சம்ஸ்கிருதம் என்னும் சமுத்திரம் !

சம்ஸ்கிருதத்தை மட்டம் தட்டி, மற்ற மொழிகளை உயர்த்திப் பேசுவது சிலருக்கு வாடிக்கையாகிவிட்டது. அவர்களுடைய அறியாமையை எண்ணி சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. சம்ஸ்கிருதம் என்பது பெரிய சமுத்திரம். அதன் கரையைக் கண்டவர்கள் யாரும் இல்லை. ஏனைய பழைய மொழிகளில் உள்ள நூல்கள் எல்லாவற்றையும் பட்டியல் இட்டு விட்டார்கள். ஆனால் வட மொழி நூல்களைப் பட்டியல் இடுவதுகூட முடிந்தபாடில்லை. உலகம் முழுதுமுள்ள நூலகங்களில் அவ்வளவு சுவடிகள் உள்ளன.

பல நூல்களுக்கு மூல நூல் மறைந்து போயின. ஆனால் அவைகளின் மொழி பெயர்ப்புகள் சீன மொழி உள்பட பல மொழிகளில் இருக்கின்றன. மொழிபெயர்க்க ஆள் இல்லை. உலகம் முழுதும் சம்ஸ்கிருத கல்வெட்டுகள் பல்வேறு லிபிகளில் எழுதப்பட்டுள்ளன.

அசோகர் காலம் வரை பனை ஓலைகளிலும் மரப் பட்டைகளிலும் எழுதி வந்ததால் அவைகள் அழிந்துவிட்டன. கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து உலகம் முழுதும் சம்ஸ்கிருத கல்வெட்டுகள் தோன்றிவிட்டன. நேபாளம் முதல் இந்தோநேஷியா வரை ஆயிரக் கணக்கான பாடல் வடிவக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இதே காலத்தில் மற்ற மொழிகளில் உரைநடைக் கல்வெட்டுகள்தான் கிடைக்கின்றன.

 

வேதங்களின் பெரும் பகுதி (சாகைகள்) அழிந்துவிட்டன. பிராமணர்கள் வாய் மொழியாக ஆசார அனுஷ்டானங்களுடன் அத்தியயனம் செய்துவந்ததால் எழுதிவைக்கவும் இல்லை. இப்போது இருக்கும் வேதங்களை டேப்புகளில் பதிவு செய்ததே 600 மணி நேரத்துக்கு வருகிறது. உலகில் வேறு எங்கும் இல்லாத புதுமை வேதப் படிப்பில் உண்டு. இடைச் செருகல் வந்து விடக் கூடாது என்பதற்காக வேதத்தில் இருக்கும் சொற்களை ஒன்றாகவும் இரண்டாகவும் மூன்றாகவும் கூட்டிக் கூட்டி சொல்லிக் கொண்டே பாராயணம் (கண பாடம், ஜடா பாராயணம்) செய்வார்கள். இதை எல்லாம் பதிவு செய்துவிட்டார்கள் ராஜஸ்தான் பலகலைக் கழகத்தினர்.

சம்ஸ்கிருதம் மாபெரும் சமுத்திரம். கரை காணாத அளவுக்கு பெருகியது. உலகில் இதுவரை அதிலுள்ள புத்தகப் பெயர் பட்டியல் அனைத்தையும் ஒரே வால்யூமாகக் கூட கொண்டுவர முடியாத அளவுக்குப் பெரியது. கிரேக்க நாடு, முதல் காவியத்தை எழுதுவதற்குள் சம்ஸ்கிருதத்தில் 4 வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யங்கள், உபநிஷத்துக்கள் எல்லாம் தோன்றிப் பெருகிவிட்டன.

 

3500 ஆண்டுக்கு முன் வந்த ரிக் வேதத்தில் மட்டும் சுமார் 450 கவிஞர்கள் பாடிய 1028 துதிகள். அவைகளில் 10,552 பாடல்கள். 39, 831 பதங்கள். இதில் 4,32,000 அசைகள் (சில்லபிள்) இருப்பதாக சதபத பிராமணம் கூறும். ஆயினும் இப்போதைய கணக்கில் 3,95,563 அசைகளே காணப்படுகிறது. யஜூர், சாம, அதர்வண வேதங்கள் இதற்குப் பின் வந்தன.

 

உலகிலேயே நீண்ட நூல் என்று இந்தியாவுக்கு வந்த கிரேக்க எழுத்தாளர் குறிப்பிட்ட மஹா பாரதத்தில் நூறாயிரம் ஸ்லோகங்கள்— 2 லட்சம் வரிகள்— சுமார் 10 லட்சம் சொற்கள் உள்ளன.

வால்மீகி ராமாயணத்தில் 24000 பாடல்கள் உள்ளன.

18 புராணங்களில் பல லட்சம் வரிகள் உள்ளன. உலகில் எந்த நாட்டு சமய இலக்கியமும் இதன் அருகில் கூட வரமுடியாது.

 

 

கி.மு 800 என்று ஒரு கோடு கிழித்தால், பக்கத்தில் பைபிளின் பழைய ஏற்பாடும் கொஞ்சம் சீன மொழிப் பாடல்களும் மட்டும் குட்டையாக நிற்கும். கிரேக்கம், லத்தீன், தமிழ் எல்லாம் அப்பொழுது பிறக்கக் கூட இல்லை (நூல்கள் வடிவில்).

 

கி.மு.800க்கு முன்னர் தோன்றிய சுருதி என்னும் வேதம் என்பதே பெரிய அளவு. அதற்குப் பின்வந்த ஸ்மிருதி எனப்படும் நீதி சாஸ்திரங்கள் வேறு.

 

பிரபல வரலாற்று ஆசிரியர் கே ஏ நீலகண்ட சாஸ்திரி கூறுவது: சீன மொழியில் 1700 சம்ஸ்கிருத நூல்கள் மொழி பெயர்க்கப் பட்டன. இவைகளில் 40 மில்லியன் சொற்கள் உள்ளன. இவை 2 முதல் 11 நூற்றாண்டு வரை எழுதப்பட்டவை.

 

 

சம்ஸ்கிருதத் தனிப்பாடல்கள் 

சுபாஷித ரத்ன கோஷ –1739 பாடல்கள்–223 கவிஞர்கள்

பிரசன்ன சாகித்ய ரத்னாகர–1428 பாடல்கள்,

சதுக்தி கர்ணாம்ருத 2370பாடல்கள்–485கவிஞர்கள்,

சூக்தி முக்தாவளி 2790பாடல்கள்,  240கவிஞர்கள்,

சரங்கதார பத்ததி 4689பாடல்கள்–282கவிஞர்கள்

ப்ருஹத் பத்ததி 7586பாடல்கள்,

வல்லப தேவ சுபாஷிதாவளி 3527பாடல்கள் 360கவிஞர்கள்

 

 

(இது தவிர சுபாஷித ரத்ன பாண்டாகாரம் என்னும் நூலில் 16,000 தனிப் பாடல்கள் இருப்பதாக அறிவேன். ஒருவேளை மேற்கண்ட நூல்களில் உள்ளவற்றைத் தொகுத்துக் கொடுத்தார்களா என்று எனக்குத் தெரியாது. தனிப் பாடல்கள் மட்டுமே இவ்வளவு என்றால்!!! )

இரண்டாம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டு வரை சம்ஸ்கிருதத்தில் எழுதிய 872 ஆசிரியர்களின் பெயர்களை பி.வி.கானே தொகுத்துக் கொடுத்தார். சங்கரர் பெயரில் மட்டும் 272 துதிகள் இருக்கின்றன! ஸ்தல புராணங்கள், சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் எல்லாவற்றையும் யாரும் பட்டியல் இடவில்லை.

 

சம்ஸ்கிருதத்திலுள்ள அதிசயங்களை The Wonder That is Sanskrit (published by Sampad and Vijay, Sri Aurobindo Society,Pondichery) என்ற நூலில் படிக்கலாம். இந்த மொழியை பிராமணர்கள் கூட படிக்காமல் ஐரோப்பியர்களிடம் மட்டும் விட்டால், அவர்கள் சொன்னதே “வேதம்” என்றாகிவிடும்!!

 

கம்போடியா, வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து முதலிய தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டும் 800 சம்ஸ்கிருத கல்வெட்டுகள் இருக்கின்றன. கி.மு. 1400 முதல் சம்ஸ்கிருத சொற்கள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. குதிரைப் பயிற்சி தொடர்பான களிமண் பலகை– கியூனிபார்ம் எழுத்துக்– கல்வெட்டுகளில் சம்ஸ்கிருத எண்கள் உள்ளன. கி.மு. 1400ல் மிட்டன்னி ராஜாக்களின்  உடன்பாட்டில் வேதகால தெய்வங்களின் பெயர்கள் இருக்கின்றன.

 

Please read Sanskrit Inscriptions in strange places and Sanskrit Inscriptions in Mosques and on coins in my blogs. ( Swami_48@yahoo.com )

 

 

மாயா இன மக்கள், இந்திய நாகர்கள் !!!

(English translation of this article is already posted here)

மாயா நாகரீகம் மத்திய அமெரிக்க நாடுகளான மெக்ஸிகோ, ஹான்டுராஸ்

குவாடிமாலா, பெலிஸ் ஆகிய நாடுகளில் பரவியுள்ளது. யார் இந்த மாயா இன மக்கள்? இவர்கள் எங்கிருந்து வந்து தென் அமெரிக்காவில் நுழைந்தனர்? இது போன்ற பல கேள்விகளுக்கு இன்னும் எல்லோரும் ஏற்கக்கூடிய பதில்கள் கிடைக்கவில்லை. மாயா நாகரீகம் மர்மங்களும் புதிர்களும் நிறைந்ததாகவே நீடிக்கிறது. ஆனால் இந்துக்களின் கலியுகம் துவங்கும் ஆண்டை ஒட்டியே இவர்கள் ஆண்டும் துவங்குவதால் ஓரளவுக்கு புதிரை விடுவிக்க முடிகிறது. இவர்களுடைய தடயங்களும் சின்னங்களும் கி.மு.2600 முதல் கி.பி.1500 வரை கிடைக்கின்றன. ஆயினும் இவர்கள் காலக் கணக்கீடு கி.மு. ஆகஸ்ட் 11, 3114-ஆம் ஆண்டு துவங்குகிறது. நமது கலியுகம் கி.மு 3102 ல் துவங்குகிறது. உலகில் வேறு யாரும் இப்படி நெருக்கமாக ஆண்டுத் துவக்கத்தைச் சொல்லவில்லை!

அற்புதமான துல்லியமான காலண்டர்கள், வான சாத்திரக் கணக்குகள், பிரம்மாண்டமான கோவில்கள், தங்கம், பச்சைக் கல் நகைகள், புத்தகங்கள் ஆகியன இவர்களின் சிறப்பு அம்சங்கள். 1500ம் ஆண்டுகளில் இவர்களுடைய செல்வத்தைக் கொள்ளை அடித்து இவர்களை கிறிஸ்தவர்களாக்க முயன்ற ஸ்பெயின் தேசத்து ஆட்கள், மாயா இன மக்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்தனர். தங்கம், ஜேட் எனப்படும் பச்சைக் கல் நகைகளை ஸ்பெயினுக்குக் கொண்டு சென்றனர். அருமையான மாயா நூலகங்களைத் தீகிரையாக்கினர். நல்ல வேளையாக மாயா இனக் கோவில்கள் மிகப் பெரிய கோவில்கள் ஆதலால் அவைகளை ஒன்றும் செய்ய முடியவில்லை.

நாகா- கிருஷ்ண பரமாத்மா மோதல்

மஹா பாரத காலத்தில் அர்ஜுனனும் கிருஷ்ணனும் காடுகளை அழித்து நகரங்களை உண்டாக்கி மக்களைக் குடியமர்த்தும் நல்ல எண்ணத்தோடு பெரிய காடுகளை எரித்தனர். காடுகளில் வாழ்ந்த பழங்குடி நாகா இன மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆயினும் அர்ஜுனனும் கண்ணனும் தன் போக்கில் காடுகளை எரிக்கவே நிறைய பேர் இறந்தனர். இது தவிர காளீயன் என்னும் நாகர் தலைவர் இருந்த இடத்தில் மாடு மேய்க்கச் சென்ற இடையர்களுக்கும் காளீயனுக்கும் மோதல் வலுக்கவே அவனையும் கண்ணன் கொன்றான். இந்த மேய்ச்சல் நிலத் தகராறை பிற்கால புராண ஆசிரியர்கள் காளீயன் என்னும் பாம்பைக் கொன்றான் என்று கதை கட்டி விட்டனர். உண்மையில் காளியனும் ஒரு மனிதனே. அவர்கள் நாகர்/ பாம்பு சின்னத்தை அணிந்ததால் நாகர்கள் எனப்பட்டனர். பழங்காலத்தில் மக்கள் தங்களை இனம் காண கரடி (ஜாம்பவான்), கழுகு (ஜடாயு), குரங்கு (ஹனுமான்), பாம்பு (நாகர்) சின்னங்களை அணிவது வழக்கம். காலப் போக்கில் புராணக் கதை சொல்லுவோர் சுவை ஊட்டுவதற்காக இப்படி மிருகங்களின் பெயர்களை உண்மை என்று சொல்லிவிட்டார்கள்.

யாதவர்கள் மீதும் பாண்டவர்கள் மீதும் கோபம் கொண்ட நாகர்கள் பழிவாங்குவதற்காக ஒரு தருணத்தை எதிர் பார்த்துக் காத்திருந்தனர். மய தானவன் என்ற ஒரு நாகர் தலைவன் மட்டும் அர்ஜுனன் கிருஷ்ணர் தரப்பில் இருந்தான்.அவனைக் கானகத் தீயிலிருந்து மீட்டதால் பாண்டவர்களுக்கு உலகம் வியக்கும் அரண்மணையைக் கட்டித் தந்தான். மஹாபாரத யுத்தம் முடிந்தபின், கிருஷ்ணன் ஒரு வேடனின் அம்புக்குப் பலியானான். பாண்டவ சகோதரர் ஐவரும் பழைய கால வழக்கப்படி வடக்கு நோக்கிச் சென்று பாத யாத்திரை செய்து உயிர்த் தியாகம் செய்தனர். அர்ஜுனனின் பெயரன் பரீக்ஷித் ஆட்சிக்கு வந்தான்.

பரீட்சித் மன்னன் காட்டுக்கு வேட்டை ஆடச் சென்றபோது சமீக என்ற முனிவரை அவமானப் படுத்தவே அவர் இன்னும் ஒரே வாரத்தில் நீ ஒரு நாகர் கையால் ( பாம்பு கடித்து ) இறப்பாய் என்று சாபமிட்டார். அவருடைய நாகா இன நண்பர் தட்சகனுக்கு இந்தப் பணியைக் கொடுத்தார். ஒரு வார காலத்துக்குள் எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக அரண்மனை “செக்யூரிட்டியை” அதிகப்படுத்தினார். ஆனால் தட்சகன் ஒரு பழக் கூடையில் ஒளிந்துகொண்டு அரண்மனைக்குள் புகுந்து பரீட்சித் மன்னனைப் படுகொலை செய்தான்.

