பழகத் தெரிய வேணும், பெண்ணே (ஆணே) பார்த்து நடக்க வேணும்! (Post No.2902)

HowtoWinFriendsandInfluencePeopleCover

Compiled by London swaminathan

 

Date: 17  June 2016

 

Post No. 2902

 

Time uploaded in London :– 8-35 AM

 

( Pictures are taken by London swaminathan)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

grow rich

வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி? உங்கள் நண்பர்களை வெல்லுவது எப்படி? ( How to win friends and Influence People) என்றெல்லாம் நூற்றுக் கணக்கான புத்தகங்களை (Self-Improvement Series) விலைக்கு வாங்குகிறோம். இதையெல்லாம் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே சம்ஸ்கிருதத்தில் ரத்தினச் சுருக்கமாக நமது முன்னோர்கள் எழுதி வைத்துள்ளனர். புகுந்த வீட்டுக்குப் போகும் (புக்காத்துக்கு= புகுந்த+ அகத்துக்கு) புதுமணப் பெண்ணுக்கு உலக மஹா கவிஞன் காளிதாசன் சொன்ன அறிவுரைகளை முன்னரே ஒரு கட்டுரையில் தந்தேன். அற்புதமான அறிவுரையை, நாலைந்து ஸ்லோகங்களில் வடித்துக் கொடுத்துவிட்டான். இப்பொழுது வேறு ஒரு கவிஞனின் பாடலைக் காண்போம்:–

 

கீழ்கண்ட அருமையான சம்ஸ்கிருத ஸ்லோகம்– யார், யாரிடம் எப்படிப் பழக வேண்டும் என்று பொட்டில் அடித்தது போலச் சொல்கிறது:–

 

தாக்ஷிண்யம் ஸ்வஜனே, தயா பரிஜனே,சாட்யம் சதா துர்ஜனே, ப்ரீதி: சாது ஜனே, நயோ ந்ருப ஜனே, வித்வத் ஜனே சார்ஜவம்,

சௌர்யம் சத்ருஜனே, க்ஷமா குருஜனே,காந்தாஜனே த்ருஷ்டதா, யேசைவம் புருஷா: கலாசு குசலாஸ்தேப்வேவ லோகஸ்திதி:

 

தாக்ஷிண்யம் ஸ்வஜனே- நமக்கு நெருக்கமானவரிடத்தில் பரிவும்

தயா பரிஜனே – சுற்றத்தாரிடம் கருணையும்

சாட்யம் சதா துர்ஜனே – கெட்டவரிடத்தில்  ஒதுங்கிப்போ கும்போக்கையும்

ப்ரீதி: சஜ் ஜனே – நல்லோரிடத்தில் அன்பையும்

நயோ ந்ருப ஜனே- ஆள்வோரிடத்தில் (அரசாங்கம்) நாசூக்கையும்/ நைச்சியத்தையும்

வித்வத் ஜனே சார்ஜவம்- அறிஞர்களிடத்தில் நேர்மையையும் ( ச+ ஆர்ஜவம்)

சௌர்யம் சத்ருஜனே – விரோதிகளிடத்தில் சூரத்தனத்தையும் (வீரத்தையும்)

க்ஷமா குருஜனே- ஆசிரியர்/குருவிடத்தில் பொறுமையையும்

காந்தாஜனே த்ருஷ்டதா- மனைவி மற்றும் அவளுடைய வட்டத்தில் பற்றையும்

யேசைவம் புருஷா: – எந்த மனிதர்கள் கடைப்பிடித்து

கலாசு குசலாஸ்தேப்வேவ – இந்தக் கலையில் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்களோ

லோகஸ்திதி: – அவர்கள் கையில்தான் உலகம் இருக்கிறது.

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலாதார் (குறள் 140)

Blog_Post_Books_5

–சுபம்–

 

 

 

கண்ணு! கண்ணு! ஏ கண்ணூ!! சுவையான துணுக்குகள்! (Post No 2899)

sentamil chintamanai 1

Compiled by London swaminathan

 

Date: 16 June 2016

 

Post No. 2899

 

Time uploaded in London :– 8-06 AM

 

( Pictures are taken by London swaminathan)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

செந்தமிழ் சிந்தாமணி என்ற பழைய பத்திரிக்கையில் வந்த சுவையான விஷயங்கள்:–

 

வெள்ளை காகம் விலை இரண்டரை ரூபாய்!!

 

white crow (2)

கண்ணு! கண்ணு !! ஏ, கண்ணு!!!

 

kannu kannu (2)

 

தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை!

 

poy thay (2)

–subham–

 

 

உத்தமன் யார்? மத்யமன் யார்? அதமன் யார்? (Post No.2894)

Logo Three people on podium

Written by London swaminathan

 

Date: 14 June 2016

 

Post No. 2894

 

Time uploaded in London :– 16-16

 

( Pictures are taken by London swaminathan)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

three figures

நல்லவன் யார்?

மீண்டும் மீண்டும் இடையூறு வரினும் எடுத்த காரியத்தை முடிப்பவனே (உத்தமன்) சிறந்தவன்.

சிலர், ஒரு வேலையைத் துவக்கியபின்னர், இடையூறு வந்தால் அதை விட்டு விடுவார்கள். இவர்கள் (மத்யமன்) இடைப்பட்ட நிலையிலுள்ளவர்கள்.

இடையூறு வரும் என்று பயந்துகொண்டு வேலையையே துவங்கமாட்டார்கள் கீழ்நிலையிலுள்ளவர்கள் (அதமன்).

