உருகும் பனிப்பாறைகள்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்! (Post No.2648)

o-ANTARCTICA-SUMMER-ICE-MELT-facebook

Ice Floes on the Southern Ocean

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 20 March 2016

 

Post No. 2648

 

Time uploaded in London :–  6-29 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

பாக்யா 4-3-2016 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியான கட்டுரை

 

 

உருகும் பனிப்பாறைகள்; உயரும் உஷ்ணநிலை – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

ச.நாகராஜன்

 

arctic

பூமி வெப்பமயமாதல் என்பது ஏதோ ஒரு கணிப்பு அல்ல; அது இப்போது நடக்கின்ற ஒரு உண்மை நிகழ்வு ஜேம்ஸ் ஹான்ஸன்

பூமியின் வெப்பநிலை ஒரு டிகிரி செல்ஸியஸ் உய்ரந்து விட்டதாக பிரிட்டனின் விஞ்ஞானிகள் கவலையுடன் எச்சரித்துள்ளனர்..பூமியில் நான்கு டிகிரி செல்ஸியஸ் உயர்ந்தால் என்னென்ன நடக்கும் என்ற விஞ்ஞானிகளின் அபாய எச்சரிக்கையைத் தொடர்ந்து நவம்பர் 2015இல் முடிந்த இவர்களின் ஆய்வு முடிவுகள் வந்துள்ளது குறிப்பிடத் தகுந்தது. விளைவுகள் என்ன? பூமியில் உள்ள அனைத்துக் கடல்களும் பொங்கி எழும்!66 கோடி மக்கள் வாழ்கின்ற பரப்பை நீரினுள் மூழ்கடித்து பல கோடி பேரை விழுங்கும்.

 

இரண்டே இரண்டு டிகிரி உஷ்ணநிலை உயர்வு கூட 28 கோடி பேருக்கு அபாயத்தை விளைவிக்கும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு.

இது ஒரு புறம் இருக்க, பூமியின் துருவங்களில் உள்ள பனிப்பாறைகள் கடல் மட்டத்தை உயர்த்தி வருகின்றன. இதனால் நமக்கென்ன என்று சும்மா இருக்க முடியாது.இந்த உயர்வு பூமியின் சுழற்சியைச் சற்று மெதுவாக ஆக்கி இருக்கிறது. பூமி சற்று மெதுவாகச் சுழன்றால் பூமியில் பகல் நேரம் சற்று அதிகமாக ஆகும்.

விஞ்ஞானிகள் கடந்த கால சரித்திரத்தில் கடல் மட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்களைத் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். இதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் நிலைகளைச் சரியாகக் கணித்துக் கூற முடியும்.பூமியின் உட்பகுதியையும் அவர்கள் கவனித்து வருகின்றனர்.

இயற்பியல் பேராசிரியரான மாத்யூ டம்பெர்ரி (Mathieu Dumberry),” கடந்த நூற்றாண்டில் கடல் மட்ட மாற்றத்தை நன்கு புரிந்து கொள்ள, பூமியின் உட்பகுதியை நன்கு ஆராய வேண்டியிருக்கிறது.” என்கிறார்.

antarctic_sea_ice-spl

 

பனிப்பாறைகள் உருகுவதால் துருவத்தின் அருகே வசிக்கும் மக்கள் கூட்ட்ம் இடம் பெயர்ந்து பூமத்திய ரேகைப் பகுதியை நோக்கி வர ஆரம்பித்துள்ளனர். இது மட்டுமின்றி சந்திரனின் ஆகர்ஷணமும் பூமியின் சுழற்சியில் தாக்கம் ஏற்படுத்தி அதை மெதுவாகச் சுழல வைக்கிறது. இந்தக் காரணங்களினால் பூமியின் பகல் நேரம் சற்று அதிகரித்துள்ளது. எவ்வளவு என்று கேட்டு தெரிந்து கொண்டால் ‘பூ’ இதற்கா இவ்வள்வு ஆர்ப்பாட்டம் என்று சாமானிய மனிதன் விமரிக்கக் கூடும்.

பகல் நேரத்தின் அதிகரிப்பு அடுத்த நூற்றாண்டில் 1.7மில்லி செகண்டாக இருக்கும்.

 

 

இந்த உஷ்ண நிலை உயர்வும் பனிப்பாறை உருகுதலும் ஏன் ஏற்படுகின்றன?

நாம் அன்றாடம் உபயோகிக்கும் லட்சக்கணக்கான வாகனங்கள் கக்கும் நச்சுப் புகை தான் காரணம். இவை சுற்றுப்புறத்தை மாசு படுத்தி நாம் சுவாசிக்கும் காற்றையும் அசுத்தமாக்குகின்றன. இதனால் ஏற்படும் ஆரோக்கியக் கேடுகள் பல! சுவாசக் கோளாறுகளில் ஆரம்பித்து மாரடைப்பு வரை அனைத்து வியாதிகளையும் இன்றைய மோசமான சுற்றுப்புறச் சூழ்நிலை ஏறபடுத்துகிறது.

நல்ல காற்றை கிராமங்களில் மட்டுமே சிறிது சுவாசிக்க முடிகிறது.

 

vitality 1

பழைய காலங்களில், பாட்டில் வாட்டர், கேன் வாட்டர்’  என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோமா? ஆனால் இன்றோ அவை அன்றாட நடைமுறை ஆகி விட்டது!

அடுத்து வரப்போவது பாட்டில் காற்று அல்லது கேன் காற்று! நல்ல காற்றை நகரங்களில் சுவாசிக்க முடியவில்லை என்பதால் நீரை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்வது போல காற்றையும் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப் போகிறார்கள்.

 

 

சிரிப்புக்கான செய்தி அல்ல இது. உண்மையிலேயே நடைமுறைக்கு வந்து விட்ட உண்மை இது.

சீனாவில் சுற்றுப்புறச் சூழல் மிக அதிக அளவில் கெட்டு விட்டது. லட்சக் கணக்கான வாகனங்கள் உள்ளிட்ட பல காரணங்களினால் காற்று மாசின் அளவு எல்லை மீறிப் போய்விட்டது.

 

vitality 2

இதைப் பார்த்த கனடாவைச் சேர்ந்த  ஒரு நிறுவனம் ‘சுத்தக் காற்றை’ பாட்டிலில் அடைத்து விற்க ஆரம்பித்துள்ளது.மலைக் காற்று அடைக்கப்பட்ட ஒரு பாட்டிலின் விலை 28 டாலர்கள் தான் – அதாவது சுமார் 1680 ரூபாய்! கனடிய சுத்தக் காற்று இடங்களான பான்ஃப் மற்றும் லேக் லூஸியிலிருந்து பிடிக்கப்படும் காற்று சீனாவில் இப்போது அமோக விற்பனையைக் கண்டுள்ளது. ‘ப்ரீமியம் ஆக்ஸிஜன்’ – அதாவது முதல் தர ஆக்ஸிஜன் என்ற பெயரில் கிடைக்கப் பெறும் இதை 1680 ரூபாய் கொடுத்து வாங்க சீன மக்கள் தயார். இந்த நிறுவனத்தின் பெயர் வைடாலிடி ஏர் (Vitality Air) இந்த நிறுவனத்தின் சீன பிரதிநிதியான ஹாரிஸன் வேங் என்பவர் இண்டர்நெட்டில் இது விற்பனைக்கு வந்த செய்தி தெரிவிக்கப்பட்ட உடனேயே அனைத்து பாட்டில்களும் விற்று தீர்க்கப்பட்டதாகக் கூறுகிறார்.

