இராமபிரானுக்கு கம்பரும், காந்தியும், சுவாமி விவேகாநந்தரும் புகழ்மாலை

lord-rama

இராமபிரானுக்கு கம்பரும், காந்தியும், சுவாமி விவேகாநந்தரும் புகழ்மாலை

கட்டுரையாளர்:- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண். 971; தேதி- 11th April 2014

கம்ப ராமாயண கடவுள் வாழ்த்து
உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே

பொருள்: படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களை முடிவேயில்லாத விளையாட்டாகச் செய்யும் தலைவன் எவனோ அவன் காலில் சரணடைகின்றேன்.

மும்மைசால் உலகுக்கெல்லாம்
மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும்
தனிப் பெரும் பதத்தை, தானே
இம்மையே, எழுமை நோய்க்கும்
மருந்தினை இராமன் என்னும்
செம்மைசேர் நாமம் தன்னை
கண்களில் தெரியக் கண்டான்
வாலிவதைப் படலம், கம்ப ராமாயணம்

இராம நாமம்தான் எல்லா மந்திரங்களுக்கும் மூத்த மந்திரம், மூல மந்திரம் என்பான் கம்பன். அது ஏழு பிறவிகளில் செய்த தீவினைகளைப் பொடியாக்கும். இராம என்ற சொல்லை, வாலி தனது மார்பில் பாய்ந்த அம்பில் கண்டான். அடடா! ராமன் கையினால் மரணம் சம்பவித்தால் எனக்கு நேரடி மோட்சம்தான் என்று மகிழ்கிறான்.

இராம நாமம் நமக்கு என்ன என்ன தரும்?

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்ற இரண்டெழுத்தினால்.

****
நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீ டியல் வழியதாக்கும் வேரியம் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறு பட்டழிய வாகை
சூடிய சிலையிராமன் தோள்வலி கூறுவார்க்கே.

இராமனுடைய இரண்டெழுத்தைச் சொன்னால் எல்லா நன்மைகளும் கிடைக்கும். செல்வம், ஞானம் (நல் அறிவு), புகழ், லெட்சுமி கடாட்சம் எல்லாம் கிடைப்பதோடு பாவங்கள் அழிந்து இந்த ஜன்மத்திலேயே ஜன—மரணச் சுழலில் இருந்து விடுதலையும் கிட்டும்.

lord-rama-43a

சிவபெருமான் கூற்று
விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் சிவ பெருமானே ராமன் புகழ் பாடும் ஒரு பலஸ்ருதி ஸ்லோகம் வருகிறது. இந்த ஸ்லோகத்தைப் படித்தால் சஹஸ்ரநாமத்தை முழுக்கப் படித்த பலன் உண்டு
ஈஸ்வரோ உவாச

“ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோ ரமே
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே”

காந்திக்குப் பிடித்த ரகுபதி ரகவ ராஜா ராம்!
மஹாத்மா காந்திஜி, துப்பாக்கி ரவையால் சுடப்பட்டு உயிர் இழந்த போது அவர் கூறிய கடைசி சொல் ‘’ஹே ராம்!’’ ஒருவர் வாழ் நாள் முழுதும் ராம நாமத்தை ஜபித்தால்தான் கடைசி நிமிடத்தில் அவன் பெயர் நினைவுக்கு வரும்! அவர் எல்லா பஜனைகளிலும் ரகுபதி ராகவ ராஜாராம் பாடலைப் பாடியதோடு மட்டுமின்றி, உலகிற்கே அப்பாட்டை அறிமுகம் செய்தார்.

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர், வாழ் நாள் முழுதும் ராம நாமத்தை ஜபித்தார். 21 ஆண்டுகளில் 96 கோடி முறை அவர் ராம நாமம் சொன்னதாக அவர் வரலாறு கூறுகிறது. வாயினால் சொல்லும் வேகத்தைவிட மனதினால் கூடுதலாகச் சொல்லமுடியும்.

maha mantra

தர்ப்பண மந்திரம்
பிராமணர்கள் செய்யும் தர்ப்பணத்தில் க்ஷத்ரிய அரசனான ராமனின் பெயரைச் சொல்லுகிறார்கள்:
ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்யாப்யந்தர: சுசி:
மானஸம் வாசிகம் பாபம் ஸகுபார்ஜிதம்
ஸ்ரீ ராம ஸ்மரணேனைவ வ்யபோஹதி ந ஸம்சய:
ஸ்ரீ ராம ராம ராம

பொருள்:— அசுத்தமாகவாயினும், சுத்தமாகவாயினும் எந்த நிலையில் இருந்தாலும் எவன் ஒருவன் தாமரைக் கண்ணனை நினைக்கின்றானோ அவன் உள்ளும் புறமும் சுத்தமானவனே.
மனதாலோ, வாக்காலோ, செயலாலோ வந்தடைந்த பாவம் ஸ்ரீ ராமனை நினைத்த மாத்திரத்திலேயே கழிந்து போகும். இதில் சந்தேகம் இல்லை. ஸ்ரீ ராம ராம ராம.

இராமனுடைய பெயரை மூன்று முறை சொன்னவுடனேயே எல்லாப் பாவங்களும் அகன்று பரிசுத்தனாகி விடுவான்.
நாமும் ராம நாமம் சொல்லி பரிசுத்தம் அடைவோம்!!

rama shantham

சுவாமி விவேகாநந்தர் சொற்பொழிவு!

ஆங்கிலத்தில் சுவாமி விவேகாநந்தர் பேசியதை தமிழில் தருகிறேன். குறை இருப்பின், அது எனது மொழி பெயர்ப்பின் பிழையே அன்றி அவர் குற்றம் ஆகாது.

“இராமபிரான், புராதன வீர சகாப்தத்தின் சின்னம், தர்மத்தின் ஒட்டுமொத்த உருவம் அவர்; அறநெறிகளின் சின்னம் அவர். அதுமட்டுமல்ல, முன் உதாரணமாகத் திகழும் ஒரு மகன், ஒரு தந்தை, ஒரு கணவன், எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு அரசன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி நம் கண் முன்னே கொண்டுவந்து ராம பிரானைத் தருகிறார் வால்மீகி முனிவர்.

அவருடைய அற்புதமான தூய மொழி, மாசு மருவற்ற நடை, அழகான மொழி, அதே நேரத்தில் எளிமையான ஒரு மொழி நடை! இதை மிஞ்ச உலகில் எதுவுமே இல்லை அப்படிப்பட்ட ஒரு மொழியில் ராம பிரானை வருணிக்கிறார்.

சீதா தேவி பற்றி நான் என்ன சொல்ல! அடடா!! அது போன்ற ஒரு சீதையைக் காண நீங்கள் உலகில் இதுவரை தோன்றிய எல்லா இலக்கியங்களையும் —- இன்னும் ஒரு படி மேலே சென்று உறுதி படச் சொல்லுவேன் —– வருங்காலத்தில் உலகத்தில் எழுதப்படப் போகின்ற அத்தனை இலக்கிய நூல்களையும் கற்றாலும் — நீங்கள் இன்னும் ஒரு சீதையைக் காண்பது அரிது! அவள் ஒப்பற்றவள். ஒரு முறைதான் அப்படிப்பட்ட குணம் உடைய பெண்ணைப் படைக்க முடியும். இராமர்கள் பலர் இருக்க முடியும். ஆனால் ஒரு சீதாதேவிக்கு மேல் காண முடியாது”.

rama color

— சுவாமி விவேகாநந்தரின் சொற்பொழிவுகள். ஆங்கிலத்திலும் கீழே கொடுத்துள்ளேன். ஆங்கில வாசகம் அவர் சொன்னது:–

“Rama, the ancient idol of heroic ages, the embodiment of truth, of morality, the ideal son, the ideal husband, the ideal father, and above all the ideal king, this Rama has been presented before us by the great sage Valmiki. No language can be purer, none chaste, none more beautiful, and at the same time simpler, than the language in which the great poet has depicted the life of Rama. And what to speak of Sita? You may exhaust the literature of the world that is past, and I may assure you that you will have to exhaust the literature of the world of the future, before finding another Sita. Sita is unique; that character was depicted once and for all. There may have been several Ramas, perhaps, but never more than one Sita!”
—-Swami Vivekananda

Contact swami_48@yahoo.com

ராமம் ஸத்யபராக்ரமம்!

rama shantham

ராமாயண வழிகாட்டி — அத்தியாயம் 21
கட்டுரையாளர்: ச.நாகராஜன்
கட்டுரை எண்- 969; தேதி ஏப்ரல் 10, 2014

ராமாயண மஹா காவியத்தில் ஏராளமான ரிஷிகள் நம் கண் முன்னே நிறுத்தப்படுகின்றனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு வாய்ந்தவர்கள்.

தேவரிஷியில் சிறந்தவரான நாரதரால் தான் கதை ஆரம்பிக்கப்படுகிறது.
பிரம்மரிஷியில் சிறந்தவரான வசிஷ்டரால் தான் கதை வழி நடத்தப்படுகிறது.
ராஜரிஷியில் சிறந்தவரான விசுவாமித்திரரால் தான் ராமரின் வாழ்வில் திருமணம் என்னும் திருப்பு முனை ஏற்படுகிறது.

சீதையின் தந்தையும் ராமரது மாமனாரும் ஆன ஜனகரோ ராஜரிஷி.
இவர்கள் தவிர நாஸ்திக வாதத்தை ராமரிடமே பேசிய (!) ஜாபாலி உள்ளிட்ட ஏராளமான ரிஷிகளின் பட்டியலை நாம் காவியத்தில் காண்கிறோம். சில ரிஷிகளின் அதிசயச் செய்திகள் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.

