Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
On March 18, 2025 I was fortunate enough to have Darshan at Nanganallur Anjaneya Temple and Raja Rajeswari temple and Sri Muralidhara Swamikal at Maharanyam near Malaippattu in Chennai- Sriperumpudur route.
In fac,t I have to add two more temples to the above list. At the Maharanyam Ashram of Sri Muralidhara Swamikal there are two temples: one for Perumal/Vishnu and another for Anjaneya.
First, I went to Nanganallur Anjaneya temple and had good darshan (reverential viewing of god or saint). The huge Anjaneya is visible even from the road. By passers worshipped Hanuman sitting on bicycle or motorcycle.
Someone suggested that we should visit Rajarajeswari temple and my wife was very keen because her name and the goddess name are one and the same. It is a small but beautiful temple. Male devotees have to take off their shirt like Parikkaal Narasimhar temple.
And one has to climb steep steps covered with golden coloured metal. And there are other smaller shrines as well. Nearby there is a Vishnu temple too.
****
I had been in touch with Sri Muralidhara Swamikal’s devotees for over a decade in London. They advised me to visit the Swamiji and get his blessings. When I went to the Ashram, the doors were closed and there was a board Sying Restricted entry; fortunately, I left a message over telephone. But Swamiji himself came into the adjacent Perumal Temple. After paying pranams to him I introduced myself. He made kind enquiries and asked his disciple to take me around the temple, ashram and the dining hall for my lunch.
There is a beautiful Hanuman temple like Nanganallur Hanuman. After the arti I was taken around the Go Shala (cow shed), Veda Patassla, Library and the Dining Hall. I had lunch there and met Swamiji again.
Sri Muralidhara Swamikal is one of the few genuine saints in Tamil Nadu. I have been following him on Facebook for a decade. His main teaching is to recite god’s name every day. Unlike many Babas and many Gurus, there is no cult attached. He has Veda patasalas (Vedic Schools ) in several places. His devotees have started branches in different countries around the world. Only through London devotees I came to know about the good work of Swamiji and arranged meetings when his disciple Ramanujam came to London. Recital of God’s name is the gateway to God and so he called it Namadwar (naamadwaar=Name Door/Gate).
Please visit his Ashram and support his activities through donations. I also did it.
****
I attach below a writeup which his American devotees have placed in their website:
Sri Sri Muralidhara Swamiji
His Holiness Maharanyam Sri Sri Muralidhara Swamiji, hailing from Chennai, India, is a philosopher and spiritual preceptor who practices and propagates the practical aspects of Indian spirituality.
His key activities are in the direction of educating people of the fact that real happiness is very much within one’s own self and that inner peace and tranquillity will naturally lead to universal brotherhood and harmony. Realization of this truth in this age of haste and hurry is as much possible and practicable as it was in earlier ages, and can be attained by simple but sustained practices that include mind control and chanting of the Divine Name of God, especially the “Hare Rama…” Mahamantra.
He inculcates a spirit of universal acceptance, coupled with intense faith and steadfast devotion on the path the spiritual seeker is treading on.
Sri Swamiji believes that Nama Kirtan (singing the name of the Lord) is the easiest way to perform Bhakti and attain liberation in this Kali Yuga. Srimad Bhagavatam and many other scriptures in Sanatana Dharma advocate this as the simplest means to attain the Lord. Scriptures say, “While mental repetition of the Divine Names leads to the good of the individual, chanting the Divine Names loudly purifies the chanter, the listener and the very place where the chanting is done.”, Sri Swamiji advocates singing of the ‘Hare Rama…’ Mahamantra as the only way to overcome the ills of worldly existence and attain divine bliss.
More information about Sri Sri Swamiji’s activities can be found in the following websites:
Nama Dwaar
Madhuramurali
Nanganallur Anjaneyar/ Hanuman temple
Sri Anjaneyar Temple at Maharanyam, Sri Muralidhara Swamiji Ashram
Vedic School Students and the Teacher
Sri Muralidhara Swamiji
—subham—
Tags- Nanganallur, Anjaneyar temple, Rajarajeswari temple, Sri Muralidhara Swamikal, Namadwar, Maharanyaam, Nama Sankirtan
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வழியில் மலைப்பட்டு கிராமத்துக்கு அருகில் மஹாரண்யத்தில் முரளீதர சுவாமிகள் ஆஸ்ரமம் உளது; அங்கு மார்ச் மாதம் 18- ஆம் தேதி (2025) சென்று சுவாமிகளைத் தரிசனம் செய்தேன். இதன் வாயிலாக எனது நீண்ட நாள் ஆசை நிறைவேறியது.
லண்டனுக்கு சுவாமிகளின் சீடர் ராமானுஜம் பரப்புரை செய்ய வந்த தருணங்களில் நானும் என்னால் இயன்ற பங்களிப்பினைச் செய்தேன். அப்போது அவரது சீடர்கள் மஹாரண்யத்துக்குச் சென்று சுவாமிகளை நேரில் தரிசனம் செய்யுங்கள் என்று சொல்லிவந்தனர் . ஒவ்வொரு முறை இந்தியாவுக்குச் சென்றபோதும் மனதில் நினைத்தேன்; ஆனால் செயலில் இறங்கவில்லை. இந்த ஆண்டு நல்ல வாய்ப்பு கிடைத்தது. நங்க நல்லூர் ஆஞ்சனேயர் கோவில், மற்றும் புதிய ராஜ ராஜேஸ்வரி கோவில் ஆகியவற்றுக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டு காரில் சிட்டாகப் பறந்தேன். பெரிய ஏமாற்றம்! ஆஸ்ரமக் கதவு பூட்டியிருந்தது.கட்டுப்படுத்தப்பட்ட அனுமதி RESTRICTED ENTRY என்று வெளியேயுள்ள போர்டில் எழுதி இருந்தனர். அப்போதுதான் புரிந்தது போன் செய்யாமல் வந்தது தவறு என்று .
ஆஸ்ரமத்தை அடுத்து நல்ல அமைதியான சூழ்நிலையில் பெருமாள் கோவில் உள்ளது; பெருமாளை சேவித்தபின்னர் ஒரு தொன்னையில் நல்ல வெண்பொங்கல் பிரசாதமும் கிடைத்தது . அங்குள்ள பட்டர், போன் செய்துவிட்டு இங்கே அமருங்கள் என்றார் போன் செய்தபோது ரிகார்டட் மெஸேஜ் RECORDED MESSAGE வந்தது. அதில் நான் லண்டனி லிருந்து தரிசனத்துக்கு வந்த செய்தியை ரெகார்ட் செய்தேன் அதைக் கேட்டார்களோ இல்லையோ தெரியவில்லை சுவாமிகளே கோவிலுக்குள் பிரவேசித்தார் .
அடடா கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது என்று எண்ணி இறும்பூது எய்தி அவரை நமஸ்கரித்தேன்; . லண்டனில் அவரது சீடர்களுடன் உள்ள தொடர்பினைச் சொல்லிவிட்டு ஆஸ்திரேலியாவிலிருந்து லண்டன் செல்லும் வழியில் குல தெய்வம் வைத்தீஸ்வரனைத் தரிசிக்க இந்தியாவுக்கு வந்த செய்தியினைத் தெரிவித்தேன் .
உடனே ஒரு சீடரை அழைத்து இவரை ஆஞ்சநேயர் கோவிலில் தரிசனம் செய்வித்து, பின்னர் ஆஸ்ரமத்தைச் சுற்றிக் காட்டிவிட்டு சாப்பாடு செய்வித்து போஜனம் முடித்தவுடன் அழைத்து வாருங்கள் என்றார் .