 

 

நமது நாட்டில் தலைநகர் டில்லியின் காற்று நீதிபதிகளையே கவலையுறச் செய்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கூற வைத்திருக்கிறது. அடுத்த கவலைக்குரிய நகரம் சென்னை! இங்கும் பாட்டில் காற்று வர நீண்ட காலம் ஆகாது.

 

 

இதைத் தவிர்க்க வாகனப் பயன்பாட்டை அனைத்து மக்களும் கட்டுப்படுத்த வேண்டும். இது ஒன்றே வழி. நடக்க முடிந்த இடங்களில் நடக்கலாம். ஒவ்வொருவரும் காரிலோ ஸ்கூட்டரிலோ செல்வதைத் தவிர்த்து நிறைய பேர் அமரக்கூடிய பஸ்களில் பயணிக்கலாம். நவீன மாசைக் கட்டுப்படுத்தும் எஞ்சின் உள்ள வாகனங்களையே வாங்கலாம். அரசின் வற்புறுத்தலோ அல்லது சட்டமோ இல்லாமல் தாமாகவே வாகனங்களின் புகைக் கட்டுப்பாட்டுச் சோதனைகளை அவ்வப்பொழுது மேற்கொள்ளலாம். மரங்களை வளர்ப்பதன் மூலம் உயிர்க்காற்றான ஆக்ஸிஜன் அதிகமாகக் கிடைக்க வழி வகுக்கலாம்.

vitality 3

 

மக்கள் மனம் வைத்தால் நம் சந்ததியினருக்கு சுத்தக் காற்றையும் சுத்த நீரையும் நிச்சயமாக வழங்க முடியும்!

விஞ்ஞானிகள் எச்சரித்து விட்டார்கள்; விழிக்க வேண்டியது மக்கள் கடமை!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

1893ஆம் ஆண்டில் நடந்த சம்பவம் இது. கப்பல் ஒன்றில் ஸ்வாமி விவேகானந்தருடன் சக பயணியாக பிரபல தொழிலதிபரான ஜாம்ஷெட்ஜி டாட்டா ஒரு கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தார். கப்பலில் பயணித்ததால் பலமுறை ஸ்வாமிஜியுடன் பேசும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.இந்தியாவை ஆன்மீக உணர்வினால் தட்டி எழுப்ப விழைந்த வீரத்துறவி விஞ்ஞானத்திலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்ததை எண்ணி அவர் அதிசயித்தார். ஸ்வாமிஜியின் திட்டங்களை எல்லாம் கேட்ட அவருக்கு பெரும் உத்வேகம் ஏற்பட்டது.இந்தியாவில் முதல் எஃகு உருக்காலையை அவர் ஆரம்பித்தார். ஆரம்பித்தவுடன் ஸ்வாமிஜிக்கு அவர் ஒரு கடிதம் எழுதினார் இப்படி: “ ஐந்து வருடங்களுக்கு முன்னர் உங்களுடன் சக பயணியாக நான் பயணித்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நம்புகிறேன். நாம் பேசிக்கொண்டிருந்த படி இந்தியாவில் ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தை நான் ஆரம்பித்துள்ளதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.”

 

tata

ஸ்வாமிஜியால் உத்வேகம் ஊட்டப்பட்ட டாட்டா அவர் தன்னை வழி நடத்த வேண்டும் என்று விரும்பினார். அவரை தனது ஆய்வு நிறுவனத்திற்கு முதல் டைரக்டராக ஆக்க வேண்டும் என்ற பெரும் விருப்பம் இருந்தது.

 

ஆனால் ஸ்வாமிஜி  பல துறையினரையும் தட்டி எழுப்பி ஊக்குவித்து இந்தியாவின் மொத்த எழுச்சியில்  கவனம் செலுத்தியதால் தனிப் பொறுப்புகளை ஏற்கவில்லை.

 

ஒரு சிறிய கப்பல் சந்திப்பு இந்திய ஆலை வரலாற்றிலும் விஞ்ஞான ஆய்வுக் கூட வரலாற்றிலும் ஒரு பெரிய விதையை விதைத்தது அதிசயம் தானே!

**************

 

ஜம் ஜம் பங்கஜம்: நையாண்டி மடல் எண்-5 ( Post No.2645)

Rue de l'Étuve - Stoofstraat, Bruxelles - Brussel, België

Rue de l’Étuve – Stoofstraat, Bruxelles – Brussel, België

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 19 March 2016

 

Post No. 2645

 

Time uploaded in London :–  8-29 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

WARNING:  PICTURE SCANNED FOR  JUST THE JOBBRUSSELS:

Urinating boy statue in Brussels

 

நையாண்டி மடல் எண் 5

 

ஜம் ஜம் பங்கஜம் பங்கேற்கும் தலை நகர் சேனல் நிகழ்ச்சி!

.நாகராஜன்

 

என் அன்புக்குரிய முட்டாள்களே!

 

CUTTING  பற்றிய மடல் தயார்! அதை வெளியிடும் நேரத்தில் அவசரத் தொலைபேசி அழைப்பு என உதவியாளர் கூற யார் என்றேன்.

சொன்னார். என்னையா என்றேன்!

நமது அறிவுக் களஞ்சியங்கள் பணி புரியும் தலைநகரின் பல்கலைக் கழகம் என்றதும் உள்ளமெலாம் பூரித்தது. உடலெல்லாம் சிலிர்த்தது.

பேசினேன். வேறொன்றுமில்லை. ஆதரித்து ஒரு அறிக்கை வேண்டுமாம்.

 

 

தர வேண்டியதை நான் தந்தால், தர வேண்டியதை அவர்கள் தருவார்கள், இல்லையா? புரிந்து கொண்டாயா?

சரி விஷயத்துக்கு நேரடியாக வருகிறேன்.

இதில் என்ன தப்பு இருக்கிறதென்று எனக்குப் புரியவில்லை. 31 வயதே ஆன பச்சிளம் பாலகன் ஒருவன் சோலை நிரம்பிய பல்கலைக்கழகத்தின் நட்ட நடுப் பகுதியில் அழகிய மாலை நேரத்தில் அவசரமாக இயற்கை உபாதையைக் கழித்தான்.

ஒன்னுக்குப் போனான் என்று சொல்லி விட்டால் முட்டாள்களாகிய உங்களுக்கு சுலபமாகப் புரியும்.

 

சொல்லுங்கள், இதில் என்ன தவறு இருக்கிறது முட்டாள்களே!

சாலையிலே சிறுநீர் கழித்தானாம், பாலகன்! இது ஒரு தப்பா? அதை ஒரு பெண் பார்த்தாளாம்! அவள் பருவ மங்கையா, பார்க்க சிறுமியா?

கேட்கிறேன் அர்த்தமுள்ள அபூர்வமான இந்த வினாவை. விடை தருவார்களா, வீணர்கள்?

அந்தரங்க உறுப்பைக் காண்பித்ததாக புகார் கூறிய பருவ மங்கை தன் கண்ணை மூடிக் கொண்டு போயிருக்கலாம். புகாராவது கொடுக்காமல் இருந்திருக்கலாம்.

 

 

அந்தப் பாலகனை ஆசிரியை அழைக்க அவர்கள் உல்லாசமே, சல்லாபமே என்ற படத்தை வீடியோவில் நெருங்கி இருந்து பார்த்தார். இதில் என்ன தவறு?                                              ஐயகோ! இதையெல்லாம் அரசியல் ஆக்க நினைக்கிறார்கள் கோணல் புத்தியுள்ள கொடுமதியாளர்கள்.

stalin urinating

 

stalin 2

 

stalin 3

Daily Mail pictures of urinating Stalin statue at Kiev, Capital of Ukraine. Anti Communist activists put it, but the authorities dismantled it later.

