ஏப்ரல் 2016 காலண்டர் (மன்மத/துர்முகி ஆண்டு பங்குனி/சித்திரை) Post No.2674

 

hanuman raman

Compiled by london swaminathan

Date: 29 March,2016

 

Post No. 2674

 

Time uploaded in London :–  8-45 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

தாவரங்கள் பற்றிய 30 பழமொழிகள், இந்த மாத காலண்டரை அலங்கரிக்கின்றன.

 

முக்கிய நாட்கள்:-  8-யுகாதி/தெலுங்கு புத்தாண்டு,

14-தமிழ் புத்தாண்டு, 15-ஸ்ரீஇராமநவமி, 21-சித்திரா பவுர்ணமி.

ஏப்ரல் 20- மதுரை சித்திரைத் தேர், 22- கள்ளழகர், மதுரை வைகை ஆற்றில் இறங்குதல்.

முகூர்த்த நாட்கள்:-4, 25, 29, அமாவாசை:- 6/7, பௌர்ணமி:- 21

ஏகாதசி:- 3, 17/18 இம்மாத காலண்டரில் தாவரம் பற்றிய 30 பழமொழிகள் இடம்பெறுகின்றன.

 

raman full page

ஏப்ரல் 1 வெள்ளிக்கிழமை

அமாவாசையில் மழை பெய்தால், அரிசி விற்ற விலையில் நெல் விற்கும்.

ஏப்ரல் 2 சனிக்கிழமை

அணில் ஏறி, தென்னை மரம் அசையுமா?

ஏப்ரல் 3 ஞாயிற்றுக் கிழமை

அரச மரத்தைச் சுற்றிவிட்டு, அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தாளாம்.

ஏப்ரல் 4 திங்கட்கிழமை

அருகாகப் பழுத்தாலும் விளா மரத்தில் வெவ்வால் சேராது.

ஏப்ரல் 5 செவ்வாய்க்கிழமை

அறுக்க ஊறும் பூம்பாளை; அணுக ஊறும் சிற்றின்பம்.

 

arasamaram

 

ஏப்ரல் 6 புதன்கிழமை

ஆடிப் பட்டம் தேடி விதை; ஆடி வாழை தேடி நடு.

ஏப்ரல் 7 வியாழக்கிழமை

ஆயிரம் கலம் நெல்லுக்கு ஒரு அந்து

ஏப்ரல் 8 வெள்ளிக்கிழமை

ஆள் அறிந்து ஆசனம் போடு; பல் அறிந்து பாக்குப் போடு

ஏப்ரல் 9 சனிக்கிழமை

ஆமணக்கும் பருத்தியும் அடர விதைத்தால் ஆகாது.

ஏப்ரல் 10 ஞாயிற்றுக் கிழமை

ஆலும் வேலும் பல்லுக்குறுதி.

 

ஆலமரம்

ஏப்ரல் 11 திங்கட்கிழமை

ஆவணி மருதாணி அடுக்காய்ப் பற்றும்

ஏப்ரல் 12 செவ்வாய்க்கிழமை

ஆவும் தென்னையும் அஞ்சு வருஷத்தில் பலன் ஈயும்

ஏப்ரல் 13 புதன்கிழமை

இலை சாய்கிற பக்கம் குலை சாயும்

ஏப்ரல் 14 வியாழக்கிழமை

எட்டடி வாழை, பத்தடி பனை, பதினாறடி தென்னை

ஏப்ரல் 15 வெள்ளிக்கிழமை

எட்டி மரமானாலும் பச்சை மரத்தை வெட்டாதே.

 

2மர விநோதம்

 

ஏப்ரல் 16 சனிக்கிழமை

எட்டு எள்ளுக்குச் சொட்டு எண்ணெய் எடுப்பான்.

ஏப்ரல் 17 ஞாயிற்றுக் கிழமை

எள்ளும் கரும்பும் இறுக்கினால்தான் பலன் கொடுக்கும்

ஏப்ரல் 18 திங்கட்கிழமை

ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும், தன் நாற்றம் போகாதாம் பேய்ச் சுரைக் காய்க்கு.

ஏப்ரல் 19 செவ்வாய்க்கிழமை

ஐப்பசி நெல் விதைத்தால் அவலுக்கும் ஆகாது

ஏப்ரல் 20 புதன்கிழமை

கத்தரிக்காய் வாங்க பூசணிக்காய் கொசுரா?

brinjal white

 

ஏப்ரல் 21 வியாழக்கிழமை

கத்தரிக்காய்க்கு காம்பு ருசி; வெள்ளரிக்காய்க்கு விதை ருசி.

ஏப்ரல் 22 வெள்ளிக்கிழமை

யானை வாயில் போன கரும்பைப் போல

ஏப்ரல் 23 சனிக்கிழமை

கரும்பில் எறும்பு இருந்தால் ஆனைக்கு என்ன?

ஏப்ரல் 24 ஞாயிற்றுக் கிழமை

காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்

ஏப்ரல் 25 திங்கட்கிழமை

கனியிருக்க காயைத் தின்பரோ?

BANANA HILL

ஏப்ரல் 26 செவ்வாய்க்கிழமை

காய்த்த மரம்தான் கல்லடி படும்

ஏப்ரல் 27 புதன்கிழமை

கேட்காத கடனும் பார்க்காத பயிரும் பாழ்

ஏப்ரல் 28 வியாழக்கிழமை

கொடிக்குக் காய் பாரமா?

ஏப்ரல் 29 வெள்ளிக்கிழமை

சாணி சுமப்பவளுக்கு சந்தனப் பூச்சு எதற்கு?

ஏப்ரல் 30 சனிக்கிழமை

சுண்டைக் காய் கால் பணம்; சுமைகூலி முக்கால் பணம்.

மே 1 ஞாயிற்றுக் கிழமை

–சுபம்–

 

 

 

பெண்களை எங்கே, எங்கே பார்த்தால் குற்றமாகாது? (Post No 2671)

996_Brides_Kashmir

Compiled and Translated by london swaminathan

 

Date: 28 March 2016

 

Post No. 2671

 

Time uploaded in London :– 7-20 AM

 

(Pictures are taken from various sources. Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

பெண்கள் பற்றி 150 சம்ஸ்க்ருத பழமொழிகள் –பகுதி 2

bengali bride

22.நார்யோ ஹரந்தி ஹ்ருதயம் ப்ரசபம்

நராணாம் – ரத்ன சமுச்ச

ஆண்களின் இருதயத்தை எளிதில் கவர்கிறார்கள் பெண்கள்.

