லண்டன் தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 962025

Written by London Swaminathan

Post No. 14,613

Date uploaded in London –  9 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

இந்த எட்டு எழுத்துக்களைப் பயன்படுத்துங்கள். குறைந்தது 16 சொற்கள் உள்ளன; கண்டுபிடியுங்கள்!

கா, ம், ர, ப், ல, தி, ப, சி

விடைகள்

சிரம், காரம், சில, பல, காசி, காதி, பதி, பரம், பசி, காசிரம்,லகாரம், ரதி, ரம், காலம், ,பலகாரம், சிலப்பதிகாரம்,

–SUBHAM—

Tags — லண்டன் ,தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி, 962025

Gnanamayam 8-6-2025Programme Report

GNANAMAYAM 8TH JUNE 2025 SUNDAY BROADCAST REPORT

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 1 PM (British Summer Time)

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time .

***

Prayer by Mrs Jayanthi Sundar Team: Master Akash Ramesh

***

Vaishnavi Anand and Latha Yogesh from London presented World Hindu News in Tamil

***

Mrs. Brahannayaki Sathyanarayan spoke on – Vada Thirumullaivayil Shrine

****

Talk by Prof. S Suryanarayanan, Former Principal of Madurai Saraswathy Narayanan College spoke:

Topic- Yaathum Oore, Yaavarum Kelir in Tamil

****

SPECIAL EVENT-

Talk by Mr T R R Ramesh on Periya Puranam  in Tamil.

He highlighted Role of Women in Peria Puranam; apart from Karaikkal Ammaiyar, Isai Gnaniar, Mankaiyarkarasiyar and Thilkavathiyar, wives of other Nayanmars also made big contribution for Saivism; he illustrated this point with many examples.

Mr T R Ramesh is the son of   Sekkizhar Adippodi Dr T N Ramachandran and  

PRESIDENT, HINDU TEMPLE WORSHIPPERS COMMITTEE.

****** 

ஞானமயம் ஒலி/ ஒளி பரப்பு நிகழ்ச்சிநிரல் ஞாயிற்றுக்கிழமை 8-6-2025

நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .

***

இறைவணக்கம் –திருமதி ஜெயந்தி சுந்தர் குழு- Master Akash Ramesh.

****

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டன் மாநகரிலிருந்து  வைஷ்ணவி ஆனந்த்தும்  லதா யோகேஷும்  வழங்கும் செய்தி மடல்.

***

ஆலயம் அறிவோம் திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் —

சொற்பொழிவு

தலைப்பு- வடதிருமுல்லைவாயில் ஆலயம்

****

சொற்பொழிவு

தலைப்பு — யாதும் ஊரே யாவரும் கேளிர்

பேராசிரியர் எஸ். சூர்யநாராயணன் , மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியின் முன்னாள் பிரின்சிபால்

****

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:

சொற்பொழிவு

திரு T R R ரமேஷ்,  S/o Sekkizhar Adippodi Dr T N Ramachandran 

PRESIDENT, HINDU TEMPLE WORSHIPPERS COMMITTEE 

தலைப்பு- பெரிய புராணம்

பெரியபுராணத்தில் பெண்களின் சேவை, மற்றும் சைவ சமயத்தை வளர்ப்பதில் பெண்களுடைய பங்கு பற்றி  விரிவாக உரையாற்றினார் 

****

Anchored by London Swaminathan from London and Kalyanji from India.

****

JOIN US ON EVERY SUNDAY.

—subham— 

Tags-Gnanamayam Broadcast, June 8, 2025, Broadcast report

முத்துமாலை அணிந்தால் ஆயுள் வளரும்; பணம் சேரும்! பரஞ்சோதி தகவல்-12 (Post No.14,612)

Written by London Swaminathan

Post No. 14,612

Date uploaded in London –  9 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 PEARL JEWELS OF GODDESS MEENAKSHI OF MADURAI SHIVA TEMPLE.

நவரத்தினங்கள் பற்றிய அரிய செய்திகள் -12

திருவிளையாடல் புராணம் ( தி.வி.பு.) ஆராய்ச்சிக் கட்டுரை-12

முத்துக்கள்  எங்கெங்கு உற்பத்தியாகின்றன என்று விரித்துவிட்டு அவைகளின் பெயர்களையும் பரஞ்சோதி முனிவர் சொல்கிறார் :

பான்முத்தம் வருணன் முத்தம்

     பகன்முத்தம் பகலோன் முத்தம்

மான்முத்த நீல முத்த

     மாசறு குருதி முத்தங்

கான்முத்தம் பசிய முத்தங்

     காலன்றன் முத்தந் தேவர்

கோன்முத்தம் பொன்போன் முத்தங்

     குணங்களும் பயனுஞ் சொல்வாம்.

 பால் போன்ற வெள்ளை நிற  முத்துக்கள் வருணனுக்குரிய முத்தங்களாகும்;

சூரியன் போன்று செந்நிறம் வாய்ந்த முத்தங்கள் சூரியனுக்குரிய

முத்தங்களாகும்;

நீல நிறமுடைய முத்தங்கள் திருமாலுக்குரிய முத்துக்கள் ;

குற்றமற்ற குருதி நிறத்தினையுடைய முத்தங்கள் வாயு தேவனுக்குரிய முத்துக்கள்;

பச்சை வர்ண முத்துக்கள்  எமன் /கூற்றுவனுக்குரிய முத்தங்களாகும்;

பொன்னைப் போலும் நிறம் வாய்ந்த முத்தங்கள்,

தேவேந்திரனுக்குரிய முத்தங்களாகும்;

(இனி) அவற்றின் குணங்களையும் அணிவோரடையும் பயனையும் கூறுவோம்

*****

உடுத்திர ளனைய காட்சி யுருட்சிமா சின்மை கையால்

எடுத்திடிற் றிண்மை பார்வைக் கின்புறல் படிக மென்ன*

அடுத்திடு குணமா றின்ன வணியின்மூ தணங்கோ டின்மை

விடுத்திடுந் திருவந் தெய்தும் விளைந்திடுஞ் செல்வம் வாழ்நாள்.

1.உடுக்( விண்மீன்) கூட்டத்தினை ஒத்த தோற்றமும், 2.திரட்சியும், 3.குற்றங்களில்லாமையும்,4.கையினால் எடுத்தால் திண்ணென்றிருத்தலும்,5.நோக்கத்திற்கு இன்பஞ் செய்தலும், 6. படிகம்

போன்று தெளிந்திருத்தலும்,  என்று குணங்கள் ஆறாகும்;

இம் முத்துக்களை அணிந்தால் (அணிவோரைத்)

வறுமையும் (விட்டு) நீங்கும்; – திருமகள் வந்து சேருவாள்;

செல்வமும் வாழ்நாளும் மிகும்.

****

வைரம்தான் சிறந்த ரத்தினம் !

மாமணி மரபுக் கெல்லாம் வயிரமே முதன்மைச் சாதி

ஆமென வுரைப்பர் நூலோ ரதிகம்யா தென்னி னேனைக்

காமரு மணிகட் கெல்லாந் தமரிடு கருவி யாமத்

தூமணி தனக்குந் தானே துளையிடுங் கருவி யாகும்.

வைரம் ஏன் சிறந்தது என்றால் உலகிலேயே கடினமான பொருள் வைரம்தான் . மற்ற  நவரத்தினங்களைத் துளை போட வைர ஊசியைத்தான் பயன்படுத்துகிறார்கள் ; மேலும் வைரத்தைத் துளைபோட வல்லது வைர ஊசி மட்டுமே 

நவரத்தின   நூலாராய்ச்சி வல்லுநர்கள் , பெருமை

பொருந்திய மணிகளில் வயிரமே முதற் சாதியாம் என்று

கூறுவர்;  அம் முதன்மை எதனாலென்னில்,  அந்தத் தூய்மையுடைய வயிரமணி,  மற்றைய மணிகளனைத்திற்கும் தொளையிடுங் கருவியாகும் (அன்றி),  தனக்கும் தானே தொளை செய்யும் கருவியாகும்

வைரம் உயர்ந்தது, பவளம் தாழ்ந்தது

     ‘நவமணிகளுள் வயிரமே எல்லாவற்றினுஞ் சிறந்ததாகும்; கோமேதகமும், பவழமும் எல்லாவற்றினும் தாழ்ந்தனவாகும்; மரகதமும், மாணிக்கமும், முத்தும் தலையாய மணிகளாம்; இந்திர நீலமும், புட்பராகமும், வைடூரியமும் இடையாய மணிகளாகும்.’ என்று சுக்கிர நீதியிற் கூறப்பட்டுளது. வயிரம் எல்லாவற்றினும் கடினமானது .

வயிர வூசியு மயன்வினை யிரும்பும்

செயிரறு பொன்னைச் செம்மைசெ யாணியும்

தமக்கமை கருவியுந் தாமா மவைபோல்

உரைத்திற முணர்த்தலு முரையது தொழிலே”

என்னும் சூத்திரம் இங்கு நோக்கற் பாலது. (61)

*****

மரகதம் / பச்சைக் கல்லின் தோற்றம்

வலாசுரனின் பித்தம்தான் மரகதம் ஆகியது; இதை கருட ரத்தினம் என்றும் சொல்லுவார்கள்.

மரகதத் தோற்றங் கேண்மின் வலாசுரன் பித்தந் தன்னை

இரைதமக் காகக் கௌவிப் பறந்தபுள் ளீர்ந்தண் டில்லித்

தரைதனிற் சிதற வீழ்ந்து தங்கிய தோற்ற மாகும்

உரைதரு தோற்ற மின்னும் வேறுவே றுள்ள கேண்மின்.

மரகதத்தின் தோற்றத்தினைக் கேளுங்கள்; வலாசுரன்

பித்தத்தை,  தமக்கு உணவாகக் கௌவிப் பறந்த கலுழன்/ கருடன் ,  டில்லி நாட்டிற் ?????? சிதறலால் வீழ்ந்து தங்கிய (இடங்களில்) தோற்றமாகும்;  இன்னம் வெவ்வேறு உள்ளன கேளுங்கள்.

 PEARL JEWELS OF GODDESS MEENAKSHI OF MADURAI SHIVA TEMPLE.

என் கருத்து

மரகதம் பச்சை நிறக் கல்; பித்த நீரும் அதே நிறம்; ஆகையால் இதை அசுரனின் பித்த நீரில் உண்டானது ன்று பேச்சு வழக்கில் சொல்வதுண்டு. கருடனுடன் சம்மந்தப்படுத்தவும் காரணம் உண்டு; ஆதி காலத்தில் பள்ளத்தாக்குகளில் இருந்த நவரத்தினங்களை எடுப்பதாற்காக மாமிசத் துண்டுகளை மலை உச்சியிலிருந்து வீசி எறிவார்கள்; அதைப் பள்ளத்தாக்கின் அடிப்பகுதிக்குச் சென்று எடுத்துக்கொண்டு கருடன் மேலே பறந்து வரும் அப்போது அதைப் பிடித்தோ கொன்றோ மரகதம் முதலிய கற்களை எடுத்தனர்; இதனால் இதை கருட ரத்தினம் என்பார்கள்

சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லாரும் இதைவிளக்குகிறார் :

     ‘வலனுடைய வயிற்றின் புறத்தைக் கொத்தி விழுங்கிய கருடன்

நகைத்தலானுமிழ, அஃது இமவான் முதலிய பன் மலைகளினும் ஊறிப் பிறத்தலிற் கருடோற்காரம் என்று பெயர் பெற்ற மரகதச் சாதி’ என்று அடியார்க்கு நல்லார் கூறுவர்.

