சீவக சிந்தாமணியில் ஐந்து அமிர்தம்! (Post No.3575)

Written by London swaminathan

 

Date: 25 January 2017

 

Time uploaded in London:- 8-43 am

 

Post No.3575

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

 

contact: swami_48@yahoo.com

 

 

தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள்:

சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி

இவைகளில் சீவக சிந்தாமணியை எழுதியவர் திருத்தக்க தேவர். அதில் ஒரு பாடலில் அவர்  நாட்டில் அமிர்தம் எது, காட்டில் அமிர்தம் எது என்று வரிசைப் படுத்துகிறார். அதற்கு உரை எழுதிய உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்ர்கினியர் (மதுரை நகர பாரத்வாஜ கோத்திரப் பார்ப்பனன்) நமக்கு அரிய பெரிய தகவல்களை அளிக்கிறார்.

 

அமிர்தம் என்பது சம்ஸ்கிருதச் சொல்; சங்க இலக்கியத்தில் மூன்றுவித ஸ்பெல்லிங் SPELLING  உடன் இச்சொல்லைப் பயின்றுள்ளனர்.

 

இனி சீவக சிந்தாமணியின் அற்புதப்பாடலைக் காண்போம்:

 

வீட்டிடந் தோறும் வில்லக விரல்போற்
  பொருந்திநின் றொருங்கெதிர் கொள்கென்
றேட்டின்மேற் றீட்டித் திருவெழுத் திட்டாங்
  கிறைவனுந் தமர்களைப் பணிப்ப
நாட்டகத் தமிர்து நளிகட லமிர்து
  நல்வரை யமிர்தமு மல்லாக்
காட்டகத் தமிர்துங் காண்வரக் குவவிக்
  கண்ணகன் புறவெதிர் கொண்டார்.

 

பாடல் 2110-ன் பொருள்

 

அந்நாட்டு மன்னன் உத்த்ரவுக்கு இணங்க சீவகனை எப்படி வரவேற்றனர் என்பதில் நாட்டில் கிடைக்கும், கடலில் கிடைக்கும், காட்டில் கிடைக்கும், மலையில் கிடைக்கும் ஐந்து ஐந்து வகையான பொருள்களுடன் சீவகனை வரவேற்றனர்.

 

அவை யாவை:

நாட்டில் கிடைக்கும் ஐந்து அமிர்தங்கள்: நெல், பயறு, இளநீர்,கரும்பு, வாழை

கடலில் கிடைக்கும் ஐந்து அமிர்தங்கள்

முத்து, பவளம், சங்கு, உப்பு, ஓர்க்கோலை (ஆம்பர் எனப்படும் திமிங்கிலக் கழிவுப் பொருள்)

 

மலையில் கிடைக்கும் ஐந்து அமிர்தங்கள்

தக்கோலம் (வால் மிளகு அல்லது சிறுநாவல் பூ), தீம்பூ (வாசனைத் திரவியங்களில் ஒன்று அல்லது கிராம்பு) ஏலம், கற்பூரம், ஜாதிக்காய்

 

காட்டில் கிடைக்கும் கிடைக்கும் ஐந்து அமிர்தங்கள்

தேன், அரக்கு, சந்தனம் ,மயில் பீலி, நாவி (கஸ்தூரி அல்லது புனுகு)

 

இதோ பாடல் வடிவில்:–

 

நாட்டிலமிர்து :’செந்நெல் சிறுபயறு செவ்விள நீர், செழுங்

கன்னல் கதலியோ டைந்து’

கடலமிர்து :’ஓர்க்கோலை சங்கம் ஒளிர்பவளம் வெண்முத்தம்

நீர்ப்படும் உப்பினோ டைந்து’

 

வரையமிர்து :’தக்கோலம் தீம்பூத் தகைசால் இலவங்கம்

கர்ப்பூரம் சாதியோ டைந்து’

காட்டிலமிர்து :’அரக்கிறால் செந்தேன் அணிமயிற் பீலி

திருத்தகு நாவியோ டைந்து’

 

-subham-

நூறு வயதை எட்டிய ஹாலிவுட் கதாநாயகன், கதாநாயகி! (Post No.3574)

Written by S NAGARAJAN

 

Date: 25 January 2017

 

Time uploaded in London:-  5-49 am

 

 

Post No.3574

 

 

Pictures are taken from different sources; thanks.

 

Contact: swami_48@yahoo.com

 

 

பாக்யா வார இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

நூறு வயதை எட்டிய ஹாலிவுட் கதாநாயகன், கதாநாயகி!

ச.நாகராஜன்

 

 

கவர்ச்சிகரமான திரைத்துறையில் வெற்றிகரமாக கொடி கட்டிப் பறந்தவர்களில் நூறு வயதை எட்டியவர் யார்?

இந்திய திரைப்படத் துறையை எடுத்துக் கொண்டால் நிறைய பேரைச் சுட்டிக் காட்டுவது சாத்தியமில்லை.

ஆனால் ஹாலிவுட் நடிக நடிகையரில் 34 பேருக்கு மேல் நூறு வயதைத் தாண்டி விட்டனர் அல்லது நெருங்கிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் அனைவருமே ஒரு காலத்தில் ஓஹோ என்று உச்சத்தில் இருந்தார்கள். இன்றும் ரசிகர்கள் உள்ளங்களில் ஓஹோ நிலையை விட்டு நழுவிக் கீழே இறங்கி விடவில்லை.

இவர்களில் பலரும் நான் திரையில் தோன்றினால் அதைப் பார்க்க லட்சோப லட்சம் ரசிகர்கள் இன்றும் தயார் என்கின்றனர். உண்மை தான்! திரைப்படத்தின் பல்வேறு துறைகளிலும் செயலூக்கத்துடன் இருக்கும் இவர்களுக்கு 2017இல் ஒரு பெரிய சல்யூட்!

 

சிலரைப் பார்ப்போம்.

டோரிஸ் டே

 

‘கே சரா சரா’ என்ற பாடலை முணுமுணுக்காதவர் இல்லை என்று ஒரு காலம் இருந்தது. இந்தப் பாடலின் புகழ் இன்றும் மறையவில்லை.  ஒரு போதும் மறையாது. ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்கின் ‘தி மேன் ஹூ க்நோஸ் டூ ம்ச்’ என்ற படத்தில் ந்டித்த டோரிஸ் டே-ஐ (Doris Day) யாராலாவது மறக்க முடியுமா?

இந்தப் பாடலின் மெட்டுக்குத் தக அமரர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆரவல்லி படத்திற்காக ஒரு அற்புதமான பாடலை எழுத அதற்கு ஜி.ராமநாதன் இசை அமைத்தார்.

 

 

பெண்: சின்னப் பெண்ணான போதிலே

அன்னையிடம் நான் ஒரு நாளிலே

எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா? – அம்மா

நீ சொல் என்றேன் (சின்ன)

 

வெண்ணிலா நிலா – என்

கண்ணல்லவா கலா – உன்

எண்ணம் போல் வாழ்விலே

இன்பம் தான் என்றாள் (வெண்ணிலா)

 

 

இப்போது ஞாபகம் வந்திருக்கும் கே சரா சரா பாடல்! உலகில் கடந்த நூறு ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்தை வென்ற முதல் நூறு பாடல்களில் 48வது இடத்தைப் பிடித்திருக்கும் பாடல் இது!

 

 

இதில் நடித்த பிரபல பாடகியும் நடிகையுமான டோரிஸ் டேக்கு ஏப்ரல் 3, 2016இல் 92வது பிறந்த நாள் விழா நடந்தது.

இப்போது அவர்  விலங்கு நல அமைப்பில் சிறப்பான பொறுப்பை வகித்து மிருகங்களின் பாதுகாப்பில் அக்கறை செலுத்துகிறார்.

வயதானாலும் சுறுசுறுப்பு குறையவில்லை!

 

 

ஒலிவியா டி ஹவிலேண்ட் (Olivia de Haviland)

‘கான் வித் தி விண்ட்’ (Gone with the wind)  என்ற படத்தை யாராலும் மறக்க முடியாது. காலத்தை வென்ற இந்தப் படத்தின் நாயகி ஒலிவியா டி ஹவிலேண்டும் காலத்தை வென்ற புகழைப் பெற்று நூறு வயதை எட்டியுள்ளார். சுறுசுறுப்பாக பழைய நாட்களைப் பற்றி 2016இல் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

 

கான் வித் தி விண்டின் பட டைரக்டர் ஜார்ஜ் குகோர் 1938இல் 22 வயதான ஒலிவியாட்ம்  சட்டத்தை மீறி நடக்க உன்னால் முடியுமா என்று கேட்ட போது என்ன விஷய்ம் என்றார் அந்த அழகிய இளம் மங்கை. வார்னர் பிரதர்ஸுடன் போட்டிருந்த காண்ட்ராக்டை மீறித் தன் படத்தில் நடிக்க வர முடியுமா என்று தெளிவாகக் கேட்டார் பிரபல டைரக்டர்.

 

 

ஒலிவியா தனது பாஸின் மனைவியிடம் சென்றார். வார்னரின் மனைவியான ஆன் வார்னர் கான் வித் தி விண்ட் நாவலைப் படித்து அதைத் திரையில் பார்க்கத் துடித்துக் கொண்டிருந்தார். பிறகென்ன,விஷயம் சுலபமாக முடிந்தது.

மெலனி என்ற கதாபாத்திரமாக நடித்து புகழேணியில் ஏறிய ஒலிவியா இன்றளவும் இறங்கவில்லை. அமெரிக்க ஜனாதிபதி ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட் இவரை வொய்ட் ஹவுஸுக்கு அழைத்து கௌரவித்தார். பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய இரு தேசங்களின் உயரிய விருதைப் பெற்ற இவர் இன்றும் சுறுசுறுப்புடன் இயங்குகிறார்.

கிர்க் டக்ளஸ் (Kirk Douglas)

 

கிர்க் டக்ளஸ் தனது நூறாவது பிறந்த தினத்தை 2016 டிசம்பர் 9ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடினார்.

