மனைவி கர்ப்பிணி, கணவன் பிரம்மச்சாரி! ஒரு சுவையான கதை! (Post No. 3436)

Written by London swaminathan

 

Date: 10 December 2016

 

Time uploaded in London: 9-32 am

 

Post No.3436

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

This story is available in English in my blog.

 
மனம் ஒரு கடல். நம் ஒவ்வொருவரிடையேயும் மகத்தான சக்தி இருக்கிறது. அதைத் தேவை ஏற்படும் போது பிரயோகித்து அதிசயம் நிகழ்த்தலாம். இதோ பேராசிரியர் உஷர்புத் சொன்ன கதை. அவர் முதலில் அமெரிக்காவில் மின்னசோட்டா ப ல்கலைக் கழக சம்ஸ்கிருதத் துறைப் பேராசிரியராக இருந்து பின்னர் வேதபாரதி என்ற பெயரில் சாமியார் ஆனார்.

 

“முன்னொரு காலத்தில் ஒரு ராஜா இருந்தார். அவருடைய அண்ணன் பெரிய அறிவாளி; ஒரு நேரத்தில் அரசாட்சியைத் தம்பியிடம் ஒப்படைத்துவிட்டு தவம் செய்யப் போய்விட்டார். தவத்தின் மூலமாக நிறைய சக்தி கிடைத்தவுடன் ஒரு ஆஸ்ரமம் அமைத்தார். ராஜாவின் அரண்மனை நதியின் ஒரு பக்கமும் மறுகரையில் அந்த ஆஸ்ரமமும் அமைந்திருந்தன.

 

காலம் உருண்டோடியது; தம்பிக்கு (ராஜவுக்கு) கல்யாணம் நடந்தது– மனைவி கர்ப்பவதி ஆனாள். கர்ப்பிணிப் பெண்கள் எப்போதும் நல்ல விஷயங்களைக் கேட்டால் குழந்தையும் அறிவாளியாகவும் ஞானியாகவும் பிறக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அதை ஒட்டி மஹாராணியும் கணவனிடம் சொன்னாள்:

சுவாமி! நாதா! என் பிரிய நாயகரே; எனக்கோ விரைவில் குழந்தை பிறக்கப்போகிறது. உங்கள் குழந்தையும் உங்களைப் போல அறிவாளியாகவும், ஞானவானாகவும் இருக்க வேண்டும் என்பது என் விருப்பம் . ஆகையால் உங்கள் அண்ணனை — சந்யாசியைப் பார்த்துவர அனுமதி கொடுங்கள்.

 

ராஜாவுக்கு மெத்த மகிழ்ச்சி; அதற்கென்ன சென்று வா; வென்று வா! என்று செப்பினார். சாது சந்யாசிகளையும், அரசனையும் பெரியாயோர்களையும் பார்க்கச் செல்லுகையில் வெறும் கையுடன் போகக்கூடாது; ஏதேனும் அன்பாகக் கொடுப்பதற்குக் கொண்டுபோக வேண்டும் என்று இந்துமத சாத்திரங்கள் சொல்லுகின்றன. ஆகவே அவளும் உடனே நிறைய பலகாரங்களைச் சமைத்து எடுத்துக்கொண்டாள். புறப்படுவதற்கு முன் ராஜாவிடம்சென்று, அன்பரே ஆற்றைக் கடக்க படகு ஏற்பாடு செய்துவிட்டீர்களா? என்று வினவினாள்.

ராஜா சொன்னார்: கண்ணே! மணியே! கற்கண்டே! படகு எதற்கு? சத்தியம் செய்துவிட்டு அந்த சத்தியத்தின் பேரில் “நதியே வழிவிடு” என்றால் தானாக வழிவிடும். நந்த கோபன், கிருஷ்ணனை தலைமீது கூடையில் வைத்துக் கொண்டு யமுனையைக் கடக்கவில்லையா? அப்போது யமுனையே வழிவிட்டதே!

 

மனைவி/ மஹாராணி சொன்னாள்: அவர்களுக்கெல்லாம் மஹத்தான சக்தி இருந்தது. எனக்கு அப்படி ஒன்றுமில்லையே!

 

கணவர்/ ராஜா சொன்னார்:

அதனால் என்ன? என்னுடைய சக்தியை எடுத்துக் கொள். நதிக் கரைக்குப் போய் நில்; என் கணவன் மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணமான நாள் முதல் இன்று வரை  பிரம்மச்சாரி என்பது உண்மையானால் நதியே எனக்கு வழிவிடு என்று சொல் என்றார்.

 

மனைவிக்கு ஒரு புறம் சந்தேகம்; மறுபுறம் குழப்பம்; என்னுடன் படுக்கையில் படுத்து என்னை கர்ப்பம் தரிக்கச் செய்தவர்; எப்படி பிரம்மச்சாரி என்று சொல்லுகிறார்?  சரி, போய்தான் அவர் சொன்னதைச் செய்வோமே என்று அவர் சொன்னபடியே செய்தாள். நதியும் விலகி வழிவிட்டது!

 

மகிழ்ச்சியுய்டன் மறுகரையிலுள்ள ஆஸ்ரமத்தை அடைந்தாள். ராஜாவின் அண்ணனான சாமியாருக்கு நாள் முழுதும் பணிவிடை செய்தாள்; உபதேச மொழிகளைக் கேட்டறிந்தாள். தான் கொண்டு சென்ற பலகாரங்களைப் பரிமாறி அவரை உண்ண வைத்தாள். அவரும் மிகவும் நன்றாக இருக்கிறது என்று சொல்லிச் சாப்பிட்டார்.

 

மாலை நேரம் நெருங்கியது; கணவனிருக்கும் அரண்மனைக்குப் போவதற்கு விடை பெற்றாள் சந்யாசியிடம்.

“தயவு செய்து, எனக்கு ஒரு படகு மட்டும் ஏற்பாடு செய்து விடுங்கள்; நான் பொழுது சாய்வதற்குள் அரண்மனைக்குப் போக வேண்டும்” என்றாள்.

சந்யாசியோ சிரித்துக் கொண்டே சொன்னார்:

“பெண்மணியே! சத்தியம் செய்துவிட்டுப் போ, நதி தானாக வழிவிடும் என்றார். என்ன சத்தியம் செய்வது?” என்று கேட்டாள்.

 

“நான் காலை முதல் மாலைவரை பணிவிடை செய்த சந்யாசி நாள் முழுதும் உண்ணா நோன்பு அனுஷ்டித்தது உண்மையானால் ஏ! நதியே! எனக்கு விலகி வழிவிடு என்று சொல்; நதியும் விலகிவிடும்” என்றார்.

அவளுக்கு மீண்டும் குழப்பம். என் கையால் சமைத்ததை நாள் முழுதும் சாப்பிட்டுவிட்டு உண்ணாவிரதம் இருந்ததாகச் சொல்லுகிறாரே! என்று திகைத்தாள்

638d2-img_7098

ஆயினும் காலையில் வந்தபோது நிகழ்ந்த அதிசயம் மீண்டும் நடக்குமோ என்று எண்ணி, சந்யாசி சொன்னபடியே செய்தாள். நதியும் இரண்டாகப் பிரிந்து இடைவெளியில் பாதை உண்டாக்கியது. இதைக்கண்டு வியப்புற்ற அவள், கணவனிடம் இதற்கு விடை கேட்காவிடில் என் தலையே வெடித்துவிடும்; அவ்வளவு குழப்பமாக இருக்கிற து என்று எண்ணிச் சென் றாள்.

 

 

கணவன் அவளை இன்முகத்துடன் வரவேற்றவுடன் கேட்ட முதல்

கேள்வி:

நீங்கள் பிரம்மசாரியுமில்லை; உங்கள் அண்ணன் உண்ணாவிரதியும் இல்லை; நீங்கள் என் வயிற்றிலுள்ள குழந்தைக்குத் தந்தை; அவரோ நாள் முழுதும் நான் கொண்டு சென்ற உணவுவகைகளை ருசித்துச் சாப்பிட்டார்.

 

சுவாமீ! நாதா!! இதற்கு என்ன விளக்கமோ?

 

அவர் சொன்னார்:-

“அன்பே! ஆருயிரே! மனத்தின் விசாலம் பலருக்கும் தெரிவதில்லை. அது சமுத்திரம் போலப் பரந்தது; உண்மையாகவுள்ள சமுத்திரத்தைவிட ஆழமானது, பெரியது. அதில் நாம் துளிக்கூடப் பயன்படுத்தவில்லை. நான் உன்னுடன் படுக்கையில் படுத்து இன்பம் துய்த்தது உண்மையே; எனது அண்ணன்/ சந்யாசி நீ கொண்டுசென்ற உணவைப் புசித்ததும் உண்மையே. ஆயினும் எப்படி கடலின் ஒரு ஓரத்தில் அழுக்குப் படிந்தாலும், அந்தக் கடல் முழுதும் அழுக்குக் கடல் ஆகாதோ, அப்படியே மனத்தின் ஒரு ஓரத்தில் பதிந்திருக்கும் இக்காரியங்கள் — செயல்கள் — எங்களைப் பாதிக்காது.

 

என் கருத்து:–

மனத்தின் சக்தி மஹத்தானது; ஆதிசங்கரர்,ஜனக மஹராஜா போன்ற ஞானிகள் அதைப் பயன்படுத்தி பல அற்புதங்களைச் செய்துள்ளனர். மேற்கூறிய கதையைப் பின்னனியில் வைத்து மகான்களின் புரியாத செயல்களை ஆராய்ந்தோமானால் பொருள் விளங்கும்!

 

–subham–

 

சுவர்க்கமும் நரகமும்- குட்டிக் கதை (Post No.3421)

Picture of Osho

Written by S NAGARAJAN

 

Date: 6 December 2016

 

Time uploaded in London: 5-01 AM

 

Post No.3421

 

Pictures are taken from different sources;thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

ஒரு ஜென் குட்டிக் கதை

சுவர்க்கமும் நரகமும் !

