நோஞ்சான் குதிரை மூலம் லிங்கன் சொன்ன புத்திமதி! (Post No.3367)

Written by London Swaminathan

 

Date: 18 November 2016

 

Time uploaded in London: 9-38 am

 

Post No.3367

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

 

அமெரிக்காவின் ஜனாதிபதி ஆவதற்கு முன் ஆப்ரஹாம் லிங்கன் வக்கீல் தொழில் செய்துவந்தார். ஒரு நாள் வயதான, எலும்பும் தோலுமான தனது நோஞ்சான் குதிரை மீது லூயிஸ்டன் கோர்ட்டுக்குப் பயணமானார்.

 

அந்தக் குதிரை தெனாலிராமன் குதிரை போன்றது. முன்னே இரண்டு பேர் இழுக்க, பின்னே இரண்டு பேர் தள்ள, பத்து தப்பிடி நகரும். அவ்வளவுதான்.

 

அவர் குதிரை ஒரு வயக்காட்டு வழியே போன போது நடந்த சம்பாஷணை:-

 

ஏய் அபி (Abraham Lincoln) ! என்ன லூயிஸ்டன் கோர்ட்டுக்குப் போறியா?

 

ஆமாம், டாமி மாமா (Uncle Tommy). நீங்க சவுக்கியமா இருக்கீங்களா?

 

ம்ம்ம்ம்ம்……. இருக்கேன்……..

 

என்ன அங்கிள் டாமி? ஏதாவது பிரச்சனையா? இழுத்து…… இழுத்து …….. பேசுறீங்களே

 

இல்ல, நானும் லூயிஸ்டன் கோர்ட்டுக்கு வந்து உன்ன பாக்கறேன்.

 

என்ன மாமா. கோர்ட்டு, கீர்ட்டுன்னு பேசறீங்க !என்ன பிரச்சன?

 

ஒன்னுமில்ல. எல்லாம் நம்ம பக்கத்து நிலம் ஜிம்மிதான் — கொஞ்சம் அத்து மீறி போயிட்டிருக்கான்.

அவன கோர்ட்டுல ஒரு கை பாக்கனும்.

 

மாமா, இருங்க, பொறுங்க. நீங்களும் ஜிம்மியும் எத்தன வருஷம் பக்கத்துல பக்கத்துல வசிக்கிறீங்க.

என்ன ஒரு 25 வருஷம் இருக்கும்னு நினக்கிறேன்

என்ன மாமா இது? 25 வருஷமா சேர்ந்து வசித்துவிட்டு இப்ப கோர்ட் பத்திப் பேசறீங்க.

 

மாமா என் குதிரையை பாருங்க. இதுவும் 10, 15 வருஷமா இருக்கு. எப்படி நடக்குதுன்னு நீங்களே பாருங்க. முன்ன எல்லாம் ஒழுங்காத்தான் போச்சு. இப்ப அது மேல நான் கோபப்படுறேனா. இல்லையே.

 

அவ்வளவுதான்! அதோட “அட்ஜஸ்ட்” பண்ணி போறேன்.

 

நோஞ்சான், நொண்டி என்று தூக்கிப்போட முடியுமா?

 

அப்ப நீ சொல்ற. நானும், உன்னைப் போல பொறுமையாய் அட்ஜஸ்ட பண்ணிட்டு போனும்; வழக்கு வாய்தான்னு வம்பு வேண்டாங்கற.

 

பின்ன? அங்கிள் டாமி,  பழைய குதிரை போல நண்பரையும் பாருங்க.

 

சரீப்பா, அபி, நீ சொல்றதும் சரியாத்தான் படறது.

 

இதைக் கேட்டவுடன் ஆப்ரஹாம் லிங்கனின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

 

கோர்ட்டுக்கு வரும் முன்னரே ஒரு வழக்கைத் தீர்த்துவிட்ட பெருமிதம் அவர் முகத்தில் பளிச்சிட்டது.

அவரது நோஞ்சான் குதிரை முன்னைவிட சிறிது வேகமாக லூயிஸ்டன் நீதிமன்றத்தை நோக்கி நடைபோட்டது!

 

நாய் “வாலால்” கடிக்கட்டுமே!

 

அமெரிக்காவில் லாங் ஐலண்ட் (LONG ISLAND) ராணுவ முகாம் அருகில் ஒரு பெரிய எஸ்டேட் இருந்தது. அங்கே பாதுகாப்புக்காக நல்ல உயர்தர, விலை மதிப்புள்ள நாய்களை பாதுகாப்புக்காக வைத்திருந்தனர். ஒரு நாள், ஒரு நாய் ராணுவ முகாம் பாதுகாவலரைக் (Army Camp Sentry) கடித்துவிட்டது. அவர் கோபத்தால் துப்பாக்கி  சனியனால் (துப்பாக்கி  முனையில் சொருகப்பட்ட கத்தி Bayonet) நாயைக் கொன்றுவிட்டார்.

 

 

நாயின் சொந்தக்காரர் வழக்கு போட்டார். வழக்கு விசாரணை நாளும் வந்தது. நாயின் சொந்தக்காரர் , அந்தக் காவலரை தன்னுடைய நாய் அப்படி ஒன்றும் கடித்துக் குதறிவிடவில்லை என்று நிரூபித்தார்.

 

உடனே நீதிபதி கேட்டார்:

ஏம்பா. உன்னை நாய் ஒன்றும் அப்படிப் பெரிதாக கடிக்கவில்லையே! துப்பாக்கி முனை கத்தியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக அதன் பின்புறப்பகுதியால் (Rifle Butt) அடித்து விரட்டி இருக்கக் கூடாதா?

உடனே அந்தக் காவலர் பளிச்சென்று பதில் தந்தார்”

 

அது சரி கனம் நீதிபதி அவர்களே! அந்த நாயும் முன்பக்கத்தால் கடிக்காமல் அதன் பின்புற வாலால் என்னைக் கடிக்கக்கூடாதா?

 

நீதிபதி  இந்தப் பதிலைக் கேட்டு திகைத்துப் போனார்!

 

–Subham–

சர்வம் சத்யே ப்ரதிஷ்டிதம்; உலகத்தை உண்மை தாங்குகிறது! (Post No.3319)

Written  by London Swaminathan

 

Date: 4  November 2016

 

Time uploaded in London: 13-24

 

Post No.3319

 

 

Pictures are taken from various sources; they are only representational.

 

contact; swami_48@yahoo.com

 

உலகத்தில் இந்தியாவை யாரும் அழிக்க முடியாது; ஏனெனில் அதன் கொள்கை “வாய்மையே வெல்லும்” (சத்யமேவ ஜயதே) என்னும் வேத வாக்கியம் ஆகும். ஒவ்வொரு நாடும் உலகில் ஒரு சின்னத்தையும் வாசகத்தையும் தேர்ந்தெடுத்துள்ளது. இந்தியா உபநிஷத வாக்கியமான “சத்யமேவ ஜயதே” என்ற அருமையான வாக்கியத்தைத் தெரிவு செய்துள்ளது. சத்தியம் என்பது எல்லா மதங்களுக்கும் அப்பாற்பட்டது. வாழ்க்கையில் எல்லோரும் உண்மையைக் கடைப்பிடிக்காவிடில் உலகமே தலை கீழாகிவிடும்; அதாவது யுக முடிவு நெருங்கிவிட்டது என்று பொருள்.

 

உலகில் பாரத நாட்டில் இந்த உண்மையை வலியுறுத்தும் அளவுக்கு வேறு யாரும் வலியுறுத்தவும் இல்லை. பின்பற்றவும் இல்லை.

 

குருவினுடைய வீட்டில் ஐந்து வயது பாலகனைக் கொண்டுபோய் விட்டவுடன் அவர் சொல்லித்தரும் முதல் வாசகம் “சத்யம் வத” (உண்மை பேசு); இரண்டாவது வாசகம் “தர்மம் சர” (அறம் செய்ய விரும்பு). உலகில் எல்லா மதங்களுக்கும் பொருந்தும் அற்புத வேத வாக்கியம் இவை. முதல் மூன்று வருணத்தாரும் இதை குருவினிடத்தில் கற்றனர். நான்காவது வருணத்தினர் தாய் தந்தையிடம் கற்றனர்.

 

மஹாபாரதத்திலும் பாகவதத்திலும் இதே கருத்தை வலியுறுத்தும் சில பாடல்களைக் காண்போம்:–

 

 

பாகவதத்தில்,

சத்யவ்ரதம் சத்யபரம் த்ரிசத்யம் சத்யஸ்ய யோனிம் நிஹிதம் ச சத்யே

சத்யஸ்ய சத்யம்ருத சத்ய நேத்ரம் சத்யாத்மகம் த்வாம் சரணம் ப்ரபன்னா:

–விஷ்ணு பாகவதம் 10-2-26

 

கிருஷ்ணனைப் பார்த்து தேவர்கள் சொன்ன பாடல் இது. இதன் பொருள் என்ன?