பேட்டியின் போது தனது சோபாவிலிருந்து இருமுறை எழுந்து உட்கார்ந்து காண்பித்தார். பேட்டியாளர் விஷயத்தைப் புரிந்து கொண்டார். அவரது மூட்டுகள் இரண்டும் அறுவை சிகிச்சையில் புதிதாகப் பொருத்தப்பட்டிருந்தன.

 

தான் ஆரோக்கியமாக் இருப்பதைக் காண்பிக்கவே அவர் எழுந்து உட்கார்ந்து காண்பித்தார்.

 

 

1952இல் வெளியான ‘தி பேட் அண்ட்

தி பியூடிஃபுல்’ (The Bad and the Beautiful)  என்ற படத்தில் நடித்ததற்காக இரண்டாம் முறை நாமினேஷனைப் பெற்ற நாளிலிருந்து இவர் புகழ் இறங்கவில்லை. அதிக ஆஸ்கார் விருதைப் பெற்ற படம் என்ற பெருமையையும் இந்தப் படம் பெற்றது.

 

 

1954 இல் வெளியான ‘20000 லீக்ஸ் அண்டர் தி ஸீ’ படத்தில் காப்டன் நெமோவாக நடித்து சக்கை போடு போட்டார் டக்ளஸ்.

 

. மூன்று முறை நாமினேஷனைப் பெற்ற டக்ளஸ் வாழ்நாள் சாதனைக்காக ஆஸ்கார் விருதைப் பெற்றவர்.

சுறுசுறுப்பாக வாழ்நாட்களைக் கழிக்கும் டக்ளஸ் 1991ஆம் ஆண்டு மோசமான ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் பிழைத்தார். 1996இல் பக்கவாத நோய் தாக்கியதிலிருந்தும் மீண்டார்.

 

பத்து நாவல்களையும் தனது நினைவலைகளையும் புத்தகமாக எழுதியுள்ளார். அமைதியான ஆன்மீக வாழ்க்கையின் பக்கம் அவர் கவனம் இப்போது திரும்பியுள்ளது

 

 

ஜேம்ஸ் பாண்டாக நடித்த ரோஜர் மூருக்கு இப்போது வயது 89 (பிறந்த தேதி:அக்டோபர் 14, 1927)

 

ஜேம்ஸ் பாண்டாக நடித்த சீன் கானரிக்கு இப்போது வயது 86 (பிறந்த தேதி: ஆகஸ்ட் 25, 1930)

 

பிரபல அழ்கி சோபியா லாரனுக்கு இப்போது வயது.82 (பிறந்த தேதி செப்டம்பர் 20 1934)

இப்படி பட்டியல் நீள்கிறது.

 

ஹாலிவுட்டில் எண்பதையும் தாண்டிய ஏராளமான நடிக, நடிகையரில் பெரும்பாலானோர் சுறுசுறுப்பாக திரைத் துறை சார்ந்த பணிகளில் இன்றும் கவனம் செலுத்துவது ஒரு சுவையான செய்தி! திரைக் கலைஞர்களுக்கு வயது ஒரு வரம்பே இல்லை!

**********

 

 

 

 

 

 

தலையில் இருந்தால் முடி, கீழே விழுந்தால் மயிர்- வள்ளுவர் குறள் (Post No.3566)

Written by London swaminathan

 

Date: 22 January 2017

 

Time uploaded in London:- 15-42

 

Post No.3566

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

 

contact: swami_48@yahoo.com

 

தமிழ்ப் புலவர்கள், நமக்குச் சொல்ல வேண்டிய விஷயங்களை எவ்வளவு வலுவாக– வலியுறுத்திச் சொல்ல வேண்டுமோ– அவ்வளவுக்குச் சொல்லுவர் அதற்கேற்ற உவமைகளையும் எடுத்தாள்வர்.

 

வள்ளுவப் பெருமான் “மயிர்” என்ற சொல்லை இரண்டு குறள்களில் பயன்படுத்துகிறார். மானம் என்ற , அ,,,,,,காரத்தில் அவைகளை வைத்திருப்பது பொருத்தமாக உள்ளது. நாம் யாரையேனும் அல்லது எ தையேனும் மட்டம் தட்ட வேண்டுமானால் “என் மயிர் போச்சு” என்று இழித்துரைக்கிறோம்; பழித்துப் பேசுகிறோம். ஆனால் அதே மயிர் தலையில் இருக்கும் வரை அதைச் சீவி முடித்து சிங்காரித்துப் பாராட்டுகிறோம். மயிருள்ள சீமாட்டி எஸ் கொண்டையும் போடுவாள் ஒய் கொண்டையும் போடுவாள் என்பது பழமொழி. அது மட்டுமல்ல. கணவன் வெளியூர் சென்றுவிட்டால் மனைவி சிகை அலங்காரம் செய்ய மாட்டாள் என்பது சம்ஸ்கிருத , தமிழ் இலக்கியங்களில் உள்ளது.  இமயம் முதல் குமரி வரை ஒரே பண்பாடு என்பதை  இது காட்டுகிறது. ஆரிய-திராவிட இனவெறிக் கொள்கை உடையோரின் மூஞ்சியில் இது  கரி பூசுகிறது.

 

 

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்

நிலயின் இழிந்தக் கடை (குறள் 964)

 

மக்கள் நெறி தவறி, உயர்ந்த நிலையிலிருந்து கீழே விழுந்தால், தலையிலிருந்து விழுந்த மயிர் போல ஆவர்.

 

மயிர் நீப்பின் வாழாக் கவரி மா அன்னார்

உயிர் நீப்பர் மானம் வரின்  (குறள் 969)

 

தன் உடம்பிலிருந்து ஒரு மயிர் நீங்கினாலும் வாழ விரும்பாத கவரிமானைப் போன்றவர்கள், மானம் போனால் உடனே உயிர் நீப்பர்.

 

விவேக சிந்தாமணி என்னும் நூலிலும் இதே கருத்தைக் கூறும் இரண்டு பாடல்கள் உள்ளன:-

 

மானம் உள்ளோர்கள் தன்னோர்

மயிர் அறின் உயிர் வாழாத

கானுறு கவரிமான் போல

கனம்பெறு புகழே பூண்பார்

மானம் ஒன்று இல்லார் தாமும்

மழுங்கலாய்ச் சவங்களாக

ஈனமாம் கழுதைக்கு ஒப்பாய்

இருப்பர் என்று உரைக்கலாமே.

 

இந்தப் பாடல் குறளில் வரும் அதே கவரிமான் கதையைச் சொல்லுகிறது. இன்னொரு பாடல், அது அது இருக்க வேண்டிய இடத்தில்தான் மதிப்பு என்கிறது.

 

சங்கு வெண் தாமரைக்குத்

தந்தை தாய் இரவி தண்ணீர்;

அங்கு அதைக் கொய்துவிட்டால்

அழுகச் செய்து அந்நீர் கொல்லும்;

துங்க வெண் கரையில் போட்டால்

சூரியன் காய்ந்து கொல்வான்;

தங்கள் நிலைமை கெட்டால்

இப்படித் தயங்குவாரே

 

பொருள்:-

சங்கு போன்ற வெள்ளைத் தாமரைக்கு, சூரியனும் தண்ணீரும் தாய், தந்தை ஆவர். ஆனால் அதே தாமரையைக் கொய்து தண்ணீரில் போட்டால் அதுவே அழுகச் செய்து விடும். கரையில் போட்டாலோ சூரியன் காயவைத்துக் கொல்வான். அது போலவே தங்களுடைய நிலை கெட்டு வேறிடத்தில் இருந்தால் கஷ்டப்படுவர்.

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா

 

கவிஞர் கண்ணதாசனும் இக்கருத்தை வலியுறுத்தும் பாடலை சூரியகாந்தி படத்தில் பாடி இருக்கிறார்.

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது
அது ஔவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது

 

–subham–

முத்து பிறக்கும் இடங்கள் இருபது (Post No.3524)

Research Article by London swaminathan

 

Date: 8 January 2017

 

Time uploaded in London:- 6-28 am

 

Post No.3524

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

தந்தி வராக மருப்பிப்பி பூகந்தழை கதலி

நந்து சலஞ்சலம் மீன்றலை கொக்கு நளினமின்னார்

கந்தரஞ்சாலி கழைகன்ன லாவின் பல்கட்செவிக்கார்

இந்துவுடும்புகரா முத்தமீனுமிருபதுமே

—–உவமான சங்கிரகம், இரத்தினச் சுருக்கம்

யானைக் கொம்பு, பன்றிக்கொம்பு, முத்துச்சிப்பி, பாக்குமரம், வாழைமரம், நத்தை, சலஞ்சலம் (வலம்புரிச் சங்கு), மீ ன் தலை, கொடுக்குத் தலை, தாமரை, பெண்கள் கழுத்து, நெல், மூன்கில், கரும்பு, மாட்டுப்பல், பாம்பு, முகில், கர்ப்பூரம், முடலை, உடும்பு என்னும் இருபது இடங்களில் முத்து பிறக்கும்.

 

இந்த இருபது வகைகளில் கடலில் கிடைக்கும் முத்து ஒன்றுதான் அணிவரும் அணியும் முத்து.