****

மாணிக்கம் விற்ற படலத்தில் ஒவ்வொரு ரத்தினத்தின் தோற்றம் , கிடைக்குமிடம், அவற்றை அணிவதால் ஏற்படும் பலன்களைக் கூறுகிறார் ; பொதுவான செய்தி, ததீசி முனிவரின் எலும் பிலிருந்தும் வலாசுரனின் உடற்பகுதிகளிலிருந்தும் நவரத்தினங்கள் தோன்றின என்பதாகும்; இவை விஞ்ஞானக் கொள்கைகளுக்கு முரணானவை; ஆயினும் நவரத்தினங்களின் வகைகள், குணங்கள் முதலிய செய்திகள் இரத்தின ஆராய்ச்சியாளர்களுக்குப் பயன்படும் செய்திகள். இதை பாடல் வரிசைப்படி வேங்கடசாமி நாட்டார் உரை எழுதியுள்ளார். அவற்றை  அணிவதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதே நமக்குத் பயன்தரும் செய்தி; இதில் வியப்பான செய்தி என்னவென்றால் அட்லாஸ் என்னும் தேசப்பட புஸ்தகம் இல்லாத காலத்தும் அவர் சிங்களம் கோசலம் முதல் துருக்கி ஈரான்/ பாரசீகம் வரை குறிப்பிடுவதாகும் ஆனால் சங்க காலத்துக்கும் முன்னர் வாழ்ந்த காளிதாசனும் பாண்டிய நாடு முதல் பாரசீகம் வரை வருணிக்கிறார் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.    குற்றமில்லாத மணிகளை  அணிவோருக்கு புகழும் செல்வமும் ஆயுளும் வளரும் என்பதே பரஞ்சோதி முனிவர் கூறும் செய்தி;

இதற்கு மேலும் சில உதாரணங்கள் இதோ  :

இந்தமணி பாரியாத் திரகிரியிற்

     கொடுமுடியா யிலங்குந் தெய்வ

மந்தரமால் வரைப்புறஞ்சூழ் மேகலையா

     மயனிந்த மணியி னாலே

அந்தரநா டவனகரு மரசிருப்பு

     மண்டபமு மமைத்தா னிந்தச்

சந்தமணி தரிப்பவரே தரியார்வெந்

     நிடவாகை தரிக்க வல்லார்.

தெய்வத் தச்சன் மயன், இந்த மணியினாலே, தேவேந்திரனது  நகரத்தையும் அவன் அரசு வீற்றிருக்கு மண்டபத்தையும் ஆக்கினான்; இந்த அழகிய TOPAZ புருடராகமணியை (புஷ்பராகம்)  அணிபவரே,பகைவர் புறங்கொடுக்க வெற்றி மாலை தரிக்க வல்லராவர் .

*****

நீலம் SAPHIRE  பற்றிய ஒரு அதிசயச் செய்தி !

நீல ரத்தினம் சிறந்ததா என்று சோதிக்க அதைப் பால் குடத்தில் போடவேண்டும் ; அப்போது பாலின் நிறத்தைவிட நீல நிறம் அதிகமாக இருந்தால் அது மிகச் சிறந்த நீலக்கல் என்கிறார் பரஞ்சோதியாரும் நச்சினார்க்கினியரும் ; மதுரை பாரத்வாஜ கோத்திர பிராமணன் நச்சினார்க்கினியர் உரையில்லாவிடில் இன்று நமக்கு சங்க இலக்கியத்தின் உண்மைப்பொருள் தெரிந்திராது!

இலங்கொளிய விந்நீல மெய்ப்படுப்போர்

     மங்கலஞ்சேர்ந் திருப்பா ரேனை

அலங்குகதிர் நீலத்திற் பெருவிலையா

     யிரப்பத்தி னளவைத் தாகித்

துலங்குவதான் பாற்கடத்தி னூறுகுணச்

     சிறப்படைந்து தோற்றுஞ் சோதி

கலங்குகட லுடவைப்பி லரிதிந்த

     விந்திரன்பேர்க் கரிய நீலம்

ஒளியினையுடைய இந்நீல மணிகளைஅணிகின்றவர்கள் நலங்களெய்தியிருப்பர்;  மற்றை ஒளியினையுடைய மா நீலத்தினும் பதினாயிர மடங்காகிய பெரிய விலையினை உடைய இந்த இந்திர நீலம்,  பால் குடத்தில் இட்டால்,  (பால் நிறத்தைக் கீழ்ப்படுத்தி) நூறு மடங்கு தன் குணம் மேம்பட்டு ஒளி தோன்றச் செய்யும்; (இஃது)

ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த இந்நிலவுலகில் அரியதாகும்!

சீவகசிந்தாமணியிலே “கருமணியம் பாலகத்துப் பதித்தன்ன படிலாய்” என்பதன் குறிப்பாகக் ‘கருமணியைப் பாலிற் பதித்தால் பால்நிறங் கெடுமென்றுணர்க’ என நச்சினார்க்கினியர் கூறியிருப்பது இங்கு

நினைக்கற்பாலது. (73)

  PEARL JEWELS OF GODDESS MEENAKSHI OF MADURAI SHIVA TEMPLE.

*****

தந்தைதன் காமக் கிழத்திய ரீன்ற

     தனயராய்த் தனக்குமுன் னவராய்

முந்தைநா ளரசன் பொன்னறை முரித்து

     முடிமுதற் பொருள்கவர்ந் துட்குஞ்

சிந்தைய ராகி மறுபுலத் தொளித்த

     தெவ்வரைச் சிலர்கொடு விடுப்ப

வந்தவர் கவர்ந்த தனமெலா மீள

     வாங்கினா னீர்ங்கதிர் மருமான்.

நவரத்தின வியாபாரி வடிவில் வந்த சிவபெருமான் அரசனுக்குத் தேவையான நவரத்தினங்களைக் கொடுத்துவிட்டு கோவிலுக்குள் சென்று மறைகிறார் ; பின்னர் மந்திரிகள் அவைகளைக்கொண்டு நவரத்தின மகுடம் செய்து இளம் வயது அபிஷேக பாண்டியனுக்கு பட்டாபிஷேகம் செய்கின்றனர் அவனுக்கு யார் யார் கருவூலத்தைக் கொள்ளையடித்து எங்கே ஒளிந்து கொண்டு இருக்கின்றனர் என்ற துப்புத் தகவலை மக்கள் கொடுக்கின்றனர் ; அவனையும் அவர்களை பிடித்து பழைய ரத்தினங்களை  மீட்டான் என்ற சுபச் செய்தியுடன் பரஞ்சோதி முனிவரும் மாணிக்கம் விற்ற படலத்தை முடிக்கிறார்; இன்று ரத்தின வியாபாரத்தில் ஈடுபடுவோருக்கு இதிலும் சிலப்பதிகார உரையிலும் ஏராளமான தகவல்கள இருக்கின்றன.

*****

எழுகூற்றிருக்கை

ஏழு முதல் ஒன்று வரை எண்களை வைத்துக் கவி பாடுவது எழுகூற்றிருக்கை எனப்படும் இந்த சிறப்பான திருவெழுகூற்றிருக்கை என்ற பாடல் தேர்த் தட்டு போல்

அமைந்துள்ளது. 1 முதல் 7 வரை படிப்படியாக கீழிருந்து மேல் பின்பு மேலிருந்து கீழ் என்று தேர் தட்டு மேலே செல்வதும், கீழே செல்வதுமாக அமைந்த அற்புதமான பாடல். ; இதை சம்பந்தர், திருமங்கை ஆழ்வார், அருணகிரிநாதர் முதலிய பலரும் பயன்படுத்திப் பாடியுள்ளனர் பரஞ்சோதியாரும் பாடியுள்ளார்:

ஓருருவாய் நேர்நின்ற வணிகேசர்

     விடையின்மே லுமையா ளோடும்

ஈருருவாய் முக்கண்ணு நாற்கரமு

     மஞ்சமர (5) ரிறவா வாறு (6)

காருருவா யெழு(7) மிடறுங் காட்டித்தங்

     கோயில்புகக் கண்டா ரின்று

பாருருவாய் நின்றவணி கேசரிவ

     ரெனவேபின் பற்றிப் போவார்.

ஓர் உருவாகி நேரே நின்ற வணிகர் பெருமான், இடபவூர்தியின் மேல் உமைப் பிராட்டியோடும் இரண்டு திருவுருவமாய்,  மூன்று கண்களையும் நான்கு கைகளையும், அஞ்சிய (5) தேவர்கள் இறவாத

வண்ணம், தோன்றச் செய்து,  தமது திருக்கோயிலுட் போதலைக் கண்டவர்கள்,  இன்று பாரின்கண் வணிகர் தலைவர் வடிவினராய் நின்றவர் இவரே என்று, பின்றொடர்ந்து சென்றனர். .

மாணிக்கம் விற்ற படலத்தில் வணிகர் உருவாய் வந்த சிவபெருமான் மறைந்த காட்சி இது!

இச்செய்யுளில் ஒன்று முதல் ஏழு எண்களின் பெயர்

கூறியது எண்ணலங்காரம்; அஞ்சு, ஆறு, ஏழு என்பன ஈண்டு எண்ணுப்

பெயர்களல்லவேனும் சொல்லொப்புமை நோக்கி எண்ணாகக் கொள்ளப்படும்; எழுகூற்றிருக்கை முதலியவற்றிலும் இங்ஙனம் வருதல் காண்க. (85)

–subham—

Tags- எழுகூற்றிருக்கை, முத்துமாலை ,ஆயுள் அதிகரிக்கும், பணம் சேரும், பரஞ்சோதி தகவல், நவரத்தினங்கள் , அரிய செய்திகள் – திருவிளையாடல் புராணம் ,) ஆராய்ச்சிக் கட்டுரை-12

ஞானமயம் வழங்கும் (8-6-2025) உலக இந்து செய்திமடல் (Post.14,611)

Written by London Swaminathan

Post No. 14,611

Date uploaded in London –  9 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல் .

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து  வைஷ்ணவி ஆனந்த்தும்  லதா யோகேஷும்  வாசித்து வழங்கும் செய்தி மடல்.

அனைவருக்கும் வைஷ்ணவி ஆனந்த் வணக்கம்.

இன்று ஞாயிற்றுக்கிழமை ஜூன் எட்டாம் தேதி 2025-ம் ஆண்டு .

(Collected from popular newspapers and edited for broadcast)

முதலில் இந்தியச் செய்திகள்!

குஜராத் : முட்டை, இறைச்சி இல்லாத உலகின் முதல் சைவ நகரம்!

குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள பாலிதானா நகரம் இறைச்சி, முட்டை உட்பட அனைத்து வகையிலான அசைவ உணவுகளைத் தடை செய்து உலகின் முதல் சைவ நகரமாக உருவெடுத்துள்ளது.

2014-ம் ஆண்டு முதல் சமண துறவிகள் தொடர் போராட்டம் மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது அந்த நகரத்தில் அசைவ உணவுகள் முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த முடிவு சமண மதத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகவும், அவர்களின் மத நம்பிக்கைக்கு மரியாதை அளிப்பதாகவும் அமைந்திருக்கிறது.