அருகில் அருமையான அனுமார் கோவில்; அதி உயரமான பெரிய கருப்பு நிற அனுமார் சிலை.. அங்கு எனக்காக சிறப்பு தீவாராதனை காட்டி ஆஸ்ரமத்துக்குள்ள அழைத்துச் சென்றார்கள் அங்கே கோ சாலை, வேத பாட சாலை, போஜன சாலை, நூலகம் எல்லாவற்றையும் பார்த்துவிட்டுச் சாப்பிட்டேன். பின்னர் மீண்டும் சுவாமிகளைத் தரிசித்தேன். சீடரிடம் ஆஸ்ரமத்துக்குச் சிறிய நன் கொடையை கொடுத்துவிட்டு சுவாமிகள் அனுமதியுடன் அவரது புகைப்படத்தை எடுத்தேன் . பின்னர் அவர் ஆஸ்ரமத்துக்குள் சென்ற பின்னர் நானும் சென்னைக்குப் புறப்பட்டேன்.அன்று மாலையே எனது நண் பர் ராமானுஜம், நாரத கான சபாவில் பேசவிருப்பதாகவும் சுவாமிகளும் அப்போது இருப்பார் என்றும் சீடர் சொன்னார். ஆனால் அடுத்த நாளில் லண்டன் பயணம் இருந்ததால் போக இயலவில்லை . என்னை ஆஸ்ரமத்தைச் சுற்றிக்காட்டிய இளைஞர் பத்து ஆண்டுகளுக்கு மேலாக அங்கு இருப்பதாகச் சொன்னார். அவரது அர்ப்பண மனப்பான்மை சுவாமிஜியின் நற்பணிக்கு ஒரு அத்தாட்சி.
****
சுவாமிகளின் கொள்கை என்ன ?
நாம சங்கீர்த்தனத்தின் மூலம்- அதாவது, இறைவனின் நாமமான ஹரே ராம ஹரே க்ருஷ்ண — என்ற பெயரை பக்தியுடன் உச்சரிப்பதன் மூலமே இறைவனை அடையாலாம் ; கலியுகத்தில் இதுதான் எளிதான வழி ; மேலும் சனாதன தர்மத்தின் ஆணி வேரான வேதங்களை பாதுக்காகவேண்டும் கோ மாதா என்னும் பசுக்களை பாதுகாக்கவேண்டும் என்பதே முக்கியக் கொள்கை . இதை நடை முறையில் கொண்டு வருவதற்காக சுவாமிகள் பல்வேறு இடங்களில் வேத பாடசாலைகளை நடத்துகிறார். நல்ல சொற்பொழிவுகளால் நாம சங்கீர்த்தனத்தைப் பரப்புகிறார். நாமத் வார் –நாமத்தின் மூலம் இறைவனை அடையும் வாயில்- என்பது இவர் பயன்படுத்தும் சொல். அமெரிக்கா , பிரிட்டன், பல ஐரோப்பிய நாடுகளில் இவரது பக்தர்கள் கிளைகளை நடத்தி ராம – கிருஷ்ண நாமத்தின் பெருமையைப் பரப்புகிறார்கள்
வேத பாட சாலை,
அங்கு ஏகாதசி நாட்களில் பெரிய வழிபாடுகள் நடை பெறுகின்றன. அடுத்தமுறை சென்னை சென்றால் மலைப்பட்டு கிராமம் வரை செல்லுங்கள். இப்போது தமிழ்நாட்டிலுள்ள நல்ல சாமியார்களின் ஒருவர் ஸ்ரீ முரளீதர சுவாமிகள் . ஏனைய ‘பாபா’க்கள், ‘குரு’க்கள் போல கல்ட் CULT –புதிய சம்பிரதாயம்- எதுவும் இல்லாமல் ஒரிஜினல் இந்து மதக் கொள்கைகளை வலியுறுத்துபவர். ஆகையால் தயக்கமின்றி செல்லலாம். முடிந்தவரை நன்கொடை கொடுத்து அரிய வேதங்களைப் பாதுகாக்க உதவுங்கள் .
–சுபம்–
முரளீதர சுவாமிகள், மலைப்பட்டு, மஹாரண்யம், நாமத் துவார், நாம சங்கீர்த்தனம், வேத பாட சாலை, கோ சாலை
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
6-3-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
உங்களுக்கு எத்தனை போபியாக்கள் உண்டுங்க?
ச. நாகராஜன்
ஒளிவு மறைவு இல்லாமல், வெட்கப்படாமல் சொல்லுங்க, உங்களுக்கு எதைக் கண்டால் பயம்? உங்களுக்கு எத்தனை போபியாக்கள் உண்டு?
உலகில் குறைந்தபட்சம் 350 போபியாக்களால் ஆண்களும் பெண்களும் பயப்பட்டு அவதிப்படுகின்றனர்.
150 போபியாக்களின் பட்டியலில் பெரும்பாலான மக்கள் வந்து விடுகின்றனர்.
பொதுவாகப் பெண்களிடம் கரப்பான் பூச்சியையோ எலியையோ சிலந்தியையோ காட்டினால் போது,ம்.
ஆ, ஓவென்று அலறிக் கூச்சல் போட்டு கூட்டத்தையே கூட்டி விடுவர்.
போபியா என்பது உணர்வுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தி கவலைப்பட வைத்து பயத்தை ஊட்டி அதிர வைக்கும் ஒன்று.
சிலர் லிப்டில் ஏற மாட்டார்கள்.
இன்னும் சிலர் விமானத்தில் பயணப்படவே மாட்டார்கள்.
தங்களின் பழைய கால அனுபவங்கள், நண்பர், குடும்பத்தினர் ஆகியோர்
பட்ட அவஸ்தைகள், நெருங்கியவரின் உயிரிழப்பு உள்ளிட்ட பல காரணங்களால் போபியாக்கள் ஏற்படுகின்றன.
இது தர்க்கரீதியாகத் தவறு என்பதும் போபியாக்காரர்களுக்குத் தெரியும். என்றாலும் பயம் பயம்தானே!
சிறுவயதில் ஒரு சிறுவன் இன்னொரு சிறுவன் முதுகில் கரப்பான் பூச்சியையோ அல்லது சிலந்தியையோ விட்டெறிந்தால் வாழ்நாள் முழுதும் கரப்பான்பூச்சி பயம், சிலந்தி பயம் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு வரும்.
தெருவில் இறங்கி நடக்க பயம் என்றால் அது AMBULOPHOBIA.
ஆனால் இதற்கெல்லாம் இப்போது சிகிச்சை முறை உண்டு.
தெருவில் நடக்கப் பயப்படுவோரை குழுவாகச் சேர்த்து மெதுவாக மெல்ல மெல்ல தெருவில் நடக்கப் பழக்கப்படுத்துவார்கள்.
BEHAVIOUR THERAPY என்ற சிகிச்சையில் பல போபியாக்கள் நாளடைவில் மறைந்து விடும். பூனையைக் கண்டால் பயப்படுபவர்களுக்கும் கூட சிகிச்சை உண்டு.
சாமான்யர்களுக்கு மட்டுமல்ல, பிரபலங்களுக்கும் போபியாக்கள் உண்டு.
லிஸ்டைப் பார்ப்போமா?
விமானப் பயணம்(AEROPHOBIA)
விமானப் பயணம் என்றாலேயே ஜெனிபர் அனிஸ்டன், டோனி கர்டிஸ், முகம்மது அலி, மைக்கேல் ஜாக்ஸன் ஆகியோருக்குப் பயம்!
உயரத்தைக் கண்டால் பயம்(ACROPHOBIA)
உலகின் பெரிய கோபுரமான ஈபில் டவரை வடிவமைத்த குஸ்டாவ் ஈபிலுக்கு உயரத்தை நினைத்தாலேயே பயம். டைரக்டர் உடி ஆலனுக்கும் உயரம் என்றாலேயே பயம். இவருக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. அதிக போபியாக்களைக் கொண்ட ஹாலிவுட் பிரபலம் இவர் என்பது தான் அது!