Xxx

23.நிர்தர்பா நாசதீ பவேத் – கதா சரித் சாகரம்

துடுக்கற்ற பணிப்பெண்களே நல்லவர்கள்.

Xxx

  1. நிர்தோஷ த்ருஸ்யா ஹி பவந்தி நார்யோ யக்ஞே விவாஹே வ்யசனே வனே ச – ப்ரதிமாநாடக 1-29

யாகத்திலே, விவாஹத்திலே,துக்கத்திலே, ஆரண்யத்திலே –பெண்கள் பார்க்கப்பட்டால் தவறில்லை. (வேள்வி, திருமணம், காடு, துக்கம் நிகழ்ந்த இடத்தில் பெண்களைப் பார்க்கலாம்; பேசலாம்)

Xxx

25.நிசர்க நிபுணா: ஸ்த்ரிய: – மாளவிகாக்னிமித்ரம்

இயற்கையிலேயே, பெண்கள் நிபுணர்கள்(திறமைசாலிகள்)

Xxx

26.நீதி மாத்ரம் அஹம் மன்யே ஸ்த்ரீணாம் ரக்ஷானியந்த்ரணம் – கதா சரித் சாகரம்

பெண்களைப் பாதுகாப்பதற்கானக் கட்டுப்பாடுகள் நியாயமானவை என்றே நான் நினைக்கிறேன்.

Xxx

27.பரஸ்த்ரியம் ந அபிகாங்க்ஷேத – சதோபதேச ப்ரபந்த

பிறர் மனைவியை விரும்பாதே.

Xxx

 

IMG_4358

28.ப்ரத்யய: ஸ்த்ரீஷு முஷ்ணாதி விமர்சம் விதுஷாமபி – கதா சரித் சாகரம்

கற்றவர்களும் கூட பெண்களை நம்பி முட்டாள் ஆகிவிடுவர்.

Xxx

29.ப்ரத்யுத் உத்பன்னம் மதி ஸ்ரேணம்-சாகுந்தலம்

பெண்கள் புத்திசாலிகள்

 

Xxx

30.ப்ரிய: கோ நாம யோஷிதாம் –சாந்திசதக

யார்தான் இப்பெண்ணுக்கு விருப்பமானவர்?

Xxx

31.பத்த மூலஸ்ய மூலம் ஹி மஹத்வைரதரோ: ஸ்த்ரிய: – சிசுபாலவதம்

பகைமை என்னும் மரத்தின் ஆணிவேர் ( மூல காரணம்) பெண்கள்தான்.

Xxx

32.பீஜம் யுத்தஸ்ய யோஷித: – ப்ருஹத் கதா கோச 69-16

போர்களின் வித்து/விதை பெண்களே

Xxx

33.பவதி விக்லவதா குணோ அங்கனானாம் – சிசுபாலவதம்

பெண்களுடைய குணம் பயப்படுவதே.

Xxx

34.மத்தா நதீ ச நாரீ ச நியந்தும் கேன பார்யதே – கதா சரித் சாகரம்

வெள்ளப் பெருக்கெடுத்தோடும் நதியையும், பெண்களையும் யார் கட்டுப்படுத்த முடியும்?

Xxx

35.மானனீயா ஹி யோஷித: – பாரத மஞ்சரி

பெண்களை மதிக்க வேண்டும்

Xxx

36.முக்த: கலு  அபலாஜன: –

விரைவில் பெண்கள் மிரண்டு/ மருண்டுவிடுவர்

Xxx

IMG_4527

37.முக்தமானசம் ரமந்தே நஹி யோஷித:

முட்டாளுடன் பழகுவதை பெண்கள் விரும்புவதில்லை.

தொடரும்…………………………………….

(ஏற்கனவே நான் எழுதிய 25-க்கும் மேலான பழமொழி ஆராய்ச்சிக் கட்டுரைகள், பழமொழித் தொகுப்புகள், இந்த பிளாக்கிலுள்ளன.)

 

 

இவர் யார்? (Post No 2664)

question-mark-706906_960_720

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 26 March 2016

 

Post No. 2664

 

Time uploaded in London :–  6-48 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

தெரிந்து கொள்ள வேண்டியவர்கள்

இவர் யார்?

 

.நாகராஜன்

 

பெரிய வேதாந்தி. கணிதப் பேராசிரியர்.

அமெரிக்காவிற்குச் சென்று வேதாந்தச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி அமெரிக்கர்களைப் பெரிதும் கவர்ந்தவர்.

பஞ்சாபி, உருது, சம்ஸ்கிருதம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் புலமை பெற்றவர்.

உலக வாழ்வைத் துறந்தவர்.

33 ஆண்டுகளே வாழ்ந்தார்.

கங்கையில் குளிக்கச் சென்ற போது சுழல் இவரை இழுக்க, “அம்மா! உன் விருப்பம் அதுவானால் அது சரிதான்!” என்று சொல்லி ஜல சமாதி எய்தியவர்.

 

 

ஜல சமாதிக்கு முன்னர் அவர் எழுதிய துண்டுச் சீட்டில், “மரணமே, வா! உன்னை என்னால் ஒன்றும் செய்ய முடியாது. நான் எங்கும் இருப்பவன்” என்று எழுதி வைத்தவர்.

 

பாரதத்தை தன்னிலே கண்டு தன்னனயே பாரதமாக உருவகப் படுத்தி இவர் எழுதிய கட்டுரை ஒவ்வொரு பாரதீயனும் படிக்க வேண்டிய ஒன்று!

 

இவரது அருமையான சொற்பொழிவுகள் 8 பகுதிகளாக வெளி யிடப்பட்டுள்ளது.

கணிதத்தில் கடவுளைக் கண்ட இவரின் உருவகங்கள் பிரமாதமானவை.

 

குர் ஆனில் ஓம் உள்ளது என்ற இவரது சொற்பொழிவு முஸ்லீம்கள் வியந்து போற்றிய ஒன்று.

உருதுவில் பெரும் புலமை பெற்ற இவர் ஒரு பெரும் கவிஞரும் கூட.

 

 

ஸ்வாமி விவேகானந்தரை லாகூரில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று விருந்தளித்தவர். கூடவே குட்வின் உள்ளிட்டவரும் அந்த விருந்தில் கலந்து கொண்டனர்,

தனது வீட்டில் இருந்த நூலகத்தை ஸ்வாமிஜிக்குக் காண்பிக்கவே, அவர் வால்ட் விட்மன் எழுதிய “லீவ்ஸ் ஆஃப் கிராஸ்’ புத்தகத்தை அங்கு படித்தார்.

