பஜனைப் பாடகருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை !

ramadasu

By London Swaminathan
Post No.966 Date 9th April 2014

இராமபிரான் 14 ஆண்டுகள் காடுகளில் வாழ்ந்தார். பாண்டவர்கள் 13 ஆண்டுகள் வனவாசம் செய்தனர். பத்ராசலம் ராமதாசர் 12 ஆண்டுகள் சிறையில் வாடி வதங்கினார். இனியும் தாக்குப் பிடிக்க முடியாது என்று உயிர்விட எண்ணிய நிலையில் ராமனும் லெட்சுமணனும் மாறுவேடத்தில் வந்து உதவிய அதிசயம் நடந்தது.

மஹாராஷ்டிரத்தில் சமர்த்த ராமதாசர், பஞ்சாபில் சுவாமி இராம தீர்த்தர், கேரளத்தில் சுவாமி ராமதாஸ் என்று பல சாது சந்யாசிகள் இராமன் பெயரில் வாழ்ந்தனர். இவர்களில் பத்ராசலம் ராமதாசர் (1620 – 1680) ஆந்திரப் பிரதேசத்தில் கோல்கொண்டா ,பத்ராசலம் ஆகிய இடங்களில் வாழ்ந்தவர் ஆவார்.
லிங்கண்ணா என்ற பிராமணருக்கு புத்திரனாக அவதரித்த ராமதாசரின் உண்மைப் பெயர் கோபண்ணா. அவர் கமலம்மா என்பவரைத் திருமணம் செய்துகொண்டு பஜனைப் பாடல்கள் பாடிக் காலம் கழித்து வந்தார். இவருக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் வட இந்தியாவில் கபீர்தாசர் என்ற புனிதர் வாழ்ந்து வந்தார். ராமதாசர் கனவில் வந்த கபீர்தாசர் அவருக்கு இராம நாமத்தை உபதேசம் செய்து இராமனை சிக்கெனப் பிடித்துக் கொள் என்று அருளுரை பகன்றார். அவ்வாறே கோபண்ணாவும் செயல்பட்டார். கோபண்ணாவுக்கு இராமதாசர் என்று பெயர் சூட்டியதும் கபீர்தாசர்தான்.

ஒரு சமயம், ராமதாசர் வீட்டில் பெரிய விருந்து நடந்தது. அப்போது அவர்களுடைய குழந்தை தாய் தந்தையரை விட்டுச் சென்று சமையல் அறையில் இருந்த கஞ்சித் தொட்டியில் விழுந்து மூழ்கியது. குழந்தை இறந்ததை அறிந்தும், விருந்து கெடக் கூடாதென்பதற்காக தாயார் யாருக்கும் தெரியாமல் மரணத்தை மறைத்து வைத்தார். எல்லோரும் வெளியே சென்றவுடன் துக்கம் வெடித்தது. ஓவென்று கதறி அழுதார். ராமதாசருக்கும் நிலைமை புரிந்தது. குழந்தையின் சடலத்தை இராம பிரான் விக்கிரகத்தின் முன்னால் கிடத்தி மனம் உருகப் பிரார்த்தித்தனர். அதிசயம் நடந்தது. தூக்கத்தில் விழித்தெழுந்த குழந்தை போல அந்தக் குழந்தை உயிருடன் திரும்பி வந்தது.

ராமதாசர், அவரிடமிருந்த பணத்தை எல்லாம் ஏழைகளுக்கு அன்னதானம் செய்வதில் செலவழித்தார். வறுமையின் எல்லைக் கோட்டைத் தாண்டியபோது வயிறு காயத் துவங்கியது. இராமனே வந்து உதவுவார் என்று காத்திருந்தார். ‘’முயற்சி திருவினை ஆக்கும்’’– என்பதை மனைவி நினைவு படுத்தினார்.
உடனே ஹைதராபாத்தில் இருந்து ஆட்சி புரிந்த தானி ஷா (1674-1699) என்ற முஸ்லீம் மன்னரை அணுகினார். அவரிடம் மாடண்ணா, அக்கண்ணா என்ற இரண்டு பிராமண அமைச்சர்கள் இருந்தனர். அவர்கள் ராமதாசுக்கு சொந்தக்கார்கள். அவர்கள் மூலமாக பத்ராசலத்தில் தாசில்தார் பதவி கிடைத்தது. அரசாங்கத்துக்கான வரிப் பணத்தை வசூலித்து ஹைதாராபாத்துக்கு அனுப்பவேண்டியது இவர் பொறுப்பு.
பக்தி முற்றிய நிலையில், மாணிக்கவாசகரைப் போல , இவரும் அரசாங்க பணத்தை கோவில் கட்டப் பயன்படுத்தினார். பத்ராசலம் இராமர் கோவிலுக்கு எல்லா வசதிகளையும் செய்து சுவாமிக்கு நகை, நட்டுக் களையும் வாங்கினார். பெரிய ஒரு தொகையை மன்னருக்கு பாக்கி வைத்தார். உண்மை நிலையை அறிந்த மன்னன் தானி ஷா, ராமதாசருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தார்.

bhadrachalam-sree-rama-temple-andhrapradesh

கடவுள் எப்போதும் அரசாங்க விதிகளை மீறச் சொல்வதே இல்லை. பத்ரம், புஷ்பம், பலம், தோயம் (இலை, பூ, பழம், நீர்) இவைகளை அளித்தாலே தமக்கு பரம திருப்தி என்று பகவத் கீதையில் கடவுளே சொல்லி இருக்கிறார். ஆகவே மாணிக்கவாசகர், ராமதாசர் போன்றோர் நாட்டின் சட்ட விதிகளை மீறுகையில் கடவுள் உதவிக்கு வாராமல் வாளா விருக்கிறார். இருந்தபோதிலும் இனியும் பக்தன் உயிர்வாழ மாட்டான் என்னும் நிலை வரும்போது, ஓடி வந்து உதவத் தவறுவதில்லை! தயங்கினதும் இல்லை!

ராமதாசர் 12 ஆண்டுக் காலம் சிறையில் வாடி வதங்கினார். மாணிக்கவாசகர் போலவே அரசாங்க ஊழியரின் சித்திரவதைக்குள்ளானார். பக்தரின் கோரிக்கையை நிறைவேற்ற எண்ணிய இராம பிரான், தனது தம்பி லெட்சுமணனையும் அழைத்துக் கொண்டு பூமிக்கு இறங்கிவந்தார். ஒரு ரெவின்யூ அதிகாரியின் சேவகர்கள் போல வேஷம் போட்டுக் கொண்டு பெரிய தொகையை எடுத்துக் கொண்டு மன்னர் தானி ஷா அரண்மனைக்கு வந்து கதவைத் தட்டினர். அர்த்த ராத்ரியில் இருவர் வந்தவுடன் அந்தப்புரப் பெண்களை அனுப்பிவிட்டு சேதி என்ன என்று கேட்டார்.

ரெவின்யூ அதிகாரி ராமதாசர் பாக்கி செலுத்தவேண்டிய பெருந் தொகையை கொடுத்து அனுப்பியதாகச் சொன்னார்கள். பணத்தைக் கொடுத்துவிட்டு அத்தாட்சிப் பத்திரத்தில் கையெழுத்தும் வாங்கினர் ராம லெட்சுமணர். உடனே ராமதாசரை விடுதலை செய்யவும் வேண்டினர். ராமதாசர் விடுதலை செய்யப்பட்டவுடன் நடந்த அதிசயத்தை அறிந்தார்.

தானிஷாவுக்கு தரிசனம் கொடுத்தனையே, எனக்கு தரிசனம் தரவில்லையே என்று ஒரு தெலுங்கு கீர்த்தனையும் பாடினார். தானி ஷாவுக்கு ஒரே மகிழ்ச்சி. முஸ்லீம் மன்னராக இருந்தபோதிலும் கோவில்களுக்கு வாரி வாழங்கிய மன்னர்களில் இவரும் ஒருவர். அவருடைய மன்னர்களில் இருவர் பிராமணர்கள். பின்னர் ராமதாசருக்கும் இராம பிரான் தரிசனம் கொடுத்தார்.
rama color

இராமதாசர் பாடிய நூற்றுக் கணக்கான தெலுங்கு கீர்த்தனைகள் தமிழ் நாட்டிலும் ஆந்திரத்திலும் இன்னிசைக் கச்சேரிகளில் இன்றும் பாடப்படுகின்றன. அவருடைய கீர்த்தனைகளில், “இராமா, நீ நாமம் ஏமி ருசிரா, எந்த ருசிரா என்ற பாடல் மிகவும் புகழ் பெற்ற பாடல் ஆகும். நாமும் பாடி மகிழ்வோம்:—