 

ச.நாகராஜன்

 

ஒஷோ என்று உலகில் பிரபலமான ஆசார்ய ரஜனீஷ் ஏராளமான ஜென் குட்டிக் கதைகளைக் கூறியுள்ளார். அவற்றில் ஒரு குட்டிக் கதை இது.

 

ஜப்பானிய மன்னன் ஒருவன் பலரையும் அணுகி சுவர்க்கம் என்றால் என்ன நரகம் என்றால் என்ன என்ற கேள்விகளைக் கேட்டு வந்தான். யாரிடமிருந்தும் அவனுக்குச் சரியான பதில் கிடைக்கவில்லை.

 

 

மன்னனின் மந்திரி, “ஒரு ஜென் மாஸ்டர் இருக்கிறார். அவர் அனைத்தையும் உணர்ந்தவர். அவரிடம் நீங்கள் சென்று கேட்டால் உங்களுக்குத் திருப்தியான பதில் கிடைக்கும்” என்றார்.

மன்னனும் அந்த ஜென் மாஸ்டரிடம் சென்று தனது வழக்கமான கேள்விகளைக் கேட்டான்.

 

 

ஜென் மாஸ்டர் ஒரு நிமிடம் மௌனமாக இருந்தார்.

பின்னர் மன்னனை நோக்கி,” என்ன முட்டாள்தனமான கேள்விகளைக் கேட்கிறாய் நீ! அகம்பாவம் பிடித்தவனே! உன்னைப் போன்ற ஒரு முட்டாளையும் நான் பார்த்ததில்லை; அவலட்சணமானவனையும் நான் பார்த்ததில்லை” என்று வெறுப்புத் தொனிக்கும் குரலில் கூறினார்.

 

 

மன்னன் அதிர்ச்சியுற்றான். அவனிடம் இப்படி யாருமே பேசியதில்லை. கோபம் உச்சத்திற்கு ஏறியது.

“ அட மடையனே, என்னையா இப்படிச் சொல்கிறாய்” என்று கூவியவாறே தன் வாளை உருவினான். ஓங்கினான்.

இப்போது ஜென் மாஸ்டர் உரத்த குரலில் கூவினார்: “நில்! இது தான் நரகத்திற்குப் போகும் வழி. தெரிந்து கொண்டாயா?” என்றார்.

 

 

அவரது நில் என்ற கம்பீரமான சப்தத்தால் வாளை ஓங்கிய மன்னன் அப்படியே நின்றான். அவரது பதிலில் இருந்த உண்மையை அறிந்து கொண்டு அவர் காலில் விழுந்து பணிந்து தன்னை மன்னிக்குமாறு உருக்கமுடன் வேண்டினான்.

“ மன்னா! எழுந்திரு! இது தான் சுவர்க்கத்திற்குப் போகும் வழி! என்ன ஆச்சரியம், ஒரு நிமிடத்தில் நரகத்திற்குப் போகும் வழியையும் தெரிந்து  கொண்டாய்! சுவர்க்கத்திற்குப் போகும் வழியையும் தெரிந்து கொண்டாயே” என்று கூறிய ஜென் மாஸ்டர் அவனை ஆசீர்வதித்தார்.

 

மன்னனும்  மகிழ்ந்து அவரது சீடரானான்.

 

கோபம் நரகத்திற்கு வழி: பணிவு சுவர்க்கத்திற்கு வழி!

 

**********

கஷ்டம் வந்தால் கவிதை பிறக்கும்: பால முரளி கிருஷ்ணா அனுபவம் (Post No.3419)

Picture of Sri Balamurali Krishna

 

Written by London swaminathan

 

Date: 5 December 2016

 

Time uploaded in London: 9-24 AM

 

Post No.3419

 

Pictures are taken by ADITYA KAZA; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

பாலமுரளி கிருஷ்ணாவின் மறைவை ஒட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்த லண்டனில் 3-12- 2016ல் ஒரு அஞ்சலிக் கூட்டம் நடந்தது. அதில் சிறப்புரை ஆற்ற என்னையும் அழைத்திருந்தனர். முதலில் அதில் கேட்ட, பிறர் சொன்ன சுவையான விஷயங்களைச் சொல்லுகிறேன்.

 

பாரதியார் மற்றும் சங்கீத மும்மூர்த்திகளின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போதெல்லாம் அவர்கள் கஷ்டப்பட்டபோதெல்லாம் இறைவனை நினைத்து கவிகளையும், கீர்த்தனைகளையும், கிருதிகளையும் இயற்றியதைப் படிக்கிறோம்.

 

 

 

லண்டன் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய பாரதீய வித்யா பவன் டைரக்டர்  டாக்டர் நந்த குமாரா சொன்னதாவது:

“ஒரு முறை சங்கீத மாமேதை பாலமுரளி கிருஷ்ணா, ரஷ்யாவில் சுற்றுப் பயணம் செய்தார். ஹோட்டலில் நான்கு நாட்கள் தனியாகத் தங்கி இருந்தார். அங்கு மரக்கறி (சைவ) உணவு கிடைப்பது அபூர்வமாக இருந்தது. ஒரு புறம் தனிமை; மறுபுறம் வயிற்றைக்கிள்ளும் பசி; ஹோட்டல்காரர் களிடம், ‘ அப்பா! கொஞ்சம் தயிராவது கொடேன் என்று பாலமுரளி சொன்னார். உணவு விடுதிக்காரரும் மறுநாள் நல்ல கெட்டித் தயிர் கொண்டுவந்தார்.

“ஒரே ஆச்சரியம். அட இந்த உறைபனி வெப்ப நிலையிலும் இப்படி வெண்ணை போலத் தயிர் கொண்டு வந்துவிட்டீர்களே! என்றார் பாலமுரளி

Dr Nandakumara, Director, B V Bhavan, London Kendra

அந்த உணவுவிடுதிக்காரர் சொன்னார், “அது ரொம்ப எளிது, ஸார். நாங்கள் விரைவில் தயிர் ஆக அதில் ஒரு மீனைப் போட்டுவிடுவோம் என்றார். இதைக் கேட்ட பாலமுரளி கிருஷ்ணா, நொந்து போய், மனம் வெந்து போய் அதை நைஸாக ஒரு ஓரத்தில் ஒதுக்கிவைத்து விட்டு ஜன்னல் வழியாக வெட்ட வெளியைப் பார்த்தார். நள்ளிரவு. ஆனாலும் சூரியன் தெரிந்தது (துருவத்தை ஒட்டி, வட அட்ச ரேகைகளில் இருக்கும் நாடுகளில் நள்ளிரவிலும் சூரியனைப் பார்க்கலாம்.) உடனே அவருக்கு ஒரு கவிதை (க்ருதி) பிறந்தது. இறைவா! சூரியனே நீதான் எங்கு போனாலும் எனக்குத் துணை” என்று.

 

(என் கருத்து: நமக்குக் கஷ்டங்கள் வந்தால் கோபப் படுவோம். இறைவன் மீது கூட அந்த சினம் பாயும் . ஆனால் பெரியோர்களுக்குக் கஷ்டம் வந்தாலோ அது பாட்டாக மலரும்)

 

அடுத்ததாக லண்டனிலுள்ள சீனியர் மிருதங்க வித்துவான் திரு கிருஷ்ண மூர்த்தி பேசினார்; அவர் சொன்னதாவது:

 

ஒரு முறை என் குருநாதருக்கு உடம்பு சரியில்லை. ஆகையால் அவருக்கு வந்த எல்லா மிருதங்கக் கச்சேரிப் பணிகளையும் ரத்து செய்துவிட்டார். ஆனால் பாலமுரளி கிருஷ்ணாவுக்கு வாசிக்க ஒப்புக்கொண்டது மறந்து போயிற்று. எதேச்சையாக சபா காரியதரிசி என் குரு நாதரைப் பார்த்து “நாளை கச்சேரி; அதான் உங்களைப் பார்த்துவிட்டுப் போகலாம்” என்று வந்தேன் என்று சொல்ல, என் குருநாதர் “முடியவே முடியாது என் உடல் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது” என்று சொல்லிவிட்டார்.

சபா காரியதரிசியோ, இவ்வளவு கடைசி நேரத்தில் நான் போய் யாரைக் கேட்டாலும் வர மாட்டார்கள்; உங்கள் சிஷ்யன் கிருஷ்ணமூர்த்தியை (என்னை) வாசிக்கச் சொல்லுங்களேன் என்றார். அதற்கு என் குருநாதர் எனக்கு ஒரு ஆட்சேபணையும் இல்லை, பாலமுரளி ஸார் ஒத்துக்கொள்ள வேண்டுமே என்றார்.

Senior Mridangist Mr Krishnamurthy (first in the row)

சபா காரியதரிசி பாலமுரளி கிருஷ்ணாவைக் கேட்டவுடன் அவர் இசைவு தெரிவித்தார். மறு நாள், நான் பயந்துகொண்டே போய் வாசித்தேன். அவர் எனக்கு மிகவும் ஆதரவு கொடுத்துப் பாடினார் — என்றார் திரு கிருஷ்ணமூர்த்தி

 

இதற்குப் பின், நான் பேசினேன்.

என் சிற்றுரை:

கூட்டத்தில் நான் (லண்டன் சுவாமிநாதன்) பேசியதாவது.

 

என்னைப் பேச அழைத்த வயலின் வித்வான் திரு நாகராஜு அவர்களுக்கு நன்றி.

