TAMIL WISDOM- AVVAIYAR’S KONDRAI VENTHAN IN ENGLISH AND TAMIL – PART 2 (Post No.5516)

Compiled by London Swaminathan

 
swami_48@yahoo.com
Date: 7 October 2018

 

Time uploaded in London –14-58 (British Summer Time)

 

Post No. 5516

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

TAMIL WISDOM- AVVAIYAR’S KONDRAI VENTHAN IN ENGLISH AND TAMIL – PART 2 (Post No.5516)

சகர வருக்கம் APHORISMS BEGINNING WITH LETTER ‘SA’

26.IT IS AN ORNAMENT THAT THERE BE NO CASE OF BARRENNESS IN THE FAMILY

  1. சந்ததிக்கு அழகு வந்தி செய்யாமை.

TIRUKKURAL 61

AMONG THE BLESSINGS ONE SHOULD HAVE THERE IS NOE SO GREAT AS HAVING SENSIBLE CHILDREN
XXX

27.THE REPORT THAT WE ARE NOBLE IS AN HONOUR TO OUR PARENTS

  1. சான்றோர் என்கை ஈன்றோர்க்கு அழகு.

XXX

28.CONTROLLING ANGER IS THE BEAUTY OF PENANCE
28. சினத்தைப் பேணின் தவத்திற்கு அழகு.

TIRUKKURAL 309

IF A MAN COULD CHECK THE FEELING OF ANGER IN HIS MIND, HE WOULD GET ALL THAT HE WISHES TO HAVE.

XXX

29.IF YOU SEEK TO LIVE COMFORTABLY, SEEK THE PLOUGH (IF YOU WANT WEALTH ATTEND TO AGRICULTURE)

  1. சீரைத் தேடின் ஏரைத் தேடு.

TIRUKKURAL 1032

AGRICULTURISTS ARE THE AXLE OF THE WORLD; FOR ON THEM REST THEY WHO DO NOT TILL

XXX

30.IT IS DESIRABLE THAT RELATIVES SHOULD LIVE NEAR EACH OTHER
30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்.

 

TIRUKKURAL 527

LOOK AT HE CROW WHICH SHARES ITS FOOD. ONLY WITH MEN OF SUCH VIRTUE DOES FORTUNE ABIDE

 

XXX

31.GAMBLING AND DISPUTING CAUSE TROUBLE
31. சூதும் வாதும் வேதனை செய்யும்.

TIRUKKURAL 931

DO NOT TAKE TO GAMBLING EVEN IF YOU WIN. WHAT CAN THE FISH GAIN BY SWALLOWING THE BAITED HOOK?

 

XXX

32.IF YOU CEASE TO PRACTISE RELIGIOUS AUSTERITIES YOU WILL BE UNDER THE POWER OF ILLUSION
32. செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும்.

XXX

33.THOUGH YOU ARE IN A PRISON, SLEEP ONLY THREE HOURS

ANOTHER INTERPRETATION- WHEREVER YOU ARE SLEEP AT MIDNIGHT.

EVEN IF YOU ARE UNDER WATCH, SLEEP BY MIDNIGHT OT AT LEAST FOR THREE HOURS.

SEMAM- JAIL, PRISON

YAMAM- MIDNIGHT OR 3 HOURS
33. சேமம் புகினும் யாமத்து உறங்கு.

XXX

34.IF YOU HAVE WEALTH GIVE ALMS AND THEN EAT
34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்.

TIRUKKURAL 84

GODDESS OF WEALTH, LAKSHMI, WILL BE PLEASED TO DWELL IN THE HOUSE OF THE MAN WHO ENTERTAINS HIS GUESTS CHEERFULLY

XXX

35.THE PURE MIND WILL ATTAIN THE RIGHT WAY
35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்.

TIRUKKURAL 294

IF A MAN COULD CONDUCT HIMSELF TRUE TO HIS OWN SELF HE WOULD BE IN THE HEART OF ALL IN THE WORLD

XXX

36.LAZY PEOPLE WILL WANDER IN DISTRESS
36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்.

TIRUKKURAL 605

THESE FOUR ARE PLEASURE BOATS OF LOSS AND RUIN: PROCRASTINATION,FORGETFULNESS, IDLENESS AND DOZING

XXX

தகர வருக்கம் APHORISMS BEGINNING WITH ‘TA’

37.NO ADVICE IS GREATER THAN FATHER’S ADVICE

ANOTHER TRANSLATION- FATHER’S ADVICE IS GREATER THAN ANY OTHER MANTRA (HINDU HYMN/ SPELL)
37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.

TIRUKKURAL 67

THE DUTY OF A FATHER IS TO MAKE HIS SON THE BEST IN THE ASSEMBLY OF SCHOLARS

XXX

38.NO WORD IS LIKE THAT OF A MOTHER

ANOTHER TRANSLATION- THERE IS NO TEMPLE GREATER THAN MOTHER (MATHER IS MORE WORSHIPFUL THAN GOD)
38. தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை.

MATA PITA GURU DEIVAM- VEDIC SCRIPTURE

TIRUKKURAL 69

A MOTHER’S JOY IS MORE WHEN THE WORLD CALLS HER SON WISE THAN AT THE TIME OF HIS BIRTH

 

XXX

39.SEEK WEALTH THOUGH YOU HAVE TO GO OVER THE TOSSING SEA.

ANOTHER TRANSLATION- DONT HESITATE TO GO ABROAD, IF YOU CAN GET MONEY
39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.

TIRUKKURAL 616

EFFORT WILL PRODUCE WEALTH; IDLENESS WILL BRING POVERTY

XXX

40.IMPLACABLE ANGER WILL END IN FIGHT
40. தீராக் கோபம் போராய் முடியும்.

TIRUKKURAL 303

GREAT HARM MAY BE CAUSED BY ANGER. THEREFORE ONE SHOULD RESTRAIN ANGER TOWARDS ANYBODY.

XXX

41.THE WIFE WHO FEELS NO SYMPATHY FOR HER HUSBAND IS LIKE FIRE HIDDEN IN HIS CLOTHES
41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு.

XXX

42.THE WIFE SLANDER IN HER HUSBAND IS LIKE YAMA (GOD OF DEATH)
42. தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்.

TIRUKKURAL 59

HE WHO DOES NOT POSSES AN IDEAL WIFE, WHO VALUES THE REPUTATION OF CHARITY, CANNOT HOLD HIS HEAD UP AMONG HIS FRIENDS.

XXX

43.WHEN THE GOD IS ANGRY THE PENANCE IS FRUITLESS

(IF YOU MAKE GOD ANGRY BY YOUR BAD BEHAVIOUR,  EVEN GOD CANT HELP YOU)
43. தெய்வம் சீறின் கைத்தவம் மாளும்.

XXX

44.SQUANDERING WITHOUT GAINING WILL END IN RUIN
44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும்.

 

XXX

45.IN THE MONTHS OF JANUARY AND FEBRUARY SLEEP IN A HUT MADE OF STRAW.

ANOTHER TRANSLATION- IN THE HOT MONTHS, SLEEP ON THE FLOOR.

VAIYAM- STRAW, HAY

VAIYAKAM- EARTH, GROUND,FLOOR

  1. தையும் மாசியும் வைய(க)த்து உறங்கு.

XXX

46.SWEETER IS FOOD OBTAINED BY PLOUGHING THAN BY SERVING
46. தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது.

TIRUKKURAL 1033

THEY ALONE LIVE WHO LIVE BY FARMING; THE EST HAVE TO FAWN ON THEM FOR FOOD AND ARE THEIR SLAVES

XXX

47.DISCLOSE NOT YOUR WEAKNESS EVEN TO YOUR FRIEND.
47. தோழனோடும் ஏழைமை பேசேல்.

 

XXX SUBHAM XXX

 

காலமெனும் மணலிற் காலடி ‘Footprints on the Sands of Time’ (Post No.5515)

Compiled by London Swaminathan

swami_48@yahoo.com
Date: 7 October 2018

 

Time uploaded in London –13-38 (British Summer Time)

 

Post No. 5515

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

மேலும் ஒரு லாங்பெலோ Longfellow கவிதை

Henry Wadsworth Longfellow
Born February 27,1807
Died March 24,1882
Age at death 75

Henry Wadsworth Longfellow wrote some of the most well-known poems in American literature, including ‘Paul Revere’s Ride’. He was the first American to be honoured with a bust in the Poet’s Corner of Westminster abbey.

Born in Portland, Maine, Longfellow traced his family back to the to the Plymouth Pilgrims. He graduated in 1825 from Bowdoin College, where Nathaniel Hawthorne had been his classmate. Longfellow spent his early career teaching foreign languages, first at Bowdoin and later at Harvard. Thereafter he concentrated on poetry. He was one of the few American poets who was so popular that he could support himself by writing. Longfellow ‘s private life was filled with sadness. His first wife died shortly after they were married and his second wife was killed in a fire. This sadness is reflected in many of his poems.
At 32 he published his first book of verse  ‘Voices of the Night’ which brought him wide public recognition. Two years later he published Ballads, which contains some of his most famous poems, including the Village Black Smith. Longfellow had a gift for romantic story telling. He became known for his long poems that use simple ideas and language to tell stories based on American history and mythology. These include The Song of Hiawatha, a tale from Native American legends. Evangeline, the story of the French exiles of France ‘s colonies in North America. And ‘The Courtship of Miles Standish’, a romance set in the early days of the Pilgrim Fathers.

Publications
1839 Voices of the Night
1841 Ballads
1847 Evangeline
1849 The Seaside and the Fireside
1855 The Song of Hiawatha
1858 The Courtship of Miles

Standish
1863 Tales of a Wayside Inn (including Paul Revere’s Ride)
1880 Ultima Thule

புகழ் பெற்ற அமெரிக்க கவிஞர் லாங்பெலோவின் H W LONGFELLOW அமர வரிகள்  என்ற எஸ்.நாகராஜனின் கட்டுரையைத் தொடர்ந்து இது வருகிறது.

 

மதுரை ஆசிரியர், கவிஞர் கோபால கிருஷ்ண ஐயர் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர்களின் பாடல்களை மொழி பெயர்த்து வெளியிட்டார்.

 

ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்பெலோ, அமெரிக்காவின் புகழ்பெற்ற கவிஞர்களில் ஒருவர். 1807-ல் பிறந்து 1882-ல் அமரர் ஆனார். லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் அப்பேயில் கவிஞர்கள் மூலையில் சிலை பெற்றமுதல் அமெரிக்கக் கவிஞர். அவருடைய புகழ் பெற்ற கவிதை ‘பால் ரெவ்யர்ஸ் ரைட்’.

 

அவருடைய முன்னோர்கள் இங்கிலாந்திலிருந்து குடியேறியவர்கள் .அமெரிக்காவில் கல்வி கற்ற பின்னர் வெளிநாட்டு மொழிகளைக் கற்பித்தார். பின்னர் கவிதை உலகில் புகுந்தார். தமது இலக்கியப் படைப்புகள் மூலமே காலம் தள்ளிய  எழுத்தாளர்.

ஆனால் சுய வாழ்வில் பல சோகக் கதைகள்!

 

கல்யாணம் கட்டியவுடன் முதல் மனைவி காலமானார். இரண்டாவது மனைவி தீ விபத்தில் இறந்தார். அவருடைய கவிதைகளிலும் சோகம் எதிரொலிக்கும்.

 

32 வயதிலேயே முதல் புத்தகம் ‘வாய்ஸஸ் ஆப் தி நைட்’டை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து பல நூல்கள் வெளியாகின.

 

Xxx subham xxx

There is no Death : கவிஞர் லாங்பெல்லோவின் அமர வரி! (Post No.5514)

 

There is no Death : கவிஞர் லாங்பெல்லோவின் அமர வரி! (Post No.5514)

 

 
WRITTEN BY S NAGARAJAN

Date: 7 October 2018

 

Time uploaded in London – 6-53 AM (British Summer Time)

 

Post No. 5514

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

There is no Death : கவிஞர் லாங்பெல்லோவின் அமர வரி!

 

.நாகராஜன்

 

 

அமெரிக்க கவிஞர் லாங்பெல்லோ (1807 – 1882)

மறுபிறவியில் நம்பிக்கை கொண்டவர். “

 

 

There is no Death! What seems so is transition;
  This life of mortal breath
Is but a suburb of the life elysian,
  Whose portal we call Death என்ற அமரவரிகளை எழுதியவர்.
அவரது சிறு பெண் குழந்தை ஃபானி திடீரென இறந்த போது மனம் வருந்தி இந்தக் கவிதையை அவர் எழுதினார். 1848ஆம் ஆண்டு நவம்பர் 12 தேதியிட்ட டயரிக் குறிப்பில் அவர் எழுதினார் : “ நான் இன்று மிகவும் சோகமாக இருக்கிறேன். எனது சின்னக் குட்டியை இழந்து தவிக்கிறேன். அவளைப் பார்க்க வேண்டும் என்கிற கட்டுப்படுத்த முடியாத தணியாத தாகம் என்னை வருத்துகிறது.