விசுவாமித்திரர் ராமரை இன்னார் என்று முதலில் அறிவிக்கும் ஸ்லோகம் பால காண்டத்திலேயே இடம் பெற்று விடுகிறது.
அவர் கூறிய முக்கியமான ஸ்லோகத்திற்கு இன்றும் தேர்ந்த பிரவசனகர்த்தாக்கள் முடிவில்லா விரிவுரை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்!.அவ்வளவு பொருள் பொதிந்த சொற்களை வால்மீகி விசுவாமித்திரர் வாயிலாக ஒரே ஸ்லோகத்தில் கூறி விட்டார்.
ஸ்லோகத்தைப் பார்ப்போம்:-

அஹம்வேத்மி மஹாத்மானம் ராமம் ஸத்யபராக்ரமம் I வசிஷ்டோபி மஹதேஜா யே சேமே தபஸி ஸ்திதா: II
– பால காண்டம், பத்தொன்பதாம் ஸர்க்கம், 15ஆம் ஸ்லோகம்

அஹம் – நான் ராமம் – ராமரை மஹாத்மானம் – மஹாத்மாவாக ஸத்யபராக்ரமம் – ஸத்யபராக்கிரமராக வேத்மி – உண்மையாய் அறிகிறேன் மஹாதேஜா – மஹா தேஜஸ்வியான வசிஷ்டோபி – வசிஷ்டரும் கூட யே – எவர்கள் தபஸி – தவம் புரிவதில் ஸ்திதா – நிலை கொண்டவர்களோ: இமே ச – அந்த இவர்களும் அறிவார்கள்

அஹம் வேத்மி என்ற வார்த்தைகள் வேதம் கூறும் வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் என்று புருஷ ஸுக்தத்தில் வரும் வேத வாக்கியத்தைச் சுட்டிக் காட்டுகிறது. புருஷம் இங்கு ஸத்ய பராக்ரமாகவும் மஹாந்தம் மஹாத்மாவாகவும் இங்கு சுட்டிக் காட்டப்படுகிறது.

வசிஷ்டரும் என்ற வார்த்தையில் வரும் ‘உம்’ பெரிய நீண்ட உரைக்கு இடம் தரும் ‘உம்’ ஆகும். வசிஷ்டருக்கும் விசுவாமித்திரருக்கும் இடையில் நடந்த போட்டியை புராண இதிஹாஸங்கள் நன்கு விளக்குகின்றன. இருவருக்கும் இடையே இருந்த அந்த இயல்பான பழைய வரலாற்றினால் வசிஷ்டரும் கூட அறிவார் என்று விசுவாமித்திரர் சொல்லும் போது அதில் உள்ள சுவாரசியத்தை நன்கு ரசிக்க முடிகிறது. அவரே மஹா தேஜஸ்வீ என்று வசிஷ்டரைப் புகழ்ந்து கூறுவது பொருள் பொதிந்தது.

அங்கு தசரதனின் ராஜ சபையில் கூடியுள்ள இதர தபஸ்விகளும் ரிஷிகளும் இதை அறிவர் என்று விசுவாமித்திரர் கூறுவது உலகிற்கே இந்த உண்மையை அறிவிக்கத் தான்!

ram business

இனி கம்ப ராமாயணத்தை எடுத்துக் கொண்டால் பால காண்டத்தில் கம்பன் விசுவாமித்திரரை ‘எண்ணிலா அருந்தவத்தோன்’ என்று குறிப்பிடுகிறான்.

இந்த ஒரே ஒரு சொற்றொடருக்கும் ஏராளமான அர்த்தங்கள் கூறப்பட்டு நம்மை வியக்க வைக்கின்றனர் அறிஞர்கள்!

எண்ணிலா அருந்தவத்தோனை எண் + இலா + அரும் + தவத்தோன் என்று பிரித்து எண் என்பதற்கு ஆலோசனை என்று பொருள் கொண்டு இந்த முனிவர் அருந்தவத்தர் ஆயினும் இன்னாரிடத்தில் இன்ன பொருளை இன்ன இடத்தில் இன்ன காலத்தில் கேட்கலாம் என்பதை ஆலோசனை புரிந்து அறியாதவர் என்று பொருள் கொண்டு தசரதனின் உள்ளக்கிடக்கையை அறிந்து கொள்ளலாம்.

எண் + நிலாவு + அரும் + தவத்தோன் என்று பிரித்து ராமாயணத்தைப் படிப்பவரின் எண்ணத்தில் அதாவது நினைவில் நிலாவு அதாவது நிலவி இருக்கும் படியான அரும் தவத்தோன் – பெரும் தவத்தைப் புரிந்த மஹரிஷி என்று பொருள் கொண்டு படிப்பவர் மனம் மகிழலாம். விசுவாமித்திரர் வாழ்வில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து அவரது வரலாற்றுச் சிறப்பினையே இப்படிப் பிரித்துப் பொருள் கொள்ளலாம்.

எண்ணில் + ஆ + வரும் + தவத்தோன் = நினைத்துப் பார்த்தால், ஒரு பசுவாகிய காமதேனுவினால் வந்த தவத்தோன் என்று கொண்டு வசிஷ்ட – விசுவாமித்திர வரலாறை நினைவு கூரலாம்.
இன்னும் எண்ணில் + ஆ + வருந்து + அவத்தோன் என்றும்,
எண்ணில் + ஆ+ அருந்து + தவத்தோன் என்றும்,
எள் + நிலா + அரும் + தவத்தோன் என்றும்,
எள் + நிலா + வரும் + தவத்தோன் என்றும் பிரித்துப் பொருள் கூறலாம்.

ராமரை மஹாத்மாவாகச் சுட்டிக் காட்டும் விசுவாமித்திரரின் இந்த ஸ்லோகம் ஆழ்ந்த பொருள் கொண்டது எனில் விசுவாமித்திரரை யார் என்று இனம் காட்டும் கம்பனின் ஒரு சொற்றொடரும் அற்புதமானது என்றே கூறலாம்.

ராமாயணம் ஒரு தங்கச் சுரங்கம். வேண்டுமட்டும், வெட்டிய மட்டும் தங்கம் பெறலாம்!
தொடர்பு முகவரி: swami_48@yahoo.com

இராமன் பற்றிய தமிழ் பழமொழிகள்

jaya sri ram

கட்டுரையாளர்:- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்—968 தேதி 10 ஏப்ரல் 2014

அனுமார் வால் போல நீளுகிறதே or அனுமார் வால் போல நீண்டதாம்!
இந்தப் பழமொழி ராமாயண சுந்தர காண்ட நிகழ்ச்சியில் இருந்து வந்தது. ராவணனால் துன்புறுத்தப்பட்ட அனுமன், இலங்கைக்கு தீ வைத்தான். அப்பொழுது அவன் வால் திரவுபதியின் புடவை வற்றாது வந்தது போல நீண்டு கொண்டே போனது. அதாவது ஆஞ்சநேயனை தீயானது சுடவே இல்லை. இந்தியாவின் ‘’சூப்பர்மேன்’’ Superman மாருதி. அவன் செய்யாத சாகசம் இல்லை. அத்தனையையும் இன்று வெள்ளைக்காரர்கள் ‘காப்பி’ அடித்து காமிக்ஸ் Comics ஆக (சூபர்மேன், superman ஸ்பைடர்மேன் Spiderman, போகேமான் Pokeman, பேண்டம் Phantom) என்றெல்லாம் எழுதி, விற்றுக் கோடிக் கணக்கில் சம்பாதிக்கிறார்கள்.

இன்னொரு சம்பவமும் சுந்தர காண்டத்தில் உண்டு. ஆஞ்சநேயனக்கு ஒரு தூதருக்கு (ambassador) உரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும்.ஆனால் அது கொடுக்கப்படவில்லை இன்று சர்வதேச ‘ப்ரோடோகோல்’Protocol (சம்பிரதாய விதிகள்) என்ற பெயரில் தூதர்களை எப்படி நடத்த வேண்டும் என்று விதிகள் உள்ளன. இதை உலகிற்குக் கற்பித்தது இந்தியர்கள்! சாணக்கியன் எழுதிய விதிகளை திருவள்ளுவனும் ஒரு அதிகாரம் முழுதும் பாடியிருக்கிறான். அப்படி மரியாதை தர ராவணன் மறுத்தான். ஆசனம் கூட கொடுக்கவில்லை. அனுமார் தன் வாலை நீட்டி அதன் மூலம் ஒரு ஆசனம் அமைத்து ராவணனைவிட உயரத்தில் உட்கார்ந்து ‘பதில் மரியாதை’ செய்தான்!

Proverbs

இராம பாணம் பட்டு உருவினாற் போல
அந்தக் காலத்தில் ஒருவர் வீரத்தை மெய்ப்பிக்க ஏழு பொருள்களை ஒரே அம்பினால் துளைக்கச் சொல்லுவார்கள். இந்த ஏழு மர துளை போடும் போட்டி வேறு கலாசாரங்களிலும் உண்டு. இதை ஒட்டியே ராமனின் திறமையைக் கண்டுபிடிக்க ஏழு மரா மரங்களைத் துளைக்கும் அம்பைவிடச் சொன்னான் சுக்ரீவன். ராமன் விட்ட அம்பு ஏழு மரங்களையும் துளை போட்டது. இதே போல ஒரு வகைப் பூச்சியும் புத்தகத்தில் முதல் பக்கத்தில் இருந்து கடைசி பாக்கம் வரை குண்டு துளைத்தாற்போல துளை போடும் அந்த பூச்சிக்கும் இந்தியர்கள் ராமபாணம் என்று பெயர் வைத்தனர்.

