2 கதைகள்- பனை விதையும் ஆலம் விதையும் (Post No.5331)

Akbar worshiping Sun

Written by London swaminathan

Date: 17 August 2018

 

Time uploaded in London – 7-34 AM  (British Summer Time)

 

Post No. 5331

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

தேம்படு பனையின் திரள்பழத் தொருவிதை

வானுற வோங்கி வளம்பெற வளரினும்

ஒருவர்க்கிருக்க நிழலாகாதே –

நறுந்தொகை (வெற்றி வேற்கை)

அதிவீரராம பாண்டியன்

 

இனிமை மிக்க பனையின் ஒரு பழத்தை விதையாக ஊன்றி அது வானோங்கி செழித்து வளர்ந்தாலும் ஒருவர்கூட நிற்கக் கூடிய நிழலை அது தராது.

மொகலாய மன்னனான ஷாஜஹானின் புதல்வனான அவுரங்கசீப் , கல்வி கேள்விகளில் சிறந்தவன்; ஆனால் மஹா மூர்கன். மதவெறியன்; பேராசை பிடித்த கொலைகாரன். தனது மூன்று சஹோதர்களை அவர்களின் புதல்வர்களோடு கூண்டோடு கொலை செய்து சிங்காதனம் ஏறினான். ஷாஜஹானை நீ கட்டிய தாஜ்மஹலை பார்த்துக்கொண்டே செத்துப்போ என்று சாகும் வரை சிறையில் அடைத்தான். ராஜ்யத்தை சரியாக ஆளத் தெரியாமல் குடிமக்களையும் சிற்றரசர்களையும் பகைத்துக் கொண்டான். அனைவராலும் வெறுக்கப்பட்டு, முடிவில் உதவி செய்ய யாரும் இல்லாமல் கஷ்டப்பட்டு செத்தான். அவனோடு மொகலாய சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது. பின்னர் பெயரளவுக்கு அரசர் என்று ஓரிருவர் இருந்தனர். அரச சம்பத்து கோடிக்கணக்கில் இருந்தும் அவனோ அவனது குடிமக்களோ மகிழ்ச்சியாக வாழ முடியவில்லை. அவன் பனை விதபோல ஓங்கி வளர்ந்தான். ஆனால் ஒருவருக்கும் நிழல் தர முடியவில்லை.

xxx

 

தெள்ளிய வாலின் சிறு பழத்தொரு விதை

தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்

நுண்ணிதே யாயயினும் அண்ணல் யானை

அணிதேர்ப் புரவி ஆள் பெரும்படையொடு

மன்னர்க்கிருக்க நிழலாகும்மே

நறுந்தொகை (வெற்றி வேற்கை)

அதிவீரராம பாண்டியன்

 

தெள்ளி எடுக்கத்தக்க ஆல மரத்தின் சிறு விதையானது, தெளிந்த நீர்க்குளத்தில் உள்ள சிறிய மீனின் முட்டையை விடச் சிறிதானாலும், பெருமை பொருந்திய யானையோடு அழகிய தேரும், குதிரையும் காலாட் படைகளும் கொண்ட மன்னரோடு தங்குவதற்கு நிழல் தரும்.

 

பெரிய விதையுடைய பனை மரம் நிழல் தராது. சிறிய விதையுடைய ஆல மரம் மன்னரின் நாற்படைக்கும் நிழல் தரும். ஆகவே மக்கள் இரு தரப்பட்டவர்கள்; சிலர் பனை மரம்; சிலர் ஆலமரம்.

 

ஹுமாயூன் புத்திரனான அக்பர் நிராதரவற்ற நிலையில், தாயாரான ஹாமிடாவுக்கும் சாப்பாடு போட முடியாத நிலையில் ஸிந்து தேச காட்டுப் பகுதியில் பிறந்தார். அவர் பட்ட கஷ்டம் சொல்லத் தரமன்று; தனது 18ஆவது வயதில் வளர்ப்புத் தந்தையான பைராம்கானை அடக்கிவிட்டு தானே சிங்காதனம் ஏறினார். பின்னர் படிப்படியாக உயர்ந்து வட இந்தியா முழுதையும் வசப்படுத்தி ஆட்சி புரிந்தார். அவர் ஆட்சிக் காலத்தில் போர்கள் நடந்தன; ஆனால் மக்கள் கலகம் என்பது கிடையாது. அவரும் ஜாதி மத வேறுபாடின்றி கல்வி, கேள்விகளில் சிறந்தோருக்கு பெரிய பதவிகளைக் கொடுத்தார்.

மக்களின் சௌகரியங்களுக்கு வேண்டிய அனைத்தையும் செய்தார். எப்போதும் தத்துவ விசாரத்தில் ஈடுபட்ட அறிஞர் குழுவால் சூழப்பட்டு கீர்த்தி பெற்றார். அவர் கூட்டிய தர்பாரில் பொதுமக்கள் யார் சிபாரிசு இன்றியும் மனுக்களைத் தரமுடிந்தது. உடனே அதற்கு நடவடிக்கையும் எடுத்து புகழ் பெற்றார். மக்கள் அவரை பழமரத்தை நாடும் பறவைகள் போல நாடினர்.

 

-SUBHAM-

அடிமைக்கு அருளிய புத்தர்! (Post No.5330)

Written by S Nagarajan

Date: 17 August 2018

Time uploaded in London – 6-13 AM  (British Summer Time)

Post No. 5330

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

புத்த தரிசனம்

அடிமைக்கு அருளிய புத்தர்!

 

ச.நாகராஜன்

புத்தர் போன்ற பெரும் நிலையில் இருந்த ஒரு மகான் ஒரு ஏழை அடிமைக்கு அருளிய ஒரு சம்பவம் வரலாற்றுப் பிரசித்தி பெற்றதாகும்.

மழைக்காலத்தில் ஓரிடத்தில் சிறிது காலம் தங்குவது பெரியோர்களின் வழக்கம். அதன்படி புத்த பிரான் ஒரு சமயம் ஜேதவான மடாலயத்தில் தங்கி இருந்தார். மழைக்காலம் முடிந்த பிறகு அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானார்.

இதைக் கேள்விப்பட்ட கோசல மன்னன் அவரிடம் வந்து அவர் இன்னும் சிறிது காலம் அங்கேயே தங்கி இருந்து அருள் பாலிக்குமாறு வேண்டினான். அங்கிருந்த சங்கத் தலைவரான அனாத பிண்டிகாவும் புத்தரை அங்கேயே தங்கி இருக்குமாறு வேண்டினார். புத்தரின் சிஷ்யையான விசாகாவும் புத்தரைப் பணிவுடன் வேண்டி அவரை அங்கேயே தங்கி இருக்குமாறு வேண்டினார்.

ஆனால் புத்தர் அதற்கு இசையவில்லை. அவர் கிளம்ப ஆயத்தமானார்.

சங்கத் தலைவர் மனம் நொந்து தனது இருப்பிடம் ஏகினார். அவரிடம் பணியாளாக வேலை பார்த்த ஏழைப் பெண்மணியான புன்னா அவரைப் பார்த்து, “ஐயா, ஏன் உங்கள் முகம் இப்படி வாடி இருக்கிறது?” என்று கேட்டாள்.அதற்கு அவர்,”ஓ! புன்னா, நான் வருத்தப்படுவது உண்மை தான். ஏனெனில் புத்தர் இங்கிருந்து கிளம்பப் போகிறார். என்னால் முடிந்தவரையில் தடுத்துப் பார்த்தேன். என் முயற்சி வெற்றி பெறவில்லை” என்றார்.

உடனே புன்னா, “ஐயா! நான் புத்தரைப் போக விடாமல் தடுத்து நிறுத்துகிறேன்.அப்படி தடுத்து நிறுத்தினால் எனக்கு என்ன தருவீர்கள்?” என்று கேட்டாள்.

“நீ அப்படிச் செய்தாயானால், உன்னை எனது அடிமையாக இருப்பதிலிருந்து உடனடியாக விடுவிக்கிறேன்” என்றார் அவர்.

புன்னா நேரடியாக புத்தர் இருக்குமிடம் வந்து அவரைப் பணிந்து வணங்கினாள்.

“ஓ! மஹானே! போக வேண்டாம்.இங்கேயே இருங்கள்” என்று பணிவுடன் வேண்டினாள்.

புத்தர் புன்முறுவலுடன், நான் போகாததினால் உனக்கு என்ன நன்மை?” என்று கேட்டார்.