ரெஸிக்னேஷன் என்று அவர் எழுதிய முழுக் கவிதை இது தான்.

 

 

 

RESIGNATION

 

HENRY WADSWORTH LONGFELLOW

    Written in the autumn of 1848, after the death of his little daughter Fanny. There is a passage in the poet’s diary, under date of November 12, in which he says: “I feel very sad to-day. I miss very much my dear little Fanny. An inappeasable longing to see her comes over me at times, which I can hardly control.”
THERE is no flock, however watched and tended,
  But one dead lamb is there!
There is no fireside, howsoe’er defended,
  But has one vacant chair!
 
The air is full of farewells to the dying,         5
  And mournings for the dead;
The heart of Rachel, for her children crying,
  Will not be comforted!
 
Let us be patient! These severe afflictions
  Not from the ground arise,         10
But oftentimes celestial benedictions
  Assume this dark disguise.
 
We see but dimly through the mists and vapors;
  Amid these earthly damps
What seem to us but sad, funereal tapers         15
  May be heaven’s distant lamps.
 
There is no Death! What seems so is transition;
  This life of mortal breath
Is but a suburb of the life elysian,
  Whose portal we call Death.         20
 
She is not dead,—the child of our affection,—
  But gone unto that school
Where she no longer needs our poor protection,
  And Christ himself doth rule.
 
In that great cloister’s stillness and seclusion,         25
  By guardian angels led,
Safe from temptation, safe from sin’s pollution,
  She lives, whom we call dead.
 
Day after day we think what she is doing
  In those bright realms of air;         30
Year after year, her tender steps pursuing,
  Behold her grown more fair.
 
Thus do we walk with her, and keep unbroken
  The bond which nature gives,
Thinking that our remembrance, though unspoken,         35
  May reach her where she lives.
 
Not as a child shall we again behold her;
  For when with raptures wild
In our embraces we again enfold her,
  She will not be a child;         40
 
But a fair maiden, in her Father’s mansion,
  Clothed with celestial grace;
And beautiful with all the soul’s expansion
  Shall we behold her face.
 
And though at times impetuous with emotion         45
  And anguish long suppressed,
The swelling heart heaves moaning like the ocean,
  That cannot be at rest,—
 
We will be patient, and assuage the feeling
  We may not wholly stay;         50
By silence sanctifying, not concealing,
  The grief that must have way.
இந்தக் கவிதையைப் பற்றிப் பலரும் குறிப்பிட்டிருக்கின்றனர்.

ஹென்றி ஃபோர்ட் குறிப்பிடும் வரிகள் இவை :

 

“Life cannot die. Longfellow was right – ‘There is no death’. It is not poetry, it is science. Life that can die would not be life…. I expect to go on and gather more experience. I expect to have opportunities to use my experience. I expect to retain this central cell, or whatever it is, that is now the core of my personality. I expect to find conditions of life further on, just as I found conditions of life here, and adapt myself to them just as I adapted myself to these….. We cannot stop”

Henry Ford in The Power that wins by Trine – Page 180-181

 

 

 

 

 

 

 

 

 

 

 

உயிர் வாழ்க்கை இறக்க முடியாதது. லாங்பெல்லோ, “ இறப்பு இல்லை” என்று சொன்ன போது அவர் சரியாகத் தான் சொல்லி இருக்கிறார். அது கவிதை அல்ல; விஞ்ஞானம். இறந்துபடும் உயிர் வாழ்க்கை ஒரு வாழ்க்கையாக இருக்க முடியாது. … தொடர்ந்து செல்ல விரும்புகிறேன்; அதிக அனுபவம் பெற விரும்புகிறேன். எனது அனுபவங்களைப் பயன்படுத்த வாய்ப்புக்களை நான் எதிர்பார்க்கிறேன். இந்த மைய செல்லை, அல்லது அது எதுவாகத் தான் இருக்கட்டுமே, எனது ஆளுமையின் அடிநாதத்தை நான் தக்க வைத்துக் கொள்ள விழைகிறேன். இங்கு நான் காணும் நிலைகளைப் போல உயிர்வாழ்க்கையின் நிலைகளை மேலும் காண விழைகிறேன்; இங்கு அதற்குத் தக என்னைப் பொருந்தச் செய்தது போல அவற்றிற்கு என்னை பொருந்தச் செய்வேன். நாம் நின்று விட முடியாது.” –

ட்ரைனின் ‘இன் தி பவர் தட் வின்ஸ்’ நூலில் ஹென்றி போர்ட்

பக்கம் 180-181

இதை விட அருமையாக யாரால் வாழ்க்கையின் தொடர்ச்சியான மறுபிறப்பு பற்றிச் சொல்ல முடியும்?

 

லாங்பெல்லோ உள்ளிட்ட உலகின் தலையாய கவிஞர்கள், அறிஞர்கள், தத்துவஞானிகள் மறுபிறப்பின் மீது நம்பிக்கை கொண்டுள்ளவர்களே.

 

ஹிந்து மதத்தின் மறுபிறப்புக் கொள்கை அறிவுக்கு உகந்தது என்பதையே இது காட்டுகிறது, இல்லையா!

மன்மதைனையும் மயங்க வைக்கும் கொல்லிப்பாவை! (Post No.5510)

WRITTEN BY S NAGARAJAN

Date: 6 October 2018

 

Time uploaded in London – 6-14 AM (British Summer Time)

 

Post No. 5510

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

மன்மதைனையும்  மயங்க வைக்கும் கொல்லிப்பாவை!

 

ச.நாகராஜன்

 

    பழ வகைகள், தேன் முதலிய உணவுப் பொருள்கள் நிரம்பிய மலை கொல்லி மலை. ஆகவே தவம் செய்ய விரும்பிய முனிவர்களும் தேவர்களும் இங்கு வந்து தங்கி இருக்கப் பெரிதும் விரும்புவர். இந்த மலையின் பெருமையைக் கேட்ட இராக்கதர்களும் அசுரர்களும் இங்கு வரத் தொடங்கினர். இதனால் தவம் புரிந்து வந்த முனிவர்களுக்குப் பெரிதும் இடையூறு ஏற்பட்டது.

 

ஆகவே அவர்கள் காற்று, மழை, இடி ஆகிய எதனாலும் கேடு கொள்ளாத ஒரு பாவையை விசுவகன்மாவைக் கொண்டு நிர்மாணிக்கச் செய்து அதை அம்மலையின் மேற்குப் பாகத்தில் நட்டு வைத்தனர். பல்வகை சக்தி அதில் ஊட்டப்பட்டிருந்ததால் அசுரர் முதலானோரின் காற்று வாடை பட்டால் கூட அந்தப் பாவை இளஞ்சிரிப்பைச் சிந்தும். கண்டவரது உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் கண் பார்வையையும் கொள்ளும். இதனால் பார்த்தவர்கள் பெரும் காம வேட்கையைக் கொள்வர். இறுதியில் உயிர்போக்க வல்ல மோகினி வடிவத்தையும் அது கொள்ளும். இந்தக் கொல்லிப்பாவை நகைப்பதையும் இயங்குவதையும் கண்டு அது ஒரு அழகிய மடந்தை என்று எண்ணி மயங்கிக் காம நோய் கொண்டு இறுதியில் அசுரர் முதலானோர் மடிவர்.

இப்படிப்பட்ட கொல்லிப்பாவையைக் கொண்டுள்ள கொல்லி மலை உடைய மண்டலம் கொங்கு மண்டலமே என கொங்கு மண்டல சதகத்தின் 25ஆம் பாடல் வெகுவாகப் புகழ்ந்துரைக்கிறது.

 

பாடல் வருமாறு:

 

“தாணு முலகிற் கடன்முர சார்ப்பத் தரந்தரமாய்ப்

பூணு முலைமட வார்சேனை கொண்டு பொருதுமலர்ப்

பாணன் முதலெவ ரானாலுங் கொல்லியம் பாவைமுல்லை

வாணகை யாலுள் ளுருக்குவ துங்கொங்கு மண்டலமே

 

பாடலின் திரண்ட பொருள் : மன்மதனும் மயங்கத் தக்க இளஞ்சிரிப்புச் செய்யும் கொல்லிப் பாவை விளங்கும் கொல்லி மலையும் கொங்கு மண்டலத்தில் இருப்பதேயாகும்.

 

கொல்லிமலையில் எழுந்தருளியுள்ள அரப்பளீசுரர் ஆலயத்துக்கு மேற்குப் பக்கத்தில் இப்பாவை இருப்பதாக கொல்லி மலை அகராதி என்ற சுவடியில் எழுதப்பட்டுள்ளது.

ஆனால் இக்காலத்தில் இது எங்கிருக்கிறது என்பது தெரியவில்லை; இதைக் காணவும் முடியவில்லை.

 

சித்திரமடல் என்னும் நூலில் இது பற்றிய குறிப்பைக் காண்கிறோம்:

 

     “ …. திரிபுரத்தைச் –

செற்றவனுங் கொல்லிச் செழும்பாவையு நகைக்கக்

கற்றதெலா மிந்தநகை கண்டாயோ    (சித்திர மடல்)

 

நற்றிணையும் கொல்லிப்பாவை பற்றிக் குறிப்பிடுகிறது:

 

‘செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லித்

தெய்வங் காக்குந் தீதுதீர் நெடுங்கோட்

டவ்வெள் ளருவிக் குடவரை யகத்துக்

கால்பொரு திடிப்பினுங் கதழுறை கடுகினு

முருமுடன் றெரியினு மூறுபல தோன்றினும்

பெருநலங் கிளரினுந் திருநல வுருவின்

மாயா வியற்கைப் பாவை  …

         ….   கொல்லிக் குடவரைப்

பூதம் புணர்ந்த புத்தியல் பாவை     (நற்றிணை)

 

இதுமட்டுமின்றி குறுந்தொகையும் கொல்லிப்பாவை பற்றிக் கூறுகிறது:

 

“பெரும்பூட் பொறையன் பேஎமுதிர் கொல்லிக்

கருகட் டெய்வங் குடவரை யெழுதிய

நல்லியற் பாவை                  (குறுந்தொகை)

 

இப்படி குடவரை எழுதிய கருங்கல் தெய்வமான நல்லியல் கொல்லிப் பாவையின் நகையும் இயக்கமும் மயக்க வைக்கும் மோகன உருவமும் அசுரரை மயக்கி அழித்து தவம் செய்யும் நல் முனிவர்களைக் காத்து வருகிறது என்பது பல நூல்களின்  முடிந்த முடிபுரை.

 

அப்படிப்பட்ட கொல்லிப்பாவையைத் தன்னகத்தே கொண்டு தென்னகத்தே இலங்கும் கொல்லி மலை இருப்பது கொங்கு மண்டலத்தில் என்பதால் கொங்கு மண்டலம் தனிப் பெருமை பெறுகிறது.

 

இத்துடன் கொங்குமண்டல சதகத்தின் அடுத்த பாடலும் (பாடல் 26) கொல்லி மலையில் உள்ள தேன் பற்றிப் புகழ்ந்துரைக்கிறது.

 

“முத்தீட்டு வாரிதி சூழுல கத்தினின் மோகமுறத்

தொத்தீட்டு தேவர்க்கு மற்றுமுள் ளோர்க்குஞ் சுவைமதுரத்

கொத்தீட் டியபுதுப் பூத்தேனு மூறுங் குறிஞ்சியின்றேன்

வைத்தீட் டியகொல்லி மாமலை யுங்கொங்கு மண்டலமே

பொருள் : தேவர் முதலிய அனைவரும் ஆசை கொள்ளத் தக்க சுவை மதுரப் பூந்தேன் ஊறும் கொல்லி மலையைக் கொண்டுள்ளதும் கொங்கு  மண்டலமே ஆகும்.

கொல்லிமலையின் தேன் பற்றிக் கம்பரின் தனிப்பாடல் ஒன்று, “கொல்லிமலைத் தேன் சொரியுங் கொற்றவா என்று குறிப்பிடுகிறது.