*****

 என் வாழ்நாளின் சிறந்த அனுபவம் அயோத்தி ராமர் கோவில் பயணம்; எலான் மஸ்கின் தந்தை நெகிழ்ச்சி

அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்றது என் வாழ்நாளின் சிறந்த அனுபவங்களில் ஒன்று,” என ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்கின் தந்தை எரோல் மஸ்க் கூறினார்.

எலான் மஸ்கின் தந்தை எரோல் மஸ்க், இந்தியா வந்துள்ளார். அவர் இன்று உ.பி., மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவரது மகள் அலெக்ஸாண்ட்ரா மஸ்க் உடன் வந்திருந்தார். அருகிலுள்ள ஹனுமன்கர்ஹி கோவிலுக்கும் அவர்கள் சென்றனர்.

ராமர் கோவில் பயணம் குறித்து எரோல் மஸ்க் கூறியதாவது:

தனது வாழ்நாளின் மிகச் சிறந்த அனுபவங்களில் ஒன்று, இந்தியா அருமையான, அற்புதமான நாடு. இந்திய கலாசாரம், விருந்தோம்பல்,அன்பு, கருணை நிறைந்த மக்கள் கொண்ட நாடாக உள்ளது. இந்தியா ஒரு அற்புதமான இடம். முடிந்தவரை பலர் இந்தியாவுக்கு வர வேண்டும்,

எங்களிடம் சில வணிக திட்டங்கள் உள்ளன, அவை பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இந்தியா-அமெரிக்க உறவுகள் மிகவும் நன்றாக இருக்கிறது. இவ்வாறு எரோல் மஸ்க் கூறினார்.

*****

அமர்நாத் யாத்திரை பாதுகாப்புக்கு மத்திய அரசு ஏற்பாடு

38 நாட்கள் நடக்கும் அமர்நாத் யாத்திரை துவங்க உள்ளதை தொடர்ந்து 581 கம்பெனி மத்திய ஆயுதப்படையினர், jammers, ஜாமர்கள் மற்றும் drones.ட்ரோன்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஜம்மு – காஷ்மீரில், கடல் மட்டத்தில் இருந்து 12,755 அடி உயரத்தில் அமைந்துள்ளது அமர்நாத் குகை கோவில். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை,- ஆகஸ்ட் மாதங்களில் இங்கு புனித யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. அப்போது மட்டுமே இந்த குகை கோவில் திறந்திருக்கும். இந்த ஆண்டு ஜூலை 3ம் தேதி துவங்கி ஆக., 9 வரை 38 நாட்கள் மட்டுமே அமர்நாத் யாத்திரை நடைபெற உள்ளது.கடந்த ஆண்டு 52 நாட்கள் யாத்திரை நடந்த நிலையில், இந்தாண்டு 38 நாட்கள் மட்டுமே நடக்க உள்ளது.

காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 22 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்தாண்டு அமர்நாத் யாத்திரைக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் காஷ்மீர் சென்று இருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கவர்னர், முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருந்தார்.

இந்தாண்டு பாதுகாப்பு பணியில் 581 Central Armed Police Forces (CAPF) companies மத்திய ஆயுதப்படையின் 581 கம்பெனி வீரர்கள், ஜாமர்கள் மற்றும் ட்ரோன்களை பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் கூறுகையில், இந்தாண்டு யாத்ரீகர்கள் பாதுகாப்பாக செல்ல ஏதுவாக அவர்கள் செல்லும் பாதையை நோக்கி வரும் சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் தற்காலிகமாக போக்குவரத்து தடை செய்யப்படும். வெடிகுண்டு தடுப்பு பிரிவினர், வெடிகுண்டுகளை கண்டுபிடித்து செயலிழக்க செய்வார்கள். சிறப்பு பயிற்சி பெற்ற கே 9 பிரிவினரும் மற்றும் வான்வெளியில் கண்காணிப்பில் ட்ரோன்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன. பஹல்காம் மற்றும் அமர்நாத் குகை சொல்லும் வழியில் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.

முதல்முறையாக யாத்ரீகர்கள் செல்லும் வாகனம் வழியில் jammers ஜாமர்கள் பொருத்தப்படும். இந்த வாகனத்தை மத்திய ஆயுதப்படையினர் பாதுகாப்புடன் அழைத்துச் செல்வார்கள். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

********* 

திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம் தேதி அறிவிப்பு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் குடமுழுக்கு விழா,  வரும் ஜூலை மாதம் 7-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி12 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

*****

கோவில் விழாக்களில் ஆடல் பாடல்- கோர்ட் உத்தரவு  

கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் மதுரைக் கிளைக்கு உட்பட்ட 14 மாவட்டங்களில் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக் கோரி 7-க்கும் மேற்பட்ட மனுக்கள் இன்று உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த மனுக்கள் நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர்கள், கடந்த பல ஆண்டுகளாக ஆடல், பாடல் நிகழ்ச்சி திருவிழாவின் போது நடத்தப்பட்டு வருகிறது. சட்டம், ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்ட காரணங்களை காட்டி அனுமதி மறுக்கின்றனர். அனுமதி வழங்க வேண்டும் எனக் கூறினர்.

இதனைக்கேட்ட நீதிபதி,

சமூக ஊடக காலம் இது. இந்த சூழலில், ஆடல், பாடல், கலை நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி மனுத் தாக்கல் செய்து உள்ளீர்கள். இந்த ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அதிக பணம் செலவு செய்யபடுகிறது. எனவே, ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்படுகிறது.

மனுதாரர்கள் ஆடல், பாடல் நடைபெறும் உள்ளாட்சி அமைப்புகளின் செயலாளரிடம் ரூ.25 ஆயிரம் மனுதாரர் செலுத்த வேண்டும். இந்த 25 ஆயிரம் கொண்டு, அந்த கிராமத்தில் நீர் நிலைகளை தூர்வார வேண்டும். இதனால், உங்கள் கிராமம் செழிப்பாக இருக்கும் எனக்கூறி மனுக்களுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

****

தொன்மை வாய்ந்த கோவிலை தெருவில் விட்டது அரசு: பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு 

தொன்மை வாய்ந்த திருச்செந்துறை கோவிலை தெருவில் விட்டது அரசு என்று ஓய்வு பெற்ற ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் குற்றம்சாட்டி உள்ளார்.

திருச்சியில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: திருச்சி ஜீயபுரம் பகுதியில் உள்ள திருச்செந்துறை கோவில், எப்படிப்பட்ட கோவில் என்பது குறித்து திருச்சி மக்களுக்கு தெரியாத தகவல்கள் உள்ளது. இக்கோவிலை இன்று காலை 9 மணிக்கு திறந்தனர். நேற்று 7 20 மணிக்கு மூடி உள்ளனர். எந்நேரமும் எரிய வேண்டிய விளக்கு எரியவில்லை. காலை 9:15 மணிக்கு தான் முதல் விளக்கை ஏற்றினர்.

சோழ மன்னன் ஆதித்ய தேவரின் மகன் பராந்தகன். இவரது பெயர் சோழப்பெருமானடிகள். இவரது மகன் அரிகுலகேசரியார். இவரது தேவியார்தான் கோவிலை கட்டி உள்ளார். 

மங்கள வாத்தியம் இசைப்பவர்கள் வாழ வேண்டும் என்பவருக்காக, பல நூறு ஆண்டுகளுக்கு எந்நேரமும் மங்கள வாத்தியம் பாட வேண்டும் என்பதற்காக தங்கம் கொடுத்து உள்ளார். அதனை ஈசான மங்களம் மகாசபைக்கு கொடுத்தார். அதில் நிலத்தை வாங்கி, இந்த குடும்பத்திற்கு மங்கள வாத்தியம் இசைப்பவர்களுக்கு வழங்கி உள்ளனர். அவர்கள் கருவறைக்கு அருகே நின்று வாசிப்பார்கள்.

ஆனால், 20 ஆண்டுக்கு முன்பு சம்பளம் கொடுப்பதை நிறுத்திவிட்டு, அப்படிப்பட்ட நிகழ்ச்சி கோவிலில் இல்லாமல், தொன்மையான கோவிலை அறநிலையத்துறை தெருவில் விட்டுவிட்டது. இவ்வாறு பொன் மாணிக்கவேல் கூறினார். 

*****

கோயில் திருவிழா தொடர்பான சர்ச்சை பேச்சு – அமைச்சர் மனோ தங்கராஜுக்கு அண்ணாமலை கண்டனம்!

பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சர்ச்சையாக பேசிய அமைச்சர் மனோ தங்கராஜுக்கு பாரதீய ஜனதா கட்சியின்  தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், பெங்களூரு நிகழ்வு பற்றிய கேள்விக்கு, மக்கள் கோயில் திருவிழாக்களுக்கு செல்லக்கூடாது என மனோ தங்கராஜ் பதில் அளித்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்

கோவில் சொத்துகளை சுரண்டும் கூட்டம், மக்கள் கோயில் திருவிழாவுக்கு செல்வது நாகரிகம் இல்லை என்று கூறுவதா? என கேள்வி எழுப்பியுள்ள அவர்,

தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடும் நிலையில் அமைச்சர் மனோ தங்கராஜ் பகுத்தறிவு பேசுவதாக விமர்சித்துள்ளார்.

இண்டி கூட்டணிக் கட்சியின் நிர்வாகத் தோல்வியை மறைக்க இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள அண்ணாமலை, கொத்தடிமைகளைக் கூட்டி கூட்டம் போடும் திமுக தலைவரிடம் இவ்வாறு கூறுவாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

****

கன்னியாகுமரியில் சுற்றுலா படகு கட்டணம் உயர்வு!

கன்னியாகுமரியில் சுற்றுலாப் படகு சேவையின் கட்டணத்தை உயர்த்தி பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

கோடை விடுமுறை சீசன் முடிவடைந்துள்ள நிலையில் சுற்றுலா படகு சேவையின் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம்  வெளியிட்ட அறிவிப்பில் 75 ரூபாயாக இருந்த  கட்டணம், 100 ரூபாயாகவும், மாணவர்களுக்கு 30 ரூபாயாக இருந்த கட்டணம் 40 ரூபாயாகவும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு

கடந்த சில தினங்களுக்கு முன் அமலுக்கு வந்துவிட்டது. நாளை முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளது.

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆண்டு முழுவதும் இங்கு சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் ஏப்ரல் மற்றும் மே மாதம் கோடைகால சீசனாக கருதப்படுகிறது. இந்த சீசனில் தற்போது குடும்பம், குடும்பமாக சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

கன்னியாகுமரி சுவாமி விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு சேவையை நடத்தி வருகிறது. தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சேவை வழங்கப்பட்டு வருகிறது.

****

சுஹாஸ் ஷெட்டி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

மங்களூரு பாஜ்பே அருகே இந்து ஆர்வலர் சுஹாஸ் ஷெட்டி கொலையில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியை சி.சி.பி போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும், பன்ட்வாலில் நடந்த அப்துல் ரஹிமான் கொலை வழக்கில் மேலும் இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளனர்.