 

இவர் ஸ்வாமி விவேகானந்தருக்கு ஒரு கடிகாரத்தை பரிசாக அளிக்கவே, அதை அவர் சட்டைப் பையிலேயே மாட்டிய ஸ்வாமிஜி, “இதை, நான் இங்கேயே அணிகிறேன்” என்று கூறி பரந்த வேதாந்த கருத்தைச் சொன்ன சம்பவம் உலகப் புகழ் பெற்ற ஒன்று.

 

இந்த மகான் யார்?

*********

 

MySt Rama Tirth fdc

விடை: சுவாமி ராமதீர்த்தர்

–Subham–

எண்ணிய முடிதல் வேண்டும்; நல்லவே எண்ணல் வேண்டும்! (Post No. 2662)

indra in thailand

Compiled by london swaminathan

 

Date: 25 March 2016

 

Post No. 2662

 

 

Time uploaded in London :–  12-10

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Already published in English; Tamil Translation: London swaminathan

 

எண்ணிய முடிதல் வேண்டும்;

நல்லவே எண்ணல் வேண்டும் – மஹா கவி பாரதி

 

வேத மந்திரங்கள், பாரதி பாடல்கள் முதலியவற்றில், ஆக்கபூர்வமான சிந்தனைகள் இருப்பதால் அவைகளைக் கேட்பதாலும், படிப்பதாலும் பலனுண்டு. ‘’பாஸிட்டிவ் திங்கிங்’’- ‘ஒளிமயமான எதிர்காலம்’ என்று சிந்திப்பதும், மகிழ்ச்சியுடன் இருப்பதும் வெற்றியை ஈட்டித் தரும். இதோ ஒரு குட்டிக்கதை!

தமிழாக்கம்- லண்டன் சுவாமிநாதன்

indra

இந்திரன், தேவ லோகத்திலிருந்து, பூமிக்கு வந்தான்; கொஞ்சம் வேடிக்கை பார்க்கத்தான்!

 

ஒரு காட்டின் வழியே செல்லுகையில், தனது தவறுகளுக்காக பிராயச்சித்தம் செய்யும் ஒருவன் ஒரு மரத்தின் அடிப்பகுதியாக மாறிவிட்ட காட்சியைக் கண்டான். அவன் இன்னும் தவம் செய்துகொண்டிருந்தான். இந்திரனைக் கண்டவுடன், நான் முக்தி (விடுதலை) பெற இன்னும் எவ்வளவு காலம் தவம் செய்ய வேண்டும்? என்று சோகமாகக் கேட்டான். உடனே இந்திரன், இன்னும் பத்து ஆண்டுகள் ஆகுமென்றான். அவன், இன்னும் பத்து ஆண்டுகளா? என்று கேட்டான். கேட்ட மாத்திரத்தில் அவன் நரகத்துக்குப் பறந்து போய்விட்டான்.

 

இந்திரன், அதே காட்டில், தொடர்ந்து பயணம் செய்கையில் இன்னுமொரு காட்சியைக் கண்டான். தனது தவறுகளுக்காக வருந்தும் வேறு ஒருவன், ஒரு மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்து ஆடிக் கொண்டிருந்தான். அவனுக்குக் கொஞ்சம் ஆன்மீக தாகம் இருந்தது. இந்திரனைக் கண்டவுடன், நான் முக்தி (விடுதலை) பெற இன்னும் எவ்வளவு காலம் தவம் செய்ய வேண்டும்? என்று மகிழ்ச்சியுடன் கேட்டான்.

 

இன்னும் ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தால் விடுதலை கிடைக்கும் என்று இந்திரன் சொன்னான்.

பூ! வெறும் ஆயிரம் ஆண்டுகள்தானா! என்று சொல்லிக்கொண்டே தாவிக்குதித்து மரத்தைச் சுற்றினான். அடுத்த நொடியில் அவன் ராக்கெட் வேகத்தில் சுவர்க்கத்துக்குப் போய்விட்டான்.

 

கண்ணன் கூறுவான்:–

உத்தரேதாத்மனாத்மானம் நாத்மானமவசாதயேத்

ஆத்மைவ ஹ்யாத்மனோ பந்துராத்மைவ ரிபுராத்மன (பகவத் கீதை 6-5)

தன்னைத்தானே ஒருவன் உயர்த்திக்கொள்ள வேண்டும்; தன்னையே தாழ்த்திக்கொள்ளக் கூடாது; நிச்சயமாக தானே ஒருவனுக்கு உறவினன்; தானே ஒருவனுக்குப் பகைவன் (பகவத் கீதை 6-5).

–சுபம்-

கடலில் பெய்த மழையும் புத்தகத்திலுள்ள அறிவும் வீண்! வீண்! (Post No.2661)

old groom

Compiled by london swaminathan

 

Date: 25 March 2016

 

Post No. 2661

 

 

Time uploaded in London :–  11-10 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Already published in English; Tamil Translation: London swaminathan

சம்ஸ்கிருதத்தில் பல அழகான ஸ்லோகங்கள் உள்ளன. கற்றறிந்த அறிஞர்களும், சான்றோர்களும் பேசிக்கொண்டிருக்கையில், அவைகள் தானானாகப் பொங்கி வரும். இதையே விவேக சிந்தாமணி என்ற, ஆசிரியர் பெயர் தெரியாத, நூலிலும் காண முடியும். இதுகுறித்து நான் ஏற்கனவே எழுதிய ‘பயன் இல்லாத ஏழும், உதவாத எட்டும்’ என்ற கட்டுரையில் காண்க (நவம்பர் 18, 2013). அதில் விவேக சிந்தமணி பாடல் ‘ஆபத்துக்குதவா பிள்ளை’— முதலிய பாடல்களைக் கொடுத்துள்ளேன்.

