அம்மா! அம்மா!! அம்மா!!! (Post No.2792)

mother-and-baby-portrait-drawing-kate-sumners

Translated by london swaminathan

 

Date: 8 May 2016

 

Post No. 2792

 

Time uploaded in London :–  6-32 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

இந்தப் பகுதியில், அன்னை (மாதா) பற்றிய பழமொழிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன.

 

பெண்கள் பற்றிய 150 சம்ஸ்கிருத பழமொழிகள்- பகுதி-7

(பகுதி 6 ஏப்ரல் 24-ஆம் தேதி வெளியிடப்பட்டது)

mother baby

104.கா நாம மாதா புத்ரக அஸ்ய அபராதம் ந மர்ஷயதி – பிரதிமா நாடக

தனது குழந்தையின் தவறை மன்னிக்காத தாயும் உண்டோ?

 

105.குபுத்ரோ ஜாயதே க்வசித் அபி குமாதா ந பவதி –தேவி அபராதக்ஷமாஸ்தோத்ரம்

கெட்ட மகன்கள் இருக்கலாம், கெட்ட தாயார் கிடையவே கிடையாது.

 

106.ஜனனீ ஜன்ம பூமிஸ்ச ஸ்வர்காதபி கரீயசீ

-கஹாவத்ரதனாகர்

பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே

 

107.ஜீவன் மாத்ருக ஏவ நூனம் அதுலம் ப்ருங்தே சுகம் ஸ்வாலயே-கஹாவத்ரதனாகர்

தாய் உயிரோடிருக்கும் வரைதான்  வீட்டில் சுகம்.

 

108.து: கம் ஹி ஜனனீனாம் சுதுஸ் சுகம் –ப்ருஹத் கதா மஞ்சரி

அம்மாக்கள் படும் துயரம் கொஞ்சநஞ்சமல்ல.

 

109.துஹிது: ப்ரதானகாலே து:கசீலா ஹி மாதர:

பெண்களைத் திருமணம் செய்து கொடுத்து அனுப்புகையில் தாயார் மனம் தவிக்கும்.

mother rangoli

110.ந மாது: தைவதம் பரம்- சாணக்ய நீதி

அம்மாவுக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை (தாயினும் பெரிய கோயில் இல்லை)

 

111.பதிதா குரவஸ்த்யாஜ்யா நது மாதா கதாசன

மேலிருந்து கீழே வீழ்ந்த பெரியோரை விட்டுவிடலாம், ஆனால் அம்மாவை ஒருபோதும் விட்டுவிடக் கூடாது.

 

112.பாததே ந நிஜ ஆபத்யம் மார்ஜாரீ தசன ஆவலி.

தாய்ப் பூனையின் பற்கள், பூனைக்குட்டிகளுக்கு தீங்கு செய்யா (கோழி மிதித்து குஞ்சுகள் சாகா)

 

113.மாதா கில மனுஷ்யாணாம் தேவதானாம் ச தைவதம் – மத்யமவ்யாயோக

எல்லா மனிதர்களுக்கும் அம்மாவே தெய்வத்தின் தெய்வம்.

 

114.மாதா பித்ருப்யாம்  சப்தஸ்ஸன்ன (சப்த:+சன்+ ந) ஜாது சுகமஸ்னுதே – கதாசரித்சாகரம்

பெற்றோர்களின் சாபத்துக்குள்ளான பிள்ளைகள் மகிழ்ச்சியாக வாழமுடியாது.

 

115.மாத்ரு ஜங்காஹி வத்சஸ்ய ஸ்தம்பீ பவதி  பந்தனே – ஹிதோபதேசம்

அம்மாவின் கால்களே, குழந்தைகளைத் தாங்கும் தூண்கள் (தாயார்தான் ஆதரவு தரும் கொழுகொம்பு)

 

116.மாத்ரு தேவோ பவ பித்ருதேவோ பவ- தைத்ரீயோபநிஷத்

தாயை தெய்வமாக வணங்கு; தந்தையை தெய்வமாக வணங்கு.

 

117.மாத்ருதோஷோ ந தோஷ: -ப்ரதிமா நாடக

அம்மாவிடமுள்ள குறை, குறையாகாது

 

118.மாத்ரா சமம்  நாஸ்தி சரீர போஷணம் – சுபாஷிதாவலி

தாயைப்போல உடம்பைக் கவனிப்பவர் எவருமிலர்.

 

தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை!

119.யாத்ருசீ ஜனனீ லோகே புத்ரீ பவதி தாத்ருசீ

— கஹாவத்ரதனாகர்

தாய் எப்படியோ அப்படியே மகள் இருப்பாள் (தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை).

mother_love_

120.ஸஹஸ்ரம் து பித்ரூன் மாதா கௌரவேனாம் அதிரிச்யதே—மனுஸ்மிருதி 2-145

தந்தையைவிட ஆயிரம் மடங்கு கௌரவுத்துக்குரியவர் தாய்.

 

121.ஹஸ்த ஸ்பர்சோ ஹி மாத்ரூணாம் அஜலஸ்ய ஜலாஞ்சலி: -ப்ரதிமா நாடக

தாயின் அரவணைப்பு, தாகத்தால் தவிப்பவனுக்குக் கிடைத்த தண்ணீர் போல சுகம் தரும்.

 

 

–சுபம்–

 

எது அழகு? நான்கு கவிஞர்கள் கருத்து (Post No.2787)

bob painting 3

Written by london swaminathan

 

Date: 6 May 2016

 

Post No. 2787

 

Time uploaded in London :– 10-27 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

bob painting 2

கல்வி அழகு

குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்

மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து

நல்லம் யாமென்னு நடுவு நிலைமையால்

கல்வியழகே அழகு – நாலடியார் 131

 

சிகை அலங்காரமும், ஆடையினது கரை அழகும், மஞ்சள் பொடி பூசியதால் ஏற்படும் அழகும் அழகல்ல. மனத்தினால் நாம் நல்லவர் என்று எண்ணும் நடுநிலைமையால் கல்வியால் உண்டாகும் அழகே அழகு. (கல்விகற்றால், நல்லவர் ஆவர். அதுவே அழகு)

நாலடியார் என்பது பல கவிஞர்கள் சேர்ந்து படிய 400 பாடல்களைக் கொண்ட நூல்.

xxx

சொல் அழகு

மயிர் வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும்

உகிர் வனப்பும் காதின் வனப்பும்– செயிர் தீர்ந்த

பல்லின் வனப்பும் வனப்பல்ல நூற்கியைந்த

சொல்லின் வனப்பே வனப்பு

–சிறுபஞ்சமூலம் 36 (காரியாசான் இயற்றியது)

 

பொருள்:- தலை மயிர் அழகும், பார்ப்பவரின் கண்ணைக் கவரும் மார்பின் அழகும், நகத்தின் அழகும், செவியின் அழகும், குற்ரமில்லாத பற்களின் அழகும் அழகல்ல. நூல்களின் அமைந்துள்ள சொல்லின் அழகே அழகு.