 

அடுத்து நற்றிணையும் கொல்லி மலைத் தேனைப் பற்றிக் கூறுகிறது:

 

“உயர்சா லுயர்வரைக் கொல்லிக் குடவயி

னகவிலைக் காந்த ளங்குகுலைப் பாய்ந்து

பறவை யிழைத்த பல்க ணிறாஅற்

றேனுடை நெடுவரை

 

இப்படிப்பட்ட தேவரையும் மயங்க வைக்கும் தேன் உடை நெடு வரை கொல்லி மலை என்பதால் கொங்கு மண்டலத்தின் பெருமை இன்னும் கூடுகிறது, இல்லையா!

***

புராணங்கள் புளுகு மூட்டைகளா? பொய் சொல்கின்றனவா? (Post No.5508)

Research Article Written by London Swaminathan

 
swami_48@yahoo.com
Date: 5 October 2018

 

Time uploaded in London –8-47 am (British Summer Time)

 

Post No. 5508

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

புராணங்களுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது எப்படி?

 

புராணங்கள் பழையதா? வேதங்கள் பழையதா?

புராணங்களும் வேதங்களும் பழமையானவையே;

சான்று உளதா?

அதர்வண வேதத்தில் புராணங்கள் பற்றிப் பேசப்படுகிறது. வெளிநாட்டினரும் கூட கி.மு.850 என்று தேதி குறிக்கும் சதபத பிராமணத்தில் புராண இதிஹாசம் என்ற தொடர் வருகிறது. இதற்குப் பின்னர் ஏரளமான குறிப்புகள் உள.

Atharva Veda (25-6-4); (11-7-24)

Satapata Brahmana (11-5-6-8)

‘புரா’ என்றால் ‘முன்பு’ ‘முன் காலம்’ Once upon a time, Long long ago என்று பொருள். வேத காலத்திலேயே நாம் முன்னொரு காலத்தில் என்று கதை சொல்லி இருப்போமானால், நாம் தான் உலகிலேயே பழமையான இனம் என்பதற்கு வேறு சான்றே தேவை இல்லை.

 

‘புரா அபி நவம்’ என்ற விளக்கமும் உண்டு. பழைய கதைதான்; ஆயினும் என்றும் புதுக்கருக்கு அழையாத தங்கம் போல ஜ்வலிக்கிறது என்பதால் ‘புரா அபி நவம்’  — அதாவது முன்னைப் பழமைக்கும் பழமையாய், பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் இலங்குவது– என்று பொருள் சொல்லுவர். 18 புராணங்கள் பற்றி முன்னர் வெளியான கட்டுரைகளின் குறிப்பை அடியில் காண்க. புதிய விஷயங்களுக்கு வருவோம்

 

புராணங்கள் என்றால் முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் கட்டுக் கதைகள் என்ற எண்ணம் ஏற்பட்டதற்குப் பல காரணங்கள் உள்ளன.

 

 

1.வின்டர்நீட்ஸ் (Winternitz) என்ற இந்தியவியல் அறிஞர் சொன்னார்- ‘சூதர்’கள் எனபடும் கவி பாடும் மக்களிடையே இது போனதால் தரம் தாழ்ந்துவிட்டது. உயர்குடி மக்களிடையே இரு இருந்திருந்தால் இப்படி ஏற்பட்டிராது.

 

2.ஆதிகாலத்தில் வரலாற்றை வாய் மொழியாக, பாடல் வாயிலாக, பாமர மக்களுக்கு என படைக்கப்பட்டவை புராணங்கள். இதற்கு ஐந்து லட்சணங்கள் உண்டு. அதில் வரலாறும், பூகோளமும் அடக்கம். ஆயினும் இந்துக்கள் மஹா புத்திசாலிகள், ‘ரொம்ப அட்வான்ஸ்ட்’ (far advanced) என்பதால் அவ்வப்பொழுது புது வரலாற்றைப் (updating) புகுத்தினர். இப்படி உலகில் அவ்வப்பொழுது புது வரலாற்றை எழுதியோர் இந்துக்கள் மட்டுமே. வெளிநாட்டுப் பேதைகள் கடைசி தேதியைப் பார்த்துவிட்டு புராணங்கள் பிற்காலத்தியவை என்று முத்திரை குத்திவிட்டனர். பெயரிலேயே புராண (பழையவை) என்ற சொல் இருக்கையில் புதியவை என்று அரை வேக்காடுகள் செப்பியது ‘சூடான ஐஸ்க்ரீம்’ (Hot Icecream!!!) என்று சொல்லுவதற்கு இணையானது. குப்தர் காலம் வரை பிற்சேர்க்கை இருந்ததால் புராணங்கள் குப்தர் காலத்தியவை என்பது காமாலைக் கண்ணர்களின் வாதம்.

 

3.முக்கிய உபநிஷதங்கள் அனைத்தும் புத்தர் காலத்துக்கு முந்தையவை; அவைகளில் புத்தமத வாடையே கிடையாது; அப்படிப்பட்ட சாந்தோக்ய உபநிஷதத்தில் ஒரு அருமையான தகவல் உளது. நாரத முனிவர் தான் கற்ற விஷயங்களைப் பட்டியலிடுகையில் நான்கு வேதங்களுடன் புராணத்தையும் சொல்கிறார். ஆக நாரதருக்கும், உபநிஷதத்துக்கும் முந்தையவை புராணங்கள்.

 

ஆயினும் 18 புரானங்களும் வெவேறு காலத்தில் எழுத்து வடிவம் பெற்றமைக்கு அவைகளுக்கு உள்ளேயே சான்றுகள் தென்படுகின்றன.

 

4.ரோமஹர்ஷணரும்  அவரது புதல்வன் உக்ரஸ்ரவசும் பெரும்பாலான புராணங்க ளை யாத்தனர். இயற்பியலில் மூன்று வர்ணங்களை (primary colours சிவப்பு, மஞ்சள்,நீலம்) ஆதார வர்ணனங்கள் என்பர். அவைகளின் கலவையே ஏனைய வர்ணங்கள்; இது போல மூன்று புராணங்களே ஆதார அல்லது ஆதி புராணங்கள்- பிரம்ம,வாயு, மத்ஸ்ய புராணங்கள். ஏனையவை இவைகளிலிருந்து கிளைவிட்டுப் பிரிந்தவையே.

பிரம்ம புராணத்திலிருந்து  அக்னி புராணம் வந்தது.

 

மத்ஸ்ய புராணத்திலிருந்து பத்ம புராணம் வந்தது.

வாயு புராணத்திலிருந்து பிரஹ்மாண்ட புராணம் வந்தது.

 

 

பின்னால் வந்த 12 புராணங்களை ஒப்பிட்டு ஆராய்ந்தால் அவைகளிடையே பெரும்பாலான விஷயங்களில் ஒற்றுமை காணப்படுகிறது. அதாவது மேற்கூறிய மூன்று ஆதி புராணங்களைத் தழுவி நிற்கின்றன. முதல் மூவர்- முதல் மூன்று ஆழ்வார்கள் –என்று சொல்லலாம்.

 

5.அந்தக் காலத்தில் உலகில் எங்கும் நிகழாத மஹா அற்புதமான மஹா நாட்டை இந்துக்கள் நடத்தி வந்தனர். உலகில் வேறு எங்குமிலாத புதுமை அது. அதாவது 12 ஆண்டுகள் நீண்ட ஒரு மஹாநாட்டை நடுக்காட்டில் நடத்தினர்

ரிஷி,முனிவர்கள் மஹாநாடு கூட்டி புராணங்களை இயற்றுவர், பாடுவர், மாற்றுவர், எடிட் செய்வர், அப்டேட் செய்வர்; எழுதுவர்; இப்படி நைமிசாரண்யமென்ற ஒரு காட்டின் நடுவில் ரோமஹர்ஷணர் சொன்னதுதான் வாயு புராணம்.

 

விஷ்ணு புராணம்,பாகவத புராணம் போன்ற புகழ்மிகு புராணங்கள் பின்னால் எழுந்தவை.

 

 

  1. மக்களைக் கவர்வதற்காக மிகைப்பட்ட கூற்றுகளைப் புராணம் சொல்லுவோர் மொழிந்தனர். தசரதனுக்கு 60,000 மனைவியர், காசி மன்னன் அலார்கா 36, 000 ஆண்டுகள் ஆண்டான்; ராமன் 24,000 ஆண்டுகள் ஆண்டான் என்றெல்லாம் கதை விட்டனர். ஆனால் வேதங்களோ மனிதனின் ஆயுள் 100 ஆண்டுகளே என்று திரும்பத் திரும்ப பாடுகின்றன. தீர்க தமஸ் 100 ஆண்டு வாழ்ந்ததையும், மஹீதாஸ ஐதரேயர் 116 வயது வரை இருந்ததையும் குறிப்பிடத் தவறவில்லை. உண்மையில் ஆயிரம் என்பதில் மூன்று பூஜ்யங்களை நீக்கி விட வேண்டும்; ஏனெனில் இது போன்ற ‘கப்ஸா’க்கள் சுமேரியாவிலும் உண்டு; மூன்று தமிழ்ச்சங்கங்கள் வரலாற்றிலும் உண்டு. ஆதிகால மக்கள் இப்படி ஆயிரம் என்பதைச் சேர்த்துச் சொல்லுவர். மஹாபாஷ்யம் யாத்த பதஞ்சலி முனிவர் மட்டும் அறிவியல் முறையில் கணக்கிட்டு ராமன் 24 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார் என்று அறுதியிட்டுக் கூறினார்.

ஆக மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகள் புராணங்களுக்கு புளுகு மூட்டைகள் என்ற அவப்பெயரை சம்பாத்தித்துத் தந்தன.

7.புராணங்கள் மிகப் பழங்காலத்தைச் சேர்ந்தவை என்பதால் காலப் போக்கில் குழப்பங்கள் ஏற்பட்டன. ஒரே மன்னனின் தம்பிகள் அண்ணன்கள், தாயாதிகள் ஆண்டதையும் குழப்பிக்கொண்டு ஆண்டுகளை மாற்றி எழுதினர். பாண்டியர்களில் ஒரே நேரத்தில் ஆண்ட சஹோதரர்கள் உண்டு. சேர மன்னர்களில் இரண்டு வம்சங்கள் ஒரே நேரத்தில் ஆண்டதும் உண்டு. இவை பிற்காலத்தியவை; ஆகையால் குழப்பம் மிகக் குறைவு. பழங்கால விஷயங்களில் இது அதிகம்.

 

  1. ஒவ்வோரு புராணமும் அந்தந்த ஊர் தெய்வத்தைப் புகழ்வதற்காக, நம்மூர் ஸ்தல புராணங்கள் போல புதுக்கதைகளைஎட்டுக் கட்ட்டினர். சிலர் மன்னர்களை தெய்வங்கள் என்று புகழ்ந்தனர். சிலரை அவதார புருஷர் என்று காட்டினர். நமது காலத்திலேயே சத்ய சாய்பாபா, தான் ஷீரடி பாபாவின் மறு அவதாரம், தான் கடவுள், என்று சொன்னதை அறிவோம். இவ்வாறு ஒவ்வொரு புராணமும் பேசத் துவங்கியவுடன் குழப்பம் அதிகரித்தது.

 

  1. மர்மங்கள் ரஹஸியங்கள் அதிசயங்கள், அற்புதங்கள் இல்லாத விடத்திலும் அவைகளை அற்புதம் போலச் சித்தரித்தன. எடுத்துக்காட்டாக அகஸ்தியர் விந்திய மலை வழியாக முதல் சாலை (First Land Route) போட்டார். இதை ‘விந்திய கர்வ பங்கம்’ என்று பெரிது படுத்தினர். அகஸ்த்யர் பண்டிய மன்னர்களை அழைத்துக்கொண்டு கப்பற் படையுடன் தென் கிழக்காசியா சென்றார். அவர் வியட்நாம் இந்தோநேஷியா போனதை அகஸ்த்யர் ‘கடலைக் குடித்தார்’

என்று எழுதின. பகீரதன் மாபெரும் சிவில் எஞ்சினீயர். (Civil Engineer) அவன் கங்கை நதியை பாறைகளைப் புரட்டி திசை திருப்பினான். இதை கங்கையை 16, 000 ஆண்டு தவம் செஉ,,து பூமிக்குக் கொணர்ந்தான் என்றனர்; பரசுராமன் கேரள பூமியை பயிரிடும் பூமியாக மாற்றினான் அவன் கடலில் இருந்து பூமியை மீட்டதாக எழுதினர். பாண்டியன் வேல் விட்டவுடன் கடல் பின்வாங்கி ‘நிலம் தரு திருவில் பாண்டியன்’ ஆனது போல,பல கதைகளை எழுதினர் எஞ்சினீயரிங் விஷயங்கள், அதி அற்புத மனித சாதனைகளை  அதிசயங்களாக காட்டினர். அதாவது பழங்காலத்திலிப்படி மறைபொருளில் பேசுவது வழக்கம் அதைப் புரிந்து கொள்ளாமல் கடலைக் குடித்தார், காகம் மூலம் காவிரியை உண்டாக்கினார் என்றெல்லாம் புராணங்கள் செப்பத் துவங்கின.

