அய்யங்கார் செய்த அற்புதம்! (Post No 2687)

sriranaga

Compiled  by london swaminathan

Date: 2 April, 2016

 

Post No. 2687

 

Time uploaded in London :–  9-02 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் என்பவர் செய்த அற்புதம் பற்றி 1908 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்ப் பெயரகராதியில் ஈக்காடு இரத்தினவேலு முதலியார் தந்துள்ள விவரத்தின் சுருக்கம் இதோ:-

பிள்ளைப் பெருமாள் அய்யங்கார், வேதியர் குலத்தில் உதித்து, வேத வேதாங்கங்களில் புலமை பெற்று வருணாசிரம தருமங்களை வழுவாது அனுசரித்து வருங்காலத்தில் மதுரையில் திருமலை நாயக்கர் அரசாட்சி செய்து வந்தார். அவரது ராஜாங்க சேவையில் ஈடுபட்ட அய்யங்கார் ஒரு நாள் அனைவர் முன்னிலையிலும் தனது (உத்தரீயத்தின்) மேல்துண்டின் முனைகளை சரசரவென்று தேய்த்தார்.

அனைவரும் இது கண்டு நகைத்து, ‘ஐயன்மீர் ஏன் இப்படித் தேய்த்தீர்?’ என்று வினவ அவர் ஸ்ரீரங்கம் தேர்த்திருவிழாவில், தீவட்டி ஏந்தி வந்தவர்களின் தீச்சுவாலைபட்டு, தேர்த் திரைச் சீலை தீப்பற்றியதாகவும் அதை அணைக்கவே அவ்வாறு செய்ததாகவும் பதில் தந்தார்.

srirangam row of towers

இதைக் கேட்ட பலரும் அய்யங்காருக்குச் சித்தப் பிரமை பிடித்துவிட்டது என்று நாயக்க மன்னரிடம் தெரிவித்தனர்.

மன்னரோ, அய்யங்கார் மீதுள்ள மதிப்பு காரணமாக, திருவரங்கத்திற்கு ஒரு ஆளை அனுப்பி, தீரவிசாரித்து வருமாறு உத்தரவிட்டார். அவர் திருவரங்கம் அர்ச்சகர்களைக் கண்டு தேரின் திரைகள் தீப்பிடித்ததா என்று கேட்டனர். அவர்கள், ஆம் தேர்த்துணிகள் தீபிடித்தவுடன், அருகிலிருந்த அய்யங்கார் அவைகளை அவித்தார் என்றும் சொன்னார்கள்.

இதைக் கேட்ட நாயக்கர் ஆனந்தப் பரவசப்பட்டு அய்யங்காரை வரவழைத்து, திருவரங்கத்தான் தேர்த் தீபிடித்தபோது நீவீர், இங்கேயல்லவா இருந்தீர், அங்கே போனதாகப் பலரும் சொல்வதெப்படியென வினவ, அவர் தன் மனதளவில் அங்கே என்று எம்பெருமானை சேவித்தேன் என்றார். அருகிலுள்ளவர்களும் ஆமாம், இவர் கிருஷ்ண, கிருஷ்ண என்று சொல்லி உத்தரீயத்தைத் தேய்த்தார் என்றும் அப்போது காரணம் கேட்டதற்கு இதையே சொன்னதாகவும் உறுதி செய்தனர். உடனே நாயக்க மன்னர் அவரை சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து பூஜித்து அனுப்பிவைத்தார்.

 

அன்றிரவு நாயக்க மன்னர் ஒரு கனவு கண்டார். அதில் தான் , காவிரி நதியில் ஸ்நானம் செய்துவிட்டுப் பிள்ளைப் பெருமாள் அய்யங்காருடன் சென்று, திருவரங்கப் பெருமானைச் சேவித்ததாகவும், திரும்பி வருகையில் திடீரென்று அய்யங்கார் காணாமற் போனதாகவும் கனவு கண்டார்.

 

நாயக்க மன்னர் மிகவும் விசனப்பட்டு மறு நாள் காலையில் அய்யங்காரை வரவழைத்துச் சேவித்து, ‘தேவரீர்! உங்களைப் போன்ற பெரியோரை நான் லௌகீகத் தொழிலில் இதுவரை ஈடுபடுத்தியது தவறு. நீங்கள் என்னைச் க்ஷமித்து (மன்னித்து) இனி வைதீக காரியங்களில் ஈடுபட்டு காலட்சேபம் செய்ய அடியேன் யாது செய்யவேண்டு’ மென்று இறைஞ்சினார்.

tirumalai nayak1

அய்யங்காரும் தான், திருவரங்கப் பெருமானுக்கு அருகிலிருக்க விரும்புவதாகச் சொல்லவே, கோவிலுக்கு வடமேற்கில் ஒரு திருமாளிகை புதுக்கி, அதில் அவரை எழுந்தருளச் செய்து தானும் அடிக்கடி திருவரங்கம் சென்று அவரை உபசரித்து மகிழ்ந்தனன்.

 

அங்கெழுந்தருளிய அய்யங்கார் நூற்றெட்டு திருப்பதி அந்தாதி, திருவேங்கட மாலை, திருவேங்கட அந்தாதி, அழகர் அந்தாதி, திருவரங்கத்துக் கலம்பகம், திருவரங்க மாலை, அந்தாதி, அஷ்டப் பிரபந்தம், பரப்ரம்ம விவேகம் என்னும் பல நூல்கள் செய்து பகவத் கைங்கரியத்தில் காலம் தள்ளினார். ஒருநாள் கோவிலில் தரிசனம் செய்துகொண்டிருக்கையில் ஒரு நொண்டிப் பசு இடறி அவர் காலில் விழுந்தது. அதுவே தனது இறுதிக்காலம் என்று ஒரு பாடலில் சொல்லிவிட்டு கொஞ்சம் காலம் கழித்து பரமபதம் சேர்ந்தார்.

எனது முந்தைய கட்டுரைகள்
1.ஆண்டாளுடன் 60 வினாடி பேட்டி (20 ஜனவரி 2012)

2.வங்கக் கடல் கடைந்த ஆண்டாள் தரும் அற்புதத் தகவல்- 9 ஜனவரி 2014

3. ‘இனித்தான் எழுந்திராய்! ஈதென்ன பேருறக்கம்!’ ஆண்டாள் அறைகூவல்! – 28 நவம்பர் 2014

4. Sri Ramanuja’s Favourite Tamil Hymn! (Article No.1443; Dated 28th November 2014.)

 

5. Amazing Andal: Where did she see the Lion? ( 30 -1-2013)

6. Ramanuja and Non Brahmins ( 13-5-2013)

7.காலா! என் காலருகே வாடா! ஞானிகளின் ஞானத் திமிர்!! (கட்டுரை எண்: 925 தேதி: 23 March 2014.)

 

8. Andal by C.Subrahmanya Bharati (Post No.924 Date: 22nd March 2014.)

9. கொக்கைப் போல இருப்பான், கோழி போல இருப்பான், உப்பைப் போல இருப்பான் பக்தன் (Post No. 900 Dated 11th March 2014)

10. Vaishnavite Saint NAMMALWAR (Post no 915 date 18th March 2014)

 

11.ஆழ்வார் முக்கியப் பாடல்கள் (மே சிந்தனைச் சிற்பிகள் காலண்டர்) (Post No.1011; Date:30 ஏப்ரல் 2014

 

And more articles about Alvars and other Vaishnavite saints

-subham-

Tansen and Tamarind Tree! Ghosts in Tamarind Trees! (Post No 2666)

tansen tomb

 

Research Article by london swaminathan

 

Date: 26 March 2016

 

Post No. 2666

 

 

Time uploaded in London :– 16-32

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

puLi,tamarind

STORY OF FAMOUS TAMARIND TREES

 

1.There is a tamarind tree in Gwalior at the tomb of Tansen, the great singer of Moghul period. People believe that whoever chew the leaves of the tree will get a sweet voice. This, they believe due to the presence of the tomb of Tansen.

 

Nammalvar and Tamarind Tree

2.There is another famous tamarind tree at Azvar Tirunagari in the far south of Tamil Nadu. Maran Sadagopan, later known as Nammazvar, one of the 12 great Tamil Vaishnavite saints, was deaf and dumb from his birth. He became very eloquent after 16 years and sang the best verses among the Azvars. His fame was known to the world through another saint named Madurakavi. When he went towards North India in search of a Guru, a beam of light lead him to far south Tirukkurukur (Alwar Tirunagari) where he met Nammazvar. Like Buddha attained wisdom under the Bodhi tree (Ficus religiosa), Nammazvar attained wisdom under this tamarind tree (Tamarindus indica).

