வலியைப் போக்க சங்கீதம் உதவும்!

India1985-Handel_Bach

மன வலியைப் போக்கவும் உடல் வலியை நீக்கவும் இசை உதவும் என்பது அவ்வப்பொழுது பத்திரிக்கைகளில் வெளியாகும் செய்திதான். எத்தனை வலி நிவாரண மாத்திரைகளை விழுங்கினாலும் வலி குறைவதே இல்லை என்பவர்களுக்கு லாய்ட்ஸ் பார்மசி நடத்திய ஆராய்ச்சி ஊக்கமூட்டும் தகவலைத் தருகிறது.

‘பாக்’ Bach என்பவர் வடிவமைத்த மேல்நாட்டு சங்கீதம் பலருடைய நோய்களைப் போக்கியுள்ளது.. பத்து பேரைக் கேள்வி கேட்டால் அதில் நாலு பேராவது, தங்களுக்குப் பிடித்த இசையைக் கேட்பது மனதுக்கு நிம்மதி தருவதாகவும் பதட்டத்தைத் தணிப்பதாகவும் கூறுகின்றனர்.
J bach

(ஜொஹன் செபஸ்டியான் பாக் என்பவர் கெர்மன் நாட்டு இசைக் கலைஞர். வயலின், ஆர்கன் முதலிய வாத்தியங்களை வாசித்த கலைஞர், பல பாடல்களை இயற்றியவர். வாழ்ந்த காலம் 1685—1750)
பாப் இசை, கர்நாடக இசை, மற்றும் சில பாடல்களை வாயாலேயே முனகுவது ஆகியன வலிக்கு நிவாரணம் தரும்.

1500 பேரிடம் கேள்வி கேட்ட லாயிட்ஸ் பார்மசி என்னும் மருந்துக் கடை நிறுவனம் 16 வயது முதல் 24 வயதுடையோர் தான் சங்கீதத்தில் ஆர்வம் காட்டுகின்றனர் என்கிறது.
ஒருவர் இசை என்னும் இன்ப வெள்ளத்தில் மூழ்கிவிட்டால் என்ன கவலை இருந்தாலும் அது சூரியனைக் கண்ட பனி போல விலகிவிடும் என்று உடா பல்கலைக்கழகத்தில் வலி நிவாரணப் பகுதி தலைவர் பேராசிரியர் டாவிட் பிராட்ஷா கூறுகிறார்.

ராக், பாப், கர்நாடக சங்கீதம் போன்ற வகைப் பாடல்கள் மக்களுக்கு உடல் வலியைக் குறைக்கும் பட்டியலில் மேலிடத்தில் நிற்கின்றன.

எந்தப் பாடல் பிடிக்கிறதோ அதைக்கேட்பதும் வாயால் முனகுவதும் பாடுவதும் மனதை உடல் வலியிலிருந்து திசை திருப்பவாவது உதவும் என்றும் அவர்கூறினார்.

Johann_Sebastian_Bach

ஆதாரம்: லண்டன் மெட்ரோ 23-10-2013;மொழிபெயர்ப்பு- லண்டன் சுவாமிநாதன்

ஏற்கனவே வெளியான எனது சங்கீதம் தொடர்பான கட்டுரைகள்:
1.இசைத் தமிழ் அதிசயங்கள், 2.சங்கீத ரகசியம், 3.தியாகராஜருடன் 60 வினாடி பேட்டி, 4.முத்துசுவாமி தீட்சிதர் செய்த அற்புதங்கள்

தொடர்பு முகவரி: swami_48@yahoo.com
belgium

11. ஜென் மாஸ்டர் சொன்ன மூன்று உண்மைகள்!

sun buddha

ச.நாகராஜன்

கடைசி கடைசியாக டைடோகுஜி மடாலயத்தின் உள்ளே அடியெடுத்து வைத்தார் சோகோ.அவர் நுழைந்த அறையில் ஒரே ஒரு சுவர் தான் இருந்தது. மூன்று பக்கங்களிலும் தள்ளு கதவுகள். நான்காவது புறம் ஒரு சுவர்.தனது புங்கோ மூட்டையைக் கீழே வைத்து விட்டு சுவரை நோக்கி தியான நிலையில் (ஜஜென்) அமர்ந்தார் சோகோ.

மூன்று பக்கங்களிலிருந்தும் கதவுகளுக்கு அப்பாலிலிருந்து யாரேனும் பார்த்துக் கொண்டிருக்கக்கூடும் என்பதால் ஒரு விநாடி கூட சோகோவால் இயல்பான நிலையில் இருக்க முடியவில்லை. மூன்று வேளையும் எளிய உணவு வழங்கப்பட்டது. தூங்க அனுமதி தரப்பட்டதோடு பாய் ஒன்றும் தூங்குவதற்காகத் தரப்பட்டது. இப்படியே ஐந்து நாட்கள் கழிந்தன. ஆக காத்திருந்ததையும் சேர்த்து மொத்தம் எட்டு நாட்கள் கழிந்தன. எதற்காக நாம் இங்கே வந்தோம், என்ன செய்வதற்காக வந்தோம் என்று எண்ணியவாறே சோகோ நேரத்தைக் கழித்தார். ஆனால் தன் மாஸ்டரிடம் அளித்த உறுதி மொழியையும் தான் எடுத்துக்கொண்ட சங்கல்பத்தையும் சோகோ நினைவுபடுத்திக் கொண்டே இருந்தார்.

இறுதியாக சோகோ துறவிப் பயிற்சிக்காக அனுமதிக்கப்பட்டார்!
பதினைந்து வருடங்கள் உருண்டோடின. சோகோவுக்கு அவர் குருவிடமிருந்து இங்கா கிடைத்தது. (சாக்யமுனி புத்தரின் போதனைகளின் பெயர் இங்கா. இந்த இங்கா முத்திரையை குருவிடம் முறையாகப் பெற்றவர்களே உள்ளொளி பெற்றதற்கான அங்கீகாரத்தை குருவிடம் பெற்றவர்களாவர்)

இத்தனை வருடங்களிலும் அனுபவம் ஒன்று மட்டுமே தான் பயிற்சி. வெறும் பேச்சோ அல்லது தத்துவச் சொற்பொழிவுகளோ எதுவுமில்லை. டைடோகுஜி மடாலயத்தில் நம்பிக்கை என்றால் என்ன என்பதை சோகோ கற்றுக் கொண்டார். எந்த கஷ்டம் வந்த போதிலும் அதை அசைக்க யாராலும் முடியவில்லை.

ஜென் மாஸ்டரான ஹகுயின் ஜென் பயிற்சியில் மூன்று முக்கியமான விஷயங்களைக் கூறியுள்ளார்.இது ஜென் பயிற்சிக்கு மட்டுமல்ல எங்கும் உதவக் கூடியவை! ஆழமான நம்பிக்கை, அதிக சந்தேகம், குறிக்கோளில் அசைக்க முடியாத உறுதி.

ஆழமான நம்பிக்கை என்றால் குருவிடம் அசாத்திய பக்தியும் அவர் கடைப்பிடிக்கும் பாரம்பரிய வழிகளில் அழுத்தமான நம்பிக்கையும் கொண்டிருப்பதாகும்.அத்தோடு ஒருவரிடம் அடங்கியுள்ள எல்லையற்ற ஆற்றலையும் அது குறிக்கும். அதிகமான சந்தேகம் என்பது ஆழமான நம்பிக்கைக்கு நேர் எதிரடியாக இருப்பது போலத் தோன்றினாலும், உண்மையில் அது தன்னிடம் உள்ளுணர்வு இல்லாமை பற்றி சந்தேகப்படுவதாகும். தன்னைப் பற்றிக் கவலைப்பட்டு “நான்” என்பதில் அவநம்பிக்கை கொள்வது தான் ‘அதிகமான சந்தேகம்’ என்பதாகும். குறிக்கோளில் அசைக்க முடியாத உறுதி என்பது என்னதான் தடைகள் வந்தாலும் அவற்றை எல்லாம் மீறி எடுத்த பயிற்சியைத் தொடர்வதும், வெற்றிகரமாக அதை முடிப்பதும் தான்!

இந்த மூன்றும் இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது.

buddha sandal

உபதேசங்களைக் கேட்டோ, புத்தகங்களைப் படித்தோ ஹகுயின் மாஸ்டர் கூறிய உண்மைகளை சோகோ உணரவில்லை,மாறாக நேரடி அனுபவத்தின் மூலமாகவே அவர் உணர்ந்தார். டைடோகுஜி மடாலயத்தின் வாயிலில் காத்துக் கிடந்து கற்ற பாடங்களே சோகோவுக்கு உதவின. இளமையான இருபதுகளிலிருந்த ஒரு இளைஞனுக்கு இப்படிப்பட்ட அனுபவங்கள் இல்லாமல் இருந்திருந்தால் அவன் உண்மையான ஜென் மாஸ்டராக பின்னால் ஆகி இருக்கமுடியுமா என்பது சந்தேகம் தான்! சமுதாயம் எப்படித் தான் எவ்வளவு தான் மாறட்டுமே, ஹகுயின் மாஸ்டர் கூறிய மூன்று உண்மைகள் இன்றும் என்றும் எந்தக் காலத்துக்கும் பொருந்துபவை. அவை காலத்தை வென்றவை.