“ஐயன்மீர்! நான் ஒரு பெண்.நான் ஒரு அடிமை. நான் ஒரு பணியாள். நீங்கள் போகவில்லை என்றால் என் அடிமைத்தனத்திலிருந்து எனக்கு விடுதலை கிடைக்கும். எனக்கு விடுதலை கிடைத்தால் நீங்கள் கூறிய மூன்று அடைக்கலத்தைப் பெறுவேன். ஐந்து உபதேசங்களையும் எட்டு உபதேசங்களையும் கடைப்பிடிப்பேன்.அப்படிக் கடைப்பிடிப்பதன் மூலம் எனக்குப் பெறுதற்கரிய பேறு கிடைக்கும்” என்றாள் புன்னா.

புத்தர் யோசித்தார். அவரது தயை வெள்ளமெனப் பெருகியது. அவளுக்கு விடுதலை கிடைக்க வேண்டும், அத்துடன் அவள் அர்ஹந்த் என்ற உயரிய நிலையை அடைய வேண்டும் என்று விரும்பினார்.

புன்னாவிடம் அவர், “சரி! நான் இங்கேயே இருக்கிறேன்.” என்று அருளினார்.

இந்தச் செய்தியைக் கேட்ட சாவார்த்தி நகர மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர்.

கோசல மன்னன், சங்கத் தலைவர், விசாகா ஆகியோரும் பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.

மன்னனின் அழைப்பை ஏற்காதவர், சங்கத் தலைவராக இருந்த பணக்காரரின் வேண்டுகோளை மறுத்தவர், ஒரு சிஷ்யையின் வேண்டுகோளையும் மறுத்தவர் ஒரு ஏழை அடிமைப் பெண்ணின் வேண்டுகோளை ஏற்றது பெரிய சம்பவமாகக் கருதப்பட்டது – கருதப்படுகிறது – அன்றும், இன்றும்!

தான் சொன்னபடி புன்னாவை அடிமை நிலையிலிருந்து விடுவித்தார் சங்கத் தலைவர்.

புன்னா புத்தரின் உபதேசப்படி வாழ்ந்து உயரிய அர்ஹாந்த் என்னும் நிலையைப் பின்னால் அடைந்தார்.

புத்தரின் தயை எல்லையற்றது. அதை விளக்கும் ஏராளமான சம்பவங்களுள் முக்கியத்துவம் பெற்ற சம்பவம் இது.

***

 

ஒரு கதை- ‘மன்னவர்க்கழகு செங்கோல் முறைமை!’ (Post No.5329)

Written  by London swaminathan

Date: 16 August 2018

 

Time uploaded in London –12-11 (British Summer Time)

 

Post No. 5329

 

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

மன்னவர்க்கழகு செங்கோல் முறைமை- நறுந்தொகை, அதிவீரராம பாண்டியன்

 

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி

ஒல்லாது வானம் பெயல் – குறள் 559

 

நீதி முறை தவறி மன்னன் ஆட்சி செய்தால் அவன் நாட்டில் மழை பெய்யாமல் போகும்.

 

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட

பெயலும் விளையும் தொக்கு – குறள்

தர்ம நூல்கள் செப்பும் படி ஆட்சி நடத்தும் மன்னவன் நாட்டில் மழையும் பெய்யும்; விளைச்சலும் பெருகும்.

திருவாரூரில் மனுநீதிச் சோழன் என்பவன் அரசாண்டு வந்தான். இவனது கதை பெரிய புராணத்திலும் , சிலப்பதிகாரத்திலும், பழமொழியிலும் உள்ளது. அவனது மகன் வீதி விடங்கன் என்பவன் சாலை விதிகளை மீறி நூறு மைல் (100 mph) வேகத்தில் தேரை ஓட்டிச் சென்றான். அபோது துள்ளிக் குதித்து வந்த ஒரு பசு மாட்டின் கன்று, தேர்க்கடியிடில் சிக்கி இறந்தது. அந்தக் காலத்தில் போக்குவரத்து போலீஸோ சிக்னல் லைட்டோ (No Traffic Police or Signal light) கிடையாது. ஆனால் அரண்மனை வாசலில் எமர்ஜென்ஸி பெல் (Emergency alarm bell)  உண்டு. யாருக்காவது துயரம் என்றால் உடனே ஓடிப் போய் காலிங் பெல்லை (Calling Bell) அமுக்கினால் அரசின் வேலைக்காரர்கள் அல்லது மன்னர் அல்லது அமைச்சரே நேரே வந்து மனுவை வாங்கிக் கொள்வார். இதை ஒரு பசு மாடும் தினமும் கவனித்து வந்தது. அந்தப் பசு மாட்டின் கன்று ட் ரா ஃபிக் ஆக்ஸிடெண்டில் (Traffic accident) இறந்தவுடன் அந்த வண்டி ‘ஸ்டாப்’ பண்ணாமல் போனவுடன் ஓடி வந்து அரண்மனையின் ‘காலிங் பெல்’லை அடித்தது. அந்த பெல்லின் பெயர் ஆராய்ச்சி மணி. மன்னன் இதுவரை அந்த சப்தத்தைக் கேட்டதே இல்லை. அது துருப்பிடித்து போயிருந்தாலும் நல்ல ஒர்க்கிங் கண்டிஷனில் (good working condition) இருந்தது!

 

மன்னர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் வாயிலுக்கு ஓடி வந்து பார்த்தால் ஒரு பசு மாடு நின்று கொண்டிருந்தது. “ஓஹோ, ஏதோ ஒரு மிஸ்டேக் (mistake)கில் கொம்பு கயிற்றில் மாட்டிக் கொண்டு அடித்தி ருக்கும் அதனால் என்ன, ஒரு கட்டு அகத்திக் கீரை வாங்கிப் போடு! அது போய்விடும்” என்று ஒரு மந்திரி சொன்னார். இப்படி விவாதம் நடக்கையில் அரசு நியமித்த 007 ஜேம்ஸ்பாண்டு   (007  James  Bond) ஓடி வந்து உளவுத் தகவல் சொன்னான்.

“மன்னர் மன்னா! உன் மகன் ஒரு பசுவின் கன்றைக் கொன்றான். அதன் தாய்  இங்கே  வந்து உன் முன்னால் நிற்கிறது என்றான். பசுவின் காதிலும் அது விழுந்தவுடன் எல்லோரையும் பின் தொடர்ந்து வருமாறு அது ‘சிக்னல்’ (Signal) கொடுத்து விட்டு, ஆம்புலனஸ் கார் சப்தம் போடுவது போல ‘நீனா நீனா நீனா’, ‘உய்ந் உய்ந் உய்ந்’ என்று ஓலமிட்டுக் கொண்டே (accident spot) ஆக்ஸிடெண்ட் ஸ்பாட்டுக்கு அழைத்து வந்தது.

 

மன்னனுகுக்கு வருத்தமும் கோபமும் ; என்ன செய்யலாம் என்றான்? உடனே  ஒரு திராவிட அமைச்சர் கேஸை (case) யாருக்கும் தெரியாமல் அமுக்கிவிடலாம் என்றார். அதற்குள் ஒரு பிராஹ்மணன் நூறு தங்க பசுங் கன்றுகள் செய்து பிராஹ்மணாளு க்குத் தந்தால் போதும். அதுதான் பிராயச் சித்தம் என்றார். ஒரு புத்திசாலி அமைச்சர், மநு நீதி சாஸ்திரத்தில் சொன்ன தண்டனையைச் சொன்னவுடன், “அப்படித்தான் செய்யவேண்டும்; ‘பல்லுக்குப் பல், ரத்தத்துக்கு ரத்தம்; கொண்டா என் மகனை என்றான். மன்னன்; ஏறினான் தேரில்;  70 மைல் ஸ்பீடில் (70 mph) போய் மகனைக் கொன்றான்; தேவர்கள் பூமாரி பெய்தனர்.

உன் நேர்மையை மெச்சினோம்; பசுவின் கன்றுக்கும் உன் மகனுக்கும் உயிர்ப் பிச்சை தந்தோம் என்று சொல்ல இருவரும் உயிர் பெற்று நடந்தனர்.