மொகலாய சாம்ராஜ்யத்தில் அவுரங்கசீப்பினால் சிறைப் பிடிக்கப்பட்ட மாமன்னன் சிவாஜியும் இப்படி பழக்ககூடை மூலம்தான் சிறையிலிருந்து தப்பித்து இந்து சாம்ராஜ்யத்தை நிறுவினார்.

பரீட்சித் மன்னன் படுகொலை, பாண்டவ வம்சத்துக்கு ஒரு களங்கமாக அமைந்தது. உடனே மன்னனின் மகன் ஜனமேஜயன் நாகர்களைக் கண்ட இடத்தில் கொல்லுமாறு உத்தரவிட்டான். இந்திரா காந்தியை ஒரு சீக்கியர் கொன்றதற்காக டில்லியில் இரவோடிரவாக ஆயிரக் கணக்கான சீக்கியர்களைக் கொன்றது போல. இந்த நாகர் படுகொலை மக்களுக்கு பெரிய கவலையைத் தந்தது.

பிராமணர் சமாதான உடன்பாடு

அந்தக் காலத்தில் கலப்புத் திருமணம் நிறைய நடந்தது. ஜரத்காரு என்ற ஒரு பிராமண ரிஷி / முனிவர் ஒரு நாக இனப் பெண்ணை மணந்து கொண்டார். அகத்தியர் வழியில் பிறந்த பிற்கால அகத்திய ரிஷி கம்போடியாவில் உள்ள யசோவதி என்ற நாக மங்கையை மணந்தது போல. பீலிவளை என்னும் நாக இன அழகியை சோழன் கிள்ளி வளவன் மணந்தது போல.

அந்தப் பிராமண முனி ஜரத்காருவுக்கு ஆஸ்திக முனிவர் என்று ஒரு மகன் இருந்தார். அவருக்கு அரசாங்கத்தில் நல்ல செல்வாக்கு. ஆக அவரைத் தேர்ந்தெடுத்து சமாதான தூது அனுப்பினர். அவருடைய தூது வெற்றி பெற்றது. நாகர்கள் படுகொலை நிறுத்தப்பட்டது. அவர்களும் பாண்டவ வம்சத்தைத் தொடுவதில்லை என்று சபதம் செய்தனர்.

விந்தையிலும் விந்தை! 5000 ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட இந்த சமாதான உடன்பாட்டை இன்றும் பிராமணர்கள் மூன்று வேளை சந்தியாவந்தனத்தில் ஒரு மந்திரமாக சொல்லுகிறார்கள் ( நர்மதாயை நம: என்னும் இந்த மந்திரம் நர்மதை நதிக்கரையில் நடந்த சர்ப்ப யாகத்தை நினைவு படுத்துகிறது) அந்த மந்திரத்தில் நாகர்கள், ஜரத்காரு, ஜனமேஜயன், ஆஸ்தீகர் ஆகிய அனைவரும் நினைவு கூறப்பட்டு புகழப் படுகின்றனர். உலகிலேயே மிகப் பழைய சமாதான உடன்பாடு இதுதான்!!

இதைத் தொடர்ந்து மாயா இன மக்கள் இந்தியாவிலிருந்து வெளியேறத் துவங்கினர். அவர்கள் புண்ய பாரத நாட்டை விட்டு வெளியேறிய தேதி ஆக்ஸ்ட் 11, கி.மு.3114 என்பதால் தான் அந்த தேதியை இன்றும் மத்திய அமெரிக்க கல்வெட்டுகளில் பொறிக்கின்றனர். இந்தியாவின் மீது அவ்வளவு நன்றி! ஜனமேஜயர் ஆட்சிக்கலத்தில் இது நடந்தது.

இந்துக்கள் கலியுகத்துக்கு முந்தைய காலம் பற்றித் தெளிவாகக் கூறுகின்றனர். ஆனால் மாயாக்கள் இதற்கு முன் எங்கேயிருந்தனர் என்பது பற்றி ஒன்றும் கூறவில்லை.

அதிசய நாகா ஆடைகள்

சங்கத் தமிழ் இலக்கியத்திலும் மஹாபாரதத்திலும் நாகர்கள் தயாரிக்கும் அதிசய உடுப்புகள் பற்றியும் இரண்டு குறிப்புகள் கிடைக்கின்றன. அதியமான் நெடுமான் அஞ்சிக்கு நீல நாகன் என்பவன் கொடுத்த அற்புதமான ஒரு ஆடையை அவன் தான் அணியாமல் சிவ பெருமானுக்குச் சூட்டியதாக புலவர்கள் (சிறுபாஅண். 96-99) பாடுகின்றனர். இதே போல நிஷத நாட்டு மன்னனான நளனுக்கு கார்க்கோடகன் என்ற நாகர் இனத் தலைவர் ஒரு ஆடையைக் கொடுத்து அவன் மனைவிக்கு அடையாளம் தெரிய அதைப் போட்டுக் கொண்டால் போதும் என்கிறான். அதாவது நளனுக்கும் அவன் மனைவி தமயந்திக்கும் அந்த ஆடை பாற்றி முன்னரே தெரியும்.

நாகர்கள் பாம்புத்தோல் போன்ற மெல்லிய ஆடைகளை அணியும் நெசவாளர்கள். சங்க இலக்கியம் பல இடங்களில் பாம்புத் தோல் போன்ற மெல்லிய ஆடைகளைப் பற்றி (பொருநர். வரிகள்82/83, புறம்383) பேசுகிறது.

(இத்துடன் நாகர்-மாயா அற்புத ஒற்றுமைகள் பற்றித் தொடர்ந்து வரும் இரண்டு கட்டுரைகளையும் படிக்கவும்).

************************************

நாகர்- மாயா இன அற்புத ஒற்றுமைகள்- பகுதி 1

( English translation is already posted in this blog )

  1. கலியுக துவக்கம் கி.மு 3102, மாயா ஆண்டு துவக்கம் கி.மு 3114.மாயா மக்களும்
  2. இந்தியாவின் மணிப்பூர், நாகாலாந்து ஆகிய வடகிழக்கு மாநில மக்களும் உருவத்தில் ஒரே மாதிரியாக இருப்பர்.
  3. பல்லவ, தென் கிழக்கு ஆசிய கட்டிடக்கலை அம்சங்களை தென், மத்திய அமெரிக்க மாயா கட்டிடங்களிலும் காணலாம்.
  4. நாகர்கள் தான் மாயாக்கள் என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறது மாயா கட்டிடங்களில் காணப்படும் பாம்பு உருவங்கள்.
  5. மயன் என்பவன் பெரிய கட்டிடக் கலை நிபுணன். இவன் பெயரில்தான் மாயா நாகரீகமே இருக்கிறது. பெயருக்கேற்றார் போல எங்கு நோகினும் கட்டிடம்தான்.
  6. மதுரை நாயகர் கட்டிய மீனாட்சி கோவில் போன்ற கோவில்களிலும் வேதத்திலும் ஆயிரம் கால் மண்டபம் பற்றிக் கேள்விப் படுகிறோம். மெக்சிகோவில் யோகஸ்தான் தீபகற்பத்தில் கிஷன் இட்சா என்னும் இடத்தில் ஆயிரம்கால் மண்டபம் உள்ளது.
  7. மாயாக்களும் இந்தியர்களும் ஒரே ஆடு புலி ஆட்டத்தை விளையாடுகின்றனர். இப்படி ஒரே விளையாட்டை இரண்டு இன மக்கள் தனித் தனியே கண்டுபிடிப்பது அபூர்வத்திலும் அபூர்வம்!
  8. மாயாகள் கட்டமரத்தில் பயணம் செய்திருக்கலாம். இன்றும் மெக்சிகோவில் தமிழ் சொல்லான கட்டமரம் அதே பொருளில் பயன்படுத்தப்படுகிறது. அந்தக் கலத்தில் நடுக்கடலில் செல்லாமல் கடலோரமாகவே பயணம் செய்வார்கள்.
  9. நாகர்கள் எந்தப் பாதையில் சென்றார்கள் என்பதும் தெளிவாகிவிட்டது. இலங்கை, தென்கிழக்கு ஆசிய நாடுகள்,மத்திய அமெரிக்கா என்று படிப்படியாகச் சென்றதால் இந்த நாடுகள் அனைத்தும் நாகலோகம், நாகத்தீவு என்று அழைக்கப்படுகின்றன. சிந்து நதி முகத் த்வாரத்தில் பாதாள என்ற துறைமுகம் இருந்ததை பழங்கால பயணிகள் எழுதிவைத்தனர். பலி முதலிய மன்னர்களை பாதாள லோகத்துக்கு அனுப்பியதாகக் கூறுவதன் போருள் அவர்கள் கடல் வழியாக நாடு கடத்தப் பட்டனர் என்பதாகும்.

10. நாகர்களை வேதமும் பழைய இனமாக (பஞ்சவிம்ச பிராமணம் -9-4) குறிப்பிடும்.

11. சங்க இலக்கியமும் மஹாபாரதமும் நாகர்கள் செய்யும் அரிய வேலைப்பாடமைந்த ஆடைகளைக் குறிப்பிடுகின்றன.

12. சங்க இலக்கியத்தில் மட்டுமே இருபதுக்கும் மேலான நாகர்கள் பாடல்களை எட்டுக்கட்டி இருக்கிறார்கள்.

13. மஹாபாரத காலத்தில் அர்ஜுனன் இரண்டு நாகர் இனப் பெண்களை திருமணம் செய்துகொண்டா: உலூபி, சித்திராங்கதை. (தமிழ்நாட்டில் இவளை அல்லி ராணி என்று பாடுகின்றனர்).

14. இந்துமத நூலகள் கிருஷ்ணனை நாகர்களின் எதிரியாகவும் இந்திரனை நாகர்களின் நண்பனாகவும் சித்தரிக்கின்றன.

15. நாகர் இனப் பெண்களை எல்லோரும் மணந்தனர். அகத்தியர் வழியில் வந்த பிற்கால அகத்தியர் கம்போடியாவில் யசோவதி என்ற பெண்ணைக் கல்யாணம் செய்தார்.

16. கிருஷ்ணர் இரண்டு முறை நாகர்களுடன் மோதினார்: காண்டவ வனத்தை எரித்தார், காளீயன் என்ற நாகர் இனத் தலவனைக் கொன்றார்.

17. அர்ஜுனனின் பெயரான பரீட்சித்தை நாகர்கள் படுகொலை செய்ததால் நாகர்கள் வெளிநாட்டில் குடியேற நேரிட்டது.

18. ஜனமேஜயன் துவக்கிய நாகர் ஒழிப்பு இயக்கத்தை ஆஸ்தீகர் என்ற பிராமண ரிஷி ஒரு சமாதான உடன்பாடு மூலம் நிறுத்தினார்.

19. நர்மதை நதிக் கரையில் மஹிஸ்மதி நகரில் நடந்த சர்ப்ப யாகத்தையும் (நாகர் படுகொலை) சமாதான உடன்பாட்டையும் இன்றுவரை பிராமணர்கள் தினசரி சந்தியாவந்தனத்தில் கூறிவருகிறார்கள். உலகிலேயே நீண்ட வரலாறு படைத்த சமாதான உடன்பாடு இதுதான்!

20. பத்மபுராணம் மேல் ஏழு உலகங்களையும் கீழ் ஏழு உலகங்களையும் நன்றாக வருணிக்கிறது. அதள,பாதாள, ரசாதள என்பது தானவர்கள் நாகர்கள் வசிக்கும் இடம் என்றும் சொல்லுகிறது.மாயா பெயர்களில் வரும் ஏ டி எல் என்ற எழுத்துக்கள் அதள, தள என்ற பின் ஒடு சொல்லாக இருக்கலாம்.

21. தமிழர்களும் தெலுங்கர்களும் விளையாடும் பரமபத சோபான படத்தில் இன்றும் தடசகன், கார்க்கோடகன் போன்ற நாகர்கள் நினைவு கூறப்படுகின்றனர். நாகர்களை மட்டப்படுத்தும் வகையில் கிருஷ்ணபக்தர்கள் இந்த ஆட்டத்தை அமைத்துள்ளனர். யார் பாம்புக் கட்டத்துக்கு வந்தாலும் அவர்கள் கீழே போய் விடுவார்கள்.

22. நாகர்கள் தங்கள் உடம்பில் பச்சைக் குத்திக் கொண்டதாகத் தெரிகிறது. சங்க இலக்கியத்தில் இவர்கள் ஓவியர்கள், அருவாளர்கள் என்றும் வடமொழியில் இவர்களுடைய பெயர்கள் சித்திர என்ற சொல்லுடனும் உள்ளன. கிரேக்க வரலாற்று ஆசிரியர்களும் ஒபைட்ஸ் ( ஒவியர்) என்பவர்களை நாகங்களை வழிபடும் இனம் என்று வருணிப்பர்.

23. பஞ்சவிம்ச பிராமணத்தில் சர்ப்பராக்ஞி ( பாம்பு ராணி) யும் அதர்வ வேதத்தில் அலிகி, விளிகி யும் குறிப்பிடப்படுகின்றனர். அலிகி, விளிகி சுமேரியாவிலும் வேறு பெயர்களில் இருக்கிறார்கள்.

24. அமரிக்காவில் ஸ்வாமி த்ரிபுராரி எழுதிய நூலில், மாயாக்களும் இந்தியர்களும் வெண்கொற்றக் குடையை அரசர்களுக்குப் பயன்படுத்துவதும் ,ஒரே ஆட்டத்தை விளையாடுவதும், ஒவ்வொரு திசைக்கும் ஒரு வர்ணத்தை ஒதுக்கியதும், ஒரே வான சாத்திரக் கதைகளைக் கூறுவதும் தன்னிச்சையாக ஏற்படக் கூடிய ஒற்றுமைகள் இல்லை. உலகில் இப்படி எங்காவது கண்டது உண்டா? என்று கேட்கிறார். புத்த மதத்தினர், சைவர்கள், மாயாக்கள் ஆகிய மூவரும் நான்கு திசைகளுக்கு நான்கு வர்ணங்களை ஒதுக்கியிருக்கின்றனர்.

25. மாயாக்கள் தொடர்பான பெயர்களில் பல சம்ஸ்கிருத சொற்கள்: க்வாடிமாலா நாடு= கேதுமால த்வீபம் அல்லது கவ்தம ஆலய, மிட்லா=மிதிலை, அஸ்டெக் நாகரீகம்= ஆஸ்தீக ரிஷி, மாயா= தேவலோக சிற்பி மயன்,டிகல் நகரம்=த்ரி கால/ சிவன்,தெவாதிஹுவசன்= தேவ தக்ஷன், ஒரிநாகோ= ஓரி நாகன், மச்சுபிச்சு= மச்ச புச்சம்/ மீன் வால். இதே பெயரில் இமயமலையிலும் பெரு நாட்டிலும் இடங்கள் உள்ளன. யூகடன் தீபகற்பம்=யோகஸ்தானம், துலா, யகடக்ளி=யக்ஷ தளி, யக்ச்சிலன்= யக்ஷ சீலன்.