சுருக்கமான பொருள்: உன் பெயரை சொல்லச் சொல்ல இனிக்குதடா! தேன், தயிர், நெய், திராட்சை, கரும்பு, வாழைப்பழம், பேரீச்சம்பழம் ஆகியவற்றை விட சுவையானது உன் நாமம். அனுமனும், சிவனும் உன்னை துதித்து ஆனந்தம் அடைகின்றனர். நாரதனும் தும்புருவும் பாடி மகிழ்கின்றனர். சரணடைந்தவர்களைக் காப்பாற்றுபவன் என்பது உன் பெயரிலேயே இருக்கிறது. சீதை, விபீஷணன், பிரகலாதன், கஜேந்திரன் போன்ற எவ்வளவு பெயரை நீ காப்பாற்றி இருக்கிறாய். பத்ராசல ராமதாசிடத்திலும் அன்பு காட்டி அரவணைத்தாயே உன் நாமம் எவ்வளவு ருசியானது!!

girls singing

ஓ ராமா நீ நாமம் ஏமி ருசிரா?
ஓ ராமா நீ நாமம் எந்த ருசிரா?
மதுரசமுல கண்டெ ததி க்ருதமுல கண்டெ அதிகமொ
நீ நாமம் ஏமி ருசிரா?
த்ராக்ஷாரசமுல கன்ன இக்ஷு ரசமுல கன்ன
பக்ஷி வாஹன! நீ நாமம் ஏமி ருசிரா?
அஞ்சனதனய ஹ்ருத் கஞ்ச தளமுலண்டு ரஞ்சிலு
நீ நாமம் ஏமி ருசிரா?
சதா சிவுடு மடி சதா பஜிஞ்சேதி சதானந்தமாகு
நீ நாமம் ஏமி ருசிரா?
சரநன்ன ஜனமுல சரகுண ரக்ஷிஞ்சு
பிருது கலிகின நீ நாமம் ஏமி ருசிரா?
கரிராஜ ப்ரஹ்லாத தரணீஜா விபீஷணகுல காசின
நீ நாமம் ஏமி ருசிரா?
கதலி கர்ஜூரபல ரசமுல கதிகமு
பதித பாவன, நீ நாமம் ஏமி ருசிரா?
தும்புரு நாரதலு டம்பு மீராக
கானம்பு சேசேதி, நீ நாமம் ஏமி ருசிரா?
அரய பத்ராசல ஸ்ரீ ராமதாசுனி ப்ரேம நெளின
நீ நாமம் ஏமி ருசிரா?

rama kudai

இந்தப் பாட்டை பிரபல பாடகர்கள் பாடியது ‘’யூ ட்யூபிலும்’’ கிடைக்கும். கேட்டு மகிழுங்கள். பாடி மகிழுங்கள். இராமன் அருள் கிட்டும்!

contact swami_48@yahoo.com

Hindu Saint Jailed for 12 years!!

ramadasu

By London Swaminathan
Post No.965 Date 8th April 2014

Lord Rama spent fourteen years in the forest. Pandava brothers spent thirteen years in the forest. Hindu saint Bhadrachalam Ramadasa (1620- 1680 AD) spent 12 years in jail. The story of Ramadasa is full of interesting anecdotes. Lord Rama appeared before a Muslim king and asked him to release Ramadasa by paying the dues he owed.

That God rushes to the rescue of his devotees has been proved beyond doubt in many instances. We have two such interventions in the life of Bhadrachalam Ramadasa.

Ramadas was a revenue official in Bhadrachalam under Tani Shah (1674-99 AD), the Muslim ruler of Hyderabad. He had abiding faith in Lord Rama’s dispensation. His deep devotion to Rama developed when he saw saint Kabirdas in his dream. He advised him to hold on to lord Rama’s feet.

Once, when Ramadas and his wife were attending on the guests, their child slipped from their midst and fell into a cauldron full of hot porridge and died. The mother remained calm till the guests left after lunch and burst into tears. Ramadas came to know about the tragedy. Both placed the body at the feet of of Rama’s idol and wept. God answered their prayers. The child came alive as if it just woke from sleep.

Like the great Tamil saint Manikkavasagar, Ramadas also used the government money for building temples and supporting religious services. He rebuilt the temple of Rama in Bhadrachalam and spent all the revenue collections to buy jewels for the god. When Tani Shah came to know about the embezzlement he sent him to jail for twelve years.

bhadrachalam-sree-rama-temple-andhrapradesh

Though Ramadasa’s intention was good, he violated the law of the land. God never asks anyone to go out of the way to propitiate him. He says in the Bhagavad Gita that even leaves or flowers or water is enough for him to bless a devotee. But yet lord Rama answered Ramadasa’s intense prayers after twelve years! He and Lakshmana dressed as guards of a revenue officer went to the king and paid the big amount that was due. Both of them asked the king to release Ramadasa and disappeared. When Ramadasa came to know about it he told the king that he did not send anyone with the money. Tani Shah was happy that he had the darshan of Lord Rama. Those were the days when Hindus and Muslims lived supporting one another. Tani Sha’s ministers were Brahmins.

Ramadasa was very sad that Lord Rama and Lakshmana appeared before the Muslim king but did not give ‘Darshan’ to him. He sang in Telugu naming the Muslim king Tani shah in one of his compositions. Later he also had ‘darshan’ of Lord Rama.

Dhanyudai tani shah nivu
Nannu kannayya padamula kanula kannavu

The life of saint Ramadasa stands as an example for others. Earlier in his life he spent all his wealth in alleviating the sufferings of the poor by giving them food. When he had nothing more left he firmly believed that the lord would come to his help. When his wife reminded him that he should also put some efforts to get god’s help he approached the king through his relatives for a job. He got the job of a revenue collector.
Ramadasa’s father Linganna was an orthodox Vaishnava Brahmin. Ramadasa married Kamalamma and spent his early life in Golkonda. His relative Akkanna and Madanna were ministers to Tani Shah. Through them he got the revenue officer’s job.

Hundreds of Ramadasa’s Telugu compositions are very popular in Tamil Nadu and Andhra Pradesh. Ramadasa’s boyhood name was Kancherla Gopanna. It is believed that Saint Kabir, when initiated him into the realms of spirituality, gave him the name Ramadasa. Since Kabir lived a few centuries before Ramadasa, scholars believe that the initiation happened in a dream.

girls singing

O Rama nee naama memi ruchira!

One of his compositions O,Rama Ninamamu Emi Ruchira ,Enta Ruchira? ( O Rama How tasty your name?) is very popular. Here is the composition:
O Rama nee naama memi ruchira
O Rama, how tasty your name is
Sri Rama nee naama mentha ruchira
Sri Rama, how delicious your name is
Madhu rasamula kante dadhi ghruthamula kante adhikamou
It is sweeter than nectar and sweeter than yoghurt or ghee
nee namam emi ruchira
Your name is so tasty
Draksha phalamula kanna ikshu rasamula kanna
It is tastier than grapes and tastier than sugar cane juice
Pakshi vahana nee namam emi ruchira
O lord who rides on an eagle (Garuda), you name is so tasty
Anjana thanaya hruth kanja dalamulandu ranjillu
O Rama, your name resides in the petals of a lotus flower which is the heart of Lord Hanuman who is the son of Anjani
nee namam emi ruchira
Your name is so tasty
Sada sividu madi sada bhajinchedi Sadanamdamagu
Lord Shiva chants your name all the time, chanting your name gives happiness all the time
namam emi ruchira
Your name is so tasty
Saramuleni samsaramunaku Shanthakaramagu
To this flavourless life, your name gives peace
namam emi ruchira
Your name is very tasty
Sarananna janamula saraguna rakshimchu
You come straight away to protect people who ask for your help
Birudu kaligina namam emi ruchira
That is what your title is and your name is so tasty
Kari raja Prahlada Dharanija Vibhishanula kachina
Kari raja (Gajendra), Prahlada and Goddess Sita who is the daughter of goddess earth were saved by saying your name
nee namam emi ruchira
your name is very tasty
Kadali Kharjura phala rasamula kadhikamu
Your name is tastier than the fruit juices of banana and dates
pathitha pavana nee namam emi ruchira
You save people who are unfortunate (or unlucky). Your name is very tasty.
Thumburu Naradulu dambu meeraga
Sages like Thumburu and Narada very proudly
ganambu chesedi nee namam emi ruchira
sing your name(or sing your stories). Your name is very tasty.
Araya Bhdrachala Sri Ramadasuni prema nelina
O Rama, you looked after Bhadrachala Ramadasu with affection
namam emi ruchira
Your name is very tasty.

This song is available on You Tube in the voice of famous musicians.

Contact swami_48@yahoo.com

ஸ்ரீ ராமர் மீது முத்து சுவாமி தீட்சிதரின் க்ருதிகள்

stamps of dikshitar

புத்தகத்தில் இருந்து திரட்டி அளிப்பவர்; லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்- 963 தேதி–8, ஏப்ரல் 2014.

