பெண்கள், ரத்தினம், கல்வி: எங்கிந்தாலும் பெறுக! (Post No.2945)

assorted-coloured-gemstones-1

Written by London swaminathan

Date: 5 July 2016

Post No. 2945

Time uploaded in London :– 9-24 AM

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

ஸ்த்ரியோ ரத்னானி அத வித்யா தர்ம: சௌசம் சுபாஷிதம்

விவிதானி ச சில்பானி சமாதேயானி சர்வத:

–மனு ஸ்மிருதி 2-240

 

எல்லா திசைகளிலிருந்தும் எடுத்துக்கொள்ள வேண்டியவை:-

பெண்கள், ரத்னக் கற்கள், கல்வி, தர்மம் (அறச் செயல்கள், அற விதிகள்)

தூய்மை (விதிகள், உணவு),  நல்ல சொற்கள் (பொன்மொழிகள், பழமொழிகள், உபதேசங்கள்)

மனு சொல்வதை புறநானூற்றிலும் காணலாம்

 

நான்கு ஜாதிகளில், தாழ்ந்தவரானாலும், கல்வியில் சிறந்தவன் சொல்லைத் தான் அரசனும் கேட்டு நடப்பான்:–

 

 

வேற்றுமை தெரிந்த நாற்பலுள்ளும்

கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,

மேற்பால் ஒருவனும் அவன் கண்படுமே (புறம்.183)

 

மனு, இதை மேலும் அழகான உவமைகளால் விளக்குவான்:-

 

விஷத்திலிருந்து கூட அமிர்தம் எடுக்க முடியும்;

குழந்தையிடமிருந்து கூட அருமையான யோஜனைகள் கிடைக்கும்;

எதிரியிடமிருந்து நற்குணங்களை கற்றுக்கொள்ளலாம்;

அசுத்தமான மண்ணிலிருந்தும் தங்கத்தைக் காய்ச்சி எடுக்கலாம்

மனு 2- 239

 

இந்த உவமைகளைச் சொன்ன பிறகே நல்ல பெண்களை எங்கிருந்தாலும் திருமணம் செய்க என்பான்.

ms garland making

மனு, மற்றொரு இடத்தில் (9-23), கீழ் ஜாதியில் பிறந்த அருந்ததி, உலக மஹா கற்புக்கரசியாக மதிக்கப்படுவதை எடுத்துக் காட்டுவான்.

 

2-241ஆவது ஸ்லோகத்தில் பிராமணர் அல்லாதார் இடமிருந்தும் வேதங்களைக் கற்கலாம் என்கிறார் (உபநிடதங்களில் க்ஷத்ரிய மன்னர்களிடம், பிராமணர்களும் வேதாந்தம் கற்றனர் என்ற குறிப்பு உள்ளது.  க்ஷத்ரிய மன்னர் குலத்தில் பிறந்த கௌதம புத்தரை பிராமண அறிஞர்களும் பின்பற்றியபோது புத்தரின் முகம் தாமரை போல மலர்ந்தது என்று தம்மபத விரிவுரைகள் பகரும்.)

 

வேதங்களைக் கற்பிக்கும் போது அவர்களைக் குருவாக மதிக்க வேண்டும் என்கிறார் மனு. ஜனக மன்னனிடம் பலரும் கற்றதை இங்கே நினைவு கூறலாம்.

 

ஜாதியை விட உயர்ந்தது கல்வியும், நல்லொழுக்கமும் என்று மனு நிறைய இடங்களில் வலியுறுத்திக் கொண்டே போவதை கற்றோர் அறிவர்.

 

–Subham–

நாஸ்தீகருக்கு மனுவும் வள்ளுவரும் தரும் சவுக்கடி! (Post No.2940)

valluvar door

Written by London swaminathan

Date: 3 July 2016

Post No. 2940

Time uploaded in London :– 12-48

( Thanks for the Pictures)

 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

punul valluvar

லோப: ஸ்வப்னோ த்ருதி: க்ரௌர்யம் நாஸ்திக்யம் பின்னவ்ருத்திதா

யாசிஷ்ணுதா ப்ரமாதஸ்ச தாமசம் குண லக்ஷணம்

மனு 12-33

பேராசை, தூக்கம், புலனின்ப கட்டுப்பாடில்லாமை, கொடுமை செய்தல், நாத்திகம், தொழில் செய்யாமை, பிச்சை எடுத்தல், சோம்பேறித்தனம் ஆகியன தாமச குண லட்சணம்.

 

வள்ளுவனும் நாத்திகனை பேய்ப்பயல் என்று திட்டுகிறான்:

 

உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து

அலகையா வைக்கப்படும் (குறள் 850)

 

உலக மக்கள் அனைவரும் உண்டு என்று சொல்லுவதை, ஒருவன் இல்லை என்று சொன்னால் அவனை மனித வடிவில் வந்த பேய் என்று கருதவேண்டும்

 

கண்ண பிரானும் கீதையில் இதையே சொல்லி இருக்கிறான்:–

சம்சயாத்மா விநஸ்யதி  சந்தேகபடுபவன் அழிந்தே போய்விடுவான் என்கிறார். மேலும் அத்தகையோருக்கு இக,பர லோகங்களும் இல்லை; சுகமும் இல்லை என்பான் கண்ணன் (4–40)

 

மாணிக்கவாசகரோ நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர்’ என்று திட்டுவார்.

manikkavasagar,US

இவை எல்லாம் தமோ குண லட்சணங்கள்.

 

XXX

 

 

மனுவானவர் சத்துவ, ராஜச குணங்களையும் விளக்குகிறார். இவை பகவத் கீதையில் மிக விரிவாக உள்ளது (அத்தியாயம் 14, குணத்ரயவிபாக யோகம்)

 

வேதாப்யச: தப: ஞானம் சௌசம் இந்த்ரிய நிக்ரஹ:

தர்மக்ரியா ஆத்மசிந்தா ச சாத்விகம் குணலக்ஷணம்

மனு 12-31

வேதம் ஓதுதல், தவம், ஞானம், தூய்மை, புலனடக்கம், அறச்செயல் (தர்ம கைங்கர்யம்), ஆத்மசிந்தனை (அகநோக்கு) ஆகியன சத்வ குணத்தின் லட்சணங்கள்

XXX

 

ஆரம்பருசிதா தைர்யம் சத்கார்ய பரிக்ரஹ:

விஷயோபசேவா ச அஜஸ்ரம்  ராஜசம் குணலக்ஷணம்.