 

Tirumangai and Tamarind Tree

3.There is one more story of another tamarind tree linked with another Vaishnavite saint known as Tirumangai Azvar. He wanted to refurbish and build a new temple for Vishnu at Sri Rangam. He needed lot of money for it. Someone gave him an idea to plunder the golden Buddha statue at Nagapattinam. When he went there he sang a verse to change it into a statue of base metals and leave the gold cwith him. Thus he got the gold and on his way to Sriranagam, he was very tired and slept under a tamarind tree after hiding the gold under the bush. He ordered the tamarind tree not to sleep during night. Tamarind trees used to close their leaves in the night which the Tamils think they have gone to sleep. He overslept and the farmers came to their fields to plough the land. At once the tamarind tree shed all the leaves on him and woke him up. He thanked the sleepless tamarind tree and went on his way. This happened at Tirukkannankudi.

 

Ghost in Tamarind Trees

4.Like many cultures around the world Tamils also attribute lot of things to trees. There is a common belief that ghosts reside on tamarind trees. So people never sleep under these trees. Though there is no scientific evidence to suggest the bad effects of a tamarind tree, it is believed the acidic leaves never allow other plants to grow under it. Moreover it may emit more carbon di oxide than other trees. During day time it is other way round. Plants take carbon di oxide from the atmosphere and emit oxygen.

tamarind

5.Tamarind Trees that never sleep!

Several temples in Tami Nadu have tamarind trees that never sleep i.e. they never close their leaves during night. Normally they should close. There are two explanations to it. One is that certain type of tamarind trees do not close the leaves like other trees. Another explanation is that it is a miracle of god of that particular shrine.

6.True Ghost story!

Sri Anantha Rama Dikshitar was the most famous religious speaker of yesteryears. He had created his own style of delivery which became very popular. He was a great devotee of Krishna of Guruvayur who cured his disease of leprosy completely. He wrote about the greatness of his forefathers in the 8th part of his book Jayamangala Stotra. Here is a true ghost story:

If a Brahmin commits suicide or involves himself in big crimes he becomes a ghost known as ‘Brahmarakshas’. One of the wealthy families had a big problem from a Brahmin ghost. Wife of one of the rich men of Sengalipuram village was possessed with this particular ghost. The family underwent lot of difficulties due to this. Her husband spent enormous money to drive away this ghost. One famous magician did a big puja and threatened the ghost to leave with some ‘bali’ (sacrifice). Immediately the ghost told him that it did not want anything other than a blessing from the eldest in the family who is known as Big Muthanna. His actual name was Vaidhyanatha Dishitar. All of the family members went to him and begged to come to the spot and ‘bless’ the ghost so that it would be released from the bondage of ghosthood. Though he hesitated to do such non-religious things in the beginning, he came forward to save a family. The ghost immediately told him it would leave the house. The magician asked what proof they would get to know that it had left. It told him that it would leave the tamarind tree at the backyard in the night and they can hear the noise of breaking branches. To every one’s amazement, the ghost left with a big noise in the night and when they went to the garden in the backyard in the morning they saw a big broken branch of the tamarind tree. Then the lady of the house had no ghost problem at all. (This is a rough translation of what Sri Anantharama dikshitar gave in Tamil in his eighth volume of Jayamangala Stotra).

 

 

 

Snake Charmers of India and Hindu Magic: Edwin Arnold (Post No 2634)

snke2

Compiled by london swaminathan

 

Date: 15 March 2016

 

Post No. 2634

 

Time uploaded in London :–  17-17

 

(Thanks for the Pictures; they are taken from various sources)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Following is the extract from the book “India Revisited” by Edwin Arnold published in 1886.

 

“It is a mistake to think that the snakes are always harmless which are brought round to house doors and hotels in India by jugglers and samp-walahs. An almost universal opinion exists that these men extract the poison –fangs (teeth) from the serpents kept in their baskets and that anybody, therefore, may approach and play with them as freely as their exhibitors. This is by no means the case. Many of the reptiles which hiss and coil about in the Indian verandahs are as deadly as any to be found in the jungle.

 

 

The conjuring people tame and familiarise their snakes, especially the cobras, which are then disinclined to strike and become quite friendly and playful; so that unless suddenly frightened or irritated, they dart at the hand of the snake charmer without erecting the poison fangs or even opening their mouths.

 

Hindu Tricks by Palace jugglers!

The Maharajah of Benares was kind enough to send the entire company of his jugglers for our entertainment. They performed with much adroitness the usual series of Hindu tricks. They made the mango tree grow and bear ripe fruit from a deed; swallowed fire and swords; disentangled inextricable knots; and, having mixed together in water and drunk up three powders, red, green and yellow, one of them brought what seemed the same powders from his mouth in a dry state again. Then they produced a large selection of snakes, of which three are cobras, and one of these was made to dance to the gourd and bansula, striking again and again meanwhile at the hand of the performer.

 

Poisonous Snake!

A doubt being expressed by somebody as to the lethal power of this creature, the chief juggler declared that it was truly a dant-wallah, and had his poison teeth. “If the sahib-lok would supply a sheep or goat, they might quickly see whether I spoke a true word.” Eventually a white chicken was produced and seizing his cobra by the neck, the juggler pinched its tail and made it bite the poor fowl, which uttered a little cry when the sharp tooth punctured its thigh. The chicken was dead in another ten minutes.

 

At Pahalpur, a snake charmer for whom we sent to catch a serpent, said to be infesting the compound, had just died by a bite from one of his own captive snakes. The fact is snakes are not understood, and especially cobras. They are extremely intelligent, slow to anger, conscious of their terrible venom and loath to employ it. They are easily tamed, are anxious to escape notice, but extraordinarily sensible to kindness, and when not frightened are among the most gentle and attached of creatures. I shall print in this place an unpublished poem written by me some time ago, which illustrates the topic: THE SNAKE AND THE BABY.”

(Here he had given his long poem which ran to three pages)

–subham-

அதிசய ஆற்றல்: பிறர் மனதை அறிவது எப்படி? (Post No. 2615)

vivekananda-stamps

Written by S Nagarajan 

 

Date: 10 March 2016

 

Post No. 2615

 

Time uploaded in London :–  8-49 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

அதீத உளவியல் ஆற்றல்

 

ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத அனுபவங்களும் ஆற்றலும்! – (6)

ச.நாகராஜன்

 

 

பிறர் மனதை அறிதல்

 vivek2

பிறரின் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிவது ஸ்வாமிஜிக்கு எளிதான ஒன்று. ஒருவர் ஸ்வாமிஜியைப் பார்க்க வரும்போதே அவர் எதற்காக வருகிறார் என்ன நினைக்கிறார் என்   பதை அவர் மிக எளிதாக அறிந்து கொள்வார்.

 

ஒரு முறை பிராணாயாமம் பற்றிக் கேட்க வேண்டுமென்று சிலர் ஸ்வாமிஜியை அணுகினர்.

 

ஸ்வாமிஜி மற்றவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறி விட்டு பிராணாயாமம் பற்றி அவர்கள் கேட்கும் முன்னரே தானாகவே அது பற்றிக் கூறலானார். வந்தவர்கள் வியந்தனர். அவர்கள் கேட்க நினைத்த சந்தேகங்களுக்கெல்லாம் அவருடைய பேச்சில் பதில் இருந்தது.பிற்பகல் மூன்று மணிக்கு ஆரம்பித்த உரை இரவு ஏழு மணிக்கு முடிந்தது.

 

 

எப்படி தாங்கள் கேட்காமலேயே அவரால் பதில் சொல்ல முடிந்தது என்று சீடர் ஒருவர் கேட்ட போது ஸ்வாமிஜி, “இது போன்ற நிகழ்ச்சிகள் மேலை நாட்டில் பல முறை நடந்துள்ளன. மக்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் அது பற்றி என்னிடம் கேட்டுள்ளனர்” என்றார்.

 

மனதைப் படிக்கலாமா?

 

சிஸ்டர் கிறிஸ்டைன் ஸ்வாமிஜியை விட மூன்று வயது இளையவர். அவர் ஸ்வாமிஜியிடம் தீட்சை பெற விரும்பினார்.