Xxx

bob painting1

இடை வனப்பும் தோள் வனப்பும் ஈடின் வனப்பும்

நடை வனப்பும் நாணின் வனப்பும் – படைசால்

கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோ

டெழுத்தின் வனப்பே வனப்பு

–ஏலாதி 74 (கணிமேதாவியார் இயற்றியது)

பொருள்:- இடையின் அழகும், தோளினுடைய அழகும், செல்வத்தின் அழகும், நடை அழகும், நாணத்தின் அழகும், திரண்ட கழுத்தின் அழகும், உண்மையான அழகு ஆகாது. கணித நூலறிவும், இலக்கியங்களைப் படித்தறியும் அறிவும்தான் உண்மையான அழகு.

Xxx

thalai atti bommai

வள்ளுவன் கூறுகிறான்

சிறந்த, ஆழமான பல நூல்களைக் கல்லாதவனுடைய அழகு, மண்ணினால் செய்யப்பட்ட பொம்மையின் அழகைப் போன்றதே.

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில் நலம்

மண்மாண் புனை பாவை அற்று

–திருக்குறள் 407 (திருவள்ளுவர் இயற்றியது)

 

–Subham–

 

வள்ளுவர் சொன்ன ‘செக்ஸி’ உவமை! (Post No 2783)

hugging

Written by london swaminathan

 

Date: 5 May 2016

 

Post No. 2783

 

Time uploaded in London :– 6-19 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

காமத்துப் பாலில் 250 குறள்களில் காம சம்பந்தமான விஷயங்களை வள்ளுவன் பாடியிருப்பதை நாம் அறிவோம். அறம், பொருள் பற்றிப் பாடிய குறள்களிலும் ஆங்காங்கே சில ‘செக்ஸி’ உவமைகள் இருப்பது படித்து இன்புறத் தக்கது.

 

முலையிரண்டும் இல்லாத பெண், ஆசைவயப்பட்டது பற்றிப் பாடுகிறான் (குறள் 402) வள்ளுவன்.

 

அறியாமை (கல்லாமை) பற்றி பத்து குறட்பா எழுதிய வள்ளுவன் 5 பாடல்களில் அருமையான உவமைகளைப் பயன்படுத்தி உலக மஹா கவிஞன் – உவமை மன்னன் — காளிதாசனுடன் போட்டியிட முயல்கிறான்!

 

முதலில் மஹாபாரதத்தில் வரும் அறியாமை பற்றிய ஒரு ஸ்லோகத்தைக் காண்போம்:

 

“மனிதனுக்கு ஒரே எதிரி அறியாமைதான்; இரண்டாவது எதிரியே அவனுக்கு இல்லை; அறியாமையால் சூழப்பட்டவன் மோசமான கொடூரமான செயல்களில் இறங்கிவிடுகிறான்” – என்று வியாசர் சொல்லுகிறார்:-

 

ஏகசத்ருர் நத்வீயோ(அ)ஸ்தி சத்ருரக்ஞானதுல்ய: புருஷஸ்ய ராஜன்

யேனாவ்ருத: குருதே சம்ப்ரயுக்த: கோராணி கர்மாணி சுதாருனானி

–மஹாபாரதம், சாந்தி பர்வம், 297-28

 

வள்ளுவன் வாய்மொழி

உவமை 1

கல்லாதான் சொற்காமுறுதல் முலையிரண்டும்

இல்லாதாள் பெண்காமுற்றற்று- குறள் 402

பொருள்:- கல்லாத ஒருவன் ஒரு சபையில் பேச விரும்புவது, இயல்பாகவே ஸ்தனங்கள் (முலைகள்) இரண்டுமில்லாத ஒரு பெண், இன்பத்தை அனுபவிக்க விரும்பிய கதையாக முடியும்.

 

உவமை 2

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்

களரனையர் கல்லாதவர் குறள் 406

பொருள்:-கல்லாதவர்கள் இருந்தும் இறந்தவர்களுக்குச் சமம்; அவர்கள் எதுவும் விளையாத களர் நிலத்துக்கு ஒப்பானவர்கள்.

 

உவமை 3

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்

மண்மாண் புனைபாவையற்று-குறள் 407

பொருள்:- ஆழ்ந்த, சிறந்த அறிவு இல்லாதவனின் அழகு (தோற்றம்) மண்பொம்மை போல இருக்கும் (தண்ணீரில் விழுந்தால் சாயம் வெளுத்துப் போகும்!)

 

உவமை 4

விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்

கற்றாரோடு ஏனையவர்–குறள் 410

 

பொருள்:-நல்ல புத்தகங்களைப் படித்தவர்க்கும், படிக்காதவர்க்கும் உள்ள வேறுபாடு மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள வேறுபாடே (படிக்காதவன் எல்லாம் மிருகம்)

 

உவமை 5

அரங்கின்றி வட்டாடியற்றே நிரம்பிய

நூலின்றிக் கோட்டி கொளல் -குறள் 401

பொருள்:- நூல் பல கல்லாமல், ஒரு சபையில் பேசுவது, கட்டம் போட்டு சதுரங்கம் வரையாமல் தாயக் கட்டையை உருட்டுவது போலத்தான்.

fool

‘உன் மனைவி ஊருக்கே மனைவி’ கதை

முட்டாள்களை எப்படிக் கண்டு பிடிப்பது? (31 அக்டோபர் 2015) என்று முன்னர் நான் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி:–

 

நுனி மரத்தில் உட்கார்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுபவன் மூடன், முட்டாள் என்று இந்திய இலக்கியங்கள் சித்தரிக்கின்றன. உலக மஹா கவி காளிதாசனும் இப்படி இருந்தவர் என்றும் பின்னர் காளிதேவியின் அருள் பெற்று சிறந்தவர் என்றும் செவி வழிக் கதைகள் செப்பும்.

சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை

முட்டாள்கள் அர்த்தம் தெரியாமல் சொற் பிரயோகம் செய்வர். தமிழில் உள்ள கதை அனைவரும் அறிந்ததே. ஒரு ஊரில் ஒரு பெரியவரின் தாயார் இறந்தவுடன் பலரும் துக்கம் விசாரிக்கச் சென்றனர். ஒரு முட்டாள் ஏது சொல்வதென்று திகைத்திருந்த தருணத்தில் எல்லோரும் செல்வதைக் கவனித்தான். “உனது தாயின் இழப்பு உனக்கு மட்டும் இழப்பன்று; அவர் ஊருக்கே தாயாக விளங்கினார். ஆகையால் இன்று நாங்கள் எல்லோரும் தாயை இழந்த பிள்ளையாகி விட்டோம் என்று பலரும் கூறினர். இவனும் அப்படியே கூறிவிட்டு,  வீட்டுக்கு வந்தான். மற்றொரு நாள் ஊர்ப் பெரியவரின் மனைவி இறந்து போனாள். இவன் எல்லோருக்கும் முன் முந்திக் கொண்டு, முந்திரிக் கொட்டை போலச் சென்றான். ஊரே கூடியிருந்தது. இந்த முட்டாள் முன்னே சென்று, “உனது மனைவியை இழந்தது உனக்கு மட்டும் துக்கமன்று. அவள் உனக்கு மட்டும் மனைவியில்லை; ஊருக்கே மனைவியாகத் திகழ்ந்தாள் இன்று நாங்கள் அனைவரும் மனைவியை இழந்த கணவர் ஆகிவிட்டோம்” என்றான். பக்கத்தில் இருந்த பத்துப் பேர் அவனுக்கு அடி உதை கொடுத்து அவனை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்!!

 

மஹாபாரதம் இதை இன்னும் அழகாகச் சொல்லுகிறது. ஒரு கிளியானது சொன்னதைச் சொல்லும்; அழகாகச் சொல்லும். ஆனால் அதையே ஒரு பூனை பிடிக்க வரும் போது அம்மா, என்னை பூனை பிடிக்கிறது என்று சொல்லத் தெரியாது. இதே கதைதான் முட்டாள்களின் கதையும்.

 

பல மொழிகளிலும் அறியாமை பற்றிய கருத்துகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன:

 

1.Ignorance is the night of the mind (Chinese proverb)

 

மனதின் இருண்ட நேரம் அறியாமை (சீனப் பழமொழி)

 

2.There is no blindness like ignorance.

அறியாமை என்பது அந்தகத்தன்மை (குருடு)

 

3.Thedevil never assails a man except he find him either void of  knowledge or  of the fear  of god.

அறிவு இல்லாதவனையும், கடவுளை நம்பாதவனையும்தான் பேய்கள் பிடிக்கின்றன

 

4.Scinece has no enemy but the ignorant.

விஞ்ஞனத்துக்கு ஒரே எதிரி அறிவற்றவனே

 

5.Art has no enemy but ignorance

கலையின் எதிரி அறியாமை

 

6.If the blind lead the blind, both shall fall into the ditch

குருடன் குருடனுக்கு வழிகாட்டினால் இருவரும் பள்ளத்தில் விழுவர் (உபநிஷத்திலும், பைபிளிலும் உள்ள உவமை)

 

இறுதியாக மத்திய கிழக்கில் அராபிய மொழியில் உள்ள பழமொழி

He who knows not, and knows not that he knows not, is a fool. Shun him.
He who knows not, and knows that he knows not, is simple. Teach him.
He who knows, and knows not he knows, is asleep. Wake him.
He who knows, and knows that he knows is wise. Follow him.

அறியான் அறியான் தான் அறியாதவன் என்று – அவன் ஒரு முட்டாள் – ஒதுக்குக

அறியான் அறிவான் தான் அறியாதவன் என்று – அவன் எளியவன் – கற்பிக்க

அறிவான் அறியான் தான் அறிந்தவன் என்று – அவன் உறங்குகிறான் – எழுப்புக

அறிவான் அறிவான் தான் அறிந்தவன் என்று – அவன் மேதாவி – பின்பற்றுக

–சுபம்–

கருமிகளை கடலில் தள்ளுக! மஹாபாரதம் அறிவுரை!! (Post No.2774)

desrt nd sea

Written  by london swaminathan

 

Date: 2 May 2016

 

Post No. 2774

 

Time uploaded in London :– 11-58 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

மஹாபாரதம் உத்யோக பர்வத்தில் ஒரு அருமையான ஸ்லோகம். இதே கருத்தை வள்ளுவனும் பிற்காலத்தில் எழுதியிருக்கிறான்:–

 

த்வாவம்பசி நிவேஷ்டவ்யோ கலே பத்வா த்ருடாம் சிலாம்

தனவந்தமதாதாரம் தரித்ரம் ச தபஸ்வினம்

–மஹாபாரதம், உத்யோக பர்வம் 33-60

 

அதாத தனிக – பணமிருந்தும் கொடுக்க மறுப்பவன்

அதபஸ்வி தரித்ர – (கடவுள்) நம்பிக்கையற்ற ஏழை

த்வா- இருவரும்

கலே பத்வா த்ருடாம் சிலாம்- கழுத்தில் கல்லைக் கட்டி

அம்பசி நிவேஷ்டவ்ய = கடலில் மூழ்கடிக்கப்படவேண்டியவர்கள்.

 

வெறுமனே கடலில் தூக்கிப்போட்டால், ஒருவேளை நீந்திக் கரை சேர்ந்துவிடுவார்களே என்றெண்ணி, கழுத்தில் கல்லைக் கட்டி கடலில் தூக்கி எறிக என்கிறது மஹாபாரதம்.

 sugarcane

வள்ளுவனும் இப்படி சுடு சொற்களையே பெய்கிறான்: கையை முறுக்கு, தாடையில் ஓங்கி அடித்து நொறுக்கு, கரும்பை நசுக்கிப் பிழிவது போல கருமியை நசுக்கு – என்பான் வான் புகழ் வள்ளுவன்!!

 

 “வள்ளுவனும் வன்முறையும்”, “பாரதியும் வன்முறையும்” என்று 24 ஜூலை, 2013ல் நான் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி இதோ:

 

மரண தண்டனைக்கு ஆதரவு

 

மரண தண்டணைக்கு ஆதரவு தருபவன் வள்ளுவன். அவன் தீவிர அஹிம்சாவாதி அல்ல. தீயோரை அழிப்பது பயிர்களின் களைகளை நீக்குவது போல என்று அழகான உவமை தருகிறான். இதோ அந்தக் குறள்:

 

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்

களைகட் டதனோடு நேர் (550)

 

பொருள்: நாட்டில் உள்ள கொடியோரை மரண தண்டனை கொடுத்து அழிப்பது, பயிர்கள் நன்றாக வளர உழவர்கள் களை எடுப்பது போல் ஆகும்.