“ மாஹிரி ராக ‘மா மவ ரகுவீர’ கீர்த்தனையில் ‘த்வாம் ஆஹூ: ஈசாதய: தத்வமிதி’ என்கிற சொற்றொடரால் சிவன் முதற்கொண்டு எல்லோரும் இராமரை தத்வ ஸ்ரூபமாகவே சொல்கிறார்கள் என்கிறார் தீக்ஷிதர்.

‘ராமச்சந்திரேன சம்ரக்ஷிதோஹம்’ என்கிற பாட்டில் பிரம்ம விஷ்ணு ருத்ரஸ்வரூபம் என்று போற்றுகிறார்.

ஸ்ரீ ரஞ்சனி ராக ‘ஸ்ரீ ராமசந்திரோ கீர்த்தனையில் விஸ்வாமித்ரருடைய யாகத்தைக் காப்பாற்றினது, தாடகை வதம், மிதிலா நகரப் பிரவேசம், வில் ஒடித்தல், சீதா கல்யாணம், பரசுராம கர்வ பங்கம் வரை எழுதிவிட்டார்.

அஹல்யைக்கு சாப விமோசனம் செய்தது’ ‘பாத ஜபாம் சுபாலித அஹல்யம் என்று ஓர் இடத்திலும் ‘அஹல்யா தேவி சாப விமோசனம் சுசரித்திரம்’ என்று மற்றோர் இடத்திலும் குறிப்பிடுகிறார்.

சுபாஹு மாரீச கர தூஷணாதி ஹரணாந்தக ரூபிணோ’ என்று சுபாஹு மாரீசன், கரன், தூஷணன் முதலியவர்களைக் கொன்றது தன்யாசிராக ‘இராமசந்திராதன்யம்’ கீர்த்தனையில் இடம் பெறுகிறது.

hindi rama

சபரி மோக்ஷம் ஒரு பாட்டில் சொல்லப்படுகிறது. தர்பசயனம், விபீஷணனை ரக்ஷித்தது, ராவணனைக் கொன்றது, வானரங்களுக்குப் ப்ரீதியாய் இருத்தல், அனுமனுக்கு மதிப்பு இவை ஆங்காங்கே காணப் படுகின்றன.

ஒரு பாட்டில் சாம தான பேதாதி சத்ஷஷ்ட்ய ஸஜ்ஜன பாலயஸ்ய துஷ்ட ஹரஸ்ய’ என்கிற சொற்றொடரில் சாம தான பேத தண்டம் என்கிற நால்வகை யுக்திகளையும் துஷ்டர்களை அடக்கி நல்லோர்களைக் காக்க கையண்டவர் இராமர் என்று வர்ணிக்கிறார்.

முடிவில் சிகரம் வைத்தாற் போல் எல்லோராலும் பாடப்படுகிற மணிரங்கு ராக, ‘மாமவ பட்டாபிராம’வில் அனுமனால் பாடப்பட்டு, பரத லக்ஷ்மண சத்ருக்ன விபீஷண சுக்ரீவ பிரமுகர்களால் சேவிக்கப்பட்டு, நவரத்ன மண்டபத்தில் மணிகள் பூண்ட சிம்ஹாசனத்தில் சீதா சமேதராய் கொலுவிருக்கும் பட்டாபிஷேகக் காட்சியை அற்புதமாக நம்முன் கொண்டு வருகிறார்.”

உதவிய புஸ்தகம்:
“ஷண்மதமும் முத்துஸ்வாமி தீக்ஷதரும்” — எழுதியவர்: என்.பார்த்தசாரதி, மேற்கு மாம்பலம், சென்னை-33. இது ஒரு அருமையான புத்தகம் – 24 பக்கங்களில் ஒரு கலைக் களஞ்சியம் அளவுக்கு தகவல்கள் நிறைந்த நூல். சங்கீதப் ப்ரியர்கள் அனைவரும் படிக்கவேண்டிய நூல்.

contact swami_48@yahoo.com

Music Therapy for Pain Relief

Johann_Sebastian_Bach

When the drugs don’t work, listening to music can be the perfect tune-up for your health, it has been claimed.

It might sound farfetched but listening to Bach can ease back ache and the Eel’s Novocaine For The Soul could help dull pain, shows a new survey.

Johann Sebasitan Bach (1685—1750) was a German composer, organist and violinist
Now chemists at Lloyds Pharmacy are trialling the tuneful alternative therapies when patients ask them to Please Release Me from their pain.
India1985-Handel_Bach

Four in ten people living with persistent pain say listening to their favourite tunes helps them relax and feel better.

Pop, classical and rock and indie music are the most effective genres, according to the study.
And the songs that work best include Bridge over Troubled Water by Simon and Garfunkel, Robbie William’s Angels, Albatross by Fleetwood Mac and The Commodore’s hit Easy.

belgium

The high street chemist questioned 1500 people and learned two thirds of patients aged 16 to 24 got the most help by listening to music to manage their aches and pains.

Prof David Bradshaw, of the University of Utah’s pain management centre, said of the survey: ‘No matter how anxious you may feel, if you can get absorbed in the music it can help with your pain.
‘But choose music you like and know well, as humming or singing along can distract you from your pain.

(Metro News paper, London, 23-10-2013)

ஏற்கனவே வெளியான எனது சங்கீதம் தொடர்பான கட்டுரைகள்:
1.இசைத் தமிழ் அதிசயங்கள், 2.சங்கீத ரகசியம், 3.தியாகராஜருடன் 60 வினாடி பேட்டி, 4.முத்துசுவாமி தீட்சிதர் செய்த அற்புதங்கள்
J bach

வலியைப் போக்க சங்கீதம் உதவும்!

India1985-Handel_Bach

மன வலியைப் போக்கவும் உடல் வலியை நீக்கவும் இசை உதவும் என்பது அவ்வப்பொழுது பத்திரிக்கைகளில் வெளியாகும் செய்திதான். எத்தனை வலி நிவாரண மாத்திரைகளை விழுங்கினாலும் வலி குறைவதே இல்லை என்பவர்களுக்கு லாய்ட்ஸ் பார்மசி நடத்திய ஆராய்ச்சி ஊக்கமூட்டும் தகவலைத் தருகிறது.

‘பாக்’ Bach என்பவர் வடிவமைத்த மேல்நாட்டு சங்கீதம் பலருடைய நோய்களைப் போக்கியுள்ளது.. பத்து பேரைக் கேள்வி கேட்டால் அதில் நாலு பேராவது, தங்களுக்குப் பிடித்த இசையைக் கேட்பது மனதுக்கு நிம்மதி தருவதாகவும் பதட்டத்தைத் தணிப்பதாகவும் கூறுகின்றனர்.
J bach

(ஜொஹன் செபஸ்டியான் பாக் என்பவர் கெர்மன் நாட்டு இசைக் கலைஞர். வயலின், ஆர்கன் முதலிய வாத்தியங்களை வாசித்த கலைஞர், பல பாடல்களை இயற்றியவர். வாழ்ந்த காலம் 1685—1750)
பாப் இசை, கர்நாடக இசை, மற்றும் சில பாடல்களை வாயாலேயே முனகுவது ஆகியன வலிக்கு நிவாரணம் தரும்.

1500 பேரிடம் கேள்வி கேட்ட லாயிட்ஸ் பார்மசி என்னும் மருந்துக் கடை நிறுவனம் 16 வயது முதல் 24 வயதுடையோர் தான் சங்கீதத்தில் ஆர்வம் காட்டுகின்றனர் என்கிறது.
ஒருவர் இசை என்னும் இன்ப வெள்ளத்தில் மூழ்கிவிட்டால் என்ன கவலை இருந்தாலும் அது சூரியனைக் கண்ட பனி போல விலகிவிடும் என்று உடா பல்கலைக்கழகத்தில் வலி நிவாரணப் பகுதி தலைவர் பேராசிரியர் டாவிட் பிராட்ஷா கூறுகிறார்.

ராக், பாப், கர்நாடக சங்கீதம் போன்ற வகைப் பாடல்கள் மக்களுக்கு உடல் வலியைக் குறைக்கும் பட்டியலில் மேலிடத்தில் நிற்கின்றன.

எந்தப் பாடல் பிடிக்கிறதோ அதைக்கேட்பதும் வாயால் முனகுவதும் பாடுவதும் மனதை உடல் வலியிலிருந்து திசை திருப்பவாவது உதவும் என்றும் அவர்கூறினார்.