டாக்டர் நந்தகுமாரா பேசி முடித்தவுடன் இதையெல்லாம் புத்தகமாக எழுதுங்கள் உங்கள் அனுபவம் எல்லாம், எதிர்கால சந்ததியினருக்குப் பயன்படும் என்றேன். அது போல கிருஷ்ணமூர்த்தி ஸாரும் அவரது அனுபவங்களை எழுத வேண்டும். அவர் நீண்ட காலத்துக்கு முன்னர் எதிர்பாராத விதமாக பாலமுரளிக்கு வாசித்தபோது அவர் எவ்வளவு ஆதரவு கொடுத்தாரோ அதை பாலமுரளி கிருஷ்ணா கடைசி வரை செய்து வந்ததை நான் FACE BOOK பேஸ் புக் மூலம் அறிவேன். தினமும் யாராவது ஒரு இளம் கலைஞர் பாலமுரளிகிருஷ்ணா அவர்களிடம் ஆசி பெறுவது போல படஙகள் வரும். நமக்குத் தெரியும்; பிரபல பாடகி சுதா ரகுநாதன் முதல் புதிய கலைஞர்கள் வரை அனைவரும் அவரது ஆசியையும் ஆதரவையும் பெற்றவர்கள் என்பது.

 

நான் ஒரு திரைப்படப் பாடல், இரண்டு சம்பவங்கள் , மூன்று திருக்குறள்கள் சொல்லி அதில் அவரது வாழ்வு எப்படிப் பின்னிப் பிணைந்துள்ளது என்று காட்ட விழைகிறேன்.

 

திருவிளையாடல் என்ற திரைப்படத்தில் ஒரு நாள் போதுமா என்ற அருமையான பாட்டு பாலமுரளி குரலில் ஒலித்தது. அதை எழுதியவர் கவிஞர் கண்ண்ணதாசன். கவிஞர்களின் வரிகள் எப்போதுமே தீர்க்கதரிசனம் உடைய வரிகள். அவர் பாலமுரளியின் வாய் மூலம் வரவழைத்த ஒவ்வொரு வரியும் எப்படி அவருக்குப் பொருந்துகிறது என்று பாருங்கள் (நான் ஆங்கிலத்தில் பேசியதால் ஒவ்வொரு வரியையும் தமிழில் சொல்லி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன்).

Mr Prabhakar Kaza, London swaminathan and Dr Nandakumara with his wife.

பாடல்: ஒருநாள் போதுமா? இன்றொரு நாள் போதுமா?
திரைப்படம்: திருவிளையாடல் (ஆண்டு 1965)
பாடியவர்: M. பாலமுரளிகிருஷ்ணா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: K.V. மஹாதேவன்

ஓரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா?
நான் பாட இன்றொரு நாள் போதுமா?

………………………………….

………………………….
ராகமா சுகராகமா கானமா தேவகானமா? – என்
கலைக்கிந்தத் திருநாடு சமமாகுமா? – என்
………………………………………
குழலென்றும் யாழென்றும் சிலர் கூறுவார் – என்
குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார்
அழியாத கலையென்று எனைப் பாடுவார் ஆ..
அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார் –

இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ?

……………………………….
கானடா.. ஆ.. என் பாட்டு தேனடா இசை தெய்வம் நானடா

 

 

கண்ணதாசன் வரிகளில் வந்தது போல பால முரளியின் கானம் தேவ கானம், அவருடைய பாட்டுக்கு இந்த நாடே இணையாகாது, அவரது பாட்டைக் கேட்க எல்லோரும் எழுந்தோடி வந்தனர்; அவர் சொன்னது போலவே அவர் இசைத் தெய்வம். எனக்கு முன்னே பேசியோரும் பாலமுரளியை சங்கீத சார்வபௌமன் என்றும் அவதாரம் என்றும் போற்றினர். எவ்வளவு உண்மை! எவ்வளவு உண்மை!

நான் சொல்ல விரும்பும் இரண்டு சம்பவங்களும் விக்கிபீடியாவில் உள்ள விஷயங்கள்தான். தந்தை விரும்பாதபோதும் எப்படி அவர் தானே ஒரு வயலின் செய்து வாசித்து தந்தையையும் இணங்க வைத்தார் என்பதும், அபூர்வ ராகங்கள் என்ற படத்திற்கு அவர் எப்படி மஹதி ராகத்தில் அதிசய ராகம் பாடல் எழுதினார் என்பதும் இரண்டு சம்பவங்கள் (விக்கி பீடியாவில் காண்க)

 

 

அடுத்ததாக மூன்று திருக்குறள்கள்; அவை எப்படி அவருக்குப் பொருந்துகிறது என்பதைச் சொல்கிறேன்.

Mr Nagaraju playing on violin

-தொடரும்…………………….

 

 

 

அன்னதான மகிமை: கைதியின் கண்ணீர் (Post No.3409)

Written by London swaminathan

 

Date: 2 December 2016

 

Time uploaded in London: 10-39 am

 

Post No.3409

 

Pictures are taken from various sources; thanks. They are representational.

 

contact; swami_48@yahoo.com

 

 

தமிழில் ஒரு பாடல் உண்டு; பசி வந்திடப் பத்தும் பறந்து போம். அதாவது

மானம்,  குலம்,  கல்வி, வலிமை,  அறிவு,  தானம்,  தவம், உயர்வு, தாளாண்மை/முயற்சி, காமம் எல்லாம் பசி வந்தவனிடத்தில் இருக்காது.

 

இதையே மாற்றிப் போட்டால், பசி இல்லாவிடில் இந்த பத்து குணங்களும் இருக்கும். அதனால்தான் இந்துக்கள் அன்னதானத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

 

லட்சம் பேர் சாப்பிட்டால், அதில் ஒருவர் நல்லவர் இருந்தாலும், அதன் காரணமாக நாட்டுக்கும், சமுதாயத்துக்கும் நன்மை விளையும் என்று காஞ்சி பரமாசார்யார் சொற்பொழிவில் கூறியுள்ளார். ஆனால் அன்னதானத்தின் மூலம் சிறைக் கைதியும் மனம்மாறிய செய்தி நேற்று பிரிட்டிஷ் (1-12-2016) பத்திரிக்கைகளில் வெளியாகியது.

 

 

கற்பழிப்புக் குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்–  அத்மி ஹெட்லி (வயது 34). அவர் சிறையிலிருந்து தப்பித்து ஓடினார்…. ஓடினார்…. மூன்று நாள் ஓடினார். பசி வயிற்றை வாட்டியது. மயக்கம் வந்து ‘தொப்’ என்று கீழே விழுந்தார்.

எங்கே தெரியுமா?

டாம் பிலிப்ஸ் (வயது 22), ஐடன் பைர்ன் (வயது 21) ஆகிய இருவர் வசித்த வீட்டின் வாசலில் விழுந்தார். அவர்கள் கதவைத் திறந்தவுடன் மயக்கம் தெளிந்து கொஞ்சம் தண்ணீர் கேட்டார் ஹெட்லி .

தண்ணீர் குடித்தவுடன் ஒரு வெடிகுண்டுச் செய்தியைப் போட்டார். பிள்ளைகளே , நீங்கள் என்னிடம் அன்பு காட்டினீர்கள். நான் உண்மையைச் சொல்லி விடுகிறேன். நான் லேஹில் சிறையிலிருந்து ஓடி வந்த கைதி. என் பெயர் அத்மி ஹெட்லி. சிறைவாசத்தின்போது நான் முஸ்லீமாக மதம் மாறிவிட்டேன். நீங்கள் போலீஸைக் கூப்பிட்டு என்னை ஒப்படைக்கலாம்.

 

ஆனால் மணவர்களோ உடனே அப்படி போலிஸைக் கூப்பிடவில்லை. “கொஞ்சம் பொறுங்கள்– சாப்பிட்டுவிட்டுப் போக லாம்” என்று சொல்லி, சுவையான, சூடான் உணவைச் சமைத்தனர். கோழிக்கறி, சூப், பாஸ்தா எல்லாம் சூடாகப் பறிமறினர் அன்புள்ளம் படைத்த மாணவர்கள்.

 

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் (ப்பாள்)?

கைதியின் கண்களில் இருந்து கண்ணீர் குபுகுபுவெனப் பாய்ந்தது.

மேலும் தனது சொந்தக் கதையைப் பகிர்ந்துகொண்டார்:

“எனக்கு 12 வயது மகன் உண்டு. அவனை 9 ஆண்டுகளாகப் பார்க்கவில்லை”.

 

உடனே இரண்டு மாணவர்களில் ஒருவரான பிலிப்ஸ் (பிரிஸ்டல் பல்கலைக் கழக தத்துவ இயல் மாணவர்), “அதனால் என்ன? கவலைப் படாதீர்கள். இதோ என் மொபைல் போன். உங்கள் மகனைக் கூபீட்டுப் பேசுங்கள்” என்று போனைக் கையில் கொடுத்தார்.

 

ஆனால் நாங்கள் ஏன் 9 ஆண்டுகளாக நீங்கள் பேசவில்லை? என்ன நேர்ந்தது என்று அந்தக் கைதியிடம் கேட்கவே இல்லை.- என்று மாணவர்கள் சொன்னார்கள் பத்திரிக்கை நிருபர்களிடம்!

 

கற்பழிப்புக் குற்றம் என்பது பயங்கரமான குற்றம்தான். ஆயினும் எங்கள் கண் முன் உணவும், தண்ணீரும் வேண்டும் என்று ஏங்கும் ஒரு மனிதனைத்தான் காண முடிந்தது;  குற்றவாளியைக் காணவில்லை. என்றும் மாணவர்கள் சொன்னார்கள்.

 

சாப்பிட்டு முடிந்த பின்னர் அந்தக் கைதி மாணவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார்: “நான் போலீஸில் போய்ச் சரணடைய வேண்டுமா? அல்லது ஓடிவிடட்டுமா?”

 

மாணவர்கள் சொன்னார்கள்: “எவ்வளவு சீக்கிரம் நீங்கள் சரண் அடைகிறீர்களோ அவ்வளவு சீக்கிரம் நீங்கள் விடுதலையாகி வெளியே வந்து விடுவீர்கள்”.

கைதியும் இதற்குச் சம்மதித்தவுடன் இருவரும் போலீஸ் ஸ்டேஷன் வரை, கைதியுடன் நடந்து சென்று அவரை ஒப்படைத்தனர். அவர் இரண்டு மாணவர்கலையும் அன்புடன் கட்டித் தழுவி விட்டு போலீஸிடம் சரண் அடைந்தார்.