 

ப்ராரப்யதே ந கலு விக்னபயேன நீசை:

ப்ராரப்யதே விக்னவிஹதா விரமந்தி மத்யமா:

விக்னைர் முஹுர்முஹுர் அபி ப்ரதிஹன்யமானா:

ப்ராரப்தம் உத்தமகுணா ந பரித்யஜந்தி

 

கருமமே கண்ணாயினார்

உத்தமர் யார் என்று நீதிவெண்பா கூறுகிறது:-

ஒரு வேலையைச் செய்யும்போது, உடலுக்கு வரும் கஷ்டத்தைப் பற்றிக் கவலைப்படமாட்டார். பசியைப்பற்றி கவலைப்படமாட்டார். வேலை முடியும் வரை தூங்க மாட்டார். யார் இடையூறு செய்தாலும் அதைப் பொருட்படுத்தார். காலம் வீணாகுமோ என்று கவலைப்படமாட்டார். யார் இகழ்வதையும் பொருட்படுத்தமாட்டார்.

 

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்

எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்- செவ்வி

அருமையும் பாரார் அவமதிப்புங்கொள்ளார்

கருமமே கண்ணாயினார்

Snakes---Banded-Egyptian-Cobra

விஷப் பாம்பும், தீயோரும்

தாழ்ந்தோருக்கு செய்யும் (உபகாரம்) உதவியால் கெடுதலே (அபகாரம்) வரும். பாம்புக்கு பால் வார்த்தால் விஷம்தான் அதிகரிக்கும்.

உபகாரேண நீசானாம் அபஹாரோ ஹி ஜாயதே

பய: பானம் புஜங்கானாம் கேவலம் விஷவர்தனம்

–சுபம்–

வாழ்க்கையையே நஷ்டமாக்கிக் கொள்பவர்கள்! (Post No.2888)

Profit, loss and risk crossword on white background

Profit, loss and risk crossword on white background

Article written by S.NAGARAJAN

 

Date: 12 June 2016

 

Post No. 2888

 

Time uploaded in London :–  22-40

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

சம்ஸ்கிருதச் செல்வம்

 

வாழ்க்கையையே நஷ்டமாக்கிக் கொள்பவர்கள்!

ச.நாகராஜன்

நாடு முழுவதும் சுற்றி வரும் கவிஞர் உலக வாழ்க்கையின் இயல்பைக் கண்டு வியக்கிறார்.

மனிதரில் தான் எத்தனை விதம்! வாழ்க்கையை தனக்குத் தானே எப்படியெல்லாம் அவர்கள் நஷ்டப்படுத்திக் கொள்கிறார்கள்! வியப்பு மேலிடுகிறது அவருக்கு!

சிலர் அறியாமையால் வாழ்க்கையை நஷ்டப்படுத்திக் கொள்கிறார்கள்!

சிலரோ தங்களின் அலட்சியப் போக்கினால் நஷ்டப்படுத்திக் கொள்கிறார்கள்! சிலரோ அதிகம் படித்து விட்ட கர்வத்தினால் வாழ்க்கையை நஷ்டப்படுத்திக் கொள்கிறார்கள்! இன்னும் சிலரோ ஏற்கனவே வாழ்க்கையை நஷ்டப்படுத்திக் கொண்டவர்களுடன் சேர்ந்து அவர்களின் செல்வாக்கினால் தங்கள் வாழ்க்கையை  நஷ்டப்படுத்திக் கொ ள்கிறார்கள்!

என்னே உலகின் போக்கு!

Some are lost due to ignorance; some are due to negligence;

Some due to arrogance of wisdom; some due to influence of those who are lost already!

கேசிதஞானதோ நஷ்டா: கேசித் நஷ்டா: ப்ரமாதத:  I

கேசித் ஞானாவலேபேன  கேசித் நஷ்டைஸ்து நாஷிதா: II

சாணக்ய நீதி உள்ளிட்ட பல நூல்களில் இந்த அருமையான செய்யுள் இடம் பெற்றுள்ளதைப் பார்க்க முடிகிரறது.

அறியாமையைப் போக்கிக் கொள்.

எதிலும் அலட்சியமாக இருக்காதே.

படித்ததினால் அகம்பாவம் கொள்ளாதே.

ஏற்கனவே வாழ்க்கையை இழந்தவர்களுடன் சேராதே. நல்லவர்களுடன் பழகு!

வாழ வேண்டிய விதத்தை ஒரே ஸ்லோகத்தில் கவிஞர் அழகாகச் சொல்லி விடுகிறார் இல்லையா!

*****

பூமியைத் தாங்கி நிற்பது எது? (Post No.2884)

atlas

Article written by London swaminathan

 

Date: 10 June 2016

 

Post No. 2884

 

Time uploaded in London :– 14-12

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

750px-Solar_sys

அறிவியல் முறையில் இக்கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டுமானால் ஈர்ப்புவிசை என்று சொல்லவேண்டும். சூரியனின் ஈர்ப்புவிசையும் பூமி உள்ளிட்ட ஏனைய கிரகங்களின் ஈர்ப்புவிசையும் ஒன்றயொன்று இழுக்க அவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று மோதாமல் வட்டப்பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றன.அதில் பூமியும் ஒன்று.

 

பூமியைத் தாங்கி நிறுத்துவது எது? என்று கேட்டால் இந்துக்கள், கிரேக்கர்கள் சீனர்கள் எல்லோரும் வெவ்வேறு பதில் சொல்லுவார்கள்.