உண்மையே உனது உயிர்மூச்சு, உண்மைப் பொருளே, மும்முறை சத்யம்! நீயே உண்மையின் ஊற்று; உண்மையை உண்மையாக்குபவன் நீ; உண்மை எனும் கண்ணே, உண்மை வடிவானவனே, உன்னைச் சரண் அடைகிறோம்.

 

சுருக்கமாகச் சொன்னால் உண்மையே கடவுள்; கடவுளே உண்மை.

 

மஹாபாரதத்தின் சாந்தி பர்வத்தில் 13 நற்குணங்களை பீஷ்மர்  போதிக்கிறார். அதில் ஒன்று சத்யம்.

 

சத்யம் ச சமதா சைவ தமஸ்சைவ ந சம்சய:

அமாத்சர்யம் க்ஷமா சைவ ஹ்ரீஸ்திக்ஷா அனசூயதா

 

த்யாகோ த்யானமதார்யத்வம் த்ருதிஸ்ச சததம் தயா

அஹிம்சா சைவ ராஜேந்த்ர சத்யாகாரார் த்ரயோதச:

 

உண்மை, சமத் தன்மை, புலனடக்கம், தற்பெருமை பாராட்டாமை, மன்னிக்கும் குணம், அடக்கம், பொறுமை, பொறாமையின்மை(அழுக் காறாமை) அமைதியாயிருத்தல், எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பது, இரக்கம், பிறருக்குத் தீங்கு செய்யாமை (அஹிம்சை),  கொடை —

ஆகிய 13 குணங்களும் உண்மையின் வேறு வடிவங்களாகும்.

இன்னோரிடத்தில்

சத்யம் பிரம்ம சநாதனம் (உண்மைதான் கடவுள்)

சர்வம் சத்யே ப்ரதிஷ்டிதம் (எல்லாம் உண்மையில் நிலைபெற்றிருக்கிறது)

 

என்றும் பீஷ்மர் புகல்வார்.

 

இறந்து போன அபிமன்யுவின் குழந்தையை மீண்டும் உயிர்ப்பிக்க கிருஷ்ணன் சொல்லும் வாசகங்கள் உண்மையின் மகத்துவத்தை விளக்கும்:-

 

ஓ உத்தரா! நான் பொய் பேசுவதில்லை ஆகையால் நான் சொல்வது நிச்சயம் நிகழும்; இதோ இந்த தருணத்தில் இக்குழந்தையை உயிர்த்தெழ வைப்பேன்.

 

ஒருக்காலத்திலும் நான் பொய் பேசாதது உண்மையானால், விளையாட்டிற்கும் கூட பொய் சொல்லாதது உண்மை என்றால் இந்தக் குழந்தை உயிர் பிழைக்கட்டும்.

 

எந்தக் காலத்திலும் நான் அர்ஜுனனுடம் சண்டை இடாதது உண்மையானால். அந்த வாய்மையே இக்குழந்தையைக் காப்பாற்றட்டும்.

என்னிடத்தில் உண்மையும் அறமும் எப்போதும் இருக்குமானால் அபிமன்யுவின் இந்த இறந்துபோன குழந்தை மீண்டும் உயிர்பெறட்டும்

(மஹாபரதம் அஸ்வமேத பர்வம்)

The above sloka is from Manu Smrti

இறந்து போன குழந்தையையும் உயிர்த்தெழச் செய்யும் சக்தி வாய்மைக்கு உண்டு!!

 

இதே கருத்தை ராமாயணத்திலும் காணலாம். ராமன் 14 ஆண்டுக் காலத்துக்கு கானகம் சென்றதன் காரணம் தந்தையின் வாக்குறுதி சத்தியமாகட்டும் என்பதற்ககத்தான். அவன் கானகம் செல்ல மறுத்திருந்தால் தசரதனின் இரண்டு வரங்களும் பொய்யாகப் போகும்.

தர்மன் 12+1 ஆண்டு கானகத்தில் விதிப்படி உலவியதும் சத்தியத்தைக் காப்பதற்கே. துரியோயதணனைப் போல அறமற்ற வழிகளைப் பின் பற்றியிருந்தால் மஹாபரதமே இருந்திருக்காது.

 

இந்துக்களின் இரு பெரும் இதிஹாசங்களும் சத்தியத்தை நிலைநாட்ட வந்தவை!

இதிஹாசத்தில் பல இடங்களில் “என் உதடுகள் எந்தப் பொய்யையும் சொன்னதில்லை” என்ற வாசகம் அடிக்கடி வருகிறது.

 

சமுதயத்திலோ, குடும்பத்திலோ ஒருவர்  மற்றவருக்கு உண்மையாக நடப்பதால்தான் அமைதி (சாந்தி) நிலவுகிறது. என்று கணவன் மனைவி இடையே சத்தியம் நீங்குகிறதோ, என்று பெற்றோர்- புதல்வர் இடையே சத்தியம் நீங்குகிறதோ அன்று அமைதி மறைகிறது.

சர்வம் சத்யே ப்ரதிஷ்டிதம்!

–Subahm—

கம்ப ராமாயணப் பொன்மொழிகள் (கிஷ்கிந்தா காண்டம்)(Post No.3301)

om-muruga

 

Compiled  by London Swaminathan

Date: 29 October 2016

Time uploaded in London: 15-28

Post No.3301

Pictures are taken from various sources; thanks

நவம்பர் 2016 காலண்டர் (துன்முகி, ஐப்பசி-கார்த்திகை)

 திருவிழா நாட்கள்:- நவம்பர் 5-கந்த சஷ்டி விரதம்,சூர சம்ஹாரம்; நவம்பர் 14 குருநானக் ஜயந்தி, குழந்தைகள் தினம்; 15 கடைமுக ஸ்நானம்’ ;16 கார்த்திகை மாதப் பிறப்பு, முடவன் முழக்கு, சபரிமலை மாலை அணியும் நாள்; நவம்பர் 22 கால பைரவ அஷ்டமி; நவம்பர் 23 சத்ய சாய்பாபா பிறந்த தினம்

 

அமாவாசை- நவம்பர் 29 , பௌர்ணமி- நவம்பர் 14, ஏகாதசி-11, 25, நவம்பர் முகூர்த்த நாட்கள்-2, 4, 6, 7, 9, 11, 20, 27

 

நவம்பர் 1 செவ்வாய்க்கிழமை

ஆரியம் முதலிய பதினெண் பாடையில்

பூரியர் ஒரு வழிப்புகுந்தது ஆம் என(18 மொழிகளில் தேர்ச்சி பெறாதோர் ஆரவாரம் செய்வது போல பறவைகள் ஒலித்தன)

 

Xxx

நவம்பர் 2 புதன்கிழமை

 

எவ்வம் ஓங்கிய இறப்பொடு பிறப்பு இவை என்ன

கவ்வு மீனொடு முழுகின எழுவன காரண்டம் ( ஜனன-மரண சுழற்சியை மீனுடன் முழுகி எழுந்த காகங்கள் காட்டின)

Xxx

நவம்பர் 3 வியாழக்கிழமை

 

ஒண்ணும் என்னின் அஃதுதவாது உலோவினாரும் உயர்ந்தாரோ (தம்மால் முடியுமானால் ஒரு பொருளை உதவாமல் கருகிமியாக இருப்போர், உயர்ந்தோர் ஆவரோ!)

Xxx

நவம்பர் 4 வெள்ளிக்கிழமை

 

ஒளிப்பாரோடும் உறவுண்டோ (ஒன்றை வைத்துக் கொண்டு, இல்லை என்பாருடன் உறவு உண்டோ)

 

Xxx

நவம்பர் 5 சனிக்கிழமை

 

அன்பெனும் ஆர் அணி பூண்ட தம்பி (அன்பு எனும் பெறுவதற்கு அரிய ஆபரணத்தை அணிந்த தம்பி- இலக்குவன்)

Xxx

 

murugan-arathy-fb

நவம்பர் 6 ஞாயிற்றுக்கிழமை

 

அன்பினுக்கு அவதி இல்லை (அன்புக்கு ஓர் எல்லை இல்லை)

 

Xxx

 

நவம்பர் 7 திங்கட்கிழமை

கவ்வை இன்றாக நுங்கள் வரவு ( உங்கள் வரவு துன்பமில்லாத நல் வரவு ஆகுக)

xxx

நவம்பர் 8 செவ்வாய்க்கிழமை

கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி

சொல்லாலே தோன்றிற்று அன்றே யார்கொல் இச் சொல்லின் செல்வன் (கற்காத கலைகள் இல்லை, கடல் போலப் பரந்த வேதங்கள் அறிவு, இவன் பேச்சில் தெரிகிறது இனிய சொற்களைச் செல்வமாகப் பெற்ற இவன் (இந்த அனுமன்) யார்?)