இராமர் இருக்கும் இடம் அயோத்தி
மக்களுக்கு குணம் மிக்க ஒரு தலைவன் இருந்தால் போதும்; ஒரு ஆபத்தும் வராது என்று தெரியும். முறையாக ஆட்சி செய்யும் மன்னவன் இறைவனுக்கு சமம் என்று வள்ளுவனும் கூறுவான். இதனால்தான் மக்கள் அனைவரும் இரண்டு முறை இராமனைப் பின் தொடர்ந்து சென்றனர். முதல் முறை அவன் காடேகிய நாள் அன்று. ஆனால் இராமனே அவர்களைத் திருப்பி அனுப்பி விட்டான். இரண்டாவது முறை ராமன் ஆற்றில் ஜல சமாதி அடைய இறங்கிய போது அயோத்தியில் உள்ள அத்தனை மனிதர்களும், ஜீவராசிகளும் ராமனுடன் சரயு நதியில் இறங்கி மோட்சம் அடைந்தனர். அவர்களைப் பொறுத்த மட்டில், இராமன் எங்கே இருக்கிறானோ அதுதான் அயோத்தி! (Ayodhya now in Uttar Pradesh was the capital of Kingdom of Kosala)

rama color

இராம லெட்சுமணரைப் போல இசைந்திருக்கிறது
இராம,லெட்சுமணன்—ஆகிய இருவரும் இணை பிரியாத ஜோடிகள். எல்லா படங்களிலும் இதைக் காணலாம். அவர்கள் ஒற்றுமையை உவமையாக கூறும் போது, இராம லெட்சுமணரைப் போல இசைந்திருக்கிறது என்று சொல்லுவர்.

இராம வாக்குக்கு இரண்டு உண்டோ?
இராமன் சத்ய தர்ம பராக்ரமன். சொன்ன சொல்லை மீறாதவன். ஆயுதம் இழந்த ராவணனைக் கூட கொல்லாமல் ‘’இன்று போய், நாளை வா!’’ என்று இயம்பினன். ஆகையால் ராமனின் சொல்லுக்கு மறு சொல் கிடையாது. இலட்சுமணன் மிகவும் (short tempered) கோபக்காரன். எதற்கும் பொங்கி எழுவான. ஆனால் அண்ணன் ஒரு சொல் சொன்னால் போதும். அடங்கிவிடுவான். இராம வாக்குக்கு இரண்டு உண்டோ?

இராமனைப் போல ராசா இருந்தால் அனுமாரைப் போல சேவகனும் இருப்பான்
மனம் போல மாங்கல்யம். தலைவன் எவ்வழி அவ்வழி தொண்டன். ஆகவே இராமன் போல ஒரு ராஜா (Truthful, honest, sincere, amicable, easily accessible,heroic, people friendly) இருந்தால் உலகமே அவனுக்கு அடங்கி நடக்கும். இராம சேது என்னும் பாலம் கட்டும் போது அணில் கூட உதவி செய்யவில்லையா?

15173-yiddish-proverb-

இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன?
உலகில் நிறைய பேர் சுயகாரியப்(Selfish, self centred) புலிகள். தங்களுக்கு வேண்டியது கிடைத்தால் போதும். வாயை மூடிக்கொண்டு அநியாயங்களைக் கண்டும் காணாமல் இருந்து விடுவர். மஹாத்மா காந்தி, பல சத்தியாக் கிரகம், பாத யாத்திரை என்று அறைகூவல் விடுத்தபோதும் சிறை சென்றவர்கள் எண்ணிக்கை சில ஆயிரம்தான். எனக்கு என்ன? வெள்ளைக்காரன் ஆண்டால் என்ன? இந்தியர் ஆண்டால் என்ன? என்று இருந்தவர்களைக் கண்டு பாரதியும் பாடி இருக்கிறான். “நெஞ்சில் உரமும் இன்றி” என்ற பாடலைப் படித்தால் புரியும். இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? என்று இருப்போரே உலகில் அதிகம்.

இராமன் மங்கையோடு இணங்கியது அவம்
இராமனுடைய மங்கை சீதை. அவளுடன் இராவணன் வாழ நினைத்தது தவறு. இராமன் மங்கையோடு இணங்கியது அவம்.

இராமாமிர்தமே சீவனம் என்று பட்டினியாய் இருக்கலாமா?
ராமனுடைய பெயரைச் சொல்லுவதே அமிர்தம் என்று உண்ணாவிரதம் இருந்தோரைக் குறித்து சொன்ன சொல் இது. மனிதனாகப் பிறந்துவிட்டால் உடலையும் பேணித்தான் ஆகவேண்டும். இராமாமிர்தமே சீவனம் என்று பட்டினியாய் இருக்கலாமா? சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் உள்ளம் பெருங் கோயில், ஊனுடம்பு ஆலயம்.

hindi rama

இரா முழுதும் இராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் என்ன வேண்டும்? என்ற கதை (சீதைக்கு ராமன் சித்தப்பன் என்றானாம்)

சொன்ன சொல்லை மனதில் ஏற்றிக் கொள்ளாமல் ஒரு செயலை சடங்கு போல செய்வோரைக் குறிக்கும் வசனம் இது. அர்த்தத்தைப் புரிந்துகொண்டு உண்மையான ஆர்வத்தோடு ஒரு செயலை செய்ய வேண்டும். எதைப் படித்தாலும் கேட்டாலும் சிரத்தையோடு செய்தால் உண்மைப் பொருள் விளங்கும். வாத்தியார் பாடம் சொல்லிக் கொடுத்து முடித்த பின்னர் அடிப்படையே புரியாமல் ஒரு கேள்வி கேட்டல் அவருக்கு எப்படி இருக்கும்! ஒரு கச்சேரிக்குப் போனவர் வித்துவானைப் பார்த்து, உங்கள் தோடி ராகத்தைக் கேட்க அல்லவா நான் வந்தேன் என்று ஒருவர் சொன்னாராம். அவர் அப்போதுதான் தோடி ராகம் பாடி முடித்திருந்தார்!

இராமேசுரத்துக்கும் காசிக்கும் போயும் என்னைப் பிடித்த சநீசுரன் தொலையல்ல
சனி பகவான் யாராக இருந்தாலும் ஏழரை ஆண்டுக் காலம் பிடித்தே தீருவான். அதை மூன்று இரண்டரை ஆண்டுகளாகப் (3X2.5 years=7.5 years) பிரிப்பர். ஒரு குறிப்பிட்ட இரண்டரை ஆண்டு, சொல்ல முடியாத துயரம் கொடுப்பான. அவரவர் ஜாதகத்தைப் பொறுத்து இதன் உக்கிரம் அமையும். அப்போது அவர்கள் காசி ராமேஸ்வரம் சென்றாலும் கர்மவினை தொடர்ந்தே வரும். இதையே மற்ற விஷயங்களுக்கும் மக்கள் உவமையாகப் பயன்படுத்துவர். என்னதான் பரிகாரம் செய்தாலும் ஒரு கெட்டது விலகவில்லையானால் அப்பொழுது இந்த சொற்றொடரைப் பயன்படுத்துவர். தொடர்ந்து வரும் கஷ்டங்களை இது குறிக்கும். புராணத்தில் அரிச்சந்திரன் பட்ட பாட்டை நினைத்தால் இது சட்டென விளங்கும்.

Clash between Shiva and Saturn

சிவ பெருமான் பற்றியும் ஒரு கதை சொல்லுவர். சனி பகவானிடம் “நான் மும்மூர்த்திகளில் ஒருவன். என்னை நீர் ஒன்றும் செய்ய முடியாது” என்றார் சிவன். சனைச்வரன் (Sanai:= slow, Charan= Moving; slow moving) சிரித்துக் கொண்டே “இதற்கு யாரும் விதி விலக்கு அல்ல” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். சிவனுக்கு கொஞ்சம் சந்தேகம் வந்துவிட்டது. சரி இந்த ஆள் கண்டுபிடிக்காமல் இருக்க வேண்டுமானால் யாராலும் கற்பனை செய்ய முடியாத இடத்தில் ஒளிந்து கொள்வோம் என்று ஒரு சாக்கடையில் ஒளிந்து கொண்டாராம். சனிச்சரன் மறு முறை சிவனை சந்தித்தபோது, “பார்த்தாயா, என்னை நீ ஒன்றும் செய்ய முடியவில்லை” என்று சிவ பெருமான பெருமையாகச் சொன்னாராம்.

சனைச்சரன், “இல்லையே, சோதிட விதிகளுக்கு கடவுளும் விதி விலக்கல்ல. இந்தக் குறிப்பிட்ட காலத்தில் நீங்கள் எங்கே இருந்தீர்கள்?” என்று சிவனை சனி பகவான் கேட்டார். சிவன் பெருமையாக “நீங்கள் கண்டு பிடிக்கமுடியாத பாதாள சாக்கடையில் ஒளிந்திருந்தேன். நீங்கள் ஏமாந்து போனீர்கள்” என்று பதில் சொன்னார். சனி பகவான் சிரித்துக் கொண்டே கைலாசத்தில் பாரிஜாதம் முதலான புஷ்பங்கள் கமழும் இடத்தில் இருக்கவேண்டிய நீவீர் சாக்கடையில் காலம் தள்ளினீர் அல்லவா? அதுதான் உமக்கு சனி திசை” என்று சொன்னவுடன் சிவன் முகம் சிவந்து போனது!!!