பூனைக்குப் பயம்(AILUROPHOBIA)
வரலாற்றுப் பிரபலங்களான ஜூலியஸ் சீஸர், நெப்போலியன், முஸோலினி, அலெக்ஸாண்டர் தி கிரேட் ஆகியோருக்குப் பூனை என்றாலேயே பயம் இது ஒரு நீண்ட பட்டியல். இதில் ஹிட்லர், செங்கிஸ்கான், வில்லியம் ஷேக்ஸ்பியர் உள்ளிட்ட பலரும் வருகின்றனர்.
பொதுக்கூட்டத்தில் பேச பயம்(GLASSOPHOBIA)
பல பிரபலங்களுக்கு மக்கள்திரளைக் கண்டு அவர்களிடம் பேசுவது என்றாலேயே பயம். பிரபல நடிகை மர்லின்மன்ரோ, நடிகர் லாரன்ஸ் ஆலிவர் ஆகியோர் ஸ்டுடியோவில் அபாரமாக நடிப்பார்கள். ஆனால் பொதுமேடை என்றாலேயே நடுநடுங்கி விடுவர்.
குதிரை பயம்(EQUINOPHOBIA)
நடிகர் ராபர்ட் பாட்டின்ஸனுக்கு குதிரைகள் என்றாலேயே பயம். இவரது படமான வாடர் ஆஃப் எலிபண்ட்ஸ் படத்தில் வரும் குதிரைக் காட்சியை எடுப்பதற்குள் படக்குழுவினருக்கு போதும் போதும் என்றாகி விட்டது!
கரப்பு, சிலந்தி, பாம்பு பயம்(KATSARIDAPHOBIA, ARACHNOPHOBIA, OPHIDIOPHOBIA)
இதற்கு பட்டியலே வேண்டாம். டைரக்டர் ஸ்டீவன் ஸ்பில்பெர்க்கிலிருந்து நமது வீட்டு அம்மணிகள் வரை இந்த லிஸ்டில் அடக்கம்!
கண்ணாடி பயம்(EISOPTROPHOBIA)
பேவாட்ச் படத்தில் நடித்த பிரபல நடிகை பமீலா ஆண்டர்ஸனுக்குக் கண்ணாடியைக் கண்டாலேயெ பயம்.
350 போபியாக்களையும் அதற்குப் பயப்படுவர்களையும் ஒரு பட்டியல் எடுத்துத் தொகுக்க ஆரம்பித்தால் அது போபியா களஞ்சியம் ஆகிவிடும்!
ஆனால் இதற்கெல்லாம் சிகிச்சை உண்டு. அது சரி, இந்த சிகிச்சைக்கே பயம் என்றால் என்ன செய்வது?!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
1
2
3
4
5
6
← 7
8
9
Across
1. (5 letters)- This river joins Bhadra to form a big river.
4. (5) capital of Bihar; old name Pataliputra.
7. (4) Vedic Wind God←
8.(6) Arjuna’s son by a Naga princess Ulupi who fell in the battle on the eighth day, fought on the side of the Pandavas, killed by the Rakshasa Alumbusha
9. (6) name of a river; Sanskrit meaning is good, auspicious, happy
Down
1.River flowing through Madhya Pradesh, Gujarat and Maharashtra; meaning Heat, Warmth. (5 letters)
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும், பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும், இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால் மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே!— அப்பர்.
****
கங்கைகொண்ட சோழபுரம் நடராஜர் சிலையின் புன்சிரிப்பினைக் காணக் கண் கோடி வேண்டும்!
கங்கை கொண்ட சோழபுரம் அரியலூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூர் ஆகும். 250 ஆண்டு களுக்கு பிற்கால சோழ பேரரசின் தலைநகரமாக விளங்கியது
யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களிலும் இக்கோவில் பட்டியலிடப்பட்டுள்ளது.
பிரதான கோவில் கோபுரம் 55 மீ உயரம் கொண்டதாகவும் கம்பீரமானதாகவும் உள்ள கட்டிடம் ஆகும்.
****
சிவன் என்றால் சாந்தம்; ருத்ரன் என்றால் கோபம். நம் எல்லோருக்கும் இந்த இரண்டு குணங்களும் உண்டு . ஆனால் ஒரு வித்தியாசம் ; சிவன் கோபத்தோடு இருந்தபோதிலும் திரி புரங்களில் உள்ள அசுரர்களை அழிப்பதற்கு ஒரு சிரிப்புதான் சிரித்தார். அசுரர்களின் மூன்று கோட்டைகளும் அழிந்தன. .சிவன் சிரிப்பில் அசுரர் கோட்டைகள் அழிந்தன என்ற வரலாறு திருவதிகை தேவார விளக்கக் கதைகளில் வருகிறது
மேலும் திருஞானசம்பந்தர் பாடியருளிய திருமழபாடி பதிகத்திலும் வருகிறது
பாடல் எண் : 7
விண்ணில்ஆர் இமையவர் மெய்ம்மகிழ்ந்து ஏத்தவே
எண்இலார் முப்புரம் எரிஉண நகைசெய்தார்,
கண்ணினால் காமனைக் கனல்எழக் காய்ந்தஎம்
அண்ணலார் உறைவிடம் அணிமழ பாடியே.
பொழிப்புரை :சிவபெருமான் விண்ணுலகத்துத் தேவர்கள் மெய்ம்மகிழ்ந்து போற்றத் தம்மை வழிபட்டு உய்யும் எண்ணமில்லாத அசுரர்களின் முப்புரங்களைச் சிரித்து எரியுண்ணும்படி செய்தவர் . நெற்றிக்கண்ணைத் திறந்து நெருப்புப்பொறி பறக்க மன்மதனை எரித்த எம் தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் அழகிய திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும் .
மேலும் ஒரு பாடலில் அப்பர் சுவாமிகள் கொவ்வைப் பழம்போல சிவந்த சிவனின் புன்சிரிப்பைப் பாடுகிறார் . இதை அப்படியே சிற்பத்தில் வடித்துள்ளார் ஒரு சிற்பி. அந்த ஒரு சிலையக் காண்பதற்காகவாவது கங்கை கொண்ட சோழபுரத்துக்குச் செல்லவேண்டும்.
இந்தச் சிலை கர்ப்பக்கிரகத்தில் இல்லை. வெளிப்புறச் சுவர்களில் உள்ள பல அழகான சிலைகளில் சிரிக்கும் நடராஜரும் ஒன்று . சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாடு தொல்பொருட்த் துறை இயக்குனர், உலகப் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் டாக்டர் இரா நாகசாமி ஏற்பாடு செய்த ஆயிரம் மைல் தூர இலவச வரலாற்றுப் பயண பஸ்ஸில் நான் ஒருவன் மட்டும் பத்திரிகையாளன்–(மதுரை தினமணி உதவி ஆசிரியர்) அப்போது டாக்டர் நாகசாமி அப்பர் பாடலை மேற்கோள்காட்டி எல்லா சிற்பங்களையும் எங்களுக்கு விளக்கினார். இன்றும் அது நினைவில் நிற்கிறது.
கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராக்கும் எண்ணத்துடன் மாபெரும் நகரினை உருவாக்கினான் ராஜேந்திர சோழன். அவன் தந்தை ராஜராஜன் கட்டிய தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலைப்போல கட்ட எண்ணினான். ஆனால் முழுவெற்றி கிடைக்கவில்லை. இது இமிடேஷன் கோல்டுதான்; அசல் அபராஜிதத் தங்கம் இல்லை. மேலும் இப்போது ஐம்பது சதவிகிதம் பாழடைந்த நிலையில் உள்ளது தலைநகரச் சிறப்பு இல்லை. கர்நாடக ஹம்பி நகரம் போல சிறபங்களுக்கு மட்டுமே பிரசித்தம்.