Xxx

 

நவம்பர் 9 புதன்கிழமை

நடுங்கினர்க்கு அபயம் நல்கும் அதனினும் நல்லது உண்டோ (தம்மைச் சரணடைந்தவர்களுக்கு அஞ்சாதே என்று அருள் செய்வதைக் காட்டிலும் மேம்பட்ட அறமும் உண்டோ)

 

Xxx

நவம்பர் 10 வியாழக்கிழமை

உன்னோடு உற்றவர் எனக்கும் உற்றார் உன்கிளை எனது என் காதல்

சுற்றம் உன்சுற்றம் நீ என் உயிர்த் துணைவன் என்றான் (சுக்ரீவ ன் – ராமன் நட்புறவு ஒப்பந்தம்)

murugan-moustacheorissa

Xxxx

நவம்பர் 11 வெள்ளிக்கிழமை

பிழைத்தனை பாவி உன் பெண்மையால் என்றான் (உன் பெண்மை இயல்பால் நீ இங்கனம் தவறு செய்துவிட்டாய் (வாலி, தன் மனைவியிடம் சொன்னது.)

Xxx

நவம்பர் 12 சனிக்கிழமை

எய்தவர் பெறுவர் என்றால் இணையடி இறைஞ்சி ஏவல்

செய்தவர் பெறுவது ஐயா செப்பல் ஆம் சீர்மைது ஆமோ (ராமா! உன் அம்பு பட்டு இறந்தவர்களும் வீடு பேறு அடைவர் என்றால் உனக்கு குற்றேவல் செய்வர் வீடு பேறு அடைவதை சொல்லவும் வேண்டுமா– வாலி சொன்னது)

Xxxxx

நவம்பர் 13 ஞாயிற்றுக்கிழமை

 

பெற்றாருழைப் பெற்றபயன் பெறும் பெற்றி அல்லால்

அற்றார் நவை என்றலுக்கு ஆகுநர் ஆர்கொல் என்றான்

(குற்றமில்லாதவர் என்று யாரைச் சொல்லமுடியும்? நண்பர்களிடத்தில் பொருந்திய நற்பயனை எடுத்துக்கொள வேண்டும்- லெட்சுமணனிடம் ராமன்)

 

Xxx

நவம்பர் 14 திங்கட்கிழமை

 

மும்மைசால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும்

தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தைத் தானே

இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை இராமன் என்னும்

செம்மைசேர் நாமம் தன்னைக் கண்களின் தெரியக் கண்டான்

 

xxx

நவம்பர் 15 செவ்வாய்க்கிழமை

தீமைதான் பிறரைக் காத்து தான் செய்தால் தீங்கு அன்று ஆமோ (மற்றவர்களைத் தீய செயலிலிருந்து தவிர்த்துவிட்டு, தானே தீமை செய்தால் அது குற்றமற்றதாகிவிடுமோ?)

Xxxx

rk-nagar-muruga

நவம்பர் 16 புதன்கிழமை

மெலியவர் பாலதேயோ ஒழுக்கமும் விருப்பம்தானும்

வலியவர் மெலிவு செய்தால் புகழ் அன்றி வசையும் உண்டோ (ஒழுக்கமும், சிறப்பும் மெலியவரிடத்தில் மட்டுமா?வலியவர் இழிசெயல் செய்தாலும் புகழ்தானோ? ராமன் பற்றி வாலியின் கிண்டல்)

Xxx

நவம்பர் 17 வியாழக்கிழமை

ஏதிலாறும் எளியர் என்றால் அவர் தீது தீர்ப்பது என் சிந்தைக்கு கருத்து அரோ (எளியவரைக் காப்பது என் கருத்து; வாலிக்கு ராமன் பதில்)

Xxx

நவம்பர் 18 வெள்ளிக்கிழமை

 

தக்க இன்ன தகாதன இன்ன என்று

ஒக்க உன்னலர் ஆயின் உயர்ந்துள

மக்களும் விலங்கே மனுவின் நெறி

புக்கவேல் அவ்விலங்கும் புத்தேளிரே (எது சரி, எது சரியில்லை என்று தெரியாத மக்கள் விலங்குகளே; மனு நீதிப்படி நடக்கும் விலங்கும்கூட தேவர்களுக்குச் சமம்)

Xxxx

நவம்பர் 19 சனிக்கிழமை

 

எக்குலத்து யாவர்க்கும் வினையால் வரும் மேன்மையும் கீழ்மையும்

(எந்த ஜாதிக்காரன் ஆனாலும் அவன் செய்யும் செயலால்தான்

உயர்வும் தாழ்வும் வரும் என்பதே மனு நீதி)

 

Xxxx

நவம்பர் 20 ஞாயிற்றுக்கிழமை

நாய் என் நின்ற எம்பால் நவை அற உணரலாமே

தீயன பொறுத்தி என்றான் சிறியன சிந்தியாதான் (நாய் போன்ற என்னைப் போன்றவர்களின் குற்றங்களைப் பொறுத்துக் கொள்வீர்களாக! என்று சிறிய எண்ணம் இல்லாத வாலி, ராமனிடம் வேண்டினான்)

Xxxxx

diwali-drawing-2

நவம்பர் 21 திங்கட்கிழமை

அறைகழல் இராமன் ஆகி அறநெறி நிறுத்த வந்தது (தர்மத்தை நிலைநாட்டவே இந்த இராமாவதாரம் வந்தது– வாலி சொன்னது)

Xxxxx

நவம்பர் 22 செவ்வாய்க்கிழமை

சிறியாரோ உபகாரம் சிந்தியார் ( நீ செய்த பேருதவியை எண்ணிப் பார்க்காத சிறியவனா?)

 

xxx

நவம்பர் 23 புதன்கிழமை

 

தர்மம் பற்றிய தக்கவர்க்கு எலாம்

கருமம் கட்டளை என்றல் கட்டதோ (அறவழியில் செல்வோருக்கு அவரவர் செயல்தான் உரைகல் என்பது கட்டுக்கதை ஆகிவிட்டதா– தாரை புலம்பல்)

Xxxx

நவம்பர் 24 வியாழக்கிழமை

 

புகை உடைத்து என்னின் உண்டு பொங்கு அனலங்கு ( புகை இருந்தால் தீ இருக்கும்)

 

Xxxx

நவம்பர் 25 வெள்ளிக்கிழமை

 

நகையுடை முகத்தை ஆகி இன்னுரை நல்கு நாவால் (முக மலர்ச்சியுடன் இரு; இனிய சொற்களைப் பேசு – சுக்ரீவனுக்கு இராமன் அறிவுரை)

b_id_406817_kawadiyan

xxx

 

நவம்பர் 26 சனிக்கிழமை

 

செய்வன செய்தல் யாண்டும் தீயன சிந்தியாமை

வைவன வந்த போதும் வசையில் இனிய கூறல் (செய்ய வேண்டியதை செய்; எப்போதும் தப்பானவைகளை நினைக்காதே; மற்றவர்கள் திட்டினாலும் இனிய சொற்களைச் சொல்- சுக்ரீவனுக்கு இராமன் அறிவுரை)

 

Xxxxx

நவம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை

 

சிறியர் என்றிகழ்ந்து நோவு செய்வன செய்யல் (வலிமை குன்றியவர் இடத்தில், வருத்தம் தரும் செயலைச் செய்யாதே)

 

Xxxx

நவம்பர் 28 திங்கட்கிழமை

 

மங்கை பொருட்டால் எய்தும் மாந்தர்க்கு மரணம்  (பெண்கள் பிரச்சனைகளில் மரணம் கூட ஏற்படும்)

 

xxxx

 

நவம்பர் 29 செவ்வாய்க்கிழமை

 

தீயன வந்தபோது சுடுதியால் தீமையோரை ( தீயவரைத் தண்டிக்கும்போது எல்லை மீறாதபடி தண்டிக்கவேண்டும்)

 

Xxxx

 

நவம்பர் 30 புதன்கிழமை

 

பாக்கியம் அன்றி என்றும் பாவத்தைப் பற்றலாமோ (செல்வத்துக்குக் காரணமான நல்லவற்றைச் செய்யாமல் வறுமைக்குக் காரணமான தீயவற்றைச் செய்யலாமோ!)

 

—SUBHAM–

 

 

பூர்வ ஜன்மத்தை அறிய முடியும்: மனு சொல்லும் செய்தி (Post No.3295)

manus_code_of_law_a_critical_edition_and

Written by London Swaminathan

 

Date: 27 October 2016

 

Time uploaded in London: 20-37

 

Post No.3295

 

Pictures are taken from various sources; thanks

 

 

மனு தர்ம சாத்திரத்தில் உள்ள அதிசயச் செய்திகளை இது வரை நாலைந்து கட்டுரைகளில் கொடுத்துவிட்டேன்; எல்லாம் என்னுடைய பிளாக்கில் நிரந்தரமாக இடம் பெற்றிருக்கிறது; நிதானமாகப் படியுங்கள். கட்டுரையைக் கண்டு பிடிக்காமல் போனால் எனக்கு ஈ மெயில் e mail அனுப்புங்கள். கட்டுரையின் முகப்பின் என் ஈ மெயில் e mail உள்ளது.