மன்னா! நேர்மையாக நாட்சி நடந்தால் அங்கே பயிர் செய்யாமலேயே தானியங்கள் விளையுமென்று வள்ளுவன் தமிழ் வேதம் செப்புவதை நீ அறியாயோ? காளிதாஸன்  ரகுவம்ஸ காவியத்தின் ஐந்தாவது அத்திய,,,யத்தில் ரகு என்ற மன்னன் கௌத்ஸ முனிவருக்கு 14 கோடிப் பொன்னை குபேரனிடம் வாங்கிக் கொடுத்ததை அறியாயோ? ரகு படை எடுக்க, முதல் நாள் இரவில் ஆயுத ரதத்தை தயார் செய்தவுடன் குபேரனே பயந்து போய் இரவோடிரவாக 14 கோடிக்கும் மேல் அவன் கஜானாவில் கொட்டி நிரப்பினானே. அது போல உன் நாட்டிலும் தன, தான்யம் செழிக்கும் என்று தேவர்கள் சொன்னார்கள்:

சால மறைத்தோம்பிச் சான்றவர் கைகரப்பக்

காலை கழிந்ததன் பின்றையும்- மேலைக்

கறவைக்கன் றூர்ந்தானைத் தந்தையு மூர்ந்தான்

முறைமைக்கு முப்பிளமை யில் – பழமொழி

 

–subham–

வறிஞர்க்கழகு வறுமையில் செம்மை! (Post No.5324)

Written  by London swaminathan

Date: 15 August 2018

 

Time uploaded in London –11-40 am (British Summer Time)

 

Post No. 5324

 

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

வறிஞர்க்கழகு வறுமையில் செம்மை- நறுந்தொகை , அதிவீர ராம பாண்டியன்

 

அவந்தி தேசத்தில் அக்கிரஹரரத் தெருவில் ஒரு ஏழைப் பார்ப்பனன் இருந்தனன். அவன் பெயர் குசேலர் அல்லது சுதாமா. அவன் ஏழ்மையோடு வேறு ஒரு பிரச்சனையும் சேர்ந்து கொண்டது. அவனுக்கு 27 பிள்ளைகள்!! எப்போது பார்த்தாலும் அம்மா பசிக்குதே! அப்பா பசிக்குதே! என்ற பல்லவியுடன் சோக கீதம் ஒலித்துக் கொண்டே இருந்தது வீட்டீல்!

வறிஞர்=ஏழைகள்

குசேலனின் மனைவி அவரை நச்சரித்தாள்; கரப்பான் பூச்சி போல அவரை என்றும் மொய்த்தாள்; பிய்த்தாள்.

என்னங்க ஒரு காசுக்கும் வழி தேட மாட்டிங்கிறீங்க; உங்கள்(classmate )கிளாஸ்மேட், கிருஷ்ண பரமாத்மா துவாரகாவில் பெரிய ராஜா என்று தினமும் பீத்திக்கிறீங்க! சோத்துக்கு வழி இல்லையே: அவர் கிட்ட போய் கொஞ்சம் கடன் வாங்கிட்டு வரக்கூடாதா? அல்லது அவர்தான் பெரிய மனசு பண்ணி, சம்திங் (something) கொடுக்கக்கூடாதா?

‘செல்வத்தின் பயனே ஈதல்’ என்று பெரியவங்க சொல்லுவாங்க. அவரும் தருவார் என்று எனக்கு நம்பிக்கை இருக்கு என்றாள்.

 

ஆனால் குசேல ஐயர்  மிகவும் மானம் மரியாதை உள்ளவர். என்ன இது? யாசகம் என்று கையேந்திப் போனால் அவமானம் இல்லையா? ‘ஏற்பது இகழ்ச்சி’ என்று பெரியோர் சொன்னதை அறியாயோ பெண் பிள்ளாய்? என்றார்.

அவள் சொன்னாள்; ‘ஏற்பது இகழ்ச்சி’ என்று சொன்ன கிழவி ‘ஐயமிட்டு உண்’ என்றும் சொல்லி இருக்கிறாளே. நான் கொஞ்சம் சோற்றுக்குத் தானே கெஞ்சுகிறேன் என்றாள்

 

வறுமையிலும் செம்மை தவறாத குசேலர் ‘கந்தையானாலும் கசக்கிக் கட்டு’ என்னும் (principle) பிரின்ஸிபிள் உடையவர். ஆகையால் கந்தைத் துணிகளைக் கசக்கிக் கட்டிக் கொண்டார்; புறப்பட்டார்.

 

இந்தாங்க, கொஞ்சம் நில்லுங்க; பெரியவங்களைப் பார்க்கப் போனால் கையில் பழம் வெற்றிலை பாக்கு, ஸ்வீட் (sweet) எல்லாம் எடுத்துட்டு போகனும்; ஒன்னும் இல்லாட்டி வெறும் கையோடு போகாம ஒரு எலுமிச்சம் பழமாவது எடுத்துட்டு போகனும். நான் அடுத்தவீட்டு அம்மாளிடம் கடன் வாங்கிய அவல் கொஞ்சம் மிச்சம் இருக்கு. அதையாவது சாஸ்திரத்துக்குக் கொண்டு போய் கொடுங்களேன் என்றாள் மனைவி.

 

குசேலரோ நாணிக் கோணிக் குறுகி, இந்தக் கந்தல் ஆடையோடு போனால் காவல்காரன் என்ன அடிச்சு விரட்டுவான். இந்தக் கந்தல்ல அவலா? என்றார்.

இந்தாங்க! ‘சபரி’ங்கற கிழவி கடிச்சுக் கொடுத்த இலந்தைப் பழத்தைக்கூட ராமன் சாப்பிட்டதாக வால்மீகி எழுதி இருக்காராமே; அன்போடு கொடுத்தா, அது கோதுமை அல்வா கொடுப்பது போல என்றாள்.

அவரும் அரை மனதோடு அவலுடன் சென்றார். பழைய ஒரு சாலை மாணாக்கணாகிய கண்ணனைக் காணும் ஆவலுடன் – ஒரு கைப்பிடி அவலுடன் சென்றார்.

 

எதிர் பார்த்தது போலவே வாயிற் காரனும், ஏய் பிச்சைக்காரா, இது அரண்மனை, அக்கிரஹாரத்துல [ போய் பிச்சை கேளு என்று தடியை உயர்த்தினான்.

 

குசேலர் மிக தயக்கதோடு நானும் க்ருஷ்ணனும் ஒரே ஸ்கூகுல் (School) என்றும் ஒரே கிளாஸ் (class) என்றும் திரும்பத் திரும்ப சொன்னார். எல்லோரும் ‘கொல்’ என்று சிரித்தனர். அவர்களில் ஒரு நல்ல ஆத்மா ஐய்யோ பாவம், ஐயரை பார்த்தா பாவமா இருக்கு. இவர் சொல்றது பொய்யுன்னா நம்ம ராஜாவும் சிரிப்பார். அவருக்கும் ஒரு ஜோக் (joke) சொன்ன மாதிரி ஆச்சு என்று போய் ஆள் (address) அடரஸ், குலம், கோத்ரம் எல்லாம் சொன்னான்.

கண்ணனின் முகத்தில் ஆயிரம் செந்தாமரை உதித்தது போன்ற பொலிவு தோன்றியது குசேலன் என்ற பெயரைக் கேட்டவுடன். அங்க வஸ்திரம் காற்றில் பறக்க ஓடி வந்தான் அரண்மனை வாயிலுக்கு; கட்டி அணைத்தான் குசேலரை; அவரோ அன்பில் திக்கு முக்காடிப் போனார். “அண்ணி, எனக்கு என்ன கொடுத்து அனுப்பினாள்? வெறும் கையோடு அனுப்ப மாட்டாளே; வா, உள்ளே வா, ருக்மினி சத்ய பாமா எல்லாரையும் இன்ட் ர ட்யூஸ் (introduce) பண்ணுகிறேன். மனைவி, குழந்தைகளையும் அழைத்து வரக்கூடாதா? ‘பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க’ என்பார்களே? 16 பெற்றாயா? என்றெல்லாம் வினவினார். குசேலன் செப்ப முடியுமா 27 குழந்தைகள் என்று.

 

உள்ளே போனவுடன் கந்தல் முடிச்சை அவிழ்த்தார்; கண்ணன் எடுத்தான் ஒரு பிடி அவலை; போட்டான் வாயில்;அடடா ஏமி ருசிரா! ராம நாமத்தைவிட ருசியாக இருக்கிறதே என்று சொல்லி எடுத்தான் இன்னும் ஒரு பிடியை.