இன்றோ நவீன யுகத்தில் மாணவர்களுக்கு கல்வி மீது நம்பிக்கையே போய் விட்டது. அன்றாட வாழ்க்கையின் மீதும் ஒரு பிடிப்பில்லை. தங்கள் தோல்விகளுக்கு ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்வதும் உதட்டைப் பிதுக்கி தனது பொறுப்பை உதறித் தள்ளுவதும் இளைஞர்களின் இன்றைய வாழ்க்கை முறை ஆகி விட்டது.பெரியவர்களுக்கோ இளைஞர்களை விமரிசிப்பதே வேலையாகி விட்டது. பெற்றோர்கள் ஒரு வழியில் போக ஆசிரியர்கள் இன்னொரு வழியில் போக எங்குமே ஒரே குழப்பம் தான்.ஒரு தோழமை உணர்வுடன் இருக்க வேண்டிய மனிதர்கள் ‘தான்’ என்ற குறுகிய வட்டத்திற்குள் அடங்கி விட்டனர்.அதனால் குழந்தைகள் வளர்ந்தவுடன் அவர்களுக்கு உலகில் அடி எடுத்து வைக்கும் போதே ஒரே குழப்பமாக இருக்கிறது. அவர்கள் கற்ற கல்வி அவர்களுக்குத் தைரியத்தையும் தரவில்லை. தன்னை நம்பி வாழவும் சொல்லித் தரவில்லை.

சரி, இந்த ஸ்வர்ண லோகத்தை நீங்கள் ஏன் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்? சும்மா, ஒரு ஆர்வம் உந்த, அதனால் தான் என்றால் நீங்கள் சோகோ என்பவர் வாழும் இன்னொரு வாழ்க்கை முறையைப் பற்றிச் சிறிது அறிந்தவர்கள் மட்டுமே ஆவீர்கள். மாறாக ஆழ்ந்து இதன் உண்மையை ஆராயப் போனால் இதில் அர்த்தமுள்ள ஒரு புது வாழ்க்கை முறை அமைவதற்கான வாய்ப்பு இருப்பதை நீங்களும் உணரலாம். அன்றாட வாழ்க்கை மேம்படுவதற்கான வாய்ப்பு அது – திருப்தியுள்ள அர்த்தமுள்ள வாழ்வுக்கான வாய்ப்பு.

மரணமே எதிரில் வந்தாலும் கவலைப்படாத வாழ்க்கை! இது தான் முதலாவதும் ஒன்றே ஒன்று என்று சொல்லக் கூடியதுமான ஜென் தரும் இலட்சியம்.

சோகோ (1925-1995) புகழ் பெற்ற பெரிய ஜென் மாஸ்டர் ஆனதோடு ஏராளமான மேலை நாட்டினருக்கு ஜென் பயிற்சியை அளித்தார்.அவரது சுய சரிதம் 2002ஆம் ஆண்டில் Novice to Master:An Ongoing Lesson to the extent of My Own Stupidity என்ற தலைப்பில் வெளியானது.

ஜென் குருமார்களில் ஒரே ஒருவரின் வாழ்க்கையைப் பற்றிச் சிறிது பார்த்தோம். ஆனால் இப்படிப்பட்ட ஆயிரக்கணக்கானோரை உருவாக்க வேண்டுமெனில் புத்த மதத்தின் அடிப்படை எவ்வளவு ஆழமாக இருக்க வேண்டும்!

sandalwood-buddha-

சின்ன உண்மை
போதிதர்மர் சீனா சென்றவுடன் சக்கரவர்த்தி வூ டி-யைச் சந்தித்தார். சக்கரவர்த்தி, “மிக உயரிய உண்மை எது?” என்று போதிதர்மரைக் கேட்டார். ”இருப்பது பெரும் சூன்யம் தான், உயரிய உண்மை என்று ஒன்றும் இல்லை” என்றார் போதி தர்மர்.

This part 11 of Swarnalokam (story of Zen Master) written by S Nagarajan -தொடரும்

மாநுடப் பிறவி அரிது! அரிது!!

Article written by london swaminathan

evolution

மாநுடப் பிறவி எவ்வளவு அரிது என்பதை சிந்தாமணிச் செய்யுள் ஒன்று மிகமிக அழகாகக் கூறுகிறது. இதில் தத்துவம் ஒரு புறம் இருக்க தமிழர்களுக்கு கடல் பற்றி எவ்வளவு அறிவு இருந்தது என்பதையும் இது காட்டும். சீவக சிந்தாமணி என்பது திருத்தக்க தேவரால் எழுதப்பட்ட நூல். தமிழில் ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று. அவர் கூறுவார்:

“பரவை வெண் திரை வடகடல் படு நுகத் துளையில்
திரை செய் தென் கடல் இட்டதோர் நோன் கழி சிவணி
அரச அத்துளை அகவயிற் செறிந்தென அரிதால்
பெரிய மோனிகள் பிழைத்து இவண் மாநிடம் பெறலே” (சீவக.2749)

வட கடலில் நுகத் துளையோடு கூடிய ஒரு கழி தண்ணீரில் மிதந்து செல்கிறது; தென் கடலில் மற்றொரு கழி மிதந்து செல்கிறது. இந்த இரண்டும் ஒன்றை ஒன்று சந்திப்பது மிக மிக அரிது. அப்படியே சந்தித்தாலும் அவ்விரண்டு துளைகளிலும் ஒரு கோல் நுழைவது அரிதினும் அரிது. இந்த இரண்டு கழிகளும் ஒன்றை ஒன்று சந்தித்து ஒரு கோல் நுழைந்துவிட்டால் அது எவ்வளவு பெரிய அதிசயம் ஆகும்? அத்துணை அரிது நமக்கு மாநுடப் பிறவி கிடைத்திருப்பது என்கிறது சிந்தமணிச் செய்யுள்

இந்த உவமை நச்சினார்க்கினியர் உரையிலும் வருகிறது:
‘தென்கடலிட்டதோர் திருமணி வான்கழி வடகடனுகத்துளை வந்து பட்டாஅங்கு’ என்று சிந்தாமணியில் வேறு ஒரு இடத்திலும் ‘வடகடலிட்ட ஒரு நுகத்தின் ஒரு துளையில் தென்கடலிட்ட ஒரு கழி சென்று கோத்தாற் போல’ எனவும் (இறை – சூ உ. உரை) ‘வளைபயில் கீழ்கட னின்றிட மேல்கடல் வானுகத்தின், துளை வழி நேர்கழி கோத்தென’ ( திருச்சிற். 6 ) எனவும் பல இடங்களில் காண்கிறோம்.
இந்துக்கள் உயிர்வாழும் பிராணிகளை நான்கு வகையாக பிரித்தனர்.

1.அண்டஜம்: முட்டையில் இருந்து பிறப்பவை
2.ஜராயுதம்; கருப்பையில் பிறப்பவை
3.உத்பிஜம்: வித்து, வேர், கிழங்கு மூலம் பிறப்பவை
4.சுவேதஜம்: வேர்வையில் (கிருமிகள், பாக்டீரியாக்கள்) பிறப்பவை

evolutionary_tree_003

ஆறுமுக நாவலர் என்ற சைவப்பெரியார் இதற்கு கீழ்கண்ட விளக்கம் கொடுக்கிறார்:
“நால்வகைத் தோற்றங்களாவன: அண்டசம், சுவேதசம், உற்பிச்சம், சராயுசம் என்பவைகளாம். அவைகளுள் அண்டசம் முட்டையில் தோன்றுவன. சுவேதசம் வேர்வையில் தோன்றுவன. உற்பிச்சம் வித்து வேர் கிழங்கு முதலியவைகளை மேற்பிளந்து தோன்றுவன. சராயுசம் கருப்பையில் தோன்றுவன. எழுவகைப் பிறப்புக்களாவன: தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்பவைகளாம். தாவரங்களென்றது மரம் செடி முதலியவைகளை.

கருப்பையிலே தேவர்களும், மனிதர்களும், நாற்கால் விலங்குகளும் பிறக்கும். முட்டையிலே பறவைகளும், ஊர்வனவும், நீர்வாழ்வனவும் பிறக்கும். வேர்வையிலே கிருமி, கீடம், பேன் முதலிய சில ஊர்வனவும், விட்டில் முதலிய சில பறவைகளும் பிறக்கும். வித்தினும் வேர் கொம்பு கொடி கிழங்குகளினும் தாவரங்கள் பிறக்கும். தாவரமென்றாலும், நிலையியற் பொருளென்றாலும், அசரமென்றாலும் பொருந்தும். தாவரமல்லாத மற்றை ஆறு வகைகளும் சங்கமங்களாம். சங்கமமென்றாலும், இயங்கியற் பொருளென்றாலும், சரமென்றாலும் பொருந்தும்.

தேவர்கள் பதினொரு நூறாயிர யோனிபேதம், மனிதர்கள் ஒன்பது நூறாயிர யோனிபேதம். நாற்கால்விலங்கு பத்து நூறாயிரயோனிபேதம். பறவை பத்து நூறாயிர யோனிபேதம். நீர்வாழ்வன பத்து நூறாயிர யோனிபேதம். ஊர்வன பதினைந்து நூறாயிர யோனிபேதம். தாவரம் பத்தொன்பது நூறாயிர யோனிபேதம். ஆகத்தொகை எண்பத்து நான்கு நூறாயிர யோனிபேதம்.”

