ஜோதிட பலன் பார்க்க திதியே முக்கியம் (Post No.3861)

Written by S NAGARAJAN

 

Date:29 April 2017

 

Time uploaded in London:-  7-28 am

 

 

Post No.3861

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

ஜோதிடமே துணையாகும்

 

ஜோதிட பலன் பார்க்க திதியே முக்கியம்:

விதி விளக்கம் – 1

 

 

ச.நாகராஜன்

 

ஜோதிடம் கடல் போன்ற ஒரு சாஸ்திரம். இதை நீந்திக் கடந்தவ்ர்கள் மிகச் சிலரே.

 

ஜோதிடத்தில் பலன் பார்க்க ஏராளமான அம்சங்கள் உள்ளன. திதியைப் பற்றி அவ்வளவாக யாரும் பொதுவாகப் பொருட்படுத்துவதில்லை.

ஆனால் ‘சோதிட தர்ஸனம் என்னும் விதி விளக்கம்’ என்னும் நூல் திதியின் அற்புத மஹிமைகளை நன்கு விளக்குகிறது.

1897ஆம் ஆண்டு “க்வர்ன்மெண்ட் உத்தியோகஸ்தராயிருந்து பென்ஷன் வாங்கி வரும்  மிட்டா – முனிசாமி செட்டி. பி.ஏ. (பச்சையப்பன் காலேஜ்)” எழுதிய இந்த நூல்  1934ஆம் ஆண்டு சென்னையில் பதிக்கப்பட்ட ஒரு நூலாகும்.

 

நூலாசிரியர் தரும் பல்வேறு தகவல்கள் மிகுந்த சுவாரஸ்யமானவை.

 

அவற்றில் சிலவற்றை இந்தக் குறுந்தொடரில் பார்க்கலாம்.

 

  1. இந்து விரதமும் திதியும்    

 

நம் முன்னோர்கள் ஏற்படுத்தி இருக்கும் விரதங்களும் முக்கிய பண்டிகைகளும் திதியை முதன்மைப் படுத்தியே அமைக்கப்பட்டுள்ளன. அனேக விரதங்களில் முக்கியமான சிலவற்றைக் கீழே காணலாம்:

 

 

  • கணேச சதுர்த்தி அல்லது விநாயக சதுர்த்தி – சதுர்த்தி
  • ஸ்கந்த ஷஷ்டி – ஷஷ்டி
  • ரத சப்தமி     – சப்தமி
  • கிருஷ்ண ஜயந்தி அல்லது கிருஷ்ணாஷ்டமி – அஷ்டமி
  • ஸ்ரீ ராம நவமி – நவமி
  • மஹா சிவராத்திரி,ம்ஹா சதுர்த்தசி – சதுர்த்தசி
  • சித்திரா பௌர்ணமி – பௌர்ணமி
  • மாளய அமாவாசை அல்லது சர்வபிதுரு அமாவாசை – அமாவாசை

 

இது தவிர இறந்த கால திதி அனுஷ்டானம், சில நட்சத்திர சம்பந்தமான திதிகள், சங்கராந்தி சம்ப்ந்தப்பட்ட திதிகள், ராமாயணம், ம்ஹாபாரதம் ஆகிய காவியங்களில் வரும் முனீஸ்வரர், ஆசாரியர் ஆகியோரின் பிறந்த அல்லது திதிகள் போன்றவை திதிகளின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றன.

ஒவ்வொரு ஹிந்துவும் இறந்த கால திதியை அனுஷ்டித்தே பெரியோர்களுக்குச் சிரார்த்தம், தர்ப்பணம் முதலியவற்றைச் செய்கிறார்.

 

 

ஆகவே விதி விளக்கத்திற்குரிய்  திதியை ஒவ்வொருவரும் தீர்க்கமாக அனுஷ்டிக்க வேண்டும்.

 

திதிகளே நவகிரகங்களுக்கு இருக்கும் ந்ன்மை தீமை பலன்களைத் த்ருகிறது. தீமையான திதியினால் அமைந்த கிரகங்களும் கூட எக்கதியில் அவைகள் நன்மையோ அல்லது இஷ்ட ப்ராப்தியோ செய்கின்றனவென்றும் , தீமையோ அல்லது மாரகமோ எப்போது செய்கின்றனவென்றும், எக்காலத்தில் யோகம் அதாவது, ஒரு ஜன்மாவின் லௌகிக அந்தஸ்து பொருள், சொத்து, க்ஷேமம், இவைகளுக்கு தீமையையோ அல்லது க்ஷேமத்தையோ விளைவிக்கின்றன என்றும் திதிகளினாலேயே ஏற்படுகின்றன.

 

 

ஒவ்வொருவரும் தங்கள் திதியை மிக நுட்பமாகக் கவனித்து வந்தால் அதன் பலனையும் உற்று நோக்கி வந்தால் திதியில் இருக்கும் தெய்வீக ரகசிய ந்ன்மை, தீமையை அறிய முடியும்.

 

இப்படிக் கூறும் இந்த ஜோதிடர், சோதிடத்தில் திதியின் மஹிமையை அலசி ஆராய்ந்து தருகிறார். நூலாசிரியர் தரும் மேலும் சில் சுவையான தகவல்களை அடுத்துக் காண்போம்.

-தொடரும்

கழுதையும் குயிலும்; தமிழ்ப் புலவர் ஒப்பீடு! (Post No.3849)

Written by London swaminathan

Date: 25 APRIL 2017

Time uploaded in London:- 6-19 am

Post No. 3849

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com

 

குயில், உங்களுக்கு ஏதாவது கொடுத்ததா? கழுதை உங்களுக்கு எதையேனும் கொடுக்க மறுத்து உங்களை விரட்டியதா? இல்லையே. பின்னர் ஏன் மக்கள், குயிலைக் காரணம் இல்லாமல் புகழ்கிறரர்கள்; கழுதையைக் காரணம் இல்லாமல் திட்டுகிறார்கள்? குயிலால் நமக்கு நன்மையும் வரவில்லை; கழுதையால் நமக்குக் கெடுதலும் வரவில்லை. இந்தப் புகழ்ச்சியும் இகழ்ச்சியும் அவரவர் குரலினால்தானே வந்தது? நாமும் இனிமையாகப் பேசினால் நமக்கும் குயில் போல் புகழ் உண்டாகும். கழுதை போலக் கத்தினால் நமக்கும் அவப்பெயர் உண்டாகும். இதை வலியுறுத்தி நீதி வெண்பா பாடிய புலவர் சொல்கிறார்:

 

மென்மதுர வாக்கால் விரும்பும் சகம் கடின

வன்மொழியினால் இகழும் மண்ணுலகம் — நன்மொழியை

ஓதுகுயிலேதங்குதவியது கர்த்தபந்தான்

ஏதபராதஞ் செய்த தின்று

–நீதி வெண்பா

பொருள்:-

 

நன் மொழியை = மெல்லிய இனிய ஓசையை

ஓது குயில் = கூவுகின்ற குயில்

ஏது உதவியது = நமக்கு என்ன கொடுத்து விட்டது?

இன்று = ஒன்றுமில்லை

கர்த்தபம் = கழுதை

ஏது அபராதம் செய்தது = என்ன கெடுதி செய்தது?

இன்று = எதுவும் இல்லை

 

(அவ்வாறிருக்க குயிலை மட்டும் உலகம்    விரும்புவதேன்?

அதன் மெல்லிய ஓசையினாலன்றோ!. ஆகவே)

 

சகம் = இந்த உலகம்

மென் = மெல்லிய

மதுர வாக்கால் = இன்சொலால்

விரும்பும் = யாரையும் விரும்பி மகிழ்கின்றது

மண்ணுலகம் = இன்சொல்லால் மகிழ்ந்த இவ்வுலகே

கடின = கொடுமையான

வன்மொழியினால் = வலிய சொல்லால்

இகழும் = எவரையும் இகழ்ந்து பேசும்

 

இதே (பெயர் தெரியாத)  புலவர் இன்னொரு பாடலும் பாடியிருக்கிறார்.