இதை கண்டித்து இன்றைய இரவு , “இந்தியா அறிய விரும்புகிறது” நிகழ்ச்சியில் ஒரு விவாதம் நடைபெற உள்ளது, அல்லவா? அதற்கு நம் கழகத்தின் சார்பில் மகளிர் பேரணியின் மாண்புமிகு முட்டாள் ஆன ஜம் ஜம் பங்கஜம் அவர்கள் அனுப்பப்படுகிறார்.

அதென்ன அவர் பெயர் தாய்த் தமிழில் இல்லையே எனக் கலங்கல் வேண்டா. அலட்டல் வேண்டா.

 

 

அருமைத் தம்பீ! எம்பீ! நம்பீ!

வடவர்களின் ஆதிக்கத்தில் உள்ள சேனல்களில் அவர்கள் விரும்பும் பெயர் இருந்தால் தானே நாம் இடம் பெற முடியும்? உரிமையைப் பெற முடியும்? சிந்தி!

 

ஜம் ஜம் பங்கஜம், “மேலாடை நழுவி விழ, பூவாடை பூசி வர” பாடலுக்கு எத்தனை முறை மேலாடையை நழுவ விட்டுள்ளார் என்பதை எண்ணுவதற்காகவே எண்ணற்ற முறைகள் அந்தப் படத்தைப் பார்த்த கழகக் கண்மணிகளின் எண்ணிக்கையை யாவரே அறிவர்?!

 

 

அவர் இந்த விவாதம் நடக்கும் அரங்கத்தில் தனக்கே உரிய ஸ்டைலில் ஆடையை அடிக்கடி நழுவ விட அதை நான்கு காமராமேன்களும் படம் பிடிக்க மற்றவர்கள் பக்கம் காமராக்களும் திரும்புவதில்லை அவர்களுக்கு வாய்ப்பும் வழங்கப்படுவதில்லை என்ற உண்மையை உனக்குச் சுட்டிக் காட்டக் கடமைப்பட்டுள்ளேன். உள்ளம் குளிர்கிறதா?

 

அங்கு கூலிக்காக வரவழைக்கப்பட்ட 90 பார்வையாளர்களும் எதிரி கட்சிக்கென வந்திரக்கும் சிறு நரிக் கூட்டத்தைச் சிதற அடித்து விட மாட்டார்களா? அவர்களுக்குப் பேச இடம் கொடுத்தால் தானே!

 

 

இந்த நிகழ்ச்சியை நடத்தும் பெண்மணி ஜம் ஜம் பங்கஜம் பங்கு கொள்ளும் நிகழ்ச்சிகளில் எல்லாம் டி ஆர் பி ரேட் எகிறுகிறது என்பதற்குத் தானே காரணம் என நினைத்தாராம்.

குட்டிப் பெண்மணி! என் கண்மணி! அப்படி இல்லை அம்மணீ! அதற்கான காரணம் ஜம் ஜம் பங்கஜத்தின் லிப்ஸ்டிக்கும் தலையை அடிக்கடி கோதி விட்டுப் பார்க்கும் கொக்கரிக்கும் கண் சிமிட்டுப் பார்வையும் தான்! இதை சேனல் இயக்குநர் அந்தப் பெண்மணீயிடம் சொன்ன போது அவர் மருண்டார்; சுருண்டார்.

 

 

என்றாலும் அவருக்கு அடுத்த நாட்டிலிருந்து வரும் படியை எண்ணி, வரும்படியை எண்ணி, வாய் மூடி பணியைத் தொடர்கிறார்.

கொஞ்ஜம் கொஞ்ஜமாக நம் ஜம் ஜம் ஜாம் ஜாம் என்று அந்தச் சேனலையே முட்டாள்களுக்கு உரியதாக ஆக்கப் போகிறார், அன்பர்களே, நண்பர்களே!

“என்னையா, கன்னையா, என்னையா பார்க்கிறாய்?

 

 

சின்னையா, சீர் ஐயா, நீ சிரித்தால் நான் வேர்க்கிறேன்”

என்ற ஜம் ஜம்மின் நடனக் காட்சியை சின்ன உடையில் சின்னத் திரையில் அதே விவாதத்தின் போது ஒரு சின்ன ப்ரேக் என்று சொன்னவுடன் பார்க்கலாம் என்பதை மறந்து விடாதீர்கள்.

 

தலை நகரின் பல்கலைக் கழக பேராசிரியர்களுக்குப் பேராதரவு தர முட்டாள்கள் கழகம் முன்னே நிற்கும், இனி யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் இயற்கை உபாதைகளைக் கழிக்கலாம், ஆசிரியைகள் மாணவர்கள் பேதமின்றி நினைத்த இடத்தில் நினைத்த போது அந்தரங்கம் பேசலாம் என்ற என் கொள்கை முழக்கத்தை நீங்கள் வேண்டி விரும்பிக் கேட்டதற்கிணங்க இப்போது அறிவிக்கிறேன்.

 

அடுத்த மடல் கட்டிங் பற்றியே என்று அறுதியிட்டு உறுதி கூறி விடை பெறுகிறேன்.

 

மு மு கழகத் தலைவர்

 

–subham-

நண்டு சாப்பிட்ட ஐயர் கதை! (Post No 2617)

crab2

Compiled by london swaminathan

 

Date: 10 March 2016

 

Post No. 2617

 

Time uploaded in London :–  15-29

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

“ஞாயிற்றுக்கிழமை, நண்டு வேண்டாம்; சாறு விடு!” என்ற பழமொழியை எனது பிளாக்கில், மார்ச் மாத காலண்டரில் படித்தவுடன் கும்பகோணம் பிராமணரிடம் கேட்ட ஒரு கதை நினைவுக்கு வந்தது:-

 

“ஒரு பிராமணன் வேறு ஊருக்குப் போய்விட்டுத் திரும்பிவந்து கொண்டிருந்தான். நெடுந்தூர நடைப் பயணம். பசி, வயிற்றைக்கிள்ளி எடுத்தது. இரவு நேரம்; பொழுதும் சாய்ந்துவிட்டது. இனி இருட்டில் நடந்தால், மிருகங்களுக்கு இரையாவோம் என்ற அச்சம். அப்படி மிருகங்கள் கொல்லாவிட்டாலும் பசியே ஆளைக் கொன்றுவிடுமென்ற பேரச்சம்!.

 

தொலைவில் ஒரு குடிசை தெரிந்தது. அப்பாடா என்று பெருமூச்சு விட்டுக்கொண்டு அங்கே போய், கொஞ்சம் தண்ணீர் வாங்கிக் குடித்தார். அது பிராமணர் வீடு இல்லை என்பது நன்றாகத் தெரியும். உயிர் காக்க எதுவும் செய்யலாமே!

 

இன்னும் கொஞ்சம் நேரம் ஆயிற்று. குடிசைக்குள் பாத்திரங்கள் உருட்டும் சப்தம் கேட்டது. உள்ளே எட்டிப்பார்த்தான் பிராமணன். “என்ன சமையலா?” என்றான்.