ஆயிரம் தீவு பூங்காவில் ஸ்வாமிஜியுடன் இருக்கும் பேறு பெற்றார் அவர். மறு நாள் பலருக்கு மந்திர தீட்சை தர ஸ்வாமிஜி உத்தேசித்திருந்தார். முதல் நாள் அவரை அழைத்த ஸ்வாமிஜி, “ உனக்கும் தீட்சை தர விரும்புகிறேன். ஆனால் உன்னை எனக்கு அவ்வளவாகத் தெரியாது.அதனால் தீட்சைக்கு நீ தயாராக இருக்கிறாயா என்பது புரியவில்லை” என்று கூறிய ஸ்வாமிஜி சற்றே தயக்கத்துடன் தொடர்ந்தார்:” என்னிடம் பிறரின் மனதைப் படிக்கும் ஆற்றல் இருக்கிறது. அதை மிகவும் அபூர்வமாகவே நான் பயன்படுத்துவேன். உனக்கும் தீட்சை தர இருப்பதால், நீ அனுமதித்தால் நான் உன் மனதைப் படிக்க விரும்புகிறேன்” என்றார்.

 

உடனே கிறிஸ்டைன், “தாராளமாகப் படியுங்கள்” என்றார்.

“முற்றிலும் படிக்கலாமா?” என்று கேட்டார் ஸ்வாமிஜி.

“படிக்கலாம்” என்று உறுதியாகக் கூறினார் அவர்.

“தைரியசாலிப் பெண் நீ” என்று அவரைப் பாராட்டிய ஸ்வாமிஜி அவரது மனதைப் படித்தார். பின்னர் கூறினார்:’ உனக்கு இன்னும் மூன்று திரைகளே உள்ளன. இப்பிறவியிலேயே உனக்கு மூன்றாவது கண் திறக்கும்” என்று கூறி அருளினார்.

பிற்காலத்தில் ஒரு முறை ஸ்வாமிஜி, மேலை நாட்டில் இந்த சக்தியைப் பயன்படுத்தியதால் தன் தவ ஆற்றல் குறைவு பட்டு விட்டது என்று கூறி வருந்தினார்

 

 

மனதின் ஆற்றல் பற்றிய உரை

 

ஏற்கனவே இந்த தொடரில் நாம் குறிப்பிட்டிருக்கும் ஸ்வாமிஜியின் மனதின் ஆற்றல் பற்றி கலிபோர்னியா லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 1900ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதி ஆற்றிய உரையில் சில பகுதிகளை ஆங்கிலத்தில் கீழே பார்க்கலாம். இவை மனதின் ஆற்றல் பற்றிய சில புதிய விஷயங்களை விளக்கும் பகுதிகளாகும்:

 

malaysian-postal-stamp-on-swami-vivekananda

Have you ever noticed the phenomenon that is called thought-transference? A man here is thinking something, and that thought is manifested in somebody else, in some other place. With preparations — not by chance — a man wants to send a thought to another mind at a distance, and this other mind knows that a thought is coming, and he receives it exactly as it is sent out. Distance makes no difference. The thought goes and reaches the other man, and he understands it. If your mind were an isolated something here, and my mind were an isolated something there, and there were no connection between the two, how would it be possible for my thought to reach you? In the ordinary cases, it is not my thought that is reaching you direct; but my thought has got to be dissolved into ethereal vibrations and those ethereal vibrations go into your brain, and they have to be resolved again into your own thoughts. Here is a dissolution of thought, and there is a resolution of thought. It is a roundabout process. But in telepathy, there is no such thing; it is direct.

 

 

I can see only at a distance of so many feet. But I have seen a man close his eyes and see what is happening in another room. If you say you do not believe it, perhaps in three weeks that man can make you do the same. It can be taught to anybody. Some persons, in five minutes even, can be made to read what is happening in another man’s mind. These facts can be demonstrated.

 

I shall tell you a story which I heard from a great scholar in the West. It was told him by a Governor of Ceylon who saw the performance. A girl was brought forward and seated cross-legged upon a stool made of sticks crossed. After she had been seated for a time, the show-man began to take out, one after another, these cross-bars; and when all were taken out, the girl was left floating in the air. The Governor thought there was some trick, so he drew his sword and violently passed it under the girl; nothing was there. Now, what was this? It was not magic or something extraordinary. That is the peculiarity. No one in India would tell you that things like this do not exist. To the Hindu it is a matter of course. You know what the Hindus would often say when they have to fight their enemies — “Oh, one of our Yogis will come and drive the whole lot out!” It is the extreme belief of the race. What power is there in the hand or the sword? The power is all in the spirit.

 

****** முற்றும்

 

ஸ்வாமிஜியின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஏராளமான அற்புதமான அனுபவங்களை அன்பர்கள் படிக்க இந்தத் தொடர் உத்வேகம் அளிக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்தத் தொடர் இத்துடன் நிறைவு பெறுகிறது.

 

Ganges and Coovam Rivers in Carnatic Music!(Post No.2597)

Tiger_new

Compiled by london swaminathan

Date: 4 March,2016

 

Post No. 2597

 

Time uploaded in London :–  16-12

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

tiger you tube

Tiger Varadachary was a famous vocalist. At a Carnatic music concert in which, by a strange turn of circumstances, a senior violin vidwan of high rank had to accompany a beginner,  Tiger Varadachariar was asked to say a few words at the end.  Tiger never uttered a word of disparagement about anyone. He complimented all the party in general terms. Bout the violinist he said: “What shall we say of our senior vidwan? His experience and knowledge are deep like an ocean. He is verily a mighty sea which receives ito its wide bosom such pure and holy rivers like the Ganges as also the gutter water of Coovam”.The implications are obvious.

 

Cooum/ Coovam was a highly polluted river in Chennai/Madras and known for its bad smell.

Xxx

 

purandara stamp

Purandaradasa flogged!

Many miracles are attributed to Sri Purandaradasa, Father of Carnatic music. His Ishta devata was Sri Vittalaraya of Pancharpur. Allowing for possible exaggerations, certain incidents may be said to be authentic. In the temple at Pandharpur, there is a Dwajasthamba (Flag Staff) called Dasarasthamba. Pilgrims entering the temple worship this pillar first before entering the holy of holies. There is an anecdote connected with this.

 

In Pandharpur there was a Devadasi (singer and dancer of the temple) who was also a true devotee of Lord Vittala. One day the Lord himself in the guise of Purandaradasa went to the dancer and desired to see her dance and hear her song. The dancer who was a great admirer of Purandaradasa as a devotee sang and danced, with self-forgetful devotion. Highly pleased with her performance the visitor presented her with a bracelet. Next morning it was found that the bracelet of the image of Lord Vittaa in the temple was missing and it came out that Purandaradasa had given it to the dancer. In spite of his entreaties Purandaradasa was dragged to the temple, tied to the post and flogged.  At that moment a Voice was heard from the inner shrine saying that it was the Lord who disguised as Purandaradasa went to the dancer, because the dasa had some little karma to work out and by that apparent disgrace and flogging Purandaradasa had been completely cleared of all old karma and became a free soul, a ‘Mukta’ . The Lord also indicated his desire that the pillar should thereafter be considered a sanctified post and named Dasarasthamba.

Source: Facets of Indian Culture by R Srinivasan, B V Bhavan Publication 1990)

 

My previous articles on music:–

Mystic No.7 in Music, Post No.977, 13-4-14

Musician who pledged a Raga, Post no.1074, 30-5-2014
True Art is Never Made to Order, post No.1066, 26-5-14

Acoustic Marvel of Madurai Temple 13-5-13

Superstition in the World of Music 12-4-14 (Post No.975)

Musical Pillars in Hindu Temples

Interesting Anecdotes from the World of Music (29 May 2014;Post No.1072)

Saint who went to Heaven with a Flute in Hand (16 April 14,Post No 983)

How did Rare Indian Animal Asunam become extinct? (15 April 14,Post No 981)

Rain Miracles: Rain by Fire and Music (7 January 2012)

 

மழை அற்புதங்கள் (7 ஜனவரி 2012)

இசைத் தமிழ் அதிசயங்கள் 31-1-2013

சங்கீதம் தோன்றிய வரலாறு- ஒரு புராணக் கதை 13-4-14 (976)

சப்தம் கேட்டால் இறந்துவிடும் அசுணமா? 15-4-14 (980)

கையில் புல்லாங்குழலுடன் சுவர்க்கத்துக்குப் போன மனிதர் 16-4-14 (982)

ஸ்ரீராமர் மீது முத்துசுவாமி தீட்சிதர் கிருதிகள் 8-4-14 (963)