Johann_Sebastian_Bach

ஆதாரம்: லண்டன் மெட்ரோ 23-10-2013;மொழிபெயர்ப்பு- லண்டன் சுவாமிநாதன்

ஏற்கனவே வெளியான எனது சங்கீதம் தொடர்பான கட்டுரைகள்:
1.இசைத் தமிழ் அதிசயங்கள், 2.சங்கீத ரகசியம், 3.தியாகராஜருடன் 60 வினாடி பேட்டி, 4.முத்துசுவாமி தீட்சிதர் செய்த அற்புதங்கள்

தொடர்பு முகவரி: swami_48@yahoo.com
belgium

இசை தரும் நோயற்ற வாழ்வு! – 6

25FR-TYAGARAJA2_1340661g

பாக்யா 12-10-2012 இதழில் 86ஆம் அத்தியாயமாக வெளியாகிய இசை தரும் நோயற்ற வாழ்வு கட்டுரையின் இறுதிப் பகுதியை மகிழ்வுடன் அளிக்கிறோம்

                                                                  ச.நாகராஜன்

மேளகர்த்தா ராகங்கள் எனப்படும் அடிப்படை ராகங்கள் 72.

“அவை உடலில் உள்ள 72 முக்கிய நாடிகளைக் கட்டுப்படுத்துகிறது. குறிப்பிட்ட ராகத்தின் லக்ஷணத்தை உணர்ந்து அனுபவித்துப் பாடுபவர் அதற்குரிய நாடியைக் கட்டுப்படுத்துவார்” என்று பழைய இசை நூல்கள் தெரிவிக்கின்றன. சங்கீத மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும் தியாகராஜ ஸ்வாமிகள், முத்துசாமி தீக்ஷிதர் சியாமா சாஸ்திரிகள் ஆகியோர் வாழ்வில் நடந்த ஏராளமான சம்பவங்கள் இசையின் ஆற்றலை உணர்த்துபவை.

 

ஜோதிஸ்வரூபிணி என்ற ராகத்தை இசைத்து குத்துவிளக்கை நெருப்புக்குச்சியின் உதவியின்றி தியாகராஜ ஸ்வாமிகள் ஏற்றி அருகிலிருந்தோரை வியக்க வைத்தார். ராகத்தின் ஸ்வரங்களுக்கு ஏற்ப எரியும் சுடர் ஓங்கியும்  மங்கியும் எரிந்ததையும் அனைவரும் பார்த்து அதிசயித்தனராம். பிலஹரி ராகத்தில் அமைந்த அவரது நா ஜீவ தாரா என்ற கீர்த்தனை இறந்தவனை எழுப்பிய சம்பவமும் வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது. முத்துசாமி தீக்ஷிதரின் நவகிரக கீர்த்தனைகளைப் பாடினால் வயிற்று வலி நீங்கும் (குறிப்பாக ப்ருஹஸ்பதே என்று தொடங்கும் குரு பகவானைப் பற்றிய கீர்த்தனை) என்பதும் சியாமா சாஸ்திரிகளின்  துரு சுகு கீர்த்தனை ஆரோக்கியத்தை மேம்படச் செய்யும் என்பதும் இசை விற்பன்னர்களின் நம்பிக்கை.

 

ரத்தக் கொதிப்பை நீக்க அசாவேரி, தலைவலி போக சாரங்கா, தர்பாரி

மற்றும் ஜய்ஜயவந்தி காச நோய் போக மேகமல்ஹார் நெஞ்சு வலி நீங்க தர்பாரி, கோபமும் படபடப்பும் போக ஜய்ஜயவந்தி புன்னாகவராளி, ஸஹானா, மனச்சோர்வை நீக்க நடநாராயணி, தோல் சம்பந்தமான வியாதிகள் நீங்க அசாவேரி, வயிற்று வாயு நீங்க ஜோன்புரி பக்கவாதம் நீங்க பைரவி மற்றும் ஆஹிர்பைரவி பசியுணர்வு இல்லாமல் இருப்பதைப் போக்க தீபக் இதய சம்பந்தமான நோய்களைத் தீர்க்க கல்யாணி., சங்கராபரணம் மற்றும் சாருகேசி என்று நோய் தீர்க்கும் ராகங்களின் பட்டியல் நீளுகிறது.

 

குறிப்பிட்ட ஒரு இசையைக் கேட்டவுன் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. எண்டார்பின், கார்டிஸால் ஏசிடிஹெச்  இண்டர்ல்யூகின்-1 இம்யூனோக்ளோபிலுன்-ஏ போன்ற பயோகெமிக்கல்கள் இசையைக் கேட்டவுடன் பெரும் மாறுதலை அடைகின்றனவாம். எண்டார்பின்கள் சிக்கலான  மூளை அமைப்பில் உணர்வுகளைத் தூண்டுகின்றனவாம். நல்லதொரு இசையைக் கேட்டால் இவை நமது நரம்பு மண்டலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி அதன் விளைவாக ரத்த அழுத்தம் உள்ளிட்ட பலவற்றை சீராக ஆக்குகின்றனவாம்.இவை அறிவியல் ஆராய்ச்சிகள் தரும் தகவல்கள்!

 

அமெரிக்க மருத்துவமனைகளில் சிலவற்றில் கோரக் கல்யாண் ராகம் ஹைபர்டென்ஷன் நோயைத் தீர்ப்பதற்கு இசைக்கப்படுகிறது! ராக்ஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஓஜே.ஷ்லெர் எலும்பு மஜ்ஜை பதியம் செய்து கொண்ட நோயாளிகளுக்கு வலியைக் குறைக்கவும் புதிய மஜ்ஜைகள் ரத்த செல்களை உருவாக்கவும் இசையின் உதவியை நாடுகிறார்.

 

மேளகர்த்தா ராகங்களான 72ஐத் தவிர்த்து ஜன்ய ராகங்கள் எனப்படும் ராகங்கள்  எண்ணிக்கையில் அடங்காதவை. ஆக ராகங்கள் சங்கீதத்தை ஒரு சாகரமாக ஆக்குகின்றன.

 

சென்ற நூற்றாண்டில் திரைப்படத் துறை உருவானவுடன் புதிய இசைப் புரட்சி ஒன்று உருவானது. ராக சாகரத்தில் முத்துக் குளித்து நூற்றுக்கணக்கான திரைப்பட இசையமைப்பாளர்கள் பல்லாயிரக்கணகான பாடல்களுக்கு இசையை அமைக்க ஆரம்பித்தனர். திரைப்படங்கள்  ஜன ரஞ்சகமாய் ஆகவே திரைப்படப் பாடல்கள் மெல்லிசையாக மலர்ந்து கோடிக் கணக்கானோரைப் பரவசப்படுத்த ஆரம்பித்தன.இவற்றில் அநேகமாக பிரபலமான ராகங்கள் அனைத்தும் கையாளப்பட்டு விட்டன!

 

தமக்குப் பிடித்த ராகங்களையும் அவற்றில் அமைக்கப்பட்ட

பாடல்களையும் அட்டவணைப்படுத்திக் கொண்டு அவற்றைக் கேட்டு மகிழ்ந்து உடல்நலத்தை யார் வேண்டுமானாலும் மேம்படுத்திக் கொள்ளலாம். அத்தோடு உரிய நிபுணர்களை அணுகி வியாதியைப் போக்கிக் கொள்ள அறிவுரைகளைக் கேட்டு சிகிச்சை பெற்று பூரண குணத்தையும் அடையலாம்.

 

இந்த வகையில் உதாரண முயற்சியாக சில ராகங்களும் அவற்றில் அமைக்கப்பட்ட சில திரைப்படப் பாடல்களும் கீழே தரப்பட்டுள்ளன. இது சிறிய “மாதிரி அட்டவணை” தான் என்பதால் இதைப் பார்த்து ஏராளமான ராகங்களையும் அவற்றில் அமைக்கப்பட்ட பாடல்களையும் வாசகர்களே அமைத்துக் கொள்ளலாம்; இசை தரும் நோயற்ற வாழ்வைப் பெற்று மகிழலாம்!

========================================================================

ராகம்                   பாடல்                            படம்

========================================================================

மோஹனம்         ஆஹா இன்ப நிலாவினிலே       மாயாபஜார்

சுபபந்துவராளி      ஆயிரம் தாமரை மொட்டுக்களே      அலைகள்

ஓய்வதில்லை

சிந்துபைரவி       அன்னக்கிளி உன்னைத் தேடுதே     அன்னக்கிளி

ப்ருந்தாவன சாரங்கா சிங்காரக் கண்ணே  வீரபாண்டிய கட்டபொம்மன்

சுத்த தன்யாசி     சிறு பொன்மணி                 கல்லுக்குள் ஈரம்

கமாஸ்            சித்திரம் பேசுதடி                    சபாஷ் மீனா

ஹிந்தோளம்     அழைக்காதே    மணாளனே மங்கையின் பாக்கியம்

கௌரி மனோஹரி கவிதை அரங்கேறும் நேரம்     அந்த 7 நாட்கள்

புன்னாகவராளி     நாதர் முடி மேலிருக்கும்      திருவருட்செல்வர்

கானடா            பொன் என்பேன்            போலீஸ்காரன் மகள்

—————————————————————————————————————————–

 

அறிவியலும் பாரம்பரிய அனுபவமும் ஒன்று சேர்ந்து  அபூர்வமான பலன்களை ஒரேமனதாக அறிவிக்கும் துறை இசை தான் என்பது எவ்வளவு வியப்பான விஷயம்!! இசை மூலம் ஆல்பா நிலையை அனைவரும் எய்தலாமே!