 

“ஐயய்யோ சாமி! நீங்கள் இதெல்லாம் சாப்பிட மாட்டீர்கள். பெயர்கூட சொல்ல மாட்டோம்” – என்றாள் அந்த வீட்டு உத்தமி!

stamp_Mauritius

பிராமணன் வெளியே வந்தான். பசி, உயிரை வாட்டியது. மீண்டும் உள்ளே எட்டிப் பார்த்தான். “நீங்கள் எது சமைத்தாலும் பரவாயில்லை. கொஞ்சம் சாதமோ அல்லது கூழோ கொடுங்கள்” என்றான்.

அவர்கள் சாப்பிட்டு மிச்சம் வைத்திருந்த கொஞ்சம் அரிசிச் சோற்றைப் போட்டர்கள். அது பிரமாணனின் ‘யானைப் பசிக்கு சோளப்பொரியாக’ அமைந்தது.

 

கேட்கவோ வெட்கம். “அந்தப் பாத்திரத்தில் என்ன?” என்று வெட்கமறியாது கேட்டபோது, “அது நண்டுக் குழம்பு என்றாள்” அவ்வீட்டுப் பெண்மணி. “பரவாயில்லை! பசி உடலை வாட்டுகிறது. கொஞ்சம் சாறு மட்டும் விடுங்கள்” என்றான். அந்த வீட்டு சத்தியவதி, பயந்துகொண்டே குழம்பை மட்டும் விட்டாள்.

 

ஐயர் பசி அடங்கவில்லை. உயிர் வாழ என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம்; ஆபத்துக்கு தோஷமில்லை என்று சாத்திரங்கள் சொல்லுவது நினைவுக்கு வந்தது. “இன்னும் கொஞ்சம் சாறு விடுங்கள்” என்று சொல்லி, நண்டுக் குழம்பைச் சாப்பீட்டார். இவர் மேலும் மேலும் “விடுங்கள் ஊற்றுங்கள்!” என்று சொன்னபோது அந்த அம்மணி, தவறுதலாக சில நண்டுகளையும் தட்டில் நழுவ விட்டு விட்டாள். மிகவும் பயந்தே போனாள்; அடக் கடவுளே, ஒரு பிராமணனுக்கு அபசாரம் செய்துவிட்டோமே! உபசாரம் செய்யாவிட்டாலும் அபசாரம் செய்யக்கூடாதே என்று முகத்தில் கைவைத்து மூடிக்கொண்டாள்.

பிராமணனோ, “தானாக (தான்+ ஆக) வந்த எதையும் வேண்டாம்” என்று சொல்லக்கூடாது. ஆகையால் தப்பில்லை என்று சொல்லி அதையும் சாப்பிட்டுவிட்டு காலையில் எழுந்து ஆற்று நீரில் மூழ்கி விட்டு வீடு திரும்பினான்.

 

ஐயர் சொன்ன ‘தான்’ என்பது சாம்பார், குழம்பில் உள்ள ‘தான்’களையும் (காய்கறிகளையும்) குறிக்கும். “அதுவாக வந்த”  – என்ற பொருளையும் குறிக்கும்!

 

இது தான் “இன்று ஞாயிற்றுக்கிழமை, நண்டு வேண்டாம், சாறு மட்டும் விடு” –என்ற பழமொழிக்குக் காரணமோ?

(இந்தக் கதை இந்தியத்  திருநாட்டின் வடபகுதியிலும் வழங்கி வருகிறது)

–சுபம்–

 

 

திருவாரூர் தேவதாசி கொண்டியம்மாள் கதை (Post No 2610)

aazhi-ther

திருவாரூர் தேவதாசி கொண்டியம்மாள் கதை (Post No 2610)

Article written by london swaminathan

Date:  8 March, 2016

 

Post No. 2610

 

Time uploaded in London :–  20-11

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; 

 

 

பிரிட்டிஷ் லைப்ரரியில் இலங்கை ருத்ர கணிகை அஞ்சுகம், 1911ஆம் ஆண்டில் எழுதிய புத்தகம் கிடைத்தது. அதில் கிடைத்த திருவாரூர் ருத்ர கணிகை கொண்டியம்மாளின் கதையைக் கீழே கொடுக்கிறேன். பக்கங்களைப் படிக்க முடியாதவர்கள் அல்லது பழைய தமிழ் நடை புரியாதவர்கள் முதலில் சுருக்கக் கதையைப் படியுங்கள்:-

 

கதைச் சுருக்கம்:

திருவாரூர் ருத்ர கணிகை (கோவிலில் ஆடும் தேவதாசி) பரம பக்தை; ஒரு முறை பங்குனி உத்திரத்தின் போது தேர் நகர மறுத்தது. எவ்வளவோ பேர் வந்து இழுத்தும் தேர் நகர வில்லை. பின்னர் சோழ ராஜாவின் கனவில் சிவபெருமான் தோன்றி கொண்டியம்மாள் தேரில் ஏறி சாமரம் வீசினால் தேர் நகரும் என்று கூறினார். மறு நாள் கொண்டியம்மாளை தக்க மரியாதையுடன் அழைத்து வந்து சாமரம் வீசச் செய்யவே தேர் புறப்பட்டு, பவனி வந்து நிலையை அடைந்தது.

 

ஆனால் தேரில் ஏறுமுன் , கொண்டியம்மாள் ஒரு நிபந்தனை போட்டார். தனது செயல் வெற்றி பெற்றால், தான் இறந்த பின்னர் தன் சடலத்தைக் காவேரிக் கரையில் தகனம் செய்யவேண்டும் என்றும் திருவாரூரில் ஒரு மைலுக்கு ஒரு பிள்ளையார் கோவில் கட்ட வேண்டும் என்றும் நிபந்தனை போட்டார். மன்னர் அதை ஏற்றுக் கொண்டதோடு நில்லாமல் கொண்டியம்மாள் இறந்த பின்னர் அப்படியே செய்தான். இது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அப்போதைய பிள்ளையார் கோவில்கள் இன்றும் உள்ளன.

 

kondi7

 

 

 

kondi9

 

kondi missing

kondi10

 

kondi11

 

kondi12

 

kondi13

 

kondi14

kondi15

–subham

இமயமலைக் காடுகளைக் காப்போம்! (Post No. 2606)

forest_of_great_himalayan

Written by S Nagarajan (written for AIR)

 

Date: 7 March 2016

 

Post No. 2606

 

Time uploaded in London :–  8-44 AM

 

( Thanks for the Pictures;

படங்கள் வெவ்வேறு இடங்களிருந்து எடுக்கப்பட்டவை;நன்றி  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

    உலகில் மாறி வரும் தட்பவெப்ப மாறுபாடுகள் அனைவருக்கும் கவலையளிக்கும் ஒரு பெரிய விஷயமாக ஆகி கொண்டு வரும் நேரத்தில் இமயமலைக் காடுகளைப் பற்றிய சமீபத்திய செய்தி ஒன்று அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

 

 

   சமீபத்திய ஆய்வு ஒன்று  கிழக்கு இமாலயப் பகுதி  பழுப்பு நிறமாக ஆகிக் கொண்டு வருகிறது என்ற அதிர்ச்சியூட்டும் உண்மையை முன் வைக்கிறது! அதாவது இமயமலைக் காடுகளில் பச்சைப் பசேலென அழகுடன் திகழ்ந்து வந்த மரங்கள் பழுப்பு நிறமாக மாறி வாடி வருகின்றன என்பதே இதன் பொருள்!

 

   சாதாரணமாக வளம் கொழிக்கும் நாட்களில் கூட இவை பசுமை இழந்து வருகின் என்பது ஆய்வு தரும் செய்தி!