சுஹாஸ் ஷெட்டி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி பாட்டே சாந்திகுட்டேவைச் சேர்ந்த அப்துல் ரசாக் (59). முக்கிய குற்றவாளிகளுடன் சேர்ந்து கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாகவும், அவர்கள் தப்பிக்க உதவியதாகவும் அப்துல் ரசாக் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான முசாமிலின் தந்தை அப்துல் ரசாக் ஆவார். அப்துல் ரசாக், மகன் முசாமில் மற்றும் மருமகன் நௌஷாத் ஆகியோருடன் சேர்ந்து சுஹாஸ் ஷெட்டியைக் கொல்ல சதி செய்ததாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், சுஹாஸ் ஷெட்டி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

மே 1 ஆம் தேதி இரவு, மங்களூர் நகரின் பாஜே அருகே இந்து ஆர்வலர் சுஹாஸ் ஷெட்டி வாளால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்..

**** 

பத்மநாபசுவாமி கோயிலில் 270 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம்!

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் 270 ஆண்டுகளுக்குப் பின் மகா கும்பாபிஷேகம் இன்று  நடைபெற்றது

இன்று ஜூன் 8-ம் தேதி பத்மநாபசுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்து முடிந்தது

மிகப் பிரசித்திபெற்ற பத்மநாபசுவாமி கோயிலில் கடந்த 2017-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் நியமித்த நிபுணர் குழு அறிவுறுத்தலின்படி, புனரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன.

பின் கொரோனா தொற்று பரவல் காரணமாக முடங்கிய புனரமைப்பு பணிகள், மீண்டும் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கி நடைபெற்று அண்மையில் முடிவுற்றன. விஷ்ணுவுக்குரிய 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள்.

புதிய விஷ்வக்சேனன் சிலை பிரதிஷ்டை, கோவில் வளாகத்தில் அமைந்துள்ள திருவம்பாடி ஸ்ரீகிருஷ்ணர் சன்னிதியில் அஷ்டபந்த கலசம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் கும்பாபிஷேக நாளில் நடந்தது.

****

கடைசியாக ஒரு சுவையான வெளிநாட்டுச் செய்தி

விண்கலத்தில் செல்லும் தமிழ்சம்ஸ்க்ருத அன்னப்பறவை! 

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா ஒரு அன்னப் பறவையின் பொம்மையை விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்போகிறார் . அவர் சொன்ன காரணம் ஏற்கனவே தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் உள்ளது!

ஜூன் பத்தாம் தேதி அமெரிக்காவின் விண்வெளி ஏவுதளத்திலிருந்து ஆக்ஸ்யம் மிஷன்-4 விண்கலம், வானத்தில் பறக்கப்போகிறது. அதன் கேப்டன் சுபான்ஷு சுக்லா. அவர் 140 கோடி இந்தியர்களின் கனவை நனவாக்கப்போகிறார் இதற்கு முன்னர் ராகேஷ் சர்மா விண்கலத்தில் சென்றதை நாம் அறிவோம் . ஆனால் இவர் 14 நாட்கள் விண்கலத்தில் தங்கி புதிய சாதனை செய்யப்போகிறார் 

தன்னுடைய பயணம் வெற்றியடைய இந்தியர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார் .

அமெரிக்காவின் ப்ளோரிடா மாநில விண்கல  ஏவுதளத்திலிருந்து அவர் பேசினார்

நாம் நட்சத்திரங்களைக்கூட அடைய முடியும் ஜெய் ஹிந்த் என்று அவர் கூறினார் . நாங்கள் 14 நாட்களில் பல சாதனைகளை செய்யப்போகிறோம் என்றார்

இந்தியாவின் தேசீய வடிவமைப்புக் கழகம் செய்துள்ள பல பரிசுப் பொருட்களை சுக்லா, விண்வெளிக்கு கொண்டு செல்லப்போகிறார். அதில் ஒன்று அன்னப் பறவையின் பொம்மை . ஏன் அன்னப்பறவையின் பொம்மையை கொண்டு செல்கிறீர்கள்? என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில்:

“அன்னப்பறவை மத ரீதியில் முக்கியம் வாய்ந்தது. பாலையும்,  தண்ணீரையும் பிரித்து பாலினை மட்டும் சாப்பிடும் அபூர்வ சக்தி இதற்குண்டு என்று நம்புகிறோம். இதன் பொருள் தூய்மை, விவேகம், அருள் ஆகியவற்றை நாம் பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதாகும் அறிவு விஷயத்தில் இது சம நிலையை உண்டாக உதவுகிறது இது எனக்குப் பிடித்த கருத்து . எனக்கு இப்பொழுது முழு உத்வேகம் வந்துவிட்டது ; பறக்கத் தயாராகி விட்டோம்” .

“நான் கொண்டு செல்லும் அன்னப்பறவை, நாங்கள் எடையற்ற தன்மையை அடைந்து விட்டோமா என்பதைக் காட்டும் அடையாளம்” 

மாம் பழ ரசம் , கேரட் ஹல்வா , பாசிப்பயறு ஹல்வா ஆகியவற்றையும் கொண்டு செல்வேன். இதை மற்ற வீரகளுடன் பகிர்ந்து கொள்வேன் என்றும் சொன்னார்

இவருடன் செல்லும் குழுவினர் இரண்டு வாரங்களுக்கு விண்கலத்தில் தங்கி பல ஆராய்ச்சிகளை செய்யப்போகிறார்கள்.

*****

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து  வைஷ்ணவி ஆனந்த்தும்  லதா யோகேஷும்  வாசித்த செய்தி மடல் இது.

அடுத்த ஒளிபரப்பு

ஜூன்  மாதம் 15–ம்  தேதி 

லண்டன் நேரம் பகல் ஒரு  மணிக்கும்,

இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .

வணக்கம்.

—SUBHAM—-

Tags- Gnanamayam news, 862025, broadcast

ஆலயம் அறிவோம்! வட திருமுல்லை வாயில் (Post No14,610)

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan 

Post No. 14, 610

Date uploaded in London –9 June 2025 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

8-6-25 ஞானமயம் ஒளிபரப்பில் ஒளிபரப்பான உரை!

ஆலயம் அறிவோம்!

வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்

சொல்லரும் புகழான் தொண்டைமான் களிற்றைச்

    சூழ் கொடி முல்லையாற் கட்டிட்டு

எல்லை இல் இன்பம் அவன் பெற வெளிப்பட்டு

    அருளிய இறைவனே, என்றும்

நல்லவர் பரவும் திருமுல்லைவாயில்

    நாதனேநரைவிடை ஏறீ

பல்கலைப் பொருளே படு துயர் களையாய்

   பாசுபதா பரஞ்சுடரே!

                 – சுந்தரர் திருவடி போற்றி

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது தமிழ்நாட்டில் தொண்டைமண்டலத்தில்அமைந்துள்ள வடதிருமுல்லைவாயில் திருத்தலமாகும்.

சென்னை – ஆவடி சாலையில் சென்னையிலிருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் ஆவடியை அடுத்து அமைந்துள்ளது இது.

தஞ்சை மாவட்டத்தில் தென் திருமுல்லை வாயில் உள்ளதால் இது வடதிருமுல்லைவாயில் என்று அழைக்கப்படுகிறது.

இறைவர் :  மாசிலாமணீஸ்வரர், நிர்மலமணீஸ்வரர், பாசுபதேஸ்வரர்

இறைவியார் : கொடியிடை நாயகி அம்மன்

தல விருட்சம் : முல்லை (இது வெளிச்சுற்றில் நந்தியின் அருகில் உள்ளது)

தீர்த்தம் : கல்யாண தீர்த்தம்

பண்டைய காலத்தில் கிருத யுகத்தில் இரத்தினபுரமாகவும் திரேதா யுகத்தில் வில்வ வனமாகவும், துவாபர யுகத்தில் சண்பக வனமாகவும் விளங்கி இப்போது கலி யுகத்தில் முல்லைவனமாகத் திகழ ஆரம்பித்தது.

இத்தலத்தைப் பற்றிய வரலாறு ஒன்று உண்டு.

முன்பொரு காலத்தில் காஞ்சியைத் தலைநகரமாகக் கொண்டு தொண்டைமான் அரசாட்சி புரிந்து வந்தான். அதே சமயம் புழல்கோட்டையிலிருந்து கொண்டு ஓணன் மற்றும் காந்தன் என்னும் அசுரர்கள் எருக்கத் தூண்களும் வெங்கலக் கதவும் பவழத் தூண்களும் கொண்டு பைரவ உபாசனையுடன் அரசாண்டு வந்தனர்.  இவர்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட கோவில் ஓணகாந்தந்தளி என்ற தலமாகும்.

இவர்களைக் காண தொண்டைமான் வந்த போது  கோழம்பேடு என்னும் இடத்தில் இரவு நேரத்தில் தங்கி உறங்க ஆரம்பித்தான். அப்போது வெங்கல மணியோசை கேட்டது. அங்கு ஒரு சிவத்தலம் இருக்க வேண்டும் என்று எண்ணிய அவன் மறு நாள் காலை யானை மீது ஏறி வந்தான். அப்போது அசுரர்களான ஓணனும் காந்தனும் அவனை எதிர்த்தனர். தனியாக வந்த தொண்டைமான் தன் சேனைகளுடன் வருவதற்காகத் திரும்பினான்.

அப்போது அவன் யானையின் கால்கள்  முல்லைப்புதர் ஒன்றில் மாட்டிக் கொள்ள மன்னன் தன் உடைவாளால் முல்லைப்புதரை வெட்டினான். அங்கிருந்து இரத்தம் பீறிட்டது. உடனே கீழே இறங்கிப் பார்த்த தொண்டைமான் அங்கு ஒரு சிவலிங்கம் இருக்கக் கண்டான்.

திகைத்துப் போன தொண்டைமான் தன்னை தனது வாளால் அரிந்து கொள்ள முயன்றான். அப்போது இறைவன் அவனுக்குக் காட்சி தந்து அருளினான். “ மன்னா! நான் வெட்டுப்பட்டாலும் பரவாயில்லை. நான் மாசு இல்லா மணியே தான். வருத்தப்படாதே. உனக்குத் துணையாக நந்தியை அனுப்புகிறேன். வெற்றி பெற்று வருக” என்று இறைவன் அருளவே நந்தியுடன் தொண்டைமான் கிளம்பினான்.

அவன் நந்தியுடன் வருவதை அறிந்த ஓணனும் காந்தனும் அவனிடம் சரணடைந்தனர். அவர்களிடமிருந்து  அந்த மன்னன் இரு எருக்கத்தூண்களை எடுத்து வந்தான். அந்தத் தூண்களே இன்றும் சுவாமி சந்நிதியின் முன்னால் உள்ளன. 

வெங்கலக் கதவும் பவழத் தூண்களும் திருவொற்றியூரில் வைக்கப்பட்டதாகவும் காலைப் போக்கில் அவை வெள்ளத்தின் வசப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இங்குள்ள நந்தி இதன் காரணமாக கிழக்கு நோக்கி உள்ளது. ஐந்து நிலைகளை உடைய ராஜ கோபுரம் தெற்கு பார்த்து உள்ளது. அருகில் தீரத்த குளம் உள்ளது.

ராஜகோபுரத்தின் எதிரே சந்நிதி வீதியில் பதினாறு கால் மண்டபமும் அருகில் வசந்த மண்டபமும் உள்ளன.