 

1.தந்தி 2.வராகம் மருப்பு= யானை, பன்றி இவைகளின் கொம்புகள்

3.இப்பி = முத்துச் சிப்பிகளும்

4.பூகம் = கமுகங்காய் குல்லைகள்

5.தனி கதலி = ஒப்பற்ற வழைக்குலைகள்

6.நந்து = சங்கும்

7.சலஞ்சலம் = விசேஷ /அபூர்வ வலம்புரிர்ச்சங்கு

8.மீன்றலை = மீன் தலை

9.கொக்கு= கொக்கின் தலை

10.நளினம் = தாமரை

11.மின்னார் கந்தரம் = பெண்களின் கழுத்து

12.சாலி = செந்நெற் கதிர்க்குலை

13.கழை = மூங்கில்

14.கன்னல் = கரும்பு

15.ஆவின் பல் = பசுமாட்டின் பல்

16.கட்செவி = பாம்பு

17.கார் = மேகம்

18.இந்து = சந்திரன்

19.கரா =முதலை

20.உடும்பு= உடும்பின் தலை

 

Nose ring with pearls; picture from wikipedia

காளிதாசனும் இதையே சொல்கிறான்:

ஆரிய திராவிட வாதம் பொய் என்பதும், பாரதம் முழுதும் ஒரே கலாசாரம்தான் இருந்தது என்பதும் காளிதாசனின் 1250 உவமைகளையும் சங்கத் தமிழ் இலக்கிய உவமைகளையும் ஒப்பிட்டால் நன்கு விளங்கும். உலகில் வேறு எந்த கலாசாரத்திலும் அத்தகைய உவமைகளைக் காணவும் முடியாது; தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் உள்ள அடிப்படை ஒற்றுமை போல வேறு எந்த மொழியிலும் காணவும் முடியாது!

 

முத்துச் சரம், அறுந்த முத்து மாலை பற்றி “சூத்ர மணிகணா இவ” என்னும் பகவத் கீதை உவமை சங்க இலக்கியத்திலும் தொல்காப்பியத்திலும் இருப்பதை சென்ற வாரம் எழுதினேன். அதற்கு முன் முத்து பற்றி பல கட்டுரைகள் எழுதினேன். மிகச் சுருக்கமாக:-

 

சுவாதி நட்சத்திரத்தன்று பெய்யும் மழை சிப்பியின் வாய்க்குள் புகுந்து முத்து ஆகிறது என்று பர்த்ருஹரி சொன்னது கருவூர் கதப்பிள்ளையின் புறம் 380 பாடலில் உள்ளது.

காளிதாசனின் மாளவிகாக்னிமித்ரத்தில் உள்ளது (1-6)

 

யானைத் தந்தத்திலுள்ள முத்து பற்றி காளிதாசன் குறிப்பிடும் இடங்கள்:_ குமாரசம்பவம் — 1-6; ரகுவம்சம் 9-65;

 

தமிழ் இலக்கியத்தில் யானை முத்து, மூங்கில் முத்து பற்றி வரும் இடங்கள்:-

முருகு-304; மலைபடு-517; கலி 40-4; புறம் 170; ப.பத்து- 32; நற்.202; குறிஞ்சி 36; அகம் 282; 173

 

காளிதாசனுக்குப் பிடித்த உவமைகளில் முத்து மாலையும் ஒன்று.

பறவைகள் குடியேறும் போது (Please read my article on Bird Migration) பறந்து செல்லுவது முத்துமாலை போல உள்ளது என்றும் நதிகளை மலை உச்சியிலிருந்து பார்க்கையில் அவை முத்துமாலை போலத் தென்படும் என்றும் (ரகு.13-48; மேகதூதம் 49) கூறுகிறான்.

 

xxx

 

Ambergris from Sperm Whale used in perfumes

கீழ்கண்டபகுதி நான் எழுதிய பழைய கட்டுரையிலிருந்து:-

வராஹமிகிரர் எழுதிய பிருஹத் ஜாதகம் என்னும் அற்புத சம்ஸ்கிருத கலைக்களஞ்சியத்தில் பெர்fயூம் செய்வது எப்படி?” என்பது உள்பட 106 தலைப்புகளில் எழுதியுள்ள அரிய பெரிய விஷயங்களைக் கடந்த சில நாட்களில் கண்டீர்கள். இன்று முத்துக்கள் பற்றிப் பார்ப்போம்.

 

முத்துக்கள் உற்பத்தியாகும் எட்டு இடங்கள்:

த்விப: புஜக: சுப்தி: சங்க: அப்ர: வேணு: திமி: சூகர: சூதானி

முக்தா பலானி ஏஷாம் பஹூ சாது ச சுப்திஜம் பவதி

——-பிருஹத் சம்ஹிதா, அத்தியாயம் 81

பொருள்: யானை, பாம்பு, முத்துச் சிப்பி, சங்கு, மேகம், மூங்கில், திமிங்கிலம், காட்டுப் பன்றி ஆகிய இடங்களில் முத்து கிடைக்கும்.

வராக மிகிரர் இப்படிச் சொன்னாலும் விஞ்ஞானிகள் அறிந்த முத்துக்கள் கடலிலும் சில இடங்களில் ஆறுகளிலும்  கிடைக்கும் முத்துக்கள் மட்டுமே. மற்றவை எல்லாம் இதுவரை நிரூபிக்கப்படாதவையே. வராஹ மிகிரரும் தனக்கு முன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவி வரும் கருத்துக்களைத் தான் தொகுத்திருப்பதாகவே கூறுகிறார். அதனால் தன் நூலுக்கே சம்ஹிதை=தொகுப்பு எனப் பெயரிட்டுள்ளார்.

 

xxx

 

கடல் தரும் ஐந்து செல்வங்கள்

 

ஓர்க்கோலை சங்கம் ஒளிர்பவளம் வெண்முத்தம்

நீர்ப்படும் உப்பினோடைந்து

 

இவை ஐந்தும் கடல் தரும் செல்வம் என்று பழைய செய்யுள் கூறும்

 

ஒர்க்கோலை – அம்பர், அம்பர் க்ரிஸ் என்று அழைக்கப்படும் இது ஸ்பெர்ம் வேல் எனப்படும் திமிங்கிலத்திலிருந்து கிடைக்கிறது. மரத்திலிருந்து வெளியேறும் கோந்து போன்ற பிசினும் ஓர்க்கோலை என்று அழைக்கப்படும். மற்ற நான்கு: சங்கு,   பவளம், முத்து, உப்பு என்பன

 

 

அம்பர் அம்பர்க்ரிஸ் என்பது திமிங்கிலத்தின் குடலில் சுரக்கப்படும் ஒரு திரவம் கெட்டியாகி அதன் மலத்துடன் வெளியே தள்ளப்படும். உடலுக்குப் பூசும் வாசனைப் பொருட்களில் (செண்ட், பெர்ஃயூம்) அந்த நறுமணத்தை நீடிக்க வைக்க இது உதவும். மரத்திலிருந்து கிடைக்கும் பிசினைக் கொண்டு அலங்காரப் பொருட்களைச் செதுக்குவர். அதற்குள் ஏதேனும் பூச்சி, புழுக்கள் சிக்கியிருந்தால் அது ஆராய்ச்சிக்கு உதவுவதோடு அதன் மதிப்பும் அதிகரிக்கிறது.

Amber from trees with insects trapped inside.

MY OLD ARTICLES: _

 

Pearls in the Vedas and Tamil Literature- posted by me on 17 May 2014

http://swamiindology.blogspot.co.uk/2014/05/pearls-in-vedas-and-tamil-literature.html

 

1)Lord Krishna’s Diamond in USA? –  posted on 23 April 2012

https://tamilandvedas.com/2012/04/23/krishnas-diamond-in-usa/

2)அமுதசுரபி எங்கே? மயில் ஆசனம் எங்கே?

http://swamiindology.blogspot.co.uk/2012/05/blog-post.html

3)Gem Stones in Kalidasa and Tamil Literature

13th February 2012

http://swamiindology.blogspot.co.uk/2012/02/gem-stones-in-kalidasa-tamil-literature.html

 

ரத்தினங்களை அணிவதால் என்ன கிடைக்கும்? வராஹமிகிரர் பதில்!! Posted on 12 -2 -2015

 

–subham–

 

செத்தாரைப் போலத்திரி – பட்டினத்தார் பொன்மொழிகள்- Part1 (Post No.3516)

 

Amathur Temple, Picture by C.Vedanarayanan

Compiled by London swaminathan

 

Date: 5 January 2017

 

Time uploaded in London:-  12-42

 

Post No.3516

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

Golden Sayings of Tamil saint Pattinathar- Part 1

முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள் ளோரும் முடிவில் ஒரு

பிடிசாம்பராய் வெந்து மண்ணாவதும் கண்டு பின்னும் இந்தப்

படிசார்ந்த வாழ்வை நினைப்பதல்லால் பொன்னின் அம்பலவர்

அடி சார்ந்து நாம் உய்யவேண்டுமென்றே அறிவாரில்லையே

 

xx

 

பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்

தோன்றின மறையும் மறைந்தன தோன்றும்

பெருத்தன சிறுக்கும் சிறுத்தன பெருக்கும்

உணர்ந்தன மறக்கும் மறந்தன உணரும்

x

 

வாளால் மகவரிந்து ஊட்டவல்லேன் அல்லன் மாதுசொன்ன

சூளால் இளமை துறக்கவல்லேன் அல்லன் தொண்டுசெய்து

நாளாறில் கண்ணிடத்து அப்பவல்லேன் அல்லன் நான்  இனிச் சென்று

ஆளாவதெப்படியோ திருக் காளத்தி அப்பருக்கே

xx

மந்திக் குருளையொத் தேனில்லை நாயேன் வழக்கறிந்தும்

சிந்திக்குஞ் சிந்தையை யானென் செய்வேன் எனைத் தீதகற்றிப்

புந்திப் பரிவிற் குருளையை ஏந்திய பூசையைப் போல்

எந்தைக் குரியவன் காணத்தனே கயிலாயத்தானே

(மற்கட நியாயம், மார்ஜர நியாயம் பாடல்)

xx

வீடு நமக்கு திருவாலங்காடு விமலர் தந்த

ஓடு நமக்குண்டு வற்றாத பாத்திரம் ஓங்கு செல்வ

நாடு நமக்குண்டு கேட்டதெல்லாம் தர நன்நெஞ்சமே

ஈடுநமக்குச் சொலவோ ஒருவரும் இங்கில்லையே

xx

அம்பலத் தரசனை யானந்தக் கூத்தனை

நெருப்பினில் அரக்கென நெக்கு நெக்குருகித்

திருச்சிற்றம்பலத் தொளிரும் சிவனை

நினைமின் மனமே, நினைமின் மனமே

x

ஆசைக் கயிற்றிலாடும் பம்பரம்

ஓயா நோய்க்கிட மோடு மரக்கலம்

மாயா விகாரம் மரணப் பஞ்சரம்

சோற்றுத் துருத்தி கானப் பட்டம்

x

ஆசைக் கயிற்றிலாடும் பம்பரத்தைக்

காசிற் பணத்திற் சுழலுங் காற்றாடியை

மக்கள் வினையின் மயங்கும் திகிரியைக்

கடுவெளியுருட்டிய சகடக் காலை

 

x

மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் தன்வாயில் மட்டே

இனமான சுற்றம் மயானம் மட்டுமே வழிக்கேது துணை

தினையா மன வெள்ளளவாகினும் முன்பு செய்த தவம்

தனை யாளவென்றும் பரலோகம் சித்திக்கும் சத்தியமே

(வீடு வரை மனைவி, வீதி வரை உறவு, காடு வரை யாரோ?)