 

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்

எண்ணின் தவத்தான் வரும் (264)

 

கீதையில் ‘’பரித்ராணாய சாதூணாம் விநாசாய ச துஷ்க்ருதாம்’ என்று கண்ணன் சொன்னதன் எதிரொலி இது. ‘’தீயோரை அழிப்பதும் நல்லோரைக் காப்பதும் என் குறிக்கோள்’’ என்று பகவான் கண்ணன் சொன்னதை, தவமுடைய யாரும் செய்ய முடியும் என்பதை வள்ளுவன் ஒப்புக்கொள்கிறான்.

twists

கன்னத்தில் அடி, கையை முறுக்கு, கரும்பு போல நசுக்கு

 

அதிகாரம் 108, கயவர்கள் பற்றியது. அதில் கஞ்சர்களையும் சேர்த்துத் திட்டுகிறார். கயவர்களின் கன்னத்தில் அடித்து ஆளை நொறுக்கு என்றும் சொல்வான் வள்ளுவன்.

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடுறுடைக்கும்

கூன்கைய ரல்லா தவர்க்கு (1077)

பொருள்: கன்னத்தில் அடித்து நொறுக்கினால்தான் கயவர்கள் உதவி செய்வர். அதுவரை சாப்பிட்ட பின்னர் ஈரக் கையால் கூட உதறித் தெறிக்க மாட்டார்கள்.

இன்னொரு குறளில் கரும்பு போல கசக்கி நசுக்கு என்கிறான்.

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்

கொல்லப் பயன்படும் கீழ் (1078)

 

பொருள்: சான்றோர்கள் சொன்ன மாத்திரத்திலேயே பிறர்க்கு உதவி செய்வர். கயவர்கள் மட்டும் கரும்பு போல் கொன்று பிழிந்தால்தான் பயன்படுவார்கள்.

 

வள்ளுவன் கோபக்காரனும் கூட. சோற்றுக்கே அலையவேண்டிய நிலை இருக்குமானால் பிரம்மாவே பிச்சை எடுக்கட்டும் என்று அவனைச் சபிக்கவும் தவறவில்லை.

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகு இயற்றியான் (1062)

பொருள்: உலகில் சிலர் பிச்சை எடுத்துத்தான் உயிர் வாழவேண்டும் என்றால், அந்த பிரம்மாவே பிச்சை எடுத்து அழியட்டும்.

ஆக தேவையானபோது வன்முறையைப் பிரயோகிக்கலாம்; அதர்மம் செய்வோருக்கு எதிராக மட்டும் வன்முறையைக் கையாளலாம்.

 

Sugar cane-23

–சுபம்–

 

 

படிப்பது எப்படி? (Post No.2768)

e bay reading statue

Written  BY S NAGARAJAN

Date: 30 April 2016

 

Post No. 2768

 

 

Time uploaded in London :–  5-23 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

சமஸ்கிருத செல்வம்

 

 

ச.நாகராஜன்

kids-Reading-Books-group-1

சபையிலாகட்டும் தனியாகவே படிப்பதாகட்டும் எப்படிப் படிப்பது.? அதற்கு 6 குறைகளை அகற்றிப் படிக்க வேண்டும் என்று பாணிணீய சிக்ஷா கூறுகிறது.

 

  • ஏற்றியும் இறக்கியும் கண்டபடி உச்சரிக்கக் கூடாது
  • வேக வேகமாகப் படிக்கக் கூடாது
  • படிக்கும் போது தலையை ஆட்டிப் படிக்கக் கூடாது
  • எழுதியபடி படிக்கக் கூடாது (இலக்கணப் பிழைகளுடன்)
  • எதைப் படிக்கிறோமோ அதை நன்கு புரிந்து கொள்ளாமல் படிக்கக் கூடாது
  • தாழ்ந்த குரலில் படிககக் கூடாது (கணீரென்ற குரலில் அனைவரையும் கவரும் வண்ணம்) படிக்க வேண்டும்

செய்யுளைப் பார்ப்போம்:-

கீதோ ஷீக்ரீ சிரக்கம்போ ததா லிகித பாடக: |

   அனர்த்தக்ஞோல்ப கண்டச்ச ஷடதே பாடகாதமா: ||

 

இதன் ஆங்கில மொழிபெயர்ப்பை அழகாக எஸ்.பி. நாயர் (S B Nair) செய்துள்ளார் இப்படி:-

 

One who reads in a sing-song manner, reads too quickly, shakes his head while reading, reads as written (without correcting scribal errors), does not understand the sense, and has a faint voice – all these six are inferior reciters (readers)

பழைய கால குருகுல முறையில் இந்த ஆறு பிழைகளையும் ஆரம்பத்திலேயே திருத்தி விடுவார்கள்.

 

ஆக படிப்பதிலும் சரியான முறை ஒன்று உண்டு; அதைச் செய்க என்கிறது பாணிணி சிக்ஷா!

statue reading, gift

–subham–

**************

 

மாடு மேய்க்காமல் கெட்டது, பயிர் பார்க்காமல் கெட்டது! (Post No.2761)

air ulavan

மே 2016 காலண்டர் (துர்முகி  சித்திரை/ வைகாசி)

Compiled by london swaminathan

Date: 27 ஏப்ரல் ,2016

 

Post No. 2761

 

Time uploaded in London :–  16-50

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 3 gaurs

பசு, காளை, மாடு பற்றிய 31 தமிழ்ப் பழமொழிகள் மே மாத காலண்டரை அலங்கரிக்கின்றன. ஒவ்வொரு பழமொழியையும் யோசித்துப் பார்த்தால் பொருள் விளங்கும்; நீங்களே ஒவ்வொன்றைப் பற்றியும் கட்டுரை எழுதத் துவங்கி விடுவீர்கள். இது வரை இந்த பிளாக்கில் சுமார் 2000 தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதப் பழமொழிகளை தலைப்பு (சப்ஜெக்ட்) வாரியாகத் தொகுத்துக் கொடுத்துள்ளேன். தமிழில் 20,000 பழமொழிகள் உள்ளன!! வாழ்க தமிழ்!

 

 

முக்கிய நாட்கள்:- மே 1 மே தினம்,  4 அக்னி நட்சத்திரம் ஆரம்பம், 9 அக்ஷய த்ருதியை, 21 புத்த ஜயந்தி, வைகாசி விசாகம், 28 அக்னி நட்சத்திரம் முடிவு.

முகூர்த்த நாட்கள்:- 2, 4, 9, 11, 12, 19,26; அமாவாசை:- 6; பௌர்ணமி:- 21; ஏகாதசி:- 3, 17.

 

மே 1 ஞாயிற்றுக் கிழமை

ஆடுற மாட்டை ஆடிக் கறக்கனும், பாடுற மாட்டைப் பாடிக்கறக்கனும்.