கிரேக்கர்கள் அட்லஸ் என்ற அரக்கனே வானத்தையும் பூமியையும் தூக்கி நிறுத்திகிறான் என்று சொல்லுவர். இது பழைய புராணக்கதை. அட்லாண்டிஸ் என்ற தீவின் மன்னனான ப்ரொமேதயஸின் சகோதரனான அட்லஸ், ஒரு போரில் ஏற்பட்ட தோல்விக்காக வானத்தையும் பூமியையும் சுமக்கும் தண்டனை பெற்றான்.

 

சீனர்கள் ஒரு கடல் ஆமையின் முதுகில் இந்த பூமி நிற்பதாகவும், இன்னும் சில கதைகளில் பூமியின் நான்கு திசைகளில் உள்ள மரங்களின் மீது இந்த ‘சதுர’ பூமி நிற்பதாகவும் எழுதியுள்ளனர்.

myth-1-21

இந்து மத புராணங்களில் ஆதி சேஷன் என்ற பாம்புதான் உலகைத் தாங்கி நிற்கிறது என்பர். அஷ்ட திக் கஜங்கள் எனப்படும் எட்டு யானைகள் உலகைத் தாங்கி நிற்பதாகவும் பகர்வர்.

 

ஆனால் ஒரு அருமையான பாடல் ஏழுவிதமான குணங்களும் குணவான்களும் இந்த பூமியைத் தாங்கி நிற்கின்றனர் என்று போற்றும்:-

 

கோபிர்விப்ரைஸ்ச வேதைஸ்ச சதிபி: சத்யவாதிபி:

அலுப்தைர்தானசீலைஸ்ச சப்தபிர்தார்யதே மஹீ

பொருள்:–

பசுக்கள், அந்தணர்கள், வேதங்கள், கற்புள்ள பெண்கள்,உண்மை விளம்பிகள், பேராசையற்றோர், கொடையாளிகள் (தான சீலர்கள்) ஆகிய ஏழுமே உலகத்தை (மஹீ) தங்கி நிற்கிறது.

 

பசும்பால் இல்லாவிடில் என்ன ஆகும் என்று சிந்தித்துப் பாருங்கள்; அந்தணர்கள் என்ற சொல்லுக்குத் தற்காலத்தில் அறிஞர்கள் என்று பொருள் கொள்ளலாம். வேதங்கள் எப்போதுமே வானத்தில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. மற்ற சொற்களுக்கு விளக்கம் தேவையில்லை.

“நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை”- என்பது யாவரும் அறிந்ததே.

lead_deskew=0 checksum=2e0f339cc42d8ab0fcbb3871de675d79

புறநானூற்றுப் பாடல்182

கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்ற பாண்டிய மன்னனும் இதே கருத்தைச் சொல்கிறான்:–

இந்திரனுக்குரிய அமுதமே கிடைத்தாலும் தாமே சாப்பிடமாட்டார்கள்; கோபமற்றவர்கள்; எல்லோரும் அஞ்சும் தீய செயலுக்குத் தாமும் பயப்படுவார்கள்; புகழுக்குரிய செயல் என்றால் அதைச் செய்ய உயிரையே தருவார்கள்; பழிவரும் தீய செயலானால், உலகத்தையே தந்தாலும் செய்ய மாட்டார்கள். அவர்களுக்கு சோம்பேறித்தனமே கிடையாது. சுயநலமற்றவர். பொதுநலப் பணி செய்யும் உயர்ந்தோர். இவர்களே பெரியோர்கள். இவர்களால்தான் இந்த உலகமே இன்னும் இருக்கிறது.

 

உண்டால் அம்ம இவ்வுலகம்; இந்திரர்

அமிழ்தம் இயைவதாயினும், இனிது எனத்

தமியர் உண்டரும் இலரே; முனிவிலர்;

துஞ்சலுமிலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்,

புகழ் எனின், உயிருங் கொடுக்குவர்; பழியெனின்

உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;

அன்னமாட்சி அனையராகித்

தமக்கென முயலா நோன் தாள்

பிறர்க்கென முயலுநர் உண்மையானே

–புறம் 182

–சுபம்–

கொம்புள்ள மாட்டுக்கு 5 முழம் போதும், தீயோருக்கு…………… (Post No.2881)

beauty bull

Article written by London swaminathan

 

Date: 9 June 2016

 

Post No. 2881

 

Time uploaded in London :– 8-28 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

நீதி வெண்பா என்ற அருமையான நூலில் 100 பாடல்கள் உள்ளன.விவேக சிந்தாமணி என்ற நூலைப் போலவே இதை எழுதிய ஆசிரியர் பெயரும் கிடைக்கவில்லை. அதில் ஒரு அருமையான பாட்டு:-

கொம்புளதற்கு ஐந்து குதிரைக்கு பத்துமுழம்
வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே – வம்புசெறி
 
தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து
நீங்குவதே நல்ல நெறி. (பாடல் 20, நீதி வெண்பா)

 

கொம்பு இருக்கும் மாடு முதலிய மிருகங்களுக்கு அருகில் போகாதீர்கள். குறைந்தது ஐந்து முழமாவது தள்ளி நில்லுங்கள். குதிரைக்கு பத்து முழ தூரத்தில் நின்றால் பாதுகாப்பாக இருப்பீர்கள். யானைக்கு ஆயிரம் முழம் தள்ளி நில்லுங்கள். திடீரென்று மதம் பிடித்து ஓடிவந்தால் அதை உங்களால் முந்தமுடியாது. ஆகையால் 1000 முழமாவது தள்ளி இருங்கள். ஆனால் தீயோரைக் கண்டால் – துஷ்டர்களைக் கண்டாலோ, கண் காணாத தூரத்துக்கு ஓடிப் போய்விடுங்கள். அப்படிப்பட்ட ஆள் வருகிறான் என்றால் அந்தப் பக்கமே போகாதீர்கள். அவர்களை போலீசாரும், நீதித் துறையும் கவனித்துக்கொள்ளும். இது நல்லதொரு புத்திமதி.