 

‘பூர்வ ஜன்மம் அறியும் உபாயம்’—என்பதை  முதலில் காண்போம்:

 

“நன்னடத்தையும், வேத பாராயணமும், சுய கட்டுப்பாடும் (புலனடக்கம்), அக்னி கார்யமும் உடையோருக்கு தாழ்வு/ வீழ்ச்சி என்பதே வராது (மனு 4-146)

 

“தினமும் வேத பாராயணம், தவம், பிறருக்கு தீங்கு செய்யாமை — ஆகியன இருந்தால் முன் ஜன்மப் பிறவிகளை அறிய முடியும். (4-148)

 

“தினமும் வேத அத்தியயனம் செய்து பூர்வ ஜன்மத்தை அறியும் த்விஜன் (இரு பிறப்பாளன்) நித்திய ஆனந்தம், சதா ஆனந்தம் பெறுவான் (4-149)

 

பூர்வ ஜன்மத்தை அறிதல் பற்றி சுவாமி விவேகாநந்தர் சொன்னதை முன்னர் ஒரு கட்டுரையில் கொடுத்து இருக்கிறேன். அவரும் கூட பூர்வ ஜன்மத்தை தன்னால் அறிய முடியும் என்றும், ஒரு திரைப்படச் சுருள் போல அவை அனைத்தும் நம் உள்ளே சுருட்டி வைக்கப்பட்டுளது என்றும் ஆனால் கடந்த காலத்தை அறிய தனக்கு விருப்பமில்லை என்றும் சொல்லி இருக்கிறார்.

 

பிராமணன் வெங்காயம் சாப்பிடலாமா?

 

“பிராமணர்களைக் கொல்லும் விஷயங்கள்:–வேதத்தைப் படிக்காமல் இருப்பது, ஆசாரத்தைக் கடைப்பிடிக்காமல் இருப்பது, கடமையிலிருந்து தவறுவது, தவறான உணவு வகைகளைச் சாப்பிடுவது- இவையே பிராமணன் மரணம் அடையக் காரணங்கள் (இவை இல்லாவிடில் மரணமில்லாப் பெரு வாழ்வு கிட்டும்) –மனு 5-4

 

“வெங்காயம், வெள்ளைப்பூண்டு, காளான் (MUSHROOMS) வகைகள் ஆகியவற்றை இருபிறப்பாளர்கள் (பிராமண, க்ஷத்ரிய, வைஸ்யர்)  சாப்பிடக்கூடாது. –மனு 5-5

 

“மரத்திலிருந்து வரும் சாறு, கன்று போட்ட பசுவின் பால் ஆகியவற்றையும் சாப்பிடக்கூடாது”  5-6

 

இதன் பிறகு மாமிச வகைகளில் எதைச் சாப்பிடலாம், எதைச் சாப்பிடக்கூடாது என்ற நீண்ட பட்டியலும் உள்ளது. ஆனால் இரு பிறப்பாளர் என்பதால் க்ஷத்ரியர்கள், வைஸ்யர்களுக்காச் சொன்னதாகக் கொள்ளலாம். ஆனால் யாகத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட மாமிசத்தை கடவுளுக்குப் படைத்த பின்னர் சாப்பிடலாம் என்றும் ஐந்தாவது அத்தியாயத்தில் கூறுகிறார்.

 

சங்கத் தமிழ் இலக்கியத்தில் பிராமணர்கள் உணவு பற்றிச் சொல்லுகையில் முழுக்க முழுக்க மரக்கறி உணவுகளே இடம்பெறுகின்றன. நாயும் கோழியும் புக முடியாத தெருக்கள் பிராம ண ர்களின் அக்கிரகாரம் என்றும் சங்கத் தமிழ் இலக்கியம் செப்பும். இதைப் பார்க்கும்போது சங்க காலத்துக்கு நீண்ட நெடுங்காலத்துக்கு முந்தையது மனு தர்ம சாத்திரம் என்று தெரிகிறது.

அகத்தியர் மாமிசம் சாப்பிட்டார்!

“யாகத்திற்காகவும், உயிரே போய்விடும் என்றபொழுது உயிர் வாழ்வதற்காகவும் பறவைகள், காட்டு மிருகங்களை, பிராமணர்கள் சாப்பிடலாம். அகத்தியர் கூட இதைச் செய்தார்” (5-22)

இதை எழுதும் போது ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. என்னுடைய மனைவி வழியில் சொந்தம் உடைய ஒருவர் அடிக்கடி வெளி நாட்டிற்கு அலுவலக விசயமாக வருவார். சனிக்கிழமைகளில் மாலை வரை விரதம் இருப்பார். ஹோட்டல்களில் தங்கினாலும் அமாவாசை தர்ப்பணம் செய்யத் தவறமாட்டார். ஆனால் சந்தியாவந்தனம் முதலியன செய்வதில்லை. ஒரு முறை அவருடன் லண்டனில் Mac Donald மக் டொனால்டில் சாப்பிட நேரிட்டது அவர் Chicken சிக்கன் (கோழி இறைச்சி) ஆர்டர் கொடுக்கப்போனார். உடனே நான் கோபத்துடன் நீங்கள் எப்படி இதைச் செய்யலாம்? என்று கேட்டேன். பின்னர் நீங்கள் செய்யும் உபவாசம், தர்ப்பணம் இவைகளுக்கு எல்லாம் அர்த்தமே இல்லாமல் போய்விடுமே என்றேன். வாக்குவாதம் வலுத்தது. “அகத்தியர் கூட மாமிசம் சாப்பிட்டிருக்கிறாரே” என்று சொன்னார். அப்போது எனக்கு மனுதர்மத்தில் அகத்தியர் பெயர் இருப்பது தெரியாது. ஆனால் இல்வலன் வாதாபி கதையில் அவர் நர மாமிசம் (வாதாபி ஜீர்ணோ பவ: கதை ) சாப்பிட்டது எனக்கு தெரியும்  உடனே அப்படியே அகத்தியர் சாப்பிட்டதாக வைத்துக்கொள்வோம். அகத்தியர் கடலைக் குடித்தது போல் நீங்கள் குடிக்க முடியுமா? வாதாபி ஜீர்ணோ பவ என்று சொல்லி மனிதனை ஜீர்ணம் செய்தாரே அதைப் போலச் செய்ய முடியுமா?  என்று கேட்டேன். நாங்கள் இருவரும் தமிழில் இப்படி சண்டைபோட்டதைப் பார்த்த வெள்ளைக்காரர்கள் எங்களை முறைத்துப் பார்த்தவுடன் வாக்குவாதத்தை நிறுத்திவிட்டு பேசாமல் சாப்பிட்டோம். அதிலிருந்து  அவர் மீதான மதிப்பு போயே      போய்விட்டது.

 

ஆக அகத்தியர் பெயரை மனுதான் சொன்னாரா அல்லது பிற்கால இடைச் செருகலா என்று தெரியாவிட்டாலும் யாராவது மாமிசம் சாப்பிட்டுவிட்டு, அகத்தியர் பெயரைச் சொன்னால் அகத்தியர் செய்த மற்ற  செயலையும் செய்யச் சொல்லுங்கள்!!

–Subham–

பாம்பு மந்திரம்: அதர்வண வேதமும், கம்பனும் காளிதாசனும் (Post No.3264)

snake-nandhu-fb

Research Article by London Swaminathan

 

Date: 18 October 2016

 

Time uploaded in London: 14-59

 

Post No.3264

 

Pictures are taken from various sources; thanks. (Picture is used only for representational purpose; no connection with the current article.)

 

Contact swami_48@yahoo.com

 

snakes-banded-egyptian-cobra

பாம்புகள் மணி மந்திர ஔஷதத்துக்குக் கட்டுப்படும் என்ற நம்பிக்கை வேத காலத்திலிருந்து இருந்து வருகிறது (மணி= இரத்தினக் கற்கள், மந்திரம்= மந்திர உச்சாடனம், ஔஷதம்= மூலிகை, மருந்துகள்).

 

இதைப் புலவர்களும் அடிக்கடி உவமையாகப் பயன் படுத்துவர். கம்பனும் காளிதாசனும் பயன்படுத்தியதால் மக்களிடையே இந்த நம்பிக்கை வேரூன்றி இருக்கிறது.

குயவர் ஜாதியினர், கோயமுத்தூர் பகுதியில் பாம்பு கடித்த ஒருவனைக் காப்பாற்றிய செய்தியை ஆர்தர் மைல்ஸ் என்பவர் குறிப்பிடுகிறார். அந்த ஜாதியைச் சேர்ந்த ஒருவர் ஒரு பழுப்பு நிற பொடியைப் பாம்பு கடித்த இடத்தில் தூவி, விஷத்தை உடம்பிலிருந்து இறக்குவது போல பலவித சைகைகளைச் செய்த சிறிது நேரத்தில் அந்தப் பையன் பாம்பு கடிக்காத மாதிரி நடந்து சென்றான். அதற்கு முன் அவன் கைகள் எல்லாம் மரத்துப் போயிருந்தன் என்கிறார்.