  1. மிகப் பெரிய குழப்பம் ஒரே பெயரில் பலர் ஆண்டதால் ஏற்பட்டது. மூன்று தசரதர்கள், ரிக் வேதத்தில் வரும் பல மநுக்கள், சர்யாதி, யயாதி போன்ற பெயரில் பல காலங்களில் பல மன்னர்கள் இருந்ததைப் புரிந்துகொள்ளாமல் ‘இவர் அவரே’, ‘அவர் இவரே’ என்று பகர்ந்து குட்டை யைக் குழப்பினர். துருக்கி-இராக் பகுதியை ஒரு தசரதன் கி.மு 1400ல் ஆண்டதை குயூனிபார்ம் களிமண் கல்வெட்டுகள் காட்டுகின்றன. ராமாயண தசரதனை நாம் அறிவோம்; அசோக சக்ரவர்த்தியின் பேரன் பெயரும் தசரதனே. இப்படிப் பல பெயர்கள் வந்தவுடன் கதை சொல்லுவோர் அறியாமை காரணமாக புலம்பினர்; வைவஸ்வத மநு– ஒரு மன்னன். மநு சம்வரணி– வெறும் கிராமத் தலைவன்; இருவர் பெயரும் ரிக் வேதத்தில் வருகின்றன. மநு சம்வரணியின் மகன் நாபானேதிஷ்டா. அவனை யார் மகன் என்ன ஜாதி என்றெல்லாம் பிற்காலப் புராணங்கள் புதுக்கதைகளை புகன்றன. இது ஒரு எடுத்துக் காட்டுதான்; தமிழ் இலக்கியத்திலும் பல கபிலர்கள், பல அகஸ்தியர்கள் உள்ளனர். ஆறு அவ்வையார்கள் இருக்கின்றனர். நாம் இக்காலத்திலேயே குழம்பினால் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றில் குழப்பம் உண்டாவது இயல்பே.

 

வசிஷ்டர், அகஸ்தியர் போன்றோர், பல கதைகளில் வருவர். அது கோத்திரப் பெயர். இந்திரன் என்றால் ‘மன்னன்’ ‘தலைவன்’ என்று பொருள். அதை எல்லாம் ஒரே ஆள் தலையில் கட்டிக் கதை எழுதினர். எல்லா வசிட்டர்களுக்கும் அருந்ததியை மனைவியாக காட்டினர். கற்புள்ளா எல்லோரும் அருந்ததிதானே!! சங்கத் தமிழ் இலக்கியத்திலேயே மன்னர் மனைவிகளை அருந்ததி என்று சங்கப் புலவர்கள் ஆறு இடங்களில் பாடினர். ஆகப் பெயர்க் குழப்பம் மஹா குழப்பத்தில் முடிந்தது.

 

 

சூரியன், சந்திரன், இந்திரன் ஆகிய பெயர்கள் இன்று வரை தென்கிழக்காசியா முழுதும், காஷ்மீர் வரை கண்டி வரையும் ஸம்ஸ்க்ருத்தில் உள்ளபடியே (தமிழர்களாலும் ) பயன் படுத்தப் படுகின்றன. அக்காலத்திலும் இப்படி உபயோகித்தனர். ஆனால் பௌராணிகர்கள், சுவை ஊட்டுவதற்காக, உண்மையான சந்திரனும் சூரியனும் மனிதனுடன் உறவாடியதாகப் பேசிவிட்டனர். இன்று ராஜேந்திரன் பாஸ்கரன் (சூரியன்) என்றால் நம் அலுவலக்த்தில் வேலை பார்க்கும் சக ஊழியர் என்று அறிவோம்; அந்தக் காலத்தில் உண்மையான சூரியன் வேத கால இந்திரன் என்றெல்லாம் எழுதிவிட்டனர் புராணங்களில். வேதங்களை ஆராய்ந்த முப்பது வெளி நாட்டு அறிஞர்களும் இன்று வரை ரிக் வேதம் குறிப்பிடுவது ஒரு இந்திரனையா, ‘ஒரு’ கடவுளையா, ‘ஒரு’ இயற்கைச் சக்தியையா என்று சொல்லவில்லை; சொல்லவும் முடியாது!

புராணங்கள் பெரிய கலைக் களஞ்சியங்கள்; உலகிலேயே மாபெரும் இலக்கியம்; பல லட்சம் பாக்களை   கொண்டவை; வராலாறும் பூகோளமும் பாடுபவை ஆராய வேண்டிய அற்புத பொக்கிஷம். தாவரவியல் அறிவியல்,விலங்கியல் , வறட்சி, பூகம்பம் முதலியன பற்றி அவற்றில் உள. பல லட்சம் பாக்களை  ஆராய நமக்கு ஒரு 100 ஆண்டு ஆயுள்  போதாதே! என்ன செய்வது!

 

  1. புராணங்கள்| Tamil and Vedas

tamilandvedas.com/tag/புராணங்கள்

Posts about புராணங்கள் written by Tamil and Vedas

  1. 18 புராணங்கள்| Tamil and Vedas

tamilandvedas.com/tag/18…

Posts about 18 புராணங்கள் written by Tamil and Vedas

 

 

–சுபம்–

 

அறிவியல் வியக்கும் இசை (Post No.5507)

WRITTEN BY S NAGARAJAN

Date: 5 October 2018

 

Time uploaded in London – 6-07 AM (British Summer Time)

 

Post No. 5507

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

டைரக்டர் திரு கே.பாக்யராஜ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் வார இதழ் பாக்யா. அதில் 5-10-2018 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு முப்பத்தி ஒன்றாம்) கட்டுரை                                

அறிவியல் வியக்கும் இசை                  

ச.நாகராஜன்                                   

இசையின் பெருமையையும் அருமையையும் அறிவியல் போற்றுவதைப் பல கட்டுரைகளில் இந்த தொடரில் கண்டுள்ளோம்.     இப்போது இன்னும் சில உண்மைகளை அறிவியல் தருகிறது. இசை உங்கள் செயல்திறனை பணிபுரியும் இடங்களில் அதிகரிக்கிறதா என்ற கேள்விக்கு விடையைக் கண்டுள்ளார் மியாமி பல்கலைக்கழகத்தில் உள்ள துணைப் பேராசிரியையான தெரஸா லிசியுக். (TeresaLesiuk).                                                                              

யார் இசையைக் கேட்கிறார்களோ அவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள வேலையை சீக்கிரமாகவும் மற்றவர்களை விட சிறந்த கருத்துக்களைக் கொண்டும் திறம்பட முடிக்கிறார்கள் என்பதே அவரது ஆய்வின் முடிவு.                         ஆனால்  சில வகையான இசை, உற்பத்தித் திறனை பாதிக்கவும் செய்கிறது. பணியிடத்தில் சளசளவென்று மற்றவர்கள் இடைவிடாது பேசிக் கொண்டிருந்தால் அருகில் இருக்கும் ஒருவரால் நன்கு வேலையில் கவனம் செலுத்த முடிவதில்லை. அதே போலவெ பாடல் வரிகள் கொண்ட இசையைக் கேட்டால் கவனம் சற்றுச் சிதறுகிறது. இசை ஒரு பேக் ரவுண்டாக இருந்து பங்கை ஆற்றும் போது அது சிறக்கிறது. அதுவே பல வரிகளைக் கொண்ட பாடலுடன் இருந்தால் பணிக்கும் பாடல் வரிகளுக்குமாக மனம் தாவுகிறது.

 

டாக்டர் ஹாக் (Dr Haake) என்ற பெண்மணி பணியிடங்களில் இசை கேட்பதை நன்கு ஆய்வு செய்துள்ளார்.   அவரது ஆய்வின் முடிவுகள் பல உண்மைகளை அறிவிக்கின்றன:               சிக்கலான இசை அமைப்புடைய இசை கவனத்தைச் சிதற அடிக்கும்.

பாடல் வரிகள் அதன் மெசேஜைக் கேட்கத் தூண்டுவதால் நமது சிந்தனைப் போக்கை மாற்றும். கவனத்தைத் திசை திருப்பும்.   ஒரு வேலையைச் செய்யும் போது இசையைக் கேட்டுக் கொண்டே செய்வது ஒருவருக்கு நன்கு பழக்கமாகி விட்டதென்றால் அது அவரைப் பொறுத்தவரையில் நல்லதையே செய்யும். ஆகவே இசை கேட்கும் பழக்க வழக்கமும் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது.

இசை ஒருவரின் மீது வலியத் திணிக்கப்பட்டால் அவரை அது மிகவும் பாதிக்கும். வேலையைச் செய்யவிடாது.

பொதுவாக எந்த வகை இசை நலம் பயக்கும் என்பதையும் ஆய்வு சுட்டிக் காட்டுகிறது.

பாரம்பரிய சங்கீதம் – கர்நாடக இசை போல உள்ளவையும், பாச், விவால்டி ஆகியோரின் இசையும் மனநிலையைச் சீராக்கி பணியிடத்தில் கவனக் குவிப்பை அதிகமாக்கும்.         இயற்கை தரும் இயல்பான இனிய ஓசைகள் மூளைத் திறனை அதிகரிக்கும். சலசலவென ஓடும் ஆற்றின் ஓசை, இலைகளின் அசைவில் எழும் ஓசை, மழை விழும் போது எழும் ஒலி, பறவைகளின் இனிய கானம் என இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

வீடியோ கேம் ம்யூசிக் என்பது இன்னொரு ரகம். இதில் உள்ள இசை அமைப்பு விசேஷமாக விளையாடும் திறனை அதிகரிப்பதற்காகவே கம்போஸ் செய்யப்படுகிறது.

இன்னொரு வகையான இசை ஆம்பியண்ட் மியூசிக் எனப்படும். பாரம்பரிய இசைக்குப் பதிலாக இதில் த்வனிக்கும் சூழ்நிலைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. வாத்திய இசையான இதில் மிக மெதுவான திருப்பித் திருப்பி வரும் மனதை வருடும் இதமான இசை ஒலி எழும்பும்.

இது தவிர, ஜாஸ், தியான இசை போன்றவையும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கேட்பதற்காக உள்ளன.                  இப்போது பிரபலமாகி இருக்கும் பிரபல பாடகர் டினி டெம்பா, “இசை உணர்ச்சியைத் தூண்டுகிறது. அத்துடன் மட்டுமல்ல, வெவ்வேறு மதம், இனம், நாடு ஆகியவற்றைக் கொண்ட ஒரு லட்சம் பேரை ஆண்பால் பெண்பால் பேதமின்றி ஒரே இடத்தில் சேர வைப்பது இசை தான். இதே போல அரிய காரியத்தை ஆற்ற வல்லவை மிகச் சில தான்” என்கிறார்.

இவர் (பிறப்பு 7-11-1988) லண்டனில் பிறந்து வளர்ந்தவர். இவரை இப்போது ப்ளிமத் பல்கலைக் கழகம், பேராசிரியர் எடுவார்டோ மிராண்டா தலைமையில் செய்யப்படும் ஒரு ஆய்விற்கு அழைத்துள்ளது. சோதனைக் கூடத்தில் உள்ள கட்டுப்பாடுகளுக்கு இணங்க இவர் இசையைக் கேட்க வேண்டும். இ.இ.ஜி கட்டுப்பாட்டிற்குள் வரும் போது இவரது மூளை இசை கேட்கும் சமயத்தில் என்ன மாறுதலை அடைகிறது என்பதைக் கண்டு பிடிப்பதே ஆய்வின் நோக்கம்.

இசை உணர்ச்சிகளைத் தூண்டும். ஒருவரை அழ வைக்கும்; குதூகலப்படுத்தும்; ஒருவருக்கு இன்பமயமான உணர்வுகளைத் தூண்டும் என்பனவற்றில் விஞ்ஞானியும் இசை வல்லுநரும் ஒரே கருத்தைக் கொண்டுள்ளனர். என்றாலும் குறிப்பிட்ட ஒரு இசையைக் கேட்கும் போது உள்ளம் கிளர்ச்சி அடைகிறதா, அமைதியை உணர்கிறதா, ஆனந்தப் படுகிறதா, துயரமடைகிறதா என்பனவற்றைப் பற்றி ப்ளிமத் பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தும்.    இப்படிப்பட்ட இசை கேட்கும் நேரத்தில் மூளை எப்படித் தோற்றமளிக்கிறது என்பதும் காணப்படும்.

