மூளையில் ஆபரேஷன்:புராதன இந்தியர் சாதனை!!

Bhoja 32ft 7 tons

King Bhoja In Bhopal, Madhya Pradesh

Post No 1939; Date: 18  June 2015

Written  by London swaminathan

Uploaded from London at 8-57

 

தேரையர், ஜீவகன் ஆகிய இரண்டு பெரிய வைத்தியர்கள் செய்த சாதனைகளை நம்மில் பலரும் அறிவோம். தேரையர் என்பவர் தலையில் இருக்கும் தேரைகளையும் (தவளை அல்ல; ஒரு வகை நோய்) எடுப்பார் என்றும் ஒரு பாத்திரத்தில் மலஜல விமோசனம் செய்து அதில் ஒரு துளி எண்ணையை விட்டு நோய் கண்டுபிடிக்கும் புதிய வழிமுறைகளை தேரையர் கற்பித்தார் என்றும் நூல்கள் பகரும்.ஜீவகன் என்பான் மஹா பெரிய வைத்தியன் என்றும் அவனுடைய ஆபரேஷன் பீஸ் (கட்டணம்) மிக அதிகம் என்றும் புத்த மத பாலி மொழி நூல்கள் செப்பும்.

ஜீவகன் செய்த கண் ஆபரேஷன், பொற்கைப் பாண்டியனுக்கு செயற்கைக் கை பொருத்தும் ஆபரேஷன், கண்ணப்ப நாயனாரும், மஹா விஷ்ணுவும் சிவபெருமானுக்கு கண் கொடுத்து முதல் முதல் “ஆர்கன் டொனேஷனை”த் துவக்கி வைத்த பெருமை இவைகள் எல்லாம் தனித் தனி கட்டுரையில் முன்னே கூறினேன்.

இன்று சிந்து சமவெளியில் 4300 ஆண்டுகளுக்கு முன் நடத்திய ஆபரேஷன் (ஆறுவைச் சிகிச்சை) குறித்தும் போஜ மன்னனுக்கு நடந்த ஆபரேஷன் குறித்தும் பார்ப்போம்.

போஜன் என்ற பெயரில் வேத காலம் முதல் பல மன்னர்கள் இருந்தனர். வேத கால போஜன் பற்றி ஐதரேய பிராமணம் விளம்பும். காளிதாசன் கால போஜன் பற்றி சுபாஷித ரத்ன பாண்டாகாரம் செப்பும். நாம் காணப்போகும் போஜன் பற்றி போஜப் பிரபந்தம் என்னும் நூல் விதந்து ஓதும். இவன் 1000 ஆண்டுகளுக்கு பரமார வம்ச மன்னனாக மத்தியப் பிரதேச நகரமான தாரா நகரில் இருந்து ஆட்சி புரிந்தவன். இவனுக்கு தெரீயாத “சப்ஜெக்ட்” உலகில் எதுவுமே இல்லை. இவன் பெயரில் 84 “டெக்னிக்கல்” புத்தகங்கள் உள்ளன. இவனுடைய சம்ஸ்கிருத இலக்கணக் கல்வெட்டு மசூதிக்குள் கண்டு பிடிக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது பற்றி காஞ்சி மஹா ஸ்வாமிகள் 1932-ல் மைலாப்பூர் உபந்யாசத்தில் சொன்னதை முன்னரே கொடுத்துவிட்டேன்.

போஜ மன்னனுக்கு பெரிய தலை வலி. நிரந்தர தலை இடி. தாரா நகர வைத்தியர்கள் எவராலும் தீர்க்க முடியவில்லை. அப்பொழுது மன்னனின் இடைவிடாத் துயர் கேட்டு உஜ்ஜைனி நகரிலிருந்து இரண்டு பிராமண சர்ஜன்கள் (அறுவைச் சிகிச்சை நிபுணர்கள்) வந்து மன்னன் தலை இடியைப் போக்குவதாகக் கூறினர். ஆனால் கபாலத்தைத் திறந்து செய்யும் மேஜர் ஆபரேஷன் இது என்றும் எச்சரித்தனர்.

ஆபரேஷன் செய்கையில் நோயாளியை மயக்க நிலையில் வைக்க இப்போதெல்லாம் குளோரோபர்ம் என்னும் வாயுவைப் பயன்படுத்துகிறோம். சர்ஜன் அருகிலேயே அனஸ்தெடிஸ்ட் (மயக்க மருந்து வல்லுநர்) நின்று கொண்டு குளோரோபர்ம் லெவலை (அளவை) ஏற்றி இறக்கி ஆளின் மயக்கத்தை அதிகரிக்கவோ தெளிவிக்கவோ செய்வார்.

அந்தக்காலத்தில் மருதுவர்கள் சம்மோகினி (அதிக மயக்கம்) என்னும் மூலிகைச் சாற்றைக் கொடுத்து மயக்கி அறுவைச் சிகிச்சை செய்வர். இதே போல போஜ மஹாராஜாவுக்கும் நல்ல முறையில் அறுவைச் சிகிச்சை செய்தனர். மயக்கம் தெளிவிக்க சஞ்சிவினி என்னும் மூலிகையைப் பயன்படுத்தினர். சம்ஸ்கிருதத்திலுள்ள வால்மீகி ராமாயணத்தில் லெட்சுமணன் மீது இந்திரஜித் “பயலாஜிகல் வார்பேர்” (விஷவாயு பிரயோகித்து) செய்து மயக்கம் போட வைத்ததையும் உடனே அனுமன் சஞ்சீவினி மூலிகை எது என்று தெரியாமல் அது முளைத்த பாறையையே (மலை) தூக்கி வந்ததையும் நீங்கள் அறிவீர்கள். போஜ ராஜன் ஆபரேஷன் 100 சதவிகித வெற்றிபெற உதவிய சம்மோகினி, சஞ்சீவினி என்ன, எது என்பது இன்று நமக்குத் தெரியாது. இது அரிய வகை மூலிகை. இமய மலைப் பகுதியில் மட்டுமே கிடைத்ததால் அனுமன் அங்கே பறந்து சென்றான் என்பதும் நோக்கற்பாலது. யாராவது சில பகுத்தறிவுத் திராவிடங்கள் இது எல்லாம் கட்டுக்கதை என்று சொன்னால், இந்த விஞ்ஞான முறைக் கற்பனை உதிக்கக்கூட ஓரளவு நாகரீகம் தேவை என்பதை உணர்த்துங்கள். அப்போதும் விளங்கிக் கொள்ளாதவர்கள், “விளங்காதவர்களே”!!!

சர்ஜரி, ஆபரேஷன் என்பதேல்லாம் இந்துக்களுக்குப் புதிதல்ல. சுஸ்ருதர், சரகர் எழுதிய நூல்களில் எல்லாம் 400–க்கும் அதிகமான கருவிகளின் பெயர்கள் உள்ளன. என்றைக்கு பாரதீயன் சம்ஸ்கிருதத்தைப் புறகணித்தானோ அன்று முதல் நம்முடைய விஞ்ஞான சாஸ்திரங்கள் எல்லாம் அழிந்து போயின. இதற்கு 700 வருஷ முஸ்லீம், 300 வருஷ வெள்ளைக்காரன் ஆட்சியே காரணம்.

இங்கே நான் வாழும் லண்டனில், லண்டன் பல்கலைக் கழகத்திலும், பிரிட்டிஷ் லைப்ரரியிலும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலும் பழம்பெரும் சம்ஸ்கிருத நூல்கள் தூசி படிந்து கிடக்கின்றன. நானும் அவ்வபோது போய் தூசி தட்டிவிட்டு அட்டையை மட்டும் புகைப் படம் எடுத்து வருகிறேன். பல்லாயிரக் காணக்கான நூல்கள் உள்ள சம்ஸ்கிருதம் அழியும் அன்று இந்தியா, இந்துமதம் எல்லாம் அழிந்து போகும். புத்தர் செய்த பெரிய தவறு சம்ஸ்கிருதத்தைப் புறக்கணித்ததே என்று விவேகாநந்தர் சொன்னதையும் இதனால், “தோன்றிய நாட்டி”லேயே புத்த மதம் அழிந்ததையும் நினைவுகூறுதல் பொருத்தம்.

skull brain sugery

The trepanated Harappan male skull H-796/B in the Palaeoanthropology Repository of Anthropological Survey of India, Kolkata in three views: a, the left lateral view showing the trepanated hole; b, the postero-lateral view showing the horizontal linear traumatic fracture on the occipital bone; c, an enlarged view of the trepanated site showing the rim of callous formed due to healing, and d, the trepanated Burzahom female skull showing signs of multiple trepanations. (Image Source: Current Science)

சிந்துவெளியில் மூளைச் சிகிச்சை

ஹரப்பா நகரத்தில் கிடைத்த மண்டை ஓடுகளில் சில கல்கத்தா நகர இந்திய தொல்பொருட்துறைத் துறையின் மானுடவியல் பிரிவில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு மண்டை ஓட்டில் (கபாலத்தில்) மூன்று மில்லிமீட்டர் அகலத்திற்கு ஒரு ஓட்டை இருக்கிறது. இதை ஆராய்ந்த திரு. சாங்க்யாயன் என்பார், அந்தக் காலத்தில் ஒரு குறிப்பிட்ட முறையில் இப்படி சர்ஜரி செய்வது வழக்கமாக இருந்தது என்றும் இதுவே பின்னர் ஆயுர்வேத புத்தகங்களில் காணப்படுகிறது என்றும் சொல்கிறார். மேலும் எலும்புகளை ஆராய்ந்தபோது அந்த சிந்து வெளி மனிதன் அதற்குப் பின்னரும் நீண்டகாலம் வாழ்ந்தது தெரிகிறது என்றும் சொல்கிறார். இந்தச் செய்தி 2013–ஆம் ஆண்டில் எல்லாப் பத்திரிக்கைகளிலும் பெரிதாக வந்திருந்தது. ஆக சிந்துவெளி நாகரீகத்தின் தொடர்ச்சியே இந்திய நாகரிகம் என்பதும், வெளிநாட்டிலிருந்து வந்தேறு குடியினர் எவரும் வந்து எதையும் செய்யவில்லை என்பதும் வெள்ளிடை மலையென விளங்குகிறது.

எனது முந்தைய ஆங்கிலக் கட்டுரைகள்:—

Jeevaka’s Eye Operation ( Posted on 25-2-2013)

How did a Pandya king get a golden hand? (Posted on Nov 18,2011)

Part 2 -வேதத்தின் மீது கைவைத்த 35 வெளிநாட்டு “அறிஞர்கள்”!

சாணக்கியன்

ஆராய்ச்சிக் கட்டுரை எண்– 1935

எழுதுபவர் – லண்டன் சுவாமிநாதன்

தேதி:- 16 ஜூன் 2015

லண்டனில் பதிவேற்றப்பட்ட நேரம்- காலை 17-06

Part 1 was posted yesterday.

(படங்கள் பேஸ் புக் முதலிய இடங்களில் இருந்து எடுக்கப்பட்டன. நன்றி)

ஊர் பேர் தெரியாத கொட்டாம்பட்டி, அரிட்டாபட்டி தமிழ் எழுத்தாளனின் இந்து மத விரோதக் கதைகளை பெரிதுபடுத்தி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளிநாட்டுப் பல்கலைக்கழகங் களில் அதைப் படமாக வைத்து அந்த எழுத்தாளனின் வங்கிக் கணக்கில் பல லட்சம் பவுன்கள் அல்லது டாலர்களை “பம்ப்” செய்யும் சர்வதேச வெளியீட்டு நிறுவனங்களின் சதி—– இந்துமதத்தை மட்டும் தாக்கும் வெண்டி டோனெகர் போன்ற வெளிநாட்டு எழுத்தாளர்களுக்கு பப்ளிசிட்டி, பணக் குவிப்பு– இதுவரை வேதத்தை அலசி ஆராய்ந்த எந்த “அறிஞ”னும் வேறு எந்த மத நூலையும் ஆராயாத மர்மம் —- அவர்களுக்குத் துணைபோகும் தேச விரோத, தர்ம விரோத திராவிட–மார்க்சிஸ்ட் கும்பல்கள், பத்திரிக்கைகளின் சதி — பற்றி முதல் பகுதியில் குறிப்பிட்டேன்.

இந்த இரண்டாவது பகுதியில் ஒவ்வொரு “அறிஞரும்” செய்த வேலை குறித்துக் கண்போம்:–

முதலில் மூன்று முக்கியமான விஷயங்களை எல்லா இந்துக்களும் அறிய வேண்டும். இதில் சில அறிஞர்கள் ஏசு சபையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் எடுக்கும் சத்தியப் பிரமாணத்தை ஒவ்வொரு இந்துவும் படித்தால் இவர்கள் கொலைபாதகச் செயலுக்கு அஞ்சாதவர்கள் என்பது தெளிவாகும்.

இரண்டாவது இந்த “அறிஞர்களில் பெரும்பாலோர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழக போடிலியன் பேராசிரியர் பதவி வகித்தோர் அல்லது அதற்கு ஆசைப்பட்டோர். அதில் சம்ஸ்கிருதம் ஏன் கற்க வேண்டும் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. இந்துமதத்தை எள்ளி நகையாட இந்த பதவியை ஏற்படுத்துவதாக அந்த அறக் கட்டளையை ஏற்படுத்தியவர் எழுதி, பணம் கொடுத்துள்ளார்.. ஆக இந்த அறிஞர் கும்பல் எல்லாம் மோசடி செய்ய வந்த கும்பல்!

மூன்றாவதாக இவர்கள் அவ்வளவு பேரும்—தமிழர்கள் தலை மேல் வைத்து கூத்தாடும் கால்டுவெல் பாதிரியார் உள்பட—மாக்ஸ்முல்லர் உள்பட – எல்லோரும் “இந்தியர்கள் அனைவரும் வந்தேறு குடிகள்” என்று எழுதி வைத்துள்ளனர்.

ஆனால் இதில் ஒரு அதிசயம் நடந்தது. கங்கை நதியில் கலக்கும் சாக்கடை எல்லாம் புனிதம் அடைவது போல, சில அசத்துக்கள், சத்துக்களாகவும் மாறிவிட்டன. அதில் ஒரு அசத்து மாக்ஸ்முல்லர்.

1651ல் ஆப்ரஹாம் ரோஜர் என்ற பாதிரியார் பர்த்ருஹரியின்  சுபாஷித த்ரிசதியை போர்ச்சுகீசிய மொழியில் வெளியிட்டார். பின்னர் அதை டச்சு மொழியிலும் வெளியிட்டார். இந்த 300 நீதிநெறிப்பாடல்கள் சம்ஸ்கிருத இலக்கியத்தின் பெருமையை ஐரோப்பாவுக்கு அறிமுகம் செய்துவைத்தன.

பஞ்சபாத்ரம்

தத்துவ போத சுவாமிகள் செய்த திகிடுதத்தம்

ராபர்ட் டி நொபிலி/ தத்துவ போத சுவாமிகள் (Jesuit Roberto De Nobilius cheated with fake Yajurveda:) இவர் கோவாவில் வந்து இறங்கி கிறிஸ்தவ மத பிரசாரம் செய்தார். பின்னர் மலையாளம் தமிழ் வழங்கும் பிரதேசங்களில் பிரசாரம் செய்தார். மதுரையில் தங்கி ஐயர் போல குடுமி, பூணூல் தரித்து மேலை வகுப்பினரை மத மாற்றம் செய்ய முயன்றார். ஆனால் அவரது வேஷம் பலிக்கவில்லை. யஜூர்வேதத்தை கண்டுபிடித்துக் கொண்டுவந்தததாகச் சொல்லி ஐரோப்பாவில் பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் அது யஜூர் வேதம் இல்லை. அது அப்பட்டமான மோசடி. இதை வால்டேர், கோல்ப்ரூக் போன்றவர்களும் நம்பி ஏமாந்தனர். வால்டேர் அதைப் படித்துவிட்டு (மொழிபெயர்ப்பு) உண்மையென்று நம்பி, அதை பிரான்ஸ் தேசிய  நூலகத்தில் சேர்த்தார். இவர் மோசடி செய்யவில்லை என்றும் இவரது கும்பலில் இருந்த வேறு சிலர் மோசடி செய்ததாகவும் இப்பொழுது பிரசாரம் கிளம்பி இருக்கிறது.

இது வழக்கமாக திருடர்கள் கையாளும் தந்திரம். பிடிபட்டுவிட்டால் மற்றவன் பெயரில் பழிபோடுவார்கள். பிடிபடாவிட்டால் தான் சாதித்ததாகக் கூறுவர். எப்படியாகிலும் வேதத்தின் பெயரில் கிறிஸ்தவ பாதிரிக் கும்பல் மோசடி செய்தது என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்கின்றனர்.

இவர் சேர்ந்துள்ள ஜீசைட் கிளப்பின் உறுதி மொழிப் பிரமாணம் பயங்கர வன்முறைப் பிரமாணம். அதாவது கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப என்ன கொடுமை வேண்டுமானாலும் செய்யலாம் என்று உறுதி மொழி எடுக்க வேண்டும். ஆகையால் அவர் மோசடி செய்ததில் வியப்பொன்றுமில்லை.