 

-subham-

மரணத்தை முன்னறிவித்த கோயம்புத்தூர் செட்டியார்!(Post No.2591)

IMG_3563 (2)

Compiled by london swaminathan

Date: 2 March,2016

 

Post No. 2591

 

Time uploaded in London :–  14-35

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

லண்டனில் பிரிட்டிஷ் லைப்ரரியில் பல பழைய புத்தகங்களைப் புரட்டுகையில் கோயம்புத்தூர் ஸ்ரீ கிரந்தி வேங்கட கோபலார்யா பற்றிய ஒரு அதிசய விஷயம் கடைசி பக்கத்தில் இருந்ததைப் படித்தேன். தான் இன்ன தேதியில் இறப்பேன் என்பதை அறிவித்து, அதே தினத்தன்று பலர் சூழ இறந்தார். இது போல எத்தனையோ பேர் முன்கூட்டி மரணத்தை அறிவித்த சம்பவங்கள் இந்துமத பெரியோர்கள் சரித்திரத்தில் இருக்கின்றன. இதோ அந்தப் பக்கங்கள்:–

 

 

IMG_3578

 

 

IMG_3577

 

IMG_3576 (2)

 

IMG_3575

 

–சுபம்–

 

 

 

சுவாமிஜிக்கு ஆவிகள் மீதும் பரிவு! (Post No.2583)

coin1

Written by S Nagarajan

 

Date: 29  February 2016

 

Post No. 2583

 

Time uploaded in London :–  5-50 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

coin2

அதீத உளவியல் ஆற்றல்

 

ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத அனுபவங்களும் ஆற்றலும்! – (5)

ச.நாகராஜன்

 

 

ஆவிகள் மீதும் பரிவு

 

ஸ்வாமிஜியின் வாழ்க்கையில் ஆவிகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் ஏராளம் உண்டு.

 

சென்னையில் அவர் இருந்த சமயம் சில ஆவிகள் அவரைத் தொந்தரவு செய்ய ஆரம்பித்தன.

 

இது நடக்கப் போகிறது, அது நடக்கப் போகிறது என்றெல்லாம் அவை ஸ்வாமிஜியை அடிக்கடி பயமுறுத்தி வந்தன.

இதெல்லாம் பொய் என்பதை ஸ்வாமிஜி நன்கு அறிவார். என்றாலும் தொந்தரவு தொந்தரவு தானே!

 

ஆரம்பத்தில் ஸ்வாமிஜி இவற்றைப் பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல இந்த ஆவிகளின் தொந்தரவு கட்டுக் கடங்காமல் எல்லை மீறிப் போனது.

அவர் சற்று கோபம் கொண்டார். இதைக் கண்ட ஆவிகள் இப்போது தங்கள் பரிதாப நிலையைத் தெரிவித்துக் கெஞ்ச ஆரம்பித்தன. தங்களுக்கு நற்கதி அளிக்குமாறு வேண்டின.

ஒரு நாள் அவர் மெரினா கடற்கரைக்குச் சென்றார். அங்கு அவர் கையில் ஒரு பிடி மணலை எடுத்துக் கொண்டார். அதையே தர்ப்பணப் பொருளாகப் பாவித்து அந்த ஆவிகளுக்கு நற்கதி கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்தார்.

 

அந்த ஆவிகளின் தொந்தரவு அன்றோடு நீங்கியது. அவை நற்கதி பெற்று விட்டன போலும்!

 

ஸ்வாமிஜியின் எல்லையற்ற கருணை ஆவிகளுகும் கிடைத்தது ஒரு அதிசயமே!

coin3

 

கழுத்தில் வெட்டுண்ட ஆவி

 

இன்னொரு சம்பவம் கோபால் லால் என்பவரின் தோட்ட வீட்டில் நடந்தது. ஸ்வாமிஜி ப்ரேமானந்தருடன்  ஒரு முறை அமர்ந்தவாறு அந்த வீட்டில் பேசிக் கொண்டிருந்தார்.

திடீரென்று அவரை நோக்கிய ஸ்வாமிஜி, பாபுராம்!  நீ இப்போது எதையாவது கண்டாயா?” என்று கேட்டார்.

அவர், “இல்லை” என்றார்.

 

“இப்போது நான் ஓரு ஆவியைக் கண்டேன். அதன் கழுத்து அறுபட்டிருந்தது. கெஞ்சும் பார்வையில் அது தனக்கு நற்கதி அருளுமாறு கேட்டது.” என்றார் ஸ்வாமிஜி.

பின்னர் கைகளைத் தூக்கி அந் ஆவிக்காகப் பிரார்த்தித்து அவர் அதை ஆசீர்வதித்தார்.

 

விசாரித்த போது தான் ஒரு உண்மை தெரிய வந்தது.

அங்கே பல வருடங்களுக்கு முன்னர் ஒரு பிராம்மணன் வாழ்ந்து வந்தான்.

 

பணத்தைக் கடனாகக் கொடுத்து வந்த அவன் கொள்ளை வட்டி வசூலித்து வந்தான்.

 

இந்த வட்டியின் கொடுமை தாங்காத ஒருவன் அந்த பிராமணனைக் கழுத்தை வெட்டிக் கொன்று விட்டான்.

அலைந்து திரிந்த அந்த அந்தணனின் ஆவியே ஸ்வாமிஜியிடம் அருள் வேண்டிக் கெஞ்சியது.

 

அனைவருக்கும் அருள் பாலிக்க வந்த ஸ்வாமிஜி ஆவிக்கா மாட்டேன் என்பார். அருளாசி தர, ஆவியும் நற்கதி அடைந்தது.

இது போல இன்னும் சில நிகழ்ச்சிகள் அவர் வாழ்வில் உண்டு.

  • தொடரும்
  • தொடரில் முன் நான்கு அத்தியாயங்களைப் படிக்காதவர்கள் படிக்கலாம்..

 

–subam-

பேய்களை ஆராய்ந்த விஞ்ஞானி (Post No 2563)

la-parapsicologa-y-sus-pr

Written by S Nagarajan

 

Date: 22  February 2016

 

Post No. 2563

 

Time uploaded in London :–  8-59 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

19-2-16 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை.

 

பேய்களை ஆராய்ந்த விஞ்ஞானி ஹான்ஸ் பெண்டர்!

.நாகராஜன்

 

 

hans-bender-2

சந்தேகப் பேர்வழிகள் ஏன் சந்தேகப்படுகிறார்கள் என்றால், அவர்களுக்கு இன்னும் இது போன்ற ஒரு அனுபவம் கிடைக்கவில்லையே அதனால் தான்!

                                 – ஜேஸன் ஹாஸ்

சாதாரணமாக இயற்பியல், இரசாயனம்,உயிரியல், மருத்துவம் போன்றவற்றில் ஆய்வுகள் நடத்திய விஞ்ஞானிகளைப் பற்றி உலகம் நன்கு அறியும். ஆனால் பேய்கள், ஆவிகள் உலகம் போன்றவற்றை ஆராயும் விஞ்ஞானிகளுக்கு விளம்ப்ரமும் கிடைக்காது, பரிசுகளும் கிடைக்காது. இது நிதர்சனமான உண்மை. என்றாலும் பல விஞ்ஞானிகள் தங்கள் ஆர்வம் காரண்மாக இப்படிப்பட்டவற்றை ஆராய்வது உண்டு.

 

அப்படிப்பட்டவர்களுள் பேயை முறைப்படி ஆராய்ந்து ஏராளமான ஆவணங்களை உருவாக்கிய ஒரே விஞ்ஞானி என்ற பெருமையைப் பெறுபவர் ஹான்ஸ் பெண்டர் (Hans Bender) என்ற  ஜெர்மானிய விஞ்ஞானி ஆவார். (பிறப்பு 5-2-1907 மறைவு 7-5-1991). ஜோதிடத்திலும் இவருக்கு அதிகம் ஈடுபாடு உண்டு. அவரது நண்பரான தாமஸ் ரிங்குடன் ஜோதிடம் கேட்காமல் இவர் எந்த விஞ்ஞான மற்றும் சொந்தக் காரியங்களில் ஈடுபடுவதில்லை.

 

இவர் ஆராய்ந்த பேய் கேஸ்களில் உலகப் புகழ் பெற்ற ஒரு கேஸுக்கு ரோஸென்ஹெய்ம் கேஸ் என்று பெயர்.