 

    1982ஆம் ஆண்டிலிருந்து 2006ஆம் ஆண்டு முடிய எடுக்கப்பட்ட சாடலைட் காட்சிச் சித்திரங்களை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 1990 ஆம் ஆண்டு வரை பசுமையாகக் காட்சி அளித்த இமயமலைக் காடுகளின் மரங்கள் திடீரெனத் தங்கள் பசுமையை இழந்து ஒளி இழந்து வாடும் காட்சிகளை அதற்குப் பின்னர் காண்பித்தன. இவை வறண்டு பட்டுப் போவதாலேயே பழுப்பு வர்ணமாக மாறி வருகின்றன.

 

     இந்த ஆய்வின் முடிவுகள் சமீபத்திய க்ளோபல் சேஞ்ஜ் பயாலஜி ஜர்னலில் (Global Change Biology Journal) வெளியிடப்பட்டுள்ளன.

 Global Change 2008 Cover

    கிழக்கு இமாலப் பகுதி காடுகளில் உள்ள மரங்கள் ஒளிச்சேர்க்கை இல்லாமல் வாடுவதையே இது குறிக்கிறது. இதன் மூல காரணம் புவி வெப்பமயமாதலே ஆகும். நாளுக்கு நாள் உஷ்ணம் அதிகமாகிக் கொண்டே போவதால் அதன் நேரடி விளைவுகளில் ஒன்றாக நமதுக் காட்டுச் செல்வமும் அழிய ஆரம்பிப்பதையே இது காட்டுகிறது!

 

 

    வாகனங்கள் வெளியேற்றும் நச்சுப்புகையே புவி அதிக வெப்பமயமாவதற்கான காரணம் என்பதால் உடனடியாக வாகன நச்சுப் புகை வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தல் நமது தலையாய கடமை ஆகும்!

 

********                

 

 

பஞ்ச மாபாதகம், 5 கர்ம சண்டாளர்கள், 5 நடைப் பிணங்கள் (Post No. 2599)

dussehra-16

A Kid scared while A artist dressedup at Ravana enjoying with Spectators during Dussehra celebrations in Sector 46 of Chandigarh on Thursday, October 22 2015. Express Photo by Kamleshwar Singh

Compiled by london swaminathan

Date: 5 March,2016

 

Post No. 2599

 

Time uploaded in London :–  7-59 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

Already published in English; source:Encyclopaedia of Numeralas, Volume 1, The Kuppusami Sastri research Institute,Chennai 600 004, Year 2011; தமிழாக்கம்- லண்டன் சுவாமிநாதன்.

 

முதல் 4 நேற்று வெளியிடப்பட்டது.

 

5.பஞ்ச நம்பக்கூடாதவர்

ஜாமாத்தா க்ருஷ்ணசர்பஸ்ச பாவகோ துர்ஜனஸ்ததா

விஸ்வாசோ நைவ கர்தவ்ய: பஞ்சமோ பகினீசுத:

ஜாமாத்தா- மாப்பிள்ளை/மருமகன்

க்ருஷ்ண சர்ப- நல்ல பாம்பு

பாவக: – தீ

துர்ஜன – கெட்டவர்கள்

பகினீ சுத: – சகோதரி மகன்

 

6.பஞ்ச மாபாதகம்

அக்னிதோ கரதஸ்சைவ சஸ்த்ரபாணி: தனாபஹ:

க்ஷேத்ரதாராபர்ஹதா ச பஞ்சைதே ஆததாயின:

 

அக்னிதா- மற்றவன் சொத்துக்கு தீ வைப்பவன்

கரத-மற்றவர்களுக்கு விஷம் வைப்பவன்

சஸ்த்ரபாணி- ஆயுதமில்லாதவனைக் கொல்பவன்

தனாபஹ:- மற்றவன் பணத்தைத் திருடுபவன்

க்ஷேத்ரதராபஹர்தா- மற்றவன் மனைவியை அபஹரிப்பவன்

 

மனுவும் (11-54) இது பற்றிக் கூறுகிறார்:-

பிரமஹத்யா சுராபானம் அஸ்தேயம் குர்வங்கனாகம:

மஹந்தி பாதகான்யாஹுஸ்த சம்சர்கி ச பஞ்சம:

பிரம்மஹத்ய- பிராமணனைக் கொல்லுதல்

சுராபானம்- மது பானம் அருந்தல்

ஸ்தேயம்- திருடல்

குர்வங்க நாகம:- குருவின் மனையிடம் தவறாக நடத்தல்

சம்சர்கி- மெற்கண்ட நாலு பேருடன் சஹவாசம்

 

7.பஞ்சநடைப்பிணம்

ஜீவந்தோபி ம்ருத: பஞ்ச ஸ்ரூயந்தே கில பாரதே

தரித்ரோ, வ்யாதிதோமூர்க: ப்ரவாஸீ நித்யசேவக:

தரித்ர – ஏழை

வ்யாதித: – நோயாளி

மூர்க: – முட்டாள்

ப்ரவாஸீ- வெளிநாட்டில் வசிப்பவன்

நித்யசேவக: – வாழ்நாள் முழுதும் வேலையாளாக இருப்பவன்

 

8.பஞ்சக்லேசம் (ஐவகைக் குறைகள்)

அவித்யா அஸ்மிதா ராக த்வேஷ அபிநிவேசா: பஞ்ச க்லேசா: (யோக சூத்ரம் 2-3)

அவித்யா- அறியாமை/ கல்லாமை

அஸ்மிதா – அகம்பாவம்

ராக – ஆசை

த்வேஷம் – வெறுப்பு

அபிநிவேச – எப்படியாவது உயிர்வாழவேண்டும்  என்ற எண்ணம்

anti god poster

9.பஞ்ச கர்மசண்டாளர்கள்

(செய்கையினால் சண்டாளன் நிலையை அடைபவன்)

நாஸ்திக: பிசுனஸ்சைவ க்ருதக்னோ தீர்கதோஷ:

சத்வார:கர்மசண்டாளா ஜன்மஸ்சாபி பஞ்சம:

நாஸ்திக: – கடவுள் நம்பிக்கையற்றவன்

பிசுன: – பிசிநாரி/கெட்டவன்

க்ருதக்ன: – நன்றிகெட்டவன்

தீர்க தோஷக: -பாபி (பாவாத்மா)

ஜன்மத: – பிறப்பினால் சண்டாளன்

 

–சுபம்–

 

 

காந்திஜியும் பத்திரிகையாளர்களும் (Post No.2598)

gandhi-stamps-2

Picture of Stamps on Gandhi from other countries.

Written by S Nagarajan

 

Date: 5 March 2016

 

Post No. 2598

 

Time uploaded in London :–  5-23 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

ச.நாகராஜன்

 

 

பத்திரிகையாளர்களைப் பொறுத்தமட்டில்  மஹாத்மா காந்திஜியின் அணுகுமுறையே தனி.

 

1946ஆம் ஆண்டு.  முஸ்லீம் லீக் DIRECT ACTION DAY-ஐ அறிவித்திருந்தது. அப்போது கல்கத்தா நகரில் காந்திஜி இருந்தார். அவர் முக்கியமான பத்திரிகையாளர்களை அழைத்தார். நகரில் நடந்த கலகங்கள் பற்றிய ஒரு அறிக்கையைத் தயார் செய்து தருமாறு வேண்டினார். பெரிய அறிக்கை ஒன்றை அவ்ர்கள் தயார் செய்தனர்.