தொழிலில் சூரத்தனம், நிலையற்ற தன்மை, கெட்ட செயல்களில் ஈடுபடுதலில் உறுதி, புலன் இன்ப நாட்டம் ஆகியன ராஜச குண லட்சணம்.

XXX

 

இறுதியாக மூன்று குணங்களின் முக்கியக் கொள்கை என்ன என்பதையும் மனு, சுருக்கமாக ஒரே பாடலில் சொல்லிவிடுகிறார்.

 

தாமச குணமுடையோரின் லட்சணம் புலனின்பம், ராஜச குணம் உடையோரின் லட்சணம் செல்வத்தை சேகரித்தல், சத்துவ குணம் உடையோரின் லட்சணம் அறப் பணி செய்தல்.

தமசோலக்ஷணம் காமோ ரஜச: அர்த்தம் உச்யதே

சத்வஸ்ய லக்ஷணம் தர்ம: ஸ்ரோட்யம் ஏஷாம் யதோத்தரம்

மனு 12-38

 

 

-SUBAM-

 

காதல் பைத்தியமும் பக்திப் பைத்தியமும் (Post No. 2933 )

sambandar appar meet

Article written by London swaminathan

 

Date: 1 July 2016

Post No. 2933

Time uploaded in London :– 14-26

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

காதல் வயப்பட்ட ஆணோ பெண்ணோ என்ன செய்வார்கள் என்று வடமொழியில் ஒரு அழகான ஸ்லோகம் இருக்கிறது. இதை அப்பர் என்னும் திருநாவுக்கரசர் பாடிய தேவாரப் பாடலுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது இன்பம் பயக்கும்.

 

IMG_4415

அஷ்டாங்க மைத்துனம்

 

ஸ்மரணம் கீர்த்தனம் கேலி: ப்ரேக்ஷணம் குஹ்யபாஷணம்

சங்கல்போ(அ)த்யவசாயஸ்ச க்ரியாநிஷ்பத்திரேவ ச

 

-விருத்த வசிஷ்டர்

 

பொருள்:-

ஒரு பெண்ணை நினைத்த்ல், அவளைப் பற்றிப் பிதற்றல், , அவளுடன் விளையடல், அவளைப் பார்த்தல் (அடிக்கடி), அவளுடன் கிசுகிசு ரஹசியம் பேசல் (மொபைல்போன், பேஸ்புக், ஈ மெயில் மூலம்), அவளுடன் அனுபவிக்க வேண்டியது பற்றி எண்ணுதல்/கனவு காணுதல், அவைகளை அடைய திட்டமிடல்/முயற்சி செய்தல், இதன் காரணமாக செய்ய வேண்டிய கடமைகளை மறந்துபோதல் என்று அஷ்டாங்க மைதுனம் (எண்வகைப் புணர்ச்சி) பற்றி முதுவசிட்டன் சொல்லுகிறான்.

 

இந்தக் கருத்துகளை அப்பர் பெருமான் தனது தேவாரப் பாடலில் அப்படியே வடித்துள்ளார்:

 

அப்பர் தேவாரம்

 

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்

மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்

பின்னம் அவளுடைய ஆரூர் கேட்டாள்

பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்;

அன்னையும் அத்தனையும் அன்றே நீத்தாள்

அகன்றாள் அகலிடத்தே ஆசாரத்தை

தன்னை மறந்தாள் தன் நாமங் கெட்டாள்

தலைப் பட்டாள் நங்கை தலைவன் றாளே

—–தேவாரம், ஆறாம் திருமுறை, பாடல் 258

 

சங்க இலக்கியத்தில் அகப்பாட்டுகளைப் படித்தோருக்கு காதலன், காதலியின் நிலை விளங்கும். அப்பர் கூறிய பக்திப் பித்தை, பைத்தியத்தை அங்கும் காணலாம்.

appar2

கடவுளை காதலனாக, தாயாக, தந்தையாக, நண்பனாக, எஜமானனாக,வேலைக்கரனாக பார்த்து உரிமை கொண்டாடும் அற்புதமான அணுகுமுறை இந்துமதத்தில் மட்டுமே உண்டு. இதை அடியார்களின் பாடலில் காணலாம். இமயம் முதல் குமரி வரை பல மொழிகளில் இக்கருத்துகள் உள. நமது காலத்தில் பாரதியார், இதே போல கண்ணபிரானைப் பாடிப் பரவியுள்ளார்.

 

பக்தனின் ஒன்பது நிலைகளை நாரத பக்தி சூத்திரம், பாகவதம் ஆகியவற்றிலும் காணலாம்.

 

பாகவத புராணத்தில் வரும் ஸ்லோகம் இதோ:

 

ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ: ஸ்மரணம் பாத சேவனம்

அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் ஸக்ய ஆத்மநிவேதனம் (பாகவதம் 7-5-23)

 

அதாவது கடவுளின் நாமத்தைக் 1.கேட்டல், பக்திப் பரவசத்துடன் 2.பாடுதல், கடவுளின் பெயரை சதாசர்வ காலமும் 3.நினைத்தல், அவனுடைய பாதாரவிந்தங்களில் 4.பணிவிடை செய்தல், பூவாலும் இலையாலும் பொன்னாலும் மணியாலும் அவனை 5.அர்ச்சித்தல், அவனை சிரம் மேற் கைகூப்பி 6.வணங்குதல், அவனுக்கு 7.அடிமைபோல பணியாற்றல், அவனை உயிருக்குயிரான 8.நண்பனாகக் கருதல், இருதயபூர்வமாக 9.தன்னையே அர்ப்பணித்தல் ஆகிய ஒன்பது செயல்களைப் பக்தனிடம் காணலாம். இவைகளை ஆண்டவனுக்கு மட்டுமின்றி இறையடியார்க்கும் செய்வர்.