xx

பாவச் சரக்கொடு பவக் கடல் புக்குக்

காமக் காற்றொடுத் தலைப்பக்

கெடுவழிக் கரைசேர் கொடுமரக் கலத்தை

இருவினை விலங்கொடு இயங்கும் புற்கலனை

x

Amirthakateswarar Temple

எண்சாணுடம்பு மிழியும் பெருவழி

மண்பாற் காமம் கழிக்கும் மறைவிடம்

நச்சிக் காமுக நாய்தானென்றும்

இச்சித் திருக்கும் இடைகழி வாயில்

திங்கட் சடையோன் திருவருள் இல்லார்

தங்கித் திரியும் சவலைப் பெருவழி

 

xx

அண்டரண்டமும் அனைத்துள புவனமும்

கண்ட அண்ணலை கச்சியிற் கடவுளை

ஏகநாதனை இணையடி இறைஞ்சுமின்

போக மாதரைப் போற்றுதல் ஒழிந்தே

xx

கட்டி அணைத்திடும் பெண்டீரும் மக்களும் காலத் தச்சன்

வெட்டி முறிக்கும் மரம்போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால்

கொட்டி முழக்கி அழுவார் மயானம் குறுகி  அப்பால்

எட்டி அடி வைப்பரோ இறைவா கச்சி ஏகம்பனே

 

xx

நன்னாரில் பூட்டிய சூத்திரப் பாவைதன் நார்தப்பினால்

தன்னாலும் ஆடிச் சலித்திடுமோ அந்தத் தன்மையைப் போல்

உன்னாலி யானும் திரிவதல்லால் மற்றுனைப் பிரிந்தால்

என்னாலிங் காவதுண்டோ இறைவா கச்சி ஏகம்பனே

xx

பிறக்கும் பொழுது கொடுவந்ததில்லை பிறந்து மண்மேல்

இறக்கும்பொழுது கொடுபோவதில்லை இடை நடுவில்

குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்தது என்று கொடுக்க அறியா

திறக்குங் குலாமருக் கென்சொல்லுவேன் கச்சி ஏகம்பனே

 

xx

கல்லாப் பிழையும்  கருதாப் பிழையும்   கசிந்துருகி

நில்லாப் பிழையும்   நினையாப் பிழையும்   நின் அஞ்செழுத்தைச்

சொல்லாப் பிழையும்  துதியாப் பிழையும்  தொழாப் பிழையும்

எல்லாப் பிழையும்  பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே

 

xx

 

ஆவியொடு காயம் அழிந்தாலும் மேதினியில்

பாவி என்று நாமம் படையாதே — மேவிய சீர்

வித்தாரமும் கடம்பும் வேண்டாம் மடநெஞ்சே

செத்தாரைப் போலே திரி

xx

பருத்திப் பொதியினைப் போலே வயிறு பருக்கத் தங்கள்

துருத்திக்கு அறுசுவை போடுகின்றார் துறந்தோர் தமக்கு

இருத்தி அமுதிட மாட்டார் அவரை இம்மாநிலத்தில்

வருத்திக்கொண்டேன் இருந்தாய் இறைவா கச்சி ஏகம்பனே

xx

ஈயா மனிதரை ஏன் படைத்தாய் கச்சி ஏகம்பனே

xx

கொன்றேன் அநேகம் உயிரை எல்லாம் பின்பு கொன்றுகொன்று

தின்றேன் அதன்றியும் தீங்கு செய்தேன் அது தீர்க என்றே

நின்றேன் நின் சந்நிதிக்கே அதனால் குற்றம் நீ பொறுப்பாய்

என்றே உனை நம்பினேன் இறைவா கச்சி ஏகம்பனே

xx

ஊட்டு விப்பானும் உறங்கு விப்பானும் இங்கொன்றோடொன்றை

மூட்டு விப்பானும் முயங்கு விப்பானும் முயன்றவினை

காட்டு விப்பானும் இருவினைப் பாசக் கயிற்றின் வழி

ஆட்டு விப்பானும் ஒருவனும் உண்டே தில்லை அம்பலத்தே

xx

பிறவாதிருக்க வரந்தரல் வேண்டும் பிறந்துவிட்டால்

இறவாதிருக்க மருந்துண்டு கானிது எப்படியோ

அறமார் புகழ்த் தில்லை அம்பலவாணர் அடிக்கமலம்

மறவாதிரு மனமே அதுகாண் நன் மருந்துனக்கே

–Subham–

 

தொல்காப்பியத்தில் பகவத் கீதை உவமை! (Post No.3513)

Research Article written by London swaminathan

 

Date: 4 January 2017

 

Time uploaded in London:-  15-53

 

Post No.3513

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

ஆதிகாலத்தில் இந்தியர்களுக்கு ஒரே சிந்தனைதான். அவர்கள் உவமைகள் கூட ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். மேலும் அததகைய உவமைகளை வேறு எந்த பண்பாட்டிலும் காண முடியாது. இதனால் என்ன தெரிகிறது? ஆரியரும் கிடையாது, திராவிடரும் கிடையாது; இமயம் முதல் முதல் குமரி வரை ஒரே சிந்தனைதான். ஒரே பண்பாடுதான். ஒரு உவமையை வைத்து மட்டும் இப்படிச் சொல்லிவிட  முடியாது.  ஏராளமான இடங்களில் இதைக் காணலாம் “யானையால் யானையாத்தற்று” = நாட்டு யானையை வைத்து காட்டு யானையைப் பிடிப்பது என்பதை வள்ளுவனும் சொல்லுவான். அவனுக்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சாணக்கியனும் அர்த்தசாத்திரத்தில் சொல்லுவான்!

 

தொல்காப்பியனும், காளிதாசனும், சங்கப் புலவர்களும் கிருஷ்ண பரமாத்மா என்ன சொன்னாரோ அதையே கிளிப்பிள்ளை மாதிரி திரும்பத் திரும்பச் சொல்லுவர்.

 

ஒரே ஒரு உவமையை மட்டும் எடுத்துக்கொள்வோம்:

முத்துமாலை அல்லது ரத்தின மணிமாலை

 

மத்த: பரதரம் நான்யத் கிஞ்சித் அஸ்தி தனஞ்சய

மயி சர்வமிதம் ப்ரோதம் ஸூத்ரே மணி-கணா இவ

-பகவத் கீதை 7-7

தனஞ்சயா! என்னைக் காட்டிலும் உயர்ந்தது வேறு ஒரு சிறிதும் இல்லை; நூலில் மணிகள் போல இவை எல்லாம் என்னிடத்தில் கோர்க்கப்பட்டுள்ளன.

 

இது அவதூதோபநிஷத்திலும் உள்ளது

யேன ஸர்வமிதம் ப்ரோதம்  ஸூத்ரே மணிகணா இவ; தத் ஸூத்ரம் தாரயேத் யோகீ யோகவித் ப்ராஹ்மணோ யதி:

 

தொல்காப்பியர் சம்ஸ்கிருதத்தில் உள்ள சூத்ரம் என்ற சொல்லையே தனது சுருக்கமான விதிகளுக்குப் (1425) பயன்படுத்தியுள்ளார் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். கீழேயுள்ள பகுதியில் நூல் (சரடு) என்ற பொருளில் வருகிறது. தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் நூல்=சூத்ரம் என்றால் ஒரே பொருள்தான்! அதவது சரடு/ நூல் , புத்தகம்

 

நூற்பா=சூத்ரம் 1426

நேரின மணியை நிரல்படவைத்தாங்கு

ஓரினப் பொருளை ஒருவழி  வைப்பது

ஒத்து என மொழிப உயர்மொழிப் புலவர்

 

பொருள்:– ஒரே மாதிரியான மணிகளை வரிசையாகக் கோர்ப்பதுபோல ஓரினப் பொருள்களைத் தொகுத்து ஒரு முறையில் வைப்பதை ஒத்து என்று கூறுவர் சிறந்த புலவர்.

 

சூத்திரம் 1425-ல் சூத்திரம் என்ற சம்ஸ்கிருதச் சொல்லையும் சூத்திரம் 1426-ல் மணி என்ற சம்ஸ்கிருதச் சொல்லையும் தொல்காப்பியர் கையாளுவதையும் மறந்துவிடக் கூடாது.

 

இதையே மற்ற புலவர்கள் எப்படிப் பயன்படுத்துகின்றனர் என்பதைப் பார்க்கையில் மேலும் வியப்படைவோம்.

 

மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை

அணியில் திகழ்வதொன்று உண்டு (குறள் 1273)

 

பொருள்:-

கோத்த மணியின் ஊடே விளங்கும்  நூலைப்போல என் காதலியின் அழகினுள்ளே (இவள் மறைத்து வைத்தாலும்) தோன்றுகின்ற குறிப்பு ஒன்று இருக்கின்றது.