 

 

பவேரியாவின் தெற்குப் பகுதியில் ரோஸென்ஹெய்ம் என்ற நகரில் சிக்மண்ட் ஆடம் என்ற ஒரு வக்கீல் வாழ்ந்து வந்தார். அவர் அலுவலகத்தில் 1967ஆம் ஆண்டு திடீரென்று அமானுஷ்யமான பல காரியங்கள் நடக்க ஆரம்பித்தன.

அரண்டு போன அவர் விஞ்ஞானி ஹான்ஸ் பெண்டரை நாடினார்.

 

அலுவலகம் வந்த பெண்டர் என்ன நடக்கிறது என்று கேட்டார். அந்த அலுவலகத்தில் நான்கு போன்கள் உண்டு. திடீர் திடீரென போன் அழைப்புகள் ஒலிக்கும். ஆனால் போனை எடுத்தால் மறுமுனையில் பதிலே வராது.  போனில் ஏதோ பழுது இருக்கிறதென்று நினைத்து ஆடம் எல்லா போன்களையும் புதிதாக மாற்றினார். ஆனால் மர்மமான போன் அழைப்புகள் தொடர்ந்தன. உடனே டெலிபோன் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டார். அங்கிருந்த எஞ்ஜினியர்கள் வந்து எல்லா வயர்களையும் ஆராய்ந்து அனைத்தும் சரியாகவே இருக்கின்றன என்று உறுதிபடத் தெரிவித்தனர்.

 

ஜெர்மனியில் 0119 என்ற நம்பர் அனைத்து அழைப்புகளையும் துல்லியமாகக் குறித்து எத்தனை நிமிடங்கள் பேசப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கும், இதை டாக்கிங் க்ளாக் (TALING CLOCK)  என்று அழைப்பர்.

 

இந்த பேச்சைக் குறிக்கும் கடிகாரத்தின் படி ஆடம்ஸுக்கு பில் அனுப்பப்பட்டது. அவர் அரண்டு போனார். அதாவது ஒரு நிமிடத்திற்கு அவர் 6 ‘கால்’களைப் பேசுவதாகத் தெரிவிக்கப்பட்டது! யாராலும் செய்ய முடியாத ஒரு அரிய காரியம் இது! ஒரு எண்ணை டயல் செய்து அடுத்தவர் மறுமுனையில் எடுக்கும் காலத்தைச் சற்று கவனித்தாலே நிமிடத்திற்கு ஆறு கால்களை யாராலும் பேச முடியாது.

1967 அக்டோபரில் கட்டிடத்தில் உள்ள பல்புகளும் பல்புகள் பொருத்தப்பட்டிருந்த அலங்காரக் கூடுகளும் ஆட ஆரம்பித்தன. திடீரென 90 டிகிரிகள் அவை திரும்பும்!

 

உடனே மீண்டும் மின் இணைப்பு சரி பார்க்கப்பட்டது. ஒரு வோல்டேஜ் மீட்டரும் புதிதாக பொருத்தப்பட்டது. பெரிய அளவிலான வோல்டேஜ் மாறுதல்கள் ப்யூஸை போக்கி விடும். ஆனால் அப்படி ஒன்றும் நிகழவில்லை!  அங்கிருந்த போட்டோகாப்பி மெஷினிலிருந்து மின்சாரம் கசிய ஆரம்பிக்கவே மின் இணைப்பையே துண்டித்து விட்டு ஜெனரேட்டர் மூலமாக மின் சக்தி பெறப்பட்டது. ஆனால் அப்போதும் இவை தொடர்ந்தன.

 

அனைத்தும் விசித்திரமாக இருந்தன. இவை அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட பெண்டர் தன் ஆராய்ச்சியைத் தொடங்கினார். நாளின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே இவை நிகழ்வதை அவரது குறிப்பேடுகள் சுட்டிக் காட்டின.  தற்செயல் ஒற்றுமை போல ஆன்னி மேரி என்ற இளம் பெண் அங்கிருக்கும் போது மட்டுமே இவை நிகழ்ந்தன.

 

அவள் உள்ளே வந்தவுடன் இந்த அமானுஷ்ய செயல்கள் ஆரம்பிக்கும். அவள் சென்ற பின்னர் இவையும் நின்று விடும். ஆன்னியை விசாரிக்க ஆரம்பித்தார் பெண்டர். அவள் ஒரு உணர்ச்சிகரமான பெண் என்பதையும் தனது எஜமானனைக் கண்டால் அவளுக்கு அறவே பிடிக்காது என்பதையும் அறிந்தார் பெண்டர்.

 

1967 டிசம்பர் மற்றும் 1968 ஜனவரியில் இந்த அமானுஷ்ய செயல்கள் தீவிரமாக அதிகரித்தன. சுவரில் தொங்கும் காலண்டரின் பக்கங்கள் தாமாக டர்ரென்று கிழிந்து விழுந்தன! சுவரிலே தொங்கும் வண்ண ஓவியங்கள் தாமாகவே திரும்பிக் கொண்டன. 400 பவுண்டு எடையுள்ள ஓக் மரத்திலான ஒரு அலமாரி – சாதாரணமாக யாராலும் அசைக்கக் கூட முடியாதது –  சில அடிகள் தானாகவே நகர்ந்தது. ஆனால் கீழே பொருத்தப்பட்டிருந்த லினோலியம் சேதமடையாமல் புத்தம் புதிதாக அப்படியே இருந்தது. மேஜை டிராயர்கள் தாமாகவே திறந்து கொண்டன. பின்னர் டப்பென்று சத்தத்துடன் மூடிக் கொண்டன!

 

இதெயெல்லாம் படமாகவும் பிடித்தார் பெண்டர். அன்னி மேரி அந்த வேலையிலிருந்து நின்றவுடன் அனைத்து அமானுஷ்ய செயல்களும் நின்றன!

 

தான் சேகரித்த ஏராளமான ஆவணங்கள் மூலமாக இந்த அமானுஷ்ய செயல்கள் அனைத்தும் மர்மமான ஒரு ஆவியின் வேலை தான் என்று பெண்டர் கூறினார்.  அன்னி மேரியின் வெறுப்பும் எளிதில் உணர்ச்சி வசப்படும் தன்மையும் அவர் இருக்கும் போது அவர் மூலமாக இந்த சக்திகள் தூண்டப்பட்டன என்றும் அவர் கூறினார்.

 

இந்த கேஸைப் போல அறிவியல் ரீதியிலான ஆவணங்களுடன் கூடிய கேஸ் வேறொன்றும் இல்லை என்ற புகழுடன் படமாக பிடிக்கப்பட்ட கேஸும் இது தான் என்பதும் ஹான்ஸ் பெண்டருக்கு புகழை அள்ளித் தந்தது. 84 வயது வரை வாழ்ந்த பெண்டர் தன் வாழ்நாள் இறுதி வரை இந்த பேய் ஆராய்ச்சியை விடவில்லை!

IMG_3431

அறிவியல் அறிஞர் வாழ்வில்.. ..

ஆங்கிலேய பிரபுக்கள் பலர் கூடியிருந்த கூட்டம் ஒன்றில் ஒரு விஷயத்தின் மீது அலர்ஜியாக கடும் வெறுப்பைக் கொண்டிருக்க முடியுமா என்பதைப் பற்றிய பேச்சு வந்தது. இயற்பில விஞ்ஞானியான ஜிம்மர்மேன் (Zimmermann)  அப்படி இருப்பது ஒரு வகையான வியாதி என்று கூறினார். அங்கிருந்த பார்படோஸ் என்ற நகரின் கவர்னரின் மகனான வில்லியம் மாத்யூஸ் அப்படிப்பட்ட ஒரு வியாதி கொண்டிருப்பவர். அவருக்கு சிலந்தி என்றாலே அலர்ஜி. ஜிம்மர்மேன் அதைச் சுட்டிக் காட்டிய போது அனைவரும் சிரித்தனர. அதெல்லாம் ஒரு வியாதியே கிடையாது என்றனர். உடனே அதை நிரூபித்துக் காட்ட விஞ்ஞானி விழைந்தார். மனதில் எழும் இந்த வெறுப்பை ஒரு இயந்திர விளைவால் நிரூபிக்க முடியும் என்பது அவர் முடிவு.

அங்கிருந்தவர்களில் ஒருவரான லார்ட் ஜான் மர்ரே என்பவரை கறுப்பு நிற மெழுகில் ஒரு சிலந்தியைச் செய்யச் செய்தார். அந்தச் சிலந்தியை அனைவரும் பார்க்கும் படி செய்து விட்டு அவர் வெளியே சென்றார்.