 

 

காந்திஜி நிர்மல்குமார் போஸை அழைத்தார். (இவர் அப்போது காந்திஜியுடன் சேவைக்காகத் தங்கி இருந்தார். பின்னாளில் ஷெட்யூல்ட் கேஸ்ட்ஸ் அண்ட் ட் ரைப்ஸ் கமிஷனராக டில்லியில் பதவி வகித்தார்)

 

 

அந்த அறிக்கையில் உண்மையானவற்றை மட்டும் சிவப்பு பென்சிலால் குறிக்கப் பணித்தார்.

அவர்களின் கருத்துக்களையும் ஊகங்களையும் விட்டு விடச் சொன்னார்.

 

இதை நிர்மல் குமார் போஸ் செய்தார். பின்னர் தான் அறிக்கையையே காந்திஜி கையில் எடுத்தார்.

முஸ்லீம் லீக் மந்திரிகளை அழைத்து தானே நேரடியாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்க்க வருவதாகக் கூறினார்.

அது உடனே ஏற்கப்பட நகரின் பல பகுதிகளுக்கும்

காந்திஜி சென்று பார்த்தார்.

 

Gandhi-Stamps

Picture: Gandhi stamps from foreign countries

திரும்பி வந்ததும் தன்னிடம் கொடுக்கப்பட்ட அறிக்கையில் ஏராள்மான மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகள் இருந்ததாகத் தெரிவித்தார்.

 

‘Razed to the ground’ – அடியோடு தரைமட்டமாக்கப்பட்டது என்று குறிக்கப்பட்ட குடிசைகளில் சுவர்கள் அப்படியே இருந்தன. சில ஜன்னல்களும், கதவுகளும் உடைக்கப்பட்டிருந்தன.

இதே போலத் தான் 1946இல் நவம்பர் மாதம் நவகாளிக்குச் சென்ற காந்திஜி உண்மையான அறிக்கையைத் தயார் செய்து தருமாறு வற்புறுத்தினார். பீஹாரிலும் இப்படியே சொன்னார். நவகாளி அறிக்கையை சதீஷ் சந்திரதாஸ் குப்தா என்பவர் தயார் செய்ய பீஹாரில் காங்கிரஸ் அரசே அறிக்கையைத் தயார் செய்தது.

 

 

‘உண்மையைத் தேடு’ என்பதை காந்திஜி ஒரு நாளும் விட்டுக் கொடுக்கவில்லை – முக்கியமாக பத்திரிகையாளர்களிடம்.

மனம் போன போக்கில் செய்திகளை மிகைப்படுத்தி தங்கள் ஊகங்களையும் கருத்துக்களையும் கலந்து பரபரப்புச் செய்திகளைத் தரும் போது அது சமுதாயத்திற்கு விஷத்தைத் தந்தது போல ஆகிறது!

 

 

இந்தப் போக்கை அவர் மென்மையாகக் கண்டித்தார்.

இன்று காந்திஜி நம்மிடையே இல்லை. ஆனால் பத்திரிகையாளர்கள் இன்னும் மோசமாக ஆகி விஷக் கருத்துக்களையும் பொய்யையும் உண்மை போலத் தருகின்றனர்.கூடவே டி வி சானல்கள் தவறான செய்திகளை எப்போதோ எடுத்த லைப்ரரி ஷாட்டுகளை இடை இடையெ புகுத்தி மக்களைப் பயமுறுத்தி அவர்களைத் தவறான முடிவு எடுக்கத் தூண்டுகின்றன.

 

 

இப்போது இரு நாட்களாக ( மார்ச் 3,4, 2016 ) வரும் செய்திகள் சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்த போது நரேந்திர மோடியை எப்படியெல்லாம் இஷ்ரத் ஜஹான் கேஸில் ஃப்ரேம் செய்யப் பார்த்தார் என்ற திடுக்கிடும் செய்திகள் வருகின்றன.

அரசு அதிகாரிகள், நுண்ணறிவுப் பிரிவு, போலீஸ் இவற்றுடன் பத்திரிகையின் பல பிரிவினரும் இதற்குத் துணை போயிருக்கும் செய்திகளைப் பார்த்து திடுக்கிடுகிறோம்.

 

 

இனிமேல் காந்திஜி போல செய்தி அறிக்கைக்கு சிவப்பு பென்சிலால அடிக்கோடிட்டு அதில் இருக்கும் உண்மை செய்திகளை எடுக்க வேண்டியது தானோ!

 

ஆனால் நிர்ம்ல் குமார் போஸ் அல்லது அவரைப் போன்ற ஒருவர், இந்தப் பணியை இப்போது ஏற்க வந்தால், அதற்கு அவசியமே இல்லை. சிவப்பு பென்சிலே தேவை இல்லை. பல பத்திரிகைகளைக் குப்பையில் தூக்கிப் போட்டு விடலாம்’ என்று சொல்வார்.’

 

அதில் உண்மை ஏதேனும் இருந்தால் தானே சிவப்பு பென்சில் வேண்டும்!!

 

உண்மையை விரும்புவோ சிந்திக்க வேண்டும்.

அப்படிச் சிந்திப்பவர் ஏராள்மாகப் பெருகினால் சத்தியத்தைத் தேடிய அந்த மகானுக்கு உண்மையான அஞ்சலி செய்தவர்கள் ஆவோம்.

 

(குறிப்பு: நிர்மல் குமார் போஸ் எழுதிய Report for fact : A personal account என்ற கட்டுரையை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.Univiersity of Mysore 1969ஆம் ஆண்டு வெளியிட்ட ”Gandhi and the West “ என்ற நூலின் முதல் கட்டுரை இது.)

 

******

 

பத்திரிகையில் புல்லுருவிகள் (Post No.2595)

weeds

Written by S Nagarajan

 

Date: 4 March 2016

 

Post No. 2595

 

Time uploaded in London :–  8-55 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

நாட்டு நடப்பு

 

பத்திரிகையில் புல்லுருவிகள்

 

ச.நாகராஜன்

Weed-spiky

ஜனநாயகத்தின் நான்காவது தூண் பத்திரிகை. இதன் சுதந்திரத்தைக் காக்க அஞ்சாமல் பல கஷ்டங்களை மேற்கொண்டவ்ர்கள் பலர்.

 

எடுத்துக்காட்டாக ராம்நாத் கோயங்காவைச் சொல்லலாம்.

 

இந்தியாவில் அநியாயமாக எமர்ஜென்ஸி அறிவிக்கப்பட்டது. ஏராளமான தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பத்திரிகைகள் உண்மை நிலை எதையும் வெளியிட முடியாத் நிலை உருவாயிற்று. தணிக்கை முறை அமுலுக்கு வந்தது.

 

ஆனால் அஞ்சா நெஞ்சர் கோயங்கா கடுமையாக அவசர நிலையை எதிர்த்தார். இந்தியந் எக்ஸ்பிரஸ்,தினமணி உள்ளிட்ட பத்திரிகைகளில் தலையங்கம் தீட்டினால் அது தடை செய்யப்பட்டது. அந்த இடம் முழுவதும் கறுப்பால் நிரப்பப்பட்டது -எதிர்ப்பைத் தெரிவிக்கும் வண்ணம்.

 

கோயங்காவிற்கு நெருங்கியவர்கள் மற்றும் அரசுக்கு ஆதரவானவர்கள் அவரிடம் ஆலோசனை கூறினர்.

“எதற்காக இந்த எதிர்ப்பு? அந்த அம்மையாரின் ஆட்கள் உங்களிந் வேட்டியை உருவி விட்டு விடுவார்கள்” என்றனர்.