 

ஆக, பக்திப் பைத்தியமும் காதல் பைத்தியமும் ஒன்றே! இவ்வளவையும் எழுதிய  நம்முடைய முன்னோர்கள் இன்னொரு விஷயத்தையும் தெளிவாக எழுதிவைத்து விட்டனர்.

 

பக்திப் பைத்தியம், பேரின்ப நிலைக்கு இட்டுச் செல்லும். அது நித்தியானந்தம், பிரம்மானந்தம் தரும். பக்திக்கடலில் நீந்தி, முக்தி நிலையை அடைந்து விடுவர்.

 

ஆனால் காதல் பைத்தியமோ, சிற்றின்பமே; மேலும் அது சம்சார சாகரத்தில் — அதாவது பிறவிப் பெருங்கடலில்  – நம்மை மூழ்கடித்து, தத்தளிக்கச் செய்துவிடும். இது திகட்டக்கூடியது. முன்னது தெவிட்டாத சுவயுடைத்து என்பது ஆன்றோர்களின் அனுபவ மொழி!

 

–சுபம்–

பிராமணர்கள் பற்றி 31 பொன் மொழிகள் (Post No.2929)

brahmin vaishnava

Compiled by london swaminathan

Date: 30 June 2016

Post No. 2929

Time uploaded in London :–  5-46 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

ஜூலை மாத (துன்முகி ஆனி-ஆடி) காலண்டர், 2016

 

திருவிழா நாட்கள்:– 6-ரம்ஜான், 10-ஆனித் திருமஞ்சனம், 19-வியாச பூஜை/குரு பூஜா ( சாதுர்மாஸ்ய விரதம் ஆரம்பம்)

 

அமாவாசை – 4

பௌர்ணமி – 19

ஏகாதசி – 15

முகூர்த்த நாட்கள் – 6, 10, 11

brahmins, mylai

ஜூலை 1 வெள்ளிக்கிழமை

மனிதகுலத்தின் உதாரண புருஷன் பிராமணன். ஆகையால் எல்லோரையும் பிராமணர்களாக உயர்த்துவதே திட்டம். இந்திய வரலாற்றைப் படித்தால், இதற்கு முன்னரே இப்படிப் பலர் செய்திருப்பது புரியும்- சுவாமி விவேகாநந்தர்

 

ஜூலை 2 சனிக்கிழமை

பிராமணனுக்கு ஒருபோதும் தீங்கு செய்யக்கூடாது; தீங்கு செய்தவர்களுக்கு பிராமணனும் பதிலடி தரக் கூடாது- புத்தர் கூறியது, தம்மபதம், 389

 

ஜூலை 3 ஞாயிற்றுக்கிழமை

நீண்ட முடி (குடுமி) வைப்பதாலோ, பிறப்பினாலோ ஒருவன் பிராமணன் ஆவதில்லை; சத்தியமும், புனிதமான தூய்மையும் கொண்டவனே பிராமணன்; அவன் மகிழ்ச்சிக்கடலில் இருப்பான்.புத்தர் கூறியது, தம்மபதம், 393

 

 

ஜூலை 4 திங்கட்கிழமை

யார் சமய சம்பந்தமில்லாத வேலைகளை எடுக்கவில்லையோ அவன் மட்டுமே பிராமணன். சமய சம்பந்தமற்ற வேலைகள் மற்ற ஜாதிகளுக்கானது. பிராமணத்துவம் என்பது என்ன என்பதை அவர்கள் உணர்வது அவசியம். நற்குணங்களின் உறைவிடமாகப் பிராமணன் திகழ்வதாலேயே அவனுக்கு இவ்வளவு சலுகைகளும், கௌரவங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்று மனு கூறுகிறார் — சுவாமி விவேகாநந்தர்

 

ஜூலை 5 செவ்வாய்க்கிழமை

காலையில் சூரியனும், மாலையில் சந்திரனும் பிரகாசிக்கின்றன; க்ஷத்ரியன், ஆயுதம்தரிப்பதால் பிரகசிக்கிறான்; பிராமணன் தவ வலிமையால் பிரகாசிக்கிறான். புத்தனோ இரவிலும் பகலிலும் பிரகாசிக்கிறான். விழிப்புணர்வுடையவன் பிரகாசிப்பான் -புத்தர் கூறியது, தம்மபதம், 387

 

 

ஜூலை 6 புதன்கிழமை

பிராமண, க்ஷத்ரிய, வைச்யர்களுக்கு உபநயன கருமம் இருப்பதால், அவர்கள் இருபிறப்பாளர் என்று அழைக்கப்படுவர். அது இல்லாதவன் சூத்திரன். ஐந்தாவது ஜாதி/பஞ்சமன் என்று எதுவும் இல்லை- மனு 10-4

 

ஜூலை 7 வியாழக்கிழமை

பிராமணனுக்கு ஞானத்தினாலும், க்ஷத்ரியர்களுக்கு வீரத்தினாலும், வைசியர்களுக்கு செல்வத்தினாலும், சூத்திரர்களுக்கு வயதினாலும் மதிப்பு தர வேண்டும் (Sanskrit Sloka)

brahmins vaishnavite

ஜூலை 8 வெள்ளிக்கிழமை

பிராமணனுக்கு பிழைப்புக்கே வழியில்லை என்றால் கெட்டவர்களிடம் தானம் வாங்கக்கூடாது; கீழே சிந்திய தனியக்கதிர்களையோ, தானிய மணிகளையோ சேகரித்து உண்ணலாம் –மனு 10-112

 

 

ஜூலை 9 சனிக்கிழமை

புன்மயிர்ச் சடைமுடி, புலரா உடுக்கை

முந்நூல் மார்பின் முத்தீச் செல்வத்து

இருபிறப்பாளரோடு பெருமலை அரசன் – சிலப்பதிகாரம், காட்சிக்காதை (இமயமலையில் அந்தணர்கள் குடுமியுடன், ஈரத்துணியுடன், மூன்று வகையான யாகத் தீயை வளர்த்துக்கொண்டு, முப்புரி நூலுடன் இருப்பர்)

 

ஜூலை 10 ஞாயிற்றுக்கிழமை

மறையோர் ஏந்திய ஆவுதி நறும்புகை

நறைகெழு மாலையின் நல்லகம் வருத்த

கடக்களி யானைப் பிடர்த்தலை ஏறினந் சிலப்பதிகாரம், கால்கோட்காதை (பிராமணர்களின் யாகப் புகை சேரன் செங்குட்டுவனின் மாலையின் நறுமணத்தையும் மிஞ்சிவிட்டது)

 

 

ஜூலை 11 திங்கட்கிழமை

முக்கட்செல்வர் நகர்வலம் செயற்கே!