 

 

துர் ஜனங்கள் (Bad people) பற்றி நீதி வெண்பா என்ற நூலில் வரும் பாடல்:

 

துர்ச்சனரும் பாம்புந்  துலையொக்கினும் பாம்பு

துர்ச்சனரையொக்குமோ தோகையே — துர்ச்சனர்தாம்

எந்தவிதத்தாலும் இணங்காரே பாம்புமணி

மந்திரத்தாலே வசம்

 

பொருள்:- மயில் போன்ற பெண்ணே! கீழ் மக்களும் பாம்பும் தீங்கு செய்வதில் தராசுத்தட்டில் சமமாக இருப்பினும், பாம்பானது கீழ் மக்களுக்குச் சமமாகுமோ! ஆகாது ஏனெனில் கீழ் மக்களை என்ன சொன்னாலும் திருத்த முடிவதில்லை. ஆனால் பாம்போ இரத்தினக் கல், மந்திர உச்சாடனங்களுக்கும் கட்டுப்படும்.

snakes-blessed

Christian Priest blesses Snakes

கந்த சஷ்டிக் கவசம் போன்ற கவசங்களைப் படிப்போருக்குத் தெரியும் அதை பக்தியுடன் சொல்லுவோரை விஷமும் ஒன்றும் செய்யாது. இதைக் கவச வரிகளிலேயே காணலாம்.

தேளும் பாம்பும் செய்யான் பூரான்

கடிவிட விஷங்கள் கடித்துயர் அங்கம்

ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க……. (கந்த சஷ்டி கவசம்)

 

அதர்வவேதம் அருளும் ஆனந்த வாழ்வு என்னும் நூலில் கவிமாமணி தமிழ்மாறன் பின்வரும் செய்தியை எழுதியுள்ளார்:

 

“கம்பநாடர் நாகபாசப்பாடலைப் பாடி (கம்ப ராமாயணம்) , பாம்புக்கடி விஷத்தை இறக்கி, தில்லை மூவாயிரர் மகனை உயிர்ப்பித்தார். வைத்தீஸ்வரன் கோயில் ஸ்டேஷன் மாஸ்டர் ஒருவர் பாம்புக்கடி விஷத்தை ஜபம் செய்தே போக்கி வந்துள்ளார்.”

 

கம்பர், வேளாளர்கள் பெருமையைப் பாடும் ஏர்ழுபது நூல் அரங்கேற்றத்துக்கு வந்திருந்த  புதுவைச் சேதிராயன் என்பவன் காலில் பாம்பு கடித்தது. உடனே கம்பர் ஒரு பாட்டுப் பாடவே ஒரு பாம்பு வந்து கடிபட்ட இடத்திலிருந்த விஷத்தை உறிஞ்சியது. அவரும் உயிர்தப்பினார்.

 

தேவாரம் பாடிய மூவரும் இப்படி விஷம் தீர்க்கும் பாடல்களைப் பாடி,  அற்புதங்களைச் செய்ததை நாம் அறிவோம்.

 

 

garuda-snake

அப்பூதி அடிகளாரின் மகனை அரவம் தீண்டியபோது அப்பர் பெருமான் பதிகம் பாடி உயிர்ப்பித்தார்.

 

திருமருகலில் வணிகர் குல மகனைப் பாம்பு தீண்டவே ஞான சம்பந்தர் பதிகம் பாடி உயிர்கொடுத்தார்

 

இப்படி புனித நூல்கள் முழுதும் உயிர்பெற்ற அதிர்ஷ்டசாலிகளின் கதைகளைப் படித்தறியலாம்.

 

பண்டரீபுரத்தில் வாழ்ந்த சுமதி-கமலாகர் என்ற பக்தர்களின் மகனான பத்மாகரை பாம்பு தீண்டி இறந்தபோது, நாமதேவர் துதி பாடி அவனை எழுப்பித்தார்.

 

 

விஷத்தை நீக்கும் இரத்தினக் கற்கள்

மனு தம சாத்திரமும் விஷம் பாதிக்காமல் இருக்க அதற்கான ரத்தினக் கற்களை அணிய வேண்டும் என்கிறது (மனு 7-218)

 

காளிதாசன் சொல்லுகிறான்:- ரகுவம்சம் 2-32

 

திலீபன் மேய்த்த தெய்வீகப் பசுவை சிங்கம் தாக்கியது. உடனே கோபமடைந்த திலீபன் தனது அம்பை எடுக்க கையை பின்னே கொண்டு சென்றான். ஆனால் அக்கை செயலிழந்து மரத்துப் போனது. எப்படி மரத்துப் போனது என்றால் மந்திரத்தாலும் மூலிகை மருந்துகளாலும் கட்டப்பட்டுச் செயலற்றுப் போகும் பாம்பு போல அவனுடைய கைகள் செயலிழந்தன என்கிறான் காளிதாசன் (ரகு வம்சம் 2-32)

 

கம்பன் பாட்டு

ஆரண்ய காண்டம், அயோமுகிப் படலம்

 

நல் மதியார் புகல் மந்திர நாமச்

சொல் மதியா அரவின் கடுகிற்பாள்

தன் மதனோடு தன் வெம்மை தணிந்தாள்

மன்மதன் ஆம் இவன் என்னும் மனத்தாள்

 

பொருள்:-

அந்த அரக்கி அயோமுகி, நல்லறிவு உள்ளவர்கள் சொல்லும் மந்திரங்களுக்கும் தெய்வீகச் சொற்களுக்கும் அடங்காத பாம்பைப் போல, இலக்குமணனைத் தொடந்து வந்தாள். அவன் அழகில் மயங்கி அவன் மன்மதனே என்று எண்ணினாள். அவனை அடைய வேண்டும் என்ற ஆசையால் தனது செருக்கையும் கொடுமையையும் குறைத்துக்கொண்டாள்.

 

(அதாவது பாம்பு கூட மந்திரம் , கவசம் போன்ற பாடல்களுக்கு அடங்கி விடும். ஆனால் அயோமுகியின் காம வெறியில் அவள் அடங்கவில்லை)

3-snakes

சுபாஷித ரத்ன பாண்டாகாரம் என்னும் சம்ஸ்கிருத தனிப்பாடல் தொகுப்பிலும் இவ்விஷயம் உள்ளது:-

 

க்வசித் சர்போபி மித்ரத்வமாயாத் நைவ கல: க்வசித்

 

 

அதர்வண வேத ரகசியங்கள்

 

அதர்வண வேதத்தின் ஆறாவது காண்டத்தில் பாம்பு விஷத்தை இறக்கும் மந்திரம் உள்ளது:-

 

“சூரியனுக்கு பிரபஞ்சத்தின் ரஹசியங்கள் தெரியும். அது போல எனக்கு பாம்புகள் தோன்றிய கதைகள் தெரியும். சூரியன் இருளை விலக்குவது போல  நான் உனது உடலில் இருந்து விஷத்தை அகற்றுகிறேன்

 

முனிவர்களுக்கும் கடவுளருக்கும் பிராமணர்களுக்கும் பாம்பு விஷத்தை நீக்கும் உபாயம் தெரியும். அது எங்களுக்குக் கடந்த காலத்திலிருந்து வந்தது. இனி எதிர்காலத்திலும் இதை உபயோகிப்போம். அந்த அறிவைக் கொண்டு உனது உடலிலுள்ள விஷத்தை நீக்குகிறேன்.

 

இதோ மலைகளில் இருந்தும் ஆறுகளில் இருந்தும் கொண்டுவந்த நீரை உன் மீது தெளிக்கிறேன். பாருஷ்ணி, சிப்லா நதிகளின் நீரை உன் மீது தெளிக்கிறேன்.  . உனது முகத்தில் சாந்தம் தவழட்டும். உனது இருதயத்தில் அமைதி நிலவட்டும்.

 

(பாருஷ்ணி நதியின் தற்போதைய பெயர் ரவி, சிபலா நதி எது என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஒருவேளை ஷைவல என்னும் நீர்த் தாவரம் வளர்ந்த நதியாக இருக்கலாம்)

 

 

எனது முந்தைய (Snake Vs Mongoose Fight) கட்டுரை:

அருகம் புல் ரகசியங்கள், ஜூலை 12, 2013

 

–subahm–

 

 

ஒரே துறையில் மானும் புலியும்: கம்பன் தரும் அதிசயத் தகவல் (Post No.3180)

animal-water-2

Written by London swaminathan

Date: 23 September 2016

Time uploaded in London: 8-43 AM

Post No.3180

Pictures are taken from various sources; thanks.

 

நல்ல மன்னர்கள் ஆட்சி செய்தால் அங்கு இயற்கையாகவே பகைமை கொண்ட கீரியும் பாம்பும், பூனையும் எலியும், புலியும் மானும் கூடப் பகைமையை விட்டு நட்பு பராட்டுமாம்.

