மர்தனம் குணவர்தனம்: குணங்கள் பற்றிய சம்ஸ்கிருத பழமொழிகள் (Post No. 2479)

cleaning saints

COMPILED BY LONDON SWAMINATHAN

 

Date: 11 January 2016

 

Post No. 2479

 

Time uploaded in London :– காலை  9-32

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

(தமிழ் மொழிபெயர்ப்பு:லண்டன் சுவாமிநாதன்)

1.குணேஷு க்ரியதாம் யத்ன: கிம் ஆடோபை: ப்ரயோஜனம் – சார்ங்கதர பத்ததி.

நற்குணங்களை அடைய முயற்சி செய்க. ஆடம்பரத்தால் என்ன பயன்?

 

2.குணேஷு யத்ன: புருஷேண கார்யோ ந கிஞ்சித்  அப்ராப்யதமம் குணானாம்- மிருச்சகடிகம்

மனிதர்கள் நற்குணங்களை அடைய முயற்சிசெய்ய வேண்டும். நல்ல குணங்களால் அடைய முடியாது என்ன?

 

3.குணேஷ்யேவ கர்தவ்ய: ப்ரயத்ன: புருஷை: சதா – மிருச்சகடிகம்

நற்குணங்களை அடைய எப்போதும் முயற்சி செய்க.

 

4.குணைர் உத்தமதாம்  யாந்தி ந உச்சைர் ஆசனம் ஸ்தித: – சாணக்ய நீதி, பஞ்ச தந்திரம்

குணங்களால்தான் உயர்ந்த நிலையை அடைய முடியும். உயர்ந்த ஆசனத்தால் அல்ல.

 

dalai's 80th BD in california

5.குணோ பூஷயதே ரூபம்- சாணக்ய நீதி

நற்குணங்களே ஒருவனுக்கு அழகு தரும்.

 

6.குணோ ஹி கௌரவஸ்தானம் ந ரூபம் ந தனம் ததா

குருதாம் நயந்தி ஹி குணா ச சம்ஹதி: – கிராதார்ஜுனீயம்

நற்குணங்கள் ஒருவனுக்கு பெருமை சேர்க்கும் (உயர்வு தரும்)

வெளித்தோற்றத்தால் அல்ல.

 

7.தத் ரூபம் யத்ர குணா: – காதா

நற்குணங்கள் எங்கோ, அங்கே அழகு (ஒளிரும்)

 

8.நம்ரந்தி குணினோ ஜனா: நம்ரந்தி பலினோ வ்ருக்ஷா:

பழுத்த பழங்கள் உடைய மரங்கள் தாழ்ந்து இருக்கும். நற்குணங்கள் உடையோர் அதுபோல பணிந்திருப்பர்.

 

9.நிர்குணஸ்ய ஹதம் ரூபம் – சாணக்ய நீதி

குணமில்லாத இடத்தில் அழகு பாழ்.

 

10.ந ஏகத்ர சர்வோ குண சந்நிபாத:

ஒரே இடத்தில் எல்லா குணங்களும் சேருவதில்லை.

 

11.பதம் ஹி சர்வத்ர குணைர் நிதீயதே – ரகுவம்சம்

ஒருவனுடைய நிலையை நிர்ணயிப்பது அவனது குணங்களே.

 

12.ப்ராயேன சாமக்ரயவிதௌ குணானாம் பராங்முகி விஸ்வஸ்ருஜ: ப்ரவ்ருத்தி:- குமார சம்பவம்

 

13.கடவுள் பெரும்பாலும், எல்லா குணங்களையும் ஒரே இடத்தில் வைக்காமல் பிரித்துவைக்கவே செய்கிறார்.

(ஒப்பிடுக: துர்கா, லெட்சுமி, சரஸ்வதி மூவரும் சேர்ந்து வசிப்பதில்லை)

 

14.மர்தனம் குணவர்தனம்சு.ர.பா. (சுபாஷித ரத்ன பாண்டாகாரம்)

நல்ல குணங்கள், தொடர்ந்து கடைபிடிப்பதால்தான், வளரும்.

(ஒப்பிடுக: சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம். பாடப்பாட ராகம், மூட மூட ரோகம்)

baba laddu

15.யத்ரா க்ருதிஸ் தத்ர குணா வசந்தி- சு.ர.பா.