கங்கை வரை படைகளை அனுப்பி புனித கங்கை நீரைக் கொண்டுவந்து விட்டுப் புனிதமாக்கியதால் கங்கை கொண்ட சோழபுரம் என்ற பெயர் உருவானது போகும் வழியில் எதிர்த்தோரை அடக்கி வென்றான். அவன் கொண்டுவந்த கங்கை நீரை ஏரியில் விட்டு சோழ கங்கம் என்ற நீர்நிலையினையும் உருவாக்கினான் .
நான் 2025 மார்ச் 17-ஆம் தேதி சென்றபோது கர்ப்பக்கிரகத்தில் விளக்குகள் எரிந்தன. மாபெரும் சிவ லிங்கத்தினைத் தரிசித்தேன். அப்போதுதான் குருக்கள் வேறு ஒரு சந்நிதிக்குச் சென்று கொண்டிருந்தார். இது எனது மூன்றாவது விஜயம் என்பதால் வேகமாகப் புகைப்படங்களை மட்டும் எடுக்க வலம் வந்தேன். கல்லும் முள்ளும் கால்களைக் குத்தின. தொல்பொருட்த் துறைக் காவலர்கள் இல்லாவிடில் இது கேடிகளின் உறைவிடம் ஆகிவிடும்
கும்பகோணம்- சென்னை சாலையில் ஜயம் கொண்டம் ஊருக்கு அருகி உள்ளது சாலையில் செல்லும் எவரும் தவறவிட முடியாத மா பெரும் கோபுரம் எல்லோரையும் வரவேற்கும். பல இடங்களில் கல்வெட்டுகளையும் காணமுடிகிறது.
வெளிப்புற சுவரில் உள்ள ஒவ்வொரு சிலையினையும் ரசித்துப் பார்க்கலாம்; அவ்வளவு அழகு.
—subham—
Tags- காணக் கண் கோடி வேண்டும் , கங்கைகொண்ட சோழபுரம் , நடராஜர் புன்சிரிப்பு , அப்பர், சம்பந்தர் , தேவாரம் , டாக்டர் இரா நாகசாமி, ராஜேந்திர சோழன்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
22-3-2025 மாலைமலரில் வெளியாகியுள்ள கட்டுரை!
சுற்றுலா இடங்கள்!
மகிழ்ச்சி அலைகள் வீசும் கோவா கடற்கரைகள்!
ச. நாகராஜன்
கோடையின் உக்கிரம் தாங்க முடியாத நிலையில் சற்று உடலும் மனமும் ஓய்வெடுக்க உல்லாசச் சுற்றுப் பயணம் மேற்கொள்வது அவசியமே!
கடற்கரையும் இருக்க வேண்டும்; நீர் வீழ்ச்சியும் வேண்டும்; பல சரித்திரப் பிரசித்தி பெற்ற கோட்டைகளையும் பார்க்க வேண்டும், தவறாமல் சுவாமி தரிசனமும் செய்ய வேண்டும் – ஒரு இடம் சொல்லுங்கள் என்றால் நம் கண் முன் பளிச்சென்று தோன்றுவது கோவா தான்!
துடிப்பும் உல்லாசமும் உள்ள கேளிக்கை நகரம் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் கோவா ஒரு சொர்க்கம் தான்!
இந்தியாவின் மேற்குப் பக்க கடற்கரையாக அரபிக் கடலோரம் அமைந்துள்ளது கோவா.
மகராஷ்டிர மாநிலம் வடக்கிலும், கர்நாடக மாநிலம் தெற்கிலும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் கிழக்கிலும் அரபிக் கடல் மேற்கிலும் அமைந்திருக்க இந்தியாவின் 25வது மாநிலமாகத் திகழும் கோவாவிற்கு பஸ், ரயில், விமானம் மூலமாக எளிதில் பயணப்பட்டு அடையலாம்.
கோவாவின் தலை நகர் பஞ்சிம்.இது பங்களூரிலிருந்து 592 கிலோ மீட்டரிலும் மும்பையிலிருந்து 593 கிலோ மீட்டரிலும் அமைந்துள்ளது.
கோவா இரு பகுதிகளாக வட பகுதி என்றும் தென் பகுதி என்றும் பிரிக்கப்பட்டுள்ளது. சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களை அவரவர் பட்ஜெட்டையும், விடுமுறை நாட்களையும் பொறுத்துத் திட்டமிட்டுப் பார்க்கலாம்.
முக்கியமான சில இடங்களை இங்கு பார்ப்போம்.
சுற்றுலா பயணிகள் முக்கியமாக வருவது இங்குள்ள பல கடற்கரைகளுக்காகத் தான்! சுமார் 77 மைல் நீளமுள்ள கடற்கரைப் பகுதி இங்கு உள்ளது.
சுமார் இருபது லட்சத்திற்கும் மேற்பட்ட அளவில் பயணிகள் இங்கு வருகின்றனர். இவற்றில் அயல்நாட்டிலிருந்து வருபவர்கள் சுமார் ஐந்து லட்சம் பேர்கள்.
கோல்வா பீச்: தெற்கு கோவாவில் உள்ள இந்தக் கடற்கரையில் நீர் விளையாட்டுக்களில் ஆர்வம் உள்ளோர் செல்லலாம். ஜெட் ஸ்கீயிங், ஸ்பீட் போட்டிங் உள்ளிட்ட அனைத்தும் இங்கு மிகவும் பிரபலம். கூட்டமோ கூட்டம் என்று ஜே ஜே என்று இருக்கும் இந்த பீச் மனதிற்கு இதத்தைத் தரும் இடமாகும். வெண்மணல் கடற்கரையுடன் தென்னந்தோப்புகளும் உள்ள இது சால்செட் என்ற ஊரில் உள்ளது. இங்கு தேனிலவு கொண்டாட வருபவர்கள் அதிகம்.
பலோலம் பீச்: தெற்கு கோவாவில் உள்ள இந்த பிறை வடிவிலான பீச் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான இடம். இயற்கை எழிலை அமைதியாக ரசிக்கலாம்.
மோர்ஜிம் பீச்: இது வட கோவாவில் அமைந்துள்ளது. இங்கு ரஷிய பயணிகள் அதிகம் வருகின்றனர். ஆகவே இது குட்டி ரஷியா என அழைக்கப்படுகிறது. இது ஆலிவ் ரிட்லி என்ற ஆமைகள் வாழும் இடமும் ஆகும்.
பாகா பீச்: வட கோவாவில் உள்ள இந்த பீச்சிலும் நீர் விளையாட்டுகள் உள்ளன.
பஞ்சிம் பேருந்து நிலையத்திலிருந்து இது 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதைத் தொடர்ந்து உள்ள கடற்கரைகள் கண்டோலிம் மற்றும் கலங்குட் கடற்கரைகள்!
கண்டோலிம் பீச்: கடற்கரையில் படுத்துக் கொண்டு ஓய்வெடுக்க வசதியாக இங்கு படுக்கைகள் உள்ளன. கட்டணம் செலுத்தி இவற்றைப் பயன்படுத்தலாம். வாடகைக்குக் கிடைக்கும் இரு சக்கர வாகனங்களைஎ எடுத்துக் கொண்டு ஒவ்வொரு கடற்கரையாகச் செல்லலாம்.
அயல்நாட்டினர் அதிகமாக வரும் கடற்கரை இது.
அஞ்சுனா பீச்: வட கோவில் உள்ள இந்த பீச் பார்டிகளுக்குப் புகழ் பெற்றது. இங்கு ஏராளமான கடைகளும் உணவகங்களும் உள்ளன. விதவிதமான பொருள்களை வாங்குவதற்கான ஷாப்பிங் இடம் இது தான்.