‘கனியிருப்பக் காய் கவர்ந்தற்று’

 

நாவின் நுனியில் நயம் இருக்கிற் பூமாதும்

நாவினிய நல்லோரும் நண்ணுவார் — நாவினுனி

ஆங் கடினமாகில் அத்திருவும் சேராள் முன்

ஆங்கே வரும் மரணமாம்

 

நாவின் நுனியில் = நாக்கு முனையில்

நயம் இருக்கில் = நல்ல நயமான சொற்கள் வெளிவந்தால்

பூமாதும் = லெட்சுமியும்

நா இனிய = இனிய சொற்களால்

நல்லோரும் நண்ணுவர் = பெரியோரும் அணுகுவர்.

நாவின் நுனி = அவ்வாறின்றி நாக்கின் நுனியானது

கடினம் ஆம் ஆகில் = கொடிய சொற்களைக் கூறினால்

அத் திருவும் = முன்னே சொன்ன லெட்சுமியும்

சேராள் = ஆங்கு வரமாட்டாள்

ஆங்கு மரணம் வரும் = சாவும் நேரிடலாம்.

My old article:

ஞயம்பட உரை; வெட்டெனப் பேசேல்; பழிப்பன பகரேல்;

Post No.3114; Date: 2 September 2016

 

–Subham–

‘நல்லோர்கள் எங்கே பிறந்தாலுமென்?’ – நீதி வெண்பாவும் மனு நூலும் (Post No.3832)

Written by London swaminathan

 

Date: 19 APRIL 2017

 

Time uploaded in London:- 21-51

 

Post No. 3832

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com 

 

மனு தர்ம சாஸ்திரத்தில் ஒரு அழகான பொன்மொழி உள்ளது. கீழ் ஜாதி மேல் ஜாதி பற்றியெல்லாம் கவலைப் படாதே.

 

“விஷத்திலிருந்தும் அமிர்தம் கிடைக்கும்;

குழந்தையிடமிருந்தும் புத்திமதி கிடைக்கும்;

எதிரியிடமிருந்தும் நற்குணத்தைக் கற்கலாம்;

தூய்மையற்ற பொருள்களிலிருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்கலாம்”

மனு ஸ்ம்ருதி 2-239

 

“பெண்கள், நகைகள், கல்வி, நீதி/சட்டம்,

தூய்மைபெறுதல், நல்ல அறிவுரை, கைவினைப் பொருட்கள்

ஆகியவற்றை எவரிடமிருந்தும் ஏற்கலாம்”.

மனு ஸ்ம்ருதி 2-240

 

“அரிய சந்தர்ப்பத்தில், பிராமணர் இல்லாதவரிடத்தும் வேதத்தைக் கற்கலாம். அவ்வாறு கற்கும் வரை, அவரைக் குருவாகக் கருதி அவர் பின்னால் கைகட்டி, வாய் புதைத்து மரியாதையுடன் செல்லலாம்”.

மனு ஸ்ம்ருதி 2-241

 

இதையே ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனும் புற நானூற்றில் சொன்னார் (183)

 

“வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்

கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,

மேற்பால் ஒருவனும் அவன் கண் படுமே”

 

பொருள்:-

“நான்கு ஜாதிகளில்,  கீழ்ஜாதிக்காரன் ஒருவன் கற்றறிந்த மேதாவியானால் மேல் ஜாதிக்காரனும் அவனிடம் போய்க் கற்கலாம்” (புறம்.183)

 

அதாவது 4 ஜாதிகளில், கற்றுத் தேர்ந்த சூத்திரனிடம் பிராமணனும் கற்கலாம் என்பது இதன் பொருள்

 

இதை நீதி வெண்பா வேறு வழியில் அழகாகச் சொல்லும். உலகில் உயர்ந்த பொருட்களாகக் கருதப் படும் 11 பொருட்களைப் பாருங்கள். அவை , கிடைக்கும் இடங்கள் உயர்ந்தவை அல்ல; அப்படியும் அதனைப் போற்றுகிறோம். அது போலத்தான் மேலோர்கள்/ சான்றோர்கள் எங்கும் தோன்றுவர்.

 

காந்தி, சத்ய சாய் பாபா போன்றோர் ஒரு சிறு கிராமத்தில் ஊர் பேர் தெரியாத தாய் தந்தையருக்குப் பிறந்தனர். ஆயினும் அவர்கள் பிறந்த இடமும் பெற்றோர்களும் வணக்கத்திற்குரியோர் ஆயினர். மஹாபாரதத்தில் கசாப்புக் கடைக்காரன் தர்ம வியாதன், ராமாயணத்தில் சபரி, குகன் ஆகியோர் காலத்தாலழியாத கவின்மிகு காவியத்தில் இடம்பெற்றுவிட்டனர்.

 

வள்ளுவனும் செப்புவது அஃதே

 

மேற்பிறந்தாராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்

கற்றார் அனைத்திலர் பாடு – குறள் 409

 

பொருள்:

மேல் ஜாதியில் பிறந்தவராக இருந்தாலும், கல்லாதவராக இருந்தால் கீழ்ஜாதியில் பிறந்து கல்விமானாக விளங்குவோர் போல பெருமை பெற முடியாது

நீதி வெண்பா சொல்லும் 11 பொருட்கள்:-

 

 

தாமரைபொன் முத்துச் சவரங்கோ ரோசனைபால்

பூமருதேன் பட்டுப் புனுகுசவ்வா – தாமழன்மற்

றெங்கே பிறந்தாலு மெள்ளாரே நல்லோர்கள்

எங்கே பிறந்தாலு மென்

நீதிவெண்பா 1

 

பொருள்:-

தாமரைப் பூவும் தங்கமும் முத்தும் சாமரையும் கோரோசனையும் பாலும், அழகிய மணமுள்ள தேனும், பட்டும் புனுகும் சவ்வாதும் எரியும் நெருப்பும் — ஆக இப்பதினொன்றும் — எவ்வளவு தாழ்ந்த இடத்திலிருந்து கிடை த்தாலும் மக்கள் இகழ மாட்டார்கள் ஆதலால் நல்லவர்கள் எந்த இனத்தில் எந்த இடத்தில் பிறந்தாலும் அதனால் என்ன?

(தாழ்வு உண்டாகாது)

தாமரை சேற்றில் விளையும்;

தங்கம் மண்ணில் கிடைக்கும்;

முத்து, சிப்பிப் பூச்சியின் வயிற்றில் பிறக்கும்;

சாமரம் என்பது ஒரு விலங்கின் மயிர்/ முடி;

கோரோசனை மாட்டின் வயிற்றில் கிடைக்கும்;

பால், பசுவின் மடியிலிருந்து கறக்கப்படும்;

தேன், மெழுகு போன்ற அடையிலிருந்து கிடைக்கும்;

பட்டு, பட்டுப் புழுவின் நூற்பு;

புனுகு, ஒரு பூனையின் அழுக்கு;

சவ்வாது மானிடத்திலிருந்து   கிடைக்கும்;

நெருப்பை, தாழ்ந்த கட்டையை எரித்தும் பெறலாம்;

அது போலவே நல்லோரும் எங்கும் பிறப்பர்.