 

இனி சில சம்ஸ்கிருத பாக்கள்:

நாலு விஷங்கள்:–

அனப்யாச வித்யா- பயன்படுத்தப்பாடாத படிப்பு

அஜீர்ண போஜனம் – செமிக்காத உணவு

தரித்ர சபா- ஏழைகள் சபை

விருத்த தருணீ – வயதான மாப்பிள்ளைக்கு இளம் மணமகள்

அனப்யாஸோ விஷம் வித்யா அஜீர்ணே போஜனம் விஷம்

விஷம் சபா த்ரித்ரஸ்ய வ்ருத்தஸ்ய தருணீ விஷம்

–ஹிதோபதேசம்

Xxx

 

rain sea

வீண்போகும் 4 விஷயங்கள்:—

 

சமுத்ரேஷு வ்ருஷ்டி: – கடலில் பெய்யும் மழை

த்ருப்தஸ்ய போஜனம்- சாப்பிட்டவனுக்குப் போடும் சாப்பாடு

சமர்தஸ்ய தானம் – திறமையுள்ளவனுக்கு கொடுக்கப்படும் தானம்

திவா தீபா – பகலில் ஏற்றப்படும் விளக்கு

வ்ருதா வுருஷ்டி: சமுத்ரேஷு வ்ருதா த்ருப்தஸ்ய போஜனம்

வ்ருதா தானம் சமர்தஸ்ய வ்ருதா தீபோ திவாபி ச

-சுபாஷித ரத்ன பாண்டாகரம் 153-26

Xxx

 

கெட்டதைத் தட்டிக் கேட்காத முதியோர்

வ்ருத்தரஹித சபா- முதியோரில்லா சபை

தர்மாப்ரதிபாதகா வ்ருத்தா – நல்ல குணங்களை எடுத்துரைக்கா முதியோர்

சத்யரஹித தர்ம- உண்மையில்லாத வழிமுறைகள்

சலாப்யுபேதம் சத்யம் – உண்மையை தவறான விஷயங்களுக்குப் பயன்படுத்துவோர்

ந சா சபா யத்ர ந சந்தி வ்ருத்தா ந தே வ்ருத்தா யே ந வதந்தி தர்மம்

நாசௌ தர்மோ யத்ர ந சத்யமஸ்தி ந தத்சத்யம் யச்சலேனாப்யுபேதம்

–விதுரநீதி 3-58

Xxx

 

libraries

பயனற்ற நான்கு விஷயங்கள்:–

பராதீன ஜன்ம – மற்றவர்களை அண்டி வாழும் வாழ்க்கை

ப்ரஸ்த்ரீ சுக- மற்ற பெண்களிடத்தில் துய்க்கும் இன்பம்

பரகேஹே லக்ஷ்மீ –பிறர் வீட்டிலுள்ள செல்வம்

புஸ்தக வித்யா – நூல்களிலுள்ள அறிவு: ஏட்டுச் சுரைக்காய்

பராதீனாம் வ்ருதா ஜன்ம பரஸ்தீஷு வ்ருதா சுகம்

பரகேஹே வ்ருதா லக்ஷ்மீ: வித்யா யா புஸ்தகே வ்ருதா

 

Xxx

பயனிலா முடிவுடைய நான்கு:—

husbad wife

அஜயுத்தம்ருஷிராத்தம் ப்ரபாதே மேகடம்பரம்

தம்பத்யோ கலஹஸ்சைவ பரிணாமே ந கிஞ்சன

அஜயுத்தம் –ஆட்டுச் சண்டை

ரிஷி ஸ்ராத்தம் – ரிஷி முனிவர்களுக்குச் செய்யப்படும் ஸ்ராத்தம்

ப்ரபாதே மேகடம்பரம் – காலையில் இடியுடன் கூடிய மேகம்

தம்பதி கலஹம் – கணவன் –மனைவி சண்டை

 

–சுபம்–

 

அழகு பற்றிய 20 சம்ஸ்கிருத பழமொழிகள் (Post No 2649)

 

 

art of k2

Compiled by london swaminathan

Date: 20 March 2016

Post No. 2649

Time uploaded in London :– 15-59

(Thanks for the Pictures; they are taken from various sources)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

தமிழ் மொழியாக்கம் – லண்டன் சுவாமிநாதன்

 

avudaiyar koil pinna alzaki

1.ஆதரோ ஜாயதே த்ருஷ்டே தேஹினாம் சாரு வஸ்துனி – பாரத் கதா கோச
அழகான பொருட்களைப் பார்க்கையில், மரியாதை கொடுக்கத் தோன்றுகிறது

2.இந்தோ: களங்கோ தோஷஸ்ச தஸ்ய யேனைஷ நிர்மித: -கதா சரித் சாகரம்
சந்திரனிலுள்ள களங்கத்திற்கு இறைவனே பொறுப்பு; நிலவு அல்ல.

3.கிமிவ ஹி மதுராணாம் மண்டனம் ந அக்ருதீனாம் – சாகுந்தலம் 1-18
அழகான உருவத்துக்கு எதுதான் அழகைச் சேர்க்காது?

4.குரூபா ரூப சிந்தகா: – பரத சங்க்ரஹ
அழகில்லாதவர்கள்தான், அழகைப் பற்றிக் கவலைப்படுவார்கள்.

5.க்ஷணே க்ஷணே யன்னவதாமுபைதி ததேவ ரூபம் ரமணீயதாயா: – சிசுபாலவதம் 4-17
ஒவ்வொரு நொடியிலும் புதுமையாக இருப்பதே, அழகின் இலக்கணம்.

 

2lotus bloom

 

6.ந ரூபம் ஆஹார்யம் அபேக்ஷதே குணம் – கிராதர்ஜுனீயம் 4-23
அழகானவருக்கு, வேறு அணிகலன்களே தேவை இல்லை.
7.ந ஷட்பத ஸ்ரேணிபிர் ஏவ பங்கஜம் சசைவலாசங்கமபி ப்ரகாசதே – குமாரசம்பவம் 5-9
சேற்றில் முளைத்த செந்தாமரைக்கு, அதைச் சுற்றி வட்டமிடும், தேனீக்கள் மட்டும்தாம் அழகு சேர்க்கிறது என்று எண்ணவேண்டாம். அதைச் சுற்றியுள்ள நீர்த்தாவரங்களும் அழகு செய்யும்.

8.ந ஹி கமனீயானி குசுமானி சிரம் ரத்யாயாம் திஷ்டந்தி.
அழகான மலர்கள், சாலை ஓரத்தில் நீண்ட நேரம் நிலைத்து நிற்கா.

9.ந ஹ்யாக்ருதி:சுசத்ருசம் விஜஹாதி வ்ருத்தம் – மிருச்சகடிகம் 9-16
உடற்கட்டைப் போல கவரக்கூடியது வேறு எதுவுமில்லை.

10.யதேவ ரோசதே யஸ்மை பவேத தத் தஸ்ய சுந்தரம் – ஹிதோபதேசம் 2-53
யாருக்கு எது மிகவும் பிடிக்குமோ, அதுவே அவருக்கு அழகாகத் தோன்றும்.
தமிழ் மொழியாக்கம் – லண்டன் சுவாமிநாதன்

 

bindi, India times

11.யா யஸ்யாபிமதா நாரீ சுரூபா தஸ்ய சா பவேத் –கதா சரித் சாகரம்
எல்லா மனைவியரும், அவரவர் கணவரின் கண்களில் மிக அழகானவர்.