இறுதியாக ஆய்வின் முடிவுகளை வைத்து இசையை ஒரு சிகிச்சை முறையாக அறிவியல் ரீதியில் அறிமுகப்படுத்துவதும் தீர ஆலோசிக்கப்படும். இந்த இசை தெராபி வந்தால் அது ஆயிரக்கணக்கானோருக்கு நல்ல மன ஆரோக்கியத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் குறைந்த செலவில் தரும் என்பதில் ஐயமில்லை!

ஆய்வு முடிவுகள் எதை எப்படிச் சொன்னாலும் கூட ஒலியே இல்லாத அமைதியான இடம் பணிக்கு மிக சாதகமான இடம் என்பதில் ஐயமே இல்லை!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

ஜோசெலின் பெல் பர்னெல் (தோற்றம் 15-7-1943- Jocelyn Bell Burnell) வட அயர்லாந்தைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி. முதலில் இந்தப் பெண்மணி தான் ரேடியோ பல்சரைக் (Radio Pulsar) கண்டுபிடித்தார். ஆனால் 1974ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு இவருக்குத் தரப்படவில்லை. பெல்லின் மேற்பார்வையாளராக இருந்த ஆண்டனி ஹீவிஷுக்குப் பரிசு அளிக்கப்பட்டது. இது அப்போதே பலராலும் கண்டிக்கப்பட்டது. என்றாலும் கூட பெல் அமைதி காத்தார். பின்னால் பல விருதுகளை இவர் பெற்றார். என்றாலும் கூட வட்டியும் முதலும் சேர்த்துக் கிடைத்தது போல 2018க்கான ஸ்பெஷல் ப்ரேக்த்ரூ விருது (Special Breakthrough Prize in Fundamental Physics) இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் பரிசுத் தொகை 23 லட்சம் பவுண்டுகள் ஆகும். இந்தப் பெரும் தொகையை அவர் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், சிறுபான்மை இனத்தினரின் முன்னேற்றத்திற்கும், இயற்பியலில் ஆர்வம் கொண்டு ஆய்வுக்காக அகதிகளாக வரும் மாணவர்களுக்கும் உதவும் வகையில் நன்கொடையாக அளித்து விட்டார். பெரிய கண்டுபிடிப்பிற்காக இவரைப் பாராட்டுவதா, அல்லது இவரது பெரிய மனத்திற்காக பாராட்டுவதா? இரண்டிற்காகவும் இரு முறை இவரைப் பாராட்டுவோம்!

XXXX SUBHAM XXXX

வார விடுமுறையைக் கண்டுபிடித்த இந்துக்கள்! மநு நீதி நூல்- PART 28 (Post No.5502)

 

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 3 October 2018

 

Time uploaded in London –8-50 am  (British Summer Time)

 

Post No. 5502

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

மநு நீதி நூல்- PART 28

MANAVA DHARMA SASTRA FOURTH CHAPTER CONTINUED……………..

வார விடுமுறையைக் கண்டுபிடித்த இந்துக்கள்! (Post No.5502)

மநு நீதி நூலின் நாலாவது அத்தியாயத்திலுள்ள சுவையான விஷயங்களை முதலில் பகிர்வேன்; முதல் 26 கட்டுரைகளில் நிறைய அதிசயங்களைக் கண்டோம்.

 

பள்ளிக்கூட மாணவர்களுக்கு வாரம்தோறும் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை என்று கிறிஸ்தவ நாடுகள் அமல் படுத்திய வழக்கத்தை இன்று கடைப் பிடிக்கிறோம். ஆனால் கிறிஸ்துவுக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழந்த, ரிக் வேதம் புகழும், ஸரஸ்வதி நதி பற்றிக் குறிப்பிடும், மநு தர்ம சாஸ்திரமோ மாதத்துக்கு குறைந்தது ஆறு நாட்கள் விடுமுறையை அமல் படுத்தியது. சில மாதங்களில் ஆறுக்கும் மேலான நாட்கள் விடுமுறை. அதிசயத்திலும் மஹா அதிசயம்– 4000 ஆண்டுகளாக இன்று வரை வேத பாடசாலைகள் இதைப் பின்பற்றி வருகின்றன.

 

மாதத்தில் இரண்டு அஷ்டமிக்கள்

மாதத்தில் இரண்டு சதுர்தஸிக்கள்

மாதத்தில் பௌர்ணமி, அமாவாஸை

 

முதலியன வேதம்படிக்க விலக்கப்பட்ட நாட்கள்.

 

இந்தப் பகுதியில் மநு ஒரு விஞ்ஞானி என்பதையும் காட்டுகிறார். அவர் பெரிய ஸவுண்ட் (SOUND ENGINEER) எஞ்சினீயர். இடி இடித்தால், கன மழை பெய்தால், பூகம்பம் ஏற்பட்டால், விண்கற்கள் விழுந்தால் 24 மணி நேரம் பள்ளி விடுமுறை (SLOKAS 103, 104, 105). ஆதாவது வேத அத்தியயனம் கிடையாது.

 

இன்று லண்டன், நியூயார்க் முதலிய இடங்களில் இருந்து வரும் வானவியல் (ASTRONOMY MAGAZINES) பத்திரிக்கையில் மாதம் தோறும் எந்த நாள் இரவில் வானத்தின் எந்தப்பகுதியில் விண்கற்கள் வீழ்ச்சி (METEORITE SHOWERS) வரும் என்று அட்டவணை தருகிறார்கள். பூமியில் ஒவ்வொரு நிமிடமும் டன் கணக்கில் விண்கற்கள் விழுகின்றன. அவற்றில் 99 சதவிகிதம் காற்று மண்டலத்திலேயே பஸ்மமாகி (சாம்பல்) விடும்.சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் பூகம்பம், விண்கல் வீழ்ச்சி முதலியவை குறித்துப் பேசியிருப்பது, அதுவும் சட்டப் புத்தகத்தில் பேசியிருப்பது, ஆச்சர்யமான விஷயம். அவருக்குத் தெரியாத விஷயமே இல்லை போலும்.

அது மட்டுமல்ல; பிராஹ்மணன், பாம்பு, க்ஷத்ரியனைப் (SLOKA 135, 136) பகைக்காதே- உன்னை அடியோடு அழித்து விடுவர் என்று எச்சரிக்கிறார்.

நல்லது செய்பவனுக்கு கெடுதியே வராது என்று (SLOKA 146) கண்ண பிரான் பகவத் கீதையில் (6-40) மொழிந்ததை இவரும் செப்புகிறார்.

 

சில மிருகங்கள் (SLOKA 113)  குறுக்கே போனால் வேத அத்தியனம் கிடையாது என்றும் உரைக்கிறார். பூனை, பாம்பு, தவளை உள்பட. இது அந்தக் கால (மூட) நம்பிக்கை போலும்.

 

சில மிருகங்களின் ஒலி கேட்டாலும் வேதப் படிப்பு ‘ஸ்டாப்’!

 

சுடுகாடு, தீட்டு விஷயங்களைச் சொல்லிவிட்டு, அந்தக் காலங்களில் வேத படிக்காதே என்று ஆணை இடுகிறார்

 

இன்றைய பகுதியில் எந்தக்  காலங்களில் எப்படி வேதம் படிக்க வேண்டும் என்று இயம்புகிறார்.

 

அது மட்டுமல்ல மாமிசம் (SLOKA 131) சாப்பிட்டால் வேதம் படிக்காதே என்பார். காரணம்- அந்தக் காலத்தில் மூன்று ஜாதிகள் வேதம் பயின்றன.

வாஹன சவாரியின் (SLOKA 120) போது வேதம் சொல்லக் கூடாது என்று சொன்னவர் குதிரை, ஒட்டக சவாரியுடன் கடற் பயணத்தையும் குறிப்பிடுகிறார். ஆனால் பிராஹ்மணர்கள் வெளி நாடு செல்ல மநு தடை போட்டதையும், தமிழ்ப் பெண்கள் வெளி நாடு செல்ல தொல்காப்பியன் தடை போட்டதையும் முன்னரே எழுதியுள்ளேன். ஆகவே மநு சொல்லுவது மூன்று ஜாதியினருக்கு என்பது என் ஊகம்.

 

வேதம் என்பது ஒலி அடிப்படையில் அமைந்த அறிவியல் நூல். ஆகையால் அவர் பல சப்தங்கள், அதிர்வுகள் ஏற்படுகையில் வேதத்தைப் பயிலாதே என்று சொல்லுகிறார்.

 

ஒரு (SLOKA 121) ஸ்லோகத்தில் ரிக், யஜூர், சாம வேதம் ஆகிய மூன்றும் முறையே தேவர்கள், மனிதர்கள், பித்ருக்கள் (இறந்த முன்னோர்) ஆகியோருக்கானவை என்ற புதுக் கருத்தை  முன்வைக்கிறார்.

ஸ்லோகம் 138 மிகவும் பிரஸித்தமான ஸ்லோகம்

உண்மையச் சொல்; இனிமயானதை மட்டும் சொல்; உண்மையே ஆனாலும் கசப்பானதைச் சொல்லாதே

 

இப்படிப் பல சுவையான விஷயங்களை கீழே உள்ள ஸ்லோகங்களில் காண்க. நாலாவது அத்தியாயத்திலுள்ள வேறு அதிசயங்களை அடுத்த கட்டுரையில் நோக்குவோம்

 

கீழேயுள்ள இணைப்புகளைக் காண்க—

 

 

 

 

 

 

–subham-

இன்கா நாகரீக அதிசய முடிச்சு மொழி – பகுதி 2 (Post No.5501)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 3 October 2018

 

Time uploaded in London –7-27 am  (British Summer Time)

 

Post No. 5501

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

நேற்று வெளியான முதல் பகுதியில் தென் அமெரிக்காவின் பெரு, சிலி நாடுகளில் உள்ள, சூரிய தேவனை வழிபடும், இன்கா நாகரீகத்தின் (Inca Civilization) அற்புதமான நிர்வகத் திறன் பற்றியும் முடிச்சு மொழி இந்தியாவின் ஸரஸ்வதி- ஸிந்து சமவெளி நாகரீகத்தின் புரியாத எழுத்தின் புதிரை விடுவிக்க எப்படி உதவலாம் என்றும் விளக்கினேன்.

இன்கா இளவரசிக்கும் ஸ்பெயின் நாட்டு ஆக்ரமிப்பாளனுக்கும் பிறந்த கவிஞர் கார்ஸிலாஸோ டெ லா வேகா 1609-ம் ஆண்டில் முடிச்சு மொழியின் மூலம் அவர்கள் என்ன என்ன எழுதினர் என்று விளக்கியிருந்தார். அவர் ஒரு துப்புத் தகவல் கொடுத்திருந்தார். இன்காக்கள் கயிற்றில் போடும் முடிச்சு மூலம், அவர்கள் போட்ட சண்டைகள், வாதப் பிரதிவாதங்கள், சம்பாஷணைகள், வரி விதிப்பு வசூல், நிலுவை விவரம், யார் யார் வந்து மன்னர்களைப் பார்த்தனர் என்றும் எழுதிவைத்ததாக 400 ஆண்டுகளுக்கு முன் சொல்லியிருந்தார். முடிச்சுகளில் எண்களைக் காண்பது எளிதாக இருந்தது. ஆனால் வரலாற்றைக் காண்பது இதுவரை புதிராக இருந்தது.

 

இப்பொழுது ‘கிணற்றில் கல் விழுந்துவிட்டது’- புதிரும் குதிருக்குள் இருந்து வெளியே வந்துவிட்டது!

அவர் பல முரணான தகவல்களைக் கூறியிருந்ததால் இதுவும் ஒரு ‘கப்ஸா’வோ என்று கருதியோரும் உண்டு. ஆயினும் கிடைத்த முடிச்சுக் கயிறுகளில் மூன்றில் ஒரு பகுதி முடிச்சுக் கயிறுகள் வித்தியாசமாக இருந்தன.