 

–Subham–

சங்க இலக்கியத்தில் வேளாப் பார்ப்பான் (Post No.3826)

Written by London swaminathan

 

Date: 17 APRIL 2017

 

Time uploaded in London:- 16-50

 

Post No. 3826

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com 

 

பிராமணர்களை ஆறு தொழில்கள் செய்வோர் என்று சங்கத் தமிழ் நூல்களும், தமிழ் வேதமாகிய திருக்குறளும் (560) போற்றுகின்றன. அது என்ன ஆறு தொழில்கள்?

1.வேட்டல் (வேள்விகளை/யாக யக்ஞங்களை செய்தல்)

2.வேட்பித்தல் (செய்துவைத்தல்)

3.ஓதல் (வேத அத்யயனம் செய்தல்)

4.ஓதுவித்தல் (ஏனையோருக்கு சொல்லிக்கொடுத்தல்)

5.ஈதல் (தானம் கொடுத்தல்)

6.ஏற்றல் (தானம் வாங்குதல்)

 

இதை சம்ஸ்கிருதத்தில் யஜன, யாஜன, அத்யயன, அத்யாபன, தான, பிரதிக்ரகம் என்பர்.

கிருத யுகத்தில், பிராமணர்கள், ஆறு தொழில்களை மட்டும் செய்துவந்தனர்.அதற்குப் பின்னர் வந்த யுகங்களில் அமைச்சர் தொழில், போர்த் தொழில் முதலிய பல தொழில்களைச் செய்ததை நாம் மஹாபாரதம் மூலம் அறிகிறோம். கலியுகத்திலோ அவர்கள் செய்யாத தொழில் இல்லை!

தமிழகத்தைப் பொறுத்த மட்டில் பிராமணர்கள் தூது போகும் தொழிலைச் செய்ததையும் சங்க இலக்கியத்தின் மூலமும், தொல்காப்பியத்தின் மூலமும், அறிகிறோம். அகநானூற்றில் வரும் செய்தி புதுமையானது. வேள்வி (யாக, யக்ஞங்கள்) செய்யாத பார்ப்பன ஜாதி சங்குகளை அறுத்து வளையல் செய்த விஷயத்தை அது சொல்கிறது.

 

வேளாப் பார்ப்பான் வாளரந்துமித்த

வளைகளைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன,

தளை பிணி அவிழா, கரி முகப் பகன்றை

………………………………..”

–அகநானூறு 24, ஆவூர் மூலங்கிழார்

பொருள்:–

“வேள்வியைச் செய்யாத பார்ப்பான் கூரிய அரத்தால் அறுத்தெடுத்த வளைகள் போக, மிஞ்சிய சங்கின் தலையைப் போன்ற கட்டமைந்த பிணிப்பு அவிழாத வலப்பக்கம் சுரிதலையுடையன பகன்றையின் அரும்புகள். அவை மலரும் காலமான…………….”

 

சிவபெருமானையே உனக்கு குலம் கோத்திரம் ஏதேனும் உண்டா? என்று கேள்வி கேட்ட நக்கீரனார் ஒரு வேளாப் பார்ப்பார் என்பர்.

சங்கறுப்பது எங்கள் குலம், சங்கரனார்க்கு ஏது குலம்.
நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே
என்று சொன்னதாக வரலாறு.

 

காயத்ரீ சொல்லாதவர் விராத்யர்கள்

பிராமணர்கள் 5 வயதிலும் க்ஷத்ரியர்கள் 6 வயதிலும் , வைஸ்யர்கள் 8 வயதிலும் பூணூல் போட்டுக்கொண்டு காயத்ரீ மந்திரத்தை உபதேசம் பெற வேண்டும். அப்படித் தவறினால் முறையே 16, 22, 24 வயது வரை அவர்கள் உபதேசம் பெறலாம். அப்படிச் செய்யாவிடில் அவர்கள் காயத்ரீ மந்திரத்தைச் சொல்லும் உரிமையை  இழந்து விடுவார்கள் அவர்கள் விராத்யர்கள் என்று அழைக்கப்படுவர்-(மனு ஸ்ம்ருதி 2-37/40)

பிராமண, ஷத்ரிய, வைஸ்ய மக்கள் அவர்கள் ஜாதிப் பெண்களையே மணந்து கொண்டு பெற்ற பிள்ளைகள் சமயச் சடங்குகளைக் கைவிட்டு, காயத்ரீ சொல்லாமல் இருந்தால் அவர்கள் விராத்யர்கள் என்று அழைக்கப்படுவர் (மனு 10-20).

 

நாடோடியாகச் சுற்றும்யோகிகள், சித்தர்களையும் வேத நூல்கள் விராத்யர்கள் என்று அழைத்தன (குறிப்பாக அதர்வ வேதம்). அவர்கள் இப்படி வழித வறிப்போனாலும் அவர்கள் தாய் மதத்துக்குத் திரும்பி வர வேத நூல்களில் வழி செய்யப்பட்டுள்ளன. ஆகையால் இவர்கள் சமய அல்லது இன விரோதிகள் அல்ல. வழிதவறி வேறு சம்பிரதாயத்துக்கு சென்றவர்களே.

 

மாட்டு வண்டியில் இசைக் கலைஞர்களுடனும் காமக் கிழத்திகளுடனும் செல்லும் விராத்யர்கள் பற்றி அதர்வண வேதம் செப்பும்.

 

தமிழ் சித்தர்கள், பைராகிகள் முதலியோரும் எந்த விதி முறைகளையும் பின்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

My old article on the same subject:–

Who are Vratyas (outlaws)? Research Article No. 1794; 11th  April 2015

 

—Subham–

மேல் ஜாதி, கீழ் ஜாதி பற்றி நாலு பேர் சொன்னது! (Post No.3824)

Written by London swaminathan

 

Date: 16 APRIL 2017

 

Time uploaded in London:- 20-12

 

Post No. 3824

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com 

 

 

இனையது ஆதலின் எக்குலத்து யாவர்க்கும்

வினையினால் வரும் மேன்மையும் கீழ்மையும்

அனைய தன்மை அறிந்தும் அழித்தனை

மனையின் மாட்சி என்றான் மனுநீதியான்

–வாலி வதைப்படலம், கம்ப ராமாயணம்

கம்பன் சொல்கிறான்:-

எந்தக் குலத்தில் தோன்றியவர்க்கும் உயர்வும் இழிவும் அவரவர் செய்த செயல்களாலேயே வரும். இதனை உணர்ந்து இருந்தும் பிறன் மனைவியின் கற்பினை அழித்தாய் – என்று மனு நீதி சாஸ்திரத்தில் சொன்னபடி நடக்கும் ராமன் (வாலியிடம்) கூறினான்

xxx

 

வள்ளுவர் சொன்னதும் அதுவே

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமையான் – (திருக்குறள் –972)

 

என்று வள்ளுவன் இதை இன்னும் அழகாகச் சொல்லுவான்.

பொருள்:– எல்லா உயிர்க்கும் பிறப்பு என்பது ஒரே தன்மையுடையது; அங்கே வேறுபாடில்லை. செய்யும் தொழில்களால் – செயல்களினால் தான் வேறுபாடுகள்.

xxx

கிருஷ்ணன் சொன்னதும் அதுவே

 

சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண-கர்ம விபாகசஹ

தஸ்ய கர்தாரமபி மாம் வித்த்யகர்தாரம வ்யயம்

பகவத் கீதை 4-13

 

பொருள்:-

என்னால் குணங்களுக்குத் தக்கபடி நான்கு ஜாதிகள் உண்டாக்கப்பட்டன. செய்யும் தொழில்கள் குணங்களுக்கு ஏற்ப நடக்கின்றன. இதை உருவாக்கியபோதும் என்னை மாறுபாடில்லாதவனாக அறிவாயாக.

xxx

 

அவ்வையார் சொன்னதும் அதுவே

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ள படி

எவர் ஒருவர் பிறருக்கு கொடுத்து உதவுகிறாரோ அவர் பெரியோர்; கொடாதோர் கீழோர் என்று ‘நல்வழி’யில் அவ்வையாரும் சொல்கிறார்.

xxx

வேத கால ரிஷி சொன்னதும் அதுவே

நாம் எல்லோரும் தாயின் கருவிலேயே சமத்துவம் கண்டோம்; இப்பொழுது சகோதரத்துவத்தை நிச்சயமாக உருவாக்குவோம்.– ரிக் வேதம் 8-83-8

ந இஹ நானாவஸ்தி கிஞ்சன- ப்ருஹத் ஆரண்யக உபநிஷத்

பொருள்:-இந்த உலகில் உயிர்களிடத்தில் மட்டும் எந்த பேதமும் இல்லை.