இதே போல திருக்குறள் கிறிஸ்த நூல் என்று மெய்ப்பிப்பதாக ஒரு ஐயர் பல லட்சம் பெற்று மோசடி செய்த வழக்கை நாம் எல்லோரும் அறிவோம். இப்பொழுதும் கூட வெப்சைட், பேஸ்புக்கில் ஒரு பெரிய கும்பல் வேதத்தில் ஏசு இருக்கிறார், அல்லா இருக்கிறார் என்று பலரைக் குழப்பி மோசடி செய்துவருகிறது. இந்துக்கள் முதலில் தங்களிடம் உள்ள உண்மைச் செல்வத்தை அறிந்தால் இந்த மோசடிக் கும்பல்கள் தானாக கடை கட்டி விடுவர்.

ராபர்ட் டி நொபிளி செய்த மோசடியால், ஐரோப்பாவில் வேதம் என்று ஒன்று இல்லவே இல்லை என்றும் பத்திரிக்கைகள் எழுதத் துவங்கின. அப்பொழுது கர்னல் போலியர் என்பவர் ஜெய்ப்பூரி லிருந்து மிகவும் கஷ்டப்பட்டு நான்கு வேதங்களையும் திரட்டி பிரிட்டிஷ் மியூசியத்தில் சமர்ப்பித்தார். இது நடந்தது 1798ல். பின்னர் சர்ச்சை அடங்கியது.

பிராமணர்

மாக்ஸ் முல்லர் அந்தர் பல்டி

மாக்ஸ்முல்லர் Max Muller Friedrich Max Muller (1823-1900):

ஜெர்மனியில் பிறந்து இங்கிலாந்தில் வசித்தவர்.

வேதத்திற்கு சாயணர் எழுதிய உரையுடன் அதை வெளியிட்டவர் மாக்ஸ்முல்லர். 1856-59- ஜெர்மன் பாஷையில் ரிக் வேதத்தை வெளியிட்டார். நிறைய நூலகள் எழுதியுள்ளார். கீழ்திசை இலக்கியங்கள் என்று எல்லா நூல்களையும் மொழி பெயர்க்கச் செய்து ஐம்பதுக்கும் அதிகமான வால்யூம்களாக வெளியிட்டார். ஆனால் முதலில் உள்நோக்கத்துடன் மொழிபெயர்க்கத் தொடங்கினார். வேதங்களை வேரறுத்து கிறிஸ்தவ மதத்தை நிலை நாட்டுவேன் என்று சூளுரைத்தார். கொக்கரித்தார். இதோ விக்கி பீடியா வாசகம்:

Muller once wrote that;-

The translation of the Veda will hereafter tell to a great extent on the fate of India, and on the growth of millions of souls in that country. It is the root of their religion, and to show them what the root is, is, I feel sure, is the only way of uprooting all that has sprung from it during the last 3,000 years.[20][21]

As to religion, that will take care of itself. The missionaries have done far more than they themselves seem to be aware of, nay, much of the work which is theirs they would probably disclaim. The Christianity of our nineteenth century will hardly be the Christianity of India. But the ancient religion of India is doomed—and if Christianity does not step in, whose fault will it be?

—Max Müller, (1868)[22]

அதி பயங்கர நோக்கத்தோடு மொழிபெயர்ப்பைத் துவங்கிய அவர் அப்படியே மாறிப் போனார் ஜி.யூ. போப் பாதிரியார் போல. உலகிலேயே பழமையான நூலான ரிக் வேதம் கி. 1200க்கு முந்தையது என்றார். அது மிகவும் தவறு- இன்னும் மிகப் பழமையானது என்று பல மேலை நாட்டினர் எதிர்த்தவுடன். வேதத்தின் காலத்தை எந்த ஒரு மனிதனாலும் கணிக்க முடியாது. அவ்வளவு பழமையானது என்று பல்டி அடித்தார்.

ரால்ப் டி.எச்,கிரிப்பித் ( R T H Griffith),1826-1906

கிரிப்பித் இங்கிலாந்தில் பிறந்து இந்தியாவில் வசித்து தமிழ்நாட்டில் கோத்தகிரியில் இறந்தார். ஒரு பாதிரியாருக்குப் பிறந்தவர். அவருக்கு முன் வெளியான ரிக் வேத மொழி பெயர்ப்புகளை எல்லாம் கலந்து இவர் ஒரு மொழி பெயர்ப்புச் செய்தார். ஆனால் பெரும்பாலும் சாயணர் வாதத்தை ஏற்றார் (இவருடைய ஆங்கில மொழி பெயர்ப்புதான் என் மேஜையில் எப்போதும் இருக்கும்). பக்கத்துக்குப் பக்கம் விளங்க வில்லை, பொருள் தெரியவில்லை என்று ஒப்புக் கொள்கிறார் .நான்கு வேதங்களையும் வெளியிட்டுள்ளார். இங்கிலாந்தில் வேலைபார்த்த பின்னர் காசியிலும் கல்லூரி முதல்வராக வேலை பார்த்தார். ராமாயணத்தை ஆங்கிலப் பாடலாக மொழி பெயர்த்தார். காளிதாசனின் குமார சம்பவம் உள்பட பல நூல்களை மொழி பெயர்த்து இருக்கிறார்.

ஐயங்கார்

தியோடர் ஔபிரெட் 1822-1907(Theodor Aufrecht) இவர் மாக்ஸ்முல்லர், பென்வே ஆகியோருடன் பயின்றார். எடின்பரோ, பான் பல்கலைக் கழகங்களில் சம்ஸ்கிருதம் கற்பித்தார்.மாக்ஸ்முல்லர், ரிக்வேத மொழிபெயர்ப்பை வெளியிட உதவி செய்தார். அவரைப் போலவே இவரும் 40 ஆண்டுக் காலம் வேத மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபாட்டார். அதே நேரத்தில்(1849-75) ரிக் வேதத்தின் மூலத்தையும் வெளியிட்டார். சம்ஸ்கிருத மொழியில் அச்சிட்ட நூல்கள், இன்னும் அச்சேறாத நூல்கள் என்று மூன்று கேடலாக் (நூல் பட்டியல்) வெளியிட்டார் (இதைப் பார்க்கையில் சம்ஸ்கிருத இலக்கியம் எவ்வளவு விரிவானது என்று விளங்கும்.உலகில் சம்ஸ்கிருத நூல்கள் உருவான காலத்தில் கிரேக்க, எபிரேய, தமிழ், லத்தீன் மொழி நூல்கள் பிறக்கவே இல்லை.அதாவது கி.மு1700 முதல் கி.மு.1000 வரை).

ரோஸனின் பணி

1830-ல் பேராசிரியர் ரோஸன் என்பவர் சில ரிக்வேத சூத்திரங்களைப் பிரசுரித்தார். 1838ல் ரிக் வேத முதல் அஷ்டகத்தைப் பிரசுரித்தவுடன் இந்திய தத்துவம் பற்றிய ஆர்வம் பிறந்தது (ரிக் வேதத்தை எட்டு அஷ்டகமாகவோ பத்து மண்டலங்களாகவோ– இரண்டு முறையில் பிரிப்பது வழக்கம்).

மேனாட்டு வேத பண்டிதர்களில் பேராசிரியர் தியோடர் கோல்ட்ஸ்டக்கர் என்பவருக்கு  பழைய வேத பாஷ்யக்காரர்களான யாஸ்கர், மஹீதரர், சாயணர் முதலியவர்களிடத்து அளவற்ற மதிப்பு உண்டு.பழைய பாஷ்யக்காரர்களில் கருத்து வேறுபாடு இருந்தால் யாஸ்கரையே பின்பற்ற வேண்டும் என்பது இவர் கொள்கை. ராத், இதற்கு நேர் மாறாக அபிப்ராயம் உள்ளவர்.

போட்லிங், ராத், கிராஸ்மேன் ஆகியோர் பாரதீய விற்பன்னர்களை மதிக்கவில்லை. வேத கால அறிஞர்களை விட தங்களுக்கு கூடுதல் அறிவு என்று கருதினர். இது இந்து மத எதிரிக் கும்பல்.

பிஷெல், கெல்ட்னர் ஆகியோர் சாயண பாஷ்யத்தை அடியொற்றிச் சென்றனர்.

பகவத் கீதை மொழி பெயர்ப்பு

வாரன் ஹேஸ்டிங்ஸ் கொடுத்த உற்சாகத்தால் சார்ல்ஸ் வில்கின்ஸ் என்பார் பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அதற்கு முன்னுரை எழுதிய வாரன் ஹேஸ்டிங்ஸ், பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் அஸ்தமிக்கும். ஆனால் பகவத் கீதை அழியாது என்று எழுதி இருக்கிறார்.

சர் வில்லியம் ஜோன்ஸ் (1746-94), சம்ஸ்கிருதம்—ஐரோப்பிய மொழிகளை ஆராய்ந்து வியத்தகு ஒற்றுமை இருப்பதை அறிவித்தார். அவர் கல்கத்தாவில்   ஆசிய சங்கத்தை தாபித்து மொழி ஆராய்ச்சிக்கு அடிக்கோல் நாட்டினார். சாகுந்தலம், மனுஸ்மிருதி ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். சம்ஸ்கிருதத்தை வானளாவஒப் புகழ்ந்தார். பின்னர் ஒரு குடப் பாலில் ஒரு சொட்டு விஷம் கலந்தார். அதாவது, ஆரியர்கள் எல்லாம் வந்தேறு குடிகள் என்று!

ஹென்றி தாமஸ் கோல்ப்ரூக்(1765-1837), வில்லியம் ஜோன்சுக்கு உறுதுணையாக நின்றார். நிறைய கட்டுரைகள் எழுதி வேதங்களின் பெருமையைப் பரப்பினார்.

பிரெடெரிக் ஷ்லெகல் (1772-1829) என்பார் 1808ல் On the Language and Wisdom of the Indians என்ற நூல் எழுதினார். அவருடைய சகோதரர் ஏ.டபிள்யூ. வான் ஷ்லெகலும் சம்ஸ்கிருத ஆசிரியராக இருந்தார்.

ஷேஜி (1773-1832) என்பவர், பிரான்ஸ் தேசீய கழகத்தில் முதல் சம்ஸ்கிருத பேராசிரியர் ஆனார்

பிரான்ஸ் பாப் (1791-1867), ஷேஜியிடம் சம்ஸ்கிருதம் கற்று வினைச் சொற்களை ஒப்பிட்டு ஒரு நூலும், சம்ஸ்கிருத அகராதியும் வெளியிட்டார். லாசன் என்பவர், ஷ்லெகலின் சீடர்.வேதங்கள் பற்றிக் கட்டுரை எழுதினார்

நிறைய பனை ஓலைச் சுவடிகளைச் சோதித்து ரிக்வேத முதல் அஷ்டகத்தை வெளியிட்டார்.

தியோடர் பென்வே (1809-1881)சாம வேதத்தையும் சம்ஸ்கிருத-ஆங்கில நிகண்டையும் அச்சிட்டார்.

கேரம் பாய்ஸ்

ஆட்டோ மற்றும் போட்லிங்க் ஆகிய இருவரும் பிருஹத் சம்ஸ்கிருத நிகண்டு உருவாக்கினர்

விட்னி 1905ல் அதர்வ வேத மொழிபெயர்ப்பை வெளியிட்டார்.

வெபர் 1858ல் பாணீணிய சிட்சை மற்றும் பிங்களனது சந்தஸ் சூத்திரத்தை வெளியிட்டார்.

1877ல் ருடால்ப் மேயர், ரிக் விதானம், பிருஹத் தேவதை ஆகியவற்றை வெளியிட்டார்

1862ல் டாக்டர் பிட்ஸ் எட்வர்ட் ஹால் என்பவர் ரிக் வேதம் மீதான ராவண பாஷ்யத்தை அச்சிட்டார்.

1877லௌப்ரெக்ட் ரிக்வேதம் முழுதையும் அச்சிட்டார்.

1876ல் லுட்விக்கும், 1876ல் கிராஸ்மேன் ஜெர்மானிய பாஷையிலும் வெளியிட்டனர்.

போட்லிங்கும் பேராசிரியர் ராத்தும் அப்போதைய ரஷியத் தலைநகரான செயின் ட் பீட்டர்ஸ்பர்க்கிலிருந்து சம்ஸ்கிருத- ஜெர்மானிய அகராதியை வெளியிட்டனர்.

186ல் பேராசிரியர் மார்ட்டின் ஹாக், ஐதரேய பிராமணத்தை வெளியிட்டார்.

1864-65ல் பேராசிரியர் ஸ்டென்ஸ்லர் ஆஸ்வலாயன க்ருஹ்ய சூத்திரத்தை ஜெர்மன் மொழியில் வெளியிட்டார்.

அதே சமயத்தில் ஹெர்மன் ஓல்டன்பர்க், சாங்க்யாயன க்ருஹ்ய சூத்திரத்தை அச்சிட்டார். இது வீபர் வெளியிட்ட பத்திரிகை மூலம் வெளியானது

1857-58 ல், பேராசிரியர் ரேநீர். பிரெஞ்சு மொழியில் ரிக்வேதத்தை வெளியிட்டார்

பேராசிரியர் கீத் (Prof.Arthur  Berriedale  Keith): இவர் மக்டொனலின் சீடர். எடின்பரோ பல்கலைக் கழகத்தில் சம்ஸ்கிருதம் கற்பித்தவர். தைத்ரீய சம்ஹிதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார் .சம்ஸ்கிருத இலக்கிய வரலாறு, நாடக இலக்கிய வரலாறு கர்ம மீமாம்ஸை முதலிய நூல்கள் இயற்றியுள்ளார்.

ஏ.ஏ.மக் டொனல் Prof Arthur Anthony MacDonnell (1854-1931): இவர் பென்வேயிடம் பயின்றார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருதம் சொல்லிக் கொடுத்தார். Vedic Index of Names and Subjects என்ற புத்தகம் எழுதினார். 1927ஆம் ஆண்டில் India’s Past என்ற நூல் வெளியிட்டார்.. ஆங்கில- சம்ஸ்கிருத அகராதி, சம்ஸ்கிருத இலக்கிய வரலாறு ஆகிய நூல்களையும் எழுதினார்.

(கீத்தும் மக்டொனலும் தயாரித்த வேதப் பெயர், பொருள் அகராதியும் என் மேஜையில் எப்போதும் இருக்கிறது)

கெல்ட்னர் Prof Karl Friedrich Geldner(1853-1929):- இவர் ஒரு ஜெர்மானியர். ராத் என்பவரின் மாணாக்கர். ஜெர்மனியில் பெர்லின், மார்பரி பல்கலைக்கழகங்களில் சம்ஸ்கிருதம் சொல்லிக்கொடுத்தார். ராத் கொடுத்த விளக்கங்களை இவர் ஏற்கவில்லை.சாயண பாஷ்யத்தை ராத் புறக்கணிப்பது தவறு என்றும் சாயண பாஷ்யமே சரி என்றும் எழுதினார். சாயண பாஷ்யம் இன்றி வேதத்தில் ஒரு சொல்லுக்குகூட பொருள் சொல்ல முடியாதென்றும் எழுதினார்.

டாக்டர் ஜார்ஜ் பூலர் Dr Gorge Buhler: இவர் பென்வேயிடம் கற்றவர்.பிராக் பலகலைக்கழகத்தில் சம்ஸ்கிருதம் கற்பித்தார். சம்ஸ்கிருத இலக்கிய வரலாறு என்னும் நூலை எழுதினார். பம்பாய், வியன்னா ஆகிய பல்கலைக்கழகங்களிலும் பணி புரிந்தார். சம்ஸ்கிருத  நூல்கள் பற்றி கலைக் களஞ்சியம் ஒன்றை தயரித்தார்.

சர் மோனியர் வில்லியம்ஸ் Sir Monier Williams: இவர் தற்கால இந்து தேசம் என்ற நூலில் சம்ஸ்கிருதத்தின் சிறப்பை எழுதியுள்ளார். சம்ஸ்கிருத அகராதியும் வெளியிட்டுள்ளார். ஆக்ஸ்போர்ட் சம்ஸ்கிருதப் பேராசிரியர் பதவிக்கான போட்டியில் மாக்ஸ் முல்லரைத் தோற்கடித்தவர். அந்தப் பதவியே கிறிஸ்தவ மதத்தை நிலநாட்டுவதற்கான பதவியாகும்.

பேராசிரியர் லான்மென் ( Prof. Charles Rockwell Lanman) இவர் விட்னியிடம் பயின்றார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருதம் கற்பித்தார்.இவருக்கு முன் பலர் வேறு மொழிகளில் எழுதிய வேத இலக்கியப் புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.

ஹெர்மன் ஜாகோபியும் இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர் பால கங்காதர திலகரும் தனித்தனியே நடத்திய ஆரய்ச்சியில் ரிக் வேதத்தின் காலம் கி.மு.4000 என்று கணித்துள்ளனர். இது வான சாத்திர ஆராய்ச்சி என்பதால் தனிக்கட்டுரையாக தருகிறேன்.

துருக்கியை ஆண்ட ஹிட்டைட்ஸ்கள் இந்துக்களா?

lion gate

அரண்மனையின் சிங்க வாசல்

Written by London swaminathan

Research article No.1924

Date :11th June 2015

Time uploaded in London: 11-07

ஹிட்டைட்ஸ்கள் பற்றி நான் ஆங்கிலத்தில் எழுதிய நீண்ட ஆராய்ச்சிக் கட்டுரையின் சுருக்கத்தை மட்டும் தமிழில் தருகிறேன். முழு விவரம் வேண்டுவோர் நேற்று வெளியான எனது ஆங்கில கட்டுரையைப் படிக்கவும்.

1.ஹிட்டைட்ஸ் எங்கிருந்து வந்தனர் என்பது ஆராய்ச்சியளர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் கி.மு.1800 முதல் கி.மு1200 வரை இருந்துவிட்டு திடீரென்று காணாமற் போய்விட்டனர்.