ருக்மினி தடுத்தாள்! ஏழை வீட்டு அவலைத் தின்றால் காலரா வாந்தி பேதி வநது விடும் என்பதற்காக அல்ல. கண்ணன் முதல் பிடி சாப்பிட்டவுடனேயே அரண்மனையில் பாதி,  குசேலர் வீட்டுக்குப் போய்விட்டது. கடவுள அருளுடன் சாப்பிட்டால் அவருடைய செல்வம்- விபூதி-  மற்றவர்களுக்கும் கிடைக்கும். ருக்மினிக்குப் பயம்; இவர் சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் செல்வம் எல்லாம் பறந்தோடிப் ஓய் விடுமோ என்று.

அன்பில் திளைத்த குசேலருக்கு வந்த காரியமே மறந்து போச்சு; பைஸா விஷயத்தை மறந்து விட்டு வெளியே நைஸா வந்தார். இவருடைய நட்பைத் தெரிவித்தாளே மனைவி மகிழ்ச்சி கொள்ளுவாள். அது வைர நெக்லஸ் வாங்கிப் போட்டது போல என்று குசேலர் நினைனத்தார். பாவம் பெண்ணின் ஸைகாலஜி (woman psychology) தெரியாதவர்!.

 

 

ஊருக்குத் திரும்பி அக்ரஹாரத்துக்குள்ள நுழைஞ்சா இவர் வீட்டக் காணல்ல; அடப் பாவி, இருந்த வீடும் போச்சே! இது என்ன ஆட்சி? யாரவது பட்டா போட்டு மாத்தி விட்டானோ என்று மலைப்பதற்குள் அப்பா! என்று 27 குழந்தைகளும் பட்டாடை உடுத்திய வண்ணம் கையில் பஞ்சுமிட்டாயுடன் ஓடி வந்தன.

‘மாயமோ மாயமோ என்று என்று பாடத் துவங்கும் முன் , ‘குறை ஒன்றும் இல்லை கோவிந்தா’ என்று குசேலர் மனைவி பாடிக்கொண்டே வந்தாள்.

கதையும் இனிதே முடிந்தது. யாசகம் கேட்கப்போன இடத்திலும் வறிஞர்க்கழகு வறுமையில் செம்மை தவறாத குசேலர் பிச்சை கேட்கவில்லை.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?என்று வியந்தார்.

 

-சுபம்–

 

நடுநிலை கடைப்பிடித்த நல்லவர்! (Post No.5322)

Sri Venkataraman Santanam and Srimati Rajalakshmi Santanam

Written by S Nagarajan

 

Date: 15 August 2018

 

Time uploaded in London – 6-15 AM  (British Summer Time)

 

Post No. 5322

 

Pictures shown here are taken from various sources saved by my brothers S Srinivasan, S Suryanarayanan, S.Meenakshisundaram and articles written by S Nagarajan (posted by S Swaminathan)

 

 

நல்லவருக்கு அஞ்சலி

நடுநிலை கடைப்பிடித்த நல்லவர்!

 

ச.நாகராஜன்

நடுநிலை நாளிதழ் என்று போட்டுக் கொண்டு ஒரு பக்கமாய் சார்ந்து எழுதுவது ஊடகங்களின் இன்றைய போக்காக மாறி விட்டது.

 

ஆனால் நடுநிலை நாளிதழான தினமணியின் மதுரைப் பதிப்பின் பொறுப்பாசிரியராக நீண்ட காலம் பணியாற்றிய எனது தந்தையார் திரு வெ.சந்தானம் நடுநிலை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து காட்டியவர்.

அலுவலகப் பணியில் மட்டுமல்ல, அன்றாட வாழ்விலும் அவர் கடைப்பிடித்த எள்ளளவும் பிசகாத, தராசு நுனி போன்ற நடுநிலை வியக்க வைக்கும் ஒன்றாகும்.

வீட்டிலும் சரி நாட்டிலும் சரி உரிய முறையில் உரிய விஷயத்தில் நடுநிலையுடன் நடக்கும் பாங்கு அவருக்கு இயல்பாகவே இருந்தது.

 

நூற்றுக்கணக்கான சம்பவங்கள் மனதில் நிழலாடினாலும் சில சம்பவங்களை இங்கு  குறிப்பிடுகிறேன்.

அரசியல் கட்சியில் எல்லா அணிகளையும் சம நோக்குடன் பார்ப்பார் அவர்.

 

 

With Swamiji Krishna of Aykkudi, near Tenkasi

காமராஜர் முதல் அமைச்சர்.

சுதந்திர தியாகிகளை அங்கீகரிக்க அவர்களுடன் சிறையில் கூட இருந்த ஒருவர் யாரேனும் அப்படி கூட இருந்ததைக் குறிப்பிட வேண்டுமென்ற விதி வந்தது.

 

இப்படி ஒருவரிடம் கடிதம் வாங்க வேண்டுமென்ற ஆசையோ அல்லது நினைவோ கூட இல்லாமல் இருந்தார் என் தந்தை.

ஆனால் பல தியாகிகளும் இதை ஏன் இன்னும் வாங்கவில்லை என்று கேட்ட வண்ணம் இருந்தனர்.

 

மதுரையில் காங்கிரஸ் கட்சியின் மாபெரும் மாநாடு தமுக்கம் மைதானதில் நடந்தது.  இரவு நேரம்.

 

தினமணி நிருபராக வெகு காலம் பணியாற்றியவரும் என் தந்தையின் பால் மிக்க மரியாதையும அன்பும் கொண்டவரான திரு திருமலை மைதானத்தில் ஏற்பாடுகளைப் பார்வையிட வந்த காமராஜரிடம் இந்தக் கடிதம் பற்றிக் குறிப்பிட்டார்.

 

இப்படி யார் வேண்டுமென்கிறார்கள் என்று கேட்டார் திரு காமராஜர். இது அரசால் கொண்டுவ்ரப்பட்ட ஆணை என்றவுடன் சிரித்தவாறே அந்த மைதானத்திலேயே அந்தக் கணமே ஒரு டைப்ரட்டரைக் கொண்டுவரச் சொல்லி அதில் ஒரே ஒரு வரி ஆங்கிலத்தில் அடிக்கச் சொன்னார்.

திரு வெ.சந்தானம் என்னுடன் சிறையில் இருந்தார் என்பதே அந்த ஒரு வரி.

என் தந்தை அந்தக் கணமே அரசின் கணக்கின் படி ‘சுதந்திரப் போர் தியாகி’ ஆனார்.

ராஜாஜிக்கு என் தந்தை பால் பரிவும அன்பும் உண்டு. கல்யாண ரிஸப்ஷனில் என் தந்தையும் தாயும் நாற்காலியில் அமர்ந்திருக்க அந்தப் பெரிய்வர் பின்னால் நிற்கும் காட்சியைக் காண்பிக்கும் அதிசய போட்டோ எங்கள் இல்லத்தில் இன்றும் இருக்கும் ஒரு பொக்கிஷம்.

 

முத்துராமலிங்கத் தேவரின் தேச பக்தியும் தெய்வ பக்தியும் நாடறிந்த விஷயம். அவரது கூட்டங்களுக்கு மதுரையில் என் தந்தையார் தலைமை வகிப்பதுண்டு. அவர் என் தந்தையிடன் கொண்டிருந்த பேரன்பும் மரியாதையும்  வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.

 

அரசியலில் மட்டுமல்ல காஞ்சி பெரியவாள், சிருங்கேரி ஆசார்யாள் உரைகளை அவ்வப்பொழுது தினமணி ஏடு தாங்கி வரும்.

 

சிருங்கேரி ஆசார்யாளின் பக்தர்கள் எழுத்தை எண்ணிக் கொண்டு வருவார்கள். ஏன் காஞ்சி பெரியவருக்கு மட்டும் இரண்டு காலம் இருக்கிறது, ஏன் இத்தனை எழுத்துக்கள் சிருங்கேரி பெரியவரின் உரைக்கு குறைந்திருக்கிறது என்றெல்லாம் தீவிர பக்தியில் கேட்பார்கள்.

 

 

 

 

 

 

அவர்களுக்கு முக்கியத்திற்கு முதலிடம், விஷயத்தின் முக்கியம் போன்றவற்றை எடுத்துச் சொல்லி அவர்களின் மனத்தை மகிழ்விப்பார். நடுநிலையுடன் எதையும் அணுகும் மனப்பாங்கை நாளடைவில் அனைவரும் புரிந்து கொண்டு வெகுவாகப் பாராட்ட ஆரம்பித்தனர். இரு ஆசார்யர்களின் அனுக்ரஹமும் எங்கள் குடும்பத்திற்கு ஏராளம் உண்டு.