 

தத்துவ இயல் மாணவர் பிலிப்ஸ் சொன்னார்: நாங்களும் அந்தக் கைதிக்கு நன்றிக் கடன்பட்டுள்ளோம். ஒரு கற்பழிப்புக் காரனின் உண்மைக் கதையைக் கேட்க முடிந்தது. முன்னததாக ஏவன் –சாமர்செட் நகர் போலீஸார் வெளியிட்ட அறிவிப்பில், “கைதி ஹெட்லி பயங்கரமானவன் – யாரும் அருகில் நெருங்க வேண்டாம்; எங்களுக்குத் தகவல் மட்டும் தாருங்கள்” என்று ஹெட்லியின் படத்துடன் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.

 

அன்பிற்கும் அன்ன தானத்துக்கும் சக்தி உண்டு!

 

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கண்நீர் பூசல் தரும் (குறள் 71)

 

பொருள்:-

அன்பை, பிறர் அறியாமல்  மறைத்து வைக்கும் கதவோ தாழ்ப்பாளோ உண்டா? கண்களிலிருந்து பெருகும் கண்ணீரே அந்த அன்பினைப் பலரும் அறியும்படி பறை சாற்றிவிடும்.

 

–சுபம்–

42 திருவாசகப் பொன்மொழிகள் (Post No.3404)

டிசம்பர் 2016  காலண்டர்

Compiled by london swminathan

 

Date: 30 November 2016

 

Time uploaded in London: 22-09

 

Post No.3404

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

 

contact; swami_48@yahoo.com

 

December 2016  ‘Good Thoughts’ Calendar

டிசம்பர் 12 : கார்த்திகை தீபம், 13- சர்வாலய தீபம், 13- மிலாடி நபி,  25- கிறிஸ்துமஸ்; ஏகாதசி- 10, 24/25; பௌர்ணமி -13;  அமாவாசை-28; முகூர்த்த தினங்கள்–1, 4, 5, 9

 

தொல்லை இரும்பிறவிச் சூழும் தளை நீக்கி

அல்லல் அறுத்து ஆனந்தமாக்கியதே – எல்லை

மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்

திருவாசகம் எனும் தேன்

xxx

டிசம்பர் 1 வியாழக்கிழமை

நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க

இமைப்பொழுதும் என் நெஞ்சின் நீங்காதான் தாள் வாழ்க

 

xxx

டிசம்பர் 2 வெள்ளிக்கிழமை

உய்ய என்னுள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற

மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்

ஐயா எனவோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே

xxx

டிசம்பர் 3 சனிக்கிழமை

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே

மாசற்ற சோதி மலர்ச்சுடரே

 

xxx

டிசம்பர் 4 ஞாயிற்றுக்கிழமை

 

போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே

காக்கும் எம் காவலனே காண்பரிய பேரொளியே

xxxx

டிசம்பர் 5 திங்கட்கிழமை

 

சிவனவன் என் சிந்தையுள் நின்ற அதனால்

அவனருளாலே அவந்தாள் வனங்கி

xxxx

 

டிசம்பர் 6 செவ்வாய்க்கிழமை

 

புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகி

………. எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்

—சிவபுராணம்

 

xxx

 

டிசம்பர் 7  புதன்கிழமை

 

மன்னு மாமலை மகேந்திரமதனில்

சொன்ன ஆகமம் தோற்றுவித்தருளியும்

–கீர்த்தித் திரு அகவல்

xxxx

டிசம்பர் 8 வியாழக்கிழமை

அண்டப்பகுதியின் உண்டைப் பிறக்கம்

அளப்பருந்தன்மை வளப்பெருங் காட்சி

ஒன்றனுக்கொன்று நின்றெழில் பகரின்

நூற்றொருகோடியின் மேற்பட விரிந்தன

–திருவண்டப்பகுதி

 

xxx

டிசம்பர் 9 வெள்ளிக்கிழமை

சொற்பதம் கடந்த தொல்லோன் காண்க

சித்தமும் செல்லாட் சேட்சியன் காண்க

பக்தி வலையிற் படுவோன் காண்க

–திருவண்டப்பகுதி

xxxx

டிசம்பர் 10 சனிக்கிழமை

 

ஆறுகோடி மாயா சக்திகள்

வேறு வேறுதம் மாயைகள் தொடங்கின

ஆத்தமானார் அயலவர் கூடி

நாத்திகம் பேசி நாத்தழும்பேறினர்

–போற்றித் திரு அகவல்

xxx

 

டிசம்பர் 11 ஞாயிற்றுக்கிழமை

சமயவாதிகள் தத்தம் மதங்களே

அமைவதாக அரற்றி மலைந்தனர்

மிண்டியமாயாவாதம் என்னும்

சண்டமாருதஞ் சுழித்தடித்தார்த்து

உலோகாதயனெனும் ஒண்டிறர்பாம்பின்

கலாபேதத்த கடுவிடம் எய்தி

–போற்றித் திரு அகவல்

xxx

டிசம்பர் 12 திங்கட்கிழமை

ஐயா போற்றி அணுவே போற்றி

சைவா போற்றி தலைவா போற்றி

–போற்றித் திரு அகவல்

xxx

டிசம்பர் 13 செவ்வாய்க்கிழமை

தென்னாடுடைய சிவனே போற்றி

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

ஏனக் குருளைக்கருளினை போற்றி

மானக் கயிலை மலையாய் போற்றி

–போற்றித் திரு அகவல்

xxx

டிசம்பர் 14  புதன்கிழமை

 

புலிமுலை புல்வாய்க்கருளினை போற்றி

அலைகடன் மீமிசை நடந்தாய் போற்றி

 

கருங் குருவிக் கன்றருளினை போற்றி

இரும்புலன் புலர இசைந்தனை போற்றி

–போற்றித் திரு அகவல்

xxx

டிசம்பர் 15 வியாழக்கிழமை

நாடகதாலுன்னடியார்

போனடித்து நானடுவே

வீடகத்தே புகுந்திடுவான்

மிகப்பெரிதும் விரைகின்றே

–திருச்சதகம்

xxxx

 

டிசம்பர் 16 வெள்ளிக்கிழமை

 

யாமார்க்குங் குடியல்லோம் யாதும் அஞ்சோம்

மேவினோம் அவனடியாரடியாரோடு

மேன்மேலுங் குடைந்தாடி ஆடுவோமே

–திருச்சதகம்

xxx

டிசம்பர் 17 சனிக்கிழமை

பட்டிமண்டபமேற்றினை யேற்றினை

எட்டினோடும் இரண்டும் அறியேனையே

–திருச்சதகம்

xxx

டிசம்பர் 18 ஞாயிற்றுக்கிழமை

யானே பொய் என்நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்

ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே

–திருச்சதகம்

xxx

டிசம்பர் 19 திங்கட்கிழமை

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே

பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே

–திருவெம்பாவை

xxx

டிசம்பர் 20 செவ்வாய்க்கிழமை

தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டானைப்

பெண்ணாளும் பாகனைப்பேணு பெருந்துறையில்

–திருவம்மானை

xxx

 

டிசம்பர் 21  புதன்கிழமை

தேசமெல்லாம் புகழ்ந்தாடும் கச்சித்

திருவேகம்பன் செம்பொற் கோயில் பாடி

–திருப்பொற்சுண்ணம்

xxxx

டிசம்பர் 22 வியாழக்கிழமை

ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமில்லார்காயிரம்

திருநாம் பாடி நாம் தெள்ளெணங் கொட்டாமோ

–திருத்தெள்ளேணம்

xxx

டிசம்பர் 23 வெள்ளிக்கிழமை

 

கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை

தாயுமிலி தந்தையிலி தான்றனியன் காணேடீ

–திருச்சாழல்

xxx

டிசம்பர் 24 சனிக்கிழமை

மண்பால் மதுரையிற் பிட்டமுது செய்தருளித்

தண்டாலே பாண்டியன் றன்னைப் பணிகொண்ட

புண்பாடல் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ

–திருப்பூவல்லி

xx

டிசம்பர் 25 ஞாயிற்றுக்கிழமை

பாலகனார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட

கோலச் சடையற்கே உந்தீ பற

குமரன்றன் தாதைக்கே உந்தீபற

–திருவுந்தியார்

xxx

 

டிசம்பர் 26 திங்கட்கிழமை

 

ஏழைத் தொழும்பனேன் எத்தனையோ காலமெல்லாம்

பாழுக்கிறைத்தேன் பரம்பரனைப் பணியாதே

—–திருத்தோணோக்கம்

xxxx

டிசம்பர் 27 செவ்வாய்க்கிழமை

தேன்பழச் சோலை பயிலுஞ்

சிறுகுயிலேயிது கேள் நீ

வான் பழித்திம் மண்புகுந்து

மனிதரை  யாட்கொண்ட வள்ளல்

—குயிற்பத்து

xxxx

டிசம்பர் 28 புதன்கிழமை

தந்ததுன் றன்னைக் கொண்டதென்றன்னைச்

சங்கரா ஆர்கொலோ சதுரர்

அந்தமொன்றில்லா ஆனந்தம் பெற்றேன்

யாது நீ பெற்றது என்பால்

–கோயில் திருப்பதிகம்

xxxx

டிசம்பர் 29 வியாழக்கிழமை

பவளத் திருவாயால்

அஞ்சேலென்ன ஆசைப்பட்டேன்

கண்டாய் அம்மானே

–ஆசைப்பத்து

xxxx

டிசம்பர் 30 வெள்ளிக்கிழமை

 

சொல்லும் பொருளும் இறந்த சுடரை

நெல்லிக்கனியைத் தேனைப் பாலை

நிறையின் அமுதை அமுதின் சுவையை

–புணர்ச்சிப்பத்து

xxxx

 

டிசம்பர் 31 சனிக்கிழமை

 

பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப்பா

பரகதி கொடுத்தருள் செய்யும்

சித்தனே

–அருட்பத்து

xxx

சிந்தைதனைத் தெளிவித்துச் சிவமாக்கி எனையாண்ட

அந்தமிலா ஆனந்தம் அணிகொடில்லை கண்டேனே

–கண்டபத்து

xxxx

சாதிகுலம் பிறப்பென்னும் சுழிபட்டுத் தடுமாறும்

ஆதமிலி நாயேனை அல்லல் அறுத்து ஆட்கொண்டு

–கண்டபத்து

xxxx

பிழைத்தாற் பொறுக்க வேண்டாவோ

பிறைசேர் சடையாய் முறையோவென்

றழைத்தால் அருளா தொழிவதே

அம்மானேயுன் அடியேற்கே

–குழைத்தபத்து

 

xxx

வேண்டத்தக்கது அறிவோய் நீ

வேண்டமுழுதும் தருவோய் நீ

வேண்டும் அயன்மாற் கரியோய் நீ

வேண்டியென்னைப் பணி கொண்டாய்

–குழைத்தபத்து

xxx

 

மற்றுமோர் தெய்வந்தன்னை

உண்டென நினைந்தெம் பெம்மாற்

கற்றிலாதவரைக் கண்டால்

அம்மநாம் அஞ்சுமாறே

–அச்சப்பத்து

xxx

ஆலமுண்டான் எங்கள் பாண்டிப்

பிரான் தன் அடியவர்க்கு

மூல பண்டாரம் வழங்குகின்றான் வந்து முந்துமினே

–திருப்பாண்டிப் பதிகம்

xxxxx

சடையானே தழலாடீ தயங்கு மூவிலைச் ச்சூலப்

படையானே பரஞ்சோதீ பசுபதீ மழவெள்ளை விடையானே

—திருப்புலம்பல்

xxx

மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்த

தேவரும் காணாச் சிவபெருமான்

–திருவெண்பா

xxxx

இன்பம்பெருக்கி இருளகற்றி எஞ்ஞான்றும்

துன்பந் தொடர்வறுத்துச் சோதியாய் – அன்பமைத்து…….

–திருவெண்பா

xxxxxxxxxxx

முன்னை வினை இரண்டும் வேரறுத்து முன்னின்றான்

பின்னைப் பிறப்பறுக்கும் பேராளன்

–திருவெண்பா

 

xxx

உய்யுநெறி காட்டுவித்திட்

டோங்காரத் துட்பொருளை

ஐயனெனக் கருளியவா

றார்பெறுவார் அச்சோவே

—அச்சோப்பதிகம்

 

 

 

—subham—

நோஞ்சான் குதிரை மூலம் லிங்கன் சொன்ன புத்திமதி! (Post No.3367)

Written by London Swaminathan

 

Date: 18 November 2016

 

Time uploaded in London: 9-38 am

 

Post No.3367

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

 

அமெரிக்காவின் ஜனாதிபதி ஆவதற்கு முன் ஆப்ரஹாம் லிங்கன் வக்கீல் தொழில் செய்துவந்தார். ஒரு நாள் வயதான, எலும்பும் தோலுமான தனது நோஞ்சான் குதிரை மீது லூயிஸ்டன் கோர்ட்டுக்குப் பயணமானார்.

 

அந்தக் குதிரை தெனாலிராமன் குதிரை போன்றது. முன்னே இரண்டு பேர் இழுக்க, பின்னே இரண்டு பேர் தள்ள, பத்து தப்பிடி நகரும். அவ்வளவுதான்.

 

அவர் குதிரை ஒரு வயக்காட்டு வழியே போன போது நடந்த சம்பாஷணை:-

 

ஏய் அபி (Abraham Lincoln) ! என்ன லூயிஸ்டன் கோர்ட்டுக்குப் போறியா?

 

ஆமாம், டாமி மாமா (Uncle Tommy). நீங்க சவுக்கியமா இருக்கீங்களா?

 

ம்ம்ம்ம்ம்……. இருக்கேன்……..

 

என்ன அங்கிள் டாமி? ஏதாவது பிரச்சனையா? இழுத்து…… இழுத்து …….. பேசுறீங்களே

 

இல்ல, நானும் லூயிஸ்டன் கோர்ட்டுக்கு வந்து உன்ன பாக்கறேன்.

 

என்ன மாமா. கோர்ட்டு, கீர்ட்டுன்னு பேசறீங்க !என்ன பிரச்சன?

 

ஒன்னுமில்ல. எல்லாம் நம்ம பக்கத்து நிலம் ஜிம்மிதான் — கொஞ்சம் அத்து மீறி போயிட்டிருக்கான்.

அவன கோர்ட்டுல ஒரு கை பாக்கனும்.

 

மாமா, இருங்க, பொறுங்க. நீங்களும் ஜிம்மியும் எத்தன வருஷம் பக்கத்துல பக்கத்துல வசிக்கிறீங்க.

என்ன ஒரு 25 வருஷம் இருக்கும்னு நினக்கிறேன்

என்ன மாமா இது? 25 வருஷமா சேர்ந்து வசித்துவிட்டு இப்ப கோர்ட் பத்திப் பேசறீங்க.

 

மாமா என் குதிரையை பாருங்க. இதுவும் 10, 15 வருஷமா இருக்கு. எப்படி நடக்குதுன்னு நீங்களே பாருங்க. முன்ன எல்லாம் ஒழுங்காத்தான் போச்சு. இப்ப அது மேல நான் கோபப்படுறேனா. இல்லையே.

 

அவ்வளவுதான்! அதோட “அட்ஜஸ்ட்” பண்ணி போறேன்.

 

நோஞ்சான், நொண்டி என்று தூக்கிப்போட முடியுமா?

 

அப்ப நீ சொல்ற. நானும், உன்னைப் போல பொறுமையாய் அட்ஜஸ்ட பண்ணிட்டு போனும்; வழக்கு வாய்தான்னு வம்பு வேண்டாங்கற.

 

பின்ன? அங்கிள் டாமி,  பழைய குதிரை போல நண்பரையும் பாருங்க.

 

சரீப்பா, அபி, நீ சொல்றதும் சரியாத்தான் படறது.

 

இதைக் கேட்டவுடன் ஆப்ரஹாம் லிங்கனின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

 

கோர்ட்டுக்கு வரும் முன்னரே ஒரு வழக்கைத் தீர்த்துவிட்ட பெருமிதம் அவர் முகத்தில் பளிச்சிட்டது.

அவரது நோஞ்சான் குதிரை முன்னைவிட சிறிது வேகமாக லூயிஸ்டன் நீதிமன்றத்தை நோக்கி நடைபோட்டது!

 

நாய் “வாலால்” கடிக்கட்டுமே!

 

அமெரிக்காவில் லாங் ஐலண்ட் (LONG ISLAND) ராணுவ முகாம் அருகில் ஒரு பெரிய எஸ்டேட் இருந்தது. அங்கே பாதுகாப்புக்காக நல்ல உயர்தர, விலை மதிப்புள்ள நாய்களை பாதுகாப்புக்காக வைத்திருந்தனர். ஒரு நாள், ஒரு நாய் ராணுவ முகாம் பாதுகாவலரைக் (Army Camp Sentry) கடித்துவிட்டது. அவர் கோபத்தால் துப்பாக்கி  சனியனால் (துப்பாக்கி  முனையில் சொருகப்பட்ட கத்தி Bayonet) நாயைக் கொன்றுவிட்டார்.

 

 

நாயின் சொந்தக்காரர் வழக்கு போட்டார். வழக்கு விசாரணை நாளும் வந்தது. நாயின் சொந்தக்காரர் , அந்தக் காவலரை தன்னுடைய நாய் அப்படி ஒன்றும் கடித்துக் குதறிவிடவில்லை என்று நிரூபித்தார்.

 

உடனே நீதிபதி கேட்டார்:

ஏம்பா. உன்னை நாய் ஒன்றும் அப்படிப் பெரிதாக கடிக்கவில்லையே! துப்பாக்கி முனை கத்தியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக அதன் பின்புறப்பகுதியால் (Rifle Butt) அடித்து விரட்டி இருக்கக் கூடாதா?

உடனே அந்தக் காவலர் பளிச்சென்று பதில் தந்தார்”

 

அது சரி கனம் நீதிபதி அவர்களே! அந்த நாயும் முன்பக்கத்தால் கடிக்காமல் அதன் பின்புற வாலால் என்னைக் கடிக்கக்கூடாதா?

 

நீதிபதி  இந்தப் பதிலைக் கேட்டு திகைத்துப் போனார்!

 

–Subham–

கம்பனில்,திருவாசகத்தில் ‘இயம் சீதா மம சுதா’! (Post No.3350)

Written by London Swaminathan

 

Date: 13 November 2016

 

Time uploaded in London: 14-15

 

Post No.3350

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

இயம் சீதா மம சுதா

“இவள் என் மகள் சீதை; இவளை உன் மனைவியாக ஏற்பாயாக; இவள் கையை உன் கைகளால் பற்றுவாயாக; இவள் உன்னை நிழல் போல தொடர்ந்து வரட்டும்” — என்று ஜனக மகாராஜன் சொன்ன சொற்கள் மிகவும் புகழ் பெற்றவை. இது பிற்காலத்தில், மகளைக் கொடுக்கும் எல்லா தந்தையரும் சொல்லும்  சொற்களாக, வாக்கியமாக மாறிவிட்டது.

இயம் சீதா மம சுதா ஸஹதர்மசரீ தவ!, ப்ரதீச்ச சைநாம் பத்ரந்தே பாணீம், க்ருண் ஹீஷ்வ பாணிநா”– பால காண்டம், வால்மீகி ராமாயணம்.

 

Siva and Uma kalyan

திருவாசகத்தில்

 

மாணிக்க வாசகரும் கூட இந்தச் சொற்ளை அப்படியே பயன்படுத்தியுள்ளர். அவருக்குப் பின்னர் வந்த கம்பன், பயன்படுத்தியதில் வியப்பில்லை. ஏனெனில் அவரே தான் வால்மீகி யைப் பின்பற்றி ராமாயணத்தை இயற்றியதாகக் கூறுகிறார்.