எங்கு உடற்கட்டு இருக்கிறதோ அங்கே குணங்கள் இருக்கும்.

(ஒப்பிடுக: பலமுள்ளவனே ஆன்மாவை அறிவான்: உபநிஷத்)

 

16.யதா நாம ததா குண:

எப்படிப் பெயரோ அப்படி குணம் (பெயருக்கேற்ற குணம்)

 

17.யதி சந்தி குணா: பும்சாம் விகசந்த்யேவ தே ஸ்வயம் – சம்யோ

நற்குணங்கள் இருக்கும் மனிதர்கள், தாமாகவே உயர்வடைவர் ( குணங்களே ஒருவர் உயர உதவும்)

 

18.ரூபஸ்யாபரணம் குண: — சாணக்யநீதி

குணங்களே நல்ல அணிகலன்.

 

19.வசந்தி ஹி ப்ரேம்ணி குணா ந வஸ்துனி – கிராதார்ஜுனீயம்

அன்பில்தான் குணங்கள் இருக்கும்; பொருட்களில் அல்ல.

 

20.சத்ரோரபி குணா க்ராஹ்யா தோஷா வாச்யா குரோரபி – மஹாபாரதம்

எதிரிகளிடத்தில் நற்குணங்கள் இருந்தாலும் அவைகளையும் எடுத்துக்கொள்ளவேண்டும்.

 

21.சத்ரோரபி சுகுணோ க்ரஹ்ய:- சாணக்யசூத்ரம்

சந்த: ஸ்வத:ப்ரகாசந்தே  குணா ந பரதோ நூணாம் –சு.ர.பா

நற்குணங்கள் தாமாகவே பிரகாசிக்கும்; பிறர் காட்டத் தேவையில்லை.

 

22.சுலபா ரம்யதா லோகே துர்லபம்ஹி குணார்ஜனம் – கிராதார்ஜுனீயம்

அழகானது மலிவாகக் கிடைக்கும்; நற்குணங்களோ கிடைப்பதரிது.

(தமிழ் மொழிபெயர்ப்பு:லண்டன் சுவாமிநாதன்)

 

 

 

Subham–

 

அரசன் பேசிய பிழையான சம்ஸ்கிருதம்! குட்டிக் கதை! (Post No. 2411)

IMG_3207

Compiled by London swaminathan

Date: 21 December 2015

 

Post No. 2411

 

Time uploaded in London:- 9-35 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

palanquin

சம்ஸ்கிருதம் பேச்சு மொழியாக இருந்ததேயில்லை என்று பல அரைவேக்காடுகள் அவ்வப்பொழுது தனது அறியாமைக்கும், முட்டாள்தனத்துக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டி வருகின்றன. இவை எவ்வளவு தவறு என்பதற்கு வேத காலம் முதல் இன்றுவரை ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள.

சிலப்பதிகாரத்தில் வைஸ்ய ஜாதியைச் சேர்ந்த கோவலன், தெருவில் கதறி அழுத ஒரு பார்ப்பனப் பெண்ணின் சம்ஸ்கிருத ஓலைச் சுவடியைப் படித்தது, “த, த, த” கதையில் (பிருஹத் ஆரண்யக உபநிஷத்) தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் ஆகிய மூவரும் சம்ஸ்கிருதம் பேசியது, கும்பகர்ணன் சம்ஸ்கிருதத்தில் தவறான வரம் கேட்டது, விருத்ராசுரன் கதையில் ஒரு அசுரப் பிராமணன் தவறாக சம்ஸ்கிருதம் பேசியது, அகஸ்தியர்-வாதாபி கதையில், அகஸ்தியர் சம்ஸ்கிருதம் பேசியது, மஹாபாரத யுத்தத்தில் தர்மன், சம்ஸ்கிருதத்தில் பொய் சொன்னது (அச்வத்தாமா இறந்தான்), ஹாலன் என்ற மன்னன், அவனுடைய மனைவி சம்ஸ்கிருதத்தில் சொன்னதை தவறாகப் புரிந்து கொண்டவுடன் அவள் ‘கொல்’ என்று சிரித்தது – இப்படி நூற்றுக் கணக்கான எடுத்துக் காட்டுகளை அவ்வப்பொழுது காட்டி வந்துள்ளேன். இதோ மேலும் ஒரு சுவையான கதை.