அகுவாடா கோட்டையும் கடற்கரையும்: போர்த்துகீசியரால் பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை இது. இங்குள்ள கலங்கரை விளக்கத்திலிருந்து கடற்கரையைப் பார்ப்பது கண் கொள்ளாக் காட்சியாகும்.
மோலெம் தேசியப் பூங்கா: இது ஒரு வனவிலங்கு சரணாலயம். வனப்பகுதியில் உள்ள விலங்குகளைப் பார்க்க சஃபாரியில் செல்லலாம்.
தூத்சாகர் நீர்வீழ்ச்சி: கோவா செல்பவர்கள் பார்க்க வேண்டிய ஒரு முக்கியமான இடம் இது. தூத் சாகர் என்றால் பால் கடல் என்று பொருள். மண்டோவி ஆற்றின் மீது அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி 1017 அடி உயரம் கொண்டது. பகவான் மகாவீர் சரணாலயம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மொல்லம் தேசிய பூங்காவில் அமைந்துள்ளது இது. நான்கு அடுக்குகளைக் கொண்ட இந்த நீர்வீழ்ச்சி இந்தியாவின் உயரமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும்.
காவேலம் ஶ்ரீ சாந்த துர்க்கா கோவில்: வட கோவாவில் போண்டா நகருக்கு அருகில் காவேலம் கிராமத்தில் அமைந்துள்ள இந்தக் கோவில் பழமையான புராண வரலாறைக் கொண்டது. சிவனுக்கு விஷ்ணுவுக்கும் ஒரு காலத்தில் நடந்த போரில் துர்க்கா தேவி இருவரையும் ஒவ்வொரு கரத்தில் பிடித்து சமாதானத்தை ஏற்படுத்தினார் என்கிறது ஐதீக வரலாறு. இங்குள்ள பிரமிடு வடிவிலான முகப்பு மண்டபமும் சபா மண்டபமும் அழகிய வடிவமைப்புக் கொண்டவை. ஏராளமான பக்தர்கள் கூடும் இந்தக் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாகும்.
சப்போரா கோட்டை மற்றும் கடற்கரை: வட கோவாவில் பர்தேசு பகுதியில் உள்ள சப்போரா கோட்டை சப்போரா நதியருகில் உயர்ந்து அமைந்துள்ள கோட்டையாகும். நீண்ட வரலாற்றைக் கொண்ட இந்தக் கோட்டையை அக்பர் தனது தளமாக ஆக்கிக் கொண்டு போர்த்துக்கீசியரை எதிர்த்தார். எல்லாத் திசைகளையும் பார்க்கக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது இது. கோட்டைக்கு அருகில் உள்ளது சப்போரா கடற்கரை.
அர்வேலம் குகைகள்: இந்தக் குகைகளில் பாண்டவர்கள் தங்கள் வனவாசத்தின் போது தங்கி இருந்ததால் இந்தக் குகைகள் பாண்டவர் குகைகள் என அழைக்கப்படுகின்றன. சின்குவேரிம் கடற்கரைக்கு அருகில் உள்ளது இது.
தேவாலயங்கள்: கோவாவில் ஏராளமான கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளன. பாம் ஜீசஸ் பசிலிக்கா எனப்படும் குழந்தை ஏசு பசிலிக்கா கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயமாகும். உலகப் பாரம்பரியங்களுள் ஒன்றாகப் புகழ் பெற்றுள்ள இதில் தான் புனிதர் பிரான்ஸிஸ் சேவியரின் உடல் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எடுக்கப்பட்டு வழிபாட்டிற்காக வைக்கப்படுகிறது.
கோவாவிற்குச் செல்ல விரும்பும் பயணிகள் தங்கள் திட்டத்தை முதலில் வகுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளா அல்லது இரு நாட்களா அல்லது பல நாட்கள் தங்கப் போகிறோமா என்று தீர்மானித்து விட்டால் பத்து இடங்களைப் பார்ப்பது முதல் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களைப் பார்க்கலாம்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
On my way to Chennai from Kumbakonam Srivathsam Guest House, I visited the two famous places again on 17-3-2025. When Dr R Nagaswamy, Director of Archaeology, Tamil Nadu Government organised a FREE tour for teachers in 1977, I also joined the group as a journalist from Dinamani newspaper. He took us from Chidambaram to Trivandrum covering various archaeological monuments. At every place he gave us very valuable information. At Gangaikonda chozapuram he rightly said that the smiling Nataraja statue reflected Appar’s Tevaram where he praised the smile of Lord Shiva. But Appar lived long before Gangaikonda chozapuram temple was built. My feeling is that the sculptor must have remembered the Tevaram hymn and sculpted the most beautiful Nataraja (Shiva) .
The Tevaram in Tamil goes as
Kuniththa puruvamum Kovvai sevvayir punsirippum
Kovvai sevvayir punsirippum= smile in the red mouth wich is red like Kovai fruit.
That Nataraja is not the main deity. It is only on the outer wall of the main sanctum sanctorum. Along with the Nataraja statue many other gods are sculpted. When I went there one foreigner was taking pictures of all the sculptures. It is under the protection of the Tamil Nadu Archaeology department. So is closed in the evening.
I saw a huge Shiva linga with lighted lamps. The priest was going to another shrine in the complex. A big student group landed there while we spent half hour there.
Where is it?
Gangaikonda Cholapuram Temple is located in Jayankondam, Ariyalur district, It was built by Rajendra Choza, son of the great Raja raja choza. He imitated his father’s temple built in Thanjavur. He made this place as his capital city and anointed it with holy Ganaga water. To get the Ganges water he had to cross many kingdoms in the north. He conquered all who opposed him and so the city was called Gangaikonda Cholapuram meaning city of one who conquered the kings of Ganges plain. It is a 1000 year old monument; but his capital city lost lustre in course of time. Now only the monument remains in a poor condition unlike Thanjavur big temple. Here also we find a huge Nandhi (bull) and huge Shiva linga like Thanjavur. One may see his inscriptions on the stone walls. Beautiful sculptures protected by the department of archaeology attract tourists.
****
Smiling Nataraja
under Ganapathi sculpture, Tamil inscriptions can be seen.
london swaminathan in Gangaikondacholapuram
Parikkal Lakshmi Narasimha swamy Temple
Once again I wanted to refer to Dr R Nagaswamy’s archaeological tour. Though I lived in Madurai until the BBC World Service brought me to London on 1st January in 1987, I did not know the significance of Narasimmam village near Madurai. There is a beautiful Narasimga swamy cave temple with Vatteluthu Inscriptions of Pandyas clearly visible in the sanctum sanctorum. Dr R Nagaswamy read the whole inscription to our group and explained it. Later I went there several times. One can see Jain caves and inscriptions in the nearby rocks.
Another Narasimhar temple is Singaperumal koil. And the third Narasimha swamy temple I visited for the second time on 17-3-2025 is the Lakshmi Narasimha Swamy temple at Parikkal. When I went there two years ago, the renovation work was going on and so we did see only the Urchava Murti. Now I was fortunate to see the beautiful Mulavar , the main idol in the Sanctum sanctorum/Garabhagriha.
Being Swati Nakshtra/star day, there was a big crowd. The significance of the Temple is that there is a Hanuman idol in the Garbhagriha.
The temple is located near Ulundurpet . It is a small temple built 1000 years ago by a local king named Vasantaraja. People who follow Madhvacharya frequent this place.
Moolavar /main deity– Lakshminarasimha Swamy Thayar / goddess– Kanakvalli Vimanam/ top of the tower – Ashtakona Vimanam
Lord Hanuman In this temple, one can find 2 Anjaneya idols in the same sannidhi. A unique feature here is that, unlike other temples, Anjaneya gets the 2nd right of Thirumanjanam after Lord Narasimha (in other temples, Thaayar/goddess is the one who gets the Thirumanjanam after the Lord).