 

திருவாசகத்தின் ஒரு பகுதியான திருவெம்பாவையில் வரும் பாடல் இதோ:-

உன்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்

றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்

எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப் போங்ககேள்

 

-திருவெம்பாவை, 19

மாணிக்கவாசகருடன் 60 வினாடி பேட்டி (POSTED ON 15TH JANUARY 2012) என்ற எனது பழைய கற்பனைப் பேட்டியிலும் இதைக் குறிப்பிட்டுள்ளேன்

 

 

Siva and Parvati wedding, Ellora

கம்ப ராமாயணத்தில்

 

கம்பனும் இதை ராமன் வாயிலாக வெளிப்படுத்துகிறான் (கார்காலப் படலம், கிட்கிந்தா காண்டம்)

 

நெய்யடை தீ எதிர் நிறுவி நிற்கு இவள்

கைய்யடை என்ற அச் சனகன் கட்டுரை

பொய்யடை ஆக்கிய பொறி இலேனொடு

மெய்யடையாது இனி விளிதல் நன்றரோ

 

பொருள்:-

இராமன், இலக்குவனை நோக்கிச் சொன்னது:– நெய்வார்த்து உண்டாக்கப்பட்ட ஹோமத்தீயின்   முன்னால், சீதையைக் கொண்டுவந்து நிறுத்தி, இவள் உனக்கு அடைக்கலம் என்று என்னிடம் ஜனகன் கூறினான். அந்த சொற்களை இன்று பொய்யாக்கிவிட்டேனே. இனிமேல் நான் இதை மெய்யாக்க முடியாது. ஆகையால் நான் இறப்பதே மேல்.

 

இன்றும் கூடப் பெண்களைத் திருமணம் செய்து கொடுபோர், “ இனி இது உங்கள் வீட்டுப் (பெண்) பிள்ளை; உங்களிடம் அடைக்கலம் புகுந்துவிட்டாள்; கண்மணி போலக் காப்பாற்றுஙள்” -என்று சொல்லி (ஆனந்தக்) கண்ணீர் விடுவதைக் காணலாம்.

 

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஜனகன் சொன்ன அந்த சத்திய வாக்கியம் “இயம் சீதா மம சுதா” — காலத்தால் என்றும் அழியாத கல்லெழுத்து ஆகிவிட்டது. இவள் உன்னை நிழல் போலப் பிந்தொடர்வாள் — என்று ஜனகன் சொன்ன சொல்லும் உண்மையானது. கானகம் என்பது கொடிய விலங்குகள் வாழும் இடம் என்ற போதும் அவன் பின்னால் நிழல் போலப் போனாளே அந்தப் பெண்ணரசி! ஒவ்வொரு கட்டத்திலும் யாரும் எதிர்பாராத அளவுக்கு நல்ல செயல்களைத் துணிந்து செய்த கதா பாத்திரங்களினால் என்றும் அழியாத காவியம் ஆகிவிட்டது இராமாயணம்!

 

–subham–

 

 

 

டைரக்டராக, கவிஞராக உங்களிடம் ‘ஃப்ளோ’ இருக்கிறதா? (Post No.3349)

Written by S NAGARAJAN

 

Date: 13 November 2016

 

Time uploaded in London: 5-15 AM

 

Post No.3349

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

 

அறிவியல் துளிகள் தொடரில் பாக்யாவில் வெளிவந்துள்ள கட்டுரை

டைரக்டராக, கவிஞராக, எழுத்தாளராக உங்களிடம் ‘ஃப்ளோ இருக்கிறதா?

ச.நாகராஜன்

 

“பெரிய மனங்கள் கருத்துக்களை விவாதிக்கின்றன.சராசரி மனங்களோ நிகழ்வுகளை விவாதிக்கின்றன. அல்ப மனங்களோவெனில் மனிதர்களை விமரிசிக்கின்றன – ஹென்றி தாமஸ் பக்கிள்

     இன்று வாழ்ந்து  கொண்டிருக்கும் மிகச் சிறந்த விஞ்ஞானிகளுள் ஒருவரான மிஹாலி சிக்ஸெண்ட்மிஹாலி (Mihaly Csikszentmihalyi) படைப்பாற்றல் பற்றி நன்கு ஆராய்ந்தவர். அதைப் பற்றி உலகில் பேசுவதற்குத் தகுதியான முதல் நிபுணர் இவரே.

இவரது படைப்பாற்றல் பற்றிய புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் விற்று சாதனை படைத்துள்ளன.

 

 

சிறந்த டைரக்டராக, பெரிய கவிஞராக, பிரபல எழுத்தாளராக உங்களுக்குத் தேவையானது ‘ஃப்ளோ (FLOW) – அதாவது ஓட்டம் தான் என்கிறார் இவர்.

ஃப்ளோ பற்றிய அரும் தகவலை இவர் விளக்கும் விதமே அலாதியானது!

 

 

இன்றைய நவீன விஞ்ஞான, தகவல் புரட்சி உலகில் நாம் பெறும் தகவலின் அளவு பிரம்மாண்டமானது. நமது மைய நரம்பு மண்டலம் எவ்வளவு தகவலை உள்வாங்கி முறைப்படுத்த முடியும் என்பது பற்றி இவர் ஆராய்ந்துள்ளார்.

 

 

எந்த மனிதனாக இருந்தாலும் கூட அவனால் ஏழு பிட்ஸ் தகவலை (7 bits of information) மட்டுமே ஒரு நேரத்தில் சமாளிக்க முடியும் என்கிறார் இவர். ஒலியாகட்டும், பார்க்கின்ற காட்சித் தூண்டுதல்கள் ஆகட்டும், அல்லது உணர்ச்சிகள் அல்லது எண்ணங்களாகட்டும் ஏழு பிட்ஸ் தான் மனிதன் ஏற்கக் கூடிய அளவு ஆகும்!

 

 

ஒரு செட் பிட்ஸ் தகவலை இன்னொரு தொகுப்பு பிட்ஸ் தகவலுடன்  ஒப்பிட மூளை எடுத்துக் கொள்ளும் நேரம் வினாடியில் பதினெட்டில் ஒரு பாகமே ஆகும். அதாவது ஒரு வினாடிக்கு நாம் 126 பிட்ஸ் தகவலை மட்டுமே முறைப்படுத்த முடியும். இந்தக் கணக்கில் ஒரு நிமிட நேரத்திற்கு 7560 பிட்ஸ் தகவலை நாம் முறைப்படுத்தலாம்.

 

 

ஒரு மணி நேரத்திற்கு சுமார் ஐந்து லட்சம் பிட்ஸ் என்ற அளவை நாம் இதிலிருந்து பெறுகிறோம்!

ஒரு மனிதனுக்கு 70 வயது என்று சராசரியாக வைத்துக் கொள்வோம். சராசரியாக ஒரு நாளைக்கு ஒருவர் 16 மணி நேரம் விழித்திருப்பார் என்று வைத்துக் கொண்டால் அவர் முறைப்படுத்தக் கூடிய தகவலின் அளவு 185 பில்லியன் என்று ஆகிறது. (ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி)

 

 

இந்த 18500 கோடி தகவலிலிருந்து தான் வாழ்க்கையில் நாம் அனைத்தையும் பெறுகிறோம். நம் வாழ்க்கை எப்படி அமைகிறது என்பதும் இதைப் பொறுத்ததே!

 சரி, ஒருவரின் வாழ்க்கையில் விழித்திருக்கும் நேரத்தில் அன்றாடத் தேவைகளுக்கு –  பல் துலக்குவது, ஷேவ் செய்வது, குளிப்பது, சாப்பிடுவது போன்றவற்றிற்கு 15  சதவிகித உணர்வு தேவையாக இருக்கிறது. அவற்றில் ஈடுபடும் போது இதர சிக்கலான விஷயங்களில் மனதை ஒருமைப்படுத்த முடியாது.. மற்ற நேரங்களில்?

 

 விந்தை என்னவெனில் இது போன்ற எதுவும் இல்லாத போதிலும் கூட பெரும்பாலான மனிதர்கள் தங்கள் மனதை எதிலும் ஈடுபடுத்திப் பயன்படுத்துவதில்லை என்பது தான்!

ஓய்வு நேரத்தில் டெலிவிஷன் பெட்டிக்கு முன்னர் அமர்ந்து விடுகிறார்கள் உலக மக்கள்!

 

 

டெலிவிஷன் பார்ப்பதில் தகவல்களை முறைப்படுத்துவது என்பது மிகவும் எளிதாக இருக்கிறது. காணுகின்ற காட்சிகளுக்கு பெரிதாக நினைவாற்றல், எண்ணுதல், முடிவெடுத்தல் போன்ற எதுவும் தேவையில்லை.

பார்ப்பது, பார்த்துக் கொண்டே இருப்பது – அவ்வளவு தான்!

 

 

ஒரு சிக்கலான நேரத்தில் என்ன நடக்கிறது என்பதைக் கணிப்பது, தகவல்களை முறைப்படுத்தி மதிப்பிடுவது, உடனே அவசரமாக முடிவெடுப்பது போன்றவற்றிற்கு மனதின் குறைந்தபட்ச முறைப்படுத்தும் திறனே தேவை. எடுத்துக்காட்டாக ஒரு தெருவின் திருப்பத்தில் காரை வேகமாகத் திருப்பும் ஒரு டிரைவர் அப்போது தன் கையில் உள்ள தான் பேசிக் கொண்டிருக்கும் செல் போனை நிறுத்தி விடுகிறார் – இல்லையேல் விபத்து அல்லவா ஏற்படும்!

 

ஒரு சில கணங்களே என்றாலும் கூட தான் செய்வதில் தீவிர கவனம் இருந்தால் மட்டுமே அவரால் விபத்தைத் தடுக்க முடியும்!