 

காளிதாசன் பயன்படுத்தும் இடங்கள்:

 

ரகுவம்சம் 1-4; 6-28; 7-10, 8-64, 16-62; விக்ர 5-2, 5-3

எனக்கு முன்னால் இருந்த பெரியோர்களால் செய்ய்ப்பட்ட ராமாயணம் இந்த துவாரமுடைய சூரியவம்சத்தில் என்னுடைய போக்கு, வஜ்ரத்தினால் துளியிடப்பட்ட ரத்தினத்தில் நூல் (எளிதாகச்) செல்லுவது போல இருக்கிறது- ரகுவம்சம்.1-4

 

 

இந்த அங்கதேச மன்னர், பல தேச மன்னர்களை வென்றதால் அவர்களுடைய மனைவிமார் முத்துமாலைகளை இழந்தனர். இப்பொழுது அவர்கள் அழுவதால் விழும் கண்ணீர்த்துளிகள் நூலின்றியே புது முத்துமாலைகள் சூட்டியதைப் போல விளங்கின – ரகுவம்சம்.6-28

 

(இந்த உவமையைப் பல தமிழ்ப் புலவர்கள் பயன்படுத்தி இருப்பதைக் கீழே காண்க)

 

ஒரு பெண் கால் கட்டைவிரலில் நூலைக் கட்டி, அதில் மணிகளைச் சேர்த்து மாலை கட்டிக் கொண்டிருந்தாள். அஜன் வருவதைக் கேட்டவுடனே நூலின் மறுமுனையை விட்டுவிட்டு அவனைப் பார்க்க ஜன்னலுக்கு ஓடினாள். அவள் காலில் நூல் மட்டுமே இருந்தது. மணிகள் சிதறி ஓடின- ரகுவம்சம்..7-10

 

பெண்கள் தனது உள்ளங்கைகளால் தண்ணீரை அடித்து விளையாடினர். அந்த வேகத்தில் அவர்களுடைய முத்துமாலைகள் இற்றுப் போயின. ஆனால் அவர்கள் எழுப்பிய நீர்த்துளியானது அவர்களுடைய மார்பகங்கள் மேல் மணிகள் போல இருந்ததால் மாலை நழுவியதை அவர்கள் உணர  முடியவில்லை.-ரகுவம்சம்.18-62

 

பாதி தொடுக்கபட்ட மேகலை என்னும் வரிகள் ரகுவம்சத்தில் (ரகுவம்சம்.8-64) வருகிறது.

 

சங்கத்   தமிழ் இலக்கியத்தில்

 

அகம்225 (எயினந்தை மகன் இளங்கீரனார்

பூத்த இருப்பைக் குழைபொதி குவீணர்

கழல்துளை முத்தின் செந்நிலத்து உதிர

பொருள்:-

குவிந்த துளை உடைய பூங்கொத்துகள் நூலினின்று அறுந்து விழும் துளையுடைய முத்தைப் போல சிவந்த நிலத்தில் உதிரும்.

 

குடவாயிற் கீரத்தனார் பாடிய (அகம்.315) பாடலில்

கோடை உதிர்த்த குவி கண் பசுங்காய்

அறுநூல் பளிங்கின் துளைக் காசு கடுப்ப

வறு நிலத்து உதிரும் அத்தம்

 

பொருள்:-

நெல்லி மரத்தில் மேல் காற்று உதிர்த்த, குவிந்த கண்ணை உடைய பசிய காய்கள், நூல் அறுபட்டு விழுந்த துளையுடைய , பளிங்குக் காசுகளைப் போல வெற்று நிலத்தில் உதிர்ந்து கிடக்கும் காட்டு நெறி….

 

 

 

இதே புலவர் (அகம்.289) இன்னொரு பாட்டில், ”

கண்பனி நெகிழ்நூல்முத்தின், முகிழ் முலை தெறிப்ப”

பொருள்:-

 

உடன் அவர் இல்லாமையை எண்ணி வருந்த, நூலறுந்து விழும் முத்துக்களைப் போல கண்ணீர் முலை மீது சிந்தக், குற்றம் இல்லாத படுக்கையில் அழகிய மெல்லிய அன்னச்சிறகால் ஆகிய  அணையைச் சேர்த்து………………………………….

 

இளங்கீரனார் ஒவ்வொரு பாட்டிலும் காளிதாசன் பயன்படுத்திய இரண்டு விஷயங்களைப் பயன்பத்துகிறார் என்பது அவர் காளிதாசனைக் கரைத்துக்குடித்தவர் என்பதைக் காட்டும்.

 

குறுந்தொகைப் பாடலில் (51) குன்றியனார் என்னும் புலவர் கூறுவதாவது:-

கூன் முண் முண்டகக் கூர்ம்பனி மாமல்ர்

நூலறு முத்திற் காலொடு பாறித்

துறைதொறும் பரக்குந்தூமணல் சேர்ப்பனை

 

பொருள்:-

வளைந்த முள்ளையுடைய கழிமுள்ளியினது மிக்க குளிர்ச்சியுடைய கரிய மலரானது, நூலற்று உதிர்ந்த முத்துக்களைப் போல காற்றால் சிதறி நீர்த்துறைகள் உள்ள இடம்தொறும் பரவும் தூய மணல் பரப்பை………………

 

குறுந்தொகை  104-ல் காவன் முல்லைப்  பூதனார் என்னும் புலவர் கூறுவதாவது:-

அம்ம வாழி தோழி காதலர்

நூலறு முத்திற் றண்சித ருறைப்பத்

தாளித் தண்பவர் நாளமேயும்

 

பொருள்:-

தோழி, ஒன்று கூறுவன்; கேட்பாயாக, நம் தலைவர் (காதலர்) நூலற்ற முத்துவடத்தினின்றும் தனித்து உதிர்கின்ற முத்துக்களைப்போல, குளிர்ந்த பனித்துளிகள் துளிக்க, குளிர்ந்த தாளியறுகின் கொடியை,  விடியற்காலத்தில் பசுக்கள் மேயும்…………..

கலித்தொகையிலும் (பாடல் 82, மருதக்கலி, மருதன் இளநாகன்) கண்ணீர்த் துளிகளை அறுந்த முத்துமாலைக்கு ஒப்பிடுவதைக் காணலாம்.

 

தமிழ் பக்தி இலக்கியத்தில் நிறைய இடங்களில் முத்துமாலை  கோத்தல், அறுந்த முத்துமாலை உவமைகளை  காணலாம்.

 

“செப்பு மொழி பதினெட்டுடையாள்- எனில்

சிந்தனை ஒன்றுடையாள்” (பாரத தேவி)– பாரதியார்

 

–சுபம்—

 

‘இனிய தமிழ்நாடு’ – கம்பன் பாராட்டு (Post No. 3510)

Written by London swaminathan

 

Date: 3 January 2017

 

Time uploaded in London:-  7-58 am

 

Post No.3510

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

தமிழ் மொழியைப் பாராட்ட வாய்ப்பு கிடைத்தால் கம்பன் நழுவ விடுவானா? பால காண்டத்தில் அவன் துவக்கிய பாராட்டுரை கிஷ்கிந்தா காண்டம் வரை நீடிக்கிறது. அகத்திய மகரிஷியைக் குறிப்பிட்ட

போதெல்லாம் தமிழையும் சேர்த்தே பாடினான்.

 

இப்பொழுது, சீதையைத் தேடுவதற்குப் புறப்பட்ட வானரங்கள் ஒவ்வொரு திசையை நோக்கியும் பட்டாளம் பட்டாமாகப் புறப்பட்டார்கள். தென் திசை நோக்கிச் சென்ற வானரங்கள் குறித்து கம்பன் பாடுகிறான்:–

 

அனைய பொன்னி அகன் புனல் நாடு ஒரீஇ

மனையின் மாட்சிகுலாம் மலை மண்டலம்

வினையின் நீங்கிய பண்பினர் மேயினார்

இனிய தென்  தமிழ்நாடு சென்றெய்தினார்

-ஆறுசெல் படலம், கிட்கிந்தா காண்டம்

 

பொருள்:-

வானர வீரர்கள், நீர்வளம் கொண்ட சோழநாட்டை விட்டுப் புறப்பட்டு, இல்லறத்தின் சிறப்புமிக்க சேரநாட்டைச் சேர்ந்தார்கள். அங்கும் சீதையைக் காணாமல், இனிய தமிழ் வழங்கப் பெறுகின்ற தென் பாண்டிநாட்டைச் சேர்ந்தார்கள்.

அத்திருத் தகு நாட்டினை அண்டர்நாடு

ஒத்திருக்கும் என்றால் உரை ஒக்குமோ

எத்திறத்திலும் ஏழ் உலகும் புகழ்

முத்தும் முத்தமிழும் தந்து முற்றலால்

 

பொருள்:_

ஏழ் உலகத்திலும் புகழப்படுகின்ற முத்துக்களையும் இயல்-இசை-நாடகம் என்ற மூன்று தமிழையும் தன்னிடத்தில் தோற்றுவித்து பெருமை பெறுவதால் செல்வத்தால் சிறப்பு பெற்ற அந்தப் பாண்டிய நாட்டை தேவர் உலகம் ஒத்திருக்கும் என்றால் அது ஏற்புடையதுதானே.

 

முத்தும் முத்தமிழும் தந்த நாடு பாண்டியநாடு!

 

இதைத் தொடர்ந்து வரும் மூன்றாவது பாட்டிலும்

 

என்ற தென் தமிழ்நாட்டினை எங்கனும்

சென்றுநாடித் திரிந்து திரிந்தினார்

பொன்றுவாரின் பொருந்தினர் போயினார்

துன்றல் அல் ஓதியைக் கண்டிலர் துன்பினார்

 

பொருள்:

ஒழுக்கத்தில் சிறந்த அந்த வானரர்கள், அழகிய தமிழ்நாடு என்று மேலே சிறப்பிக்கப்பட்ட பாண்டிய நாட்டில் எல்லா இடங்களிலும் தேடினர். அடர்ந்த இருள் போன்ற கூந்தலை உடைய சீதையைக்  காணாமல்,  துன்பம் கொண்டவர்களாகி இறக்கும் நிலமைதனை எட்டிப்பார்த்து மேலே சென்றார்கள்.

 

இதை சங்க காலத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்போம்.

 

சங்க இலக்கியத்தில் உள்ள சுமார் 30,000 வரிகளில் ஏறத்தாழ 20 இடங்களில் மட்டுமே தமிழ் என்ற சொல்லைக் காணலாம்!