இறைஞ்சுக, பெரும! நின் சென்னி – சிறந்த

நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே! (புறநானூறு, 6) (பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழிதியின் தலை இரண்டு இடத்தில் மட்டுமே வணங்கும்; சிவபெருமான் கோவிலிலும், ஆசீர்வாதம் செய்யும் அந்தணர் முன்னிலையிலும் மட்டும் தலை தாழ்த்துவான்)

 

 

ஜூலை 12 செவ்வாய்க்கிழமை

ஆவும், ஆன் இயற்  பார்ப்பன மாக்களும்,

பெண்டிரும், பிணியுடையீரும், பேணித்

தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

பொன்போல் புதல்வர் பெறாதீரும்

என்அம்பு கடி விடுதும், நும் அரண் சேர்மின் (புறம். 9)

 

 

ஜூலை 13 புதன்கிழமை

பார்ப்பனர் வீட்டுக்குப் போனால், அருந்ததி போன்ற கற்பு வாய்ந்த பெண்மணி உனக்கு மாதுளங்காயைப் பசு வெண்ணையில் பொறித்து, ராஜ அன்னம் என்ற உயர்ந்த அரிசியில் சமைத்த சோற்றை படைப்பாள். பார்ப்பனப் பெண்கள், விருந்தாளிகளுக்கு மாவடு ஊறுகாயோடு உணவு பரிமாறுவர். – பெரும்பாணாற்றுப்படை (சங்க இலக்கியம்)

 

 

ஜூலை 14  வியாழக்கிழமை

 

பார்ப்பனர் மனைகளில் நாயும் கோழியும் நுழைய முடியாது. கிளிகள் மட்டும், அந்தணர் ஓதும் வேதங்களைத் திருப்பிச் சொல்லிக்கொண்டு இருக்கும் – சங்க இலக்கியம், பெரும்பாணாற்றுபடை

 

vedagama exam

ஜூலை 15 வெள்ளிக்கிழமை

அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுகலான் -திருக்குறள் 30 (எந்த உயிர்க்கும் தீங்கு செய்யாதவர் அந்தணர்)

 

ஜூலை 16 சனிக்கிழமை

மறப்பினும் ஒத்துக்கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கம் குன்றக்கெடும் -திருக்குறள் 134 (பார்ப்பான், வேதத்தை மறந்தாலும் பரவாயில்லை; ஆனால் ஒழுக்கம்போனால், அவனுக்கு விமோசனம் இல்லை)

 

 

ஜூலை 17 ஞாயிற்றுக்கிழமை

 

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல்-திருக்குறள் 543 (அந்தணர்கள் முறையாக வேதம் ஓதுவதற்கும், முறையான அரசாட்சியே அடிப்படை ஆகும்.)

 

 

ஜூலை 18 திங்கட்கிழமை

பிராமணர்கள் சாப்பாட்டுப் பிரியர்கள் – துஷ்யந்தி போஜனே விப்ராஹா – சாணக்கிய நீதி 6-18

 

 

ஜூலை 19 செவ்வாய்க்கிழமை

க்ஷத்ரியர்களின் பலம்  எல்லாம் பலமே அல்ல; பிராமணர்களின்ம் தேஜஸ்தான் பெரும் பலம்; திக் பலம்  க்ஷத்ரிய பலம், பிரம்மதேஜோ பலம் பலம் – வால்மீகி ராமாயணம் 5-6-23

 

ஜூலை 20 புதன்கிழமை

அந்தணர் கருமங்குன்றில்  யாவரே வாழ்வர் மண்ணில்

–விவேகசிந்தாமணி

 

ஜூலை 21  வியாழக்கிழமை

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் –சைவத் திருமுறை

கோப்ராஹ்மணேப்ய சுபமஸ்து நித்யம்

லோகாஸ் சமஸ்தோ சுகினோ பவந்து

vedic brahmins

ஜூலை 22 வெள்ளிக்கிழமை

பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் ஒழுக – திரிகடுகம்

 

ஜூலை 23 சனிக்கிழமை

வேதம் ஓதிய வேதியர்க்கோர் மழை

நீதி மன்னர் நெறியினுக்கோர் மழை

மாதர் கற்புடைய மங்கையர்க்கோர் மழை

மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே! –விவேகசிந்தாமணி

 

 

ஜூலை 24 ஞாயிற்றுக்கிழமை

பிரம்மத்தையே உணர்ந்த பிராமணன் மிகவும் பலம் பொருந்தியவன் – சாணக்கிய நீதி 8-10

 

 

ஜூலை 25 திங்கட்கிழமை

வேதமறிந்தவன் பார்ப்பான், பல

வித்தை தெரிந்தவன் பார்ப்பான் – பாரதியார்

 

ஜூலை 26 செவ்வாய்க்கிழமை

ஒரு பிராமணனும், சந்யாசியும் பூர்வ ஜன்ம  பாபத்திலிருந்து விடுபடுகிறார்கள்; தந்தை தாயைக் கொலை செய்திருந்தாலும், இரண்டு அரசர்களைக் கொன்றிருந்தாலும், ஒரு அரசையும் மக்களையும் அழித்திருந்தாலும், பாபங்களிலிருந்து விடுபடுவர்

-தம்ம பதத்தில் புத்தர் – பாடல் 294

 

 

ஜூலை 27 புதன்கிழமை

 

பொருநர்க்காயினும் புலவர்க்காயினும்

அருமறை நாவின் அந்தணர்க்காயினும்

அடையா வாயில் — சிறுபாணாற்றுப் படை

 