India Rampaging Elephant

இதே விஷயம் சம்ஸ்கிருதத்திலும் அழகாக உள்ளது:-

சகடம் பஞ்சஹஸ்தேஷு தசஹஸ்தேஷு வாஜினம்

கஜம் ஹஸ்த சஹஸ்ரேண துஷ்டம் தூரேண வர்ஜயேத்

வண்டிகள் (சகடம்) நின்றால் அதற்கு அருகில் நிற்காதீர்கள். அது திடீரென நகரக்கூடும். குறைந்தது ஐந்து முழமாவது தள்ளி நில்லுங்கள். குதிரைகள் (வாஜினம்) இருந்தால் முனால் பாய்ந்து கடிக்கவும் செய்யும்; பின் காலால் உதையவும் செய்யும்; ஆகையால் பத்து முழம் தள்ளி நில்லுங்கள். யானைக்கு (கஜம்) ஆயிரம் முழம் தள்ளி நில்லுங்கள். துஷ்டர்களைக் கண்டாலோ வெகு தொலைவில் போய் விடுங்கள்.

 

அவ்வையாரோ இதற்கும் ஒரு படி மேலே போகிறார்; காந்திஜியின் குரங்கு பொம்மை இதிலிருந்து தோன்றியதே என்று முன்னரே ஒரு கட்டுரையில் சொன்னேன்:–

தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற

தீயார் சொல் கேட்பதுவும் தீதேயாம் – தீயார்

குணங்களுரைப்பதுவும் தீதே யவரோ

டிணங்கி யிருப்பதுவுந் தீதேவாக்குண்டாம், அவ்வையார்.

 

கெட்டவர்களைப் பார்ப்பது தீது; அவர் சொல் கேட்பதும் தீது; அவர்களுடன் சேருவது தீது (இதெல்லாம் முன்னர் சொன்ன விஷயங்களே. அவரைப் பற்றிப் பேசுவதும் தீதே. அதாவது பேஸ் புக்கிலும், ஈ மெயிலிலும், திண்ணைப் பேச்சிலும், நண்பர்களின் அரட்டைக் கச்சேரியிலும் அவர்களைப் பற்றிப் பேசாதே. ஏன்?

1.நேரம் வீண், 2.எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. யார் உங்களுக்கு குழி பறிப்பார்கள் என்பதும் தெரியாது என்று எச்சரிக்கிறார் அவ்வையார்.

3 snakes

இறுதியாக மேலும் ஒரு சம்ஸ்கிருதப் பாடல்:–

துர்ஜன: பரிஹர்தவ்யோ வித்யா அலங்க்ருதோ அபி சன்

மணினா பூஷித ஸர்ப: கிம் அசௌ ந பயங்கர:

படித்தவர்களாக இருந்தாலும் கெட்டவர்களாக இருந்தால், அவர்களை விட்டுவிடவேண்டும். நாகரத்தின மணி வைத்திருந்தாலும் பாம்பு என்பது பயங்கரமானது இல்லையா!

படித்தும் கெட்டவர்கள் = மாணிக்கம் தரித்த விஷப் பாம்பு

அழகான உவமை!

 

வாழ்க தமிழ்; வளர்க சம்ஸ்கிருதம்.

–சுபம்–

 

 

உலகில் ஆச்சரியம் எது? அற்புதம் எது? அதிசயம் எது? (Post No 2876)

amazing 1

Translated by London swaminathan

 

Date: 7 June 2016

 

Post No. 2876

 

Time uploaded in London :–  8-24 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள், வியாச பகவான், கண்ண பிரான், திருவள்ளுவர், உலக மஹா கவிஞன் காளிதாசன், மற்றொரு சம்ஸ்கிருதப் புலவன் ஆகிய பலர் உலக அதிசயம் எது? அத்புதம் எது? ஆச்சரியம் எது? என்ற கேள்விக்கு வெவ்வேறு விதமான, சுவையான பதில்களைத் தந்துள்ளனர்!

 narayana

1.நாராயணன் என்ற சப்தம் இருக்கிறது. வாயில் சொல் இருக்கிறது. எளிமையாக வசப்படுத்தலாம். அப்படியும் கோரமான நரகத்தில் மனிதர்கள் விழுகிறார்களே!! இதுவே அத்புதம்!!!

நாராயணேதி சப்தோஸ்தி வாக் அஸ்தி வசவர்தினீ

ததாபி நரகே கோரே பதந்தீதி ஏதத் அத்புதம்

–ஒரு சம்ஸ்கிருதக் கவிஞன்

 

மூன்றாண்டுகளுக்கு முன் நான் எழுதி, இங்கே வெளியிட்ட கட்டுரை இதோ:–

உலகிலேயே எது பெரிய அதிசயம்? எது ஆச்சர்யம்? ( 10 நவம்பர் 2013)

 

2.கிருஷ்ணா உலகிலேயே ஆச்சர்யமான விஷயம் எது?