 

ஜன்மனா ஜாயதே சூத்ரஹ

சம்ஸ்கராத் த்விஜ உச்யதே

வேத படனாத் பவேத் விப்ரஹ

பிரம்ம ஜானதி இதி பிராஹ்மணஹ

-சம்ஸ்கிருத ஸ்லோகம்

பிறக்கும்போது எல்லோரும் சூத்திரர்கள்;

உபதேசம் பெற்று பூணூல் போடுவதால் இருபிறப்பாளன்;

வேத அத்யயனத்தால் அறிஞன்;

பிரம்மனை அறிவதால் பிராம்மணன் ஆகிறான்

 

–subham–

 

Why did a Tamil King Kill 1000 Goldsmiths? (Post No.3821)

Written by London swaminathan

 

Date: 15 APRIL 2017

 

Time uploaded in London:- 15-59

 

Post No. 3821

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com 

 

Silappadikaram, the Tamil epic, is the story about Kannaki and Kovalan (The details of the story are given at the end of this post).

Matalan, the Brahmin, is a link in the story. He plays a key role and fills the gaps in the story. He advised the mighty king Cheran Senguttuvan about the good things in life (Dharma).

 

In the Nirpataik (Chapter) Kaathai of the epic he gives some important details:-

While King Senguttuvan was sitting on the throne, the Brahmana Matalan appeared before him and said:

“Long live the King! After going around the Potiyil Hills, sacred to the great sage (Agastya) and bathing in the famous ghat of Kumari, I was returning, when, as if impelled by fate, I went into Madura belonging to far-famed Tennavan (Pandya King) of the sharp sword.

 

There when Matari heard that beautiful (Kannaki) had defeated the Pandyan king of the mighty army with her anklet, she proclaimed in the Taateru manram (common meeting place of the cowherds and cowherdesses, and was generally under a tree):-

“O people of the cowherd community! Kovalan had done no wrong; it is the king who has erred; I have lost her to whom I gave refuge. Have the king’s umbrella and the sceptre fallen from the righteous path?”  With these words, she (Matari) threw herself into the burning flames in the dead of night.

Kavunti, distinguished for her penance, took a vow to die of starvation and thus gave up her life.

I heard in full detail all this and also of the devastation that over took the great city of Madurai ruled by the Pandyan of the golden car. Overcome by this I went back to my native place (KaveriPumpattinam, Port city of Chozas) and leant that Kovalan’s father distributed all his wealth in charity and entered Indra Viharas/Buddhist temple and practised penance. Kovalan’s mother died of pity. Kannaki’s father also gave away his wealth in religious gifts and adopted Dharma in the presence of Ajhivakas. His wife gave up her good life within a few days ( of Kovalan’s execution , followed by the death of Pandya King and Queen and Kannaki burning Madurai city).

 

The lady Matavi (courtesan), shorn of her hair with the flower wreaths therein, entered the Buddha Vihara and received the holy instruction. She told her mother that her daughter should not become a courtesan.

 

Brahmin Matalan continued………….

“These people died because, they heard this news from me, therefore I come to bathe in the holy waters of the Ganges (In order to purify myself). Long live you, O King of Kings!

 

When Matalan gave the king the tragic news about Kannaki’s parents, Kovalan’s parents, Cowherd woman Matari, Jain woman saint Kavunti and courtesan Matavi, the mighty lord of the Cheras, asked Matalan:

 

“May I hear what happened in the highly flourishing Pandya Kingdom after the king’s death?”

Matalan said,

“May you long live, King of the great world! You destroyed in a single day nine umbrellas of nine kings, who joined together in an alliance against your brother in law Killi valavan.

Human Sacrifice of 1000 people!

 

“The victorious (Pandya king) Ver Chezian residing at Korkai (Port City of the Pandyas), offered a human sacrifice of one thousand goldsmiths in a day to divine Pattini (chaste woman) who had twisted off one of her breasts (with which Kannaki burnt Madurai city).

“And when ancient Maduria lost her glory and was chafing in untold trouble owing to royal injustice, this Pandyan prince of the lunar line (Chandra vamsa) which was celebrated for the exemplary way in which it gave protection to the people of the southern regions, mounted in succession the royal throne of Madura, like the (sun) mounting in the morning, with his rays crimson, the divine chariot with the single wheel, yoked to seven horses with tiny bells attached to its necks. May the king of our land live for all time protecting the world from aeon to aeon; live he in fame.”

 

Thus, from the Brahmin Matalan we come to know the fate of cowherdess Matari, Jain woman saint Kavunti, Courtesan Matavi, Parents of Kannaki and Kovlan and the human sacrifice of 1000 goldsmiths.

 

Silappadikaram Story:–

 

Silappathikaram is the earliest among the available Tamil epics. It was written by a poet cum prince Ilango. The story of the epic is as follows:-

Kannaki and Kovalan were the daughter and son of wealthy merchants of the port city Kaveri Pumpattinam of Choza kingdom . Both of them were married  and before long Kovalan fell into the spell of courtesan Matavi. But Kannaki was a faithful wife and received Kovalan wholeheartedly when he came back to her. They wanted to start a new life away from their home town and so they travelled to the renowned city of the Pandyas, Madurai.

 

Kannaki came to Madurai along with her husband Kovalan to sell her anklet and start a new life. But, her husband was unjustly accused of stealing the anklet of the Queen by a GOLDSMITH and was killed under the orders of the Pandya King. To prove the innocence of her husband, and expose the heinous crime of the Great Pandya King, Kannaki went to his court with one of her anklets. She accused the Pandya King of having ordered the death of her husband without conducting proper trial. The Pandya Queen’s anklet had pearls whereas the anklet of Kannaki had gems inside. She broke her anklet in the presence of the king and proved that her husband Kovalan was not guilty. Immediately Pandya King and Queen died, probably of massive heart attack.

Image of Kannaki and Kovalan

Afterwards Kannaki burnt the city by twisting one off her breasts and throwing it in the streets of Madurai City , Capital of the Pandya Kingdom, sparing the elderly, invalids, children, Brahmins and women. In other words, all the bad people were burnt alive. Later she went to Chera Nadu (present Kerala in South India) and ascended to Heaven in the Pushpaka Vimana/ pilotless airplane, that came from the Heaven. When the Chera King Senguttuvan heard about it from the forest tribes who witnessed her ascension, he decided to go to Holy Himalayas to take a stone and bathe it in the holy Ganges and then carve a statue out of it for Kannaki. King Senguttuvan’s brother Ilango composed the Silappadikaram giving all the details about the chaste woman/Patni Kannaki. Though the incidents happened in the second century CE, the epic in its current form is from the fourth or fifth century CE (Post Sangam Period).

–Subham–

 

தண்ணீர், தண்ணீர்- தமிழ்ப் பழமொழிகள் (Post No.3804)

Compiled by London swaminathan

 

Date: 10 APRIL 2017

 

Time uploaded in London:- 9-06 am

 

Post No. 3804

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

நீர் இன்று அமையாது உலகம் என்பது சங்க இலக்கிய நூலான நற்றிணையில் கபிலர் (பாடல் 1) உதிர்த்த பொன்மொழி. அவருக்குப் பின்னர் வந்த வள்ளுவனும் அதை வான் சிறப்பு என்னும் அதிகாரத்தில் பயன்படுத்தினான்.