2.அவர்கள் துருக்கியையும், வடக்கு சிரியாவையும் ஆண்டது பைபிள் குறிப்புகள், எகிப்திய கல்வெட்டுகள், 10,000 களிமண் பலகை கியூனிபார்ம் எழுத்துக் கல்வெட்டுகள் மூலம் தெரியவந்தது.

3.துருக்கியிலுள்ள பொகஸ்கோய் என்னும் இடத்திற்கு பழங் காலத்தில் ஹட்டுசா என்று பெயர். அங்குதான் இவர்கள் அரண்மனை, நூலகம், கல்வெட்டுகள், கோவில்கள் கண்டுபிடிக்கப் பட்டன. இதே நகரில்தான் மிடன்னிய வம்சம் பற்றிய தகவல்களும் கிடைத்தன. கி.மு.1400 ஆம் ஆண்டிலேயே வேத கால தெய்வங்கள், தசரதன், பிரதர்தனன் முதலிய மன்னர்கள் பெயர்கள் எல்லாம் அங்கே கிடைத்ததால் வேதமும் சம்ஸ்கிருதமும் கி.மு.1400 ஆம் ஆண்டிலேயே துருக்கியிலும் சிரியாவிலும் முழங்கிய அசைக்க முடியாத சான்றுகள் கிடைத்தன.

4.ஆனால் ஹிட்டைட்ஸ் பற்றி இவ்வளவுத் தெளிவாக எதுவும் கிடைக்கவில்லை. ஆயினும் அவர்கள் பேச்சிய மொழி இந்தோ-ஐரோப்பிய குடும்பத்தைச் சேர்ந்தது — அதாவது சம்ஸ்கிருத மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்பது எல்லோருக்கும் தெரியும்.

5.தென் கிழக்காசிய நாடுகள் முழுவதும் ராமாயணத்திலுள்ள பெயர்களை எல்லாம் அவர்கள் எப்படி உருத் தெரியாமல் மாற்றினரோ அப்படி இவர்களும் பெயரை மாற்றியிருக்கலாம். இனி இந்துக்களுடன் இவர்களைத் தொடர்புபடுத்தும் அம்சங்களை மட்டும் பார்க்கலாம்

yazilikaya

சம்ஸ்கிருத மொழிக் குடும்பம்

6.இவர்கள் சம்ஸ்கிருத மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியை பேசினர்.

7.ஒரு ஹிட்டைட் மன்னரும் எகிப்திய மன்னரும் செய்த உடன்படிக்கையில் ஆயிரம் தெய்வங்கள் சாட்சியாக செய்தனர். இந்த ஆயிரம் என்பதை இந்து மத நூல்களில் மட்டுமே காணமுடியும். தசாம்ஸ முறையைக் கண்டுபிடித்ததும் நம்மவர்கள்தான். சஹஸ்ர நாமம், சஹஸ்ர கண்கள், கைகள் என்றெல்லாம் வேதங்கள் துதிபாடும். இந்திரனை ஆயிரத்துடன் தொடர்பு படுத்தும் பெயர்கள் சிலவும் உண்டு

8.இறந்தவர்களை எரிக்கும் வழக்கம் இவர்களிடம் இருந்தது. இறந்தவுடன் மன்னன் கடவுள் ஆகிவிடுகிறான் என்பதும் அவர்கள் கொள்கை. இது எல்லாம் இந்து மத நம்பிக்கைகள். ஆய் அண்டிரன் என்ற மன்னன் இறந்தவுடன் சொர்க்கத்தில் அவனுக்கு இந்திரன் வரவேற்பு கொடுக்க நிற்பது பற்றி புற நானூறு பாடுகிறது. இது போன்று நிறைய உதாரணங்களைக் காட்டமுடியும்.

9.இந்த மன்னர்கள் மற்றவர்களுடன் சமாதான உடன்படிக்கை செய்தது, பெண் கொடுத்து மற்ற நாட்டுடன் உறவைப் பல்ப்படுத்தியது ஆகியனவும் இந்து மத வழக்கங்களே. ராவணன் — பாண்டிய மன்னன் உடன்படிக்கை, மிடன்னிய தசரதன் – எகிப்திய மன்னன் உடன்படிக்கை ஆகியன பற்றி ஏற்கனவே கட்டுரைகள் எழுதிவிட்டேன். காந்தாரத்தில் இருந்து வந்த காந்தாரி, கேகயத்தில் இருந்து வந்த கைகேயி, விதேக நாட்டில் இருந்து வந்த வைதேகி ஆகியோரை நம் இதிஹாசங்களில் காண்கிறோம்.

 hariti

65 கடவுள் உருவங்கள்

10.இவர்களுடைய 65 கடவுள் உருவங்கள் எழிஜிகாய என்னும் இடத்தில் சுவற்றில் வரையப்பட்டுள்ளன. அவர்கள் ஒவ்வொருவரும் இந்து தெய்வங்களைப் போல வாகனங்கள் மீது பவனி வருகின்றனர். சிலப்பதிகாரமும் , தேவரமும் துர்க்கையை மான் வாகன தேவி (கலையதூர்தி) என்று வருணிக்கின்றன. தமிழ் நாட்டிலோ இந்தியாவின் இதர பகுதிகளிலோ அததகைய கலயதுர்தியை இப்போது காணமுடிவதில்லை. ஆனால் துருக்கியில் காணலாம்.

11.ஹிட்டைட்ஸ்களும் வேத காலம் போல இடி மின்னல் கடவுளையும் (இந்திரன்) , சூரியனையும் வணங்கினர்.

12.ஹிட்டைட்ஸ் அரண்மனையின் முன்னால் இரண்டு பெரிய சிங்கங்கள் நிற்பதைக் காணலாம். வேதத்தில் சிங்கம், சிம்மாசனம் இருப்பது பற்றி ஏற்கனவே எழுதிவிட்டேன்.

13.இதே போல இருதலைக் கழுகு அவர்கள் சின்னமாகக் காட்டப் பட்டுள்ளது. இது விஜய நகர அரசர் காலம் வரை நம் சின்னமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையையும் முன்னரே எழுதிவிட்டேன். இவை எல்லாம் இந்து மத தாக்கத்தைக் காட்டுகின்றன.

14.ஒரு கல்வெட்டில் கடவுளருக்கு வெள்ளியில் விக்ரகம் செய்தது பற்றியும், காளைகள் ரதத்தை இழுத்துச் செல்வது பற்றியும், காளையே கடவுள் என்றும் படிக்கிறோம். இவை எல்லாம் இந்து மத தாக்கமே. இந்திரனை காளை என்று வேதங்கள் புகழ்கின்றன.

15.ஹரிதி என்ற குழந்தைகளைக் காக்கும் தெய்வம் புத்த மதக் கடவுள் என்றும் நேபாளம், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் ஹரிதி வழிபடப்படுவதாகவும் கலைக் களஞ்சியங்கள் கூறும். இந்தக் கடவுள் இந்து மதக் கடவுளே. ஏனெனில் புத்தர் கடவுள் வழிபாடு பற்றி எதுவுமே சொல்லவில்லை. இந்த ஹரிதி போன்ற தேவி சிலை துருக்கியில் கிடைத்து இருக்கிறது.

vahanas

16.அதர்வண வேத மந்திரங்களைப் போல பல வழிபாட்டுத் துதிகள் உள்ளன. பில்லி சூனியம் போக்கல், பேய்களை உண்டாக்கி பாதுகாப்பு பெறல், குடும்பச் சண்டையைத் தீர்த்துவைத்தல், மலடித் தன்மையை நீக்கல் போன்ற பல வழிபாடுகள் ஹிட்டைட்ஸ் இடமும் உண்டு. தந்தை செய்த பாவம் மகனுக்கு வருமென்று எண்ணி ஒருவர் உருக்கமாக வழிபடும் துதியும் உளது.

17.இவர்களுடைய பெயர்கள் சம்ஸ்கிருத மொழியின் திரிபே என்று ஆரியதரங்கிணி நூலில் விரிவான ஆரய்ச்சிக்கட்டுரை எழுதியுள்ளார் கல்யாணராமன் என்ற அறிஞர்.

18.வாய்மொழிக் கோசர், அதியமான் போல இவர்கள் பெயர்களிலும் சத்திய என்பது நிறைய வரும். ராம்செஸ் (ராம சேஷன்) என்ற எகிப்திய மன்னனுடன் சமாதான உடன்பாடு செய்தவன் பெயர் ஹட்டுசீலி. இது சத்தியசீல என்பதன் திரிபு. அவர்களது தலைநகர் ஹட்டுசா. இது சத்தியவாச என்பதன் திரிபு. இப்படி நிறைய பெயர்கள் கல்யாணராமன் கொடுத்த பட்டியலில் உள்ளது. (சத்திய வான் என்பதன் திரிபு அதியமான்; இவர்களை சத்யபுத்ரர்கள் என்று அசோகர் கல்வெட்டு கூறும்)

19.ஹிட்டைட்ஸ்களுடைய மோதிரங்கள், முத்திரைகள் ஆகியனவும் இந்து மத தாக்கத்தைக் காட்டும். ராமன் பட்டமேற்பு விழாவுக்கு தசரதன் அனுப்பிய அழைப்பிதழில் கழுகு முத்திரை வைத்து அனுப்பியதாக கம்பன் பாடியதையும் அதே கழுகு முத்திரை சிந்து சமவெளியில் கிடைத்திருப்பதையும் தனியொரு கட்டுரையில் தந்துள்ளேன். இது போல பலவகை முத்திரைகள் துருக்கியில் கிடைத்திருக்கின்றன. சாகுந்தலம், முத்ராராக்ஷசம் போன்ற வடமொழி நாடகங்களில் மோதிர-முத்திரைகள் கதையின் அடித்தளமாக விளங்குகின்றன.

20.கல்யாணராமன் தரும் பட்டியல்:

ஹிட்டைட் – ஹட்டி-க்ஷத்ரிய- கேட்டா (பைபிள்)

ஹட்டுசா= சத்வாச

அனிட்டா = அநீத

ஹட்டுசீலி= சத்வ சீல

முரஸீலீஸ்= முர சீல

துதாலியா= துக்தாலயா

அர்ணவாண்டா= அருணபந்த.

ஹட்டுசீலிஸ் மனைவி புதுகீபா= பத்மசிவா

double headed

புதுஹீபா, ஹூரியன் வம்சத்தைச் சேர்ந்தவள். இது சூரியன் என்பதன் திரிபாகும். ப=வ, ஹ=ச, ஜ=ய, ர=ல ஆக மாறுவது பற்றி எனது முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் ஏராளமான சான்றுகள் கொடுத்துள்ளேன்.

தஞ்சாவூர் பெரிய கோவில் அதிசயங்கள்

Thanjavur_Big_Temple

தொகுத்து வழங்குபவர்- லண்டன் சுவாமிநாதன்

கட்டுரை எண் 1920

கட்டுரை தேதி- 9 ஜூன் 2015

லண்டனில் பதிவு ஏற்றப்பட்ட நேரம்—காலை 11-00

உங்கள் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்; தஞ்சைப் பெரிய கோவில் ஒரு உலக அதிசயம் என்று; பலமுறை படித்திருப்பிர்கள்.. ஆயினும் இதில்,  பல நூல்களில் உள்ள சுவையான புள்ளி விவரங்களைத் தொகுத்துக் கொடுக்கிறேன்.

தஞ்சாவூர் பெரியகோவிலில் ஐந்து அதிசயங்கள் உள்ளன:

1.வானளாவிய கோபுரம்; 216 அடி உயரம்; எல்லா ஊர்களிலும் கர்ப்பக்கிரகத்துக்கு மேல் சின்ன கோபுரம்/விமானம் இருக்கும். வெளியே பெரிய கோபுரங்கள் இருக்கும். தஞ்சையிலோ கர்ப்பக்கிரகத்துக்கு மேல் 216 அடி கோபுரம்!

2.பெரிய சிவலிங்கம்; சிவலிங்கம் என்பதன் பொருள் கடவுள் உருவமற்றவர் என்பதாகும். 13 அடி உயரம்!

3.கர்ப்பகிரகத்துக்கு நேராக மிகப் பெரிய நந்தி; சிவபெருமானின் வாஹனம்; 12 அடி உயரம். எடை 12 டன்!

4.கோபுரத்தின் உச்சியில் வட்டவடிவ சிகரம். அங்குள்ள கல்லின் எடை 81 டன்!

5.இறுதியாக ஆயிரம் ஆண்டு பழமையான அற்புத ஓவியங்கள்

lord-shiva-linga-

பெரிய கோபுரம், பெரிய லிங்கம், பெரிய நந்தி – இவை அனைத்தும் இக்கோவிலைக் கட்டிய சோழ மாமன்னன் ராஜ ராஜ சோழனின் (கி.பி. 985-1014) பெரிய/ உயர்ந்த சிந்தனையைக் காட்டுகின்றன. நாமும்தான் எதைப் பற்றி எல்லாமோ பெரிய கற்பனை செய்கிறோம்; நடக்கிறதா? இல்லையே! எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் பெரியோர். அதனால்தான் ராஜ ராஜனை இன்றும் உலகம் போற்றுகிறது.

இந்தக் கோவிலை ராஜ ராஜன் தட்சிண மேரு என்றும் அழைத்தான. அதாவது வடதிசையில் மேரு மலை என்பது உயரத்துக்கும்,, புனிதத்துக்கும் பெயர் பெற்ற மலை. அது போல தென் திசையில் அளவிலும், புகழிலும், புனிதத்திலும் பெயர் பெற்றது இக்கோவில்.

இதற்கெல்லாம் அவனுக்கு உறுதுணையாக நின்றவர்கள் யார் தெரியுமா?

6.அவனது சகோதரி குந்தவை

  1. ராஜ ராஜனது குரு – கருவூர் சித்தர்

8.ராஜ ராஜனின் படைத் தளபதி கிருஷ்ணன் ராமன்

அது சரி, நாம் எண்ணதான் நினைத்தாலும் கட்டிடத்துக்கு அழகாக திட்டம் போட்டுக் கட்ட வேண்டுமே; அப்பேற்பட்ட கட்டிடக் கலை நிபுணர்கள் யார்? அவர்கள் பெயரையும் பொறித்து வைத்துள்ளான் ராஜ ராஜன். யார் அவர்கள்?

thanjavur plan

9.குஞ்சர மல்லன், ராஜராஜப் பெருந்தச்சன் என்ற இருவர்.

இந்தக் கோவிலில் வேறு என அதிசயங்கள்?

10.முழுக்க முழுக்க கருங்கற்களால் ஆனது. ஒரு இடத்திலும் காரை பயன்படுத்தவில்லை! (பிற்காலத்தில் நாயக்கர், மராத்தா ஆட்சியில் புதிய சிலைகள், கட்டிடங்கள் சேர்க்கப்பட்டன. அவைகளில் காரை முதலிய பொருட்கள் உண்டு)

  1. குறைந்தது எண்பைத்தைந்து கல்வெட்டுகள் இருக்கின்றன. இவை நமக்கு பல அரிய விஷயங்களைத் தருகின்றன. 400 ஆடல் அழகிகளின் பெயர்களும் அவர்கள் வசித்த வீட்டு இலக்கமும் இருக்கின்றன!

12.ஐம்பதுக்கும் மேலான இசைக்கலைஞர்கள் கோவிலில் இருந்தனர். அவர்கள் பெயர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

KONICA MINOLTA DIGITAL CAMERA

KONICA MINOLTA DIGITAL CAMERA

  1. மொத்தம் கோவில் பணியில் ஈடுபட்ட சுமார் 600 ஊழியர்களின் பெயர்கள், அவர்களுடைய வேலை, அவர்களுடைய ஊதியம் எல்லாம் கல்வெட்டுகளில் உள்ளன. இதையெல்லாம் நுணுக்கமாக கல்லில் பொறித்துவைத்த அவனது நிர்வாகம் எவ்வளவு சீரும் சிறப்புடனும் நடந்திருக்க வேண்டும்!

14.டாக்டர் நாகசாமி, தமிழ்நாடு தொல்பொருட்த் துறை இயக்குநராக இருந்த காலத்தில் இக் கல்வெட்டுகள் பிரசுரமாகியுள்ளன. அவைகளில் இருந்து சில ஆடல் அழகிகளின் பெயர்கள்: சேர மங்கை, எடுத்தபாதம், சோழகுலசுந்தரி, தில்லை அழகி, மதுரவாசகி, மாதேவடிகள், இரவிகுல மாணிக்கம், மா தேவி, சீருடையாள், ஆரா அமுது, மழலைச் சிலம்பு, திகைச் சுடர், காமக்கோடி, பொற்கேசி, ஆறாயிரம், தில்லைக் கூத்தி, செம்பொன், இன்னிளவஞ்சி, கயிலாயம், ஆடவல்லாள், இளங்கோயில், அறிவாட்டி, கல்லறை, சோமநாதி, சுந்தர சோழி, இராமி, சற்பதேவி, ஊதாரி, அரநெறி, குந்தவை, பொற்கேசி, கன்னரதேவி, அருள்மொழி.