 Last in the series written by Santanam nagarajan; for 600 more English and Tamil articles, please browse through the blog; swami_48@yahoo.com

*********

 

இசை தரும் நோயற்ற வாழ்வு!- 5

25FR-THIYAGARAJAR_1340664g

Picture of Saint Thyagarajar

 

ச.நாகராஜன்

   

டாக்டர் கலினா மிண்ட்லின் என்னும் பெண்மணி மூளை அலைகளை இசை வடிவமாக மாற்றும் ஒரு அலாக்ரிதத்தின் மூலமாக ஒவ்வொருவருக்கும் உகந்த இசையைக் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கிறார். ஒவ்வொருவரின் உடல் மற்றும் மனப் பக்குவமும் வேறு வேறாக இருப்பதால் அவரவர்க்குரிய இசையை அவரவர் பயன்படுத்த வேண்டும் என்பது அவர் அறிவுரை.

 

டாக்டர் பீட்டர் கை மானர்ஸ் என்பவர் பிரிட்டனைச் சேர்ந்த சிறந்த டாக்டர். இவர் ஒரு ஆஸ்டியோபத். அதாவது தசைகளையும் எலும்புகளையும் சரியாக இருக்குமாறு செய்தாலேயே உடல் ஆரோக்கியம்  மேம்படும் என்னும் கருத்தை உடைய ஆஸ்டியோபதி மருத்துவ நிபுணர். சுமார் பத்து வருட காலம் இவர் ஒலியின் மூலம் சிகிச்சை செய்வதைப் பற்றி ஆராய்ந்தார்.  டிஸீஸ் (disease = dis ease; out of tune ness) என்னும் ஆங்கில வார்த்தைக்குப் பொருள் உடல் இயல்பான டியூனில் இல்லாமல் இருப்பது தான் என்று கூறும் அவர், ஆயிரக்கணக்கான ஒலி அலைகளை எழுப்பும் இசைக் கருவியை அமைத்து உடலில் ஏற்படும் நோய்களை இசை மூலம் போக்க ஆய்வுகளை மேற்கொண்டார்.

 

அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் ஷெர்ரி எட்வர்ட்ஸ் என்னும் பெண்மணி  சிக்னேச்சர் சவுண்ட் ஒர்க்ஸ் (signature sound works) என்ற ஒரு இசை சிகிச்சையை ஆரம்பித்தார். எப்படி ஒவ்வொருவருக்கும் கை ரேகை பிரத்யேகமாகத் தனியாக இருக்கிறதோ அதே போலவே குரலும் ஒவ்வொருவருக்கும் தனித் தன்மையுடன் பிரத்யேகமாக உள்ளது என்றும் ஒருவரின் குரலைப் பகுத்துப் பார்ப்பதன் மூலம் அவர் உடலாலும் உள்ளத்தாலும் கொண்டுள்ள வியாதிகளைக் கண்டறிய முடியும் என்றும் அவர் கூறினார்.சிகிச்சைக்கு வருவோரின் குரலைப் பகுத்துப் பார்த்தவுடன் அவரது நோயைத் தீர்க்கும் ஒலி அலைகளை இயர் போன் மூலம் அவரைக் கேட்கச் செய்து அவரைக் குணப்படுத்துவது அவரது வைத்திய முறையாக அமைந்தது.

 

ராபர்ட் மன்ரோ என்னும் டாக்டர் மூளையின் இடப்பக்கத்தையும் வலப்பக்கத்தையும் லயத்துடன் ஒருங்கிணைக்க வெவ்வேறு டோன்களை – இசை ஒலி அலைகளை- பல இசைக் கருவிகள் அமைந்த ஒரு சவுண்ட் போர்டிலிருந்து எழுப்பி சிகிச்சையைச் செய்தார்.

 

மூளைக்கும் இசைக்கும் உள்ள தொடர்பை விரிவாக ஆராய விஞ்ஞானிகள் முனைந்தனர். மனிதனின் கேட்கும் திறமையைப் பற்றிச் சொல்லப்போனால் மூளையில் உள்ள கேட்கும் மையம் ஒரு வினாடிக்கு பத்து லட்சம் பிட்ஸ்களை (one million bits per second) உள்ளிடுகிறது! ஒரு பிட் (bit) என்பது தகவலின் மிகச் சிறிய கூறு ஆகும்.ஒன்று அல்லது பூஜ்யம் என்று இருக்கும் இந்த பிட் பற்றிய அமைப்பை ஹங்கேரிய விஞ்ஞானியான லியோ சிலாஸ் முதன் முதலில் கண்டுபிடித்தார். ஐம்புலன்களிலிலிருந்தும் தலைக்கு வரும் உள்ளீடுகள் வினாடிக்கு சுமார் ஒரு கோடியே பத்து லட்சம் பிட்ஸ் ஆகும்.நமது தலை ஏன் சூடாக இருக்கிறது என்பது இப்போது புரியும்!

stamps music

எவ்வளவு தகவல்களை அது பகுத்துப் பார்த்து தேவையற்ற தகவல்களை ஒதுக்கித் தள்ள வேண்டியிருக்கிறது!! விஞ்ஞானிகளுக்கு இன்று வரை புரியாத விஷயம் இது தான்! எப்படி மூளை தனக்கு வரும் ஏராளமான தகவல்களை இனம் பிரித்து ஒதுக்க வேண்டியவற்றை ஒதுக்கி அவசரமானவற்றிற்கு முன்னுரிமை அளிக்கிறது! பிரம்மாண்டமான நவீன கருவிகளை வைத்து அலசி ஆராய்ந்ததில் சாதாரண பிரக்ஞை நிலையில் ஒரு மனிதன் வினாடிக்கு 16 முதல் 20 பிட்ஸ் தகவலையே பகுத்துப் பார்க்க முடிகிறது. மிக உயரிய நிலை என்றால் வினாடிக்கு 50 பிட்ஸ் தான் பகுத்துப் பார்க்க முடிவதன் உச்ச எல்லை! புரபஸர் ஹெல்மர் ஃப்ராங்க் என்பவர் ஒலி அலைகளை ஆராய்ந்து வினாடிக்கு 16 தாளத் தட்டுகள் (beats) வரையில் தனித் தனியாக ஒருவரால் கேட்க முடிகிறது என்றும் அதற்கு மேல் தொடர்ந்த ஒலியலைகளாகவே கேட்க முடிகிறது என்றும் ஆய்வின் முடிவில் கண்டறிந்துள்ளார். ஆகவே வினாடிக்கு 16 முதல் 20 பிட்ஸ் தகவலையே பகுத்துப் பார்க்க வல்ல மூளையானது  வினாடிக்கு பத்து லட்சம் பிட்ஸ் தகவல் வரும் போது எவ்வளவு பெரிய நினைவாற்றல் வங்கியைக் கொண்டிருக்க வேண்டும்; அதில் தேவையானவற்றை எப்படிப்பட்ட ஆச்சரியமூட்டும் விதத்தில் தேர்ந்தெடுக்க வேண்டும்! இசை அல்லது ஒலி அலைகளைப் பற்றிய வேறு பல ஆராய்ச்சிகளும் வியப்பூட்டும் பல உண்மைகளை அவ்வப்பொழுது தெரிவித்துக்கொண்டே வருகின்றன!

tamil instruments

அமெரிக்கன் மியூசிக் தெராபி அசோசியேஷன் 5000 இசை சிகிச்சை நிபுணர்களைக் கொண்டுள்ள ஒரு அமைப்பு. க்ளீவ்லாண்டில் உள்ள செயிண்ட் ல்யூக் மெடிகல் செண்டரில் பணியாற்றும் டாக்டர் வால்டர் க்வான்,” இசை சிகிச்சை ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு நல்ல சிகிச்சையை அளிக்க வல்லது. புற்று நோய் உள்ளவர்களுக்கு உடலுடன் மனம் கொண்டுள்ள தொடர்பு மிக முக்கியமானது. மன அழுத்தம் இல்லாத நோயாளிகள் கான்ஸர் சிகிச்சையில் நல்ல பலனைப் பெறுகின்றனர் என்பதால் அவர்களுக்கு மியூசிக் தெராபி மூலம் நோய் எதிர்ப்பு ஆற்றலை கூட்டுகிறோம்” என்று உறுதி படத் தெரிவிக்கிறார்.

 

(பாக்யா 5-10-2012 இதழில் 85ஆம் அத்தியாயமாக வெளியாகிய இசை தரும் நோயற்ற வாழ்வு கட்டுரையின் ஐந்தாம் பகுதியை மகிழ்வுடன் அளிக்கிறோம்)

The above article is the fifth in series written by Santanam Nagarajan of Bangalore.