 

1920ம் ஆண்டில் நியூயார்க்கிலுள்ள அமெரிக்க இயற்கை வரலாற்றுக் காட்சியகத்தில் உள்ள முடிச்சுகளை ஒரு மானுடவியல் வல்லுநர் ஆராயத் தொடங்கியதிலிருந்து ஆர்வம் பிறந்தது. ஒரு கயிற்றில் ஒரு முடிச்சு இருக்கும் உயரம் அது 10 அல்லது 100 அல்லது 1000 என்று காட்டுவதை (ரிக் வேதத்தில் உள்ள டெஸிமல் ஸிஸ்டம்/ தஸாம்ச முறை) அவர் கண்டுபிடித்தார்.

 

அது சரி, 76 என்று இருப்பதாக வைத்துக்கொள்வோம். அது என்ன 76? என்று தெரியவில்லையே என்று ஹர்வர்ட் பல்கலைக்கழக காரி உர்டன் (Gary Urton) 25 ஆண்டுகளாக ஆராய்ந்தார்.

 

அவர் உலகம் முழுதும் மியூஸியங்கள், தனியார்களிடம் உள்ள 900 கீ பூ (Khipu) முடிச்சுக் கயிறுகளைப் படம் பிடித்தார்; பட்டியலிட்டார்; நுணுகி ஆராய்ந்தார். அப்போது அவருக்கு ஒரு விஷயம் புரிந்தது. முடிச்சுப் போடும் திசை, முடிச்சின் தன்மை, என்ன வண்ன நூலில் முடிச்சு போடப்பட்டிருக்கிறது என்பதெல்லாம் முக்கியம் என்று தெரிந்தது. 2012ஆம் ஆண்டு அவருக்கு ஞானோதயம் பிறந்தது. ஒரு முடிச்சு இருக்கும் திசையை வைத்து அந்தப் பணம் வசூலிக்கப்பட்டதா இல்லையா என்று அவர்கள் ‘எழுதி’ இருந்தது விளங்கியது. இடது பக்கம் முடிச்சு முடிகிறதா, வலது பக்கம் முடிச்சு முடிகிறதா என்பதெல்லாம் ஒரு செய்தி! ஆக 201ம் ஆண்டில், இதில் கொடுத்தவரின் தகுதி  அந்தஸ்து, அவர் பெயர் எல்லாம் இருப்பதை உணர்ந்தார்.

2016 ஆம் ஆண்டில் மேலும் புதியன கண்டார். அவருடைய அதிர்ஷ்டம். 400 ஆண்டுகளுக்கு முன்னர் ஆறு இன/ஜதி மக்களிடையே வசூலித்த பணம் பற்றிய விவரமும் (ஸ்பானிய மொழியில்) ஆறு முடிச்சுக் கயிறுகளும் இருந்தன. அதன் பின் 132 கயிறுகளை ஆரய்ந்ததில் அக்காலத்தில் ஸ்பானிய ஆக்ரமிப்பாளர் எழுதிய விஷயங்களும் முடிச்சுகளும்  ஒரே விஷயத்தைச் செப்பின. 132 பேர் செலுத்திய வரிப்பணம் பற்றிய தகவல் அவை.

 

அவரிடம் ஒரு மாணவர் படித்து வந்தார். அவர் பெயர் மான்னி மேற்றானோ. அவர் இன்கா ஜாதி. ஆனால் ஆக்ரமிப்பாளரின் ஸ்பானிய மொழி பேசுபவர். ஆக இன்னும் நன்றாக விளங்கியது. அவர் பெரிய முடிச்சவிக்கி!

 

அந்தக் கயிறுகளில் உள்ள பாணி (ஸ்டைல்/ பேட்டர்ன்) என்ன இனம் என்று காட்டுவதைக் காண்பித்தார்.  இதை வாஷிங்டன் பல்கலைக் கழக கீ பூ முடிச்சு ஆராய்ச்சியளார் பிடித்துக் கொண்டு, இதில் கதை, வரலாறுகளும் இருக்க முடியும் என்ற கோணத்தில் ஆராய்ந்தார். அவரைப் போலவே பிரிட்டனிலுள்ள செயின்ட் ஆன்றூஸ் பல்கலைக் கழக  ஸபீன் ஹைலண்டும் ஆராய்கிறார். அவர் தொலை தூர தென் அமெரிக்க கிராமங்களுக்குச் சென்று படம் எடுத்தார். கீ பூ பயன்படுத்துவோரைப் பேட்டி கண்டார். பெரு நாட்டின் லிமா நகரிலுள்ள ஒரு பெண்மணி தொலைதூர கிராமத்தில் ஒரு சர்ச்சில் பாதாள அறையில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள கீ பூ – கயிறுகள் பற்றித் தகவல் கொடுத்தார்.

பல மாதங்களுக்கு நடந்த பேச்சு வார்த்தையின் முடிவில் அந்த கீ பூ முடிச்சுக் கயிறுகளை தரிசிக்கும் பாக்கியம் அவருக்குக் கிட்டியது. ஆனால் அந்த இனத்தின் தலைவர் ஒரு சமூக விழாவில் கலந்துகொள்ள வேறு ஒரு ஊருக்குப் போவதால் இரண்டு நாட்களுக்குள் என்ன செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யலாம என்ற ஆணை பிறந்தது.

ஹைலண்டும் விடாப்பிடியாக அதைப் பல கோணங்களில் படம் பிடித்தார். ஒவ்வொரு பிரதானக் கயிற்றிலிருன்டுந்து பல சின்னக் கயிறுகள் தொங்குவதையும் அவைகளில் முப்பரிமாணத்தில் தகவல் கோர்க்கப்பட்டிருப்பதையும் அறிந்தார். வண்ணங்கள் வெவ்வேறு; முடிச்சின் சிக்கல்கள் வெவ்வேறு; பலவிதப் பிராணிகளின் ரோமமங்கள் வேறு.

 

அந்தக் கிராம மக்கள் கீ பூ என்பது ‘பிராணிகளின் மொழி’ என்று கூறியதற்கு அவருக்கு விளக்கமும் கிடைத்தது. 95 வகைகளைக் கண்டவுடன் அவற்றில் சில எழுத்துக்களையோ சொற்களையோ

குறிக்கின்றன என்று அறிந்தார். இரண்டு கலர் ரிப்பன்கள் கட்டப்பட்ட கயிறு இரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தது என்றவுடன் இவர் ஊகத்தில் அதன் பெயரைக் கண்டுபிடித்தார். கிராம மக்களுடன் பேசியபோது அப்படி ஒரு இனம் இருப்பது உண்மையே என்றும் அறிந்தார்.

சில பட எழுத்துகள் போன்றவை; சில அசைச் சொற்கள் (Ideographic, syllbic) உடையவை; சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் வண்ணங்களும் பின்னப்பட்ட பாணிகளும், முடிச்சின் கன பரிமாணமும் பல எழுத்துக்களையும் சொற்களையும் காட்டின. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு பெரு நாட்டில் தங்கி ஆராயப் போகிறார். ஸ்பானியப் படை எடுப்பாளர் அந்தக் காலத்திலேயே (1530ம் ஆண்டு) கீ பூ மொழியைக் கற்றுக்கொள்ளத் துவங்கியதால் அவர்கள் ஸ்பானிய மொழியில் எழுதியதையும் முடிச்சு மொழியையும் ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது. மேலும் பல புதிய விஷயங்கள் கிடைக்க வாய்ப்புகள் உளது.

இது போல இந்தியர்களும் ஆரிய-திராவிட வாதத்தைக் குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்து விட்டு புதிய கண்ணோட்டத்தில் ஸரஸ்வதி- சிந்து சமவெளி நாகரீகத்தை ஆராய்தல் அவசியத் தேவை ஆகும்.

 

நியூ ஸைன்டிஸ்ட் New Scientist வார இதழில் ஆங்கில மூலத்தில் முழு விவரமும் உளது; கண்டு மகிழ்க.

 

–சுபம்–

ENGLISH AND TAMIL VERSION OF ‘AATHICHUUDI’ BY TAMIL POETESS AVVAIYAAR (Post No.5489)

Compiled by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 29 September 2018

 

Time uploaded in London – 14-48 (British Summer Time)

 

Post No. 5489

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

ஆத்திச்சூடி- தமிழிலும் ஆங்கிலத்திலும்

WHO IS AVVAIYAR?

Avvaiyaar was a great Tamil poetess. She is considered the grand mother of Tamil literature. Avvai means an old lady of wit and wisdom. There is no Tamil home where her poems are not sung or known. Scholars believe that there were three to six poetesses with the same name. But the style of the language shows that there were at least three Avvaiyars. The current set of adages in Athichudi was composed by a poetess with that name in the middle ages.

She is author of many books and lot of verses in Sangam age. She commanded a great influence over Tamil kings.

 

WHAT IS ATHICHUDI?

Tamil children in the primary school are taught her Athichudi first. It is set of moral maxims in Tamil alphabetical order. The rhyme and the simple language make children memorise them quickly and easily. She was a great champion of the poor lowly. She was a friend, philosopher and guide to many including the kings.

 

 

 

TAMIL VERSION IS TAKEN FROM PROJECT MADURAI; ENGLISH VERSION FROM REVWINFRED ( WITH SLIGHT CHANGES DONE BY ME)

கடவுள் வாழ்த்து

PRAYER

LET US WORSHIP AND PRAISE CONTINUALLY THE GOD WHO IS DEAR TO THAT BEING WHO WEARS A GARLAND MADE UP OF THE FLOWERS OF THE ATTI TREE (GANESA IS INVOKED)

 

ஆத்திச்சூடி அமர்ந்த தேவனை

ஏத்தி ஏத்தித் தொழுவோம்  யாமே

LET US WORSHIP AND PRAISE CONSTANTLY THE GOD WHO SITS IN STATE WEARING A GARLAND MADE UP OF THE FLOWERS OF THE ATTI TREE (LORD SIVA IS INVOKED)

 

உயிர் வருக்கம்

 

அறம் செய விரும்பு

1.DESIRE TO DO VIRTUE / DESIRE TO DO CHARITY.

 

ஆறுவது சினம்

2.ANGER SHOULD BE SUBDUED.

 

இயல்வது கரவேல்

3.DO NOT CONCEAL YOUR MEANS/ DO NOT REFUSE HELP WHERE IT IS PRACTICABLE.

 

ஈவது விலக்கேல்

4.DO NOT PREVENT GIVING ALMS.

உடையது விளம்பேல்

5.DO NOT BOAST OF YOUR POSSESSIONS/ DO NOT SPEAK IN PRAISE OF YOUR GREATNESS.

 

ஊக்கமது கைவிடேல்

6.DO NOT LOSE YOUR COURAGE/ CEASE NOT TO PERSEVERE

 

எண் எழுத்து இகழேல்

7.DO NOT DESPISE NUMBERS AND LETTERS/ DO NOT NEGLECT THE STUDY OF ARITHMETIC AND GRAMMAR

 

ஏற்பது இகழ்ச்சி

8.BEGGING IS DISGRACEFUL

ஐயமிட்டு உண்

9.GIVE ALMS AND THEN EAT

 

ஒப்புரவு ஒழுகு

10.CONDUCT YOURSELF CONSISTENTLY/ FOLLOW ESTABLISHED CUSTOMS

 

ஓதுவது ஒழியேல்

11.CEASE NOT TO LEARN/ DO NOT NEGLECT THE STUDY OF THE VEDAS

 

12.ஔவியம் பேசேல்

12.DO NOT SPEAK ENVIOUSLY

 

13.அஃகம் சுருக்கேல்

13.DO NOT RAISE THE PRICE OF GRAIN/ DO NOT ALLOW YOUR KNOWLEDGE TO DIMINISH/ DO NOT ALLOW YOUR RELATIVES TO DIMINISH

XXX

 

உயிர்மெய் வருக்கம்

 

கண்டு ஒன்று சொல்லேல்

14.DO NOT SAY ONE THING AFTER SEEING ANOTHER/ DO NOT SAY ONE THING TO A MAN’S FACE AND ANOTHER BEHIND HIS BACK

 

ஙப் போல் வளை

15.BE UNITED TO YOUR RELATIVES LIKE THE LETTER OR BEND LIKE ‘NGA’

THERE ARE FOUR DIFFERENT READINGS FOR THIS SAYING.

LIKE THE SHAPE OF THE LETTER ’ ங ‘ SURROUND AND PROTECT YOUR RELATIVES.

DRAW UP YOUR FORCES ENCOMPASSING THE ENEMY IN THE FORM OF LETTER ‘ ங ‘

 

STAND LIKE THE LETTER ங ‘ ‘ AND FIGHT I.E. AS THE CONSONANT ‘ ங ‘ TAKES AN INTERMEDIATE POSITION IN WORDS TAKE A STAND BETWEEN THE VAN AND REAR OF YOUR ARMY AND FIGHT.