மேலை நாட்டினர் 400 ஆண்டுகளாகத்தான் சார்லஸ் டார்வினின் பரிணாமக் கொள்கையையும் லின்னேயஸின் தாவரஉலக்ப் பிரிவினையையும் பின்பற்றுகின்றனர். அதற்கு முன் அரிஸ்டாடில் என்ற கிரேக்க அறிஞர் சொன்னதைப் பின்பற்றினர். 2300 ஆண்டுகளுக்கு முன் அரிஸ்டாடில் கூறியதைவிட நம்மவர்கள் ந்ன்றாகப் பாகுபாடு செய்துள்ளனர். அதுமட்டுமல்ல. இதுவரை விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்ளாத சூப்பர்மேன் (தேவர்கள்) பற்றியும் நாம் கூரிவிட்டோம். இதை அறிவியல் உலகம் ஏற்க இன்னும் நீண்டகாலம் தேவை.
தாவரம் முதல் தேவர்கள் வரை உள்ளவர்களை ஏழுவகையாகப் பிரித்தனர்:

1.தேவர்
2.மனிதர்
3.விலங்கு: சிங்கம், புலி, யானை, ஆடு, மாடு முதலியன
4.பறவை: காகம்,குயில், மயில், குருவி, கொக்கு முதலியன
5.ஊர்வன: பாம்பு, பூரான், தேள், பல்லி முதலியன
6.நீர்வாழ்வன: மீன், ஆமை, முதலை, திமிங்கிலம் முதலியன
7.தாவரம்: மரம், செடி, கொடி, பாசி, புல், பூண்டு முதலியன
இவைகளை 84 லட்சம் (8400000) வகைகள் என்றும் கூறினர். இது இன்றைய விஞ்ஞானிகளின் கூற்றுக்கு நெருங்கிய எண் ஆகும்.

tree-o-life

“அண்டசஞ் சுவேதசங்கள் உற்பிச்சம் சராயுசத்தோ
டெண்தரு லெண்பத்து நான்கு நூறாயிரந்தான்
உண்டுபல் யோனியெல்லாம் ஒழித்து மாநுடத்துதித்தல்
கண்டிடில் கடலைக் கையால் நீந்தினன் காரியங்காண்”

என்று சிவஞான சித்தியார் கூறுகிறார். அதாவது மாநுடப் பிறவி கிடைப்பது மிக மிக அரிது. 84 லட்சம் வகை உயிரினங்களில் உயர்ந்த மாநுடப் பிறவி கிடைப்பது கடலைக் கையால் நீந்திக் கடப்பது எவ்வளவு அபூர்வமோ அவ்வவளவு அபூர்வம். சம்பந்தரும் தேவாரத்தில் 84000 நூறாயிரம் யோனிபேதங்கள் பற்றிப்பாடுகிறார்.

evolution1

அரியது கேட்கின் வரிவடி வேலோய்!
அரிதரிது மானிடர் ஆதல் அரிது
மானிடராயினும் கூன் குருடு செவிடு
பேடு நீக்கிப் பிறத்தல் அரிது
பேடு நீக்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல் அரிது
தானமும் தவமும் தான்செய்வராயின்
வானவர் நாடு வழிதிறந் திடுமே

என்று அவ்வைப் பாட்டியும் கூறுவர்.

ஆதிசங்கரர் கூற்று

ஆதிசங்கரர் பல இடங்களில் மாநுடப் பிறவியின் அரிய தன்மை பற்றிக் கூறுகிறார்: “ஜந்தூனாம் நரஜன்ம துர்லபத:” (அரிது அரிது மானுடராதல் அரிது). அவர் எழுதிய விவேக சூடாமணியில் 2, 3, 4– ஆவது ஸ்லோகங்களிலேயே இதைப் பற்றிப் பிரஸ்தாபிக்கத் துவங்கி விடுகிறார்.

அரிது அரிது மனிதப் பிறவி, அதிலும் அரிது பிரம்மத்தை நாடும் பிறவி
அதனிலும் அரிது வேத அறிவு, அதனிலும் அரிது ஆத்ம ஞானம்
முக்தி பெறுவதோ நூறு கோடியில் ஒன்றே!

மூன்றாவது ஸ்லோகத்தில் மூன்று அரிய விஷயங்களைக் கூறுகிறார்: மனுஷ்யத்வம், முமுக்ஷுத்வம், மஹா புருஷர்களின் அருள். மனிதப் பிறவி, வீடு பேற்றை நாடல், பெரிய குருவின் பூரண பாதுகாப்பு என்பதே அவர் கூறுவது.

வேதத்தைப் படித்த பின்னரும் முக்தியை நாடாதவன் தற்கொலை செய்துகொள்வதற்குச் சமம் என்கிறார் நாலாவது ஸ்லோகத்தில்.

tree of life colour

மாணிக்கவாசகர ஒரு மனிதனுக்குள்ள எல்லாப் பிறப்புகளையும் அழகாகப் பாடிவிட்டார்:

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லரசுராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லா அ நின்ற தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
–சிவ புராணம், திருவாசகம் (மாணிக்கவாசகர்)

Pictures are taken from various sites;thanks.
contact london swaminathan at swami@yahoo.com

என் வயது 3 வருஷம் 5 மாதம் 7 நாள் 16 அரை மணி!

baby ganapathy

திருமுருக கிருபானந்த வாரியார் சொன்ன கதை:

முற்றும் துறந்த முனிவர் ஒருவர் திருத்தல யாத்திரை புரிந்துவந்தார். பற்றற்ற பரம ஞானியாகிய அவர் இன்றிருந்த ஊர் நாளை இரார். ஒருவேளையே உப்பில்லாத உணவை உண்பார். அவர் பொய்யை அதிமாக வெறுப்பவர்.

“மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம் செய்வாரில் தலை”

என்ற திருக்குறளை இடையறாது கூறுவார்.அவருடைய மறந்தும் பொய் புகலாது. பொய் புகல்வார் மனையில் புசியார்.

ஒருநாள் ஒரு ஊருக்குச் சென்றார். “இந்த ஊரில் உண்மையாளர் யாவர்?” என்று உசாவினார். அதோ தெரிகின்ற மாடி வீட்டில் வாழ்கின்ற முதலியார் உண்மையாளர். அவர் அடியார் பக்தி உடையவர். ஒரு லட்சம் செல்வமும் நான்கு புதல்வர்களும் உடையவர் என்று பலரும் பகர்ந்தார்கள். பின்னர் முதலியாருடைய வீட்டை முனிவர் அணுகினார்.

ஆசனத்தில் அமர்ந்திருந்த முதலியார் உடனே எழுந்தார். ஓடிவந்து ஞானியார் அடைமலர் மீது விழுந்தார். அவரை ஆசனத்தில் எழுந்தருளல் புரிந்து ,”பெருமானே உணவு செய்ய எழுந்தருளல் வேண்டும்” என்று வேண்டினார். அவருடைய அன்பு, பணிவு, அடக்கம் முதலிய நற்குணங்களைக் கண்டு முகமலர்ந்து, உண்மையாளர்தானா என்று சோதித்த பின்னரே உணவு செய்ய வேண்டும் என்று எண்ணிணார்.

“ ஐயா, உமக்குச் செல்வம் எவ்வளவு உண்டு?”
“சுவாமி! இருபத்து இரண்டாயிரம் ரூபாய் உண்டு”
குழந்தைகள் எத்தனை பேர்?”
“சுவாமி! ஒரே புதல்வன் தான்”
“உமக்கு வயது என்ன?”
“சுவாமி! எனக்கு வயது மூன்று வருஷம் ஐந்து மாதம் ஏழு நாள் பதினாறரை மணி”

முனிவருக்கு பெரும் சினம் மூண்டது.
“ஐயா! நீர் சுத்தப் புளுகனாக இருகிறீர். நீர் பேசுவதெல்லாம் பெரும் புரட்டு. உம் வீட்டு அன்னம் என் தவத்தை அழிக்கும். நான் பொய்யர் வீட்டில் புசியேன்” என்று கூறிச் சீறி எழுந்தார்.

முதலியார் அவர் காலில் விழுந்து, “அருள் நிறைந்த அண்ணலே! அடியேன் ஒருபோதும் பொய் புகலேன். சத்தியம் சொல்கின்றேன். சற்று நிதானமாக ஆராய்ந்துபார்த்து உண்மை உணர்வீராக” என்று கூறித் தனது வரவு செலவு புத்தகத்தைக் காட்டினார். அதில் இருப்புத் தொகை ஒரு லட்சம் ரூபாய் என்று இருந்தது.

“அடேய்! இதோ உனக்குச் சொத்து ஒரு லட்சம் ரூபாய் என்று இருக்கிறதே. நீ 22,000 தான் என்று பொய் சொன்னாயே”, என்று கடிந்தார்ர் முனிவர்.

“சுவாமி! ஒரு லட்ச ரூபாய் பெட்டியில் உள்ளது. ஆனால் பெட்டியில் உள்ள பணம் எனக்குச் சொந்தமாகுமா? இதோ பாருங்கள், தருமக் கணக்கில் இதுகாறும் 22,000 ரூபாய்தான் செலவழிந்துள்ளது. தருமம் புரிந்த பணம்தானே என்னுடையது. இப்போது நான் மாண்டால் பெட்டியில் உள்ள பணம் என்னுடன் வராதே. உடன் வருவது தருமம் ஒன்றுதானே” என்று கூறீனார்.
முனிவர் இதைக் கேட்டு வியப்புற்றார். “ ஆமாம், உனக்கு நான்கு புதல்வர்கள் உன்து என்று கேள்விப்பட்டேனே?” என்றார்.
kuzanthai vazipaatu

சுவாமி! எனக்குப் பிறந்த பிள்ளைகள் நால்வர்’ ஆனால் என் பிள்ளை ஒருவன் தான்.
“அப்பா! நீ சொல்வதன் கருத்து எனக்கு விளங்கவில்லையே?
“சுவாமி! விளங்கவைக்கின்றேன்”.

“மகனே! நடராஜா”, என்று அழைத்தார் முதலியார். சீட்டு விளையாடுகிறேன், வர முடியாது என்று பதில் வந்தது.
“மகனே! வேலுச்சாமி” என்று அழைத்தார் முதலியார். “ஏன் இப்படிக் கதறுகின்றாய்? வாயை மூடிக்கொண்டிரு” என்று பதில் வந்தது.