ராஜகோபுர வாயில் துவாரபாலகர்கள் உள்ளனர். நுழைந்தவுடன் எதிரே பிரசன்ன விநாயகரைத் தரிசிக்கலாம். அவருக்குப் பின்னால் மதில் மீது தல வரலாற்றைச் சுட்டிக் காட்டும் யானை மீதிருந்து மன்னன் முல்லைக் கொடியை வெட்டுவது, சிவலிங்கம், மன்னன் தன் கழுத்தை அரிவது, இறைவன் காட்சி தருவது ஆகிய சிற்பங்கள் சுதையால் அமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

கோவிலை வலமாக வரும்போது கல்யாண மண்டபம் உள்ளது. மண்டபத்தினுள் அம்பாள் சந்நிதியும், சோமாஸ்கந்தர் சந்நிதியும், சுப்ரமண்யர் சந்நிதியும் உள்ளன,  இங்கு முருகபிரான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது இரு தேவியருடன் வடக்கு வெளிபிரகாரத்தில் எழுந்தருளியுள்ளார்.

வெளி பிரகாரத்தில் வில்வ மரம் உள்ளது. பைரவர் சந்நிதியும் உள்ளது.

ஸ்வயம்பு லிங்கம் உயரமாக உள்ளது. லிங்கம் மேற்புறத்தில் வெட்டுடன் காணப்படுகிறது.

எப்போதும் சந்தனம் சார்த்தப்பட்டிருப்பதால் அபிஷேகம் சிரசில் கிடையாது. அபிஷேகம் சதுரபீட ஆவுடையாருக்கு மட்டுமே உண்டு. அதுவும் வெந்நீரால் இந்த அபிஷேகம் நடைபெறும்.

 வருடத்திற்கு ஒரு முறை சித்திரை மாதம் சதய நட்சத்திர தினத்தன்று சந்தனக்காப்பு களையப்பட்டு மீண்டும் சார்த்தப்படுகிறது.

 மூலவர் முன்னால் இரு எருக்கந்தூண்கள் உள்ளன. இவற்றிற்கு பூண்கள் இடப்பட்டுள்ளன.

விமானம் கஜப்பிரஷ்ட அமைப்புடையதாகும்.

சுவாமிக்கு முன்பு வெளியில் தொண்டைமான், நீலகண்ட சிவாசாரியார், மகாவிஷ்ணு, பூதேவி, ஶ்ரீ தேவி திருவுருவங்கள் உள்ளன.

இன்னும் பைரவர், அருணகிரி, க்ஷிப்ர கணபதி தட்சிணாமூர்த்தி உள்ளிட்டவர்களையும் காணலாம்.

சுந்தரர் இங்கு ஒரு பதிகம் அருளியுள்ள்ளார். ‘அடியேன் படு துயர் களையாய்’ என்று நெஞ்சை உருக்கும் வண்ணம் அது அமைந்துள்ள ஒன்றாகும்.

அருட்பிரகாச வள்ளலார், இத்தலத்தில் பாடல்களைப் பாடி அருளியுள்ளார். அருணகிரிநாதர் இத்தலத்தில் மூன்று திருப்புகழ் பாடல்களைப் பாடி அருளியுள்ளனர்.

மாசிலாமணீஸ்வரரின் கர்பக்ருஹத்தைச் சுற்றி 23 கல்வெட்டுகள் உள்ளன.

 காலம் காலமாக லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அன்னை கொடியிடைநாயகி அம்மையும் மாசிலாமணீஸ்வரரும்\ அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். நன்றி. வணக்கம்.

**

வாஸ்து – அடிப்படை விதிகளைக் கவனியுங்கள்! (Post No.14,609)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,609

Date uploaded in London – –9 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

வாஸ்து – அடிப்படை விதிகளைக் கவனியுங்கள்!

ச. நாகராஜன்

ஏராளமான நண்பர்கள் புது வீடு குடிபோகும் போதோ அல்லது புது வீடு ஒன்றை விலைக்கு வாங்கும் போதோ அடிப்படை வாஸ்து விதிகள் தெரியாமல் திண்டாடுகிறார்கள்.

அடிப்படையான முக்கிய விதிகள் இதோ:

வீடு கிழக்கு திசையையோ அல்லது வடகிழக்கு திசையை நோக்கியோ அமைந்திருப்பது நல்லது. ஒருபோதும் தென்கிழக்கு திசையைப் பார்த்து வீடு இருக்கக் கூடாது. 

படுக்கை அறை தென்மேற்கில் அமைந்திருக்க வேண்டும். தம்பதிகள் உறங்கும் படுக்கை அறை மேற்கிலோ அல்லது வடக்கிலோ மட்டுமே அமைந்திருக்கலாம். 

சமையலறை தென்கிழக்கில் மட்டுமே இருக்க வேண்டும்.

சாப்பிடும் அறை சமையலறையோடு ஒட்டி இருத்தல் வேண்டும். இது மேற்கில் இருக்கலாம்.

சமையலறையில் அமைக்கப்படும் சிங்க் வடகிழக்கு மூலையில் இருக்க வேண்டும். 

பூஜை அறை வடகிழக்கில் இருக்க வேண்டும். தென்கிழக்கிலோ அல்லது தென்மேற்கிலோ இருத்தல் கூடாது. 

பணியாளர்களின் அறை வடமேற்கில் இருக்க வேண்டும். 

கிணறானது வடகிழக்கு திசையில் இருக்க வேண்டும். இது செல்வ வளத்தைத் தரும். 

படுக்கை அறையில் அட்டாச்ட் பாத்ரூம் தெற்கிலோ அல்லது வடக்கிலோ இருக்கலாம். கம்மோட் தெற்கு அல்லது வடக்கு திசையைப் பார்த்து இருக்க வேண்டும். ஒரு போதும் கிழக்கு நோக்கியோ அல்லது மேற்கு நோக்கியோ பார்த்து இருக்கக்கூடாது.

 எந்த ஒரு அறையிலும் வடகிழக்கு மூலையில் குப்பை கூளங்கள், செருப்பு, விளக்குமாறு உள்ளிட்டவை இருக்கக் கூடாது. இது செல்வ வளத்தைப் பாதிக்கும். 

குளியலறை கிழக்கில் இருப்பது சிறந்தது. அடுத்த சிறப்பான இடம் வடக்கு ஆகும்.

 பணம், நகைகள் லாக்கர் அல்லது அலமாரி வடக்குச் சுவரில் தெற்கு நோக்கிப் பார்த்திருக்க வைக்கப்பட வேண்டும். ஆக இது வடக்கு நோக்கி செயல்பட்டுக் கொண்டே இருக்கும். குபேரனின் திசை வடக்கு என்பதை நினைவில் கொள்ளலாம்.

 ஒரு வீட்டில் மொத்த கதவுகளின் எண்ணிக்கை இரட்டைப்படை எண்ணில் இருக்க வேண்டும்.

 ஒரு வீட்டில் மொத்த ஜன்னல்களின் எண்ணிக்கை மூன்று அல்லது ஆறு அல்லது பதினொன்று ஆகிய எண்ணிக்கையில் இருக்கக் கூடாது.

 ஒரு போதும் கண்ணாடியை சமையல் அறையில் (குறிப்பாக ஸ்டவ் அருகே) வைக்கக் கூடாது.

 கண்ணாடி டைனிங் டேபிள் அருகே அதைப் பார்த்து இருந்தால் உணவு தடையின்றி சுவையாகக் கிடைக்கும்.

 படுக்கை அறையில் நிலைக் கண்ணாடி இருக்கவே கூடாது. தம்பதிகளிடையே சச்சரவை இது ஏற்படுத்தும்.

தவறி அமைக்கப்பட்டிருந்தால் அதை திரை போட்டு மூடி விட வேண்டும்.

 கூடத்தில் மையத்தில் ஒரு சிறிய பகுதி தூய்மையாக எந்த வித நாற்காலி, மேஜை இதர பொருள்கள் வைக்காமல் இருக்க வேண்டும். பிரம்மஸ்தலம் என்று அழைக்கப்படும் இந்த இடத்தில் பொதுவாக அனைத்து வீடுகளிலும் சோபா, நாற்காலி உள்ளிட்டவை வைக்கப்படுகின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும். ஹாலின் மூலைகளிலிருந்து ஒரு நூலைக் கட்டிப் பார்த்தால் மையப்புள்ளியைக் கண்டுபிடிக்கலாம். இந்தப் பகுதியில் – பிரம்ம ஸ்தலத்தில் (ஒரு சிறிய அளவு) காலியாக இருக்க வேண்டும்.

கூடத்தில் (ஹாலில்) வடகிழக்கு மூலையில் ஒரு சிறிய பாத்திரத்தில் தினமும் காலையில் நீரை நிரப்பி வைக்க வேண்டும். அதை மறுநாள் கீழே கொட்டி விட்டு தூய புதிய நீரை நிரப்பி வைக்க வேண்டும்.

செல்வ வளம் சேரச் சேர பன்னீர், புஷ்பங்கள் ஆகியவற்றை நீரில் போட்டு இன்னும் அதன் சக்தியை அதிகரித்து வளத்தைக் கூட்டலாம்.

 இன்னும் ஏராளமான அதிக செலவில்லாத ஏராளமான அம்சங்களை வீட்டில் சேர்த்து அனைத்து திசைகளையும் நமது வளத்தைக் கூட்ட சாதகமாக்கிக் கொள்ளலாம்.

 இவை அனைத்தும் பழைய காலத்தில் சாதாரணமாகப் பின்பற்றப்பட்டு வந்தவை. இப்போது கட்டுரை மூலம் தெரிவிக்கும் நிலைக்கு வந்து விட்டோம்.

வாஸ்து பார்ப்போம்; வளத்தைச் சேர்ப்போம்.

லண்டன் தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி862025 ( Post No.14,608)

Written by London Swaminathan

Post No. 14,608

Date uploaded in London –  8 JUNE 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

பம்”– என்று முடியும் தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடியுங்கள்!

1. பல பூக்களைக் கொண்டு தொடுத்த மாலை அல்லது பூச்சரம்;

 2. – உண்மை உருவம் தோற்றம்;

 3.—விளக்குமாறு;

 4. – தங்கத்தில் ஒரு வகை;

5. துவக்கம், தொடக்கம்;

6. பகட்டு ; தற்பெருமை;

7.-கொவ்வை, சம்ஸ்க்ருதத்தில் பிம்பா

8. — திருமுறையில் காஞ்சிபுரத்தை கச்சி…….. என்பர்.

1.கதம்பம் , 2. ஸ்வரூபம், 3.துடைப்பம், 4.ஜாதரூபம், 5. ஆரம்பம் 6.இடம்பம் 7.பிரம்பம் 8. ஏகம்பம்

1.கதம்பம்- பல பூக்களைக் கொண்டு தொடுத்த மாலை அல்லது  பூச்சரம்  , 2. ஸ்வரூபம்- உண்மை  உருவம் தோற்றம், , 3.துடைப்பம்– விளக்குமாறு , 4.ஜாதரூபம்- தங்கத்தில் ஒரு வகை , 5. ஆரம்பம்- துவக்கம், தொடக்கம்  6.இடம்பம்- பகட்டு ; தற்பெருமை 7.பிரம்பம்-கொவ்வை சம்ஸ்க்ருதத்தில் பிம்பா  8. ஏகம்பம் —  திருமுறையில் காஞ்சிபுரத்தை கச்சி ஏகம்பம் என்பர்.