 

BUILD THE ENTRANCE OF THE FORT IN WINDINGS LIKE THE LETTER ங ‘ ‘

 

சனி நீராடு

16.BATHE ON SATURDAY (WITH OIL)’ BATHE THE BODY IN SPRING WATER, FIRST BATHING THE DEFILED MIND IN TRUTH.

 

ஞயம்பட உரை

17.SPEAK SO AS TO GIVE PLEASURE

 

இடம்பட வீடு இடேல்

18.DO NOT BUILD TOO LARGE A HOUSE

 

இணக்கம் அறிந்து இணங்கு

19.BE FRIENDLY ON EXPERIENCING FRIENDSHIP

தந்தை தாய் பேண்

20.PROTECT YOUR FATHER AND MOTHER

 

நன்றி மறவேல்

21.FORGET NOT A BENEFIT

 

பருவத்தே பயிர் செய்

22.SOW IN DUE SEASON

 

மன்று/ மண்  பறித்து உண்ணேல்

23.DO NOT LIVE BY LAND WRESTED FROM YOUR NEIGHBOUR/ DO NOT GAIN A LIVELIHOOD BY MEANS OF BRIBES TAKEN IN A COURT OF JUSTICE

 

இயல்பு அலாதன செயேல்

24.DO NO IMPROPER ACTION/ DO NOT WANDER ABOUT DELUDED BY THE SENSES

 

அரவம் ஆட்டேல்

25.DO NOT PLAY WITH A SNAKE/ DO NOT SPEAK VAINLY

இலவம் பஞ்சில் துயில்

26.SLEEP ON A MATTRESS OF SILK COTTON

 

வஞ்சகம் பேசேல்

27.DO NOT SPEAK DECEITFULLY

அழகு அலாதன செயேல்

28.DO NO DISGRACEFUL ACTION

 

இளமையில் கல்

29.LEARN FROM CHILDHOOD

 

அரனை மறவேல்

30.FORGET NOT YOUR DUTY (CHARITABLE ACTIONS ARE INTENDED)/

DONT FORGET (WORSHIP OF) SHIVA

 

அனந்தல் ஆடேல்

31.DO NOT SLEEP TOO LONG

 

XXXXXXXXXXXX

 

ககர வருக்கம்

கடிவது மற

32.AVOID UNKIND WORDS

 

காப்பது விரதம்

33.FASTING MUST BE OBSERVED

 

கிழமைப்பட வாழ்

34.LIVE ACCORDING TO THE RULES OF PROPRIETY

 

கீழ்மை அகற்று

35.AVOID BASE ACTIONS

 

குணமது கைவிடேல்

36.CEASE NOT TO SHOW GOOD DISPOSITIONS

 

கூடிப் பிரியேல்

37.DO NOT SEPARATE FROM YOUR FRIENDS

 

கெடுப்பது ஒழி

38.AVOID DOING INJURY

 

கேள்வி முயல்

39.BE DILIGENT IN STUDY

 

கைவினை கரவேல்

40.DO NOT CONCEAL YOUR PROFESSION

 

கொள்ளை விரும்பேல்

41.DO NOT DESIRE TO PLUNDER

 

கோதாட்டு ஒழி

42.ABANDON SINFUL AMUSEMENTS

 

கௌவை அகற்று

43.AVOID GETTING BAD NAME

 

XXXXXXXXXXXXXXX

 

சகர வருக்கம்

சக்கர நெறி நில்

44.STAND IN THE PATH OF JUSTICE

 

சான்றோர் இனத்து இரு

45.ASSOCIATE WITH THE WISE/ ASSOCIATE WITH THE GREAT SO AS TO BE PROTECTED FROM YOUR ENEMIES

 

சித்திரம் பேசேல்

46.DO NOT SPEAK HYPOCRITICALLY

 

சீர்மை மறவேல்

47.FORGET NOT THAT WHICH IS EXCELLENT

 

சுளிக்கச் சொல்லேல்

48.SPEAK NOT IN A PROVOKING MATTER

 

சூது விரும்பேல்

49.DO NOT LOVE GAMBLING

 

செய்வன திருந்தச் செய்

50.WHAT YOU DO, DO WELL

சேரிடம் அறிந்து சேர்

51.HAVING FOUND A FIT PLACE, GO TO IT/ DISCRIMINATE IN YOUR CHOISE OF PLACES

 

சையெனத் திரியேல்

52.DO NOT BEHAVE SO THAT PEOPLE MAY SAY FIE

 

சொற் சோர்வு படேல்

53.DO NOT SPEAK SO AS TO BE FOUND FAULT WITH/ DO NOT SPEAK INDISTINCTLY

 

சோம்பித் திரியேல்

54.DO NOT WANDER ABOUT IN IDLENESS

XXXXXXXXXXXXXXXX

 

தகர வருக்கம்

  1. தக்கோன் எனத் திரி.

55.ACT SO AS TO BE CALLED A WORTHY PERSON

 

  1. தானமது விரும்பு.

56.DESIRE TO BESTOW GIFTS

 

  1. திருமாலுக்கு அடிமை செய்

57.SERVE VISHNU

 

  1. தீவினை அகற்று.
    58.PUT AWAY SINFUL ACTIONS

.
59. துன்பத்திற்கு இடம் கொடேல்.

59.DO NOT GIVE WAY TO TROUBLE

 

  1. தூக்கி வினை செய்.

60.FIRST CONSIDER, THEN ACT

 

  1. தெய்வம் இகழேல்.

61.DO NOT BLASPHEME GOD.

  1. தேசத்தோடு ஒட்டி வாழ்.

62.LIVE AS YOUR COUNTRYMEN DO

  1. தையல் சொல் கேளேல்.

63.DO NOT LISTEN TO THE WORDS OF WOMEN

 

  1. தொன்மை மறவேல்.

64.FORGET NOT OLD FRIENDS/ DO NOT FORGET ANCIENT

 

  1. தோற்பன தொடரேல்

65.DO NOT PURSUE HAZARDUOUS UNDERTAKINGS/ DO NOT BEGIN TO DO THOSE THINGS IN WHICH YOU WILL FAIL

 

XXX

நகர வருக்கம் 


66. நன்மை கடைப்பிடி.
66.HOLD TO THE LAST THAT WHICH IS GOOD

  1. நாடு ஒப்பன செய்.
    67.DO AS YOUR COUNTRYMEN APPROVE
  2. நிலையில் பிரியேல்.
    68.DO NOT QUIT YOUR STATION/ KEEP UP YOUR RANK
  3. நீர் விளையாடேல்.
    69.DO NOT PLAY IN WATER
  4. நுண்மை நுகரேல்.
    70.DO NOT EAT DAINTIES/BR NOT NICE IN FOOD
  5. நூல் பல கல்.
    71.STUDY MANY BOOKS
  6. நெற்பயிர் விளைவு செய்.
    72.CULTIVATE RICE
  7. நேர்பட ஒழுகு.
    73.WALK UPRIGHTLY

 

 

  1. நைவினை நணுகேல்.
    74.DO NOT GO NEAR WHAT IS DANGEROUS/ DO NOT FOLLOW WHAT IS DESTRUCTIVE
  2. நொய்ய உரையேல்.
    75.DO NOT SPEAK MEAN WORDS

 

  1. நோய்க்கு இடம் கொடேல்.

76.DO NOT GIVE OCCASION TO DISEASE

XXX

 

பகர வருக்கம் 


  1. பழிப்பன பகரேல்.
    77.SPEAK NOT INSULTINGLY

 

  1. பாம்பொடு பழகேல்.

78.DO NOT BE FAMILIAR WITH A PERSON DANGEROUS AS A SNAKE/ DO NOT BE FAMILIAR WITH A SNAKE

  1. பிழைபடச் சொல்லேல்.

79.DO NOT SPEAK WRONGLY

  1. பீடு பெற நில்.
  2. 80. STRIVE TO OBTAIN GREATNESS

 

  1. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்.

81.LIVE SO AS TO PROTECT THOSE WHO PRAISE YOU/ LIVE SO AS TO GET A GREAT NAME

  1. பூமி திருத்தி உண்.

82.TILL THE GROUND AND EAT/ DESIRE LAND

  1. பெரியாரைத் துணைக் கொள்.
    83.LOOK TO THE GREAT FOR HELP
  2. பேதைமை அகற்று.

84.PUT AWAY IGNORANCE

  1. பையலோடு இணங்கேல்.

85.DO NOT ASSOCIATE WITH CHILDREN

  1. பொருள்தனைப் போற்றி வாழ்.
    86.TAKE CARE OF YOR PROPERTY AND LIVE
  2. போர்த் தொழில் புரியேல்.

87.SHUN WHAT TENDS TO STRIFE

மகர வருக்கம்
88. மனம் தடுமாறேல்.

88.DO NOT BE TROUBLED IN MIND

  1. மாற்றானுக்கு இடம் கொடேல்.

89.DO NOT GIVE PLACE TO YOUR ADVERSARY

  1. மிகைபடச் சொல்லேல்.

90.DO NOT SPEAK TOO MUCH

  1. மீதூண் விரும்பேல்.

91.BE NOT GLUTTONOUS

  1. முனைமுகத்து நில்லேல்.
    92.DO NOT STAND IN FRONT OF THE BATTLE
  2. மூர்க்கரோடு இணங்கேல்.
    93.DO NOT ASSOCIATE WITH THE OBSTINATE/ DO NOT FRET AND RUN AWAY WHEN PUNISHED BY YOUR TEACHER

 

  1. மெல்லி நல்லாள் தோள்சேர்.

94.LIVE WITH YOUR WIFE/ BE JOINED TO WIFE’S SHOULDERS

  1. மேன்மக்கள் சொல் கேள்.
    95.LISTEN TO THE WORDS OF THE WISE

 

  1. மை விழியார் மனை அகல்.
    96.SHUN THE HOUSE OF A HARLOT/

AVOID THE HOUSE OF THOSE WHO BLACKEN LOWER EYELIDS

 

  1. மொழிவது அற மொழி.
    97.WHAY YOU SAY, SAY RIGHTLY

 

  1. மோகத்தை முனி.

98.PUT AWAY LUST

XXX

வகர வருக்கம் 


99. வல்லமை பேசேல்.

99.DO NOT BOAST OF YOUR ABILITY/SPEAK NOT HARSH WORDS

 

  1. வாது முற்கூறேல்.

100.DO NOT SPEAK FIRST IN A DISPUTE

  1. வித்தை விரும்பு.
    101.DESIRE KNOWLEDGE
  2. வீடு பெற நில்.

102.STRIVE TO OBTAIN HEAVEN

  1. உத்தமனாய் இரு.
    103.LIVE AS A GOOD MAN
  2. ஊருடன் கூடி வாழ்.
    104.LIVE IN HARMONY WITH YOUR FELLOW CITIZENS
  3. வெட்டெனப் பேசேல்.
    105.DO NOT SPEAK SHARPLY
  4. வேண்டி வினை செயேல்.
    106.DO NOT EVIL THROUGH DESIRE
  5. வைகறைத் துயில் எழு.
    107.RISE FROM SLLEP AT DAY BREAK
  6. ஒன்னாரைத் தேறேல்.
    108.DO NOT ASSOCIATE WITH ENEMIES
  7. ஓரம் சொல்லேல்.

109.DO NOT SPEAK WITH PARTIALITY

— subham–

 

சில கதைகள்-மூடர்களுக்கு கடவுள் கொடுத்த பரிசு மௌனம் (Post No.5487)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 29 September 2018

 

Time uploaded in London – 7-30 am (British Summer Time)

 

Post No. 5487

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

 

சில கதைகள்மூடர்களுக்கு கடவுள் கொடுத்த பரிசு மௌனம் பர்த்ருஹரி நீதி சதகம் 7,8,9,10

 

பர்த்ருஹரி எழுதிய நீதி சதகத்தில் முட்டாள்கள் வாய் திறக்காமல் இருப்பது நலம் பயக்கும் என்று மொழிகிறார்.

 

வான் புகழ் வள்ளுவமுனும்  தமிழ் வேதம் என்று புகழப்படும் திருக்குறளிலும் அதையே செப்புவார்:-

 

கல்லாதவரும் நனிநல்லர் கற்றார் முன்

சொல்லாதிருக்கப் பெறின் (குறள் 403)

 

கற்றறிந்த மக்கள் முன்னிலையில், கல்லாத முட்டாள்கள் வாய் திறவாமல் மவுனம் காத்தால் அந்த இடத்தில் அவர்களும் நல்லவர்களாகத் தோன்றுவார்கள்.