“மகனே! சிவசாமி”, என்று அழைத்தார் முதலியார். உனக்குப் புத்தி இருக்கிறதா? உன்னோடு பேச என்னால் ஆகாது. பூமிக்குச் சுமையாக ஏன் இன்னும் இருக்கிறாய்?” என்று பதில் வந்தது.
மகனே கந்தசாமி! என்று அழைத்தவுடன் கந்தசாமி ஓடிவந்து பிதாவையும் முனிவரையும் தொழுது, சுவாமி பால் கொண்டுவரட்டுமா, பழம் கொண்டுவரட்டுமா? என்று கேட்டு உபசரித்து, விசிறி எடுத்து வீசிக்கொண்டு பணிவுடன் நின்றான்.

முதலியார், “ சுவாமி! அந்த மூவரும் என் புதல்வர்களா? என் கருத்துக்கு முரண் ஆனவர்கள் என் பிள்ளைகளா? போன பிறப்பிற்பட கடன்காரர்கள், இவன் ஒருவன் தான் என் பிள்ளை” என்றார்.
அப்பா! உன் கருத்து உவகையைத் தருகின்றது. வயது விஷயத்தில் நீ கூறியதன் உட்பொருள் யாது?
“ சுவாமி! அடியேன் நாள் ஒன்றுக்கு ஒன்றரை மணி நேரம்தான் வழிபாடு செய்கின்றேன். மிகுதி நேரம் எல்லாம் வயிற்றுக்காகவும் குடும்பத்து க்காகவும் உழைக்கின்றேன். பேசாத நாள் எல்லாம், பிறவா நாள்தானே? இறைவனைப் பூசிக்கும் நேரம்தான் எனக்குச் சொந்தம். அடியேனுக்கு இந்த உடம்பு பிறந்து அறுபது ஆண்டுகள் ஆயின. ஐந்து வயதிலிருந்து பூசிக்கின்றேன். நாள் ஒன்றுக்கு ஒன்றரை மணி நேரம் பூசை செய்கின்றேன். அந்தவகையாகப் பார்த்தால், முப்பதாயிரத்து நூற்று பன்னிரண்டரை மணி நேரம் ஆகின்றது. ஆகவே அடியேன் பிறந்து அறுபது ஆண்டுகள் ஆனாலும், எனக்குச் சொந்த வயது திட்டமாக மூன்று வருஷம் ஐந்து மாதம் ஏழு நாள் பதினாறரை மணிதான்”

1.தருமம் செய்த பணம் எனக்குச் சொந்தம்
2.என் கருத்தை அநுசரிக்கின்றவனே எனக்குச் சொந்தமகன்
3.பூசை செய்த நேரமே எனக்குச் சொந்தம்”, என்றார் முதலியார்.
இதனைக் கேட்ட முனிவர் பெரிதும் மகிழ்ந்தார். அவர் வீட்டில் உணவு உண்டு வாழ்த்திவிட்டுச் சென்றார்.

krishna with brown eyes

(அனைவரும் வாங்கிப் படிக்கவேண்டிய புத்தகம்,”வாரியார் வழங்கும் சிந்தனைச் செல்வம்”- திருமுருக கிருபானந்த வாரியார்)

Pictures are taken from Facebook;thanks.
contact london swaminathan for a list of 650+ articles at swami_48@yahoo.com

மனமே அனைத்துப் புலன்களின் இயக்கத்திற்கும் காரணம்!

anuman 2 facebook

ராமாயண வழிகாட்டி அத்தியாயம் – 13
ச.நாகராஜன்

இலங்கையில் சீதையைத் தேடி அலைந்த அனுமன் பானபூமியில் பல பெண்கள் அலங்கோலமாக நிலை குலைந்து படுத்துக் கிடப்பதைக் காண்கிறான்.

“உறங்கிக்கொண்டிருக்கும் சத்ரு மன்னனின் மனைவிகள் சமூகத்தினை எனது இந்தக் கண்களால் பார்த்ததும் கொடிய பாவமாக ஆகுமே” என்று சிந்தித்த அனுமன் அதற்கான காரணத்தையும் அலசி ஆராய்ந்து தன் மேல் தவறு இல்லை என்பதை நிச்சயிக்கிறான். ஏனெனில் காமக் கண்களுடன் அவர்களைத் தேடி வந்து அவன் பார்க்கவில்லை. சீதையின் மீதுள்ள பக்தியினால், அன்னையைத் தேட வேண்டிய அவசியத்தால் அவர்களைப் பார்க்க நேரிட்டது.

சுந்தரகாண்டம் பதினோராம் ஸர்க்கம் 36,37,38ஆம் ஸ்லோகங்களைப் பாப்போம்:

பரதாரவரோதஸ்ய ப்ரஸூப்தஸ்ய நிரீக்ஷணம் I
இதம் கலு மமாத்யர்த்தம் தர்மலோபம் கரிஷ்யதி II

ந ஹி மே பரதாராணாம் த்ருஷ்டி விஷயவர்த்திநி:

அயம் சாத்ர மயா த்ருஷ்ட: பரதார பரிக்ரஹ:

(அத்யர்த்தம் தர்மலோபம் – கொடிய பாவம்; விஷயவர்த்திநி: ந- உலகியல் நோக்கப்படியானது இல்லை; பரதார பரிக்ரஹ: ச- உத்க்ருஷ்டரின் பத்னியிடத்தில் பக்தியால் உண்டானதே)

தனிமையில் தாமாய் ஆலோசனை செய்யும் (ஏகாந்த சிந்தஸ்ய) பெருந்தன்மையுள்ள அவருக்கு (மனஸ்விந: தஸ்ய) கார்யத்தின் முடிவை ஸுசிப்பிக்கும் (கார்ய நிஸ்சய தர்சிநீ) நிச்சயமான இதர எண்ணம் (நிஸ்சிதா அன்ய சிந்தா) புதிதாய் புலப்பட்டது (புன ப்ராதுரபூத்)

காமம் த்ருஷ்டா மயா ஸர்வா விஸ்வஸ்தா ராவண ஸ்த்ரிய: I
ந ஹி மே மநஸ; கிஞ்சித் வைக்ருத்ய முபபத்யதே II

அபாயத்திற்கிடமில்லை என்கிற நம்பிக்கையுடன் இருக்கும் ராவணனின் பத்னிகள் அனைவரும் என்னால் பார்க்கப்பட்டார்கள்;
அப்படியிருந்தும் எனது மனதிற்கு மாறுபாடு சற்றும் உண்டாகவில்லை.

“மே மனஸ: வைக்ருத்யம் கிஞ்சித் உபபத்யதே” (எனது மனதிற்கு மாறுபாடு சற்றும் உண்டாகவில்லை.) என்று அனுமன் சிந்திப்பதிலிருந்தே அவன் எப்படிப்பட்ட உத்தமன் என்பதும் காமத்தைக் கடந்தவன் என்பதும் தெரிகிறது.

அனுமன் அடுத்தாற் போல எண்ணுவதே உலகின் மிகப் பெரும் உண்மையை அறிவிக்கும் ஸ்லோகமாக அமைகிறது;

மநோ ஹி ஹேது: ஸர்வேஷா மிந்திரியாணாம் ப்ரவர்த்ததே I
ஸுபாஸுபா ஸ்வவஸ்தாஸு தச் ச மே ஸுவ்யவஸ்த்திதம் II
(சுந்தரகாண்டம் ஸ்லோகம் 42 11ஆம் ஸர்க்கம்)

ஸுபாஸுபாசு – நல்லவை தீயவை ஆகிய இரு வகையான
அவஸ்தாஸு – நிலைகளில்
ஸர்வேஷாம் – எல்லா
இந்திரியாணாம் – புலன்களின்
ப்ரவர்த்ததே –தூண்டுதலில்
மன: ஹி – மனம் தான்
ஹேது – ஹேது
தத் ச –அதுவோ
மே – எனக்கு
ஸுவ்யவஸ்த்திதம் – சிதறாமல் நன்கு ஸ்திரமாக இருக்கிறது.

anuman val

அந்தப்புரத்தில் ரூப லாவண்யமுள்ள அழகிய பெண்களைப் பார்த்த போதிலும் கூட அனுமனின் மனம் சிதறவில்லை; ஸ்திரமாக இருக்கிறது. புலன்களின் தூண்டுதலைச் செய்வது மனமே! அது நன்கு உறுதியாக இருந்தால் அவனே பேராண்மை படைத்தவன்.
வள்ளுவன் திருக்குறளில் ‘பிறனில் விழையாமை’ என்று ஒரு அதிகாரத்தையே படைக்கிறான். 15ஆம் அதிகாரமாக அமையும் இதில் எட்டாவது குறள் இது:

பிறன் மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு (குறள் 148)

பிறன் மனைவையை விரும்பிக் கண் எடுத்தும் பார்க்காத பேராண்மை சான்றோர்க்கு அறம் மட்டுமல்ல; பொருந்திய ஒழுக்கமும் கூட என்பதே இதன் பொருள்.

வள்ளுவனின் உரைகல்லில் அனுமன் சான்றோனாகவும், அறவோனாகவும்,பேராண்மை படைத்தவனாகவும் காணப்படுகிறான்.
மனமே அனைத்திற்கும் காரணம் என்பதை உபநிடதமும் (மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோக்ஷயோ: மனதே மனிதர்களின் பந்தத்திற்கும் மோக்ஷத்திற்கும் காரணம்– அம்ருத பிந்து உபநிடதம்) அறிவியலும் வலியுறுத்துகின்றன.