—subham—

Tags- லண்டன், தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி,862025

Pictures of 2500 Indian Stamps!- Part 53 (Post No.14,607)

Written by London Swaminathan

Post No. 14,607

Date uploaded in London –  8 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

PART 53
Stamps posted today include YEAR 1997, YEAR 1998, STAMPS,

Pictures of 2500 Indian Stamps, PART 53, 

MINT (NOT USED)  STAMPS; PREVIOUSLY I POSTED USED STAMPS.

SHYAMLAL GUPT, V K KRISHNA MENON, SANT KAVI SUNDERDAS, SWAMI BRAHMANAND, WORLD PHILTELIC EXHIBITION, FOUR HERBS, GS DHILLON

MAHATMA GANDHI FOUR STAMPS, KHALSA, HINDU COLLEGE DELHI, TRIBAL WOMEN,

ARUNA ASAF ALI, SAVITRIBAI  PHULE, DR ZAHIR HUSSAIN, M A KHAN, SHIVPUJAN SAHAI, VIJAYARAGAVACHARIAR, LOKANAYAK OMEO KUMAR DAS,  BHAGAWAN GOPINATH JI, SRI RAMANA MAHARISHI, GODREJ CENTENARY, SARDAR VEDARATNAM, N G GORAY, GOSTHA PAUL, FOOT BALL STAMP,  MA SAHIB, 

NATIONAL SAVINGS, HUMAN RIGHTS DECLARATION,  JAL COOPER, MOTHER TERESA, WILLIAM JONES, INDPEX97, FORTS, PARIJATA TREE, INS DELHI SHIP, 

–subham—

Tags– 
Stamps posted today include YEAR 1997, YEAR 1998 STAMPS,

Pictures of 2500 Indian Stamps, PART 53,

ரத்தினக் கற்களை அணிந்தால் செல்வம் பெருகும் -பரஞ்சோதி சொல்கிறார்-11 (Post.14,606)

Written by London Swaminathan

Post No. 14,606

Date uploaded in London –  8 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

நவரத்தினங்கள் பற்றிய அரிய செய்திகள் -11

ரத்தினக் கற்களை அணிந்தால் செல்வம் பெருகும் ; பேய்கள் ஓடிவிடும் -பரஞ்சோதி .

திருவிளையாடல் புராணம் ( தி.வி.பு.) ஆராய்ச்சிக் கட்டுரை-11

பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணத்தில் (தி.வி.பு.) ரத்தினக் கற்களை அணிந்தால்  என்ன என்ன பலன்கள் கிடைக்கும் என்ற அதிசயங்களைக் கூறுகிறார்; எந்தந்த கிழமையில் என்ன ரத்தினக் கற்களை ஆராய்ந்து பார்த்து மதிப்பிட வேண்டும்

என்பதையும் பட்டியல் இடுகிறார் ! நவரத்தினங்களின் குணங்கள், ஜாதிகள் என்ன என்பதையும் விளக்குகிறார்

இதை அவர் மாணிக்கம் விற்ற படலத்தில் சொல்கிறார்.

குருவிந்தந் தரிப்பவர்பார் முழுதுமொரு

     குடைநிழலிற் குளிப்ப வாண்டு

திருவிந்தை யுடனிருப்பர் சௌகந்தி

     கந்தரிப்போர் செல்வங் கீர்த்தி

மருவிந்தப் பயனடைவர் கோவாங்கந்

     தரிப்போர்தம் மனையியற் பாலும்

பெருவிந்த மெனச்சாலி முதற்பண்ட

     முடன்செல்வப் பெருக்கு முண்டாம்.

கீழே சொல்லப்படும் குருவிந்தம் செளகந்திகம், கோவாங்கம் என்பன மாணிக்கத்தின் RUBY வகைகள்;  இவைகள் என்ன பூக்களின் நிறத்தில் இருக்கும் என்றும் விளக்கியிருக்கிறார் பரஞ்சோதி முனிவர். (இதைக் கட்டுரையின் பின்பகுதியில் காண்க  )

குருவிந்தத்தினை அணிகின்றவர் நிலவுலக முற்றும்

தமது ஒரு குடை நிழலின் கீழ்த் தங்க அரசாண்டு,

திருமகளோடும் வீரமகளோடுங் கூடியிருப்பர்;

சௌகந்திகத்தினை அணிவோர்,

செல்வமும் புகழுமாகிய பொருந்திய இந்தப் பயன்களை

யடைவார்;

கோவாங்கத்தினை அணிவோரின் வீட்டில், பாலும் பெரிய மலையைப் போல நெல் முதலிய பல பண்டங்களின் குவைகளோடு செல்வப் பெருக்கமும் உண்டாகும் .

****

எள்ளியிடு குற்றமெலா மிகந் துகுண

     னேற்றொளிவிட் டிருள்கால் சீத்துத்

தள்ளியவிச் செம்பதும ராகமது

     புனைதக்கோர் தம்பா லேனைத்

தெள்ளியமுத் துள்ளிட்ட பன்மணியும்

     வந்தோங்குஞ் செய்யா ளோடும்

ஒள்ளியநற் செல்வமதற் கொப்பநெடும்

     பாற்கடலி னோங்கு மானே.

விலக்கப்பட்ட குற்றங்களெல்லாவற்றினின்றும் நீங்கி,

சிறந்த குணங்களைத் தன்னகத்தே கொண்டு ஒளி வீசி

இருளைப் போக்கிய, இந்தச் சிவந்த பதுமராக மணியை அணிகின்ற

தக்கோரிடத்து,  மற்றைச் சிறந்த முத்து முதலிய பல மணிகளும் வந்து பெருகும்;  அதற்குப் பொருந்த, திருமகளோடும் புகழைத் தருவதாகிய நல்ல செல்வமும், நெடிய பாற்கடலைப் போல வளரும்.

****

ரத்தினக்கற்களில் நல்லனவும் தீயனவும் உண்டு ; அவைகளுக்குள் கீறல், புள்ளிகள், உள்ளே நீர்க்குமிழி போன்ற தோற்றம் இவைகள் இருந்தால் எதிரிடையான பலன்கள் நேரிடும் . இதனால் குற்றம் இல்லாத என்ற அடைமொழியை பரஞ்சோதி போடுகிறார் .

குற்றம் குறைகளைக் கண்டுபிடிக்க இரண்டு வழிகள் உண்டு . ஒன்று அதை ஒரு அட்வான்ஸ் தொகை செலுத்தி வீட்ட்ட்டுக்குக் கொண்டு வந்து நல்ல செய்திகள் வருகிறதா, நல்லது ஏற்படுகிறதா என்று பார்க்க வேண்டும் . இரண்டாவதுவழி, ரத்தினம் விஷயத்தில் நிபுணராக இருப்பவரிடம் காட்டினால், உரிய கருவிகளைக் கொண்டு சோதித்துச் சொல்லுவார்.

****

இரண்டு டிட்பிட்ஸ் TITBITS செய்திகளைக் கூறுகிறேன் :

சில தினங்களுக்கு முன்னால், குறுக்கெழுத்துப் போட்டியை என்னுடைய பிளாக்கில் வெளியிட்டேன் ; குருவிந்தம் என்ற சொல்லினை எனது ஞாபக சக்த்தியால் எழுதினேன். அதை ஆனந்த விகடன் அகராதி மற்றும் கூகுள் அகராதிகள் செய்து பார்த்தும் கிடைக்காவில்லை! பின்னர் என்னிடமுள்ள திருவிளையாடல் புஸ்தகத்தில் கண்டுபிடித்து நிம்மதிப் பெருமூச்சுவிட்டேன். 

இரண்டாவது செய்தி :

மதுரையில் வசித்த எனது தாயார் திருமதி ராஜலட்சுமி சந்தானத்தின் கைகள் ராசியான கைகள் ; இதனால் மதுரைக்கு வந்து நகை வாங்குவோர் என் தாயாரை அழைத்துக்கொண்டு தெற்காவணி மூலவீதிக்குச் செல்வார் . நூற்றுக்கணக்கான நகைக்கடைகள் பட்டொளி வீசிப் பறக்கும் தெரு அது; இரண்டாயிரம் ஆண்டுகளாக மாறாத வீதி என்பதை தி. வி.பு செட்டி தெரு வருணனையிலும் சிலப்பதிகாரத்திலும் காணலாம்.

சொல்ல வந்த  விஷயம் என அம்மாவின் ராசியான கைகள் பற்றியது அல்ல ; அந்தக் காலத்தில் மக்கள் மீது இருந்த நம்பிக்கை ஆகும் ; என் அம்மா வாங்கும் அல்லது வாங்கிக் கொடுக்கும் வைரத்துக்கு முன்பணம் ஏதுமின்றி, “அம்மா, இது நல்ல வைரம் ; வீட்டுக்குக் கொண்டுபோய் ஒரு வாரம் வைத்துவிட்டு பணம் கொடுங்கள் என்பார்கள்; அதே படி,  நாங்களும் செய்த பொன்னான நாட்கள் அவை ; அந்த அளவுக்கு மக்களின் மீது நம்பிக்கை ! ஆனால் உங்களை நன்றாக அறிந்து இருந்தால்தான் செட்டியாரும் இதைச் செய்வார் ; நாங்கள் மதுரையின் வசித்த காலத்தில் அந்தக் காலத்தில் அங்கு ஜகஜ்ஜோதியாக இரவு வெளிச்சத்துடன் திகழ்ந்த அந்த வீதி முழுதும் செட்டியார் கடைகள்தான் இதை  பரஞ்சோதி முனிவரும் 300 ஆண்டுகளுக்கு முன்னர் இன்னொரு படலத்தில் எழுதியிருக்கிறார் நம்பிக்கை என்பதைச் சொல்லவே இதை எழுதினேன்.

தி. வி. பு. உரை எழுதிய வேங்கடசாமி நாட்டார் பல மேற்கோள்களையும் தருகிறார் ; இதோ பழைய நூல் பாடல்:-

மாணிக் கத்தியல் வகுக்குங் காலைச்

சமனொளி சூழ்ந்த விருநான் கிடமும்

நால்வகை வருணமு நவின்றவிப் பெயரும்

பன்னிரு குணமும் பதினறு குற்றமும்

இருபத் தெண்வகை யிலங்கிய நிறமும்

மருவிய விலையும் பத்தி பாய்தலும்

இவையென மொழிப வியல்புணர்ந் தோரே”

என்னும் பழைய நூற்பாவால் அறிக. (43)

****

எதிரியின் வாளும் அணுகாதாம்!

பிறநிறச் சார்பு புள்ளி புள்ளடி பிறங்கு கீற்று

மறுவரு* தராச மென்ன வகுத்தவைங் குற்றந் தள்ளி

அறைதரு பண்பு சான்ற வரதன மணியும் வேந்தன்

செறுநர்வா ளூற்ற மின்றிச் செருமகட் கன்ப னாவான்.