“ஆச்சர்யவத் பச்யதி கச்சிதேனம் ஆச்சர்யவத் வததி ததைவ சான்ய:
ஆச்சர்யவச்சைன-மன்ய: ச்ருணோதி ச் ருத்வாப்யேனம் வேத ந சைவ கச்சித்
(பகவத் கீதை 2-29)

மநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கச்சித்- யததி சித்தயே
யததாமபி சித்தானாம் கச்சின் -மாம் வேத்தி தத்வத:
(பகவத் கீதை 7-3)

பொருள்: எவனோ ஒருவன் இதை ஆச்சரியம் போல் காண்கிறான். அவ்வாறே மேலும் ஒருவன் ஆச்சரியம் போல் பேசுகிறான். மற்றும் ஒருவன் ஆச்சரியம் போல் கேட்கிறான். எவனும் கேட்டும் இதை அறியவே இல்லை (2-29). மனிதர்களில் ஆயிரத்தில் ஒருவன் சித்தி பெற முயற்சிக்கிறான். அப்படி முயற்சி செய்யும் சித்தர்களில் யாரோ ஒருவன் என்னை உண்மையில் உணர்கிறான் (7-3)

3.வள்ளுவரே உலகிலேயே ஆச்சர்யமான விஷயம் எது?

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்து இவ்வுலகு
(திருக்குறள் 336)

பொருள்: நேற்று இருந்தவன் இன்று உயிருடன் இல்லை என்று கூறப்படும் பெருமை கொண்டு விளங்குகின்றது இந்த உலகம்.

 

4.காளிதாசரே உலகிலேயே ஆச்சர்யமான விஷயம் எது?

மரணம் ப்ரக்ருதி சரீரிணாம் விக்ருதி ஜீவிதம் உச்யதே புதை:
க்ஷணமப்யவதிஷ்டதே ஸ்வசன்யதி ஜந்துர்நனு லாபவானசௌ
(ரகுவம்சம் 8-87)

பொருள்: உடல் எடுத்த பிராணிகளுக்கு மரணமானது இயற்கையானது; பிழைத்திருப்பதுதான் எதிர்பாராதது என்று அறிஞர்கள் சொல்லுகிறார்கள். பிராணியானது ஒரு கணமேனும் ஜீவித்திருக்குமாயின் இப் பிராணிக்கு பெரிய லாபம்தான்!!

5.வியாசரே உலகிலேயே ஆச்சர்யமான விஷயம் எது?

மஹாபாரதத்தில் யக்ஷப்ரஸ்னத்தில் பேய் கேட்ட கடைசி நான்கு கேள்விகளுள் ஒன்று: உலகிலேயே அதிசயமான விஷயம் எது?

தர்மர் சொன்ன பதில் (வியாசரின் சொற்களில்):

எவ்வளவோ உயிர்கள் தினமும் இறக்கின்றன. இதைப் பார்த்த பின்னரும் ஒவ்வொருவனும் என்றும் வாழப் போகிறோம் என்று நினைத்து செயல்படுவதுதான் உலகிலேயே மிக ஆச்சரியமான விஷயம்.

 wow

6.காஞ்சி பரமாச்சார்யார் சொன்ன அதிசயம்
15-10-1932 சென்னை உபந்யாசம்:

ஒரு பெரியவர் ஒரு பெரிய ஆச்சரியத்தைச் சொல்லுகிறார். நாம் எல்லாம் மரணம் அடைவது ஆச்சரியம் அல்ல. இந்த உடம்பிலுள்ள ஒன்பது ஓட்டைகளுக்குள்ளே உயிரானது போகாமல் நிற்கிறதே அதுதான் பெரிய ஆச்சரியம் என்று அவர் சொல்லி இருக்கிறார்:

நவத்வாரே ஸரீரே அஸ்மினாயு:வசதி சந்ததம்
ஜீவதியத்புதம் தத்ர கச்சதீதி கிமத்புதம்

 

–சுபம்–

 

வெற்றிக்கு வழி! (Post No.2871)

Success-Motivate

Article written by S.NAGARAJAN

 

Date: 6 June 2016

 

Post No. 2871

 

Time uploaded in London :–  4-50 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact swami_48@yahoo.com

 

 

 

சமஸ்கிருதச் செல்வம்

 

வெற்றிக்கு வழி!

 

ச.நாகராஜன்BusinessFunnel

நான் யார்?

 

இப்போதுள்ள கால தேச (வர்த்தமானம்) என்ன?  நல்லவை அல்லது கெட்டவை எவை உள்ளன?

எனது எதிரிகள் யார்? எனது நண்பர்கள் யார்?

 

என்னிடம் உள்ள வலிமை எவ்வளவு?

 

பயனுள்ள திட்டம் நிறைவேற்றுவதற்கு உள்ள வழிகள் எவை?

எனக்கு காலம் எப்படி இருக்கிறது? (அதிர்ஷ்ட காலம் தானா?)

எனக்கு வளம் சேரும் தொடர்ச்சி எப்படி உள்ளது?

எனது சொற்கள் நிராகரிக்கப்பட்டால் எனது பதில் என்னவாக இருக்க வேண்டும்?

 

வெற்றியை விரும்பும் நல்ல மனிதர்கள் வெற்றி பெறும் வழியை உறுதியாக இப்படிச் சிந்திப்பார்களேயானால் அவர்கள் ஏமாற்றம் அடைய மாட்டார்கள்!