26. நாகர்கள் எகிப்து வழியாகச் சென்றனரோ என்ற ஐயப்பாடும் உண்டு. எகிப்தில் 17 மன்னர்கள் ராம சேஷன் அல்லது ரமேசன் என்ற பெயரில் கி.மு 1500 முதல் ஆண்டார்கள். அவர்கள் அதலையில் சிவன் மாதிரி பாம்பு இருக்கும்.

27. மாயாக்களின் சிற்பங்களில் தாமரை, ஸ்வஸ்திகா, யானை முதலியன இருக்கும். இவைகளில் எதுவுமே அந்த இடத்தில் கிடையா.

28. மாயாக்களின் பிரதான தெய்வம் கொட்சகொட்ல (பறக்கும் பாம்பு). இது கருட சத்ரு என்பதன் திரிபாக இருக்கலாம்.

29. மாயாக்களின் ஒரு ராஜாவின் பெயர் தீயில் பிறந்தவன் (கி.பி 378). மகாபாரத கால திரவுபதி, ராஜஸ்தானிய சௌஹான் ஜாதியினர், சேர மன்னர்கள், வேளிர்கள் (கபிலர் புறநானூற்றில் தடவினில் தோன்றியவனே என்று வேளிரைப் பாடுகிறார்) ஆகியோர் தங்களை யாக குண்டத்தில் பிறந்தவர்கள் என்பர். அகத்தியர், வசிட்டர் போன்றோர் தங்களை குடத்தில் (கும்ப முனி) பிறந்தவர்கள் என்பர். இன்னொரு மாய மன்னரின் பெயர் கான் மாக்ஸ் (கி.பி700). இதன் பொருள் மகா நாகன். கான் என்றால் மாயா மொழியில் நாகம்/பாம்பு என்று பொருள். கான் என்பதைத் திருப்பிப் படித்தால் நாக என்று வரும். இதை மொழியியல் ஆய்வாளர்கள் மிர்ரர் இமேஜ் (கண்ணாடியில் பார்ப்பதைப் போல வட இடமாக)  என்பர். மக்ஸ் என்பது சம்ஸ்கிருத மஹா என்பதன் திரிபு.

30. மாயாக்களின் முக்கிய நகரங்களில் ஒன்று பளிங்கு. அங்கே பளிங்கு போன்ற கற்கோவில்கள் இருக்கின்றன. பளிங்கு என்பது கண்ணாடி, படிகம் என்ற பொருளில் தமிழில் புழங்கும் சொல். தமிழ் நாகர்களும் தென் அமெரிக்க சென்றனர் என்பது கட்டமரம், பல்லவ கிரந்தம், மருதன் இள நாகன் போன்ற சொற்களிலிருந்து புலனாகிறது. மாயாக்களின் எழுத்து பல்லவ கிரந்தம் போலவே சுழிவுகளுடன் இருக்கும், தென் கிழக்கு ஆசிய நாடுகள் பேஎசும் எல்லா மொழிகளுக்கும் பல்லவ கிரந்தமே மூல எழுத்து என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே.

( பகுதி இரண்டில் மேலும் 30 ஒற்றுமைகளைப் படிக்கலாம்)

நாகர்- மாயா இன அற்புத ஒற்றுமைகள்- பகுதி 2

(English translation is already posted here)

(“மாயா இன மக்கள், இந்திய நாகர்கள்” என்ற கட்டுரையையும், நாகர்- மாயா இன அற்புத ஒற்றுமைகள்- பகுதி 1 என்ற கட்டுரையையும் படித்துவிட்டு இந்தக் கட்டுரையைப் படிக்கவும்)

 

31. மாயாக்களுக்குப் பின்னர், அஸ்டெக், இன்கா இன மக்களும் தென் அமெரிக்க ,மத்திய அமெரிக்க பகுதிகளை ஆண்டனர். ஒலெமக் என்ற நாகரீகம் இதற்கு முன் இருந்தது. மெக்ஸிகோ நகரில் மிகப் பெரிய அஸ்டெக் காலண்டர் இருக்கிறது. அதில் இரண்டு பெரிய பாம்புகள் உள்ளன. இவைகளை இந்துக்கள் கால சர்ப்பம் என்று அழைப்பர். காளி என்ற பெயரில் பிரமிடும் கோவிலும் இருக்கின்றன.

 

32. மகன், மகள்களை தாத்தா, பாட்டி பெயர் கொண்டே (பெயரன்) அழைக்கின்றனர். பூ, பழம், பாம்பு,கருடன்- இவைகளைப் பெயராகச் சூட்டுகின்றனர். இந்தியாவிலும் இப்படி தாமரை, மல்லிகை மற்றும் பூ, பழம் பெயர்களையே அதிகம் சூட்டுகின்றனர். இந்துக்கள் அனுஷ்டிக்கும் நாமகரணம், புன்யாஹ வசனம், குருகுல வாசம் ஆகியன மாயாக்களிடமும் இருந்தன.

33. இந்தியாவில் படை வீரர்கள் நவ கண்டம் முதலியவற்றின் மூலம் உயிர்த் தியாகம் செய்தனர். கபிலர், குமாரில பட்டர் போன்றோர் தீயில் புகுந்து உயிர்வீட்டனர். மகாபரதத்திலும் அரவான் களபலி கொடுக்கப்பட்டான். இதை மாயாக்களும் செய்தனர்.

 

34. இந்திய மன்னர்கள் சிம்மாசனத்தைப் பயன்படுத்தினர். மாயாக்கள் சிங்கம் இல்லாததால் ஜாகுவார் புலி ஆசனத்தைப் பயன்படுத்தினர். சிங்கத்தைக் குறிக்கும் சிங் என்ற சொல்லும், கேசரி (சீசர்) என்ற சொல்லும் பல மொழிகளில் உள்ளன.

35.மாயாக்களும் உயரமான கோபுர வடிவக் கோவிலகளைக் கட்டினர். எகிப்தில் பிரமிடுகள் இப்படி இருந்தபோதிலும் அவைகள் சவ அடக்கம் செய்யப்பட்ட இடங்கள். மாயாக்களும் இந்திய ராஜாக்களைப் போலவே நகைகள் அணிந்தனர். எகிப்தியர் போல அல்ல. கிருஷ்ணர் மயிற்பீலி அணிந்தது போல மாயாக்களும் பறவை இறகை அணிந்தனர்.

36. வேத கால காலண்டரில் நாலைந்து வருடத்துக்கு ஒரு முறை மல மாதம் என்று விலக்கப்பட வேண்டிய தீட்டு மாதம் வரும். மாயாக்கள் ஒவ்வொரு மாதத்திலுமே 5 நாட்களை வேண்டாத நாட்களாக கருதினர்.

 

37. இந்துக்களைப் போலவே நிலவில் முயல் இருப்பதாகக் கருதினர். வேறு பண்பாடுகளில் இதைக் கிழவி, மன் என்றெல்லாம் சொல்லுவார்கள். ராகு கேது பாம்புகள் நிலவை விழுங்குவதே கிரகணம் என்று இந்துக்கள் சொல்வதைப்போல அவர்களும் நம்பினர்.

38. டிகால் என்னும் ஊரிலுள்ள கோவில் மதுரை மீனாட்சி கோவில் போல இருப்பதாக ஒப்பிடுவர். ஊர்ர்ப் பெயர் கூட த்ரிகால என்று சிவனின் பெயர் போல இருக்கிறது.

39. மாயாக்காளும் சப்பாத்தி உணவைச் சாப்பிட்டனர். ஆனால் கோதுமைக்குப் பதிலாக தென் அமெரிக்காவில் அதிகம் விளையும் சோள மாவில் அதைச் செய்தனர். அதன் பெயர் டோர்டியா.

40. சூரிய வழிபாடு இந்த நாகரீகத்திலும் உண்டு. அது 1500ஆம் ஆண்டு வரை நீடித்தது. கடைசியாக சூரியனை வழிபட்ட இன்கா இன மக்களின் பெயர் இனன் (சூரியன்) என்ற சம்ஸ்கிருத சொல்லிலிருந்து வந்தது என்பர்.

 

41.மாயா நாகரீகத்தில் உள்ள சில அம்சங்கள் பற்றி சில கேள்விகளைக் கேட்டால் அதற்கான பதிலில் அது இந்து நாகரீகம் என்று வந்துவிடும். அ) மாயாக்களுக்கு இந்துக்களுக்குத் தெரிந்த பூஜ்யம் என்பதை யார் சொல்லிக் கொடுத்தனர்? ஆ) அவர்களுக்கு யார் எழுதக் கற்றுக் கொடுத்தனர்? இ) யார் வான சாத்திரம் கற்பித்தனர்? ஈ) யார் அசோக மன்னன் போல கல்வெட்டில் பொறிக்கச் சொல்லிக் கொடுத்தனர்? உ) யார் மன்னர்களுக்குக் குடை பிடிக்கும் வழ்க்கத்தைக் கற்பித்தனர்? ஊ) சிவனின் 5 முகங்களுக்கும் ஐந்து வர்ணம் கூறுவது போல நாலு திசைகளுக்கும் மாயாக்கள் வர்ணம் ஒதுக்கினரே.இதைக் கற்பித்தது யார்? எ) கலியுகத்தை ஒட்டி ஆண்டு துவக்கியது ஏன்? ஏ) இந்துக் கோவில் போல உயரமான கோவில் கட்டக் கற்பித்தது யார்? ஐ) மாயாக்கள் எங்கிருந்து வந்தனர்? ஒ) இந்தியர் விளையாடும் அதே ஆடு புலி ஆட்டத்தை அவர்களும் ஆடுவது எப்படி? இவை எல்லாம் ஒரு தொடர்பும் இல்லாமல் தன்னிச்சையாகக் கண்டுபிடிக்கக் கூடியது அல்ல.

 

41.மாயாக்களுமிந்தியர் போல பச்சைக் கற்களையும் முத்துக்களையும் நகை செய்யப் பயன்படுத்தினர்.

42. நம்மைப் போலவே சகுனங்களில் நம்பிக்கை வைத்தனர்.

43. இந்துப் புராணக் கதை போலவே சில கடவுள் கதைகள் உள்ளன.

44. இந்துக்கள் அரச மரத்தை வழிபடுவது போல மாயாக்களும் ஆப்ரிக்க மக்களும் கரீபியன் தீவு மக்களும் செய்பா எனப்படும் இலவம் பஞ்சு மரத்தை ( சால்மலி) வழிபட்டனர். இந்து புராணங்களில் சால்மலித்வீபம் என்று ஒரு கண்டம் அழைக்கப்படும்.

45. இந்துக்கள் போல கால்களை மடித்து உட்காருகின்றனர். மன்னர்கள் பல்லக்குகளில் போகின்றனர். ஆனால் உலகில் பல நாகரீகங்களில் காணப்படும் சக்கரங்களைப் பயன்படுத்தாதது ஏன் என்று இன்று வரை தெரியவில்லை.

46.மாயாக்கள் இடையே ஜாதி முறை இருந்தது. மன்னர்களின் ஆட்சி ஆண்டுகளை சோழ பாண்டியர் போலவே கல்வெட்டுகளில் பதித்தனர்.

47. கற்பக விருட்சம், சொர்கம், அம்ருதம் ஆகியவற்றை நம்பினர்.

 

48. பந்து விளையாட்டைத் தமிழ்ச் சிறுமியர் கைகளால் விளையாடினர். மாயாக்கள் கால்களால் பந்து விளையாடினர்.

49. மத்திய அமெரிக்காவிலுள்ள முக்கிய தெய்வங்களில் ஒன்று வீரகொச்சா. பல்லவ மான்னர்களின் மூதாதையர் பெயரில் வீரகுர்ச்சா என்ற பெயருள்ளது.

50. பாம்புகளின் ஆதிக்கம் எல்லா மட்டங்களிலும் காணப்படுதால் இவர்கள் நாகர்களாக இருக்கக்கூடும்.

51. 1994 ல் மெக்ஸிகோவில் “சோழன் நாகா” புரட்சி வெடித்தது. சோழன் நாகர் தங்களை பழைய நாகரீகப் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்கிறனர்.

52. பகல் என்ற மன்னர் 683-ல் ஆண்டார். அவர் சூரிய திலக என்று அழைக்கப்படுவார். நாமும் ராமர் முதாலான அரசர்களை சூரிய குல திலக அல்லது சூர்ய வம்ச ரத்ன என்றெல்லாம் புகழ்கிறோம்.

 

53.அஸ்டெக்குகளும் மாயாக்களும் கழுகு வாயில் பாம்பு இருக்கும் சின்னத்தைப் பயன்படுத்தினர். சேர சோழ, பாண்டியர் போல இவர்களுக்குள்ளும் பிரிவுகள் இருந்ததைக் காணமுடிகிறது

54.இந்துக்கள் தட்சசீலம், நாளந்தா பல்கழைக் கழகங்களில் புத்தகங்களை சேகரித்து வந்தது போல மாயாக்களும் அழகான புத்தகங்கள் வைத்திருந்தனர். ஸ்பானியர்கள் அவைகள் எல்லாவற்றையும் குவித்து தீவைத்து எரித்து, ஒன்று கூட விடாமல் எரித்தோம் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டனர். 1562 ஆம் ஆண்டில் டீகோ டெ லாண்டா என்பவர் எழுதிய கடிதத்தில் எல்லா புத்தகங்களையும் எரித்ததைப் பெருமையுடன் குறிப்பிடுகிறார். 1546ஆம் ஆண்டில் கிறிஸ்தவ மதத்தை ஏற்காதவர்களைக் கொன்றுகுவித்ததையும் எழுதி வைத்துள்ளனர்.

 

55. இந்து மத காபாலிகர்கள் போல சில சடங்குகளில் கறுப்பு உடை தரித்தனர் மாயாக்கள்.

57. குளத்தில் காணிக்கைகளைப் போடும் வழக்கமும் யோகாசன நிலையில் அமரும் வழக்கமும் இவர்களிடையேயும் இருந்தது.

58. குப்தர் காலம் போல குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்கினர்.

59. தமிழ் செப்புச் சாசனங்களில் மன்னர்கள் நான்கு கடல்களின் நீரையோ அல்லது இரு பக்கமுள்ள கடல்களின் நீரையோ ஒரே பகலில் நீராடியதைப் பெருமையுடன் கூறுவர் ( நாற்கடல் நீரை ஒரு பகல் ஆடி). தங்களுடைய ஆதிக்கம் நாடுமுழுதும் இருந்தது என்பதை இது குறிக்கும். இதற்காக ரிலே ரேஸ்/ தொடர் ஓட்டம் ஓடும் ஆட்களை வேலைக்கு வைத்திருந்தனர். மாயாக்களும் இப்படி தொடர் ஓட்ட ஆட்கள் மூலம் பல செயல்களைச் செய்தனர். இதுவும் இந்திய வழக்கம்.

60. ரோமானியர்கள் போல இளம் சிவப்பு எனப்படும் பிங்க் கலர் மாயா உலகிலும் சிறப்பு வாய்ந்தது. இதை ஒரு வகை கடல் சிப்பியிலிருந்து எடுத்து ஏற்றுமதி செய்தது இந்தியர்களே.