 

பின்னர் திரும்பி வருகையில் தன் கையில் மெழுகிலான சிலந்தியை வைத்துக் கொண்டு கையை மூடியவாறே உள்ளே நுழைந்தார்.

 

அவரது மூடிய கையைப் பார்த்தவுடன் வில்லியம் மாத்யூஸின் கண்கள் சிவந்தன. நரம்புகள் புடைத்தன. மிகுந்த கோபத்துடன் ஆவேசமாக தன் இடையிலிருந்த கத்தியை உருவினார். அந்த சிலந்தியை அவர் கொண்டு வருவதாக எண்ணிய மாத்யூஸ்  மர்ரே மீது பாயப் போனார்.

நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த அனைவரும் அவர் மீது பாய்ந்து கத்தியைப் பிடுங்கினர்.

 

மாத்யூஸிடம் அவர் பார்த்தது மெழுகிலான ஒரு பொம்மை சிலந்தி தான் என்பதையும் மேஜை மீது வைக்கப்பட்ட சிலந்தியை அவரே தொட்டுப் பார்க்கலாம் என்றும் அனைவரும் கூறினர்.

வேகமாகத் துடித்த அவர் நாடித் துடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக சீரானது. சுயநிலைக்கு அவர் மெதுவாகத் திரும்பினார். ஆனால் சிலந்தியைத் தொட மறுத்து விட்டார்.சிலர் இன்னும் கொஞ்சம் மெழுகை எடுத்து அவர் முன்னாலேயே சிலந்தியைச் செய்து காட்டினர்.

 

இது போல அவரும் பொம்மையினால் சிலந்தியைச் சிறிது சிறிதாச் செய்து பார்த்து பின்னர் நிஜ சிலந்தியைப் பார்த்தால் அவரது அருவருப்பு போய் விடும் என்று ஜிம்மர்மேன் ஆலோசனை கூறினார்.

நமது ஊரில் கரப்பான்பூச்சியைக் கண்டால் அருவறுப்பு அடையாத பெண்கள் உண்டா என்ன?

******

 

 

 

ஆவி கொடுத்த ஆவணத்தை ஏற்று தீர்ப்பளித்த நீதிபதி! (Post No. 2545)

IMG_8847

Written by S Nagarajan

 

Date: 16  February 2016

 

Post No. 2545

 

Time uploaded in London :–  8-10 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

அதீத உளவியல் ஆற்றல்

 

 

பாக்யா 5-2-2016 இதழில்  அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

 ஆவி கொடுத்த ஆவணத்தை ஏற்று தீர்ப்பளித்த நீதிபதி!

.நாகராஜன்

 

 

IMG_1991

சிறப்பில் மனதை  மயக்கும் உன்னதமான ஆவி உலகம் எப்போதும் அப்படி இருக்கவே விரும்புகிறது”

                                – பிரபல எழுத்தாளர் விக்டர் ஹ்யூகோ

 

 

உலேண்ட்  லுட்விக் (Uhland Ludwig 1787-1852) என்பவர் பிரபல்மான ஜெர்மானியக் கவிஞர். இவரது சொத்து யாருக்குச் சேர வேண்டும் என்பது பற்றிய சிக்கலான வழக்கு இவர் இறந்து 58 ஆண்டுகளுக்குப் பின்னர் 1930ஆம் ஆண்டில் பெர்லின் நகரில் தொடரப்பட்டது. விசித்திரமான இந்த வழக்கை நீதிபதி எப்படி தீர்த்து வைக்கப் போகிறார் என அனைவரும் ஆவலுட்ன் எதிர்பார்த்திருந்தனர்.

 

 

ஒரு நாள் சொத்தின் மீது உரிமை கொண்டாடிய ஒரு பெண்மணி ஆவி உலகத் துணையை நாடினார். சற்று அரை இருட்டாக இருந்த அறையில் மீடியமும் அந்தப் பெண்மணியும் மற்றவர்களும் குழுமினர்.திடீரென ஒரு கை தோன்றியது. அது அந்தப் பெண்மணியின் கையைப் பற்றியது. அந்தக் கையில் மஞ்சள் நிறமுள்ள தோல் ஒன்று இருந்தது. அதை அந்தப் பெண்மணி பெற்றார்.

 

 

ஹோலோகிராப் பார்ச்மெண்ட் (Holograph parchment)  என்பது சொத்துக்குரிய ஒருவர் தன் கைப்பட  தோலில் அது யாருக்குச் சேரவேண்டும் என்பதை எழுதிக் கொடுக்கும் ஒரு ஆவணமாகும்.

மீடியம் கையில் பெறப்பட்ட தோல் ஆவணம் காலத்தால் பழுப்பேறிக் கிடந்தது. அதில் சொத்து பற்றிய விபரம் அடங்கிய இரண்டு செய்யுள்கள் – குறள் போல – இருந்தன. அதில் உலேண்ட் லுட்விக்கின் கையெழுத்தும் இருந்தது.

முதலில் கையெழுத்து கவிஞருடையது தானா என சரிபார்க்கப்பட்டது அந்த தோல் ஆவணத்தின் நிலை காலத்தால் அது முற்பட்டது என்பதையும் அதில் இருந்த செய்யுளின் நடை லுட்விக்கின் நடை தான் என்பதும் கையெழுத்தும் அவருடையது தான் என்பதும் உறுதி செய்யப்பட்டன.

 

 

வழக்கு விசாரணைக்கு வந்த போது சாட்சிகள் தோல் ஆவணத்தை மீடிய்மாக் இருந்த பெண்மணியின் கையில் ஆவி கொடுத்ததைத் தாங்கள் பார்த்ததாக சாட்சியம் கூறினர்.

நீதிபதி ஆவி கொடுத்த ஆவணத்தை ஏற்பதாகக் கூறி அந்த சொத்துக்கான உரிமையை அந்தப் பெண்மணிக்கே அளித்து தீர்ப்புக் கூறினார்.

 

 

ஆவி உலக ஆதரவாளர்கள் பெரிதும் இதை வரவேற்றனர். பரபரப்பான இந்த வழக்கில் ஆவி உலகமே வென்றது!

 

இதே போல  கவிஞர்கள் மட்டுமல்லை, ராஜதந்திரிகள் கூட ஆவி உலகை நம்புபவர்களாக இருந்ததை வரலாறு சுட்டிக் காட்டுகிறது. இங்கிலாந்தின் பிரதம மந்திரியாக நான்கு முறை பதவி வகித்தவர் டபிள்யூ. ஈ. க்ளாட்ஸ்டோன். (W.E.Gladstone 1809-1908).  மிகச் சிறந்த ராஜதந்திரி என்று உலகத்தினரால் பாராட்டப்பட்டவர் இவர்.

பிரப்ல நாவலாசிரியையான வயலட் ட்வீடேல் என்பவரின் அழைப்பை ஏற்று. அவர் வீட்டிற்கு க்ளாட்ஸ்டோன் வருகை புரிந்தார்.

 

 

அங்கு ஆவிகளை அழைக்கும் அமர்வு நடந்தது. அதில் அவர் கலந்து கொண்டு பல சோதனைகளை நடத்தி மிகவும் திருப்தியுற்றார். வில்லியம்ஸ் மற்றும் ஹஸ்க் ஆகிய இரு மீடியம்கள் க்ளாட்ஸ்டோன் ஆவி உலத்துடன் தொடர்பு கொள்ள உதவினர்.

 

 

இந்த அமர்வுகள் முடிந்த பின்னர் விஞ்ஞானிகளை நோக்கி அவர் கூறினார் இப்படி:” விஞ்ஞானம் இந்தக் காலத்தில் மிகப் பெரிய அரும் பணியை ஆற்றிக் கொண்டிருக்கிறது.ஆனால் விஞ்ஞானிகள் தங்களின் விதிகளுக்கும்  நடைமுறைகளுக்கும் ஒத்து வராத எதையும் கண்டு கொள்வதே இல்லை. ஆனால் ஆவி உலக ஆராய்ச்சியில் இப்போது பெரும் பணி ஒன்று உலகில் நடந்து வருகிறது. அதை உணருங்கள்” என்று ஆவி உலகத் தொட்ர்பு பற்றிய ஆராய்ச்சியைப் புகழ்ந்து பேசினார்.