 

நீர் இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான் இன்று அமையாது ஒழுக்கு (Kural 20)

 

பொருள்:-

இந்தப் பூமியில் வாழும் எல்லா உ யிரினங்களும் தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது அது போலவே தர்மமும் மழை இல்லாமல் வாழ முடியாது.

 

 

மழை இல்லாவிடில் வறட்சி மிகும்; வறட்சி ஏற்பட்டால் பசிப்பிணி பெருகும்; பசி வந்தால் பத்தும் பறந்து போம் – என்பது பழமொழி. அதாவது மனிதனுடைய அடிப்படை நற்குணங்கள் அழிந்து, தர்மம் அழியும்.

 

இதை நன்கு அறிந்த இந்துக்கள் 3000 ஆண்டுகளுக்கு முன் சதபத பிராமணத்தில் சொல்லிவைத்தனர்.

 

சதபத பிராமணம் (கி.மு.850) கூறுவதாவது:

“தண்ணீர் தான் சட்டம்/தர்மம். ஆகையால்தான் உலகிற்கு எப்போதும் தண்ணீர் வந்து கொண்டிருக்கின்றது. எல்லாம் விதிகளின்படி நடக்கிறது. மழை தவறிவிட்டால் பலவீனமானவரை பலமுள்ளோர் தாக்குவர். ஏனெனில் தண்ணீர்தான் சட்டம்”.

இதையே வள்ளுவனும் கூறியிருப்பது (குறள்-20) கவனிக்கத்தக்கது.

 

மழையிலிருந்து உணவு உண்டாகிறது என்று கீதையில் பகவான் கிருஷ்ணனும் கூறுவார் (கீதை 3-14).

 

தமிழர்களின் தண்ணீர்ப் பழமொழிகளைப் படித்தால் அவர்களின் ஆழ்ந்த அனுபவ அறிவு புலனாகும்:–

 

1.நீரையும் சீராடு

2.நீரைச் சிந்தினையோ சீரைச் சிந்தினையோ?

3.நீரைத் தொட்டாயோ, பாலைத் தொட்டாயோ

 

4.நீராலே விலகினாய், நான் நெருப்பாலே விலகினேன்

5.நீரில் அமிழ்ந்த சுரைக்காய் போல

6.நீரில்லா நாடு நிலவில்லா முற்றம்

7.நீரும் கொல்லும், நெருப்பும் கொல்லும்

8.நீரும் பாசியும் கலந்தாற்போல

9.நீரை அடித்தால் நீர் விலகுமா?

10.நீரைக் கழுவி நிழலைப் புதைப்பதுபோல

11.நீரை அடித்தால் வேறாகுமா?

12.நீரோட்டத்தில் தெப்பம் செல்லும் தன்மை போல (புறம்.192 லும் உளது)

 

13.நீர் ஆழம் கண்டாலும் நெஞ்சு ஆழம் காணப்படாது

14.நீர் உயர நெல் உயரும்

15.நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்

16.நீர் உள்ள மட்டும் மீன் துள்ளும், நீர் போனால் மீன் என்ன துள்ளுமா?

17.நீர் என்று சொல்லி நெருப்பாய் முடிந்தது

18.நீர் என்று சொன்னால் நெருப்பு அவிவதும், சர்க்கரை என்று சொன்னதினால் வாய் இனிப்பதும் உண்டா?

19.நீர் என்று சொன்னால் நெருப்பு அவியுமா?

 

20.நீர்க்கடன் நிழற்கடன் கொடுத்துவைத்தமட்டும் இருக்கும்

21.நீர்ச்சோறு தின்று நிழலுக்கு அடியில் நின்றால் மலடிக்கும் மசக்கை வரும்

22.நீர் போனால் மீன் துள்ளும்

23.நீர் மேல் எழுத்துபோல

24.நீர்மேல் குமிழி போல நிலையில்லாக் காயம்

 

 

25.தண்ணீரிலே அடி பிடிக்கிறது

26.தண்ணீரிலே தடம் பிடிப்பான்

27.தண்ணீரிலேயோ தன் பலம் காட்டுகிறது?

28.தண்ணீரிலே விளைந்த உப்பு தண்ணீரிலே கரைய வேண்டும்

29.தண்ணீரில் அமுக்கின முட்டை உப்பு போட கிளம்பும்

30.தண்ணீரில் இருக்கிற தவளை  நீர் குடித்ததைக் கண்டது யார்? குடியாததைக் கண்டது யார்?

31.தண்ணீரில் இருக்கிற தவளையை தரையில் விட்டாற் போல

 

32.தண்ணீரில் இறங்கினால் தவளை கடிக்கும் என்கிறான்

 

33.தண்ணீரில் இறந்தவரிலும் சாராயத்தில் இறந்தவர் அதிகம்

 

34.தண்ணீரின்றினும் தண்மை பிரியுமோ, தீயினின்ன்றும் வெம்மை பிரியுமோ?

 

35.தண்ணீரின் கீழே குசு விட்டால் தலைக்கு மேலே

 

36.யாருக்கும் தெரியக்கூடாதென்று எண்ணி தண்ணீரின் கீழே குசு விட்டாற்போல

 

37.தண்ணீரும் கோபமும் தாழ்ந்த இடத்திலே

 

38.தண்ணீரும் பாசியும் கலந்தாற்போல

 

39.தண்ணீரும் மூன்று பிழை பொறுக்கும்

40.தண்ணீரயும் தாயையும் பழிக்கலாமா?

41.தண்ணீர் குடித்த வயிறும் தென்னோலையிட்ட காதும் சரி

42.தண்ணீர் குடம் உடைந்தாலும் ஐயோ! தயிர்க் குடம் உடைந்தாலும் ஐயோ!

43.தண்ணீர், வெந்நீர் ஆனாலும் நெருப்பை அவிக்கும்

 

நீர் என்றும் தண்ணீர் என்றும் துவங்கும் பழமொழிகளை மட்டும் கண்டோம். பழமொழிகளுக்கு இடையே இதே சொற்கள் வரும் பழமொழிகள் நிறைய உண்டு. அத்தனையையும் அர்த்தத்தோடு தொகுத்து வெளியிடுவது நலம் பயக்கும்.

 

தமிழ் வாழ்க! பழமொழிகள் பயன்பெறுக!!

 

xxxx

எனது பழைய கட்டுரைகள்:-

தமிழன் கண்ட செயல்முறை அறிவியல்! தண்ணீர்! தண்ணீர்!!

Research Article No. 1685; Dated– 2 March 2015.

பாலைவனத்தில் தண்ணீர் கண்டுபிடிப்பது எப்படி?

Research Article No.1656; Dated 17th February 2015.

சூரியனிடத்தில் ஆரோக்கியத்தைக் கேள்: ஆரோக்கியம் தொடர்பான பொன்மொழிகள்

 

–subham–

 

மருந்தே யாயினும் விருந்தோடுண் (Post No.3802)

Written by London swaminathan

 

Date: 9 APRIL 2017

 

Time uploaded in London:- 6-42 am

 

Post No. 3802

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

“மருந்தே யாயினும் விருந்தோடுண்” என்பது கொன்றைவேந்தன் அறிவுரை. இது அவ்வையார் இயற்றியது.

 

இந்த இடத்தில் இரண்டுவிதமாகப் பொருள் கொள்ளலாம்.

