Written by London swaminathan
Date: 16 APRIL 2017
Time uploaded in London:- 20-12
Post No. 3824
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
இனையது ஆதலின் எக்குலத்து யாவர்க்கும்
வினையினால் வரும் மேன்மையும் கீழ்மையும்
அனைய தன்மை அறிந்தும் அழித்தனை
மனையின் மாட்சி என்றான் மனுநீதியான்
–வாலி வதைப்படலம், கம்ப ராமாயணம்
கம்பன் சொல்கிறான்:-
எந்தக் குலத்தில் தோன்றியவர்க்கும் உயர்வும் இழிவும் அவரவர் செய்த செயல்களாலேயே வரும். இதனை உணர்ந்து இருந்தும் பிறன் மனைவியின் கற்பினை அழித்தாய் – என்று மனு நீதி சாஸ்திரத்தில் சொன்னபடி நடக்கும் ராமன் (வாலியிடம்) கூறினான்
xxx
வள்ளுவர் சொன்னதும் அதுவே
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையான் – (திருக்குறள் –972)
என்று வள்ளுவன் இதை இன்னும் அழகாகச் சொல்லுவான்.
பொருள்:– எல்லா உயிர்க்கும் பிறப்பு என்பது ஒரே தன்மையுடையது; அங்கே வேறுபாடில்லை. செய்யும் தொழில்களால் – செயல்களினால் தான் வேறுபாடுகள்.
xxx
கிருஷ்ணன் சொன்னதும் அதுவே
சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண-கர்ம விபாகசஹ
தஸ்ய கர்தாரமபி மாம் வித்த்யகர்தாரம வ்யயம்
—பகவத் கீதை 4-13
பொருள்:-
என்னால் குணங்களுக்குத் தக்கபடி நான்கு ஜாதிகள் உண்டாக்கப்பட்டன. செய்யும் தொழில்கள் குணங்களுக்கு ஏற்ப நடக்கின்றன. இதை உருவாக்கியபோதும் என்னை மாறுபாடில்லாதவனாக அறிவாயாக.
xxx
அவ்வையார் சொன்னதும் அதுவே
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ள படி
எவர் ஒருவர் பிறருக்கு கொடுத்து உதவுகிறாரோ அவர் பெரியோர்; கொடாதோர் கீழோர் என்று ‘நல்வழி’யில் அவ்வையாரும் சொல்கிறார்.
xxx
வேத கால ரிஷி சொன்னதும் அதுவே
நாம் எல்லோரும் தாயின் கருவிலேயே சமத்துவம் கண்டோம்; இப்பொழுது சகோதரத்துவத்தை நிச்சயமாக உருவாக்குவோம்.– ரிக் வேதம் 8-83-8
ந இஹ நானாவஸ்தி கிஞ்சன- ப்ருஹத் ஆரண்யக உபநிஷத்
பொருள்:-இந்த உலகில் உயிர்களிடத்தில் மட்டும் எந்த பேதமும் இல்லை.
ஜன்மனா ஜாயதே சூத்ரஹ
சம்ஸ்கராத் த்விஜ உச்யதே
வேத படனாத் பவேத் விப்ரஹ
பிரம்ம ஜானதி இதி பிராஹ்மணஹ
-சம்ஸ்கிருத ஸ்லோகம்
பிறக்கும்போது எல்லோரும் சூத்திரர்கள்;
உபதேசம் பெற்று பூணூல் போடுவதால் இருபிறப்பாளன்;
வேத அத்யயனத்தால் அறிஞன்;
பிரம்மனை அறிவதால் பிராம்மணன் ஆகிறான்
–subham–