கம்பனும் காளிதாசனும் தரும் தகவல் இது:-

 

இதோ கம்பன் பாடல்:

கருங்கடல் தொட்டனர் கங்கை தந்தனர்

பெரும்புலி மானொடு  புனலும் ஊட்டினர்

பெருந்தகை என் குலத்து அரசர் பின் ஒரு

திருந்திழை துயரம் நான் தீர்க்ககிற்றிலேன்

–கலன் காண் படலம், கிஷ்ககிந்தா காண்டம்

 

பொருள்:-

பெருமையுடைய எனது முன்னோர்கள் கடலைத் தோண்டினர் (சகரர் கதை); மேலுலகதில் இருந்த கங்கையை பூவுலகுக்கு கொண்டு வந்தனர் (Civil Engineer பொறியியல் வல்லுனன் பகீரதன் கங்கையைத் திருப்பிவிட்ட புராணக் கதை); போர் செய்யும் இயல்புடைய புலியையும் யானையையும் ஒரே துறையில் நீர் அருந்துமாறு செய்தனர் (தர்ம ஆட்சி). அவர்கள் குலத்தில் உதித்த நானோ மனைவியின் துயரைத் தீர்க்கும் தவத்தைச் செய்யாதவனாக உள்ளேன் (சீதை பற்றி ராமன் புலம்பல்)

–கிட்கிந்தா காண்டம்

 

animals-water-1

வேறொரு இடத்தில்

புலிப்போத்தும் புல் வாயும் ஒரு துறையில் நீருண்ண

உலகாண்டோன் ஒருவன் — என்று பாடியுள்ளான்

 

வள்ளுவனோ இதற்கும் ஒரு படி மேல் சென்று

தர்ம ஆட்சி நடத்தும் மன்னன் நாட்டில் பருவமழை கொட்டும்; விளைச்சல் பெருகும் என்பான் (குறள் 545); கொடுங்கோலன் நாட்டில் மழையும் பெய்யாது; பசு மாடும் பால் தராது; பார்ப்பனர்களுக்கு வேதங்கள் மறந்து போகும் என்பான் (குறள் 559, 560)

 

 

காளிதாசனும் இதே கருத்தை முன்வைக்கிறான், ரகு வம்சத்தின் ஆறாவது சர்கத்தில் 46 ஆம் பாடலில் ஒரு உவமை வருகிறது.முனிவர்களின் ஆஸ்ரமத்தில்  இயற்கையிலேயே பகைமை உடைய மிருகங்களும் எப்படி பகைமை பாராட்டாது நட்புறவு கொள்ளுமோ அதுபோல……………………………..

முனிவரின் ஆஸ்ரமத்தில் புலியும் மானும் யானையும் சிங்கமும் போன்றை ஒன்று தாக்காமல் அமைதியாக வரும் என்பது இதன் பொருள். அது போல நீப மன்னனின் ஆட்சியும் குண நலன்களும் இருந்தன என்பான் காளிதாசன்.

 

மாணிக்கவாசகரும் திருவாசகத்தில் சிவபெருமானின் கருணை பற்றிப் பேசுகையில் “புலி முலை புல்வாய்க்கு அருளினை போற்றி” என்று விதந்தோதுவார்.

 

animals-3

இளங்கோ தரும் அதிசயத் தகவல்

 

நெஞ்சையள்ளும் சிலப்பதிகார காவியத்தில் பாண்டிய நாட்டில் நீதியும் அமைதியும் நிலவுவதால் இடி, மின்னல் கூட மக்கள் மீது விழாது; புலியும் மானும் சண்டை போடாது; முதலைகள் தாக்காது; துர் தேவதைகள் ம னிதனைப் பிடிக்காது; பாம்பும் கடிக்காது; கரடி கூட புற்றுமண்ணைத் தோண்டி கறையான் எறும்புகளைச் சாப்பிடா து. ஏனெனில் அங்கே தர்ம ஆட்சி நடக்கிறது. பகல் நேரத்திலு ம் பெண்ணும் ஆணும் போவது போல இரவில் பவுர்ணமி வெளிச்சத்திலும் போகலாம்; ஒரு பயமும் இல்லை– என்று இளங்கோ அடிகள் இயம்புவார்.

கோள்வல் உளிஒயமும் கொடும்புற்று அகழா;

வாள்வரி வேங்கையும் மன் கணம் மறலா;

அரவும், சூரும், இரைதேர் முதலையும்,

உருமும் சார்ந்தவர்க்கு உறுகண் செய்யா —

செங்கோல் தென்னவர் காக்கும் நாடு

 

—புறஞ்சேரி இறுத்த காதை, சிலப்பதிகாரம்

 

புறநானூற்றில் புலியும் மானும்

புறநானூற்றில் ஒரு அரிய செய்தி வருகிறது. ஒரு பெண் மானை ஒரு புலி கொன்றுவிட்டது. அதனுடன் ஒரு குட்டியும் இருந்தது. அந்தக் குட்டியை கொன்று சாப்பிடவில்லை. அதற்குக் காட்டிலுள்ள ஒரு முதிய காட்டுப்பசு பால் கொடுத்ததாம். தாயன்பு என்பது இந்த மிருகம், அந்த மிருகம் என்ற வரையரைக்கு எல்லாம் அப்பாற்பட்டது:-

புலிப்பாற்பட்ட ஆமான் குழவிக்குச்

சினங்கழி மூதாக் கன்றுமடுத்து ஊட்டும்

—புறநானூறு 323

 

–subham–

 

 

 

 

நடுங்கினர்க்கு அபயம் நல்கும் அதனினும் நல்லது உண்டோ: கம்பன் (Post No.3137)

sugreeva

Written by London Swaminathan

 

Date: 9 September 2016

 

Time uploaded in London: 9-04 AM

 

 

Post No.3137

 

Pictures are taken from various sources; thanks.

 

 

உலகம் முழுதும் அகதிகள் பிரச்சனை தலை விரித்தாடுகிறது. ஆயிரக் கணக்கானோர் வெளிநாடுகளுக்குச் சென்று அடைக்கலம் கோருகின்றனர். அவர்களுக்குப் பல நாடுகள் அடைக்கலம் தருகின்றன. இவையெல்லாம் சரணாகதி தத்துவத்தின் அடிப்படையில் அமைந்த கோட்பாடு. யாராவது ஒருவர் உன்னைச் சரண் அடைகிறேன் என்று மற்றவர் காலில் விழுந்துவிட்டால் அவரைக் காப்பாற்ற வேண்டும் என்பது இந்து தர்மக் கோட்பாடு. ராமாயணத்தில் மிகப் பெரிய அளவுக்குப் பேசப்படுவது சரணாகதி தத்துவம் ஆகும். இது ராமாயணத்தின் பிற்பகுதியில் விபிஷணன் சரண் அடையும்போது பெருமளவில் விவாதிக்கப்படுகிறது; விவரிக்கப் படுகிறது. அதற்கெல்லாம் பீடிகை போடும்படியாக கிஷ்கிந்தா காண்டத்திலேயே கம்பன் சில பொன்மொழிகளை உதிர்க்கிறான். இதோ இரண்டு பொன் மொழிகள்:–

 

ஒடுங்கல் இல்  உலகம் யாவும் உவந்தன உதவி வேள்வி

தொடங்கின மற்றும் முற்றத் தொல் அறம் துணிவர் அன்றே

கொடுங்குலப் பகைஞன் ஆகிக் கொல்லிய வந்த கூற்றை

நடுங்கினர்க்கு அபயம் நல்கும் அதனினும் நல்லது உண்டோ

 

பொருள்:-

பரந்த இந்த உலகத்தில் உயிர்கள் எல்லாம் விரும்பியவற்றை உதவி, வேள்வி, தவம் முதலியவற்றை நிறைவேற்றும்படி மேலோர் செய்வர் அல்லவா? அததகைய அறங்களுள், எமன் போன்ற எதிரிக்குப் பயந்து நம்மிடம் சரண் அடைந்தவர்க்கு அஞ்சாதே என்று அருள் காட்டுவதை விடப் பெரிய அறம்/தர்மம் வேறு ஏதாவது உளதோ?

 

இது யார் சொன்னது? எங்கே சொன்னது?

 

ராம லெட்சுமணர்களைச் சந்தித்த அனுமன் சுக்ரீவனுக்கு, வாலியினால் ஏற்பட்ட துனபங்களை விவரித்துவிட்டு சரண் அடைந்தவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பது (இந்து) தர்மம் அல்லவா? என்கிறான்.

28_24_kishkinta_vali-fight-ground

சுக்ரீவன் இதைத் தன் வாயாலேயே சொல்லி காலில் விழும்  ஒரு பாடலும் வருகிறது:–

 

முரணுடைத் தடக்கை ஒச்சி முன்னவன் பின்வந்தேனை

இருள்நிலைப் புறத்தின் காறும் உலகு எங்கும் தொடர இக்குன்று

அரண் அடைத்து ஆகி உய்ந்தேன்  ஆர் உயிர் துறக்கலாற்றேன்

சரண் உனைப் புகுந்தேன் என்னைத் தாங்குதல் தருமம் என்றான்

பொருள்:-

என் அண்ணனான வாலி, தம்பியாகிய என்னை அடிப்பதற்காக ஓங்கிய கைகளுடன் இவ்வுலகத்துக்கு அப்பாலும் எல்லா உலகங்களிலும் என்னைத் துரத்தி வந்தான். இம்மலையே பாதுகாப்பான இடம் என்பதால் இங்கே வந்தேன்; உயிரை விடவும் மனம் இல்லை; உன்னை அடைக்கலம் அடைந்தேன். என்னைக் காப்பாற்றுதல் உனக்குக் கடமையாகும் – என்று சொன்னான் சுக்ரீவன்

 

என்னைத் தாங்குதல் தருமம் என்றான் என்ற வாக்கியத்தில்தான் இந்து தர்மக் கோட்பாடு பளிச்சிடுகிறது.