சிருங்கேரி ஆசார்யர் வீட்டிற்கே வந்து அனுக்ரஹம் புரிந்த நிகழ்ச்சி மிக சுவாரசியமான ஒன்று.

 

ஸ்ரீ சத்ய சாயிபாபா என் தந்தையார் மீது மிகுந்த அன்பு கொண்டு அனுக்ரஹம் புரிந்தார். ஆபஸ்ட்பரியில் நடந்த கூட்டத்தில் உரையாற்ற பிரத்யேகமாக அழைப்பு விடுத்தார்.

அரசியல், ஆன்மீகம் மட்டுமல்ல, அன்றாடப் பொழுது போக்குகளுக்கும் கூட அவர் உரிய இடத்தைத் தருவார்.

இசை நிகழ்ச்சிகள் தவறாமல் தினமணியில் இடம் பெறும். இசைக் கலைஞர்கள் வெகுவாக மதிக்கப்படுவர் தினமணியில்.

 

கிங்காங் மல்யுதத நிகழ்ச்சிக்கென மதுரை வந்தவர் என் தந்தையைப் பார்க்க நேரில் வந்தார். அவருக்கு ஒரு பிரம்பு நாற்காலி போட அதில் உட்கார ஆரம்பித்தவுடன் அந்த நாற்காலி முறிந்து போக உடனே ஸ்ட்ராங்கான கட்டிலில் சிரித்தவாறே அமர்ந்து உரையாட ஆரம்பித்தார்.

 

தினமணியில் சென்னை ஆபீஸில் ஸ்ட்ரைக். சென்னைப் பதிப்பு சித்தூரிலிருந்து சில காலம் வந்தது.

எழுத்தாளர்களின் கதை, கட்டுரை படைப்புகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு மதுரைக்கு வந்தது.

அந்தக் கால கட்டத்தில் ஏராளமான புது எழுத்தாளர்கள் அறிமுகமாயினர்.

Kanchi Paramacharya in Madurai Dinamani office.

 

யார் எழுதினார்கள் என்று பார்க்காமல் எழுத்து எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்பார் என் தந்தை.

ஜியாவுடீன் என்ற இஸ்லாமிய இளைஞர் ஃபாரஸ்ட் ரேஞ்சராகப் பணியாற்றி வந்தார். அழகுற கதைகள் எழுதுவார். அவர் எழுத்து பிரசுரிக்கப்ப்ட்டவுடன் அவருக்கு ஆனந்தம் தாங்கவில்லை. பொங்கிய மகிழ்ச்சியுடன் ஓடோடி வந்து தந்தையிடன் தன் வியப்பையும் அன்பையும் ம்கிழ்ச்சியையும் தெரிவித்தார்.இதே போல அலுவலகம் ஒன்றில் கணக்குப் பிரிவில் பணியாற்றிய சங்கர ராம் என்பவர் புனைபெயரில் நல்ல எழுத்தாளரானார். சேதுபதி பள்ளியில் கணக்குப் பிரிவில் பணியாற்றிய திரு ராமகிருஷ்ணன் அற்புதக் கவிஞர் ஆனார்.

 

நா.பார்த்தசாரதி அவருடன் கூடவே வரும் பட்டாபிராமன் ஆகியோரின் படைப்புகள் வெளி வரலாயின.

சாலமன் பாப்பையா உள்ளிட்ட பட்டிமன்றப் பேச்சாளர்கள் எங்கள் இல்லத்தில் அமர்ந்து தினமணி பட்டிமன்றம் தலைப்பு குறித்து விவாதிப்பர். தினமணி பட்டிமன்றம் என்பது பட்டிமன்றத்திற்கான ‘ஸ்டாண்டர்ட்’ ஆனது!

Kanchi Shankaracharya Sri Jayendra Swamikal with Dinamani Team

இப்படி இசைக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், பட்டி மன்றப் பேச்சாளர்கள், தலைவர்கள், ஆன்மீகவாதிகள் உள்ளிட்ட அனைவருமே இறுதி வரை தந்தையின் பால் நேசத்தையும் பாசத்தையும் கொட்டினர்.

 

ஒரு பெரியவருடன் கூடப் பழகும் போது நாளுக்கு நாள் அது மெருகேறி வளர்பிறை போல வளர்ந்து கொண்டே போகும் என்பதை பற்பல ஆண்டுகள் பழகிய அனைவரும் அனுபவத்தில் கண்டு மகிழ்ந்தனர்.

 

அவரின் நினவைப் போற்றும் நாள் ஆகஸ்ட் 15.

சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர், 1998ஆம் ஆண்டு., ஆகஸ்ட் 15ஆம் தேதி.

மதுரை எல்லிஸ் நகரில் கொடி ஏற்றியாகி விட்டதா என்று கேட்ட பின் தன் இன்னுயிரை விண்ணுலகம் நோக்கி ஏக விட்டார்.

 

அவரை நினைத்து அஞ்சலி செய்வதில் ஒரு தனி அர்த்தம் இருக்கத்தானே செய்யும்?!

 

ARTICLES ON SANTANAM POSTED EARLIER:-

  1. திருவெ.சந்தானம் | Tamil and Vedas

tamilandvedas.com/tag/திரு-வெ…

Posts about திரு வெ.சந்தானம் written by Tamil and Vedas

  1. வெ.சந்தானம்| Tamil and Vedas

tamilandvedas.com/tag/வெ…

Posts about வெ.சந்தானம் written by Tamil and Vedas

–subham—

***

சுதந்திரம் பற்றி பாரதி (Post No.5321)

Compiled  by London swaminathan

Date: 14 August 2018

 

Time uploaded in London –18-44 (British Summer Time)

 

Post No. 5321

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

நாலு திசையும் ஸ்வாதந்தர்ய நாதம் எழுகவே!

நரகமொத்த அடிமை வாழ்வு நைந்து கழிகவே!

ஏலு மனிதர் அறிவையடர்க்கும் இருள் அழிகவே

எந்த நாளும் உலகம் மீதில் அச்சம் ஒழிகவே!பாரதி

 

வந்தே மாதரம் என்றுயிர் போகும் வரை

வாழ்த்துவோம்;- முடி தாழ்த்துவோம்

எந்தம் ஆருயிர் அன்னையைப் போற்றுதல்

 ஈனமோ?- அவமானமோ?– சுதந்திரம் பற்றி பாரதி

 

 

 

ஒற்றுமை வழியொன்றே வழியென்பது

ஓர்ந்திட்டோம்;- நன்கு தேர்ந்திட்டோம்

மற்று நீங்கள் செய்யுங் கொடுமைக்கெல்லாம்

மலைவுறோம்; – சித்தம் கலைவுறோம் சுதந்திரம் பற்றி பாரதி

 

 

ஜய ஜய பவானி! ஜய ஜய பாரதம்!

ஜய ஜய மாதா! ஜய ஜய துர்கா!

வந்தே மாதரம்! வந்தே மாதரம்!  பாரதி

 

 

ஏழையென்றும் அடிமையென்றும்

எவனும் இல்லை ஜாதியில்

இழிவு கொண்ட மனிதரென்பது

இந்தியாவில் இல்லையே! பாரதி

 

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?

என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?

என்றெமதன்னை கை விலங்குகள் போகும்?

என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்? சுதந்திரம் பற்றி பாரதி

 

 

 

இதந்தரு மனையின் நீங்கி

இடர்மிகு சிறைப்பாட்டாலும்

பதந்திரு இரண்டும் மாறிப்

பழிமிகுத் திழிவுற்றாலும்

விதந்தரு கோடி இன்னல்

விளைந்தெனை அழித்திட்டாலும்

சுதந்திர தேவி! நின்னைத்

தொழுதிடல் மறக்கிலேனே சுதந்திரம் பற்றி பாரதி

 

 

தண்ணீர் விட்டோம் வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக்

கண்ணீராற் காத்தோம்; கருகத் திருவுளமோ?

 

ஓராயிர வருடம் ஓய்ந்துகிடந்த பின்னர்

வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?– சுதந்திரம் பற்றி பாரதி

 

 

வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர்

வேறொன்று கொள்வாரோ? – என்றும்

ஆரமுதுண்ணுதற் காசை கொண்டார் கள்ளில்

அறிவைச் செலுத்துவாரோ?– சுதந்திரம் பற்றி பாரதி

 

வந்தே மாதரம் என்று வணங்கிய பின்

மாயத்தை வணங்குவாரோ?