 

தமிழ்நாடு என்ற சொல் பரிபாடல் திரட்டில் (9-1) என்ற ஒரே இடத்தில் மட்டும் காணப்படும். பொதுவாகத் திரட்டில் வரும் விஷயங்கள் பிற்காலத்தியவை என்ற கருத்து உண்டு.

 

ஆனால் தமிழகம் என்ற சொல் மிகப்பழைய பகுதியான புறநானூற்றிலேயே (168-18) காணப்படுகிறது.

 

அந்த காலப் புலவர்கள், தமிழ்  வாழ்க என்று வெறும் கூச்சல் போடுவோர் அல்ல. ஆக்கபூர்வமான வேலைகள் செய்து தமிழை வளர்த்தவர்கள்!

 

—Subahm–

 

32 அறங்கள், 16 பேறுகள், 8 மங்களச் சின்னங்கள் (Post No. 3507)

Written by London swaminathan

 

Date: 2 January 2017

 

Time uploaded in London:-  9-27 am

 

Post No.3507

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

 

பூங்கா வைத்து மலர்ச் செடிகளை வளர்த்தல், கோவிலில் நந்தவனம் அமைத்து பூஜைக்கு வேண்டிய மரம் செடி கொடிகளை வளர்த்தல். தல மரங்கள் என்ற பெயரில் பல்வேறு மரங்களுக்கு சிறப்பான இடம் தருதல், ஏழைகளுக்கு சத்திரம் அமைத்து உணவு கொடுத்தல், மருந்து கொடுத்தல், பிராணிகளுக்கு உணவும் நீரும் கிடைக்க ஏற்பாடு செய்தல் முதலிய ஏராளமான அறப் பணிகள் அந்தக் காலத்திலேயே நடைபெற்றன.

 

சிறைச்சாலைக் கைதிகளுக்கு உணவு கொடுத்தல் மேலை நாட்டிலும் இல்லாத ஒரு நூதன விஷயம். மன்னர்களின் பட்டாபிஷேகம், இளவரசர் பிறப்பு, திருமணம் ஆகிய காலங்களில் கைதிகளை மன்னித்து விடுதலை செய்தல் போன்ற பல அறப்பணிகள் நடந்துள்ளன. அறப்பணிகளுக்கான ஆதாரபூர்வ கல்வெட்டு அசோகர் சாசன காலத்திருந்து கிடைக்கின்றன. மஹாபாரத, ராமாயணம், அர்த்த சாத்திரம் முதலிய நூல்களிலும் கிடைக்கின்றன. மிகவும் நாகரீக முன்னேற்றம் உடைய ஒரு நாட்டில் மட்டுமே இத்தகைய சிந்தனைகள் எழும். சமூக சேவையில் பாரதம் உலகிற்கு வழிகாட்டியது என்று சொன்னால் மிகையில்லை

 

உவமான சங்ரகம் என்ற நூலில் எட்டு மங்கலச் சின்னங்கள் (அஷ்ட மங்கலம்), 16 பேறுகள், 32 அறங்கள் செய்யுள் வடிவில் உள்ளன.

செய்யுள் வடிவில் இருப்பதால் இரண்டு நன்மைகள்:- ஒன்று மனப்பாடம் செய்து நினைவில் வைப்பது எளிது. இரண்டாவது  இடைச்செருகலுக்கோ, மாற்றங்களுக்கோ வாய்ப்புகள் குறைவு.

 

 

1).வண்ணான் புன்னாவிதன் காதோலை சோலை மடந்தடம் வெண்

சுண்ணாம் பறவைப் பிணஞ்சுடற் றூரியஞ் சோறளித்தல்

கண்ணாடி யாவிற்குரிஞ்சுதல் வாயுறை கண்மருந்து

தண்ணீர் பந்தற் றலைக்கெண்ணை பெண்போகந் தரலையமே

 

2).மேதகுமாதுலர்க்குசாலை யேறுவிடுத்தல் கலை

யோதுவார்க் குண்டி விலங்கிற் குணவோடுயர்பிணிநோய்க்

கிதன் மருந்து சிறைச் சோறளித்தலியல் பிறரின்

மதுயற்காத்தநற்கந்நியர் தானம் வழங்கலுமே

 

3).கற்றவறுசமயத்தார்க் குணவு கருதும் விலை

உற்றதளித்துயிர் மீட்டல் சிறார்க்குதவனற்பான்

மற்று மகப்பெறுவித்தல் சிறாரை வளர்த்த்லெனப்

பெற்றவிவற்றினையெண்ணான்கறமெனப் பேசுவாரே

-உபமானசங்கிரஹம், இரத்தினச் சுருக்கம்

 

32 அறச் செயல்களின் பட்டியல்:-

1.ஆதுலர்க்குச் சாலை (ஏழைகள்=ஆதுலர்)

2.ஓதுவார்க்கு உணவு (மாணவர்களுக்கு)

3.அறுசமயத்தோர்க்கு உண்டி (உணவு)

4.பசுவிற்கு வாயுரை (உணவு)

5.சிறைக் கைதிகளுக்கு உணவு

6.ஐயமிட்டு உண் (பிச்சை போடுதல்)

7.திண்பண்டம் நல்கல் (விழாக் காலங்களில் பொங்கல், வடை)

8.அறவைச் சோறு (அன்னதானம்)

9.மகப்பெறுவித்தல் (பிள்ளை பெறுதல்)

10.மகவு வளர்த்தல் (பிள்ளைகளை வளர்த்தல்)

11.மகப்பால் வார்த்தல் (அவர்களுக்கு பால் வழங்கல்)

 

12.அறவைப் பிணஞ்சுடல் (அனாதைகள் இறுதிச் சடங்கு)

13.அறவைத் தூரியம் ( தூரியம்=மேள வாத்தியம்

அளித்தல்)

14.சுண்ணம் அளித்தல்

15.நோய்க்கு மருந்து வழங்கல்

16.வண்ணார்

17.நாவிதர்

18.காதோலை

19.கண்ணாடி

20.கண்மருத்து

21.தலைக்கு எண்ணெய்

 

22.பெண்போகம்

23.பிறர்துயர் காத்தல்

24.தண்ணீர் பந்தல்

  1. மடம் அமைத்தல்

26.குளம் வெட்டல்

27.பூங்கா வைத்தல்

28.ஆவுறுஞ்சுதறி (பசு முதலிய பிராணிகளுக்கு நீர்)

29.விலங்கிற்குணவு

30.ஏறுவிடுத்தல் (இனப்பெருக்கத்த்துக்கு காளைகள்)

31.விலைகொடுத்துயிர்காத்தல்

32.கன்னிகாதானம்

 

எட்டு மங்களச் சின்னங்கள்

 

சாற்றுங்கவரி நிறைகுடந்தோட்டிமுன் றர்ப்பணமா

மேற்றிய தீபம் முர்சம் பதாகை யிணைக்கயலே

நாற்றிசை சூழ்புவி மீதஅட்ட நன்குழையின்

மேற்றிதழ் வேற்றடங்கட்செய்ய வாய்ப்பைம்பொன்ந்த் மெய்த்திருவே

 

கவரி, நிறைகுடம் (பூர்ணகும்பம்),  தோட்டி(அங்குசம்),  தர்ப்பணம் (கண்ணாடி), தீபம், முரசம், பதாகை (கொடி), இணைக்கயல் ( இரட்டை மீன்)– ஆகியன அட்டமங்கலம் எனப்படும்.

 

 

வேண்டுநற்சுற்ற மிராசாங்க மக்கள்மேவு பொன்ம ணி

யாண்டிடுந்தொண்டு நெல்வாகன மாமிவை யட்டசெல்வங்

காண்டவி சீதல் கால்கெழு நீரொடு முக்குடி

நீராண்டளித்  தேபுனலாட்டனல் லாடை யணிதல்பினே

 

நல் சுற்றம், ராஜாங்கம், பிள்ளைகள் தங்கம், அணிவதற்குரிய ஆடை, ஆளுதர்க்குரிய அடிமை, நெல் முதலிய தானியம், வாஹனம் – இவையே அட்ட ஐஸ்வர்யம் (எட்டு செல்வங்கள் ) எனப்படும்.

 

16 பேறுகள்

 

பதினாறு பேறுகள் பற்றிய ஐந்து பாடல்களை ஏற்கனவே கொடுத்துள்ளேன். 16 பேறுகள்;

 

அழகு, வலிமை, இளமை, நன் மக்கள், நல்ல உடல்நலம், நீண்ட ஆயுள், நிலம், பெண், தங்கம், அறிவு, உற்சாகம்,கல்வி, வெற்றி, புகழ், மரியாதை, தானியம் (உணவுப் பொருட்கள்).

 

ஐந்து கவிஞர்கள் பாடிய “பதினாறும் பெற்றுப் பெறுவாழ்வு வாழ்க”! –Posted on 2nd July 2014.

 

–subham–

 

 

வியட்நாமில் வீர சிவாஜிக்கு சிலை! (Post No.3503)

Written by S NAGARAJAN

 

Date: 1 January 2017

 

Time uploaded in London:-  5-08 AM

 

Post No.3503

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

பாக்யா வார இதழில் வெளி வந்துள்ள கட்டுரை

 

வியட்நாமில் வீர சிவாஜிக்கு சிலை!

ச.நாகராஜன்

 

மாவீரனான சத்ரபதி சிவாஜிக்கு வியட்நாமின் மிகப் பெரிய நகரமான ஹோ சி மின் நகரில் ஒரு சிலை நிறுவப்பட்டிருக்கிறது என்ற செய்தி நம்ப முடியாத அதிசயமான செய்தி தானே!

என்றாலும் அது உண்மை தான்!

 

 

சைகோன் என்று பழைய நாட்களில் அழைக்கப்பட்ட இந்த நகரம் புரட்சி வீரன் ஹோசிமின் பெயரால் இப்போது அழைக்கப்பட்டு வருகிறது.