 

61. “சாக்” எனப்படும் மழைத் தெய்வத்தை மாயர்கள் வழிபட்டனர். இது இந்திரன் என்றும் அவனுக்கு சக்ரன் என்று வடமொழியில் உள்ள பெயர் சாக் ஆனது என்றும் ஆராய்ச்சியாளர் சுட்டிக்காட்டுவர்.

62. தமிழ் நாட்டில் காணப்படும் அம்மியும் குழவியும் மாயா வீடுகளிலும் இருந்தன.

63. திரிலோக நாத் என்ற தெய்வத்தை அவர்கள் வழிபட்டதையும் அந்தப் பெயர் ஸ்பானியர்களால் உருத்தெரியாமல் மாற்றப்பட்டு எழுதப்பட்டதையும் மாயாக்களுடைய மந்திரங்கள் வேத மந்திரங்கள் போல இருப்பதையும் தாமரை, ஸ்வஸ்திகா சின்னம், யானை முதலியவற்றை அவர்கள் பயன்படுத்தியதையும் 75 ஆண்டுகளுக்கு முன்னரே “இந்து அமெரிக்கா” என்ற புத்தகத்தில் பிட்சு சமன்லால் எழுதிவிட்டார்.

64. மாயா கட்டிட வரைபடங்கள், கோவில் அமைப்புகள் பற்றி இப்பொழுது அமெரிக்கர்கள் புதிய புத்தகங்களை வெளியிட்டு இருக்கின்றனர். அவைகளை நமது வாஸ்து சாத்திரக் கோட்பாடுகளுடன் ஒப்பிட்டால் மேலும் பல புதிய உண்மைகள் வெளிப்படும்

65. மாயாக்கள் காதில் போட்டிருக்கும் வளையங்கள் குண்டலங்கள் நம் நகைகளைப் போலவே இருக்கும். மாயா மன்னர்களும் இந்திய மன்னர்களைப் போலவே அந்தப் புறத்தில் காமக்கிழத்திகளை வத்திருந்தனர். அவர்களை பள்ளா என்று அழைத்தனர். இந்தியில் பள்ளு என்பது புடவையின் மேல் தலைப்பு.

66. போனம்பாக் என்னும் இடத்தில் கிடைத்த படங்களில் நம் ஊர்க் கோவில்களில் சுவாமி ஊர்வலத்தில் இசைக் கலைஞர்கள் ஊர்வலம் போவது போல படங்கள் உள்ளன. குறவஞ்சி, கதகளி நடனம் போன்ற நாட்டியப் படங்களும் இருக்கின்றன.

 

67. இந்துக்கள் இறந்தோர் வாயில் வாக்கரிசி போடுவதைப் போல மாயர்கள் மக்காச் சோளத்தையும் ஜேட் எனப்படும் பச்சைக் கற்களையும் போட்டனர். இறந்த பின் மனிதன் உள்ள நிலை குறித்து இருவரும் ஒரே நம்பிக்கை வைத்திருந்ததை இது காட்டும்.

68. மற்றொரு புதிரிலும் அவர்கள் இந்தியரைப் போலவே இருக்கின்றனர். கல்ஹணர் எழுதிய ராஜ தரங்கிணி என்ற நூலில் கலியுகத்துக்கும் அவர் கூறும் கணக்கிற்கும் 600 ஆண்டுகள் வித்தியாசம் இருக்கிறது. இதே போல மாயாக்கள் கி.மு.3114 என்று காலண்டரைத் துவக்கினாலும் அவருடைய வரலாற்றுத் தடயங்கள் 2600 முதலே கிடைக்கின்றன. ஆக, இந்தியாவைப் போலவே அங்கும் இரு வகை ஆண்டுக் கணக்கு இருந்தததோ என்று எண்ணவேண்டி இருக்கிறது. இந்தப் புதிரை எதிர்கால ஆய்வுகள் தீர்க்கக்கூடும் !!

 

69. நாகர்கள் வட கிழக்கு இந்திய மாநிலமான நாகாலாந்து முதல் இலங்கையின் தென்கோடி வரை இருக்கிறார்கள். குப்தர்களின் கல்வெட்டுக்களிலும், இலங்கைத் தமிழ் கல்வெட்டுகளிலும் தமிழ் வடமொழி இலக்கியங்களிலும் ,மஹாவம்சத்திலும் குறிப்பிடப்படுவதால் இவர்கள் அமெரிக்கா வரை சென்று குடியேறினார்கள் என்று நம்புவதில் தவறில்லை.

*********

 

 

First Tamil Historian- Paranar

Paranar was a great Tamil poet during Sangam period. He was the first poet to record almost all the historical events that happened during his lifetime. Since he wrote all these things two thousand years ago he can be called First Tamil historian. He was paired with another great poet Kapilar. Kapilar stood first in the number of poems that he composed. He had 205 poems to his credit, the highest for any single poet of Sangam age. Paranar stood first in narrating the maximum number of historical anecdotes.

Paranar gave at least one anecdote in each of his 85 poems. He used similes for this or narrated the actual incidents. We wouldn’t have known much about ancient Tamil rulers without his narrations or similes. He was raised to the level of divine poets. Later day poet Nakkirar equated him with Agastya Rishi. Famous Chera King Senguttuvan even entrusted his son’s education to him. He sent his son Uthiyan Cheral along with Paranar for training in life.

Paranar described four famous battles of Tamilnadu at Venni, Vagai, Kudal and Pazi. He sang about the great Chola Kings Ilamchet Senni, Peruvirar Killi, Karikal Cholan ,  Chera kings Neduncheralathan, Cheran Senkuttuvan, the great philanthropists Ay, Anji, Kari, Ori, Pegan and minor chieftains/ leaders Ay Eyinan, Thazumpan, Mohur Pazaiyan,  Adimanthi, Attanathi, Perunalli,minjili, Akuthai, Aruvai, notorious Nannan, Panan, Thiththan, Veliyan, Katti, Porunan, Kanaiyan, Pasumput Pandian, Maththi, Kazuvul, Azisi,  Senthan, Manthram Poraiyan, Viran, Vichiyar Perumakan, Perumput Poraiyan, Vallan kizavan, Van Paranar, Velli Veethiyar and Maruthi. He had included over forty famous personalities of Ancient Tamilnadu in his list.

In addition to the for battles, he narrated how Senkuttuvan destroyed the sea pirates, how Pegan was rejoined with his separated wife, how Nannan sentenced a young girl to death for plucking a mango from his garden and how even birds came to help for a man who loved birds all his life.

(I have given in five articles about Paranar’s verses  on : Karikalan- fore runner of British Judges Wigs; Tamil Bird Man, where birds made an umbrella shelter for Ay Eyinan; Sea in Kalidasa and Tamil Literature, where Paranar’s geographical knowledge is highlighted; Kannakis burning of Madurai with a single breast; Tulabharam, where Nannan refused gold measure to measure and murdered the Tamil girl; Senkuttuvans destruction of sea pirates in Hindu Gods’ Daring Attacks against Sea Pirates etc.)

Paranar narrated a sad story where in Karikal Chola’s daughter Adi Manthi lost her husband Attanathi in the river Kaveri. She cried and cried and ran along the banks of the river looking for him. At last Attanathi was rescued but the rescuer Maruthu was washed away by the floods.

Paranar gave in full detail the Nannan-mango incident and chastised Nannan for sentencing the girl to death. Paranar looked like an anti war campaigner. He described the bad practises of Tamil community. All the defeated countries were set on fire. Their golden crowns were melted and made as foot stools. The kings made rope with the hair locks of wives of defeated kings. He also said that the blood flowed like a river where wars took place.

OTHER TAMIL HISTORIANS

Another Sangam poet Mamulanar gave an account of a Mauryan invasion against Tamil kings. He described how they laid roads in the mountains (Akam 251,281). The Sangam age was confirmed because of this reference and other references to Roman trade.

Ilango, author of Tamil epic Silappadikaram, listed the kings who took part in the consecration event of Kannaki temple. One of the kings was Kayavahu of Sri Lanka. Seshagiri Sastri, Professor of Sanskrit, identified Kayavahu with Gajabahu I of Mahavamsa who ruled Sri Lanka between 113 A.D and 135 A.D. All the scholars have agreed with him. These lines served as the anchor for dating the Tamil history.

Though Silappadikaram was the most famous book among the five Tamil epics, there was no cross reference anywhere in Sangam literature except one indirect reference. Maruthan Ilanakan, who belongs to the later period of Tamil Sangam Age refers to a lady who lost her breast in Narrinai verse 216. Tamil scholars think that it was a reference to Kannakis burning of Madurai city by throwing her breast on it in anger.

Appar, Saivaite saint of seventh century referred to the poet Tarumi who won a purse of gold in Tamil Sangam. This reference gave credibility to the story of Tiruvilayadal Puranam and Tamil Sangam and the earlier Tsunamis that devoured first two Tamil Sangams (Tirupputtur Tiruthandakam hymns in Thevaram). Appar’s Thevaram hymns helped us to date Manikkavasakar and Adi Sankara. ( I have given the details in my Tamil article– Dating Adi Sankara through Tamil literature).

Paranar praised Karikal Chola’s victory in the Battle field of Venni in Akam. Verse 246. He defeated famous Tamil Kings along with 11 Velir chiefs and destroyed their war drums. In another poem (akam. 125) Paranar narrated what happened at the battle field of Vagai. Karikalan defeated the famous kings and their nine umbrellas were destroyed.

Let us salute the great Tamil historians!

***************

வரலாறு எழுதிய முதல் தமிழன்

சங்கத் தமிழ் இலக்கியத்தில் கபிலரும் பரணரும் இரட்டைப் புலவர்கள் போலக் கருதப்படுகிறார்கள். இவ்விருவரும் தமிழுக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. கபிலர், பாட்டு எண்ணிக்கையால் (205 பாடல்கள்) முதலிடம் பெறுகிறார். பரணரோவெனில், பாடல்களில் அளிக்கும் வரலாற்றுச் செய்திகளால் முதலிடம் பெறுகிறார். பரணரை தமிழ் கூறு நல்லுலகத்தின் முதல் வரலாற்று ஆசிரியர் என்றால் மிகையாகாது. தேதியையும் ஆண்டையும் குறிக்கவில்லை என்றாலும் ஏராளமான நிகழ்ச்சிகளை இவர் கூறுவது பழந் தமிழகத்தை நம் கண் முன் நிறுத்துகிறது.

 

பரணர் கூறும் எல்லா செய்திகளும் நற் செய்திகள் என்று கூறமுடியாது, ஆனால் உண்மைச் செய்திகள் என்பதில் ஐயமில்லை. பொய் அடிமை இல்லாத புலவர் வரிசையில் முன்னிலையில் நிற்பவர்.

 

இரு பெரும் சோழர்களையும், இரு பெரும் சேரர்களையும் நேரில் சந்தித்ததாகத் தெரிகிறது. இது தவிர கடை எழு வள்ளல்களில் பேகன், ஆய், அஞ்சி, காரி, ஓரி ஆகியோரைப் பாடுகிறார். அவர் பாடிய 85 பாடல்களிலும் உவமை வாயிலாகவோ நேரடிக் குறிப்பு மூலமாகவோ ஏதேனும் ஒரு புதிய செய்தியைக் கூறுவார். எதிர்காலத்தில் வாழ்வோருக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகவே நன்கு உணர்ந்து ஒவ்வொரு செய்தியாக அவிழ்த்து விடுகிறார்.

 

நான்கு பெரிய போர்களைப் பாடலில் வருணிக்கிறார்: வெண்ணிப் பறந்தலை, வாகைப் பறந்தலை, கூடற் பறந்தலை ,பாழிப் பறந்தலை ஆகிய போர்க் கள நிகழ்ச்சிகளை விரித்துரைக்கிறார். கழார்ப் பெருந்துறை நீர் விழாவில் ஆட்டனத்தியை காவிரி அடித்துச் சென்றது, கரிகாலன் வெண்ணிப் பறந்தலையில் அடைந்த வெற்றியைக் கொண்டாட அவனுக்குப் பெண் கொடுத்த அழுந்தூரில் விழா நடந்தது, ஆற்றில் மிதந்து வந்த மாங்காயைத் தின்றதற்காக ஒரு பெண்ணுக்கு, நன்னன் என்பவன் மரண தண்டனை விதித்தது, பாழியில் வேளிர் புதையல் செல்வங்களைச் சேர்த்துவைத்தது, தந்தையின் கண்ணைப் பறித்த கோசரை அன்னி மிஞிலி பழிவாங்கியது, மனைவியைப் பிரிந்து பரத்தை வீட்டில் வாழ்ந்த பேகனை மீண்டும் மனைவியுடன் சேர்த்து வைத்தது—இப்படி எத்தனையோ செய்திகளை பத்திரிக்கை நிருபர்கள் போல பிட்டுப் பிட்டு வைக்கிறார். அந்தக் காலத்தில் பத்திரிக்கைகள் இருந்திருந்தால் சிறந்த பத்திரிக்கையாளர் விருது பரணருக்குத்தான் கிடைத்திருக்கும்!

 

மேலே கூறிய ஒவ்வொரு நிகழ்ச்சியும் சுவையான நிகழ்ச்சி. இவைகளில் கரிகாலன், நன்னன், பறவை நண்பன் ஆய் எயினன், சேரன் செங்குட்டுவன் போன்றோரின் சுவையான கதைகளை ஏற்கனவே கொடுத்திருக்கிறேன். கீழ்கண்ட கட்டுரைகளில் காண்க:

 

1.கரிகாலன் வெள்ளை முடி தரித்ததால்தான் இன்றும் பிரிட்டிஷ் நீதிபதிகள் வெள்ளை “விக்” தரித்து வந்து தீர்ப்பு கூறுகிறார்கள்

2. துலாபாரம் கட்டுரையில்,எடைக்கு எடை தராசில் வைத்து தங்கம் தருகிறேன் என்று ஊர்மக்கள் மன்றாடியும் நன்னன் ஒரு பெண்ணைப் படுகொலை செய்தான் என்பதைக் கூறியிருக்கிறேன்

3. அதிசயப் பறவைத் தமிழன் கட்டுரையில் ஆய் எயினனுக்குப் பறவைகள் கூடி குடை பிடித்த அற்புத நிகச்சியைக் கொடுத்துள்ளேன்

4. கடற்கொள்ளையர்: இந்துக் கடவுள்கள் கடற்கொள்ளையரைத் தாக்கி ஒழித்த கட்டுரையில் கடம்பறுத்த செங்குட்டுவன் பற்றி எழுதினேன்.