71792-Famous+Proverbs+

தம்பி உடையான் படைக்கஞ்சான் ( லெட்சுமணன் பற்றிய மொழி)
இராமனுக்கு பெரிய பலம் அவன் தம்பி லெட்சுமணன். அண்ணன் தம்பி ஒற்றுமைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள் இராம லெட்சுமணர்கள். 14 ஆண்டுக் காலமும் இமைப் பொழுது சோராமல் அண்ணனைக் காத்தவன் லெட்சுமணன். உலக இலக்கியத்தில் இப்படி ஒரு சகோதர ஜோடியை எங்கும் பார்க்கமுடியாது. இரட்டையரைக் காணலாம். ஆனால் இரு வேறு தாயாருக்குப் பிறந்து ஒரு சேர ஜோடி சேர்ந்த சகோதரர் இவர்கள். அப்பேற்பட்ட தம்பி உடைய ஒரு வீரன் எப்பேற்பட்ட படை வந்தாலும் அஞ்சாமல் எதிர்த்து நிற்பான்; வெற்றியும் பெறுவான்!

இராவண சந்யாசி போல இருக்கான்
ராவணன் ஒரு ‘ருத்திராட்சப் பூனை’ (Hypocritical Cat). துணிச்சலாக வீரன் போல வந்து சீதையைக் கவரவில்லை. ஏனெனில் ராமனை வெல்ல முடியாது என்பது அவனுக்குத் தெரியும். சந்யாசி வேடத்தில் வந்து ஏமாற்றியவன். யாரேனும் ஒருவன் வேடம் தரித்து ஏமாற்றுகிறானோ என்ற சந்தேகம் வந்தால் உடனே மக்கள், “ஜாக்கிரதை இவன் ஒரு ராவணன்” என்று சொல்லி உஷாராகி விடுவர்.

rama thai

இராவணன் குடிக்கு மஹோதரன் போலும், சுயோதனன் குடிக்கு சகுனி போலும்
துரியோதனன் கெட்டுக் குட்டிச் சுவராகப் போக அவன் மாமன் சகுனிதான காரணம் சூதாட்டத்தில் மாயா ஜாலம் செய்து வெற்றி பெற்றுப் பின்னர் போர் ஏற்பட வழி செய்தவன். இதே போல ராவணனிடம் மகோதரன் என்பவன் முதல் மந்திரியாக (Chief Minister) இருந்தான். மகா மாயாவி (Cheat). இந்திரன் போல வேடம் கொண்டு வெள்ளை யானை மேல் ஏறி லெட்சுமணனுடன் போரிட வந்தவன். ராமன் பற்றி உளவு (Spy) வேலைகளில் ஈடுபட்டவன். சீதையை அனுப்பவேண்டாம் என்று கெட்ட யோசனை(wrong Advice) கூறி ராவணன் அழிய வழிவகுத்தவன்.(ஆதாரம்: அபிதான சிந்தாமணி-Tamil Encyclopaedia)
ஆக யாராவது ஒருவர் குடியைக் கெடுக்கும் வேலைகளையோ, மற்றவர்கள் அழிய துர் போதனை செய்தாலோ அவர்களை சகுனி, மகோதரன் ஆகியோருக்கு ஒப்பிடுவர்.

படிப்பது ராமாயணம் இடிப்பது சிவன் கோவில் / ராமன் கோவில்
சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாய் செய்பவர்களைக் குறை கூறும் பழமொழி இது. நல்ல விஷயங்களைப் பேசிவிட்டு, கேட்டுவிட்டு அதற்கு நேர் மாறான செயல்களைச் செய்வோர் ராமாயணத்தைப் படித்துவிட்டு கோவிலையே இடித்தது போல இது.
தேசத்தையே வைத்து சூதாடிய தருமபுத்திரனைக் குறைகூறும் பாரதி

“கோயிற்பூசை செய்வோர் சிலையை கொண்டு விற்றல் போலும்
வாயில் காத்து நிற்போன் வீட்டை வைத்து இழத்தல் போலும்
ஆயிரங்களான நீதி – அவை உணர்ந்த தருமன்
தேயம் வைத்திழந்தான் சீச்சீ சிறியர் செய்கை செய்தான்”
என்று சாடுகிறான். சொல் ஒன்று செயல் வேறு என்பதற்கு, இது நல்ல எடுத்துக் காட்டு. இப்படிப்பட்டவர்களை ‘படிப்பது ராமாயணம் இடிப்பது ராமர் கோவில்’ எனலாம்.

rama,hampi
ராமன் இருக்கும் இடத்தில் காமன் இரான்.

“இந்த இப்பிறவியில் இரு மாதரை சிந்தையாலும் தொடேன்”- (Kamba Ramayanam Quote) என்று சபதம் செய்தவன் ராமன். அந்தக் க லத்தில் அரசர்கள் நிறைய பேரைக் கல்யாணம் செய்வது இந்திய மரபு. நாடுகளுடன் நட்புறவு வேண்டும் என்பதற்கும், வேற்று நாட்டான் படை எடுக்கையில் அருகிலுள்ள நாடுகள் படை அனுப்பி உதவி செய்யவேண்டும் என்பதற்காகவும் பல நாட்டுப் பெண்களை மணப்பது ராஜ நீதி (diplomacy), சாணக்கிய நீதி! இதனல்தான் ஆப்கனிஸ்தானத்தில் உள்ள காண்டஹார் (காந்தாரம்) நகரில் இருந்து வந்த பெண்ணை காந்தாரி என்றும் பஞ்சாபில் இருந்து வந்த பெண்ணை பாஞ்சாலி என்றும், சோழதேசப் பெண்ணை சோழமாதேவி என்றும், பாண்டிய தேச இளவரசியை பாண்டிமாதேவி என்றும் அழைப்பர். அவர்களுடைய அம்மா அப்பா வைத்த பெயர் எல்லாம் காலப் போக்கில் மறைந்துவிடும். இப்படிப் பல தேசப் பெண்களை மணக்கும் வழக்கம் இமயம் முதல் குமரி வரை இருந்ததற்கு இலக்கியமும் கல்வெட்டுகளும் சான்று பகரும் .ஆனால் ராமன் மட்டும் ஒரே பெண்ணைக் கல்யாணம் செய்ததோடு மட்டுமின்றி மனதாலும் வேறு ஒரு பெண்ணை நினைக்கமாட்டேன் (சிந்தையாலும் தொடேன்) என்றான். இதனால் அவன் உயிர் வாழ்ந்த காலத்திலேயே, அவனை கடவுள் நிலைக்கு உயர்த்தினர் மக்கள். அந்த ராமனின் நாமத்தைச் சொன்னாலேயே காம எண்ணங்கள் பறந்தோடிப் போகும்.

வாலை ஒட்ட நறுக்கிவிடுவேன்! என்னிடம் வாலாட்டாதே!
அனுமனைப் பார்த்து ராவணன் சொல்லிய சொல் இது. ஆனால் அனுமனோ இலங்கைக்கே தீவைத்து “ராவணன் வாலை” ஒட்ட அறுத்து விட்டான். வால் என்பதும் அஹம்காரம் என்பதும் ஒன்றே. நாமெல்லாரும் யான் எனது என்னும் செருக்கில் ( I-ness, My-ness) ஆடாத ஆட்டம் ஆடுகிறோம். இதுதான் நமது வால். இதை நாய்வால் மாதிரி நிமிர்த்தவே முடியாது. ஒட்ட வெட்டி எறியவேண்டும். நாமும் நமது அகந்தை(Ego & Arrogance) என்னும் வாலை நோக்கி தினமும் “என்னிடம் வாலாட்டாதே ஒட்ட நறுக்கிவிடுவேன்”– என்று சொல்லச் சொல்ல ஞானம் பிறக்கும்.

இந்தப் பழமொழிகளை மட்டும், விளக்கம் எழுதாமல், நான் ஏற்கனவே “இந்து மதம் பற்றிய 200 பழமொழிகள்”– என்ற தலைப்பின் கீழ் கொடுத்து உள்ளேன்

famous proverbs

பழமொழிகள் பற்றிய எனது முந்தைய கட்டுரைகளையும் படிக்க வேண்டுகிறேன்:—-
1.இருபதாயிரம் தமிழ் பழமொழிகள்
2.இந்துமதம் பற்றிய 200 பழமொழிகள் (பகுதி 1,2)
3.பெண்கள் பற்றிய 300 பழமொழிகள் (பகுதி 1,2,3)
4.யானைகள் பற்றிய நூறு பழமொழிகள்
5.ஒன்றுக்கும் உதவாத உதிய மரமே
6.உடம்பைக் கடம்பால் அடி
7.பாரதி பாட்டில் பழமொழிகள்
8.அப்பர் தேவாரத்தில் பழமொழிகள் (இது மட்டும் எஸ்.நாகராஜன் எழுதியது)
9.20,000 Tamil Proverbs (English article)

Contact swami_48@yahoo.com

There are over 960 posts here in this blog touching all topics On Hinduism, Tamil Literature and Sanskrit Literature.

I welcome your feedback. Please post your comments. In addition to my two blogs, my English articles are posted in the speakingtree.com (Times of India website)

Rama’s Trick! Three Stories!!!

34 Hazara Rama Temple Ramayana Carvings

Rama sculptures, Hazara Temple,Karnataka.

Compiled by London swaminathan
Post No 959 dated 6th April 2014.