 

இன்று உலகம் முழுதும் அகதிகள் வாழ வழிவகுத்தது இந்து மதம். சுக்ரீவன், வாலி என்பவர்கள் ஓரிரு தனி நபர்கள். ஆயினும் போரில் சரண் அடைந்தவர்களையும் காப்பாற்றுவது நமது இதிஹாச புராணங்களில் உள்ளது. சரியான ஆயுதம் இல்லாதவர்ளையும், ஆயுதமே வைத்திராதவர்களையும் தாக்கக்கூடாது என்பதும் தெளிவாககக்  கூறப்பட்டுள்ளது.

 

புருஷோத்தமன் (போரஸ்) என்ற மன்னனை அலெக்ஸாண்டர் வென்று விட்டான். உனக்கு என்ன வேண்டும்? உயிர்ப்பிச்சை வேண்டுமா? இவ்வளவு சிறிய மன்னனாலும் என்னையே திணறடித்துவீடாய்! — என்றான். அவனோ சிறிதும் அஞ்சாமல் என்னை மன்னன் போலவே நடத்த வேண்டும் என்றான். அதன்படியே செய்தான் அலெக்ஸாண்டர். இது தர்மம் என்பதால் அப்படிக்கேட்டான் புருஷோத்தமன (போரஸ்). இந்துமதத்தின் பெருமையையும் பாரதத்தின் பெருமையையும் அறிந்து யோகிகளைச் சந்திக்கவே இந்தியாவுக்கு வந்தவன் அலெக்ஸாண்டர் என்பதால் உடனே அவனை மன்னன் போலக் கருதி அவன் ராஜ்யத்தை அவனிடமே ஒப்படைத்தான் என்பதை நாம் அறிவோம்.

 

வாழ்க சரணாகதி தத்துவம்!! வாழ்க அகதிகள்!!

 

 

 

நூறு வயதானவர்களின் மகிமை! (Post No.3136)

100-yr-old-berry-seller

100 year old lady sells berries on the road!

Written by London Swaminathan

 

Date: 8 September 2016

 

Time uploaded in London: 21-34

 

 

Post No.3136

 

Pictures are taken from various sources; thanks.

A over 100 year old Sadhu at the Shambhu Nath Hindu Cremation Area, Kathmandu Nepal

A over 100 year old Sadhu with his incredible long hair at the Shambhu Nath Hindu Cremation Area, Kathmandu Nepal

ஒரு பந்தியில் (வரிசையில்) யார் யார் உட்கார்ந்தால் அந்த வரிசையே தூய்மையாகிவிடும், புனிதமாகிவிடும் என்று மனுஸ்மிருதியில், மனு ஒரு பட்டியல் கொடுக்கிறார். அதில் 100 வயதுக் கார்களையும் சேர்த்திருக்கிறார். அவர்கள் அனுப்பும் VIBRATIONS வைப்ரேஷன்ஸ் — எல்லோரையும் உயர்த்திவிடும். அதுவும் அவர்களை யாருடன் சேர்த்து வைத்திருக்கிறார் என்பதைப் பார்க்கையில் 100 வயதானவர்களின் மதிப்பு இன்னும் உயர்கிறது!

அவர்களுக்கு “பங்தி  பாவனாள்” என்று பெயர்

 

ஆக்ரயா: சர்வேஷு வேதேஷு சர்வ ப்ரவசனேஷு ச

ஸ்ரோத்ரியான் அன்வயஜா: ச ஏவ விக்ஞேயா:  பங்க்திபாவனா:

 

வேதார்த்தவித்ப்ரவக்தா ச ப்ரஹ்மசாரி சஹஸ்ரத:

சதாயுஸ்சைவ விக்ஞேயா: ப்ராஹ்மணா:  பங்க்திபாவனா:

 

மனு 3- 184-186

 

வேதங்களைக் கற்றுத் தேர்ந்த அறிஞர்கள், அதன் ஆறு அங்கங்களையும் (ஷட்+ அங்கம்= ஷடங்கம்=சடங்கு) அறிந்தவர்கள், அவர்கள் வம்சத்தில் பிறந்தவரகள், ஆகியோர் வரிசையைப் புனிதப்படுத்துவர்.

 

குருவினிடத்தில் வேதப் பொருளை அறிந்தவன்,  அதைச் சொல்லிவைப்பவன், பிரம்மச்சாரி, ஆயிரம் பசுக்களை தானம் செய்தவன், நூறு வயதானவன் ஆகியோரும் எங்கே உட்காருகிறார்களோ அந்த வரிசையே தூய்மை ஆகிவிடும்!

 

மனு ஸ்மிருதியில் மூன்றாவது அத்தியாயத்தில் மனு இதைச் சொல்லுகிறார்.

0phil

இந்தப் பட்டியலில் உள்ள எல்லோரும் வேதம் கற்றவர்கள், தானம் செய்தவர்கள். ஆனால் இதில் வயதுக்கு மதிப்பு கொடுக்கப்பட்டிருப்பது விஷேஷமானது.  நூறு வயது ஒருவர் வாழ்கிறார் என்றால் அவர் வாழ்வு சுத்தமானதாக, ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்; மேலும் வேத மந்திரங்களில்  நிறைய இடங்களில் “நூறாண்டுக் காலம் வாழ்க; நோய் நொடியில்லாமல் வாழ்க” என்ற பிரார்த்தனை வருகிறது.

 

வேதங்களின்படி ஒருவனுடைய ஆயுள் நூறு வயதுதான். ஆயுர்வேத, சோதிட சாத்திரப்படி ஒருவனின் வயது 120 ஆகும்.

 

வாழ்க நூற்றாண்டு கண்டோர்!

ஆரியம் முதல் பதினெண் பாடையில்…… கம்பன் மொழி (Post No.3130)

tamil-alphabet

Written by London swaminathan

 

Date: 7 September 2016

 

Time uploaded in London: 8-23 AM

 

 

Post No.3130

 

Pictures are taken from various sources; thanks.

 

பழங்கால இந்தியாவில் பதினெட்டு மொழிகள் பெரிய அளவில் பேசப்பட்டன என்பதை கம்பனும் பாரதியும் நமக்கு சொல்லும் அழகே தனி!

 

பம்பை நதியின் இயற்கை அழகை கம்பன் வருணிக்கும் அழகு படித்து இன்புறத் தக்கது. முதலில் பம்பை என்னும் நதி பற்றி ஓரிரு வார்த்தை; இது பழங்காலச் சொல். கேரளத்தில் ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் வழியில் ஒரு பம்பை நதி உளது; தென் அமெரிக்காவில் ஒரு பம்பை நதி உளது; கிஷ்கிந்தா காண்டத்தில் ராம பிரான் கண்ட பம்பை நதி வட இந்தியாவில் உளது!

 

ஆரியம் முதலிய பதினெண் பாடையில்

பூரியர் ஒரு வழிப்புகுந்தது ஆம் என

ஓர்கில கிளவிகள் ஒன்றொடு ஒப்பில

சோர்வில விளம்பு புள் துவன்றுகின்றது

 

பொருள்:–

அந் நீர் நிலை சம்ஸ்கிருதம் முதலான பதினெட்டு மொழிகளில் நல்ல தேர்ச்சி பெறாத அற்பப் புலமை உடையவர்கள் ஓரிடத்தில் ஒன்று சேர்ந்து ஆரவாரம் செய்வது போல இன்ன இன்ன பறவையின் ஒலி இது இது என்று ஆராய்ந்து அறிய மாட்டாதவைகளும், ஒன்றுடன் ஒன்று ஒத்திராதவைகளுமாய் உள்ள ஒலிகளை ஓய்வின்றி ஒலிக்கும் பலவகைப்பட்ட பறவைகள் கூடி நெருங்கி இருக்கப்பெ ற்றதாகும்.