Pictures are taken from various sites;thanks.

Contact swami_48@yahoo.com

 

***********************

 

இசை தரும் நோயற்ற வாழ்வு!– Part 4

music chart

ச.நாகராஜன்

 

கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழ மன்னனின் அரண்மனையில் தேவ கானத்தை ஒரு பெண்ணும் மானுட கானத்தை ஒரு பெண்ணும் இசைத்தனர். மன்னன் மானுட கானம் பாடிய பெண்ணைப் போற்றிப் பரிசளித்தான். இதனால் மன வருத்தமுற்ற தேவ கானப் பெண் அரண்மனையிலிருந்து வெளியேறி கோவில் தோறும் தன் தேவ கானத்தை இசைக்கலானாள். ஒரு முறை இதைக் கேட்ட நாதமுனிகள் உள்ளம் பரவசமாகி அதைப் பாராட்டினார். மன்னன் அவரைத் தன் அரண்மனைக்கு அழைத்து தேவ கானமே சிறந்தது என்று கூறிய அவரது இசைத் திறமையை நிரூபிக்க வேண்டினான். நாதமுனிகள் பல்வேறு எடையுள்ள கற்களைச் செய்யப் பணித்தார். அவற்றிலிருந்து ஒசையை எழுப்புமாறு கூறினார். ஒசைகள் ஒவ்வொரு கல்லிலிருந்தும் எழுந்த உடனேயே அந்தக் கல்லின் எடையை நுட்பமாகச் சரியாகக் கூறினார். இதை நேரில் கண்ட மன்னன் பெரிதும் வியந்து நாத முனிகளின் இசை நுகரும் திறமையை வெகுவாகப் போற்றி அவரைப் பணிந்தான். அவர் கூறிய படியே தேவ கானத்தையே உயரிய கானமாக ஒப்புக் கொண்டான்.தேவ கானம் பாடிய  பெண்ணிற்கு உரிய மரியாதையையும் செலுத்தினான்.

 

 

அறிவியலின் முக்கிய பிரிவான கணிதத்திற்கும் இசைக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. கணிதம் இல்லாமல் இசை இல்லை!

கிரேக்க நாகரிகத்தில் பிதகோரஸ் தான் கணிதத்திற்கும் இசைக்கும் உள்ள தொடர்பை முதலில் கண்டவர். உடனே அவர் இசையையும் கணிதத்தையும் ஒருங்கிணைத்தார்.பிதகோரஸ் கமா (Phythaoral Comma)

பற்றிய அதிசயச் செய்திகளை விரிவாகப் படித்தால் பிரமிப்பே ஏற்படும்.

பிதகோரஸின் பெரும் வருடம் என அழைக்கப்படும் தி பிதகோரியன் க்ரேட் இயர் 25920 வருடங்களைக் கொண்டது. இதற்கும் 25524 நோட்ஸ்

கொண்ட சுழற்சிக்கும் உள்ள தொடர்பை ‘தி காஸ்மிக் ஆக்டேவ்’ என்ற தனது நூலில் குஸ்டோ என்னும் பேரறிஞர் விளக்குகிறார்.

 

 

Musicians, Halabedu

Picture shows musicians in Halabedu, Karnataka.

வானில் உள்ள ஒவ்வொரு ராசி வழியாகவும் வெர்னல் ஈக்வினாக்ஸ் (vernal equinox) எனப்படும் இளவேனில் புள்ளி (இராப்பகல் சமநாள் வருவது) பயணிக்க ஆகும் காலம் சராசரியாக 2160 வருடங்கள் ஆகும். 12 ராசிகளின் வழியே பயணிக்க ஆகும் மொத்தக் காலம் 25920  வருடங்கள்.வானில் உள்ள தெய்வீக இசைக்கும் ஒலியை உணரும் மனிதக் காதுகளுக்கும் உள்ள நுட்பமான தொடர்பை கிரேக்கர்கள் தெரிந்து வைத்திருந்ததோடு 25524 நோட்ஸுகளுடன் அவற்றுக்குள்ள தொடர்பையும் அறிந்திருந்தனர். வான இசையையும் மனித இசையையும் லயப்படுத்திய அவர்களின் அற்புத ஆற்றலை  குஸ்டோ விரிவாக விளக்குவதை காஸ்மிக் ஆக்டேவ் நூலில் படித்து மகிழலாம்.

 

 

தூங்கிக் கிடந்த  தேசங்களை எழ வைத்தவை கீதங்களே! இந்திய நாட்டை பங்கிம் சந்திரரின் வந்தே மாதரம் கீதம் அசைத்து எழுப்பியது. எங்கு பார்த்தாலும் வந்தே மாதரம் கீதம் இசைக்கப்பட்டு தேசத்திற்கே ஒரு புதுத் தெம்பைத் தந்தது. அதன் வலிமையை உணர்ந்த மகாகவி பாரதியார் அதன் பெருமையை வெளிப்படுத்தும் பல பாடல்களை இயற்றியதோடு வந்தே மாதரம் கீதத்தையே இரு முறை தமிழில் மொழி பெயர்த்தார். சுதந்திரப் போராட்ட வீர்ர்களின் சுதந்திர உணர்வின் கீதமான வந்தேமாதரத்திற்கு பயந்த ஆங்கில அரசு அதை இசைக்கக்  கூடாது என்று தடை போட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இந்த கீதத்திற்குத் தனி இடம் உண்டு.மகாகவி பாரதியாரின் தேசீயப் பாடல்களும் சுதந்திர வேள்வியில் தமிழர்கள் தம்மை ஆகுதியாக அர்ப்பணிக்க வைக்கப் பெரும் காரணமாக அமைந்தவை!

 

 

ram in dream

Picture shows great composer Saint Thyagaraja.

 

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திற்கு எதிரான அமெரிக்க சுதந்திரப் போரில் இசை கீதங்களே முக்கியப் பங்கு வகித்தன. தி ஃப்ரீடம் சாங் என்ற பாடலை ஜான் டிக்கின்ஸன் 1768ஆம் ஆண்டு இயற்றினார். அதுவே அமெரிக்கர்களின் சுதந்திர எழுச்சிக்குக் காரணமாக அமைந்தது. பின்னர் “யாங்கி டூடில்” என்ற பாடல் அவர்கள் தோல்வியுற்ற போது எழுச்சி பெறச் செய்தது. கடைசியில் இறுதி வெற்றி அடைந்த போது வெற்றி கீதமாகவும் இசைக்கப்பட்டது.

 

சீனர்களோவெனில் சமுதாயத்தை ஒரு கட்டுக்கோப்பாக லயத்துடன் இயங்க வைக்க வல்லது இசை ஒன்றே தான் என்று மனமார நம்பினர்.இசையின் மீது ஆர்வம் குறைந்தது என்றால் அது பண்பாடு அழிவதற்கான ஆரம்ப அறிகுறி என்பது அவர்கள் கொள்கை!

 

 

வென் என்ற  பிரபல இசை அறிஞர் தன் கருவியுடன் அவரது குருவான ஹூசியாங்குடன் மூன்று வருட காலம் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர் கருவியின் நரம்பிலிருந்து ஒரு ஒலியும் எழும்பவில்லை.பொறுமை இழந்த குரு வென்னை நோக்கி”போதும் நீ இசை கற்ற லட்சணம். வீட்டுக்குப் போ” என்று ஆணையிட்டார். பெருமூச்சு விட்ட வென்.”என்னால் கருவியை மீட்ட முடியாது என்பதில்லை. இசை என் இதயத்தின் ஆழத்திலிருந்து வரவேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.சிறிது காலம் அவகாசம் தாருங்கள். பிறகு என்னை சோதியுங்கள்” என்று பணிவாகக் கூறினார்.

 

 

சிறிது காலம் சென்றது. வென் குருவிடம் வந்தார். “என்ன ஆயிற்று உன் இசை” என்றார் குரு.அது அற்புதமான இளவேனில் காலம்.வேன் தன் கருவியை எடுத்து ஷாங் நரம்பை மீட்டலானார்.என்ன ஆச்சரியம். திடீரென இளவேனில் காலம் முடிந்து இலையுதிர் காலம் தோன்ற ஆரம்பித்தது! இலைகள் அனைத்தும் மரங்களிலிருந்து உதிர்ந்தன.அடுத்து சியோ என்ற நரம்பை இசைத்தார்.அற்புதமான தென்றல் காற்று எழுந்தது. அருகிலிருந்த மரங்கள் ஆடின. செடிகள் பூத்துக் குலுங்கின. மரங்களில்  பழங்கள் தோன்ற ஆரம்பித்தன. என்ன ஆச்சரியம்! கோடைகாலம் ஆரம்பித்தது. வென் அடுத்து யூ நரம்பை மீட்ட ஆரம்பித்தார். குளிர் காலம் தோன்றி பனித்துளிகள் விழ ஆரம்பித்தன.வென் தன் இசையைத் தொடர்ந்தார். சிப் என்ற நரம்பை மீட்டலானார். சூரியன் உதயமாகி பனித்துளிகள் உருக ஆரம்பித்தன.கடைசியாக குங் என்ற நரம்பை இதர நரம்புகளுடன்   ஒருசேர இசைத்தவுடன் வானில் மேகங்கள் குழுமின. இனிய துளிகள் விழுந்து ஜல பிரவாகம் பொங்கியது. அனைத்துப் பருவ காலங்களையும்  மாறி மாறி இசை மூலம் அவர் காட்டியவுடன் குரு ஆச்சரியப்பட்டு அவரை நன்கு ஆசீர்வதித்தார்.