 

 

Who am I?

What are the present time and place and what good or evil qualities in evidence?

Who are my enemies, and who are my allies?

What power have I?

 

What means of carrying out a useful plan?

What store of good fortune have I?

What continuance of prosperity?

And what should be my reply if my words are rejected?

Good men, who fix their minds thus steadfastly on success, are not disappointed.

( Translation by F.Edgerton)

 

ஒரு மானேஜ்மெண்ட் (மேலாண்மை) கோர்ஸில் கொடுக்கப்படும் அறிவுரை போல அல்லவா இருக்கிறது என்று நினைத்தால் அது சரியல்ல.

 

இது நமது பழைய கால பஞ்சதந்திரத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயம்.

வெற்றி பெற எப்படி சிந்திக்க வேண்டும், எதை எதையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை விவரிக்கும் அறிவுரை.

 

சம்ஸ்கிருத கவிதையைப் பார்ப்போம்:

 

கோஹம் கோ தேச காலோ சம விஷம குணா: கே த்விஷ: கே சஹாயா:

 

கா சக்தி: கோப்யுபாயோ ஹித காரண வித்யௌ கா ச மே தைவ சம்பத் I

 

சம்பத்தே: கோ அனுபந்த:  ப்ரதிஹதவசனஸ்யோத்தரம் கிம் ச  மே ஸ்யாத்

 

இத்யேவம் கார்யசித்தாவவஹிதமனஸோ நாவசீதந்தி சந்த  II:

வெற்றிக்கான அருமையான உத்திகளை வகுத்துத் தருவது பஞ்சதந்திரம். டேல் கார்னீகியின் சுய முன்னேற்றக் கருத்துக்கள் எல்லாம் பழைய ‘கள்’; ஆனால் புதிய மொந்தையில் தரப்பட்டது.

 

உலகமும் அதை ஆரவாரத்துடன் ஏற்றுக் கொண்டது.

 

ஆனால் ஹிந்து சிந்தனைகள் காலத்தால் முற்பட்டவை; காலத்தை வென்றவை. என்றும் பொருந்துபவை!

******************

 

பைத்தியத்துக்கு வைத்தியம்: சுவையான சம்பவங்கள் (Post No.2866)

grimadi

Translated by London swaminathan

 

Date: 4 June 2016

 

Post No. 2866

 

Time uploaded in London :–  6-25 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact swami_48@yahoo.com

 

 

தமிழ்நாட்டில் தங்கவேலு, சந்திரபாபு போல அந்தக் காலத்தில் புகழ் பெற்ற மேற்கத்திய நகைச்சுவை நடிகன் கிரிமால்டி. அவருடைய வாழ்வில் நடந்த சுவையான சம்பவம் இதோ:

நோயாளி: டாக்டர், எனக்கு எப்போதும் ஒரே கவலையாக இருக்கிறது. ஏனென்றே தெரியவில்லை.

டாக்டர், அந்த நோயாளியிடம் பேச்சு கொடுத்துவிட்டு சொன்னார்:

“இதோ பாருங்கள், உங்களுக்கு உடம்பில் ஒரு நோயும் இல்லை; மன நோயும் இல்லை. பேசாமல் பிரபல நகைச் சுவை நடிகர் கிரிமால்டியின் நாடகத்தைப் போய்ப் பாருங்கள்; வயிறு குலுங்கச் சிரிப்பீர்கள்; கவலைகள் எல்லாம் பறந்தோடிப் போகும்”.

நோயாளி: “டாக்டர், நான் தான் அந்த கிரிமால்டி!”

(பெரும்பாலான நகைச் சுவை நடிகர்களும், சர்க்கஸ் கோமாளிகளும் நமக்கு சிரிப்பு ஊட்டினாலும், அவர்கள் சொந்த வாழ்வு, சோகமயமாக இருக்கிறது!)

Xxx

(மொழிபெயர்ப்பு: லண்டன் சுவாமிநாதன்; இந்த சம்பவங்கள் ஏற்கனவே என்னால் இங்கே ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டன)

mozart notes

சங்கீதம் – நல்ல மருந்து!

ஸ்பெயின் நாட்டின் அரசர் பிலிப்புக்கு திடீரென்று உடல் நலம் குன்றி, மன நோய் ஏற்பட்டு சோகக் கடலில் மூழ்கினார். உண்ணுவதில்லை; உறங்குவதில்லை; உடம்பைப் பேணுவதில்லை. முகச் சவரம் கூட செய்துகொள்ளவில்லை; செய்யவும் பிறரை அனுமதிக்கவில்லை.

 

மஹாராணிக்கு ஒரே கவலை. “இசை ஒரு மருந்து; அது பல வியாதிகளைக் குணப்படுத்தும்; கவலைகளைக் போக்கும்” — என்பதை அவர் அறிவார். ஆகையால் அக்காலத்தில் சிறந்த பாடகரான பாரிநெல்லி என்பவரை அழைத்து அரண்மனைக்குள் ஒரு கச்சேரி ஏற்பாடு செய்தார். அந்த இன்னிசை நிகழ்ச்சி, மன்னர் தங்கியிருந்த அறைக்கு அடுத்த அறையில் ஏற்பாடு செய்யப்பட்டது. மன்னர் காதிலும் அற்புதமான சங்கீதம், தேவ கானம் ஒலித்தது. மெல்ல மெல்ல, கச்சேரியில் வந்து அமர்ந்தார். பாரிநெல்லி அவரிடம் பேச்சு கொடுத்தார். மேலும் சில பாடல்களைக் கேட்க விரும்புவதாக மன்னர் தெரிவித்தார்.