 

ஜூலை 28  வியாழக்கிழமை

செறுவிற் பூத்த சேயிதழ்த் தாமரை

அறுதொழிலாளர் அறம்புரித்தெடுத்த

தீயோடு விளங்கும் நாடன் (புறநானூறு  397)

school tree

 

ஜூலை 29 வெள்ளிக்கிழமை

 

ஏ பிராமணனே! ஆசையை விடுத்து, சம்சார சாகரத்தைக் கடந்து செல்; நிர்வாண நிலையை அடைவாய் – தம்மபதம் 383

 

 

ஜூலை 30 சனிக்கிழமை

எதைக் கொடுத்தாலும்ச் திருப்தியடையாத பிராமணன் அழிந்துபோகிறான்.  அசந்துஷ்டா த்விஜா நஷ்டா: – சாணக்ய நீதி 3-42

 

 

ஜூலை 31 ஞாயிற்றுக்கிழமை

யாத்திரை செல்லும் பிராமணன் வணக்கத்துக்குரியவன் – சாணக்கிய நீதி 6-43

 

–SUBHAM-

 

 

 

 

 

 

 

 

எந்த நிழலில் நிற்கலாம்? எந்த நிழலில் நிற்கக்கூடாது? (Post No.2927)

shadow

Compiled by london swaminathan

Date: 29 June 2016

Post No. 2927

Time uploaded in London :– 8-07 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

தீபச் சாயா நரச் சாயா ஹந்தி புண்யம் புராதனம்
சாச்சேத்வேதவிச் சாயா ஹந்தி பாபம் புராதனம்

விளக்கின் நிழலும், மனிதர்களின் நிழலும் யார் மீது விழுகிறதோ
அவர்கள் சேர்த்து வைத்த பழயை புண்யம் கூட அழிந்து விடும்.

 

 

வேதம் ஓதுபவரின் நிழல் நம் மீது பட்டால் முன் செய்த பாவங்களும் அழிந்து விடும்.

 

Lighting-a-lamp

Picture from wikipedia

Xxx

நடக்க முடியாத விஷயங்கள்

கானல் நீரில் மூழ்கி,  முயல் கொம்பினால் ஆன வில்லை ஏந்தி, ஆகாயப் பூவாலான
மாலையை அணிந்து கொண்டு மலடியின் மகன் போகிறான்

ம்ருக த்ருஷ்னாம்பசி ஸ்நாத:சசச்ருங்க தணுர்தர:
ஏஷ வந்த்யா சுத: யாதி கபுஷ்ப க்ருத சகேர:

 

xxxx

 

 

யாருக்கு எது முக்கியம்  ?
அலங்காரத்துக்கு ஆடை முக்கியம்

உணவுக்கு அன்பு முக்கியம்

பெண்ணுக்கு நல்ல குணம் முக்கியம்

அந்தணணுக்கு கல்வி முக்கியம்

 

வத்ஸ்த்ர முக்யஸ்த்வலங்கார: ப்ரிய முக்யந்து போஜனம்

குணமுக்யா பவேன்னாரி வித்யா முக்யஸ்து ப்ராஹ்மண:

Xxx

 

 

அமிர்தம் எது?

மனு கூறுகிறார்:

விகசாசி பவேன்னித்யம் நித்யன்னாம்ருத போஜன:

விகசோ புக்த சேஷந்து யக்ஞசேஷம் ததா அம்ருதம்

…மனு 3-285

 

திதி செய்த பின்னுள்ள மிச்சத்தை சாப்பிட வேண்டும்.

யக்ஞம் செய்த பின் மிஞ்சுவது அமிர்தத்துக்கு ஒப்பாகும்.

இவைகளை ஒருவன் தினமும் புசிக்க வேண்டும்.

இது தினமும் செய்யவேண்டிய பஞ்சமஹா யக்ஞம்

தொடர்பாக சொல்லப்பட்டவை.

 

Xxxx SUBHAM xxxx

 

 

 

 

இதனை இதனால் இவன் முடிக்கும்….. (Post No.2925)

கட்டுரை எண்–2925

எழுதியவர் – லண்டன் சுவாமிநாதன்

தேதி – 28 ஜுன் 2016

அருமையான திருக்குறள்!

யாருக்கு எந்த வேலையைக் கொடுத்தால், அவன் அதை நன்கு செய்வான் என்பதை அறிந்திருப்பவனே தலைவன்; கடவுள் ஒவ்வொருவருக்கும் ஒரு திறமையைக் கொடுத்திருக்கிறான். யாருமே பயனற்றவர் இல்லை. சீதையைக் கட்டாயம் கண்டுபிடிப்பவன் அனுமன் என்பதை ராமன் அறிந்ததால் அன்றோ அவனிடம் தனது மோதிரத்தைக் கொடுத்தனுப்பினான்.

 

இதனை இதனால்இவன் முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல் –குறள் 517

 

பொருள்:- இந்தச் செயலை அவன் இந்தவிதமாக முடிக்கக்கூடியவன் என்பதை ஆராய்ந்து முடிவு செய்து அதனை அவனிடம் விட்டுவிட வேண்டும்.

 

எல்லோருக்கும் ஒரு வித அரிய ஆற்றல் இருக்கிறது என்பதை ஒரு வடமொழி ஸ்லோகம் அழகாகக்கூறும்:–

 

அமந்த்ரம் அக்ஷரம் நாஸ்தி நாஸ்தி மூலம் ஔஷதம்

அயோக்யப் புருஷோ நாஸ்தி யோஜகஸ் தத்ர துர்லப:

 

எல்லா எழுத்துக்களும் மந்திரங்களில் பயன்படும்; மந்திரத்துக்கு உதவாத எழுத்து என்று எதுவுமே இல்லை.

 

எல்லா செடிகளின் வேரும் ஏதோ ஒரு மருத்துவ குணம் உடையது; பயன்படாத தாவரம் எதுவும் இல்லை.

 

தகுதியற்ற மனிதர், உதவாக்கறை என்று உலகில் யாருமே இல்லை; ஒவ்வொருவரும் ஒருதுறையில் வல்லவன்.

