிறது.
அனைவரையும் திருப்திப் படுத்த எண்ணுதல்
: அனைவரையும் திருப்திப் படுத்த ஒருக்காலும் முடியாது என்பதை அறிந்து கொண்டால் நீங்கள்
நல்ல இலட்சிய வாழ்க்கையை வாழ முடியும்.சரியான நபர்களை மட்டும் திருப்திப் படுத்த முடியும்.
நீண்ட காலப் பயனை விட்டு விட்டு குறுகிய கால சுகத்தை அனுபவிக்க நினைப்பது :
கொஞ்சம் கஷ்டத்தை அனுபவிப்பதானாலும் நீண்ட காலப் பயன் தரும் விஷயத்திற்காக வெற்றிகரமாக
வாழ விரும்புவோர் அந்த வழியையே தேர்ந்தெடுப்பர்.
6) ஒரு வித குறைபாடும்
இல்லாதவரை நம்புதல் : உலகில் பிரமாதமான ஆட்களையே அனைவரும் விரும்புவது இயல்பு. ஆனால்
உலகத்தில் உள்ள அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் சிறு குறையுடன் தான் இருப்பர். அதை அப்படியே
ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.
7) ஒரு சிறு சம்பவம்
முழு கதையாக ஆகி விடாது : ஒரு விஷயத்தின் முழு உருவத்தை நாம் அறியும் போது நன்கு செயல்
பட முடியும்; நமது வாழ்க்கையில் திறம்படச் செயலாற்ற முடியும். ஒரு சிறு சம்பவம் முழுக்
கதை அல்ல. இதை வெற்றியாளர்கள் ஒவ்வொரு நாளும்நன்கு மனதில் பதிய
வைக்கின்றனர்.
8) முழுதுமாகப் புரிந்து
கொள்ளுதல் : வெளிப்பார்வைக்கு எது எப்படி இருந்தாலும், பிரமாதமாக இருந்தாலும் ஆழ்ந்து
உன்னிப்பாக ஒன்றைக் கவனிக்கும் போது அதன் உண்மை நிலையை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
பின்னர் நாம் செயலாற்றலாம்.
9) நாம் ஏன் இப்படி
இருக்கிறோம் எனக் கேள்வி கேட்டல் : வெற்றியாளர்கள் எப்போதுமே தன்னைத் தானே நான் இந்த
நிலையில் என்ன பங்கை வகிக்கிறேன் என்ற கேள்வியைக் கேட்டுக் கொள்வர். சூழ்நிலை ஒன்றில் அவர் பாதிக்கப்பட்டவராக இருந்தாலும்
கூட தான் பாதிக்கப்பட்டதாக நினைக்காமல் உண்மை நிலையை அறியக் கேள்விகளைக் கேட்பர்.
10. வெளி வாழ்க்கையும்
உள் வாழ்க்கையும் : வெற்றியாளர்களுக்கு அந்தக்கரண வாழ்க்கை என்னும் உள் வாழ்க்கையே
முக்கியமானது. இது அழகாக, வெற்றி தரும் ஒன்றாக இருக்கும் போது அது வெளியிலும் பரிணமிக்கிறது;
கட்டுரையின் ஆங்கில வடிவம் இதோ!
June 24, 2014
“Never go back.” What does that mean?
From observations of successful people, clinical psychologist and author
of Never Go Back: 10 Things You’ll Never Do Again(Howard Books, June 2014), Dr. Henry Cloud has
discovered certain “awakenings” that people have—in life and in business—that
once they have them, they never go back to the old way of doing things. And
when that happens, they are never the same. In short, they got it.
Successful people never again…
1. Return to what hasn’t worked.
Whether a job, or a broken relationship
that was ended for a good reason, we should never go back to the same thing,
expecting different results, without something being different.
2. Do anything that requires them to be
someone they are not.
In everything we do, we have to ask
ourselves, “Why am I doing this? Am I suited for it? Does it fit me? Is it
sustainable?” If the answer is no to any of these questions, you better have a
very good reason to proceed.