1.மருந்தாக இருந்தாலும் அதை வெறும் வயிற்றில் சாப்பிடாதே. சாப்பிடுவத ற்குச் சற்று முன்னரோ அல்லது சாப்பிட்ட உடனேயோ அந்த மருந்தையும் சேர்த்துச் சாப்பிட்டால பலன் அதிகம் கிடைக்கும் என்பது மேம்போக்கான பொருள்.

 

2.ஆயினும் கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் மருந்து என்பது அமிர்தம் என்று தெரியவரும். ஏனெனில் வள்ளுவரும் இதே கருத்தைச் சொல்லுகிறார்:-

 

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவாமருந்தெனினும் வேண்டற்பாற் றன்று – குறள் 82

பொருள்:

ஒரு விருந்தினர் வெளியே வந்து திண்ணையில் அமர்ந்திருக்கிறார். அந்த நேரத்தில்  உங்கள் கையில் சாவா மருத்து (அமிழ்தம்) கிடைத்தாலும் அதைத் தனியே சாப்பிடுவது விரும்பத் தக்கதன்று.

 

வள்ளுவர் சொல்லும் கருத்து புறநானூற்றில்(182)  கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி  சொன்ன கருத்துதான்:

இந்திரர் அமிழ்தம் இயைவது ஆயினும், இனிது எனத் தமியர் உண்டலும் இலரே.

 

புற நானூற்றுக் காலத்திலேயே இந்திரர் அமிழ்தம், அது தொடர்பான கதைகள் எல்லாம் தமிழருக்கு அத்துபடி! ஏனெனில் பாரதம் முழுதும் ஒரே பண்பாடு!!

 

விருந்தினர் ஒன்பது

விருந்தினரை எப்படிக் கவனிக்க வேண்டும் என்று காசிக் காண்டம் என்னும் நூலில் அதிவீர ராம பாண்டியர் எழுதியுள்ளார். இதை ஒருவர் பின்பற்றினால் வந்தவரின் உள்ளத்தை வென்றுவிடலாம். சிலர் நன்றாகச் சாப்பாடு போடுவர். ஆனால் பேசத் தெரியாமல் பேசி, போட்ட சாப்பாட்டின் பலனைக் கெடுத்துவிடுவர்.

 

விருந்தினனாக ஒருவன் வந்தெதிரின்

வியத்தல் நன்மொழியினுரைத்தல்

திருந்துற நோக்கல் வருகென வுரைத்தல்

எழுதல்முன் மகிழ்வன செப்பல்

பொருந்து மற்றவன்றன் அருகுற விருத்தல்

போமெனிற் பின்செல்வதாதல்

பரிந்துநன் முகமன் வழங்கல்லிவ் வொன்பான்

ஒழுக்கமும் வழிபடு பண்பே

 

வியத்தல்

அட, அதிசயமே: எங்களைப் போன்ற ஏழை எளிய வர் குடிசைக்கெல்லாம் வரமாட்டீங்கன்னு நினைச்சோம்; எங்களையும் ஒரு பொருட்டா மதிச்சீங்களே, அதுவே பெரிய சந்தோஷம்

நன்மொழியினுரைத்தல்

வீட்டில எல்லாரும் சௌக்கியமா? உங்க உடம்பெல்லாம் எப்படி இருக்கு; முன்னைவிட கொஞ்சம் இளைச்ச மாதிரி இருக்கீங்களே.

திருந்துற நோக்கல்

இதைச் சொல்லும் போது கனிவான , அன்பான பார்வை இருக்க வேண்டும். கடனெழவுக்குச் சொல்லக்கூடாது.

வருகென வுரைத்தல்

உள்ள வாங்க, முதல்ல; அப்புறம் எல்லாம் பேசுவோம்

எழுதல் முன் மகிழ்வன செப்பல்

அவர் சாப்பிட்டு எழுவதற்கு முன்னால், நல்லா சாப்பிடுங்க; இவ்வளவு குறைச்சலா சாப்பிடுறீங்களே; இப்ப புரியுது ;நீங்க ஏன் இளைச்சிருக்கீங்கன்னு; நல்லா சாப்பிடுங்க. அடியே! இவருக்கு இன்னும் கொஞ்சம் பாயசம் கொண்டா.

மற்றவன் றன் அருகுற விருத்தல்

அவர் அருகிலேயே மரியாதையுடன் அமர்ந்திருக்க வேண்டும்

போமெனிற் பின்செல்வதாதல்

அவர் போய்விட்டு வருகிறேன் என்று சொல்லும்போது அவர் பின்னால் ஏழு அடி நடந்து சென்று அவரை வழி அனுப்ப வேண்டும் . ரிக் வேதம் இதைச் சொல்கிறது. அதனால்தான் கல்யாணத்திலும் புதுமணத் தம்பதிகள் ஏழு அடி (சப்தபதி) நடந்து செல்வர். கரிகால் சோழன் இப்படி 7 அடி நடந்து போய் வழியனுப்பியதாகச சங்க இலக்கியம் செப்பும் (என்னுடைய பழைய கட்டுரையில் ஏழு அடி மஹிமை பற்றிக் காண்க)

பரிந்துநன் முகமன் வழங்கல்

கடைசியாக அவர் விடை பெறும்போது அவரைப் புகழ்ந்து பல வாக்கியங்கள் சொல்ல வேண்டும். “இன்றைக்கு நாங்கள் நரி முகத்தில் முழித்தோம் போல; தங்களைப் போன்ற பெரியோர் வந்து எங்களை ஆசீர்வதித்ததற்கு நன்றி. இது எங்கள் பாக்கியமே; அடிக்கடி வாருங்கள்; அடுத்த முறை வருகையில் வீட்டில் எல்லோரையும் அழைத்து வரவேணும். மிக்க நன்றி

 

 

விருந்தினருக்கு ஒன்பது கொடுங்கள்!

தவிசு தாள் விளக்கப் புனல்தமக்கியன்ற

அடிசில்பூந்தண்மலர்ப் பாயல்

உவகையினுறையும் இடனுகர் தெண்ணீர்

ஒண்சுடர் எண்ணெய் வெள் ளிலைகாய்

இவைகளொன்பதுந்தன் மனைவயினடைந்தோர்

மகிழ்வுற வினிதனில் அளித்தல்

நவையற இல்வாழ் வடைந்துளோன் பூண்ட கடன்

— காசிகாண்டம்

 

 

1.ஆசனம்

2.கால் கழுவ தண்ணீர்

3.முடிந்த அளவு உணவு

4.நல்ல படுக்கை, பாய்

5.இருக்க இடம்

6.தெளிந்த தண்ணீர்

7.விளக்கு

8.எண்ணெய்

9.வெற்றிலை,பாக்கு

இந்த ஒன்பதையும் இல்வாழ்வான் (கிருஹஸ்தன்) என்பவன் , விருந்தாளிகளுக்குக் கொடுக்க வேண்டும்.

 

–Subham–

 

ராவணன் கிரீடம் பற்றி கம்பன் தரும் அதிசயத் தகவல் (Post No.3790)

Written by London swaminathan

 

Date: 5 APRIL 2017

 

Time uploaded in London:-15-36

 

Post No. 3790

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

மகரம் என்றால் சுறாமீன் , முதலை என்ற இரண்டு பொருள் இருந்தும் சுறாமீன் என்ற அர்த்தத்திலேயே ஆபரணங்களில், அணிகலன்களில் பயன்படுத்தப்படுகிறது. ராவணன் இப்படி சுறாமீன் வடிவ அல்லது சுறாமீன் பொறித்த ஒரு நீண்ட கிரீடத்தை அணிந்து வந்தான் என்று கம்பன் போகிறபோக்கில் (சுந்தர காண்டம்) சொல்லி விடுகிறான். இது ஒரு அதிசயமான விஷயம். ஏனெனில் இப்படிப்பட்ட மணிமுடி பற்றிய குறிப்பு வேறு எங்கும் இல்லை.