Since Lakshmi is embracing Lord Narasimha, the idol looks serene/peaceful. In most of the places , Narasimha is sculpted with angry face, who killed the demon king Hiranyakasipu.
temple door
Location:
Located around 25kms South West of Villupuram and 3kms west of the Kedilam Cross Road off the Chennai-Trichi National Highway.
—subham—
Tags- Gangaikonda chozapuram, cholapuram, Parikkal, Narasimha swamy temple, Dr R Nagaswamy, Rajendra Choza, Smiling Nataraja, Appar hymn,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கும்பகோணம் ஸ்ரீவத்சம் முதியோர் இல்லத்திலிருந்து சென்னைக்குத் திரும்புகையில் பரிக்கல் நரசிம்ம சுவாமி கோவிலுக்கு 17-3-2025 அன்று மீண்டும் சென்றேன். மூலவரின் திவ்ய தரிசனம் கிடைத்தது .
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் அருகில் உள்ள பரிக்கல் கிராமத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோயில் இருக்கிறது . 22-2-2023 அன்று கும்பகோண வட்டார கோவில்கள் தரிசனத்தை முடித்துக்கொண்டு சென்னைக்குத் திரும்புகையில் பரிக்கல்லுக்குச் சென்றோம். ஆனால் சிறிது ஏமாற்றம். நான்கு ஆண்டுகளாக நடைபெறும் திருப்பணி வேலைகள் காரணமாக மூலவரை தரிசிக்கமுடியாதபடி பக்கத்துக் கொட்டகையிலுள்ள உற்சவரைத் தரிசித்தோம் , சென்ற ஆண்டு கும்பாபிஷேகம் நடந்ததால் இப்போது மூலவரின் திவ்ய தரிசனம் கிடைத்தது .
சுவாதி நட்சத்திர நாட்களில் நரசிம்மருக்கு விஷேச அபிஷேக ஆராதனைகளை நடைபெறும்; நாங்கள் சென்ற தினம் சுவாதி நட்சத்திர தினம் என்பதால் கூட்டம் அதிகம் இருந்தது இந்தக் கோவிலின் சிறப்பு சாந்த முகம் உடைய நரசிம்மர் ஆகும் .
நரசிம்மர் மஹிமை
இந்தக் கோவில் ஆயிரம் ஆண்டுப் பழமை உடையது. மத்வ பீடத்தைச் சேர்ந்த வியாசராஜ சுவாமிகள் 738 இடங்களில் ஆஞ்சனேயர் கோவில் அமைக்க எண்ணி இந்தக் கிராமத்தையும் தேர்ந்தெடுத்தார் . ஆனால் பல தடைகள் ஏற்பட்டன. பின்னர், வசந்த ராஜா என்பவர் கோவில் கட்ட முற்பட்டபோதும் தடைகள் ஏற்பட்டதாம். அதற்குப்பின்னர் கனகவல்லி சமேத லட்சுமி நரசிம்ம மூர்த்தி ஸ்தாபிக்கப்பட்டது. தாயாரை அணைத்தவண்ணம் பெருமாள் இருப்பதால், நரசிம்மனின் உக்கிரம் தணிந்து , அருள் சுரக்கும் கோவில் இது .
இங்கு வருவோருக்குப் பதவி உயர்வு கிடைக்கும், திருமணத் தடைகள் நீங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மேலும் மன நோயால் பாதிக்கப்பட்டோரின் நோயும் நீங்கும்.
இங்கு மூலவருடன் ஆஞ்சனேயரும் உள்ளார். இங்கு உள்ள ஒரு ஆஞ்சாசனேயர் முன்னாள் நெல் தானியத்தைக் கொட்டி அதில் தங்கள் கோரிக்கைகளை எழுதும் நம்பைக்கையும் உளது .
அப்பரிசிகள் கிராமத்தின் ஊரின் பெயர் பற்றிய எனது கருத்து இதோ:
கிராம மக்கள் திரித்த ஊர்ப்பெயர் !
PRAHLADA, DEMON’S SON = PARAKALA= PARIKKAL
இரு முறை கோவில் கட்டுவதில் தடை ஏற்பட்டதற்கு பரகால என்ற அசுரனே காரணம் என்றும் அதனால் அவன் வேண்டிக்கொள்ள, ஊர்ப்பெயரை பெருமாள் பரகால என்றிருக்க அனுமத்தித்ததாகவும் தவறாக கதை கட்டப்பட்டிருக்கிறது. உண்மையில் நரசிம்மர் அழித்தது ஹிரண்ய கசிபு என்ற அசுரனை. அவர் அப்படிச் செய்ததற்கு காரணம். நாராயணன் பெயரை சொல்லிக்கொண்டிருந்த பிரஹ்லாதனைக் காப்பாற்றுவதற்காக என்பது எல்லோரும் அறிந்த கதை .
பிரஹலாதன் பெயர் மருவி பரகால என்றும் பரிக்கல் என்றும் மருவியது என்பதே பொருத்தம்!!
தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று நரசிம்மரை நமக்குக் காட்டிய பிரஹலாதன் பெயரை கிராம மக்கள் தெளிவாக எழுதி ஒட்டவேண்டும் . பரகால அரக்கன் அல்ல; பக்தன்; அதாவது பிரகலாதன்!
கோவிலுக்கு வெளியே பூ, துளசிமாலை விற்கப்படுகின்றன. நாங்கள் துளசி மாலை வாங்க்கிச் சென்றோம். பார்ப்பதற்கு இகவும் லட்சணமான மூர்த்தி என்பதால் அனைவரும் தரிசிக்க வேண்டிய தலம் இது . கோவில் மிகச் சிறியது . கல்வெட்டுகளும் இருப்பதாக கேள்விப்பாட்டேன். ஆயினும் நாங்கள் அவற்றைக் காண முடியவில்லை .
temple door carvings at Parikkal Narasimhar temple
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
COLLECTED FROM NATIONAL NEWSPAPERS AND EDITED BY ME
ஞானமயம்வழங்கும்உலகஇந்துசெய்திமடல் 23-3-2025
செய்திகளைத்தொகுத்தவர்லண்டன்சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த்தும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயனும் வாசித்து வழங்கும் செய்தி மடல்
அனைவருக்கும்வைஷ்ணவி ஆனந்த் வணக்கம்
இன்றுஞாயிற்றுக்கிழமைமார்ச் 23–ம்தேதி 2025-ம்ஆண்டு
****
முதலில் பகவத்கீதைசெய்தி
பகவத்கீதைபற்றிசுனிதாவில்லியம்ஸ்
9 மாதங்களாக விண்வெளியில் சிக்கி தவித்த சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பிய நிலையில் அவரை பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவர் மன அமைதி பெறுவதற்காக விண்வெளிக்கு பகவத் கீதையையும் கொண்டு சென்றார் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது
நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஒன்பது மாதங்களுக்கும் மேலாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இருந்தனர்.
அவர்களின் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக மீண்டும் பூமிக்கு திரும்புவதில் தாமதத்தை ஏற்படுத்தின.
இப்போது இவர்கள் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம் 17 மணிநேரம் பயணம் செய்து பூமிக்கு திரும்பியுள்ளனர்.
புளோரிடா கடற்பகுதியில் இறங்கிய விண்கலத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், நிக் ஹேக், அலெக்ஸாண்டர் கோர்புனோவ் ஆகிய 4 விண்வெளி வீரர்கள் வெளியே அழைத்துவரப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனிடையே, நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு செல்லும் போது தன்னுடன் பகவத் கீதை மற்றும் சமோசாவை எடுத்துச் சென்றுள்ளார். அதோடு அவர் விநாயகர் சிலையையும் கொண்டு சென்றார் என்று சொல்லப்படுகிறது.