5. Sea in Tamil Literature and Kalidasa என்ற கட்டுரையில் கடல் பற்றி பரணர் கண்டுபிடித்த அரிய விஷயத்தைக் கொடுத்திருக்கிறேன்

 

அறுகை என்ற நண்பனுக்கு உதவுவதற்காக மோகூர்ப் பழையன் மீது படை எடுத்த செங்குட்டுவன், பழையனுக்குத் துணையாக வந்த பாண்டியனையும் சோழனையும் விரட்டிவிட்டு பழையனை வென்றான். பழையனின் காவல் மரமான வேம்பை வெட்டித் துண்டுகளாக்கி முரசு செய்ய யானைகளால் இழுத்துவந்தான்.  இதற்குப் பழையன் மனைவியரின் முடியைக் கத்தரித்து கயிறு செய்து அந்தக் கயிற்றைப் பயன்படுத்தினான். ஆக தமிழர் செய்த தவறான தவறுகளையும் துல்லியமாகத் தருகிறார். மாங்காய் எடுத்த பெண்ணைக் கொன்ற நன்னனை ஏசுகிறார். கடற்படையைக் கொண்டு கடல் கொள்ளயர்களைச் செங்குட்டுவன் அழித்ததையும் கூறுகிறார்.

 

ஆதிமந்தி—ஆட்டநத்தி

அம்பிகாபதி-அமராவதி, ரோமியோ-ஜூலியட், உதயணன்—வாசவதத்தை, மும்தாஜ்- ஷாஜஹான் காதல்கதைகளைத் தெரிந்தோருக்கு ஆதிமந்தி-ஆட்டநத்தி காதல் கதை தெரியாது. கரிகால் சோழனின் மகள் ஆதிமந்தி. அவள் ஆட்டநத்தி என்ற ஆடல்வல்லானை மணக்கிறாள். ஆட்டத்தில் சிறந்த அவன் பல நீர் விளையாட்டுகளைச் செய்து காட்டுகையில் காவிரி நதி அவனை அடித்துச் செல்லுகிறது. அவன் மனைவி ஆதிமந்தி காவிரி கடலுடன் கலக்கும் இடம் வரை அவனைப் பின் தொடர்ந்து அலறியவாறே ஓடுகிறாள். இந்த அவலத்தைக் கண்ட சோழ நாடே கண்ணீர் உகுக்கும் வேளையில் மருதி என்பவர் அவனைக் கரை சேர்த்து விட்டு காவிரியால் அடித்துச் செல்லப்பட்டு மறைந்துவிடுகிறார். இந்தச் சோகக் காட்சிகளை பரணரும் வெள்ளிவீதீயாரும் பல பாடல்களில் பாடியிருக்கிறார்கள்.

 

வடமொழிக்கு இலக்கணம் கண்ட, உலகமே வியக்கும் மேதை பாணிணீயை, பகவான் பணிணி என்று பதஞ்சலி புகழ்வார். நாமும் வள்ளுவனைத் தெய்வப் புலவன் என்போம். பரணரும் இவ்வாறு தெய்வப் புலவன் என்று நக்கீரரால் வணங்கப்படும் செய்தியைத் தொல்காப்பியத்துக்கு உரை கண்ட பேராசிரியர் கூறுகிறார்: “முரணில் பொதியின் முதற் புத்தேள் வாழி! பரண கபிலரும் வாழி ! என்று அகத்தியரோடு அவரும் போற்றாப்படுகிறார். தெய்வப் புலவன் பரணன் வாழ்க !

 

இதோ அவரால் பாடப் பட்டோரின் பட்டியலைப் பாருங்கள்:

  1. சோழன் உருவப்பஃற்றேர் இளஞ்சேட்சென்னி 2. சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிரற்கிள்ளி 3. சேரமான் குடக்கோ நெடுஞ் சேரலாதன் 4. சேரன் செங்குட்டுவன் 5. பேகன் 6. ஊனூர் தழும்பன் 7. உறந்தை வெளியன் தித்தன் 8. மோகூர்ப் பழையன் 9. அறுகை 10. மலையமான் திருமுடிக் காரி 11. ஆய் அண்டிரன் 12. அதியமான் நெடுமான் அஞ்சி 13. கண்டீரக் கோப்பெருநள்ளி 14. வல் வில் ஓரி 15. கரிகாலன் 16. ஆட்டனத்தி 17. ஆதிமந்தி 18. நன்னன் 19.அன்னி மிஞிலி 20. அகுதை 21. ஆய் எயினன் 22.பாணன் 23. கட்டி 24. பொருநன் 25. கணையன் 26. பசும்பூட் பாண்டியன் (தலை ஆலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் 27. அதிகன் 28. எவ்வி 29. மத்தி 30. கழுவுள் 31. அழிசி 32. பெரும்பூட் பொறையன் 33. தழும்பன் 34. விரான் 35.விச்சியர் பெருமகன் 36. பழையன் 37. வல்லங் கிழவன் 38. பொதியில் திதியன் 39. வன் பரணர் 40. வெள்ளிவீதியார் 41. மருதி 42. உதியஞ் சேரல் (செங்குட்டுவனின் மகனான உதியன் சேரல் பரணரிடம் பாடம் கற்றான்).

 

தமிழ் வரலாறு கண்ட ஏனையோர்:

பரணரைத் தவிர சங்க காலத்துக்கு முந்திய மௌரியர் காலம் குறித்து தகவல் தருகிறார் மாமூலன் என்ற புலவர். மௌரியர்கள் மலைகளில் சாலைகளை அமைத்து படை எடுத்து வந்தது, வேங்கட மலைக்கு அப்பால் வேற்று மொழிகள் பேசப்பட்டது ஆகிய தகவல்களைத் தருகிறார் (அகம் 251, 281).

சிலப்பதிகாரம் என்னும் அற்புதமான காவியம் குறித்து பழந்தமிழ் நூல்களில் எங்குமே குறிப்பிடவில்லை. ஆனால் மருதன் இளநாகன் என்ற ஒரு புலவர் மட்டும் “முலையைத் தூக்கி எறிந்த பத்தினி” பற்றிப் பாடுகிறார். இது கண்ணகி தன் முலையை பிய்த்து எறிந்து மதுரையைத் தீக்கிரையாக்கிய சம்பவமே என்பது ஆராய்ச்சியாளர்களின் துணிபு.

 

இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் கூறிய சில வரிகள்தான் தமிழ் இலக்கியத்தின் காலத்துக்கே அடித் தளமாக அமைந்தது. “கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்” கண்ணகி கோவில் கும்பாபிஷேகத்துக்கு வந்தான் என்று அவர் பாடியதால் இலங்கையின் வரலாறு கூறும் மஹாவம்சத்திலிருந்து கஜபாகு மன்னரின் காலம் கி.பி.130 என்பதை அறிந்து சேரன் செங்குட்டுவன் காலத்தை அறிந்தோம். இளங்கோவும் ஏனைய புலவர்களும் கூறும் சுனாமி தாக்குதல்கள் , தென் மதுரை முதலியன கடலுக்குள் சென்றது ஆகியன எல்லாம் கி.பி.130க்கு முன் நடந்தன என்பதையும் அறிகிறோம். இவை எல்லாம் சதகர்ணி மன்னர் பற்றிய குறிப்புகளாலும் ரோமானிய வணிகத் தொடர்பு தடயங்களாலும் உறுதியாக்கப்பட்டன.

 

திருவிளையாடல் புராணம் பல வரலாற்று நிகழ்ச்சிகளைச் சொன்னாலும் அவைகளைப் புராணக் கதைகள் என்றும் வரலாறு இல்லை என்றும் ஒதுக்கிவத்தனர். ஆனால் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர் (திருநாவுக்கரசு) பெருமான், தருமிக்கு பொற்கிழி கிடைத்த சம்பவத்தைத் தனது தேவாரத்தில் பாடி ஏழைத் தருமிக்கு அழியாத புகழ் வாங்கிக் கொடுத்துவிட்டார். நரியைப் பரியாக்கிய அற்புதத்தைக் குறிப்பிட்டு மாணிக்கவாசகர் தங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர் எனபதையும் சொல்லாமல் சொல்லுகிறார். செய செய சங்கரா போற்றி என்றும் கீதங்கள் பாடிய அடியார்கள் என்றும் பாடி ஆதிசங்கரர் தங்களுக்கு முன்னால் வாழ்ந்ததையும் காட்டுகிறார். (ஆதிசங்கரர் காலம்: தமிழ் இலக்கியத்தில் சான்றுகள் என்ற எனது கட்டுரையில் முழு விவரம் காண்க).

 

இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் பாட்னா நகரில் ஜைனர்களுடன் அப்பர் வாழ்ந்ததால் கங்கை  பற்றியும் அது வங்க தேசத்தை அடைந்தவுடன் ஆயிரம் பிரிவுகளாகப் பிரிந்து கடலில் விழுவதையும் “ஆயிர மாமுக கங்கை” என்றும் பாடுகிறார்.

 

மருதன் இளநாகன் கண்ணகி பற்றி பாடியது– நற்றிணை 216.

“ஏதிலாளன் கவலை கவற்ற

ஒரு முலை அறுத்த திருமா வுண்ணிக்

கேட்டோர் அனையா ராயினும்

வேட்டோ ரல்லது பிறரின் னாரே”

****

(அப்பர், திருப்புத்தூர் திருத்தாண்டகம் 2-1-2

நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி

நற்கனகக்கிழி தருமிக்கருளினோன் காண்

*****

 

கரிகாலன் வெற்றி பற்றி பரணர் பாடியது:

காய்சின மொய்ம்பிற் பெரும்பெயர்க் கரிகா

லார்கலி நறவின் வெண்ணி வாயிற்

சீர்கெழு மன்னர் மறலிய ஞாட்பி

னிழிமிசை முரசம் பொருகளத்தொழியப்

பதினொரு வேளிரொடு வேந்தர் சாய (அகம். 246)

*****

 

சிலப்பதிகாரத்தில் கஜபாஹு:

மாளுவ வேந்தரும்

கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்

மெந்நாட்டாங்க ணிமைய வரம்பனி

னன்னாட் செய்த நாளணி வேள்வியில் (சிலம்பு.30-2-159)

*********************

கிரேக்க மொழியில் தமிழ் சொற்கள்- பகுதி 3

Tamil-Greek Link- Part 3

மேலும் சில தமிழ்-கிரேக்க சொற்கள் ஒற்றுமை

Chaire= siri சிரி rejoice

Manual= பனுவல் panuval in Tamil. The English etymological dictionaries give a wrong derivation. It is actually a Tamil word. It happens according to M=P/B=V changes found in many of the languages.

Palli-ative- வலி நிவாரண (P=V)

Minoan Civilization = மீனவன் miinavan

Dorian= திரையன் thiraiyan (sea people)

Terra= தரை tharai , tharaNi (earth)

Terra cotta= தரை tharai + சுட்ட cotta/sutta= sutta tharai= சுடு மண் சிற்பம் sutuman sirpam

Ophis / ophites/ Oviya/ஓவியர் குடி (tamil word for Nagas)

Ophites in Gk is snake worshippers

Uros- uraka/snake ( Uragapuram, Alaway)

Tholoi (mycenean) = Thazi (Tam)- long mud urn

Patni = பத்தினி வழிபாடு

Poly=பல

Bottle=புட்டில் (ஓலைக் கூடை)

Pangaea=பங்கஜம்/ பங்கயம் (தாமரை) gaia=geo=jaya

Athlete=அடலர், Victory=வெற்றி

Greek greeting: Haritu-tay (May Hari Bless You) ஹரி தூ தே

Greek rulers and philosophers:

Pantikapaion= பாண்டிகாபயன் (மகாவம்சத்தில் பண்டுகாபயன் என்ற மன்னன்)

Agamemnon=அகமெம்னொன்=அஜ மன்னன்

Atreus=ஆத்ரேயஸ்= ஆத்ரேய (கோத்ரம்)

cybel= சிங்க ரதத்தில் ஸ்ரீ பலி (கேரள கோவில்களில் இப்போதும் ஸ்ரீ பலி வலம் வருதல் உண்டு)

Demerites= Deva Mitras= a friend/Bhakta of God= தேவ மித்ரன்

Socrates=Su Kruta=a man of meritorious conduct= சாக்ரடீஸ்/ சுக்ருத

Alexander=Laksyendra= the Lord of Gods= லக்ஷ்யேந்திர

Menander=Meena Indra=Lord of fishes (matsyavatara or Pandyan name)=மீனேந்திர

Aristotle=Arishta Tal= God as the averter of obstacles or calamites=அரிஸ்ட தள

Parthea= Partha’s Desa=Land of Partha/ Arjuna= பார்த்த தேச

 

கிரேக்கர் பெயரிடும் முறை

இந்தியாவைப் போல கிரேக்க நாட்டிலும் பெயரிட்டனர். தசரதன் பிள்ளையை தாசரதி (ராமன்) என்றும் காந்தார நாட்டுப் பெண்ணை காந்தாரி என்றும் மிதிலை நகரப் பெண்ணை மைதிலி என்றும் கேகய நாட்டுப் பெண்ணை கைகேயி என்றும் அழைப்பதைப் போலவே கிரேக்க நாட்டிலும் பெயரிட்டனர்.

 

காளை பிடித்தல்

தமிழ்நாட்டு ஜல்லிக் கட்டு போலவே கிரேக்க நாட்டிலும் நடந்தது. கி.மு.1500 தங்கக் கோப்பை ஒன்றில் காளை பிடிக்கும் காட்சிகள் புடைக்கப்பட்டுள்ளன. ஸ்பார்டா அருகில் ஒரு கல்லறையிலிருந்து கண்டு பிடிக்கப் பட்ட இந்தக்கோபை ஏதென்ஸ் தேசிய அருங்காடசியகத்தில் உள்ளது.

 

தந்தச் சிற்பம்

தலையில் கவசத்துடன் ஒரு வீரனின் தந்தச் சிற்பம் ஆர்டெமிஸ் கோவிலி கண்டு பிடிக்கப்பட்டது. இது டெலோஸ் என்னும் இடத்தில் மியூசியத்தில் உள்ளது. பொதுவாக தந்தச் சிற்பங்கள் தென் இந்தியாவிலிருந்தே உலகம் முழுதும் போயின. அவன் எண் எட்டு (8) வடிவில் ஒரு கேடயத்தையும் தூக்கிச் செல்கிறான். இதன் காலம் கி.மு.1400.

 

பாம்பு ராணி, சிங்க ராணி

சிந்து சமவெளியிலும் சுமேரியாவிலும் சீறிப் பாயும் இரண்டு மிருகங்களைச் சமாளிக்கும் முத்திரைகள் கிடைத்தன. இதே போல முத்திரைகள் கிரீஸிலும் கிடைத்துள்ளன. இவற்றின் காலம் கி.மு.1500. மைசீனிய நாகரீகத்தைச் சேர்ந்த இது ஏதென்ஸ் மியூசியத்தில் இருக்கிறது.

அதே மியூசியத்தில் கி.மு.1600ஐச் சேர்ந்த குதிரை ரதமும் காணப்படுகிறது.

ஒரு பெண் தெய்வத்தின் இரு புறத்திலும் இரு கைகளிலும் பாம்புகள் அல்லது சிங்கங்கள் இருக்கும். அவைகளை அவர் அடக்கி ஆள்வது போல காட்டப் பட்டிருக்கும். அதர்வ வேதத்தில் அலிகி, விளிகி என்று குறிப்பிடப்படும் இவர்கள், சுமேரிய இலக்கியத்திலும் வருகிறது. இந்த நாகர்களை ரிக் வேதம்மும் மறைமுகமாக குறிப்பிடுகிறது. சர்ப்பராக்ஞா/ சர்ப்பராணி என்று ரிக் வேதம் குறிப்பிடும்.