வந்தே மாதரம் ஒன்றே தாரகம்

என்பதை மறப்பாரோ?– சுதந்திரம் பற்றி பாரதி

 

 

எல்லாரும் அமரநிலை எய்தும்நன்முறையை

இந்தியா உலகிற்களிக்கும்- ஆம்

இந்தியா உலகிற்களிக்கும்- ஆம், ஆம்

இந்தியா உலகிற்களிக்கும் வாழ்க! பாரதி

 

 

 

பாரத சமுதாயம் வாழ்கவே– வாழ்க வாழ்க!

பாரத சமுதாயம் வாழ்கவே- ஜய ஜய ஜய பாரதி

 

முப்பது கோடி ஜனங்களின் சங்கம்

முழுமைக்கும் பொது  உடைமை

ஒப்பிலாத சமுதாயம்

உலகத்துக்கொரு புதுமை- வாழ்க

பாரத சமுதாயம் வாழ்கவே– வாழ்க வாழ்க!

பாரத சமுதாயம் வாழ்கவே- ஜய ஜய ஜய பாரதி

 

 

ஓங்கி வளர்ந்ததோர் கம்பம்- அதன்

உச்சியின்மேல் வந்தே மாதரம் என்றே

பாங்கின் எழுதித் திகழும்- செய்ய

பட்டொளி வீசிப் பறந்தது பாரீர் பாரதி

 

 

பாரத தேசமென்று பெயர்சொல்லுவார்- மிடிப்

பயங்கொல்லுவார் துயர்ப் பகை வெல்லுவார்

 

ஆடுவோமே- பள்ளுப் பாடுவோமே;

ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று

 

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு நாம்

எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு;

சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே

தரணிக்கெல்லாம் எடுத்து ஓதுவோமே

 

எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே- பொய்யும்

ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே- இனி

நல்லோர் பெரியாரென்னும் காலம் வந்ததே – கெட்ட

நயவஞ்சக் காரருக்கு நரகம் வந்ததே

 

நாமிருக்கும் நாடு நமதென்பதறிந்தோம் – இது

நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம்- இந்தப்

பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்- பரி

பூரணனுக்கே யடிமை செய்து வாழ்வோம்.

 

–subham–

Rev. G U Pope Blasts Bishop Caldwell’s Theories (Post No.5320)

 

Picture of G U Pope

Compiled  by London swaminathan

Date: 14 August 2018

 

Time uploaded in London –18-08 (British Summer Time)

 

Post No. 5320

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

“During Bishop Caldwell’s time, Sanskrit enthusiasts argued that Sanskrit was the mother of Tamil language. They showed extraordinary proportion of words of Sanskritic origin in Dravidian vocabulary as a proof. But they did not take into account the dissimilarity of the Dravidian grammatical forms to the Sanskritic forms. Bishop Caldwell had no difficulty in demolishing that theory  but he installed in its stead the equally untenable Scythic theory which it took many years of discussion to dislodge from its position. Subsequent workers in the field discovered serious errors in his work. Dr G U Pope is one of the critics.

 

Dr G U Pope was a distinguished missionary, well versed in Tamil language and literature and he did not accept Caldwell’s theories; and in a series of articles in in the Indian Antiquary he suggested enquiry as to whether in these theories “certain things have not been taken for granted rather too suddenly in regard to the Dravidian dialects. He was the first to point out that the law of harmonic sequence of vowels did not obtain in most of these dialects. He was further of opinion,

 

1.”that between the languages of Southern India and those of the Aryan family there are many deeply seated affinities;

2.that the differences between the Dravidian tongues and the Aryan are not so great as between the Celtic (for instance) and the Sanskrit; and

3.that, by consequence, the doctrine that the place of Dravidian dialects is rather with the Aryan than with the Turanian family of languages is still capable of defence. He illustrated these positions by means of copious illustrations and pointed out that the resemblances (appeared) most frequently in the more cultivated Dravidian dialects and that the identity was most striking in the names of instruments, places and acts connected with a simple life.

 

He also promised to consider derivative words in a future paper and to show that the prefixes and affixes were Aryan; but no such papers have been published.

Scythian and Dravidian

The Scythian affinities referred to are the affinities asserted to exist in the Dravidian languages by Bishop Caldwell, who following the Danish philologist Rask, use the term Scythian in the sense of what we have been generally called Turanian – non Aryan and Non Semitic languages. But the editors of Linguistic Survey of India and most of the scholars have rejected this affinity.

 

Professor J Kennedy wrote that rice, peacock etc. were known to Greeks in the fifth century BCE by their Dravidian (Tamil) names. This was due to Caldwell’s writing who said that these are Tamil words.

 

Bishop Caldwell was indeed a great magician! He pronounced a spell and there sprung up a vision of Phoenician sea men voyaging with Solomon’s servants down the West coast of India to Ophir once in three years to bring gold, silver, algum, peacocks and apes. This vision still fascinates some Dravidian scholars, though it had been pointed out that Hebrew ‘algum’ was not wanted for its scent, but to be used as props and pillars for which sandalwood was wholly unfitted, that peacocks could be had in plenty in Gujarat, and that there was no gold or silver for export from India. The whole vision rests on Bishop Caldwell’s opinion that ‘oryza’ (rice) algum and tawas (Tuki=Tokai= tawas=peacock) are derived from Tamil words. It is time that the spell is broken”.

 

–R Swaminatha Aiyar, Dravidian Theory, Motilal Banarsidass, 1975

பெண்டிர்க்கழகு பேசாதிருத்தல்! குறள் கதை!! (Post No.5319)

WRITTEN by London swaminathan

Date: 14 August 2018

 

Time uploaded in London –14-42 (British Summer Time)

 

Post No. 5319

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

பெண்டிர்க்கழகு பேசாதிருத்தல்!’ (நறுந்தொகை, அதிவீர ராம பாண்டியன்)

 

புலவர் புராணம் சொல்லும் கதை:-

 

திருவள்ளுவரிடம் ஒரு கோஷ்டி வந்தது. ஐயா எங்களுக்குள் பெரிய தர்க்கவாதம். நீவீர் சொல்கிறீர்:

 

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை (குறள் 41)

மநு ஸ்ம்ருதியும் (3-78) இதையே செப்பும்.

 

ஆயினும்  இந்த துறவற நண்பர் நீவீர் சொல்லுவதற்கு ஆதாரம் என்ன? பிராக்டிகல் ஆதாரம், (PRACTICAL EXAMPLE) உதாரணம் உண்டா என்று கேட்கிறார்.

 நீர் சொல்கிறீர்; கிரஹஸ்தாஸ்ரம (இல்லறத்தான்)த்தில் உள்ளவன்தான், பிரம்மசர்யம்வானப் ப்ரஸ்தம், ஸந்யாசம் ஆகிய மூன்று நிலையில் உள்ளவர்களுக்கும் உதவுகிறான் என்று இதற்கெல்லாம் ப்ரூப் PROOF வேண்டாமா?

 

இப்படி வந்த கோஷ்டி Cவள வள என்று பேசிக் கொண்டிருந்தபோது வள்ளுவர் ஐயா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். வந்தவர்கள் சொன்னதையெல்லாம் கேட்டுக் கொண்டே இருந்தார்.

 

இவர்கள் மீண்டும் வாய் திறப்பதற்குள் வள்ளுவர் வாய் திறந்தார்.

 

வாசுகி! ஏ வாசுகி! சாதம் ரொம்ப சுடுகிறது; கொஞ்சம் விசிறி கொண்டு வந்து வீசேன்– என்றார்.

அவர் பேசி முடிப்பதற்குள் அங்கே வள்ளுவன் மனைவி வாசுகி அம்மா ஓடோடி வந்தார். விசிறியால் வீசத் துவங்கினார். அந்த அம்மாள் பாதி நீர் இறைத்துக் கொண்டிருந்த தருணத்தில் கணவர் அழைத்தவுடன் ஓடோடி வந்து விட்டார்.

 

 

வள்ளுவர் கொஞ்சம் லேஸாக கண்ணால் சைகை செய்து கொல்லை புறம் போங்கள் என்றார். அவர்கள் அங்கே போனவுடன் ஒரு அதிசயக் காட்சியைக் கண்டனர். பாதிக் கிணற்றில் நின்று கொண்டிருந்த குடம் அப்படியே அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது (தண்ணீருடன்!)