இது குறித்து சுனிதா கூறுகையில், “பகவத் கீதை மற்றும் சமோசா இவை இரண்டுமே என்னுடைய மனதிற்கு மிகவும் நெருக்கமானவை. பகவத் கீதையை எனது தந்தை எனக்கு பரிசளித்தார்.
பூமியில் உள்ள மனிதர்கள் போலவே விண்வெளியிலும் நான் இருக்கிறேன் என்பதை உணர்த்துவதற்கு இது உதவுகிறது” என்றார்.
****
துளசி செடியை அவமதித்த ஹக்கீம் மீது வழக்கு
புனித துளசி செடி அவமதிப்பு: குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க கேரள ஐகோர்ட் உத்தரவு
கேரளாவில் துளசி மாடத்தை அவமதித்ததாக எழுந்த குற்றச்சாட்டில் வீடியோ பதிவேற்றியவர் கைது;
குற்றத்தில் ஈடுபட்டவரை முதலில் கைது செய்ய காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.
“துளசித்தாராவை (துளசி மாடம்) அவமதித்ததாக” குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு எதிராக “சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க” கேரள உயர் நீதிமன்றம், மாநில காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. துளசித்தாரா என்பது புனித துளசி செடியைக் கொண்ட வீடுகளுக்கு முன்னால் உள்ள ஒரு உயர்ந்த மேடை ஆகும்.
ஆலப்புழாவைச் சேர்ந்த 32 வயது ஸ்ரீராஜ் ஆர்.ஏ.,வின் ஜாமீன் மனுவை பரிசீலித்த நீதிபதி பி.வி. குன்ஹிகிருஷ்ணன் அமர்வு காவல்துறைக்கு இந்த உத்தரவை பிறப்பித்தது. அப்துல் ஹக்கீம் என்ற நபர் “துளசித்தாராவை அவமதிப்பது” போன்ற வீடியோவை பதிவேற்றிய குற்றச்சாட்டில் ஸ்ரீராஜ் கைது செய்யப்பட்டார்.
திருச்சூரில் உள்ள குருவாயூரில் உள்ள கோயில் காவல் நிலையத்தில் மதங்களுக்கு இடையே பகைமையை ஊக்குவித்தல் மற்றும் தொந்தரவு செய்ததாக ஸ்ரீராஜ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது மற்றும் அப்துல் ஹக்கீம் இன்னும் சுதந்திரமாக இருக்கும்போது ராஜ் மீது போலீசார் நடவடிக்கை எடுத்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
“துளசித்தாரா இந்து மதத்தைப் பொறுத்தவரை ஒரு புனிதமான இடம். மேற்கண்ட அப்துல் ஹக்கீம் தனது முடிகளைப் பறித்து ‘துளசித்தாரா’வில் வைப்பதை வீடியோவில் காணலாம். இது நிச்சயமாக இந்து மதங்களின் உணர்வுகளைப் புண்படுத்தும். அப்துல் ஹக்கீம் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிகிறது. அப்துல் ஹக்கீம் குருவாயூர் கோயில் வளாகத்தில் உள்ள ஒரு ஹோட்டலின் உரிமையாளர் என்று தெரிகிறது,” என்று நீதிமன்றம் கூறியது.
மேலும், “இப்போது கூட அந்த ஹோட்டல் செயல்பட்டு வருகிறது,. அத்தகைய நபர் காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்யாமல் விடுவிக்கப்படுகிறார், மேலும் மனுதாரர் இங்கு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்” என்று நீதிமன்றம் கூறியது.
அப்துல் ஹக்கீம் ஒரு மன உளைச்சலுக்கு ஆளான மனிதர் என்று அரசு தரப்பு வாதிட்டது, ஆனால் நீதிமன்றம் அந்த வாதத்தை நிராகரித்தது, அவர் எப்படி தொடர்ந்து கோவிலின் வளாகத்திற்கு வெளியே செயல்பட முடியும் என்று கேள்வி எழுப்பியது. “அவர் ஒரு மனநோயாளி என்றால், அவர் எப்படி வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுகிறார் என்பதும் புலனாய்வு அதிகாரியால் விசாரிக்கப்பட வேண்டிய விஷயம்” என்று நீதிமன்றம் கூறியது.
திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் பிற மதத்தை சேர்ந்தவர்கள் பணியில் இருந்தால், அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவார்கள் என்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
தனது பேரனின் பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்துடன் திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோவிலுக்குச் சென்ற முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, தரிசனத்துக்குப் பிறகு தரிகொண்டாவில் உள்ள வெங்கமாம்பா அன்னதான விடுதியில் ஒரு நாள் பிரசாதம் விநியோகத்துக்காக ரூ. 44 லட்சத்தை நன்கொடையாக வழங்கினார். மேலும், குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து பக்தர்களுக்கு பிரசாதம் பரிமாறினார்.
நாட்டின் அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் வெங்கடேஸ்வர சுவாமி கோவில்கள் கட்டப்படும். வெளிநாடுகளிலும் வெங்கடேஸ்வர சுவாமியின் கோவில்கள் நிறுவப்பட வேண்டும்என பல பக்தர்கள் விரும்புகிறார்கள் என்று பத்திரிகையாளருடன் பேசுகையில் தெரிவித்தார்
ஏழு மலை பகுதிக்கு அருகில் வணிகமயமாக்கல் கூடாது. இந்தப் பகுதியை ஒட்டி மும்தாஜ் ஹோட்டலுக்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டது. 35.32 ஏக்கர் நிலப்பரப்பில் கட்ட திட்டமிடப்பட்ட ஹோட்டலுக்கான ஒப்புதலை ரத்து செய்ய அரசாங்கம் இப்போது முடிவு செய்துள்ளது. ஹோட்டல் நிர்வாகம் சைவ உணவு மட்டுமே வழங்க முன்மொழிந்திருந்தாலும், இந்தப் பகுதியில் எந்தவொரு தனி நபருக்கும் அனுமதி வழங்கப்படாது என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
24 கிளேமோர் கண்ணிவெடிகளால் நான் குறிவைக்கப்பட்டேன். அத்தகைய தாக்குதலில் இருந்து தப்பிப்பது சாத்தியமற்றது. ஆனால், நான் வெங்கடேஸ்வரரின் தெய்வீக அருளால் மட்டுமே உயிர் பிழைத்தேன். இவ்வளவு பெரிய குண்டுவெடிப்பில் இருந்து நான் தப்பித்தேன் என்பது இறைவனின் மகத்தான சக்தியை நிரூபிக்கிறது என்றும் சந்திரபாபு நாயுடு கூறினார் .
*****
ஜெகநாதர் ரத யாத்திரை விவகாரம்: இஸ்கான்- பூரி கோவில் நிர்வாகம் பேச்சுவார்த்தை
ஒடிசாவின் பூரி நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் ஜெகநாதர் ரத யாத்திரை உலக பிரசித்தி பெற்றது. இந்த ரத யாத்திரையானது இந்து நாட்காட்டியின் ஆஷாட மாதத்தில் வேத வழிகாட்டுதலின்படி குறிப்பிட்ட நாளில் நடத்தப்படும். பூரியில் கடந்த ஆண்டு ஜூலை 7-ம் தேதி தொடங்கி 15-ம் தேதி வரை ரத யாத்திரை நடைபெற்றது. பூரி நகரில்ரத யாத்திரை நடைபெறும் போது நாட்டின் பல்வேறு இடங்களிலும் ரத யாத்திரை நடத்தப்படும். இஸ்கான் அமைப்பு சார்பில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இந்த காலகட்டத்தில் ஜெகநாதர் ரத யாத்திரை நடத்தப்படும்.