12.யா யஸ்யாபிமதா லோகே சா தஸ்ய அதிக ரூபிணீ – பாரத் கத மஞ்சரி
ஒருத்தியை ஒருவன் விரும்பிவிட்டால், அவளே அவனுக்கு பூலோக ரம்பை!

13.ரம்யாணாம் விக்ருதிபிரபி ஸ்ரியந்தநோதி – கிராதர்ஜுனீயம் 7-5
அழகான எதுவும் நிலை பிறண்டாலும் அழகாக இருக்கும். (அழகான பெண்ணின் கேசம், காற்றில் பறந்து கலைந்தாலும் அதுவும் அழகுதானே!).

14.வினா கண்டாடணத்காரம் கஜோ கச்சன்ன சோபதே.
ஜில், ஜில் மணி இல்லாவிடில், யானைக்கும் அழகு குறைவுதான்.

15.சர்வ ஜன மனோபிராமம் கலு சௌபாக்யம் நாம – ஸ்வப்னவாசவதத்த
ஒருவரிடம் செல்வம் இருக்கும்வரை, எல்லோருக்கும் மகிழ்ச்சி கிடைக்கும்.

 

elephant blaring 2

16.சர்வ அவஸ்தாசு சாருதா சோபாம் புஷ்யதி – மாளவிகாக்னிமித்ர
அழகு, எப்போதும் வசீகரிக்கும்

17.சர்வாஸ்வவஸ்தாசு ரமணீயத்வம் ஆக்ருதி விசேஷானாம் – சாகுந்தலம்
அழகான உடற்கட்டுடையோர், எப்போதும் வசீகரிப்பர்.

18.சௌந்தர்யம் கஸ்ய ந ப்ரியம்- கஹாவத்ரனாகர்
அழகிற்கு மயங்காதோர் உண்டோ!

19.ஸ்வபாவ ரமணீயானி மண்டிதான்யதிரமணீயானி பவந்தி – அவிமாரக:
அழகான ஒருவருக்கு அலங்காரம் செய்தால், மேலும் அழகு மிளிரும்.

20.ஸ்வபாவ சுந்தரம் வஸ்து ந சம்ஸ்காரம் அபேக்ஷதே – த்ருஷ்டாந்த சதக
இயற்கையில் அழகான ஒரு பொருளுக்கு, மேலும் அணிகலனோ, அலங்காரமோ தேவை இல்லை.
தமிழ் மொழியாக்கம் – லண்டன் சுவாமிநாதன்

 

IMG_4358

-சுபம்-

 

 

 

கொடுங்கோலன் கஜினி முகமதுவுக்கு ஆந்தைகள் கற்பித்த பாடம் (Post 2636)

owl story

Compiled by london swaminathan

 

Date: 16 March 2016

 

Post No. 2636

 

Time uploaded in London :–  காலை 5-56

 

(Thanks for the Pictures; they are taken from various sources)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

இந்தியாவை ஆண்ட வெளிநாட்டினர் செய்த அக்கிரமங்களை மஹா கவி பாரதி ஒரே வரியில் சொல்லிவிட்டார்: “ ஆயிரம் ஆண்டு அன்பிலா அந்நியர் ஆட்சி” என்று. அப்படிப்பட்ட அன்பில்லாத கொடுங்கோலர்களில் மிகக் கொடியவர்கள் கஜினி முகமதுவும் அவுரங்கசீப்பும் ஆவர். இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடித்ததோடு நிற்காமல், 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான சோமநாதபுரத்தில் இருந்த 15 அடி உயர சிவலிங்கத்தை சுக்கு நூறாக உடைத்த மதவெறியன் கஜினி முகமது. அவன்கூட ஆந்தைகளிடம் பாடம் கற்று அடங்கி ஒடுங்கிய ஒரு சம்பவம் இதோ:-

 

கஜினி நகருக்கு மேற்கே தொலைதூரத்திலுள்ள கிராமங்களை முகமதுவின் படை வீரர்கள் அழித்து நாசமாக்கி வந்தனர். ஆடுமாடுகளைக் கொள்ளையடிப்பது, பயிர்பச்சைகளை அழிப்பது அகியவற்றில் ஈடுபட்டதால் கிராம மக்கள் ஓடி ஒளிந்தனர். கிராமங்கள் எல்லாம் பாழடைந்த திடல்களாகிவிட்டன.

 

கஜினி முகமதுவிடம் மந்திரியாக வேலை பார்த்த ஒருவருக்கு தெய்வ பக்தி இருந்தது. “இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பாரிலானும் கெடும்” என்பது வள்ளுவன் குறள். ஆகையால் தன் கடமை கஜினி முகமதுவிடம் சொல்லி அட்டூழியங்களை நிறுத்துவதே என்று உறுதி பூண்டார். அவருக்கு பீர் என்ற முஸ்லீம் சந்யாசி பறவைகளின் பாஷையைக் கற்பித்திருந்தார். இது விஷயம், கஜினி முகமதுவுக்கும் தெரியும். ஒரு நாள் இருவரும் வேட்டையாடப் போனார்கள்.

 

இருவரும் மாலையில் திரும்பிவருகையில் ஒரு மரத்தின் மீது இரண்டு ஆந்தைகள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தன. கஜினி முகமது, குதிரைகளை நிறுத்தச் சொல்லி, மந்திரியிடம் சொன்னார்:

உனக்குத்தான் பறவைகளின் மொழி தெரியுமே! அவைகள் என்ன பேசிக்கொள்கின்றன? என்று கேட்டார்.

அமைச்சரும் அதை உற்றுக் கேட்பதுபோல கொஞ்ச நேரம் பாவனை செய்தார். பின்னர் வந்து, “அரசே அவைகள் பேசுவதைச் சொல்வதற்குத் தயக்கமாக இருக்கிறது. அது உங்களுக்கு உகந்ததல்ல” என்றார்.

கஜினி முகமது அதைச் சொல்லும்படி வலியுறுத்தவே, “நான் சொல்கிறேன். ஆனால் கோபத்தில் என்னைக் கொன்று விடக்கூடாது” என்று சொன்னார். கஜினி முகமதுவும் ஒரு தீங்கும் வராது என்று உறுதி கூறியவுடன் அமைச்சர் (மந்திரி) சொன்னார்:

அந்த ஆந்தைகளில் ஒன்று ஆண், மற்றொன்று பெண். அவைகள் இரண்டும் கல்யாணப் பேச்சில் ஈடுபட்டுள்ளன. ஒரு ஆந்தையின் பையனை மற்றொரு ஆந்தையின் பெண்ணுக்கு மணம் முடிப்பதைப் பற்றி பேசுகையில் ஆணின் தந்தை (ஆந்தை) சொன்னது: “இதோ பார் உன் பெண்ணை என் பையனுக்குத் திருமணம் செய்யத் தயார்தான். ஆனால் பெண்ணுடன் எனக்கு 50 பாழான கிராமங்களைச் சீதனமாக அனுப்ப வேண்டும்” என்றது. அதற்குப் பெண்ணின் தாயார் “நமது சுல்தான் ஆட்சியில் இருக்கும் வரை பாழாய்ப்போகும் கிராமங்களுக்கு என்ன குறை? 50 என்ன 500 கிராமங்களை வேண்டுமானாலும் தருவேன்” என்றது

கஜினி முகமது இதைக் கேட்டுவிட்டு வெட்கித் தலை குனிந்தான்.