மே 2 திங்கட் கிழமை

மாடு கெட்டால் தேடலாம், மனிதர் கெட்டால் தேடலாமா?

மே 3 செவ்வாய்க் கிழமை

மாடு மயங்கி வானம் பார்த்தால் மழை பெய்யும்

மே 4 புதன் கிழமை

மாடு மேய்க்காமற் கெட்டது, பயிர் பார்க்காமற் கெட்டது.

மே 5 வியாழக் கிழமை

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு

 2PADDY THRASHING

 

மே 6 வெள்ளிக் கிழமை

அடியாத மாடு படியாது.

மே 7 சனிக் கிழமை

மாடு கிழமானாலும் பாலின் ருசி போகுமா?

மே 8 ஞாயிற்றுக் கிழமை

மாடு தின்கிற மாலவாடு, ஆடு தின்கிறது அரிதா?

மே 9 திங்கட் கிழமை

மாட்டைப் புல் உள்ள தலத்திலும், மனிதனை சோறு உள்ள தலத்திலும் இருக்க ஒட்டாது.

மே 10 செவ்வாய்க் கிழமை

மாடு நினைத்த இடத்தில் தொழுவம் கட்டுவதா?

beauty bull

 

மே 11 புதன் கிழமை

மாடு மேய்க்கிற தம்பிக்கு மண்டலமிட்ட பெண்சாதி

மே 12 வியாழக் கிழமை

மேய்க்கிற மாட்டின் கொம்பிலே புல்லைக் கட்ட வேணுமா?

மே 13 வெள்ளிக் கிழமை

பாலைப் பார்த்து பசுவைக் கொள்ளு, தாயைப் பார்த்து பெண்ணைக் கொள்ளு.

மே 14 சனிக் கிழமை

பசு உழுதாலும் பயிரைத் தின்ன வொட்டான்.

மே 15 ஞாயிற்றுக் கிழமை

பசுத்தோல் போர்த்திய புலி போல

 azakana madu, cow

 

மே 16 திங்கட் கிழமை

பசுமாடு நொண்டியானால், பாலும் நொண்டியா?

மே 17 செவ்வாய்க் கிழமை

பசுவைக் கொன்று செருப்பு தானம் செய்தது போல.

மே 18 புதன் கிழமை

பசுவுக்கு பிரசவ வேதனை , காளைக்கு காம வேதனை

மே 19 வியாழக் கிழமை

பசு விழுந்தது புலிக்கு ஆதாயம்

மே 20 வெள்ளிக் கிழமை

மாடு திருப்பினவன் அர்ச்சுனன்

 

buffalo boy, cambodia

மே 21 சனிக் கிழமை

மாடு தின்னிக்கு வாக்குச் சுத்தம் உண்டா?

மே 22 ஞாயிற்றுக் கிழமை

மாடு மறுத்தாலும் பால் கறக்கும், வாலில் கயிறைக் கட்டினால்.

மே 23 திங்கட் கிழமை

காளை போன வழியே கயிறு போகும்.

மே 24 செவ்வாய்க் கிழமை

இளிச்சவாயனைக் கண்டால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்

மே 25 புதன் கிழமை

எருதுக்கு நோய்வந்தால் கொட்டகையைச் சுடுகிறதா?

 

fighting boys

மே 26 வியாழக் கிழமை

எருது ஏழையானால் (கூடாவிட்டால்), பசு பத்தினித்துவம் கொண்டாடும்

மே 27 வெள்ளிக் கிழமை

எருது கெட்டார்க்கும் எட்டே கடுக்காய், இளம்பிள்ளைத் தாய்ச்சிக்கும் எட்டே கடுக்காய்

மே 28 சனிக் கிழமை

எழுது கொழுத்தால் தொழுவத்தில் இராது, பறையன் கொழுத்தால் பாயில் இரான்.

மே 29 ஞாயிற்றுக் கிழமை

பசு மாடும் எருமை மாடும் ஒன்றாகுமா?

மே 30 திங்கட் கிழமை

பசு கருப்பென்று பாலும் கருப்பா?

மே 31 செவ்வாய்க் கிழமை

மாட்டை மேய்த்தானாம், கோலைப் போட்டானாம்

தண்ணீர் மாடு

–சுபம்–

 

 

இளம் பெண்களும், கிழட்டு கணவன்மார்களும்! (Post No.2752)

women9

Translated  by London swaminathan

Date: 24 April 2016

 

Post No. 2752

 

Time uploaded in London :– 12-15

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

woman mirror2
பெண்கள் பற்றிய 150 சம்ஸ்கிருதப் பழமொழிகள்- பகுதி 6

87.உயர்குலப் பெண்களின் மனது பூப்போல மென்மையானது

புரந்த்ரீணாம் சித்தம் குசும சுகுமார ஹி பவதி –உத்தம ராம சரிதம்

Xxx

88.காதல் வயப்பட்ட, உயர்குலப் பெண்களின் மனது, புரிந்து கொள்ளமுடியாதது.

புரந்த்ரீணாம் ப்ரேம  க்ரஹிலம் அவிசாரம் கலு மம: –கௌமுதீ மித்ரானந்த

Xxx

89.ஒரு பெண்ணுக்கு கணவனின் மரணம்தான் முதல் அடி.

ப்ரதமம் மரணம் நார்யா  பர்துர் வைகுண்யம் உச்யதே- வால்மீகி ராமாயணம்

Xxx

90.அடாவடியான பெண்களுக்கும் கூட, கணவன் மீது கோபம் கொள்ள சரியான காரணம் தேவைப்படுகிறது.

ப்ரபவந்த்யோபி ஹி பர்த்ருஷு காரண கோபா: குடும்பின்ய: — மாளவிகாக்னிமித்ரம் 1-18, காளிதாசன்

Xxx

91.மனைவியர் , கணவன்களைப் பின்பற்றுவதை முட்டாள்களும், அறிவர்.

ப்ரதமா: பதிவர்த்மகா இதி ப்ரதிபன்னம் ஹி விசேதனைரபி – குமார சம்பவம் 4-33, காளிதாசன்

Xxx

92.கணவனின் அன்பு குறையும்போது, பெண்கள் பெருமூச்சு விடுகிறார்கள்.

ப்ராணாஸ்தூர்ணம் ஹி நாரீணாம் ப்ரியப்ரணயதானவே – ப்ருஹத் கதா மஞ்சரி

Xxx

 

women23

93.வயதான கணவர்களை, அழகான இளம் பெண்கள், திறமையாக சமாளிக்கின்றனர்.