 

ஐம்பால் கூந்தல்

சங்கத் தமிழ் பாடல்களில் பெண்களின் ஐம்பால் கூந்தல் பற்றிப் படிக்கிறோம். கி.மு.ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பெண் தெய்வம் இப்படி முடியுடன் காணப் படுகிறது. அவருக்கு அருகில் ஒரு ஆண் தெய்வமும் அவர்களுக்கு சேவல் காணிக்கை தரும் இரண்டு உருவங்களும் உள்ளன. அந்த தெய்வங்களின் நாற்காலிக்கு ஒரு பாம்பு குடை பிடிக்கிறது.

 

டெல்பி ஆரக்கிள்- சதுக்க பூதம்- யக்ஷப் ப்ரஸ்னம்- விக்ரம் வேதாளம்

டெல்பி என்னும் இடத்திலுள்ள கிரேக்க நாட்டு தெய்வம் அப்பலோவும் அங்கே சாமி ஆடி குறி சொல்லும் பெண்ணும் மிகவும் பிரசித்தமானவர்கள். 2700 ஆண்டுகளுக்கு முன் துவங்கிய இந்த குறி கேட்கும் வழக்கம் ஆயிரம் ஆண்டுகளுக்குத் தொடர்ந்து நடைபெற்றது. உலகப் புகழ் பெற்ற சாக்ரடீஸ், அரிஸ்டாடில், அலெக்ஸாண்டர், அவரது தந்தை பிலிப், ஹெரொடோட்டஸ் இன்னும் புகழ்பெற்ற அத்தனை கிரேக்க தலைவர்களும் ரோமானிய மன்னர்களும் கூட தங்கள் எதிர்காலத்தை அறிய குறி கேட்டுள்ளனர். இது நம் ஊரில் மாரியம்மன், காளியம்மன் கோவில் பூசாரிகள், பூசாரினிகள் இன்றும் கடைப் பிடிக்கும் வழக்கம். இது சிலப்பதிகாரத்தில் வரும் சதுக்க பூதம், மஹாபாரதத்தில் வரும் யக்ஷப் ப்ரஸ்னம், விக்ரமாதித்யன் கதையில் வரும் வேதாளம் ஆகியவற்றின் கேள்வி பதிலகளை நினைவு படுத்தும்.

 

பத்தினி வழிபாடு:

கிரீஸில் பத்தினி என்ற சொல் கி.மு.1600ல்பெண் தெய்வத்தின் பெயராக இருக்கிறது.

சிம்மாசனம்:

மினோவன் அரண்மனைக்குப் போகும் வழியில் இரண்டு பெரிய கல்லாலான சிங்கங்கள் இருக்கின்றன. இதுவும் இந்திய தொடர்பைக் கட்டுகின்றது. சிங்கத்தைக் கட்டுராஜாவாக பஞ்ச தந்திரக் கதையிலும் காளிதாசன் காவியங்களிலும் படிக்கிறோம். இறக்குமதியான ஒரு விஷயம் இப்படி நாடு தழுவிய அளவில் இருக்க முடியாது. ஆகவே இது நம்முடையதே.

கிரேக்க புராணக் கதைகள்:

ஹெர்குலீஸ் என்பவன்தான் கிரேக்க நாட்டின் மாபெரும் வீரன். இவனுடைய செயல்கள் (12 legendary labours of Hercules) எல்லாம் கிருஷ்ண பரமாத்மாவின் செயல்களை ஒத்து இருக்கும். ஹெர்குலீஸ் என்ற பெயரையே ஹரி குல ஈசன் என்று சொல்லுவோரும் உண்டு. இந்தக் கதைகள் எல்லாம் இந்தியப் புராணக் கதைகளின் சிதைந்த வடிவங்கள் என்று மாக்ஸ்முல்லர் கூறுவார். ஹெர்க்குலீசின் 12 வீரதீரச் செயல்கள் எல்லாம் கண்ணனின் வீரச்செயல் (லீலை) களைப் போல இருக்கின்றன.

 

கிரேக்க நூலில் கன்னடம்:

எகிப்து நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கிரேக்க நாடகத்தில் கன்னட மொழிச் சொற்கள் இருக்கின்றன. இது இரண்டாவது நூற்றாண்டைச் சேர்ந்தது. ஒரு கிரேக்க அழகி கர்நாடக துறைமுகமான மால்பியின் நாயகனிடம் சிக்கும் நகைச்சுவை நாடகம் இது. அந்த கிரேக்க அழகியை நாயகன், சந்திரன் கோவிலுக்குக் காணிக்கையாக விடும்போது, கிரேக்க நாட்டிலிருந்து ஒரு குழு அவளைத் தேடி வருகிறது. அதில் ஒரு கோமாளியும் உண்டு. மால்பி நகர நாயகனுக்கு கிரேக்கர்கள் நிறைய மது பானத்தைக் கொடுக்கவே அவன் போதையில் விழுகிறான். அப்போது கிரேக்க அழகி தப்பி ஓடிவிடுகிறாள்.

அசுரர் பெயர்கள்

அசுரர் பெயர்கள்: நம் புரணக் கதைகளில் மஹிசாசுரன், தாரகாசுரன் என்று அசுரர் பெயர்கள் வருவது போல கிரேக்க நாட்டிலும் ‘அசுர்’ என்று அசுரர் பெயர்கள் முடியும் (Minotaur, Centaur).

 

(Ophites= Nagas/Oviyar in Tamil): ஓவியர்/நாகர்கள்

நாகர் இனத்தவருக்கு தமிழில் ஓவியர், அருவாளர், நாகர் என்று பல பெயர்கள் உள்ளன. ஒரு வேளை அவர்கள் அந்த இனத்திலுள்ள பல பிரிவினராக இருக்கலாம். ஒபைட்ஸ் என்பவர்களை கிரேக்க எழுத்தாளர்கள் பாம்பை வழிபடுவோர் என்பதிலிருந்து ஓவியர் என்ற நாகர்களையே அவர்கள் அப்படி அழைக்கின்றனர் என்பது தெளிவாகின்றது.

Ophir—Oviyar— Chitra—Painter– is another name of Nagas. Probably they wore Tattoos of snakes on their bodies. Ophites (snake worshippers) is mentioned in Greek literature. Hippolytus and Clement of Alexandria mention this sect.

 

கிரேக்க மொழி சிவலிங்க கல்வெட்டு

உத்தரப் பிரதேச மானில பதேபூர் மாவட்ட ரே நகரில் பிராமி எழுத்தில் பொறிக்கப்பட்ட கிரேக்க மொழிக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒரு சிவலிங்கத்துடன் உள்ளது. அலெக்சாண்டருக்குப் பின்னர் வடமேற்கு இந்தியாவை ஆண்ட மெனாந்தர் (மீன இந்திரன்) கல்வெட்டு இது. “மஹாராஜச ராஜ ராஜச மகாம் தச திராதாரச காச ஜயந்தச காப்ர ஜதாச மினாந்தரச”– என்ற விருதுகளுடன் கல்வெட்டு துவங்குகிறது. இதன் பொருள்: மாமன்னன், மன்னாதி மன்னன், மாபெரும் பாது காவலன், மினாந்தரன். மேலும் இது அவனை வெற்றித் திருமகன், வெல்லமுடியாத மாவீரன் என்றும் வருணிக்கிறது (தினமணி செய்தி 11-04-1980).

கமலாதேவி கட்டுரை

Illustrated weekly of India 20 January 1980-My impressions of Greece by Kamaladevi Chattopadhyaya: கமலாதேவி சட்டோபாத்யாயா எழுதிய கட்டுரையில் கிரேக்க நாட்டில் ஒரு கிராமத்தில் 1980களில் கண்ட காட்சிகளை இந்தியாவுடன் ஒப்பிடுகிறார். பூக்குழி இறங்கல் (தீ மிதித்தல்), சாமிவந்து ஆடுதல், முகமூடி போட்டுக்கொண்டு ஆடுதல் (இமயமலைப் பகுதிகளில் இன்றும் நடக்கிறது, கேரள கதகளி ஆட்டத்திலும் உண்டு), இந்தியாவிலிருந்து வந்ததாகக் கருதப்படும் பாவாடை போட்டுக்கொண்டு ஆடுதல் ஆகியவற்றை மாசிடோனிய கிராமமான நவுச்சாவில் கண்டதை எழுதி இருக்கிறார். அந்த கிராம மக்களே அது இந்தியாவிலிருந்து ஆதிகாலத்தில் வந்தது என்று கூறியதாக எழுதுகிறார்.

டியோடரஸ் சிகுலஸ் (கி.மு 60) என்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர் ஹெர்குலீஸ் பற்றி பல அபூர்வமான தகவல்களைத் தருகிறார். ஹெர்குலீஸ் இந்தியாவில் பிறந்தவர் என்றும் இந்தியாவில் அவருடைய வாரிசுகள் ஆட்சி புரிவதாகவும் எகிப்திலும் அவர் வழிபடப் படுவதாகவும் அவர் இறந்தவுடன் வானத்தை வழிபடுவோரின் வழக்கத்துக்கிணங்க அவரை தகனம் செய்ததாகவும் எழுதியுள்ளார்.

 

சித்திர கவி தகடு

கிரீட் தீவில் பைஸ்டோஸ்  என்னும் இடத்தில் கிடைத்த ஒரு வட்டமான களிமண் தகட்டில் 242 சித்திர எழுத்துகள் (The Phaistos disk ,1700 BC) காணப்படுகின்றன. இதிலுள்ள விஷயம் இதுவரை படிக்கப்படவில்லை. ஆனால் இந்த எழுத்து தேவநாகரி லிபி போல கடைசியில் சில குறிகளுடன் முடிவதாகவும் முன்னொட்டு விஷயத்தில் சம்ஸ்கிருத மொழியை ஒத்திருப்பதாகவும் அறிஞர்கள் கூறுகின்றனர். ரப்பர் ஸ்டாம்ப் போல முதல் முதலாக ஒவ்வொரு எழுத்தையும் அச்சுப் பொறித்ததில் உலகில் வேறு எங்கும் காணமுடியவில்லை என்றும் அறிஞர்கள் கூறுகின்றனர் இது சித்திர கவி எழுதியது போல வட்டமாக எழுதப்பட்டுள்ளது.

கடல் நீராடல்

கடலில் நீராடுவதை மஹாபாரதம், சங்க இலக்கியம் முதலியன குறிப்பிடும். கிரேக்க நாட்டிலும் கடலில் நீராடுவது புனிதம் என கருதப் பட்டதை கிரேக்க மொழி முதல் நூலான இலியட்—டில் (1: 312-317) காணலாம்.

 

இந்திர விழா

சாக்ரடீஸுக்கு விஷம் கொடுத்துக் கொல்லுவதைத் தாமதப்படுத்தியதற்குக் காரணம் அருகில் தீவில் நடந்த கோவில் விழாவாகும். அந்த விழா துவங்கிவிட்டால் அது முடியும் வரை மரணதண்டனை முதலியன நடைபெறாது. நம் ஊர்க் க்கோவில்களில் கொடி ஏற்றிவிட்டால் எல்லா காரியங்களையும் வெளியூர் பயணத்தையும் ஒத்திவைப்பது போல இது.

மத்தியதரைக் கடலில் இந்திர விழா (Nzegna Festival) போல கடல் விழாவும் கொண்டாடினர். ஆண்டுதோறும் சாரா என்பவள் நினைவாக மே 24ஆம் தேதி ஜிப்சி நாடோடி மக்கள் ஆயிரககணக்கில் கூடி சாராவின் சிலையைக் கடலில் கரைப்பார்கள். நாம் வினாயகர் , காளி சிலைகளைக் கரைப்பது போல இது.

நாம் கடலைக் கடைந்தபோது தெய்வங்களும் புனிதப் பொருட்களும் வெளியேறியதாக நம்புவதைப் போல அவர்களும் அப்ரதிரதி என்பவள் கடலில் இருந்து வந்ததாக நம்புகின்றனர்.

யுதக்ஷன் (Eudoxus) என்ற கிரேக்கன் இரண்டு முறை செங்கடலில் இருந்து இந்தியாவுக்கு வந்து நிறைய வாசனைத் திரவியங்களை ஏற்றிவந்ததாகவும் குறிப்புகள் இருக்கின்றன.

 

வாஹனங்கள்

இந்திய கடவுளர் போலவே கிரேக்க தெய்வங்களும் வாகனங்களில் பவனி வருவதையும் சில பெண் தெய்வங்கள் கையில் பறவை வைத்திருப்பதும் உண்டு. ஆர்டெமிஸ் தேவி மான் வாகனத்திலும் அதீனா சிங்க நாற்கலியிலும், நைகி 4 குதிரை பூட்டிய ரதத்திலும், ஸ்ரீபலி சிங்க ரதத்திலும்,போவதைக் காணலாம். இந்த உருவங்களோடு பல நகைகள், மோதிரங்கள் செய்யப்பட்டன. (Artemis = Stag vahana Athena =Lion stool

Nike =Four horse chariot, Goddess Cyprus and Aphrodite with bird, Kamadhenu)

 

வேதகால தெய்வங்கள்

கிரேக்க தெய்வங்கள் பல வேத கால தெய்வங்களை ஒத்திருப்பதை ஏராளமான ஆய்வாளர்கள் ஒப்புக் கொள்கின்றனர். அவர்கள் ஹெர்குலீஸ் மிகப் பழங்காலத்தில் இந்தியாவிலிருந்து எகிப்து வழியாக கிரீட் தீவுக்குச் சென்று குடி ஏறியிருக்கலாம் என்று கருதுகின்றனர். காரணம் என்ன வென்றால் ஹெர்குலீசை சிங்கத்தோல் (சிவனின் புலித்தோல்) போற்றி கையில் முட்கள் உள்ள கதையை வைத்திருப்பதாகவே சித்தரிகின்றனர். இது நாகரீக உடைகள் பரவாததற்கு முன் இருந்த உடைகள். கிருஷ்ணரைப் போல சங்கு சக்ர பீதாம்பர தாரியாகக் காட்டுவதில்லை. ஆக கிருஷ்ணருக்கும் ஹெர்குலீசுக்கும் ஒரே இந்திய மூதாதையர்கள் என்பதால் ஹரி குல ஈச= ஹெர்குலீஸ் என்பதாகவும் கருதுகின்றனர்.

ஒரு காரணமும் இல்லாமல் ஏஎராளமான கிரேக்க அறிஞர்கள் இந்தியாவை சம்பந்தப் படுத்தமாட்டார்கள். மிகப் பழங்காலத்தில் இருந்த தொடர்புகளை தற்போதைய கிரேக்க நாகரீகத்துக்கும் முந்திய மைசீனிய மினோவன் நாகரீகத்திலும் காணமுடிகிறது. சிவலிங்க வழிபாடு, தேவி வழிபாடு,பத்தினி வழிபாடு ஆகியவற்றுக்கான எண்ணற்ற தடயங்கள் உள்ளன.