ஒரு மனிதன் எந்த ஒரு விஷயத்திலும் வெற்றி பெற வேண்டுமெனில் தீவிரமான கவனம் வேண்டும். அத்துடன் தான் செய்கின்ற வேலையில் மனதை முழுவதுமாகச் செலுத்துவதோடு அதை விரும்பிச் செய்ய வேண்டும். அந்த வேலையில் ஒரு விதமான பரவச நிலையினை அடையும் போது அவனது படைப்பாற்றல் முழுமை பெறுகிறது. இன்னதென்று விவரிக்க முடியாதபடி மிதப்பது போன்ற ஒரு நிலை அவனுக்கு ஏற்படுகிறது. அது தான் ஃப்ளோ!

 

 

ஒருவன் எப்போது இந்த அரிய ஃப்ளோ நிலையை எய்துகிறானோ அவன் எந்தத் துறையைச் சேர்ந்தவனாக இருந்தாலும் சரி, அவனால் உன்னதமான படைப்பாற்றலைக் கொள்ள முடியும்.

ஒரு கவிஞராக இருந்தால் சிறந்த கவிதை பிறக்கும். ஒரு டைரக்டராக இருந்தால் அவரது காட்சியில் மூழ்கிப் பரவசராகி காட்சியுடன் ஒன்றி ஒரு மிதக்கும் நிலை ஏற்படும். ஒரு எழுத்தாளராக இருந்தால் அவர் தன்னை மறந்து தன் எழுத்தில் மூழ்கி விடுவார்.

 

 

அப்போது படைப்பாற்றல் துள்ளிக் குதிக்க தனது அப்போதைய கவனத்தில் தான் செய்ய விரும்புவதில் அந்தப் படைப்பாளி வெற்றி பெறுகிறார்.

ஒருவர் ஃப்ளோவை அனுபவித்து உணர ஆறு காரணிகள் உண்டு:

  • ஒரு விஷயத்தில் நிகழ்காலத்தில் அந்தக் கணத்தில் அதி தீவிரமான கவனக் குவிப்புடன் கூடிய ஒருமைப்படுத்தப்பட்ட மனம்.
  • விழிப்புணர்வும் செயலும் இரண்டு என்றில்லாமல் ஒன்றாக மாறுதல்
  • தனது சுய உணர்வை முற்றிலுமாக இழந்து செயலில் ஒன்றி இருத்தல்
  • தனது செயல்பாட்டில் ஒரு கட்டுப்பாட்டைத் தான் கொள்ளுதல்
  • அந்தச் செயலைச் செய்யும் போது நேரம் பற்றிய உணர்வை  முற்றிலுமாக இழத்தல். அதாவது பல மணி நேரம் கூட ஒரு சில நிமிடங்களாகத் தோன்றும்
  • அந்த அனுபவம் ஒரு மிகச் சிறந்த பரிசு போன்ற ஒன்றாக படைப்பாளிக்கு அமைதல்

 

ஒருவரது திறமை, ஆர்வம், கவனக் குவிப்பு ஆகிய அனைத்தும் இணைந்து தன் குறிக்கோளை அடையும் போது,  திடீரென்று எதிரில் ஒரு கதவு திறந்து வெட்டவெளியில் மிதப்பது போன்ற உணர்ச்சி ஏற்படுகிறதே அது தான் படைப்பாற்றல் வெற்றிக்கான ஓட்டம் அல்லது ‘ஃப்ளோ ஆகும்.

 

இந்த மெய்மறந்த நிலையை எய்துவது என்பது சுலபமே என்பதை உலகின் தலை சிறந்த படைப்பாளிகள் நிரூபித்துள்ளனர். அவர்களுக்குத் தனிமையில் இருப்பது என்பது ஒரு ஊக்கியாகச் செயல்படுகிறது என்பதே மிஹாலியின் கண்டு பிடிப்பு.

இந்த நிலையை எய்தும் போது ஒவ்வொருவரும் ஒரு சிறந்த படைப்பாளியே!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில .. …

 

அலெக்ஸாண்டர் டி ஸெவர்ஸ்கி (Alexander de Severrsky) என்பவர் ஒரு சிறந்த விமான வடிவமைப்பாளர்.

முதல் உலகப் போரில் அவர் ஒரு காலை இழந்திருந்தார். மரத்தினாலான செயற்கைக் காலைப் பொருத்திக் கொண்டிருந்தார்.

ஆகவே இரண்டாம் உலகப் போரில் ஒரு கை அல்லது ஒரு காலை இழந்த போர்வீரர்களைச் சந்தித்து உற்சாகப்படுத்த ஒரு மருத்துவ மனைக்கு அவர் சென்றார்.

 

 

தனது அனுபவத்தைச் சொல்லி போர் வீரர்களை அவர் உற்சாகப் படுத்தினார். ஒரு காலுடன் இருக்கும் போது குறைந்தபட்சம் ஒரே ஒரு ஆதாயம் நிச்சயமாக இருக்கிறது என்று கூறிய அவர் இழந்த காலில் மரத்தினால் ஆன செயற்கைக் கால் பொருத்தப்பட்டிருப்பதால் அதில் வலியே இருக்காது என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.

இதை நிருபித்துக் காட்டும் விதமாக ஒரு போர்வீரரிடம் கம்பு ஒன்றைக் கொடுத்து, “சும்மா காலில் அடியுங்கள் என்றார்.

 

 

அவரும் ஸெவர்ஸ்கியின் காலில் அடித்தார். ஸெவர்ஸ்கி பெரிதாகச் சிரித்தார். அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர்.

பிறகு அறையை விட்டு வெளியே வந்த அவர் ஓவென்று அலறினார்.

மருத்துவமனை அதிகாரிகள் திடுக்கிட்டு, என்ன, என்ன என்று பதறிப் போய் அவரிடம் வினவினர்.

“அந்த ராணுவ வீரர் எனது தவறான காலில் ஓங்கி அடித்து விட்டார் என்றார் ஸெவர்ஸ்கி

 

 

செயற்கைக் காலில் அடிப்பதற்குப் பதிலாக நிஜக்காலில் அடித்தால் வலிக்காதா, என்ன?

சிரிப்பதா, வேதனைப்படுவதா என்று புரியாமல் மருத்துவமனை அதிகாரிகள் திகைத்தனர்!

ஸெவர்ஸ்கியோ சிரித்துக் கொண்டே வலியுடன் வெளியேறினார்!

******

 

பந்தரைத் தந்த மஹாராஜா (Post No.3323)

 

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 6  November 2016

 

Time uploaded in London: 6-14 AM

 

Post No.3323

 

 

Pictures are taken from various sources; thanks. This picture is from a Facebook friend.Thanks.

Contact: swami_48@yahoo.com

 

.பாக்யா 4-11-2016 தீபாவளி இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

பந்தரைத் தந்த மஹாராஜா

 

ச.நாகராஜன்

 

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நடந்த உண்மையான சம்பவம் இது!

பிரிட்டிஷாரின் சூழ்ச்சியைப் புரிந்து  கொண்ட் சில மஹாராஜாக்கள் இங்கிலாந்து மேலிடத்தை ஏளனம் செய்த நிகழ்ச்சிகள் ஏராளம் உண்டு.அவற்றில் இதுவும் ஒன்று.

 

குஜராத்தில் ஜுனாகத் போர்ட் ஆஃப் பந்தர் ஒரு முக்கியமான துறைமுகம். ஜுனாகத்தை எப்படியாவது பிரிட்டிஷாரின் வசம் கொண்டு வர வேண்டும் என்று விரும்பிய இங்கிலாந்து அதன் அரசியல் பிரதிநிதியாக் இந்தியாவில் இருந்த ரெஸிடெண்டிற்கு ஒரு உத்தரவைப் பிறப்பித்தது.

 

 

“என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் போர்ட் ஆஃப் பந்த்ரை ஜுனாகத் நவாபிடமிருந்து பெறுங்கள்” என்ற உத்தரவைக் கண்ட ரெஸிடெண்ட் தீவிரமாகச் சிந்தித்தார்.

 

 

நவாபை ராஜ்கோட்டிற்கு வரவழைத்த ரெஸிடெண்ட் அந்தக் காலத்தில் பிரிட்டிஷாரின் உயரிய விருதான க்னைட் க்ராண்ட் கமாண்டர் எனப்படும் G.C.I.E  என்ற விருதை அவருக்கு அளித்தார்.

பிரம்மாண்டமான விழாவில் மஹாராஜாவிடம் எப்படிப்பட்ட உயரிய விருதை விக்டோரியா மஹாராணியார் அளித்துள்ளார் என்பதை நன்கு விளக்கினார்.

 

 

நவாபிற்கு ஆங்கிலம் தெரியாது; மிகவும் அப்பாவி என்று எடை போட்ட ரெஸிடெண்ட் மொழி பெயர்ப்பாளர் மூலம் நவாப் இங்கிலாந்து ராணியாருக்கு தம் நன்றியைத் தெரிவிக்கும் வண்ணம் ஏதாவது செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

“என்ன செய்ய வேண்டும்?”  அப்பாவியாக நவாப் கேட்டார்.

“ஒன்றுமில்லை. பந்தரைக் கொடுத்து விட்டால் போதும்:

நவாப் அப்பாவியாக, “பந்தரையா கேட்கிறீர்கள்?” என்றார்.

 

 

மிகவும் மனம் மகிழ்ந்த ரெஸிடெண்ட் தன் வேலை சுலபமாக முடிந்தது என்று எண்ணியவாறே, “ப்ந்தரைக் கொடுத்தால் போதும்” என்றார்.

 

 

அதை ஆமோதித்த நவாப் ஊர் திரும்பினார்.

ரெஸிடெண்ட் இங்கிலாந்திற்குத் தனது வெற்றியைப் பற்றிப் பெரிய தந்தி ஒன்றை அடித்தார்.பாராட்டும் வந்து சேர்ந்தது.