ப்ராய: ப்ராகல்ப்யம் ஆயாந்து தருண்ய: ஸ்தவிரே வரே- ராமாயண மஞ்சரி

Xxx

94.புதல்வியரின் விஷயங்களை மனைவியின் கண்கள் ஊடாகவே கணவர்கள் காண்கின்றனர்.

ப்ராயேண க்ருஹிணீ நேத்ரா: கன்யார்தேஷு குடும்பின: -– குமார சம்பவம், 6-85, காளிதாசன்

Xxx

 

95.காதல் வயப்பட்ட கணவனுக்கு, மனைவியின் கெட்டபுத்தியும் கண்ணுக்குத் தெரிவதில்லை.

ப்ராயேண பார்யாத் ஔசீல்யம்  ஸ்நேஹாந்தோ நேக்ஷதே ஜன: – கதாசரித் சாகரம்

Xxx

96.உயிரையும் விட மேலானவள் மனைவி.

பார்யா ப்ராணேப்யோ அபி அதிகப்ரியா– கதாசரித் சாகரம்

Xxxx

97.பார்யா ரூபவதீ சத்ரு: – சாணக்யநீதி 9-12

அழகான மனைவி – ஒரு எதிரி

Xxx

98.துன்பப்படும் அனவருக்கும் மூத்த சகோதரரின் மனைவி, தாயாராகி விடுகிறார்.

ப்ராத்ருஜாயா ஹி சர்வேஷாம்  தீனானாம்  வாமலோசனா – கஹாவத்ரத்னாகர்

Xxx

99.உங்கள் மனைவியைக் காப்பாற்றுவதுபோல, மாற்றார் மனைவியருக்கும் பாதுகாப்பு அவசியம்.

யதா தவ ததா அன்யேஷாம் தாரா ரக்ஷ்யா – வால்மீகீ ராமாயணம் 5-21-8

Xxx

100.மனைவியர் இருக்கும் வரை, வேலைகளும் இருக்கத்தான் செய்யும்

யாவத் க்ருஹிணீ, தாவத் கார்யம்- கஹாவத்ரத்னாகர்

Xxx

IMG_3350

101.சக்களத்தி என்பவள், துன்பத்தின் ஊற்று

சபத்னீ சர்வதா சிந்த்யா — கதாசரித் சாகரம்.

Xxx

102.காதல் நோய்க்கு அருமருந்து, காதலியின் – அமுதம் போன்ற அணைப்புதான்.

ஸ்மர ஜ்வர சிகித்சா ஹி தயித ஆலிங்கன அம்ருதை: – ப்ருஹத் கதா மஞ்சரி

Xxx

103.வெண்சாமரம் போன்ற ப்ரகாசமான, புன்னகை மிளிரும் அன்புள்ள மனைவியை யார்தான் போற்றமாட்டார்?

ஸ்மேர சாமர  ஹசின்ய: வல்லபா: கஸ்ய ந ப்ரியா:? – பாரத மஞ்சரி

–சுபம்–

 

மரியாதைக்குரிய ஐந்து(5): மனு அறிவுரை (Post No.2749)

IMG_5163 (2)

Translated  by London swaminathan

Date: 23 April 2016

 

Post No. 2749

 

Time uploaded in London :– 9-39 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

IMG_3259

1.வித்தம் பந்துர்வய: கர்மவித்யா பவதி பஞ்சமீ

ஏதானி மானஸ்தானானி கரீயோ யத்யதுத்தரம்

மனு ஸ்மிருதி 2-136

 

வித்தம் – பணம்/செல்வம்

பந்து- உறவினர்

வய: – வயது

கர்ம- ஒருவனுடைய தொழில்

வித்யா – கற்ற கல்வி/அறிவு

இந்த வரிசையைக் கவனியுங்கள். கடைசியில் மனு அழகாக முடிக்கிறார். முதலில் சொன்னதைவிட அடுத்தது மிகவும் முக்கியமானது. அதாவது பணத்தை விட உறவினர், உறவினரைவிட வயது, வயதைவிட ஒருவனுடைய கடமை/தொழில், அதைவிட ஒருவன் கற்ற கல்வி. அதாவது கல்விக்கும் அறிவுக்கும்தாம் முக்கியத்துவம்.

 

Xxx

 

IMG_3203

2.பூஜிக்கத் தக்க 5 பேர்

2.பஞ்சைவ பூஜயன்  லோகே யச:  ப்ராப்னோதி கேவலம்

தேவான் பித்ரூன் மனுஷ்யாஞ்ச  பிக்ஷூனதிதி பஞ்சமான்

–விதுரநீதி 1-80

 

தேவா: – கடவுள்

பித்ரு – முன்னோர்கள் (நீத்தார்)

மனுஷ்யா: – மனிதர் (மனிதனாக வாழும் மனிதன்; சிலர் மிருகம் போலவும் வாழ்கின்றனர்  அன்றோ!)

பிக்ஷு- சாது, சந்யாசிகள்

அதிதி – விருந்தினர்

Xxxx

 

3.யார் யாருக்கு விருது/பட்டம்/பரிசு கொடுத்து கௌரவிக்க வேண்டும்?

3.பூஜ்யா வித்யாபுத்திபௌருஷாபிஜனகர்மாதிசயதஸ்ச புருஷா:

–அர்த்தசாஸ்திரம் 3-20-23

வித்யா- கல்வியில் தேர்ச்சி பெற்றோர்

புத்தி- புதிய கண்டுபிடிப்புகள்; யோஜனைகள் சொன்ன புத்திமான்கள்

பௌருஷ – வீரதீரச் செயல் புரிந்தோர்

அபிஜன – உயர்குலத்தில் பிறந்தோர் (அறிஞர்கள், அரசர்களின் வாரிசுகள்)

கர்மாதிசய: – அற்புதப்பணியாற்றுவோர் (கின்னஸ் சாதனை போல சாதனை புரிவோர்)

Xxxx

IMG_4859 (2)

4.நன்கு கவனிக்கப்படவேண்டிய/உபசரிக்கப்பட வேண்டிய 5 பேர்

4.அதிதிர்பாலக: பத்னீஜனனீ ஜனகஸ்ததா

பஞ்சைதே க்ருஹிண: போஷ்யா இதரே ச  ஸ்வ சக்தித:

–சுபாஷித ரத்ன பாண்ட்காரம் 157/206

அதிதி – விருந்தினர்

பாலகா: – பாலர்கள் (சிறுவர், சிறுமியர்)

பத்னீ – மனைவி

ஜனனீ – தாயார்

ஜனக: – தந்தை

IMG_4545

–சுபம்–

 

 