1.See God Everywhere

During the fight between Rama and Ravana, there came a time when all the monkeys who formed the army of Rama were attacked by the Rakshasas with such a terrible destructive force that their condition was most precarious. Sri Rama seeing the pain and panic of his monkeys, decided to do something to save the situation. By his divine power, he suddenly changed the combatants on both the sides into His own form. All the monkeys of Sri Ram’s army and all the Rakshasas of Ravana’s army now appeared as Sri Rama himself.

Thus each monkey saw the other monkey on the battlefield as Lord Sri Rama and so embraced him and danced with joy whereas every Rakshasa saw the other Rakshasa as Sri Rama – his avowed enemy. So, they fought ferociously among themselves in the battlefield and killed one another.

If, like his monkeys, you also see Rama everywhere with the eye of devotion and faith, fear will vanish from you. You will have nothing but love flowing from your hearts. You will love all alike and swim in an ocean of bliss.

rama,hampi
Ramayana sculptures in Hampi, Karnataka.

2.Kings Secret was out

There lived a king and a queen. The queen was a very devoted woman, engaged most of the time in the worship of God and repetition of His name. She was happy in every way except in one thing, namely, that her husband was not devoted to god. She wished so much that her husband should also have faith and devotion. She never saw sitting him for prayers or repeating God’s name.

Once when the queen woke up at midnight from sleep, she heard the king, who was sleeping by her side, uttering “Ram, Ram” in his sleep. This gave her a pleasant surprise. To hear her husband repeating God’s name even in sleep was not an ordinary joy to her. To celebrate the great event, she arranged for a festival and grand feast the next day. When the king found the great preparations going on for an unusual festival, he enquired of the queen what the matter was.

The queen replied that it was a very important day in her life as she heard him uttering God’s name the previous night in his sleep. Hearing this, the king was taken aback. He was extremely sorry that the spiritual discipline, which he had carried on so long in secret, was then revealed to others.

indonesia rama conf

Muslim Country Indonesia issued stamps on Ramayana characters.

3.The Devil and the Pole

A man wanted to propitiate a devil to make it do whatever he wanted. So he did the necessary ‘Sadhana’ (spiritual practice) to that end and by the power of Mantra (magic spell), he was able to summon the devil before him. The devil said that it would obey his commands, but on one condition: “If at any time you do not give me work, I will devour you. You must keep me engaged all the twenty- four hours”. The man agreed.

He immediately gave an order to build a palace for him. To his great wonder, the palace was built in no time. Then he gave an order for a long road to be made ready. That work was also executed in a short time. Next minute, the devil was standing before him, asking for more work. He had no time even to think. He gave an order to build a big town. It was ready within ten minutes. Now the man was perplexed and afraid. He did not know what orders to give. If he did not give any work, he would be eaten by the devil.

He hastened to a holy man and asked for advice. The holy man suggested that he might get a bamboo pole, plant it in the ground and ask the devil to climb it up and down until further orders. This meant no rest whatever for the devil. Finally it got disgusted and ran away.

Now , in your case, Ram Mantra is the pole and the ego is the evil that teases you. Ask him to go up and down the pole repeatedly and he will soon get tired and run away. Ramnam ( Ram’s Name) is given to you in order to subdue the ego. The ego must be made to disappear by its own endeavour.

The above stories are taken from the book “STORIES AS TOLD BY SWAMI RAMDAS”, Published for Anandashram by Bharatiya Vidya Bhavan, Chowpatty, Bombay 7, year 1969.
rama thai

Rama in Thailand.

Contact swami_48@yahoo.com

இராம பிரானும் தவளையும்

26fr_Prabhu_Kudanthai

Sri Ramaswami Temple, Kumbakonam ( photo from a news paper)

By London Swaminathan
Post No. 958 Dated 6th April 2014.

“ஸ்ரீ ராமசந்திரர் வனவாசம் பண்ணுகையில், ஒரு நாள் தனது வில்லையும் அம்பையும் தரையில் நிறுத்திவிட்டு, தாக சாந்தி செய்து கொள்வதற்காகப் பம்பா சரஸ் என்ற தடாகத்தில் இறங்கினார். மேலே ஏறி வந்து பார்க்கையில் தமது வில் ஒரு தவளையை ஊடுருவிச் சென்றதன் காரணமாக அந்தத் தவளை இரத்ததில் தோய்ந்திருப்பதைக் கண்டார்.

ஸ்ரீ ராமன் இதற்கு மிகவும் வருந்தி, ஏ, தவளையே நீ ஏதாவது சத்தம் போட்டிருக்கலாமே; அப்போது நீ இருப்பதை நான் தெரிந்து கொண்டிருப்பேனே. உனக்கு இந்தக் கதியும் நேர்ந்திராதே” என்றார்.

ராமா ! எனக்கு ஆபத்து நேரும்போது, “ராமா என்னைக் காப்பாற்று” என்று சொல்வேன். ஆனால் நீயே என்னைக் கொல்லும்போது, நான் யாரிடம் என் குறையைச் சொல்லி முறையிட்டுப் பிரார்த்திப்பது? என்று தவளை பதில் சொல்லிற்று”.

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை இது; உதவிய புத்தகம்:- ஸ்ரீ ராமகிருஷ்ணரின் உபதேச மொழிகள், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மயிலாப்புர், சென்னை 600 004.

(இந்த நூலில் 1121 உபதேசங்கள் இருக்கின்றன. இது ஒரு அற்புத மான தொகுப்பு. இந்து மதம் எனக்குப் புரியவில்லையே! ஜீவாத்மா, பரமாத்மா, க்ஷேத்ரக்ஞன் இந்த சொற்கள் எல்லாம் புரியவில்லையே!! என்பவருக்கு இந்த நூல்தான் அருமருந்து. எளிய உபதேசம் மூலம் அரிய பெரிய தத்துவங்களை விளக்கும் அற்புத நூல் இது.)

26fr_Prabhu_Kudantharama

Kumbakonam Sri Ramaswami Temple picture from a newspaper.

இந்தக் கதை சொல்லும் நீதி என்ன?

எறும்பு முதல் யானை வரை எல்லா ஜீவன்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கும் வல்லமையும் வள்ளன்மையும் படைத்தவன் இராமன்.
முறையாக அரசு செய்யும் மன்னவனை மக்கள் கடவுளாகக் கும்பிடுவார்கள் என்று வள்ளுவன் சொல்கிறான்:

முறை செய்து காப்பாற்றும் மன்னவன், மக்கட்கு
இறை என்று வைக்கப் படும் (குறள் 388)
– என்பது வள்ளுவன் வாக்கு.

எப்படி திருஞான சம்பந்தர் தனது திருமணம் முடிந்த அடுத்த நிமிடத்தில் அத்தனை பேரையும் கூண்டோடு கைலாசத்துக்கு அழைத்துச் சென்றாரோ– திருமணப் பந்தலில் தோன்றிய ஜோதியில் மறைந்தனரோ — அதே போல ராமனும் அயோத்திவாசிகள் அத்தனை பேரையும் மோட்சத்திற்கு அழைத்துச் சென்றான். அவனது காந்த சக்தி மக்கள் அனைவரையும் இழுத்தது. அவர்கள் அனைவரும் ராமனுடன் சரயு நதியில் இறங்கி மோட்சத்தை அடைந்தனர். இதை நம்மாழ்வார் பாடி இருக்கிறார்:–

கற்பார் இராம – பிரானை அல்லால், மற்றும் கற்பரோ
புல், பா முதலா, புல் எறும்பு ஆதி ஒன்று இன்றியே
நல் – பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நல் – பாலுக்கு உய்த்தனன் – நான்முகனார் பெற்ற நாட்டுளே?

பொருள்: நான்முகன் படைத்த உலகில் வாழும் அசையும், அசையாப் பொருள்கள் ஆகிய பல உயிர்களையும், புல் பூண்டு முதலாக எறும்பு போன்ற அனைத்து உயிர்களையும், தன் அருளால் இராமன் சுவர்க்கத்துக்கு அழைத்துச் சென்றனன். இத்தகைய இராமனின் புகழைக் கற்காமல் மற்று எதையும் கற்பார்களோ!

sitarama_5kumbalpnam

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்

— என்ற வள்ளுவன் குறளைப் பார்க்கையில், இராம பிரானைக் கடவுள் நிலைக்கு உயர்த்தத்தான் அந்தக் குறளை எழுதினானோ என்று நாம் வியப்புறுவோம்!!.

2014 ஏப்ரல் 8 செவ்வாய்க் கிழமை இராம நவமி. இராமனின் புகழ் பாடி நாமும் நற்கதி அடைவோம்.

Contact swami_48@yahoo.com

Pictures are used from various sites; thanks.

Rama – Embodiment of Dharma

ramabronze

By London Swaminathan
Post No. 957 Dated 5th April 2014

Rama Navami, Birth day of Lord Rama falls on 8th April 2014.