க்ளாட்ஸ்டோன் தன் வீட்டிற்கு வந்தது உள்ளிட்ட ஆவி உலக அனுபவங்களை வயலட் ட்வீடேல், ‘தி கோஸ்ட்ஸ் ஐ ஹாவ் சீன்’ (The Ghosts I have seen) என்று புத்தகமாக எழுதினார்.

 

 

 

இது ஒரு புறமிருக்க, ஆவிகள் மூலம் கொலை வழக்குகளில் குற்றம் இழைத்தவரைக் கண்டு பிடிக்க முடியுமா என்பன போன்ற கேள்விகளை ப்லர் எழுப்புவதுண்டு!.

உலகில் அமெரிக்கா,இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் சிக்கலான கேஸ்களைக் கண்டுபிடிக்க போலீஸாரின் துப்பறியும் பிரிவு மீடியம்களின் உதவியை இப்போது நாடி வருகின்றது.. சைக்கிக் டிடெக்டிவ்ஸ் என்று அழைக்கப்படும் இவர்கள் ஆவிகளின்  துணையோடு நடந்தது என்ன என்பதை அக்கு வேறு ஆணி வேறாக அலசிச் சொல்லி விடுகின்றனர். நூற்றுக் கணக்கான கேஸ்களில் ஒன்றை மட்டும் இங்கு பார்க்கலாம்.

பெர்ரி சாரா என்ற பெண்மணி அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட்டில் 1973ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி கோரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாள். எவ்வளவோ முயன்றும் போலீஸாரால் அவரைக் கொன்றவர் யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.டிடெக்டிவ் ஜார்ஜ் மஜ்ஜாகேன் சைக்கிக் மீடியமான பசகரெல்லா டவுனி என்பவரின் துணையை நாடினார்.

 

 

அவர் மிகத் தெளிவாக,” கொலையாளியின் மீது ஆயில் நாற்றம் அடிக்கிறது.  அவர் ஒரு மெக்கானிக்கிற்கான யூனிஃபாரத்தை அணிந்தவர்.. அவரது சட்டையில் ‘E’ என்ற ஆங்கில எழுத்து காணப்படுவதால் அவர் பெயர் ‘E’ யில் ஆரம்பிக்கும். ஆனால் தப்பி ஓடும் சாமர்த்தியசாலி என்பதால் அவரைப் பிடிக்க நெடுங்காலம் ஆகும்” என்றார்.

 

 

அதே போலவே நடந்தது. 26 வருடங்கள் கழித்து 1999ஆம் ஆண்டு எட்வர்ட் என்பவர் சாராவைக் கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். டிஎன்ஏ  சோதனை மூலம் அவரது குற்றம் நிரூபணமானது. கொலை செய்த சமயத்தில் அவர் மெக்கானிக்காக வேலை பார்த்ததும் தெரிய வந்தது! அவர் கொலைக் குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டார்.

இது போல சுவாரசியமான கேஸ்கள் சைக்கிக் டிடெக்டிவ்களால் தீர்க்கப்பட்டுள்ளது ஆச்சரியப்பட வைக்கும் ஒன்று.

Thomas-Alva-Edison  Thomas-Alva-Edison-1847-1931

. அறிவியல் அறிஞர் வாழ்வில்

 

தாமஸ் ஆல்வா எடிஸனுக்கு தனது கணக்குப் பிரிவில் இருப்பவர்களைக் கண்டாலே அவ்வளவாகப் பிடிக்காது. தனது உள்ளுணர்வை வைத்தே கணக்கு விஷயத்தில் அனைத்தையும் அவர்  முடிவு செய்து விடுவார். அடிக்கடி அவர்  “இந்த கணித மேதைகளிடம் ஒரு விஷயத்தைப் பற்றிக் கூறி கணக்கைப் போட சொன்னால் அவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? ஒரு பெரிய பேப்பரை எடுத்துக் கொண்டு வரிசை வரிசையாக  கோடு போட்டு ஏ என்றும் பி என்றும் எக்ஸ் என்றும் ஒய் என்றும் எழுதி அந்த கட்டங்களில் ஏராளமான நம்பர்களைப் போட்டு நிரப்புவார்கள். கடைசியில் ஒன்றுக்கும் உதவாத ஒரு தப்பான விடையைத் தருவார்கள்.” என்று சொல்வது வழக்கம். தன் மனதிலேயே கணக்கைப் போட்டு உடனடியாக உள்ளுணர்வில் தோன்றியபடி விஷயத்தை முடித்து விடுவார் அவர்.

 

 

ஒரு முறை வெஸ்டர்ன் யூனியன் கம்பெனி அவரது ஒரு கண்டுபிடிப்புக்காக ஒரு லட்சம் டாலர் தொகையைத் தந்தது. அவ்வளவு பெரிய தொகையைப் பார்த்துப் பிரமித்துப் போனார் எடிஸன். கம்பெனி நிர்வாகத்திடம், “ எனக்கா இவ்வளவு பெரிய தொகை? இதை என்னிடம் தர வேண்டாம். நீங்களே பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். ஆண்டொன்றுக்கு ஆறாயிரம் டாலர் வீதம் பதினேழு ஆண்டுகளுக்கு எனக்கு நீங்கள் தாருங்கள்” என்றார். அந்த நிறுவனமும் அப்படியே செய்ய சம்மதித்தது!

**********

 

 

 

கும்பகோணம் கோவிந்தசெட்டி சொன்னது எல்லாம் பலித்தது: விவேகாநந்தர் (Post No 2541)

viveka

Written by S Nagarajan

 

Date: 15  February 2016

 

Post No. 2541

 

Time uploaded in London :–  8-24 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

அதீத உளவியல் ஆற்றல்

 

ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத அனுபவங்களும் ஆற்றலும்! – (4)

 

 

ச.நாகராஜன்

 

 talks-with-swami-vivekananda-400x400-imadzmseukfsp66n

தாயைப் பற்றிய கவலை

 

மேலை நாடுகளில் அற்புதங்களுக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஸ்வாமிஜி கூறி முடித்த போது அங்கு அருகிலிருந்த ஸ்வாமி யோகானந்தர், ஸ்வாமிஜியிடம் உங்கள் சென்னை அநுபவத்தை இந்த சிஷ்யருக்குச் சொல்லுங்களேன்” என்றார்.

 

உடனே ஸ்வாமிஜி தனது சென்னை அனுபவத்தைக் கூறலானார்.

ஸ்வாமிஜி சென்னையில் இருந்த சமயம் அது. அவர் சென்னையில் அக்கவுண்ட் ஜெனரலாக இருந்த மன்மத நாத் பட்டாசார்யாவுடன் இருந்து வந்தார். ஒரு நாள் இரவு அவரது தாயார் இறந்து விட்டது போல அவர் கனவு கண்டார். இது

அவர் மனதை பெரிதும் பாதித்தது.மேலை நாடு செல்வதற்காக மும்முரமான ஏற்பாடுகள் வேறு அப்போது நடந்து கொண்டிருந்தது.ஆகவே அவர் மனம் ஊசலாடியது.

 

 

ஸ்வாமிஜி தனது கவலையை மன்மத பாபுவிடம் தெரிவித்தார். உடனே அவர் உண்மையான நிலவரம் என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காக கல்கத்தாவிற்குத் தந்தி ஒன்றை அனுப்பினார்.

அத்துடன் ஸ்வாமிஜியின் கவலையைப் போக்க அவர், கும்பகோணத்திற்கு அருகில் உள்ள வலங்கைமான் என்னும் கிராமத்தில் குறி சொல்வதில் வல்லவரான கோவிந்த செட்டி என்று ஒருவர் இருப்பதாகவும்  அவரிடம் சென்று குறி கேட்கலாம் என்றும் சொன்னார்.

 

கோவிந்த செட்டி மிகவும் பிரபலமானவர். எதிர்காலத்தைச் சொல்ல வல்லவர். அவரை மைசூர் மன்னர், சென்னை மாகாண கவர்னர் எனப் பலரும் கண்டு குறி கேட்டதுண்டு! அவர் சென்றால் ஊர் மக்கள் எழுந்து நின்று மரியாதை செய்வர். அப்படிப்பட்டவரைச் சந்திக்க ஸ்வாமிஜியும் ஒத்துக் கொண்டார்.

 

vivek world

கும்பகோணப் பயணம்

 

அளசிங்கர், மன்மத பாபு, ஸ்வாமிஜி, இன்னுமொரு அன்பர் ஆகிய நால்வர் அடங்கிய குழு ரயிலில் ஏறி கும்பகோணம் சென்றது. அங்கிருந்து நடைப் பயணம் மேற்கொண்டு வலங்கைமான் சென்று கோவிந்த செட்டியை அவர்கள் சந்தித்தனர். அவர் ஒரு சுடுகாட்டின் அருகில் இருந்தார்.