 

 

சத்ரபதி சிவாஜி மஹாராஜா  வலிமை வாய்ந்த முகலாய சாம்ராஜ்யத்தைத் தன் சிறு படையினால் கதி கலங்க அடித்தார். இதற்கான காரணம் அவரது புதிய முறையிலான போர் உத்திகள் தாம்! சிறிய தொகுதிகளாக உள்ள படைவீரர்களைக் கொண்ட படைப்பிரிவுகளைக் கொண்டு அவர் நடத்திய தாக்குதல்  முறைக்கு கொரில்லா தாக்குதல் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

 

 

இந்தத் தாக்குதலைத் தாக்குப் பிடிக்க முடியாமல் ஔரங்கசீப்பின் மாபெரும் படை அலறியது. ஒரு பெரும் வெற்றியைப் பெற்ற சிவாஜி ஹிந்து சாம்ராஜ்யத்தை நிறுவிப் புகழ் பெற்றார்.

 

வியட்நாமில் பலம் பொருந்திய அமெரிக்க ராணுவம் நவீன சாதனங்களுடன் வியட்நாமியர்களைத் தாக்கிய போது ஹோசிமின்னுக்கு சற்று திகைப்பாக இருந்தது.

 

 

என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் இதே போன்று வலிமை வாய்ந்த முகலாய சாம்ராஜ்யத்தின் படைகளை எதிர் கொண்டு வெற்றி பெற்ற சிவாஜி மஹராஜின் போர்த் தந்திர முறைகள் ஹோசிமின்னின் கவனத்திற்கு வந்தது.

 

அதே முறைகளை அவர் பின்பற்றவே அமெரிக்க ராணுவம் அதிர்ந்து போனது.

 

சுமார் இருபது ஆண்டுகள் நடை பெற்ற போரில் க்டைசியாக அது பின் வாங்கியது. 1975ஆம் ஆண்டு வியட்நாம் வெற்றி பெற்றது.

 

தனக்கு இந்த வெற்றியை வாங்கித் தந்தது மாவீரன் சிவாஜியே என்று  ஹோசிமின் நம்பினார். ஆகவே அவரை கௌரவிக்கும் வண்ணம் ஹோசிமின் மாவீரனுக்கு குதிரை மீது அமர்ந்த நிலையிலிருக்கும் சிலையை ஹோசிமின் நகரில் நிறுவினார்.

 

இன்று அந்த சிலை நிறுவியிருக்கும் இடம் ஹோசிமின் நகருக்கு வருகை புரியும் அனைவரும் பார்க்க வேண்டிய முக்கிய இடமாகத் திகழ்கிறது.

 

வியட்நாமிய மக்கள் வெற்றியைப் பெற தங்களுக்கு வழி காட்டிய வீர சிவாஜியைப் பெரிதும் போற்றுகின்றனர்.

 

வட வியட்நாமின் பாதுகாப்பு மந்திரி மேடம் பின் (Madame Binh) 1977ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வருகை புரிந்தார். அப்போது பாதுகாப்பு மந்திரியாக இருந்த ஜகஜீவன் ராம் அவரை வரவேற்றார். வெளிநாட்டு மந்திரிகள் விஜயம் புரியும் இடமாக இருக்கும் ராஜ் காட்டில் உள்ள காந்தி சமாதிக்கு அவரை அழைத்துச் சென்றார். பின்னர் குதுப்மினார், தாஜ்மஹால் உள்ளிட்ட இடங்கள் பற்றி வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் அவருக்கு எடுத்துரைக்க அவரோ தனக்குப் பார்க்க வேண்டிய முக்கிய இடம் ஒன்று இருக்கிறது என்று கூறினார்

‘சத்ரபதி சிவாஜி மஹராஜின் சமாதி எங்கு உள்ளது, அங்கு செல்ல வேண்டும்’, என்றார் அவர்

 

சத்ரபதி சிவாஜி மஹராஜின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய வேண்டுமென்ற தனது விருப்பத்தை இந்திய அரசுக்கு அவர் தெரிவித்த போது அதிகாரிகளுக்குச் சற்று வியப்பு ஏற்பட்டது. சிலையின் உயரத்திற்கு அவரைக் கொண்டு செல்ல ஒரு கிரேன் வேண்டும்.

மற்ற ஏற்பாடுகளையும் செய்ய வேண்டுமே!

 

 

ஏன் வீர சிவாஜிக்கு அவர் சிலை அணிவிக்க விரும்புகிறார் என்று கேட்ட போது அவர் அமெரிக்கர்களுக்கு எதிரான எங்கள் போரில்  வியட்காங் ராணுவ வீரர்கள் சிவாஜியின் வீர கதையைச் சொல்லி மகிழவது வழக்கம் என்றும் அவ்ரது ராணுவ தளபதிகள் முகலாய சாம்ராஜ்யத்தைக் கதிகலங்க அடித்ததைச் சொல்லி உத்வேகம் பெறுவது வழக்கம் என்றும் அதனாலேயே தாங்கள் வெற்றி பெற முடிந்தது என்றும் விளக்கமாகக் கூறினார்.

அத்தோடு  கொரில்லா போர்முறையைக் கண்டு பிடித்தவர் வீர சிவாஜியே என்று கூறிய அவர் இதே முறையைத் தான் பெடல் காஸ்ட்ரோ கியூபாவில் அமெரிக்க ராணுவத்தினரை எதிர்கொள்ளக் கையாண்டார் என்றும் கூறினார்.

 

அவரிடம் சிவாஜியின் சமாதி மஹராஷ்டிரத்தில் ராய்கட்டில் உள்ளது என்று  கூறிய அதிகாரிகள் அவரை அங்கு அழைத்துச் சென்றனர்.

 

சமாதியைச் சுற்றி வந்து வணங்கிய அவர் அங்கு கீழே இருந்த மண்ணில் கொஞ்சம் எடுத்துப் பொட்டலத்தில் மடித்து வைத்துக் கொண்டார். அந்த மண்ணைத் தன் தலையிலும் இட்டுக் கொண்டார்.

 

வியப்படைந்த நிருபர்கள் அதற்கான காரணத்தைக் கேட்ட போது, மாவீரன் பிறந்த மண் இது; இந்த மண்ணை எங்கள் நாட்டில் தூவினால் அங்கும் இவர் போன்ற  மாவீரர்கள் தோன்றுவார்கள் என்று பதிலளித்தார்.

 

மிலிந்த் காட்கில் என்பவர் கொரில்லா உத்தியை போர்களின் பயன்படுத்துவதைப் பற்றி ஒரு சுவையான புத்தகத்தை எழுதியுள்ளார். ராணுவம் பற்றி எழுதும் பத்திரிகையாளரான இவர் எப்படி சத்ரபதி சிவாஜியின் போர்முறையை வியட்நாமியர் பயன்படுத்தி அமெரிக்கர்களை வெற்றி கொண்டனர் என்பதை விவரித்துள்ளார்.

 

 

சிவாஜியின் முடிசூட்டு விழாவைப் பற்றி ஒரு ஆங்கிலேயர் மூன்று மாத காலம் ராய்கட் கோட்டையில் தங்கி இருந்து ஆராய்ச்சி செய்து ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.

சிவாஜியின் மகுடாபிஷேகம் பற்றிய செய்திகள் சுவையானவை.

சிவாஜியின் சிம்மாசனம் 32 மணங்கு தங்கத்தால் செய்யப்பட்டது. ஒரு  கோடியே நாற்பது லட்சம் ‘ஹண்’ (மராட்டிய பணம்) செலவழித்து முடிசூட்டு விழா நடைபெற்றது.

 

சிவாஜி அரியணை ஏறியதும் வைரக்கல் பதித்த பொன் தாம்ரை மலர்களையும் பொன்னாலும் வெள்ளியாலும் செய்த வேறு பல மலர்களையும் அங்கே கூடியிருந்தோரிடையே வாரி வழங்கினார்.

 

 

சமீபத்தில் மணமாகி இருந்த 16 சுமங்கலிகள் அரியணையில் அமர்ந்த மாவீரனுக்கு ஆரத்தி எடுத்து திருஷ்டி கழித்தார்கள்.

வேத மந்திரங்களை முறையாக் அந்தணர்கள் ஓத ‘ஜய் சிவாஜி’ என்ற கோஷம் வானைப் பிளந்தது. சிவாஜியின் ராஜகுருவான் காகபட்டர்  சிம்மாசனத்தின் அருகில் சென்று நல்ல முகூர்த்த நேரத்தில் பொன்னும் பவழமும் முத்தும் கோர்த்துப் பின்னப்பட்டிருந்த மகுடத்தைச் சிவாஜிக்குச் சூட்டினார். சிவா, தன்னிகரில்லாத சுதந்திரத் தலைவர்  என்று அவர் சிவாஜியின் புகழை அறிவித்தார்!

 

இந்த வைபவம் நடந்த தேதி 1674ஆம் ஆண்டு ஜூன் 6 என்று வ்ரலாறு குறிப்பிடுகிறது!

 

வீர சிவாஜியின் சமாதி இன்றும் புகழ் பெற்ற யாத்திரைத் தலமாக இலங்குகிறது!, வியட்நாமியர் உள்ளிட்டவர்க்கும் கூட!!

**************

 

 

 

 

மொழியின் வலிமை தாழ்த்தப்பட்டவரை உயர்த்துவதற்கே! நோபல் பரிசு உரை (Post No.3500)

Written by S NAGARAJAN

 

Date: 31  December 2016

 

Time uploaded in London:-  11-40 AM

 

Post No.3500

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

 

பாக்யா வார இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

மொழியின் வலிமை தாழ்த்தப்பட்டவரை   உயர்த்துவதற்கே! நோபல் பரிசு உரை

ச.நாகராஜன்

 

 

 

நோபல் பரிசு பெறுவது உலகின் மிகப் பெரிய கௌரவம். அங்கீகாரமும் கூட. இதைப் பெறுவோர் பரிசு பெறும் நிகழ்ச்சியில் ஒரு உரை நிகழ்த்துவர். அது மிகவும் அற்புதமான உரையாக அமையும். ஆகவே ஒவ்வொரு துறையிலும் பரிசு பெற்றவர்கள் நிகழ்த்திய நோபல் பரிசு உரைகளைத் தொகுத்து தொகுதி தொகுதியாக வெளியிடப்படுகிறது.