வருந்ததக்க விஷயம் என்னவென்றால் துண்டு துண்டாக பலவேறு இடங்களில் சிதறிக் கிடக்கும் விஷயங்களை அணமைக் காலத்தில் யாரும் தொகுக்கவில்லை. 100 அல்லது 150 ஆண்டுகளுக்கு முன் சில வெளி நாட்டுக்காரர்கள் எழுதியதுடன் நாமும் வாளாவிருந்து விட்டோம்.

பிக்ஷு சமன்லால் எழுதிய “இந்தியா-உலகின் தாய்” INDIA-MOTHER OF US ALL என்ற நூலில் இந்திய-கிரேக்க உறவு பற்றி மிகப் பழங்காலத்தில் எழுதியோர் பட்டியலை மட்டும் தருகிறேன்.

LIST OF SCHOLARS

Garbe says that the doctrines of Indian Sankhya philosophy exerted great influence on Greek thinkers like Heraclitus, Empedocles, Anaxagorus, Democritus and Epicurus.

Hussar says the Eleatic philosophers of Greece were profoundly influenced by the Upanishads.

Max Mueller and others say that Pythagoras had contact with Indian scholars in Persia from whom he learnt forty seventh theory of the Euclidean geometry, which is found in Sulva sutras of Baudhayana.

Colebrook holds that the Pythagorians were indebted to their Indian instructors.

Schrader declares that India is the birth place of Pythagorean ideas.

Both Plato and Aristotle had contact with India through Persia. Max Mueller says Brahmins from India were in Greece in fifth century BC.

Urwick is convinced that India is the birth place of many of the ideas of Plato.

Hopkins says Plato is full of Sankhyan thought worked out by him but taken from Pythagoras.

Erdmann says that Plotinus, the founder of neo Platonist school, had deep knowledge of Indian mysticism and himself led the life of a Yogi

Zenob, a fourth century historian of Armenia, relates how in the second century BC, two Indian princes settled in Taron, west of lake Van, and erected temples for the worship of Giasne (Krishna).

Scheling, Schopenhauer, Mansel Milman, Vincent Smith, Winternitz, Max Mueller, historian Mahaffy, A.A.Macdonnell explain how the Buddhist philosophy, Jataka tales, Lalita Vistara and Asoka’s emissaries influenced Christianity in Europe.

In Autobiography of a Yogi by Paramahamsa Yogananda, one can read about Alexander- Dandamis meeting, Alexander- Calanus (Kalyanji) meeting. Dandamis and Calanus are corrupted Hindu names.

*************************

பல்லாயிரம் கோவில்களைக் காத்த ஜோதிடம்!

திப்புவின் ஆட்சி

18ம் நூற்றாண்டின் இறுதியில், தான் சென்ற வழியிலெல்லாம் நூற்றுக் கணக்கான கோவில்களை இடித்து லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தவன் திப்பு சுல்தான்!1782ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதியிலிருந்து 1799ம் ஆண்டு மே 4ம் தேதி முடிய சுமார் பதினாறரை ஆண்டு காலமே ஆட்சி புரிந்த திப்பு சுல்தான் தன் வாளில் “எனது வெற்றி வாள் (இஸ்லாமை) நம்பாதவர்களை அழிக்கவே ஒளிர்கிறது” என்று எழுதிப் பொறித்தான். போர்த்துக்கீசிய பயணியான •ப்ரா பார்டாலோமாகோ மற்றும் மலபார் கலெக்டராக இருந்த வில்லியம் லோகன் உள்ளிட்ட ஏராளமானோர் திப்புவின் நடுநடுங்க வைக்கும் சித்திரவதைகளையும் கோவில் இடிப்புகளையும் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதியுள்ளனர்.

 

வேத ஜோதிடம் காத்த கோவில்கள்!

இருந்த போதும் அவனது அக்கிரமத்திலிருந்து பல கோவில்களையும் ஆயிரக்கணக்கான மக்களையும் வேத ஜோதிடம் காத்தது என்பது சரித்திரம் கூறும் அதிசய உண்மை! அந்த உண்மையான வரலாற்றைப் பார்ப்போம்.

திப்புவுக்கு ஜோதிடத்தின்  மீது அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த ஒரு காரணத்தினால் தான் ஸ்ரீ ரங்கநாதரின் ஆலயத்தை அழிக்காமல் விட்டு வைத்தான். ‘அதை அழித்தால் உன் ஆசை நிறைவேறாது’ என்று கடுமையாக ஆஸ்தான ஜோதிடர்கள் அவனை வலியுறுத்தி எச்சரிக்கவே எப்படியாவது “பாத்ஷா” (சக்கரவர்த்தி) ஆக வேண்டுமென்று விரும்பிய திப்பு அந்த ஆலயத்தை விட்டு வைத்தான். இது தவிர அவனது தாயாரும் அந்த ஆலயத்தை அழித்து விடக் கூடாது என்று கட்டளையிட்டிருந்தாள். அவனிடம் 90000 போர் வீரர்கள் அடங்கிய மாபெரும் முரட்டுப் படை ஒன்று இருந்தது. தனது படையில் 60000 வீரர்களை அழைத்துக் கொண்டு கொச்சி மீது படையெடுக்கப் புறப்பட்டான்

 

திப்பு சந்தித்த ஜோதிடர்

திப்பு. வழியில் படையை ஒரு கிராமத்தில் இளைப்பாறத் தங்க வைத்திருந்தான். அந்த கிராமத்தில் என்ன விசேஷம் என்று ஆராயுமாறு தன் படை வீரர்களைப் பணித்தான். அவர்களுள் ஒருவன் அங்கு ஒரு பிரபல ஜோதிடர் இருப்பதாகவும் அவர் கூறுவதெல்லாம் நூறு சதவிகிதம் பலிக்கும் என்று அறிய வருவதாகக் குறிப்பிட்டான். ஜோதிடத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த திப்பு உடனடியாக அந்த ஜோதிடரை அழைத்து வருமாறு ஆணையிட்டான்.

ஜோதிடரும் நடுங்கியவாறே வந்து சேர்ந்தார். தன் கையில் ஒரு கிளியை வைத்த வாறே அந்த ஜோதிடரை நோக்கி திப்பு, “நீ பெரிய ஜோதிடன் என்று கேள்விப்படுகிறேன். நீ சொல்வதல்லாம் அப்படியே பலிக்குமாமே. இது உண்மையா? அப்படி என்றால் நான் உன்னை ஒன்று கேட்கலாமா?” என்று கேட்டான். தான் ஜோதிடர் என்பதை ஒப்புக்கொண்ட அவர்,”மன்னா! எது வேண்டுமானாலும் கேளுங்கள்” என்று பயந்தவாறே பதில் அளித்தார். திப்பு தன் கையிலிருந்த கிளியைச் சுட்டிக் காட்டி.” இதன் ஆயுள் எவ்வளவு என்று சரியாகக் கூறு!” என்றான்.

 

அது உடனடியாகச் சாகும் என்றால் அதை திப்பு உயிருடன் அப்படியே வைத்திருப்பான் என்பதையும் அது நீண்ட ஆயுளுடன் இருக்கும் என்றால் அவன் அதை உடனடியாகக் கொலை செய்து தன்னையும் தண்டனைக்குள்ளாக்குவான் என்பதையும் ஜோதிடர் நன்கு அறிந்து கொண்டார். இருந்தாலும் கிரக நிலைமைகளை நன்கு ஆராய்ந்து துணிந்து திப்புவை நோக்கி,” மன்னா! இந்தக் கிளிக்கு நீண்ட ஆயுள் உண்டு. இது தான் என் கணிப்பு” என்றார். இதைக் கேட்டுச் சிரித்த திப்பு உடனடியாக அதைக் கொல்வதற்காக தன் வாளை வேகமாக உறையிலிருந்து உருவினான். அவையினர் என்ன நேரப் போகிறதோ என்ற திகிலுடன் அவனைப் பார்த்தனர். வாளை வேகமாக உருவிய போது அதன் நுனி திப்புவின் கட்டை விரலைப் பலமாகக் கீறி விட ரத்தம் கொப்பளித்தது. வலியால் ஆவென்று அலறிய

 

திப்பு கிளியைத் தன் கையிலிருந்து விட்டு விட்டான். கிளி பறந்து வானில் போயிற்று. ஒரு கணம் திகைத்த திப்பு ஜோதிடரை நோக்கி, “ஆஹா! நீர் சிறந்த ஜோதிடர் தான்! ஆனால் இது தற்செயலாக நேர்ந்த ஒரு செயல் என நான் நினைக்கிறேன். இப்போது உண்மையாக உன்னிடம் ஒரு ஜோதிடப் பலன் கேட்க விரும்புகிறேன்.நான் கொச்சி மீது படையெடுத்துள்ளேன். இந்தப் போரில் நான் ஜெயிப்பேனா? சொல்லும்” என்றான். ஜோதிடர் நன்கு ஆராய்ந்து தன் முடிவைச் சொன்னார் இப்படி:”நீங்கள் என்ன முயற்சி செய்தாலும் கொச்சியை வெற்றி பெற முடியாது!” இதைக் கேட்ட திப்புவுக்கு பெரும் கோபம் வந்தது. அந்த ஜோதிடரை அந்த கிராமத்திலேயே சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டான். ‘ஜெயித்து விட்டு வரும் போது உம்மிடம் பேசுகிறேன்’ என்று கூறிய அவன் படைகளுடன் போருக்குச் சென்றான். கொச்சி மீதான போர் 15 நாட்கள் நீடித்தது. திப்பு படு தோல்வி அடைந்தான். மீண்டும் அதே கிராமம் வழியே வந்த திப்பு அந்த ஜோதிடரை விடுவித்து அவருக்கு மரியாதைகளையும் செய்தான்.

 

மனம் மாறிய திப்பு

தன்னால் பாதுஷாவாக ஆக முடியாது என்பதை ஜோதிடர்கள் சொன்னதை அவனால் ஏற்க முடியவில்லை.ஆலயங்களை இடித்ததற்கு தீய பலன் சேரும் என்பதையும் அவன் நம்பவில்லை. ஆனால் இறுதி இரண்டு ஆண்டுகளில் நிதர்சனமான உண்மையை அவன் உணர்ந்தான். அந்தக் காலத்தில் தான் கோவில்களுக்கு நன்கொடைகளை அளிக்க ஆரம்பித்தான். (இதைத் தான் தவறாக திப்பு கோவில்களுக்கு எப்போதுமே  பெரும் நன்கொடை அளித்து வந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் பின்னால் எழுதி மக்களை நம்ப வைத்தனர்!)

 

நஞ்சுண்டேஸ்வரருக்கு மரகத லிங்கம் காணிக்கை!

மைசூருக்கு 30 மைல் தொலைவில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் அவனது வேண்டுதலுக்கு இணங்க அவனுக்கு மிகவும் பிரியமாக யானையின் கண் பார்வை மீண்டும் வந்தது. அதனால் மனம் மகிழ்ந்த அவன் நஞ்சுண்டேஸ்வரருக்கு ஒரு மரகத லிங்கத்தை காணிக்கையாக அளித்தான். இன்றும் அது நஞ்சுண்டேஸ்வரருக்கு பக்கத்தில் இருக்கிறது!

800 கோவில்களை அழித்த திப்புவை, வேத ஜோதிடத்தைக் கூறும் ஜோதிடர்கள் தயங்காது  பலமுறை எச்சரித்ததால் மேலும் பல நூறு கோவில்கள் அழிக்காமல் காக்கப்பட்டன! பல்லாயிரம் மக்கள் அழிவிலிருந்து காக்கப்பட்டனர்.

நமது வரலாற்றின் ஒரு ஏடு ஜோதிடத்தின் இந்த அபூர்வ ஆற்றலை எடுத்துக் கூறுகிறது!

 

This article was written by my brother S Nagarajan.

************************

ஆயிரம் கோடி ரூபாய் ரத்தின பூமி உருண்டை !

இந்தியா விலை மதிக்க முடியாத செல்வச் செழிப்புள்ள நாடு. இன்றும் இந்தியாதான் உலகிலேயே பணக்கார நாடு. இது பற்றி இந்தியாவே பணக்கார நாடு Indiahhhhh—-Richest country in the World  என்று ஆங்கிலத்தில் எழுதியுள்ள கட்டுரைகளையும் படிக்கவும். அலெக்சாண்டரையும் கஜினி முகமதுவையும் மேலும் பல படை எடுப்பாளர்களையும் இந்தியாவுக்கு இழுத்தது இந்தச் செல்வம்தான். உலகில் முதல் முதலில் நல்ல வைரங்களைத் தோண்டி எடுத்து உலக நாடுகளுக்கு அனுப்பியதும் நாம்தான். வட மொழி, தமிழ் மொழி இலக்கியம் முழுதும் தங்கம், ரத்தினம், தந்தம், முத்து, பவளம் பற்றிப் பேசாத புத்தகமோ பாடலோ இல்லை.

 

நம் நாட்டின் கோஹினூர் வைரம் உள்பட பல வைரங்கள் லண்டன் டவர் மியுசியத்தில் இருப்பதை பலரும் அறிவர். கோஹினூர் வைரம் போலவே புகழ் பெற்ற ஹோப் வைரம் (கிருஷ்ண பரமாத்மாவின் சியமந்தக மணி) அமெரிக்காவில் வாஷிங்டனில் ஸ்மித்சோனியன் அருங்காட்சியகத்தில் இருக்கிறது ( Is Krishna’s diamond in USA அல்லது கொலவெறி வைரம் கட்டுரையை படிக்கவும்)

இதை எல்லாம் விட உலகிலேயே மிகப் பெரிய ரத்தினக் குவியல் ஈரானில் இருக்கிறது. அந்நாட்டின் தலை நகரான டெஹ்ரான் மியூசியத்தில் வைக்கப்பட்டிருக்கும் ரத்தின சிம்மாசனங்களும், ரத்தின மணி மகுடங்களும், தங்க, ரத்தின ஆபரணங்களும் காண்போரை வியக்கச் செய்யும்.  பிரிட்டிஷ் ராஜ நகைகளை விட பன் மடங்கு மதிப்புடையன. இவைகளில் பெரும்பாலானவை இந்தியாவிலிருந்து சென்றவை !

 

உலகம் வியக்கக் கூடிய பூமி உருண்டை(குளோப்) டெஹ்ரான் மியூசியத்தில் உள்ளது. இதில் 51,000 ரத்தினக் கற்கள் இருக்கின்றன. அவைகளில் பெரும்பாலானவை மரகதக் கற்கள். மரகதம் பற்றி 1990களில் நேஷனல் ஜியாக்ரபிக் மாகசின் ஒரு பெரிய கட்டுரை வெளியிட்டது. அப்போது இந்த ரத்தின பூமி உருண்டை படத்தை வெளியிட்டு அதன் மதிப்பை 300 கோடி ரூபாய் என்றது. இப்போது குறைந்தது ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு உயர்ந்திருக்கும். அதில் 35 கிலோ தங்கம் வேறு இருக்கிறது. அதன் உயரம் கிட்டத்தட்ட நாலு அடி, விட்டம் ஒன்றரை அடி.