 

ஒரு அரசன் பல்லக்கில் பவனி வந்தான். அந்தப் பல்லக்கைப் பலர் தூக்கி வந்தனர். அவர்களில் ஒருவனைப் பார்த்து, இந்த பாரம் மிகவும் வலிக்கிறதா? என்று கேட்டான். அதை சம்ஸ்கிருத்தில் கேட்டான். அதையும் பிழைபடக் கேட்டான். உடனே பல்லக்குதூக்கி சொன்னான். உன் உடல் பாரம் வலிக்கவில்லை. நீ பேசிய சம்ஸ்கிருதத்தில் உள்ள இலக்கணப் பிழைதான் பொறுக்கமுடியாத வலியைத் தருகிறது என்றான்.

 

ஒவ்வொரு மொழியிலும் சில குறிப்பிட்ட முறையில் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்கால வினைச் சொற்கள் இருக்கும். எடுத்துக்காட்டாக தமிழில் இறந்த கால வினைச் சொற்கள்தான் மிகவும் சிக்கலானவை. கிட்டத்தட்ட பத்துவகைகள் உள்ளன. நான் வெளி நாட்டுக்காரர்களுக்குத் தமிழ் சொல்லித் தருவதால் இதை அவர்கள் புரிந்துகொள்ளப் படும் சிரமம் எனக்குத் தெரியும். வா என்பதன் இறந்த காலம் வந்தான். போ என்பதன் இறந்தகாலம் போந்தான் இல்லை! சாப்பிடு என்பதன் இறந்த காலம் சாப்பிட்டான். ஆனல் சா என்பதன் இறந்த காலம் செத்தான்! தமிழ் தெரியாத வெளி நாட்டுக்கார்கள் சா என்பதன் இறந்த காலத்தை சாப்பீட்டான் என்றும், சாத்தான் என்றும் சொல்லும்போது எனக்கு சிரிப்பு வரும். வில் என்ற வினைச் சொல்லை நாம் பயன்படுத்துவதே இல்லை. ஆனால் விற்றான், விற்கிறான், விற்பான் என முக்காலங்களிலும் பயன்படுத்துகிறோம் (கல்= கற்றான், கற்கிறான், கற்பான்). சொல் என்பதை சொற்றான், சொற்பான், சொற்கிறான் என்று சொல்ல மாட்டோம் இது போல எல்லா மொழிகளிலும் உண்டு. இப்படி சம்ஸ்கிருதத்திலும் உண்டு. இது தெரியாமல் ஒரு மன்னன் ஒரு தப்பு- இலக்கணத் தப்பு- விட்டான்.

 

பல்லக்கில் பவனி வந்த மன்னன்:

பாரம் பாததி வா? (என் உடல் பாரம் வலிக்கிறதா) என்றான். இது தவறு.

பல்லக்கு தூக்குபவன் சொன்னான்: “பாரம் ந பாததே யதா தவ பாததி”.

அதாவது பாரம் வலிக்கவில்லை. நீ (தவறாக) சொன்னாயே  “பாததி” என்று அதுதான் வலிக்கிறது.

palanquin1

இதிலிருந்து அக்காலத்தில் ராஜா முதல் பல்லக்கு தூக்கிவரை எல்லோரும் சம்ஸ்கிருதம் பேசியது தெள்ளிதின் விளங்கும். இதை ஒரு வேளை கற்பனைக் கதை என்று கருதினாலும், மஹாபாரத (அஸ்வத்தாமன் என்ற யானை இறந்தது), ராமாயண (கும்பகர்ணன் நித்திரை கேட்டது), உபநிஷத (த, த, த கதை) கதைகளை யாரும் பொய்யென்று சொல்லமுடியாது. பிருஹத் ஆரண்யக உபநிஷதம் (பெருங்காட்டு உபநிஷதம்) காமாலைக் கண் படைத்த வெள்ளைக்காரன் கணக்கிலும் கூட மிகப் பழைய நூல். அதாவது இற்றைக்கு 2800 ஆண்டுகளுக்கு முற்பட்டது.