 

பயமுறுத்தும் தோற்றம் அளித்த அவரைப் பார்க்கச் சற்று பயமாகத் தான் இருந்தது. அங்கிருந்த அவரது உதவியாளர்கள் அவர் அனைத்து ஆவிகளின் மீதும் கட்டுப்பாட்டைக் கொண்ட பெரும் சக்தியைக் கொண்டவர் என்று கூறினர்.

வந்தவர்களை அவர் கண்டு கொள்ளவே இல்லை. சிறிது நேரம் காத்திருந்த பின்னர் அவர்கள் அனைவரும் எழுந்து கிளம்ப யத்தனித்தனர்.

 

அப்போது கோவிந்த செட்டி அவர்களை இருக்குமாறு கூறினார்.

பின்னர் ஸ்வாமிஜியை அழைத்தார்.

 

சில படங்களை முதலில் வரைந்த அவர் மனதை ஒரு முகப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தார்.

அளசிங்கர் அவர் கூறியதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொன்னார்.

 

 

கோவிந்த செட்டி கூறிய எதிர்காலக் கணிப்பு

 

கோவிந்த செட்டி ஸ்வாமிஜியின் பெயர், அவரது வமிசாவளி, முன்னோர்களின் பெயர் ஆகிய அனைத்தையும் கூறினார். ஸ்வாமிஜியின் சஞ்சாரம் முழுவதும் ராமகிருஷ்ணர் அவருடன் கூடவே இருப்பதையும் அவர் உரைத்தார். ஸ்வாமிஜியின் தாயார் நலமாக இருக்கும் நற்செய்தியையும் அவர் கூறினார். அத்தோடு மதத்தை பிரச்சாரம் செய்யும் வகையில் தொலைதூர நாடுகளுக்குச் ஸ்வாமிஜி செல்வார் என்றும் அவர் கூறினார்.

இந்த நற்செய்திகளை எல்லாம் கேட்டு குழுவினர் மீண்டும் சென்னை திரும்பினர்.

 

 

இதைச் சொல்லி முடித்த ஸ்வாமிஜி யோகானந்தர் பக்கம் திரும்பி, “அந்த மனிதர் சொன்ன அனைத்தும் அப்படியே பலித்தது” என்று கூறி முடித்தார்.

 

 

யோகானந்தர் இப்போது ஸ்வாமிஜியை நோக்கி, “இதையெல்லாம் முன்னர் நீங்கள் நம்புவதில்லை என்பதால் இந்த அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டது போலும்” என்றார்.

 

 

உடனே ஸ்வாமிஜி, “ எதையும் நேரடி நிரூபணம் இல்லாமல் நம்புகின்ற முட்டாள் நான் இல்லை. ஆனால் மகாமாயையின் ஆளுகைக்குள் வந்தால் நான் பார்த்த மாயாஜால மர்மங்கள் எத்தனையோ! அடடா!! என்ன பேச்சைப் பேசிக்

 

கொண்டிருக்கிறோம் இந்த நாள் முழுவதும்! பிசாசு, ஆவிகளைப் பற்றி! பேயைப் பற்றி பேசுபவர்கள் பேயாகவே ஆகி விடுவார்கள். ‘நான் ஆத்மன்’ என்று நினைப்பவர்கள் அதாக ஆவார்கள்” என்று கூறி நிறுத்தினார்.

 

தேவையற்ற குப்பைகளால் உங்கள் மனதை நிரப்பாதீர்கள் என்று சீடர்களுக்கு எச்சரிக்கையும் கொடுக்க ஆரம்பித்தார் அவர்.

இரவு வெகு நேரம் ஆகவே, சீடர்கள் கலைந்தனர்.

 viveka lanka

கோவிந்த செட்டிக்கு ஸ்வாமிஜியின் அருள்

 

இனி கோவிந்த செட்டி சம்பவத்திற்கு மீண்டும் வந்து பின்னர் நடந்த ஒரு சம்பவத் தொடர்ச்சியைப் பார்ப்போம்.

ஸ்வாமிஜிக்கு கல்கத்தாவிலிருந்து சென்னைக்கு ஒரு தந்தி வந்தது – அவரது அன்னை நலமாய் இருப்பதாக!

கோவிந்த செட்டி கூறிய அனைத்தும் அப்படியே நடந்தது.

உலகப் புகழ் பெற்று ஸ்வாமிஜி இந்தியாவிற்குத் திரும்பினார்.

ஊர் ஊராக வரவேற்பு, ஆரவாரம், கோலாகலம்!

 

கும்பகோணத்திற்கு விஜயம் செய்த ஸ்வாமிஜிக்கு கோலாகலமான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

 

கோவிந்த செட்டியைப் பார்த்து நான்கு வருடங்கள் உருண்டோடி விட்டன.

 

வரவேற்புக் கூட்டத்தில் கோவிந்த செட்டியும் நிற்பதைப் பார்த்தார் ஸ்வாமிஜி.

 

அவரை அழைத்தார். தன்னைத் தனியே வந்து சந்திக்குமாறு கூறினார் ஸ்வாமிஜி. அவரும் அப்படியே தனியே பின்னர் வந்தார்.

அவரிடம் ஸ்வாமிஜி,” உங்களிடம் அற்புத சக்திகள் இருப்பது எனக்குத் தெரியும். அதனால் பணமும் புகழையும் நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். ஆனால் ஆன்மீக்ம் என்று எடுத்துக் கொண்டால் ஒரு அடி கூட நீங்கள் முன்னேறவில்லையே!. எங்கே ஆரம்பித்தீர்களோ, அங்கேயே நிற்கிறீர்களே! இது தானே உண்மை! கடவுளை நோக்கி என்றாவது உங்கள் மனம் சிறிதாவது சென்றுள்ளதா!” என்றார்.

 

 

கோவிந்த செட்டி ஸ்வாமிஜி கூறியதில் இருந்த உண்மையை மனமுவந்து ஏற்றுக் கொண்டார்.

 

பின்னர் ஸ்வாமிஜி,” கடவுளை நாடாவிட்டால் இந்த சக்திகளால் பயன் தான் என்ன! இறையானந்தத்தை ஒரு முறை நீங்கள் சுவைத்து விட்டால் அதன் பிறகு இவை எல்லாம் பயனற்றதாக ஆகி விடும்” என்று அருளினார்.

 

 

பின்னர் ஸ்வாமிஜி கோவிந்த செட்டியை கட்டி அணைத்துக் கொண்டார்.

 

என்ன ஆச்சரியம்! அன்றிலிருந்து கோவிந்த செட்டியின் அற்புத ஆற்றல்கள் அவரை விட்டு அகன்றன. இறை பக்தியிலேயே அவர் ஆழ்ந்து உலகைத் துறந்தவராக அவர் வாழ ஆரம்பித்தார்.

 

(ஸ்வாமிஜி தான் வாழ்ந்த நாள் முழுவதும் அன்னை மீது பக்தியும் மரியாதையும் கொண்டவராக விளங்கினார்.

39 ஆண்டுகள் 5 மாதங்கள் 24 நாட்கள் வாழ்ந்து 1902ஆம் ஆண்டு ஜூலை மாதம்  நான்காம் தேதி சமாதி அடைந்த ஸ்வாமிஜியின் மறைவு கேட்டு அன்னை புவனேஸ்வரி தேவி மாளா துக்கத்துடன் அழுது புரண்டார். அவரை மடத்து துறவிகளும் ஏனையோரும் சமாதானப் படுத்த முடிந்தமட்டில் முயன்றனர்.)          -தொடரும்

 

குறிப்பு: மேற் கூறிய சம்பவத்தை ஆங்கிலத்தில் படிக்க “TALKS WITH SWAMI VIVEKANANDA “ (RAMAKRISHNA MUTT) என்ற புத்தகத்தைப் பார்க்கலாம் 500 பக்கங்கள் அடங்கியுள்ள இந்த நூலில் ஸ்வாமிஜி பல விஷயங்களைத் தெளிவு பட விளக்குகிறார். மேலே உள்ள சம்பவம் 113 முதல் 116ஆம் பக்கம் முடிய உள்ள பக்கங்களில் இடம் பெற்றுள்ளது.

 

–சுபம்–