 

 

 

இனி இசையை நுணுக்கமாக அறிவியல் ரீதியில் ஆராய்ச்சி செய்த அறிஞர்களையும் ராகங்களின் வலிமையையும் மெல்லிசைப் பாடல்களில் அவை பெற்றிருக்கும் இடத்தையும் பார்ப்போம்.

 

பாக்யா 28-9-2012 இதழில் 84ஆம் அத்தியாயமாக வெளியாகிய இசை தரும் நோயற்ற வாழ்வு கட்டுரையின் நான்காம் பகுதியை மகிழ்வுடன் அளிக்கிறோம் – contd in fifth part; written by S Nagarajan

 

  இதற்கு முன் இதே பிளாக்.கில் வெளியான இசை பற்றிய கட்டுரைகள் written by Santanam Swaminathan

1.இசைத் தமிழ் அதிசயங்கள்

2.சங்கீத ரகசியம்: இளமையில் கல்

3.மழை அற்புதங்கள்

4.தியகராஜருடன் 60 வினாடி பேட்டி

இசை தரும் நோயற்ற வாழ்வு! -3

indian-figurines-banjara-musician-statues

ச.நாகராஜன்

பண்டைய தமிழ் இலக்கியங்களான புறநானூறு, பரிபாடல் சிலப்பதிகாரம் உள்ளிட்ட பல நூல்களில் இசையின் நுணுக்க ங்களையும் இசையின் வலிமையையும் அதனால் நிகழ்ந்த அபாரமான சம்பவங்களையும், ஏராளமாகக் காண முடியும்.புறநானூற்றின் “தீங்கனி இரவமொடு” என்று ஆரம்பிக்கும் பாடல் இசை  மருத்துவமாகப் பயன்படுத்தப்பட்டு புண்பட்ட வீரனுக்கு இதமளித்ததைக் கூறுகிறது.

 

பெருங்கதை என்னும் காப்பியம் உதயணன் என்ற அரசன் யாழ் வாசிப்பதில் விற்பன்னன் என்பதைக் கூறி இசை பற்றிய பல செய்திகளைத் தெரிவிக்கிறது.உஜ்ஜயினி நகரத்தில் பட்டத்து யானை மதம் பிடித்து ஓட, தன் யாழை வாசித்து யானையின் மதத்தை அடக்கினான் உதயணன்.

Jaisalmer-instruments

அக்பர் சபையில் இருந்த பிரபல இசை விற்பன்னர் தான்ஸேன் தீபக் ராகம் பாடுவதில் வல்லவர். அவர் அதைப் பாடினால் இருக்கும் இடமெல்லாம் ஒளிரும். இதை நேரில் பார்க்க விரும்பிய அக்பர் தான்ஸேனை அதன் வலிமையைக் காண்பிக்குமாறு  வற்புறுத்தினார். எவ்வளவோ மறுத்தும் அக்பர் மசியவில்லை. இறுதியில் ஒரு பெரிய ஏரிக்கரையின் முன் மேடையை அமைக்கச் சொன்னார் தான்ஸேன். விவரம் என்னவென்று தெரியாத அக்பரும் அப்படியே மேடையை அமைக்க ஆணையிட்டார். தீபக் ராகத்தை பல்லாயிரக்கணக்கானோர் குழுமி இருக்க அக்பர் முன்னால் உளமுருகப் பாடலானார் தான்ஸேன். என்ன ஆச்சரியம், திடீரென்று ராகத்தின் உச்ச கட்டத்தின் போது அவர் உடல் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. உடனே முன்னால்  இருந்த ஏரியில் குதித்துத் தன்னைக் காப்பாற்றிக் கொண்டார்  தான்ஸேன்.  மிகவும் வியப்படைந்த அக்பர் வருத்தமும் அடைந்தார். நிகழ்ந்த செயலுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டதோடு தான்ஸேனை தன் உச்சி மேல் வைத்துப் புகழ்ந்து மிகுந்த  மரியாதை செலுத்தி வரலானார். இந்த சம்பவத்தை விரிவாக அக்பர் கால நூல்கள் எடுத்துரைக்கின்றன. இந்தச் சம்பவம் சைக்கிக் என்சைக்ளோபீடியாவிலும் இடம் பெற்றுள்ளது. ஆகவே இது உண்மையே என்பதை வரலாற்று ஆவணங்கள் சுட்டிக் காட்டுகின்றன!

 

தான்ஸேனின் ஒவ்வொரு நரம்பும் நாடியும் இசை மயம். அவர் இறந்தவுடன் நடந்த நிகழ்ச்சி இதை நிரூபிக்கிறது. கர்நாடக இசையில் உள்ள தோடியைப் போல இந்துஸ்தானி இசையிலும் ஒரு ராகம் உண்டு. அதை இசைப்பதில் தான்ஸேனின் புதல்வர்களுள் ஒருவரான பிலாஸ்கான் வல்லவர். தான்ஸேன் இறந்தவுடன் துக்கம் தாளாமல் அவரைச் சுற்றி இருந்தோர் வருந்தி அழ பிலாஸ்கான் புதுவிதமான தோடி ராகம் ஒன்றைப் பாடலானார். இசைக்காகவே வாழ்ந்து இசையே ஓர் உருவமாக வடிவெடுத்திருந்த தான்ஸேன் சடலமாக இருந்த போதும் அந்த ராகம் இசைக்கப்பட்டவுடன் அவரது தலை மட்டும் அந்த இசையைப் பாராட்டும் வண்ணம் ஆடியது. இதைப் பார்த்தோர் அனைவரும் வியந்தனர்; பிரமித்தனர். ஆகவே அந்த ராகத்திற்கு பிலாஸ்கான் தோடி என்று பெயரிடப்பட்டது. இன்றும் பிலாஸ்கானியா தோடி.யைக் கேட்போர் இந்தச் சம்பவத்தை நினைவு கூர்வர்.

சாம வேதமே இசையின் அடிப்படை என்று வேத விற்பன்னர்கள் கூறுவர். ஸ,ரிக,ம,ப, த,நி ஆகிய ஏழு ஸ்வரங்களும் ஆகாயத்திலிருந்து ஒலிக்கக் கேட்டு பூமியில் இசையின் ஆதாரமாக வடிவெடுத்தது என்று  மஹாபாரதம் கூறும்.ஒவ்வொரு ராகத்திற்கும் ஒரு தேவதை இருப்பதாக நமது பண்டைய இசை நூல்கள் கூறுகின்றன.

 

இசை ஒலியைக் கூர்ந்து நுட்பமாகக் கேட்டு அனுபவித்தவர்கள் தமிழர்கள். சட்ஜம் மயில் அகவுதலையும் ரிஷபம் மாடு கத்துதலையும் காந்தாரம் ஆடு கத்துவதையும் மத்யமம் அன்றில் பறவை கூவுதலையும் பஞ்சமம் குயில் கூவுதலையும் தைவதம் குதிரை கனைப்பதையும் நிஷாதம் யானை பிளிறுவதையும் ஒத்து இருக்கிறது என்று தமிழர்கள் இனம் கண்டனர்.

திருஞானசம்பந்தரின் தேவாரமோ ஏராளமான அபூர்வமான பண்களைக் கொண்டதாக உள்ளது. யாழையும் முரிக்க வல்ல யாழ்மூரிப் பண்ணையும் அவர் இசைத்ததை அவர் வரலாற்றில் விளக்கமாகப் படித்து மகிழலாம். தேவாரச் சுவடிகளில் உள்ள தேவாரம் பண் முறை வைப்புடன் இருப்பதால் தேவாரம் இன்றும் பாரம்பரிய வழியிலேயே இசைக்கப் படுகிறது.