 

உடனே பேரிநெல்லி சொன்னார்: மன்னர் அவர்களே, நீங்கள் கேட்கும் பாடல்கள் எல்லாவற்றையும் பாடுவேன். ஆனால் எனக்கும் ஒரு கோரிக்கை இருக்கிறது. அதை நிறைவேற்றுவீர்களா?

மன்னர் சொன்னார்: என்னால் நிறைவேற்றக் கூடிய கோரிக்கை என்றால் உடனே செய்கிறேன்.

பாரிநெல்லி சொன்னார்: மன்னரே, சின்ன வேண்டுதல்தான். தாங்கள் முக க்ஷவரம் செய்துகொண்டு ‘டிப்டாப்’பாக, மன்னர் போல அமர்ந்தால் நான் இன்னும் உற்சாகத்துடன் பாடமுடியும்.

உடனே பிலிப் முடிதிருத்தி, மணி முடி அணிந்து வந்து அமர்ந்தார்.

மன்னர் சங்கீதக் கடலில் மூழ்கினார்; மஹாராணி மகிழ்ச்சிக் கடலில் நீந்தினார்.

Xxx

dollars

காசேதான் கடவுளடா! பணமே மருந்து!!

டாக்டர் கோல்ட்ஸ்மித் என்பவர் சிறந்த மேல்நாட்டு மருத்துவர். அவரிடம் ஒரு பெண்மணி வந்தார். என் கணவருக்கு மனதே சரியில்லை; பிரமை பிடித்தவர் போல இருக்கிறார். டாக்டர் வீட்டுக்கும் வர மறுக்கிறார். தயவு செய்து வீட்டுக்கு வந்து அவரைப் பார்த்து, ஏதேனும் மருந்து கொடுங்களேன் – என்று கெஞ்சினார்.

 

டாக்டர் கோல்ட்ஸ்மித்தும் அந்த வீட்டுக்குப் போய் ‘நோயாளியிடம்’ பேச்சுக் கொடுத்தார். அவருக்கு என்ன நோய் என்று பளிச்செனத் தெரிந்தது.

அந்தப் பெண்மணியிடம் சொன்னார்: கவலைப்படாதீர்கள். உங்கள் கணவரின் நோய்க்கு உடனே மருந்து கொடுத்து அனுப்புகிறேன்.

 

வீட்டிற்குப் போனவுடன் டாக்டர் கோல்ட்ஸ்மித், ஒரு ‘கவரில்’ (காகிதப் பை) பத்து பவுன் கரன்ஸி நோட்டை வைத்து நோயாளிக்கு அனுப்பிவைத்தார். அந்த நோயாளியும் விரைவில் குணம் அடைந்தார்.

(வறுமை என்பது மனத் தொய்வை ஏற்படுத்தும். உங்கள் நண்பரோ, உறவினரோ இப்படிப்பட்ட பசிப் பிணியால், ஏழ்மை நோயால், வருந்தினால், அவருக்கு உதவி செய்யுங்கள். மனக் கவலை, பயம் முதலியவற்றை இயற்கைக் காட்சிகள், நகைச் சுவைப் படங்கள், இன்னிசைக் கச்சேரிகள், பண உதவி மூலம் போக்குங்கள். பணத்தாசை கொண்ட மன நோய் மருத்துவரிடம் போனால், ‘லிதியம்’ மாத்திரைகளைக் கொடுத்து, வாயில் நுரை தள்ள வைத்துவிடுவார்கள்.)

–சுபம்–

 

குருவும் கஞ்சனும் : ஒரு குட்டிக்கதை (Post No.2865)

dollars

Translated by London swaminathan

 

Date: 3 June 2016

 

Post No. 2865

 

Time uploaded in London :–  5-56 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact swami_48@yahoo.com

1830-Jewish-beggar

ஒரு ஊரில் ஒரு பரம கஞ்சன் இருந்தான். எச்சில் கையால் காகத்தை விரட்ட மாட்டான். தேநீரில் ஈ விழுந்தால்கூட அதைப் பிழிந்து விட்டு வெளியே எறிவான். ஆனால் நல்ல பணக்காரன். அப்பேற்பட்ட கஞ்சன் குருவிடம் வந்தான். இவனுக்கு ‘பசுமரத்தில் ஆணி பதிவது போல’ புத்தி புகட்ட வேண்டும் என்று அவர் நினைத்தார். இருந்த போதிலும் நேரடியாகச் சொல்லாமல் ‘வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல’ கற்பிக்க எண்ணினார்.

 

அன்பரே! இங்கே வாருங்கள் என்று ஒரு ஜன்னலுக்கு அருகில் அழைத்துச் சென்றார். என்ன தெரிகிறது? என்று கேட்டார்.

கஞ்சன் சொன்னான்: ஜன்னல் கண்ணாடி.

குரு: அது சரி. அது வழியாக என்ன தெரிகிறது.

கஞ்சன்: மக்கள்; தெருவில் நடமாடும் மக்கள்.

பின்னர், அந்தக் கஞ்சனை குரு, ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி அருகே அழைத்துச் சென்றார்.

இது என்ன?

கஞ்சன்:–முகம் பார்க்கும் கண்ணாடி.

இதில் என்ன தெரிகிறது?