“Rama, the ancient idol of heroic ages, the embodiment of truth, of morality, the ideal son, the ideal husband, the ideal father, and above all the ideal king, this Rama has been presented before us by the great sage Valmiki. No language can be purer, none chaste, none more beautiful, and at the same time simpler, than the language in which the great poet has depicted the life of Rama. And what to speak of Sita? You may exhaust the literature of the world that is past, and I may assure you that you will have to exhaust the literature of the world of the future, before finding another Sita. Sita is unique; that character was depicted once and for all. There may have been several Ramas, perhaps, but never more than one Sita!”
—-Swami Vivekananda

Valmiki praised Lord Rama as the embodiment of Dharma (righteousness). We have lots of monuments and temples all over India which boasts of their association with Sri Rama. They were made holy the minute Rama walked on the soil of those towns and cities, hills and forests. He was even kind towards animals including small creatures. Ramakrishna Paramahamsa tells us a story where his kindness excelled:

“Sri Ramachandra in the course of his travels through the forest descended into the lake called Pampa to drink water, leaving his bow and arrow fixed on the ground. Coming up he found a frog lying covered all over with blood, having been run through by his bow. He was very sorry and said to the frog, “Why didn’t you make some kind of sound? Then I could have known that you were here and you would not have come to this plight.” The frog replied, “O,Rama, when I fall into danger, I call on Thee, ‘O,Rama, save me’. Now that You yourself are killing me , to whom else shall I turn and pray?

hanuman 4

Tamil saint praise for Rama:

Rama liberated all the creatures in the vicinity of Ayodhya, the capital of his kingdom. All those lived in the city went to heaven. Nammalvar, a Vaishnava saint who lived 1200 years ago praised Sri Rama about his kindness towards plants and animals in one of his hymns:–

“For the seekers of knowledge
Can there be a knowledge?
Better than
The knowledge of the divine, Sri Rama
The one who liberated
Even the blades of grasses
And all the swarms of ants
Leaving none behind
That ever existed
In the good city of Ayodhya.
And placed them in
An exotic heaven
Created exclusively for them
By the Great Grandsire Brahma.

—The Ultimate Liberator by Nammalvar.

Contact :– swami_48@yahoo.com

கிருஷ்ணார்ஜுனர்: பரமஹம்ஸ விவேகானந்தர் அவதார ரகசியம்!

11.4nara_narayana

Post No 930 Dated 25th March 2014
This article was written by my brother S Nagarajan for Njana Alayam Magazine

ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம் ஆகஸ்ட் 2013 இதழில் வெளியான கட்டுரை:

கிருஷ்ணார்ஜுனர்: பரமஹம்ஸ விவேகானந்தர் அவதார ரகசியம்!

ச.நாகராஜன்

எவ்வளவு நாள் உனக்காகக் காத்திருந்தேன்!

1881ஆம் வருடம் நவம்பர் மாதம். முதன் முதலாக ராமகிருஷ்ண பரமஹம்ஸரை விவேகானந்தர் தக்ஷிணேஸ்வரத்தில் சந்தித்தார்.கங்கையைப் பார்த்திருந்த மேற்குப் பக்க வாயில் வழியே விவேகானந்தர் நுழைந்தார்.ஒரு பாடலைப் பாடினார். அவ்வளவு தான், பாடல் முடிந்த பிறகு நரேந்திரனின் கையைப் பிடித்து வட புறம் இருந்த வாரந்தாவிற்குச் சென்ற பரமஹம்ஸர் அறைக் கதவை மூடினார், அவர்களை யாரும் பார்க்க முடியாதபடி! “இவ்வளவு தாமதமாக நீ வந்தது சரியா? உனக்காக எவ்வளவு நாள் காத்திருந்தேன்! உலகியல் சம்பந்தமான வெற்றுப் பேச்சைக் கேட்டுக் கேட்டு என் காது புளித்துப் போய் விட்டது! “ என்று ஆரம்பித்தவர் அழ ஆரம்பித்தார். பின்னர் அவர் சொன்ன பேருண்மை தான் உலகை அதிசயிக்க வைத்த ஒன்று!

“ எனது கடவுளே! எனக்குத் தெரியும். நீங்கள் தான் புராதன ரிஷியான நாராயணரின் அம்சமான நர ரிஷி என்று! இந்த உலகில் மனித குலம் படும் துன்பங்களைத் துடைக்க நீங்கள் அவதாரம் செய்துள்ளீர்கள்” என்றார் பரமஹம்ஸர்.

“இவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது” என்று அப்போது நான் நினைத்தேன் என்று பின்னால் அந்தச் சந்திப்பைப் பற்றிக் கூறினார் அப்போது நரேந்திரனாக இருந்த விவேகானந்தர்! ஆனால் தான் தான் நாராயணர் என்பதை பரமஹம்ஸர் வெளிப்படுத்தவில்லை. ஆனால் பின்னர் விவேகானந்தர் இதை உணர்ந்து கொண்டார்.

முதலில் நாராயணர், நர ரிஷியிடம் பூலோகம் போக வேண்டும்; அனைவரின் துயரையும் துடைக்க வேண்டும் என்று கூறிய போது நர ரிஷி பிகு செய்து கொண்டாராம்! போயும் போயும் எதற்காக அங்கே போக வேண்டும் என்று! ஆனால் பூவுலகில் அவதரித்த பின்னர் திரும்பிப் போக வேண்டிய வேளை வந்த போது விவேகானந்தர் பூமியில் அனைவர் படும் துன்பத்தையும் பார்த்து திரும்ப மறுத்து விட்டாராம். இவர்கள் அனைவரும் மோக்ஷம் அடைந்த பின்னரே நான் அங்கு வருவேன் என்றார் அவர்! “பூவுலகில் அனைவரும் முக்தி பெறும் வரை எத்தனை முறை வேண்டுமானாலும் பூமிக்கு வர நான் தயார்” என்று வெளிப்படையாகவே ஒருமுறை அவர் குறிப்பிட்டார்.
நர நாராயண ரிஷிகளுக்கு மனிதர்களை முக்தி பெற வழிகாட்டுவதில் அவ்வளவு அபார பிரியம்!

Nara-narayana-for-web

அர்ஜுனா! நீ நரன்; நான் நாராயணன்!

மஹாபாரதத்தில் அடிக்கடி வலியுறுத்தப்படும் கருத்து அர்ஜுனன் நர ரிஷி என்பதும் கிருஷ்ண பரமாத்மா நாராயண ரிஷி என்பதும் தான்! வன பர்வத்தில் 12ஆம் அத்தியாயத்தில் (அர்ஜுனாபிகமன உப பர்வத்தில்) அர்ஜுனன் கிருஷ்ணரின் உண்மை சொரூபத்தை விளக்கி அவரைப் புகழ்ந்து துதி செய்த போது கிருஷ்ணர் அர்ஜுனனை நோக்கிச் சொல்லும் வாக்கியம் ஒரு பேருண்மையை வெளிப்படுத்துகிறது.

:அர்ஜுனா! நீ என்னைச் சேர்ந்தவன். நான் உன்னையே சேர்ந்தவன். நீ நரனாக இருக்கின்றாய்! நான் ஹரியான நாராயணனாக இருக்கின்றேன். நர நாராயணர்களென்ற ரிஷிகளாகி ஒரு சமயத்தில் இவ்வுலகை அடைந்தோம்” என்று கிருஷ்ணர் தாங்கள் யார் என்பதை விரிவாக விளக்குகிறார்.

பரமஹம்ஸர் விளக்கமும் கிருஷ்ணரின் விளக்கமும் நர நாராயணர்கள் எப்படி துயருற்றிருக்கும் மக்களின் அவலத்தைப் போக்கி முக்தி மார்க்கத்தை அளிக்க எப்போதும் தயாராக இருக்கிறார்கள் என்பதை உணர வைக்கிறது.

நர நாராயண ரிஷிகள் யார்?

இந்த நர நாராயண ரிஷிகளின் பிறப்பையும் பிரபாவங்களையும் தேவி பாகவதம் நான்காம் ஸ்கந்தத்தில் விரிவாகக் காணலாம். அதில் எட்டு ஒன்பதாவது அத்தியாயங்கள் கூறும் சுவையான நிகழ்வுகள் நம்மை ஆச்சரியப்படுத்தி பரவசத்தில் ஆழ்த்தும்.

ஒரு முறை பிருகு முனிவரின் புதல்வரான சியவன மஹரிஷி நர்மதை நதியில் குளித்துக் கொண்டிருந்த போது விஷ நாகம் ஒன்று அவரைப் பிடித்து இழுத்தவாறே நதியின் ஆழத்திற்குச் செல்ல ஆரம்பித்தது. பயமோ நடுக்கமோ இன்றி சியவனர் விஷ்ணுவைத் துதிக்க ஆரம்பித்தார். விஷ்ணு உடனே அவரைக் காப்பாற்றினார். நாகம் தன் பிடியை விடவே சியவனர் பாதாள லோகம் அடைந்தார். அங்கே அவரைக் கண்ட அசுர ராஜனான பிரகலாதன் விஷ்ணு பக்தரான அவரின் வருகை குறித்து மிகவும் மனமகிழ்ந்து அவரை உபசரித்து வணங்கினான். அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது உலகில் உள்ள தீர்த்தங்களில் சிறந்த தீர்த்தங்கள் எவை என்று கேட்டான். சியவனர் நைமிசாரண்யம், புஷ்கரம், சக்ரதீர்த்தம் ஆகிய மூன்று தீர்த்தங்களைக் குறிப்பிட்டார்.(நைமிசாரண்ய மஹிமை பற்றி ஞான ஆலயம் டிசம்பர் 2012 இதழில் படித்ததை நினைவு கூறலாம்.)

இதை மனதில் வாங்கிக் கொண்ட பிரகலாதன் நேராக நைமிசாரண்யம் சென்றான். அங்கே சரஸ்வதி நதிக் கரையில் இரு ரிஷிகள் தவம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தான். ஆனால் அவர்கள் அருகில் வில்லும் அம்புகளும் இருந்தன. இதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட அவன் உண்மையான ரிஷிகளுக்கு அருகில் வில்லும் அம்பும் இருக்குமா என்று சந்தேகப்பட்டான். அவர்கள் போலி ரிஷிகள் என்று அவன் தீர்மானித்தான்.