சுவையான சுருட்டு சம்பவங்கள்: எடிசன், மாக்ஸ்முல்லர், டென்னிசன் (Post No. 2746)

1992-tennyson-present

Translated  by London swaminathan

Date: 22 April 2016

 

Post No. 2746

 

Time uploaded in London :–  9-39 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

610-Max-Mueller-India-Stamp-1974-225x300

புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர் ஆல்ப்ரெட் லார்ட் டென்னிசன் பற்றி பிரபல கீழ்திசை இயல் அறிஞர் மாக்ஸ்முல்லர், கீழ்கண்ட சுவையான சம்பவத்தைக் கூறுகிறார்:

“நான் நண்பர்கள் சிலருடன் டென்னிசன் வீட்டில் தங்கியிருந்தேன். டென்னிசன் எப்போதும் புகைபிடிப்பார். அவரால் புகைபிடிக்காமல் இருக்க முடியாது. ஒருநாள் சுருட்டு பிடிக்கும் பழக்கம் பற்றி காரசார விவாதம் நடந்தது. எல்லோரும் டென்னிசனை கிண்டல் செய்தனர்.

இந்த ஆள் கையில் சுருட்டு இல்லாமல் வாழவே முடியாது என்றனர்.

உடனே ‘யாராவது ஒருவர் எதையாவது நினைத்தால் அதைச் செய்ய முடியும்’ என்றார் புலவர்.

ஐயா, புலவர் டென்னிசன் அவர்களே! அதெல்லாம் உறுதியான ஆளுக்குதான். உம்மைபோல வழவழா கொழகொழா பேர்வழிகளால் அதெல்லாம் முடியவே முடியாது என்று நக்கல் செய்தனர்.

 

டென்னிசனுக்கு ஒரே கோபம். இதோ பார்! செய்து காட்டுகிறேன் என்று ஜன்னல் வழியாக புகையிலை பாக்கெட்டையும் அதை வைத்து ஊதும் குழாயையும் (பைப்) தோட்டத்தில் எறிந்தார். எல்லோரும் திகைத்து நின்றனர். ஒன்றும் பேசவில்லை.

மறுநாள் டென்னிசன் மிகவும் உற்சாகமக வேலைகளைச் செய்தார். இரண்டாம் நாள்,திடீரென் ‘மூட்’ அவுட்டானது; பிறகு வழக்கம்போலக் காணப்பட்டார்.

மூன்றாம் நாள் டென்னிசன் பித்துப் பிடித்தவர் போல இருந்தார். அடக் கடவுளே! டென்னிசனை இப்படி பகடி செய்திருக்க வேண்டாமே என்று எண்ணி நண்பர்கள் வருந்தினர். ஆனால் யாருக்கும் மீண்டும் இது பற்றிப் பேசவே அச்சம்.

 

அன்று காலையில் டென்னிசன் திடீரென்று தோட்டத்துக்குள் நுழைந்தார். தூக்கி எறிந்த புகையிலை பாக்கெட்டையும் பைப்பையும் (சிகார் குழாய்) சேகரித்தார். வழக்கம் போல புகைபிடித்தார்.

ஆனந்தம்; பரமானந்தம்.

எல்லோரும் கப்பு சிப்பென்று அவரவர் வேலையைப் பார்த்தனர். “சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி” – என்று எதையும் செய்ய விரும்பவில்லை.

“தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்” — என்ற பழமொழி சரியாய் போனது.

 

Xxx

Thomas-Alva-Edison

முட்டைக்கோசு இலை சுருட்டு!

பிரபல கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன் வாழ்வில நடந்த சுவையான சுருட்டு சம்பவம்:–

 

தாமஸ் ஆல்வா எடிசன் விலையுயர்ந்த, பிரபல ஹவானா (கியூபா புகையிலை) சுருட்டுகளைப் பிடிப்பது வழக்கம். அவர் அறைக்குள் வரும் நண்பர்கள் அனைவரும் அதைக் கைப்பிடி எடுத்து பாக்கெட்டுக்குள் திணித்துக் கொள்வர். அவருக்கோ சொல்லவும் முடியவில்லை; மெல்லவும் முடியவில்லை.

இது பற்றி அவருடைய நண்பர் கேரியுடன் அங்கலாய்த்தார்.

“அட! இது என்ன கஷ்டம்! எல்லாவற்றையும் ஒளித்து வையுங்கள்; அப்பத்தான் உங்கள் நண்பர்களுக்குப் புத்தி வரும்” என்றார் கேரி.

“அதுதானே முடியவில்லை. இதெல்லாம் எங்கே ஞாபகத்துக்கு வருகிறது? இன்னொரு சுவையான விஷயத்தைச் சொல்லுகிறேன் கேள்” என்று தொடர்ந்தார் எடிசன்

“என் செயலாளர் ஜான்சனை உனக்குத் தெரியுமில்லையா?அவர் அருமையான ஒரு தந்திரம் செய்தார். அவருக்கு சுருட்டு கம்பெனி நண்பர் ஒருவர் இருந்தார். அவரிடம் சொல்லி, என் நண்பர்களுக்குப் பாடம் கற்பிக்க, ஒரு விநோத சுருட்டு செய்யச் சொன்னார். நானும் இது பிரமாதமான ஐடியா என்று புகழ்ந்தேன். அதாவது, முட்டைக்கோசு இலையைக் காய வைத்து அதை பழுப்பு/ பிரவுன் காகிதத்தில் சுருட்டு போலச் செய்துவைப்பது. (அந்தக் கண்றாவியைச் சுவைத்துவிட்டால் மீண்டும் தன் நண்பர்கள் சுருட்டு பக்கமே வரமாட்டார்கள் என்று எடிசன் நம்பினார்.)

 

கொஞ்ச காலம் ஆயிற்று; வழக்கம்போல விலையுயர்ந்த சுருட்டுகள் காணாமற்போய்க் கொண்டேயிருந்தன. திடீரென்று முட்டைக்கோசு இலை சுருட்டு ஞாபகத்துக்கு வந்தது. உடனே அந்த நண்பரைத் தொடர்பு கொண்டு, “என்ன ஆயிற்று நம் திட்டம். எப்போது புதுவகை சிகரெட்டுகளை அனுப்பப் போகிறீர்கள்?” என்றேன்.

நாம் ரொம்ப நாளைக்கு முன்னரே அனுப்பிவிட்டேனே! என்றார் அவர்.

உடனே நான் என் மானேஜரைக் கூப்பிட்டு எங்கே அந்த சுருட்டுகள்? என்றேன்.