அவ்வளவு தண்ணீர் இருந்த போதிலும் அது கீழே போகாமல் அப்படியே தொங்கிய அதிசயத்தைப் பார்த்து வியந்தனர். அதற்குள் வாசுகி அம்மாள் வந்து ஒன்றுமே நடக்காதது போலத் தன் வேலையைத் தொடர்ந்து செய்தார்.

 

வந்தவர்களுக்கும் விடை கிடைத்தது:

இல்லறமே சிறந்தது!

வாசுகி போன்ற ஒரு மனைவி இருந்தால் பெய்யெனப் பெய்யும் மழைஎன்று சொல்லிக் கொண்டே வீடு திரும்பியது வாக்குவாத கோஷ்டி.

 

சுபம்–

மநுவின் 4 கேள்விகளும் 4 அதிசயப் பிரார்த்தனைகளும்! (Post No. 5317)

மநு நீதி நூல்- Part 25

 


WRITTEN by London swaminathan

Date: 13 August 2018

 

Time uploaded in London –15-40 (British Summer Time)

 

Post No. 5317

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

மநு நீதி நூல்- Part 25

 

 

ஸ்லோகம் 240 முதல் 286 (மூன்றாம் அத்தியாயம் முடிவு) வரை பார்ப்போம்.

 

முன்னதாக ஸ்லோகம் 203-ல் சொன்ன விஷயத்தை நினைவு கூறுதல் சாலப் பொருத்தம் ஆகும்; கடவுள்களுக்குச் செய்யும் கிரியைகளைவிட, இறந்து போன முன்னோர்களுக்குச் செய்யும் கிரியைகளே முக்கியமானவை. முதலில் கடவுளுக்குக் கொடுத்துவிட்டு பின்னர் பிதுர் காரியங்களை செய்வது ஏன் தெரியுமா? தேவ கார்யங்கள், பிதுர் கார்யங்களுக்கு வலிமை சேர்க்கின்றன!

ஸ்லோகம் 3-241 முதல் யார் ஸ்ரார்த்த்தம் சாப்பிடுவதை பார்க்கக்கூடாது என்கிறார் மநு.

 

3-251- நீங்கள் நன்றாக சாப்பிட்டீர்களா என்று கேட்டுவிட்டுக் கை கழுவ வாய் கொப்பளிக்க தண்ணீர் தரவேண்டும்.

 

3-254- நான்கு கேள்விகள் கேட்கச் சொல்லுகிறார்

1.ஸ்வரிதம்- நீங்கள் நன்றாகச் சாப்பிட்டீர்களா? (ஏகாக ஸ்ரார்த்தத்தில்)

2.சுஸ்ருதம்= நன்கு சமைக்கப்பட்டிருந்ததா? (கோஷ்டி ஸ்ரார்த்தத்தில்)

3.ஸம்பன்னம்= எல்லாம் சரியாக இருந்ததா? (நாந்தீ ஸ்ரார்த்தத்தில்)

4.ருசிதம்= அமோகமாக இருந்ததா? (தேவ ஸ்ரார்த்தத்தில்)

 

3-255-ல் தர்ப்பையால் ஆசனம் போடுவது, சாணத்தால் வீட்டை மெழுகுவது முதலியன பற்றிச் சொல்கிறார்

 

நான்கு பிரார்த்தனைகள்

3-257-ல் திவசப் பிராமணர்களை தென் முகமாக நோக்கி 4 பிரார்த்தனை செய்யச் சொல்கிறார் மநு:

 

1.“சுவாமிகளே! என் குலத்தில் கொடைத் தன்மையுடைவர்கள் அதிகரிக்க வேண்டும்.

2.வேதமானது ஓதுவதாலும், ஓதுவிப்பதாலும் யக்ஞம் செய்வதாலும் வளரக்கடவது.

 

3.புத்திர, பௌத்திரர் (மகன், பேரன்) என்று குலம் வளரக் கடவது; பெரியோர்களிடத்தும் வேதாந்த விசாரத்திலும் அன்பு குறையாமல் பெருகட்டும்

 

4.மற்றவர்களுக்குக் கொடுப்பதாற்காக எங்களிடம் செல்வம் சேரக் கடவது.

 

உலகில் கொடை, தான தருமம் பற்றிப் பேசும் நூல்கள் தமிழிலும் ஸம்ஸ்க்ருதத்திலும் மட்டுமே உண்டு; ஏனையோர் இது நடந்தவிடத்து அதைப் போகிற போக்கில் புகழ்வர். ஆனால் இந்து மதத்தில் மட்டுமே அதை ஒரு புண்ணிய காரியம் என்றும், புண்ணியம் இல்லாவிடினும் மற்றவர்கள் நன்றாக வாழ்வதற்காக இதைச் செய்யவேண்டும் என்றும் அறத்தின் ஒரு பகுதியாக சொல்லுவர். திருக்குறளிலும், ரிக் வேதத்திலும் இதைக் காணலாம். விருந்தோம்பல் என்பது பற்றிப் பேசாத ஸம்ஸ்க்ருத, தமிழ் நூல்கள் கிடையாது. இதனால்தான் ஆரிய- திராவிட பிரிவினை வாதம் தவிடு பொடியாகிறது. பாரதத்தில் மட்டுமே வளர்ந்த மண்ணின் மைந்தர்கள் உருவாக்கீய கொள்கை இது! ‘செல்வத்தின் பயனே ஈதல்’, ‘அறத்தான் வருவதே இன்பம்’, ‘ஆய் அறநிலை வணிகன் அல்லன்’ என்றெல்லாம் தமிழ் இலக்கியம் விதந்து ஓதும். ‘தனக்கு மட்டுமே சமைப்பவன் பாவி’ என்று கீதையும் வேதமும் சொல்கிறது.

 

மாமிஸ உணவு

ஸ்லோகம் 267 முதல் எந்தெந்த மாமிஸ உணவு திவசத்துக்கு, ஸ்ரார்த்தத்துக்கு உகந்தது என்று பேசுகிறது. மூன்று வருணத்தாரும் ஸ்ரார்த்தம் செய்ததால் இப்படி மாமிஸ உணவு பற்றி மநு குறிப்பிடுகிறார். சங்க இலக்கியம் மிகத் தெளிவாக மாமிஸமற்ற பிராஹ்மணர் உணவைப் போற்றுகிறது அது மட்டுமல்ல நாயும் கோழியும் புகாத அந்தணர் தெரு (அக்ரஹாரம்) பற்றியும் சங்க இலக்கிய நூல்கள் பாடுகின்றன.

 

ஸ்லோகம் 273 முதல் மாளய பக்ஷ ஸ்ரார்த்தம் பற்றிக் காண்கிறோம்

ஸ்லோகம் 275-ல் நம்பிக்கையுடன், பக்தி சிரத்தையுடன் கொடுக்கும் உணவு முன்னோர்களுக்கு என்றன்றும் ஏற்புடைத்தே என்கிறார்.

 

 

ஸ்லோகம் 284ல் வஸு, ருத்ர, ஆதித்ய என்ற மூன்று தலை முறையினருக்குச் செய்வது பற்றிச் சொல்கிறார்; வஸு- இறந்து போன தந்தை, ருத்ர- தாத்தா, ஆதித்ய= கொள்ளுத் தாத்தா.

 

அமிர்தம் என்பது என்ன?

 

285- ஒவ்வொரு மனிதனும் விகஸத்தையும் அமிர்தத்தையும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும்; விகஸம் என்பது- ஸ்ரார்த்த உணவின் மிகுதி; அமிர்தம் என்பது- யக்ஞ உணவின் மீதி

 

286: முடிவுரை

இதுவரை பஞ்ச மஹா யக்ஞம், சிரார்த்தம் பற்றிச் சொன்னேன்; இனிமேல் பிராஹ்மணர்கள் முதலியோர் வாழ்க்கை நடத்துவது பற்றிச் சொல்லப் போகிறேன்.

 

 

 

 

TO BE CONTINUED IN FOURTH CHAPTER……

 

XXX SUBHAM XXXX

தமிழர்களின் பழக்க வழக்கங்கள்! (Post No.5315)

Written by S Nagarajan

Date: 13 August 2018

 

Time uploaded in London – 7-55 AM  (British Summer Time)

 

Post No. 5315

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

சங்க இலக்கியத்தில் காணப்படும் தமிழர்களின் பழக்க வழக்கங்கள்!