தவம் புரிவோருக்கு தபசு தான் வேண்டுமே தவிர தனுசு எதற்காக என்று பிரகலாதன் அவர்களிடம் வினவ,” எங்கள் தபசில் உனக்கு எதற்காக இந்த வீணான விசாரம்? உலக சுகத்தை அனுபவிக்கும் ஒரு சாதாரண பிராணி நீ! பிரம்ம ரிஷிகளுடன் தர்ம அதர்ம விசாரம் செய்யலாகுமா? : என்று பதில் வந்தது.

உடனே பிரகலாதன்,” உங்களுக்கு யுத்தத்தில் சக்தி இருக்கிறது என்கிறீர்கள் அல்லவா? வாருங்கள், யுத்தம் புரிவோம் என்று அறை கூவவே தங்களது சார்ங்கம் ஆர்ஜவகம் என்னும் வெண்ணிற தனுசுகளை எடுத்து நர நாராயணர் யுத்தத்தை ஆரம்பித்தனர். பிரகலாதன் வில்லில் இருந்து வானத்தில் வந்த பாணங்கள் அங்கேயே அறுபட்டன, தேவர்களும் அசுரர்களும் கோரமான இந்த யுத்தத்தைப் பார்க்கக் கூடினர்.பற்பல ஆண்டுகள் சென்ற பின் ஒரு நாள் பிரகலாதனின் வில் அறுபட்டு விழுந்தது. அவன் வேறு வில்களை எடுத்தான் அவையும் துண்டு துண்டாகின. நூறு வருடங்கள் தேவர்களோடு யுத்தம் செய்தவன் பிரகலாதன். இப்போது ஆச்சரியப்பட்டு மலைத்து நின்றான்.

அவன் முன்னர் விஷ்ணு தோன்ற அவரைத் துதித்த பிரகலாதன்,” இவர்கள் யார்? ஏன் என்னால் அவர்களை வெல்ல முடியவில்லை? “ என்று ஆச்சரியப்பட்டு வினவினான்.
“இவர்களே மஹா தபஸ்விகளாகவும் சித்தர்களாகவும் விளங்கும் நர நாராயணர் என்று அறிவாய்! இவர்கள் என்னுடைய அம்சங்கள். ஆகவே அவர்களை எப்படி உன்னால் ஜெயிக்க முடியும்! யுத்தத்தை நிறுத்து. பாதாளம் சென்று என் மீதுள்ள பக்தியைத் தொடர்வாய்” என்று விஷ்ணு அருளவே பிரகலாதன் விஷ்ணு தன்னை வெளிப்படுத்திக் கொண்டதால் மிகவும் மகிழ்ச்சி அடைந்து பாதாளம் மீண்டான். நர நாராயணர் தங்கள் தவத்தை மீண்டும் ஆரம்பித்தனர்.

இப்படிப்பட்ட பிரம்மாண்டமான ரிஷிகளே மஹாபாரத காலத்தில் அர்ஜுனனாகவும் கிருஷ்ணனாகவும் வந்து மனித குலத்திற்கு கீதையை அருளினர். இந்த நவீன அறிவியல் யுகத்தில் விவேகானந்தராகவும் பரமஹம்ஸராகவும் வந்து மனித குலத்திற்குத் தேவையான செய்தியை அருளியுள்ளனர்.

விவேகானந்தரே ஒரு முறை அருளியுள்ளார் இப்படி: “வேறு யாரும் சொல்வதற்கு எதையும் நான் விட்டு வைக்கவில்லை” என்று! மனித குலத்திற்குச் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லியாகி விட்டது,
இப்போதைக்கு இது போதும் என்று முடிவு செய்து தங்கள் இருப்பிடம் சென்று விட்டனர் நர நாராயணர்! அவர்களின் மஹிமையை உணர்ந்து, கிருஷ்ணார்ஜுனர்கள் மற்றும் பரமஹம்ஸ விவேகானந்தரின் உபதேசத்தை ஏற்று அவற்றைக் கடைப்பிடித்து உய்வது நமது கலியுக அதிர்ஷ்டம் தான் அல்லவா!

சின்ன உண்மை!
ஸ்ரீமத் பாகவதம் (பதினொன்றாம் ஸ்கந்தம், அத்தியாயம் 4) நர
நாராயண ரிஷிகள் இன்றும் பத்ரிகாஸ்ரமத்தில் தவம் புரிவதையும் (பனிரெண்டாம் ஸ்கந்தம் அத்தியாயம் 39) மார்கண்டேய மஹரிஷி நர நாராயணரின் மஹிமை பற்றி ஸ்தோத்ரம் செய்வதையும் விரிவாக விளக்குகிறது..

*****************
Contact swami_48@yahoo.com

Interesting Words in the Bhagavad Gita

aura

By London Swaminathan
Post No. 920 Dated 20th March 2014

There are many interesting words in Bhagavad Gita. Some people study it devotedly without understanding the meaning. Some people read it with the help of commentaries. Whatever you do it is useful in one way or other. But if you do word study in Bhagavad Gita and do your own research regarding those words you can retain them in memory. It will lead you towards better understanding. For instance if you look for these words in Marathi or Telugu or Hindi Bhakti literature you will definitely get some good cross references. I have done so with Tamil Bhakti literature just for some words.

1.Jnana Agni =Fire of Knowledge= fire of wisdom 4-19
“He whose undertakings are all devoid of desires and selfish puposes, and whose actions have been burn by the Fire of Knowledge, –him the wise call a sage”.(4-19)

2.Jnana Chakshu= Eye of Wisdom (15-10)
The deluded do not see Him who departs, stays and enjoys; but those who possess the Eye of Wisdom behold Him (15-10)

3.Jnana Tapasa = Austerity of Wisdom (4-10)
“Freed from attachment, fear and anger, absorbed in Me, taking refuge in Me, purified by the austerity of wisdom, many have attained to My Being”. (4-10)

4.Jnana Dipena= Lamp of Wisdom (10-11)
“Out of mere compassion for them, I, dwelling within their Self, destroy the darkness born out of ignorance by the luminous Lamp of Wisdom” (10-11)

boat-in-the-sea-hd-ya-381930

5.Jnana Plavena = Boat of Wisdom (4-36)
“Even if thou art the most sinful of all the sinners, yet thou shalt verily cross all sins by the Boat of Wisdom” (4-36)

Tamil saint Appar alias Tirunavukkarasu of seventh century AD also used a simile like this:

He is Narayanan; He is Brahma
He is in the four Vedas;
He is the perfect one
Who is like a ship on the great ocean of wisdom – 78, 6th Tirumurai

6.Jnana Yoga= Path of Knowledge (3-3)
“In this world there is a twofold path, as I said before, O Sinless one, — the Path of Knowledge of the Sankhyas and the path of action of the Yogis” (3-3)

7.Jnana Yajna= Wisdom Sacrifice (4-33, 9-15, 18-70)
“Superior is Wisdom –Sacrifice to the sacrifice with objects, O,Parantapa! All actions in their entirety, O,Arjuna, culminate in wisd0m” (4-33)
agni

Tamil devotional poets kept this beautiful Sanskrit word Jnana intact wherever they used divine knowledge or wisdom. They did not translate it in to Tamil. Like Dharma, it is an untranslatable word.

Bhuthathalvar, one of the 12 Vaishnavite saints used Lamp of Wisdom in his hymns. Tirumular, one of the 18 Tamil Siddhas (enlightened souls) used Sword of Wisdom. Sambandar ,one of the Four Great Saivite saints, used the word Flame of Wisdom in his Thevaram hymns. Bharati, the greatest of the modern Tamil poets, used the word Sword of Wisdom in his poems. There are hundreds of places where they used this Jnana with other words as similes or metaphors.
sword,Manjushri-

In the Tamil version of this article I have given the full verses.

Contact swami_48@yahoo.com

ராமருக்குச் சீதை சொன்ன ஆயுதம் பற்றிய கதை!

ram sita jungle

Post no.888 Dared 5th March 2014
ராமாயண வழிகாட்டி — அத்தியாயம் 19

ச.நாகராஜன்

ராமாயணத்தின் நாயகியான சீதை பெரும் மேதை என்பதை வால்மீகி ராமாயணத்தை நுணுகிப் படிப்போர் புரிந்து கொள்ள முடியும். பாரம்பரியம் பாரம்பரியமாக வரும் பழைய கதைகளையும் அருமையான சமுதாயத்தின் வழக்கு மொழிகளையும் அவர் ஆங்காங்கே எடுத்துக் கூறுவதே இதற்குச் சான்றாகும்.

யுத்த காண்டத்தில் சீதை கூறிய கரடி கதையை முன்னர் பதினொன்றாம் அத்தியாயத்தில் பார்த்தோம். இன்னொரு கதையை அவர் ராமருக்கு எடுத்துக் கூறுவது ஆரண்ய காண்டத்தில் ஒன்பதாவது ஸர்க்கத்தில் அழகுற அமைந்துள்ளது. அதைப் பார்ப்போம்.