 

Thomas-Alva-Edison-

என் மானேஎஜர் சொன்னார்: ஒரு பார்சல் வந்தது. நீங்கள் கலிபோர்னியா செல்லுகையில் அதை உங்கள் கைப்பைக்குள் வைத்துவிட்டேனே என்றார்.

கேரி, என்ன நடந்தது தெரியுமா? அந்த சனியன் பிடித்த முட்டைக்கோசு சுருட்டுகள் முழுதையும் நானே குடித்துத் தீர்த்திருக்கிறேன்!!

(நண்பர்களை முட்டாளாக்க நினைத்த தாமஸ் ஆல்வா எடிசன் தானே முட்டாளானார்!)

–சுபம்–

 

‘வீரர்களின் மனைவியர் வருந்துவதே இல்லை’—வால்மீகி (Post No 2744)

IMG_4384

Compiled  by London swaminathan

Date: 21 April 2016

 

Post No. 2744

 

Time uploaded in London :– 13-51

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

மனைவி- பார்யா பற்றிய பொன்மொழிகள்

பெண்கள் பற்றிய 150 சம்ஸ்கிருதப் பழமொழிகள்- பகுதி 5

dance in shade

67.அடுத்தவன் மனைவி பற்றி விமர்சிப்பது பண்புடையாளர் செயலன்று

-சாகுந்தலம், காளிதாசன்

அநார்ய: பரதார வ்யவஹார:

Xxxx

68.மற்றவர் மனைவியை கூர்ந்து கவனிப்பது தவிர்க்கப்பட வேண்டியது

-சாகுந்தலம், காளிதாசன்

அநிர் வர்ணனீயம் பர  களத்ரம்

Xxxx

69.மனைவி என்பவள் அணுசரணையாக இருக்க வேண்டும்.

–க்ரந்தஸ்தகாதகாகு

அனுகூல ரசா பார்யா

Xxxx

70.மனைவி இல்லாத வீடு சூன்யமானது

(இல்லாள் இல்லாவிடில் அது வீடு இல்லை)

–கதா சரித் சாகரம் (கதைக்கடல்)

அபார்யம் ஹி சூன்யம் க்ருஹபதேர்க்ருஹம்

Xxxx

 

bob painting 5

71.கணவனின் அரைப்பகுதி மனைவி (ஆணில் பாதி பெண்)

அர்தம் பார்யா மனுஷ்யஸ்ய

Xxxx

72.மனைவி என்பவள் உலோகத்தால் செய்யப்படாத ஒரு தளை (கைவிலங்கு)

-சாணக்ய நீதி சாஸ்த்ரம்

அலோஹமயம்  நிகடம் களத்ரம்

Xxxx

73.கட்டுபடாத மனைவி  எதிரி

-சாணக்ய நீதி

அவிநீதா ரிபு: பார்யா

Xxxx

74.மனைவியின் காம வலையில் விழுந்த கணவன், சாவையும் பொருட்படுத்தான்

–பாரத மஞ்சரி

காந்தா கடாக்ஷ ஹ்ருஷ்டோ ஹி ந வேத்தி மரணம் ஜன:

Xxxx

75.க்ரியாணாம் கலு தர்ம்யாணாம் சத்பத்ன்யோ மூல காரணம்

–குமாரசம்பவம், காளிதாசன்

அறப்பணிகள் அனைத்துக்கும் வேர் போன்றவர் நல்ல மனைவிமார்களே.

Xxxx

 

IMG_4360

76.கணவனுடைய அன்பினால், உறவினர்களையும் விட்டுவிடுவர் பெண்கள்.

த்ருணம் பாந்தவபக்ஷோ ஹி பர்த்ருஸ்நேஹேன யோஷிதாம்

—-பாரத மஞ்சரி

Xxxx

77.இல்லாள் இருப்பதால்தான் அதை இல்லம் என்கிறோம்.

ந க்ருஹம் க்ருஹம் இதி ஆஹு: க்ருஹீணீ க்ருஹம் உச்யதே

–பஞ்சதந்திரம்

Xxxx

78.மனிதனுடைய மனைவி ராக்ஷசன் மனைவியாக இருக்க் வாய்ப்பில்லை

ந மானுஷீ ராக்ஷசஸ்ய பார்யா பவிதும் அர்ஹதி

–வால்மீகி ராமாயணம், 5-24-8

Xxxx

79.அடுத்தவன் மனைவியைப் பார்ப்பது (உற்று நோக்குவது) அறநெறியன்று.

–ம்ருச்சகடிக, சூத்ரகர்

ந யுக்தம் பர களத்ர தர்சனம்

Xxxx

80.காதலனைக் காணப் போகும் பெண்ணை யாரும் தடுத்து நிறுத்த முடியாது.

ந சக்யாஹி ஸ்த்ரியோ ரோத்தும் ப்ரஸ்திதா தயிதம் ப்ரதி

—-ம்ருச்சகடிக, சூத்ரகர்

 

Xxxx

 

 

81.வீரர்களின் மனைவியர் வருந்துவதே இல்லை

–வால்மீகி ராமாயணம் 4-24-43

ந சூர பத்ன்ய:பரிதேவயந்தி

Xxxx

82.சுயமரியாதையுள்ள பெண்கள், தனது கணவன், மற்ற பெண்களுடன் நெருக்கமாக இருப்பதை விரும்புவதில்லை

ந சஹந்தே ஹி மானின்ய: பத்யுர் அன்யா சமாகமம்

-ப்ருஹத் கதா மஞ்சரி

Xxxx

 

IMG_4508

83.கணவன் மீது பற்றுடைய பெண்கள், அவர்களின் கணவரின் அன்புவலைக்குள் வேறு யாரும் வருவதை சகிப்பதில்லை.

ந சஹந்தே ஹி  ராகிண்யோ பர்து: ப்ரேமபதம் ஜனம்

—ப்ருஹத் கதா மஞ்சரி

Xxxx

84.சக்களத்திகளுடன் பெண்கள் போட்டி போடுவது நிரூபிக்கப்பட்ட உண்மையே

–கதா சரித் சாகரம்

நிசர்கசித்தோ நாரீணாம் சபத்னீஷு ஹி மத்சர:

Xxxx

 

85.கணவன் இல்லாமல் ஒரு பெண் வாழ்வது மிகவும் கடினம்

–வால்மீகி ராமாயணம், 2-29-7

பதிஹீனா து யா நாரீ ந, சாசக்ஷ்யதி ஜீவிதும்.

Xxxx

86.கடும் கஷ்டத்திலும் மனைவியை யார் கைவிடுவான்?

பராபவே அபி டாராணாம் உபேக்ஷாம்க்ஷமதே நு க:?

–பாரத மஞ்சரி

IMG_4885 (2)

 

–சுபம்–