ஆக செம்மையான மனத்தைக் கொண்ட அனுமனைத் துதித்தால் நமக்கும் மனம் செம்மையாகும். அனுமனின் அற்புதமான மனத்தை விவரிக்கும் ஸ்லோகம் சுந்தர காண்டத்தில் உள்ள அருமையான ஸ்லோகங்களுள் ஒன்று!
************
Contact london swaminathan at swami_48@yahoo.com
Pictures are taken from facebook.

Yama’s Brother! (In Tamil and English)

Watch-Counts-Down-Remaining-Time-Til

Death Watch tells you your last date on earth!

Sage Vyasa said in Yaksha Prasna (of Maha Bharata) that the greatest wonder in the world is that everyone of us think that we are going to live for ever even after seeing people dying every day! Great Tamil poet said in his Tirukkural (336) “ the one, who was here yesterday, is no more today and that is a matter of great wonderment, in this world”.

What? It is called Death watch. It will tell you when you are going to die or how long you are going to live in this world.

Who? Swedish Inventor Fredrick Colting created this.
How? The cost of this watch is £36. But he needs £15.500 for commercial production next year.Your medical history and your habits like smoking, drinking, exercising etc. are fed into it through a questionnaire.
Where? In Sweden

Why? To look at life in a new way.
When? If money for investment is available commercial production will start in April 2014.
Can we call this watch Yama’s brother?

tikker-prototype1

மரணம் அறிவிக்கும் கடிகாரம்!!!

என்ன? நீங்கள் இறக்கப்போகும் நாளைச் சொல்லும் கடிகாரம்.
எங்கே? சுவீடன் நாட்டில் ருவாக்கப்பட்டுள்ளது.
யார்? சுவீடன் நாட்டு பிரடெரிக் கோல்டிங் இதைக் கண்டுபிடித்தார்.
எப்படி? ஒருவருடைய எடை, உடற் பயிற்சி, குடிபோதை, புகைபிடித்தல் போன்ற விஷயங்களை ஒரு கேள்வித்தாள் மூலம் கடிகாரத்துக்குள் போட்டுவிட்டால் நமது நாலைக் கணக்கிட்டுவிடும். எம தர்மனின் தம்பி!! சித்ரகுப்தனுக்கு பி.ஏ!!!

ஏன்? வாழ்க்கையை புதிய கோணத்தில் பார்க்கவே இந்த மரண கடிகாரம். அட! நம் ஆழ்வார்களும் நாயன்மார்களும், முனிவர்களும் இப்படிப் பார்ர்க்கத்தானே பல்லாயிரம் பாடல்களைப் பாடிவைத்தனர்.
எப்பொழுது?கடிகாரத்தின் விலை 3200 ரூபாய்தான். ஆனால் நிறைய முதலீடு கிடைத்தால் அடுத்த ஆண்டு ஏப்ரலில் உற்பத்தி துவங்கி விடும்!!!

மஹா பாரதத்தில் யக்ஷப் ப்ரச்னம் (பேயின் கேள்விகள்) என்ற பகுதியில் உலகிலேயே மிக அதிசயமான விஷயம் என்ன என்று பேய் கேட்டபோது தர்மன் சொன்ன பதில்: நாள்தோறும் மக்கள் இறந்து போவதைப் பார்த்த பின்னரும் ஒவ்வொருவரும் தான் தொடர்ந்து வாழப்போவதாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்களே இதுதான் உலகின் மாபெரும் அதிசயம் என்று கூறுகிறான். இதையே திருவள்ளுவரும் 336 ஆவது குறளில் “நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து இவ் உலகு” என்று கூறுகிறார்.

தகவல் தொகுப்பு: லண்டன் சுவாமிநாதன்
ஆதாரம்: டெய்லி மெயில், லண்டன்
contact swami_48@yahoo.com

Yoga Teacher Eating Vegetables for 7 years!

usan-Reynolds
Where? Edinburg, Scotland, United Kingdom.

Who? Susan Reynolds, age 29 years.

What? Eating only raw (uncooked) vegetables, drinking cold vegetable juice for 7 years!

Why? I went to India when I was 21. After seeing India everything changed.

How? Yoga teacher Susan eats uncooked fruits, vegetables, grains, seeds, nuts, beans and cold soup made from spinach, herbs and an entire lettuce.

When? October 2013 Press News

(Hindu Yogis (ascetics) survived on such foods for scores of years. Ancient Sanskrit and Tamil literature describes the food taken by Hindu Sanyasins. They ate only vegetables, fruits, honey, milk, grains flours, herbs and nuts. Now a white woman shows us the way!)
Compiled by London Swaminathan

susan 2

Now in Tamil……………………………..

இந்தியா வந்த வெள்ளைக்காரியின் மனமாற்றம்!

எங்கே? எடின்பர்க்,ஸ்காட்லாண்ட், கிரேட் பிரிட்டன்.

யார்? சூசன் ரேனால்ட்ஸ், வயது 29.

என்ன? ஏழு ஆண்டுகளாக வெறும் காய்கறி உணவு; அதுவும் சமைக்காத உணவு.

ஏன்? 21 வயதானபோது இந்தியாவுக்குப் போனேன். அங்கே இருந்தவற்றைப் பார்த்தவுடன் மனம் மாறி யோகா, சைவ உணவில் இறங்கிவிட்டேன் என்கிறார் Susan Reynolds!.

எப்படி? தினமும் பச்சைக் காய்கறிகள், கிழங்கு, கனி வகைகள், பருப்பு, கீரைச் ச்சாறு, மூலிகைகள் இதுதான் அவரது உணவு!

எப்பொழுது? அக்டோபர் 2013 பத்திரிகைச் செய்தி.

susan 3

“கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம்” என்ற சினிமாப் பாட்டுதான் நினைவுக்கு வரும். கல்யாண சமையல் சாதம் என்பதை மட்டும் “கல்யாண கனிவகை ரசங்கள், காய்கறிகளும் பிரமாதம்” என்று மாற்றிக்கொள்ள வேண்டும். பூர்வ ஜன்மத்தில் இந்து யோகியாகப் பிறந்த “விட்ட குறை தொட்ட குறை” என்றே சொல்லத் தோன்றுகிறது. பழந் தமிழ் நூல்களிலும், சம்ஸ்கிருத நூல்களிலும் யோகிகளின் உணவில், தேன், தினை மாவு, கனி வகைகள், கிழங்கு, மூலிகைகள், பால் முதலிய உணவுப் பட்டியல் என்றே வருகின்றது!!!
contact swami_48@yahoo.com for 660 research articles.

லண்டன் பத்திரிகைச் செய்தியை மொழிபெயர்த்தவர்: லண்டன் சாமிநாதன்

10. நீ உள்ளே வரலாம்!

bodhidharmar

Bhodhidharmar of Kancheepuram and his disciples

Article 10 in the series of Zen Buddhism written by my brother Santanam Nagarajan of Bangalore:-swami

ச.நாகராஜன்

டைடோகுஜி மடாலயத்தின் வாயிலை சோகோ அடைந்தார். தனது தொப்பியைக் கழற்றி வாயிலின் அழுக்குத் தரையில் ஒரு புறமாக வைத்தார்.மடாலயத்தில் மரத்தினாலான படியில் உட்கார்ந்து அனுமதிக்காக இறைஞ்சினார். சாதாரணமாக வாயில் எப்போதுமே அழுக்குப் படிந்திருக்கும். அதிலிருந்து சில அடிகள் தள்ளி விசாலமான நடைபாதைப் பகுதிகள் இருபுறமும் ஆரம்பிக்கும்.

உள்ளே பன்னிரெண்டு துறவிகள் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த போதிலும் அங்கு மயான அமைதி நிலவியது.மீண்டும் பாரம்பரிய வழக்கப்படி சோகோ அனுமதி வேண்டிக் கூவினார். ஆனால் அவரது குரல் தேய்ந்து மறைந்தது. யாரையும் காணோம்.

சிறிது நேரம் கழித்து,” யாரது?” என்று கேட்டவாறே வந்த மூத்த துறவி ஒருவர் “நீ எங்கிருந்து வருகிறாய்?”: என்று கேட்டார்.

குனிந்த தலை நிமிராமலே தனது கையை நீட்டி தன்னைப் பற்றிய அனைத்து ஆவணங்களையும் சோகோ தந்தார். அதில் அவரது கல்வித் தகுதிகள், அனுமதி கோரும் விண்ணப்பம். உயிரே போவதாக இருந்தாலும் கூட அங்கு தங்கித் துறவிப் பயிற்சியில் ஈடுபடப் போவதற்கான உறுதி மொழி எல்லாம் இருந்தது.

அவரிடம் மாஸ்டரிடம் குறிப்புகளைத் தந்து தன்னை அனுமதிக்குமாறு சோகோ கெஞ்சினார். அந்த்த் துறவி உள்ளே சென்று சற்று நேரம் கழித்துத் திரும்பி வந்தார். “இங்குள்ள பயிற்சி கடினமானது. அதை உன் நோஞ்சான் உடம்பு தாங்காது.ஆகவே வேறு ஏதாவது ஒரு மடாலயம் பார்த்து அங்கு போய்ச் சேர்” என்றார் அவர்.

• சாதாரணமாக பழைய காலத்தில் 150 பவுண்ட் எடையுள்ள சோகோ இப்போது 105 பவுண்ட் எடை தான் இருந்தார்.சோகோவுக்கு மடாலயம் ஆரம்பத்தில் என்ன பதில் சொல்லும் என்பது நன்கு தெரியும். லேசில் ஒருவரை உள்ளே அனுமதிக்க மாட்டார்கள். “இங்கு இடம் இல்லை. மடாலயம் நிரம்பி விட்ட்து”. “ இந்த மடாலயம் மிகவும் ஏழ்மைப்பட்ட நிலையில் இருப்பதால் உன்னை சேர்க்க முடியாது” இத்யாதி பதில்கள் வருபவரைத் திருப்பி அனுப்பத் தயாராக இருக்கும்..