-சுபம்-

ஜீரண சக்தி அதிகரிக்க 5 விஷயங்கள்!

agastyanepal-carole-r-bolon

Written by london swaminathan

 

Date: 15 March 2016

 

Post No. 2633

 

Time uploaded in London :–  9-36

 

(Thanks for the Pictures; they are taken from various sources)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

எச்சரிக்கை: இது மருத்துவக் கட்டுரை அல்ல; ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை!

saturn

சம்ஸ்கிருதத்தில் பல அழகான ஸ்லோகங்கள் உள்ளன. அவைகளில் மூன்று பாக்களில் எந்தெந்த ஐந்து விசயங்களை நினைவிற் கொள்ளவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளன. அவைகளில் ஜீரண சக்திக்கான ஐந்து பேர்கள் விநோதமாகவுள்ளன. அதில் ஒன்று சனிக் கிரகம். அட, ஜீரண சக்திக்கு அஷ்ட சூர்ணம் சாப்பிடு, த்ரிபலா சூர்ணம் சாப்பிடு என்று சொல்லாமல் கீழ்கண்ட ஐந்து பேரை நினை என்று சொல்லுகிறது அந்த செய்யுள்:

 

அகஸ்திம் கும்பகர்ணம் ச சனிம்  ச வடவானலம்

ஆஹாரபரிபாகார்த்தம் ஸ்மராமி ச வ்ருகோதரம்

அகஸ்தியர், கும்பகர்ணன், சனி, வடவைத் தீ, பீமன் (வ்ருகோதரன்) ஆகிய ஐந்து பேரை நினைத்தால் ஜீரணம் எளிதாகும் என்கிறது இந்தப் பா!

அகஸ்தியர்: இல்வலன் என்ற அசுரன் எல்லோரையும் கொல்லப் பயன்படுத்தும் தந்திரத்தை அகஸ்தியரிடமும் பயன்படுத்த முயன்றபோது அவர் “வாதாபி ஜீர்ணோ பவ” என்று சொல்லி வயிற்றைத் தடவவே, இல்வலனின் சகோதரனான வாதாபி ஜீர்ணமாகி விடுகிறான் என்பது புராணக் கதை. அகஸ்தியர் கடலைக் குடித்தார், அகஸ்தியர் கமண்டலத்திலிருந்து காவிரி வந்தது, அகஸ்தியர் விந்தியமலையை கர்வபங்கம் செய்தார், அகஸ்தியரை மக்கட் தொகைப் பெருக்கத்தால் சிவபெருமான் தெற்கே அனுப்பிவைத்தார் என்பன எல்லாம் விஞ்ஞான பூர்வ அல்லது வரலாற்று ரீதியிலான விஷயங்கள்- வெறும் புராணக் கதைகள் அல்ல என்பதை முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் விளக்கிவிட்டேன்.

கும்பகர்ணன்:- ராவணனின் தம்பியான கும்பகர்ணன் ஆறு மாதம் சாப்பிட்டுவிட்டு ஆறுமாதம் நிம்மதியாகத் தூங்குவான். அவனுக்கு ஒரு உடற்  பிரச்சனையும் ஏற்படவில்லை. நல்ல ஜீரண சக்த்திக்கு நிம்மதியான உறக்கம் தேவை!

 

வடவைத்தீ: கடலுக்கடியில் சீறும் எரிமலைகளால் சுனாமி போன்ற ஆபத்துகளும், பெரும் தீயும் உண்டாகி பேரழிவை உண்டாக்குவதை நாம் அறிவோம். ஆந்திரத்தில் ஏற்பட்ட புயலில் மர்மத் தீ உண்டானது பற்றியும் பல ஆயிரம் பேர் உயிரிழந்தது பற்றியும் ஏற்கனவே எழுதியுள்ளேன்.

பீமன்/வ்ருகோதரன்: பீமனின் அசுரப் பசி உலகிற்கே தெரிந்ததுதான். பகாசுரனுக்காக பல வண்டிகளில்  வைக்கப்பட்டிருந்த உணவை ஒரே நேரத்தில் சாப்பிட்டவன் அவன். ஒரு அஜீரணக் கோளாறு அவனுக்கு ஏற்பட்டதில்லை.

 

சனி: இந்தப் பட்டியலில் மிகவும் புரிந்துகொள்ள கடினமானது சனிக் கிரகம் தான். அதற்கும் ஜீரணத்துக்கும் என்ன தொடர்பு என்று வியப்போம். சனிக் கிரஹம், உடலுறுப்புகளில் பாதத்துக்கும் பெருங்குடலுக்கும் அதிபதி. உலோகங்களில் இரும்புக்கு அதிபதி. இரும்புச் சத்து ரத்தத்தில் குறைந்தால் எல்லா உறுப்புகளும் ஜீரண சக்தியும் பாதிக்கப்படும். ஹீமோக்ளோபின் என்ற இரத்தச் சிவப்பணுக்களுக்கு இரும்பு தேவை என்பதை எனது நண்பர் கல்யாண குருக்கள் சுட்டிக்காட்டினார். மேலும் சனிக் கிரஹமே ஆயுள்காரகன். ஒருவன் இறப்பதும், இருப்பதும் சனியின் வேலையே.ஆக சனிக்கும் ஜீரணத்துகுமுள்ள தொடர்பு சரியே!

 

xxxx

 

indonesia-gifts-saras

வேதக் கல்வியில் முன்னேற கீழ்கண்ட 5 பேரை நினைவு கொள்வது அவசியம்:-

கணநாத சரஸ்வதீ ரவிசுக்ர ப்ருஹஸ்பதீன்

பஞ்சைதானி ஸ்மரேந்நித்யம்  வேத வாணீப்ரவ்ருத்தயே

 

கணநாதன் என்பது முதற்கடவுளான கணபதியையும், சிவனையும் குறிக்கும். சரஸ்வதி, கல்விக்கு அதிதேவதை. வியாழனும் (ப்ருஹஸ்பதி), வெள்ளியும் (சுக்ரன்) தேவ, அசுர கணங்களுக்கு ஆசிரியர்கள். ஆக  இவர்களை நினைப்பது வேதம் கற்க உதவும் என்பதில் பொருளுண்டு.