மயில் ஆசனம்

இன்று உலகில் இருந்தால் மிகப்பெரிய அதிசயமாக இருந்திருக்கக் கூடியது மொகலாய மன்னன் ஷாஜஹான் செய்து வைத்திருந்த மயில் ஆசனம் ஆகும். அவன் செய்த போது அதில் 1100 கிலோ தங்கமும் 250 கிலோ ரத்தினக் கற்களும் இருந்தன. உலகிலேயே மிகப்பெரிய தங்கக் காசும் ஷாஜஹானுடையதே. அதை பல ஆண்டுகளுக்கு முன் லண்டனில் ஏலம் விட்டார்கள். ஷாஜஹானுக்கு, தங்கம் என்பது தண்ணீர் பட்ட பாடு. கஜினி மொஹமது போன்றோர் கொள்ளை அடித்த பின்னரும் நம்மிடம் அவ்வளவு தங்கமும் வைரமும் இருந்தன.

 

சாஜஹான் மகனான அவுரங்கசீப்புக்குப் பின்னர் மொகலாய சாம்ராஜ்யம் பலவீனம் அடைந்தது. மொஹமது ஷா என்ற மன்னன் டில்லியை ஆண்டபோது பாரசீகத்திலிருந்து (தற்போது ஈரான் என்று பெயர) நாதிர் ஷா படை எடுத்து வந்தான். பெரிய கொடுங்கோலன். அவன் டில்லியில் இறந்துவிட்டான் என்று சிலர் வதந்தியைப் பரப்பியவுடன் அவனுக்குக் கடுங்கோபம் வந்தது. டில்லியை சூறையாடி ஒரே இரவில் 30,000 பேரைக் கொல்ல உத்தரவிட்டான். மன்னன் மகமது ஷா கொலை நடுங்கிப்போய் எல்லோரையும் உயிரோடு விட்டால் என்ன செல்வம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்றான்.

 

நாதிர் ஷா மயில் ஆசனம், ரத்தின  பூமி உருண்டை உள்பட எல்லா செல்வங்கலையும் கொள்ளை அடித்து பாரசீகத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தான். போகும் வழியில் குர்தீஷ் இன மக்களையும் ஒரு கை பார்க்கத் தீர்மானித்தான். ஆனால் அவர்கள் நாதிர்ஷாவை படுகொலை செய்தனர். அலெக்சாண்டருக்கு நேர்ந்ததுபோல இவனும் நாடு திரும்பாமல் பிணமானான். மயில் ஆசனத்தை அக்கு வேறு ஆணி வேறாகக் கழற்றி பங்கு போட்டுக் கொண்டார்கள் படைத் தலைவர்கள்!

இப்பொழுது டெஹ்ரானில் ஒரு மயில் ஆசனம் உள்ளது. அது உண்மையானது அல்ல என்றே கருதப்படுகிறது. ஆனாலும் உலகிலேயே அதிகமான ராஜ வம்ச பொக்கிஷங்கள் அங்கேதான் உள்ளன என்பதில் கருத்து வேறுபாடு கிடையாது. எல்லாம் இந்தியப் புதையல்கள்!

 

இந்தியாவுக்கு விஜயம் செய்த பிரெஞ்சுகாரரான ஜீன் பாப்டிஸ்ட் டவர்னியர் ஒரு ரத்தின பரிசோதகர். அவர் மயில் ஆசனம் முதலியவற்றை மதிப்பிட்டு எழுதி வைத்திருக்கிறார். விஜய நகர சாம்ராஜ்யத்தின் ரத்தினக் குவியலை மதிப்பிடும் ஆற்றல் தனக்கு இல்லை என்றும் எழுதிவைத்தார். மாலிக்காபூர் போன்ற படைத் தலைவர்கள் தென்னிந்தியாவை சூறையாடிய பின்னரும் அங்கே அத்தனை செல்வம். இப்போதும் திருப்பதி, மதுரை, ஸ்ரீரங்கம், திருவனந்தபுரம் அனந்த பத்மனாப சுவாமி கோவில் செல்வங்களைக் கணக்கில் கொண்டால் இந்தியாவைச் செல்வச் செழிப்பில் மிஞ்சுவதற்கு யாரும் இல்லை. இவைகளைக் கண் போலக் காப்பது நமது கடமை.

 

லண்டனில் திப்புவின் புலி

லண்டனில் விக்டோரியா ஆல்பர்ட் மியூசியத்தில் எல்லோர் கவனத்தையும் ஈர்க்கும் இன்னொரு அற்புதம் திப்புவின் புலி பொம்மை! ஒரு மியூசியத்தில் கோஹினூர் வைரம், இன்னொரு மியூசியத்தில் திப்பு சுல்தானின் புலி ! நமக்கு பாதுகாக்க வக்கு இல்லை, எல்லாம் வெளி நாட்டுக்கு ஓடிப் போயின. இப்பொதுழும் வாரம் தவறாமல் இந்தியச் செல்வங்கள் லண்டன், நியூயார்க் ஏல நிறுவனக்களில் ஏலம் போய்க் கொண்டுதான் இருக்கின்றன.

திப்புவின் புலி பிரெஞ்சுக்காரர்களால் செய்யப் பட்டது. திப்பு சுல்தானைப் போலவே பிரெஞ்சுக் காரர்களுக்கும் ஆங்கிலேயர் என்றால் வெறுப்புதான். இந்தப் புலி பொம்மை உண்மையான புலி அளவுக்குச் செய்யப்பட்டது. ஒரு ஆங்கிலேயனை கடித்துக் குதற வருவதுபோல வடிவமைக்கப் பட்டது. அதற்குள் ஒரு பைப் ஆர்கன் இசைக்கருவி போன்ற இயந்திர உறுப்புகள் இருக்கின்றன. வெளியே தெரியும் கைப்பிடியால் இந்த மரத்தால் ஆன பொம்மையை இயக்கலாம். அதன் ஒரு கை, கீழே விழுந்திருக்கும் ஆங்கிலேயனைக் கிழிக்கப் போவது போல நகரும். அப்போது புலியின் உறுமல் சத்தமும் கீழேயுள்ளவனின் அவலக் குரலும் கேட்கும். புலி அவனை விழுங்கிச் சாப்பிடத் தயாராக இருக்கும். இந்த பொம்மையை வெள்ளைக்காரர்கள் பத்திரமாக லண்டனுக்குக் கொண்டுவந்து கண்ணாடிப் பெட்டிக்குள் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். ஏராளமானோர் இதைக் கண்டு அதிசயிக்கின்றனர்.

 

இதுதவிர மீனாட்சி கோவில் திரைச் சீலை போன்ற அயிட்டங்களும் உண்டு. ( The Wonder That is Madurai Meenakshi Temple கட்டுரையில் மேலும் பல அதிசயச் செய்திகளைப் படியுங்கள்)

**********************

அமுதசுரபி எங்கே? மயில் ஆசனம் எங்கே?

( This is translation of “India needs an Indiana Jones” already posted here)

இந்தியாவின் அரிய பெரிய பொக்கிஷங்கள், புதையல்கள், செல்வங்கள் எல்லாம் மாயமாய் மறைந்துவிட்டன. ஆனால் பல புதையல், பொக்கிஷங்களை, நல்ல வேளையாக, நமது நாட்டின் பெயர் போட்டே வெளிநாட்டு மியூசியங்களில் வைத்திருக்கிறார்கள்.

இந்திய வைரத்தை வைத்து ஹாலிவுட்காரகள் இந்தியானா ஜோன்ஸ் பாணி (Indiana Jones and Temple of Doom)  படங்களைக் கூட எடுத்து, அதிலும் மில்லியன் கணக்கில் காசு பண்ணிவிட்டார்கள். கிரேக்க நாட்டு மற்றும் பைபிளில் வரும் “ஹோலி க்ரெயில்” (Holy Grail) போன்றவை குறித்து ஏராளமான நாவல்கள், சினிமாக்கள் வந்துவிட்டன. ஆனால் நாமோ நமது செல்வம் பற்றியே ஒன்றும் அறியாத அப்பாவிகளாக இருக்கிறோம்.

 

வாரம் தவறாமல் லண்டன், நியூயார்க் நகரங்களில் நம் நாட்டு தொல் பொருட் செல்வங்கள் பகிரங்கமாகவே ஏலத்துக்கு விடப் படுகின்றன. ஆக நமது நாட்டிலும் ஒரு இந்தியானா ஜோன்ஸ் (Indiana Jones) போல ஒருவர் புதைபொருள் வேட்டை நடத்த புறப்படவேண்டும். நமது செல்வங்கள் குறித்து கதைகளும் சினிமாக்களும் வெளிவரவேண்டும்.

திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி கோவிலில் உலகிலேயே மிகப் பெரிய புதையல் கிடைத்துள்ளது. அதை எல்லாம் அழகாக பாதுகாப்பாக மியூசியத்தில் வைக்க வேண்டும். இந்த விஷயங்கள் பற்றி மக்களிடையே விழிப்புணர்ச்சி வரவேண்டும். ஏன் வெளிநாட்டுக்காரர்கள் இதில் அக்கறை செலுத்துகிறார்கள் என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

 

நம்முடைய உலகப் புகழ்பெற்ற கோஹினூர் வைரம் இன்று லண்டன் டவர் மியூசியத்தில் (Tower Museum, London)  உள்ளது. பிரிட்டிஷ் மஹாராணியின் முடியை (Crown Jewels)  அலங்கரிக்கும் வைரங்களில் அதுவும் ஒன்று.

திப்பு சுல்தானின் இயந்திரப் புலி (Tippu’s Tiger)  பொம்மை லண்டன் விக்டோரியா ஆல்பெர்ட் மியூசியத்தில் உள்ளது. இந்தோநேஷியாவின் இந்துக் கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட அகத்தியர் சிலையும் அங்கேதான் உள்ளது.

நாமோ மீனாட்சி கோவில், திருப்பதி கோவில், ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ரத்தினங்கள், தங்க நகைகளின் மகிமை பற்றி அறியாதவராக உள்ளோம். அரசியல்வாதிகள், பல அற்புதமான ரத்தினக் கற்களை மாற்றிவிட்டு, போலி கற்களை வைத்துவிட்டதாகவும் வதந்திகள் உலவுகின்றன.

 

ராஜராஜ சோழன் போன்ற மாமன்னர்கள் கொடுத்த பெரிய பெரிய தங்க நகைகள், ரத்தினக் கற்கள், பாத்திரங்கள் பற்றி கல்வெட்டுகள் பேசுகின்றன. அவைகள் எங்கே என்று யாருக்கும் தெரியாது.

மஹாபாரத காலத்தில் பாண்டவர்கள் பயன்படுத்திய மாபெரும் தங்க சிம்மாசனம் மைசூர் அரணமனையில் இருக்கிறது. நளன் போன்றோர் கொடுத்த அற்புதமான ரத்தினக் கற்கள் மீனாட்சி கோவிலில் உள்ளன.

தி ஒண்டர் தட் இஸ் மீனாட்சி டெம்பிள் (The Wonder That is Madurai Meenakshi Temple) மற்றும் கொலவெறி வைரம் (Is Krishna’s Diamond in USA?) (கிருஷ்ணரின் சியமந்தகம் அமெரிக்காவில் உள்ளது ) என்ற எனது கட்டுரையில் பல புதிய தகவல்களைப் படிக்கலாம்.

ஆயிரக் கணக்காணோருக்கு உணவு வழங்க திரவுபதி பயன்படுத்திய அக்ஷய பாத்திரம் எங்கே?

பசிப்பிணி என்னும் பாவியை ஒழித்து உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்று பிரசாரம் செய்து ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவுகொடுக்க மணிமேகலை பயன்படுத்திய அமுத சுரபி எங்கே?

 

திருவள்ளுவரை மற்றும் ஏற அனுமதித்து போலிப் புலவர்களைக் கீழே தள்ளிய சங்கப் பலகை எங்கே?

பாண்டிய நாட்டு மக்களின் பசிப்பிணி தீர்க்க சிவபெருமான் அனுப்பிய உலவாக் கிழியும் உலவாக் கோட்டையும் எங்கே?

வசிட்ட மாமுனிவர் வளர்த்த காமதேனு எங்கே? இது உயிருள்ள பசு என்று நினைக்கக் கூடாது. இந்தக் காலத்தில் ஆயிரம் சப்பாத்தி ஆயிரம் (Instant Chapathi/Idli Oven) இட்லி தயாரிக்கப் பயன்படும் இயந்திரம் இருப்பது போல ஒரு எந்திரத்தின் பெயர் காமதேனு என்று கருதலாம் அல்லவா?

நினைத்ததை எல்லாம் வழங்கும் கற்பக விருட்சம் எங்கே? இவைகளை கற்பனை என்று நினைத்தால் கதை எழுதவும் சினிமா எடுக்கவும் இந்த விஷயங்களைப் பயன்படுதலாமே !!

 

உலகப் புகழ்பெற்ற மயில் ஆசனம்(Peacock Throne) மொகலாயப் பேரரசன் ஷாஜஹானிடம் இருந்தது. அதை பாரசீக மன்னன் நாதிர்ஷா கொள்ளை அடித்துச் சென்று ஈரானுக்குத் திரும்புகையில் அவன் இறக்கவே அதை ராணுவ தளபதிகள் பங்குபோட்டதாக ஒரு பேச்சு. இல்லை அது ஈரானில்தான் இருக்கிறது என்று இன்னொரு பேச்சு. இப்போது டெஹ்ரான (ஈரான்)(National Museum, Tehran, Iran) மியூசியத்தில் இந்தியாவின் அற்புதமான ரத்தினநகைகள் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன. அதிலும் ஒரு சிறிய மயில் ஆசனம் உண்டு. (இது அற்றி எனது தனி கட்டுரை உள்ளது)

முட்டாள்களையும் புத்திசாலியாகும் 32 பதுமைகள் பதித்த விக்ரமாதித்தன் சிம்மாசனம் எங்கே?

மதுரை மீனாட்சி கோவிலில் ஒரு கடம்ப மரத்தை வேலி போட்டு பாதுகாத்து வைத்துள்ளார்கள். இதை “கார்பன் டேட்டிங்” முறையில் ஆராய்ந்து இதன் காலத்தைக் கண்டு பிடிக்கலாம். இது போன்ற ஆய்வுகள் இந்து மதத்தின் மீது நமக்குள்ள நம்பிக்கையை வலுப்படுத்தும். எந்த வகையிலும் குறைவு உண்டாக்காது. ஏசு கிறிஸ்து மீது போர்த்திய சால்வை என்று டூரினில் வைத்துள்ள துணியை ஆராய்ந்தார்கள். இது போல எவ்வளவோ ஆய்வுகளை நடத்தினால் பல புதிய செய்திகள் கிடைக்கலாம்.

 

இந்திய மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி, நம்முடைய செல்வங்களை பட்டியலிட்டு, அவை எங்கே இருக்கிறது என்றாவது சொல்ல வேண்டும். கோவிலின் அற்புத செல்வங்களை கண்ணிரண்டையும் இமைகள் காப்பது போலக் காக்கவேண்டும். இந்திய செல்வங்களை வெளிநாடுகளில் ஏலம் போகாமல் காக்கவேண்டும்.

********************