இந்த பதில்கள் எல்லாம் ‘நிவாஜூமே’ என்ற பெயரிடப்பட்டுள்ள ஒரு சோதனை தான்!ஜென் மடாலயங்களின் பாரம்பரிய வழிமுறைகளில் இந்த சோதனையும் ஒன்று. கௌதம புத்தருக்குப் பின்னால் வந்த 28 வது குரு தான் போதி தர்மர். அவர் தான் ஜென் பிரிவின் முதலாவது குருவும் கூட!

zen centre in USA
Zen Centre in the USA

போதி தர்மர் சீனாவுக்கு வந்த பின்னர் அவரிடம் சீடராகச் சேர ஹுயிகியோ என்பவர் அனுமதி வேண்டிக் கெஞ்சினார். அவர் பல நாட்கள் போதி தர்மரிடம் நின்றவாறே கெஞ்சியதாக பாரம்பரிய வரலாறுகள் தெரிவிக்கின்றன. பனிக்காலம் வந்து பனி மழை பொழிய ஆரம்பித்து அவர் முழங்கால்கள் வரை பனி மூடி விட்டன! ஆனாலும் அவர் இடத்தை விட்டு நகரவில்லை. தனது வேண்டுகோளில் உறுதியாக இருந்தார். கடைசியில் தனது உறுதியை வெளிப்படுத்திக் காண்பிக்கும் விதமாக தன் இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து இடது கையை வெட்டி அதை போதி தர்மருக்குச் சமர்ப்பித்தார்.
அப்போது போதிதர்மர் அவரைத் தன் சீடராக ஆக சம்மதித்து அருளினார். ஹுயிகியோவை ஜப்பானிய மொழியில் ஏகா என்பர். இந்த ஏகா தான் போதி தர்மருக்கு அடுத்து இரண்டாவது ஜென் பிரிவு குருவாக ஆனார்.

ஆகவே தான் 1500 ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட ஜென் மடாலயத்தில் சேர இப்படிப்பட்ட கஷ்டமான அனுமதி முறை நிலவி வருகிறது! இந்தப் பின்னணியை எல்லாம் நன்கு அறிந்திருந்த சோகோ தனது ஆவணங்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்த பெஞ்ச் ஒன்றில் அமர்ந்து அனுமதிக்காக இறைஞ்சிக் கூவிய வண்ணம் இருந்தார்.அனுமதி கஷ்டம் தான் என்றாலும் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் இருந்த சோகோ. அது இவ்வளவு கஷ்டமான ஒன்று என்பதை உண்மையிலேயே நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. சிறிது நேரம் கழித்துக் கையில் ஒரு தடியுடன் ஒரு துறவி வந்தார்.”உனக்கு அனுமதி இல்லை. இருந்தாலும் கூட நீ இங்கேயே இன்னும் இருக்கிறாய். உன்னைப் பார்க்கவே யாருக்கும் பிடிக்கவில்லை. உடனே வெளியே போ!” என்றார் அவர்.

சோகோ அசையவே இல்லை.
இதனால் வெகுண்ட அவர் சத்தம் போட்டு,” என்ன, நீ செவிடா?” என்று கேட்டவாறே தடியால் இரண்டு சார்த்து சார்த்தி சோகோவை வெளி வாயில் கதவை நோக்கி விரட்டினார். சற்று நேரம் கழித்து உள்ளே நுழைந்த சோகோ அங்கே அந்த துறவி இல்லாததைப் பார்த்து தனது வழக்கமான இடத்திற்குச் சென்று அமர்ந்தார். இந்த துரத்தல் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்தது. ஆரம்பத்தில் ஓடி ஓடி வெளியே போன சோகோவுக்கு ஒரு கட்டத்தில் கோபம் கொப்பளித்தது. ஆனாலும் மாலை ஆன போது அவர் மனம் கோபத்தைத் ஒதுக்கி விட்டு வருந்த ஆரம்பித்தது.

“நான் யார்? என்ன செய்கிறேன். கசங்கிய துணியைத் துவைப்பது போல என்னை புரட்டிப் புரட்டி அடிக்கிறார்கள். தாயும் தந்தையும் இல்லை தான்! டொயோமோ நகரில் எனக்கு இன்னும் சில உறவினகள் இருக்கிறார்களே! அங்கே அவர்கள் வீட்டிற்குச் செல்லலாமே.இப்படி ஒரு அவமானத்தைச் சகிக்க வேண்டாமே” என்று நெஞ்சமெல்லாம் உருக வருந்தினார் சோகோ.

Japan2008Web5
Japanese trainees

காலையில் தனது குரு தனக்குத் தந்த நிர்வாண பணத்தை எண்ணிப் பார்த்தார். அவர் தனது காலணிகளை முடிந்து இதை என்றும் அவிழ்க்காதே என்று சொன்னதையும் சோகோ நினைவு கூர்ந்தார்.
காலையில் எடுத்த தனது உறுதி மொழி என்ன! மாலையில் இப்போது தான் நினைப்பது என்ன?தனது உறுதியெல்லாம் இவ்வளவு தானா!

மூன்று நாட்கள் ஓடின. சோகோவின் முகமெல்லாம் வீங்கி விட்டது.உடலெல்லாம் வலி. தாங்க முடியாத குளிரினால் அவயங்களெல்லாம் விறைத்து விட்டன. கண்கள் பிதுங்கி வெளியே விழும் நிலை! கால்களையோ அசைக்கக் கூட முடியவில்லை.
பள்ளி நாட்களில் தன் வீரத்தைக் காண்பிக்க, வேண்டுமென்றே யாரையாவது சண்டைக்கு இழுத்துத் தன் வீரத்தைக் காண்பித்த தனக்கா இந்த நிலை! சோகோ வெதும்பினார். இங்கே சண்டை போட முடியுமா என்ன?

மூன்றாம் நாள் மாலை ஒரு துறவி சோகோவிடம் வந்தார்:”உன்னை அடித்து வெளியே அனுப்பினாலும் கூட நீ இங்கேயே மூன்று நாட்களாய் இருப்பது உன் உறுதியைக் காண்பிக்கிறது. நீ உள்ளே வரலாம். ஆனால் உன்னை துறவிப் பயிற்சிக்கு அனுமதித்து விட்டோம் என்று மட்டும் எண்ணி விடாதே” என்றார்.

சோகோ மடாலயத்தின் உள்ளே மெதுவாக அடியெடுத்து வைத்தார்.

சின்ன உண்மை
ஜப்பானிய மொழி வார்த்தையான ஜென் மற்றும் சீன மொழி வார்த்தையான சான் ஆகிய இரண்டும் சம்ஸ்கிருத வார்த்தையான ‘த்யான்’ (தியானம்) என்பதிலிருந்தே பிறந்தன.

-தொடரும்
zen centre in California, USA

Zen Centre in California (Pictures rae used from various other sites;thanks.Contact swami_48@yahoo.com

Tolkāppiyar on Translation

agastya in London

Statue of Agastya in London V&A Museum

Dr.R.Nagaswamy
( I am publishing this article with the permission of Dr R. Nagasamy. He is a well known historian and a reputed archaeologist. He held the posts of Director of Archaeology, Tamil Nadu Government and the Vice Chancellor of Kanchepuram University. He has hundreds of research papers and scores of scholarly books to his credit. He is regularly writing for his blog http://www.tamilarts.academy.com Please visit tamilartsacademy.com for more interesting articles.)

Tolkāppiyar the great grammarian deals with translating texts from other languages to Tamil, in his chapter on Marabiyal. First he gives the definition of Valinul. ( derivative text) “Vāli enappatuvatu atan valiyākum.”

It means that Vāli nūl is a derivative text from an original text.(sutra 650 marapiyal 70)
Perāciriyar the commentator says that texts like Tolkāppiyam and Palkāppiyam are no doubt derivative texts. So according to this commentator Tolkāppiyam is not an original composition. He comments later that it followed “Agattiyam.”

.
Citing a verse Perāciriyar, says that it is the duty of Tamil scholars to follow Tolkāppiyar as he has almost ordered that though he has abridged the original text at places’ he outlines the tenet of the original text (Agattiyam ) and it is virtually an obligatory injunction. Perāciriyar continues. This author does say in the same vien the text of Palkāppiyar, or Palkāyanār which means the later can not be considered as authoritative as Tolkāppiyar.

The question arises when such an authoritative text by Tolkāppiyar exists what is the need for Palkāppiyar to write his work? To this Perāciriyar answers that Palkāppiyar also did not write all about “Ezuttu, Col, and Porul”.

This author Tolkāppiyar saw that Agattiyam had a more detailed treatment of Ceyyul prosody, he condensed the same subjec noting that it was important. Further he followed the science of the original text.

450px-Agastya,Prambanan,Indonesia
Statue of Agastya in Prambanan, Indonesia

Evidently according to Perāciriyar , Tolkāppiyar followed carefully Agattiyam. He also shows that Kakkaipādiniyar who wrote her text later, followed Tolkāppiyar. Perāciriyar questions the attitude of some Tamils saying what is derogatory if they followed an original text and translated it in their work.

Tolkāppiyam then divides secondary texts into four categories . The mode of secondary texts are four. Perāciriyar says that original text can be only one, but secondary texts can be many.