 

பாரதமெங்கும் உள்ள பல்வேறு கோவில்களில் உள்ள இசைத் தூண்கள் ஹிந்து நாகரிகத்திற்கே உள்ள தனித்தன்மையுடைய இசைச் சின்னங்களாகத் திகழ்கின்றன!.மதுரை மீனாட்சி அம்மன் கோவில்,(வடக்கு கோபுர வாயில் வழியே நுழைந்தவுடன் இடப்புறம் திரும்பியவுடன் கம்பி போட்டுக் கட்டப்பட்டுள்ள இவற்றை இன்றும் காணலாம்)தாடிக் கொம்பு, ஆழ்வார்திருநகரி உள்ளிட்ட பல இடங்களில் இந்த இசைத் தூண்கள் உள்ளன. கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலில் உள்ள கல் நாதஸ்வரம் இசைக்கப்பட்டவுடன் அற்புத ஒலியை எழுப்பும். இந்த அதிசய நாதஸ்வரம் இசையையும் சிற்பத்தையும் இணைத்து வடிவமைக்கப்பட்டிருக்கும் மாபெரும் “இசை-சிற்ப” அதிசயமாகும்.

music spain

தாளவகைகள் எண்ணில் அடங்காதவை. இருந்தாலும் உச்சபட்சமாக 175 தாளங்களை நம் முன்னோர் இனம் கண்டனர். ஆனால் திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரோ இந்த 175 தாளங்களையும் கையாண்டதோடு அதையும் மீறிப் பல புதிய தாளங்களைத் திருப்புகழில் அமைத்துள்ளது இசையின் ஆழமும் அகலமும் எல்லையற்றது என்பதை விளக்கும் ஒரு செய்தியாக அமைகிறது.

 

சோழ மன்னனின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு மாபெரும் அதிசய சம்பவத்தை நாதமுனிகள் வாழ்க்கை வரலாறு விளக்குகிறது.அதைப் பார்ப்போம்.

This is the third part on Music written by Santanam Nagarajan of Bangalore.;already published in Bagya magazine.                                  தொடரும்

********************

contact swami_48@yahoo.com

Why do I Worship Planets Every day?

planets

Hindus are unique in worshipping everything in the sky including ‘’Father in the Heaven’’. I have already written about their worship of trees, cows and elephants, fish, eagle/Garuda, rivers/Ganga Yamuna Saraswati, Shoes (sandals), snakes, earth, bells etc. They see God in everything. Most of their customs are based on hygiene or science. But some are inexplicable; one of them is the worship of Nine Heavenly Bodies known to Hindus as Navagrahas.

 

Believing astrology is different from worshiping them. Billions of people read weekly predictions for their zodiacal signs in India and Western Countries. For many of us it is fun, for some of us it is accurate prediction!! But I am talking about actual worship of Nine Heavenly bodies (planets): Sun, Moon, Mars, Mercury, Jupiter, Venus and Saturn. In Sanskrit we call them Surya, Chandra, Angaraka, Bhudha, Guru/Bruhaspati, Sukra and Sani.

 

As a Brahmin I do Sandhayvandhanam every day at least once on the banks of river Thames in London. I am supposed to do three times– morning, afternoon and evening. It is like a person taking medicine three times a day or vitamin tablets. It is a lifelong tonic for three castes Brahmana (Priestly caste), Kshatriyas (Security forces) and Vaisya (Business men). But now it is the Brahmins who do it on regular basis.

 

The first part of the Sandhayavandhanam or Sun Worship finishes with Deva Tarpanam. This is where I do the worship of Sun, Moon etc in the same order like in English calendar-Sunday to Saturday (The mantra begins with Adityam Tarpayami, Somam tarpayami…..). Foreign scholars wrote that Egyptians and Greeks taught the days of the week to Indians. I doubt it. If it is ‘’Imported’’ from foreign countries my forefathers would not have included it in orthodox Hindu worship. This was started by my forefathers 5000 or 6000 years ago on the banks of mighty Saraswati River. I have got more proofs to justify my statement.

BigDipper

Saptarishi constellation (other names: Big Dipper, Ursa Major, Great Bear constellation)

All South Indian Temples have special places for the Navagrahas. Sun and Moon have been allocated special places in the corridor. There are special Gayatri Mantras for all the Nine ‘Planets’ (strictly speaking Sun is a star; Moon is a satellite of earth; Rahu and Ketu are shadows). There are special shrines for all the nine planets in Tamil Nadu. Millions of people throng the places every day. There nine more Navagraha  shrines around Chennai. There are special Homas (Fire ceremonies) for all the nine planets and 27 Stars (Nakshatras) from Vedic Days. They are not imported. We have nine different special woods, nine different special grains, nine different special colour clothes for this Homa. The mantras are very old.

 

People all over India wear Navagraha rings, set up with nine different gem stones.

 

Proof from 2000 year old Sangam Tamil Literature

Foreigners spread a blatant lie to destabilise India and destroy Hinduism in the name of Aryan-Dravidian Race theory. Those who read Sanskrit and Tamil literature will have a good laugh about this absurd race theory. I can quote over 1000 common customs from old Tamil literature. They are practised by Hindus from Kashmir to Kandy in Sri Lanka and beyond.

 

The Wonder Boy, Child Prodigy, Youngest Poet in History, Tamil saint Thiru Jnana Sambandhar who lived 1300 years ago sang about these nine planets in the same order in his Kolaru Thiru Pathikam. Elderly saint Appar warned the boy about travelling to Madurai. But he said that these nine planets will have no evil influence on the devotees of Shiva. The miracle boy was right. He did miracles in Madurai and re established Hinduism in Tamil Nadu.

planets (1)

I have quoted two wedding songs (Akam 86, 136) in my post Why Do Hindus Worship Moon? There also the poets talk about the evil influence of the planets when they said why the Tamil weddings are done on the day star Rohini  aligned with the moon. There are over six references about Arundhati star ( Vasista’s wife and one of the stars in Ursa Major known as Sapta Rishi Mandalam). All these are slaps on the face o supporters of Racist theories. I have already written about Indra and Varuna worship from the oldest Tamil book Tolkappiam which shows Aryans did not bring them to the south. There was only one culture from the oldest time the Tamils knew.

 

Tamil literature sings about zodiacal signs and planets like Mars ,Venus and Saturn. The most interesting reference about Jupiter and Venus (Brihaspati, Venus) is they are called Two Brahmins (Anthanar Iruvar). According to mythology Guru/Brihaspati (Jupiter) is the teacher for Devas (angels) and Sukra (venus) is the teacher for Asuras (demons). Devas and Demons had Brahmin Gurus!! This also tears the Aryan Dravidian racist cloth in to pieces. Hundreds and Hundreds of mythological stories have direct reference in Kalitokai and Paripatal. Purananuru, an anthology of 400 verses, is the encyclopaedia of Tamil Life. It has innumerable references to Vedic customs. I don’t want to repeat what I have already given in my posts NO BRAHMINS, NO TAMIL and other 600 posts in this blog.

 

Venus link to rains

Ancient Egyptians linked Sirius (the brightest star) to floods in the River Nile. Tamil and Sanskrit literature links Venus with rains. Purananuru have got lots of references to Venus and rains. Tamils had very good knowledge of astronomy. Science has yet to come with a theory for this link. The belief about comets (Dhumaketu) is also same in both the literature.

 

More Proof

There is lots of proof to show that these beliefs are not imported or brought by migrants. The number of words for Nine heavenly bodies (grahas) and 27 stars (Nakshatras) is amazing in Sanskrit and Tamil thesaurus called ‘Nigantu’. No language in the world has some many words for planets and stars!!!! This is the best proof to show India exported this to the world!

 

Silappadikaram is the best known Tamil epic. It is post Sangam period Encyclopedia of tamil culture. Name anything , you will find it like you find in Mahabharat. This has got reference to all the nine planets and tamil’s belief about them.

outside_solar_system

For want of space I will give some of the references from Tamil literature:

Worship of crescent moon: Kuruntokai vers 178;307; Akam. 239; Maduraikanchi- line 193; Puram.60 and Prayer 1;silambu-2—38;

Planet Rahu devouring Moon (Lunar Eclipse): Kural 1146; Kurun.395;Natr 128;Akam 114, 313; Kalitokai has five references

Sun’s one wheel chariot- Akam 360

Suns horses: Akam 363; Pattina. Line 122-124

 

 

Vasishta’s wife Arundhati: Pari 5-44;Pathitru 31-27;89-17;Perum.line 302

About Krithika (Pleiades) numerous references are there.

Two Brahmins (Jupiter and Venus): Kali-99

 

 

Venus-Rain link: Puram 35;117;383;384;386;388Pathitru. 24-24; 69-13;

Oldest Tamil book Tolkappiam has a lot of references to planets and Tamils’  beliefs.

 

For more about Brahmin’s Sandhya Vandanam, please read:

Why Brahmins Deserve an entry in to Guinness Book of Records

325px-Ursa_Major_constellation_detail_map

 

Last but one in the tail area of Sapatarishi mandalam is Mizar (Vashista); it is a double star with aAcor (Arundhati)

Pictures are taken from various websites; thanks

Contact swami_48@yahoo.com  for details about 600+ posts