15.கர்ப்பக்கிரகத்துக்குள் போவதற்கு முன் 12 அடி உயர துவரபாலகர் சிலைகளைக் காணலாம். இதில் சிற்பி ஒரு அழகிய கற்பனையைப் புகுத்தியுள்ளார். ஒரு யானையை ஒரு பாம்பு விழுங்குகிறது. அந்தப் பாம்பு, துவாரபாலகன் கையிலுள்ள கதையைச் சுற்றி ஒரு புழுப் போல காண்பிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது நாம் காற்பனை செய்ய வேண்டும். யானயின் அளவு நமக்குத் தெரியும். யானையும் பாம்பும் சிறிய அளவுக்கு இருக்குமானால் அந்த துவாரபாலகனின் கதை உருவம் எல்லாம் எவ்வளவு பெரியவை என்று நாம் கற்பனை செய்ய வேண்டும்! அந்தக் கதையைக் கையில் வைத்திருக்கும் துவார பாலகரின் உயரம் என்ன என்பதைக் கற்பனை செய்யவேண்டும். வாயிலைக் காக்கும் துவார பாலகரே இவ்வளவு பெரியவர் என்றால் அவரால் காக்கப்படும் பிருஹதீஸ்வரர் என்னும் பெருவுடையார் எவ்வளவு பெரியவர் என்று கற்பனை செய்யவேண்டும். துவார பாலகரோ பணிவின் சின்னமான விஸ்மய முத்திரையைக் காட்டிய வண்ணம் நிற்கின்றனர்.

Big_Temple-Lingam_Painting

  1. மற்றொரு அதிசயம். 81 டன் எடையுள்ள கல்லை 216 அடி உயரத்துக்கு எப்படி ஏற்றினர் என்பதாகும். தஞ்சைக்கு 9 மைல் தொலைவிலுள்ள சாரப்பள்ளம் என்ற கிராமத்திலிருந்து சரிவாக சாரம் கட்டி கற்களை ஏற்றினர் என்பது ஒரு கருத்து. கோபுரத்தைச் சுற்றி மலைப்பாதை போல சுழல் வட்டப் பாதை அமைத்து அதில் கற்களை இழுத்துச் சென்றிருக்கலாம் என்பது இன்னும் ஒரு கருத்து.

17.கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப் பசேல் என்று காட்சிதரும் வயல் பிரதேசங்களை எல்லாம் கடந்து எங்கோ ஒரு மலையிலிருந்து கற்களைக் கொணர்ந்து சோழ நாடு முழுதும் கோவில்களைக் கட்டியது அதிசயத்திலும் அதிசயம். இது சோழ மாமன்னர்களின் பக்திக்கு எடுத்துக்காட்டு. அதே நேரத்தில் நிர்வாகம், படையெடுப்புகள் ஆகியவற்றிலும் அவர்கள் பின் தங்கவில்லை.

18.இறுதியாக இங்கு ராஜராஜனுடன் அழகிய உருவத்துடன் கருவூர்த்தேவர் என்னும் சித்தரும் காட்சியளிக்கும் ஓவியம் உள்பட பல ஓவியங்களும் உள்ளன. இவை அஜந்தா குகை ஓவியங்களுக்கு இணையான சிறப்பு வாய்ந்தவை.

ஆயிரம் ஆண்டுக்கு முன்னிருந்த சோழ சாம்ராஜ்யத்தில் நாமும் வாழ்ந்திருந்தால் இன்னும் இதன் பெருமைகள் தெரிந்திருக்கும். ஏனெனில் ராஜராஜன் அளித்த பெரும்பாலான நகைகள் இன்று அங்கே இல்லை!

Rajaraja_mural-2

வெளிநாட்டுப் படை எடுப்பாளர்களாலும் தகர்க்கமுடியாத கருங்கல் கோவிலைக் கட்டிய அவன் புகழ் என்றும் நிடித்து, நிலைத்து நிற்கும்.

-சுபம்-

கணித மேதை, அழகி, உயிரிழந்த சோகக் கதை

HypatiaQuote

Compiled by London swaminathan

Article No.1916; Dated 7 June 2015.

Uploaded at London time: காலை 6-32

பழங்கால உலகில் இந்தியாவில் மட்டுமே பெண்கள் கல்வி கற்றனர். உயர் நிலையில் இருந்தனர்.சுமேரிய, எகிப்திய,கிரேக்க நாட்டு வரலாற்றைப் படித்த்வர்களுக்கு நன்கு தெரிந்த உண்மை இது. எதை எழுதினாலும் அதற்கு சான்று தருவது அறிவுடைமை; மேலும் அது நம் கடமை.

உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் இருபதுக்கும் மேலான பெண் கவிஞர்களின் பாடல்கள் உள. அதற்கு 1700 ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய சங்கத் தமிழ் இலக்கியத்தில் இருபதுக்கும் மேலான பெண் கவிஞர்கள் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. சங்க இலக்கியம் தோன்றுவதற்கு முன்னர் பீஹாரிலுள்ள பாட்னா நகரில் (பாடலிபுத்ரம்) இருந்து அசோகனின் மகள் சங்க மித்திரை கப்பலில் இலங்கைக்குச் சென்று புத்தமதப் பிரசாரம் செய்தாள். அவள் ஒரு அறிவாளி. புத்த மதத்தில் மேலும் பல தலைவிகளும் இருந்தனர். இதற்கெல்லாம் மிக முன்னதாக, அதாவது கி.மு 850-ல், இற்றைக்கு 2850 ஆண்டுகளுக்கு முன், ஜனக மாமன்னன் கூட்டிய அகில இந்திய தத்துவ மஹாநாட்டில் பல மாநில த்தினர் கலந்து கொண்டனர். அந்த அறிஞர்களின் பெயர்ப் பட்டியல் பிருஹத் ஆரண்யக (பெருங் காட்டு) உபநிஷத்தில்  உள்ளது. அதில் கலந்துகொண்ட மகளிர் அணியில் கார்கி வாசக்னவி என்ற பேரறிவாளி, கூட்டத்தில் எழுந்து பேசினாள். அப்போதைய பேரறிஞர் யாக்ஞவல்கியர் மீது கேள்விக் கணைகளைத் தொடுத்தாள்.

ஆதிசங்கரருக்கும் மண்டன மிஸ்ரருக்கும் நடந்த வாதத்தில் மண்டன மிஸ்ரரின் மனைவி சரஸவாணிதான் ஜட்ஜ்/ நடுவர். அவ்வளவு பெரிய அறிவாளி அவள். ஆயினும் தன் கணவர் பங்கு பெறுவதால் அவள் ஒரு தந்திரம் செய்தாள். அவள் அறிவாளி மட்டும் அல்ல; ஒரு விஞ்ஞானி! ஒரு விஞ்ஞானி மட்டும் அல்ல; பெரிய சைகாலஜிஸ்ட் – அதாவது உளவியல் மாமேதை. அவளுக்குத் தெரியும் யார் உணர்ச்சி வசப்பட்டு வாதாடுகிறார்களோ அவர்கள் உடம்பில் சூடு ஏறும்; குறைகுடம் கூத்தாடும், ஆனால் நிறைகுடம் தழும்பாது என்று. ஆகையால் இருவர் கழுத்திலும் மலர் மாலையைப் போட்டுக் கொள்ளவைத்து, முதலில் யார் மாலை வாடுகிறதோ அவரே தோற்றவர் என்று அறிவித்துவிட்டாள். அவர் கணவரின் மாலை முதலில் வாடவே, அவரே தோற்றவர் என்று அறிவித்துவிட்டு, தன்னுடன் வாதத்துக்கு வரும்படி அழைத்து, பிரம்மச்சாரி சங்கரரிடம் ‘செக்ஸ்’ பற்றிய கேள்விகளைக்கேட்டு அவரைத் திணறடித்தாள். இறுதியில் அவளும் தோற்றுப்போனாள். அப்பேற்பட்ட மாமேதையான பெண்மணிகளை உடையது நம் நாடு.

மேலை உலகத்திலோ பெண்களை மட்டம் தட்டி வைத்திருந்தனர். ஷீபா மஹாராணி, கிளியோபாட்ரா ஆகியோர் பெயர்கள் அடிபட்டாலும் அவர்களின் ‘அழகே’ அதிகம் பாராட்டப்பட்டுள்ளது. அவர்களின் ‘அறிவு’க்குச் சான்று பகரும் கவிகள் ஏதுமில! நமக்கோ இலக்கியச் சான்றுகள் உள!!

அலெக்ஸாண்டர் படை எடுத்தபோது உலகில் பல நகரங்களை ஏற்படுத்தினார். அதில் ஒன்று எகிப்து நாட்டில் நைல் நதிக் கரையில் அமைந்த அலெக்ஸாண்டிரியா. அதில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே பத்து லட்சம் மக்கள் வாழத் துவங்கினர். இந்திய அறிஞர்களும், வணிகர்களும் அங்கு வசித்த வரலாற்றுச் சான்றுகளும் உண்டு. அந்த நகரில் மியூசியம், பல்கலைக் கழகம் எல்லாம் ஒன்றாக இணைந்திருந்த இடத்தில் கிரேக்க அறிஞர் தேயன் (தேவன்) பாடம் சொல்லிக் கொடுத்தார். அவரது மகளின் பெயர் ஹைபேசியா. அவள் நன்கு படித்து கணித மேதை ஆனாள். அவள் பேரழகி. தன்னிடம் பாடம் கற்கும் மாணவர்கள் தன் அழகில் மயங்கி புத்தி பேதலித்து விடக்கூடாது என்று எண்ணி, திரைக்குப் பின்னால் நின்றுதான் பாடம் சொல்லிக் கொடுப்பாள். அவள் பிறந்தது கி.பி 350க்கும் 370 க்கும் இடையில் என்பது ஆராய்ச்சியாளரின் கணிப்பு.அப்போது ரோமானிய ஆட்சி எகிப்து வரை பரவி இருந்தது.

hypatia 2

ஹைபேசியா மற்றும் அவரது தந்தை ஆகியோர் கிறிஸ்தவ மதத்தை ஏற்கவில்லை. ஆகையால் கிறிஸ்தவ மதத்தினருக்கு அவளைப் பிடிக்கவில்லை. இந்து மத தத்துவத்துக்கு இணையான (மறுபிறப்பு) கொள்கைகளைப் பரப்பிய சாக்ரடீஸ்-பிளாட்டோ ஆகியோரின் கொள்கைகளை ஹைபேசியா குடும்பம் பின்பற்றியது.

இதற்கிடையில் அலெக்சாண்டிரியாவில் அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டு யூதர்களூம் கிறிஸ்தவர்களும் வன்முறையில் இறங்கினர். இருதரப்பிலும் மதத்தலைவர்கள் படுகொலையுண்டனர்.

கான்ஸ்டாண்டி நோபிள் நகரிலிருந்து வந்த வெறிபிடித்த பாதிரியார் சிரில் என்பவருக்கும், ஹைபசியாவின் மாணவரும் ரோமானிய கவர்னருமான ஆரிஸ்டஸ் என்பவருக்கும் மோதல் அதிகரித்தது. கி.பி 415ல் பெரிய ரோமானிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஹைபேசியா, கணிதம் மற்றும் தத்துவ பாடத்தைப் போதித்ததோடு பலரை வாதுக்கு அழைத்து வெற்றியும் பெற்றுவந்தாள். இந்தியாவில் காசி மநகரத்தில் தெரு மூலைகளில் அறிஞர்கள் நின்று கொண்டு எல்லோரையும் வாதுக்கு அழைப்பர். பெரிய பட்டிமன்றங்கள் நடக்கும். இதுபோல ஹைபேசியாவும் செய்து வந்ததால் ரோமானிய எதிர்ப்புக் கிளர்ச்சி நடந்த அன்று அவருடைய வீட்டில் ஒரு கிறிஸ்தவ கும்பல் புகுந்து அவரை நிர்வாணமாக்கி தெருவில் இழுத்து வந்தனர். பின்னர் அவளை உயிருடன் எரித்துக் கொன்றனர். இதுபற்றி சாக்ரடீஸ் ஸ்காலஸ்டிகஸ் என்ற வரலாற்று அறிஞர் அந்தக் காலத்திலேயே எழுதி வைத்தது இப்பொழுது விக்கிபீடியா முதலிய கலைக்களஞ்சியங்களில் உள்ளது.

இந்தப் படுகொலைக்குப் பின்னர் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஐரோப்பாவில் விஞ்ஞானம் என்பது இருளில் மூழ்கியது. கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலிலியோ, கோபர்நிகஸ் ஆகியோரையும் கொடுமைப் படுத்தினர். இதற்குப் பெரிய எதிர்ப்பு கிளம்பியவுடன் கி.பி.1500 வாக்கில் மறுமலர்ச்சி உதயமானது.

ஹைபேசியா பல நூல்களை எழுதினார். நீரை அளக்கும் பல கருவிகளைக் கண்டுபிடித்தார், ஆனால் ஒன்றுகூட இன்று மிஞ்சவில்லை. இதற்குக் காரணம், முஸ்லீம்கள் நாலந்தா பலகலைக்கழக நூல்நிலையத்தை எரித்து நம்முடைய நூல்களை எப்படி சாம்பலாக்கினரோ அப்படியே கி.பி 640ல் ஒரு அராபிய முஸ்லீம் கும்பல் அலெக்ஸாண்டிரியா நூலகத்தையும் எரித்துச் சாம்பலாக்கியது. இதன் விவரங்களும் கலைக் களஞ்சியங்களில் உள்ளது. பல்லாயிரக்கணக்கான சம்ஸ்கிருத நூல்களின் பெயர்களை மட்டுமே நாம் அறிவோம். அவை அனைத்தும் இன்றும் சாம்பல் ரூபத்தில் பீஹாரில் நாலந்தா பலகலைக் கழகத்தின் அடியில் உள்ளன. இதே கதை அலெக்ஸாண்டிரியாவிலும் நடந்தது.

நாம் இவர்களை மன்னித்துவிடலாம். ஆனால் வரலாறு இவர்களை மன்னிக்கவே மன்னிக்காது.

கம்போடிய மொழியில் தமிழ், சம்ஸ்கிருதச் சொற்கள்

RIMG2835

Compiled by London swaminathan

Article No.1907; Dated 3 June 2015.

Uploaded at London time: காலை 10-45

கம்போடியா (காம்போஜ) நாட்டின் மொழிகள், இலக்கியம் குறித்து லண்டன் பல்கலைக் கழக கீழ்திசை ஆப்பிரிக்க பிரிவில் சீனியர் விரிவுரையாளராகப் பணியாற்றிய ஜூடித் எம்.ஜாகப் எழுதிய இரண்டு புத்தகங்களில் இருந்து இந்தியா தொடர்பான சில சுவையான விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து, மகிழ்ந்து இருப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

(இதிலுள்ள புகைப்படங்கள் அனைத்தும் சிட்னி நகர் திரு கே.நடராஜன் எடுத்த படங்கள்; நன்றி)

1.க்மேர் இன மக்கள் மீகாங் ஆற்று வடிநிலத்தில் வாழ்ந்தனர். இந்த இடத்தின் பழைய பெயர் இந்தோ-சீனா. இப்பொழுது தென் கிழக்கு ஆசியா என்று அழைக்கப்படு கிறது. இவர்கள் பேசும் மொழிகளை க்மேர்-மோன் குடும்ப மொழிகளில் சேர்ப்பர். இங்கு இரண்டாம் நூற்றாண்டு முதல் இந்தியர்கள் குடியேறினர்.

(எனது கருத்து; முன்னொரு கட்டுரையில் க்மேர் என்பது குமரி என்பது போல இருப்பதையும் மா கங்கா (கங்கை அன்னை) என்பதே மீகாங் ஆனதையும் எழுதி இருக்கிறேன்)

2.அவர்கள் சம்ஸ்கிருத மொழியை இலக்கியத்துக்கான மொழியாகக் கருதினர். அரசனையும் கடவுளையும் போற்றுவதற்கான இலக்கியப் படைப்புக்கும், கல்வெட்டுப் பொறிப்புக்கும் அம்மொழியைப் பயன்படுத்தினர்.ஏழாம், எட்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் இருந்து இந்து மத, புத்த மத சம்பந்தமான நிறுவனங்கள், கோவில்கள் பற்றி தகவல் கிடைக்கிறது

3.கம்போடியாவில் புனான் என்ற பெயரில் இந்தியர்களின் ஆட்சி இரண்டாம் நூற்றாண்டு முதல் இருந்ததை சீன இலக்கியங்களின் மூலம் அறிய முடிகிறது.

(எனது கருத்து: சம்பா எனப்படும் வியட்நாமில் ஸ்ரீமாறனின் இரண்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டு கிடைத்திருக்கிறது. இது திருமாறன் என்று தமிழ் இலக்கியம் குறிப்பிடும் பாண்டிய மன்னனே என்று “வியட்நாமை ஆண்ட பாண்டிய மன்னன்” என்ற கட்டுரையில் முன்னரே குறிப்பிட்டுள்ளேன். மேலும் புனான் என்பதற்கு இது வரை அர்த்தம் தெரியவில்லை. பனவன் என்ற பாண்டியனின் பட்டமோ அல்லது புனல் நாடு என்பதன் திரிபாகவோ இது இருக்கலாம். பிற்காலத்தில் அந்த இடத்தை தண்ணீர் நாடு என்றே அவர்கள் மொழியிலும் அழைத்தனர். மேலும் இந்திர விழாவுக்கு இணையான நீர் விழாவும் பெரிய அளவில் எடுத்தனர். தமிழ் புத்தாண்டான சித்திரையையே அவர்களும் புத்தண்டாகக் கொண்டாடுகின்றனர்).

RIMG2480 - Copy

4.இந்தியாவிலிருந்து கவுண்டின்யன் என்னும் பிராமணன் வந்து நாகர்களின் மன்னர் மகள் சோமாவை மணந்து புதிய ஆட்சி நிறுவினான் என்று பரம்பரைக் கதை கூறுகிறது.