 

ஆனால் அரிதான விஷயம், அவர்களைக் கண்டுபிடித்து, அவரவர் திறமைக்கேற்ற பணியைக் கொடுப்பவன் இருக்கிறானே– அவன் தான் அரிதானவன்.

 

வள்ளுவன் குறளையும் இதையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

இதையே இன்னும் ஒரு தமிழ்ப் புலவர் அழகாகச் சொன்னார்:–

வான்குருவிக்கூடரக்குவாலுலண்டு கோற்றருதல்

தேன்புரிந்தியார்க்குஞ்செயலகா – தாம்புரீஇ

வல்லவர் வாய்ப்பன வென்னாரொரோவொருவர்க்

கொல்காதோ ரொன்று படும்—சிறுபஞ்சமூலம்

 

பொருள்:-

வான்குருவிக் கூடு – தூக்கணங் குருவிக் கூடும்

அரக்கும் – அரக்கும்

வால் உலண்டு தருதல் – தூய உலண்டு என்னும் புழுவால் நூற்கப்பட்ட (பட்டு) நூலும்,

கோல் தருதல் – கோல் என்னும் புழுவால் கட்டப்படும் கூடும்

தேன் – தேனீக்களால் கட்டப்படும் கூடும்

(ஆகிய இந்த ஐந்தும்)

புரிந்து யார்க்கும் செயல் ஆகா- எல்லோரும் விரும்பினாலும் செய்ய முடியாது.

வல்லவர் தம் புரீ இ என்னார் – (ஆதலால்) தொழில் வல்லமை படைத்தோரும் இதைச் செய்யத் துணியார்.

ஒரோ ஒருவர்க்கு ஓரொன்று ஒல்காது படும் – ஒவ்வொருவருக்கும் ஒரு தொழிலை நன்றாகச் செய்யமுடியும்.

குருவி, அரக்குப்பூச்சி, பட்டுப்பூச்சி, கோற்புழு, தேனீ ஆகிய ஐந்து இயற்கைப் பொருட்களை வைத்து அழகான கருத்தைச் சொல்லிவிட்டார்.

 

அன்பர்களே! உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை உள்ளது. அதை முதலில் கண்டுபிடியுங்கள்; உங்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை என்றால், நண்பர்களின், பெரியோரின் உதவியை நாடுங்கள். அனுமனுக்கு தன் வலிமை தெரியாது. அதை ஒருவர் சுட்டிக்காட்டினால் மகத்தான காரியங்களைச் செய்வான் என்று ராமாயணம் சொல்கிறது. உங்கள் வலிமை உங்களுக்குத் தெரியவில்லையானால் அதற்கென்று உதவும் அமைப்புகள் இருக்கின்றன. அவற்றின் உதவியை நாடுங்கள்.

 

இதை ஒரு ஆங்கிலப் பழமொழி அழகாககச் சொல்லும்:-

 

Men are four:
He who knows not and knows not he knows not, he is a fool—shun him;
He who knows not and knows he knows not, he is simple—teach him;
He who knows and knows not he knows, he is asleep—wake him;
He who knows and knows he knows, he is wise—follow him!

–SUBAM–

 

 

உடலூனமுற்றோருக்கு உதவுக: தமிழ்ப் புலவர்கள் அறைகூவல்!

Post No. 2922
Date 27th June 2016
Written by london swaminathan
பிளாரன்ஸ் நைட்டிங்கேல் என்ற பெண்மணி போரில் காயமடைந்தோருக்கு உதவி செய்து
புகழ் பெற்றதை அறிவோம். மேலை நாடுகளில் இறக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு ‘ஹாஸ்பிஸ்’Hospice
என்ற அமைதியான தங்கும் இடங்கள் இருப்பதை அறிவோம். முதியோர் காப்பகங்கள் இப்போது பல்கிப் பெருகி வருகின்றன. ஆதரவற்றோர் இல்லங்களை நடத்தும் அறக்கொடை நிறுவனங்களும்
பெருகி வருகின்றன. ஆனால் இவையனைத்தையும் பாரத நாடுதான் முதல், முதலில் உலகிற்குக் கற்பித்தது என்பதற்கு அசோகனின் கல்வெட்டுகளும், மணிமேகலை முதலிய காப்பியங்களும்,
புராணக் கதைகளும் சான்றாகத் திகழ்கின்றன.
உடலூனம் அடைந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள், கண்பார்வையற்றோர், ஆதரவற்றோர் ஆகியோருக்காக
இன்று நிறைய அறக்கொடை நிறுவனங்கள் உதவி அளித்து வருகின்றன. அதே போல அரசாங்கமும் பல சலுகைகலை அறிவிக்கின்றன. ஆனால் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் இது பற்றி சிந்தித்து எழுதிவைத்திருப்பது வியப்பானது; மற்றும் தமிழர்களின் மனிதாபிமானத்துக்கும் இது ஒரு
எடுத்துக்காட்டு.

இதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று கேட்போர் பின்ன்வரும் பாடல்களைப் படித்தாலே போதும்:–

காணார் கேளார் கால்முடமானார்
பேணுதலில்லார் பிணிநடுக்குற்றார்
யாவரும் வருக —
என்று அழைத்து மணிமேகலை உணவளித்ததை மணிமேகலை காப்பியம் மூலம் அறிகிறோம்.

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – என்பது பாரத நாடு முழுதும் போற்றப்படும் கொள்கை.

இதோ இன்னும் ஒரு சான்று:–

புண்பட்டார் போற்றுவார் இல்லாதார் போகுயிரார்

கண்கெட்டார் காலிரண்டு இல்லாதார் – கண்பட்டாங்

காழ்ந்து நெகிழ்ந்தவர்க்கீந்தார் கடைபோக

வாழ்ந்து கழிவார் மகிழ்ந்து (சிறுபஞ்சமூலம்)

பொருள்:- போரில் காயம் அடைந்தவர்களுக்கும், காப்பாற்றுவார் இல்லாத அனாதைகளுக்கும், உயிர்போகும் தருவாயில் இருப்பவர்க்கும், கண் தெரியாதவர்களுக்கும், இரண்டு காலும்
இல்லாமல் முடமானோருக்கும், மனம் உருகி, நெகிழ்ந்து உதவி செய்தவர்கள்,  சாகும் வரைக்கும் கஷ்டம் இல்லாமல் இன்புற்று இருப்பார்கள் என்று சிறுபஞ்சமூலம்
சொல்லும்.