“Tokuttal, virittal, tokai viri molipeyarttal, atarpata yāttalotu anai marapinavē”

“Tokuttal” means the parts elaborately dealt with in the original text, is summarized for the benefit of small unlettered men. “Virittal “means that which are not clear in the original text are elaborated for making them understandable. “Tokai viri” means elaborating those parts both in summary and elaboration that are further enraged. “Moli peysrttal” means the text that were in other languages being translated into Tamil. That is also called Valinūl in Tamil tradition.” Perāciriyar is of the opinion that translated text (molipeyartta ) text is also a “Vali nūl”

“Atarpata yāttal” is conforming to conventions? The translation should follow the same layout of the Original. As translation follows abridgment and elaboration and further enlargement there need not be any fear for both the Tamils and also the Aryas. As this process is called translation -moli peyarttal- the meaning will not be faulted. Iit seems that there were some who opposed translations into Tamil claiming that Tamil language would be affected. Perāciriyar dismisses this apprehension. He assures the Tamils and the Āryas (Sanskritists) there is no likely hood of meaning going wrong.

” is there translated texts in Tamil among the derivative texts ? Is the a question poised. Perāciriyar answers that these are required.When Meanings of Vedic texts, Agamic texts and texts on logic are rendered into Tamil these texts serve as grammar for those texts ( Vedic, Agamic, and logical texts ). So Tolkāppiyar included translations also as derivative texts.” Says Perāciriyar .

05FRLIBRARY2_UVS_1_1507550g
Tamil Manuscripts collected by U.Ve.Sa.

We know from Col atikāram of Tolkāppiyar the Tamils were never against using northern words ( vada col ) and translations of Sanskrit texts like Vedas, Āgamas, and logical texts which included all scientific texts from any language. Perāciriyar goes further and states that Tolkāppiyam belongs to the middle Sangam age and as it is followed to this day this holds good for translating texts into Tami was not considered anti Tamil as held by some modern Tamils. And it also points out that the Tamils remained forward looking for the past two thousand years until we arrive at the second half of twentieth cent.

We have seen that Tolkāppiyar followed Agattiyar and wrote his work as a derivative text-Vali nūl. Agattiyar is said to have composed three texts on Iyal, Icai, and Nātakam – . Perāciriyar states that Agattiyar wrote three texts on Muttamil. Uvama Iyal comm.. By the time of Tolkāppiyam specialization in each Tamill had already been established and Agattiyar was the pioneer who wrote texts on all the three Tamils. Perāciriyar who wrote his commentary on Tolkāppiyam is assigned to 12thcent to the time of Vikrama chola mentions this in chapter on Uvamaiyal.
Contact swami_48@yahoo.com

Pictures are taken from various sites;thanks:- swami

அதர்வண வேத ரத்தினங்கள்

purnahuti

(நான் (London Swaminathan) செப்டம்பரில் இந்தியாவுக்குச் சென்ற போது வழக்கம் போல சென்னை ‘ஹிக்கின்பாதம்ஸ்’ Higginbothams புத்தகக் கடையில் நுழைந்தேன். அதர்வண வேதம் பற்றிய ஒரு நல்ல புத்தகத்தைக் கண்டேன். என்னிடம் ஆங்கிலத்தில் நிறைய வேதப் புத்தகங்கள் இருக்கின்றன. ஆனால் தமிழில் மிகவும் அரிது. அதை உடனே படித்து முடித்தேன் அனைவரும் வாங்கி படிக்கவேண்டிய அந்த நூலின் விவரங்கள் இதோ: அதர்வ வேதம் அருளும் ஆனந்த வாழ்வு- எழுதியவர் கவிமாமணி தமிழ் மாறன், வெளியீடு: ரம்யா பதிப்பகம், தியாகராய நகர், சென்னை-600 017, தொலைபேசி 24340599)
அந்தப் புத்தகத்தில் பக்கம் 212-ல் பொன்மொழிகள் தொகுப்பு உள்ளது. அதிலிருந்து சில பகுதிகள் இதோ:

இனிமை (காண்டம் 1-34)
தேனைப் போல எங்களை இனிமை செய்; என் நாக்கின் நுனியில் தேன்; அடிவரையில் இனிய தேன்; நாம் மொழிவதும் தேன் மயமாகவேண்டும்.
(மனதில் உறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும் என்ற பாரதி பாடலும் மந்திரம் போல் சொல்லின்பம் வேண்டும் என்ற அவரது வேண்டுதலும் ஒப்பிடற்பாலது)

மருந்து (1-4)
ஜலங்களின் நடுவே அமிர்தம் உண்டு; ஜலங்களில் சிகிச்சை உண்டு.
வானின்று உலகம் வழங்கி வருதலால்தான் அமிழ்தம் என்றுணரற்பாற்று—என்ற வள்ளுவன் வாக்கு ஒப்பிடற்பாலது)

கல் (2-13)
இங்கு வா! கல்லின் மேல் நில்; உனது தேகம் கல் போலாகட்டும். நூறு சரத் காலத்தைக் காண்பாயாகுக!

பயம் (2-15)
வானமும் பயப்படுவதில்லை; பூமியும் பயப்படுவதில்லை. அதனால் துன்பமோ நஷ்டமோ அடைவதில்லை. பிராணனே! நீயும் அங்ஙனே பயப்படாதே! அச்சம் தவிர்.

காதல் (2-30)
எப்படி காற்று பூமியிலுள்ள புல்லை இப்படியும் அப்படியும் அசைக்கின்றதோ, அப்படி உன் மனத்தை என்னிடமிருந்து நீங்காமல் இருப்பதற்கு விருப்பம் உள்ளவளாக, பிரியாதவளாக இருக்க அசைக்கிறேன்

குடும்ப ஒற்றுமை (3-30)
மகன் தந்தையின் ஆணையை அனுசரித்து தாயோடு ஒரு மனம் உடையவன் ஆகுக; கணவனிடம் மனைவி அமைதியுடன் தேனினும் இனிய சொற்களை சொல்பவளாகுக. சகோதரன் சகோதரியை வெறுக்காமல் அனைவரும் ஒற்றுமையாக மங்கல மொழி பேசுங்கள் காலையிலும் மாலையிலும் நல்ல எண்ணம் உங்களுடன் இருக்கட்டும்.

மூன்றும் தெரியும் (4-16)
ஒருவன் நிற்பது, குறுக்கு வழியில் ரகசியமாகப் போவது, மறைந்து உட்கார்ந்து உரையாடுவது போன்ற அனைத்தையும் வருணன் அறிகிறான்.

281

ஆசிகள் (5-30)
பிராணன் வருக; மனம் வருக. கண் பார்வை வருக! பிறகு பலமும் வருக. அவனது சரீரம் நன்கு சேர்க, அவன் தனது திடமான இரு கால்களால் நிற்பானாக.

தூய்மை (6-19)
தேவர்கள் என்னை தூய்மை ஆக்குக; மனிதர்கள் என்னை தூய்மை ஆக்கட்டும். தூய்மை செய்பவன் என்னைத் தூய்மைப் படுத்தட்டும். நல்லறிவும், பாதுகாப்பும் பெற, தேவ சவிதாவே, என்னைத் தூய்மை ஆக்குக.

ஐக்கியம் (6-64)
தேவர்கள் எப்படி தங்களுக்குள் பங்கைப் பெற ஒரு மனதாக இருக்கிறார்களோ, அப்படி நீங்களும் இணக்கமாகுங்கள். மந்திரம், சபை, விரதம், சித்தம், அவி இவற்றில் சமானமாக நடத்தப்படுகிறார்கள். உங்கள் எண்ணம், இருதயம், இவை ஐக்கியமாகி, நீங்கள் ஒன்று சேர்ந்து செயல்படுங்கள்.
(ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு- என்ற பாரதியின் மொழி நினைவிற்கு வரும்)

தாய் அன்பு ( 7-10)
சரஸ்வதியே! சாசுவதமான, சுகம் தரக்கூடியதாய், நல் சிந்தனையைத் தருவதாய், வீரியமும், போஷாக்கு ஊட்டுவதாய், உள்ள உனது புனித ஸ்தனத்தின் அமுதத்தை நாங்கள் பருகும்படி செய்து காப்பாயாக.

கொடை (7-26)
விஷ்ணுவே! சுவர்க்கத்தில் இருந்தும், பூமியில் இருந்தும், வானகத்தில் இருந்தும், குறையாத செல்வத்தை உனது இரு கரங்களில், அள்ளி எமது வலது இடது கரங்களில் அளித்து நிரப்புவாயாக!

ஒற்றுமை (7-54)
அஸ்வினிகளே! உறவினருடனும், தெரியாத மற்றவர்களுடனும் ஒற்றுமையுடனிருக்க மனத்தை தாருங்கள். நாங்கள் எண்ணத்திலும் செயலிலும் ஒற்றுமைப்படவேண்டும். முரண்படாத நல்ல மனம் அடைய வேண்டும். எவருடனும் சண்டை போடாமல் இருக்கவேண்டும்.

உயர்வழி (8-1)
புருஷனே! உயர்ந்து செல்வதே உன்வழி. தாழ்ந்து செல்லாதே. நான் உனக்கு நீண்ட வாழ்க்கையும் வலிமையும் தருகிறேன். நீ எளிதாக இந்த அமுத ரதத்தில் ஏறு. அப்பால், நீ முதுமையிலும் சபையில் பிரசங்கம் செய்வாய்.!

282

கெடுதல் (10-1-5)
கெடுதல் செய்தவரையே கெடுதல் சேரட்டும். பழிச் சொல் சொல்பவரையே பழிச்சொல் அடையட்டும்.
(மறந்தும் பிறன் கேடு சூழற்க—என்ற வள்ளுவன் சொல் நினைவுக்கு வரும்)

பூரணம் (10-8-29)
அவன் பூரணத்தில் இருந்து பூரணத்தை உண்டாக்குகிறான். அவன் பூரணத்துடன் பூரணத்தைப் பொழிகிறான். அது எங்கிருந்து பொழியப்ப்டுகிறது என்பதை நாங்கள் அறியலாமா?