(எனது கருத்து: தமிழ், சம்ஸ்கிருத இலக்கியங்களில் நாக லோகம், பாதாள லோகம் எது என்று தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தியத் துறை முகங்களில் கப்பலில் ஏறி கீழ் திசையிலோ, தென் திசையிலோ சென்றால் அது எல்லாம் நாக லோகம்.அங்கு வசிப்பவர்கள் எல்லாம் நாகர் இன மக்கள்; பெண்கள் எல்லாம் நாக கன்னிகைகள். ஆகவே இலங்கை முதல் தென் கிழக்காசியாவின் தென் கோடி வரை எல்லாம் நாக நாடு. அதையும் கடந்து வெகு தூரம் சென்றால் — அதாவது மாயா, இன்கா, அஸ்டெக் நாகரீகமுள்ள – தென் அமெரிக்கா வரை சென்றால் அது பாதாள லோகம்)

5.கம்போடியா என்பது காம்போஜ என்பதன் திரிபு. கம்பு ஸ்வயம்புவ என்ற ரிஷி, இந்த நாட்டுக்கு வந்து மீரா என்பவரை மணந்து, அவர்கள் மூலம் பெருகிய இனத்தால் இவர்கள் காம்போஜர்கள் என்று அழைக்கப்படுவதாக இன்னொரு கர்ண பரம்பரைக் கதையும் இங்கே இருக்கிறது.

6.இறுதியாக, ஒன்பதாம் நூற்றாண்டு முதல் 14-ஆம் நூற்றாண்டு வரை நிலவிய அரசுக்கு அங்கோர் ராஜ்யம் என்று பெயர். அவர்கள்தான் உலகம் வியக்கும் அங்கோர்வட் முதலிய பிரம்மாண்டமான கற்கோவில்களை எழுப்பியவர் ஆவர். கி.பி 611-ல் பொறித்த முதல் க்மேர் மொழிக் கவெட்டும் கி.பி.613-ல் செதுக்கிய முதல் சம்ஸ்கிருதக் கல்வெட்டும் கிடைத்தன. ஆயினும் வியட்னாம் நாட்டில் (சம்பா) இரண்டாம் நூற்றாண்டு முதல் சம்ஸ்கிருதக் கல்வெட்டு கிடைக்கிறது. தெ.கி. ஆசிய நாடுகளில் 800- க்கும் மேலான சம்ஸ்கிருதக் கல்வெட்டுகள் உள்ளன.

7.ஆறு கவிஞர்களின் பெயர்களைக் கல்வெட்டுகள் மூலம் அறிகிறோம். மேலும் ராமாயண, மஹாபாரத உபந்யாசங்கள் நடத்தப்பட்டதையும் அறிய முடிகிறது.

8.ராம கீர்த்தி என்ற பெயரில் ராமாயண இலக்கியம் இருக்கிறது கம்போடிய மக்களும் ஏரி, குளங்களில், மரங்கள், மலைகளில் தேவதைகள் (அணங்கு) இருப்பதாக நம்பினர். அவ்விடங்களை இதற்காக வழிபட்டனர். அவைகளை அணங்குடா என அழைத்தனர்.

(எனது கருத்து: தமிழ் இலக்கியம் முழுதும் அணங்குகள் பற்றி குறிப்புகள் உள.)

RIMG2534 - Copy

8.பதினாறாம் நூற்றாண்டில் ராம கீர்த்தி என்னும் ராமாயண நூல் எழுதப்பட்டது; இதில் ராம், லக்ஸ், ராப் (ராவணன்), ஹேமந்த் (இமயமலை), ஹனுமான் ஆகிய பெயர்கள் வருகின்றன. ஒரிஜினல் வால்மீகி ராமாயணத்துக்கும் இதற்கும் பல வேறுபாடுகள் உண்டு. ராமர் என்பவர் புத்தரின் பூர்வஜன்ம அவதாரம் என்று துவங்குகிறது. ஒரு கட்டத்தில் சீதையைக் காட்டிற்குக் கொண்டுபோய் கொன்றுவிடும்படி ராமன் கூறுகிறான். ஆனால் அவன் சீதையை ஒளித்துவைக்கிறான். லவன் குசர்கள் பிறந்து வளர்ந்து ராமர் முன்னிலையில் ராமகாதையை இசைத்த போது ஒருவர் கைது செய்யப்படுகிறான். பின்னர் அவனது சகோதரன் போய் அவனை விடுவிக்கிறான். இறுதியில் அயோத்திக்குப் போகுமாறு சீதையிடம் சொல்லுகின்றனர். அவள் மறுக்கவே ராமன் இரந்துவிட்டதாக பொய் சொல்லுகின்றனர். உடனே சீதை வருத்தப்பட்டு பாதாள லோகத் துக்குச் சென்று விடுகிறாள்.

(எனது கருத்து: புத்த ஜாதகக் கதைகளில் இந்தியாவின் பழைய கதைகளை எல்லாம் மாற்றி,  போதிசத்துவரின் பூர்வ ஜன்ம அவதாரங்கள் என்று திரித்துச் சொல்லுவர். அதிலுள்ள தசரத ஜாதகத்திலேயே ராமாயணக் கதையைத் திரித்து வைத்துள்ளனர். இதே கதை கம்போடியா சென்றவுடன் மேலும் கொஞ்சம் திரிக்கப்பட்டுவிட்டதில் வியப்பில்லை).

9.கம்போடிய க்மேர் இன மக்கள் இந்தியர்களைப் போலவே பனை ஓலைச் சுவடிகளில் எழுத்தாணி கொண்டு எழுதினர். இவை இப்பொழுது அரண்மனைகளிலும், புத்தமத மடாலயங்களிலும் உள்ளன. மிகப் பழமையான சுவடி பாட்டம்பாங் மடாலயத்தில் இருக்கிறது.

RIMG2587

தனஞ்ஜயன் கம்போடிய தெனாலி ராமன்

  1. இந்த இன மக்களுக்கு விடுகதை, புதிர்கள், புதினங்களில் மிகுந்த ஆர்வம் உண்டு. தனஞ்ஜயன் என்னும் ஒரு புத்திசாலிக் கதாபாத்திரத்தை வைத்து நூற்றுக்கணக்கான கதைகளை எழுதியுள்ளனர். இந்தக் கதைகள் அனைத்தும் தெனாலி ராமன் கதைகள் போலவே உள்ளன. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கதைகள் இவை என்பதற்கு தனஞ்ஜயன் என்ற சம்ஸ்கிருதப் பெயரே சான்று. விஜயநகரப் பேரரசன் கிருஷ்ணதேவராயனை எப்படி தெனாலிராமன் ஏமாற்றினானோ அப்படி சீனப் பேரரசனையும் தனஞ்ஜயன் ஏமாற்றி கம்போடியாவைக் காப்பாற்றியதாகவும் கதைகள் இருக்கின்றன.

ஒரே ஒரு மாதிரிக் கதை: சீன மன்னனிடம் தன்னிடம் இந்திரி என்ற அதிசயப் பறவை இருப்பதாகக் கூறி வெறும் காகிதத்தால் ஆன பட்டத்தைப் பறக்கவிட்டு பரிசு பெறுகிறான். சீன மன்னர் மூன்று கேள்விகள் கேட்பார். அதற்குத் திறமையாகப் பதில் சொல்லி கம்போடியா மீது படை எடுக்காமல் காப்பாற்றுகிறான்.

11.க்மேர் மொழி அகராதியில் நிறைய சம்ஸ்கிருதச் சொற்களும் பாலி மொழிச் சொற்களும் காணப்படுகின்றன.

கம்போடிய வரலாற்றைப் பல கட்டங்களாகப் பிரிக்கலாம்.

(1).அங்கோர் ராஜ்யத்துக்கு முந்தைய காலம் (கி.பி எட்டாம் நூற்றாண்டுக்கு முன்னர்)

(2). அங்கோர் அரசு காலம்- (கி.பி எட்டாம் நூற்றாண்டு முதல் 14 ஆம் நூற்றாண்டு வரையான காலம்)

(3).மத்திய காலம்- 16ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை.

இக் காலங்களிலும் இலக்கியம் கல்வெட்டுகளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட மொழிகள் சம்ஸ்கிருதமும் பாலியும் ஆகும்.

(4).நவீன காலம் – 19, 20 ஆம் நூற்றாண்டுகள்: சம்ஸ்கிருதம், பாலி, பிரெஞ்சு, தாய்(லாந்து) மொழி, ஆங்கிலம்

12.கல்வெட்டுகள் இந்தியாவிலுள்ள தமிழ், சம்ஸ்கிருதக் கல்வெட்டுகள் அமைப்பிலேயே பொறிக்கப்பட்டன. முதலில் மன்னரின் ஆட்சி ஆண்டு, பின்னர் கடவுள் வாழ்த்து, பின்னர் நன்கொடை கொடுத்தவர் பெயர், நில எல்லைகள், அது யாரிடமிருந்து பெறப்பட்டது, அதற்கான விலை என்ன, எந்த தர்ம ஸ்தாபனத்துக்கு தானம் செய்யப்படுகிறது, நிலத்துடன் அனுப்பப்பட்ட பணியாட்கள் எத்தனை பேர், அவர்களுடைய பெயர்கள் என்ன, சமய சம்பந்தப்படோருக்கு ஊதியம் என்ன, இறுதியில் கல்வெட்டில் கைவைப்பவர்களுக்குக் கிடைக்கும் தண்டனை, நரகங்களின் விவரம்.

இவைகளில் இந்துக் கடவுளர் மீதான துதிகளும், இறுதியில் தண்டனை விவரங்களும் எப்பொழுதும் சம்ஸ்கிருதத்திலேயே இருக்கும். மற்ற விவரங்கள் கலப்பு மொழியில் அல்லது க்மேர் மொழியில் இருக்கும்.

RIMG2822

13.பல கதைகளில் கஷ்டங்களைத் தீர்க்க உதவும் கடவுளாக இந்திரன் காட்டப்படுகிறான். மேலும் விக்ரமாதித்தன் கதை மாதிரியில் வழக்குகளைத் தீர்க்கும் புத்திசாலி மன்னரின் கதைகளும் தனி ஒரு நூலாகக் காணப்படுகிறது. ஒரே குழந்தையை இரண்டு தாய்மார்கள் தனது குழந்தை என்று உரிமை கொண்டாடவும் நீதிபதிகளும் திணறிப்போய் புத்திசாலி மன்னனிடம் அனுப்புகின்றனர். அவன் இந்தக் குழந்தையைக் கொன்று ஆளுக்குப் பாதி கொடுங்கள் என்று சொன்னவுடன் உண்மைத்தாய் வேண்டாம், வேண்டாம் என் குழந்தை எங்கிருந்தாலும் உயிருடன் வாழட்டும் என்பாள். உடனே அவளே உண்மைத் தாயார் என்று அறிந்து மன்னன் அவளிடம் குழந்தையைத்தர உத்தரவிடுவான். இந்தக் கதை பைபிளில் வரும் சாலமன் பெயரிலும் உள்ளது.

(எனது கருத்து: பிரம்ம, விஷ்ணு, சிவனுக்கு முந்தைய வேத காலக் கடவுளான இந்திரன் முன்னிலை வகிப்பது மிகப் பழங்கலத்திலேயே இந்திய செல்வாக்கு அங்கு பரவியதைக் காட்டுகிறது. அடுத்ததாக சாலமன் — குழந்தை கதை முதலியன இந்தியாவிலிருந்து சென்ற கதைகளே என்பதும் தெரிகிறது)

RIMG2853

தமிழ்ப் பெயர்கள்

14.தென் கிழக்காசிய நாடுகளின் எழுத்து (லிபி) முறை எல்லாம் பல்லவ கிரந்தத்தை அடிப்படையாகக் கொண்டவை. ஆக தென் இந்திய செல்வாக்கிற்கு இது ஒரு எடுத்துக் காட்டு. மேலும் கட்டிடக் கலையும் பல்லவர் காலக் கட்டிடக் கலையை அடிப்படையாக உடையது. அங்கிருந்து அவர்கள் தென் அமெரிக்கா வரை சென்று மாயா நாகரீகக் கட்டிடங்கலையும் இப்படி அமைத்தனர். மூன்றின் படங்களையும் அருகருகே வைத்துப் பார்த்தால் ஒற்றுமை நஙகு விளங்கும். மேலும் பிரம்மதத் என்ற மன்னைன் மனைவி சதுரங்கம் விளையாடும் ஒருவனுடன் ஓடிவிடவே அவளைப் பிடித்துக் கொண்டு வர அனுப்பிய தளபதியின் பெயர் கந்தன். இது தூய தமிழ்ப் பெயர். இதே நாட்டுப்புற கதைத் தொகுப்பில் காமராஜ், அருணராஜ், கிருஷ்ணகுமார் முதலிய பெயர்களும் வருகின்றன.

தெ.கி.ஆசிய நாடுகள் பற்றி இதுவரை ஆராய்ந்தவர்கள் எல்லோரும் சம்ஸ்கிருதக் கண் கொண்டு மட்டுமே ஆராய்ந்தனர். ஒரு தமிழர் அந்தக் கதைகளை ஆராய்ந்தால் தமிழின் செல்வாக்கு புலப்படும்

மேலும் கவுண்டின்யன் என்ற பார்ப்பனரும் தென் இந்தியப் பார்ப்பனரே. சைவத்துக்கு உயிர் கொடுத்த ஞானசம்பந்தப் பெருமானும் கவுண்டிய குலப் பார்ப்பனனே. புறநானூற்றிலும் ஏனைய சங்க இலக்கியப் பாடல்களிலும் பல கவுண்டின (கவுணியன்) கோத்ரப் பார்ப்பனர்கள் பாடல் இயற்றியுள்ளனர். ஆக இவர்கள் தமிழ் நாட்டில், குறிப்பாக சோழ நாட்டில் முன்னிலையில் நின்றது தெளிவாகிறது.

RIMG2493 - Copy

15.பெண்களின் பெயர்கள் அழகிய சம்ஸ்கிருதப் பெயர்களாக உள்ளன. சங்க காலம் முதலே தமிழ் நாட்டிலும் இதைக் காண்கிறோம். திலகவதி, புனிதவதி, காமக்கண்ணி (காமாட்சி), நப்பசலை (சுபர்ணா), கண்ணகி (லோசனா) முதலிய பல பெயர்கள் காணக்கிடக்கின்றன. சங்க காலப் பெயர்களில் ஆண், பெண் பெயர்களுக்கு முன்னுள்ள முன்னொட்டு ந—என்பது, சம்ஸ்கிருதத்தில் சு – என்று வரும். இரண்டும் நல்ல, நன்மை எனப் பொருள்படும் (நக்கீரன், நக்கண்ணன், நப்பசலை, நச்செள்ளை. இப்படி முன்னொட்டுச் சேர்ப்பது வடமொழியின் சிறப்பு)

கம்போடியாவில் வசந்த மல்லிகா, தனவாங்கி, சகி ப்ரியா முதலிய பெண்கள் பெயர்கள் குறிப்பிடத்தக்கவை. பொதுவாக கலைத்துறை, அரசாங்கத் துறைப் பெயர்கள் எல்லாம் சம்ஸ்கிருதப் பெயர்களே. படித்த மக்கள் அனைவரும் அரசாங்கத்தில் சம்ஸ்கிருத மொழியை பயன்படுத்தினர். 1500 ஆண்டுகளுக்கு அங்கே சம்ஸ்க்ருதம் கொடிகட்டிப பறந்ததை தெ.கி. ஆசிய நாடுகளின் வரலாற்றைப் படிப்போர் தெள்ளிதின் உணர்வர்.

கம்போடிய நாட்டுப்புற கதைகளை ஒப்பிட்டு ஆராய்வது தமிழின் செல்வாக்கை அறிய உதவும் என்பது கருத்து.

RIMG2571 - Copy

சுபம்-

ரிக் வேதத்தில் பத்து ராஜா யுத்தம் !

fdabc-om2bdeepam

ஆராய்ச்சிக் கட்டுரை எண்: 1905

எழுதியவர்- லண்டன் சுவாமிநாதன்

தேதி: 2 ஜூன் 2015

லண்டன் நேரம்: காலை 10-58

உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் ஒரு முக்கியமான வரலாற்று விஷயம் இருக்கிறது. மஹாபாரத யுத்தம்தான் உலகில் முதல் முதலில் அதிக நாடுகள் கலந்து கொண்ட யுத்தம். அந்தப் போரில் 29 நாடுகள் கலந்து கொண்டன. ஆனால் அதற்கும் முன்னதாக ஒரு பெரிய யுத்தம் நடந்தது. அதை வேதத்தை மொழி பெயர்த்த 20 வெளிநாட்டு “அறிஞர்கள்” மூடி மறைத்துவிட்டனர். ஆனால் இது பற்றி ரிக்வேதத்தில் நிறைய இடங்களில் வருகிறது.

எப்படி அர்ஜுனனும், கிருஷ்ணனும் காண்டவ வனத்தை எரித்தவுடன் மய தானவன் தலைமையில் ஒரு பெரிய அணி தென் அமெரிக்காவிலுள்ள பல இடங்களுக்குச் சென்று மாயா நாகரீகத்தைத் துவக்கினார்களோ அதே போல பத்து ராஜா யுத்தத்துக்குப் பிறகு நம்மவர்கள் ஈரான், கிரீஸ் வரை சென்று நாகரீகத்தைப் பரப்பினர். காண்டவ வனம் எரிப்புக்குப் பின்னர் , பாரதத்திலேயே தங்கியோர் கோண்டு இன மலைஜாதி மக்கள் ஆவர். அவர்கள் இருக்கும் இடம் கோண்டுவானா பிரதேசம் என்று இன்றும் அழைக்கப்படுகிறது. கோண்ட் பழங்குடிகளின் பெயர், கோண்ட்வானா (காண்டவ வனா) பிரதேசம் ஆகியன எல்லாம் காண்டவ வனம் என்னும் சொல்லிலிருந்து வந்தது என்பது கூட பலருக்குத் தெரியாது.