 

ச.நாகராஜன்

 

பழம் பெரும் இலக்கியமாக இலங்கும் சங்க இலக்கியம் தமிழர்களின் பழக்க வழக்கங்களைப் பற்றிய பல சுவையான செய்திகளைத் தருகிறது.

 

இவற்றை பகுத்தறிவு நோக்கோடு பார்க்கக்கூடாது; அறிவியல் உரைகல்லில் உரைக்கக் கூடாது.

இவை தமிழர்களின் வாழ்வியல் நம்பிக்கைகள்; அந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் அவர்கள் வாழ்வு சிறந்து விளங்கியது.

சில அரிய வழக்குகளின் பட்டியல் கீழே தரப்படுகிறது.

 

குடவோலை எடுத்துப் பிரமாணம் செய்தல்

 

நுளைச்சியர் சுறவுக்கோடு நட்டு வருணனுக்குப் பரவுக்கடன் கொடுத்தல்

 

பார்ப்பார் தூது செல்லுதல்

 

மகளிர் சுவரில் கோடிட்டு நாள் எண்ணுதல்

 

மகளிர் பல்லி சகுனம் கேட்டல்

 

பிறை தொழுதல்

 

வேங்கை மலர் கொய்ய புலி புலி என்று கூவல்

 

சிறுமியர் அலவனாட்டுதல்

 

கிளி கடிதல்

 

 

வண்டலயர்தல்

 

சிற்றில் இழைத்துச் சிறு சோறடுதல்

 

ஓரையாடுதல்

 

மன்னர் கடகுக்காரரை அழைத்துப் படை காணுதல்

 

வீரர் போருக்குப் புறப்படுமுன் நடுகல்லைப் பூசித்தல்

 

நல்ல நிமித்தம் பார்த்தல்

 

வேளாப்பார்ப்பான் சங்கறுத்தல்

 

கொங்கர் மணியரை ஆர்த்து மறுகின் ஆடுதல்

 

மணமகளைப் புதல்வர் பெற்ற மகளிர் நால்வர் குளிப்பாட்டல்

 

இடையர் இடபத்தின் கழுத்தில் மூங்கில் குழாயில் உணவடைத்துக் கட்டி நிரை மேய்த்துச் செல்லல்

 

இறந்த வீரனுக்குரிய நடுகல் இடத்து அவன் பிடித்த வேல் முதலிய கருவிகளை ஊன்றியும் சார்த்தியும் வைத்தல்

உமணர் கழுதை மேல் உப்புப் பொதியை ஏற்றிச் செல்லல்

 

மேற்கண்டவை பாடல்களில் காணப்படும் செய்திகள்.

தமிழர் தம் பழம் இலக்கியங்களில் இப்படி அரிய செய்திகள் ஏராளம்  காணப்படுகின்றன.

 

மங்கையர் நெற்றியில் திலகம் இடும் பழக்கம் தொன்று தொட்டு பாரத நாடெங்கும் நிலவி வரும் பழக்கம்.

 

தமிழ் மங்கையரும் இதற்கு விலக்கல்ல. ஹிந்து மதத்தின் சிறப்புக்களில் இது ஒன்று. அடையாளங்களிலும் இது முக்கியமான ஒன்று.

 

பத்துப்பாட்டு நூல்களில் முதலாவதாக அமையும் திருமுருகாற்றுப்படையில் வரும் வரி இது:

 

திலகம் தைஇய தேங்கமழ்  திருநுதல் (திருமுருகாற்றுப்படை வரி 24)

 

நுதல் என்றால் நெற்றி. அது தேங்கமழ் திரு நுதல் ஆவது எப்போது? திலகம் இடும் போது!

 

நற்றிணையில் வரும் பாடல் வரி இது:

 

திலகம் தைஇய தேங்கமழ் திரு நுதல் (நற்றிணை 62 -6)

திருமுருகாற்றுப்படையில் காணப்படும் அதே வரி தான் இது.

 

கம்பன் சீதையை வர்ணிக்கும் போது வனிதையர் திலகம் என்கிறான். ஆக திலகம் என்பதை சிறப்புப் பட்டமாகப் பயன்படுத்த வழி கண்டவன் கம்பன்.

 

பின்னால் நமது நாளில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்; நடிகையர் திலகம் சாவித்திரி என்று பல திலகங்களைக் காண முடிகிறது.

 

திலகம் திருநுதலின் அலங்காரம்; மங்கலப் பொருள்; அழகையும் சிறப்பையும், மங்கலத்தையும் கூட்டுவது.

ஆகவே அதை சிறந்தவர்களின் பட்டப் பெயரில் இடம் பெறச் செய்து விட்டோம்!

 

கணவன் உடனுறைந்து இருக்கும் காலத்தில் மட்டுமே மகளிர் பூச்சூட்டுவர் சங்க காலத்தில். அவன் வெளியிடம் சென்றாலோ பூவைச் சூட்ட மாட்டார்.

 

ஐங்குறுநூறு தரும் வரி இது:

போதவிழ் கூந்தலும் பூ விரும்புகவே (ஐங்குறுநூறு  496-5)

நற்றிணையில் வரும் வரிகள் இவை:

மண்ணாக் கூந்தல் மாசறக் கழீஇச்

சில்போது கொண்டு பல்குரல் அழுத்திய (நற்றிணை 42:8,9)

 

 

இதுமட்டுமன்றி மகளிர் காதில் பூவும் தளிரும் செருகிக் கொள்வர்.

இதை விளக்கும் பாடல் வரிகள் வருமாறு:-

 

வண்காது நிறைந்த பிண்டி ஒண்தளிர்  (திருமுருகாற்றுப்படை வரி 31)

செயலைத் தண்தளிர் துயல்வரும் காதினள் (திருமுருகாற்றுப்படை வரி 207)

 

திருமணத்தின்போது மணமகன் மணமகள் கூந்தலில் மலர் சூட்டுவது வழக்கம். இதை ஐங்குறுநூறு கூறுகிறது.

நன்மனை வதுவை அயர இவள்

பின்னிருள் கூந்தல் மலர் அளிந்தோயே (ஐங்குறுநூறு 294 – 4,5)

 

கணவன் இறந்து விட்டால் கைம்மை அடைந்த மகளிர் பூச்சூட்ட மாட்டார்கள்.

 

இது பற்றிக் கூறும் புறநானூற்றுப் பாடல்கள் சிலவற்றைப் பார்ப்போம்:

 

ஒண்ணுதல் மகளிர் கைம்மை கூர

அவிர் அறல் கடுக்கும் எம்மென்

குவையிரும் கூந்தல் கொய்தல் கண்டே (புறம் 25; 12-14)

 

கொய்ம்மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய (புறம் 261: 17-18)

 

மண்ணுறு மழித்தலைத் தெண்ணீர் வரை (புறம் 280:1)

 

புலி புலி என்று கூவி அச்சுறுத்தினால் வேங்கை மரம் தாழும் என தமிழ் மகளிர் நம்பினர். அப்படிக் கூவி அது தாழும் போது மலர்களைக் கொய்வது அவர்கள் வழக்கம்.

 

இதை விளக்கும் பல பாடல்கள் சங்க இலக்கியத்தில் உள்ளன:

ஏறாது இட்ட ஏமம் பூசல் (குறுந்தொகை 241:5)

 

ஒலிசினை வேங்கை கொய்குவம் சென்றுழிப்

புலிபுலி என்னும் பூசல் தோன்ற (அகநானூறு 48:6-7)

 

பொன்னேர் புதுமலர்  வேண்டிய குறமகள்

இன்னா இசைய பூசல் பயிற்றலின் ….

… ஆகொள் வயப்புலி ஆகும் அஃதென  (அகநானூறு 52:3-6)

கருங்கால் ஏங்கை இருஞ்சினைப் பொங்கர்

நறும்பூக் கொய்யும் பூசல்  (மதுரைக்காஞ்சி 296-297)

 

தலைநாட் பூத்த பொன்னிணர் வேங்கை

மலைமார் இடூஉம் ஏமப் பூசல் ( மலைபடுகடாம் 305-306)

 

இப்படி நூற்றுக்கணக்கான பழக்க வழக்கங்களை விளக்கும் ஏராளமான பாடல்களை சங்க இலக்கியம் தருகிறது.

படித்தால் சங்க கால  வாழ்க்கை பற்றி நன்கு அறிந்து கொள்ள முடியும்!

***