கஞ்சன்:–நான் என்னைப் பார்க்கிறேன்.

ஜன்னலிலும் கண்ணாடிதான் இருந்தது. இங்கும் கண்ணாடிதான் இருக்கிறது. ஏன் இங்கே உங்கள் முகம் தெரிகிறது; அங்கே மக்கள் தெரிந்தது?

கஞ்சன்:– முகம் பார்க்கும் கண்ணாடியில் வெள்ளி (ரசம்) பூசியதால் என் முகம் தெரிந்தது. ஜன்னல் கண்ணாடி தூய பளிங்கு போன்றது.ஆகையால் மக்கள் தெரிந்தனர்.

உடனே குரு சொன்னார்: பார்த்தீர்களா. தூய கண்ணாடி இருந்தால் மக்கள் தெரிகின்றனர் (பொது நலம்). வெள்ளி இருந்தால் உங்களைத்தான் பார்க்க முடிந்தது (சுயநலம்). உங்களிடம் கொஞ்சம் வெள்ளி (பணம்) சேர்ந்துவிட்டால் மக்கள் மறைந்து உங்களை மட்டுமே பார்க்கிறீர்கள் என்றார்.

கஞ்சனுக்கும் கதையின் நீதி புரிந்தது!

 

Xxx

edison

ஐயய்யோ! அவ்வளவு பணம் வேண்டாம்!

தாமஸ் ஆல்வா எடிசன் பல கண்டுபிடிப்புகளைச் செய்தவர். ஒரு கண்டுபிடிப்பின் உரிமையைப் பெற வெஸ்டர்ன் யூனியன் கம்பெனி, அவருக்கு ஒரு லட்சம் டாலர் முன் தொகை கொடுக்க முன்வந்தது.

ஐயய்யோ! அவ்வளவு பணம் வேண்டாம்! உங்களிடமே அந்தத்தொகை இருக்கட்டும். பாதுகாப்பாகவாவது இருக்கும் என்று சொன்னார். அவர்கள் மிகவும் வலியுறுத்தவே, சரி, வருடத்துக்கு ஆறாயிரம் டாலர் வீதம் 17 ஆண்டுகளுக்குத் தாருங்கள் என்றார்.

சின்னச் சின்ன ஆசை!!

Xxxx

பணக்காரர்களுக்கு அதிக மூளையா?

ஒரு மனிதனுக்கு நிறைய பணம் சேர்ந்துவிட்டால் அவனுக்கு மூளை ஜாஸ்தி/ அதிகம் என்று மக்கள் நினைக்கின்றனர். நான் ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள் என்று சிகாகோ நகர கோடீஸ்வரரான ஜூலியஸ் ரோசன் பால்ட் ஒரு நிகழ்ச்சியைச் சொன்னார்.

 

ஒருவர் 14 என்ற எண் மூலம் மில்லியன் (பத்து லட்சம்) டாலர் வென்றார். எல்லோரும் அவரிடம் போய், பல கோடி எண்கள் இருக்கையில், எப்படி 14 என்று சொன்னீர்கள்? என்றார்.

ஓ, அதுவா? ஒரு நாள் ஒரு கனவு கண்டேன். அதில் ஒரு பெரிய 9 எண் தோன்றியது. கொஞ்ச நேரம் கழித்து எண் 6 தோன்றியது. இரண்டையும் கூட்டிப் பார்த்தேன். அவ்வளவுதான்!!!! என்றார்.

Xxx

lincoln dollar

ஜனாதிபதி சொன்ன குட்டிக் கதை!

ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் சில அரசாங்க அதிகாரிகள் அவரிடம் சென்றனர். நீங்கள் சில துறைகளுக்கு மட்டும் நிதி அதிகாரங்களைக் கொடுத்திருக்கிறீர்கள். எங்களுக்கும் பணம், பட்ஜெட் அதிகாரங்களைக் கொடுங்களேன் என்றனர்.

உடனே லிங்கன் ஒரு கதை சொன்னார்:

“இல்லினாய்ஸ் என்னுமிடத்தில் ஒருவர் ஒரு வீடு வைத்திருந்தார். நீங்கள் அவரைப் போலவே இருக்கிறீர்கள். அவருடைய வீடு தீ விபத்தில் எரிந்து சாம்பலாயிற்று. அந்தக் காலத்தில் ஊரில் யாருக்காவது இப்படி நஷ்டம் வந்தால், ஊர் மக்கள் எல்லோரும் பணம் கொஞ்சம் போட்டு, அவருக்கு உதவி செய்யும் நல்ல வழக்கம் இருந்தது. இந்த ஆளுடைய அதிர்ஷ்டம்! எல்லோரும் கொடுத்த பணம் அதிகமாக இருந்ததால் அவருக்கு முன்னைவிட சொகுசான வாழ்க்கை கிடைத்தது.

கொஞ்ச நாள் கழித்து அவருக்கு உதவி செய்யும் நோககத்துடன் ஒருவர் தானியம் கொண்டு வந்து கொடுத்தார்.

அவர் சொன்னார்: “சீ, சீ! நான் தானியம் எல்லாம் பெற்றுக் கொள்ளும் ஆசாமி அல்ல. பணமாகக் கொண்டு வாருங்கள்!”

(பணத்தை ஒரு முறை கொடுத்துப் பழக்கிவிட்டால், பிறகு பண போதை தலைக்கேறிவிடும்! பணம் ஒரு பேய்!!)

xxxசுபம்xxx