பிரம்மசர்யம் (11.5-17-19)
பிரம்மசரியத்தால், அரசன் தனது ராஜ்யத்தைப் பரிபாலிக்கிறான். குருநாதன் பிரம்மசரியத்தால் பிரம்மசாரியை விரும்புகிறான். கன்னிகை பிரம்ம சரியத்தால் இனிமையான கணவனை அடைகிறாள். குதிரையும் காளையும் பிரம்மசரியத்தால் உணவை அடைகின்றன. தேவர்கள் பிரம்மசரியத்தாலும் தவத்தாலும் மரணத்தை அழித்தார்கள். பிரம்மசரியத்தால் இந்திரன், தேவர்களுக்குச் சொர்க்கத்த்தைக் கொண்டுவந்தான்.

bluemarble2k_big-01

பூமி (12-1, 18, 28, 62, 63)
நீ பெரியவள், நீ பெரிய வசதியுள்ளவள். உனது குலுக்கலும் கலக்கலும் நடுக்கமும் மகத்தானவை. நாங்கள் எழும்போதும் உட்காரும் போதும், நிற்கும்போதும், தாங்கும்போதும், தரையில் கால்கள் தடுமாறாமல் இருக்க வேண்டும். நிலமே உன்னிடத்தில் இருப்போர், நோய்கள் விலகி, துன்பங்கள் விலகி , தீர்க்க ஆயுளுடன் இருக்க நாங்கள் பணிசெய்வோம்! தாயே! தரணி மாதாவே! நீ என்னை க்ஷேமமாக வைத்திரு. செல்வத்திலும் புகழிலும் நிலைக்க வை.
(வந்தேமாதரம் என்னும் பாடலில் நிலமகள் பற்றிப் பாரதி பாடியதை ஒப்பிடுவது இன்பம் தரும்)

வசந்த காலம் (12-2-27/28)
நண்பர்களே எழுமின்! கடந்து செல்மின். இங்கு கல்லாறு ஓடுகிறது. இதைக் கடந்து மங்கலமான இனிமை தரும் மேன்மயை நோக்கிச் செல்லுங்கள்! மனம் தெளிந்து தூயர்களாக , தூய்மை செய்வோராக, விஸ்வே தேவர்களின் அருளோடு, கடினமான பாதைகளைக் கடந்து, சுபிட்சமான இந்த இடத்தில், என் வீரர்களுடன் நூறு வசந்த காலம் அனுபவிக்க வேண்டும்!

சத்யம் (14-1-1)
சத்தியத்தால் பூமி ஸ்தாபிதமாயுள்ளது. சூரியனால் சுவர்க்கம் நிலைபெற்றுள்ளது. நேர்மையினால் ஆதித்தர்கள் நிற்கிறார்கள். சோமனும் சுவர்க்கதிலே ஒளிர்கிறான்.

மணப்பெண் (14-2-26)
சுமங்கலிகளாகவும் வீடுகளை விருத்தி செய்பவளாகவும், கணவனுக்கு மங்களம் சேர்ப்பவளாகவும், மாமனார்க்கு மேன்மையும் மாமியார்க்கு இனிமை வழங்குபவளாகவும் இந்த வீட்டில் நுழைக! மாமனார்க்கு சேவை செய்வாயாக; அதே போல புருஷனுக்கு சுகம் கொடுப்பாயாக; வீட்டிற்கு இன்பம் சேர்ர்ப்பாயாக. குடும்பத்துக்கு இன்பமும் சுகமும் வழங்குவாயாக.
(வேத காலப் பெண்களைப் போற்றி “புதுமைப் பெண்” என்ற பாடலைப் பாரதியார் பாடியுள்ளார். ஒப்பிட்டுப் பார்ப்பது நலம்)

செல்வம் (16-9)
நலமுடன் வேள்வி செய்ய செல்வம் உள்ளது. நான் செல்வத்தை வெற்றிகொள்ள வேண்டும். செல்வந்தனாக வேண்டும். நீ எனக்கு செல்வம் அளிப்பாயாக.
தீர்க்காயுள் (17-1-27)
நான் பிரஜாபதியின் கேடயமுடன், காஸ்யபரின் மேன்மையான ஒளியுடன், மகிழ்ச்சிகரமான ஆயுளுடன் அதிர்ஷ்டத்துடன் ஆயிரம் ஆண்டுகள் வாழ வேண்டும்.

சரஸ்வதி (18-4-45, 47)
தூயவர்கள் சரஸ்வதியை அழைக்கிறார்கள்; வேள்வி வளரும்போது சரஸ்வதியை அழைக்கிறார்கள்; சரஸ்வதியை புலவர்கள் போற்றி இசைக் கிறார்கள். வேண்டுவோருக்கு வேண்டியதை சரஸ்வதி கொடுப்பாளாக.
sarasvati metal

சாந்தம் (19-9-1, 11, 2)
சுவர்க்கம் எங்களுக்கு சாந்தி அளிக்கட்டும்’ பூமியும் ஆகாசமும், தண்ணீரும், தாவர மூலிகைகளும் சாந்தி தருக. ருத்திரர்கள், வசுக்கள், ஆதித்தியர்கள், அக்னிகள், மகரிஷிகள், தேவர்கள், பிரகஸ்பதி சாந்தமானவர்களாக இருப்பதும் இருக்கப்போவதும் சாந்தம்; எங்களுக்கு எல்லாம் சாந்தி தருவதாக.
(எனது கட்டுரை “ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி” என்பதில் முழு விளக்கம் கொடுத்திருக்கிறேன்)

அச்சமின்மை (19-5)
வானமும், பூமியும், சோதி மண்டலமும் எனக்கு அச்சமின்மை தருக; பின்புறத்திலிருந்தும் முன்புறத்திலிருந்தும், மேலிருந்தும் கீழிலிருந்தும் அச்சமின்மை எங்களுக்கு ஆவதாக. நண்பர்கள், அறிமுகம் இல்லாதவர்கள், மற்றும் அறிந்த விஷயம் அறியாத விஷயம் எதிலும் அச்சமின்மை தருக. இரவிலும் பகலிலும் எமக்கு அச்சமின்மையை நல்கி, எல்லா திசைகளும் நண்பர்களாகுக.
(பாரதியார் “அச்சமில்லை” என்ற பாடலிலும், “ஜயபேரிகை” என்ற பாடலிலும் “தெளிவு” என்ற பாடலிலும் இந்தக் கருத்துகளை எதிரொலிக்கிறார்.வள்ளுவனும் “அச்சமே கீழ்களது ஆச்சாரம்” என்று ஏசுகிறார்.)

அக்னி (19-55)
ஒவ்வொரு மாலையிலும், அக்னியே, எங்கள் இல்லத் தலைவன்; ஒவ்வொரு காலையிலும் அவன் எனக்கு நல்ல மனம் தருபவன்; மிகு செல்வத்தையும் பொருளையும் அளிக்கும் உன்னை வளர்த்து , நாங்கள் வாழ்வில் வளம் பெறுவோமாக.

தேகவலிமை (19-60)
வாயிலே (நல்) வாக்கும், மூக்கிலே பிராண மூச்சும், கண்களிலே தெளிவான பார்வையும், கேட்கும் காதும், நரைக்காத கேசமும், உடையாத பற்களும், கைகளில் பலமும் வேண்டும்! தொடைகளிலே திடம், கால்களில் துரித இயக்கம், பாதங்களில் சுவாதீனம் எங்களுக்கு வேண்டும். நான் துன்பமின்றி, என் ஆன்மா சேதமுறாமல் இருக்க வேண்டும்.
(தேசிய கவி சுப்பிரமணிய பாரதி “சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம்” என்னும் பாடலில் இந்தக் கருத்தை ஒவ்வொரு உடல் உறுப்பாகச் சொல்லிப் பாடுகிறார்).

நூறு வயது (19-67-1/8)
நாங்கள் நூறு சரத் காலங்களைப் பார்க்கவேண்டும்; நூறு சரத் காலங்கள் ஜீவிக்கவேண்டும்; நூறு சரத் காலங்கள் விழித்தெழ வேண்டும்; நூறு சரத் காலங்கள் ஏறவேண்டும்; நூறு சரத் காலங்கள் சிறப்புற வேண்டும்; நூறு சரத் காலங்கள் வாழ வேண்டும்; நூறு சரத் காலங்கள் நலமுற வேண்டும்; நூறு சரத் காலங்கள் மேலும் மேலும் சிறப்புற வேண்டும்;
(பிராமணர்கள் தினமும் சந்தியாவந்தனத்தில் இந்த மந்திரத்தைச் சொல்லுவார்கள்)

அக்னி பகவான் (20-10)
“அனைத்தும் அறிந்த அறிவுக் கடவுளாக, தேவதூதனாகச் செயல்பட்டு, தேவர்களுக்குத் தரப்படும் ஆஹுதி உணவை மிகச் சிறப்பான முறையில் அவர்களுக்குச் சேர்ப்பிக்கும் உன்னதப் பணியை ஆற்றும் அக்னியே! ஆற்றல் மிக்க உன்னை எங்கள் ப்ரியமுள்ள தேவதையாக வரிக்கிறோம்.
( பாரதியாரின் “தீ வளர்த்திடுவோம்” என்ற பாடலிலும் “வேள்வித் தீ” என்ற பாடலிலும் அக்னி பகவானைப் போற்றும் துதிகள் உள்ளன.).

Contact Santanam Swaminathan :- swami_48@yahoo.com