ஸுதீக்ஷ்ண முனிவரால் விடை கொடுக்கப்பட்டு தண்டகை என்று பெயரிடப்பட்டுள்ள காட்டிற்குச் செல்லும் போது சீதை தண்டகாவனத்திற்கு எழுந்தருளத் தனக்கு இஷ்டமே இல்லை என்று ராமரிடம் கூறி, “ராக்ஷஸர்களைக் கண்டதுமே தேவரீர் பாணப் பிரயோகம் செய்வீர்; ஆயுதம் எடுத்தல் தகாது”, என்று கூறி ஒரு கதையைக் கூற ஆரம்பிக்கிறார்.

ram in jungle

“ மஹா பாஹுவே! முன்னொரு காலத்தில் உண்மையையே பேசுபவரும் பரிசுத்தருமான ஒரு முனிவர் பரிசுத்தமாய் இருப்பதும், களிப்புற்ற மான்களையும் பறவைகளையும் கொண்டதுமான ஒரு வனத்தில் வசித்து வந்தார். சசி தேவியின் மணாளனான இந்திரன் அவரது தவத்திற்கு இடையூறை செய்வதற்கென்றே கத்தியைக் கையில் கொண்டு போர் புரியும் வீர உருவத்தைக் கொண்டு அவரது ஆசிரமத்திற்கு வந்தான். அந்த ஆசிரமத்தில் அப்போது புண்ணிய தவத்தில் ஆஸக்தியுடைய அவருக்கு கூர்மையானதும் சிறந்ததுமான அந்தக் கத்தியானது பாதுகாப்பு திரவியம் என்ற முறையில் கொடுக்கப்பட்டது.

அவர் அந்த ஆயுதத்தை ஏற்றுக் கொண்டு பாதுகாப்புப் பொருளாக அதைப் போற்றி தனது அடைக்கலப் பொருளான அதைக் கையில் எடுத்துக் கொண்டே எப்போதும் வனத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார். பாதுகாப்புப் பொருளில் மனதைச் செலுத்தி அவர் பழங்களையோ அல்லது கிழங்குகளையோ கொண்டு வர எங்கு சென்றாலும் அந்தக் கத்தியின்றி போவதில்லை. அந்த முனிவர் சதா ஆயுதத்தைத் தரிப்பவாய் இருந்து காலக் கிரமத்தில் தவத்தில் ஊக்கத்தை விடுத்து தனது புத்தியை குரூரமாக ஆக்கிக் கொண்டார். அந்த ஆயுதத்தினுடைய சேர்க்கையால் அந்த முனிவர் சுய நிலை தவறி கொடுமையில் ஈடுபட்டு தருமம் க்ஷீணிக்கப்பெற்று அதனால் நரகத்தை அடைந்தார்.

ஆயுத சகவாசத்தால் விளைவது இப்படித்தான் ஆகும் என்பதாய் உள்ள இது ஒரு பழங்கதை” (ஒன்பதாவது ஸர்க்கம் 16 முதல் 23வது ஸ்லோகம் முடிய சீதை கூறும் இந்தக் கதையைக் காணலாம்)

சீதையின் கதையைக் கேட்ட ராமர் சீதையைப் போற்றி, “ தேவீ! க்ஷத்திரியர்களால் வில்லானது கஷ்டப்படுகிறவர்களின் முறையீடு இருக்கக் கூடாது என்கிற காரணத்தால் தரிக்கப்படுகிறதென்ற இந்த நியமனமானது உன்னாலேயே சொல்லப்பட்டு விட்டது. நான் அதைத் தவிர வேறு இல்லை என்று பதில் கூறுகிறேன்” என்கிறார்.

ramas arrow

ஸ்லோகத்தைப் பார்ப்போம்:-
கிம் து வக்ஷயாம்யஹம் தேவி த்வயைவோக்தமிதம் வச: I

க்ஷத்ரியைதார்யதே சாபோ நார்தஷப்தோ பவேதீதி II

(பத்தாவது ஸர்க்கம் மூன்றாவது ஸ்லோகம்)

தேவி – தேவீ
க்ஷத்ரியை: – க்ஷத்திரியர்களால்
சாப: – வில்லானது
ஆர்த ஷப்த: – கஷ்டப்படுகிறவர்களின் முறையீடு

ந பவதே இதி – இருக்கக் கூடாது என்கிற காரணத்தால்
தார்யதே – தரிக்கப்படுகிறதென்கிற
இதம் வச: – இந்த நியமனமானது
த்வயா ஏவ – உன்னாலேயே சொல்லப்பட்டு விட்டது.
அஹம் கிம் து – நான் அதைத் தவிர வேறு இல்லை என
வக்ஷயாமி – பதில் கூறுகிறேன்

ஆயுதம் ஆபத்தையே விளைவிக்கும் என்ற இந்த சாசுவதமான மொழியை சீதை கூறுவது எந்தக் காலத்துக்கும் பொருந்தும். இந்தக் காலத்துக்குக் கூடவே பொருந்தும்.

பழமையான இதிஹாஸமான ராமாயணம் உலகின் ஆதி காவியம் என அழைக்கப்படுகிறது. அதில் பழங்கதை என சீதை கூறுவதை நோக்கும் போது நமது ஹிந்து நாகரிகம் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே தோன்றியது என்று கூறுவதில் தடை என்ன இருக்கிறது?

ஆரண்ய காண்டம் ஒன்பதாவது ஸர்க்கமும் பத்தாவது ஸர்க்கமும் சுவாரசியமான ஸ்லோகங்களைக் கொண்டுள்ளவை என்பதோடு அனைவரையும் கவர்வதுமாகும்.

(This article is written by my elder brother S Nagarajan: swami)
Contact swami_48@yahoo.com

*****************

Lord Rama Vs Kama

ram with dwaja

By London Swaminathan
Post No. 854 Date:20th February 2014

Prasnottara Ratna Malika Hymn of Adi Shankara is unique in many respects. First of all it is in Question and Answer format. Secondly, he raises several questions on secular subjects and answers them. On religious topics also he discusses very interesting subjects. One of the questions in verse number 32 (out of 67 verses) is

Q:-Who is braver than even Rama? (Ramad api ka: sura:?)
A:-One who does not waver even when hit by the arrows of Cupid.
(Rama: King of Ayodhya, Hero of Ramayana; Kama: God of Love, Cupid.)

He is indirectly saying that it would be very difficult to be A ‘Rama’. And it is an indirect praise for Rama for being true to every word in the scripture.

The reason he raised this question is, there is a saying in Indian languages ‘No Kama Where Rama is’. Rama is praised as Eka Patni Vratan (Vow to marry only one woman and stick to her come what may). When the great Tamil poet adapted Valmiki Ramayana he added one verse in Tamil, where Rama says “In this birth I wouldn’t even think about a second woman ( In Tamil: Intha Ippravikku Iru Matharaii sinthaiyalum Thoten).

Swami Vivekananda also touched this point in one of his lectures:
“What is the teaching of the Great Ones? — “Where there is Rama, there is no Kama; where there is Kama, there Rama is not. Night and Day can never exist together.” The voice of the ancient sages proclaims to us, “If you desire to attain God, you will have to renounce Kâma-Kânchana (lust and possession). The Samsâra is unreal, hollow, and void of substance. Unless you give it up, you can never reach God, try however you may. If you cannot do that, own that you are weak, but by no means lower the Ideal. Do not cover the corrupting corpse with leaves of gold!” So according to them, if you want to gain spirituality, to attain God, the first thing that you have to do is to give up this playing “hide-and-seek with your ideas”, this dishonesty, this “theft within the chamber of thought”.

From The Complete Works of Swami Vivekananda, Volume 3 ‘WHAT HAVE I LEARNT?’(Delivered at Dacca, 30th March, 1901)
rama travel

In India, kings can marry any number of women. Even Rama’s father Dasaratha had many wives. Krishna, another incarnation of Vishnu, had many wives. But Rama, a king, was unique in marrying only one woman Sita Devi.

In another talk, swami Vivekananda says,

“Rama, the ancient idol of the heroic ages, the embodiment of truth, morality, the ideal son, the ideal husband, the ideal father and above all the ideal king, this Rama has been presented before us by the great sage Valmiki. No language can be purer, none chaste, none more beautiful and at the same time simpler, than the language in which the poet has depicted the life of Rama. And what to speak of Sita? There may have been several Ramas perhaps, but never more than one Sita. She is the very type of Indian women”.

Saints like Tulsidas and Thyagaraja have sung the greatness of Rama.

When a blind disciple approached Lahiri Mahasaya, he touched the disciple’s forehead asked him to pray to Rama.

“Keep your mind concentrated there and frequently chant the name of Rama for seven days. The splendour of the sun shall have a special dawn for you.”He got the vision in a week’s time.

Source: An Autobiography of a Yogi by Paramahansa Yogananda.

Even Valmiki, a hunter, was turned into a poet and saint by reciting Rama’s name. Swami Vivekananda pointed out that Rama, Krishna and the Buddha were all Kshatriyas (Warrior caste) and worshipped by all.

Those who recite the name of Rama will get out of the bad influence of Kama ( Lust and Desire). So there is a custom in India to write the name of Rama several hundred times every day in a note book. Hindus write ‘SRI RAMAJAYAM’ in the note books, on walls and in the wedding invitations.

Rama stood for universal brotherhood. The person (Guhan) who took Rama across the Ganges in his boat would be regarded as an untouchable. But he proclaimed him as another brother! He was an ideal king because he did not control the areas he won. He gave them back to its legitimate owners Angada and Vibhishana.

ram ka nam

So Shankara is indirectly praising Rama and the implied meaning is no one can be braver than Rama. If one beats the Cupid, one can be elevated equal to Rama. In India people who control the five senses are called Mahavir ( E.g.Jain Saint Mahavira and Anjaneya). In other cultures people who killed more were called Mahavira (Great Hero).

Pictures are taken from different sources. Thanks.

Contact swami_48@yahoo.com