 

சிரித்தார் கோயங்கா. மற்றவர்கள் திகைத்தனர்.

 

“நான் எப்படி உருவானவன் தெரியுமா? உடுக்க ஒன்றுமில்லாமல் தெருவில் அலைந்து திரிந்து கிடைத்ததைச் சாப்பிட்டவன். இதெல்லாம் என் கடிந உழைப்புக்கும் நேர்மைக்கும் கிடைத்த பரிசு. எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. வேட்டியை உருவி விட்டால் பழைய நிலை வந்தது என்று சந்தோஷப்படுவேன்” என்றார்.

 

அனைவரும் அவரது தீரமான வார்த்தைகளைக் கேட்டுத் திகைத்தனர்.

 

அவசரநிலை காலத்தில் ஒவ்வொரு செய்தியையும் அவரே பார்த்துப் பார்த்து வெளியிட்டார். அஞ்சவில்லை.

இப்படிப்பட்ட பத்திரிகையாளர்களாளும், தேச பக்தர்களாலும், தேசீயத் தலைவர்களாலும் அவசர நிலையை எடுக்க வேண்டிய கட்டாயம் நேர்ந்தது.

தேசம் பிழைத்தது.

goenka

தேர்தல் வந்தது. இந்திரா காந்தி அவமானகரமாகத் தோற்றார். தன் தவறை உணர்ந்ததாக அவர் கூறினார்.

அதற்குக் காரணங்களுள் ஒன்று: இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ப்த்திரிகைகள் என்பதை வரலாறு இன்று வரை கூறுகிறது. நாளையும் கூறும்.

 

ஆனால் இன்றைய நிலை?

 

இந்தியாவிற்கு எதிராக நினைத்ததை எழுதும் சூழ்நிலை. தேசத் துரோகிகளுக்குத் துணை போவது, தேசத்தின் ந்லனுக்கு உகந்தவற்றைத் தெரிவிக்காமல் மறைப்பது, முஸ்லீம்களைத் திருப்திப் படுத்த செய்திகளை மிகைப்படுத்தல், ஹிந்துக்களை கேவலப்படுத்த காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் அவர்களின் பாதிப்புகளை  வெளியிடாமல் இருத்தல், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்திய நிலைக்கு எதிராக பகிரங்கமாக ஆதரவு அளித்தல், இத்யாதி இத்யாதி!

 

இவற்றையெல்லாம் பணத்திற்காகவும் அல்லது ஒரு விஸ்கி பாட்டிலுக்காகவும் செய்வது அழகா? இந்தப் புல்லுருவிகளை மக்கள் இனம் காண்பது ஒரு புறம் இருக்கட்டும்; அரசும் உச்ச நீதி மன்றமும் ஏதாவது செய்ய வேண்டாமா?

 

கருத்துச் சுதந்திரம் என்பது பேணி வள்ர்க்கும் தேச சுதந்திரத்தை பலி கொடுக்க பயன்படுத்தக் கூடாது.

இப்படிச் செய்பவர்களை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளே தாமாகவே முன் வந்து வழக்கைப் பதிவு செய்து உரிய தண்டனைய அவர்கள் குற்றம் நிரூபிக்கும் பட்சத்தில் விதிக்கலாமே!

 

நாங்கள் தான் பத்திரிகை மற்றும் டிவி சானல்கள் பற்றி குறைகள் இருந்தால் அதைத் தெரிவிக்க வடிகால் அமைத்திருக்கிறோமே என்பது போதாது.

உடனடி நடவடிக்கையை அரசும் போலீசாரும், நீதி மன்றமும் உடனே எடுக்க வேண்டும்.

 

இதுவே உண்மையான ஜனநாயகவாதியாகவும் தேச சுதந்திரத்தில் அக்கறையுமுள்ள் ஒவ்வொரு இந்தியனின் எண்ணமாக இருக்கிறது.

 

நண்பர்கள் அனைவரும் ஃபேஸ் புக் உள்ளிட்ட பதிவுகளில் வெகு ஜன எழுச்சியாக இந்த பத்திரிகைகள், டி வி சானல்கள் பற்றி நிறைய உண்மையான செய்திகளைப் பரப்பி விட்டால் இவர்களின் முகத்திரை கிழியும்.

 

ஆனால் இவர்களைப் பற்றிய உண்மையான செய்திகளை ஆதாரங்களுடன் தருதல் மிக முக்கியமானது. செய்வோம்; சுதந்திரம் காப்போம்! தேச துரோகிகளுக்கு இங்கு இடமில்லை என்பதைத் தெளிவு படுத்துவோம்.

 

அடுத்த கட்டுரையில் மகாத்மா காந்திஜி பத்திரிகையாளர்களை கலவரங்கள் நடந்த சமயத்தில் எப்படி அணுகினார் என்பதைப் பார்ப்போம்.

மாமனிதர் கோயங்காவின் நினைவுக்கு அஞ்சலியோடு இந்தக் கட்டுரையை முடிப்போம்

******

 

மரணத்தை முன்னறிவித்த கோயம்புத்தூர் செட்டியார்!(Post No.2591)

IMG_3563 (2)

Compiled by london swaminathan

Date: 2 March,2016

 

Post No. 2591

 

Time uploaded in London :–  14-35

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

லண்டனில் பிரிட்டிஷ் லைப்ரரியில் பல பழைய புத்தகங்களைப் புரட்டுகையில் கோயம்புத்தூர் ஸ்ரீ கிரந்தி வேங்கட கோபலார்யா பற்றிய ஒரு அதிசய விஷயம் கடைசி பக்கத்தில் இருந்ததைப் படித்தேன். தான் இன்ன தேதியில் இறப்பேன் என்பதை அறிவித்து, அதே தினத்தன்று பலர் சூழ இறந்தார். இது போல எத்தனையோ பேர் முன்கூட்டி மரணத்தை அறிவித்த சம்பவங்கள் இந்துமத பெரியோர்கள் சரித்திரத்தில் இருக்கின்றன. இதோ அந்தப் பக்கங்கள்:–

 

 

IMG_3578

 

 

IMG_3577

 

IMG_3576 (2)

 

IMG_3575

 

–சுபம்–

 

 

 

உலகமஹா கவிஞன் பற்றி ஒரு சுவையான கதை!(Post No 2587)

hindu poets

Date: 1st March 2016

 

Post No. 2587

 

Time uploaded in London :– 9-20

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Please go to swamiindology.blogspot.com

OR

tamilandvedas.com

for more articles and pictures.

homer

கிரேக்க மகா கவி ஹோமர்(கி.மு.800)

உலகிலேயே மிகவும் பழைய கவிஞன் பெயர் உசனா கவி; அவரை உசனஸ் என்றும் அழைப்பர். கிருஷ்ணன், பகவத் கீதையில் காலங்களில் நான் வசந்தம், மாதங்களில் நான் மார்கழி என்று கூறும் விபூதி யோகத்தில் கவிஞர்களுள் நான் உசனா கவி என்கிறார். அவ்வளவு மிகப்பெரிய கவி அவர். ரிக் வேத காலத்திலேயே அவர் மிகவும் பழங்காலக் கவிஞர் ஆகிவிட்டார். அப்படியா னால் இற்றைக்கு 4500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருப்பா ரென்பது எனது துணிபு.