ஏலாதி என்னும் நூலிலும் ஒரு பாடல் வருகிறது:-

கடம்பட்டார் காப்பில்லார் கைத்தில்லார் தங்கால்

முடம்பட்டார் மூத்தார் மூப்பில்லார்க் – குடம்பட்

டுடையராயில்லுளு ணீத்துண்பார் மண்மேல்

படையராய் வாழ்வார் பயின்று (ஏலாதி)

பொருள்:– பெரும் கடனில் சிக்கித் தவிப்போருக்கும், பாதுகாப்பவர் இல்லாத குருடர்  முதலியோர்க்கும், எளியவர்களுக்கும், முடவர்க்கும் வாழ வழியற்ற முதியவவர்களுக்கும் அனாதைச் சிறுவர்களுக்கும் உதவுவோர் இந்த மண்ணுலகில் நால் வகைப் படைகளையுடைய
அரசர்கள் போல வாழ்வார்கள் என்று ஏலாதி கூறும்.

இறுதியாக அதே நூலில் இருந்த இன்னொறு பாடலையும் காண்போம்:–

தாயிழந்த பிள்ளை தலையிழந்த பெண்டாட்டி

வாயிழந்த வாழ்வினார் வாணிகம் — போயிழந்தார்

கைத்தூண் பொருள் இழந்தார் கண்ணிலவர்க்கீந்தார்

வைத்து வழங்கி வாழ்வார்

.

பொருள்:–
அனாதைப் பிள்ளைகட்கும், கணவனை இழந்து தவிக்கும் விதவையர்க்கும், ஊமைகளுக்கும், வியாபாரத்தில் முதல் முழுதையும் இழந்தோருக்குமுணவுப் பொருளை இழந்தவர்க்கும், குருடர்களுக்கும் உதவியவர்கள் பிற்காலத்துக்கு புண்ணியம் சேர்த்து
வைப்பவராவர். போகும் வழிக்குப் புண்ணியம் தேடியவர் ஆவர்

–சுபம்–

 

லெட்சுமி தங்காத இடங்கள் (கட்டுரை எண். 2916)

THANGA LAKSHMI

Article written by London swaminathan

 

Date: 24 June 2016

 

Post No. 2916

 

Time uploaded in London :– காலை 8-34

 

( Pictures are taken from various sources; thanks)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

சிலாஸ்சகந்தலேபஸ்ச மார்ஜாரோச்சிஷ்ட போஜனம்

ப்ரதிபிம்பேக்ஷணம் நீரே சக்ரஸ்யாபி ஸ்ரியம் ஹரேத்

சிலாஸ்சகந்தலேப: – கல்லின் மேல் வைத்த சந்தனத்தை பூசிக்கொள்பவன்

மார்ஜார: உச்சிஷ்ட போஜனம் – பூனை சாப்பிட்ட மிச்சத்தை உண்பவன்

ப்ரதி பிம்பேக்ஷணம் நீரே – தண்ணீரில் தனது நிழலைப் பார்ப்பவன்

சக்ரஸ்யாபி ஸ்ரியம் ஹரேத்- விஷ்ணுவாக இருந்தாலும் (அவனது) செல்வத்தை லெட்சுமி நீக்குகிறாள்.

Xxx

 

lakshmi in kshetras

குசேலினம் தந்த மலாபஹாரிணம் பஹ்வாசினம் நிஷ்டூரவாக்ய பாஷிணம்

சூர்யோதயே சாஸ்தமயே ச சாயினம் விமுஞ்சதி ஸ்ரீரபி சக்ரதாரிணம்

 

குசேலினம் – அழுக்காடை அணிபவன்

தந்த மலாபஹாரிணம் – பல்லை நோண்டி அழுக்கெடுப்பவன்

பஹ்வாசினம் – பெருந்தீனிக்காரன்

நிஷ்டூரவாக்ய பாஷிணம் – கடும்/ சுடு சொற்களைப் பேசுபவன்

சூர்யோதயே சாஸ்தமயே ச சாயினம்- சூரியன் உதிக்கையிலும், அஸ்தமிக்கையிலும் படுக்கையில் இருப்பவன்

விமுஞ்சதி ஸ்ரீரபி சக்ரதாரிணம் – விஷ்ணுவேயானாலும், லெட்சுமி விட்டுவிட்டுப் போய்விடுவாள்.

–சுபம்–

பெண்களுடன் வாதாடாதே (Post No.2913)

RelationshipFighting

Article written by London swaminathan

 

Date: 22 June 2016

 

Post No. 2913

 

Time uploaded in London :– 8-33 AM

 

(Pictures are taken from various sources; thanks)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

மனிதனுக்கு இழிவை ஏற்படுத்தும் 6, பெருமை தரும் 4, விஷயங்கள்

donkey ride

பால சகித்வம் = சிறுவர்களுடன் நட்பு (பக்குவம் அடையாதோருடன் நட்பு)

அகாரண ஹாஸ்யம் = காரணமில்லாமல் தனக்குத் தானே சிரித்தல் (மொபைல் போன், ஐ பேட் – இவைகளைப் பார்த்து பொது இடங்களில் சிரித்தல்)

ஸ்த்ரீஷு விவாதோ= பெண்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுதல் (மனைவி, சஹோதரிகளுடனோ, அடுத்தவீட்டுப் பெண்களுடனோ சண்டை போடுதல்)

 

அசஜ்ஜன சேவா = கெட்டவர்களுக்குச் செய்யும் உதவி (லஞ்சம் கொடுத்தல்)

கார்தப யானம் = கழுதை சவாரி (ஓட்டை காரில் சவாரி செய்தல்)

அசம்ஸ்க்ருதவாணி = கொச்சை மொழியில் பேசுதல் (பண்பற்ற மொழி; கீழ்மக்கள் பயன்படுத்தும் மொழி)

ஷட்சு = இந்த ஆறில்

நர: – மனிதன்

லகுதாம் = சிறுமையை

உபயாதி = அடைகிறான்.