 

Xxx

 

india00015

தினமும் நினைக்க வேண்டிய ஐவர்:

அம்மா, அப்பா, ஆசிரியர், தாய்நாடு, தர்மத்தை உபதேசிக்கும் குரு (வியாசர் போன்றோர் அல்லது ஒவ்வொருவருக்கும் மந்திரம் முதலியன கற்பிக்கும் ஆசிரியர்). இதை விளக்கத் தேவையே இல்லை. இது ஒவ்வொரு இந்துவின் ரத்தத்திலும் ஊறிய கருத்து!

ஜனனீ ஜன்மதாதா ச சுவித்யாம்  ப்ரததாதி ய:

ராஷ்ட்ரம் தர்மோபதேஷ்டா ச பஞ்சகம் சந்ததம் ஸ்மரேத்

 

–சுபம்–

 

 

 

கர்நாடக இசையில் கங்கை நதியும் கூவம் நதியும்!(Post No. 2600)

Tiger_new

Compiled by london swaminathan
Date: 5 March,2016

 

Post No. 2600

 

Time uploaded in London :–  11-03 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

tiger you tube

டைகர் வரதாச்சாரியார் பிரபல பாடகர். இவரை ஒரு கச்சேரிக்கு அழைத்திருந்தனர். பாடகரோ கற்றுக்குட்டி; அவருக்கு வயலின் வாசித்தவரோ மஹா மேதை; இசைத்துறையில் ‘ பழமும் தின்னு கொட்டையும் போட்டவர்’! அல்லது கரைத்துக் குடித்தவர் என்று சொல்லலாம். கச்சேரி முடிந்தது. “இப்பொழுது டைகர் அவர்கள், ஒரு சில சொற்கள் சொல்லுவார்” என்று சொல்லி அவரைப் பேச அழைத்தனர். எப்பொழுதும் சுடு சொற்களைப் பெய்தறியாதவர் அவர். ஆனால், அன்று பாடியவர் அவர் காதில் கொஞ்சம் நாராசத்தைப் பாய்ச்சிவிட்டார் போலும்!

 

எல்லோரையும் பொதுப்படையாக வரிசையாகப் பாராட்டினார். இறுதியில் சொன்னார். “வயலின் வாசித்தவர் பற்றி நான் என்ன சொல்ல இருக்கிறது? நமது வயலின் மேதை ஒரு பெருங்கடல்’. ஆழ்ந்த அறிவும் அனுபவமும் உடையவர். பெருங்கடலில் தூய கங்கை நதி போன்ற நதிகளும், சாக்கடை மணம் வீசும் கூவம் போன்ற நதிகளும் சங்கமம் ஆவது இயல்புதானே!”

 

(சென்னை வழியாக ஓடும் கூவம் நதி, சாக்கடைக் கலப்பினால் நாற்றம் அடிக்கும் நதியாக இன்று ஓடுகிறது.)

Xxx

purandara stamp

புரந்தரதாசருக்கு சவுக்கடி!

கர்நாடக சங்கீதத்தின் பிதாமஹர் புரந்தரதாசருக்கு பூர்வ ஜன்ம கர்ம வினை பாக்கியிருந்தது. அதைத் தீர்க்க, அவருக்கு கடவுள் ஒரு தண்டனை கொடுத்தார்.

 

பண்டரீபுரத்தில் கோவில் கொண்டுள்ள விட்டலராயன் மீது அபார பக்தி பூண்டவர் நமது புரந்தரர். அதே ஊரில் கோவிலில் ஆடல், பாடலுக்காக நியமிக்கப்பட்ட தேவதாசிக்கும் ஸ்ரீ விட்டல் மீது அலாதி பக்தி. அது மட்டுமல்ல. புரந்தரரின் பாடல்கள், க்ருதிகள் மீதும் பேரன்பு, பெருங்காதல் கொண்டவர்.

 

ஒரு நாள் இரவு, கடவுளே புரந்தரதாசர் வேடம் கொண்டு , அந்த தேவதாசி வீட்டுக்குப் போய் ஆடலையும் பாடலையும் ரசிக்க வந்ததாகக் கூறினார். அந்தப் பெண்மணிக்குப் பேரானந்தம். ‘பழம் நழுவில் பாலில் விழுந்ததே’ என்று எண்ணி வியந்தார். ஆடினார், பாடினார், மெய்மறந்து போனார். புராந்தரர் வடிவத்தில் வந்த விட்டல், போவதற்கு முன் ஒரு கங்கணத்தை (காப்பு) பரிசுப் பொருளாகக் கொடுத்துவிட்டுச் சென்றார்.

 

மறு நாள் பண்டரீபுர விட்டல் சிலையின் மீது இருந்த கங்கணத்தைக் காணவில்லை. அது தேவதாசியிடம் இருப்பதும் தெரியவந்தது. செய்தி மெதுவாகப் பரவியது. புரந்தரர்தான் இரவில், தேவதாசி வீட்டுக்குப் போய் அதை அவரிடம் கொடுத்தார் என்று எல்லோரும் சொல்லவே புரந்தரர் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டார். அவர் எவ்வளவோ மறுப்புச் சொல்லியும் தேவதாசியின் வாக்குமூலத்தைக் கொண்டு அவருக்கு சவுக்கடி வழங்கப்பட்டது. அவரை கோவில் வாசலிலுள்ள கம்பத்தில் கட்டி வைத்து சவுக்கடி கொடுத்தனர். திடீரென்று கோவிலின் கர்ப்பக்கிரஹத்திலிருந்து ஒரு அசரீரி கேட்டது. இறைவன், தானே புரந்தரதாசர் வடிவத்தில் சென்று ஆடலையும் பாடலையும் ரசித்ததாகவும் இந்த அவப்பெயரை புரந்தரர் மீது ஏற்றி அவரை சவுக்கடி பெற வைத்ததற்கு அவர் பூர்வ ஜன்ம வினையே காரணமென்றும் சொல்லியது. பாக்கியிருந்த கர்ம வினையைத் தீர்த்த புரந்தரதாசர்,

 

 

இன்று வரை நம் நினைவில் நீங்கா இடம் பெற்று நம்மையும் புனிதப்படுத்தி வருகிறார். அது மட்டுமல்ல. அவரை எந்தக் கம்பத்தில் கட்டிவைத்து அடித்தார்களோ, அந்தக் கம்பத்துக்கு தாசர் கம்பம் என்று பெயரிட்டு இன்று வரை பக்தர்கள் வலம் வந்து வழிபடுகின்றனர். பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும். புரந்தரர் கட்டப்பட்ட கல்லும் புனிதம் பெறும்!!