 

எப்படித் தமிழில் பல கபிலர்கள், பல நக்கீரர்கள், பல அவ்வையார்கள் இருந்தனரோ அதே போல பிற்காலத்தில் வந்த சுக்ராச்சார்யாரையும் உசனா கவி என்றனர்.

ஆயினும் அவருக்கு முந்தி வாழ்ந்த முதல் உசனஸ் பற்றி மனு ஸ்மிருதி ஒரு ஸ்லோகத்தில் குறிப்பிடுகிறார். அதற்கு உரை எழுதியோர் மஹாபாரதத்திலும் (9-50), பஞ்சவிம்ச பிராமணத்திலும் உள்ள ஒரு சுவையான கதையைச் சொல்லுகின்றனர்.

goethe

இதோ அந்தக் கதை:

ஆங்கிரஸின் புதல்வரான உசனஸ், வயதில் மிகவும் சிறியவர். ஆனால் வேதத்தைக் கரை கண்டவர். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது. அவர் தன்னைவிட வயதானவர்க ளுக்குப் பாடம் நடத்துகையில், “ஓ! சின்னப் பிள்ளைகளே! நன்றாகக் கவனியுங்கள்” என்று அடிக்கடி சொல்லுவார். வயதானவர்களுக்கோ கோபமும் ஆத்திரமும் வந்தது. இவனே பொடிப்பயல்; இவன் நம்மைப் பார்த்து, சின்னப் பையன்களே (புத்ரஹா) என்று சொல்லுவதாவது என்று முறைத்துப் பார்த்தனர். முகக்குறிப்பால அதிருப்தியைக் காட்டினர். ஆனால் உசனா கவி தன் வழக்கத்தை மாற்றிக்கொள்ளவிலை.

 

எல்லா ரிஷிகளும் ஒரு மஹஜரை எடுத்துக்கொண்டு, கடவுளிடம் போனார்கள். அவரும் சொல்லிவிட்டார், அவன் உங்களை சின்னப் பையன்களே என்று சொல்லுவது சரிதான் என்று! அவன் அறிவினால் தந்தைக்குச் சமமானவன் என்றும் கடவுள் தீர்ப்பு சொல்லி விடுகிறார்!

 

இக்கதையில் மிகப்பெரிய கருத்து உள்ளது. வேதங்களைக் கரைத்துக் குடித்தவனே அறிவாளி; மூத்தவன். மேலும் கவிஞன் என்பவன் தந்தைக்கு சமமானவன்; அவன் முக்காலமும் உணர்ந்தவன்.

dante

டாண்டே படம்

இந்தச் சின்னப் பையன் கதையைக் கோடிட்டு காட்டிய உலகின் முதல் சட்ட நிபுணன் மனு, இரண்டாம் அத்தியாயம் 150 ஸ்லோகம் முதல் பல விஷயங்களைச் சொல்லுகிறார். மனுவின் காலம் கி.மு. 1500 என்று அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ப்யூலர் கூறுகிறார். என் கருத்தும் அதுவே. ஏனெனில் ரிக் வேதத்திலேயே பல மனுக்களின் பெயர்கள் மீண்டும் மீண்டும் வருகின்றன.

இப்போது எழுத்து வடிவிலுள்ள மனு ஸ்மிருதி, பல இடைச் செருகல்களுடன் உள்ளது. சில பிராமண உற்சாகிகள், சூத்திரர்களுக்கு எதிராக சில ஸ்லோகங்களை நுழைத்துவிட்டனர். எல்லா நூல்களிலும் இடைச் செருகல் பற்றி பிரஸ்தாபிக்கும் வெள்ளைக்காரர்கள், மனு ஸ்மிருதி பற்றி மட்டும் எதுவுமே சொல்லமாட்டார்கள். ஏனெனில் அவர்கள், இந்து மதத்தை மட்டம்தட்ட அந்த ஸ்லோகங்களைப் பயன்படுத்துவர்.

Gibraltar-Shakespeare-2014

இந்தச் சின்னப் பையன் கதையுள்ள பிராமணம் என்னும் இலக்கியம், சம்ஹிதைக்குப் பிறகு வந்தது. அதை கி.மு 1000 என்று மாக்ஸ்முல்லர் முதலியோரும் ஏனையோர் அதற்கும் முந்தையது என்றும் செப்புவர். எப்படிப் பார்த்தாலும் கிரேக்க நாட்டு ஹோமர் போன்றோர் தோன்றுவதற்கு நீண்ட நெடுங்காலம் முன்னரே உசனா கவி வாழ்ந்தார். ஆக அவரே உலகின் மிகப் பெரிய கவி; உலகின் மிக மூத்த கவி. மேலும் கவி, கவிஞன், கவிதை என்ற சொல்லெல்லாம் அவர் முதற்றே பிறந்தது எனின் மிகையாகாது.

 

சுமேரியாவிலுள்ள ஜில்காமேஷ் கவிதை போன்றவை வேதத்திற்குப் பிற்காலத்தில் வந்தவை. மேலும் மிகவும் நாகரீகத்தில் பின் தங்கியோரால் எழுதப்பட்டவை. ஆனால் வேத காலக் கவிதைகளோ நாகரீகத்தின் உச்சநிலையைத் தொட்ட ஒரு சமுதாயம் இயற்றியது. உலக அமைதி, மனித நேயம் பற்றிப் பாடுகிறது. அவர்களுக்கெல்லாம் மூத்தவர் நம் கவி – உசனா கவி. வேத இண்டெக்ஸ் தொகுத்த கீத், மக்டொனால்டு ஆகிய இருவரும், இந்தப் பெயர் வேத காலத்திலேயே, புராதனப் பெயராகிவிட்டது என்று பகர்வர். கண்ண பிரானும் பகவத் கீதையில் இவரைப் புகழ்வதால் கி.மு 1500 க்கு முன் அவர் வாழ்ந்தது உறுதியாகிறது.

 

அகஸ்தியர், விசுவமித்திரர் போன்ற வேத கால ரிஷிகள் பற்றி புராணங்களில் நிறைய செய்திகள் உள்ளன. ஆனால் உசனஸ் போன்றோர் பற்றி நாம் ஒன்றும் அறிய முடிவதில்லை. இதிலிருந்தே அவர்தம் பழமை வெள்ளிடை மலையென விளங்கும்.

ts eliot

மனு என்ன சொல்கிறார்?

மூத்தவர் என்ற தகுதி நரைமுடியாலோ, செல்வத்தாலோ, பரம்பரையாலோ வருவதில்லை. இது ரிஷிகள் வகுத்த சட்டம்; வேதங்களையும் வேதத்தின் அங்கங்களையும் கற்றவனே நம்மில் உயர்ந்தோன் (2-154 மனு).

பிராமணர்களில் மூத்தவன் வேதம் கற்றோன்;

க்ஷத்ரியர்களில் மூத்தவன், வீரம் மிக்கவன்;

வைஸ்யர்களில் மூத்தவன், அதிக தானியம் வைத்திருப்பவன்.

சூத்திரர்களில் மூத்தவன், வயதில் பெரியவன்! (மனு 2-155)

 

 

வேதத்தைப் படித்தவன், இளைஞனாக இருந்தாலும் அவனே பெரியவன் (2-156)

 

சங்க இலக்கியமான புறநானூற்றிலும் இதுவே வலியுறுத்தப்படுகிறது:

“ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்

மூத்தோன் வருக என்னாது, அவருள்

அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்” – (புறம் 183)

கவி என்றாலேயே அறிஞன் என்று பொருள்!

வாழ்க கவிகள்! வளர்க கவிதைகள்!

-சுபம்-