 

स्वायत्तम् एकान्तगुणं विधात्रा
विनिर्मितं छादनम् अज्ञतायाः ।
विशेषा‌अतः सर्वविदां समाजे
विभूषणं मौनम् अपण्डितानाम् ॥ 1.7 ॥

 

ஸ்வாயத்தம் ஏகாந்த்ஹிதம் (குணம்) விதாத்ரா

விநிர்மிதம் சாதனமக்ஞதாயாஹா

விஷேஷதஹ ஸர்வவிதாம் ஸமாஜே

விபூஷணம் மௌனம் அபண்டிதானாம்

—பர்த்ருஹரி நீதி சதகம்1-7

 

 

ஒருவனுடைய அறியாமையை மறைப்பதற்காக மூடர்களுக்கு மௌனம் என்னும் வரத்தை பிரம்மா அருளியிருக்கிறார். விஷயம் தெரிந்த அறிஞர்களிடையே முட்டாள்களின் அணிகலன் (ஆபரணம்) இந்த மௌனம்தான் (1-7).

 

முட்டாள் கள் பேசினால் அவர்கள் குட்டு வெளிப்படும் ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்று சொன்ன கதை ஆகிவிடும்.

xxx

यदा किञ्चिज्ज्ञो‌உहं द्विप इव मदान्धः समभवं
तदा सर्वज्ञो‌உस्मीत्यभवदवलिप्तं मम मनः
यदा किञ्चित्किञ्चिद्बुधजनसकाशादवगतं
तदा मूर्खो‌உस्मीति ज्वर इव मदो मे व्यपगतः ॥ 1.8 ॥

 

யதா கிஞ்சிஜ்ஜோஹம் கஜ (த்விப) இவ மதாந்தஹ ஸமபவம்

ததா ஸர்வஞோஸ்மீத்யபவதவலிப்தம் ம்ம மனஹ

யதா கிஞ்சித்கிஞ்சித்புதஜன ஸகாசாதவகதம்

ததா மூர்க்கோஸ்மீதி ஜ்வர இவ மதோ மே வ்யபகதஹ

–பர்த்ருஹரி நீதி சதகம் 1-8

எனக்கு கொஞ்சம் அறிவு இருந்த போது நான் யானை போல மதம் பிடித்து அலைந்தேன்;

அந்த நேரத்தில் நான் அனைத்தும் அறிந்தவன் என்று நினைத்தேன்;

ஆனால் அறிஞர்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விஷயத்தைக் கிரஹித்தபோது, நான் அறிவிலி என்பது விளங்கியது;

காய்ச்சல் விலகுவது போல எனது கர்வமும் விலகி ஓடியது (1-8).

 

 

இதோ வள்ளுவரின் கூற்று

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்

செறிதோறும் சேயிழை மாட்டு — குறள் 1110

 

நல்ல அணிகளை அணிந்த இந்தப் பெண்ணை பொருந்தும் தோறும்,

அந்த இன்பத்தின் மஹிமை தெரிவது எப்படி இருக்கிறதென்றால், நூல்களை படிக்கப் படிக்க இவ்வளவு காலம் நம் அறியாமையைக் காண்பது போல இருக்கிறது

xxx

 

कृमिकुलचित्तं लालाक्लिन्नं विगन्धिजुगुप्सितं
निरुपमरसं प्रीत्या खादन्नरास्थि निरामिषम् ।
सुरपतिम् अपि श्वा पार्श्वस्थं विलोक्य न शङ्कते
न हि गणयति क्षुद्रो जन्तुः परिग्रहफल्गुताम् ॥ 1.9 ॥

 

க்ருமிகுலசிதம் லாலாக்லின்னம் விக்ன்ந்திஜுகுப்ஸிதம்

நிருபமரஸ்ம்ப்ரீத்யா காதன்னராஸ்திநிராமிஷம்

ஸுரபதிம் அபி ஸ்வா பார்ஸ்வத்வம்  விலோக்ய ந சங்க்தே

ந ஹி கணயதி க்ஷுதோ ஜந்துஹு பரிக்ரஹFபலகுதாம் 1-9

 

கிருமிகள் உடைய , சதைப் பற்றில்லாத, காய்ந்த நாற்றமுள்ள அழுக்கான எலும்புத் துண்டை நக்கும் நாய் தனது எச்சிலை அதில் ருசித்துவிட்டு, எலும்புதான் சுவை தருகிறது என்று நினைப்பது போல(1-9).

xxx

 

शिरः शार्वं स्वर्गात्पशुपतिशिरस्तः क्षितिधरं
म्हीध्रादुत्तुङ्गादवनिम् अवनेश्चापि जलधिम् ।
अधो‌உधो गङ्गेयं पदम् उपगता स्तोकम्
अथवाविवेकभ्रष्टानां भवति विनिपातः शतमुखः ॥ 1.10 ॥

 

சிரஹ சார்வம் ஸ்வர்காத் பசுபதி சிரஸ்தஹ க்ஷிதிதரம்

மஹீத்ராத்துங்காத் அவனேஸ்சாபி ஜலதிம்

அதோ அதோ கங்கா ஸேயம் பதம் உபகதா ஸ்தோயம்

விவேக ப்ரஷ்டானாம் பவதி விநிபாதஹ சதமுகஹ 1-10

 

கங்கை நதி ஆகாயத்திலிருந்து சிவன் தலையில் விழுந்து, பின்னர் மலையில் விழுந்து, பூமியில் விழுகிறத்து. கடலில் கலப்பதற்காக கங்கை நதி மேலும் மேலும் இறங்கி வருகிறது; அத்தோடு அதன் பெயர் மறைந்து ‘கடல்’ என்று ஆகிவிடும். இது போலவே ஒருவர் விவேகத்தை இழக்க, இழக்க நூறு வழிகளில்  கீழே விழுவார்.(1-10)

 

அதாவது புத்தி தடுமாறினால் 100 வழிகளில் வீழ்ச்சி நிச்சயம் என்பது பர்த்ருஹரியின் கூற்று.

 

வள்ளுவன் மனம் போன போக்கில் போகாதவனே அறிவாளி என்பார்:-

சென்ற இடத்தில் செலவிடா தீதொரீ இ

நன்றின் பால் உய்ப்பதறிவு – 422

 

பொருள்

மனம் போன போக்கில் போகாமல் தீயதிலிருந்து விலகி நின்று, நல்ல விஷயங்களில்  ஈடுபடுவதே அறிவு/ விவேகம்

 

 

XXX

 

எங்கப்பன் குதிருக்குள் இல்லை

 

கடன் கொடுத்த ஒருவன் கடனைத் திரும்பி வாங்குவதற்காக ஒரு கடன்காரனை தினமும் விரட்டிக் கொண்டிருந்தான். அவனும் கண்ணில் படாமல் முடிந்தவரை ஒளிந்து வந்தான். ஒருநாள் கடன்கொடுத்தவன், எதிர்பாராத நேரத்தில் கடன் வாங்கியவன் வீட்டை நோக்கி விரைந்து வந்தான். ஜன்னல் வழியாக இதைப் பார்த்துவிட்ட கடனாளி மகனை அழைத்து நான் குதிருக்குள் ஒளிந்து கொள்வேன். யாராவது வந்து உன் அப்பன் எங்கே என்று கேட்டால் சொல்லி விடாதே என்று அவசரம் அவசரமாக ஒளிந்து கொண்டான்.

 

கடன் கொடுத்தவன் கோபாவேசமாக உரத்த குரலில், எங்கே உன் அப்பா? என்று விரட்டியவுடன், எங்கப்பன் வீட்டில் இல்லை; கட்டாயமாக குதிருக்குள் ஒளிந்து கொள்ளவே இல்லை என்று உளறிக் கொட்டினான். இதனால்தான் முட்டாள்களுக்கு மவுனமே கடவுள் கொடுத்த பாதுகாப்புக் கேடயம் என்று ஆன்றோர் நவில்வர்.

xxx

‘உன் மனைவி ஊருக்கே மனைவி’ கதை

முட்டாள்களை எப்படிக் கண்டு பிடிப்பது? (31 அக்டோபர் 2015) என்று முன்னர் நான் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி:–

 

நுனி மரத்தில் உட்கார்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுபவன் மூடன், முட்டாள் என்று இந்திய இலக்கியங்கள் சித்தரிக்கின்றன. உலக மஹா கவி காளிதாசனும் இப்படி இருந்தவர் என்றும் பின்னர் காளிதேவியின் அருள் பெற்று சிறந்தவர் என்றும் செவி வழிக் கதைகள் செப்பும்.

சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை

முட்டாள்கள் அர்த்தம் தெரியாமல் சொற் பிரயோகம் செய்வர். தமிழில் உள்ள கதை அனைவரும் அறிந்ததே. ஒரு ஊரில் ஒரு பெரியவரின் தாயார் இறந்தவுடன் பலரும் துக்கம் விசாரிக்கச் சென்றனர். ஒரு முட்டாள் ஏது சொல்வதென்று திகைத்திருந்த தருணத்தில் எல்லோரும் செல்வதைக் கவனித்தான். “உனது தாயின் இழப்பு உனக்கு மட்டும் இழப்பன்று; அவர் ஊருக்கே தாயாக விளங்கினார். ஆகையால் இன்று நாங்கள் எல்லோரும் தாயை இழந்த பிள்ளையாகி விட்டோம் என்று பலரும் கூறினர். இவனும் அப்படியே கூறிவிட்டு,  வீட்டுக்கு வந்தான். மற்றொரு நாள் ஊர்ப் பெரியவரின் மனைவி இறந்து போனாள். இவன் எல்லோருக்கும் முன் முந்திக் கொண்டு, முந்திரிக் கொட்டை போலச் சென்றான். ஊரே கூடியிருந்தது. இந்த முட்டாள் முன்னே சென்று, “உனது மனைவியை இழந்தது உனக்கு மட்டும் துக்கமன்று. அவள் உனக்கு மட்டும் மனைவியில்லை; ஊருக்கே மனைவியாகத் திகழ்ந்தாள் இன்று நாங்கள் அனைவரும் மனைவியை இழந்த கணவர் ஆகிவிட்டோம்” என்றான். பக்கத்தில் இருந்த பத்துப் பேர் அவனுக்கு அடி உதை கொடுத்து அவனை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்!!

 

மஹாபாரதம் இதை இன்னும் அழகாகச் சொல்லுகிறது. ஒரு கிளியானது சொன்னதைச் சொல்லும்; அழகாகச் சொல்லும். ஆனால் அதையே ஒரு பூனை பிடிக்க வரும் போது அம்மா, என்னை பூனை பிடிக்கிறது என்று சொல்லத் தெரியாது. இதே கதைதான் முட்டாள்களின் கதையும்.

 

பல மொழிகளிலும் அறியாமை பற்றிய கருத்துகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன:

 

1.Ignorance is the night of the mind (Chinese proverb)

 

மனதின் இருண்ட நேரம் அறியாமை (சீனப் பழமொழி)

 

2.There is no blindness like ignorance.

அறியாமை என்பது அந்தகத்தன்மை (குருடு)

 

3.Thedevil never assails a man except he find him either void of  knowledge or  of the fear  of god.

அறிவு இல்லாதவனையும், கடவுளை நம்பாதவனையும்தான் பேய்கள் பிடிக்கின்றன

 

4.Scinece has no enemy but the ignorant.

விஞ்ஞனத்துக்கு ஒரே எதிரி அறிவற்றவனே

 

5.Art has no enemy but ignorance

கலையின் எதிரி அறியாமை

 

6.If the blind lead the blind, both shall fall into the ditch

குருடன் குருடனுக்கு வழிகாட்டினால் இருவரும் பள்ளத்தில் விழுவர் (உபநிஷத்திலும், பைபிளிலும் உள்ள உவமை)

 

இறுதியாக மத்திய கிழக்கில் அராபிய மொழியில் உள்ள பழமொழி

He who knows not, and knows not that he knows not, is a fool. Shun him.
He who knows not, and knows that he knows not, is simple. Teach him.
He who knows, and knows not he knows, is asleep. Wake him.
He who knows, and knows that he knows is wise. Follow him.

அறியான் அறியான் தான் அறியாதவன் என்று – அவன் ஒரு முட்டாள் – ஒதுக்குக

அறியான் அறிவான் தான் அறியாதவன் என்று – அவன் எளியவன் – கற்பிக்க

அறிவான் அறியான் தான் அறிந்தவன் என்று – அவன் உறங்குகிறான் – எழுப்புக

அறிவான் அறிவான் தான் அறிந்தவன் என்று – அவன் மேதாவி – பின்பற்றுக

–சுபம்–