 

இந்த த, த, த கதையை காஞ்சி பரமாசார்ய சுவாமிகளும் எம்.எஸ்.சுப்புலெட்சுமிக்கு, ஐ.நா.சபையில் பாடுவதற்கு எழுதிக்கொடுத்த மைத்ர்ரிம் பஜத – என்ற சம்ஸ்கிருதப் பாடலில் எழுதியுள்ளார். ஆக 2800 ஆண்டுகளுக்கு முன் எழுந்த பேச்சு மொழி நமது காலத்தில், ஐ நா. சபையிலும் ஒலித்து, அதை ஒலிபரப்பிய 100+ நாடுகளிலும் ஒலித்தது.

வாழ்க சம்ஸ்கிருதம்! வளர்க தமிழ்!!

 

பிராமணன் மீது நஷ்ட ஈடு வழக்கு! ஒரு பழைய சுவையான கதை!

king

Article No.1734; Date:- 20th March, 2015

Written by London swaminathan

Uploaded at London time 9-04 am

மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி, பழி ஓரிடம் பாவம் வேறிடம்

 

பழி ஓரிடத்திலே பாரம் ஒரிடத்திலே என்றும், பாவம் ஓரிடத்திலே என்றும் ஒரு பழமொழி உண்டு. மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி அல்லது சமம் என்று மற்றொரு பழமொழி உண்டு. முட்டாள் களிடையே மௌனமாக இருப்பதே மேல் என்றும், புத்திசாலிகள் மௌனம் கடைப்பிடிப்பர் என்றும் சம்ஸ்கிருதத்தில் பழமொழிகள் இருக்கின்றன. மௌனம் என்பது அறியாமையைக் காட்டும் என்று நேர் எதிர்மாறாகக் கூறும் பழமொழியும் சம்ஸ்கிருத நூல்களில் வருகிறது. இதை விளக்க ஒரு சுவையான கதை இருக்கிறது.

மோக்ஷ சாதன ரஹஸ்யம் என்னும் நூலில் சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவம் சொல்லும் கதையை என் சொற்களில் கூறுகிறேன்:-

ஒரு ஊரில் திருடன் ஒருவன் இருந்தான். அவன் ஒரு பணக்கார பிராமணன் வீட்டில் திருடுவதாற்காக இரவு நேரத்தில் சென்று சுவற்றில் கன்னம் வைத்தான் (ஓட்டை போடுதல்). அந்தச் சுவர் ஈரமான சுவர். உடனே இடிந்து விழுந்தது. மூச்சுவிட முடியாமல் திருடன் செத்தான்.

திருடர்களின் நண்பர்கள் நஷ்ட ஈடு கோரி பிராமணன் மீது வழக்குத் தொடுத்தனர். அவர், அது தனது குற்றம் இல்லை என்று சொல்லி வழக்கை மன்னன் முன்னிலையில் வைத்தார்.

மன்னன்: ஓய், பிராமணரே! ஏன் இடியும் அளவுக்கு ஈரத்துடன் சுவரைக் கட்டினீர்?

மன்னா! அதை நான் அறியேன். பெரிய கொத்தனார்தான் அதைக் கட்டினார். அவரைக் கேளுங்கள்.

brahmin

யார் அங்கே? பெரிய கொத்தனாரை இழுத்து வாருங்கள்.

ஓய் கொத்தனாரே! சுவற்றை இவ்வளவு ஈரத்துடன் கட்டியதால் திருடன் இறந்துவிட்டான். நீர்தான் நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும்.

மன்னா! நான் என்ன செய்வேன்? வேலையாள் கலந்துகொடுத்த சிமெண்டை (காரையை) அப்படியே பூசினேன். ஈரக் கலவை பற்றி அவனைத் தான் கேட்க வேண்டும்

யார் அங்கே? சித்தாளை இழுத்து வாருங்கள்.

ஏய், ஏன் ஈரக் கலவையான காரையை அளித்தாய்?

மன்னர் மன்னா? வழக்கத்தைவிட பெரிய பானையை அன்று என் கையில் கொடுத்தான் குயவன். அதில் கொஞ்சம் தாண்ணீர் கூடுதலாகப் போய்விட்டது. நான் குயவனை நம்பியிருந்தேன்.

bricklayer_1

யார் அங்கே? குயவனை இழுத்து வாருங்கள்.

குயவரே! என்ன காரியம் செய்தாய்? வழக்கத்தைவிட பெரிய பானையைக் கொடுத்ததால் ஒரு மரணம் சம்பவித்துவிட்டது. நீயே நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும்.