 

வளர்ந்த காதலர் மகரிகை நெடுமுடி

அரக்கரை வரக் காணார்

தளர்ந்த சிந்தை தம் இடையினும் நுடங்கிட

உயிரொடு தடுமாறி

களம் தவா நெடுங்கருவியில்கைகளில்

செயிரியர் கலைக் கண்ணால்

அளந்த பாடல் வெவ் அரவு தம் செவிபுக

அலமரலுறுகின்றார்

பொருள்:

“ராவணன் மீது நாள்தோறும் வளரும் காதலை உடைய வித்தியாதர மகளிர் சிலர், சுறாமீன் வடிவு பொறித்த நீண்ட மகுடத்தைப் பூண்ட ராவவணன், தம்மிடம் வருவதைக் காணவில்லை. அதனால் தளர்ந்த மனம்,  இடையைக் காட்டிலும் அதிகமாமகத் துடித்தது. அவர்கள் தடுமாறினர். இசைக் கலைஞர்கள் கருவிகளை இசைத்து கண்களால் அவற்றை அளந்து பாடிய பாடல்கள் காதுக்குள் பாம்பு புகுந்தது போலப் புகவே அவர்கள் துன்புற்றனர்.”

 

உலகில் பல பண்பாடுகளில் மகர தோரணங்கள் உண்டு; மகர மோதிரங்கள் உண்டு; மகர காதணிகள், கை வளையங்கள் உண்டு; ஆனால் மகர வடிவில் கிரீடம் கிடையாது; மகரம் பொறித்த கிரீடமும் இல்லை. ராவணன் ஏன், எப்படி இப்படி ஒரு கிரீடம் அணிந்தான் என்பதற்கான விளக்கமும் இல்லை. உலகில் வேறு எங்குமில்லாத அளவுக்கு ஐரோப்பியர்கள் மட்டும் மன்னரின் மணி முடிளை அப்படியே சேகரித்து வைத்துள்ளனர். அதிலும் கூட இப்படி ஒரு கிரீடம் இல்லை.

 

நம்முடைய மன்னர்களின் கிரீடங்கள் அழிக்கப்பட்டு, நகைகளாகவும் சங்கிலிகளாகவும் செய்யப்பட்டு விட்டன. ஆயினும் எல்லாக் கோவில்களிலும் சுவாமிக்கும் அம்மனுக்கும் உள்ள கிரீடங்கள் ஓரளவுக்கு நம்முடைய பழம்பெரும் கலாசாரத்தைப் பிரதிபலிப்பனவாக உள்ளன. அங்கும் இப்படி இருப்பதாகத் தெரியவில்லை.

 

Elephant Crown of Demetrios

பல்லவ கீரிட அதிசயம்

பல்லவ சாம்ராஜ்யத்திலும் இப்படி ஒரு அதிசய மணிமுடி/ கிரீடம் பற்றிய குறிப்பு கிடைக்கிறது

இந்த வியப்பான விஷயம் பல்லவர் கல்வெட்டில் உள்ளது. இது பற்றி வரலாற்றுப் பேரறிஞர்   டாக்டர் இரா.நாகசாமி , “யாவரும் கேளிர்” என்ற அவரது நூலில் கூறுவதாவது:-

“காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோவிலில் நந்தி வர்மனின் வரலாற்றைக் குறிக்கும் சிற்பங்கள் உள்ளன. அவற்றில் நந்திவர்மனுக்குச் சூட்டுவதற்காக மகாமாத்திரர் முதலானோர் ஒரு தட்டில் முடியை ஏந்தி வந்தனர் என்றும், நந்தி வர்மனின் தந்தையால் அதை என்ன என்று அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை என்றும் அது பல்லவர் முடி என்றும், யானை உருவில் இருந்தது என்றும் குறிப்பு உள்ளது. இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் ஆண்ட அரசர்கள் யானைத்தலை  போன்ற முடிகளைப் பூண்டிருப்பது காண்பிக்கப்பட்டுள்ளது வைகுண்டப் பெருமாள் கோவில் கல்வெட்டு இவ்வாறு கூறினும் சிற்பத்தில் யானைதத்லை போன்ற முடி காணப்படவில்லை”.

எனது கருத்து:

கல்வெட்டிலுள்ள பல விஷயங்கள் சிற்பத்தில் இல்லை. சிற்பத் திலுள்ள பல விஷயங்கள் இலக்கியத்தில் இல்லை என்பதற்குப் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.

 

துர்கையின் மான் வாஹனம் பற்றி சிலப்பதிகாரம், தேவாரம் (கலையதூர்தி) போன்ற பல நூல்களில் குறிப்புகள் உள்ளன. ஆனால் நமது கோவில்களில் மான் வாஹன துர்கையைப் பார்க்க முடியாது. படங்களிலும் கூட மான் வாஹனம் கிடையாது. சிங்கம் அல்லது புலி வாஹனம்தான் இருக்கும். ஆனால் இராக், துருக்கி, கிரீஸ் போன்ற நாடுகளில் மான் வாஹனத்தில் தேவியர் பவனி வரும் சிலைகள் உள்ளன. இது துர்கைதான். ஆனால் ஒவ்வொரு ஊரிலும் வேறு வேறு பெயர்களால் அவளை அழைப்பர்.

 

ஆக, “கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம்” என்ற கதை இலக்கியத்திலும், வரலாற்றிலும் உளது. எங்கேயாவது சுறாமீன் கிரீடத்தின் சிலையோ படமோ கிடைக்கிறதா என்று ஆராய்வது நமது கடமை.

 

–Subham—

 

 

சச்சரி, குச்சரி, பிச்சரின் பிதற்றல் — கம்பனின் சங்கீத அறிவு (Post No.3786)

Written by London swaminathan

 

Date: 4 APRIL 2017

 

Time uploaded in London:- 6-59 am

 

Post No. 3786

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

தமிழர்களின் அபார இசை அறிவை விளக்கும் சில பாடல்களைக் காண்போம்:-

 

நச்சு எனக் கொடிய நாகக் கள்ளொடு குருதி நக்கி

பிச்சரின் பிதற்றி அல்குல் பூந்துகில் கலாபம் பீறி

குச்சரித் திறத்தின் ஓசை களம் கொள குழுக்கொண்டு ஈண்டி

சச்சரிப் பாணி கொட்டி நிறை தடுமறுவாரும்

–ஊர்தேடு படலம், சுந்தர காண்டம்

 

பொருள்:

அரக்கியர் சிலர் பாம்பின் விஷம் என்று கூறத்தக்க கள்ளையும், பல வகைப் பிரணிகளின் குருதியையும் குடித்து மயங்கினர்; அதனால் குச்சரி என்னும் பண்ணின் தன்மை குரலில் கலக்க, பைத்தியக்காரர் போலப் பிதற்றினர்; சச்சரி என்னும் தோல் கருவி போலக் கைகளைத் தட்டினர். அல்குலின் மீது அணிந்த மெல்லிய ஆடையையும், கலாபம் என்னும் 25 கோவையுள்ள இடையணியையும் கிழித்துக்கொண்டு மனநிலை  தடுமாறினர்.

 

இந்தப் பாட்டில் இன்னொரு விஷயமும் உள்ளது. 25 கோவையுள்ள கலாபம் என்ற இடையணியையும் அரக்கியர் அணிந்து கொண்டிருந்தனர். வராஹமிஹிரர் என்னும் அறிஞர் 1500 ஆண்டுகளுக்கு முன் எழுதிய பிருஹத் சம்ஹிதா என்னும் என்சைக்ளோபீடியவில் (கலைக் களஞ்சியத்தில்) ஏராளமான கோவையுள்ள முத்து மாலைகளைப் பட்டியலிடுகிறார். உலகிலேயே அதிக நகைகளை அணிந் தவர்கள் இந்துக்கள் இதை 2200 ஆண்டுகளுக்கு முன்னுள்ள பார்ஹுத் சிற்பங்களில்கூடக் காணலாம்.