 

பாலசகித்வமகாரணஹாஸ்யம் ஸ்த்ரீஷு விவாதோ(அ)சஜ்ஜனசேவா

கார்தபயானமசம்ஸ்க்ருதவாணீ ஷட்சு நரோ லகுதாமுபயாதி

Xxxx

school boys

பெருமை தரும் நான்கு விஷயங்கள்

एको धर्मः परं श्रेयः क्षमैका शान्तिरुत्तमा।
विद्यैका परमा दृष्टिरहिंसैका सुखावहा॥

ஏகோ தர்ம: பரம்ஸ்ரேய: க்ஷமைகா சாந்திருத்தமா

வித்யைகா பரமா த்ருஷ்டிரஹிம்சைகா சுகாவஹா

 

 

தர்மம் (என்ற ‘ஒன்று’ ) மாபெரும் மேன்மையைத் தரும்

பொறுமை (என்ற ‘ஒன்று’ ) சிறந்த அமைதியைத் தரும்

கல்வி (என்ற ‘ஒன்று’ ) அளவற்ற நிறைவைத் தரும்

அஹிம்ஸை (என்ற ‘ஒன்று’ ) தொடர்ந்து சுகத்தைத் தரும்.

–உத்யோக பர்வம், மஹாபாரதம்

 

–subam–

 

 

கண்களுக்கு சூரியன், மனதுக்கு சந்திரன், நாக்குக்கு வருணன் கடவுள் (Post No. 2905)

body parts

Compiled by London swaminathan

 

Date: 18  June 2016

 

Post No. 2905

 

Time uploaded in London :– 13-26

 

( Pictures are taken by London swaminathan)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

 

எந்த உடல் உறுப்புக்கு யார் தேவதை என்று சம்ஸ்கிருதத்தில் ஒரு சொல் வழக்கு உள்ளது.

 

காது – திசை

தோள் (த்வக்) – காற்று

கண் – சூரியன்

நாக்கு –வருணன்

க்ராணம்(முகர்தல்/மூக்கு) – அஸ்வினி

வாக்கு – அக்னி (வன்னி)

கை (ஹஸ்த) – இந்திரன்

கால்( பாத)  – உபேந்திரன்

பாயு: (குதம்) – மித்ரன்

ஜனன உறுப்பு – பிரஜாபதி

மனது – சந்திரன்

 

இந்திரிய அதிஷ்டான தேவதைகள்:-

ஸ்ரோத்ரஸ்ய திக், த்வசோ வாத:, நேத்ரஸ்ய அர்க:, ரசனாயா வருண:, க்ராணஸ்ய அச்வினௌ, வாகிந்த்ரியஸ்ய வன்னி:

 

elephant

Xxx

 

உறவினர்கள் (ஆத்ம பந்துக்கள்) யார், யார்?

 

ஆத்மமாது: ஸ்வசு: புத்ரா ஆத்மபிது: ஸ்வசு: சுதா:

ஆத்ம மாதுல புத்ராஸ் ச விக்ஞேயா ஹி ஆத்மபாந்தவா:

–சப்தகல்பத்ருமம்

சொந்த தாயார், தந்தை, மாமன், அத்தை, சித்தி (சின்னம்மா), பெரியம்மா, அம்மான் பிள்ளைகள் ஆகியோர் நெருங்கிய உறவினர்கள் ஆவர்.

 

பகவத் கீதையிலும் உறவினர்கள் பட்டியல் இருக்கிறது:-

 

ஆசார்யா: பிதர: புத்ராஸ் ததைவ ச பிதாமஹா:

மாதுலா: ச்வசுரா: பௌத்ரா: ஸ்யாலா: (1-34)

(ஆசார்யா: – ஆசிரியர்கள்), பிதர: – தகப்பன்மார்கள், புத்ரா: – பிள்ளைகள், பிதாமஹா: – பாட்டன்மார்கள், பௌத்ரா: – பேரன்மார்கள், மாதுலா: – அம்மான்மார்கள், ஸ்வசுரா: – மாமனார்கள், ஸ்யாலா: – மைத்துனர்கள், ஸம்பந்தின: – சமபந்திமார்கள்

 

(இவ்வளவு உறவினர்களையும் கொல்ல விரும்பவில்லை; அதனால் போர் வேண்டாம் என்கிறான் அர்ஜுனன்)

என் குடும்பம்

Xxx

ஆத்ம யாஜீ யார்?

சர்வ பூதேசு ச ஆத்மானம் சர்வபூதானி ச ஆத்மனி

சமம் பஸ்யன் ஆத்ம யாஜி ஸ்வராஜ்யம் அதிகச்சதி (மனு 12-91)

 

எல்லா உயிர்களிடத்திலும் தன்னையும், தன்னிடத்தில் எல்லா உயிர்களையும் சமமாகப் பார்ப்பவனே தன்னை அறிந்தவன். அவன் முக்தி பெறுகிறான்

ஆத்மயாஜி= தன்னையே தியாகம் செய்பவன், வேள்வி செய்பவன்

 

கீதையிலும்

இதே போன்ற ஸ்லோகங்கள் பகவத் கீதையிலும் இருப்பது ஒப்பிடற்பாலது:-

சர்வபூதஸ்தமாத்மானம் சர்வபூதானி ச ஆத்மனி

ஈக்ஷதே யோக யுக்தாத்மா சர்வத்ர சமத்ர்சன:

ப.கீதை 6-29

பொருள்:–

யோகத்தில் ஈடுபட்டவன், எங்கும் சம நோக்குடன், எல்லா உயிர்களிடத்திலும் ஆத்மாவையும், ஆத்மாவில் எல்லா உயிர்களும் உறைவதாகவும் காண்கிறான்

இதே கருத்து அடுத்த இரண்டு ஸ்லோகன்களிலும் வலியுறுத்தப்படுகிறது.

–சுபம்–