 (அவ்வவற்றிற்குரிய நிறமொழிந்த) வேறு

நிறம் பொருந்தலும், விந்துவும், காக பாதமும்,

விளங்குகின்ற தாரையும், குற்றம் பொருந்திய

ஒளி சலித்தலும், – என்று பாகுபாடு செய்த

ஐந்து குற்றங்களையும் ஒழித்து,

 (அவ்வவற்றிற்குக்) கூறிய குணம் நிறைந்த மணிகளை அணிகின்ற

மன்னன், பகைவரது வாளினால் இடையூறில்லாமல், செருமகட்கு வீரமகளுக்குத் தோழனாவான் .

குற்றங்களின் பட்டியல்

சரை மலம், கீற்று, சம்படி, பிளத்தல், துளை, கரு, விந்து, காக

பாதகம், மிருத்து, கோடியில்லன, கோடி முரிந்தன, தாரை மழுங்கல், கருகல், வெள்ளை, கல், மணல், பரிவு, தார், சாயையிறுகுதல், கருப்பத் துளை, கல்லிடை முடங்கல், திருக்கு என்பன குற்றங்கள் .

அவற்றுள், ஐந்து குற்றங்களைப் பொது வகையால் ஈண்டெடுத்துக் கூறினார்.

புள்ளடி – காகபாதம்; புள் – காக்கை. ஊற்றம் – ஊறு;

*****

குறுநிலக் கிழவ னேனு மவன்பெருங் குடைக்கீழ்த் தங்கி

மறுகுநீர் ஞால மெல்லாம் வாழுமற் றவனைப் பாம்பு

தெறுவிலங் கலகை பூதஞ் சிறுதெய்வம் வறுமை நொய்தீக்

கறுவுகொள் கூற்றச் சீற்றங் கலங்கிட வாதி யாவாம்.

 (இம்மணிகளை யணிபவன்) குறுநில மன்னாயினும், அவன் பெருங் கடல் சூழ்ந்த உலகமனைத்தும் பொருந்தி வாழ்வான்; பாம்பும் ,விலங்குகளும் பேயும் பூதமும் சிறு தெய்வங்களும் கூற்றின்/ எமனின் சினமும்,  அவனைத் துன்புறுத்த மாட்டா .

தெறு விலங்கு=  கொலைத் தொழிலையுடைய விலங்கு; சிங்கம் புலி முதலியன.

*****

மணிகளில் ஜாதிகள் !

முன்னவ ரென்ப கற்றோர் வச்சிர முந்நீர் முத்தம்

மன்னவ ரென்ப துப்பு மாணிக்கம் வணிக ரென்ப

மின்னவிர் புருட ராகம் வயிடூயம் வெயிற்கோ மேதம்

பின்னவ ரென்ப நீல மரகதம் பெற்ற சாதி.

கற்று வல்லோர், சாதி வகையால், வயிரத்தையும்

கடலிற்றோன்றிய முத்தையும் DIAMONDS AND PEARLS அந்தணர் என்று கூறுவர்;

பவளத்தையும் மாணிக்கத்தையும் CORALS AND RUBIES அரசரென்று KSHATRIAS கூறுவர்;

மின்போல விளங்கும் புருட ராகத்தையும் TOPAZ, வயிடூரியத்தையும் (Cymophane அல்லது Cat’s eye), ஒளி பொருந்திய கோமேதகத்தையும் HASSONITE GARNETSவணிகர் என்று கூறுவர்;

 நீலத்தையும் மரகதத்தையும் SAPPHIRE AND EMERALDS சூத்திரரென்று கூறுவர் .

****

நவரத்தினங்களின் குணங்கள்

பார்த்திவர் மதிக்கு முத்தம் பளிங்கன்றிப் பச்சை தானுஞ்

சாத்திகந் துகிர்மா ணிக்கங் கோமேதந் தாமே யன்றி

மாத்திகழ் புருட ராகம் வயிடூயம் வயிரந் தாமும்

ஏத்திரா சதமா நீலந் தாமத மென்ப ராய்ந்தோர்.

நூல்களை ஆராய்ந்தோர், அரசர்கள் மதிக்கின்ற முத்தும், பளிங்கு – பளிங்கும், இவையல்லாமல், மரகதமும், சாத்துவிக

குணமுடையனவாம்,

பவளமும் மாணிக்கமும், கோமேதமும், புருடராகமும் வயிடூரியமும் வயிரமும்,   இராசத குணம் உடையனவாம்,

நீலமானது, தாமச குணம் உடையதாம்,

****

என்ன கிழமைகளில் ஆராய வேண்டும்?

எந்தந்த கிழமையில் என்ன ரத்தினக் கற்களை ஆராய்ந்து பார்த்து மதிப்பிட   வேண்டும் என்பதையும் பட்டியல் இடுகிறார் !

இனையவை யளந்து கண்டு மதிக்குநா ளெழுமான் பொற்றேர்

முனைவனாண் முதலா வேழின் முறையினாற் பதும ராகங்

கனைகதிர் முத்தந் துப்புக் காருடம் புருட ராகம்

புனையொளி வயிர நீல மென்மனார் புலமை சான்றோர்.

இம்மணிகளை ஆராய்ந்து பார்த்து மதிப்பிடும் நாட்கள்,

ஏழு குதிரைகளைப் பூட்டிய பொன்னாலாகிய

தேரினையுடைய சூரியனுக்குரிய ஞாயிற்றுக்கிழமைSUNDAY

பதுமராகமும் ,முத்தும் பவளமும் பச்சையும் புருடராகமும்,

வயிரமும் நீலமும் என்று கூறுவர்

****

வெய்யவன் கிழமை தானே மேதக மணிக்கு மாகும்

மையறு திங்க டானே வயிடூய மணிக்கு மாகும்

ஐயற விவையொன் பானு மாய்பவ ரகம்பு றம்பு

துய்யரா யறவோ ராய்மு சொன்னநா ளடைவே யாய்வர்.

ஞாயிற்றுக் கிழமையே, கோமேதக மணிக்கும் உரியதாகும்;

குற்றமற்ற திங்கட்கிழமையே, வயிடூய மணிக்கும் ஆகும்.

ஒன்பது மணிகளையும் உள்ளும் புறமும் தூய்மையுடையவராய். அறநெறியிற் செல்பவராய், முன் கூறிய கிழமைகளில் முறையே ஆராயக் கடவர் ;

பதுமராகத்திற்குக் கூறிய ஞாயிற்றுக் கிழமையே, கோமேதகத்திற்கும்,

முத்திற்குக் கூறிய திங்கட்கிழமையே, வயிடூரியத்திற்கும் ஆகுமென்றார்..

*****

மாணிக்கக் கல்லின் வகைகள்

மாணிக்கத்தின் பொதுநிறங்களைக் கூறிப் பின் நாற் சாதிக்கும்

உரிய நிறங்களைக் கூறுகின்றார்.

சாதரங்கம் பதுமராகமெனவும், குருவிந்தம் இரத்த விந்து எனவும், சௌகந்திகம் நீலகந்தியெனவும், கோவாங்கம் படிதமெனவும் பெயர் கூறப்படுதலுமுண்டு;

பதுமமும் நீலமும் விந்தமும் படிதமும்

விதிமுறை பிழையா விளங்கிய சாதியும்”

என்று சிலப்பதிகாரம் கூறுவது காண்க.

****

சாதரங்க நிறங்கமலங் கருநெய்த

     லிரவியொளி தழல்கச் சோதம்

மாதுளம்போ ததன்வித்துக் கார்விளக்குக்

     கோபமென வகுத்த பத்தும்

மேதகைய குருவிந்த நிறங்குன்றி

     முயற்குருதி வெள்ள லோத்தம்

போதுபலா சலர் திலகஞ் செவ்வரத்தம்

     விதாரமெரி பொன்போ லெட்டு.

சாதரங்கத்தின் நிறம், தாமரை, மலரும், கருநெய்தல் மலரும்,

சூரியனொளியும்.,நெருப்பும், மாதுள மலரும், மாதுள வித்தும், முகிலும், தீபமும், இந்திர கோபமும், எனப் பாகுபாடு செய்த பத்துமாகும்;

*****

குருவிந்தத்தின் நிறம், குன்றி மணியும்,

முயலிரத்தமும் , வெள்ள லோத்த மலரும்,

முண் முருக்க மலரும், மஞ்சாடி மலரும்,

செவ்வரத்த மலரும்; முள்ளிலவ மலரும்,

பொன்னும் ஆகிய இவைகளைப் போலஎட்டு

வகையாகும்.

*****

வேறு நூல்களில் வேறு விளக்கம் காணப்படுகிறது:–

தாமரை கழுநீர் சாதகப் புட்கண்

கோப மின்மினி கொடுங்கதிர் விளக்கு

மாதுளைப் பூவிதை வன்னியீ ரைந்தும்

ஓதுசா துரங்க வொளியா கும்மே”

என்னும் பழைய நூற்பாவிலும்,

சாதகப் புட்கண் டாமரை கழுநீர்

கோப மின்மினி கொடுங்கதிர் விளக்கு

வன்னி மாதுளம் பூவிதை யென்னப்

பன்னு சாதுரங்க வொளிக்குணம் பத்தும்”

என்னும் கல்லாட அகவற் பகுதியினும் சாதுரங்க நிறத்துள் கார் கூறப்படாது  சாதகப் புள்ளின்கண் கூறப்பட்டிருத்தலும்;

திலக முலோத்திரஞ் செம்பருத் திப்பூக்

கவிர்மலர் குன்றி முயலுதி ரம்மே

சிந்துரங் குக்கிற் கண்ணென வெட்டும்

எண்ணிய குருவிந்த மன்னிய நிறமே”

என்னும் நூற்பாவிலே, குருவிந்த நிறத்துள் செவ்வரத்தம், விதாரம் பொன்என்பன வின்றிச், செம்பருத்திப்பூ, சிந்துரம், குக்கிற்கண் என்பனவும்,

செம்பஞ் சரத்தந் திலக முலோத்திரம்

முயலின் சோரி சிந்துரங் குன்றி

கவிரல ரென்னக் கவர்நிற மெட்டும்”

என்னும் கல்லாடப் பகுதியிலே விதாரமும் பொன்னும் இன்றிச், செம் பஞ்சு,சிந்துரம் என்பனவும் கூறப்பட்டிருத்தலும் அறியற்பாலன.

—SUBHAM–

TAGS– ரத்தினங்கள், அணிந்தால், செல்வம்  ,பரஞ்சோதி,

நவரத்தினங்கள் ,அரிய செய்திகள் -11,

திருவிளையாடல் புராணம் ( தி.வி.பு.) ஆராய்ச்சிக் கட்டுரை-11

பலன்கள் ,குணங்கள், ஜாதிகள் , மாணிக்கம் விற்ற படலம்

ஏஜியும் சூப்பர் ஏஜியும்! சிறுகதை (Post No.14,605)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,605

Date uploaded in London – –8 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

3-6-25 கல்கி ஆன்லைனில் வெளியாகியுள்ள சிறுகதை 

ஏஜியும் சூப்பர் ஏஜியும்!

(ARROGANT GIRL AND SUPER ARROGANT GENTLE MAN) 

ச. நாகராஜன் 

கணேஷ் வருத்தத்துடன் படுக்கையில் படுத்திருந்தார். அவருக்கு வந்த செய்திகள் நன்றாகவே இல்லை. ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொண்டு மூன்று மாத ஓய்வில் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற டாக்டர்களின் அறிவுரையை ஏற்றுக் கொண்டு ஓய்வாகப் படுக்கையில் படுத்திருந்தவருக்கு அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் தந்த செய்திகள் நன்றாகவே இல்லை.