தச ராக்ஞ யுத்தம்

ராஜா என்ற சொல் இன்று வரை இமயம் முதல் இலங்கையின் தென் கோடி வரை எல்லா மொழிகளிலும் வழங்கிவருகிறது. தமிழில் “ர” என்ற எழுத்தில் சொற்கள் துவங்கக் கூடாது என்று தொல்காப்பியர் தடை போட்டதால் ராஜாவை “அரசன்” என்று ஆக்கி சங்க காலம் முதல் தமிழர்களும் சம்ஸ்கிருதச் சொல்லைப் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் வேத காலத்தில் பத்து அரசர்கள் இருந்ததாகச் சொன்னால் தங்களுடைய ஆரிய-திராவிட இனவெறிக் கொள்கை எல்லாம் தவிடு பொடியாகி விடும் என்று பயந்து பத்துப் பேரும் பழங்குடி இனக் குழுக்களின் தலைவர்கள் என்று வெளிநாட்டினர் முத்திரை குத்தி இதை அடியோடு மறைத்துவிட்டனர். இந்திய வரலாறு படித்த எவருக்கும் வேதத்தில் ஏராளமான இடங்களில் இந்த பத்து ராஜா யுத்தம் வருவதும் அவர்கள் கிரேக்கம் வரை சென்று நாகரீகத்தை நிறுவியதும் தெரியாது.

ad4fe-lamp2bsara2bvilakku

எல்லோரும் கால்டுவெல் பாதிரியார் சொன்னமாதிரி தமிழர்கள், வடமேற்கு திசையிலிருந்து (துருக்கி) இந்தியாவில் புகுந்தனர், மாக்ஸ் முல்லர் சொன்ன மாதிரி ஆரியர்கள் மத்திய ஆசியாவில் இருந்து இந்தியாவுக்குள் புகுந்தனர் என்று எண்ணி ஏமாந்திருந்தனர். இளிச்சவாயனைக் கண்டால் எருதும் மச்சான் முறை கொண்டாடும் – என்பது தமிழ்ப் பழமொழி. இங்கிலாந்தில் ரவுடி என்று பெயர் எடுத்து தற்கொலை செய்துகொள்ளப் போன ராபர்ட் கிளைவ் இங்கு கைப்பிடி ஆட்களுடன் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையே நிறுவியவுடன் இந்துக்கள் ஒற்றுமையற்ற நெல்லிக்காய் மூட்டை என்றும் இளிச்சவாயர்கள் என்றும் கண்டு கொண்டனர். ஆக 20 வெளிநாட்டு “அறிஞர்களும்’ மனம் போன போக்கில் வேதத்தை மொழி பெயர்த்தனர். நம்மவர்களுக்கோ தமிழும் தெரியாது, சம்ஸ்கிருதமும் தெரியாது. ஆங்கிலமும் தெரியாது. ஆக ஆங்கிலத்தில் எதையும் எதிர்த்து எழுதவில்லை.

ஆங்கிலத்தில் இரண்டு கடிகாரங்கள் எப்பொழுதும் ஒரே நேரத்தைக் காட்டாது – என்று ஒரு பழமொழி உண்டு. அது போல இரண்டு வெள்ளைக்காரர்கள் வேதம் பற்றி ஒரே மொழி பெயர்ப்பை வெளியிடவில்ல. ஆயினும் வெள்ளைத் தோல் அறிஞர்கள் அனைவரும் ஒப்புக் கொண்ட விஷயம் வடக்கத்தியானும் தமிழனும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களே என்று.

மேலும் உலகம் கி.மு4004ல் அக்டோபர் 23ம் தேதி காலை ஒன்பது மணிக்குக் கடவுளால் படைக்கப்பட்டது என்று பைபிள் பிரசாரகர்கள் உரத்த குரலில் பிரசாரம் செய்வதை இவர்கள் மனதார நம்பினர். ஆகையால் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களைக் குறைகூறி ஒரு வரி கூட எழுதவில்லை. இத்தனை வெளிநாட்டோர் வேதங்களை அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்தும் மற்ற மதங்களைத் தொடவே இல்லை.

கிரேக்கர்கள்தான் நாகரீகத்தின் சிகரத்தைத் தொட்டவர்கள் என்று அவர்களை இந்திரனே சந்திரனே என்று புகழ்ந்து தள்ளினர். ஏனெனில் கிரேக்க நாட்டை இவர்கள் அடிமைப் படுத்த முடியவில்லை.

இதுமட்டுமின்றி இந்தியர்களை மட்டமும் தட்டினர். எகிப்தியர்களுக்கு கி.மு.3100 முதல் அரசர்கள் உண்டு

சுமேரியர்களுக்கு கி.மு.3100 முதல் அரசர்கள் உண்டு

சீனர்களுக்கு கி.மு.3100 முதல் அரசர்கள் உண்டு

மாயா இனத்தினருக்கு கி.மு.3100 முதல் அரசர்கள் உண்டு. ஆனால் இந்தியாவில் மட்டும் புத்தர் காலத்துக்குப் பின்னர்தான் (கி.மு.600) அரசர்கள் உண்டு. சிந்து சமவெளி நாகரீகத்தில் கூடக் கிடையாது என்று புத்தகம் எழுதினர். அதை இன்று வரை நாம் படித்துக் கொண்டும் இருக்கிறோம். அவர்களுக்குத் தெரியும் இது சுய மரியாதை கெட்ட இனம். அப்படி சுயமரியாதையுடன் யாராவது குரல் கொடுத்தால், 2 திராவிடங்களையும் மார்க்சிஸ்டுகளையும் காசு கொடுத்து ஏவி விடலாம் என்று.

வெள்ளைக்காரன் சதி இன்றும் நடக்கிறது. யாராவது இந்துமததை எதிர்த்து கதை எழுதினால் அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டு அவனுடைய வங்கிக் கணக்கில் ஒரு மில்லியன் டாலரைப் ‘பம்ப்’ செய்வர். ஏதேனும் புறச்சூழல் பற்றி கிளர்ச்சிகளைத் தூண்டிவிட்டு அவர்களுக்கு நிதி உதவி செய்வர். இதை எல்லாம் லண்டனில் உடகார்ந்து கொண்டு பார்க்கையில் தெளிவாகக் காண முடிகிறது.வெறும் திகிடுதத்தங் களையும், புறம்போக்குகளையும் திரைக்குப் பின்னால் இருந்து இயக்குவர்.

44971-deepa2bmangala

இப்பொழுது பத்து ராஜா யுத்தத்துக்கு வருவோம்:

சுதாஸ் என்று ஒரு மன்னன் இருந்தான். அவன் பரத ராஜ்யத்தை ஆண்டு வந்தான் அவனுக்கு விஸ்வாமித்ரர் குல குரு. அவரது ஆலோசனையில் படை எடுத்துச் சென்று விபாஸ், சுதுத்ரி நதிக்கரைகளில் சில அரசர்களை வென்றான். பின்னர் விஸ்வாமித்ரருடன் கருத்து வேறுபாடு ஏற்படவே அவரைப் பதவி நீக்கம் செய்துவிட்டு வசிஷ்டரை குல குருவாக நியமித்தான். இதனால் வசிட்டர்-விசுவாமித்திரர் இடையே நிரந்தரப் பகைமை ஏற்பட்டது.

விசுவாமித்திரர், பத்து ராஜ்யங்களின் அரசர்களைக் கூட்டிக் கொண்டு வந்து சுதாஸைத் தாக்கினார். ஆனால் அந்தப் பத்துப் பேரையும் சுதாஸ், மண்ணைக் கவ்வ வைத்தான். வந்த பத்து அரசர்களில் இரண்டு பேர் நதியில் மூழ்கி இறந்தனர். மற்றொருவர் போர்க்களத்தில் வீர மரணம் அடைந்தார். ஏனையோர் ஓடிப்போனார்கள் என்று சொல்லத் தேவை இல்லை. இது பாருஸ்னி நதிக் கரையில் நடந்தது.

இதற்குப் பின்னர் மேலும் மூவர் அவருடன் யமுனைக் கரையில் மோதினான். அவர்களுக்கும் அதே கதி—அதாவது சகதி!

சுதாசுடன் மோதிய பத்து ராஜாக்கள்: புரு, யது, துர்வாச, அனு, த்ருஹ்யு, பலனஸ், அலின, பக்து, சிவா, விஸ்வானின்

இவர்களை நான் அரசர்கள் என்று சொல்லுவதற்குக் காரணம் என்ன?

1.வேதத்தின் பழைய பகுதிலேயே கங்கைச் சமவெளி பற்றி பாடப் பட்டுள்ளது. கங்கை முதல் ஈரான் வரை பரவியிருந்த உலகின் அப்போதைய மிகப் பெரிய நாட்டில் பல ராஜாக்கள் இருப்பது இயல்பே. இதே போல பாபிலோனியாவில் ஒரே நேரத்தில் ஆறு ஏழு ராஜ்யங்கள் இருந்ததைக் காண்கிறாம். கிரேக்க நாட்டில் ஒவ்வொரு நகரமும் ஒரு நாடு. சுதாஸ் காலத்திலேயே யமுனைக் கரையிலும் ஒரு போர் நிகழ்ந்தது.

2.ரிக் வேததை அடுத்துள்ள வேதங்களிலேயே அஸ்வமேத யக்ஞம் பற்றி வருகிறது. இது சிறு பிள்ளை விளையாடும் அம்மா, அப்பா விளையாட்டல்ல. மாபெரும் சாம்ராஜ்யங்களை உருவாக்க பக்கத்து நாடுகளில் குதிரையை உலவவிட்டு அதை எல்லாம் வென்ற கதை இது. அப்படிச் செய்த மன்னர்களின் பட்டியல் சதபத பிராமணத்தில் உள்ளது.

  1. மேலும் புத்தர் காலத்திலேயே 16 பெரிய நாடுகள் இருந்தது உறுதியாகத் தெரிகிறது. மாபாரதக் கதையில் 29 நாடுகள் வருகின்றன. இவை எல்லாம் ஓரிரவில் ஆகாசத்திலுந்து குதிக்க முதியாது.
  1. இதை விட பெரிய சான்று ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் சபா, சமிதி என்ற் அமைப்புகளில் உள்ளன. ரிக் வேத சபை என்ற சம்ஸ்கிருதச் சொல்லை இன்றுகூட தமிழர்கள் அவை என்று பயன்படுத்துகிறோம். ச என்னும் எழுத்தை தமிழர்கள் பயன்படுத்தக் கூடாது என்று தொல்காப்பியர் தடை போட்டதால் சபை என்பதை அவை என்று மாற்றிக் கொண்டோம். சமிதி என்பது இன்றும் ஆங்கிலத்தில் கமிட்டி என்ற பெயரில் புழங்குகிறது. இந்த இரண்டு சபைகளும் அரசனுக்கு ஆலோசனை வழங்கியது வேதங்களில் வருகிறது. உலகின் முதல் ஜனநாயக அமைப்பு இவைதான். ஆக வேத காலத்திலேயே அரசன் இருந்தது மட்டும் அல்ல. அரசனுக்கு ஆலோசனை வழங்கும் பொது மக்கள் அமைப்பும் இருந்தன. இந்த விஷயம் எல்லாம் ஆரிய-திராவிட இனவெறிக் கொள்கையைப் பரப்புவோர் வயிற்றில் புளி கரைத்தது. ஆக பத்து ராஜா யுத்தம் சின்னப் பயல்கள் சண்டை என்று எழுதிவிட்டனர்.

பத்துராஜா யுத்தத்துக்குப் பின்னர் பேட என்ற மன்னன் தலைமையில் அஜஸ், சிக்ருஸ், யக்சுஸ் ஆகிய மூன்று நாட்டு மன்னர்கள் சுதாசைத் தாக்கி தோல்வி கண்டனர்.

5c3af-lamp2bdeepa

இதில் யக்சுஸ் எனப்படும் யக்ஷர்கள் கி.மு 1800 ல் எகிப்தைத் தாக்கி நீண்ட காலம் எகிப்தை ஆண்டனர். அவர்கள்தான் முதல் முதலில் எகிப்தில் குதிரைகளைப் போரில் பயன்படுத்தி எகிப்தியர்களுக்கும் குதிரைப் படை பற்றி கற்றுத்தந்தனர். த்ருஹ்யூ எற நாட்டில் இருந்து சென்றோர் ட்ரூய்ட்ஸ் என்ற பெயரில் ஐரோப்பா முழுவதும் சூரிய வழிபாட்டைப் பரப்பினர்.

முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்கமுடியுமா? இப்பொழுது ஸ்ரீகாந்த் தலகரி போன்ற அறிஞர்கள் வெளி நாட்டு அறிஞர்களைச் சமைத்து புளிக்கறி வைக்கின்றனர். அது என்ன? தலகரி செய்யும் புளிக்கறி? ஆக உலகம் முழுதும் வேத கால நாகரீகத்தைப் பரப்பிய புகழ் இந்த பத்து நாட்டு மக்களியே சேரும்.

ப்ருதுஸ் அல்லது பார்த்தவாஸ்

பரசுஸ் அல்லது பார்ஸ்வாஸ்

பக்தஸ், பக்தூன்ஸ்

பலனாஸ்/பலூசிஸ்

சிவாஸ் (சிபி முதலியோர்/சோழர்களின் மூதாதையர்)

விசானின்ஸ்/பைசாசாஸ்

சிம்யூஸ்/ அல்பேனியார்கள்

அலைனஸ்- ஹெல்லனீஸ்/ கிரேக்கர்

ப்ருகுஸ்- துருக்கியர்.

ஒரு நாட்டு மக்கள் அந்த நாட்டின் பெயரால் அழைக்கப்படுவது தொன்றுதொட்டு இருந்து வரும் பழக்கம். சோழ நாட்டு பிராமணர்கள் சோழியா என்றும் குஜராத்துக்குப் பாண்டிய நாட்டிலிருந்து சென்ற பிராமணர் பாண்டியா என்றும், தெலுங்கு தேசத்தில் இருந்து சென்றோர் தில்லான் (த்ரிலிங்க தேச=தில்லன்) என்றும், சரஸ்வதி நதிதீரத்தில் இருந்து சென்றவர்கள் சாரஸ்வத பிராமணர் என்றும், திராவிட (தென்) பகுதிலிருந்து சென்றவர்கள் திராவிட் என்றும் அழைக்கப்படுகின்றனர். இவை இனப் பெயர்கள் இல்லை; நாட்டின் பெயர்கள்.

Prthus or Parthavas (RV 7-83-1) Parthians

Parsus or Parsvas (7-83-1) Persians

Pakthas (7-18-7) Paktoons

Bhalanas (7-18-7) Baluchis

Sivas (7-18-7) Kivas

Visanins  (7-18-7) Pisachas/Dards

Simyus (718-5) Sarmatians(ancient Albanians)

Alinas (7-18-7) Alans /Hellennes/ Ancient Greeks

Bhrgus (7-18-6) Phyrgians

ஆக வெள்ளைக்காரன் எழுதியதெல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய்விட்டன.

இந்தப் பூவுலகில் யாராலும் வேதங்களின் காலத்தை சொல்லமுடியாது: மாக்ஸ்முல்லர்

சிந்துவெளி ஆண் மிருகங்கள்

சிந்து வெளி முத்திரைகளில்,  ஆண் மிருகங்களின்  ஆதிக்கம்

Compiled by London swaminathan

Article No.1902; Dated 1 June 2015.

Uploaded at London time: 9-23 am

தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும்

சூழ்கலை வாணர்களும் — இவள்

என்று பிறந்தவள் என்றுணராத

இயல்பினளாம் எங்கள் தாய்.

 

நாவினில் வேதம் உடையவள் கையில்

நலந்திகழ் வாளுடையாள் – தனை

மேவினர்க்கு இன்னருள் செய்பவள் தீயரை

வீழ்த்திடும் தோளுடையாள். –பாரதியார்

 

பாரத அன்னையைப் புகழ்ந்த பாரதியார், உடனே அவள் நாவினில் வேதம் உடையவள் என்று சொல்லி, பாரதம் எவ்வளவு பழமையானதோ, அவ்வளவு பழமையானது வேதமும் என்பதை உறுதிபடக் கூறுகிறார்.

எக்காலத்தும் இந்தியாவுக்கே வராமல், இங்கிலாந்தில் இருந்துகொண்டே வேதத்தை மொழிபெயர்த்த ஜெர்மானியர் மாக்ஸ் முல்லர், வேதங்களின் காலம் கி.மு.1200–க்கு முன்னதாக இருக்கலாம் என்று சொன்னார். உடனே அதை எதிர்த்து அறிஞர் உலகம் போர்க்கொடி உயர்த்தியது. இப்படி போர்க்கொடி உயர்த்தியவர்களும் மேலை நாட்டவரே! வில்சன், பார்த்தலேமி, செயின்ட் ஹில்லேர், விட்னி, கோல்ட்ஸ்டக்கர் (Wilson, Barthelemy, St.Hillaire, Whitney, Goldstucker)

போன்றோர் மாக்ஸ் முல்லர் கருத்தை ஏற்கவில்லை. உடனே மாக்ஸ்முல்லர் ஜகா வாங்கினார். அறிஞர்கள் அனைவர் சொல்லுவதையும் நான் அப்படியே ஏற்கிறேன். நான் கி.மு.1200–க்கும் கீழாக யாரும் வேதத்தைக் கொண்டுவரக்கூடாது என்று சொன்னேனே தவிர, அதுதான் வேதத்தின் காலம் என்று சொல்லவில்லை என்றார்.