மன்னர், மன்னா! உண்மையைச் சொல்லிவிடுகிறேன். அன்று நம்மூர் விபசாரி, பேரழகி பகல் நேரத்தில் மேனியை மினுக்கி குலுக்கி, நடந்து சென்றாள் —- அவள் அழகில் மயங்கி நின்றபோது இந்தத் தவறு நிகழ்ந்துவிட்டது. அவளை அழைத்து விசாரியுங்கள்.

யார் அங்கே? அந்தப் பேரழகியை இழுத்து வாருங்கள்.

மன்னா! எனது தொழில் தர்மப்படி நான் இரவு நேரத்தில்தான் வெளியே வருவேன். மேலும் எனது வாடிக்கையாளர்களின் நலன் கருத்தி துவைத்த, தூய ஆடைகளை அணிவதே வழக்கம். அன்று வண்ணான்,என் வீட்டுக்குத் துணிகளைக் கொண்டு வராததால் அவன் வீட்டுக்குப் பகலில் நடந்து போனேன். வண்ணான் ஏன் தாமதித்தான்? தயவுசெய்து அதை விசாரியுங்கள்.

potter

யார் அங்கே? அந்த வண்ணானை இழுத்து வாருங்கள்.

மன்னவனே! எனது தொழிலில் மிகவும் முக்கியமான கொள்கை காலத்தில் துணிகளைக் கொடுப்பது. நான் வழக்கம் போல காலையில் சலவைத் துறைக்குச் சென்றேன். அன்று ஒரு சந்யாசி ஆற்றங்கரையில் என் கல்லில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அவரைத் தடுக்க மனமில்லாமல் காத்திருந்தேன். அதனால் தாமதம் ஏற்பட்டது. அது என் பிழையன்று. அந்த சந்யாசி ஏன் என் படித்துறைக்கு அன்று வந்தார்?

யார் அங்கே? அந்த சந்யாசியை அழைத்து வாருங்கள்.

முனிவரே! ஏன் இப்படி வண்ணான் துறைக்கு வந்து துணி துவைத்தீர்?

அந்த முனிவர் அன்று மவுன விரதத்தில் இருந்ததால் எந்த பதிலும் சொல்லவில்லை. எத்தனை முறை கேட்டாலும் அவர் மவுனம் சாதித்தார்.

CIS:4660:1/(IS)

மன்னன்:– அமைச்சரே! இதற்கு என்ன பொருள்?

மன்னர் மன்னா! “மவுனம் சம்மதத்துக்கு அறிகுறி”. ஒருவர் தக்க விளக்கம் கூற முடியாதபோது அவர் அதை ஒப்புக்கொண்டதாகவே கொள்ளல் வேண்டும் என்று நமது  நீதி நூல்கள் பகர்கின்றன என்றார் அமைச்சர்.

அப்படியா? இந்த சந்யாசி நஷ்ட ஈடு கொடுக்கும் வரை இவரை சிறையில் அடையுங்கள் என்று மன்னன் உத்தரவிட்டான்.

பழி ஓர் இடம், பாவம் அல்லது பாரம் ஓர் இடம்.

washing clothes

மஹாபாரதத்தில் மாண்டவ்ய முனிவர் கதையிலும் இதையே காண்கிறோம். மிகச் சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன். அரண்மனையில் கொள்ளையடித்த நகைகளுடன் திருடர்கள், அந்த ரிஷியின் வீட்டில் ஒளிந்து கொண்டனர். அப்போது ரிஷி, மௌன விரதம் அனுஷ்டித்து இருந்தார். ராஜாவின் சேவகர்கள், அந்த வீட்டில் தேடிப் பார்த்ததில் திருடர்களும் அரண்மனைச் செல்வங்களும் கிடைத்தன. மாண்டவ்யர்தான் அவர்களை ஒளித்து வைத்துவிட்டு, சும்மா மௌனம் இருப்பதாக பாசாங்கு செய்தார் என்று எண்ணி திருடர்களுடன் அவரையும் ராஜாவின் முன்னிலையில் நிறுத்தினர். எல்லோரையும் கழுவேற்றிக் கொல்ல மன்னன் உத்தரவிட்டான். கழுவில் அவர் மட்டும் உயிரோடு நின்றதால் அரசன் தன் தவற்றை உணர்ந்து அவரை விடுதலை செய்தான். மௌனம், ஆபத்தில் முடிந்த கதை இது!