இன்னொரு பாட்டில் அரக்கியர் வீட்டில் கேட்ட சங்கீத ஒலிகளைக் கம்பன் பாடுகிறான்.

 

சங்கொடு சிலம்பும் நூலும் பாத சாலகமும் தாழ

பொங்கு பல்முரசம் ஆர்ப்ப இல்லுறை தெய்வம் பேணி

கொங்கு அலர் கூந்தல் செவ்வாய் அரம்பையர் பாணிகொட்டி

மங்கல கீதம் பாட மலர்ப் பலி வகுக்கின்றாரை.

 

–ஊர்தேடு படலம், சுந்தர காண்டம்

 

 

பொருள்:

கூந்தலையும் செவ்வாயயையும் உடைய தேவ மகளிர், தாளம் போட்ட படி மங்கலப் பாடல்கள் பாடினர். சங்கு வளையல், சிலம்பு, மேகலை, பாதரசம் ஆகிய அணிகலன்களின் ஒலிகள் தாழுமாறு பலவகையான முரசுகள் முழங்கின. அச்சூழலில் இல்லுறை தெய்வத்தை வணங்கி, மலரினால் அருச்சனை செய்யும் அரக்க மகளிரை, சீதையத் தெடிச் சென்ற அனுமான கண்டான்.

 

 

இங்கு அரக்கர் வீட்டில் மங்கல கீதம் ஒலித்தது, முரசுகள் முழங்கியது ஆகிய சங்கீத விஷயங்களைச் சொல்லும் கம்பன், ஆரிய-திராவிட இனவாதப் புரட்டர்களுக்கு ஆப்பு வைப்பதையும் பார்க்க வேண்டும்.

சில வெளிநாட்டு அரைவேக்காடுகளும், திராவிடப் புரட்டர்களும், ராவணன் என்பவன் திராவிடன் என்றெல்லாம் கதைகட்டி, அரசியல் செய்து வருவதை நாம் அறிவோம். ஆனால் இங்கே அரக்க மகளிர் வீட்டிலுள்ள பூஜை அறைகளில் மலர்கொண்டு பூஜை செய்ததைக் கூறுகிறான். ஒவ்வொரு வீட்டிலும் இப்படி இல்லுறை தெய்வம் இருந்ததையும் அந்த தெய்வங்களுக்குத் தமிழர்கள் மலர், இலை (வில்வம், துளசி), புல் (அருகம் புல்) முதலியன கொண்டு பூஜை செய்ததையும் கபிலர் முதலான சங்கப் புலவர்கள் பாடியிருப்பதையும் கவனிக்க வேண்டும், அரக்கர்கள், இத்தோடு, தீய குணங்களுடன் வாழ்ந்தனர் என்பதையும் அறிதல் வேண்டும்.  நமது ஊரிலுள்ள திருடர்களும்   , ஏமாற்றுப் பேர்வழிகளும், கொள்ளையர்களும் கூட தெய்வத்தை பூஜிப்பது போன்றது இது.

 

xxxx

 

நான்கு ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய “இசைத் தமிழ் அதிசயங்கள்” என்ற கட்டுரையின் ஒரு பகுதியை மட்டும் கீழே தருகிறேன். முழுக்கட்டுரையும் வேண்டுவோர் இதே பிளாக்கில் 4 ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய கட்டுரையைக் காண்க.

 

இசைத் தமிழ் அதிசயங்கள்

posted on 31 January 2013; by London swaminathan

1).காரைக்கால் அம்மையார் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தில் தமிழ் இசைக் கருவிகள் பட்டியலை ஒரே பாடலில் அழகாகக் கொடுத்திருக்கிறார்:

துத்தங்கைக் கிள்ளை விளரி தாரம்

உழைஇளி ஓசைபண் கெழும பாடிச்

சச்சரி கொக்கரை தக்கை யோடு

தகுணிதம் துந்துபி டாளம் வீணை

மத்தளம் கரடிகை வன்கை மென்றோல்

தமருகம் குடமுழா மொந்தை வாசித்து

அத்தனை விரவினோ டாடும் எங்கள்

அப்பன் இடம்திரு வாலங் காடே”

 

இதில் குரல், துத்தம், கைக்கிளை உழை இளி விளரி தாரம் என்பன ஏழு ஸ்வரங்களாகும்.

சச்சரி,கொக்கரை, தக்கை, தகுணிதம் கரடிகை, வங்கை, மெந்தோல் ,டமருகம், குடமுழா என்பன தோல் கருவிகள். அல்லது தாளம் எழுப்பும் கருவிகள். துந்துபி ஊதும் கருவி.

 

 

 பத்துப் பாட்டில்

2).பத்துப் பாட்டில் ஒன்றான மலைபடு கடாம் என்ற நூலில் கூத்தர் கொண்டு சென்ற வாத்தியங்களின் பட்டியல் வருகிறது:

“ திண்வார் விசித்த முழவோடு ஆகுளி

நுண்ணுருக் குற்ற விளங்கடர்ப் பாண்டில்

மின்னிரும் பீலி அணிதழைக் கோட்டொடு

கண்ணிடை வகுத்த களிற்றுயிர்த் தூம்பின்

இளிப்பயிர் இமிரும் குறும்பரத் தூம்பொடு

விளிப்பது கவரும் தீங்குழல் துதைஇ

நடுவுநின் றிசைக்கும் அரிக்குரல் தட்டை

கடிகவர்பு ஒலிக்கும் வல்வாய் எல்லரி

நொடிதரு பாணிய பதலையும் பிறவும்

கார்க்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப

நேர்சீர் சுருக்கிய காய கலப்பையீர் ( மலைபடு. 1-14)

 

இவ்வரிகளில் முழவு, ஆகுளி, பாண்டில்,  கோடு, தூம்பு, குழல்,  தட்டை, எல்லரி, பதலை முதலிய கருவிகளைக் காண்கிறோம்.

இசைக் கருவிகளை தமிழர்கள்  தோல் கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி ,கஞ்சக் கருவி என்று பகுத்து வைத்தனர். குழலும் கோடும் தூம்பும் துளைக் கருவிகள் முழவு, முரசு, பறை, பதலை, துடி போன்றன தோல் கருவிகள். யாழ் என்பது நரம்புக் கருவி. பாண்டில் என்பது கஞ்சக் கருவி. (ஜால்ரா போன்றது).

 

சிலப்பதிகார உரையில்

சிலப்பதிகார உரையில் அடியார்க்கு நல்லார் மேற்கோளாகத் தரும் பாடல்:
பேரிகை படக மிடக்கை யுடுக்கை
சீர்மிகு மத்தளஞ் சல்லிகை கரடிகை
திமிலை குழமுழாத் தக்கை கணப்பறை
தமருகந் தண்ணுமை தாவிறடாரி
யந்திர முழவொடு சந்திர வலைய
மொந்தை முரசே கண்விடு தூம்பு
நிசாளந்த் துடுமை சிறுபறையடக்க
மாறி றகுனிச்சம் விரலேறு பாகந்
தொக்க வுபாங்கந் துடிபெறும் பாஇயென
மிக்க நூலோர் விரித்துரைத்தனரே
(தோற் கருவிகள்: தண்ணூமை, முழவு, தட்டை, முரசு, பறை, பம்பை, குளிர், தொண்டகச் சிறுபறை, கிணை, பதலை, ஆகுளி, துடி, தடாரி, எல்லரி, மத்தரி.

 

–subham–