ரிக் வேதத்தில் இருக்கும்  வான சாத்திரக் குறிப்புகளைக் கொண்டு, மாக்ஸ் முல்லருக்கு நீண்ட நெடுங்காலம் முன்னரே ஆராய்ச்சி மேற்கொண்ட, இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் திலகரும், ஜெர்மன் அறிஞர் ஜாகோபியும் (Tilak 1904, Jacobi 1894) வேத காலத்தை கி. மு 4000 என்று காட்டினர்.

17ef9-vedapatam

Max Muller:–

I need hardly say that I agree with every word of my critics. I have repeatedly dwelt on the hypothetical character of the dates., which I ventured to assign to the first periods of Vedic literature; all I have claimed for them has been that they are the minimum dates………………

If now we ask how we can fix the dates of these three periods, it is quite clear that we cannot hope to fix a terminum a qua. Whether the Vedic hymns were composed 1000 or  1500 or  2000 or 3000 years BC, NO POWER ON EARTH WILL EVER DETERMINE” (Max Muller 1890)

ஆனால் ஆரிய-திராவிட இனவெறிக் கொள்கையைப் பின்பற்றுவோர், ஆரியர்கள் வந்து, கறுப்புத் தோலுடைய பூர்வ குடிமக்களை விரட்டி விட்டதாக நீண்ட நெடுங்காலமாகப் பிரசாரம் செய்துவந்தனர். இந்தப் பிரசாரம் 200 வருடங்கள் நடந்தபின்னர் 1920 ஆம் ஆண்டுக்குப் பின், சிந்து வெளியில் இரண்டு நகரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. “வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது”. பார்த்தீர்களா, நாங்கள் அன்றே சொன்னோம். ஆரியர்கள் வந்து இந்த மக்களை விரட்டினார்கள் என்று. இது உண்மையானது என்பதற்கு சான்று கிடைத்துவிட்டது என்றனர். ஆக மீண்டும் எல்லோரும் வேதத்தின் காலம் கி.மு. 1200 என்று எழுதத் துவங்கினர். இப்பொழுது இது எல்லாம் பொய்யாய் பழங்கதையாய்ப் போய்விட்டது.

காரணம்?

சிந்து சமவெளியில் ஒரு திராவிடர் எலும்புக்கூடு கூட கிடைக்கவில்லை! கிடைத்தது எல்லாம் ஆரிய எலும்புக்கூடுகளே. அதுவரை ஆகாசத்துக்கும் பூமிக்கும் குதித்தவர்கள் எலும்புக்கூடு விஷயத்தில் கப்புச்சிப்பு என்று வாய் மூடி மௌனம் ஆகிவிட்டனர். கிடைத்த எலும்புக்கூடுகள் எல்லாம் பஞ்சாபியரை போல அந்த இடத்து மக்களின் உடல் ஆகிருதி உடையவர்கள். வேறு சிலவும் உண்டு. ஆனால் திராவிடம் இல்லை. கிடைத்த எலும்புக்கூடுகளும் மிகச் சில. ஆரியர்கள் படுகொலை நடத்தியிருந்தால். பல்லாயிரம் திராவிட எலும்புக்கூடுகள் இருக்க வேண்டுமே என்று யாரவது ஒரு சிலர் கேட்டு விடப் போகிறார்களே என்று எண்ணி, திராவிடர்கள், பயந்துகொண்டு 3000 மைல்களுக்கு ஓடிப் போய் தமிழ் நாட்டில் உகார்ந்து கொண்டனர் என்று சொல்லி திராவிடர்களுக்கு அதி பயங்கரக் கோழை என்று பட்டமும் சூட்டினர்.

சிந்து சமவெளிப் பகுதியில் ஆராய்சி நடத்திய ஜான் மார்ஷல் போன்றவர்களை ஆராய்ச்சியாளர்கள் என்று சொல்லுவதா, மதப் பிரசாரகர்கள் என்று சொல்லுவதா என்று கூட எண்ணத் தோன்றுகிறது ஆராய்ச்சியாளர்கள் யாரும் 30 எலும்புக்கூடுகளைப் பார்த்துவிட்டு இந்திரன் குற்றவாளி என்று சொல்லமாட்டார்கள். ஒரு ஆரய்ச்சியளனுக்குள்ள மனப் பக்குவம் இல்லாத இனவெறியன் என்பது இதன் மூலம் சொல்லாமலே விளங்கும்!

vedic fire altar.chattisgarh

வேத யாக குண்டம், சட்டிஷ்கர்

மேலும் இப்பொழுது சிந்துவெளி முத்திரைகளில் காணப்படும் மர்மச் சின்னம் சோம ரசம் வடிகட்டும் பாத்திரம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக் கொள்கின்றனர். இதுவரை சிறிதும் பெரிதுமாக 2000 சிந்து வெளி நகர, கிராமங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. மேலும் சரஸ்வதி நதியின் காலமும் அது மறைந்த காலமும் தெரிந்துவிட்டதால், வேதங்களின் பழமையும் குறைந்தது கி.மு 1700 என்று இந்துமத எதிரிகளும் ஒப்புக்கொள்ளத் துவங்கி விட்டனர்.

மொஹஞ்சதாரோ ஹரப்பாவில் பெரிய அகலமான மதில் சுவர்கள் கி.மு 2000 வாக்கிலேயே உள்ளன. இவர்கள் யாரைக் கண்டு பயந்து கி.மு 2000 வாக்கில் அவ்வளவு பெரிய மதில் சுவர்களை எழுப்பினர்? ஒரு வேளை சேர, சோழ, பாண்டியர்கள் 1800 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து மோதிக் கொண்டது போல ஹரப்பாவும், மொஹஞ்சதாரோவும் சண்டை போட்டார்களா?

மேலும் காலிபங்கன், லோதல், டோலவீரா முதலிய பல இடங்களில் யாக குண்டங்கள், கருகிய ஹோம சாம்பல் ஆகியனவும் கிடைத்திருக்கின்றன.

எல்லா இடங்களிலும் ஏன் முத்திரைகள் கிடைக்கவில்லை? கிடைத்த எல்லா முத்திரைகளிலும் மிருகங்களின் ஆண் வகை மட்டும் காணப்படுகிறதே? இவர்கள் பெண்களை எதிர்க்கும் அல்லது மட்டம் தட்டும் கும்பலா? ஆயிரத்துக்கும் அதிகமான சின்னங்களில் காளைச் சின்னத்தைப் பொறித்த மக்கள் ஏன் பசுமாட்டைப் பொறிக்கவில்லை? ஒருவேளை புனிதச் சின்னம் என்பதால் பசுவை விட்டு விட்டனரா? குதிரை எலும்புகள் கிடைத்தபோது மட்டும் அது மேல் மட்டத்தில் கிடைத்தது என்று சொல்லிவிட்டு, முழு ஒட்டக எலும்புக்கூடு கிடைதது பற்றி மௌனம் சாதிப்பது ஏன்? இப்படிப் பல கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கின்றன.

ஒட்டுமொத்த முடிவுரை:

1அங்கு வாழ்ந்தவர்கள் ஆரியர்களும் இல்லை, திராவிடர்களும் இல்லை. வேதகால இந்துக்கள்.

2.அவர்களில் இப்பொழுது இந்து மதத்தில் இருப்பது போலவே பலதரப்பட்ட மக்கள் இருந்தனர். சிலர் கிராமதேவதைகளை வழிபடுவது போல பெண் தெய்வங்களையும் மற்றும் பலர் ஆண் தெய்வங்களையும் வணங்கினர்.

3.ஒர்புறம் கந்தர்வர்கள் ஆதிக்கம் இருந்ததால் இசை, நடனம் ஆகியன வளர்ந்தன.

4.உலகிலுள்ள எல்லா பழைய நாகரீகங்களிலும் பெரிய கோவில்கள்/ வழிபாட்டு இடங்கள் இருக்கின்றன. ஆனால் சிந்து வெளியில் அப்படி இல்லை. ஆகவே அது வேத காலத்தை ஒட்டிய– பெரிய கோவில்கள் இல்லாத நாகரீகமே

5.ஹரப்பா நகரத்தில் பல இன மக்கள் வசித்தது குறித்து 2013-ல் நேஷனல் ஜியாக்ரபிக் மேகஸின் ஒரு ஆரய்ச்சிக் கட்டுரையையும் வெளியிட்டு இருக்கிறது.

பழங்கால இலக்கியங்களில் பாராசூட், மலை ஏறும் கருவிகள்

para7

Compiled by London Swaminathan

Article No.1898; Dated 30 May 2015.

Uploaded at London time 7-16 am

 

ஆல்பர்ட் ரைட், வில்பர் ரைட் ஆகிய இருவரும் அமெரிக்காவில் விமானத்தைப் பறக்க விடுவதற்கு முன்னால் நம்மவர் பம்பாயிலிருந்து விமானங்களைப் பறக்கவிட்டது பற்றி இந்த பிளாக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ச.நாகராஜன் எழுதிய கட்டுரை வெளியானது. அதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஒருவர் விஞ்ஞான மாநாட்டு துவக்க உரையில் அதைக் குறிப்பிட்டவுடன் எல்லாப் பத்திரிக்கைகளிலும் அது ஏதோ புதிய செய்தி போல வெளியானது.

இது போல ராமன் விமானம் அயோத்திக்குப் பறந்தது எப்படி? என்பதை நான் லண்டன் விஞ்ஞான சஞ்சிகைக் கட்டுரை அடிப்படையில் எழுதினேன். இதுவும் ஒரு காலத்தில் பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தியாக வரலாம். பிரம்மாஸ்திரம் என்பது அணு ஆயுதம் என்று 2005 ஆம் ஆண்டில் லண்டன் சவுத் இந்தியன் சொசைட்டி (south Indian Society)  மலரில் எழுதி, பின்னர் இந்த பிளாக்கில் 2011ல் வெளியான கட்டுரையையும் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். மிக்க மகிழ்ச்சி.

இங்கே, ஆரிய தரங்கிணி (Arya Tarangini by A Kalyanaraman) என்ற ஆராய்ச்சி நூலை எழுதிய ஏ.கல்யாணராமன் கண்டுபிடித்த ஒரு விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை. இப்பொழுது மிகவும் சர்வ சாதாரணமாகிவிட்ட பாராசூட், மலையேறும் கருவிகள் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டதை சம்ஸ்கிருத ,பாலி மொழி நுல்களில் காண முடியும்.

அந்தக் காலத்தில் கதைகள் எழுதுவதிலும் நம்மவரே முதலில் நின்றனர். இப்பொழுது சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், ஹாரி பாட்டர், (Superman, Spiderman, Harry potter) இதற்கும் முந்தைய அராபிய இரவுக் கதைகள், கல்லிவரின் லில்லிபுட் பயணம், பேய்க்கதைகள், ஈசாப் கதைகள், ஏசு சொன்ன உபமானக் கதைகள் ஆகியன எல்லாம் நம்மவர் எழுதிய நூல்களில் இருந்து சென்றவையே என்றும் முன்னரே காட்டியுள்ளேன்.

பாணினி என்பவர் உலகின் முதலாவது இலக்கணப் புத்தகத்தை 2700 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதினார். அவருக்கு 200 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த காத்தியாயனர் என்பவர் வார்த்திகா என்ற விளக்க உரை எழுதினார். அதில் பலவகையான பாதைகள் குறிப்பிடப்படுகின்றன:-

elephant ride

வாரிபத= கடல் வழி (கப்பல் போக்குவரத்து)

கரிபத= யானைப் பாதை

அஜபத=ஆட்டுப் பாதை (ஆடு செல்லும் ஒற்றையடி பாதை)

சங்குபத=மலை ஏறுதல் (மலை ஏறும் கருவிகளைப் பயன்படுத்தி)

ஹம்சபத= வான் வழி (உ.ம். ராமர், குபேரர், ராவணன், உபரிசாரன்)

தேவபத= விண்வெளிப் பயணம் (உ.ம்.நாரதர், மாதலி).

சம்ஸ்கிருதச் சொல்லான ‘பத’ என்பதில் இருந்தே ஆங்கிலச் சொல்லான Path பாத், தமிழ்ச் சொல்லான பாதை என்பன வந்தன.

பழங்காலத்தில் நம்மவர்கள் போக்குவரத்தில் மிகவும் முன்னேறி இருந்ததை பல நிகழ்ச்சிகள் காட்டுகின்றன. கிருஷ்ணனும் பலராமனும் அடிக்கடி உத்தரப் பிரதேச மதுரா நகரிலிருந்து குஜராத் கடற்கரை ஓரமுள்ள துவாரகாவுக்கு வந்து சென்றார்கள். பரதன் கேகய (Afghan) நாட்டிலிருந்து அயோத்திக்கு வந்து போனான். ராவணனும் அவனது உறவினர்களும் கோதாவரி பிராந்தியத்தில் வந்து விளையாடிச் சென்றார்கள், இமயமலை வரை சென்று அவன் கயிலாயத்தையே ஆட்டப் பார்த்தான்.

பருவக் காற்று ரகசியங்கள் இந்துக்களுக்குத் தெரியுமாதலால் ஒரே வாரத்தில் இலங்கையிலிருந்து மேற்கு வங்க மாநிலத்துக்கு வந்து கங்கை நதி வழியாக இமய மலை வரை சென்றனர். இதை ருசுப்பிக்கும் செய்திகள் மஹாவம்சத்தில் உள்ளன. மேலும் கரிகால் சோழனின் முன்னோர்கள் பருவக் காற்றைப் பயன்படுத்தியதைப் புறநனூறு குறிப்பிட்டுச் சொல்கிறது. இந்தப் பின்னணியில் பார்த்தால் எந்தச் செய்தியும் வியப்பை ஏற்படுத்தாது.

பாலி மொழி “நித்தேச”, சம்ஸ்கிருத பிருஹத் கதா, புத்த ஜாதகக் கதைகள் முதலியன பல வீர தீரக் கதைகளைச் சொல்லுகின்றன. சௌதாச என்பவன் அசேர என்னும் மன்னனுடன் கடல் வழிப் பயணம் மேற்கொள்கிறான். சுவர்ணபூமிக்குச் சென்று தங்கம் கொண்டுவர அவர்கள் புறப்பட்டனர். அவர்கள் போன பாதைகள் பின்வருமாறு:–

chola-flag-2

வாரி பத; கடல் பயணம்

வேத்ர பத: டார்ஜான் படத்தில் பார்ப்பது போல மரத்தில் இருந்து தொங்கும் ராட்சதக் கொடிகளைப் பிடித்துக் கொண்டு பாறைக்குப் பாறை அல்லது மரத்துக்கு மரம் தாவிச்சென்றனர்.

வம்ச பத: காட்டுவழியில் மூங்கில் கழிகளைப் பயன் படுத்திச் செல்லுதல்

சங்கு பத: மலை ஏறுதல். ஒரு தோலில் ஆன கயிற்றில் கொக்கியை மாட்டி மலை மேல் வீசுதல். அது மாட்டிக் கொண்டவுடன் அதைப் பிடித்து மலை ஏறுதல். அங்கு வைர ஊசியால் துளை செய்து ஒரு ஈட்டியை நட்டு மீண்டும் தோல் கயிற்றை மேலே எறிந்து மேலும் மேலும் சென்றனர்.

பாராசூட் (சாத்ர பத)

அஜ பத:- மலையில் கிராதர்கள் எனப்படும் வேட்டுவ இன மக்களிடம் ஆடுகலை விலைக்கு வாங்கி அதன் மீது மலைகளில் ஒற்றையடிப் பாதையில் பயணம் செய்தனர்.

பின்னர் பள்ளத்தாக்குகளைக் கடப்பதற்காக அந்த ஆடுகளைக் கொன்று ரத்தம் படிந்த தோலை மேலே போர்த்திக் கொண்டனர்.

சகுனபத (பறவைப் பாத): உடனே ராட்சதக் கழுகுகள், ஆட்டுத்தோல் போர்த்திய மனிதர்களை மாமிச பிண்டம் என்று கருதி கொத்திச் செல்லும். அது மாமிசம் அல்ல , மனிதன் என்று தெரிந்தவுடன் பள்ளத்தாக்கில் போட்டுவிடும். அவர்கள் அங்கேயுள்ள தங்கத்தை எடுத்துக் கொண்டு வேறு வழிகளில் திரும்புவர்.

இந்த பாத, பத என்ற சொற்கள் ரிக் வேதத்திலேயே உள்ளன. மேலும் கழுகு மூலம் சோமலதா என்படும் கொடியைக் கொண்டு வருதல் முதலியன ரிக் வேதத்திலும், மரகதக் கற்களை எடுப்பது சம்ஸ்கிருத நூல்களிலும் உள்ளன.

இதற்குப் பின்னர் ஊர்ந்து செல்லும் ஜானு பத, மலையில் குகை ஏற்படுத்தி, சுரங்கம் தோண்டி வெளியே வரும் தாரிபத, மூஷிகபத (எலி வழி) முதலியனவும் உள்ளன.