3. Try to change another person.
When you realize that you cannot force
someone into doing something, you give him or her freedom and allow them to
experience the consequences. In doing so, you find your own freedom as well.
4. Believe they can please everyone.
Once you get that it truly is impossible
to please everyone, you begin to live purposefully, trying to please the right
people.
5. Choose short-term comfort over
long-term benefit.
Once successful people know they want
something that requires a painful, time-limited step, they do not mind the
painful step because it gets them to a long-term benefit. Living out this
principle is one of the most fundamental differences between successful and
unsuccessful people, both personally and professionally.
6. Trust someone or something that
appears flawless.
It’s natural for us to be drawn to
things and people that appear “incredible.” We love excellence and
should always be looking for it. We should pursue people who are great at what
they do, employees who are high performers, dates who are exceptional people,
friends who have stellar character, and companies that excel. But when someone
or something looks too good to be true, he, she, or it is. The world is
imperfect. Period. No one and no thing is without flaw, and if they appear that
way, hit pause.
7. Take their eyes off the big picture.
We function better emotionally and
perform better in our lives when we can see the big picture. For successful
people, no one event is ever the whole story. Winners remember that – each and
every day.
8. Neglect to do due diligence.
No matter how good something looks on
the outside, it is only by taking a deeper, diligent, and honest look that we
will find out what we truly need to know: the reality that we owe ourselves.
9. Fail to ask why they are where they
find themselves.
One of the biggest differences between
successful people and others is that in love and in life, in relationships and
in business, successful people always ask themselves, what part am I playing in
this situation? Said another way, they do not see themselves only as victims,
even when they are.
10. Forget that their inner life
determines their outer success.
The good life sometimes has little to do
with outside circumstances. We are happy and fulfilled mostly by who we are on
the inside. Research validates that. And our internal lives largely contribute
to producing many of our external circumstances.
And, the converse is true: people who
are still trying to find success in various areas of life can almost always
point to one or more of these patterns as a reason they are repeating the same
mistakes.
Everyone makes mistakes…even the most
successful people out there. But, what achievers do better than others is
recognize the patterns that are causing those mistakes and never repeat them
again. In short, they learn from pain—their own and the pain of others.
A good thing to remember is this: pain
is unavoidable, but repeating the same pain twice, when we could choose to
learn and do something different, is certainly avoidable. I like to say, “we
don’t need new ways to fail….the old ones are working just fine!” Our task, in
business and in life, is to observe what they are, and never go back to doing
them again.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
“, ஹலோ யார் பேசறது? என்ன வேணும்?”
“நீங்க யாரு ஸார்? நீங்கதானே கூப்பிட்டீங்க?”
“ஓ அதுவா! இல்ல! நீங்க ஊரிலதான் இருக்கீங்களான்னு கேட்கத்தான்?
என்ன செய்தி?சொல்லுங்க”
ஏன் ? ஏதாவது
ஸம்திங் கடன் கிடன் வேணுமா? கூப்பிட்ட நீங்கதானெ செய்தி
சொல்லனும்……………………………………………
இப்படி நிறைய ‘ஹலோ’க்களைக் கேட்டு
அலுத்துப் போய்விட்டீர்களா? உங்கள் நேரத்தையெல்லாம் வீணடிக்கும்
ஹலோவின் கதையைக் கேளுங்கள் தினமணி 1992 ஏப்ரல் 26
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
சம்ஸ்கிருதத்தில் உள்ள ரசாயன புஸ்தகங்களின் பட்டியலைத் தனியே தருகிறேன்.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
1992ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி நான் எழுதிய கட்டுரை-ஆஸ்கர் பரிசுகளின் தரம் குறைந்துவிட்டதா?
OSCAR PRIZE- WRITTEN BY S SWAMINATHAN FROM LONDON, ON 26TH APRIL 1992 IN DINAMANI.