ஊருக்குத் திரும்பிய நவாப் பெரிய தங்கத்திலான கூண்டு ஒன்றையும் வெள்ளியிலான கூண்டு ஒன்றையும் செய்யச் சொன்னார். அவற்றில் நன்கு வளர்ந்த நான்கு குரங்குகளை அடைத்தார்.

 

 

பெரிய மேள தாளத்துடன் அவற்றை ராஜ்கோட்டிற்கு ரெஸிடெண்டிடம் அனுப்பி வைத்தார்.

 

“நீங்கள் கேட்ட பந்தரை அனுப்பி வைத்துள்ளேன். இவ்வளவு சின்ன கோரிக்கையை உடனே நிறைவேற்ற முடிந்ததை என் பாக்கியமாகக் கருதுகிறேன்” என்ற நவாபின் கடிதத்தைப் பார்த்த ரெஸிடெண்ட் கூடவே வந்த கூண்டுகளையும் உள்ளே இருந்த குரங்குகளையும் பார்த்தார்.

 

பந்த்ர் என்றால் குரங்கு என்று தானே ஹிந்தியில் அர்த்தம்.

மஹாராஜாவுக்குத் தான் ஆங்கிலம் தெரியாதே!அப்பாவி ஆயிற்றே!!

 

ரெஸிடெண்ட் முழித்தார்.

 

அவரை உடனே ஊர் திரும்புமாறு இங்கிலாந்து மேலிடம் தந்தியை அனுப்பியது. அங்கு சென்றவுடன் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டது.

 

இங்கோ  நவாப் சிரித்தார். ஆங்கிலேயரின் சூழ்ச்சியையும் தங்கள் நவாப் போர்ட் பந்தருக்கு பதில் நிஜ ‘பந்தரைக்’ கொடுத்து  அதை முறியடித்த விதத்தையும் அறிந்த மக்களும் சிரித்தனர்!

 

 

ஆங்கிலேயரை இப்படி ஏளனம் செய்திருக்கும் – நமக்குத் தெரியாத, பிரபலமாகாத – சம்பவங்கள் நமது சரித்திரத்தில் ஏராளம் உண்டு!

**********

 

சர்வம் சத்யே ப்ரதிஷ்டிதம்; உலகத்தை உண்மை தாங்குகிறது! (Post No.3319)

Written  by London Swaminathan

 

Date: 4  November 2016

 

Time uploaded in London: 13-24

 

Post No.3319

 

 

Pictures are taken from various sources; they are only representational.

 

contact; swami_48@yahoo.com

 

உலகத்தில் இந்தியாவை யாரும் அழிக்க முடியாது; ஏனெனில் அதன் கொள்கை “வாய்மையே வெல்லும்” (சத்யமேவ ஜயதே) என்னும் வேத வாக்கியம் ஆகும். ஒவ்வொரு நாடும் உலகில் ஒரு சின்னத்தையும் வாசகத்தையும் தேர்ந்தெடுத்துள்ளது. இந்தியா உபநிஷத வாக்கியமான “சத்யமேவ ஜயதே” என்ற அருமையான வாக்கியத்தைத் தெரிவு செய்துள்ளது. சத்தியம் என்பது எல்லா மதங்களுக்கும் அப்பாற்பட்டது. வாழ்க்கையில் எல்லோரும் உண்மையைக் கடைப்பிடிக்காவிடில் உலகமே தலை கீழாகிவிடும்; அதாவது யுக முடிவு நெருங்கிவிட்டது என்று பொருள்.

 

உலகில் பாரத நாட்டில் இந்த உண்மையை வலியுறுத்தும் அளவுக்கு வேறு யாரும் வலியுறுத்தவும் இல்லை. பின்பற்றவும் இல்லை.

 

குருவினுடைய வீட்டில் ஐந்து வயது பாலகனைக் கொண்டுபோய் விட்டவுடன் அவர் சொல்லித்தரும் முதல் வாசகம் “சத்யம் வத” (உண்மை பேசு); இரண்டாவது வாசகம் “தர்மம் சர” (அறம் செய்ய விரும்பு). உலகில் எல்லா மதங்களுக்கும் பொருந்தும் அற்புத வேத வாக்கியம் இவை. முதல் மூன்று வருணத்தாரும் இதை குருவினிடத்தில் கற்றனர். நான்காவது வருணத்தினர் தாய் தந்தையிடம் கற்றனர்.

 

மஹாபாரதத்திலும் பாகவதத்திலும் இதே கருத்தை வலியுறுத்தும் சில பாடல்களைக் காண்போம்:–

 

 

பாகவதத்தில்,

சத்யவ்ரதம் சத்யபரம் த்ரிசத்யம் சத்யஸ்ய யோனிம் நிஹிதம் ச சத்யே

சத்யஸ்ய சத்யம்ருத சத்ய நேத்ரம் சத்யாத்மகம் த்வாம் சரணம் ப்ரபன்னா:

–விஷ்ணு பாகவதம் 10-2-26

 

கிருஷ்ணனைப் பார்த்து தேவர்கள் சொன்ன பாடல் இது. இதன் பொருள் என்ன?

உண்மையே உனது உயிர்மூச்சு, உண்மைப் பொருளே, மும்முறை சத்யம்! நீயே உண்மையின் ஊற்று; உண்மையை உண்மையாக்குபவன் நீ; உண்மை எனும் கண்ணே, உண்மை வடிவானவனே, உன்னைச் சரண் அடைகிறோம்.

 

சுருக்கமாகச் சொன்னால் உண்மையே கடவுள்; கடவுளே உண்மை.

 

மஹாபாரதத்தின் சாந்தி பர்வத்தில் 13 நற்குணங்களை பீஷ்மர்  போதிக்கிறார். அதில் ஒன்று சத்யம்.

 

சத்யம் ச சமதா சைவ தமஸ்சைவ ந சம்சய:

அமாத்சர்யம் க்ஷமா சைவ ஹ்ரீஸ்திக்ஷா அனசூயதா

 

த்யாகோ த்யானமதார்யத்வம் த்ருதிஸ்ச சததம் தயா

அஹிம்சா சைவ ராஜேந்த்ர சத்யாகாரார் த்ரயோதச:

 

உண்மை, சமத் தன்மை, புலனடக்கம், தற்பெருமை பாராட்டாமை, மன்னிக்கும் குணம், அடக்கம், பொறுமை, பொறாமையின்மை(அழுக் காறாமை) அமைதியாயிருத்தல், எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பது, இரக்கம், பிறருக்குத் தீங்கு செய்யாமை (அஹிம்சை),  கொடை —

ஆகிய 13 குணங்களும் உண்மையின் வேறு வடிவங்களாகும்.

இன்னோரிடத்தில்

சத்யம் பிரம்ம சநாதனம் (உண்மைதான் கடவுள்)

சர்வம் சத்யே ப்ரதிஷ்டிதம் (எல்லாம் உண்மையில் நிலைபெற்றிருக்கிறது)

 

என்றும் பீஷ்மர் புகல்வார்.

 

இறந்து போன அபிமன்யுவின் குழந்தையை மீண்டும் உயிர்ப்பிக்க கிருஷ்ணன் சொல்லும் வாசகங்கள் உண்மையின் மகத்துவத்தை விளக்கும்:-

 

ஓ உத்தரா! நான் பொய் பேசுவதில்லை ஆகையால் நான் சொல்வது நிச்சயம் நிகழும்; இதோ இந்த தருணத்தில் இக்குழந்தையை உயிர்த்தெழ வைப்பேன்.

 

ஒருக்காலத்திலும் நான் பொய் பேசாதது உண்மையானால், விளையாட்டிற்கும் கூட பொய் சொல்லாதது உண்மை என்றால் இந்தக் குழந்தை உயிர் பிழைக்கட்டும்.

 

எந்தக் காலத்திலும் நான் அர்ஜுனனுடம் சண்டை இடாதது உண்மையானால். அந்த வாய்மையே இக்குழந்தையைக் காப்பாற்றட்டும்.

என்னிடத்தில் உண்மையும் அறமும் எப்போதும் இருக்குமானால் அபிமன்யுவின் இந்த இறந்துபோன குழந்தை மீண்டும் உயிர்பெறட்டும்

(மஹாபரதம் அஸ்வமேத பர்வம்)

The above sloka is from Manu Smrti

இறந்து போன குழந்தையையும் உயிர்த்தெழச் செய்யும் சக்தி வாய்மைக்கு உண்டு!!

 

இதே கருத்தை ராமாயணத்திலும் காணலாம். ராமன் 14 ஆண்டுக் காலத்துக்கு கானகம் சென்றதன் காரணம் தந்தையின் வாக்குறுதி சத்தியமாகட்டும் என்பதற்ககத்தான். அவன் கானகம் செல்ல மறுத்திருந்தால் தசரதனின் இரண்டு வரங்களும் பொய்யாகப் போகும்.

தர்மன் 12+1 ஆண்டு கானகத்தில் விதிப்படி உலவியதும் சத்தியத்தைக் காப்பதற்கே. துரியோயதணனைப் போல அறமற்ற வழிகளைப் பின் பற்றியிருந்தால் மஹாபரதமே இருந்திருக்காது.

 

இந்துக்களின் இரு பெரும் இதிஹாசங்களும் சத்தியத்தை நிலைநாட்ட வந்தவை!

இதிஹாசத்தில் பல இடங்களில் “என் உதடுகள் எந்தப் பொய்யையும் சொன்னதில்லை” என்ற வாசகம் அடிக்கடி வருகிறது.

 

சமுதயத்திலோ, குடும்பத்திலோ ஒருவர்  மற்றவருக்கு உண்மையாக நடப்பதால்தான் அமைதி (சாந்தி) நிலவுகிறது. என்று கணவன் மனைவி இடையே சத்தியம் நீங்குகிறதோ, என்று பெற்றோர்- புதல்வர் இடையே சத்தியம் நீங்குகிறதோ அன்று அமைதி மறைகிறது.

சர்வம் சத்யே ப்ரதிஷ்டிதம்!

–Subahm—