 

இதிலிருந்து தெரிவதென்ன?

sanskrit_vwl

1.இந்தியாவில் பதினெட்டு மொழிகள் பெரிய மொழிகளாகக் கருதப்பட்டன. அதில் சம்ஸ்கிருதமே முதலிடம் பெற்றது

2.ஆரியம் என்றால் ரிஷி முனிவர்கள், வடக்கில் வாழும் பண்பாடுமிக்கோர் என்னும் பொருள், சங்க இலக்கியம் முதல் கம்பன் காலம் வரை இருந்தது. அதாவது மாக்ஸ்முல்லர்களும், கால்டுவெல்களும் “சிவபூஜையில் கரடி புகுந்தது போல” புகும் வரை ஆரிய என்ற சொல்லுக்கு இனத் துவேஷப் பொருள் இல்லை. கால்டுவெல்களும் மாக்ஸ்முல்லர்களும் இன வெறியைப் பரப்பியதால் ஹிட்லர் தன்னை ஆரியன் என்று சொல்லி மற்றவர்களைக் கொடுமைப்படுத்தியதை வரலாறு படித்தோர் அறிவர் (விவரங்களை எனது பழைய கட்டுரைகளில் காண்க)

 

  1. ஆரியருக்கு எதி ர்ப்பதம் பூரியர் என்பதாலும் இது உறுதியாகிறது அதுவே ஆங்கிலத்தில் இன்றும் ஸ்பூரியஸ் (Spurious = false, fake, illegitimate) என்று வழங்கப்படும்

 

4.கம்பன் பல்வேறு மொழிகளைப் பயின்றான் அவனே வால்மீகி புகழைப்பரப்ப அவனுடைய ராமாயணத்தை மொழிபெயர்ப்பதாக பால காண்டத்தில் கூறியதையும் அகத்தியனையும் தமிழையும் வானளாவப் புகழ்வதையும் எனது முந்தைய கட்டுரைகளில் காண்க

 

5.பறவைகள் பற்றிய தமிழனின் அறிவையும் இப்பாடல் விளக்கும். ஒவ்வொரு பறவையையும் அதனுடைய ஒலியைக்கொண்டே அறிவான் தமிழன்.ஆனால் பம்பை நதிக்கரையிலோ எல்லாப் பறவைகளும் சேர்ந்து ஒலித்தது “குறை குடம் தழும்பியது போல” இருந்தது!

 

பாரதி மொழியில்

முப்பது கோடி முகமுடையாள் உயிர்

மொய்ம்புற ஒன்றுடையாள் – இவள்

செப்பு மொழி பதினெட்டுடையாள்- எனிற்

சிந்தனை ஒன்றுடையாள் (பாரதியார் படல்)

 

என்று பாரத தேவியைப் பாரதி புகழ்வதையும் ஒப்பிட்டுப் பார்ப்பது பேரின்பம் தரும்.

 

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு

இறுதியாக ஒவ்வொரு மொழியும் அவரவர் காதுக்கு இனிமையானது என்பதை உணர்தல் வேண்டும். பார்லிமெண்டில் பேசிய சேத் கோவிந்த தாஸ், தமிழ் மொழி என்பது தகர டப்பாவில் கற்களைப் போட்டுக் குலுக்கினால் எப்படி ஒலி வருமோ அது போலக் கடூரமானது என்று கிண்டல் செய்தார். உடனே தி.முக. உறுப்பினர்கள், இந்தி மொழியில் உள்ள மிகப்பெரும் இலக்கியம் டெலிபோன் டைரக்டரிதான் என்றும் செப்பினர். இரண்டும் மொழிப்பற்றினாலும், அறியாமையினாலும் வெளிப்பட்ட கூற்றுகள்!

 

பி.பி.சி. தமிழோசையில்…………

 

லண்டனில் புஷ் ஹவுசில் (Bush House, London) ஏழாவது மாடியில் நான் B.B.C. தமிழோசை ஒலிபரப்பளராக வேலை பார்த்த காலத்தில் நானும் சங்கர் அண்ணாவும் ஏதேனும் ஒரு விஷயம் பற்றி விவாத்தித்துக் கொண்டிருப் போம். அடுத்த அறையிலுள்ள நேபாளி ஒலிபரப்பாளர்கள் வந்து ஏன் இப்படிச் சண்டை போடுகிறீர்கள்?  என்று சிரித்துக்கொண்டே சொல்லுவர். அவர்களுக்குத் தெரியும் நாங்கள் சுவையான விவாதத்தில் இருக்கிறோம் என்பது. ஆயினும் தமிழ் மொழியின் குரல் அவர்களுக்குச் சண்டை போடுவது போலக் கடூரமாக இருப்பதை அவர்கள் சொல்லாமல் சொல்லுகின்றனர் என்பது எங்களுக்குப் புரிந்து விடும். இதே நேரத்தில் எம்.எஸ். சுப்புலெட்சுமி, .சுசீலா, ஜானகி போன்றோரி ன் பாடல்களைக் கேட்டிருந்தால் அவர்கள் கருத்து வேறு மாதிரி இருந்திருக்கும்!

 

–Subham–

ஞயம்பட உரை; வெட்டெனப் பேசேல்; பழிப்பன பகரேல் (Post No.3114)

talking 3

Written by London Swaminathan

 

Date: 2 September 2016

 

Time uploaded in London: 13-33

 

Post No.3114

 

Pictures are taken from various sources; thanks.

 

 

நாவடக்கம் பற்றி இந்தியப் புலவர்கள், அதிலும் குறிப்பாகத் தமிழ்ப் புலவர்கள், சொன்ன அளவுக்கு வேறு யாரும் சொல்லி இருப்பார்களா என்பது சந்தேகமே. தமிழர்கள் அதிகம் பேசக்கூடியர்கள், அளவில்லாமல் — அளவு தெரியாமல் —பேசக்கூடியவர்கள் என்பது வள்ளுவனுக்கும் அவ் வையாருக்கும் தெரிந்திருக்கிறது. ஆகையால் அவர்களும் எப்படிப் பேச வேண்டும்? எப்படிப் பேசக்கூடாது? என்பதை பல வகைகளில் சொல்லிவிட்டனர்.

 

 

 

முதலில் ஒரு சம்ஸ்கிருதப் புலவர் சொன்னதைப் பார்ப்போம். அதை அவ்வை, வள்ளுவன் சொன்னதோடு ஒப்பிட்டு மகிழ்வோம்:

 

ஜிஹ்வாக்ரே வர்ததே லக்ஷ்மீர் ஜிஹ்வாக்ரே மித்ர பாந்தவா:

ஜிஹ்வாக்ரே பந்தனப் ப்ராப்தி: ஜிஹ்வாக்ரே மரணம் த்ருவம்

 

 

பொருள்:

நாக்கின் நுனியில்தான் லட்சுமி வசிக்கிறாள்;  (செல்வம் என்பது நீங்கள் பேசும் விதத்தில்தான் இருக்கிறது.)

நாக்கின் நுனியில்தான் நண்பர்களும் உறவினர்களும் இருக்கிறார்கள்; (அதாவது நீங்கள் இனிய சொல் சொல்லாமல், கடுஞ்சொற்களைப் பேசினால், அதோடு நண்பர்கள், சொந்தக்காரர்களின் கூடாரம் காலியாகிவிடும்).

 

நாக்கின் நுனியில்தான் சிறைச் சாலையும் இருக்கிறது. (எத்தனை பேர் அவதூறு வழக்குகளினாலும், பொய் சொன்னதாலும், சிறைச் சாலைக்குப் போனார்கள் என்பதை பத்திரிக்கைகளில் படிக்கிறாம்; நுணலும் தன் வாயால் கெடும் என்பது தமிழ்ப் பழமொழி; அதாவது தவளைகள் சப்தம் போட்டு, தான் இருக்கும் இடத்தைக் காட்டுவதால் பாம்புக்கு இரையாகின்றன).

நாவின் நுனியில்தான் மரணம் நிற்கிறது என்பது ஸ்லோகத்தின் கடைசி வரி. மேற்கூறிய மூன்றில் எதுவும் மரணத்தையும் சம்பவிக்கலாம்.

talking 4

இதனால்தான்

ஞயம்பட உரை,

வெட்டெனப் பேசேல்,

 பழிப்பன பகரேல்,

பிழைபடச் சொல்லேல்,

மிகைபடச் சொல்லேல்

வஞ்சகம் பேசேல்

கடிவதுமற

சுளிக்கச் சொல்லேல்

நொய்யவுரையேல்

மொழிவதறமொழி

 

என்றெலாம் அவ்வையார் கதறுகிறார்.

 

வள்ளுவனோ “யாகாவாராயினும் நா காக்க” (127) என்கிறான். இனிய சொல் இருக்கும்போது சுடு சொற்களைப் பயிலுவது, பழம் இருக்கையில் காயை  சாப்பிட்டதற்கு சமம் என்கிறான்

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று (100)

 

வள்ளுவன்,

இனியவை கூறல்

புறங்கூறாமை

பயனில சொல்லாமை

சொல்வன்மை

என்று 4 அதிகாரங்களில் 40 திருக்குறள்களில் இதை வலியுறுத்திவிட்டான்.

 

 

Yelling

இறுதியாக மனு சொன்னதையும் பார்ப்போம்:-

 

சத்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயான்ன ப்ரூயாத்சத்யமப்ரியம்

 

ப்ரியம் ச நான்ருதம் ப்ரூயாதேஷ தர்ம சநாதன: — மனுஸ்ம்ருதி 4-138

 

 

 

உண்மையே பேசு,

இனிமையே பேசு,

இனிமையற்றதை, உண்மையே ஆனாலும், சொல்லாதே.

அதற்காக இனியது என்று கருதி பொய் பேசாதே.

 

இதுவே எக்காலத்துக்கும் பொருந்தும் சநாதன தர்மம் (இந்து மதத்தின் அடிப்படைக் கோட்பாடு) – மனுஸ்மிருதி 4-138

 

–subham–