 

அவற்றுள் டோனி மாரிஸனின் (Tony Marrison) உரையும் ஒன்று. அதன் சுருக்கத்தை இங்கே காணலாம்..

 

1993ஆம் ஆண்டு டோனி மாரிஸன் நோபல் பரிசை இலக்கியத்திற்காகப் பெற்றார். இப்படி நோபல் பரிசு பெறும் முதல் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணி இவரே என்ற புகழையும் கூடவே பெற்றார்.

 

 

அவர் தனது நாவல்களில் ஆழ்ந்த பார்வையுடனும் கவிதை ஆவேசத்துடனும் அமெரிக்க வாழ்வியல் உணமைக்கு உயிர் தருபவர் என்பது நோப்ல பரிசு பெறுவதற்கான காரணமாக குறிப்பிடப்பட்டது.

 

டிசம்பர் 7ஆம் தேதி ஸ்வீடனின் பரிசு பெறும் மேடையில் ஏறி அவர் ஆற்றிய உணர்ச்சி மிக்க சொற்பொழிவு அனைவருக்கும்  மொழியைப் பயன்படுத்த வேண்டிய வழியைப் பற்றி உத்வேகமூட்டும் ஒரு உரையாக அமைந்தது. அவர் உரையின் சாரம்:

 

 

: முன்னொரு காலத்தில் ஒரு பெண்மணி இருந்தாள். அவள் கண்பார்வையற்றவள். ஆனால் புத்திசாலி. அவள் ஒரு அடிமை. கறுப்பு இனத்தைச் சேர்ந்தவள். அமெரிக்க பிரஜை. தனியே ஒரு சிறிய வீட்டில் நகருக்கு வெளிப்புறத்தில் அவள் வாழ்ந்து வந்தாள்.

 

 

அவளது  புத்திகூர்மை அவள் அண்டை அய்லாரையும் தாண்டி நகரில் வசிப்போரையும் தாண்டி எங்கும் பரவியிருந்தது.

ஒரு நாள் சில இளைஞர்கள் அந்தப் பெண்மணி அப்படிப்பட்ட புகழுக்கு உரியவள் இல்லை என்று நிரூபிக்கும் கெட்ட எண்ணத்துடன் அவளை அணுகினர்.

 

ஒரே ஒரு கேள்வி கேட்போம். அதற்குச் சரியான பதிலைச் சொல்லி விட்டால் அவள் மேதாவி தான் என்பதை ஒப்புக் கொள்வோம். இல்லையேல் அவள் ஒரு ஃப்ராடு என்று சொல்வோம் என்றனர்.

 

 

அவர்களில் ஒருவன் அந்தப் பெண்மணியை அணுகி, “அம்மணி, இதோ என் கையில் ஒரு சிறிய் பறவை இருக்கிரது. அது உயிரோடு இருக்கிறதா அல்லது செத்து விட்டதா?” என்று கேட்டான்.

 

 

பறவை உயிரோடு இருக்கிறது என்று அவள் கூறினால் கையை ஒரே ஒரு அமுக்கு அமுக்கி அந்தப் பறவையைக் கொன்று விடலாம். அவள் செத்து விட்டதாகச் சொன்னால் உயிரோடு இருக்கும் பறவையைக் காட்டி அவள் கூறியது தவறு என்று நிரூபிக்கலாம் என்பது அந்த இளைஞர் கூட்டத்தின் திட்டம்.

 

ஆனால் மகா புத்திசாலியான பார்வையற்ற அந்தக் கறுப்பு இனப் பெண்மணி அவர்களின் மோசமான திட்டத்தை அறிந்து கொண்டாள்.  சற்று பேசாமல் இருந்த அவளை அவர்கள் கிண்டல் செய்ய ஆரம்பித்தனர்.

 

 

கடைசியில் அவள் பேசினாள்: “உங்கள் கையில் இருக்கும் பறவை உயிரோடு இருக்கிறதா செத்து விட்டதா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அதற்கான விடை உங்கள் கையில் இருக்கிறது என்பது மட்டும் எனக்குத் தெரியும். விடை உங்கள் கையில் தான் இருக்கிறது!”

 

 

அதற்கான அர்த்தம் – ஒருவேளை அது இறந்து கிடந்த போது அதை எடுத்து வந்திருக்கலாம். அல்லது அதை நீங்களே சாகடித்திருக்கலாம். ஒருவேளை அது உயிரோடு இருந்தால் அதை நீங்கள் இப்போது நினைத்தாலும் சாக அடிக்கலாம். அது உயிரோடு இருக்க வேண்டுமா இல்லையா என்பது உங்கள்  முடிவைப் பொறுத்தது. பொறுப்பு உங்களுடையதே.

இந்த அதிரடி பதிலைக் கேட்டு திருதிருவென்று விழித்த இளைஞர்கள் மனம்  மாறி அவளிடம் தங்களின் உண்மையான திட்டத்தை எடுத்துரைத்து தங்கள் செய்கைக்கு வருந்தினர்.

பார்வையற்ற அந்தப் பெண்மணி அவர்கள் தங்கள் வலிமையை உறுதிப்படுத்துவதிலிருந்து தன் கவனத்தை அவர்கள் எந்தக் கருவியின் மூலம் அதை உறுதிப்படுத்த முயல்கிறார்கள்  அதற்கு மாற்றிக் கொண்டாள். பதிலைச் சொன்னாள்.

 

 

கையில் இருக்கும் பறவையைப் பற்றிய உண்மை நிலையப் பற்றிய ஹேஷ்யம் எனக்கு எப்போதுமே ஒரு கவர்ச்சியைத் தந்தது. ஆனால் இப்போது நினைக்கும் போது நான் செய்யும் எழுத்துப் பணியே என்னை இந்த நோபல் பரிசு பெறும் இடத்திற்கு கொண்டு சேர்த்துள்ளது.

 

 

ஆகவே அந்தப் பறவையை மொழி என்றும் அந்தப் பெண்மணியை ஒரு எழுத்தாளர் என்றும் நான் காண்கிறேன். அவளுக்குப் பிறக்கும் போது கொடுக்கப்பட்ட  மொழியை – அது பல கொடிய காரணங்களுக்காகத் தடுக்கப்பட்ட போதிலும் கூட –  அதை எப்படி உரிய முறையில் கையாண்டு  சேவை செய்ய முடியும் என்று தான் அவள் கவலைப்பட்டாள்.

 

அவள் ஒரு எழுத்தாளர் என்பதால், மொழியை ஒரு அமைப்பாகவும் அத்துடன் கூட உயிர்ப்புடன் கூடிய விளைவை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகவும் அவள் நினைக்கிறாள்.

 

 

ஆகவே குழந்தைகள் அவளிடம் “அது உயிருட்ன்  இருக்கிறதா அல்லது செத்து விட்டதா என்ற கேள்வியை எழுப்பும் போது அவள் மொழி என்பது இறக்கக் கூடிய ஒன்றே. ஆனால் அதை உயிர்ப்புடன் தக்கவைக்க முயற்சியும் திட மனதும் வேண்டும்; கையில் இருக்கும் பறவை இறந்து விட்டது என்றால் அந்த சவத்திற்கு  காரணம் அதை வைத்திருந்தவர்களே என்று நம்புகிறாள்.

பேச்சு வழக்கொழிந்து, எழுதவும் முடியாமல் இறந்து போன ஒரு மொழி என்பது விளைச்சலைத் தராமல் தனக்குத் தானே முடக்கு வாதத்தை உருவாக்கிக் கொண்ட ஒன்றேயாகும்.

 

 

ஒரு மொழியின் செழுமை என்பது அதை கையாண்டு பேசுபவர்கள், படிப்பவர்கள், எழுதுபவர்கள் ஆகியவர்களிட்ம் அது வாழும் திறனைப் பொறுத்தே உள்ளது.

 

டோனி மாரிஸன் இப்படி அற்புதமாக மொழியின் ஆற்றலையும் அதைக் கட்டிக் காத்து வளர்கக் வேண்டிய கடமையையும் தன் உரையில்  எடுத்துரைத்தார்.  அவரது உரை எந்த ஒரு மொழிக்கும் பொருந்தக் கூடியதே!

 

 

டோனி மாரிஸனின் கருத்துப் படி ஒரு  மொழி அடிமைத் தனத்தையோ போரையோ அல்லது ஒரு இனத்தைப் பழிவாங்குவதற்கோ ப்யன்படுத்தக்கூடாது. மாறாக ஒடுக்கப்பட்டவர்களை உயர்ததுவதற்காக மொழியின் வலிமை அவர்களைச் சென்று சேர வெண்டும்.

 

 

அறிவை நோக்கியே ஒரு  மொழி முன்னேற வேண்டும், அதன் அழிவை நோக்கி அல்ல.

 

 

நாம் இறக்கிறோம். அதுவே வாழ்க்கையின் அர்த்தமாக இருக்கலாம். நாம் மொழியைப் பேசுகிறோம். அதுவே நமது வாழ்க்கையை அளக்கும் அளவுகோலாக இருக்கும்.

 

 

இப்படி, மொழியைப் பற்றி தனது ஆழ்ந்த கருத்தைக் கூறியுள்ள டோனி மாரிஸன் எந்த எழுத்தும் தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்தப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தை  தன் நோபல் உரையில் உலக மக்களின் முன் வைக்கிறார்.

 

 

அவரது நெகிழ்வு தரும் இந்த உரை உலகில் அனைவராலும் அடிக்கடி பேசப்பட்டு அனைவருக்கும் உத்வேகத்தைத் தருகிறது.

மொழிச் சண்டையை விடுத்து மொழியின் வலிமையை ஆக்க பூர்வமாக ஒடுக்கப்பட்டோரின் நலத்திற்காகப் பயன்படுத்தினால் உல்கம் ஒன்று படும்; மேம்படும்!

*******