 ஓய்வாக இருக்கும்போது கம்பெனியை யார் கவனிப்பது?

கலிபோர்னியாவில் மேலாண்மை நிர்வாகத்தில் டிகிரி வாங்கிய தனது பெண் அகிலாவை தைரியமாக எம்.டி. ஆக்கி அவளையே நிர்வாகத்தைக் கவனிக்கச் சொல்லி அவர் பெருமிதமும் பட்டார். அமெரிக்காவில் நிர்வாக மேலாண்மைப் படிப்பு என்றால் சும்மாவா?

 ஆனால் அகிலாவிற்கு ஷார்ட் டெம்பர் அதிகம். எதிர்பார்ப்பும் அதிகம். அமெரிக்கா போலவே எல்லாம் நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் இங்கு நடக்குமா?

தினசரி இரண்டு சஸ்பென்ஷன் ஆர்டரைக் கொடுத்தாள் அகிலா. டிஸிப்ளின்! டிஸிப்ளின்!. அனைவரும் நடுங்கினர். பட்டனைச் சரியாகப் போடவில்லை என்று செக்யூரிடிக்கு மெமோ.

மானேஜர் ஐந்து நிமிடம் லேட்டாக வந்தார் என்பதற்காக அப்படியே வீட்டிற்குப் போய்விட்டு மறு நாள் வந்தால் போதும் என்ற ஆர்டர்.

மேஜை மேல் ஃபைல்களைச் சரியாக அடுக்கவில்லை என்று 15 வருட சர்வீஸுடன் மிக விஸ்வாசமாக வேலை பார்த்த செக்ரட்டரி மேல் அகிலா பாய்ந்து பிடுங்க அவர் பயந்து போய் ஒரு வார லீவில் குல தெய்வ தரிசனத்திற்காக யாத்திரை போய் விட்டார்.

 இது ஒரு பக்கம் என்றால் வாடிக்கையாளர்களிடமும் நெளிவு சுளிவுடன் நடக்க அகிலாவால் முடியவில்லை.

 தனது நடத்தை தப்பு என்று அவளுக்குத் தெரியவில்லை. அதை நளினமாகச் சுட்டிக் காட்டிய இரண்டு பேருக்கு உடனடியாக பதவி இறக்கம் ஆர்டர் தரப்பட்டது.

 இனி யார் தான் பேசுவார்கள்? தங்களுக்குள் ஏஜியின் ஆர்டர் என்று சொல்லிக் கொண்டு நமுட்டுச் சிரிப்புச் சிரிப்பார்கள்.

 ஏஜி என்றால் அகிலா கணேஷ் என்று அகிலா நினைக்க கம்பெனிக்குள்ளோ அனைவருக்கும அராகண்ட் கேர்ள் தான் ஏஜி என்பதற்கு அர்த்தம் என்பது தெரியும்!

 ன்ன செய்வது? நெருங்கிய நண்பர் விஸ்வத்திடம் சொல்லி வருத்தப்பட்டார் கணேஷ்.

“கவலைப் படாதே நான் ஒரு ஆளை அனுப்புகிறேன். யுஎஸ்ஸ்லிருந்து வந்திருக்கிறார். கன்ஸல்டண்டாக 30 நாள் மட்டும் இங்கு இருப்பார். எப்படி கம்பெனியை முன்னேற்றலாம் என்பதைக் கவனிப்பார். எல்லா அதிகாரமும் அவருக்கு உண்டு என்று அகிலாவிடம் சொல்லி விடு” என்றார் விஸ்வம்.

“நீ சொல்வதில் ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது. ஜமாய்த்து விடு” என்றார் கணேஷ்.

 பீஸே அல்லோலகல்லோலப்பட்டது. வந்த இரண்டே நாளில் ஏஜிக்கு அது தான் – அராகண்ட் கேர்ளுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்து விட்டார் யுஎஸ் கன்சல்டண்ட் எஸ் ஏ ஜி. – சிவகங்கை அனந்தராமன் கணபதி. ஆனால் இரண்டே நாட்களில் அனைவரும் அவரை சூபர் அராகண்ட் ஜெண்டில்மேன் என்று எஸ் ஏ ஜிக்கு அர்த்தம் சொன்னார்கள்.

 “அகிலா! இப்படி இருந்தால் கம்பெனி உருப்படவே உருப்படாது. டிஸிப்ளின் வேணும் அகிலா, டிஸிப்ளின் வேணும்” என்றார் எஸ் ஏ ஜி.

 “அதைத் தான் நானும் சொன்னேன், அங்கிள்!” என்றாள் அகிலா.

 ஆனால் அகிலாவே திடுக்கிட்டுப் போனாள் செக்யூரிடி ஆபீஸரின் ஒரு மாத சஸ்பென்ஷன் ஆர்டரைப் பார்த்து.

 ஒரு கரப்பை உள்ளே பார்த்தாராம் எஸ் ஏ ஜி. உடனடி சஸ்பென்ஷன்.

லை பார்ப்பவர்கள் உள்ளே வந்த சமயம் ‘கதவு திறந்த போது காற்றில் ஒரு கரப்பின் தோல் தான் உள்ளே வந்தது, மேடம்’ என்று செக்யூரிடி சொன்ன விளக்கத்தை ஏற்றுக் கொண்டாள் அகிலா. அதை எஸ் ஏ ஜியிடம் செக்யூரிடியின் சார்பில் சொன்ன அகிலாவிடம் ஒரு பொட்டலத்தைக் காண்பித்த அவர் அதில் இருந்த இரண்டு ஈக்களுக்கு என்ன பதில் என்று கேட்டார். ஆபீஸுக்குள்ளே ஈக்களைப் பார்த்தாராம் அவர்!

 அகிலா திகைத்தாள்.

 அடுத்த நாளில் கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்ட் சீஃப் அவுட். ஒரு ஸ்டேட்மெண்டில் இரண்டு ஸ்பெல்லிங் மிஸ்டேக்!

 அக்கவுண்டண்ட் அரண்டு போனார் – யாருக்கும் அட்வான்ஸ் தரக்கூடாது என்ற ஆர்டரைப் பார்த்து.

 மனிதாபிமானத்தின் பேரில் ஆஸ்பத்திரி, பள்ளி ஃபீஸ் செலவுக்காக சாலரி அட்வான்ஸ் கொடுப்பதில் என்ன தவறு? அதை அந்த மாத சம்பளத்திலேயே தான் பிடித்துக் கொள்கிறோமே” – இதைக் கேட்டதால் அவருடைய ஒரு வார சம்பளம் கட்!

அகிலாவுக்கு நிஜமாகவே தூக்கிவாரிப் போட்ட தருணம் தன் மேலேயே டிஸிப்ளின் ஆக்‌ஷன் வந்த போது தான்!

 “அகிலா! ஏன் லேட், ஒரு நிமிடம்? இப்படி எல்லாம் எம் டி இருக்கக்கூடாது!”

‘“கீழே வேலை பார்ப்பவரை எப்போதும் உட்காரச் சொல்லாதே; நின்று கொண்டே அவர்கள் பேச வேண்டும்?”

 “யாருக்கும் லீவ் கிடையாது. கம்பெனி ரன் பண்ண வேண்டுமில்லையா?”

 “இப்படி ஒரு அராகண்ட் ஆளைப் பார்த்ததே இல்லை” என்று அகிலா மனம் திறந்து ஆபீஸில் பலருடனும் பேசி விட்டாள்.

 இது எஸ் ஏ ஜிக்கு தெரிந்து விடப் போகிறது என்று ஒருவர் சொன்ன போது என் எம் டி வேலையே போனாலும் பரவாயில்லை. இப்படி அனைவரின் மனமும் புண்படுமாறு பேசுவதை என் அப்பாவிடம் கண்டிப்பாகச் சொல்கிறேன்” என்றாள் அகிலா.

 “மேடம்! அவரது 30 நாள் கன்ஸல்டண்ஸி பீரியட் நாளையோடு முடிகிறது! அக்கவுண்ட்ஸை செட்டில் பண்ணவா?” என்று  

அக்கவுண்டண்ட் கேட்டபோது ஆஹா! உடனே செய்யுங்கள் என்றாள் அகிலா.

 மறுநாள் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்ட எஸ் ஏ ஜி, அகிலாவிடம், “எப்படி ஆபீஸை நடத்த வேண்டும் என்று தெரிந்ததா” என்று கேட்ட போது அகிலா “நன்றாகத் தெரிந்தது, தேங்க்ஸ்” என்று கூறி அவருக்கு விடை கொடுத்தாள்.

டுத்த நாள்.

காலை முதல் வேலையாக கடந்த 30 நாட்களிலும் அதற்கு முன்பும் போடப்பட்ட சஸ்பென்ஷன் ஆர்டர், பதவி இறக்க ஆர்டர், ஃபைன் முதலிய எல்லா பேப்பர்களையும் தன் மேஜைக்கு கொண்டு வரச் சொன்னாள் அகிலா. அக்கவுண்டண்டையும் மேனேஜரையும் அழைத்து எதிரே உட்காரச் சொன்னாள்.

“இந்த எல்லா ஆர்டரும் கேன்ஸல்ட். அனைவருக்கும் இழந்த பணத்தை உடனே காஷாகக் கொடுக்க வேண்டும். நானே என் கைப்பட பணத்தைக் கொடுக்கப் போகிறேன்” என்ற அகிலாவின் வார்த்தைகளை சந்தோஷமாக ஆமோதித்தனர் இருவரும்.

அத்துடன் இன்னொரு ஆர்டர் இருக்கு என்று கூறி நிறுத்தினாள் அகிலா.

எல்லோருக்கும் இன்று இலவச ஸ்வீட் ஆர்டர் பண்ணுங்கள். அவரவர் டேபிளில் வைத்தே அதைச் சாப்பிடலாம். அத்தோடு வீட்டுக்குக் கொண்டு பொக நல்ல ஸ்வீட் பாக்கட் ஒன்றையும் எல்லோருக்கும் தாருங்கள். முக்கியமாக செக்யூரிட்டியை மறந்து விடாதீர்கள்.” என்ற அகிலாவை வியப்புடன் பார்த்தனர் மானேஜரும் அக்கவுண்டண்டும்.

 “எதற்காக என்று பார்க்காதீர்கள் எஸ் ஏ ஜி, எப்படி ஒரு ஆபீஸை நடத்த வேண்டும், எப்படி நடத்தக் கூடாது என்று எனக்குச் சொல்லித் தந்த பாடத்திற்காகத் தான் இந்த ஸ்வீட்” என்றாள் அகிலா.

 வெளியே வந்து நடந்ததை அவர்கள் வாயிலாகக் கேள்விப்பட்ட அனைவரும் ஏஜி – அகிலா கணேஷ் வாழ்க என்று கோஷமிட்டனர்.

 “ன்ன விஸ்வம்! இப்படி ஒரு டிராமா போட்டுட்டயே! என்ற கணேஷிடம், “பாவம் சிவகங்கை அனந்தராமன் கணபதி இப்படி சூப்பர் அராகண்ட் ஜெண்டில்மேனாக நடிக்க ரொம்ப சிரமப்பட்டுட்டேன் என்று என்னிடம் சொன்னார் என்றார் விஸ்வம்.

***