வெளிநாடுகளில் இஸ்கான் நடத்தும் ஜெகநாதர் ரதயாத்திரையானது, பூரி ரத யாத்திரை மரபுகளில் இருந்து விலகி, வேதப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட நாள் அல்லாமல் வேறுநாட்களில் நடத்தப்படுகிறது. இந்து இந்துக்களின் மத உணர்வை காயப்படுத்துவதாக பூரி கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் கவலை தெரிவித்தனர். கடந்த ஆண்டு மெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நவம்பர் 9-ம் தேதி நடத்தவிருந்த ரத யாத்திரை, பக்தர்களின் எதிர்ப்பு மற்றும் பூரி மன்னரின் எதிர்ப்பைத் தொடர்ந்து கைவிடப்பட்டத.
இந்த விவகாரத்தில் கருத்தொற்றுமையை ஏற்படுத்தி, மரபுகளின் படி ஒரே நாளில் ரத யாத்திரையை நடத்துவது தொடர்பாக இஸ்கான் அமைப்புடன் பூரி ஜெகநாதர் கோவில் நிர்வாகம் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது. பூரி மன்னர் தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் ஜெகநாதர் கோவில் நிர்வாகிகள் மற்றும் இஸ்கான் பிரதிநிதிகள் பங்கேற்றனர். காலந்தவறி ரத யாத்திரையை நடத்துவது, கோடிக்கணக்கான பக்தர்களின் மத உணர்வுகளை காயப்படுத்துவதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எந்தவித முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் முடிந்தது .
இதுபற்றி ஸ்ரீ ஜெகநாதர் கோவில் நிர்வாகத்தின் தலைமை நிர்வாகி அரவிந்த பதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இன்றைய சந்திப்பு சுமூகமாக நடைபெற்றது.எங்கள் கவலைகளை இஸ்கான் பிரதிநிதிகளிடம் தெரிவித்தோம். மேலும் பூரியில் நடத்தப்படும் ரத யாத்திரை அட்டவணைப்படி உலகம் முழுவதும் நடத்தும்படி கேட்டுக் கொண்டோம் என்று அரவிந்த பதி சொன்னார்.
*****
அறநிலையத்துறை அதிகாரிகள் இடமாற்றம்
சென்னை: சென்னை: ஹிந்து சமய அறநிலையத்துறையில், ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை, ராமேஸ்வரம் கோவில் இணை ஆணையர்கள் உட்பட, ஐந்து பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விபரம்:
ஹிந்து சமய அறநிலைய துறையில், ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை, ராமேஸ்வரம் கோவில் இணை ஆணையர்கள் உட்பட, ஐந்து பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கஜினி முகமதுவின் உறவினர் சையது சாலார் மசூத் காஜி விழாவுக்கு தடை
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்துக் கோவில்களை சூறையாடி விக்கிரகக்ங்களை உடைத்து தங்கத்தையும் ரத்தினைக் கற்களையும் கஜினி நகருக்கு எடுத்துச் சென்றவன் கஜினி முகமது .
உத்தரப்பிரத்தேசத்தில் உள்ள சம்பலில் ‘நேஜா’ எனும் பெயரில் ஆண்டுதோறும் முஸ்லிம்கள் ஒரு விழா நடத்துகின்றனர். இந்த விழாவானது சையது சாலார் மசூத் காஜி என்பவர் பெயரில் கடந்த 47 ஆண்டுகளாக நடக்கிறது. ஆனால், இந்த ஆண்டு மார்ச் 25-ல் தொடங்க இருந்த விழாவுக்கு சம்பல் மாவட்ட காவல் துறை அனுமதி அளிக்க மறுத்துள்ளது. இதற்கு நம் நாட்டின் மீது படையெடுத்தவர்களையும், கொள்ளையடித்தவர்களையும் கொண்டாட தேவையில்லை” என்று காரணம் கூறியுள்ளது.
கஜ்னாவியில் இருந்து இந்தியாவுக்கு படையெடுத்து வந்த முஸ்லிம் மன்னர் முகமது கஜினியின் சகோதரி மகன்தான் சாலார் மசூத் காஜி. கஜினியின் படை தளபதியாகவும் இருந்தார். கடந்த 1206-ம் ஆண்டு சோம்நாத் மீது படையெடுத்து கஜினி முகமது கொள்ளையடித்ததாக வரலாற்று பதிவுகள் உள்ளன. அப்போது கஜினியுடன் அவரது மருமகன் சாலார் மசூதும் இருந்துள்ளார்.
பிறகு ஒரு தனிப்படையுடன் தற்போதைய உ.பி.க்கும் சாலார் மசூத் வந்தார். சம்பலில் ஆட்சி செய்த ராஜபுதன மன்னனை கொன்றார். இந்த வெற்றியின் நினைவாகவே அவரது பெயரில் சம்பலிலும், அருகிலுள்ள முராதாபாத் மற்றும் சஹரான்பூரிலும் நேஜா விழா நடத்தப்படுகிறது. பிறகு சாலார் மசூத் நேபாள எல்லையில் உள்ள பைரைச்சிற்கும் சென்றார்.
இன்றைய உத்தரப்பிரத்தேசத்தில் உள்ள பைரைச்சில் அப்போது குறுநில மன்னர் சுஹல்தேவ் ஆட்சி இருந்தது. தம்முடன் மேலும் 21 குறுநில மன்னர்களின் படைகளை சேர்த்து சாலார் மசூதை எதிர்கொண்டார் சுஹல்தேவ். கடந்த 1034-ல் நிகழ்ந்த போரில் சுஹல் தேவ் படையால் சாலார் மசூத் கொல்லப்பட்டார். அப்போது பைரைச்சிலேயே சாலார் மசூத் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அந்த கல்லறை மீது 1250-ல் துக்ளக் வம்சத்தின் நசிரூதீன் மகமூத், தர்கா கட்டினார். தற்போது, முஸ்லிம்கள் இடையே பிரபலமான சாலார் மசூத் தர்காவுக்கு ஆண்டுதோறும் உருஸ் எனும் சந்தனக்கூடு விழா நடைபெறுகிறது.
இந்த விழாவுக்கு நிரந்தர தடைவிதிக்க கோரி இந்து அமைப்பினர் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
*****
R S S ஆர்எஸ்எஸ்-ன் அகில பாரதிய பிரதிநிதி சபா கூட்டம் தொடக்கம்!
பெங்களூருவில் ஆர்எஸ்எஸ்- என்னும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் அகில பாரதிய பிரதிநிதி சபா கூட்டத்தை அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தொடங்கி வைத்தார்.
பெங்களூரு சொன்னேனஹல்லியில் உள்ள ஜன சேவா வித்யா கேந்திரத்தில், மார்ச் 23ம் தேதி வரை ஆர்எஸ்எஸ்-ன் அகில பாரதிய பிரதிநிதி சபா கூட்டம் நடைபெறுகிறது.
கூட்டத்தை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார். முன்னதாக, விழா மேடைக்கு வந்த அவர், பாரத மாதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே முன்னிலையில் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா முழுவதிலும் இருந்து ஆயிரத்து 450 பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். 3 நாட்கள் நடைபெறும் கூட்டத்தில், ஆர்எஸ்எஸ்-ன் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் உள்ளிட்டவை குறித்து ஆலோசித்து முக்கிய முடிவுகளை அறிவிப்பார்கள் .
இந்த ஆண்டு ஆர் எஸ் ஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது
உலகிலேயே மிகப்பெரிய தொண்டர் அமைப்பு ஆர் எஸ் எஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
*****
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த்தும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயனும் வாசித்த செய்தி மடல்
அடுத்த ஒளிபரப்பு
மார்ச் 30 –ஆம் தேதி லண்டன் நேரம் பகல் 12 மணிக்கும்,