வாழ்க புரந்தரர் நாமம்!

 

Source: Facets of Indian Culture by R Srinivasan, B V Bhavan Publication 1990); தமிழாக்கம்: லண்டன் சுவாமிநாதன்

 

My previous articles on music:- 

Ganges and Coovam Rivers in Carnatic Music! (Post No.2597) 4-3-2016

Mystic No.7 in Music, Post No.977, 13-4-14

Musician who pledged a Raga, Post no.1074, 30-5-2014
True Art is Never Made to Order, post No.1066, 26-5-14

Acoustic Marvel of Madurai Temple 13-5-13

Superstition in the World of Music 12-4-14 (Post No.975)

Musical Pillars in Hindu Temples

Interesting Anecdotes from the World of Music (29 May 2014;Post No.1072)

Saint who went to Heaven with a Flute in Hand (16 April 14,Post No 983)

How did Rare Indian Animal Asunam become extinct? (15 April 14,Post No 981)

Rain Miracles: Rain by Fire and Music (7 January 2012)

மழை அற்புதங்கள் (7 ஜனவரி 2012)

இசைத் தமிழ் அதிசயங்கள் 31-1-2013

சங்கீதம் தோன்றிய வரலாறு- ஒரு புராணக் கதை 13-4-14 (976)

சப்தம் கேட்டால் இறந்துவிடும் அசுணமா? 15-4-14 (980)

கையில் புல்லாங்குழலுடன் சுவர்க்கத்துக்குப் போன மனிதர் 16-4-14 (982)

ஸ்ரீராமர் மீது முத்துசுவாமி தீட்சிதர் கிருதிகள் 8-4-14 (963)

-subham-

பஞ்ச மாபாதகம், 5 கர்ம சண்டாளர்கள், 5 நடைப் பிணங்கள் (Post No. 2599)

dussehra-16

A Kid scared while A artist dressedup at Ravana enjoying with Spectators during Dussehra celebrations in Sector 46 of Chandigarh on Thursday, October 22 2015. Express Photo by Kamleshwar Singh

Compiled by london swaminathan

Date: 5 March,2016

 

Post No. 2599

 

Time uploaded in London :–  7-59 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

Already published in English; source:Encyclopaedia of Numeralas, Volume 1, The Kuppusami Sastri research Institute,Chennai 600 004, Year 2011; தமிழாக்கம்- லண்டன் சுவாமிநாதன்.

 

முதல் 4 நேற்று வெளியிடப்பட்டது.

 

5.பஞ்ச நம்பக்கூடாதவர்

ஜாமாத்தா க்ருஷ்ணசர்பஸ்ச பாவகோ துர்ஜனஸ்ததா

விஸ்வாசோ நைவ கர்தவ்ய: பஞ்சமோ பகினீசுத:

ஜாமாத்தா- மாப்பிள்ளை/மருமகன்

க்ருஷ்ண சர்ப- நல்ல பாம்பு

பாவக: – தீ

துர்ஜன – கெட்டவர்கள்

பகினீ சுத: – சகோதரி மகன்

 

6.பஞ்ச மாபாதகம்

அக்னிதோ கரதஸ்சைவ சஸ்த்ரபாணி: தனாபஹ:

க்ஷேத்ரதாராபர்ஹதா ச பஞ்சைதே ஆததாயின:

 

அக்னிதா- மற்றவன் சொத்துக்கு தீ வைப்பவன்

கரத-மற்றவர்களுக்கு விஷம் வைப்பவன்

சஸ்த்ரபாணி- ஆயுதமில்லாதவனைக் கொல்பவன்

தனாபஹ:- மற்றவன் பணத்தைத் திருடுபவன்

க்ஷேத்ரதராபஹர்தா- மற்றவன் மனைவியை அபஹரிப்பவன்

 

மனுவும் (11-54) இது பற்றிக் கூறுகிறார்:-

பிரமஹத்யா சுராபானம் அஸ்தேயம் குர்வங்கனாகம:

மஹந்தி பாதகான்யாஹுஸ்த சம்சர்கி ச பஞ்சம:

பிரம்மஹத்ய- பிராமணனைக் கொல்லுதல்

சுராபானம்- மது பானம் அருந்தல்

ஸ்தேயம்- திருடல்

குர்வங்க நாகம:- குருவின் மனையிடம் தவறாக நடத்தல்

சம்சர்கி- மெற்கண்ட நாலு பேருடன் சஹவாசம்

 

7.பஞ்சநடைப்பிணம்

ஜீவந்தோபி ம்ருத: பஞ்ச ஸ்ரூயந்தே கில பாரதே

தரித்ரோ, வ்யாதிதோமூர்க: ப்ரவாஸீ நித்யசேவக:

தரித்ர – ஏழை

வ்யாதித: – நோயாளி

மூர்க: – முட்டாள்

ப்ரவாஸீ- வெளிநாட்டில் வசிப்பவன்

நித்யசேவக: – வாழ்நாள் முழுதும் வேலையாளாக இருப்பவன்

 

8.பஞ்சக்லேசம் (ஐவகைக் குறைகள்)

அவித்யா அஸ்மிதா ராக த்வேஷ அபிநிவேசா: பஞ்ச க்லேசா: (யோக சூத்ரம் 2-3)

அவித்யா- அறியாமை/ கல்லாமை

அஸ்மிதா – அகம்பாவம்

ராக – ஆசை

த்வேஷம் – வெறுப்பு

அபிநிவேச – எப்படியாவது உயிர்வாழவேண்டும்  என்ற எண்ணம்

anti god poster

9.பஞ்ச கர்மசண்டாளர்கள்

(செய்கையினால் சண்டாளன் நிலையை அடைபவன்)

நாஸ்திக: பிசுனஸ்சைவ க்ருதக்னோ தீர்கதோஷ:

சத்வார:கர்மசண்டாளா ஜன்மஸ்சாபி பஞ்சம:

நாஸ்திக: – கடவுள் நம்பிக்கையற்றவன்

பிசுன: – பிசிநாரி/கெட்டவன்

க்ருதக்ன: – நன்றிகெட்டவன்

தீர்க தோஷக: -பாபி (பாவாத்மா)

ஜன்மத: – பிறப்பினால் சண்டாளன்

 

–சுபம்–