சாத்ர பத என்பது குடை போன்ற ஒரு கருவியில் மெல்லிய தோலைப் போர்த்தி அதைப் பிடித்துக் கொண்டு மலை உச்சியிலிருந்து இறங்குதல். இதை இன்று பாரச்சுட் என்று அழைக்கிறோம். இதை விமானத்தில் இருந்து அவசரமாக இறங்க அல்லது குதிக்க இன்று பயன்படுத்துகிறோம்.

Paracommander2

வணிக பத, வாரி பத

எப்படி பத (பாதை) என்பதை எல்லா இந்திய மொழிகளும் பயன்படுத்துகின்றனவோ, அதே போல ரிக் வேதச் சொல்லான வணிக (வியாபாரம்) என்பதையும் எல்லோரும் பயன்படுத்து கிறோம்.வேதத்தில் வாரி பத, வணிக பத என்ற வழிகள் பாடப்படுகின்றன. பல்வேறு வழிகளை தோண்டிக் கொடுத்ததற்காக, பாதைகளை வகுத்துக் கொடுத்ததற்காக இந்திரனைப் பாராட்டும் துதிகளும் உண்டு. பூஜ்யு (Bhujyu) என்பவரை நடுக்கடலில் இருந்து அஸ்வினி தேவர்கள் காப்பாற்றிய பாடல்களும் உண்டு.

முப்பது நதிகளைப் பற்றிய ஏராளமான துதிகளும் அவர்களுக்கு நீர்ப் போக்குவரத்தின் (Water Transport) மீதான ஆர்வத்தைக் காட்டும். உலகில் வேறு எந்த நாட்டுப் பழங்கால இலக்கியத்திலும் ஒரே புத்தகத்தில் இவ்வளவு பாடல்களைக் காண முடியாது.

நீர் என்ற சொல் ரிக் வேதத்தில் வருகிறது. இதைத் தமிழ்ச் சொல் என்று பலரும் எண்ணினர். ஆனால் இதுவும் வடமொழிச் சொல்லே. ஏனெனில் நீர்த் தேவதைகளான நீரெய்ட்ஸ் (Nereids) பற்றி கிரேக்க மொழியிலும் மிகப் பழங்காலத்தில் வழங்கி வருவதால் இது தமிழ்ச் சொல் இல்லை என்பது தெரிகிறது. நாராயண என்பவருக்கு நீரின் மேல் மிதப்பதால் அப்பெயர் வந்ததையும் புராணங்கள் எடுத்துக் காட்டும்.

para2

எல்லாவற்றிற்கும் மேலாக மனுவின் (Floods) பிரளயம்- கப்பல் கதை உலகில் எல்லா பழைய இலக்கியங்களிலும் பேசப்படுகின்றன. பைபிளில் இக்கதையில் வரும் நோவா (Nova) என்பதும் சம்ஸ்கிருதச் சொல்லாக இருப்பதால் இந்தக் கதை இந்தியாவில் சென்றது கண்கூடு. நோவா என்றால் கப்பல் (நாவ்). நவ என்றால் புதிய — இந்த இரண்டு அர்த்தங்களுமே அந்தக் கதையில் பொருந்தும். கப்பல் சம்பந்தமான நேவி ( Navy கடற்படை) முதலிய சொற்கள் இன்று ஐரோப்பிய மொழிகள் அனைத்திலும் புழங்குகின்றன.

ரிக் வேதத்திலிருந்து வந்தது “பணம்”!

dac86-baal012b18002bbce252c2blouvre2bmuseum252c2bparis

குழந்தைகளைப் பலி வாங்கும் பால் (வேதத்தில் வால என்னும்    அசுரன்)

Written by London swaminathan

Research Article No.1891

Date: 26 May 2015; London Time 14-59

ரிக் வேதத்தில் நிறைய ரகசியங்கள் உள்ளன. அதில் சில பாணி, பண(ம்) என்ற சொற்களாகும். இந்தியா முழுவதும்  பணம் (காசு) என்ற சொல் தமிழ் உள்பட எல்லா மொழிகளிலும் புழக்கத்தில் உள்ளது. இதே போல ஆங்கிலத்தில் மணி என்ற சொல் இந்த அர்த்ததில் பயன்படுத்தப்படுகிறது. இவை எல்லாம் ரிக் வேதத்தில் பல இடங்களில் குறிப்பிடப்படும் “பாணி” என்ற இனத்திலிருந்து வந்த சொற்களாகும்.

பாணிக்கள், “பீனிஷியர்கள்” என்று அழைக்கப்படுவர். அவர்கள் கி.மு.2000 முதல் கார்த்தேஜ் (இப்பொழுது ஆப்பிரிக்காவில் உள்ள டுனீஷியா) மற்றும் மத்திய தரைக் கடல் நாடுகளான லெபனான், சிரியா போன்ற இடங்களில் காலனி வைத்து ஆதிக்கம் செலுத்தினர். இவர்கள்தான் உலகத்திற்கு அகரவரிசை எழுத்துக்களைக் கற்பித்தவர்கள் என்றும், பணம் என்பதைச் சொல்லிக் கொடுத்தவர்கள் என்றும் அதற்கு முன் பண்ட மாற்று முறையே உலகெங்கிலும் இருந்தது என்றும் என்சைக்ளோபீடியாக்கள் (கலைக் களஞ்சியங்கள்) சொல்லும்.

பீனிஷியர்களின் ஆல்பபெட்/அகரவரிசைதான் பிராமி என்னும் இந்திய எழுத்து முறைக்கு மூலம். நம் மூலமாக தென் கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்துக்கும் எழுத்து முறை ஏற்றுமதியானது என்று ஆராய்ச்சியாளர்கள் பகர்வர்.

ரிக் வேத பாணிகளுக்கும், வட ஆப்பிரிக்க பீனிஷியர்களுக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்று கதைத்த வெளிநாட்டு அறிஞர்கள், பின்னர் அதைப் பூசி மெழுகி மழுப்பிவிட்டனர். எது எதெல்லாம் தாங்கள் கூறும் ஆரிய-திராவிட இனவெறிக்  கொள்கைகளுக்கு முரண்படுகிறதோ அதை எல்லாம் சத்தம் போடாமல் அமுக்கிவிடுவது அவர்கள் வழக்கம்.

உண்மையில் பாணீக்கள் பற்றி ரிக்வேதம், அதர்வ வேதம் சொல்லும் பல கருத்துக்கள், அவர்கள் பீனிஷியர்களே என்று காட்டுகின்றன. பாணி என்பது வணிக (வியாபாரிகள்) என்று மாறி இன்று இந்தியாவில் எல்லா மொழிகளிலும் உள்ளது.வணிக என்பதும் ரிக் வேதத்தில் வருகிறது.

ப=வ=ம ஆகிய மூன்று எழுத்துக்களும் ஒன்றுக்கொன்று இடம் மாறும் என்பது மொழி இயல் அறிஞர்களுக்குத் தெரியும். இது பற்றி ஒரு பட்டியலையே எனது மொழி ஆராய்ச்சிக் கட்டுரைகளில் கொடுத்து இருக்கிறேன். நாம் வங்கம் என்று சொன்னால் அந்தப் பகுதி மக்கள் பெங்கால் என்பர். மற்ற சில சொற்கள்—மானம் = வானம், முழித்தான்=விழித்தான்.

85777-map2bof2bphoenicia

வட  ஆப்பிரிக்க கார்த்தேஜ் (டுனீசியா), மத்திய தரைக் கடல் நாடுகள்

ஆக இதே விதியை பாணி, வணிக ஆகியவற்றுக்கும் பயன்படுத்தலாம்:-

பாணி=வாணிக=வணிஜ்= பண= மணி(ஆங்கிலச் சொல்)

இவர்கள் பற்றி உலகின் பழைய நூலான ரிக் வேதம் என்ன சொல்கிறது?

1.பாணீக்கள் பணக்காரர்கள், கஞ்சர்கள்

2.அவர்கள் திருடர்கள்; கொள்ளைக்காரர்கள். வேத கால இந்துக்களின் பசுக்களைத் திருடிச் சென்றனர்.

3.பேராசைக்காரர்கள்; செல்வத்தைக் குவிப்பவர்கள்

4.அவர்கள் வேதமுறைப்படி யாக யக்ஞங்கள் செய்ய மாட்டார்கள்; கடவுளைக் கும்பிட மாட்டார்கள்; ஐயர்களுக்கு தட்சிணை கொடுக்க மாட்டார்கள்.

5.அவர்கள் தஸ்யூக்கள்; தாசர்கள்

6.அவர்கள் க்ராதின் (இதற்கு எந்த அறிஞருக்கும் இது வரையும் பொருள் தெரியவில்லை).

7.இவர்கள் வட மொழி அல்லாத கொடுமையான ஒரு மொழி (ம்ருத்ரவாச) பேசினர். ஆனால் எப்பொழுதுமே வேற்று மொழி பேசுவோரை மற்ற மொழியினர் இப்படி மட்டம் தட்டுவது தெரிந்ததே. கிரேக்கர்கள், மற்ற நாட்டினரை காட்டுமிராண்டிகள் (பார்பாரிக்) என்றும் தமிழர்களைத் தெலுங்கர்கள் அரவா என்றும் பைபிளைப் பின்பற்றாதவர்கள் பேகன் என்றும் குரானைப் பின்பற்றாதாரை காபிர் என்றும் அவரவர் அழைப்பதும் தெரிந்ததே.

  1. அவர்களை வேதங்கள் சில இடங்களில் புராண கதா பாத்திரங்கள் போல வருணிக்கின்றன. அவர்களிடம் தூது செல்ல இந்திரன், சரமா என்ற பெண் நாயை அனுப்பியதாக பல இடங்களில் வேதம் சொல்லும். இந்த சரமா என்பது ,பாரசீகம் வழியாக கிரேக்க நாடு வரை சென்றுவிட்டது. பாரசீக கிரேக்க மொழிகளில் எஸ் என்பது கிடையாது ஆகவே அவர்கள் சரம என்பதை ஹர்ம என்று எழுதினர். இதைப் பற்றி நிறைய ஆராய்ச்சி நடந்திருப்பதால் தனிக் கட்டுரையில் தருவேன். சிந்து நதி என்பதை இந்து என்று மாற்றியவர்களும் அவர்களே!!

ef545-leviticus-20-molech

குழந்தைகளைத் தீயில் வீசுவோர்!!

பாணீக்கள் பற்றி ரிக்வேதத்தில் காணப்படாத முக்கிய விஷயம் அவர்கள் குழந்தைகளைத் தீயில் பலி கொடுப்பவர்கள் என்பதாகும். பீனிஷியர்கள் வணங்கி வந்த இரண்டு தெய்வங்கள் பால் மற்றும் மாலிக் (மெலக்) என்பன ஆகும். இவ்விருவர் சிலைகள் முன்னாலும் எப்பொழுதும் தீ எரிந்து கொண்டே இருக்கும். ஜெரூசலத்தில் எரியும் தீயில் இப்படிப் பிள்ளைகளைப் பலி கொடுத்தது பைபிளில் இரண்டு மூன்று இடங்களில் சொல்லப்பட்டுள்ளது.

பாணீக்களின் குழந்தைப் பலி பற்றி ரிவேதத்தில் இல்லாவிட்டாலும் வால என்னும் அசுரனை இந்திரன் கொன்றது பற்றிய பாடல் வேதத்தில் வருகிறது வால என்பதே பால் என்னும் தெய்வத்தின் பெயர் என்று கொள்ள மொழியியல் வழிகாட்டுகிறது.

இப்பொழுது பஹ்ரைன், டுனீஷியா, மத்திய தரைக் கடல் நாடுகளில் பல்லாயிரக் கணக்கான புதைகுழிக்கள் கண்டு பிடிக்கப்பட்டு வருகின்றன. அவை அத்தனையிலும் ஈமப் பானையில் குழந்தைகளின் கருகிய சாம்பலும், மிருகங்களின் சாம்பலும் கிடைத்துவருகின்றன. ஒரு வேளை இவர்களை வேத கால இந்துக்கள் வெறுத்து தஸ்யூ, தாசர் என்று திட்டியதற்கு இதுவும் காரணமாக இருக்கலாம். “மிலேச்ச” என்னும் சொல்லும் இவர்கள் வழிப்பட்ட மாலிக், மொலக், மிளக் என்னும் குழந்தைகளைப் பலி கேட்ட தெய்வத்தின் பெயரில் இருந்து வந்திருக்கும் என்பது நான் கண்ட முடிவு.

பாணீக்களின் மன்னர் பெயர் “ப்ருபு” என்று ரிக் வேதத்தில் இருக்கிறது. பீனிஷியர்களின் முக்கிய நகரான பிப்லோஸ் என்பது இதிலிருந்து வந்ததே.  “ர, ல” ஆகிய இரண்டு எழுத்துக்களும் இடம் மாறுவது பற்றி பாணினி கூட சூத்திரம் எழுதி இருக்கிறார்.

மேலும் விக்கிபீடியாவில் பீனிஷியர் காலனி என்ற பட்டியலில் பல சம்ஸ்கிருதப் பெயர்கள் உள்ளன ( சுந்தர, சூர்ய, சோபன,தாரா முதலியன)

பாணீக்கள் வேற்று மொழி பேசினாலும் எல்லா வணிகர்களையும் போல அவர்களுக்கு வேறு (சம்ஸ்கிருதம் போன்ற)  மொழிகளும் தெரிந்திருக்க நியாயம் உண்டு. பிப்ளோஸ் என்ற நகரம் 7000 ஆண்டு பழமையுடைத்து! வேத மந்திரங்கள் பல காலத்துக்குச் சொந்தமானவை. எல்லா மந்திரங்களும் உருப்பெற குறைந்தது 500 ஆண்டுகள் ஆகியிருக்கலாம். சங்கத் தமிழ் இலக்கியத்தில் 450+ புலவர்கள் பெயர்கள் இருப்பது போலவே ரிக் வேதத்திலும் 450+ புலவர் பெயர்கள் உள. சங்கப் பாடல்கள் உருவாக குறைந்தது 300 ஆண்டுகள் ஆயின. ஆக பாணீக்கள் பற்றிய குறிப்புகளும் ரிக் வேதத்தின் பெரும்பாலான மண்டலங்களில் வருவதால் இவர்களுடன் நீண்ட நெடுங்காலத்தில் சுமுக உறவு நிலவிய காலமும் இருந்திருக்கலாம்.

eb915-byblos

லெபனான் (சம்ஸ்கிருதத்தில் லவண/ வெள்ளை)

இவர்கள் பற்றி “வேத கால ஹரப்பா மக்கள்” என்ற நூலை எழுதிய ஆராய்ச்சியளர் பகவான் சிங் வேறு ஒரு தகவலையும் தருகிறார். சில வேத மந்திரங்கள், “பாறைகளுக்கு அடியே பாணீக்கள் மறைத்து வைத்த செல்வம்” பற்றிப் பாடுகின்றன. அவைகளைப் பெற இந்திரன் சரமாவை தூது அனுப்பிய செய்தியும் வருகிறது. பாறைக்கு அடியில் மறைத்த செல்வம் என்பது சுரங்கக் கனிவளம் என்றும் இவர்கள் உலகமெங்கும் லபிஸ் லசூலி என்ற கற்களை ஏற்றுமதி செய்தனர் என்றும் எழுதுகிறார். லாபிஸ் லசூலி பற்றிய எனது முந்தைய தனியான ஆராய்ச்சிக் கட்டுரையில் நிறைய விசயங்களைத் தந்திருக்கிறேன்.

பிற்காலத்தில் கிரேக்கர்கள் எழுதிய வரலாற்றுக் குறிப்புகளில் ரோமானிய ராஜாக்களுக்கும், கிறிஸ்தவ பாதிரிமார்களுக்கும் தேவைப்பட்ட பிங்க் (இளம் சிவப்பு) சாயத்தை கடலில் கிடைக்கும் ஒரு வகைக் கிழிஞ்சல் பூச்சியில் இருந்து எடுத்து இவர்கள் ஏற்றுமதி செய்ததையும் குறிப்பிட்டுள்ளனர். அந்தச் சாய ஏற்றுமதி இவர்கள் கையில் இருந்ததால் இவர்கள் மிகவும் பணக்காரர் ஆனார்கள்.

பாணீக்கள் என்போர் திசை மாறிப்போன, வழி தவறிய இந்துக்களே (விராத்யர்) என்று ஆர்ய தரங்கிணி என்ற நூலில் ஏ.கல்யாணராமன் எழுதுகிறார்.

கிரேக்க மொழியில் முதல் முதல் நூலை எழுதிய ஹோமரும் முதல் நூலான இலியட்டில் இவர்களைப் புகழ்ந்துவிட்டு, ஆடிஸி என்னும் அடுத்த நூலில் பீனிஷியர்களை அயோக்கியத் திருடர்கள் என்று திட்டுகிறார். ரிக்வேதக் கருத்துக்களை அப்படியே எதிரொலிக்கிறார்!

மேற்கூறிய எல்லாத் தகவல்களையும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் இவர்கள் பணத்துக்காக எதையும் செய்யத் துணிந்த கிராதகர்கள் என்பது தெரிகிறது. வேதத்தில் இவர்கள் பற்றி இதுவரை பொருள் விளங்காமல் உள்ள “கிராதின்” என்பதற்குக் கிராதகர் என்று பொருள் கொண்டாலும் தவறில்லை!

(வேதங்களில் இவர்கள் பற்றிய குறிப்புகள் எங்கேயுள்ளன என்ற விவரங்களை நேற்று வெளியான எனது ஆங்கிலக் கட்டுரையில் கொடுத்திருக்கிறேன்.)